ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் | புத்தகத்தின் மீதான பார்வை | ஹாலித் ராஜா

இதை வாசித்த பிறகு நாமும் அதே மனிதராக இருக்க முடியாது. ஏனெனில் இது கண்ணீர் கேட்கவில்லை, கேள்விகள் தான் கேட்கிறது

து ஒரு புத்தகம் அல்ல.
ஒரு சமூகத்தில்
அமைதியாக செய்யப்பட்ட
கொலைகளின் சாட்சியம்.

இந்தப் பக்கங்களில் சிந்தியிருப்பது
இரத்தம் மட்டும் அல்ல — ஒரு தலைமுறையின்
பயமும், மௌனமும்.

தன் மகள் வலியைத் தாங்க மாட்டாள் என்று
நினைத்த கைகளே அவளுக்கு
மரணத் தீர்ப்பு எழுதும் அந்த கொடூர மனநிலையை
இந்த புத்தகம் மறைக்கவில்லை.

இதை வாசித்த பிறகு நாமும் அதே மனிதராக
இருக்க முடியாது. ஏனெனில் இது
கண்ணீர் கேட்கவில்லை,
கேள்விகள் தான் கேட்கிறது—
காதல் தவறா?
கௌரவம் உயிரை விட பெரியதா?
ஆணவம் பாரம்பரியமா?
இந்தப் புத்தகம்
பக்கங்களை அல்ல,
நம் மௌனத்தையே திருப்பி பார்க்க வைக்கும்.

பக்கங்களை வாசித்தேன்,
ஆனால் கண்கள் மட்டும் அல்ல—
மனசும் தான் எரிந்தது.

இதில் வருவது வெறும் கதை அல்ல,
கொலை அறிக்கை,
அதில் கொல்லப்பட்டது
காதல் அல்ல— மனித உரிமை.

கௌரவம்” என்ற வார்த்தை
எத்தனை உயிர்களை
கத்தி போல அறுத்திருக்கிறது என்று
இந்த புத்தகம் அமைதியாகக் கற்றுத் தந்தது.

பெண் விடுதலை இங்கே இன்னும்
அனுமதிக்கப்படாத
ஒரு குற்றமாகவே இருக்கிறது.

“ஆணவப்படுகொலைகளில் பலியான காதலர்களை
நாம் நாட்டார் தெய்வங்களாக வழிபட வேண்டிய நிலை—
ஏனெனில்
அவர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல,
சாதியை மீறி காதலித்தவர்கள்” என்பதை இந்த
புத்தகம் தெளிவாக சொல்கிறது.

ஜனநாயகமும் சமத்துவ உணர்வும்
இங்கே பாசிச சர்வாதிகாரத்தின்
அடக்குமுறைகளால் நசுக்கப்படுகின்றன.
நாடகக் காதல்”, லவ் ஜிகாத்” என்பவை அவர்களின்
பொய்ப் பிரச்சார முழக்கங்கள்—
காதலைப் பயமாக மாற்ற
கட்டிய கற்பனைகள் – என்ற வரிகள்
காதலைப் பயமாக மாற்றும்
பாசிசப் பொய்களை
பெயரிட்டே
அம்பலப்படுத்தும்
தாக்கமான வரிகள்என்பதில் சந்தேகமில்லை.

பாசிசத்தின் இந்தப் பிற்போக்குப் போருக்கு எதிராக,
நாம் தொடுக்க வேண்டியது
ஆயுதப் போர் அல்ல— பண்பாட்டுப் போர்.
ஜனநாயகத்தின், சமத்துவத்தின்,
மனிதநேயத்தின் முற்போக்குப் பண்பாட்டுப் போர்.

அதன் முழக்கம் ஒன்றுதான்—
சாதி கடந்த மதம் கடந்து
காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்.

அதன்
ஆரம்ப அத்தியாயம் தான்
தோழர்கள் ராதிகா – ரவி மணவிழா. 

அழைப்பிதழில் வாழ்த்து வாசகங்கள் அல்ல,
ஆணவத்தால் கொல்லப்பட்ட
காதலர்களின் முகங்கள்—
மௌனத்திற்கு எதிரான
முதல் முழக்கம்.

பார்ப்பன சம்பிரதாயங்களை
மலர் போல் அலங்கரிக்காமல்,
குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார்கள்
நம் தோழர்கள்.

இது ஒரு கல்யாணம் அல்ல,
இது சாதிக்கு எதிரான
பண்பாட்டுப் பிரகடனம்.

தீண்டாமை ஒழிய, ஆணவம் சிதற,
பெண் விடுதலை முழுமை பெற—
இத்தகைய புரட்சிகர மணவிழாக்கள்
தொடர்ந்து நடக்கட்டும்.

காதல் மணமாகும் வரை அல்ல—
சமத்துவம் சமூகமாகும் வரை.

இதுதான் இந்த காலத்தின்
மக்கள் முழக்கம்.

– ஹாலித் ராஜா


முகநூலில்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க