நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் – இரங்கல் கூட்டம்

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், 17.11.2025 அன்று மதியம் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.

அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் வாழ்ந்த சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் திருவாரூர் மற்றும் மதுரை மாவட்டத்தில் தோழருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக 18.11.2025 அன்று நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தோழருக்கு செவ்வணக்கம் செலுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதுரை மேற்கு:

20.11.2025 அன்று மதுரை மாவட்டம் மேற்கு பகுதியில் நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க