Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 5

பாசிச கும்பலின் முருக பக்தர்கள் மாநாடு: நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் ஆதரவானதா? | தோழர் ரவி

பாசிச கும்பலின் முருக பக்தர்கள் மாநாடு:
நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் ஆதரவானதா? | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஆண்டி முருகனை அழிக்க வந்த பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் | தோழர் ரவி

ஆண்டி முருகனை அழிக்க வந்த பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



முருக பக்த மாநாடு: மக்களை பிளவுபடுத்தத் துடிக்கும் பாசிச கும்பலின் சதி!

முருக பக்த மாநாடு: மக்களை பிளவுபடுத்தத் துடிக்கும் பாசிச கும்பலின் சதி!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1993, ஜனவரி 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 3-4 | 1993 டிசம்பர் 16-31, 1994 ஜனவரி 1-15,  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வங்கி-பங்குச் சந்தை மோசடியும் கூட்டு விசாரணை மோசடியும்
  • தோழர் மாவோ நூற்றாண்டு விழா: மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்!
  • தமிழினம் இனி யாரை நம்புவது?
  • டிசம்பர்-6 கறுப்புநாள் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். பங்காளியின் அடக்குமுறை
  • தொற்று நோய்க்கு அரசே கிருமி!
  • நம்பூதிரியாரின் மார்க்சியப் புரட்டல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ராமதாசை மூக்கறுத்த ‘பண்ருட்டி’ விவகாரம்
  • அதிகார போதையில் ஆடிய போலீசு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



முருகன் மாநாடு: மதுரையில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்ட பி.ஜே.பி திட்டம்

முருகன் மாநாடு: மதுரையில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்ட பி.ஜே.பி திட்டம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மதுரை முருகன் மாநாடு: தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கு துடிக்கும் அமித்ஷா

மதுரை முருகன் மாநாடு: தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கு துடிக்கும் அமித்ஷா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-31, டிசம்பர் 1-15, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 1-2 | 1993 நவம்பர் 16-31, டிசம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பா.ஜ.க. தோல்வியும் பாசிச மாய்மாலமும்
  • “நக்சல்பாரி பாதைஇயில் சிவப்புப் பூ பூக்கும்”
  • தொழிலாளர்மீது அடக்குமுறை மக்கள்மீது கட்டண உயர்வு
  • தி.மு.க. பிளவால் தமிழக அரசியலில் விளைவு என்ன?
  • கட்டளையிடுகிறது அமெரிக்கா காலில் விழுகிறது இந்தியா
  • ஊருக்கு உழைப்பவருக்கு கொடுமைகளே பரிசு
  • தமிழ்நாடு: குண்டர்களின் சுயாட்சிப் பிரதேசம்
  • ஈழப்போர் எதை நோக்கி? சமரசமா? முடிவற்றதா?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கோவை போலீசாரின் இந்து வெறியாட்டம்
  • ஏழை நாடுகளை விழுங்க அமெரிக்காவின் பொருளாதார வளையம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மாவோயிஸ்ட் தோழர்களை சித்தரவதை செய்து கொல்லும் மோடி அரசு

த்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவில் ஜூன் 5-ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக மாவோயிஸ்ட் தோழர்கள் மீதான தாக்குதல் நடந்து வந்தது. இதில் ஏழு மாவோயிஸ்ட் தலைவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர். இதனை சிவில் உரிமைகள் குழு (Civil Liberties Committee) என்ற அமைப்பு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

சிவில் உரிமைகள் குழுவின் தெலுங்கானா தலைவர் கடாம் லட்சுமணன், பொதுச் செயலாளர் எம். நாராயண ராவ் மற்றும் பிற அலுவலக நிர்வாகிகள் தெரிவிக்கையில், “1,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தேசிய பூங்காவின் பர்ஷாகர் கிராமத்திலிருந்து பத்து மாவோயிஸ்ட் தோழர்களை போலீசு கைது செய்து இழுத்துச் சென்றது. ஜூன் 5-ஆம் தேதி ஒருவர், ஜூன் 6-ஆம் தேதி நான்கு பேர் மற்றும் ஜூன் 7-ஆம் தேதி இரண்டு பேர் என தினமும் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்து ஏழு மாவோயிஸ்ட் தலைவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்; மீதமுள்ள மூன்று மாவோயிஸ்டுகள் போலீசிடம் உள்ளனர்” என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஜூன் 5-ஆம் தேதி கொல்லப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினர் டெண்டு லட்சுமி நரசிம்மா மற்றும் ஜூன் 6-ஆம் தேதி கொல்லப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர் மைலாரபு அடேலு என்ற பாஸ்கர் ஆகிய இருவரின் சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசு தெரிவித்துள்ளது. ஆனால், போலீசின் பிடியிலிருந்த பத்து மாவோயிஸ்டுகளின் பெயர்களையும் சிவில் உரிமைகள் குழு வெளியிட்டு போலீசின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், ஜூன் 7-ஆம் தேதி மற்றொரு தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர் பண்டி பிரகாஷ் மற்றும் தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர் பாப்பா ராவ் ஆகியோரின் மரணம் குறித்து தங்களுக்குத் தெரிய வந்ததாகவும் அவ்வமைப்பின் தெலுங்கானாத் தலைவர் லட்சுமணன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதேசக் குழு உறுப்பினர் ராமண்ணா, தேசிய பூங்கா பகுதிக் குழு செயலாளர் திலீப், தண்டகாரண்யா பகுதிக் குழு பெண் செயலாளர் சித்து மற்றும் தேசிய பூங்கா பகுதிக் குழு உறுப்பினர்கள் சுனிதா, மகேஷ் மற்றும் முன்னா ஆகியோர் போலீசின் பிடியில் இருப்பதாகவும் அவ்வமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.


படிக்க: மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்


முன்னதாக, ஜூன் 5-ஆம் தேதி அன்று மாலையில் இப்படுகொலைகள் குறித்து சிவில் உரிமைகள் குழுவின் தெலுங்கானா தலைவர் கடாம் லட்சுமணன் தெரிவிக்கையில், “ஜூன் 5 ஆம் தேதி அன்று போலீசு தகவல் தொடர்பு வலையமைப்பு மூலம் அவர்கள் (மாவோயிஸ்டுகள்) இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அதனை அறிந்து உடனடியாக, சிவில் உடையிலிருந்த பத்து மாவோயிஸ்டுகள், தங்கள் ஆலிவ் பச்சை சீருடைகளை மாற்றிக்கொண்டு, பாஷாகர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தனர். காலை 7 மணியளவில் அவர்களைக் கைது செய்வதற்காக போலீசு வந்தது. பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், “சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர் பிரகாஷ் மற்றும் போலீஸ் பிடியில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது; அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். மோடி அரசு போர்நிறுத்தத்தை அறிவித்து மாவோயிஸ்டுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போலீசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், தோழர் பிரகாஷ் உட்பட போலீசு பிடியிலிருக்கும் ஒவ்வொரு மாவோயிஸ்டுகளையும் போலீசு சித்திரவதை செய்து கொன்று வருகிறது.

இந்நிலையில், மாவோயிஸ்டுகளின் தரப்பு மத்தியஸ்தர் பேராசிரியர் ஜி. ஹரகோபால் மற்றும் பிறரைக் கொண்ட “அமைதிக்கான ஒருங்கிணைப்புக் குழு”, சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) கட்சியின் 18 மூத்த தோழர்கள் போலீஸ் பிடியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தலைவர்களின் உயிருக்கு போலீசிடமிருந்து கடுமையான அச்சுறுத்தல் உள்ளதாகவும் “சத்தீஸ்கரில் உருவாகிவரும் அரசியலமைப்பு நெருக்கடி, ஜனநாயகக் கொள்கைகள் சிதைக்கப்படுவது ஆகியவற்றைத் தடுக்க நீதிமன்றத்தின் அவசரத் தலையீடு தேவை” என இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பல்லா ரவீந்திரநாத் தலைமையிலான அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குழுவும், சுதாகர் மற்றும் பாஸ்கர் ஆகிய இரு தோழர்களும் போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.


படிக்க: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!


அதேபோல், இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் பிச்சுகா சுதாகர், சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் மற்றொரு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் வரை அவர்களின் உடல்களைப் பாதுகாக்க உத்தரவு பிறப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் ‘நக்சல் ஒழிப்பு’ என்கிற பெயரில் “ஆபரேஷன் ககர்” நடவடிக்கையின் மூலம் மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடிக் கொண்டிருக்கிறது. மலைகளில் உள்ள கனிம வளங்களை அதானி, அம்பானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்காக மலைகளில் வாழும் பழங்குடி மக்களை விரட்டியடிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாவோயிஸ்ட் தோழர்களையும் பழங்குடியின மக்களையும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்று வருகிறது.

மோடி அரசு அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டுமென இந்தியா முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தாலும் அதற்கு செவிமடுக்காமல் பாசிச திமிர்த்தனத்துடன் தனது நரவேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. “பழங்குடி மக்கள், மாவோயிஸ்டுகள் மீதான உள்நாட்டுப் போரை நிறுத்து” என இந்தியா முழுவதிலுமிருந்து குரலெழுப்புவதும் போராட்டங்களைக் கட்டியமைப்பதுமே பாசிச கும்பலைப் பணிய வைக்கும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



வேடனை அச்சுறுத்தும் பாசிச கும்பல் | வேடனுக்கு துணைநிற்போம் | தோழர் தீரன்

வேடனை அச்சுறுத்தும் பாசிச கும்பல் | வேடனுக்கு துணைநிற்போம் | தோழர் தீரன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 1-15, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 24 | 1993 நவம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காஷ்மீர் ஹஸ்ரத்பால் மசூதிமுற்றுகை ஆப்பசைத்த குரங்கு நிலையில் இந்தியா
  • நவம்பர் புரட்சி நாள்: மீண்டும் செங்கொடி உயர்ந்தோங்கும்!
  • மு.க.-வை.கோ. மோதல் கொள்கையும் இல்லை வெங்காயமும் இல்லை
  • வட மாநிலத் தேர்தல்: கறுப்புப் பணத் திருவிழா
  • நிலநடுக்க ஆபத்து அறிவியல் ஆதாரம் மெத்தனம்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பூலோகமே இவர்களுக்கு நரகம்தான்
  • ஜெயா ஆசியுடன் லாக்அப் கொலை கற்பழிப்புகள்
  • இலங்கை கடற்படை அட்டூழியம்: தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்
  • காயல்பட்டின கலவரம்: ஆர்.எஸ்.எஸ்., போலீசு கொலைவெறித் தாக்குதல்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 1-31, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 22-23 | 1993 அக்டோபர் 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ராணிப்பேட்டை – பழநி இடைத்தேர்தல்கள் அரசியல் ரௌடித்தனத்துக்கு வெற்றி
  • போலிக் கம்யூனிஸ்டுகளின் சக்களத்தி சண்டை
  • விநாயகர் வடிவில் ஆர்.எஸ்.எஸ். – ன் நரபலி!
  • பத்தாண்டுகளில் ஈழம் மீளாய்வு
  • ரஷ்ய நெருக்கடி: அதிகாரப் போட்டி முற்றுகிறது சர்வதிகார அபாயம் தொடர்கிறது
  • ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
  • இஸ்ரேல் – பி.எல்.ஓ. ஒப்பந்தம்: கனவு நனவாகவில்லை
  • மின்சாரமும் தனியார்மயம் விவசாயிகளுக்குப் பேரிடி
  • பொட்டல் காடாய் விளைநிலங்கள் ஓட்டாண்டியாக விவசாயிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஜூன் 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் -அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு: தி.மு.க. அரசின் அப்பட்டமான கார்ப்பரேட் சேவை
  • ஆபரேஷன் சிந்தூர்: பாசிச கும்பலின் தோல்வியும் எதிர்க்கட்சிகளின் துரோகமும்
  • அமெரிக்க அடிமை மோடியும் வேட்டைக்காடாகும் இந்தியாவும்
  • பொள்ளாட்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதி கிடைத்துவிட்டதா?
  • விழிஞ்சம் துறைமுகம்: கேரள சி.பி.எம். அரசின் அதானி சேவை
  • இந்தியப் பாசிச கும்பலின் சதி வலையில் நேபாளம்
  • காசா: இனவெறி இஸ்ரேலின் அறிவிக்கப்படாத வதைமுகாம்
  • காசா: இழுபறியில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை
  • தாரைவார்க்கப்படும் சென்னைப் பல்கலைக்கழக வளாகம்: பல்கலைக்கழகத்தில் தோழி விடுதி கட்டாதே!
  • மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!
  • டெல்லி: தமிழர்களின் குடியிருப்பை தரைமட்டமாக்கிய பா.ஜ.க. அரசு


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 1-30, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 20-21 | 1993 செப்டம்பர் 1-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இன-மொழி உரிமை பறிக்கும் மசோதாக்கள்
  • சி.பி.எம்-ன் திருச்சி மாநாடு: அம்பலமானது அரசியல் ஓட்டாண்டித்தனம்
  • காவிரி நீர்: ஆயுதமானது ஜெயாவுக்கு வேதனையானது மக்களுக்கு
  • நரசிம்மராவ் அரசு மயிரைழையில் தப்பிய மர்மம்
  • யாருக்கு அதிகாரம்? சேஷனின் கொட்டம்
  • சிங்கள அரசின் பொருளாதார முற்றுகை: ஈழமக்களின் அவலநிலை
  • சென்னையில் வெடித்தது ஆர்.எஸ்.எஸ். ஆயுதக் கிடங்கு
  • போஃபர்ஸ்: ராஜீவ் ஊழல் நிரூபணம்
  • அரசுத்துறை நிறுவன பங்கு மோசடி: ஊழல் சாக்கடையில் காங்., அதிகாரிகள் உல்லாசம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மகாராஷ்டிரா: பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக மூடப்பட்ட கால்நடை சந்தைகள்

காராஷ்டிர மாநில கால்நடை ஆணையம் ஜூன் 3 முதல் 8-ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு அம்மாநிலத்தில் கால்நடை சந்தைகள் செயல்படத் தடை விதித்துள்ளது. இஸ்லாமிய மக்களின் பக்ரீத் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜூன் 7-ஆம் தேதி அன்று வரும் பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்தும் பரிசுகள் வழங்கியும் கொண்டாடுவர். அன்றைய தினம் அவர்களது உணவில் செம்மறி ஆட்டின் இறைச்சி முக்கிய இடத்தை பெறும். ஆனால் இஸ்லாமிய மக்களின் மீதான வெறுப்புணர்வினால் மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை கடந்த மே 27 அன்று வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு (Agricultural Produce Market Committee) அனுப்பப்பட்டதையடுத்து வியாபாரிகளும் தொழிலாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

அவ்வறிக்கையில், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பசு பாதுகாப்பு சட்டத்தை குறிப்பிட்டு “பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக ஜூன் 3 முதல் 8-ஆம் தேதி வரை மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும் கால்நடை சந்தைகள் செயல்படக் கூடாது” என்றும் “இதன் மூலம் சட்டவிரோதமாக மாடுகள் கொல்லப்படுவதை உறுதிசெய்ய முடியும்” என்றும் தெரிவித்துள்ளது. பசுக்கள் கொல்லப்படுவதை குறைப்பதே தடை விதிக்கப்பட்டதன் நோக்கம் என்று தெரிவித்த கால்நடை ஆணையத் தலைவர் சேகர் முண்டாடா, “ஈத் பண்டிகைக்கு முந்தைய நாட்களில், விலங்குகளை பலியிடும் நோக்கத்துடன் உட்பட பல்வேறு வழிகளில் விலங்கு பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. இது நிகழாமல் தடுப்பதற்கு மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்” என்று அப்பட்டமாக இஸ்லாமிய வெறுப்பை கக்கியுள்ளார். மகாராஷ்டிரா கால்நடை ஆணையத்தின் சுற்றறிக்கையும் அதன் தலைவரின் பேச்சும் காவி குண்டர்களின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.


படிக்க: இராம நவமி: பாசிஸ்டுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியான திரிணாமுல் காங்கிரசு


‘பசு வதை’, ‘பசு கடத்தல்’ என்ற பெயரில் இஸ்லாமிய மக்களை தாக்குவது, துன்புறுத்துவது, கும்பல் படுகொலை செய்வது போன்றவற்றை ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் பசு-வளைய மாநிலங்களில் இயல்புநிலையாக்கியுள்ளனர். குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பசு வதை தடைச் சட்டம், பசு பாதுகாவல் என்ற பெயரில் இப்படுகொலைகள் அரசு-அதிகார வர்க்கத்தின் துணையுடனேயே நிகழ்த்தப்படுகின்றன. தற்போது கால்நடை சந்தைகளை மூடினால் சட்டவிரோத பசு பரிவர்த்தனையைத் தடுக்க முடியும் என்று தெரிவித்திருப்பதன் மூலமாக மகாராஷ்டிரா முழுவதும் பசு வதை, பசு கடத்தல் என்ற பெயரில் இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த காவி குண்டர் படை ஆயத்தமாகியுள்ளது. இதன் மூலம் இஸ்லாமிய மக்களின் பண்டிகையை அவர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்ததாக மாற்றியிருகிறது. இந்தாண்டு ரம்ஜான் பண்டிகையின் போது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் அவர்களது மத வழிபாட்டு தலங்கள் மீது தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதும், இந்து மக்களின் ஹோலி பண்டிகை இடையில் வந்ததை பயன்படுத்திக்கொண்டு இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மசூதிக்கு செல்வதை தடுத்ததும் இதனுடன் இணைத்து பார்க்க வேண்டியவை.

இதுகுறித்து வஞ்சித் பகுஜன் அகாடியின் (Vanchit Bahujan Aagadi) மாநிலத் துணை தலைவர் கஃபரூக் அகமது கூறுகையில், “சந்தைகள் செயல்படவில்லை என்றால் அரசால் தடைசெய்யப்படாத விலங்குகளான ஆடுகள், எருமைகள் மற்றும் செம்மறி ஆடுகளின் வர்த்தகமும் நிறுத்தப்படும். இதன் விளைவாக, விவசாயிகள், சுமை தூக்குபவர்கள், தரகர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான தினசரி கூலி வருமானம் நிறுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் இந்துத்துவ அரசியல் இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி பலதரப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் விரோதமானதாகவே உள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது. மேலும், அவ்வமைப்பின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் பேசுகையில், “மகாராஷ்டிர கால்நடை  ஆணையத்திற்கு பரிந்துரைப்பதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால் சந்தை குழுக்களுக்கு நேரடியாக உத்தரவுகளை பிறப்பிப்பது அதன் அதிகாரத்தை மீறுவதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. ஆட்சி செய்யக்கூடிய உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இராம நவமி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகை நாட்களும் ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமியப் பண்டிகை நாட்களும் இஸ்லாமிய மக்களுக்கு அச்சம் நிறைந்ததாகவும் பாதுகாப்பற்றதாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியதும் உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சங்கப் பரிவார குண்டர் படைகளை தடை செய்வதற்கு போராடுவதும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.



இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு: தி.மு.க. அரசின் அப்பட்டமான கார்ப்பரேட் சேவை

சென்னையின் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்தூரில் டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெரு ஆகிய பகுதிகள் அடையாறு ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளன. இப்பகுதிகளில் உள்ள 700-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த மே 20-ஆம் தேதியிலிருந்து புல்டோசரைக் கொண்டு அவ்வீடுகளை இடித்து வருகிறது தி.மு.க அரசு. 300-க்கும் மேற்பட்ட போலீசுகளைக் குவித்துப் போராடும் மக்கள் மீது கடும் அடக்குமுறை செலுத்தி இடிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அகதிகளாக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் இப்பகுதியில் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை தி.மு.க. அரசு மேற்கொண்டது. இதற்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் இடிப்பு நடவடிக்கையை நிறுத்திவைத்திருந்த தி.மு.க. அரசு தற்போது மீண்டும் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது.

தங்கள் உழைப்பால் கட்டிய வீடுகள் தங்கள் கண்முன்னே இடிக்கப்படுவதைக் காண முடியாத வேதனையில் அனகாபுத்தூர் மக்கள் அழுது புலம்பும் காட்சிகளும், வீடுகள் இடிக்கப்படுவதை எப்படியாவது தடுத்துநிறுத்த முடியாதா என்று சாலையில் உருண்டு புரளும் காட்சிகளும் காணொளிகளாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன.

தி.மு.க. அரசின் இந்த அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பாசிச பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இஸ்லாமிய மக்களின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் நடவடிக்கையுடன் இதனை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் தி.மு.க. அரசை விமர்சித்து வருகின்றனர்.

அதேபோல், மே மாதத் தொடக்கத்தில் வீடுகளை இடிக்கப்போவதாக அனகாபுத்தூர் மக்களை போலீசு அச்சுறுத்தத் தொடங்கியதிலிருந்தே மக்கள் அதிகாரக் கழகம், மே 17 இயக்கத் தோழர்களும் பல்வேறு ஜனநாயக சக்திகளும் அம்மக்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகள் ஆறுகளை ஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகின்றனர். தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும் சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., ம.தி.மு.க., ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தி வருகின்றன.

கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு நீதி!
ஏழைகளுக்கு ஒரு நீதி!

அனகாபுத்தூரில் இடிக்கப்பட்டுவரும் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளானது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சி.எம்.டி.ஏ) குடியிருப்பு பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளாகும். இப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 2008-ஆம் ஆண்டில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்குவதற்கான ரசீதுகளை வழங்கியிருக்கிறார். ஐந்து வீடுகளுக்குப் பட்டாவும் உள்ளது. அப்படியிருந்தும் தி.மு.க. அரசானது மக்களுடைய வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கிறது. அதேசமயம், இடிக்கப்படும் வீடுகளுக்கு அருகிலுள்ள காசாகிராண்ட் (Casagrand) நிறுவனமானது ஆற்றையே ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை எழுப்பியிருக்கிறது.

காயிதே மில்லத் நகரில் தி.மு.க. அரசால் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்

இதுகுறித்து தாம்பரம் மாநகர ஆணையரிடம் கேள்வியெழுப்பிய போது, “காசாகிராண்ட் நிறுவனத்திற்கு ஏற்கெனவே பட்டா கொடுத்துவிட்டார்கள். அதை தாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று பதிலளித்ததாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகிறார். மேலும், சி.எம்.டி.ஏ-வால் குடியிருப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட வீட்டை ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “தப்பாக கொடுத்துவிட்டார்கள். அதனால் அதனை மாற்றுகிறோம்” என்று கூறியுள்ளார்கள். இதுதான் கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்ற தி.மு.க. அரசின் இரட்டை நீதி!

குறிப்பாக, தி.மு.க. அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்குப் பின்னால், அப்பட்டமான கார்ப்பரேட் சேவை ஒளிந்துள்ளது.  தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள “சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை” (Chennai River Restoration Trust) என்ற தொண்டு நிறுவனத்தால் “சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம்” (Chennai River Transformation Company Limited) ஜூலை 2024-இல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் “பிரைம் மெரிடியன் சர்வேஸ் பிரைவேட் லிமிடெட்” (Prime Meridian Surveys Private Limited) என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு அடையாறு ஆற்றின் எல்லைகளை மறுவரையறை செய்திருக்கிறது. இதில், சி.எம்.டி.ஏ-வால் குடியிருப்பு பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள் ஆக்கிரமிப்பு பகுதிகள் என்று அயோக்கியத்தனமாக மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, சி.ஆர்.டி.சி.எல். என்ற புனரமைப்பு நிறுவனம் ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, பூங்காக்கள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், வாகனம் நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை ஏற்படுத்தப் போகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்புகள் என்று அகற்றிவிட்டு, அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள காசாகிராண்ட் போன்ற சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கான பொழுதுபோக்கு வளாகங்கள் உருவாக்கப் போகிறது ‘சமூக நீதி’ தி.மு.க. அரசு. இந்த அடிப்படையிலிருந்துதான், காசாகிராண்ட் நிறுவனம் சைதாப்பேட்டை, அனகாபுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்துப் பல கட்டடங்களை நிறுவி வருகிறது.

அதுமட்டுமின்றி, சி.ஆர்.டி.சி.எல். நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உதயச்சந்திரன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் உள்ளனர். இந்நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து 15 மாதங்களுக்குள்ளாக அடையாறு மறுசீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சுமார் ரூ.1,500 கோடியை ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.300 கோடியை ஒதுக்கியிருக்கிறது. மேலும், இந்நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அரசு-தனியார் பங்களிப்பு (Public-Private Partnership) திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறப் போகிறது.

தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவது தவறு என்று அனகாபுத்தூர் மக்கள் கடந்த 2023-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளபோதே, அதனையெல்லாம் தூரவீசிவிட்டு தன்னுடைய கைப்பாவையான அரசதிகாரிகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. இனிவரும் காலத்திலும், 42 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களின் வீடுகளையும் இடிக்கும் வேலையில் தி.மு.க. அரசு ஈடுபடும்.

தமிழ்நாடு உழைக்கும் மக்கள்
எதிர்நோக்கியிருக்கும் பேரபாயம்

2015-ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் வேலையில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோர மக்களின் வீடுகளை இடித்து வருகிறது. சான்றாக, கடந்த 2022-ஆம் ஆண்டில் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்று கூறி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 625 வீடுகள் இடிக்கப்பட்டன.

இவ்வாறு இடிக்கப்படும் வீடுகளில் உள்ள மக்கள் வசிப்பதற்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம் உள்ளிட்டு நகரத்திற்கு வெளியே உள்ள பகுதிகளிலேயே வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் ஒதுக்கப்படும் வீடுகள் மனிதர்கள் வாழத் தகுதியற்ற வகையில் உள்ளதால் அங்கு மக்களால் வசிக்க முடிவதில்லை. வாடகை செலுத்தி வேறு பகுதிகளில் குடியமரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வேறுவழியின்றி வசிப்பவர்களும், பிள்ளைகளுக்கான பள்ளி-கல்லூரி கட்டமைப்புகள் போதிய அளவில் இன்றி அவதிப்படுகின்றனர். வேலைக்கு செல்வதற்கு 25 முதல் 30 கி.மீ வரை பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்று குமுறுகின்றனர்.

ஆனால், அதைக் காதுகொடுத்துக் கேட்கக் கூட தி.மு.க. அரசு தயாராக இல்லை. வீடுகளை இடிப்பதற்கு எதிராகப் போராடும் மக்களைக் கூட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சந்திக்க மறுக்கின்றனர். இது தங்களை நம்பி வாக்களித்த மக்களின் முதுகில் குத்தும் நடவடிக்கையல்லவா?

ஆற்றை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று கூறி ஏழை, எளிய மக்களை சென்னை நகரத்திலிருந்து விரட்டியடிக்கும் நடவடிக்கையானது, தி.மு.க. அரசு கவர்ச்சிகரமாக அறிவித்துள்ள சிங்கார சென்னை 2.0, ஸ்மார்ட் சிட்டி ஆகிய ‘வளர்ச்சி’த் திட்டங்களின் ஓர் அங்கமாகும். எனவே, இது சென்னை நகர உழைக்கும் மக்கள் மட்டும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையல்ல. மதுரை, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் உழைக்கும் மக்களின் பிரச்சினையாகும். கடந்த மார்ச் மாதத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 12 நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை சி.ஆர்.ஆர்.டி. மூலம் அகற்றிப் புனரமைக்க உள்ளதாக தி.மு.க அரசு அறிவித்திருக்கிறது. அதாவது, லட்சக்கணக்கான மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி தங்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படும் பேரபாயம் தமிழ்நாட்டை எதிர்நோக்கியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, மேற்கூறிய தி.மு.க. அரசின் இந்நடவடிக்கைகளை, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவிற்காக, தமிழ்நாட்டை உற்பத்தியின் குவிமையமாக மாற்றுவது; நகர விரிவாக்கம் என்ற பெயரில் உள்கட்டமைப்புகளை கார்ப்பரேட்மயமாக்குவது – வரிச்சுரண்டலை தீவிரப்படுத்துவது; அரசு-தனியார் பங்களிப்பு ஊக்குவிப்பது என்ற பெயரில் அரசுத்துறைகளை கார்ப்பரேட்மயப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு தி.மு.க. அரசு மேற்கொள்ளும் அப்பட்டமான கார்ப்பரேட் சேவை பா.ஜ.க. கும்பலுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் சாதகமாகவே அமையும். எனவே, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் மோடி-அமித்ஷா கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமின்றி, தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கட்டியமைக்க வேண்டும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram