தொடரும் போராட்டங்கள்… | வெளியீடு

வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு: 99623 66321

தொடரும் போராட்டங்கள்… | வெளியீடு

(புதிய ஜனநாயகம் ஜூலை 2025 இதழில் திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்பாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு)

மிழ்நாட்டைக் கலவர பூமியாக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாண்டின் தொடக்கத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவது முருகன் கோவிலின் புனிதத்தைக் கெடுப்பதாகக் கூறி பிரச்சினையைக் கிளப்பியது சங்கிக் கும்பல்.

ஆனால், மதுரை மக்களின் மதநல்லிணக்க மரபும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் எதிர் நடவடிக்கைகளும் சங்கிக் கும்பலை நெருக்கடிகளுக்குள்ளாக்கி பின்வாங்க வைத்தது. இனியும் இவ்வாறு நேருக்கு நேர் தமிழ் மக்களின் உணர்வுடன் மோதினால், அம்பலப்பட்டு போவோம் என்றுணர்ந்த இந்து முன்னணிக் கும்பல் ‘முருக பக்தர்’ என்ற வேடத்தைப் போட்டுக்கொண்டு தனது அமைப்பு மாநாட்டை முருக பக்தர் மாநாடு என்று அறிவித்தது.

தொடக்கத்தில் “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கூச்சலிட்ட இக்கும்பல், “எதிர்ப்பாளர்களுக்கு பதிலளிப்போம்!” என்று பம்மியது. சிக்கந்தர் தர்கா குறித்து நேரடியாக பேசினாலோ, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று பேசினாலோ தமது கலவர நோக்கத்தை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதால், ‘பக்தர்கள் மாநாடு’ என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டது. “அறுபடை வீடுகளைக் காப்போம், கோவிலைக் காப்போம்” போன்ற முழக்கங்களை முன்வைத்தது. இது அதிகார வர்க்கத்திலும் நீதித்துறையிலும் இருக்கும் சங்கிகள், நெருக்கடி ஏதுமில்லாமல் மாநாடு நடத்துவதற்கான அனுமதி வழங்குவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

எனினும், பக்தர் வேடமணிந்து முருக பக்தர்கள் மாநாடு என சங்கிக் கும்பல் பின்வாங்கியது என்பது, எதிர்ப்பின் காரணமாக மேற்கொண்ட நடவடிக்கை மட்டுமல்ல.

மதவெறி – அதிகார வெறியை மறைக்க பக்தி வேடம்

ஒருபுறம், பக்தர்கள் மாநாடு என இந்து முன்னணிக் கும்பல் குறிப்பிடும் அதேவேளையில், சங்கப் பரிவாரத்தின் இன்னொரு பிரிவான பா.ஜ.க-வோ இந்த மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டின் அரசியலை மாற்றுவோம் என்று கொக்கரித்தது.

பாசிச மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மாநாட்டிற்குப் பிரச்சாரம் செய்வதற்காக மதுரைக்கு வந்தார். ஜூன் 9-ஆம் தேதி நடந்த பா.ஜ.க-வின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்து முன்னணி மாநாட்டிற்காக ஐந்து லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என்றார். இம்மாநாட்டிற்கு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருவதாகவும் அறிவித்தார்.

இப்படியாக, பா.ஜ.க. இந்த மாநாட்டை நடத்தி முடிப்பதை தனது முதன்மையான நிகழ்ச்சிநிரலாக எடுத்துக்கொண்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மாநாடு எதிரொலிக்கும் என்று பா.ஜ.க-வினர் கூச்சலிட்டனர்.

தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தின் தொடக்கம்தான் இந்த மதுரை மாநாடு என ஜனநாயக சக்திகள், ஊடகங்கள் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களே அம்பலப்படுத்தினர்.

வெளியீடு :
தொடரும் போராட்டங்கள்…

முதல் பதிப்பு : ஜூலை 2025

வெளியிடுவோர் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.

தொடர்புக்கு : 99623 66321

நன்கொடை : ₹ 20

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க