Monday, June 16, 2025
முகப்பு பதிவு

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 16-31, ஜூன் 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 13-14 | மே 16-31, ஜூன் 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ‘ஜெ’ உதிர்த்த ரோமங்களின் மானப்போர்
  • ஏவுகணைச் சோதனைகள்: வறூமையின் நடுவே வாண வேடிக்கை
  • அணு ஆயுதப் போருக்கான அபாயம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ‘மார்வாடி’ எதிர்ப்பில் மறைக்கப்படும் உண்மைகள்
  • தென்னாப்பிரிக்கா: ஆட்சி மாறியது அரசு எந்திரம் மாறியதா?
  • மாஃபியா ஆளுகையில் மாநகரங்கள் திணறல்
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • ‘டங்கல்’ திட்டத்தால் நிலப்பிரபுகளுக்கு பாதிப்புதானே?
  • விசைத்தறி தொழிலாளர்கள் மீது போலீசின் காட்டுமிராண்டித்தனம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



காசா: இனவெறி இஸ்ரேலின் அறிவிக்கப்படாத வதைமுகாம்

பாலஸ்தீன குழந்தைகள் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம்

னவெறி இஸ்ரேல் பட்டினிப் போரை நடத்தி காசா மக்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கிறது. தற்போது காசாவைத் திறந்தவெளி வதை முகாமாக மாற்றும் நோக்கத்தில் காசா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி காசா மீது இன அழிப்பு போரைத் தொடங்கிய இஸ்ரேல், காசாவில் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய நகரங்கள், தற்காலிக தங்குமிடங்கள், நிவாரண முகாம்கள், மருத்துவமனைகள், கருத்தரித்தல் மையங்கள் மீது தாக்குதல் நடத்தி 50,000-த்திற்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது.

ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் நடந்த மக்கள் போராட்டத்தினால் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்ட இஸ்ரேல், 2025 ஜனவரி 19 அன்று காசா உடனான மூன்று கட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மார்ச் 2-ஆம் தேதியுடன் போர் நிறுத்தத்தின் ஆறு வாரக் கால முதல் கட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் அனைத்து இஸ்ரேலியப் பணயக் கைதிகளையும் விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தம் தொடரும் என்று இனவெறி இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேலின் நயவஞ்சக திட்டத்தை அறிந்துகொண்ட ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் இனவெறி இஸ்ரேல் மார்ச் 2-ஆம் தேதி முதல் காசா மக்களுக்குத் தேவையான உணவு, சுத்தமான குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்றவற்றை காசாவிற்குள் செல்லவிடாமல் அனைத்து நுழைவாயில்களையும் மூடியது. ஏற்கெனவே இனவெறி தாக்குதல்களாலும், நோய்களாலும் சொல்லொணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் நிறுத்தப்பட்டது அவர்களைக் கையறு நிலைக்குத் தள்ளியது.

இந்நிலையில், அமெரிக்காவின் பக்கபலத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, மார்ச் 18-ஆம் தேதி அன்று அதிகாலை தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ராகேப்பா வடக்கில் காசா நகரம் மற்றும் மத்தியப் பகுதியில் டெயர் அல் – பாலா பகுதிகள் மீது இனவெறி இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 183 குழந்தைகள் உள்பட 404-க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு ஆரம்பம் மட்டுமே ஹமாஸிடம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கும் வரை எங்களின் தாக்குதல்கள் தொடரும் என்று பாசிஸ்ட் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கு பின்னர் காசாவில் உள்ள மருத்துவமனைகள், நிவாரண முகாம்கள், காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களைக் குறிவைத்து படுகொலை செய்த இஸ்ரேல் தாக்குதலை புதிய உச்சத்திற்குக் கொண்டுசென்றது. குறிப்பாக, நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்துவந்த காசாவின் ஒரேயொரு சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தி அதனை முற்றிலுமாக அழித்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் வடக்கு காசாவில் செயல்பட்டுவந்த அல் – அஹ்லி மருத்துவமனை (Al- Ahli Hospital) மீது தாக்குதல் நடத்தி அதனையும் அழித்தது. மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அதனை ஹமாஸ் அமைப்பினர் இராணுவ தளமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அவதூறு மூலம் நியாயம் கற்பித்தது.

மேலும் இஸ்ரேலின் கொடிய குண்டு வீச்சு தாக்குதல்களால் 1,500 குழந்தைகள் கண்பார்வையை இழந்துள்ளனர். மேலும், கண்பார்வை இழக்கும் அபாயத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை தொடர்கிறது. தொடர் முற்றுகையினால் படுகாயமடைந்த குழந்தைகளுக்கு அத்தியாவசிய சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டால் உரிய சிகிச்சை கிடைக்காமல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், மார்ச் மாதம் முதல் இஸ்ரேல் காசா மக்களுக்குத் தேவையான உணவுகளை தடுத்து நிறுத்தியுள்ளதால் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாலஸ்தீன குழந்தைகள் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization- WHO) எச்சரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 950 குழந்தைகள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா-வின் பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பு (United Nations Relief and Works Agency for palestine Refugees – UNRWA) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக 65,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது இறக்கும் அபாயத்தில் உள்ளனர். அதே சமயத்தில் இராணுவ தாக்குதல் தொடங்கியதிலிருந்து 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இத்தகைய காரணங்களால் இறந்துள்ளனர். முற்றுகையிடப்பட்ட பகுதியில் மாவு, சர்க்கரை, அரிசி, பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் ஆகியவையும் சந்தைகளில் தீர்ந்துவிட்டதால், பஞ்சமும் பட்டினியும் தீவிரமடைந்துள்ளது என்று பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் ( palestinian Centre For Human Rights – PCHR ) தெரிவித்துள்ளது.

கூடுதலாக, சந்தைகளில் மீதமுள்ள சில பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதனால் காசா மக்கள் தங்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். மேலும், உணவுப் பொருட்களைப் பெற வரிசையில் காத்திருக்கும் மக்கள் கூடும் இடங்களும், கள சமையலறைகளும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் (Israel Defense Force – IDF) ) குறிவைக்கப்படுகின்றன. இது பஞ்ச நெருக்கடியை மோசமாக்குகிறது என்று மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன மனித உரிமைகள் மைய தகவலின்படி, இஸ்ரேலிய முற்றுகையினால் ஏற்பட்ட பட்டினியால் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்காக தங்களின் உணவைத் தவிர்க்கும் அவலம் அரங்கேறி வருகிறது. இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதித்து அவர்களது குழந்தைகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளையும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியையும் குறைக்கிறது. அதிகளவிலான கருச்சிதைவு, முன்கூட்டிய குழந்தை பிறப்புகள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளின் பிரசவம் போன்றவற்றிற்கு இது வழிவகுப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டால், கருவில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் பிறந்த குழந்தை இறப்பு ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சியைக் கணிசமாகப் பாதிப்பதுடன் குடல் தொற்றுகள், மெலிதல் மற்றும் தசைச் சிதைவு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள், மிகை இதயத் துடிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர், இது எதிர்காலத்தில் இதய தசை செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும், வளர்ச்சி குன்றியவர்களாகவும், மன மற்றும் உடல் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுபவர்களாகவும் இக்குழந்தைகள் இருக்கலாம் என்று பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் (Palestinian Centre For Human Rights- PCHR) தெரிவித்துள்ளது.

பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாததால் பால் பொடியைத் தண்ணீரில் கலந்து கொடுக்கின்றனர். சில நேரங்களில் அவையும் போதுமானதாக இல்லாததால் பட்டினியால் பிஞ்சுக் குழந்தைகள் துடிதுடித்து இறக்கின்றனர். பட்டினி மற்றும் படுகாயங்களினால் பாலஸ்தீன குழந்தைகள் கற்பனை செய்ய முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

பாலஸ்தீன மக்களை முற்றிலுமாக அழிப்பதற்கு இஸ்ரேல் பட்டினியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதை மனிதாபிமான குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு இனப்படுகொலை செயலாகும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலக நாடுகளில் நடைபெறுகின்ற பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பால் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்ட இஸ்ரேல் மே 2-ஆம் தேதி முதல் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களை காசாவிற்குள் அனுமதித்து வருகிறது. ஆனால், தினந்தோறும் 500-600 நிவாரணப் பொருள் லாரிகள் செல்ல வேண்டிய தேவை காசாவில் இருக்கும் நிலையில் வெறும் 100 லாரிகளை மட்டுமே இனவெறி இஸ்ரேல் அனுமதிக்கிறது. இந்த நிவாரணப் பொருட்களால் பாலஸ்தீன மக்களில் ஒரு சதவிகித மக்களின் தேவையைக்கூட முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுபெற்ற பேக்கரிகளுக்கு 15 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை தெற்கு காசாவில் இஸ்ரேல் படைகள் கொள்ளையடித்தன. மேலும் மே 23 அன்று டெய்ர் அல்-பலாவில் வான்வழித் தாக்குதல் மூலமாக மனிதாபிமான உதவிகளைப் பாதுகாத்துவந்த ஆறு பாதுகாப்பு அதிகாரிகளைப் படுகொலை செய்தது. இது காசா மக்களுக்கான உணவைத் தடுத்து அம்மக்களைப் பட்டினி படுகொலை செய்யும் இஸ்ரேலின் திட்டத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

மே 23-ஆம் தேதி அன்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவிலிருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதே இஸ்ரேலின் போர் முயற்சியின் அதிகாரப்பூர்வ நோக்கம் என்று முதல் முறையாக பகிரங்கமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மே 25 அன்று இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் காசாவின் 44 சதவிகித பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் காசாவின் 75 சதவிகித பகுதிகளை கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்காக தெற்கு கடற்கரை, வடக்கு காசா நகரம் மற்றும் மத்திய காசாவின் நுரைசாட் பகுதியிலும் மூன்று வதை முகாம்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இது வடக்கு காசாவிலிருந்து வரும் மக்களை தெற்கு கடற்கரையில் உள்ள சிறிய பகுதிக்குள் அடைத்து வைத்து படுகொலை செய்யும் திட்டமாகும். பாசிஸ்ட் ஹிட்லர் யூதர்களைப் படுகொலை செய்யப் பயன்படுத்திய திட்டத்தினை ஒத்ததாகும்.

“ஒரு வருடத்திற்குள் காசா முற்றிலுமாக அழிக்கப்படும். பொதுமக்கள் தெற்கில் ஒரு ‘மனிதாபிமான மண்டலத்திற்குள்’ தள்ளப்படுவார்கள். அங்கிருந்து அவர்கள் மூன்றாம் நாடுகளுக்கு பெருமளவில் வெளியேற்றப்படுவார்கள்” என்று இம்மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்திருப்பது காசா மீது இனவெறி இஸ்ரேல் போர் தொடுத்ததன் உண்மையான நோக்கம் அம்பலமாகியுள்ளது.

தற்போது வரை இனவெறி இஸ்ரேலின் கொடூர தாக்குதலினால் 17,000 மேற்பட்ட குழந்தைகள் உள்பட 53,900 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், இஸ்ரேலின் நரவேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் இன அழிப்புக்கு இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்தந்த நாடுகளில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் விளைவாக இஸ்ரேலின் தீவிர இன அழிப்பை வேடிக்கை பார்த்துவந்த பல நாடுகள் கூட இஸ்ரேலைக் கண்டித்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இஸ்ரேல் உடனான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளன. இந்நாடுகள் இஸ்ரேலின் இன அழிப்பு போருக்கு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதை நிறுத்தும் வகையில் இந்நாடுகளில் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

மறுபுறம் காசா மக்கள் மீதான இனவெறி போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேல் உள்பட அமெரிக்கா, நெதர்லாந்து, பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இப்போராட்டங்கள் காசா மீதான இஸ்ரேலின் இனவெறி போரைத் தடுத்துநிறுத்துவதையும் சுதந்திர பாலஸ்தீனம் அமைவதை நோக்கியும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


இன்குலாப்

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 16-30, மே 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 11-12 | ஏப்ரல் 16-30, மே 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஏழுமலை கொலைப்பழி: ஜெயா – வை.கோ. அயோக்கிய அரசியல் கூட்டு
  • ரயில் மறியல் கறுப்புநாள் இயக்கம் அடிமைச்சானம் ‘காட்’டிற்கு எதிர்ப்பு
  • எவ்வகையில் மாறுபட்டது வை.கோ.வின் அரசியல்?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கற்பழிப்பு, கொலை, கொள்ளை பேயாட்டமிடும் ‘ஜெ’ ஆட்சி
  • முத்தாண்டிக்குப்பம் சம்பவம் முத்தாய்ப்பான ஆதாரம்
  • கைத்தறி நூல் விலையேற்றம் பரிதவிக்கும் நெசவாளர்கள்
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 9-10 | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வேண்டும், போலீசு அமைப்பையே கலைத்திடக்கோரும் போராட்டம்!
  • நாசகார ‘டங்கலு’க்கு எதிராக இயக்கம்
  • பார்ப்பன ‘ஜெ’ பாதபூஜையில் மானமிழந்த கி.வீரமணி
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம், வாரீர்!
  • பட்ஜெட்: பாமர மக்களுக்குப் பட்டை நாமம் பகாசுர கம்பெனிகளுக்குப் பட்டுக்கம்பளம்
  • மாயாவதி விவகாரம்: சாத்தானின் மகனும் சனாதன ‘தேசிய’வாதிகளும்
  • இந்துமத வெறியர்களின் வக்கிரமும் மிரட்டலும்
  • வறட்சியின் பட்டினிச்சாவும் நிரந்தரமானது ஏன்?
  • காஷ்மீர் விவகாரம்: குறுகிய ‘தேசிய’ வெறியூட்டி குற்றங்களை மறைக்க முடியாது
  • பங்குச் சந்தை: திடீர் கவர்ச்சியின் மர்மம்
  • திண்பது நரமாமிசம் பேசுவது புலால் மறுப்பு
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



காசா: இழுபறியில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை

காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் நடந்து வருகிறது. போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் சிறப்பு தூதுர் ஸ்டீவ் விட்காஃப் தலைமையிலான குழு தற்காலிக போர்நிறுத்தத்திற்கான வரைவறிக்கையை முன்வைத்துள்ளது.

60 நாட்கள் போர்நிறுத்தம் செய்வதற்கான இந்த ஒப்பந்தத்தில் பணயக் கைதிகளை விடுவிப்பது, காசாவிற்குள் மனிதாபிமான தேவைகளை அனுமதிப்பது, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், காசா மீது இன அழிப்பு போரை நடத்திவரும் அமெரிக்கா-இஸ்ரேல் போர்வெறி ஓநாய்களே அறிக்கையைத் தயாரித்திருப்பதால், முன்வைக்கப்பட்டிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தமானது ஒருதலைபட்சமானதாகவும் தெளிவு-உத்தரவாதமற்றதாகவும் உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இத்தகைய தெளிவற்றத் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டுதான் இந்தாண்டு ஜனவரியில் காசா-இஸ்ரேல் இடையே கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தன்னிச்சையாக மீறியது.

மறுபுறம், காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, காசாவை மீண்டும் கட்டியெழுப்புவது, நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்பது ஆகியவற்றுக்கு உத்தரவாதமளித்தால் அமெரிக்கா முன்வைத்துள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாஸ் அமைப்பு தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், காசா மக்களையும் ஹமாஸையும் எப்போது வேண்டுமானாலும் ஒடுக்குவதற்கு சாதகமாகவே ஒப்பந்தமிடத் துடித்துக்கொண்டிருக்கும் இஸ்ரேல்-அமெரிக்கா கும்பல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், காசா மக்களின் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு ஹாமாஸை தங்களது நோக்கத்திற்குப் பணியவைக்க முயல்கிறது. இதன் காரணமாகப் போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுபறியான நிலையை எட்டியுள்ளது.

முன்னதாக, இந்தாண்டு ஜனவரி மாதத்தில் காசா-இஸ்ரேல் இடையில் மூன்று கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது “காசா மீதான போர் நிறுத்தம்: காசா மீண்டது, பாலஸ்தீனமும் மீளும்” என்ற தலைப்பில் பிப்ரவரி மாத புதிய ஜனநாயகம் இதழில் கட்டுரை வெளியானது. இக்கட்டுரையில், உலகம் முழுக்க நடந்த மக்கள் போராட்டங்களாலும் காசா மக்கள் மற்றும் ஹமாஸின் உறுதியாலும் ஏற்பட்ட கடுமையான நெருக்கடி காரணமாகவே இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு பணிந்துவந்தது என்பது தெளிவுற எழுதப்பட்டிருந்தது. மேலும், காசா மீதான போர் என்ற இந்த இடைக்கட்டத்தில், பல இழப்புகளைச் சந்தித்திருந்தாலும் ஹமாஸூம் பாலஸ்தீன மக்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் தொடங்கும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

அதற்கேற்ப போர்நிறுத்தம் அமலான பிறகு காசாவை விட்டு வெளியேறிய மக்கள் காசாவிற்கு திரும்பியதுடன், காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கின.

ஆனால், போர்நிறுத்தத்தின் முதற்கட்டம் அமலிலிருக்கும் போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காசாவிலிருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றிவிட்டு அதனை கார்ப்பரேட்-கேளிக்கை நகரமாக மாற்றும் திட்டத்தை முன்வைத்தார். இனவெறி இஸ்ரேல் இத்திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது.

காசாவை ஏகாதிபத்தியங்களின் கெடுநோக்கத்திற்கேற்ப மறுகட்டமைப்பு செய்யும் இந்த சதித்திட்டம் குறித்து போர்நிறுத்த பேச்சுவார்த்தையின் போது வாய்திறக்காமல், தங்களுடைய நெருக்கடியைத் தற்காலிகமாக தீர்த்துகொள்வதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஏகாதிபத்தியங்களின் இந்த சதித்திட்டத்திற்கு ஹமாஸும் காசா மக்களும் அடிபணியாததால் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒப்பந்தத்தை மீறி காசா மீதான போரை மீண்டும் தொடங்கின. மேலும், ட்ரம்பின் திட்டத்திற்கு பணியவைப்பதற்காகவே காசா மீதான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.

“காசாவிலிருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதே இஸ்ரேலின் போர் முயற்சியின் அதிகாரப்பூர்வ நோக்கம்” என்று பாசிஸ்ட் நெதன்யாகு கடந்த மாதத்தில் முதன்முறையாக பகிரங்கமாக அறிவித்தது, ட்ரம்ப்-நெதன்யாகு பாசிச கூட்டின் நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்குகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளும் காசாவை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகின்றன.

இத்தகைய சூழலில் உலகம் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள்தான் காசாவை மேலாதிக்கம் செய்யத் துடிக்கும் ஏகாதிபத்திய ஓநாய்களின் சதியை முறியடித்து காசாவில் விரைவில் போர்நிறுத்தம் அமலாவதற்கு துணைநிற்கும். எனவே “காசா மீதான போரை நிரந்தமாக நிறுத்து”, “காசா பாலஸ்தீன மக்களுக்கே” என உலகம் முழுவதிலுமிருந்து முழங்க வேண்டியுள்ளது.


பானு

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-31, மார்ச் 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 7-8 | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கிரிமினல் ஜெயா கும்பல் நீதித் துறைக்கு சவால்
  • அம்பேத்கார் பெயரில் பேருந்து தலித்துக்களுக்கோ தடியடி!
  • மக்களை கசக்கிப் பிழிவதே தரகர்களின் தாராளமயமாக்கல்
  • புலி பீதியூட்டும் கழிசடை அரசியல்
  • பஞ்சாபில் போலீசின் பயங்கரவாத ஆட்சி
  • பஞ்சாபில் மறைக்கப்பட்ட பயங்கரவாதக் கொடூரங்கள்
  • பத்திரிகைகளை விழுங்கும் பன்னாட்டு பகாசூர கம்பெனிகள்
  • உ.பி: தலித்துகள் மீது சாதிவெறித் தாக்குதல்
  • தஞ்சையில் தமிழ்மக்கள் இசை விழா
  • முற்றும் காஷ்மீர் விவகாரம் சுற்றும் பிணந்திண்ணி கழுகுகள்
  • வீரமணியிடமிருந்து பெரியாரை விடுதலை செய்வோம், வாரீர்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 5-6 | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தலித்துக்களே வாரீர்! புரட்சித் தீ ஏந்துவோம்!
  • பண்ணை ஆதிக்கம் ஒழிய போர்த்தெடுக்கும் வி.வி.மு.
  • ஜெயா-சென்னா நாய்ச்சண்டையில் நாறுது ‘ஜனநாயகம்’
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கன்சிராம்-முலாயம் வெற்றி கானல் நீர்
  • தொடரும் ‘மணமகள்’ விற்பனை நாட்டுக்கே அவமானம்
  • உச்சநீதி மன்றமே இப்படி மிச்சநீதி மன்றங்கள் எப்படி?
  • ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாதங்கள்
  • இற்றுவிழும் தேர்தல் முறைக்கு முட்டுக் கொடுக்கும் சேஷன்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பாசிச கும்பலின் முருக பக்தர்கள் மாநாடு: நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் ஆதரவானதா? | தோழர் ரவி

பாசிச கும்பலின் முருக பக்தர்கள் மாநாடு:
நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் ஆதரவானதா? | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஆண்டி முருகனை அழிக்க வந்த பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் | தோழர் ரவி

ஆண்டி முருகனை அழிக்க வந்த பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



முருக பக்த மாநாடு: மக்களை பிளவுபடுத்தத் துடிக்கும் பாசிச கும்பலின் சதி!

முருக பக்த மாநாடு: மக்களை பிளவுபடுத்தத் துடிக்கும் பாசிச கும்பலின் சதி!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1993, ஜனவரி 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 3-4 | 1993 டிசம்பர் 16-31, 1994 ஜனவரி 1-15,  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வங்கி-பங்குச் சந்தை மோசடியும் கூட்டு விசாரணை மோசடியும்
  • தோழர் மாவோ நூற்றாண்டு விழா: மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்!
  • தமிழினம் இனி யாரை நம்புவது?
  • டிசம்பர்-6 கறுப்புநாள் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். பங்காளியின் அடக்குமுறை
  • தொற்று நோய்க்கு அரசே கிருமி!
  • நம்பூதிரியாரின் மார்க்சியப் புரட்டல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ராமதாசை மூக்கறுத்த ‘பண்ருட்டி’ விவகாரம்
  • அதிகார போதையில் ஆடிய போலீசு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



முருகன் மாநாடு: மதுரையில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்ட பி.ஜே.பி திட்டம்

முருகன் மாநாடு: மதுரையில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்ட பி.ஜே.பி திட்டம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மதுரை முருகன் மாநாடு: தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கு துடிக்கும் அமித்ஷா

மதுரை முருகன் மாநாடு: தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கு துடிக்கும் அமித்ஷா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-31, டிசம்பர் 1-15, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 1-2 | 1993 நவம்பர் 16-31, டிசம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பா.ஜ.க. தோல்வியும் பாசிச மாய்மாலமும்
  • “நக்சல்பாரி பாதைஇயில் சிவப்புப் பூ பூக்கும்”
  • தொழிலாளர்மீது அடக்குமுறை மக்கள்மீது கட்டண உயர்வு
  • தி.மு.க. பிளவால் தமிழக அரசியலில் விளைவு என்ன?
  • கட்டளையிடுகிறது அமெரிக்கா காலில் விழுகிறது இந்தியா
  • ஊருக்கு உழைப்பவருக்கு கொடுமைகளே பரிசு
  • தமிழ்நாடு: குண்டர்களின் சுயாட்சிப் பிரதேசம்
  • ஈழப்போர் எதை நோக்கி? சமரசமா? முடிவற்றதா?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கோவை போலீசாரின் இந்து வெறியாட்டம்
  • ஏழை நாடுகளை விழுங்க அமெரிக்காவின் பொருளாதார வளையம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மாவோயிஸ்ட் தோழர்களை சித்தரவதை செய்து கொல்லும் மோடி அரசு

த்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவில் ஜூன் 5-ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக மாவோயிஸ்ட் தோழர்கள் மீதான தாக்குதல் நடந்து வந்தது. இதில் ஏழு மாவோயிஸ்ட் தலைவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர். இதனை சிவில் உரிமைகள் குழு (Civil Liberties Committee) என்ற அமைப்பு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

சிவில் உரிமைகள் குழுவின் தெலுங்கானா தலைவர் கடாம் லட்சுமணன், பொதுச் செயலாளர் எம். நாராயண ராவ் மற்றும் பிற அலுவலக நிர்வாகிகள் தெரிவிக்கையில், “1,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தேசிய பூங்காவின் பர்ஷாகர் கிராமத்திலிருந்து பத்து மாவோயிஸ்ட் தோழர்களை போலீசு கைது செய்து இழுத்துச் சென்றது. ஜூன் 5-ஆம் தேதி ஒருவர், ஜூன் 6-ஆம் தேதி நான்கு பேர் மற்றும் ஜூன் 7-ஆம் தேதி இரண்டு பேர் என தினமும் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்து ஏழு மாவோயிஸ்ட் தலைவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்; மீதமுள்ள மூன்று மாவோயிஸ்டுகள் போலீசிடம் உள்ளனர்” என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஜூன் 5-ஆம் தேதி கொல்லப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினர் டெண்டு லட்சுமி நரசிம்மா மற்றும் ஜூன் 6-ஆம் தேதி கொல்லப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர் மைலாரபு அடேலு என்ற பாஸ்கர் ஆகிய இருவரின் சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசு தெரிவித்துள்ளது. ஆனால், போலீசின் பிடியிலிருந்த பத்து மாவோயிஸ்டுகளின் பெயர்களையும் சிவில் உரிமைகள் குழு வெளியிட்டு போலீசின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், ஜூன் 7-ஆம் தேதி மற்றொரு தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர் பண்டி பிரகாஷ் மற்றும் தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர் பாப்பா ராவ் ஆகியோரின் மரணம் குறித்து தங்களுக்குத் தெரிய வந்ததாகவும் அவ்வமைப்பின் தெலுங்கானாத் தலைவர் லட்சுமணன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதேசக் குழு உறுப்பினர் ராமண்ணா, தேசிய பூங்கா பகுதிக் குழு செயலாளர் திலீப், தண்டகாரண்யா பகுதிக் குழு பெண் செயலாளர் சித்து மற்றும் தேசிய பூங்கா பகுதிக் குழு உறுப்பினர்கள் சுனிதா, மகேஷ் மற்றும் முன்னா ஆகியோர் போலீசின் பிடியில் இருப்பதாகவும் அவ்வமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.


படிக்க: மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்


முன்னதாக, ஜூன் 5-ஆம் தேதி அன்று மாலையில் இப்படுகொலைகள் குறித்து சிவில் உரிமைகள் குழுவின் தெலுங்கானா தலைவர் கடாம் லட்சுமணன் தெரிவிக்கையில், “ஜூன் 5 ஆம் தேதி அன்று போலீசு தகவல் தொடர்பு வலையமைப்பு மூலம் அவர்கள் (மாவோயிஸ்டுகள்) இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அதனை அறிந்து உடனடியாக, சிவில் உடையிலிருந்த பத்து மாவோயிஸ்டுகள், தங்கள் ஆலிவ் பச்சை சீருடைகளை மாற்றிக்கொண்டு, பாஷாகர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தனர். காலை 7 மணியளவில் அவர்களைக் கைது செய்வதற்காக போலீசு வந்தது. பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், “சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர் பிரகாஷ் மற்றும் போலீஸ் பிடியில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது; அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். மோடி அரசு போர்நிறுத்தத்தை அறிவித்து மாவோயிஸ்டுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போலீசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், தோழர் பிரகாஷ் உட்பட போலீசு பிடியிலிருக்கும் ஒவ்வொரு மாவோயிஸ்டுகளையும் போலீசு சித்திரவதை செய்து கொன்று வருகிறது.

இந்நிலையில், மாவோயிஸ்டுகளின் தரப்பு மத்தியஸ்தர் பேராசிரியர் ஜி. ஹரகோபால் மற்றும் பிறரைக் கொண்ட “அமைதிக்கான ஒருங்கிணைப்புக் குழு”, சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) கட்சியின் 18 மூத்த தோழர்கள் போலீஸ் பிடியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தலைவர்களின் உயிருக்கு போலீசிடமிருந்து கடுமையான அச்சுறுத்தல் உள்ளதாகவும் “சத்தீஸ்கரில் உருவாகிவரும் அரசியலமைப்பு நெருக்கடி, ஜனநாயகக் கொள்கைகள் சிதைக்கப்படுவது ஆகியவற்றைத் தடுக்க நீதிமன்றத்தின் அவசரத் தலையீடு தேவை” என இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பல்லா ரவீந்திரநாத் தலைமையிலான அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குழுவும், சுதாகர் மற்றும் பாஸ்கர் ஆகிய இரு தோழர்களும் போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.


படிக்க: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!


அதேபோல், இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் பிச்சுகா சுதாகர், சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் மற்றொரு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் வரை அவர்களின் உடல்களைப் பாதுகாக்க உத்தரவு பிறப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் ‘நக்சல் ஒழிப்பு’ என்கிற பெயரில் “ஆபரேஷன் ககர்” நடவடிக்கையின் மூலம் மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடிக் கொண்டிருக்கிறது. மலைகளில் உள்ள கனிம வளங்களை அதானி, அம்பானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்காக மலைகளில் வாழும் பழங்குடி மக்களை விரட்டியடிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாவோயிஸ்ட் தோழர்களையும் பழங்குடியின மக்களையும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்று வருகிறது.

மோடி அரசு அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டுமென இந்தியா முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தாலும் அதற்கு செவிமடுக்காமல் பாசிச திமிர்த்தனத்துடன் தனது நரவேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. “பழங்குடி மக்கள், மாவோயிஸ்டுகள் மீதான உள்நாட்டுப் போரை நிறுத்து” என இந்தியா முழுவதிலுமிருந்து குரலெழுப்புவதும் போராட்டங்களைக் கட்டியமைப்பதுமே பாசிச கும்பலைப் பணிய வைக்கும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram