விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் விவசாயிகள் மீது போலீஸ் பல்வேறு அடக்குமுறை, தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருக்கிணைப்புக்குழு சார்பில் பிப்ரவரி 6-ம் தேதியன்று தமிழகத்தில் 3 மணி நேரம் சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

• தொடர்சியாக விவசாயிகள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும்
• மாநில எல்லைகளில் தடுப்புகளை அதிகரிப்பதை எதிர்த்தும்
• போராட்ட தளங்களில் இணைய தளத்தை நிறுத்தி வைத்திருப்பது
• விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதாரவானவர்களின் ட்விட்டர் கணக்குகளை நிறுத்தி வைத்திருப்பது
• அரசாங்கத்தின் கட்டளையின் அடிப்படையில் சுயேட்சியான ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை
• வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் குறைவாக ஒதுக்கீடு
ஆகியவற்றை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டார்கள்.

சென்னை :

வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தாம்பரம் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. சி.பி.எம், மற்றும் ஜனநாயக அமைப்புகள் மற்றும் மக்கள் அதிகாரம், சென்னை மண்டல தோழர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை.

காஞ்சிபுரம் :

மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திட்டங்களை ரத்து செய்யக் கோரியும் டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைக்கு எதிராகவும், AIKSCC ஒருங்கிணைப்பில் நாடு முழுவதும் பிப்ரவரி 6 அன்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். மறியலில் போராட்டத்தில் அனைத்து தோழர்கள், ஜனநாயக சக்திகளை கைது செய்து மண்டபத்தில் அடைந்தது போலீஸ்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம்.

 

கோவை :

புதிய முன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த டிசம்பர் 26-ம் தேதி இந்தியா முழுவதும் டிராக்டர் பேரணிகளை நடத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணிகள், வாகன பேரணிகள் நடைபெற்றன. அன்றைய தினம் மட்டும் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என 06.02.2021 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கன்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மக்கள் அதிகாரம் தோழர் ராஜன் கண்ட உரை ஆற்றினர். மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
தோழர் ராஜன்,
பகுதி ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
கோவை.

புதுச்சேரி :

விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தடியடி நடத்தி பொய் வழக்குகள் போட்ட டெல்லி போலீசையும் மோடி அரசையும் கண்டித்து விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் விவசாய சங்கம் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் பங்கேற்று கைதானார்கள்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

 

விருதாச்சலம் :

டெல்லியில் நடைபெற்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மேலும் திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும் அனைத்து கட்சி சார்பில் இன்று 6/2/2021 பாலக்கரையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பூவனூர் மக்கள் அதிகாரம் தோழர் பாலு தலைமையில் தோழர்கள் வைத்தியநாதன், வினோத், காத்தவராயன் முருகானந்தம் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க