‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை !  தாக்குதல் நடத்திய போலீசை கைது செய்து சிறையில் அடை !

மக்கள் அதிகாரம் கண்டனம்

23.09.2021

சேலம் மாவட்டம், மோருர் பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பல கட்சிகளின் கொடிகளும் இருக்கின்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை அமைப்பதற்காக முயன்ற வி.சி.கவினர் மற்றும் கிராம மக்கள் மீது போலீசு தடியடி நடத்தி முன்னணியாளர்களைக் கைது செய்துள்ளதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

வி.சி.க கொடி கம்பம் அமைக்கக்கூடாது என்று உள்ளூரில் உள்ள ஆதிக்க சாதியினர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கொடி ஏற்றுவதற்கு பாதுகாப்பளித்து இருக்கவேண்டிய போலீசு, கொடியேற்ற வந்தவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சமூக நீதி மண் என்று பெருமை பீற்றிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு கொடியை கூட தெரிவு செய்ய முடியாத ஒரு சூழல் உள்ளது என்பது மிகவும் வெட்கக் கேடானதாகும்.

ஆதிக்கசாதி வெறியர்களுக்கு துணைபோன போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர் – மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க