Friday, August 1, 2025
முகப்பு பதிவு

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 24, ஆண்டு 14, இதழ் 01 | நவம்பர் 01-30, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தமிழக ‘அமைதி’க்கு தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பலியிடுவதா?
  • கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்
  • நாற்காலிக்கு தேசியம் மேடைக்கு திராவிடம்
  • டாலருக்கு பஞ்சு ஏற்றுமதி! தமிழகப் பஞ்சாலைகளுக்குச் சாவுமணி!!
  • நாகபூஷண் பட்நாயக் மறைவு: துரோகிகளின் புரட்சி வேடமும் மறைந்தது
  • வை.கோ., இராமதாசு: பார்ப்பன பாசிச பல்லக்குத் தூக்கிகள்
  • கருணாநிதியின் விசாரணை நாடகம்! ஜெயாவின் முதலைக் கண்ணீர்!!
  • இன்று வீழும் முதலாளித்துவம் உலகை வெல்லும் கம்யூனிசம்
  • தமிழ் வழியில் உயர் கல்வி ஏட்டுச் சுரைக்காய் தானா?
  • ’மார்க்சிஸ்ட்’ கட்சி மாநாடு: சேற்றிலிருந்து புதை குழியை நோக்கி…
  • நகர்ப்புற குட்டி முதலாளிகள் கூடாரமாக போலி கம்யூனிஸ்ட் கட்சிகள்
  • நோபல் பரிசும் ஏகாதிபத்திய நலனும்
  • பா.ஜ.க.: சாதியவாதிகள் – கிரிமினல்களின் கூடாரம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தரவுகளை எதிர் ஆயுதமாக்கும் பாசிஸ்டுகள்!

ந்தாண்டு தொடக்கத்தில், காவி-கார்ப்பரேட் கும்பலின் நலனிற்காக உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட மகா கும்பமேளாவில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உத்தரப்பிரதேச யோகி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், சமீபத்தில் பி.பி.சி. செய்தி நிறுவனம் மேற்கொண்ட கள ஆய்வில், 82 அப்பாவி மக்கள் இறந்தது தெரியவந்துள்ளது‌. ஆனால், இது குறித்த உண்மை தகவலை தராமல், 37 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்று மூடிமறைத்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை தராமலும் நிர்கதியாக்கியுள்ளது பா.ஜ.க. கும்பல்.

2021-ஆம் ஆண்டில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சம் என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியாகி இருந்த “சிவில் பதிவு முறை” என்ற அரசின் அறிக்கையில் 2021-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 1.02 கோடி பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மரணங்களை விட சுமார் 20 லட்சம் மரணங்கள் அதிகமாக 2021-இல் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில் பார்க்கும்போது, 2021-ஆம் ஆண்டில் உண்மையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதாவது, பாசிச மோடி அரசு கூறியதை விட உண்மையான பலி எண்ணிக்கை சுமார் ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே, கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு காலக்கட்டத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் 2021-இல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் தங்களிடம் இல்லை என்று பாசிச மோடி அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலானது நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் அவற்றிற்கு வாய்திறக்காத மோடி கும்பல், பதிலடி தருகிறோம் என்ற பெயரில் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் மீதும் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, இந்திய இராணுவத்தின் தாக்குதல்களால் பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதங்களையும் இழப்புகளையும் ஊடகங்களில் ஊதிப்பெருக்கிக் காட்டிய பாசிச கும்பல் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து பேச மறுத்தது‌. பாகிஸ்தான் குறித்து பல பொய் தகவல்களை வெளியிட்டு தேசவெறி-மதவெறிப் பிரச்சாரம் செய்யும் அதே சமயத்தில் தனது தோல்விமுகத்தை மூடிமறைப்பதற்காக, ரபேல் விமானம் தாக்கப்பட்டது உள்ளிட்டு உண்மையான பல தரவுகளைத் திட்டமிட்டே வெளியிடாமல் மறுத்துவருகிறது. இதில் உள்துறை அமைச்சகம் மற்றும் இராணுவத்தின் செயல்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், மோதலின் போது இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகளும் அடங்கும்.

இறுதியாக கடந்த ஜூன் 12-ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் அரங்கேறிய “ஏர் இந்தியா” விமான விபத்தானது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இது குறித்த கேள்விக்கு, “விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை” என்று திமிர்த்தனமாக அமித்ஷா பதிலளித்தது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. “விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை என்றால் எதற்காக அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன?” என்று கேள்வியெழுப்பினார் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா. விமானப் போக்குவரத்து துறையின் கடந்த சில ஆண்டறிக்கைகள் மற்றும் தரவுத்தொகுப்புகளை (Datasets) பாசிச மோடி அரசு வெளியிடாமல் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்திற்கும், மோடி அரசு தரவுகளை வெளியிடாமல் இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என்று கூறினால் நம்ப முடிகிறதா?

இதை புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் தரவுகள் மற்றும் அதை வெளியிட வேண்டிய முக்கியத்துவத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு துறை வெளியிடும் தரவுத்தொகுப்பானது, அந்த குறிப்பிட்ட துறை அல்லது அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை நமக்கு அளிப்பதுடன், அந்த குறிப்பிட்ட துறை சாதித்த கள எதார்த்த நிலைமைகளை நமக்கு காட்டுகின்றன. அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திட்டமிடுதல், கொள்கை வரைவு தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் போன்ற திட்டமிடல் பணிகளுக்கு உறுதுணையாகவும் அடிப்படையாகவும் இத்தரவுகள் அமைகின்றன. அதுமட்டுமின்றி, அத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பிற்குரியவர்களாக ஆக்குவதன் மூலம், அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த தரவுகளை பரிசீலித்து தவறுகளை உணர்ந்து, எதிர்காலத்தில் தவறுகள் ஏற்படாத வகையில் திருத்திக் கொள்ளவும் தரவுகள் உதவுகின்றன. கல்வி, சுகாதாரம், இரயில்வே, விமானப் போக்குவரத்து, இராணுவம் போன்ற பல துறைகளில் நம்மிடம் உள்ள குறைபாடுகளை கண்டறியாமல், அந்தந்த துறைகளை நம்மால் எவ்வாறு மேம்படுத்த முடியும்? மோடி ஆட்சியில் ஒடிசா ரயில் விபத்து, ஏர் இந்தியா விமான விபத்து போன்ற கோர நிகழ்வுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

“2024-ஆம் ஆண்டின் இறுதியில், கல்வி, சுகாதாரம், சாலை விபத்துகள், தற்கொலை சம்பவங்கள், மருத்துவம் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 16 விசயங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தரவுத் தொகுப்புகளை வெளியிடவில்லை. மேலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக ஆயுஷ், சிவில் விமானப் போக்குவரத்து, பாதுகாப்புத்துறை, இரயில்வே உள்ளிட்ட ஒன்பது ஒன்றிய அமைச்சகங்கள் தங்களின் ஆண்டறிக்கைகளை வெளியிடவில்லை” என்ற அதிர்ச்சிகரத் தகவலை “இந்தியா ஸ்பெண்ட்” (IndiaSpend) என்ற பத்திரிகை உரிய ஆதாரங்களுடன் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதில் அதிகபட்சமான காலம், சட்ட மற்றும் நீதித்துறையில் (2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு) எந்த ஒரு தரவுகளும் வெளியிடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பொய்யான, மோசடியான தரவுகளை வெளியிடுவதும் அரசிடம் தரவுகள் இல்லை என்று மறுக்கப்படுவதும் பாசிச மோடி ஆட்சியில் இயல்பாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தங்களுடைய முகத்திரையை கிழிக்கும் வகையிலான உண்மை தரவுகள் வெளியிடப்படுவதை தீவிரமாக ஒடுக்கும் வேலையிலும் மோடி அரசு ஈடுபடுகிறது.

இந்தியாவில் இயங்கிவரும் “சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின்” இயக்குநராக கே.என்.ஜேம்ஸ் இருந்தபோது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு உள்ளிட்ட பல கணக்கெடுப்புகளின் தரவுத்தொகுப்புகள் வெளியிடப்பட்டன. இவை, மோடி அரசு முன்வைத்த பல கூற்றுகளை தகர்க்கும் வகையில் அமைந்ததால், அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஜேம்ஸின் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சி.ஏ.ஜி. அறிக்கைகளை வெளியிட்ட இயக்குநர்கள் முதல் ஆர்.டி.ஐ-க்கு பதிலளித்த ரயில்வே அதிகாரி வரை அனைவருக்கும் இதே நிலைதான்.

அதேசமயம், பசி, பட்டினி, வறுமை, கல்வி, ஊடக சுதந்திரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றின் உலகளாவிய தரவரிசை பட்டியல் அவ்வப்போது வெளியாகி மோடி அரசின் உண்மை முகம் அம்பலமாகிறது. ஆனால், தன்னுடைய ஆட்சியின் அவலநிலையை உலகிற்கு திரையிட்டுக் காட்டுவதை பாசிச மோடி அரசு விரும்பவில்லை. எனவே, இதுபோன்ற உலகளாவிய தரவரிசை பட்டியல்களை கண்காணிக்கும் பணியில் 19 ஒன்றிய அமைச்சகங்களை ஈடுபடுத்தியுள்ளது. பா.ஜ.க-வின் ஐ.டி. விங்கை போல செயல்படும் இந்த அமைச்சகங்களின் ஒரு பிரிவினர், பாசிச ஆட்சியின் கோரமுகத்தை அம்பலப்படுத்தும் வகையில் வெளிவரும் உலக தரவரிசை பட்டியல்களை தொடர்ச்சியாக கவனித்து, அதை வெளியிட்ட பதிப்பாளர்களை இந்திய தூதரகத்தின் மூலம் மிரட்டி, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப தரவரிசை பட்டியலை மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது.

மொத்தத்தில், கடந்த 11 ஆண்டுகளாக மக்கள் விரோத பாசிச ஆட்சியை நடத்திவரும் மோடி கும்பலானது, அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச பொறுப்பைக்கூட துறந்துவிட்டு மக்களிடம் தெரியப்படுத்த வேண்டிய உண்மைகளை மூடிமறைக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், தான் கட்டமைக்கும் கதைகளை உண்மை என்று பரப்புவதற்கான பிரச்சாரத்தையும் ஊடகங்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான தரவுகள், வெளியானால் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி, நடந்த தவறுகளுக்கு தான் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்ற காரணத்தினால், இயன்ற அனைத்து வழிகளிலும் உண்மை தரவுகள் வெளியாவதை தடுத்து வருகிறது. மோடி கும்பலின் இந்த செயலானது தனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களின் கருத்துரிமையை நசுக்கும் பாசிச நடவடிக்கையின் ஓர் அங்கமாகும். மோடி அரசின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு எதிராக சமூக செயற்பாட்டாளர்கள், பாசிசத்தை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து களப்போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகிறது.


ஜென்னி லீ

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16-30, அக்டோபர் 1-31, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 21-23 | செப்டம்பர் 16-30, அக்டோபர் 1-31, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பீகார் ஆட்சிக் கலைப்பு விவகாரம்: பா.ஜ.க.வின் பதவி வெறிக் கூத்தும்! லல்லுவின் ‘தியாகி’ நாடகமும்!!
  • பிள்ளையார் ஊர்வலம் – இராவண லீலா
    இந்து வெறியர்களின் இரட்டை நாக்கு
  • இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளை முறியடிப்போம்!
  • சுதேசி மோசடியும் பொருளாதாரப் பேரிடியும்
  • சுதேசி: ஆர்.எஸ்.எஸ்-இன் தேர்தல் ஆயுதம்
  • தேவர் சாதிவெறியும் குளிர்காயும் ஜெயா கும்பலும்
  • “கம்ப்யூட்டர்” யுகமா? காட்டுமிராண்டி யுகமா?
  • தெலுங்கானா போராட்டம்: அண்டப்புளுகண் அத்வானியின் வரலாற்று மோசடி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்

ந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரிலிருந்து அகதிகளாக வந்த இஸ்லாமிய மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் பாசிச மோடி அரசு சமீப மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. “ஆபரேஷன் புஷ் பேக்” (Operation Push Back) என்ற பெயரில் இப்பாசிச நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்நடவடிக்கையின் மூலம் 2,000-த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய அகதிகளை இந்தியாவிலிருந்து வெளியேற்றியிருப்பதாக செய்திகளில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்.

குறிப்பாக, வங்கதேச இஸ்லாமிய அகதிகளை குறிவைத்தே ஆபரேஷன் புஷ் பேக்-ஐ மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வங்கதேச அகதிகளே ஆவர்.

மேலும், மகாராஷ்டிரா, டெல்லி, அசாம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் புஷ் பேக், மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. உழைக்கும் மக்கள் வாழும் குடியிருப்புகள், அகதிகள் முகாம்களில் சோதனையிடப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் நாள்தோறும் கைது செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் கைது நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.

கைது செய்யப்படுபவர்களின் பயோமெட்ரிக் (Biometric) தகவல்களை சேகரித்துக் கொண்டு, துப்பாக்கி முனையில் மிரட்டி விலங்குகளைப் போல இழிவான முறையில் அண்டை நாட்டு எல்லைக்குள் விரட்டியடிக்கிறது பாசிச மோடி அரசு. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளையும் ஈவிரக்கமின்றி நாட்டை விட்டு வெளியேற்றி வருகிறது. இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்வது, எங்கு செல்வது என்று தெரியாமல் நிர்கதியாக வயல்வெளியில் நிற்கும் காணொளிகளும் புகைப்படங்களும் நெஞ்சை உலுக்குகின்றன.

குறிப்பாக, மே 12-ஆம் தேதி அன்று தென்கிழக்கு மியான்மர் கடற்கரைக்கு அருகில் இந்திய அதிகாரிகள், 43 ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை படுகொலை செய்யும் விதமாக கப்பலில் இருந்து கடலில் தள்ளிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மனிதத் தன்மையற்ற இக்கொடூர செயலுக்குப் பிறகுதான், ஆபரேஷன் புஷ் பேக் மூலம் இஸ்லாமிய அகதிகளை பாசிச மோடி அரசு சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற்றி வருவது கவனம் பெறத் தொடங்கியது.

ஆபரேஷன் புஷ் பேக்:
தூண்டப்படும் இந்துமதவெறி-தேசவெறி

ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கவெறி காரணமாக நடைபெறும் போர்கள், கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற இயற்கைவளச் சுரண்டல், உள்நாட்டுப்போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் உலகம் முழுவதும், தங்களுடைய நாடுகளிலிருந்து மக்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்படுவதும், பிழைப்புத்தேடி மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்வதும் ஒரு போக்காக உள்ளது.

இவ்வாறு புலம்பெயர்ந்துவரும் மக்கள் மிகக் குறைவான கூலிக்கு கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இன்றி சிறைபட்டுக் கிடக்கின்றனர். இராணுவத்தாலும், போலீசாலும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்குள்ளாக்கப்படுவது; வழக்குகளை முடிக்க குற்றவாளிகளாக சேர்க்கப்படுவது என வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பாசிச சக்திகள் வளர்ந்துவரும் சூழலில், புலம்பெயர் தொழிலாளர்கள், அகதிகள் மீதான வெறுப்புணர்வு திட்டமிட்டு தூண்டப்படுகிறது. மதவெறி, தேசவெறி, இனவெறி என பல்வேறு வகைகளில் மக்களை அணித்திரட்ட முயற்சிக்கும் பாசிஸ்டுகள், நாட்டில் நிலவும் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அகதிகளைக் காரணம் காட்டி, தேசவெறியை தூண்டுவது உலகம் முழுவதும் ஒரு போக்காக உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தப் பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற பெயரில் பலரை வெளியேற்றிவருவது இதனுடன் இணைந்ததுதான்.

இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாடு கடத்தப்பட்ட மேற்கு வங்கத் தொழிலாளர்கள்.

இவ்வாறே, இந்தியாவில் ஆட்சியிலிருக்கும் பாசிச மோடி கும்பலும் இஸ்லாமிய அகதிகளை காரணம் காட்டி இந்துமதவெறி-தேசவெறியூட்டி வருகிறது. “இந்துக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள், வேலைகளை பறிக்கிறார்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள், இவர்களால் நாட்டிற்கு ஆபத்து” என பல்வேறு நச்சுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நடவடிக்கைகளின் சட்டப்பூர்வமான வடிவமே ஆபரேஷன் புஷ் பேக். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்றுக் கூறி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் போர்வெறி, தேசவெறி, இந்துமதவெறியை கிளப்பியது போல, வங்கதேச அகதிகளால் நாட்டிற்கு ஆபத்து என்றுக் கூறி ஆபரேஷன் புஷ் பேக் மூலம் இந்துமதவெறி- தேசவெறியை கிளப்பி வருகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்ட விதிகளை எல்லாம் தூரவீசிவிட்டு, துளியும் ஈவிரக்கமின்றி மூர்க்கத்தனமாக தன்னுடைய இந்துராஷ்டிரக் கொள்கையிலிருந்து இப்பாசிச நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

சான்றாக, இந்தியாவிற்குள் முறையான ஆவணங்களின்றி புலம்பெயர்ந்துள்ள அகதிகளை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், அந்நாடுகளின் ஒப்புதலுடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று “வெளிநாட்டினர் சட்டம், 1946” கூறுகிறது. மேலும், சர்வதேச சட்டங்களின்படி, அகதிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய ஓர் நாட்டிற்கு அவர்களை திருப்பி அனுப்பக் கூடாது. ஐ.நா-வில் உறுப்பினராக உள்ள நாடு இவ்விதியை பின்பற்ற வேண்டும். ஆனால், மோடி அரசு இவ்விதிகளை ஓர் பொருட்டாகக்கூட மதிக்காமல் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாமல் தனக்கே உரிய பாசிசத் திமிருடன் நடந்துகொள்கிறது.

குறிப்பாக, அசாம் மாநிலத்தின் ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. அரசானது வெளிநாட்டினர் என்று தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும், 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களையும் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று வெளியேற்றி வருகிறது. அசாம் மாநிலத்திற்காக சிறப்பாக இயற்றப்பட்ட “குடியேறிகள் (அசாமில் இருந்து வெளியேற்றம்) சட்டம், 1950” மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்நடவடிக்கைகளில் அசாம் அரசு ஈடுபட்டு வருகிறது.

மேலும், கடந்த ஜூன் 10-ஆம் தேதி, “அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளவர்களையும், நாங்கள் சட்டவிரோத குடியேறிகள் என்று உறுதிசெய்தால் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்” என்று அசாம் முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அறிவித்திருக்கிறார். அதாவது, தாங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று வெளியேற்றுவோம் என்பதையே வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.

அதுமட்டுமின்றி, ஆபரேஷன் சிந்தூர் போன்று ஆபரேஷன் புஷ் பேக்கையும் தங்களுடைய தேர்தல் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள பா.ஜ.க. கும்பல் விரும்புகிறது. குறிப்பாக, அசாம் மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற, ஆபரேஷன் புஷ் பேக்கை பயன்படுத்தி தீவிரமான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக உச்சநீதிமன்றம்

மோடி அரசின் ஆபரேஷன் புஷ் பேக் எனும் இப்பாசிச நடவடிக்கைக்கு உறுதுணையாகவே உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அகதிகள் வெளியேற்றப்படுவது தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளை உச்சநீதிமன்றம் கையாளும் முறையே இதனை தெளிவுப்படுத்துகிறது.

நாடுமுழுவதும் மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் 8,000-க்கும் மேற்பட்டோர் வசித்துவரும் நிலையில், அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம், ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்ததுடன், “ரோஹிங்கியாக்கள் இந்திய குடிமக்கள் அல்ல. நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை” என்று கூறியது.

அதேபோல், இந்திய அதிகாரிகளால் 43 ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகள் கடலில் தள்ளப்பட்ட கொடூரச் சம்பவத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது.

இதன் உச்சமாக, இந்தியாவில் வசிக்க அனுமதிக் கோரி இலங்கை நாட்டவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, “உலகம் முழுவதுமிருந்து அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது” என துளியும் மனிதாபிமானமின்றி பேசினார்.

மொத்தத்தில், ஆபரேஷன் புஷ் பேக் எனும் பாசிச திட்டத்திற்கு ஆதரவாக பாசிஸ்டுகளின் ஊதுகுழலாகவே மாறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்து வருகின்றனர்.

இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்களை
எதிர்நோக்கியுள்ள பேரபாயம்

ஆபரேஷன் புஷ் பேக் என்ற பாசிச திட்டமானது வங்கதேசம், மியான்மர் நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமிய மக்களுக்கும் எதிரானதாகும்.

சான்றாக, இந்த மாதத் தொடக்கத்தில் மும்பையில் பணிபுரிந்துவந்த மூன்று மேற்குவங்கத் தொழிலாளர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) நாடு கடத்தப்பட்டனர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உட்பட அனைத்து ஆவணங்களும் இருந்தபோதிலும், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தினால் அத்தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட மூன்று தொழிலாளர்களும் காணொளி வாயிலாக தங்களின் உறவினர்கள் மற்றும் மேற்குவங்க அரசிடம் தங்களை மீட்குமாறு கோரிக்கை வைத்ததையடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர்.

அதாவது, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என்று கூறி இடிப்பதைப்போல, இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற பெயரில் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற சதித்திட்டமும் ஆபரேஷன் புஷ் பேக்-இன் பின்னணியில் உள்ளது.

ஏற்கெனவே, இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய பாசிச சட்டங்களை கொண்டுவந்துள்ள மோடி அரசு, மக்கள் எதிர்ப்பினால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் நிறுத்தி வைத்துள்ளது. தற்போது, ஆபரேஷன் புஷ் பேக் மூலம் மறைமுகமாக இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மேலும், ஆபரேஷன் புஷ் பேக் பாசிசத் திட்டத்தால் தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படும் அபாயமும் உள்ளது.

கூடுதலாக, ஆபரேஷன் புஷ்பேக் மூலம் தன்னுடைய பிராந்திய மேலாதிக்க நோக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் முகமது யூனிஸ் தலைமையிலான வங்கதேசத்தின் இடைக்கால அரசிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கமும் பாசிச கும்பலுக்கு உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அதானி குழுமமானது, வங்கதேச அரசு மின்சார விநியோகத்திற்கான 800 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது. அதேபோல், பாசிச மோடி அரசு வங்கதேசத்தின் சரக்குகளை இந்திய துறைமுகங்கள், விமான நிலையங்கள் மூலம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது; ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யவும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் தொடர்ச்சியாகவே வங்கதேச இஸ்லாமிய அகதிகளை வெளியேற்றுவதில் தீவிரம்காட்டி வருகிறது.

அதுமட்டுமின்றி, தன்னுடைய அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகளை சகல வசதிகளுடன் பராமரித்துவரும் மோடி அரசானது, இஸ்லாமிய அகதிகளை இந்தியாவை விட்டு அடாவடித்தனமாக வெளியேற்றி வருவதற்கு அதனுடைய பிராந்திய மேலாதிக்க நலனும் முக்கிய காரணமாகும்.

பாசிச கும்பலின் இத்தகைய பாசிச நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள், எந்தவித கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்யாமலிருக்கின்றன. இது, இஸ்லாமிய அகதிகள் பிரச்சினையை தங்களுடைய அரசியல் நலனுக்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றனரே தவிர, அவர்களின் நலனில் உண்மையாக அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

எனவே, இந்தியாவில் வசித்துவரும் இலட்சக்கணக்கான இஸ்லாமிய, ஈழத் தமிழ் அகதிகளையும், இந்திய இஸ்லாமியர்களையும் சூழ்ந்துள்ள இப்பேரபாயத்திலிருந்து அவர்களை காப்பது இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிசத்திற்கு எதிராக போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 16-31, செப்டம்பர் 1-15, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 17-20 | ஜூலை 16-31, செப்டம்பர் 1-15, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயின், சிறீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைகள்: பாரதீய ஜனதாவின் பழிவாங்கும் வெறியும் பாசிசத் திமிரும்
  • ஏ.வி.டி.: வாலறுந்த நரியின் ஊளை
  • மரண ஓலத்தில் ஈழம் மௌனத்தில் தமிழகம்
  • காவிரி: மீண்டும் வஞ்சனை
  • பெண்கள் இட ஒதுக்கீடு: ஓநாய்களிடம் நீதி கிடைக்குமா?
  • கண்டதேவி கோயில் தேர் விவகாரம்: மனுதர்மமே கருணாநிதியின் சமூகநீதி!
  • சுயநிதிக் கல்லூரிகள்: கட்டுப்பாடற்றக் கொள்ளைக்கு நீதிமன்ற அங்கீகாரம்
  • புதிய மாநிலங்கள் உருவாக்கம்: ஜனரஞ்சகத் திட்டமா? நயவஞ்சக மோசடியா?
  • இந்துவெறியர்கள் ஆட்சியில் தொழிலாளர் மீதான தாக்குதல்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பா.ஜ.க-வின் சாதிவாரிக் கணக்கெடுப்பு: சாதிய முனைவாக்கத்திற்கான கருவி!

பிற்போக்குப் பார்ப்பனிய சாதிய படிநிலை அமைப்பைக் கொண்ட இந்திய சமூகத்தில், படிநிலைச் சாதிய அமைப்பிற்கேற்பவே மக்கள் சமூகப்-பொருளாதார நிலையைப் பெற்றிருக்கின்றனர். தமிழ்நாடு, கேரளா போன்ற சில மாநிலங்களில் சமூக சீர்திருத்தத்தின் காரணமாக சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், இன்றளவில் இந்தியாவில் மொத்தம் எத்தனை சாதிகள்-உட்சாதிகள் உள்ளன? சாதி ரீதியாக மக்கள்தொகை எண்ணிக்கை என்ன? தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலை என்ன? என்பவை குறித்த எந்தத் தரவுகளும் ஒன்றிட அரசிடமோ அல்லது மாநில அரசுகளிடமோ இல்லை. பிரிட்டீஷ் ஆட்சியில் 1931-இல் எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இதுவரை இந்தியாவில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2011-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போதும் மக்களிடம் சாதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதன்படி, இந்தியாவில் மொத்தமாக 46 லட்சம் சாதிகள், துணை சாதிகள், சாதி பெயர்கள், குலங்கள் குறித்த தகவல்கள் மக்களால் அளிக்கப்பட்டிருந்தன. இவை குறித்த எந்தத் தரவுகளும் ஒன்றிய அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதி தொடர்பான விவரங்களைப் பகுப்பாய்வு செய்ய அப்போதைய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தலைமையில் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. ஆனால், அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களைக் கோருகின்றன. சான்றாக, கல்வி நிலையங்களில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம் இவ்வாறான கேள்வியை எழுப்பியுள்ளது என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி.

இந்தப் பின்னணியில்தான், இந்தியாவில் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுப்பப்படுகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம் முக்கிய வினையாற்றியது. ராகுல்காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான ஆயுதமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்னெடுத்தார். இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தி.மு.க., ஜனதா தளம் போன்ற கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தன. தெலுங்கானாவிலும், பீகாரிலும் சாதிவாரிக் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இவை பிற மாநிலங்களிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்தின.

எனினும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு அப்போது வெளியிடவில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருபவர்களை “நகர்ப்புற நக்சல் மனநிலை கொண்டவர்கள்” என்றும், “இந்தியாவை பிளவுபடுத்துபவர்கள்” என்றும் ஏப்ரல் 28, 2024 அன்று பத்திரிகையாளார் சந்திப்பின்போது வெறுப்பைக் கக்கினார் மோடி. 23 செப்டம்பர், 2021-இல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது, ஒன்றிய அரசு.

ஆனால், திடீரென்று சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிரான தனது நிலைப்பாட்டிலிருந்து “அந்தர் பல்டி” அடித்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல். கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி, அடுத்துவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. சாதிவாரிக் கணக்கெடுப்புடனான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, ஜம்மு காஷ்மீர், உத்தராக்கண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருகிற அக்டோபர் 2026-லிருந்தும், இதர மாநிலங்களில் மார்ச் 1, 2027-லிருந்தும் தொடங்கப்படும் என்று ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் இப்பணியில் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 1.3 லட்சம் செயற்பாட்டாளார்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

யூ-டர்னா?” செயலுத்தியா?

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன. பெரும்பாலான முதலாளித்துவ ஊடகங்கள் ஒன்றிய அரசின் இந்த முடிவை “யூ-டர்ன்” என்று அழைக்கின்றன. பீகாரில் அடுத்த ஆறு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதாலேயே மோடி அரசு யூ-டர்ன் அடித்திருப்பதாக கருத்து தெரிவிக்கின்றன.

ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பானது பீகார் தேர்தலுக்கானது என்பது ஒரு பகுதி உண்மை மட்டுமே. வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலுக்கு முதுகெலும்பாக இருந்த நிலவுடைமை சாதிகள் தற்போது இப்பாசிச கும்பலுக்கு எதிராகவே திரும்பியுள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால், பாசிச கும்பலின் சமூக அடித்தளம் அரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்த மோடி அரசு எடுத்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள், ஜாட் சாதியினரை அரசியல் ரீதியாக பா.ஜ.க-விற்கு எதிராகத் திருப்பியது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஜாட் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியது. தங்களது சாதிய அடித்தளம் பறிபோய்விடும், சாதிய-சனாதனக் கட்டமைப்பு உடைக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தினால் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி அரசு அறிவித்தது.

அதேபோல், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், மோடி அரசின் சதியால் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது போன்றவை ஜாட் சாதியினரிடையே பா.ஜ.க. எதிர்ப்புணர்வை மேலும் அதிகரித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-விற்கு வாக்களிக்க மாட்டோம் என காப் பஞ்சாயத்தில் முடிவெடுத்து வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. வடமாநிலங்களில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநிலங்களில் வாழும் இச்சாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 8.25 கோடியாகும். இதன் எதிரொலியாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் பா.ஜ.க. 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு விழுந்த மிகப்பெரும் அடியும் சரிவுமாகும்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளில் தீவிரமாக மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தியதன் விளைவாக இந்திய விவசாயத்துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், விவசாயத்தை நம்பியிருந்த நிலவுடைமை சாதிகள் அரசு வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியது. எனவே, அரசு வேலைகளில் தங்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கான போராட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது.

மகாராஷ்டிராவில் 2016-ஆம் ஆண்டிலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது மகாராஷ்டிராவில் மராத்தியர்களை குன்பி சாதியாக வகைப்படுத்தி ஓ.பி.சி. பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனோஜ் ஜாரங்கே பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார். அப்போராட்டத்திற்கு அடிபணிந்த பா.ஜ.க. தலைமையிலான தேவேந்திர பட்னாவிஸ் அரசு 72,000 பணியிடங்களை நிரப்புவதாகவும், 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தது.

மராத்தியர்கள் மட்டுமின்றி, குஜராத்தில் பட்டிதார்கள் (படேல்கள்), ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் மற்றும் ஹரியானாவில் ஜாட்டுகள் போன்ற சாதியினரும் இத்தகைய இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தில், 1981 மற்றும் 1985-ஆம் ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டபோது அதனை எதிர்த்து படேல் சமூகத்தினர் குஜராத் மாநிலத்தையே நிலைகுலைய வைக்கும் வகையில் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், அதே படேல் சமூகத்தினர் 2015-க்கு பிறகு தங்களையும் ஓ.பி.சி. பிரிவின்கீழ் சேர்க்க வேண்டும், தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இச்சாதிகள், சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களாக இருந்தாலும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில், பார்ப்பனியர்களுக்குப் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, வடமாநிலக் கட்சிகளில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்ற குமுறலும் இவர்களிடையே இருக்கிறது. நீருபூத்த நெருப்பாக இவர்களிடம் உள்ள இடஒதுக்கீட்டு மனநிலை ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க.விற்கு எதிராக வெடிக்கும் அபாயம் இருப்பதை ஆர்.எஸ்.எஸ். உணர்ந்திருக்கிறது. அதேபோல், பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் இதர மாநிலக் கட்சிகளின் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான நிர்பந்தமும், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பீகாரில் மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியிருப்பதும், இடஒதுக்கீடுக் கோரி போராடும் சாதிகளிடமும், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளிடமும் தாக்கம் செலுத்துகின்றன.

எனவே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலக்காட்டில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிரான தனது வரலாற்று நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். மாற்றியிருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பானது பின்தங்கிய மக்களின் நலனுக்காக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்-இன் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் கூறியிருக்கிறார்.

இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தனது வரலாற்று நிலைப்பாட்டிற்கு எதிராக சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதானது பாசிச கும்பலின் இன்றைய சூழலுக்கான அரசியல் செயல் உத்தியே தவிர, சித்தாந்த மாற்றம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்கள்தொகையில் சிறு கும்பலான குஜராத்தி-மார்வாரி-பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே ‘இந்து ஒற்றுமை’ என்று பேசிவருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல். ஆட்சி-அரசின் உயர் பதவிகளையும், சமூகத்தின் சொத்துகளில் 40 சதவிகிதத்தையும் அனுபவிக்கிற, இச்சிறு கும்பலுக்குப் பாதகம் ஏற்படும் என்பதாலே இவ்வளவு காலம் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் இடஒதுக்கீட்டையும் எதிர்த்து வருகிறது காவி கும்பல்.

தற்போது, தனது குஜராத்தி-மார்வாரி-பார்ப்பனிய-பனியா மேலாதிக்கத்திற்குப் பக்கபலமாக இருந்த ஜாட், படேல் மற்றும் மராத்தியர்கள் போன்ற சாதியினரிடையே பா.ஜ.க. எதிர்ப்புணர்வு உருவாகிவருவதால் வேறுவழியின்றி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

சாதிய முனைவாக்கத்திற்கான கருவி

சாதிவாரிக் கணக்கெடுப்பை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறினாலும், உண்மையில் தங்களது சமூக அடித்தளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான கருவியாக சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்திட்டம்.

மக்களிடம் சாதி இல்லை, ‘இந்து’ என்ற ஒற்றைக் குடையின் கீழ் மக்களைத் திரட்டுவதாக ஆர்.எஸ்.எஸ். கூறினாலும்,  சாதிய அமைப்புகளில் ஊடுருவி தங்களுக்கான ஜந்தாம் படைகளை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்திலும், தென்மாவட்டங்களிலும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் அப்பகுதிகளில் சாதியத் தாக்குதல்கள் அதிகரித்துவருவது குறித்து “புதிய ஜனநாயகம்” தொடர்ந்து பதிவுசெய்து வருகிறது.

அதேபோல், கடந்த ஆகஸ்ட் 2024-இல் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது, தாழ்த்தப்பட்ட மக்களைப் பல்வேறு துணைப் பிரிவுகளாகப் பிரித்து, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமையை சிதைத்து, இறுதியில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் அபாயம் கொண்டது என்று 2024 செப்டம்பர் மாத புதிய ஜனநாயக இதழில் வெளியான “உள் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவும் தீர்வும் என்ன?” என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம், ஓட்டுக் கட்சிகள் இவ்வதிகாரத்தை தனது வாக்குவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தி மக்களைக் கூறுபோடும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மோடி அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்திருப்பதை இவற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் சாதிவாரிக் கணக்கெடுப்பை பயன்படுத்தி, தனது சித்தாந்த மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக, தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை சாதி ரீதியாக அணிதிரட்டுவதற்கு ஏதுவாக, அவர்களை பல்வேறு துணைப் பிரிவுகளாக கூறுபோடும் அபாயம் உள்ளது.  மக்களை பல்வேறு சாதிக் குழுக்களாகப் பிரித்து, ஒருவருக்கொருவரை எதிராக நிறுத்தி, சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். அதன் மூலம், தங்களது, குஜராத்தி-மார்வாரி-பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் சதித்திட்டமே பாசிச கும்பலின் இந்த திடீர் பல்டிக்கு பின்னாலிருக்கிறது.

அதுமட்டுமின்றி, தற்போது மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் நடத்தப்படுவதால் புதிய மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் அபாயமும் சேர்ந்திருக்கிறது. அவ்வாறு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், இந்து, இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் என மத அடிப்படையில் மட்டுமல்லாது, பெரும்பான்மை சாதிகள் அடிப்படையிலும் காவி கும்பல் இந்தியாவைக் கூறுபோடும்.

மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தங்களது இந்துராஷ்டிரத்திற்கான பாதையை செப்பனிட்டுக் கொள்வதற்கான கருவியாகவே மக்கள்தொகை மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பை பயன்படுத்தப் போகிறது.

மேலும், மோடி அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பினால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வுடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிக் கட்சிகள் பா.ஜ.க-வுடன் நெருக்கமாவதற்கும், பா.ஜ.க. கூட்டணி வலுப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று பேசி வருகிற மாநிலக் கட்சிகளின் அடித்தளத்தை அரித்து, அவற்றை பா.ஜ.க-வின் படைவரிசையில் சேர்த்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது.

நிராயுதபாணியான எதிர்க்கட்சிகள்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக சாதிவாரிக் கணக்கெடுப்பு இருந்தது. மோடி அரசின் பத்தாண்டுகால ஆட்சி மீதான வெறுப்பு ஒருபுறம் இருப்பினும், சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முக்கியமான ஆயுதமாக இருந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பறித்துவிட்ட நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் நிராயுதபாணியாக நிற்கின்றனர்.

ஆனால், இதை உணராத எதிர்க்கட்சிகளோ தங்களின் கோரிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பணிந்துவிட்டதாக எண்ணி புளங்காகிதம் அடைகின்றனர். ஒன்றிய அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பை ஆதரிக்கின்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளதோடு, கணக்கெடுப்பிற்கு கால நிர்ணயம் செய்யாமல் இருப்பது குறித்து விமர்சித்துள்ளார்.

ஆனால், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பல் திடீரென அடித்த அந்தர் பல்டிக்கு பின்னால் இந்தியாவையே கூறுபோடும் அபாயமிக்க சதித்திட்டம் இருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. பாசிசத்திற்கு எதிரான  செயல்திட்டமின்றி இருப்பதும், மாற்று அரசியல்-பொருளாதார திட்டத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாமல் இருப்பதுமே எதிர்க்கட்சிகளின் இந்த அரசியலற்றப் போக்கிற்கும், பாசிச சக்திகளை ஜனநாயகப் பூர்வமாக அணுகுவதற்கும் அடிப்படையாக இருக்கிறது. எனவேதான், பா.ஜ.க. முன்னெடுக்கும் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரிக் கணக்கெடுப்பு என அனைத்தையும் ஆதரிப்பதோடு மக்களையும் அதற்கு பலி கொடுக்கின்றனர்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



‘முருக பக்தர்’ மாநாடு: மக்களின் புறக்கணிப்பு சங்கிகளின் கொக்கரிப்பு

டந்த ஜூன் 22-ஆம் தேதி, மதுரையில் உள்ள வண்டியூர் டோல்கேட்டுக்கு அருகே பா.ஜ.க – இந்து முன்னணி கும்பலானது போலி முருக பக்தர் மாநாட்டை வெற்று ஆரவார இந்துமதவெறிக் கூச்சலுடன் நடத்தி முடித்திருக்கிறது. “மாநாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டுவிட்டார்கள், மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துவிட்டது, தமிழ்நாட்டில் ‘இந்து’க்கள் ஒற்றுமை அடைந்துவிட்டார்கள்” என்றெல்லாம் சங்கிகளும் அவர்களது ஆதரவு ஊடகங்களும் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இதன்மூலம், தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்து வருவதைப் போன்றதொரு போலியான பிம்பத்தைக் கட்டியமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், மாநாட்டில் சங்கிகள் எழுப்பிய இந்துமதவெறிக் கூச்சல்கள் மூலம் அவர்களின் கலவர நோக்கம் அம்பலப்பட்டு தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பதே எதார்த்தம்.

மண்ணைக் கவ்விய ‘முருக பக்தர்’ மாநாடு

‘முருக பக்தர்’ மாநாட்டில் ஐந்து லட்சம் மக்கள் திரண்டதாக சங்கிகள் அண்டப்புளுகை அவிழ்த்துவிட்ட நிலையில், மாநாடு நடந்த இடத்தில் ஒரு லட்சம் இருக்கைகள்தான் போட முடியும், 50,000 மக்கள்தான் கூடியிருக்கிறார்கள், கடைசி வரிசையில் இருக்கைகள் காலியாகக் கிடந்தன என்பதை மாநாட்டு களத்திலிருந்து யூடியூப் ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. மேலும், “ஐந்து லட்சம் மக்கள் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடப்போகிறோம், உலக சாதனை படைக்கப்போகிறோம்” என்று சங்கிகள் வாய்ச்சவடால் அடித்துவந்த நிலையில் கந்த சஷ்டி பாடும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு திடலிலிருந்து வெளியேறும் காணொளிகளையும் வெளியிட்டிருக்கின்றன.

அதேபோல, மாநாட்டிற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களிலிருந்து வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் இந்து முன்னணியினரால் அழைத்து வரப்பட்டவர்கள். முருகனின் அறுபடை வீடுகளை தரிசிக்கலாம் என்றுக் கூறியே மக்களை சங்கிக் கும்பல் மாநாட்டிற்கு அழைத்து வந்துள்ளது.

எனவே, மாநாடு முடியும் வரை மக்கள் இருக்கைகளில் அமர வேண்டும் என்பதற்காக மாநாட்டு திடலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த அறுபடை வீடுகளை மாநாட்டு மேடைக்கு மாற்றியது சங்கிக் கும்பல். மேலும், முருகனை வழிபட்டுவிட்டால் மக்கள் மாநாட்டை விட்டு சென்று விடுவார்கள் என்பதற்காக சிலைகளை திரையிட்டு மறைத்திருந்தனர். மாநாட்டு உரைகள் முடிந்த பிறகு முருகனுக்கு தீபாராதனை காட்டுகிறோம் என்று கூறி மக்களை அமர வைத்திருந்தனர். “சாமி பார்க்கலாம்னு வந்தோம். ஆனால், முருகனை திரைபோட்டு மறைத்து வைத்திருக்கிறார்கள். இரவு வரை எங்களால் எப்படி காத்திருக்க முடியும்” என்று மாநாட்டிற்கு வந்த மக்கள் ஊடகங்களில் புலம்பித் தீர்த்தனர்.

ரஜினிகாந்த உள்ளிட்டு திரைத்துறையில் உள்ள பல சங்கிகள் முருக பக்தர் மாநாட்டிற்கு வருவதாக காவிக் கும்பல் பிரச்சாரம் செய்த நிலையில், மாநாட்டிற்கு வந்தால் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர்களும் இம்மாநாட்டை புறக்கணித்திருக்கின்றனர். மேலும், “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கொக்கரித்த எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க-வின் தலைவர்கள் மாநாட்டில் எங்கு இருந்தார்கள் என்று கூட தெரியவில்லை.

மதுரை ஆதினம் மாநாட்டிற்கு வரவே இல்லை; ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த திருமாறன் ஜி போன்ற ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளை ஆளைக் காணவில்லை. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருந்த சங்கிகளின் அடிவருடியான வேலூர் இப்ராஹிம் பத்து பேரைக்கூட திரட்டிக்கொண்டு வரவில்லை.

பா.ஜ.க-வின் அடிமைக் கட்சியான அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. எனினும், அ.தி.மு.க அடிமைக் கூட்டத்திலிருந்து ஆர்.பி உதயகுமார், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். மாநாட்டில், ஒளிபரப்பப்பட்ட காணொளியில் பெரியார், அண்ணா, திராவிடம் குறித்து அவதூறு செய்யப்பட்டிருந்ததை வாய்மூடி வேடிக்கைப் பார்த்தனர். இந்த விவகாரத்தை தி.மு.க. ஐ.டி விங்-கள் கையிலெடுத்து பூதாகரமாக்கத் தொடங்கியவுடன் அ.தி.மு.க. தரப்பிலிருந்து பெயரளவில் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்தனர். “மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது இந்து முன்னணியின் பழைய காணொளி. பெரியார், அண்ணாவை மாநாட்டில் விமர்சிக்கவில்லை” என்று பா.ஜ.க. தலைவர்கள் செய்தி ஊடகங்களில் மறுப்பு தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இவ்வாறு சங்கிகளின் போலி முருக பக்தர் மாநாடானது அக்கும்பல் பிரச்சாரம் செய்து வந்ததற்கு நேரெதிராக தோல்வியைத் தழுவியிருக்கிறது. 2020 ஜூலையில் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டது, அதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி வேல் யாத்திரை நடத்தியது என முருகனை கையிலெடுத்து பா.ஜ.க. கும்பல் மேற்கொண்ட கடந்தகால நடவடிக்கைகளை போல, சங்கிகளின் இந்த மாநாடும் மண்ணைக் கவ்வியிருக்கிறது.

குறிப்பாக, இந்தாண்டு ஜனவரி மாதத்தில் சங்கிக் கும்பல் அதிகார வர்க்கத்தின் துணையுடன் மதுரை திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதை தடுத்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்து மதவெறியூட்டும் பிரச்சாரங்கள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், ’முருக பக்தர்’ என்ற பெயரில் மக்களை திரட்டலாம் என்று தன்னுடைய உத்தியை மாற்றியது. அப்படியிருந்தும் மதுரை மக்களும் தமிழ்நாட்டு மக்களும் மாநாட்டை புறக்கணித்திருப்பது பா.ஜ.க. கும்பலின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பாசிஸ்டுகளின் கலவர சதித்திட்டம்

சங்கிகளின் போலி முருக பக்தர் மாநாடு மண்ணைக் கவ்வியிருந்தாலும், மாநாட்டில் சங்கிகள் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களும் இந்து மதவெறியர்களின் கொக்கரிப்புகளும் தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டுவதற்கான ஏற்பாடுகளே என்பதை மறுப்பதற்கில்லை.

மாநாட்டில் கலந்துகொண்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், “இந்து என்றாலே பிரச்சினையாக பார்க்கிறார்கள். எங்களை சீண்டிப் பார்க்காதீங்க. சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று அப்பட்டமாக கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை “முருகன் கோவில்களில் வழிபாட்டு விவகாரத்தில் தலையிட்டால் சூரசம்ஹாரம் செய்துவிடுவோம்” என்று வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஏற்கெனவே, பள்ளி மாணவர்களிடையே சாதித் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் அவர்களிடையே இந்து மதவெறியை தூண்டும் வகையில் “பள்ளிகளுக்கு செல்லக்கூடிய குழந்தைகள் நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும்” என்று அண்ணாமலை பேசியிருக்கிறார்.

மேலும், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவின் இடத்தில் உள்ள கொடிமரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என்று நீதிமன்றத் தடை உள்ள போதிலும், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்; சஷ்டி தினத்தன்று கந்த சஷ்டி கவசத்தை ஒன்றுசேர்ந்து பாட வேண்டும்; தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பது சங்கிக் கும்பல் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க வேண்டும் என்பதற்காக பல சதித்திட்டங்களை தீட்டி வைத்துள்ளதைக் காட்டுகிறது.

இத்தகைய சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பா.ஜ.க – இந்து முன்னணிக் கும்பலுக்கு மக்கள் அடித்தளம் இல்லை என்ற போதிலும் அதிகார வர்க்கத்தில் ஊடுருவியுள்ள சங்கிகள் மூலம் தங்களின் சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்த முயலும் என்பதே கடந்த கால அனுபவமாக உள்ளது.

கடந்த ஜூன் 24-ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்குகளின் விசாரணையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பு சங்கிகளுக்கு ஆதரவாக வழங்கப்பட்டிருப்பதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றமும் அதிகார வரக்கமும் தொடர்ச்சியாக சங்கிகளின் கலவரத் திட்டத்திற்கு ஆதரவாகவும், அதற்கு எதிராக போராடும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கு எதிராகவுமே செயல்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜா, காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்ட சங்கிகள் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, சங்கிகளின் போலி முருக பக்தர் மாநாடு தோல்வியடைந்து விட்டது என்று நாம் இறுமாந்திருந்துவிட முடியாது. கலவரத்தை நடத்தி தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு சங்கப் பரிவார கும்பல் அனைத்து வகையிலும் முயற்சிக்கும். பாசிச எதிர்ப்பு சக்திகள் எச்சரிக்கையுடன் இருந்து இந்த சதித்திட்டங்களை களத்தில் முறியடிக்க வேண்டும்.


கதிர்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 1-31, ஜூலை 1-15, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 14-16 | ஜூன் 1-31, ஜூலை 1-15, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்து மதவெறியர்களின் தாக்குதல் அரசியல் எதிர்க்கட்சிகளின் கையாலாகாத்தனம்
  • தில்லியின் அழகுக்கு தொழிலாளர்களின் பலிகடா
  • ‘தேசிய’ நீரோட்டத்தில் கலந்ததே கருணாநிதியின் அரசியல் ‘சாதனை’!
  • அகண்ட பாரத கனவும் அணுகுண்டு வெடிப்பும்
  • போலீசு – ஓட்டுக் கட்சிகளின் ஆசியோடு கந்துவட்டிக் கும்பலின் சாதி வெறியாட்டம்
  • வரவு-செலவு அறிக்கை: சுதேசி பசப்பல் தகர்ந்தது
  • தமிழனை ஒடுக்க வரும் மு.க.வின் “பொடா” சட்டம்
  • தென்கிழக்காசியப் பொருளாதார வீழ்ச்சி: நாணய மதிப்புக் குறைப்பு வல்லரசுகளின் மறுகாலானியாதிக்க ஆயுதம்
  • இந்தோனேஷிய மாணவர் போராட்டம்: கனவு நனவாகவில்லை
  • ஆட்சிக் கவிழ்ப்பு எப்போது? கூட்டணியில் லாவணி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 16-30, மே 1-31, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 11-13 | ஏப்ரல் 16-30, மே 1-31, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பா.ஜ.க.வின் பொருளாதார சீர்திருத்தங்கள் புதிய மொந்தையில் பழைய கள்ளு
  • பங்காளிச் சண்டையில் மறைக்கப்படும் பாசிச சதிகள்
  • சட்டம் – ஒழுங்கு பற்றிப் பேச ஜெயாவுக்கு அருகதை உண்டா?
  • தாராளமாக்கலின் எதிர் விளைவு!
  • பம்பாய் முசுலீம் எதிர்ப்புக் கலவரம்: தொடரும் பார்ப்பனக் கும்பலின் சதிகள்
  • பா.ஜ.க.வின் சுதேசி சாயம் வெளுத்தது
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இந்து முன்னணியின் மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’

துரையில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்காக இந்து முன்னணி கும்பலால், முருக பக்தர் என்ற பெயரில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஆறு தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தனர். இதில் வழக்கம்போல ‘இந்து’ வாக்குவங்கியை அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்திலிருந்து சில தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தாலும் முக்கியமான இரண்டு தீர்மானங்கள் திருப்பரங்குன்றம் தொடர்பானவையாகும்.

“திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்”, “திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்” ஆகிய இரண்டு தீர்மானங்களின் மூலமாக, மதுரையில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்கான தனது சதித்திட்டத்தை மீண்டும் வழிமொழிந்துள்ளது. இதன் போக்கில் தமிழ்நாடு முழுவதிலும் மதக்கலவரத்தைப் பரவச் செய்வதற்கான வழிவகையையும் உருவாக்கியுள்ளது.

இச்சூழலில், மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு தடை விதிக்க வேண்டும், ஆடு-கோழி பலியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், திருப்பரங்குன்றம் மலையை சமணர் மலை என்று அறிவிக்க வேண்டும் உள்ளிட்டு பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மூன்று மாதங்களாக நடைபெற்றுவந்த இவ்வழக்கு விசாரணையில், ஜூன் 24-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

இதில், நீதிபதி நிஷா பானு வழங்கிய தீர்ப்பில் சில குறைபாடுகள் இருந்தாலும், ஆதாரங்கள் மற்றும் ஆய்வின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது. ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் உரிமையானது தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருவதை உறுதி செய்யும் விதமாக இத்தீர்ப்பு இருந்தது. குறிப்பாக, மதநல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் தர்காவில் கந்தூரி கொடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்பதை நீதிபதி நிஷா பானு தீர்ப்பில் பதிவு செய்திருந்தார்.

அதேவேளையில், நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பானது, சனாதன நீதியின் அடிப்படையில், ஆதாரங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, சங்கப் பரிவாரக் கும்பல் முன்வைக்கின்ற வாதங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. இத்தீர்ப்பு மதுரை திருப்பரங்குன்றத்தில் மக்கள் காலங்காலமாக பின்பற்றிவரும் பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் எதிரானது. அயோத்தி பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா போன்றவற்றை இந்துமதவெறி பாசிச கும்பல் கைப்பற்றுவதற்கு நீதிமன்றங்கள் ஒத்துழைத்ததை போல, திருப்பரங்குன்றத்தை சங்கி கூட்டம் கைப்பற்றுவதற்கான முகாந்திரத்தை இத்தீர்ப்பு ஏற்படுத்துகிறது.

நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பானது,

  • தர்காவை “ஆக்கிரமிக்கப்பட்ட இடம்” என்று குறிப்பிடுகிறது.
  • தர்காவில் புனரமைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு தொல்லியல் துறையின் அனுமதி பெற வேண்டுமென்று குறிப்பிடுவதன் மூலம் இத்தர்காவை ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல வழிவகுக்கிறது.
  • மேலும், திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தர்கா, கோவில்களுக்கான எல்லைகளை தொல்லியல் துறை நில அளவை (Survey) மூலம் வரையறுக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறது. இதன் மூலம், மொத்த மலையையும் ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்கிறது.
  • கோவிலைச் சுற்றி 300 மீட்டர் தொலைவிற்கு அப்பாலும் கூட கறிக்கடைகளே இல்லை, கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் எங்கும் இறைச்சி உணவு பரிமாறப்படுவது இல்லை என்ற சங்கிக் கும்பலின் பொய்யையே தீர்ப்பு வழிமொழிகிறது. இதன் மூலம் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவதற்கான உரிமையை மறுக்கிறது. இது சிக்கந்தர் தர்காவில் வழிபடும் மக்களுக்கு மட்டுமல்ல, கீழே உள்ள குல தெய்வங்களை வழிபடும் மக்களுக்கும் எதிரானது.
  • சந்தனக் கூடு விழாவில் கந்தூரி கொடுப்பதற்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது.
  • “ஆறு மணிக்கு மேல் யாரும் சிக்கந்தர் தர்காவிற்கு செல்வதில்லை. எனவே, அங்கு மின்சார இணைப்பு கொடுக்கத் தேவையில்லை” என்ற சங்கிக் கும்பலின் அறிவியல் வளர்ச்சிக்குப் புறம்பான-பிற்போக்கான கருத்தையும் இத்தீர்ப்பு வழிமொழிகிறது.
  • தர்காவிற்கு வழிபட வருபவர்களுக்கு மலைக்கு மேலே உள்ள சுணையில் நீர் எடுத்துக்கொள்ள அனுமதி மறுக்கிறது. வழிபட செல்பவர்கள் அவர்களுக்குத் தேவையான நீரை கீழிருந்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை தீர்ப்பின் சில முக்கியமான அம்சங்களின் சுருக்கமான முடிவுகள் மட்டுமே. இவை ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தும் நிலைமை வந்தால், திருப்பரங்குன்றம் மலை தமிழர்கள் கையிலிருந்து முற்றிலும் பறிக்கப்பட்டு பார்ப்பன சனாதனக் கூட்டத்தின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.

‘முருக பக்தர்’ மாநாட்டில், மதக்கலவரத்தை தூண்டும் விதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டு செல்லும் முதல் நடவடிக்கையாக நீதிபதி ஸ்ரீமதியின் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திற்கே சென்றாலும் சங்கிக் கும்பலின் செல்வாக்கில் இருக்கும் நமது நாட்டின் நீதித்துறையில் மக்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும் என்று நம்பியிருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.

இந்து முன்னணியின் மாநாட்டை மக்கள் புறக்கணித்ததைப் போலவே, இந்தத் தீர்மானங்களையும் நீர்த்துப் போகச் செய்வதற்கான மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதே சங்கிக் கும்பலின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.


மகேஷ்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 1-15, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 10 |  ஏப்ரல் 1-15, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்துவெறி பாசிஸ்டுகளிடம் கருணாநிதியின் சரணாகதி
  • ஆட்சியதிகாரத்தில் பா.ஜ.க.: பங்காளி சுமையும் பாசிச இலட்சியமும்
  • பா.ஜ.க.: கிரிமினல்களின் கூடாரம்
  • ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு மறைவு: ஆளும் வர்க்கங்கள் அழட்டும்!
  • தமிழ்நாடு போலீசுக்கு பார்ப்பனர் வக்காலத்து
  • ஈரோடு – பள்ளிப்பாளையம் – குமாரபாளையம்
    சிறுநீரக விற்பனை சந்தை
  • பார்ப்பன தினமலரின் வெடிகுண்டு அரசியல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 7-8 | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்து பாசிச ஆட்சி ஐ.மு – இடதுகளின் கையாலாகாத்தனம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ஓட்டுக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்: மோசடிக்கு ஒரு முகவுரை
  • நாடெங்கும் வாரிசு அரசியல்
  • பயங்கரவாத பீதியும் பார்ப்பன அரசியலும்
  • ராஜீவ் கொலை வழக்கு: போர்க் குற்றவாளி தியாகியாம்! அரசியல் கொலைக்குத் தூக்காம்!
  • எது கொடூரம்! உயிருடன் எரிப்பதா? குண்டு வைப்புக் கொலையா?
  • பாலியல் வன்முறை “தேசிய விளையாட்டா?”
  • உலக ரௌடி ஈராக்கில் கலாட்டா
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மதுரை: இந்து முன்னணி மாநாடு – நீதிமன்றமே துணை!

துரையில் நடந்த ‘முருக பக்தர்’ மாநாட்டில் பேசிய பா.ஜ.க., இந்து முன்னணி தலைவர்கள், நீதிமன்றம் விதித்த ‘கட்டுப்பாடு’களை ‘மீறி’விட்டதாக ஜனநாயக சக்திகள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் பேசக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை இந்து முன்னணி கும்பல் மீறிவிட்டதை முன்வைத்து, நீதிமன்றத்திலும் அதிகாரிகளிடமும் முறையிட்டு இந்து முன்னணி கும்பலுக்கு நெருக்கடி கொடுத்துவிடலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.

ஆனால், மதக்கலவரத்திற்கு வித்திடும் மதுரை ‘முருக பக்தர்’ மாநாடே பா.ஜ.க. – இந்து முன்னணி சங்கப் பரிவாரக் கும்பலும் அதிகார வர்க்கமும் நீதிமன்றமும் ஒன்றிணைந்து நடத்தியதுதான் என்ற உண்மை இவர்களுக்கு புரியவில்லை.

அதிகார வர்க்கம்-நீதிமன்றத்தின் துணையுடன்
தொடங்கிய கலவர முயற்சிகள்

1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்கும் ஒரு விரிந்த இந்துராஷ்டிரத் திட்டத்தின் அங்கம்தான் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சினையாகும். அந்தவகையில், 1994-லிருந்தே திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபமேற்ற வேண்டுமெனக் கூறி இஸ்லாமியர்களுக்கெதிராக மதக்கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தில் இந்து முன்னணி கும்பல் செயல்பட்டு வருகிறது.

அரசு அதிகார மட்டத்தில் தனது விசுவாசிகளையும் சங்கிகளையும் பொருத்திக் கொண்டு சரியான அரசியல் தருணத்திற்காகக் காத்திருந்த இக்கும்பல், 2023-லிருந்து மீண்டும் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென்ற பிரச்சினையைக் கிளப்பி வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிகார வர்க்கத்தின் துணையுடன் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

எந்த ஆதாரமுமின்றி இந்து முன்னணி கும்பலும் போலீசு-அதிகார வர்க்கமும் திட்டமிட்டு சதித்தனமாக இஸ்லாமியர்கள் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவதைத் தடுத்தது. நீதிமன்றமும் திருப்பரங்குன்ற மலை விவகாரத்தை, தாவாக்குரிய விவகாரமாக்கி இஸ்லாமியர்கள் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவதைத் தடுத்து நிறுத்தியது.

இஸ்லாமியர்களின் மத உரிமையைப் பறிக்கின்ற, மத நல்லிணக்கத்தை சிதைக்கின்ற இந்த நடவடிக்கைக்கெதிராக கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கோரியபோது, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகச் சொல்லி போலீசும் நீதிமன்றமும் அனுமதி மறுத்தன.

ஆனால், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் கூறும் அதே காலத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று இந்து முன்னணி கும்பலின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியதும் இதே அதிகார வர்க்கமும் நீதிமன்றமும்தான்.

பிப்ரவரி 4-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில்தான் எச்.ராஜா, “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கொக்கரித்தார். சங்கப் பரிவாரக் கும்பலின் கூலிப்படை ஊடகங்களும் இஸ்லாமியர்களுக்கெதிராக தொடர்ச்சியான அவதூறுகளைப் பரப்பி வந்தன.

மாநாடு தொடர்பான மூன்று வழக்குகள்

இந்த பின்னணியில்தான் ஜூன் 22, ‘முருக பக்தர்’ மாநாட்டை அறிவித்தது இந்து முன்னணி கும்பல். சங்கிகளின் இந்த மாநாட்டிற்கு தடைவிதிக்க வேண்டுமென்று மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் சார்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதன் சார்பாகவும் இம்மாநாட்டுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இத்துடன், இந்து முன்னணியின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கிய மதுரை போலீசு 52 கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளில் ஆறு கட்டுப்பாடுகளை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்து முன்னணி கும்பலும் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கில் மாநாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு, அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள் மிகவும் மொன்னையாக இருந்தன. இந்து முன்னணியின் கடந்த கால இந்துமதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவொரு வாதத்தையும் போலீசு முன்வைக்கவில்லை.

கலவரங்களைத் தூண்டுவதற்காக இந்து முன்னணியினர் மேற்கொண்ட 15-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக போலீசு உயரதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், அதுபோன்ற எந்தவொரு சரியான ஆதாரத்தையும் முன்வைத்து வாதிடாமல், மாநாடு எந்தவித இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதாகவே போலீசின் அணுகுமுறை இருந்தது.

அரசியல் பேசக்கூடாது:
கட்டுப்பாடல்ல, சலுகை!

இம்மூன்று வழக்குகளும் நீதிபதி புகழேந்தி முன்னிலையில் ஜூன் 13 அன்று இறுதி விசாரணைக்கு வந்தது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், இந்த மாநாடு கலவரத்தைத் தூண்டுவதற்கான மாநாடு என்பதை பலவித ஆதாரங்களையும் முன்வைத்து விரிவாக வாதாடினார்.

திருப்பரங்குன்றம் பிரச்சினையையொட்டி இந்து முன்னணி கும்பலால் சிறுபான்மையினருக்கு எதிராக மதவெறியூட்டும் விதமாக இரண்டு பாடல் காணொளிகள் வெளியிடப்பட்டதையும் அதற்கெதிராக தோழர் இராமலிங்கம் புகார் அளித்த விவரங்களையும் ஆதாரங்களோடு எடுத்து முன்வைத்தார். பா.ஜ.க-வினரும், இந்து முன்னணியினரும் வெளியிட்ட இரண்டு பிரசுரத்தில் அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும் கலவரத்தை தூண்டும் விதமாகவும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததையும் எடுத்துக்காட்டினார்.

இவற்றையெல்லாம், ஒரு பொருட்டாகக் கூட நீதிபதி எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, “இது முருக பக்தர் மாநாடு என்று அவர்களே கூறுகிறார்கள், பிறகு அதையெல்லாம் இங்கு ஏன் காட்டுகிறீர்கள்” என்று இந்து முன்னணியினரின் வாதத்தை அப்படியே வழிமொழிந்தார்.

இந்து முன்னணியின் வசனங்களையே தீர்ப்பாக எழுதிய நீதிபதி புகழேந்தி

குறிப்பாக, பிப்ரவரி 4-ஆம் தேதி இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா, “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதையும் அவர் மீது போலீசு வழக்கு பதிவு செய்திருப்பதையும் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் குறிப்பிட்டார்.

அனைவரும் அறிந்த வகையில், நடந்த இந்த ஆதாரத்தைக் கூட நீதிபதி புகழேந்தி எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கு பதில் வாதமாக இந்து முன்னணி வழக்கறிஞர், “எச்.ராஜா இந்து முன்னணியைச் சேர்ந்தவர் அல்ல” என்ற விளக்கத்தைக் கொடுத்தார். மோசடித்தனமான இந்த விளக்கத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டு, இந்து முன்னணி மாநாட்டில் “அரசியல் பேசக்கூடாது” என்றுக் கூறி மாநாட்டிற்கு அனுமதியை வழங்கினார்.

மதவெறியைத் தூண்டும் வகையில் எச்.ராஜா பேசிய ஆதாரங்கள் கண் முன்னே இருந்தபோதும், இந்து முன்னணி கும்பல் நீதிமன்றத்தின் எந்தக் கட்டுப்பாடுகளையும் மதிக்காது என்று தெரிந்திருந்தும், இந்து முன்னணியின் வாசகங்களையே தீர்ப்பாக எழுதிவிட்டார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி.

இந்து முன்னணியினருக்கு வழங்கிய இதே நீதியை, போராடும் ஜனநாயக சக்திகளுக்கு மட்டும் இந்த நீதிமன்றம் வழங்கவில்லையே, அது ஏன்?

மார்ச் 9-ஆம் தேதி மத நல்லிணக்கக் கூட்டமைப்பு சார்பாக, மாநாடு நடத்துவதற்கு இதே அதிகார வர்க்கமும் நீதிமன்றமும் அனுமதியை மறுத்தன. ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் உரிமைக்காக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக மனு தாக்கல் செய்தபோது போலீசும், நீதிமன்றமும் ம.க.இ.க. வெளியிட்ட பிரசுரத்தில் இருக்கும் வாசகங்களை எடுத்துக்காட்டி, மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதாக இருப்பதாகக் கூறி அனுமதி மறுத்தன.

ஆனால், இந்து முன்னணிக்கு மட்டும் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல், இந்து முன்னணி சொல்லும் விளக்கத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறது, இந்த பூணூல் மன்றம்.

ஆகையால், இந்து முன்னணி மாநாட்டில் ‘அரசியல் பேசக் கூடாது’ என்று நீதிபதி போட்ட உத்தரவு என்பது, இந்து முன்னணிக்கு கொடுக்கப்பட்ட சலுகையாகும். இந்த சலுகையையே, இந்து முன்னணி கும்பலுக்கு நீதிபதி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவிட்டதாக, தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் கொஞ்சமும் வெட்கமின்றி பேசியது, தி.மு.க. அரசுடைய அதிகார வர்க்கத்தின் துரோகத்தை மறைக்கும் இழிந்த நடவடிக்கையாகும்.

சனாதனத்தின் ஆட்சி

இவ்வழக்கில் முன்னதாக, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக தொடரப்பட்ட மனு மீதான விவாதம் நடந்தது. ஆகம விதிகளைக் காட்டித்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைத் தடுத்து வருகிறது நீதிமன்றம். எனவே, ஆகம விதிகளுக்கு உட்பட்டுதான் முருக பக்தர் மாநாட்டில் அமைக்கப்படும் அறுபடை வீடுகள் மாதிரி (செட்டப்) அமைக்கப்பட வேண்டும், இல்லையேல் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது. மேலும், முருகனின் அறுபடை வீடுகள் அனைத்தும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனவே, அறுபடை வீடுபோல மாதிரி செய்து தற்காலிக வழிபாட்டு மையங்களை அமைக்க அறநிலையத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி, ஆகம விதிகளைக் கடைப்பிடிப்பீர்களா என்று இந்து முன்னணியின் வழக்கறிஞரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு இந்து முன்னணியின் வழக்கறிஞர், சானதன விதிகளின்படி பூசைகள் நடக்கும் என்று தெரிவித்தார். இதனை எந்தவித எதிர்ப்புமின்றி நீதிபதி ஆமோதித்து ஏற்றுக்கொண்டார்.

மேலும், இது போன்று கடவுள் உருவங்களின் சிறிய அளவிலான மாதிரிகளை வைத்து வழிபடுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதற்கு எவ்வித சான்றுகளையும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி இந்த வாதத்தையே நிராகரித்துவிட்டார்.

இதன் பொருள் என்ன?

ஆம், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அவசியம் எனில் ஆகமவிதி என்று ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி மக்களின் உரிமைகளைப் பறிக்கும். அதுவே, தனது பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக இருக்கிறது என்றால், எந்த முகாந்திரமும் இல்லாமல் அதைத் தூக்கியெறிந்துவிடும். இவ்வாறு இரட்டை நாக்கையே தனது கோட்பாடாகக் கொண்டு பார்ப்பன சனாதனத்தை நிலைநாட்டி வருகிறது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

ஆம், சனாதன பயங்கரவாதம் மதுரையில் பரவி வருகிறது. அதை எதிர்க்கவேண்டிய நீதிமன்றத்திலோ, சனாதனமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ‘திராவிட மாடல்’ அரசின் அதிகாரிகள், அங்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர். மதுரை மாநாட்டில் விதைக்கப்பட்டுள்ள சனாதன பயங்கரவாதத்தின் விதைகள் தமிழ்நாடெங்கும் பரவக் காத்திருக்கின்றன. தமிழர்களே எச்சரிக்கை!


பாரி

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 5-6 | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1998பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்துத்துவ பாசிச அபாயமும் முறியடிக்கும் வழியும்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள் இந்து மதவெறியர்கள்
  • சோனியா வரவால் காங்கிரசு கரை சேருமா?
  • அறிஞர்களைத் திணறடிக்கும் இராமதாசு, வை.கோ. அரசியல்
  • திசை மாறிய அம்புகள்
  • தடையின்றித் தொடரும் போலீசின் அத்துமீறல்கள்
  • ஜப்பானை அச்சுறுத்தும் சூதாட்டப் பொருளாதாரம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்: இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு!

23.07.2025

தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்;
இந்து அறநிலையத்துறையின் கீழ்
அனைத்து கோயில்களையும் மடங்களையும் கொண்டு வருவதே தீர்வு!

நீதிமன்றத்தின் GAG உத்தரவுக்கு எதிராக போராடுவோம்!

பத்திரிகை செய்தி

ர்நாடகா, மங்களூரில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 1995 முதல் 2014 வரை பல பெண்களின் உடல்களை புதைக்க வற்புறுத்தப்பட்டதாக மேனாள் துப்புரவு பணியாளர் ஒருவர், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

தன்னால் புதைக்கப்பட்ட இளம் பெண்களின் உடல்களில் பாலியல் வன்கொடுமையின் அறிகுறிகளுடன் இருந்ததாகவும், சில உடல்கள் பள்ளி சீருடையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். பிரச்சனைக்குரிய இந்த தர்மஸ்தலா அமைந்துள்ள இடமான மங்களூர் ஆர்.எஸ்.எஸ்-இன் செல்வாக்கு மிகுந்த பகுதியாக இருப்பதும், அந்த தர்மஸ்தலா இந்து அறநிலையத்துறையின் கீழ் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தர்மஸ்தலாவில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக நாடு முழுவதும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெற்றன. தர்மஸ்தலாவின் தர்மகர்த்தா பி.ஜே.பி-யின் எம்.பி வீரேந்திர ஹெக்டெ என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனையடுத்து, இது குறித்து விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.

தர்மஸ்தலா கோயிலின் தர்மகர்த்தா டி. வீரேந்திர ஹெக்டேயின் சகோதரர் ஹர்ஷேந்திர குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் அடிப்படையில், ஊடகங்கள் எந்தவொரு அவதூறு செய்திகளையும் வெளியிட வேண்டாம் என பெங்களூரு சிவில் நீதிமன்றம் கடந்த ஜூலை 18 ஆம் தேதி இடைக்காலத் தடை உத்தரவு (GAG) பிறப்பித்தது.

தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட உள்ளடக்கம் தொடர்பான சுமார் 8,000 தொடுப்புகளை (Links) நீக்கவும் உத்தரவிட்டது.

தர்மஸ்தலா படுகொலைகள், பாலியல் வன்முறை தொடர்பாக பெரும் தேசிய ஊடகங்கள் வாயை மூடி அமைதியாக இருப்பதும், சிறிய ஊடகங்கள் வழியாக வெளியே வந்த செய்திகள் அனைத்தும் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டதும் நாட்டின் மிக இழிவான பத்திரிக்கை சுதந்திர நிலையை எடுத்துக்காட்டுகிறது.

பெங்களூர் சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக யூடியூப் நிறுவனம் ஒன்று மேல்முறையீடு செய்துள்ளது தவிர, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான 19 (1)-இன் கீழான அடிப்படை உரிமைகள் மேற்கண்ட தீர்பின் வழியாக பறிக்கப்பட்டுள்ளதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில்தான் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத தர்மஸ்தலாவில் இந்த பாலியல் படுகொலைகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

தர்மஸ்தலாவில் நடைபெற்ற பாலியல் படுகொலைகள் தொடர்பான விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றும் நாடு முழுவதும் அனைத்து கோயில்களையும் மடங்களையும் இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கோருவதுடன் ஊடக சுதந்திரத்தை காப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து மக்கள் போராட வேண்டும் என்று ம.அ.கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram