“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர் | செய்தி – புகைப்படம்

க்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி கடலூர் மக்கள் அதிகாரக் கழகம் தலைமை அலுவலகத்தில் 01/06/2025 அன்று மாலை 5:30 மணியளவில் தொடங்கி நடந்து முடிந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் தோழர் சாந்தகுமார் கலந்து கொண்டார். மக்கள் அதிகாரக் கழகத்தின் கடலூர் பகுதி தோழர் ஜெயக்குமார் தலைமை ஏற்றார். மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் முருகானந்தம் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாபெரும் ஆயுதம் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

தலைமை உரை ஆற்றிய மக்கள் அதிகாரக் கழக தோழர் ஜெயக்குமார், “இந்திய துணைக் கண்டத்தில் இருக்கக்கூடிய அனைவரும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்த வேண்டும்; மக்கள் தங்களுடைய அதிகாரத்தை நிறுவ வேண்டும். மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை என்பது மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை மட்டும் அல்ல. இது மாபெரும் ஆயுதம். வள்ளலார், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், பூலே ஆகிய சிந்தனை கொண்டவர்களுக்கும் இந்த மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை பொருந்தும். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்” என்றார்.

விளக்க உரை ஆற்றிய மக்கள் அதிகாரக் கழக அமைப்புச் செயலாளர் தோழர் சாந்தகுமார் “ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்த முடியும். கொள்கை அறிக்கையும் அதைத்தான் கூறுகிறது. இது ஒரு கட்சியின் கொள்கை அறிக்கை மட்டும் அல்ல. இது மக்கள், ஜனநாயக சக்திகள் பாசிசத்தை வீழ்த்துவதற்கு அவர்தம் கைகளில் ஏந்த வேண்டிய மாபெரும் ஆயுதம். பி.ஜே.பி என்கிற பாசிச கட்சியை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மட்டும் வீழ்த்தி விட முடியாது. மக்கள் போராட்டத்தின் வழியாகவே ஒட்டுமொத்த பாசிச கும்பலையும் வீழ்த்த முடியும். அவ்வாறான போராட்டக் களத்திற்கு மக்களையும், ஜனநாயக சக்திகளையும் இணைக்கும் முக்கியமான ஆவணமாக இந்த மாபெரும் ஆயுதம் கொள்கை அறிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது” என்று கொள்கை அறிக்கையைத் தனது உரையில் விளக்கிப் பேசினார்.

தோழர் திருவரசு (செயல் ஒருங்கிணைப்பாளர், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு, கடலூர்) “இன்றைய சூழலில் அரசியல் வெற்றிடம் உள்ள நிலையில் மக்கள் அதிகாரக் கழகம் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ததை வரவேற்கிறேன். இந்த கொள்கை அறிக்கை அரசியல் களத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன். இது வரவேற்கத்தக்கது. சுற்றுச்சூழல் மாசு பற்றித் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி யாரும் பேசுவது இல்லை. கொள்கை அறிக்கையில் 21 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் நாள் முழுவதும் பேசமுடியும்” என்று வாழ்த்திப் பேசினார்.

தோழர் உத்திரவேல் (மாவட்ட துணை அமைப்புச் செயலாளர், வழக்கறிஞர் பிரிவு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கடலூர் மாவட்டம்) மாபெரும் ஆயுதம் கொள்கை அறிக்கையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

தோழர் விஜி (மாநில கொள்கை பரப்பு செயலாளர், தமிழக வாழ்வுரிமை கட்சி, புதுச்சேரி) “மோடியின் ஆட்சியில் பல்வேறு வகையான கனிமவளங்கள் அதானி, அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கப்படுகிறது. சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறார் மோடி. அப்பாவி மக்கள் இயற்கை வளங்களைப் பாதுகாக்கப் போராடினால் அவர்களைச் சுட்டுக் கொலை செய்கிறது ஒன்றிய மோடி அரசு. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி வரும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. ஏனெனில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சங்கிகள் கலவர சூழலை உருவாக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வந்தார்கள். அரசு அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தது. மக்கள் அதிகாரக் கழகத்தின் முயற்சியால் அதைத் தடுக்க முடிந்தது” என்று உணர்வுப் பூர்வமாகப் பேசினார். மாபெரும் ஆயுதம் கொள்கை அறிக்கையின் 50 பிரதிகளை தோழர் பெற்றுக்கொண்டார். அவற்றைத் தனது கட்சியினரிடம் கொடுப்பதாகக் கூறினார்.

தோழர் பெருமாள் (மக்கள் அதிகாரக் கழகம், கடலூர்) நன்றியுரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் மக்கள் அதிகாரக் கழக தோழர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரக் கழகம்
கடலூர் மாவட்டம்
9442391009

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க