மிழகம் பாலைவனம் ஆகாமல் தடுப்பது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரது கடமையுமாகும். தேர்தல் அரசியல் கட்சிகளை நம்பி அன்று ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மோடிக்கு எதிரான போராட்டங்கள் எத்தனையெத்தனை?

தமிழகம் தழுவிய கடையடைப்பு, கருப்புக்கொடிப் போராட்டம், எங்கு காணினும் ஆர்ப்பாட்டங்கள் – மறியல்கள், மோடி சென்னைக்கு வந்த போது மூத்திர சந்து வழியாக ஐ.ஐ.டி.க்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய போராட்டங்கள் என பல போராட்டங்களை தமிழகம் முன்னெடுத்திருக்கிறது. இவை போன்ற போராட்டங்களே இன்று நமக்கு அவசியமானவை.

தொடர்ந்து தமிழ்நாட்டின், தமிழினத்தின் மீது நடத்தப்படும் அடக்குமுறைக்கு முடிவு கட்ட வேண்டுமெனில், தேசிய இனத்தின் நியாயவுரிமைக்காகவும், மோடி அரசின் கார்ப்பரேட் – காவி பாசிசத் திட்டங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு போராடுவதுதான் ஒரே வழி.

நம்மீது திணிக்கப்படும் கார்ப்பரேட்-காவி பாசிச திட்டங்களுக்கு எதிராகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டலுக்கு எதிராகவும் வீறுகொண்டு போராட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டும் கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களது கைக்கூலிகளான ரியல் எஸ்டேட் முதலாளிகள், புரோக்கர்கள், அரசு அதிகாரிகளை மக்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.

அந்தந்த ஊரில் இருக்கும் வளங்களின் மீது உள்ளூர் மக்கள் அதிகாரம் செலுத்தும் வகையில் உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டியமைக்க உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவோம்! மக்கள் எழுச்சியின் மூலம் இதனை சாதிப்போம்!

மேக்கேதாட்டு அணை – யார்கோன் அணை – நீட் தேர்வு :
தமிழகத்தின் மீதான தாக்குதல்களைத் தகர்த்தெறிவோம் || மக்கள் அதிகாரம் வெளியீடு

விலை ரூ. 10

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க