Thursday, July 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 3

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 01-15, 1996 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 05-06 | ஜனவரி 16-31, பிப்ரவரி 01-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாப்பாத்தி சமையலில் கருவாடு “தேசிய” அரசியலில் ஹவாலா
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • காவிரி வறண்ட போது ‘தேசியம்’ அம்பலமானது
  • புருலியா விவகாரம்: ஆயுத மழையில் அம்பலமாகும் உண்மைகள்
  • ஆபாசத்தை எதிர்த்துப் பெண்கள் நடத்திய புரட்சிகர போராட்டம்
  • திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளை எதிர்த்து
  • உயிரைப் பறிக்கும் உடனடி லாட்டரிகள்
  • சாதி – இன மோதலைத் தூண்டுவதா சமூக சேவை?
  • முதலாளித்துவத்தின் மகிமை: பட்ஜெட் இழுபறியால் அமெரிக்க அரசு முடங்கியது
  • “இது ஊழல் அரசுதான்!” ’மார்க்சிஸ்டு’ அமைச்சர் ஒப்புதல்
  • இந்து வெறியர்களின் ‘சுதேசி’ முகமூடி கிழிந்தது
  • தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு: கிறித்துவ மதத்திலும் சாதி
  • சர்க்கரை ஏற்றுமதி! சாணி இறக்குமதி!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜூலை 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – பக்தி – மதவெறி – கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்
  • மதுரை: இந்து முன்னணி மாநாடு நீதிமன்றமே துணை!
  • இந்து முன்னணியின் மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’
  • ’முருக பக்தர்’ மாநாடு: மக்களின் புறக்கணிப்பு சங்கிகளின் கொக்கரிப்பு
  • பா.ஜ.க-வின் சாதிவாரிக் கணக்கெடுப்பு: சாதிய முனைவாக்கத்திற்கான கருவி!
  • தரவுகளை எதிர் ஆயுதமாக்கும் பாசிஸ்டுகள்!
  • ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்
  • நுகர்வு வெறி – இந்து மதவெறிக்கு பலியிடப்படும் மக்கள்!
  • ஆந்திர அரசின் மாம்பழத் தடை: கூட்டாட்சிக் கோட்பாட்டின் போலித்தனம்
  • கீழடி: அறிவியல் உண்மைகளை வெறுக்கும் பாசிச கும்பல்
  • ஈரான் மீதான போர்: அமெரிக்க வல்லரசின் படுதோல்வி
  • ஆபரேஷன் ககருக்கு எதிராக குரல் கொடுப்போம்!
  • மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் பாகம் – 2


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1995; ஜனவரி 01-15, 1996 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 03-04 | டிசம்பர் 16-31, 1995; ஜனவரி 01-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ரசிய, போலந்து தேர்தல் முடிவுகள்: இது கம்யூனிசத்தின் வெற்றியா?
  • திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான இயக்கம்
  • புண்ணுக்குப் புணுகு தடவும் விசாரணைக் கமிஷன்கள்
  • தொலைபேசித் துறை ஏலம் விட்டு கொள்ளையோ கொள்ளை
  • சாதிக் கலவரங்கள் அடிப்படை என்ன? – நேரடி செய்தி தொகுப்பு
  • போஸ்னியா – அமைதியின் பெயரால் அமெரிக்காவின் மேலாதிக்கம்
  • தொடரும் போலீசு அடக்குமுறை
  • கம்யூனிசம் தோற்றதாம்! முதலாளித்துவம் வென்றதா? (சென்ற இதழ் தொடர்ச்சி)
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-30, டிசம்பர் 01-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 01-02 | நவம்பர் 16-30, டிசம்பர் 01-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பஞ்சாப்: பத்தாண்டுகளில் 25,000 பேர் ரகசிய கொலை
  • திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான இயக்கம்
  • அரசியல் கிரிமினல்களின் பகிரங்க சவால்
  • ரஜினி அலை: கிசுகிசு பத்திரிகைகள் பரப்பும் மூளைக்காய்ச்சல்
  • ஈழம்: இனப் படுகொலைகளால் விடுதலைப் போர் அடங்காது
  • இந்து முன்னணியல்ல பார்ப்பன முன்னணிதான்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கம்யூனிசம் தோற்றதாம்! முதலாளித்துவம் வென்றதா?
  • ரூபாய் மதிப்பு: கட்டெறும்பாகிறது கழுதை
  • மே. வங்கத்தைப் பார்! கொலைகாரப் போலீசின் கூட்டாளிகள் யார்?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 01-31, செப்டம்பர் 01-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 18-20 | ஆகஸ்ட் 01-31, செப்டம்பர் 01-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மக்களைக் குழப்பும் விபரீத அரசியல் போக்குகள்
  • பரவும் சாதிக் கலவரம் மீளும் சாதி ஆதிக்கம்
  • ஈழப்போரின் இழுபறி நிலை – தீராத் துயரில் ஈழத் தமிழர்கள்
  • புலிகள் தப்பிய சம்பவம்: கோழையும் துணிவு கொள்வான்
  • தொடரும் புலிகளின் பாசிசம்: பிரான்சில் தமிழ்ப்பத்திரிகைகளுக்குத் தடை
  • சாதிக்கொரு மாவட்டம் திராவிட அரசியலின் பரிணாமம்
  • கோவாவில் உதைபட்டவனுக்கு தமிழகத்தில் விருந்துபச்சாரம்
  • ஃபோர்டு கார் தொழிற்சாலை முதலாளிகளுக்கு பலியிடப்படும் விவசாயிகள்
  • புதிய கடற் கொள்ளையர்கள்
  • சிவந்த கண்கள் கவனிக்க
  • சர்வமும் கிரிமினல்மயம்: வோரா அறிக்கை ஒப்புதல் – இன்றைய ஆட்சி மொழி: “வன்முறையே வெல்லும்”
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 1-31, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 16-17 | ஜூலை 1-31, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தீராத நோய்
  • சட்ட விரோதிகளின் ஆஅட்சி சட்ட அறிஞர்கள் கிளர்ச்சி
  • அந்நியமயமாகும் இந்தியத் தொலபேசி
  • தொழிற்சங்கத் துரோகம் தலைவர்களுக்கு செருப்படி
  • அரசியலில் சோனியா அருகதை என்ன?
  • வடகிழக்கு மாநிலங்கள்: துப்பாக்கி முனையில் ஒருமைப்பாடு!
  • நேபாளம்: குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டி குப்புற விழுந்த போலிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்க
  • ‘சமூகநீதி’ வெறும் சடங்குதானா?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 16-31, ஜூன் 1-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 13-14 | மே 16-31, ஜூன் 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: உ.பி: தலித் தலைமையில் “இந்து ராஷ்டிரம்”
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அவாளுக்கும் இவாளுக்கும் சண்டை – நிஜமா? நிழலா?
  • “தடா” தேவிக்கு கடா வெட்டும் வீரமணி!
  • நிரந்தமாகிறது “தடா”
  • தொடரும் மசூதி அழிப்பு அயோத்தியில் ராமவெறியர்கள் காஷ்மீரில் ராணுவ வெறியர்கள்
  • புற்றீசலாய் பெருகும் ஹர்சத் மேத்தாக்கள்
  • திருப்பூர் ஆலைகளுக்குப் பேரிடி
  • அந்நிய ஆலைகளால் அழியும் சுற்றுச்சூழல்
  • தேசிய முன்னணியின் ஒப்பனை கலைந்தது
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஆபரேஷன் சிந்தூர்: பாசிச கும்பலின் தோல்வியும் எதிர்க்கட்சிகளின் துரோகமும்

“பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம், பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றுவிட்டது” என்று மேடைதோறும் ஆபரேஷன் சிந்தூர் ‘வெற்றி’ பெற்றுவிட்டது போன்ற பிம்பத்தைக் கட்டமைத்து வருகிறார், பிரதமர் மோடி. மறுபுறம் மோடி புகழ்பாடி ஊடகங்களோ, “ஆபரேஷன் சிந்தூர்” அதன் ‘வெற்றி’ மற்றும் இந்திய ராணுவத்தின் ‘வீர பராக்கிரமங்களை’ வியந்தோதி ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த வெற்றுக் கூச்சலில், பஹல்காம் தாக்குதல் ஏன் நடந்தது? உண்மையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது யார்? பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பிருக்கிறது என்று புலனாய்வுத்துறை அறிக்கைக் கொடுத்தும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்? என்ற பல கேள்விகள் புதைக்கப்பட்டுவிட்டன.

தோல்வியை மறைக்கவே ஆபரேஷன் சிந்தூர்

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானில் செயல்படும் “எதிர்ப்பு முன்னணி” (The Resistance Front) என்ற அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக இந்திய ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால், இதுவரையில் பயங்கரவாதிகள் எவ்வாறு இந்தியாவிற்குள் ஊடுருவினர்? பயங்கரவாத தாக்குதலின்போது அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஏன் இல்லை? இத்தாக்குதல் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, காஷ்மீரில் தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. அதனடிப்படையிலேயே ஏப்ரல் 19 அன்று காஷ்மீர் செல்ல வேண்டிய மோடியின் பயணம் திடீரென்று ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கு வாய்ப்பிருக்கும் சூழலில், பாதுகாப்பைப் பலப்படுத்தாதது ஏன்? இந்தத் தாக்குதலுக்குத் தொடர்புடையவர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை?

“இதுபோன்ற தாக்குதல்களில் பயங்கரவாதிகள் மக்களை ஒவ்வொருவராகக் கொல்வதை இதுவரைப் பார்த்ததில்லை” என்று ஓய்வு பெற்ற இராணுவ கமாண்டர் அனுமா ஆச்சார்யா இத்தாக்குதல் குறித்துக் கேள்வியெழுப்பியிருக்கிறார். இவ்வாறு பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தாலும் ஒன்றிய உள்துறை அமைச்சரோ அல்லது பாதுகாப்புத்துறை அமைச்சரோ நாடாளுமன்றத்திலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

மேலும், இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு, ஒன்றிய அரசின் பாதுகாப்புக் குறைபாடுகளும் மற்றும் உளவுத்துறையின் தோல்வியுமே காரணம் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சங்கர் சவுத்ரி. ஒருவகையில், இத்தாக்குதல், மோடி-ஷாவின் நிர்வாகத் தோல்வியே.

கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீருக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, அரசாங்கத்தின் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, நமது நாட்டிற்கு விரோதமான சக்திகளால் வளர்க்கப்பட்ட பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகள் முடமாக்கப்பட்டுள்ளது” என்று பெருமை பொங்கக் கூறினார். பயங்கரவாத செயல்பாடுகள் முடமாக்கப்பட்டுள்ளன என்று கூறிக்கொண்டே, காஷ்மீரில் இராணுவத்தைக் குவித்து வருகிறது பாசிச மோடி அரசு. ஆனால், இராணுவக் குவிப்பையும் மீறி நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதல், காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கியதால் காஷ்மீரில் பயங்கரவாதம் முடக்கப்பட்டுள்ளது என்ற மோடி-ஷா கும்பலின் பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கியது.

எனவே, மோடி அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தான கேள்விகளை மூடிமறைப்பதற்காகவும், தீவிரமடைந்துவரும் தோல்வி முகத்திலிருந்து மீள்வதற்காகவும், சரிந்துபோயிருக்கும் மோடி பிம்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்கும், பீகார் மாநிலம் உள்ளிட்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சார ஆயுதமாக பயன்படுத்துவதற்காகவும் பஹல்காம் தாக்குதலைக் கொண்டு காய்நகர்த்தத் தொடங்கியது பாசிச கும்பல். இது 2019-இல் புல்வாமாத் தாக்குதலை நடக்கவிருப்பது தெரிந்திருந்தும் மோடி அரசு அதனை அனுமதித்ததையே நினைவூட்டுகிறது.

ஆனால், பஹல்காம் தாக்குதலை முகாந்திரமாகக் கொண்டு நாடு முழுவதும் இஸ்லாமிய வெறுப்பையும் இந்து முனைவாக்கத்தையும் தீவிரப்படுத்தப் பாசிச கும்பல் எடுத்த முயற்சிகள் காஷ்மீர் மக்களாலும், தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்ட மக்களாலும் முறியடிக்கப்பட்ட நிலையில், நாடுமுழுவதும் தேசவெறி – போர்வெறி -இந்துமதவெறியைக் கிளப்பிவிடுவதற்கான நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது பாசிச கும்பல்.

இந்து மதவெறி-தேசவெறியின் கலப்பே ஆபரேஷன் சிந்தூர்

இந்துப் பெண்களின் பொட்டை அழித்ததற்கான பதில் தாக்குதல் என்பதைக் குறிப்பிடும் வகையிலேயே பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) என்று பாசிச கும்பல் பெயரிட்டது. ஆனால், உண்மையில் இத்தாக்குதலில் இஸ்லாமியர்களும் இறந்திருக்கிறார்கள். குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளைத் தாக்குதலிலிருந்து காப்பாற்ற முயற்சித்தக் குதிரை சவாரியாளரான சையது அலி ஹூசைன் ஷா கொல்லப்பட்டிருக்கிறார். இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு, இத்தாக்குதலில் இந்துக்கள் மட்டுமே இறந்ததாகவும் அதற்காக இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் பழிவாங்கப்பட வேண்டும் என்றும் அப்பட்டமான இந்துமதவெறி பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கேற்பவே ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது.

ஆபேரஷன் சிந்தூருக்கான லோகோவில் (LOGO), சிந்தூர் என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள இரண்டு “O”-க்களில் ஒன்றில் குங்குமம் நிரப்பிய கிண்ணம், மற்றொன்றில் குங்குமம் சிதறியிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பெண் என்பவள் ஆண்களின் அடிமை, கணவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களுக்கு அகவாழ்க்கை இல்லை என்ற பாசிச கும்பலின் ஆணாதிக்க பிற்போக்கு இந்துத்துவ கொள்கையை உயர்த்திப்பிடிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியக் கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் இஸ்லாமியர்களையும் காஷ்மீரி மக்களையும் குறிவைக்க வேண்டாம் என்று கூறியதற்காகக் கீழ்த்தரமான முறையில் விமர்சிக்கப்பட்டது காவிக் கும்பலின் வக்கிர முகத்தை அம்பலப்படுத்திக் காட்டியது.

அதேபோல், ஆபேரஷன் சிந்தூர் குறித்து ஊடகங்களுக்கு விளக்கிய இராணுவ அதிகாரிகளில் ஒருவரான சோபியா குரேஷியை, “பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அவர்களது சகோதரியைக் கொண்டு பதிலடி கொடுக்கப்பட்டது” என்று அவரது மதத்தைக் குறிப்பிட்டு மத்தியப்பிரதேச சட்டமன்றத்தின் மூத்த கேபினட் அமைச்சர் குன்வர் விஜய் ஷா பேசியது காவி கும்பலின் இஸ்லாமியர்கள் மற்றும் பெண்கள் மீதான பார்வையை அம்பலப்படுத்தியது.

இது வெறுமனே ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கருத்தல்ல, இதுதான் ஒட்டுமொத்த பாசிச கும்பலின் சிந்தனை, அதுவே செயல்வடிவம் பெற்றிருக்கிறது. பா.ஜ.க-வின் மனக்குரலை, குன்வர் சத்தமாக சொல்லிவிட்டார். அதற்குத்தான் அவர் மீதான வழக்குப் போடப்பட்டிருக்கிறது.

மேலும், தற்போது “தனது நரம்புகளில் ஓடுவது இரத்தம் அல்ல, சூடான குங்குமம்” என்று மோடி உணர்ச்சிப் பொங்க முழங்கியிருப்பதன் மூலம், ஆபரேஷன் சிந்தூர் என்பது, நாடு முழுவதும் இந்து மதவெறி – தேசவெறியூட்டுவதற்கான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் செயல்திட்டமே; இதற்கும் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதிக்கும், நாட்டு நலனுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

மூக்குடைப்பட்ட மோடி-ஷா கும்பல்

பஹல்காம் தாக்குதலுக்கான ‘பதில்’ நடவடிக்கையாக மோடியின் தலைமையில்-முப்படைகளின் கூட்டு நடவடிக்கையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றுவிட்டதாக ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கிறது, மோடிக் கும்பல்.

ஆனால், உண்மையில், இந்தத் தாக்குதலினால் இந்தியாவுக்கு என்ன பலன்? பாகிஸ்தானின் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புகள் என்ன? என்ற செய்திகள் பெரும்பாலும் வெளிவரவில்லை. கடந்த 8-ஆம் தேதி, ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராகப் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லைக் கோட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். பூஞ்ச் பகுதியில் மட்டும், தலா ஒரு இந்திய ராணுவ வீரர் மற்றும் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலரது வீடுகள் சிதிலமடைந்திருக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போதிய மருத்துவ வசதிகள் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.

காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மற்றும் உரி பகுதிகளிலும், ஜம்முவின் பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளிலும், ஸ்ரீநகரின் வூயான், ஜம்மு மற்றும் எல்லைக் கோட்டிற்கு 10-15 கி.மீ. தூரத்தில் உள்ள கிராமங்களிலும், காஷ்மீரின் மத்தியப் பகுதிகளிலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பல வீடுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் பலியான மக்களின் எண்ணிக்கையையும் போதிய மருத்துவ சிகிச்சைக் கிடைக்காததால் இறந்தவர்கள் குறித்த விவரங்களையும் மோடி அரசும் இராணுவமும் இரகசியமாகவே வைத்துள்ளன. போர்க் காலங்களில் மக்கள் தப்பிப்பதற்கான பதுங்குக் குழிகள் கூட இங்கு இல்லை என்பது பெரும் துயரமும் அவலமுமாகும். தனது அரசியல் ஆதாயத்துக்காக ஆபரேஷன் சிந்தூர் நடத்திய பாசிச கும்பல் எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள மக்களை நிர்கதியாக்கியிருக்கிறது.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த, ஒன்றிய அரசின் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக மோடிக் கும்பல் பெருமை பீற்றிக் கொள்கிறது. ஆனால், இந்தப் பெருமை பீற்றலில் இந்திய மக்களின் வரிப்பணத்தைக் கோடிக் கணக்கில் கொட்டி வாங்கிய ரபேல் போர் விமானம் அடிவாங்கிய கதை வசதியாக மூடிமறைக்கப்பட்டுள்ளது. ஐந்து ரபேல் போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

இந்திய ராணுவத்தின் சார்பில் மே 11 அன்று, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ரபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த விமானப்படை ஏர் மார்ஷல் ஏ.கே பார்தி, “நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில், நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் ‘ஆம்’. பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் ‘ஆம்’.” என்று பேசியிருக்கிறார்.

அதாவது, ரபேல் உட்பட பல போர் விமானங்கள் அழிக்கப்பட்டிருப்பதையும், இந்தியாவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அவர் மறுக்கவில்லை, மாறாக அது குறித்து விவாதிக்க வேண்டாம் என்பதே அவர் கருத்து. ஒரு இராணுவ நடவடிக்கை என்ற வகையில் எதிர்த்தரப்பு மற்றும் நமது தரப்பு இழப்புகள் குறித்து நாட்டு மக்களுக்கு வெளியிடுவது கடமையாகும், அந்தக் கடமையைக்கூட இராணுவம் செய்யவில்லை. இந்திய இராணுவமானது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் இந்துமதவெறி-தேசவெறி கிளப்பிவிடும் திட்டத்திற்கு பக்கபலமாக நிற்கிறது என்பதை இவையெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என அரசின் பல்வேறு துறைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள பாசிச கும்பல், இராணுவத்தையும் தன்வயப்படுத்தி வருகிறது என்பதையே இது காட்டுகிறது.

மேலும், மே 8 அன்று சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் ஒரு பில்லியன் டாலர் கடன் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் ஆபேரஷன் சிந்தூர் மே 7 அன்றே தொடங்கப்பட்டது. ஆனால், மோடி-ஷா கும்பலின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் கடனுதவி வழங்கியிருக்கிறது சர்வதேச நாணய நிதியம் (இது பாகிஸ்தானை மறு அடகு வைப்பது என்பது தனி விசயம்).

அதேசமயம், பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று கூப்பாடு போட்டாலும், இந்தியாவின் இந்த இராணுவ நடவடிக்கையை யூத இனவெறியன் நெதன்யாகு தவிரப் பிற நாடுகளோ அதன் தலைவர்களோ ஆதரிக்கவில்லை. உலக நாடுகளிடம் இந்த நடவடிக்கையின் ‘நியாயத்தை’ எடுத்துரைக்க அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழு நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறது. சர்வதேச ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுற்றுப் பயணமே, ஆபரேஷன் சிந்தூர் தோல்வியடைந்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இவற்றின் உச்சமாக, மே 11-ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திகொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் அறிவித்தது மோடிக் கும்பலை செய்வதறியாது திக்குமுக்காடச் செய்தது. போர்நிறுத்தம் குறித்து ட்ரம்ப் அறிவித்து அரை மணி நேரத்திற்கு பிறகே மோடி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியாவின் இறையாண்மையைக்  கேள்விக்குள்ளாக்கிய ட்ரம்பின் செயலுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறி வருகிறது பாசிச கும்பல்.

எதிர்க்கட்சிகளின் துரோகம்!

பஹல்காம் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இதற்கு காரணம் என்ன? ஏன் பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை? போன்ற பல கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. அத்தகைய சூழலில், ஆபரேஷன் சிந்தூர் அறிவிக்கப்பட்ட உடனே, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பாசிச கும்பலின் தேசவெறி முகாமில் ஐக்கியமாகிவிட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்ட செய்தி வெளியானவுடன், தங்களது தேசபக்தியை நீருபிக்க, ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவு தெரிவித்தனர். மூவர்ணக் கொடிப் பேரணியை பா.ஜ.க. துவங்குவதற்கு முன்னர், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஒற்றுமைப் பேரணி நடத்தினார். காங்கிரசு ஜெய்-ஹிந்த் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தக் கட்சிகள், ஆர்.எஸ்.எஸ் –  பா.ஜ.க-விடம் தேசபக்தி சான்றிதழ் பெறுவதற்காகவும், பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்ற குறுகிய நலனுக்காகவும் அரசியல் சோரம் போய்விட்டன. மனிதக்குல விரோத பார்ப்பனிய-பாசிச சித்தாந்தத்திற்கு நேர் எதிரான, மனிதக்குல நன்மைக்கான பொதுவுடைமை சித்தாந்தத்தைக் கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. கட்சிகளும் பாசிஸ்டுகளின் போர்வெறிக்கு ஆதரவு தெரிவித்தது வெட்கக்கேடானது. முதல் உலகப்போரின்போது “தந்தையர் நாட்டைக் காப்போம்” என்று சமூகதேசிய வெறிக்குப் பலியான சமூக-ஜனநாயகவாதிகளின் வாரிசுகள் தாங்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.

ஆபேரஷன் சிந்தூரின் பயன் என்ன என்று சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.எம்.பேபி கேள்வி எழுப்பியிருக்கிறார். சிந்தூர் நடவடிக்கைத் தொடங்கும் போது இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஆபேரஷன் சிந்தூர் நடவடிக்கையின் ‘நியாயத்தை’ எடுத்துரைக்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லும்போது வழியனுப்பிவிட்டு இப்பொழுது கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் மேலே குறிப்பிட்டிருப்பது போல, பஹல்காம் தாக்குதலில் இஸ்லாமிய வெறுப்பு-இந்து முனைவாக்கம் என்ற பாசிச கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் இந்த குறிப்பான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு பாசிஸ்டுகளின் அரசியல் தோல்வியை அம்பலப்படுத்திப் பின்வாங்கச் செய்வதற்குப் பதிலாக, பாசிஸ்டுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பட்டமாக பலியாகியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் இத்தகைய அரசியலற்ற – பாசிஸ்டுகளை ஜனநாயக ரீதியாக அணுகுகிற போக்கு பாசிஸ்டுகளின் பிடியில் மக்களையும் நாட்டையும் தள்ளவே செய்யும். இது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்க்கட்சிகள் செய்கிற மாபெரும் துரோகமாகும்.

பாசிச எதிர்ப்பில் ஒரு மாற்றுத்திட்டத்தின் தேவை குறித்து நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். ஒரு மாற்றுத்திட்டமில்லாமல் பா.ஜ.க-வை தேர்தலில் கூட வீழ்த்த முடியாது என்பதை 2024 நாடாளுமன்றத் தேர்தலும் நிரூபித்துக் காட்டியது. தற்போது பாசிஸ்டுகளின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் அடிபணிந்து போயிருப்பதன் மூலம் மீண்டுமொரு முறை மாற்றுத்திட்டத்தின் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 16-30, மே 1-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 11-12 | ஏப்ரல் 16-30, மே 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈழம்: சமாதான முயற்சி தோற்றது
  • ஊழல் நாயகி அட்டூழியம் கையாலாகாத எதிர்க்கட்சிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் 15வது மாநாடு: காகிதப் புரட்சியும் காணாமல் போனது
  • இறால் பண்ணை எதிர்ப்பு நேரடி செய்தித் தொகுப்பு
  • கோவா மக்களின் போர்க்குணம் மண்டியிட்ட ஆலை முதலாளிகள்
  • இறால் பண்ணை அழிப்புப் போராட்டம் சீர்காழி சிவந்தது
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 9-10 | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: “ஜெ” தேர்தல் உத்தி: மக்களுக்கு இலவசங்கள், ஜெ.ஜெ. டி.வி!
    எதிர்க்கட்சிகளுக்கு பாசிச ஒடுக்குமுறை!
  • இறால் பண்ணை அழிப்பு போராட்டம்
    பண்ணைகளை விரட்டும் பறைமுழக்கம்
  • குட்டிப் பொதுத் தேர்தல் முடிவுகள்: அனைத்துக் கட்சிகளும் நிராகரிப்பு
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • போராளிகள் கிரிமினல்களல்ல கைதிகள் விலங்குகளல்ல
  • காசி, மதுரா மீது போர்! ரத்தம் கேட்கும் இந்துவெறியர்கள்
  • ம.தி.மு.க-வுடன் கூட்டு சி.பி.எம்.-ன் சந்தர்ப்பவாதம்
  • பங்காளியின் வருகை பாசிஸ்டுகளின் பூரிப்பு
  • பட்ஜெட்: கஞ்சிக்கு வழியில்லாதவனிடம் ‘கலர் சினிமா’ காட்டும் வக்கிரம்
  • அவல நிலையில் உலக நெருக்கடி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



வீரரு எச்.ராஜா சார் பம்முவது எதற்காக? | தோழர் ரவி

வீரரு எச்.ராஜா சார் பம்முவது எதற்காக? | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 7-8 | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மெர்கண்டைல் வங்கி மீட்புப் போராட்டம்: நாடார் சமூகத்தினர் பகடைக் காய்களா?
  • திட்டக்குடி சாதிக் கலவரம்: “தலித் சிறுத்தைகள்” படிப்பினை பெறவேண்டும்
  • சேஷன் சேட்டைகளின் பின்னணி என்ன?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மெக்சிகோ வழியில் இந்தியப் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி பாய்ச்சல்
  • பரிசுச் சீட்டு மோகம் குபேரனாக்கவில்லை குப்புறத் தள்ளுகிறது
  • பருத்தி நூல் விலையேற்றம்: நெசவாளர்களுக்குப் பேரிடி
  • இளைத்தவனை பெருத்தவன் ஏளனம் செய்வதா?
  • நானும் என் கால்களால் நடந்தேன்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விழிஞ்சம் துறைமுகம்: கேரள சி.பி.எம். அரசின் அதானி சேவை

கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் விழிஞ்சம் பகுதியில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை (Vizhinjam International Seaport) கடந்த மே 2-ஆம் தேதி பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம். அரசு திறந்து வைத்துள்ளது. இத்துறைமுகத்தை அரசு-தனியார் பங்களிப்பு (Public-Private Partnership) என்ற திட்டத்தின் அடிப்படையில், அதானி குழுமத்துடன் இணைந்து சி.பி.எம் அரசானது கட்டியமைத்துள்ளது.

இத்துறைமுகத்தை “கேரளாவின் கனவுத் திட்டம்” என்றும் “கேரளாவின் வளர்ச்சியையும், நாட்டின் வளர்ச்சியையும் இத்துறைமுகம் மேம்படுத்தும்” என்றும் சி.பி.எம். அரசு பெருமையாகப் பரப்புரை செய்து வருகிறது. மேலும், இத்திட்டத்தை ‘வளர்ச்சி’த் திட்டம் என்று கேரளாவின் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வரவேற்பதுடன் தங்களால்தான் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாக சி.பி.எம். கட்சியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. ஆனால், இது விழிஞ்சம் பகுதியைச் சார்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் நாசமாக்கிக் கொண்டுவரப்பட்டுள்ள நாசகர திட்டம் என்பதே உண்மை.

‘வளர்ச்சி’ என்ற பெயரில்
அப்பட்டமான அதானி சேவை

விழிஞ்சம் துறைமுகம் இந்தியாவின் முதல் ஆழ்கடல் கொள்கலன் பரிமாற்ற துறைமுகம் (Deep-Water Container Transshipment Port) ஆகும். உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் நிறுத்தும் வகையில் 20 மீட்டர் கடல் ஆழத்தை இயற்கையாகக் கொண்டிருப்பது; அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கான சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடத்திற்கு 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது ஆகிய காரணங்களால் விழிஞ்சம் பகுதியில் இத்துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கார்ப்பரேட் முதலாளி அதானியின் முன்னிலையில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட விழிஞ்சம் துறைமுகம்.

மேலும், துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் மட்டுமே தற்போது நிறைவுற்றுள்ள நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் 2028-ஆம் ஆண்டிற்குள் நிறைவுறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இத்துறைமுகம் ஆண்டுக்கு 12 லட்சம் கொள்கலன்களை (இருபது அடி சமமான அலகு – Twenty-foot Equivalent Unit – கொண்ட சரக்குகளைக் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள்) கையாளும் வகையிலான தானியங்கி தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. மூன்று கட்டப் பணிகளும் நிறைவடைந்தவுடன் இத்துறைமுகத்தால் ஆண்டுக்கு 45 லட்சம் கொள்கலன்களை கையாள முடியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேபோல, இந்தியாவிற்கான சரக்குகள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு, சிறிய கப்பல்கள் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், இனி அவை நேரடியாக விழிஞ்சம் துறைமுகத்தின் மூலமே கொண்டுவரப்படும் என்று சொல்லப்படுகிறது.

புவியியல் ரீதியாக முக்கியமான இடத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வசதியுடன் துறைமுகம் கட்டப்பட்டிருந்தாலும், இதனால் கொழுத்த லாபம் பெறப்போவது அதானி குழுமம் மட்டுமே. ஏனென்றால், 2034-ஆம் ஆண்டிலிருந்துதான் இத்துறைமுகத்தில் கிடைக்கும் வருவாயிலிருந்து கேரள அரசுக்குப் பங்கு அளிக்கப்படும் என்று அதானி குழுமத்துடன் அயோக்கியத்தனமாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஆனால், விழிஞ்சம் துறைமுகத்தைக் கட்டுவதற்கு அதானி குழுமத்தை விட கேரள அரசே அதிக நிதி செலவழித்துள்ளது. துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய கேரள அரசு ரூ.5,370 கோடியும் அதானி குழுமம் ரூ.2,497 கோடியும் செலவழித்துள்ளன. ஒன்றிய மோடி அரசால் செலவிடப்பட்ட ரூ.818 கோடியும் கேரள அரசின் முதுகில் கடன் சுமையாக ஏற்றப்பட்டுள்ளது. இத்துறைமுக நிர்வாகமும் அதானி கையில் நிரந்தரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதாவது கேரள சி.பி.எம். அரசானது ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து, அதானி லாபம் கொழுக்க ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளது.

அதேசமயம், இத்திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான மக்களை கிராமங்களில் இருந்து வெளியேற்றி சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கியுள்ளது. மேலும், அதானி துறைமுகத்திற்கு அரணாக, கடலுக்குள் 3 கி.மீ தூரத்திற்கு அலை தடுப்பரண்களை அமைப்பதற்காக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லாரி சுமைகளுக்கு சமமான கற்களை சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவுகள் தொடர் நிகழ்வாகிவரும் போதிலும் அதானியின் நலனிற்காக அம்மலைகளை நாசப்படுத்தி கனிமவளக் கொள்ளையனைப் போல சி.பி.எம் அரசு செயல்பட்டுள்ளது.

மேலும், விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான மீனவ மக்களின் போராட்டத்தை கடும் அடக்குமுறைகளை செலுத்தி ஒடுக்கியது; மீனவர்களின் போராட்டம் அந்நிய சக்திகளால் தூண்டப்பட்டது என்று பா.ஜ.க-வினரைப் போல மீனவ மக்களை இழிவுபடுத்தியது. இன்னுமொருபடி மேலே சென்று துறைமுகத்திற்கு ஆதரவாகப் பாசிச பா.ஜ.க-வுடன் இணைந்து போராட்டங்களிலும் ஈடுபட்டது.

இவையெல்லாம் கேரள சி.பி.எம். அரசு முன்னிறுத்தும் “நவ கேரள மாடல்” என்பது அப்பட்டமான கார்ப்பரேட் மாடல் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

50,000-த்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு கொஞ்சமும் கூச்சமின்றி விழிஞ்சம் துறைமுகத்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்று சி.பி.எம். அரசு பேசி வருகிறது. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அப்பட்டமாக அதானி சேவையில் சி.பி.எம். அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளாவின் மின்சார விநியோகம், சிமெண்ட் உற்பத்தி உள்ளிட்ட துறைகளிலும் அதானியின் ஆக்டோபஸ் கரங்கள் வேகமாக விரிவடையத் துணைசெய்கிறது.

இந்தியாவில், அம்பானி – அதானி – அகர்வால் வகையறா கார்ப்பரேட் கும்பலின் பொருளாதார ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் செயல்பட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் தொலைத்தொடர்பு, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் இக்கும்பலின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு வருகிறது. இச்சூழலில் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் கேரள சி.பி.எம் அரசு, அதானியை வளர்ச்சியின் நாயகனாகவும் தங்களின் கூட்டாளியாகவும் பிரச்சாரம் செய்து கார்ப்பரேட் சேவையில் ஈடுபட்டு வருகிறது. பாசிச எதிர்ப்பு உணர்விலிருந்து தங்களுக்கு வாக்களித்த கோடிக்கணக்கான மக்களுக்கு அப்பட்டமாக துரோகமிழைத்து வருகிறது.

இடதுசாரி போர்வையில்
கார்ப்பரேட் மாடல் அரசு

விழிஞ்சம் துறைமுகத்தை பயன்படுத்திக் கொண்டு கேரளாவை நோக்கி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் சி.பி.எம். அரசு செயல்பட்டு வருகிறது. “விழிஞ்சம் கேரளத்தின் புதிய வெற்றி கீதம்”, “புதிய கேரளம் புதிய வழிகள்” போன்ற முழக்கங்களின் கீழ் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தாண்டு தொடக்கத்திலிருந்து, கேரள முதலீட்டாளர்கள் உலகளாவிய உச்சி மாநாடு, விழிஞ்சம் மாநாடு, உலகப் பொருளாதார மன்ற மாநாடு போன்றவற்றின் மூலம் உள்நாட்டு மற்றும் அந்நிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. விழிஞ்சம் மாநாட்டில் மட்டும் 51 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது அடக்குமுறை செலுத்தும் போலீஸ்.

மேலும், கார்ப்பரேட் முதலாளிகள் கேரளாவைக் கொள்ளையடித்துச் செல்வதற்கு ஏதுவான வகையில் மக்களின் வரிப்பணத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது. விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, 66,10.7 கி.மீ தொலைவில் உள்ள பாலராமபுரம் ரயில் நிலையம், 16 கி.மீ தொலைவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையம் ஆகியவற்றை இணைப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த உள்கட்டமைப்பு பணிகளையும் அரசு-தனியார் பங்களிப்பு என்ற முறையிலேயே கேரள சி.பி.எம். அரசு மேற்கொண்டு வருகிறது.

அதேபோல, 1,456 சதுர கி.மீ பரப்பளவில் விழிஞ்சம் – கொல்லம் – புனலூர் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி முக்கோணத் திட்டம், 78 கி.மீ நீளமுள்ள விழிஞ்சம் – நவைக்குளம் வெளிப்புற வளர்ச்சி வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விழிஞ்சம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொருளாதார மண்டலங்களாகவும், தொழிற்துறைப் பூங்காக்களாகவும் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இத்திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை மக்களிடமிருந்து அபகரிப்பதற்காக “சிறப்பு முதலீட்டு மண்டல மசோதா” எனும் மக்கள்விரோதத் திட்டத்தை சி.பி.எம் அரசு உருவாக்கியுள்ளது. இம்மசோதா நில கையகப்படுத்தலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்கிறது. இதன்மூலம், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்கள் மீது கடும் அடக்குமுறை செலுத்தி விழிஞ்சம் துறைமுகத்தைக் கட்டமைத்ததைப் போல, விவசாய மக்களின் மீதும் தாக்குதல் தொடுக்கக் கேரள அரசு ஆயத்தமாகி வருகிறது என்பது தெளிவாகிறது.

மேலும், இத்திட்டங்கள் மூலம் மூன்று லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கேரள அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் இத்திட்டங்களால் கேரளாவின் நிலமும் நீரும் காற்றும் நஞ்சாக்கப்பட்டு, கேரள மக்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப்படுவதும், தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக ஆக்கப்படுவதுமே நடந்தேறும்.

இவ்வாறு விழிஞ்சம் துறைமுகத்தின் மூலம் முதலீடுகளை ஈர்த்து கேரளாவை கார்ப்பரேட்டுகளின் சொர்க்கபுரியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே சி.பி.எம். அரசு செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுடன் போட்டிப்போட்டு வருகிறது. கேரள அரசின் இந்நடவடிக்கையானது மோடி அரசின் சாகர் மாலா, கதி சக்தி, இந்தியாவை உற்பத்தியின் குவிமையமாக மாற்றுவது ஆகிய நோக்கங்களோடு ஒன்றிணைந்ததாகும்.

அதேபோல, கேரள சி.பி.எம். அரசானது விழிஞ்சம் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் மட்டுமின்றி, அரசுத்துறைகள், மாநிலத்திற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளையும் அரசு – தனியார் பங்களிப்பு என்ற முறையில் நிறைவேற்றி கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அதன்மூலம், அரசுத்துறைகளில் கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது. சான்றாக, கேரளாவில் தனியார் பல்கலைக்கழகங்களை செயல்பட அனுமதிக்கும் “கேரள தனியார் பல்கலைக்கழகங்கள் (நிறுவன அமைப்பு மற்றும் ஒழுங்குமுறை) மசோதாவை” கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம், கேரளாவில் அரசு பல்கலைக்கழகங்கள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலைமைக்கு முடிவுரை எழுதியுள்ளது.

ஆகவே, கேரள சி.பி.எம் அரசானது இடதுசாரி போர்வையில் அப்பட்டமான கார்ப்பரேட் மாடல் அரசையே நடத்திக் கொண்டிருக்கிறது. மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதானியை வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தி கார்ப்பரேட் சேவையில் ஈடுபடுவது, அப்பட்டமாக மக்களைப் பாசிசத்திற்கு பலியிடும் வேலையாகும்.  எனவே, மக்களையும் கம்யூனிசத்தையும் நேசிக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் சி.பி.எம். அரசின் இந்த மக்கள் விரோத, பாசிச கும்பலுக்கு ஆதரவான நடவடிக்கைகளை எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 3-4 | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கத்தி எடுப்போம்! ரத்தம் சிந்துவோம்! ஏகாதிபத்திய மேலாதிக்கத் தளையறுப்போம்!
  • “சிவானந்தா ஸ்டீல்ஸ்” பயிற்சி தொழிலாளர்கள் போராட்டம்
  • சர்வ கட்சியும் லஞ்ச ஊழல் சி.பி.ஐ.-யிடம் சிக்கிய ‘டயரி’
  • கொடும்பாவி எரித்து உ.வ.க.விற்கு எதிர்ப்பு
  • காங்கிரசுக்கு கொள்ளி வைக்க கோஷ்டி சண்டை
  • நீலிகளின் ஆட்சியில் தலித் மக்கள் தவிப்பு
  • புதிய பொருளாதாரக் கொள்கை ஏழைகள் என்ன இடிதாங்கியா?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பாசிசத்தில் முடிந்தது யேல்ட்சினின் ‘புரட்சி’
  • சேஷனின் குறுக்கு புத்தி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1994, ஜனவரி 1-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 3-4 | டிசம்பர் 16-31, 1994, ஜனவரி 1-15, 1995  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆந்திரா, கர்நாடகா தேர்தல் முடிவுகள்: ஓநாய்களுக்குப் பதிலாக நரிகள்
  • சாதித் தீ வேண்டாம்! வர்க்கத் தீ மூட்டுவோம்!
  • பிரேமானந்தா குற்றங்கள்: காவிக்குத் துணையாக காக்கிகள்
  • ஜெயா வீரப்பன் யார் தலைமையை ஏற்பது? போலீசு திணறல்
  • திராவிடக் கட்சிகளின் தமிழ்த் துரோகம்
  • ரவுடி எம்.எல்.ஏ-வைச் சிறை வைத்து அரசுப் பணியாளர்கள் போராட்டம்
  • மலிவானதோ மக்கள் உயிர்!
  • உறுதிமிக்க போராட்டத்தால் சாதிவெறிக் கும்பல் பணிந்தது
  • இந்துவெறிக் கும்பலின் பேடித்தனம்
  • பாக். எதிர்ப்பு அற்பத்தனம் நாட்டுக்கே அவமானம்
  • மார்வாடி எதிர்ப்புப் போராட்டம்: மறைக்கப்பட்ட உண்மைக்கு மணியரசன் குழு வாக்குமூலம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram