privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்திருச்சி தேசிய நெடுஞ்சாலை-67 க்காக அழிக்கப்படும் நீராதாரங்கள் ! தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் !

திருச்சி தேசிய நெடுஞ்சாலை-67 க்காக அழிக்கப்படும் நீராதாரங்கள் ! தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் !

மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் ஏரி குளங்களை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை நீதிமன்ற உத்தரவை மீறி மண்ணை கொட்டி அழிக்கின்றன.

-

பத்திரிக்கை செய்தி

22.06.2020

திருச்சியின் அரைவட்ட சுற்றுச்சாலை NH-67 ஜீயபுரம் தொடங்கி துவாக்குடி வரை செல்கிறது. இந்த சுற்றுச் சாலைக்காக கடந்த பத்தாண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைப்பதில் கிட்டத்தட்ட பத்து ஏரிகள் குளங்கள் குறுக்கே வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வரும் ஏரி குளங்களை பொதுப்பணித் துறையும் நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகமும், ஏரி குளங்களில் மண்ணை கொட்டி விடுகின்றனர், அழிக்கின்றனர்.

இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம், மற்றும் சாலை செல்லும் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக ஏரி குளங்களை மண் கொட்டி அழிக்கக்கூடாது, என தீக்குளிப்பு போராட்டம் வரை நடத்தியிருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஏரி குளங்களில் மண்ணைக் கொட்டி அழித்து சாலை அமைத்ததைக் கண்டித்தும், ஏரி குளங்களுக்கு மேல், மேல் மட்ட பாலம் வழியாக சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பிறகு அதிகாரிகள் ஏரி குளங்களில் போட்ட மண்ணை அள்ளி குளங்களுக்கு மேல் நீர் மட்ட பாலம் ஜீயபுரம் முதல் மணிகண்டம் யூனியன் வரை கரூர் மாவட்ட திட்ட இயக்குனர் சார்பாக பணிகளை மேற்கொண்டார்.

தற்போது அந்த உத்தரவை அமல்படுத்தாமல் மணிகண்டம் முதல் குண்டூர், சூரியூர், துவாக்குடி வரை உள்ள குளங்களில் ஏரிகளில் மண்ணை கொட்டி அதிகாரிகள் அழித்துள்ளனர். இதனை கண்டித்து தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐயா ம.ப சின்னத்துரை அவர்கள் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள ஆற்று நீர் பாசன வாய்க்கால் பொதுப்பணித்துறை அலுவலகம் வாயிலில் கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவங்கினார். இதை கண்ட அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மணிகண்டம் முதல் துவாக்குடி வரை ஏரிகளை அழித்து மண் கொட்டியது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில், கரூர் மற்றும் காரைக்குடி திட்ட இயக்குனர் அவர்களும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பொதுநல அமைப்புகளும் கூடி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விரைவில் ஏற்பாடு செய்வதாக, போராட்டம் செய்த சின்னத்துரை ஐயாவிடம் அதிகாரிகள் எழுத்து மூலமாக கடிதம் எழுதிக் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அன்று உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

இந்த செய்தி ஊடகங்களில், தினசரி பத்திரிகைகள் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து திருச்சியில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வரும், மக்கள் அதிகாரம், தமிழக விவசாயிகள் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, மக்கள் உரிமை கூட்டணி, மக்கள் உரிமை மீட்பு இயக்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் இயக்கம், சமூக நீதிப் பேரவை, மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி நடைபெற்றது. அதில் திருச்சி மாவட்டத்தின் உயிராதாரமான ஏரிகளை குளங்களை சாலை போடுவதாக கூறி மண்ணை கொட்டி குளங்களை ஆக்கிரமித்து மூடியும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும், ஏரி குளங்களில் மேல்மட்ட சாலை போட்டு ஏரி குளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் மணிகண்டன் முதல் குண்டூர், சூரியூர், துவாக்குடி வரை மண்ணைக் கொட்டி அழித்த ஏரி குளங்களை பொதுநல அமைப்புகள் சென்று ஆய்வு செய்ய பார்வையிடுவது என்று முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் கடந்த ஜூன் 21 அன்று காலை 9 மணி அளவில் பொது நல அமைப்பினர் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என சுமார் 20 பேர் சென்று ஏரி குளங்களை ஆய்வு செய்தோம். அப்போது சாத்தனூர் கணக்கன் குளத்தில் புல்டோசர் லாரிகள் மூலம் மண்ணை கொட்டி ஏரிகளை சாலை போடுவதற்காக மூடி கொண்டிருந்தனர்; அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம் கலெக்டர் பணிகள் எதுவும் நடைபெறாது என்று எழுத்துப்பூர்வமாக எங்களிடம் கொடுத்துள்ளார் என சின்னத்துரை ஐயா அவர்கள் கேட்டார்.

அதற்கு எங்களுக்கு இதுபோன்ற செய்தி ஏதும் தெரியாது என ஒப்பந்ததாரர்கள் கூறினர். பின்பு காரைக்குடி திட்ட இயக்குனரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணிகள் நடைபெறாது என கடிதம் கொடுத்தும் இங்கு ஏரியை மூடும் பணிகள் நடைபெறுகிறது என புகார் தெரிவித்தோம். அரை மணி நேரம் சென்றும் வேலை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். வேலையை நிறுத்தவில்லை. ஆகையால் பொதுநல அமைப்பினர் சின்னத்துரை ஐயா தலைமையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், அதிகாரிகளின் உத்தரவை மதிக்காமல் திட்ட பணிகளை செய்வதை கண்டித்து முழக்கமிட்டும் உடனே அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை நிறுத்தினர்.

பின்பு குண்டூர் சூரியூர் துவாக்குடி பழங்குடி போன்ற பகுதியில் உள்ள ஏரி குளங்கள் மண்ணைப் போட்டு அழித்த பகுதிகளை சென்று பார்வையிட்டோம். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏரி குளங்களை அழித்து சாலை போட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம். இது சம்பந்தமான பேச்சுவார்த்தை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விரைவாக நடத்த வேண்டுமென பொதுநல அமைப்பினர் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

பேச்சுவார்த்தை நடத்தாத பட்சத்தில் இது சம்பந்தமான சட்ட போராட்டமும்; மக்களை திரட்டி களப் போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

தமிழக விவசாயகள் சங்கம்
ம.ப. சின்னதுரை
மற்றும்
பொதுநல அமைப்புகள்.
திருச்சி .

தொடர்புக்கு : 90422 36905, 94454 75157.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க