தூசான் நிர்வாகத்தின் சட்டவிரோதப் போக்கினை கண்டித்து தூசான் தொழிலாளர்கள் சங்கம் மே 6- அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் தோழர் ஜி.உதயகுமார் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சந்திரமோகன், பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆ.கா.சிவா, ஆக்சிஸ் கிளைத்தலைவர் தோழர் பழனிவேல், டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சக்திவேல், SRF எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் தோழர் தேவராஜ் ஆகியோர் உரையாற்றினர். சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் பா.விஜயகுமார் கண்டன உரையாற்றினார். துணைத்தலைவர் தோழர் இளவரசன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிந்தது.
தூசான் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசின் நடவடிக்கை தேவை என்பது ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. தங்கள் உரிமையை நிலைநாட்டும் வரை ஓயப்போவதில்லை என தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் உறுதியாக உள்ளனர்.

This slideshow requires JavaScript.


தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை, திருவள்ளூர் , காஞ்சி மாவட்டக்குழு.