அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
டிசம்பர் 28 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி என்கிற செல்வகணேசுக்கும் தோழர் ராதிகாவிற்கும் நடக்க இருக்கும் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா, “சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க
வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளால் நடத்தப்படுகிறது.
இந்த மணவிழாவில் தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதிலிருந்து பல்வேறு ஜனநாயக சக்திகள், சாதி ஒழிப்புப் போராளிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்; சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
சாதிவெறியர்கள், பார்ப்பன இந்து மதவெறியர்கள், இனவெறியர்கள் அனைவரும் பாசிச சக்திகளின் பாதந்தாங்கிகளாக செயல்பட்டு வருகின்றனர். இக்கொடிய காலத்தில், பாசிசத்திற்கும் பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கும் எதிரான போரை, பண்பாட்டுத் தளத்திலும் தொடுப்பது மிக மிக இன்றியமையாத கடமையாகும்.
சாதி ஒழிப்புப் போராட்டத்தின் அங்கமான, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போராட்டமாக அமைந்துள்ள இந்த புரட்சிகர மணவிழா குறித்த பதிவுகள் இந்த லைவ் பிளாக்-இல் (Live Blog) தொடர்ந்து பதிவிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


***
Live Blog:









