குஜராத் படுகொலை வழக்கு: தீஸ்தா செதல்வாட் கைது ! | தோழர் சுரேசு சக்தி | வீடியோ

மதவெறிகளுக்கு எதிரான பத்திரிகை நடத்திக்கொண்டு, சட்ட ரீதியான போராட்டங்களை தொடர்ச்சியாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார் தீஸ்தா செதல்வாட்.

2002-ம் ஆண்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் கலவரத்தின் பெயரில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக; அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த, நரேந்திர மோடி அவர்களின் பங்கு குறித்து விசாரிப்பதற்கென; தொடர்ச்சியாக ஒரு போராட்டத்தை, அந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜாஃப்ரியின் மனைவியும்; Communalism Combat என்ற மதவெறிகளுக்கு எதிரான பத்திரிகையை திறன்பட நடத்திவந்த திஸ்தா செதல்வாட் அவர்களும்; சட்டரீதியான தொடர் போராட்டங்களை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார்கள்.
அதன் இறுதியான போராட்டமாக உச்சநீதிமன்றத்தில் குஜராத் கலவரத்தில் மோடியுடைய பங்கு எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவானது அறிக்கையை முன்வைத்ததை கீழமை குற்றவியல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திருமதி ஜஃப்ரி அவர்களும் தீஸ்தா செதல்வாட்-ம் தொடர்ந்திருந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பாக அவ்வாறு எஸ்.ஐ.டி என்ற சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்தது சரிதான்; இதில் மோடி அவர்களை அவசியமற்று பொய்யான முறையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளதை பயன்படுத்தி நேற்றையதினம் குஜராத் காவல்துறை உடனடியாக ஒரு எஃப்.ஐ.ஆர்.-யை போட்டு தீஸ்தா செதல்வாட்-யும் முன்னால் டி.ஜி.பி.யும் நானாவதி கமிஷனில் மோடி அவர்களின் பங்கு குறித்து பிரமாண வாக்குமூலம் அளித்த ஸ்ரீகுமார் அவர்களையும் அவர்கள் கைது செய்துள்ளார்கள்.
அதேபோன்று ஏற்கனவே இக்கலவரத்தை முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்துவதை தடுக்க வேண்டாம் இந்து கரசேவகர்கள் மீது மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி கூறியதாக பிரமாண வாக்குமூலம் அளித்த சஞ்சிவ் பட், ஏற்கனவே பல ஆண்டுகளாக அவர் மீது புனையப்பட்ட ஒரு வழக்கில், மோடியை எதிர்த்தார் அமித்ஷாவை எதிர்த்தார் என்ற காரணத்திற்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீதும் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டு சிறையில் வைத்து இந்த வழக்கில் கைதுசெய்யவுள்ளதாக இன்றைய தினம் இந்த வழக்கை விசாரித்துவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தீவிரவாத தடுப்பு காவல்துறையின் அதிகாரி பேட்டியளித்திருக்கின்றார்.
குஜராத் கலவர வழக்கு தொடர்பான பல்வேறு விபரங்களை இந்த காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!