1929ஆம் ஆண்டில் பம்பாய் அரசாங்கம் தீண்டத் தகாதவர்களின் குறைகளைக் கேட்டறிந்து விசாரணை செய்ய ஒரு கமிட்டியை நியமித்தது. அக் கமிட்டியில் நானும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டேன். தீண்டத்தகாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, ஒடுக்குமுறை, கொடுமை பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்தக் கமிட்டி இராஜதானி முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் குழுக்களாகப் பிரிந்து பயணம் செய்ய முடிவு செய்தோம்.
எனக்கும், மற்றொரு உறுப்பினருக்கும் கண்டேஷ் பகுதியின் இரண்டு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டன. நானும் என் சகதோழரும் எங்களது பணி முடிந்தபின் பிரிந்து சென்றோம். யாரோ ஓர் இந்துச் சாமியாரைக் காண அவர் சென்றார். பம்பாய் செல்ல நான் ரயிலில் புறப்பட்டேன். துலியா அருகே உள்ள ஒரு கிராமத்தில் தீண்டத்தகாதவர்களின் மீது மற்ற ஜாதி இந்துக்கள் அறிவித்திருந்த சமூகப் புறக்கணிப்பு வழக்கு பற்றி விசாரிக்கச் செல்வதற்காக சாலிஸ்கான் இரயில் நிலையத்தில் நான் இறங்கினேன்.
சாலிஸ்கானைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் இரயில் நிலையத்துக்கு வந்து அன்றிரவு அவர்களுடன் தங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இந்தச் சமூகப் புறக்கணிப்பு வழக்கை விசாரித்து விட்டு நேரடியாகப் பம்பாய் செல்வது என்பதுதான் எனது திட்டமாக இருந்தது. ஆனால் வந்தவர்கள் நான் தங்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியதால் இரவில் தங்க ஒப்புக் கொண்டேன்.அந்தக் கிராமத்திற்குச் செல்ல நான் துலியாவில் இரயில் ஏறினேன். அந்தக் கிராமத்திற்குச் சென்ற நான் அங்கு நிலவும் சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொண்டு அடுத்த இரயிலிலேயே சாலிஸ்கானுக்குத் திரும்பிவிட்டேன்.
சாலிஸ்கான் இரயில் நிலையத்தில் தீண்டத்தகாதவர்கள் எனக்காகக் காத்திருப்பதைக் கண்டேன். எனக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவர்களின் வீடுகள் உள்ள மஹர்வாடா என்ற இடம் இரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது; அந்த இடத்தை அடைய ஓர் ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இருந்தது. மஹர்வாடா நடந்து செல்லும் தூரத்திலேயே இருந்தது. உடனடியாக நான் அங்கு அழைத்துச் செல்லப்படுவேன் என்று எதிர்பார்த்திருந்தேன்.ஆனால், என்னை உடனே அழைத்துச் செல்வதாகத் தெரியவில்லை; ஏன் என்னைக் காக்க வைத்தனர் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு குதிரை வண்டி இரயில் நடைமேடைக்கு அருகே கொண்டுவரப்பட்டு, நான் அதில் ஏறிக் கொண்டேன். வண்டி ஓட்டியும் நானும் மட்டும்தான் அந்த வண்டியில் இருந்தோம். மற்றவர்கள் ஒரு குறுக்கு வழியே நடந்து சென்றனர். 200 அடி தூரம் அந்தக் குதிரை வண்டி சென்றபோது, ஒரு மோட்டார் காருடன் அது மோதப் பார்த்தது. தினமும் சவாரிக்கு வண்டி ஓட்டிச் செல்லும் வண்டிக்காரர் இவ்வளவு அனுபவமற்றவராக இருக்கிறாரே என்று நான் வியப்படைந்தேன். அங்கே இருந்த போலீஸ்காரர் உரக்கக் கத்தியதால், காரின் ஓட்டுநர் காரைப் பின் வாங்கியதால், விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
ஒருவாறாக ஆற்றின்மீது உள்ள பாலத்தின் அருகில் நாங்கள் வந்தோம். பாலங்களின் மீது உள்ளதுபோன்று அதன் மீது ஓரத்தில் தடுப்புச் சுவர் எதுவுமில்லை. அந்தப் பாலம் நாங்கள் வந்து கொண்டிருந்த பாதையிலிருந்து செங்குத்தாக இருந்தது. பாதையிலிருந்து பாலத்திற்கு வரும்போது வளைவில் திரும்ப வேண்டும். ஆனால், பாலத்தின் முதல் பக்கவாட்டுக் கல் அருகே வரும்போது, நேராகச் செல்வதற்குப் பதில் குதிரை திரும்பி ஓடியது. குதிரை வண்டியின் சக்கரம் பக்கவாட்டில் இருந்த கல்லின் மீது வேகமாக மோதியதில் நான் தூக்கி எறியப்பட்டு, பாலத்தின் மீதிருந்த கல் தரையில் வந்து விழுந்தேன்.
குதிரையும் வண்டியும் பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்துவிட்டன. வேகமாக நான் விழுந்ததால், அசைய முடியாமல் இருந்தேன். ஆற்றின் அக்கரையில் மஹர்வாடா இருந்தது என்னை அழைக்க இரயிலடிக்கு வந்திருந்தவர்கள் எனக்கு முன் அங்கு வந்து சேர்ந்திருந்தனர். என்னை அவர்கள் தூக்கி விட்டு, ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் அழுகை மற்றும் புலம்பலுக்கிடையில் அஹர்வாடாவுக்குக் கொண்டு சென்றனர் கீழே விழுந்ததில் எனக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. எனது கால் எலும்பு முறிந்து பல நாள்கள் என்னால் நடக்க முடியாமல் போனது இவையெல்லாம் எப்படி நடந்தன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தினமும் அந்தப் பாலத்தில் முன்னும் பின்னும் சென்று வந்து கொண்டிருந்த குதிரை வண்டி, அதற்கு முன் வண்டியை பாலத்தில் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல எப்போதும் தவறியதேயில்ல.
விசாரித்தபோது, எனக்கு உண்மைகளைச் சொன்னார்கள். இரயிலடியில் ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணம் தீண்டத்தகாத ஒரு பயணியைத் தனது வண்டியில் அழைத்து வர குதிரை வண்டிக்காரன் விரும்பாததுதான். அது அவனது கவுரவத்திற்குக் குறைவானதாம். நான் அவர்களிடம் இருப்பிடத்திற்கு நடந்து வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை மஹர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு சமரசம் செய்து கொள்ளப்பட்டது: குதிரை வண்டிக்காரன் வண்டியை வாடகைக்குத் தருவது என்றும், ஆனால் வண்டியை அவன் ஒட்டி வரமாட்டான் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மஹர்களால் வண்டியை வாடகைக்கு எடுக்க முடிந்ததே தவிர, அதனை ஓட்டமுடியாது என்பதால். வேறு ஒருவரை வண்டி ஓட்டச் செய்யலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். இதுதான் சரியான தீர்வு என்று அவர்கள் கருதினார்கள்.
என்றாலும், பயணியின் கவுரவத்தை விட அவரது பாதுகாப்புதான் முக்கியமானது என்பதை மஹர்கள் மறந்து விட்டார்கள் போலும் பாதுகாப்புதான் முக்கியம் என்று அவர்கள் நினைத்திருந்தால், என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல இயன்ற வண்டி ஓட்டியைக் கொண்டு வந்திருப்பார்கள். உண்மையைக் கூறுவதானால் அவர்களில் எவர் ஒருவராலும் அந்த வண்டியை ஓட்ட முடியாது: ஏனென்றால் அது அவர்கள் தொழிலல்ல. எனவே,அவர்களுள் ஒருவரை வண்டி ஓட்டி வரும்படி கேட்டிருக்கிறார்கள். வண்டியில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்ட அவருக்கு. வண்டி ஓட்டுவதில் சிரமம் எதுவுமில்லை என்று நினைக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் புறப்பட்டபின்னர்தான் தன் பொறுப்பை உணர்ந்த அவர் குதிரையைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பதற்றம் அடைந்துவிட்டார். என் கவுரவத்தைக் காப்பாற்ற முயன்ற சாலிஸ்கான் மஹர்கள் என் உயிருக்கே ஆபத்து ஏற்படும்படி செய்துவிட்டார்கள். அனைத்து தீண்டத்தகாதவர்களையும் விட, அவர் பார்-அட்-லாவாக இருந்தாலும் சரி, தானே உயர்ந்தவன் என்று, ஒரு வேலைக்காரனை விட மேலானவன் அல்லாத அந்தக் குதிரை வண்டிக்காரனான இந்து நினைத்திருந்தான் என்பது பின்னர் எனக்குத் தெரிய வந்தது.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 10 | 1990 ஏப்ரல் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
பீக்காக்: ஓட்டல் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம்
கொலைக்காரப் படைக்கு அனுதாபம் ஏன்?
பட்ஜெட்: ஏழைகளை பட்டினிச்சாவுக்குத் தள்ளுவது
நடுத்தர மக்களை ஏழைகளாக்குவது
விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்குவது
தரகு முதலாளிகள் நிலப்பிரபுக்களை கொழுக்க வைப்பது
மீண்டும் அதே பாதையில்…
காஷ்மீர் சர்வக்கட்சிக் கூத்து
தமிழக சட்டமன்றம்: ஆடம்பர அரட்டைமடம்!
நமீபியா: நிறவெறி ஆதிக்கத்திலிருந்து விடுதலை
நிர்மூலமாக்கபடவில்லை காலனியாதிக்கம்
போலி கம்யூனிஸ்டு முதல்வர் நாயனாரின் வாய்க்கொழுப்பு
காங்கிரசு கலாச்சாரம்: காந்தியவாதிகளின் பொறூக்கித்தனம்!
உளவாளி ராமாஸ்வரூப் விடுதலை
ஏகாதிபத்தியத் தரகர்களுக்கு கொண்டாட்டம்
1916இல் நான் இந்தியாவுக்குத் திரும்பினேன். உயர் கல்விக்காக மேதகு பரோடா மன்னர் அவர்களால் நான் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டேன். 1913 முதல் 1917 வரை நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நான் பயின்றேன். 1917இல் இலண்டனுக்குச் சென்ற நான் இலண்டன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பயிலச் சேர்ந்தேன். ஆனால், என் கல்வியை முடிக்காமல் இடையில் இலண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் நிலை எனக்கு ஏற்பட்டது. பரோடா சமஸ்தானத்தினால் நான் படிக்க வைக்கப்பட்டேன் என்பதால், அந்தச் சமஸ்தானத்திற்காகப் பணியாற்ற நான் கடமைப்பட்டிருந்தேன். அதன்படி நான் இந்தியாவை வந்தடைந்தவுடன் நேரடியாகப் பரோடாவுக்குச் சென்றேன். நான் பரோடாவிலிருந்து ஏன் திரும்பி வந்தேன் என்பதற்கான காரணங்கள் நான் இங்கே சொல்ல வந்த விஷயங்களுக்குத் தொடர்புடையன அல்ல. அதனால் அவற்றைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. பரோடாவில் எனக்கு ஏற்பட்ட சமூக அனுபவங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் நான் அவற்றை விவரிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், ஒரு தீண்டத்தகாதவன் இந்தியாவுக்குச் சென்றால் அவன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சினையாகவே இருப்பான் என்பதையும் பற்றிய அனைத்து நினைவுகளையும் எனது அமெரிக்க, அய்ரோப்பிய அய்ந்தாண்டுக் கால வாழ்க்கை துடைத்து விட்டது. பரோடா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது “எங்கு தங்குவது? யார் என்னை ஏற்றுக் கொண்டு இடம் கொடுப்பார்கள்?” என்ற ஒரு கேள்வி என் மனதைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. விஷிகள் என்னும் இந்து விடுதிகள் அங்கு உள்ளன என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். நான் பொய்சொல்லி ஏமாற்றினால்தான் அங்கே என்னால் தங்க முடியும். அதற்கு நான் தயாராக இல்லை.
அவ்வாறு தங்கி, பின்னர் நான் யார் என்பது தெரிந்துவிட்டால் அதனால் நேரக்கூடிய விளைவுகளை நான் நன்றாகவே அறிந்திருந்தேன். அமெரிக்காவுக்குப் படிக்க வந்த என் நண்பர்கள் பரோடாவில் இருந்தனர். அவர்களிடம் சென்றால் என்னை வரவேற்பார்களா? வரவேற்பார்கள் என்று என்னால் உறுதியாக நினைக்க முடியவில்லை. தங்கள் வீட்டில் ஒரு தீண்டத்தகாதவனை அனுமதித்ததற்காக அவர்கள் சங்கடப்பட நேரலாம். எங்கு போவது, என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே சிறிது நேரம் இரயில் நிலையத்திலேயே நின்று கொண்டிருந்தேன். முகாமில் தங்குவதற்கு ஏதேனும் இடமிருக்கிறதா என்று விசாரிக்கலாமே என்று எனக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் இரயிலில் வந்த அனைத்துப் பயணிகளும் இரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்று விட்டபடியால் நான் மட்டும் தனியாக இருந்தேன்.
எந்தச் சவாரியும் கிடைக்காத சில குதிரை வண்டிக்காரர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை அழைத்த நான், முகாமில் ஏதேனும் தங்கும் விடுதி இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். ஒரு பார்சி தங்கும் விடுதி இருப்பதாகவும், அங்கு பணம் கொடுத்தால் தங்கவும், சாப்பிடவும் இடம் தருவார்கள் என்றும் அவர் கூறினார். பார்சிகள் நடத்தும் விடுதி அது என்பதை அறிந்தவுடன் எனக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஜொராஸ்திய மதத்தைப் பின்பற்றுபவர்கள் பார்சிகள். அவர்கள் மதம் தீண்டாமையைப் பாராட்டுவதில்லை என்பதால் என்னை அவர்கள் தீண்டத்தகாதவனாக நடத்துவார்கள் என்ற அச்சம் தேவையில்லை என்று கருதினேன். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த உள்ளத்துடனும் அச்சமற்ற மனத்துடனும் எனது சுமைகளைக் குதிரை வண்டியில் வைத்துவிட்டு பார்சி விடுதிக்குச் செல்லுமாறு கூறினேன்.
அந்த உணவு விடுதி இரண்டு மாடிக் கட்டடமாக இருந்தது. தரைத் தளத்தில் பார்சி முதியவர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர். அவர் அதன் பராமரிப்பாளர்; அத்துடன் அங்கு தங்கும் பயணிகளுக்கு உணவும் அளித்து வந்தார். வண்டி விடுதியை அடைந்ததும் அவர் என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். நான் மேலே சென்றபோது வண்டிக்காரர் எனது சுமைகளை எடுத்து வந்தார். நான் அவருக்குக் கூலி கொடுத்ததும் அவர் சென்றுவிட்டார். தங்குவதற்கு இடமில்லையே என்ற பிரச்சினை தீர்ந்து போனதால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். சுதந்திரமாக இருக்கவேண்டும் என்பதற்காக நான் என் உடைகளைக் களைந்தேன். இதற்கிடையில் விடுதிப் பராமரிப்பாளர் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். அரைகுறையாக உடை களைந்திருந்த நிலையில் என்னைக் கண்ட அவர், நான் சத்ராவும் கஸ்தியும் அணிந்திருக்கவில்லை என்பதைக் கண்டார். பார்சியாக இருக்கும் அனைவரும் இந்த இரண்டையும் அணிந்திருப்பார்கள். நான் யார் என்று கடுமையான தொனியில் அவர் என்னைக் கேட்டார்.
பார்சி மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பார்சிகளால் நடத்தப்படும் விடுதி அது என்று எனக்குத் தெரியாது. நான் ஓர் இந்து என்று அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த விடுதியில் நீ தங்க முடியாது என்று கூறினார். அவரது பேச்சால் முற்றிலுமாக அதிர்ந்து போன எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. எங்கே செல்வது என்ற கேள்வி திரும்பவும் வந்துவிட்டது. சமாளித்துக் கொண்டு, நான் ஓர் இந்துவாக இருந்தாலும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால், அங்கே தங்குவதற்கு எனக்கும் எந்த வித ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினேன்.
“எவ்வாறு நீ தங்கமுடியும்? இந்த விடுதியில் தங்கும் அனைவரைப் பற்றியும் நான் பதிவேட்டில் பதிந்து வரவேண்டும்’’ என்று கூறினார். அவரது நிலையையும் நான் அறிந்து கொண்டேன். பதிவேட்டில் பதிவதற்காக வேண்டுமானால் நான் ஒரு பார்சி பெயரை உபயோகப்படுத்திக் கொள்கிறேன் என்று நான் கூறினேன். “எனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறபோது நீ ஏன் ஆட்சேபிக்கிறாய். இதனால் நீ எதையும் இழக்கப்போவதில்லை, மாறாக நான் இங்கே தங்குவதால் உனக்கு ஏதோ சிறிதளவு பணமும் கிடைக்குமே” என்று நான் கூறினேன். நான் கூறியதை ஏற்றுக்கொண்டு அவர் சம்மதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. நீண்ட காலமாக எந்தப் பயணியும் அங்கு வந்து தங்கவில்லை போலும்; சிறிதளவு பணம் சம்பாதிக்க வந்த ஒரு வாய்ப்பையும் இழக்கவும் அவர் தயாராக இல்லை என்று தோன்றியது. தங்குவதற்கும், உணவு அருந்துவதற்கும் நாள் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கே நான் தங்க அவர் ஒப்புக் கொண்டார்; என்னை ஒரு பார்சி என்று அவரது பதிவேட்டில் குறித்துக் கொண்டார். அவர் கீழே இறங்கிச் சென்றதும் நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். பிரச்சினை தீர்ந்தது என்று நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
அந்தோ! இந்த மகிழ்ச்சி எவ்வளவு சீக்கிரத்தில் அழியப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்து இருக்கவில்லை. இந்த விடுதியில் நான் தங்கியிருந்ததற்கு ஏற்பட்ட சோகமான முடிவைப் பற்றி விவரிக்கும் முன்பாக, அங்கு நான் வாழ்ந்த குறுகிய காலத்தில் நான் எனது நேரத்தை எவ்வாறு கழித்தேன் என்பதை இங்கே விவரிக்கத்தான் வேண்டும்.
முதல் மாடியில் இருந்த விடுதியில் ஒரு சிறிய படுக்கை அறை இருந்தது. அதனையொட்டி தண்ணீர்க் குழாயுடன் கூடிய ஒரு சிறு குளியலறை இருந்தது. எஞ்சியிருந்தது எல்லாம் ஒரு பெரிய கூடம்தான். நான் அங்கே தங்கியிருந்தபோது, அந்தப் பெரிய கூடம் முழுவதும் பலகைகள், பெஞ்சுகள், உடைந்த நாற்காலிகள் போன்ற அனைத்து வகையான குப்பைக் கூளங்களால் நிரம்பி இருந்தது. அவைகளுக்கு இடையே நான் ஒருவன் மட்டும் தனி ஆளாக வாழ்ந்து வந்தேன். காலையில் விடுதிக் காப்பாளர் தேநீருடன் மாடிக்கு வருவார். எனது காலைச் சிற்றுண்டி அல்லது உணவுடன் 9:30 மணிக்கு மறுபடியும் வருவார். இரவு எனக்காக உணவுடன் 8:30 மணிக்கு மூன்றாம் முறையாக அவர் வருவார். அவர் தவிர்க்க இயலாத நேரங்களில் மட்டுமே மேலே வருவார்; அப்படி வந்தாலும் என்னுடன் அவர் பேசுவதற்காகத் தயங்கியதேயில்லை. எப்படியோ நாள்கள் கழிந்தன.
பரோடா மன்னரின் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் நன்னடத்தைக் காலப் பணியாளராக நான் நியமிக்கப்பட்டேன். அலுவலகத்துக்குச் செல்ல காலை 10:00 மணி அளவில் விடுதியை விட்டுப் புறப்படுவேன்; அலுவலகம் முடிந்த பின் என்னால் வெளியில் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ, கழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் என் நண்பர்களுடன் கழித்துவிட்டு இரவு 8:00 மணி அளவில்தான் விடுதிக்குத் திரும்புவேன். இரவைக் கழிக்க விடுதிக்குத் திரும்ப வேண்டுமே என்ற எண்ணமே என்னை மிகவும் அச்சுறுத்தியது. ஓய்வெடுப்பதற்கு வானத்தின் கீழ் எனக்கு வேறு போக்கிடம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் அந்த விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
விடுதியின் முதல் மாடியில் இருந்த பெரிய கூடத்தில் பேச்சுத் துணைக்கும் ஒரு மனிதரும் கிடையாது. நான் தனிமையில் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் கூடம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும். இருளைப் போக்க மின் விளக்கோ, எண்ணெய் விளக்கோ கூட இருக்கவில்லை. எனது உபயோகத்துக்காக விடுதிக் காப்பாளர் ஒரு சிறிய அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு வருவார். அதன் வெளிச்சம் சில அங்குல தூரத்துக்கு மேல் விழாது. ஏதோ ஒரு நிலவறையில் இருப்பதைப் போல் உணர்ந்த நான், பேசுவதற்கு மனிதர் எவராவது கிடைக்கமாட்டாரா என்று ஏங்கி இருந்தேன்.
ஆனால், எவரும் கிடைக்கவில்லை. மனிதர் நட்பு கிடைக்காமல் போன நிலையில், நான் புத்தகங்களை நாடினேன்; எப்போது பார்த்தாலும் நான் படித்துக் கொண்டே இருப்பேன். இவ்வாறு படிப்பதில் மூழ்கி இருந்த நான் எனது தனிமையை மறந்தேன்.
ஆனால், அக்கூடத்தைத் தங்கள் வாழ்விடமாகக் கொண்ட வவ்வால்கள் பறப்பதும், கீச்சிடுவதுமான ஓசைகள் எனது கவனத்தைத் திசைதிருப்பி, நான் எதை மறக்க நினைத்தேனோ, விந்தையானதொரு இடத்தில் விந்தை நிறைந்த ஒரு சூழ்நிலையில் நான் இருப்பதை நினைவுபடுத்தி என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. அது நிலவறை போன்றிருந்தாலும், அது தங்குவதற்கான ஓர் இடம் என்பதால், எந்த இடமும் இல்லாத நிலையில் அந்த இடமாவது இருக்கிறதே என்ற எண்ணத்தால் என் வருத்தத்தையும், கோபத்தையும் நான் அடக்கிக் கொண்டேன்.
நான் பரோடா வரும்போது பம்பாயில் விட்டு விட்டு வந்த எனது எஞ்சிய பொருள்களை எடுத்துக் கொண்டு வந்த என் அக்கா மகன் மனதை வருத்தும் என் நிலையைக் கண்டு பெருங் குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டான். அவனை நான் விரைவில் திருப்பி அனுப்ப வேண்டியதாகிவிட்டது. இந்த நிலையில் அந்தப் பார்சி விடுதியில் ஒரு பார்சி போல என்னைக் காட்டிக் கொண்டு நான் வாழ்ந்து வந்தேன். இவ்வாறு பார்சி போல காட்டிக் கொண்டு நீண்ட நாள்கள் அங்கே தங்கியிருக்க முடியாது என்பதையும், என்றாவது ஒரு நாள் நான் பார்சி இல்லை என்பது தெரியப் போகிறது என்பதையும் நான் அறிந்தே இருந்தேன்.
அதனால் அரசு வீடு ஒன்றைப் பெற நான் முயன்று கொண்டிருந்தேன். ஆனால், பிரதம மந்திரியோ என் கோரிக்கையை நான் நினைத்தது போல் அவசரமானது என்று கருதவில்லை. எனது விண்ணப்பம் ஓர் அதிகாரியிடமிருந்து மற்றொரு அதிகாரிக்குச் சென்று கொண்டிருந்தது; எனக்கு இறுதியாகப் பதில் கிடைப்பதற்கு முன் விடுதியை விட்டு நான் வெளியேற வேண்டிய கடுமையான நெருக்கடி எழுந்தது.
நான் விடுதிக்கு வந்து தங்கத் தொடங்கிய 11ஆவது நாள் அன்று காலை உணவை முடித்துக் கொண்டு, உடை உடுத்திக் கொண்டு அலுவலகத்துக்குச் செல்ல எனது அறையை விட்டு வெளியே வந்தேன். நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களைத் திரும்பக் கொடுப்பதற்காக அவற்றை நான் கையில் எடுத்துக் கொண்டிருந்தபோது, பெரும் எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மாடிப்படிகளில் ஏறி வரும் ஓசை கேட்டது. தங்குவதற்காக வந்துள்ள சுற்றுலாப் பயணிகளாக அவர்கள் இருப்பார்கள் எனக் கருதிய நான் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வெளியே எட்டிப் பார்த்தேன். கைகளில் தடிகளுடன், கண்களில் கோபப் பார்வையுடன் உயரமான தடித்த பத்துப் பன்னிரண்டு பார்சிகள் என் அறையை நோக்கி வருவதைக் கண்டேன்.
அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்லர் என்பதை நான் அறிந்துகொள்ளத் துவங்கியதும், அவர்கள் அதற்கான ஆதாரத்தை அளித்தனர். என் அறை முன் வரிசையாக நின்று கொண்ட அவர்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளாகத் தொடுத்தனர். “நீ யார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்” என்று கத்தினார்கள். நான் அமைதியாக நின்றேன். என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை. என் போலித் தனத்தை என்னால் தொடர முடியவில்லை. உண்மையிலே நான் செய்தது ஒரு மோசடிதான்; என் மோசடி கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. நான் ஒரு பார்சிதான் என்று கூறி அந்த விளையாட்டைத் தொடர்ந்திருந்தால், கோபம் கொண்டிருந்த, வெறி பிடித்திருந்த அந்தப் பார்சிக் கூட்டம் என்னைத் தாக்கி சாகடித்திருப்பார்கள் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது.
எனது அடக்கமும், அமைதியும் இந்த அழிவைத் தவிர்த்தது. “எப்போது காலி செய்யப்போகிறாய்?” என்று அவர்களில் ஒருவர் கேட்டார். அப்போது எனது தங்குமிடத்தை எனது உயிரை விட மேலானதாக நான் மதித்தேன். அக்கேள்வியில் பொதிந்திருந்த கருத்து கடுமையான ஒன்று. அதனால் நான் எனது மவுனத்தைக் கலைத்து, இன்னும் ஒரு வாரம் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்குள் வீடு கேட்டு நான் அளித்த விண்ணப்பத்தின் மீது சாதகமான முடிவு ஏற்பட்டு விடும் என்று நான் கருதினேன்.
ஆனால், நான் கூறுவதையெல்லாம் கேட்கும் மனநிலையில் அந்தப் பார்சிகள் இருக்கவில்லை. அவர்கள் எனக்குக் கெடு நிர்ணயித்தார்கள். “மாலையில் விடுதியில் உன்னைப் பார்க்கக்கூடாது. உன் பொருள்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிடு; இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதிர்ச்சியும் அச்சமும் கொண்ட நான் பெரும் மனச்சோர்வும் அடைந்தேன். அனைத்தையும் சபித்த நான் ஏமாற்றத்துடன் அழுதேன். எனது தங்குமிடம் என்றும், எனது மதிப்பு மிகுந்த உடைமை, எனக்கு மறுக்கப்பட்டது. அது சிறைக் கைதியின் அறையை விட எந்த விதத்திலும் மேலானதல்ல; என்றாலும் அது எனக்கு மதிப்பு மிகுந்ததாகவே இருந்தது.
அந்தப் பார்சிகள் சென்ற பிறகு இதிலிருந்து மீள ஒரு வழியைக் கண்டுபிடிப்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டு சிறிது நேரம் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். விரைவில் அரசு வீடு ஒன்று கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது; அவ்வாறு கிடைத்துவிட்டால் என் தொல்லைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அதனால் இப்போது எனக்கு உள்ள பிரச்சினை ஒரு தற்காலிகப் பிரச்சினைதான்; அதனால் நண்பர்களிடம் செல்வது இதற்குத் தகுந்த தீர்வாக இருக்கும் என்று நான் நினைத்தேன். பரோடா சமஸ்தானத்தில் தீண்டத்தகாதவர்களாக உள்ள நண்பர்கள் எவரும் எனக்கு இல்லை.
ஆனால் மற்ற சமூகங்களைச் சேர்ந்த நண்பர்கள் எனக்கு இருந்தனர். அவர்களில் ஒருவர் இந்து; மற்றொருவர் இந்தியக் கிறிஸ்துவர். முதலில் இந்து நண்பர் வீட்டுக்கு நான் சென்று எனக்கு நேர்ந்ததை நான் கூறினேன். அருமையான மனிதரான அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார். எனது கதையைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார். என்றாலும் அவர் ஒன்று மட்டும் கூறினார். ‘’என் வீட்டிற்கு நீ வந்தால், என் வேலைக்காரர்கள் போய்விடுவார்கள்” என்று கூறினார். அவர் கோடிட்டுக் காட்டியதைப் புரிந்துகொண்ட நான் எனக்கு இடம் தருமாறு அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. இந்தியக் கிறிஸ்துவ நண்பரிடம் செல்ல நான் விரும்பவில்லை. தன்னுடன் வந்து தங்கும்படி அவர் என்னை முன்பொரு முறை அழைத்திருந்தார். ஆனாலும் பார்சி விடுதியிலேயே தங்கிக் கொள்வதாகக் கூறி அவர் அழைப்பை நான் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். இதன் காரணம் அவரது பழக்க வழக்கங்கள் என் மனம் ஏற்பவையாக இருக்கவில்லை என்பதுதான். இப்போது அங்கு செல்வது நானே கிண்டலை வேண்டிப் பெறுவது போன்றது. எனவே, நான் அலுவலகத்திற்குச் சென்றேன். ஆனால், ஒரு தங்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் இந்த வாய்ப்பை உண்மையில் என்னால் தவிர்த்துவிட முடியவில்லை. ஒரு நண்பரைக் கலந்து பேசிய பின், கிறிஸ்துவ நண்பரைச் சென்று சந்தித்து எனக்குத் தங்க இடம் தருவாரா என்று கேட்க முடிவு செய்தேன். நான் அவரை இவ்வாறு கேட்டவுடன், தன் மனைவி மறுநாள் பரோடா வருவதாகவும் இது பற்றித் தன் மனைவியிடம் தான் கலந்து பேச வேண்டும் என்றும் அவர் பதிலளித்தார். அது ஒரு தந்திரமான பதில் என்பதைப் பின்னர் நான் அறிந்து கொண்டேன்.
அவரும் அவரது மனைவியும் மதம் மாறுவதற்கு முன் பார்ப்பன ஜாதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், மதமாற்றத்திற்குப் பின் கணவர் சிந்தனையில் தாராள மனம் கொண்டவராக மாறிவிட்டபோதும், மனைவி பழைமையான வழிகளிலேயே இருந்தார் என்பதும், தன் வீட்டில் ஒரு தீண்டத்தகாதவர் தங்க மனைவி இடம் அளிக்கமாட்டார் என்பதும் தெரியவந்தது. இவ்வாறு எனது கடைசி நம்பிக்கையும் கருகிப் போனது. எனது கிறிஸ்துவ நண்பரின் வீட்டை விட்டுப் புறப்படும்போது மாலை 4:00 மணி ஆகிவிட்டது. எங்கே செல்வது என்பது ஒன்றே என் முன் இருந்த மாபெரும் கேள்வியாக இருந்தது. நான் பார்சி விடுதியை விட்டு வெளியேறியே ஆகவேண்டும்; ஆனால், நான் சென்று தங்குவதற்கு வேறு இடமில்லை. என் முன் இருந்த ஒரே வழி பம்பாய்க்குத் திரும்பிச் செல்வதுதான்.
பரோடாவில் இருந்து பம்பாய் செல்லும் ரயில் இரவு 9:00 மணிக்குப் புறப்படும். இடையில் நான் அய்ந்து மணி நேரத்தைக் கழிக்க வேண்டியிருந்தது. எங்கு அதைக் கழிப்பது? விடுதிக்குச் செல்லலாமா? நண்பனிடம் செல்லலாமா? மீண்டும் விடுதிக்குச் செல்லும் துணிவு எனக்கு ஏற்படவில்லை. என் நண்பனிடமும் செல்ல நான் விரும்பவில்லை. எனது நிலை பரிதாபப்படத் தக்கதாக இருந்தபோதும், என்னைக் கண்டு எவரும் பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை. காமதி கார்டன் என்று அழைக்கப்படும் பொதுப் பூங்காவில் அந்த அய்ந்து மணி நேரத்தையும் கழிக்க முடிவு செய்தேன்.
இது போன்ற நம்பிக்கை இழந்த நிலையில் குழந்தைகள் நினைப்பதைப் போன்று எனக்கு நேர்ந்ததைப் பற்றியும் என் தாய் தந்தையைப் பற்றியும் எண்ணிக் கொண்டு நான் பூங்காவில் உட்கார்ந்திருந்தேன். இரவு 8:00 மணிக்குப் பூங்காவை விட்டு வெளியே வந்த நான், ஒரு வண்டி வைத்துக் கொண்டு பார்சி விடுதிக்குச் சென்று என் உடைமைகளைக் கீழே எடுத்து வந்தேன். விடுதிக் காப்பாளர் வெளியே வந்தார்; ஆனால் அவரோ நானோ ஒருவரிடம் ஒருவர் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. இத்தகைய துன்பத்திற்கு நான் ஆளானதற்குத் தானும் ஏதோ ஒரு வழியில் காரணமாக இருந்துவிட்டோம் என்று அவர் உணர்ந்தார். அவருக்குச் சேரவேண்டிய பணத்தை நான் கொடுத்தேன். அவர் எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டார்; நானும் அமைதியாகவே விடைபெற்றுக் கொண்டேன்.
பெரும் நம்பிக்கையுடன் பரோடாவுக்குச் சென்ற நான், எனக்குக் கிடைத்த பெரிய பெரிய வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டேன். அது போர்க்காலம், இந்தியக் கல்விப் பணியில் பல வேலைகள் காலியாக இருந்தன. இலண்டனில் உள்ள செல்வாக்கு மிக்க பலரை நானறிவேன். ஆனால், எந்தவித உதவிக்காகவும் அவர்களை நான் நாடியதில்லை. என் கல்விக்குப் பணமளித்து உதவிய பரோடா மன்னருக்குச் சேவை செய்வதே எனது கடமை என்று நான் உணர்ந்திருந்தேன். ஆனால், 11 நாள்கள் மட்டுமே தங்கிவிட்டுப் பரோடாவை விட்டு நான் பம்பாய் திரும்பிச் செல்ல நேர்ந்தது.
தடிகளைக் கைகளில் ஏந்தி பத்துப் பன்னிரண்டு பார்சிகள் வரிசையாக என் முன் அச்சுறுத்தும் முறையில் நின்று கொண்டிருந்ததும், கருணையை வேண்டியும் அஞ்சிய பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்றிருந்ததுமான காட்சி 18 நீண்ட ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனத்திரையிலிருந்து மறையவே இல்லை. இன்று கூட அந்த நிகழ்ச்சியை என்னால் தெளிவாக நினைவுபடுத்திப் பார்க்க முடிகிறது; அதே நேரத்தில் அதை நினைவுபடுத்திப் பார்த்த எந்த ஒரு நேரத்திலும் என் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை. ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்பவன், ஒரு பார்சிக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்போதுதான் முதன்முதலாக நான் உணர்ந்து கொண்டேன்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 9 | 1990 மார்ச் 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 8 | 1990 மார்ச் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
தமிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது.
முதலில் தமிழர்களிடம் ஆண்டு என்றொரு காலக்கணிப்பு முறை இருந்ததா? எனப் பார்ப்போம். ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி ஆண்டு என வழங்கலாயிற்று. யாண்டு என்ற சொல்லானது தொல்காப்பியத்தின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். ‘யாண்டு’ என்ற சொல் இடம்பெற்ற சில பாடல்களைப் பார்ப்போம்.
இப் பாடலில் ‘யாண்டு கழிந்தன்ன’ என்பது ‘அக்காலம் பல யாண்டுகள் கடந்தாற் போன்ற’ என்ற பொருளில் இடம்பெறுகின்றது. இந்த ஆண்டு தற்போதைய நாட்காட்டி ஆண்டு போன்றது (365.2425 days) என நான் கூறவரவில்லை, ஏனெனில் தற்போதைய நாட்காட்டி ஆண்டு (Gregorian calendar) நடைமுறைக்கு வந்தது சில நூற்றாண்டுகளிற்கு முன்புதான்.
ஏதோ ஒரு வகையான காலப்பகுதியினை யாண்டு எனச் சங்க காலத் தமிழர்கள் அழைத்துள்ளனர் என்பதுதான் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழர்களிற்கு என ஒரு ஆண்டுக் கணிப்பு இருந்திருந்திருப்பின், அந்த ஆண்டிற்கு ஒரு தொடக்கமும் இருந்திருக்கும்.
யாண்டின் தொடக்கமாக தை மாதமே இருந்துள்ளது என்பதற்கு நேரடித் தரவுகள் சங்ககாலப் பாடல்களில் காணமுடியவில்லை என்றபோதும், அதற்கான இரு சான்றுகளை உய்த்துணரலாம்.
முதலாவதாக : தை மாதமளவிற்கு வேறு எந்தவொரு மாதமும் சங்ககாலப் பாடல்களில் சிறப்புப்படுத்தப்படவில்லை. (தை மாதச் சிறப்பின் 10% அளவிற்கு கூட வேறு எந்த மாதமும் சிறப்புப் பெறவில்லை). “தைத்திங்கள் தண்கயம் படியும்” (நற்றிணை 80) , “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” (குறுந்தொகை 196) என்பன உட்படப் பல சங்க காலப்பாடல்கள் தையினைச் சிறப்பித்துக் கூறுகின்றன.
இரண்டாவதாக : தை என்ற சொல்லிற்குச் சேர்த்தல் என்ற பொருளும் உண்டு (இரண்டு துணிகளை இணைத்து தைத்தல்). இங்கு ‘தை’ என்பது இரண்டு யாண்டுகளை (காலப்பகுதிகளை) இணைக்கின்றது. இவ்விரு காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டே தை மாதமே ஆண்டின் தொடக்கமாகவிருந்திருக்கும் என உய்த்தறியலாம்.
இதனைவிட, தை மாதமே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ள இயற்கைசார்ந்த இரு காரணங்களும் உண்டு. அவையாவன வருமாறு.
அறுவடைக்காலம் : செல்வ வளம்பொருந்திய காலமே புத்தாண்டாகக் கொண்டாடப் பொருத்தமாகவிருந்திருக்க முடியும். (இன்று பலர் உழவுத்தொழிலில் தங்கியிராத நிலையில், இதன் எச்சமாகவே பொங்கல் மிகைப்பணம் (Bonus) அரசால் வழங்கப்படுகின்றது. அன்று அந்த வாய்ப்பு இல்லாமையால், அறுவடைக்காலமே பொருத்தமானதாகும்).
காலநிலை: தை மாதத்தின் தண்மை (குளிர்மை) பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான காலப்பகுதியே யாண்டின் தொடக்கமாகக் கொள்ளப் பொருத்தமானதாகும். (மாறாக தாயகத்தில் சித்திரையில் கொளுத்தும் வெயிலே சுட்டெரிக்கும் காலப்பகுதி பொருத்தமானதாகக் காணப்படமாட்டாது.)
மேலும் எளிய மக்களின் வழக்காற்று மொழிகளிலும் கூட பழைய வரலாற்று எச்சங்களைக் காணலாம். அந்த வகையில், “தைபிறந்தால்வழிபிறக்கும்” , “தீய்ந்ததீபாவளிவந்தாலென்ன? காய்ந்தகார்த்திகைவந்தாலென்ன? மகாராசன்பொங்கல்வரவேண்டும்” என்பன போன்ற சொல்லடைகளும் தை மாதத்தின் முதன்மையினைக் காட்டுகின்றன.
அண்மையில் இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் சில நூற்றாண்டுகளிற்கு முன்னர்வரைத் தையே புத்தாண்டாகக் கருதப்பட்டதனைக் காட்டுகின்றது. வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை தை மாதமே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது என்கின்றார் (சான்று – தினத்தந்தி 03-01-2019).
சித்திரைமாதக்கணிப்பீடு :
சித்திரைப் புத்தாண்டு கணிப்பீட்டு முறையானது சாலிவாகணன் என்ற அரசனால் (சிலர் கனிஷ்கன் என்கின்றனர்) கி.பி 78-ம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூறப்படுகிறது. இவ்வாறு அக் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட போதும், மக்களிடம் அந்தப் புத்தாண்டு வரவேற்புப் பெற்றிருக்கவில்லை என்பதனையே மேற்கூறிய கல்வெட்டுச் சான்றும், நாம் ஏற்கனவே பார்த்த வழக்காற்றுச் சான்றுகளும் காட்டுகின்றன.
கடந்த இரு நூற்றாண்டுகளிலேயே மதப் புராணங்கள் மூலம் சித்திரை, புத்தாண்டாக எளிய மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கூறப்பட்ட புராணக்கதை வேடிக்கையானது. அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392-ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
ஒருமுறை நாரதமுனிவர், ‘கடவுள்’ கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “என்னுடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்” என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம். பின் ‘கடவுள்’ கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இதுதான் அந்தப் புராணக்கதை. இதில் மேலும் வேடிக்கை என்னவென்றால் இவ் அறுபது ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சூத்திர ஆண்டுகளாம் (ஆண்டுகளில் கூட வர்ணப் பிரிவினை).
வேறு சிலர் வியாழனை அடிப்படையாகக்கொண்ட 60 ஆண்டுக் கணிப்பீட்டு முறையினையே, பிற்காலத்தில் புராணம் ஆக்கிவிட்டார்கள் எனக் கூறுவதுமுண்டு. இராசியினை அடிப்படையாகக் கொண்டு சோதிட விளக்கம் கூறுவோரும் உண்டு.
இன்னொரு சாரார் தொல்காப்பியப் பாடல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆவணியினை புத்தாண்டாகக் கருதுவோருமுண்டு (இன்றும் சிங்க மாதமே (ஆவணி) மலையாளப் புத்தாண்டு : கொல்லமாண்டு). இத்தகைய குழப்பங்களைத் தீர்ப்பதற்காக 1935 -ம் ஆண்டில் தமிழறிஞர்கள் இணைந்து ஒரு தீர்வு கண்டிருந்தார்கள்.
குழப்பத்திற்கானஅறிஞர்களின்தீர்வு :
இக் குழப்பத்திற்கு தீர்வு காணும்பொருட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1935 -இல் மறைமலை அடிகளார் தலைமையில் பல அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என முடிவு செய்திருந்தனர். பின்பு அதேபோன்று திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகக் கொள்வது எனவும் அறிவித்திருந்தார்கள். இவ்வாறு முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் சிலர் வருமாறு.
தமிழ்க்கடல் மறைமலை அடிகள்,
தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார்,
தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை,
சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை,
நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார்,
நாவலர் சோமசுந்தர பாரதியார்,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்,
பேராசிரியர் சா. நமச்சிவாயனார்,
உ.வே. சாமிநாத ஐயர்
தமிழில் புலமையும் காதலும் கொண்ட இந்த தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டுத் தமிழ் ஒன்றையே முதன்மைப்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு ‘தை முதலே தமிழ்ப் புத்தாண்டு’ எனும் அறிவிப்பை வெளியிட்டனர்.
இங்கு டாக்டர் மு.வ கூறுகின்றார் “முற் காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்” ( சான்று – 1988 கோலாலம்பூர் பொங்கல் மலர், மு.வ. கட்டுரை மீள் பதிப்பு ). இறையன்பர்களான மறைமலை அடிகள், திரு. விக, உ.வே.சா போன்றோர் முதல் இறை மறுப்பாளரான பெரியார் ஈ.வெ.ரா வரை தமிழின் பெயரில் ஒன்றுபட்ட வேளை அது.
தமிழ்நாடு அரசு, இதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும், 2006-2011 இடைப்பட்ட கலைஞர் ஆட்சியிலேயே ‘தை முதல் தமிழ்ப் புத்தாண்டு’ ஆக அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழர்கள் தமது புத்தாண்டு மரபினைத் தொலைத்துவிட்டார்கள். அக் காலப்பகுதியில் ஈழத்திலும் தைமுதலே புத்தாண்டாக விடுதலைப்புலிகளால் தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. இங்கும் வரலாற்று இன்னலாக புலிகளின் அழிவிற்குப் பிறகு அந்த முயற்சி தொடரப்படவில்லை.
அறிவியல்பொருத்தப்பாடு :
அரசியல், தமிழறிஞர்களின் அறிவிப்பு என்பன எல்லாம் போகட்டும், அறிவியல்ரீதியாக எந்தப் புத்தாண்டு பொருத்தம் எனப் பார்ப்போமா!
முதலாவதாக திருவள்ளுவர் ஆண்டானது எண்களில் வருவதனால் சிறப்பானது, மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீடானது ஒரே பெயர்களில் 60 ஆண்டுகளிற்கொரு முறை மறுபடியும் மீள வருவதனால் குழப்பகரமானவை. எடுத்துக் காட்டாக சுக்கில ஆண்டு என்றால், எந்தச் சுக்கில ஆண்டைக் கருதுவீர்கள். மேலும் இப்பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லாதிருப்பதுடன் அவற்றின் கருத்துக்கள் ஆபாசமானவை அல்லது எதிர்மறையானவை. (சுக்கில-விந்து, துன்மதி-கெட்டபுத்தி).
இரண்டாவதாக ஒருவரின் (திருவள்ளுவரின்) வாழ்க்கைக் காலத்தினை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீடானது அனைத்துலக நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றது. மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீட்டிற்கான நாம் ஏற்கனவே பார்த்த புராணக்கதையினை மதநம்பிக்கையாளரில் பெரும்பாலானோரே நம்பமாட்டார்கள். அதேபோன்று சித்திரைக்கணிப்பீட்டிற்குச் சொல்லப்படும் இராசிக்கணிப்பும் அறிவியலிற்கு முரணான புவிமையக் கொள்கையினை அடிப்படையாகக்கொண்டது.
மூன்றாவதாக, தைக் கொண்டாட்டமானது சங்க இலக்கியங்களினடிப்படையில் வரலாற்றுத் தொன்மையானதாகக் காணப்பட, மறபுறத்தில் சித்திரை ஆண்டுப் பிறப்பானது இடைக்காலத்தில் வெளியாரின் திணிப்பால் உள்நுழைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.
நான்காவதாக தைத்திருநாளானது மதசார்பற்றதாகக் காணப்படுவதால் எல்லாத் தமிழரும் கொண்டாடக்கூடியதாகவிருக்க, மறுபுறத்தில் சித்திரையானது இந்துக்களிற்கு மட்டுமே அதுவும் பார்ப்பன ஆதிக்கத்தினை ஏற்றுக்கொண்டவரிற்கே பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.
இறுதியாக தைத்திருநாளானது தமிழரின் வாழ்க்கையுடன் இணைந்தும், உழவுத்தொழிலுடன் தொடர்பானதாகவும் காணப்படுகிறது.
முடிவுரை:
இதுகாறும் இலக்கியச் சான்றுகள், மக்களின் வழக்காற்றுச் சான்றுகள், கல்வெட்டுச் சான்று, அறிஞர்களின் முடிவு, அறிவியற் பொருத்தப்பாடு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தை முதலே தமிழ்ப் புத்தாண்டு எனப் பார்த்தோம்.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரிகேரியன் நாட்காட்டி (Gregorian calendar) சனவரி 15 ம் திகதியினைக் காட்டும், அந்த நாளே திருவள்ளுவர் ஆண்டு 2051 (2020+31) ஆகும் நாளன்றே (தை முதலே) தமிழ்ப் புத்தாண்டாகும்.
முடிவாக தைத்திருநாள், தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு (தை) என்பன அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஆயிரமாயிரமாண்டு தமிழர் மத சார்பற்ற பண்பாட்டு நிகழ்வுகளே. பாவேந்தரின் பாடலுடன் இக் கட்டுரையினை முடிப்பதே சிறப்பானதாக அமையும்.
இந்தியாவில் தீண்டாமை இருப்பதை அயல்நாட்டினர் அறிந்திருக்கக்கூடும். உண்மையில் அது எவ்வளவு அடக்குமுறை நிறைந்தது என்பதை அவர்கள், அடுத்த வீட்டில் இருந்தாலும், அறிந்து கொள்ள இயலவில்லை என்றே கூறலாம். அதிக எண்ணிக்கை கொண்ட இந்துக்கள் கொண்ட ஒரு கிராமத்தின் ஓர் ஓரத்தில் எவ்வாறு ஒரு சில தீண்டாதவர்கள் வசிக்க இயலும் என்பதையும், தினமும் கிராமத்தைச் சுற்றிச் சென்று, அங்கிருக்கும் அருவருக்கத்தக்க கழிவுகளை அகற்றியும், ஊர் மக்கள் பணிக்கும் சில்லறை வேலைகளைச் செய்து கொண்டும். இந்துக்களின் வீட்டு வாசல்களில் நின்று அவர்கள் இடும் உணவைப் பெற்றுக் கொண்டும். இந்து பனியாவின் கடையில் எட்டி நின்றுகொண்டே தங்களுக்குத் தேவையான பொருள்களையும், எண்ணெய்யையும் வாங்கிக் கொண்டும், அந்தக் கிராமத்தை ஒவ்வொரு வழியிலும் தங்களின் வீட்டைப் போல் நினைத்துக் கொண்டிருந்தாலும் கிராமத்தார் எவரையும் தொட்டுவிடாமலும், தன்னை யாரும் தொட்டு விடாமலும் நடந்துகொள்வதைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு எளிதானதல்ல.
உயர்ஜாதி இந்துக்களால் தீண்டத்தகாதவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறமுடியும் என்பதுதான் பிரச்சினை. இதைப்பற்றி ஒன்று பொதுவாக விவரித்துக் கூறலாம் அல்லது அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை தனிப்பட்டவர்களின் அனுபவங்களைக் கூறலாம். இந்த இரு வழிகளே நமது இந்த நோக்கத்தை நிறைவேற்ற இயன்ற சிறந்த வழிகளாகும். முந்தையதை விட, பிந்தைய வழியே மேலானது என நான் உணர்கிறேன். இந்த அனுபவங்களைத் தேர்ந்து எடுக்கையில், எனது சொந்த அனுபவங்களிலிருந்து சிலவற்றையும், மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து சிலவற்றையும் எடுத்துக் கொண்டேன். எனது சொந்த வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த அனுபவ நிகழ்ச்சிகளைக் கொண்டு இதனை நான் தொடங்குகிறேன்.
தண்ணீர் இன்றி உணவருந்த முடியாத இளம் வயதில் பட்ட கொடுமை!
பம்பாய் இராஜதானியின் இரத்னகிரி மாவட்டத்து, தபோலி தாலுகாவிலிருந்து வந்தது எங்கள் குடும்பம். கிழக்கு இந்தியக் கும்பெனியின் ஆட்சி இந்தியாவில் தொடங்கியபோதே எனது முன்னோர்கள் தங்களின் பாரம்பரியமான தொழிலை விட்டுவிட்டு கும்பெனியின் பட்டாளத்தில் பணியாற்ற வந்துவிட்டார்கள். என் தந்தையும் குடும்பப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, இராணுவப் பணியேற்றார். இராணுவத்தில் படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவர் ஓய்வு பெறும்போது சுபேதார் அந்தஸ்தில் இருந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் என் தந்தை, தபோலியில் தங்கலாம் என்ற எண்ணத்தோடு, எங்கள் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தபோலி வந்தார். ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக என் தந்தை தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். எங்கள் குடும்பம் தபோலியை விட்டுப் புறப்பட்டு சதாரா சென்று அங்கு 1904 வரை வாழ்ந்தது. எனக்கு நினைவிருந்து நான் பதிவு செய்யும் எனது முதல் அனுபவ நிகழ்வு நாங்கள் சதாராவில் இருந்தபோது 1901இல் ஏற்பட்டது.
அப்போது என் தாயார் உயிருடன் இல்லை; இறந்து போய் விட்டார். சதாரா மாவட்டம் கடாவ் தாலுகாவில் உள்ள கோரேகான் என்ற இடத்தில் அரசுப் பணியில் காசாளராகப் பணியாற்ற என் தந்தை சென்றுவிட்டார். பஞ்சத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருந்த நிலையில், பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு வேலை தரும் நோக்கத்தில் ஓர் ஏரியைத் தூர் வாரும் பணியை அங்கு பம்பாய் அரசு துவங்கி இருந்தது. எங்கள் தந்தை கோரேகான் சென்றபோது, என்னையும், என் அண்ணனையும், இறந்துபோன எனது அக்காவின் இரண்டு மகன்களையும் தனியாக, என் அத்தை மற்றும் அக்கம் பக்கத்து மக்களின் பொறுப்பில் எங்களை விட்டு விட்டுச் சென்றார். நான் அறிந்த மனிதர்களில் என் அத்தை மிகவும் அன்பானவர் என்றாலும், எங்களுக்கு அவரால் எந்த உதவியும் இல்லை. மற்றவர்களைப் போலன்றி மிகவும் சிறிய உருவம் கொண்டவராக இருந்த என் அத்தைக்கு, அவரது கால்களிலும் ஏதோ ஒரு வகையான ஊனம் இருந்தது; மற்றவர்களின் உதவி இன்றி அவரால் இங்கும் அங்கும் நகர்ந்து செல்லவும் முடியாது. அநேகமாக அவரை யாராவது தூக்கிக் கொண்டுதான் செல்லவேண்டும்.
எனக்குச் சகோதரிகள் இருந்தனர் என்றாலும், அவர்களுக்குத் திருமணமாகி அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வெகு தொலைவில் வாழ்ந்து வந்தார்கள். எங்கள் அத்தையின் உதவியும் இன்றி சமைப்பது என்பதே எங்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. நாங்கள் நால்வரும் பள்ளிக்கும் சென்று கொண்டும், வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டும் இருக்க வேண்டிய நிலையே நிலவியது. எங்களால் ரொட்டி சுடமுடியாது என்பதால் புலவு சோற்றை மட்டுமே நாங்கள் உண்டு வாழ்ந்தோம். அரிசியையும், கறியையும் சேர்த்து வேக வைத்து புலவு தயாரிப்பது எங்களுக்கு எளிதாக இருந்தது.
அவர் காசாளராக இருந்ததால், எங்களைக் காண அடிக்கடி சதாராவுக்கு வர எங்கள் தந்தையால் இயலவில்லை. அதனால் கோடை விடுமுறைக்கு கோரேகான் வந்து அவருடன் தங்கியிருக்கும்படி கேட்டு அவர் எங்களுக்குக் கடிதம் எழுதினார். எங்கள் வாழ்நாளில் அதுவரை நாங்கள் ரயிலையே பார்த்தது இல்லை என்பதால், அவரது அழைப்பு எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
நாங்கள் புறப்பட்டுச் செல்வதற்காக பலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இங்கிலாந்து நாட்டுத் துணியில் புதிய சட்டைகள் தைக்கப்பட்டன; அழகான, அலங்காரத் தொப்பிகள் வாங்கப்பட்டன; புதிய காலணிகள், பட்டுக் கரை போட்ட வேட்டிகள் அனைத்தும் எங்கள் பயணத்துக்காக வாங்கப்பட்டன. எவ்வாறு நாங்கள் பயணம் செய்து வரவேண்டும் என்பதைப் பற்றி விரிவாக எங்கள் தந்தை தனது கடிதத்தில் எழுதியிருந்தார். அத்துடன் எப்போது நாங்கள் வருகிறோம் என்பதை முன்கூட்டியே கடிதம் மூலம் தெரிவித்தால், தான் நேரில் ரயிலடிக்கு வந்தோ அல்லது தனது சேவகரை அனுப்பியோ கோர்கானுக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த ஏற்பாட்டின் படி நானும், என் அண்ணனும், என் அக்கா மகன்களும் சதாராவை விட்டுப் புறப்பட்டோம். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என் அத்தையைப் பார்த்துக் கொள்வதாக வாக்களித்ததால், அத்தையை வீட்டிலேயே விட்டுவிட்டுப் புறப்பட்டோம். ரயில்வே நிலையம் எங்கள் இடத்திலிருந்து 10 மைல் தொலைவில் இருந்தபடியால், ஓர் இரட்டைக் குதிரை வண்டியை ஏற்பாடு செய்துகொண்டு நாங்கள் ரயிலடிக்குச் சென்றோம். இந்த அருமையான வாய்ப்புக்காக நாங்கள் புதிய உடைகள் அணிந்து கொண்டிருந்தோம். நாங்கள் மகிழ்ச்சியுடன் வீட்டை விட்டுப் புறப்படும்போது, எங்களைப் பிரியும் துயரத்தில் எங்கள் அத்தை கீழே விழுந்து புரண்டு அழுதார்.
ரயில் நிலையத்தை நாங்கள் அடைந்தவுடன், என் அண்ணன் பயணச் சீட்டுகளை வாங்கியபின், எனக்கும், எங்கள் அக்கா மகன்களுக்கும் எங்கள் விருப்பம்போல் செலவு செய்ய கைச்செலவுக்காக தலா இரண்டு அணா கொடுத்தார். உடனே நாங்கள் ஆளுக்கு ஒரு புட்டி எலுமிச்சம் பழரசம் வாங்கி அருந்தியதன் மூலம் எங்கள் ஆடம்பரமான வாழ்க்கையைத் தொடங்கினோம். சிறிது நேரத்தில் ஊதிக் கொண்டு வந்த இரயிலில் உடனே நாங்கள் ஏறிக்கொண்டோம். இல்லாவிட்டால் எங்களை விட்டுவிட்டு இரயில் சென்றுவிடுமோ என்று நாங்கள் அஞ்சினோம். கோர்கானுக்கு மிக அருகில் உள்ள மாசூரில் நாங்கள் இறங்கவேண்டும் என்று எங்களுக்குக் கூறப்பட்டிருந்தது.
மாலை 5:00 மணிக்கு இரயில் மாசூரை வந்தடைந்தது. மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு நாங்கள் இரயிலை விட்டு இறங்கினோம். சில நிமிட நேரத்தில் அந்த நிலையத்தில் இரயிலை விட்டு இறங்கியவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். எங்கள் தந்தையோ அல்லது அவரது சேவகரோ வருவார் என்று எதிர்பார்த்து நாங்கள் நால்வரும் இரயிலடியிலேயே காத்திருந்தோம். வெகுநேரம் காத்திருந்தும் எவரும் வரவில்லை. ஒரு மணி நேரம் கழிந்தபின், ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எங்களிடம் விசாரித்தார். பயணச் சீட்டு இருக்கிறதா என்று அவர் எங்களைக் கேட்டார். நாங்கள் எங்கள் பயணச் சீட்டுகளை அவரிடம் காட்டினோம். நீங்கள் ஏன் தயங்கி நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று அவர் எங்களைக் கேட்டார். நாங்கள் கோரேகான் செல்ல வேண்டும் என்றும், எங்கள் தந்தையோ அல்லது அவரது சேவகரோ வருவார் என்று நாங்கள் காத்திருப்பதாகவும், கோரேகானுக்கு எப்படிப் போவது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும் அவரிடம் நாங்கள் கூறினோம்.
நாங்கள் அனைவரும் நல்ல உடை அணிந்து இருந்தோம். எங்களின் உடைகளிலிருந்தோ, எங்கள் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் பார்ப்பனர்கள் என்று எண்ணிக் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர் எங்கள் பரிதாப நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். இந்துக்களின் வழக்கம்போல, நீங்கள் எல்லாம் யார் என்று அவர் கேட்டார். ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறிவிட்டேன். (பம்பாய் இராஜதானியில் தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்ட சமூகத்தினரில் மஹரும் ஒன்று). அவர் முகம் திடீரென மாறிவிட்டது.
அதிசயிக்கத்தக்க வெறுப்பு உணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது. எனது பதிலைக் கேட்டவுடனே அவர் தனது அறைக்குச் சென்று விட்டார். நாங்கள் இருந்த இடத்திலேயே நின்றுகொண்டு இருந்தோம். பதினைந்து, இருபது நிமிட நேரம் சென்றது. சூரியன் மறையும் நேரம். எங்கள் தந்தையும் வரவில்லை; சேவகனையும் அனுப்பவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரும் எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டார். நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்; பயணத்தின் தொடக்கத்தில் நாங்கள் கொண்ட மகிழ்ச்சி எல்லாம் மறைந்து எங்களை மிகுந்த சோக உணர்வு ஆட்கொண்டது.
அரைமணி நேரம் கழித்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எங்களைக் கேட்டார். மாட்டு வண்டி வாடகைக்குக் கிடைத்தால், கோரேகான் வெகு தொலைவு இல்லை என்பதால், நாங்கள் உடனே புறப்படுவதாகக் கூறினோம். வாடகை சவாரிக்கு வரும் மாட்டு வண்டிகள் பல அங்கிருந்தன. ஆனால், நாங்கள் மஹர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் நான் கூறிய செய்தி அனைத்து மாட்டு வண்டிக்காரர்களுக்கும் தெரிந்துவிட்டபடியால், தீண்டத் தகாதவர்களைத் தங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று தங்களை இழிவுபடுத்திக் கொள்ளவோ, தங்களை அசுத்தப் படுத்திக்கொள்ளவோ அவர்களில் எவரும் விரும்பவில்லை. இரண்டு மடங்கு கட்டணம் தருவதாக நாங்கள் கூறியபோதும், பயன் ஏதுமில்லை. எங்களுக்காகப் பேசிக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது: எங்களைப் பார்த்து “உங்களால் வண்டி ஓட்ட முடியுமா?” என்று கேட்டார்.
எங்கள் இயலாமைக்கு ஒரு தீர்வு காண அவர் முயல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. “எங்களால் வண்டி ஓட்ட முடியும்” என்று நாங்கள் கூவினோம். இந்தப் பதிலைக் கேட்ட அவர் வண்டிக்காரர்களிடம் சென்று, “வண்டிக்கு இரண்டு பங்கு வாடகை கொடுத்துவிட்டு வண்டியை அவர்களே ஓட்டி வருவார்கள்; நீ வண்டியின் பின்னே நடந்து செல்லலாம்” என்று கூறினார். இந்த ஏற்பாடு தனக்கு வாடகை சம்பாதித்துக் கொடுப்பதுடன், தன்னைத் தீட்டடையச் செய்யாமல் காப்பாற்றும் என்று கருதிய ஒரு வண்டிக்காரன் இதற்கு ஒப்புக் கொண்டான்.
புறப்பட நாங்கள் தயாராகும்போது மாலை 6:30 மணி ஆகிவிட்டது. இருட்டுவதற்கு முன் நாங்கள் கோர்கானை அடைய முடியும் என்ற உறுதி மொழி எங்களுக்கு அளிக்கப்படும் வரை இரயில் நிலையத்தை விட்டுப் போகாமல் இருக்கவே நாங்கள் ஆவலாய் இருந்தோம். அதனால் பயண தூரம் மற்றும் கோர்கானை எந்த நேரத்திற்குள் சென்று அடையலாம் என்ற விவரங்களை மாட்டு வண்டிக்காரரிடம் நாங்கள் கேட்டோம். பயண நேரம் 3 மணிக்கு மேல் ஆகாது என்று அவர் எங்களுக்கு உறுதி அளித்தார். அவரது சொற்களை நம்பி, எங்களது சுமைகளை மாட்டு வண்டியில் வைத்துவிட்டு, ஸ்டேஷன் மாஸ்டருக்கு நன்றி கூறிவிட்டு, நாங்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டோம். எங்களில் ஒருவர் வண்டி மாட்டின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக்கொள்ள வண்டியை ஓட்டத்தொடங்கினோம். வண்டிக்காரர் வண்டிக்குப் பின்னால் நடந்து வந்தார்.
இரயில் நிலையத்துக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கங்கே தண்ணீர் சிறிதளவு குட்டை குட்டையாக நின்றுகொண்டு இருந்ததைத் தவிர ஆறு முற்றிலுமாக வறண்டிருந்தது. அதைத் தாண்டிச் சென்றால் தண்ணீர் கிடைக்காது என்பதால், அங்கே தங்கி எங்களது உணவை முடித்துக் கொண்டு செல்லலாம் என்று வண்டிக்காரர் கூறினார். நாங்களும் ஒப்புக் கொண்டோம். வண்டி வாடகையில் ஒரு பகுதியைத் தனக்குத் தரும்படி கேட்ட வண்டிக்காரர் கிராமத்துக்குச் சென்று தனது உணவை முடித்துக் கொண்டு வருவதாகக் கூறினார். என் அண்ணன் அவருக்குச் சிறிது பணம் கொடுத்தார்; விரைவில் வந்துவிடுவதாகக் கூறி வண்டிக்காரர் புறப்பட்டுச் சென்றார். எங்களுக்கும் பசி அதிகமாக இருந்ததால், உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது பற்றி நாங்கள் மகிழ்ந்தோம். வழியில் உண்பதற்காக நல்ல உணவைத் தயாரிக்கும்படி எங்கள் பக்கத்து வீட்டுக்காரப் பெண்களை எங்கள் அத்தை ஏற்பாடு செய்திருந்தார். உணவுக் கூடையைத் திறந்து நாங்கள் உண்ணத் தொடங்கினோம். கழுவுவதற்கு எங்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டதால், ஆற்றில் தண்ணீர் இருக்குமிடத்திற்கு எங்களில் ஒருவர் சென்றார்.
ஆனால் அங்கிருந்தது தண்ணீரே அல்ல. தண்ணீர் குடிக்க வந்த பசுக்கள், காளைகள் மற்றும் இதரக் கால்நடைகளின் மூத்திரம், சாணம் கலந்த சேறு போல் இருந்தது ஆற்று நீர். மனிதரின் பயன்பாட்டுக்கு உகந்ததாகவே அந்தத் தண்ணீர் இருக்கவில்லை. அந்த நீரின் நாற்றம் தாங்க முடியாததாக இருந்தபடியால் நாங்கள் அதைக் குடிக்கவில்லை. அதனால் வயிறு நிரம்பும் முன் சாப்பிடுவதை இடையில் நாங்கள் நிறுத்த வேண்டியதாயிற்று. வண்டிக்காரர் வருகைக்காக நாங்கள் காத்திருந்தபோதும், நீண்ட நேரம் கழிந்தபின்னும் அவர் வரவே இல்லை. அவர் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் அவர் வந்து சேர்ந்தபின் நாங்கள் புறப்பட்டோம். நான்கு, அய்ந்து மைல் தூரம் நாங்கள் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தோம்; வண்டிக்காரர் உடன் நடந்து வந்தார்.
பின்னர் அவர் திடீரென வண்டியில் குதித்து உட்கார்ந்துகொண்டு மூக்கணாங்கயிற்றை வாங்கிக் கொண்டு வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டார். வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்தால் அசுத்தமாகிவிடுவோம் என்ற பயத்தினால் வாடகைக்கு வண்டியை ஓட்டிவர மறுத்த அந்த மனிதன், தன் மதக் கோட்பாடுகளை எல்லாம் கை விட்டுவிட்டு வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்த அவரது நடவடிக்கை பற்றி நாங்கள் எண்ணி வியந்தோம். ஆனால், இது பற்றி அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்க எங்களுக்குத் துணிவு வரவில்லை. எங்களது இலக்கான கோரேகானை எவ்வளவு விரைவாக அடைய முடியுமோ அவ்வளவு விரைவாக அடைவதிலேயே நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம். சிறிது நேரம் வண்டி செல்வதையே நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் விரைவில் எங்களைச் சுற்றி இருள் சூழ்ந்து கொண்டது. இருளைப் போக்கும் விளக்குகள் எதுவும் சாலையில் இல்லை. சாலையில் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடியிருந்தது. நாங்கள் தனிமையில் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்த இயன்ற ஓர் ஆணையோ, பெண்ணையோ அல்லது கால் நடையையோ கூட நாங்கள் சாலையில் எங்களைக் கடந்து செல்வதையோ எதிர் வருவதையோ பார்க்கவில்லை. எங்களைச் சூழ்ந்திருந்த தனிமை எங்களுக்கு அச்சத்தை அளித்தது. எங்களது ஆவல் அதிகமாக ஆக, ஆக நாங்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டோம். மாசூரிலிருந்து வெகு தூரம் 3 மணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் செய்துவிட்டோம். ஆனால் கோர்கான் வந்த அடையாளமே தெரியவில்லை.
எங்களுக்குள் ஒரு விந்தையான எண்ணம் எழுந்தது. வண்டிக்காரர் எங்களை ஏதோ தனியான இடத்துக்குக் கொண்டு சென்று எங்களைக் கொன்று விட சதித் திட்டம் தீட்டி இருப்பாரோ என்று நாங்கள் அய்யப்பட்டோம். நாங்கள் நிறைய தங்க நகைகள் போட்டிருந்தது எங்கள் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. கோரேகானுக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்றும், ஏன் கோரேகானை அடைய இவ்வளவு தாமதம் ஆகிறது என்றும் நாங்கள் அவரைக் கேட்டோம். கோரேகானுக்கு இன்னும் அதிக தூரமில்லை; விரைவில் நாம் அங்கு சென்றடைந்துவிடுவோம் என்றே அவர் சொல்லிக் கொண்டிருந்தார். இரவு 10:00 மணி ஆனபோதும் கோரேகான் வராததால் சிறுவர்களாகிய நாங்கள் அழத் தொடங்கியதுடன் வண்டிக்காரரைத் திட்டவும் தொடங்கிவிட்டோம்.
எங்களது அழுகையும், புலம்பலும் வெகு நேரம் நீடித்தது. வண்டிக்காரர் எந்தப் பதிலும் கூறவே இல்லை. திடீரென்று சிறிது தூரத்தில் விளக்கு ஒன்று எரிவதை நாங்கள் கண்டோம். “அந்த விளக்கைப் பார்த்தீர்களா? சுங்கச்சாவடி விளக்கு அது. இரவு நாம் அங்கே தங்குவோம்” என்று வண்டிக்காரர் கூறினார். எங்களுக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டதில் எங்கள் அழுகை நின்றது. அந்த விளக்கு, தொலைவில் இருப்பதாகவே தோன்றியது; அதை நாங்கள் விரைவில் அடைய முடியும் என்று தோன்றவில்லை. சுங்கச்சாவடி குடிசையை அடைய இரண்டு மணி நேரம் ஆனது. இந்த இடைவெளி எங்கள் ஆவலை அதிகரிக்கச் செய்ததால், நாங்கள் வண்டிக்காரரிடம், அந்த இடத்தை அடைய ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது, நாம் அதே சாலையில் சென்று கொண்டிருக்கிறோமா என்பது போன்ற பலவிதமான கேள்விகளையும் கேட்டுக் கொண்டே வந்தோம்.
இறுதியில் நடு இரவு நேரத்தில் வண்டி சுங்கச்சாவடி குடிசையை வந்தடைந்தது. அது ஒரு மலை அடிவாரத்தில் அமைந்திருந்தது; ஆனால், மலையின் அந்தப் பக்கத்தில் இருந்தது. நாங்கள் அங்கு சென்றடைந்தபோது, இரவு தங்குவதற்காக வந்திருந்த பல மாட்டு வண்டிகள் அங்கு இருந்ததை நாங்கள் கண்டோம். எங்களுக்குப் பசி அதிகமாக இருந்ததால், நாங்கள் உணவருந்த விரும்பினோம். ஆனால், மறுபடியும் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. எனவே, எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்று வண்டிக்காரரிடம் நாங்கள் கேட்டோம். சுங்கம் வசூலிப்பவர் ஓர் இந்து என்றும், நாங்கள் மஹர் என்ற உண்மையைக் கூறினால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது என்றும் வண்டிக்காரர் எங்களை எச்சரித்தார்.
எனவே, “நீங்கள் மகமதியர் என்று சொல்லிக் கொண்டு தண்ணீர் கிடைக்குமா என்று பாருங்கள்” என்று கூறினார். அதன்படி சுங்கம் வசூலிப்பவரிடம் நான் சென்று எங்களுக்கு சிறிது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். நீங்கள் யார் என்று அவர் கேட்டார். நாங்கள் மகமதியர்கள் என்று நான் அவரிடம் கூறினேன். எனக்கு உருது நன்றாகத் தெரியும் என்பதால், நான் அவரிடம் உருதில் பசினேன். எனவே, நான் உண்மையில் மகமதியன் என்று அவர் கருதுவார் என்று எண்ணினேன். ஆனால், என் தந்திரம் பலிக்கவில்லை. “உனக்காக யார் தண்ணீர் வைத்திருக்கிறார்கள்? மலைமேல் தண்ணீர் உள்ளது. வேண்டுமானால் நீயே போய் எடுத்துக் கொள். என்னிடம் தண்ணீர் எதுவும் இல்லை” என்று கறாராகக் கூறிவிட்டார். வண்டிக்குத் திரும்பி வந்த நான் என் அண்ணனிடம் செய்தியைக் கூறினேன். என் அண்ணன் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் படுத்து உறங்குங்கள் என்று மட்டுமே அவர் எங்களிடம் சொன்னார்.
மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு, வண்டி தரையில் சாய்த்து வைக்கப்பட்டது. வண்டிக்குள் இருந்த பலகை மேல் எங்கள் படுக்கைகளை விரித்துக் கொண்டு நாங்கள் படுத்துக் கொண்டோம். ஒரு பாதுகாப்பான இடத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்துவிட்டோம் என்பதால் நடந்ததைப் பற்றி நாங்கள் வருத்தப்படவில்லை. ஆனால், அண்மையில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி எங்களால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எங்களிடம் நிறைய உணவு இருந்தது; எங்களைப் பசியும் வாட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் உணவருந்தாமல் நாங்கள் உறங்கவேண்டி நேர்ந்தது. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே இதன் காரணம்; நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதே எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனதற்குக் காரணம்.
அதுதான் அன்றிரவு இறுதியாக எங்கள் மனதில் தோன்றிய சிந்தனையாகும். பாதுகாப்பான இடத்திற்கு நாம் வந்து சேர்ந்துவிட்டோம் என்று நான் சொன்னேன். என்றாலும் என் அண்ணன் அவ்வாறு கருதவில்லை என்று தெரிந்தது. நாம் நால்வரும் ஒரே நேரத்தில் உறங்குவது சரியல்ல என்றும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறிய அவர் ஒரு நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே உறங்கலாம் இரண்டுபேர் விழித்துக் கொண்டிருக்கலாம் என்று யோசனை சொன்னார். இவ்வாறு அந்த இரவை நாங்கள் அந்த மலை அடிவாரத்தில் கழித்தோம்.
விடியற்காலை 5:00 மணிக்கு எங்கள் வண்டிக்காரர் வந்து நாம் கோர்கானுக்குப் புறப்படலாம் என்று கூறினார். நாங்கள் ஒரேயடியாக மறுத்துவிட்டோம், காலை 8:00 மணிக்கு முன் நாங்கள் நகரமாட்டோம் என்று அவரிடம் கூறிவிட்டோம். எங்களை எந்த ஆபத்திலும் உட்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. வண்டிக்காரர் பதிலேதும் கூறவில்லை. எனவே, காலை 8:00 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் 11:00 மணிக்கு கோரேகானைச் சென்றடைந்தோம். எங்களைக் கண்ட எங்கள் தந்தை வியப்படைந்தார். நாங்கள் வரப் போவதைப் பற்றிய தகவல் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். அவருக்குக் கடிதம் எழுதிவிட்டுத்தான் வந்ததாக நாங்கள் அவரிடம் கூறினோம். எங்கள் தந்தையின் பணியாளரின் தவறு என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எங்களின் கடிதத்தை அந்தப் பணியாளர் எங்கள் தந்தையிடம் கொடுக்கத் தவறிவிட்டார்.
இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. அது நிகழ்ந்தபோது எனக்கு 9 வயதிருக்கும். ஆனால், அது என் மனதில் மறையாத ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பே நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், தீண்டத்தகாதவர்கள் சில அவமானங்களுக்கும், பாகுபாட்டுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அறிந்திருந்தேன். எடுத்துக்காட்டாக, என்னுடைய தர வரிசைப்படி எனது வகுப்பறையில் மற்ற மாணவர்களிடையே நான் உட்கார முடியாது. வகுப்பறையில் ஒரு தனியான கோணிப்பை மீதுதான் நான் உட்கார வேண்டும் என்றும், பள்ளியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட பணியாளர் நான் பயன்படுத்திய கோணித் துணியைத் தொடவும் மாட்டார் என்பதையும் நான் அறிவேன்.
ஒவ்வொரு நாள் மாலையும் நான் அந்தக் கோணித் துணியைப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டு, மறுநாள் காலை மறுபடியும் வீட்டிலிருந்து அதைப் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பள்ளியில் தீண்டத்தக்க பிரிவுப் பிள்ளைகள் தாகம் எடுக்கும்போது, தண்ணீர்க் குழாயிடம் சென்று, அதைத் திறந்து தண்ணீர் குடித்து, தாகத்தைத் தணித்துக் கொள்வதை நான் அறிவேன். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஆசிரியரின் அனுமதி மட்டுமே. ஆனால், எனது நிலைமையே வேறு. நான் அந்தத் தண்ணீர்க் குழாயைத் தொட முடியாது. தீண்டத்தக்க ஒருவர் குழாயைத் திறந்துவிட்டால் தவிர, எனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வழி இல்லை. என்னைப் பொறுத்தவரை ஆசிரியரின் அனுமதி மட்டும் போதாது. தண்ணீர்க் குழாயைத் திறந்துவிடப் பள்ளி ஊழியர் அங்கே இருக்க வேண்டும்; தண்ணீர் திறந்து விடுவதற்கு அந்தப் பணியாளர் ஒருவரைத்தான் பள்ளி ஆசிரியர் பயன்படுத்துவார். அந்தப் பணியாளர் இல்லையென்றால் நான் தண்ணீர் குடிக்காமலேயே போக வேண்டியதுதான். பணியாளர் இல்லை என்றால் எனக்குத் தண்ணீர் இல்லை என்றுதான் சுருக்கமாகக் கூறவேண்டும்.
வீட்டில் என் சகோதரிகள் துணிகளைத் துவைப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். சதாராவில் துணி வெளுப்பவர் இல்லாமல் இல்லை; அவருக்குக் கூலி கொடுக்க எங்களால் முடியாது என்பதுமில்லை. தீண்டத்தகாதவரின் துணிகளை எந்தத் துணி வெளுப்பவரும் வெளுக்கமாட்டார் என்பதால், எங்கள் துணிகளை என் சகோதரிகளே வெளுப்பார்கள். எங்கள் குடும்பத்து ஆண் பிள்ளைகளுக்கு முடிவெட்டுவது, முகச் சவரம் செய்வது போன்ற அனைத்துப் பணிகளையும் எங்கள் மூத்த சகோதரியே செய்வார்; எங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர் சிறந்த முடித்திருத்தக் கலைஞராகவே ஆகிவிட்டார்.
சதாராவில் முடிதிருத்துபவர்கள் இல்லாமல் இல்லை; அவருக்குக் கூலி கொடுக்க எங்களால் இயலாது என்பதுமில்லை. ஆனாலும் எந்த முடிதிருத்துபவரும் தீண்டத்தகாத ஒருவருக்கு சவரம் செய்ய ஒப்புக் கொள்ளமாட்டார் என்பதால்தான் இப்பணியை என் சகோதரி செய்து வந்தார். இவை அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால், கோரேகான் செல்லும்போது நேர்ந்த நிகழ்ச்சி இதற்கு முன் நான் எப்போதுமே அனுபவித்திராத பேரதிர்ச்சியை எனக்கு அளித்தது. தீண்டாமையைப் பற்றி என்னை அந்த நிகழ்ச்சி சிந்திக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன், தீண்டாமை என்பது பல தீண்டத் தகாதவர்களுக்கும், தீண்டத் தக்கவர்களுக்கும் சாதாரணமான விஷயமாக இருந்ததாகும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 6-7 | 1989 பிப்ரவரி 1-28, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
2021-இல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்புவரை தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக வாய்ச்சவடால் அடித்துவந்த தி.மு.க. அரசு, தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ‘தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நடைமுறைப்படுத்துவோம்’ என்று பல்டி அடித்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு திட்டங்களை மறைமுகமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் யு.டி.ஐ.எஸ்.இ. (UDISE – Unified District Information System for Education) என்ற ஒன்றிய அரசின் திட்டத்திற்காக பள்ளிக்கல்வித்துறை குறித்த தகவல்களை திரட்டும் பணியைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது தி.மு.க. அரசு. இதன்மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை குறித்த தகவல்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து அதன் மூலம் அரசுப் பள்ளிக் கட்டமைப்பையே ஒழித்துக்கட்டக்கூடிய இந்த தகவல் திரட்டலானது, முன்னர் தமிழ்நாடு அரசின் “எமிஸ்” திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு வந்தது. தற்போது அது ஓரங்கட்டப்பட்டு நேரடியாக ஒன்றிய அரசின் யு.டி.ஐ.எஸ்.இ. திட்டத்தின் கீழ் தகவல் திரட்டப்படுவது இன்னும் ஆபத்தானதாகும்.
ஏற்கெனவே, அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மாநில அளவில் அடையாள எண் கொடுக்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருக்கும் நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் (National ID) தேசிய அளவில் புதிய எண்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர்களையும் மாணவர்களையும் மோடி அரசுக்கு தாரைவார்ப்பதை ஒத்த இந்நடவடிக்கையின் மூலம் தி.மு.க. அரசு வலியுறுத்திவரும் மாநில உரிமை, கூட்டாட்சி போன்றவற்றையெல்லாம் அதுவே காலில் போட்டு மிதித்துள்ளது.
ஏற்கெனவே புதிதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசுகளிடம் இனி அனுமதிக் கோர வேண்டியதில்லை என மோடி அரசு அறிவித்திருக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளை பாசிச மோடி அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் விதமாகவே தி.மு.க. அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதன்மூலம், ஒரே நாடு ஒரே கல்வி என்ற பாசிச சதித்திட்டத்திற்கு துணைபோகிறது.
இந்துமதவெறிக் கலவரங்கள் ஒரு சில மதவெறியர்களின் தூண்டுதலால், மதவெறியினால் உந்தப்பட்டவர்களால் நடப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. இல்லை. அப்படி நடப்பதில்லை. அவ்வாறு உணர்ச்சி வேகத்தில் நடந்தால் பாதிப்புகள் கூடவோ குறைவோ இரண்டு தரப்புக்கும் நேருவதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் நடக்கும், இந்து மதவெறியர்களால் நடத்தப்படும் கலவரங்களில் அவ்வாறு நடப்பதில்லை.
ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளுடன் பொருத்தமான நபர்கள், முறையான வேலை பிரிவினைகள் என்று பிரித்தொதுக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட செயல்திட்டத்துடன் இலக்குகள் தீர்மானித்துக் கொண்டு நடத்தப்படுகின்றன.
ஆகையால்தான் ஒரு தரப்புக்கு மட்டுமே மொத்த சேதாரமும், எதிர்தரப்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருப்பதை அனைத்து கலவரங்களிலும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. மேலும் இப்போது நடக்கின்ற கலவரங்களில் அரசின் பாத்திரம் முக்கியமானதாக இருக்கிறது. அரசுகளே கலவரக்காரர்களுக்கு அரணாக இருப்பதுடன் அரசினாலேயே தூண்டிவிடப்படுவதாகவும், ஏற்பாடு செய்யப்படுவதாகவும் நடக்கிறது என்பதுதான் கவனத்திற்கும் கவலைக்கும் உரியதாகிறது.
இந்து மத வெறியைப் பொறுத்தவரை புருஷோத்தமன் எனப்படும் இராமன்தான் கலவரக் கடவுளாகவும் வன்முறையாளனாகவும் முன்னிறுத்தப்படுகிறான். சிவன், லட்சுமி ஆகியோரின் பேரால் கலவரங்கள் எதுவும் நடந்ததாக இல்லை, துர்க்கையின் கணக்கில் மட்டும் சில குற்ற வழக்குகள் தொடர்கின்றன. அடுத்ததாக கணேசன் எனப்படும் பிள்ளையார் பெயரில் கலவரங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் இராமரை ஒப்பிடும்போது அதுவெல்லாம் ஒன்றுமில்லை. அதிலும் கடந்த பத்தாண்டுகளில் “இராம நவமி” அன்று இராமனுக்கு இந்து மத வெறியர்கள் வழங்கும் பிறந்தநாள் பரிசே முஸ்லீம்களின் உயிர்களும் உயிரற்ற உடல்களும் தான் என்கிற நிலைமை வளர்ந்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்-இன் ஆன்மாவுக்கு நெருக்கமான கடவுள் இராமன்தான். ஆர்.எஸ்.எஸ் நிறுவனத் தலைவரான கேசவ் பலிராம் ஹெட்கேவார் 1925ல் செப்டம்பர் 27 இல் வெற்றிக்கான நாளென்று கருதப்படுகின்ற விஜயதசமி அன்று பூசை போட்டு அவ்வமைப்பைத் தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு 1926 இல் இராமன் பிறந்த நாளான “இராம நவமி” அன்று தான் அதற்கு ஆர்.எஸ்.எஸ், அதாவது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் என்று பெயர் சூட்டினார். ஆர். எஸ். எஸ்-இன் காவிக்கொடி இராம ராஜ்ஜியத்தின் கொடி என்று அவர்களே கூறிக்கொள்ளுகிறார்கள். அந்த காவி கொடி சிவாஜியால் பிரபலமடைந்திருக்கிறது.
வட மாநிலங்களில் இரண்டு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அதில் ஒன்று இராமநவமியில் முடிவடைகிறது. அந்த நாளை கலவரத்துக்கு உகந்த நாளாகக் கருதுகின்றனர். கட்டாயமாய் கலவரம் செய்கிறார்கள். இராமநவமி நாளை இந்துத்துவத்தின் பராக்கிரமத்தை வெளிக்காட்டும் நாளாகத் தெரிவு செய்து பெரும் கும்பலை சேர்த்து முஸ்லீம் குடியிருப்புகளின் வழியாக பேரணியாய்ச் செலுத்தி பல அட்டூழியங்களை செய்கின்றனர்.
இரண்டாவது நவராத்திரி தசராவில் முடிகிறது, அன்று ராவணனை கொளுத்துவது வெடி வெடித்து வான வேடிக்கைகள் நடத்துவது என்று இராவண வதம் என்கிற இராவண லீலா கொண்டாடுகிறார்கள். இவ்வாறு இராமனின் பெயரால் நடத்தப்படும் பேரணிகள், கொண்டாட்டங்கள் எல்லாமும் முஸ்லீம்களின் ரத்தத்தை போதுமான அளவுக்குக் குடித்திருக்கிறது.
இந்தியாவில் முதல் இராம நவமி ஊர்வலம் / கலவரம் நடந்தது 1871 இல் என்று சில குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. அப்போது பெரெய்லி என்னும் இடத்தில் முஸ்லீம்களின் மீது திட்டமிட்ட கலவரம் நடத்தப்பட்டது பதிவாகி இருக்கிறது.
1967 இல் நாக்பூரிலும், 1979 இல் ஜாம்ஷெட்பூரில் இராம நவமி அன்று பெரும் கலவரங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் பலத்தை வெளிப்படுத்துவது என்பதாக அதை கூறிக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ். இன்றோ சாரிசாரியாக வாகன அணிவகுப்புகள் இந்து மதவெறியூட்டும் அலங்கார வாகனங்கள் என்று அரிவாள்களும் கொடுவாள்களும் சுழற்றிக்கொண்டு நடத்தப்படும் பேரணிகள் இராமநவமிக்கான “ஷோபா யாத்திரை” என்றாகி இந்த வன்முறைக்கு இராமநவமி மத அங்கீகாரம் வழங்குகிறது. அதன் பிறகு அது தொடர் நிகழ்வாகிவிட்டது.
1980 களில் இருந்து கலவரத்தை ஏற்பாடு செய்து நடத்தவும் இந்து மதவெறியை தூண்டி வளர்க்கவும் என்று தனிச்சிறப்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு பொறுப்பு அளித்தது ஆர்.எஸ்.எஸ். மக்களை இந்து முஸ்லீமாக பிளவுபடுத்திப் பிரித்து விடுவதும் இந்து ஓட்டு வங்கியை உருவாக்குவதும் அதற்கு கலவரத்தை ஆயுதமாக, வழிமுறையாக பின்பற்றுவதும் அதன் இலட்சியமாகியது.
விஷ்வ ஹிந்து பரிஷத், தரம் ஷன்சாத் எனப்படும் எண்ணற்ற மாநாடுகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்தியது. “இராமஜென்ம பூமியை இராமனுக்கு மீட்டுக் கொடுப்போம்” என்பதை லட்சியமாக்கியது. ஒவ்வொரு பேரணியிலும் ஆயுதங்களை சுழற்றுவதும் தீப்பந்தங்களை ஏந்துவதும் வழிமுறையாக்கப்பட்டது. 1983 முதல் 1993 முடிய அந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து இராமன் புகழ் பாடப்பட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதற்கு எதிராக பம்பாய் குண்டு வெடிப்பும் அதற்கு எதிரான முஸ்லீம்களின் மீதான கொலை வெறி தாக்குதல்களும் நடத்தப்பட்டு கலவரங்களும் கொலைகளும் இந்தியாவின் புதிய இயல்பு நிலை ஆக்கப்பட்டது.
இப்பொழுது ஒவ்வொரு ஆண்டு இராமநவமியும் போலீசின் பாதுகாப்புடன் மக்கள் எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டிய நாளாகிவிட்டது. 2022 விவரங்களின்படி ஆறு மாநிலங்களில் அதாவது ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், கோவா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த நிலைமை இருந்தது. பின்னர் 2023-இல் மகாராஷ்டிரமும் கர்நாடகமும், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகியவையும் அவற்றுடன் சேர்ந்தன. இந்த ஆண்டு 2025-ல் இராமநவமி நாளான ஏப்ரல் 6 அன்று அம்மாநிலங்களின் பல பகுதிகளில் வெளிப்படையான பதற்றம் நிலவும்படி செய்தனர்.
இந்தியாவின் எட்டுக்கும் மேற்பட்ட அந்த எல்லா மாநிலங்களிலும் ஏப்ரல் 6 ம் தேதியை நோக்கி மார்ச் 30 முதலாகவே ‘இராம பக்தர்களின்‘ நடமாட்டம் எல்லா இடங்களிலும் அதிகரித்திருந்தது. அவர்கள் கலவரங்களுக்கான தயாரிப்பிலும் ஒத்திகையிலும் இருந்தார்கள். ஆயுதங்கள் வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் மக்களை பயமுறுத்துகின்றனர். மதவெறியூட்டும் முழக்கங்களை எழுப்புகின்றனர். இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று உரக்க கூவுகின்றனர். மதரசாக்கள் பள்ளிவாசல்கள் இலக்குகளாக கொண்டு பெட்ரோல் குண்டுகளைக் கொண்டு ஏறியூட்டினர்.
குஜராத்தில் “வதோதராவை எரிப்போம்“, “ரிப்பீட் 2002” போன்ற முழக்கங்களை எழுப்பினர். மகாராஷ்டிராவில் அவுரங்காபாத், மலாட், ஜல் காவுன் ஆகிய இடங்களில் இதே வகை கலவரங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் போலீஸ் பாதுகாப்புடன் தலைமையாக முன்னிறுத்தப்படுகின்றனர். பிகாரில் இராமநவமி யாத்திரையில் காவி கொடி ஊர்வலம் பிரணவ் குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடந்திருக்கிறது.
ஹைதராபாத்தில் டி.ராஜா சிங் எம்.எல்.ஏ தலைமையில் இந்து ராஷ்டிரத்தை அமைக்க உறுதிமொழி ஏற்றனர். “நீங்கள் ஏற்கெனவே பாதி நறுக்கப்பட்டவர்கள்; மிச்சத்தையும் நறுக்குவோம்” எனக்கூறி வன்முறை வெறியூட்டினார். முஸ்லீம்களுக்கு வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பேசினார்.
இவரே உத்தரப் பிரதேசத்தில் அவுரங்காபாதிலும் மகாராஷ்டிராவிலும் இதே போன்ற வெறியூட்டும் பேச்சுகளுடன் பொதுக் கூட்டங்களை நடத்தினார். மகாராஷ்டிரத்தில் கேபினட் அமைச்சர்களே பேரணிகளில் பங்கேற்றனர். போலீசும் முஸ்லீம் பகுதிகளில் ரைடு விட்டு பெண்களை பாலியல் ரீதியிலும் துன்புறுத்தியது. மதவெறி கூட்டம் இப்படி வீடு புகுந்து பெண்களை பாலியல் ரீதியில் சீண்டுவதெல்லாம் புதிதாக அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசம் கர்நாடகம் என எல்லா இடங்களிலும் இராமநவமி அன்று சிறிதும் பெரிதுமாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
இந்த ஆண்டு 2026 தேர்தலை முன்னிட்டு குறிப்பாக மேற்கு வங்காளத்தை இலக்கு வைத்து வேலை செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வங்காளத்தில் பத்து நாட்கள் பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தின் பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி இந்துக்கள் யாரும் வீட்டுக்குள் தங்காதீர். 1.5 கோடி இந்துக்களும் இராமநவமி அன்று தெருவுக்கு வர வேண்டும் நமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அறைகூவல் விட்டிருக்கிறார். மேற்கு வங்கத்தில் இராமநவமி அன்று பிரம்மாண்ட பேரணிகள் நடத்த பா.ஜ.க அரைகூவல் விட்டிருந்தது.
இராமநவமி அன்று 2000 ஊர்வலங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறிக் கொண்டது பா.ஜ.க தலைமை. 2017 இல் கொல்கத்தாவில் மட்டும் ஆறு பெரிய பேரணிகள், பிற 150 இடங்களில் பேரணிகள் நடந்தன. இந்த ஆண்டு 2000 பேரணிகள் அதில் 200 பேரணிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள், அலங்கார வடிவமைப்புகள் கொண்ட வாகனப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறிக் கொண்டது. மால்டா மற்றும் முர்ஷிதாபாத்தில் பேரணியில் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று மால்டா எம்.எல்.ஏ ஸ்ரீ ரூபா மித்ரா சவுத்ரி, மோடிக்கும் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இவ்வாறெல்லாம் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பிம்பம் தோற்றுவிக்கப்பட்டது. அரசும் இவற்றை கையாளும் வகையில் போலீஸ் துறையில் ஒன்பதாம் தேதி வரை போலீசாருக்கு விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து போலீசாரையும் பணிக்குக் கொண்டு வந்து ஊர்வலப் பாதை எங்கும் ’பாதுகாப்பு’ பலப்படுத்தப்பட்டிருந்தது. இப்படி பா.ஜ.க தலைவரின் வாய்ச்சவடாலுக்கே பாதுகாப்பு என்கிற பெயரில் போலீசு தான் முதலில் பதட்டத்தை உருவாக்குகியது. மக்களை கூடுதலாக பீதி அடையச் செய்வது போலீஸ் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன.
கடந்த ஆண்டு இராமநவமிக்கு மம்தா பானர்ஜி அரசு விடுமுறை அறிவித்தது இந்த ஆண்டு ஏப்ரல் ஆறு ஞாயிறு விடுமுறை நாளாக போய்விட்டது.
பா.ஜ.க சங்கப்பரிவார அமைப்புகள் 2026 தேர்தலையொட்டி திட்டமிட்டு கலவரத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்து ஓட்டு வங்கியை உருவாக்கி தமதாக்கிக் கொள்ள பா.ஜ.க இதே வழிமுறையைத்தான் எல்லா மாநிலங்களும் பின்பற்றி வருகிறது. பல இடங்களில் அது வெற்றியையும் பெற்று தருகிறது. மற்ற இடங்களில் ஆட்சியை பெற்றுத்தர வில்லை என்றாலும் கட்சி வளர்க்க பயன்பட்டிருக்கிறது.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி அரசு இந்து மதவெறி அமைப்புகளை ஒடுக்குவது என்றில்லாமல் தாமே இந்துக்களின் பாதுகாவலன் என்றும் தான் மட்டுமே தலைமை ஏற்க முடியும் என்று தனது தலைமையை நிலைநிறுத்திக் கொள்ளும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் மம்தா அரசு இந்துத்துவ வெறுப்பு அரசியலை கண்டும் காணாமல் நடந்து கொள்கிறது. எதிர்வினையாற்றுபவர்களை கைது செய்கிறது. அவர்கள் பதட்டத்தை அதிகப்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது. மதவாதத்தை விமர்சிக்கும் திரைப்படங்கள் சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் மேலாக ஏற்கனவே ஒரிசாவில் உள்ளதைப் போன்றதொரு பிரம்மாண்டமான ஜகன்னாதர் கோயிலை மேற்கு வங்கத்தின் டிக்கா நகரில் கட்டி முடித்திருக்கிறது. ஏப்ரல் 30 அட்சய திருதியை நாள் அன்று திறக்கப்பட உள்ளது. அயோத்தியில் இராமர் கோயில் திறப்பின் போது பிரதிஷ்டை பூஜை நடந்ததை போன்று ஒரு பெரிய பூஜையை ஏப்ரல் 29 அன்று நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இந்துத்துவத்தின் இரு வேறு வடிவங்களாக பா.ஜ.க-வும் திருணாமுல் காங்கிரஸ் செயல்படுமானால் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அதானி – அம்பானி பாசிசத்தை தேர்தல் அரசியலில் கூட ஒரு போதும் வெல்ல முடியாது. மேற்கு வங்காளத்தில் 2000 இடங்களில் பேரணி என்று சவடால் அடித்தவர்கள் உண்மையில் 70 இடங்களில் தான் பேரணிகள் நடத்தினர்.
மொத்தத்தில் சங்கப் பரிவார இந்துத்துவக் கும்பல் இராம நவமியை ஒரு கலவர நாளாக மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கின்றது என்பதை பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 5 | 1989 ஜனவரி 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
பாசிச பா.ஜ.க. கும்பலானது வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு போன்ற தேர்தல் முறைகளைப் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான கருவிகளாக மாற்றியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறையை அதன் அடுத்த இலக்கில் வைத்துள்ளது.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டம்; தென்மாநில ஆட்சியாளர்கள், கட்சியினரைக் கொண்டு நடத்தப்பட்ட “கூட்டு நடவடிக்கைக் குழு” கூட்டம்; தமிழ்நாட்டு எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை தொகுதி மறுவரையறை விவகாரத்தை இந்திய அளவில் விவாதப் பொருளாக்கியுள்ளது. நீண்ட காலத்திற்குப் பின்னர் எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிநிரல் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், இதனை மென்மேலும் தீவிரப்படுத்திவிடக் கூடாது என்ற பீதியில் ஆரம்பத்திலிருந்தே இவ்விவகாரத்தைத் தற்காப்பு நிலையிலிருந்தே அணுகி வருகிறது பா.ஜ.க. கும்பல்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தென்மாநில ஆட்சியாளர்கள், கட்சியினரைக் கொண்டு நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம்
தொகுதி மறுவரையறை: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?
தொகுதி மறுவரையறை என்பது குறிப்பிட்ட காலத்தில் மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மறுநிர்ணயம் செய்யும் நடவடிக்கையாகும்.
இந்நடவடிக்கையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்படும் “ஒரு வாக்கு ஒரு மதிப்பு” என்ற கருதுகோளின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதாவது, இந்தியா முழுவதுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தவரைச் சம எண்ணிக்கையிலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் (60 லட்சத்திற்குக் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களுக்கு இது பொருந்தாது); அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம எண்ணிக்கையிலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இவற்றின் மூலமே இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்கிற்கும் சமமான மதிப்பை வழங்க முடியும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. இதனை ஈடேற்றும் வகையிலேயே தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அந்தவகையில், ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பின்பும் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.
1952, 1963, 1973, 2002 ஆகிய ஆண்டுகளில் இதுவரை நான்குமுறை எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று முறையும் அதற்கு முன்பு கணக்கிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் எல்லைகள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டன. 1971-இல் கணக்கிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் 1973-இல் நிர்ணயிக்கப்பட்ட 543 மக்களவை தொகுதிகளே தற்போதுவரை நீடிக்கின்றன.
ஏனெனில், அச்சமயத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் தொகுதி மறுவரையறையால் அது பாதிக்கப்படக் கூடாது அல்லது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவரும் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்ற சிக்கல் எழுந்தது. இதன் காரணமாக, 1976-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அரசாங்கமானது 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு வரையிலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைத்தது.
இதே காரணத்தின் பேரில், 2002-ஆம் ஆண்டில் வாஜ்பாய் அரசாங்கமும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பு வரையில் மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைத்தது. இருப்பினும், 2002-இல் அமைக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் மூலம் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படாமல் அதன் எல்லைகள் மட்டும் மறுநிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகும் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சமநிலையை அடையவில்லை. 2023-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 1971-இல் 4.11 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள்தொகையானது 2023-இல் 7.68 கோடியாக அதிகரித்திருக்கிறது; ஆனால், 8.38 கோடியாக இருந்த உத்தரப்பிரதேசத்தின் மக்கள்தொகை 23.56 கோடியாக அதிகரித்திருக்கிறது. இவ்வாறு தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்கள், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கும் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இந்தி வளைய மாநிலங்களுக்கும் இடையில் மக்கள்தொகை வளர்ச்சியில் பாரிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்போது தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவதானது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களை வஞ்சிப்பதாகவே அமையும். சான்றாக, தற்போதைய 543 தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே நீடிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாடு எட்டு மக்களவை தொகுதிகளை இழக்கும்; தொகுதிகளின் எண்ணிக்கையை 848-ஆக உயர்த்தி மேற்கொள்ளப்பட்டால் தற்போதைய விகிதத்தின்படி தமிழ்நாட்டிற்குக் கிடைக்கப்பட வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.
ஆனால், மோடி அரசோ தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் தன்னை எதிர்க்கும் மாநிலங்களை வஞ்சித்து ஒடுக்குவதில் தீவிரமாக உள்ளது. 2023-ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, 543 பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவையில் 888 இருக்கைகளும், 250 பிரதிநிதிகளைக் கொண்ட மாநிலங்களவையில் 384 இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தது பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக திட்டத்தை அம்பலப்படுத்தியது.
ஏற்கெனவே, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான அளவுகோலில் 1971 மக்கள்தொகைக்குப் பதிலாக 2011 மக்கள்தொகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை வஞ்சித்துவரும் மோடி அரசானது, தொகுதி மறுவரையறையிலும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆயுதமாகப் பயன்படுத்தி தனது பாசிச சர்வாதிகாரத்திற்கு அடிபணியாத மாநிலங்களை ஒடுக்கப் பார்க்கிறது. இதன் காரணமாகவே, 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.
அசாமின் அனுபவம் உணர்த்துவதென்ன?
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மார்ச் 5 அன்று தமிழ்நாடு தி.மு.க அரசால் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையை 2056-ஆம் ஆண்டு வரை 30 ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்து சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 7.18 என்ற விகிதத்திலேயே தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட அடிப்படையில், தென்மாநில எம்.பி-க்களை கொண்ட “கூட்டு நடவடிக்கைக் குழு” (JAC)-விற்கான கூட்டம் மார்ச் 22 அன்று நடத்தப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தொகுதி மறுவரையறைக்கு முன்னர் அனைத்து மாநிலங்களிடமுள்ள கட்சிகள், ஆளும் அரசுகள், பிற அமைப்பினருடன் ஜனநாயகமாக விவாதிக்க வேண்டும்; 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையைத் தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு ஜனநாயக சக்திகளும் பத்திரிகையாளர்களும் கூட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறையை நடத்த வேண்டும் என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமலும், அல்லது எதிர்க்கட்சிகள் கோரும் விழுக்காட்டின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி தொகுதி மறுவரையறையை நடைமுறைப்படுத்தினாலும், அது பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமாகவே அமையும். இதற்கு பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ஜம்மு & காஷ்மீரிலும், அசாமிலும் மேற்கொள்ளப்பட்ட சட்டமன்றத் தொகுதி மறுவரையறையே சாட்சி.
ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட பின்னர், 2022-இல் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நடத்தப்பட்டு, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 83-லிருந்து 90-ஆக உயர்த்தப்பட்டது. அப்போது இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ஒரு தொகுதி மட்டுமே அதிகரிக்கப்பட்ட நிலையில், காஷ்மீரைக் காட்டிலும் குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட, இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஜம்முவிற்கு ஆறு தொகுதிகள் அதிகரிக்கப்பட்டன. 2024 செப்டம்பரில் நடத்தப்பட்ட ஜம்மு&காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் ஜம்முவில் புதியதாக இணைக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் ஐந்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2023-இல் அசாமில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது, 14 நாடாளுமன்ற மற்றும் 126 சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால், தொகுதிகளின் எல்லைகள் பா.ஜ.க. கும்பலுக்குச் சாதகமான வகையில் மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள 10 தொகுதிகள் உடைக்கப்பட்டு அவை இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன; பல தொகுதிகள் இந்துக்கள் பெரும்பான்மையாகவும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாகவும் இருக்கும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டன; இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகள் பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான தொகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன.
மேலும், எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பார்பேட்டாவில் ஆறு முதல் ஏழு தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றுவந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு அவற்றில் பெரும்பான்மை தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. இவ்வாறு மக்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்பையும் இந்துமுனைவாக்கத்தையும் தீவிரப்படுத்தும் வகையில், வாக்குவங்கியைக் காவிமயமாக்கி தொகுதி மறுவரையறை மேற்கொண்டிருப்பதன் மூலம் இனி அசாமில் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க-வால் எளிமையாக வெற்றிபெற முடியும் என்ற நிலைமையைப் பாசிச கும்பல் உருவாக்கியுள்ளது. அதாவது, தொகுதி மறுவரையறை என்பது பாசிச கும்பல் தனக்கான மக்கள் அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கேற்ப தொகுதிகளைச் செப்பனிடும் பணியே ஆகும்.
பாசிசமயமாகும்தொகுதிகள்
நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச கும்பலின் நோக்கமாகும்.
ஆகவே, தொகுதி மறுவரையறையால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பதைக் கடந்து தொகுதிகள் பாசிசமயப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே பா.ஜ.க. பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளால் வெற்றிபெற முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதி மறுவரையறையின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் அவற்றிடமிருந்து பறிக்கப்படும். இது இந்தியாவில் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பாசிச பா.ஜ.க. கும்பலின் கனவை நனவாக்குவதற்கான துலக்கமான நடவடிக்கையாகும்.
ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்தை பாசிஸ்டுகளின் செல்லப்பிராணியாக மாற்றிக்கொண்டு, பல்வேறு பாசிச சட்டத்திருத்தங்கள், தேர்தல் முறைகேடுகளை அமல்படுத்துவதன் மூலம், சொல்லிக்கொள்ளப்படுகின்ற ‘தேர்தல் ஜனநாயகத்தை’ ஒழித்துக்கட்டி பா.ஜ.க. மட்டுமே வெற்றிபெறும் வகையில் தேர்தலை முற்றிலுமாக பாசிசமயமாக்கி வருகிறது. இதன் உச்சக்கட்ட நடவடிக்கையாகவே ஒரே நாடு ஒரே தேர்தலையும் தொகுதிகள் மறுவரையறையையும் பா.ஜ.க. கும்பல் கையிலெடுத்துள்ளது. எனவே தொகுதி மறுவரையறை என்பது பாசிச கும்பலின் கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான அடிக்கட்டுமான நடவடிக்கையாகும்.
மேலும், பாசிச பா.ஜ.க. கும்பல் தொகுதி மறுவரையறை செய்வதானது தென்மாநிலங்களுக்குரிய பிரச்சினை மட்டுமல்ல. இது இந்தியா முழுவதுமுள்ள பலதரப்பட்ட மக்களின் குரல்வளையை நசுக்குகின்ற பாசிச நடவடிக்கையாகும்.
அதேபோல், வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புல்டோசர் ராஜ்ஜியம், மசூதிகள் அபகரிப்பு போன்றவற்றின் மூலம் இஸ்லாமிய மக்களின் பொருளாதாரத்தை சூறையாடிவருகிறது பா.ஜ.க. கும்பல். தற்போது, தொகுதி மறுவரையறையின் மூலம் இஸ்லாமிய தொகுதிகள் என்ற ஒன்றையே இல்லாமல் செய்து அதன்மூலம் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்துவது என்ற நடைமுறையை ஒழித்துக்கட்ட எத்தனிக்கிறது. இதன் மூலம், இஸ்லாமிய மக்களுக்கு மிச்ச மீதமிருக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் ஒழித்துக்கட்டி அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கிறது.
தற்போது, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கும் பா.ஜ.க. கும்பலானது பிற்காலத்தில் அவற்றையும் ஒழித்துக்கட்டி அம்மக்களையும் இந்துராஷ்டிரத்தின் இரண்டாந்தர குடிமக்களாக்கும். இந்த ஒடுக்குமுறையானது கிறித்தவ சிறுபான்மை மக்களுக்கும் பாசிச கும்பலுக்கு அடிபணியாத பிரிவினருக்கும் நடந்தேறும்.
அதேபோல், தொகுதி மறுவரையறையின் மூலம் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்படுவதென்பது நேரடியாக அம்மாநிலங்களில் வாழும் தேசிய இன மக்களின் குரல்வளையை ஒடுக்கும் செயலாகும்.
ஆனால், இதுகுறித்தெல்லாம் வாய்திறக்காத எதிர்க்கட்சிகள், தங்களுக்கு ஜனநாயகம் வழங்கியும் தாங்கள் பாதிக்கப்படாத வகையிலும் தொகுதி மறுவரையறையை நடத்த வேண்டுமென பா.ஜ.க-விடம் கோரிக்கை வைக்கின்றன. இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானமாக அமையக்கூடிய தொகுதி மறுவரையறையைப் பாசிச பா.ஜ.க. நடத்தக்கூடாது என்று அறைகூவி நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்குப் பதிலாக, அப்பட்டமாக பா.ஜ.க. கும்பலின் பாசிச சதித்திட்டத்திற்கு மக்களைப் பலியாக்குகிறார்கள்.
தேசிய இனங்களின் கூட்டாட்சிகுடியரசுக்காகப்போராடுவோம்!
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலரும் தற்போது பாசிச கும்பல் இதனை நடத்துவதில் உள்ள அபாயம் குறித்துப் பேசுவதுடன் நிறுத்திகொள்கின்றனர். ஆனால், இந்தியாவில் 1947-இல் அதிகாரமாற்றம் நடந்ததிலிருந்து இதுநாள் வரையிலும் நடத்தப்பட்ட தொகுதி மறுவரையறைகளும் அதன்மூலம் வழங்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தை மறுப்பதாகவே இருந்து வந்துள்ளது என்பதே உண்மை.
ஏனெனில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டமானது, மக்கள்தொகையை மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான ஒற்றை அளவுகோலாக நிர்ணயித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான ஒரு நாட்டில் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அளவுகோளாக மக்கள்தொகையை மட்டுமே தீர்மானிப்பதென்பது அப்பட்டமாகச் சிறிய தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தையும் அதன்மூலம் அந்த தேசிய இனங்களின் குரல்வளையை ஒடுக்கும் செயலாகும். அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநில மக்கள் இத்தகைய ஒடுக்குமுறையை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வருகின்றனர். அதனால்தான், இந்தியாவைத் தேசிய இனங்களின் சிறைச்சாலை என்கிறார்கள்.
இதுகுறித்து நாம் பேசுகையில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள “இந்தியா முழுவதுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தவரை சம எண்ணிக்கையிலான மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்” என்ற விதியிலிருந்து 60 லட்சத்திற்குக் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதைச் சிலர் சுட்டிக்காட்டலாம். ஆனால், இவையெல்லாம் அம்மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை மறைப்பதற்கும் அவர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கையாகும். மாறாக, அளவு ஏற்றத்தாழ்வின்றி அனைத்து தேசிய இனங்களும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம், மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லப்படுகின்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில் கூட அனைத்து மாநில மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடையாது. அதிலும் மக்கள்தொகை எண்ணிக்கையையே அளவுகோலாக நிர்ணயித்து பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களுக்கு தலா ஒரு சீட்டு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் எத்துணை ‘மேன்மை’யானது என்பதைப் பறைசாற்றுகிறது.
ஏனெனில், இந்தியா என்பது தேசிய இனங்களுக்கும் மாநிலங்களுக்கும் அதிகாரம் வழங்குகின்ற உண்மையான கூட்டாட்சி நாடல்ல. இந்தியா ஒரு அரை-கூட்டாட்சி நாடு என்பதே அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமாகும். பாசிச கும்பல் அதிகாரத்திற்கு வந்தப் பிறகு தேசிய இனங்களுக்கான பெயரளவிலான ஜனநாயக உரிமைகளையும் படிப்படியாகச் சிதைத்து வருகிறது. இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில் தேசிய இனங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் படிப்படியாகப் பறித்து மாநிலங்களை இந்துராஷ்டிரத்திற்கு கப்பம் கட்டும் காலனிகளாக மாற்றி வருகிறது.
ஆகவே, இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் நின்றுக்கொண்டு தேசிய இனங்களின் உரிமைகளை நம்மால் நிலைநாட்டிவிட முடியாது.
மாறாக, அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தையும் உண்மையான அதிகாரத்தையும், பிரிந்து போகும் அதிகாரம் கொண்ட தேசிய சுயநிர்ணய உரிமையையும் வழங்கக்கூடிய தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசாக விளங்கக் கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசிற்காக போராடுவதன் மூலமே தேசிய இனங்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.