Friday, July 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 2

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1996; ஜனவரி 01-15, 1997 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 03-04 | டிசம்பர் 16-31, 1996; ஜனவரி 01-15, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காங்கிரசில் தொடரும் நரிகளின் நாட்டாமை
  • காராகிருகத்தில் அடைக்க வேண்டிய ஜெயா – சசிக்கு சிறையிலும் சொகுசு!
  • வங்கதேசப் போர் வெள்ளி விழா: ஆக்கிரமிப்பு போரா? விடுதலைப் போரா? வரலாற்றின் இருண்ட பக்கங்களில் இருந்து சில உண்மைகள்
  • விவசாயிகளின் எழுச்சி! தேக்கு பண்ணை அழிப்பு!
  • ஊழல் புகையில் கோடிகள் மாயம்
  • ”சோறுதான் தர முடியவில்லை” “மரியாதையான இறுதிச் சடங்காவது செய்”
  • கேள்வி – பதில்
  • அன்னா ஹஸாரே: ஒரு காந்தியவாதியின் கையாலாகாத போராட்டம்
  • ஆப்பிரிக்காவில் இனப் படுகொலைகள்: பின்னணியில் ஏகாதிபத்தியம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, டிசம்பர் 01-15, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 24, ஆண்டு 12, இதழ் 01-02 | நவம்பர் 01-30, டிசம்பர் 01-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: யானையைப் பானைக்குள் அடைக்க முடியுமா?
  • மரக்குதிரை மீதேறிக் கொண்டு புரட்சிப் பயணம் செய்யும் போலிகள்
  • மலைவாழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு சீர்திருத்தங்களின் யோக்கியதை
  • ஈழ அகதிகளின் அவதி மு.க.வின் நீலிக்கண்ணீர்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • காலணியை விழுங்கிய கண தனவான்கள்
  • ஆதிவாசிகளை அச்சுறுத்தும் ‘மார்க்சிஸ்டு’ ரௌடி
  • கொள்ளையில் ஓட்டுப் பொறுக்கிகள் கொள்ளை நோயில் நாட்டு மக்கள்
  • காட்டுமிராண்டிகளின் கூட்டாளியாக நீதித்துறை
  • காஷ்மீர்: மீண்டும் ஒரு மோசடித் தேர்தல் மீண்டும் ஒரு பொம்மையாட்சி
  • லல்லுவின் ‘சமூகநீதி’ சாதனைகள்
  • கேள்வி – பதில்
  • மோசடி நிதி நிறுவனங்கள்: நடுத்தர மக்களின் பேராசை பெருநட்டம்
  • உ.பி. தொங்குநிலை முன்னே பாசிச அபாயம் பின்னே
  • ஆப்கான்: மதவெறி – யுத்தப் பிரபுக்களின் காலடியில்….
  • இறைச்சிக் கூடங்களை நவீனப் படுத்து! உள்நாட்டு தேவைக்கே இறைச்சி! இறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாபெரும் தேசத் துரோகம்!

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாபெரும் தேசத் துரோகம்:
அடிக்கொள்ளி ஒன்றிய சுகாதார அமைச்சகம்

ந்தியாவில் உள்ள 605 மருத்துவக் கல்லூரிகளில் சரி பாதிக்கும் மேலாக, அதாவது 320 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்புக்கு 40,000-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இடத்திற்கும் பல பத்து லட்சங்கள் அல்லது கோடிகள் கட்டணம் எனக் கொண்டால் இதில் புழங்கும் தொகை என்பது பல ஆயிரம் கோடிகளாகும்.

ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி நடத்துவதற்கு முன்நிபந்தனையான அடிப்படை கட்டுமானங்களும், நோயாளிகளுக்கான தங்குமிடம் – படுக்கை வசதிகள் மற்றும் சுகாதார நிலைமைகள் என்று பல தேவைகள் மிகவும் விசாலமாக வரையறுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்ன பிற ஊழியர்கள் என்று பல நூறு பேர் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவற்றுடன் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல மருத்துவக் கட்டுப்பாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் தரக்கட்டுப்பாடுகளைக் கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனைகளும் உள்ளன.

மருத்துவக் கல்லூரி என்பது பிற கலை அறிவியல் கல்லூரிகள் போல மாணவர்களின் கல்வி பற்றியது மட்டுமானதல்ல. ஒரு கல்லூரி தரமற்ற மருத்துவரை சான்றிதழ் கொடுத்து அனுப்பிவிடும் என்றால் அதன் பிறகு எந்த கேள்விக்கும் இடமில்லாமல் சமூகத்தில் அவர் ஒரு மருத்துவராக அங்கீகரிக்கப்பட்டு விடுகிறார். எனில் மருத்துவருக்குரிய தகுதி என்பது அவ்வளவு முக்கியத்துவம் உடையதாகும்.

எனவேதான் அரசே முன்னின்று துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் ஆலோசனைகளின் படி மருத்துவக் கல்லூரிகளை ஓரளவிற்கு முறையாக நடத்தி வந்தது. 1992 இல் கொண்டுவரப்பட்ட அரசின் தனியார்மய கொள்கைகளைத் தொடர்ந்து ஏனைய கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளைப் போலவே மருத்துவக் கல்லூரிகளும் தனியார்கள் தொடங்கி நடத்த அனுமதிக்கப்பட்டன.

அவ்வகையில் இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தரச்சான்றளிப்பதற்கான சோதனை முறைகள் பலவற்றையும் ஏய்த்து, சான்றளிக்கும் அதிகாரம் படைத்த ஒன்றன் மேல் ஒன்றான பல அதிகார அடுக்குகளைக் கொண்ட ஆய்வு நிறுவனங்களையும் ஊழல் படுத்தி சரிக்கட்டும் வகையில் கூட்டுச் சதித் திட்டங்களைத் தீட்டியதாகவும் சோதனை முறைகளைச் சீரழித்து முறியடித்ததாகவும் ஒன்றிய அரசின் மையப்புலனாய்வுத்துறை (CBI) பல துறைகளைச் சேர்ந்த உயர்நிலை அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்திருக்கிறது.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய மருத்துவ கமிஷன், ஆகிய இரண்டுமே முதன்மை குற்றவாளிகள். அதைத் தொடர்ந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம், அது நியமிக்கும் ஆய்வுக் குழுக்கள், இடைத்தரகர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோரின் கூட்டணிதான் இந்த தேசத் துரோக குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறது.

மையப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட புலனாய்வில் பல்வேறு உயர்நிலை கல்வியாளர்கள் (Educationalists), ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் (Health Ministry Of India) மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் (National Health Authority) உயர்மட்ட அதிகாரிகள், தேசிய மருத்துவக் கமிஷன் (National Health Commission) உறுப்பினர்கள், நேரடி சோதனை குழுக்கள் (Inspection Team) உறுப்பினர்கள் ஆகிய பலர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. பல தனியார் கல்லூரிகளுக்கு தரச் சான்றிதழ் அளிக்கும் சோதனை நிறுவனங்களை அதன் உறுப்பினர்களைக் கூட்டுச் சதி மூலம் ஊழல்படுத்தி சீரழித்த குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது.

புதிய தனியார் மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம், இருக்கின்ற அங்கீகாரத்தைப் புதுப்பிப்பது மற்றும் தனியார் பட்டப் படிப்புகளில் மற்றும் பட்ட மேற்படிப்புகளில் புதிய பிரிவுகளைத் தொடங்குவது, குறிப்பிட்ட பட்ட படிப்பில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது வேறு பல பட்டய படிப்புகளைத் தொடங்கி நடத்துவது போன்றவற்றுக்கான அங்கீகாரங்கள் இவ்வாறான மோசடியான வழிமுறைகளின் மூலம் பெறப்பட்டுள்ளன.


படிக்க: காவிக் கும்பலும் போலி மருத்துவமும்


முதன்மை குற்றவாளிகள் யார்?

அப்படி தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்குத் துணை நின்று ஊழலில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களில் கவனத்திற்குரியவர்கள் பின்வருமாறு.

  1. டாட்டாவின் சமூக ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Social Studies – TISS) தற்போதைய துணைவேந்தரும் மேனாள் பல்கலைக்கழக மானிய குழுவின் (University Grants Commission) தலைவருமான டி.பி. சிங்,
  2. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ராவத்புறா மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் (Shri Rawatpura Sarkar Institute of Medical Science and Research – SRSIMSR) தலைவர் ரவிசங்கர்ஜி மகராஜ். இவர் அரசியல் செல்வாக்குடன் கூடிய பன்முகம் கொண்ட ஆன்மீகத் தலைவரும் ஆவார்.
  3. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள கீதாஞ்சலி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மயூர் ராவல்,
  4. மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியின் (Index Medical College) தலைவர் சுரேஷ் சிங் பட்டோரியா,
  5. மருத்துவ தர மதிப்பீடு மற்றும் நிர்ணய வாரியத்தின் (Medical Assessment and Rating Board) வாழ்நாள் உறுப்பினர் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் இணை ஆணையர் ஜித்து லால் மீனா,
  6. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் பல மட்ட அதிகாரிகள் பூனம் மீனா, தரம் வீர், பியூஸ் மல்யான், அனூப் ஜஸ்வால், ராகுல் சிரீவத்சவா, சந்தன் குமார், தீபக், மனிஷா ஆகிய 8 முக்கிய அதிகாரிகள். (இவர்கள்தான் இந்த மொத்த ஊழலின் அடிக்கொள்ளியாய் இருந்து தொடங்கி வைக்கிறவர்கள்)
  7. தேசிய மருத்துவ கமிஷன் உறுப்பினர்களான எம்.எஸ். சித்ரா, ரஜினி ரெட்டி, சி.என். மஞ்சப்பா, அசோக் செல்கே, மற்றும் வெங்கட் ஆகிய 5 அதிகாரிகள்,
  8. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காயத்ரி மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் பெயர் தெரியவில்லை
  9. தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள தந்தை கொழும்பு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (Father Colombu Institute of Medical Science) தலைவர்,
  10. உத்தரபிரதேசம் மீரட் நகரில் உள்ள தேசிய தலைநகர் பிராந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (National Capital Regional Institute of Medical Science) தலைவர் ஷிவானி அகர்வால்,
  11. குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள சுவாமி நாராயண மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் சுவாமி பக்தவத்சல தாஸ் ஜி

ஆகிய 34 பேர் மீது குற்றச்சாட்டியிருக்கிறது ஒன்றிய அரசின் மையப் புலனாய்வுத் துறை.


படிக்க: உ.பி: குடியிருப்பிற்குள் இஸ்லாமிய மருத்துவரை அனுமதிக்காத இந்துமதவெறி


செய்த குற்றம் என்ன?

மேற்சொன்ன அனைவரும் அதாவது ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், தேசிய மருத்துவக் கமிஷன் மற்றும் அதன் சோதனைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் இடைநிலை தரகர்களுடன் ஒத்துழைத்து, நடைமுறையில் இருக்கின்ற தரச் சான்று வழங்கும் முறைகளை கட்டுப்பாடுகளை வரையறைகளை ஊழல்படுத்திச் சீரழித்து மோசடியான முறையில் தரச் சான்று வழங்கி, தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுக்குச் சேவை செய்தனர் என்பதே குற்றச்சாட்டு.

இதன் மூலம் நாட்டு மக்களின் மருத்துவ நலனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர்.

மருத்துவம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அனைத்து முடிவுகளையும் கல்லூரி நிர்வாகங்களுக்கு இடைத்தரகர்கள் மூலமாக முன்கூட்டியே தெரிவித்து விடுவது; உரிய பொறுப்பான நபர்களை அடையாளம் காட்டுவது, இவற்றின் மூலம் தரச் சான்றுகளுக்கான சோதனைகளின் தேவைகளைத் தற்காலிகமாக போலியான மற்றும் மோசடியான முறைகளில் நிறைவு செய்து காட்டி குழுவை ‘ஏமாற்றி’ காரியம் சாதித்துக் கொள்வது.

உதாரணமாக ஒரு மருத்துவக் கல்லூரி என்பது இவ்வளவு பேராசிரியர்களை மருத்துவர்களை செவிலியர்களை தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களை இன்ன பிற ஊழியர்களைக் கொண்டிருக்க வேண்டும் அதற்கும் மேலாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கை வசதிகளைக் கொண்டிருப்பதுடன் அவ்வளவு எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சை பெற்று வர வேண்டும் என்பதும் நிபந்தனையாகும்.

அதற்காக ஆய்வுக் குழுவின் சோதனை நடக்கும் ஓரிரண்டு நாட்களுக்கு மட்டும் ஏஜெண்டுகள் மூலம் மக்களைத் திரட்டி தலைக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் மற்றும் சாப்பாடு சப்ளை என்று அழைத்து வந்து நோயாளிகளாக நாள் முழுவதும் படுக்கையில் போர்த்திக் கொண்டு படுத்திருக்கச் செய்வது. இந்த கேலிக்கூத்து அவ்வளவு வெளிப்படையாக தமிழ்நாட்டில் உள்ள எஸ்.ஆர்.எம். மற்றும் தனலட்சுமி சீனிவாசன் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் நடந்தேறியது.

இதேபோன்று மருத்துவமனை ஊழியர்கள் பேராசிரியர்கள் செவிலியர்கள் போன்ற அனைத்து தரப்பினரின் எண்ணிக்கையைக் காட்ட இதே போன்ற ஆள்மாறாட்ட மோசடிகள் தான் எல்லா இடங்களிலும் நடந்திருக்கின்றன. சில இடங்களில் பயோமெட்ரிக் முறையில் ரேகை வைப்பதாக ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்கள் நிரந்தரமான ஊழியர்கள் என்று கணக்குக் காட்டுவதும் நடந்திருக்கிறது. இதே போன்று அத்தியாவசியமான உட்கட்டுமானங்கள், ஆய்வுக் கூடங்கள் மற்றும் மருத்துவத்துறை உபகரணங்கள் போன்றவற்றிலும் மோசடியான ஏற்பாடுகளைச் செய்து சரிக்கட்டுவதும் நடந்திருக்கின்றன.

மாயாவி பேராசிரியர்கள் (Ghost Faculty, Dummy Faculty) என்று அழைக்கப்படும் இந்த மருத்துவ பேராசிரியர்களில் அன்றாட வருகை பதிவேடுகள் போலியாகத் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன மற்றும் நோயாளிகளின் பதிவேடுகளும் போலியாகத் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன அதாவது ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள் நோயாளிகளாக படுக்கையில் தங்கியிருந்து குணம் பெற்றுச் சென்றிருப்பது போல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. அதைப் போலி என்று தெரிந்தே தான் ஆய்வுக் குழுவும் அங்கீகரித்து சான்றிதழ் வழங்குவதற்குப் பரிந்துரை செய்துள்ளது.

இத்தனைக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மூத்த பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு தான் மருத்துவ ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அரசின் ஆய்வுக்குழு உறுப்பினர்களை பணத்தாலும் இன்னும் பல வழிகளிலும் கவனிக்கும் முறைகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்க முடியும். பல சமயம் லஞ்ச பணங்கள் ஹவாலா முறையில் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் வலைப்பின்னலையும் மைய புலனாய்வுத்துறை இப்பொழுது கண்டறிந்து உள்ளது.

தென் மாநிலங்களுக்காக முக்கிய இடைத்தரகராக வேலை செய்த நபர் டெல்லி குருகிராமைச் சேர்ந்த வீரேந்திர குமார் என்பவர் ஆவார். மேலும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டெக்னிஃபை சொல்யூஷன்ஸ் (Technify Solutions) எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ரஞ்சித் நாயர் என்பவர் சுவாமி நாராயணன் மருத்துவக் கல்லூரி, ஷ்யாம்லால் சந்திரசேகர் மருத்துவக் கல்லூரி போன்ற பீகார் மாநிலத்து தனியார் கல்லூரிகளுக்கு இடைத்தரகராகச் செயல்பட்டிருக்கிறார். தரச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆய்வின்போது டம்மி பேராசிரியர்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றவர்களாக ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் சேர்ந்த ஹரி பிரசாத் என்கிற ஏஜெண்டும் அவரின் கூட்டாளிகளாக கிருஷ்ணா கிஷோர் மற்றும் அங்கம் ராம் பாபு போன்றவர்களும் கும்பலாக இயங்கி வந்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகராஜ் என்பவர் ராவத்புரா சர்கார் என்றே பரவலாக அழைக்கப்படுகிறார். இவர் ராவத் புரா சர்க்கார் லோக் கல்யாண் டிரஸ்ட் என்கிற நிறுவனத்தை 2000 இல் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு இப்பொழுது பல ஆசிரமங்கள், ரத்த வங்கிகள், முதியோர் இல்லங்கள் தவிரவும் இன்னும் பல கல்வி நிறுவனங்கள், (பள்ளிகள் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக மேலாண்மை கல்லூரிகள் நர்சிங் மற்றும் பார்மசி கல்லூரிகள் விடுதி நிர்வாக மேலாண்மை கல்லூரிகள்) பல உள்ளன. 57 வயதான கடவுளின் தூதராக ‘அறியப்படுகின்ற’ இந்த மகராஜ் நாடு முழுவதிலும் பெரும் அரசியல் தலைவர்களை மூத்த சிவில் அதிகாரிகளைத் தனது பக்தர்களாகப் பெற்றிருக்கிறார் என்பது முக்கியமானதாகும். இப்போது அவரும் இந்த மருத்துவக் கல்லூரி அங்கீகார ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச் செயல்கள் நாட்டு மக்களின் மருத்துவ சுகாதாரத் தேவைகளை சீர்குலைப்பதாகவும் மருத்துவத்துறையின் தரத்தை மட்டறுப்பதாகவும் மக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

ஆனால் இவற்றுக்கெல்லாம் மேலே அமைச்சர் என்று ஒருவர் எந்த ஊழலிலும் ஈடுபடாமல் அமைதியாக உட்கார்ந்திருந்ததாகக் கருதி அமைச்சர் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்ததாகும். எனில் இவ்வளவு உயர்நிலை அதிகாரம் படைத்த இவ்வளவு பெரிய கும்பலை எந்த நீதிமன்றமும் தண்டிக்கப் போவதில்லை என்பதை எதிர்காலத்தில் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடும்.

கேப்டன் தேசாய் என்கிற முன்னாள் அகில இந்திய மருத்துவ கமிஷனின் தலைவர் மூட்டை மூட்டையாக பணமும் டன் கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வழக்கை இத்துடன் தொடர்புப்படுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தடுத்த பல தேசாய்கள் பிடிபடாமல் இருந்து வருகிறார்கள் என்பதைத்தான் இந்த சி.பி.ஐ-யின் வழக்கின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஊழல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தரக்குறைவான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தரச் சான்றிதழ் பெற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள் ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா என்று இந்தியாவின் பல மாநிலங்களிலும் தரமற்ற கல்லூரிகள் ‘சிறப்பாக’ நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்கு என்று புரிந்து கொண்டால் அது நமது அறிவீனம் மட்டுமே ஆகும்.

100 சதவீதம் அயோக்கியத்தனம் என்றால் அதை எப்படித் தான் கண்டறிய முடியும்; இப்படி ஒரு கூட்டணி விரிவாக உருவாகிவிட்டால் யாரைத்தான் குற்றம் சுமத்த முடியும்; எப்படித்தான் குற்றம் நடப்பதைத் தடுக்க முடியும். இந்த மருத்துவ கட்டமைப்பையே கலைத்துத் தூக்கி எரிந்து விட்டு மக்கள் நலன் காக்கும் வகையிலான, நேரடியாக மக்கள் குழுக்களே சோதித்தறியும் அதிகாரம் கொண்டதான ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16-30, அக்டோபர் 1-31, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 21-23 | செப்டம்பர் 16-30, அக்டோபர் 1-31, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கௌடா – ராவ் கிரிமினல் கூட்டு “தேசிய”த்தின் முகவிலாசம்
  • ரௌடித்தனங்களை மறைக்க தி.மு.க.வின் ஆரம்ப சூரத்தனங்கள்
  • உலக அழகிப் போட்டி: “எயிட்ஸ்” கலாச்சாரத்துக்கு கால்கோள் விழா!
  • உ.பி. தேர்தல்: சாதி – மத வெறியர்களிடையே கிரிமினல் பலப்பரிட்சை
  • ஈழத்தில் குண்டு தமிழகத்தில் குண்டாந்தடி
  • ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு தி.மு.க. போட்ட வாய்ப்பூட்டு
  • அமர்நாத் சாவுகள் தேசிய எழவா? இந்து வெறியர்களின் ஒப்பாரிக்கு ஒத்துப்பாடிய “மதசார்பற்ற” கட்சிகள்
  • இந்தியன் வங்கி திவால்: அம்பலமானது மூப்பனார் கும்பலின் யோக்கியதை
  • அலமாதி அணை: மற்றுமொரு காவேரியா?
  • ஈழத் தமிழரின் அழிவில் நிம்மதி கொள்வது யார்?
  • பால் தாக்கரேக்கு எதிர்ப்பு பம்பாய் படத்துக்கு விருது!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்டு 16-31, செப்டம்பர் 1-15, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 19-20 | ஆகஸ்டு 16-31, செப்டம்பர் 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அரசியல் ஆயுதமாக ஊழல் விவகாரங்கள்
  • அ.தி.மு.க. கிரிமினல்களின் தாய்க்கழகமாகிறது தி.மு.க.
  • கென் சரோ – விவா – இவனல்லவோ மக்கள் கலைஞன்
  • சர்வாதிகார நாட்டில் ஜனநாயக இடிமுழக்கம்
  • தொழிலாளர் வாழ்வைச் சூறையாடும் பாசிஸ்டுகள்
  • போலிகளின் ஆட்சியில் புதியதொரு ஊழல்
  • உலகைக் குலுக்கிய சிறைப் போராட்டம்
  • இந்துவெறி கோட்டை நொறுங்கியது பதவிவெறி பாம்பு படமெடுக்கிறது
  • இதுதான் சமூக நீதியின் வெற்றியா?
  • காவியுடைகளின் சாயம் வெளுக்குது
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீர(ண)ர்கள்
  • புதிய கல்விக் கொள்கை: காசில்லாதவனுக்கு கதவைச் சாத்து
  • அ.இ.பு.ப.மை. – சென்னை மாநாடு: கலாச்சாரத்தில் புதிய தடம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! || தொழிலாளர் விழிப்புணர்வு சிந்தனைகள்

ஜூலை 9, 2025: அகில இந்திய வேலை நிறுத்தம்!

தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!

ன்றிய அரசே!

  1. 44 தொழிலாளர் நலச் சட்ட உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்பு விதிகளை வாபஸ் வாங்கு. திணிக்காதே!
  2. நிறுவனத்தின் மொத்த வருவாய்க்கு இணையான ஊதியம், பணி நிரந்தர உரிமைகள்  வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகளை ரத்து செய்!
  3. அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட், F.T.E , NAPS என்ற பெயரில் நேரடி உற்பத்தியில் தொழிலாளர் உழைப்பை சுரண்டும் நிறுவன CEO முதல் HR வரையிலான கும்பலை சிறையில் தள்ளு!
  4. கசக்கி பிழியும் OT – யை ரத்து செய்து விட்டு, தினசரி  8 மணி நேர வேலையை உத்திரவாதம் செய்!
  5. காண்ட்ராக்ட், CL தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 35 ஆயிரமாக உயர்த்து, மாதந்தோரும் அகவிலைப்படி (DA) உயர்வை வழங்கிடாத HR களை சிறையில் தள்ளு!
  6. கேன்டீன் முதல் பஸ், சீருடை, பாதுகாப்பு சூ வரை பாகுபாடு காட்டி பிரிக்கும் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடு!
  7. இலாப வெறியால் சட்டவிரோதமாக, கண்மூடித்தனமான வேலைப்பளுவை திணிக்கும் கம்பெனி HR , காண்ட்ராக்ட் ஓனர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளு!
  8. கார்ப்பரேட் உற்பத்தி முறைக்கு ஏற்ற சரிவிகித சத்தான உணவு, உடல் – மன நலன் உத்திரவாதம் செய்!
  9. மாத சம்பளம் 15 ஆயிரம் மட்டும் என காண்ராக்ட், CL தொழிலாளர்களை ஏமாற்றி சொத்து குவிக்கும் கம்பெனி, காண்ராக்ட் ஓனர், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. சொத்துக்களை பறிமுதல் செய்!
  10. ESI மருத்துவ வசதிகளை மேம்படுத்தி, விரிவுபடுத்து!
  11. PF சேமிப்பான 15 லட்சம் கோடியை முதலீடாகக் கொண்டு, தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வசதியை அறிமுகப்படுத்து!
  12. அரசியல் – பொருளாதாரம், அரசமைப்பு சாசனம் – சட்டம் குறித்த புரிதல் இல்லாத நிரந்தரத் தொழிலாளர்களை பிரிவு 18/1 , பிரிவு 12/3 ஒப்பந்தங்கள் என்ற பெயரில் ஏமாற்றி சுரண்டும்  CEO-HR, தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிற்கங்க தலைவர்களை சிறையில் தள்ளு!
  13. தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக செயல்படும் அரசு முதல் தனியார் நிறுவன அதிகாரிகள் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு. சொத்துக்களை பறிமுதல் செய்!
  14. கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியால் ஆண்டுதோரும் உயர்த்தப்படும்  10-15% விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து!
  15. DA கணக்கீட்டை கட்டுப்படுத்தும் 2021 ஆண்டு சட்ட திருத்தத்தை வாபஸ்வாங்கு!
  16. பலமுனை வரித்தாக்குதலை நிறுத்து. மேலும்,  வருமான வரி வரம்பு 10 லட்சமாக உயர்த்து!
  17. ஜனவரி 2021 – ல் விவசாயிகளிடம் ஒப்புக் கொண்டபடி வேளாண் விளைபொருளுக்கு விலையை பேசி நிர்ணயம் செய்!
  18. கார்ப்பரேட்கள் மட்டும் கொழுக்கும் தனியார் மயக் (WTO) கொள்கையை வாபஸ் வாங்கு. அரசின் தோல்வி ஒப்புக் கொள்!
  19. கடந்த 2014 மே மாதத்திலிருந்து கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக் குவிப்பு, வளர்ச்சியை கணக்கெடுப்பு நடத்து!
  20. சிறு – குறுந்தொழிலை சூறையாடும் GST வரி – கட்டுப்பாடுகளை நீக்கு !
  21. மக்களின் கழுத்தை நெரிக்கும்  பெட்ரோல் – டீசல் வரிக் கொள்கை மாற்று!
  22. காடு, மலை இயற்கை வளங்களை சூறையாடும் கார்ப்பரேட்களை வெளியேற்று!
  23. மொத்த மக்கள் – தொழிலாளர்கள் சிந்திக்கவோ, நலமுடன் வாழ்ந்திடவோ கூடாது என்பதற்காகவே திணிக்கப்படும் புதிய (WTO)கல்விக் கொள்கை – மருத்துவம் – தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சட்ட திருத்தங்களை வாபஸ் வாங்கு!
  24. ஒரே நாடு – ஒரே தேர்தல் என மக்களின் கவனத்தை திருப்பி விட்டு, கார்ப்பரேட்களுக்கு சேவை செய்வதை நிறுத்து!
  25. மொத்தத்தில் நாட்டின் 150 கோடி மக்களின் நல்வாழ்வு – பாதுகாப்பு – வளர்ச்சி  மீது கொஞ்சமாவது கவனம் செலுத்து!

– தொழிலாளர் விழிப்புணர்வு சிந்தனைகள்

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! | துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு

முதலாளித்துவ சுரண்டல்கள் – அடக்குமுறைகளை
முறியடிக்க ஜூலை 09 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை
வெற்றி பெறச்செய்வோம்!

ஜூலை 09 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் ஏன்?

* விலைவாசிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் ஊதியத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை!

* வறுமை,பட்டினிச்சாவு, வேலை இன்மை, வேலைபறிப்பு -; கார்ப்பரேடுகளின் செழிப்பு… இவை தான் இந்தியாவின் உண்மையான அடையாளம்!

கார்ப்பரேட்டுகளின் இலாபம் 22.3% உயர்ந்திருக்கிறது.1.5% வேலைவாய்ப்பு உயர்வு 1.5% தான்!அதாவது, கார்ப்பரேட்டுகள் வேலைவாய்ப்பை வெட்டிச்சுருக்கி இலாபம் குவிக்கின்றனர்!

* வெறும் 5% உயர்தட்டு பணக்காரர்கள் 70% செல்வத்தை குவித்து வைத்துள்ளனர். 90% உழைக்கும் மக்களது குடும்பங்கள் சர்வதேச வாழ்க்கைத்தரத்துக்கும் கீழாக இருக்கின்றன!

* முதலாளிகள் தொழில் தொடங்க 29 தொழிலாளர் சட்டங்கள் ஒழிப்பப்பட்டு அவை வெறும் 4 சட்ட நடைமுறைத் தொகுப்புகளாக ( 4 Labour Codes ) மாற்றப்பட்டுள்ளன!

* சட்டம் என்றிருந்தால் உரிமைக்காகப் போராட முடியும்.ஆனால், நடைமுறைத் தொகுப்பு என்பது முதலாளிகள் விரும்பினால் மட்டுமே அமலாக்க முடியும்!

* தொழிற்சங்கப்பதிவு, அதை நடத்தும் உரிமை, கூட்டுபேர உரிமை ஆகியவற்றை முதலாளிகள் நினைத்தால் ரத்து செய்ய முடியும்.முதலாளிகளை தட்டிக் கேட்க தான் அரசாங்கத்துக்கு ‘அதிகாரம்’ இல்லை!

* பணியிடப்பாதுகாப்பு, பணிப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு – இவற்றை முதலாளிகள் மதிக்க வேண்டியதில்லை!

* நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலை என்பதை நாளொன்றுக்கு 12 மணிநேரம் ஆக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

* 12 மணிநேர வேலை என்பது தொழிலாளியின் ஓய்வை பறிப்பதோடு தொழிலாளியை அற்ப வயதில் சாகடிப்பதாகும்!

* ஆலை சார்ந்த தொழிலாளர்கள் 10% என்றால், எஞ்சிய 90% உழைப்பாளிகள் அமைப்புசாராத் தொழிலாளர்கள். இவர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிது. வேலைக்கேற்ப கூலி கிடைப்பது அரிதிலும் அரிது. சமூகப்பாதுகாப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை!

* உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை என பல இலட்சம் கோடிகளை வாரி இறைக்கும் அரசுகள், அந்த முதலாளிகள் வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா என்று சோதிப்பதில்லை! எல்லா பணமும் நமது வரிப்பணம்!

* சில ஆயிரம் கடனுக்காக விவசாயிகளின் அற்ப உடமைமைகளை ஜப்தி செய்யும் அரசு வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் 20 இலட்சம் கோடிகளுக்கும் மேலாக கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இதுவும் நமது பணம்!

* கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக தொழிலாளர் நலச்சட்டங்கள் மட்டுமின்றி வனச்சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் உள்ளிட்டவை மாற்றப்படுகின்றன – நீர்த்து போக வைக்கப்படுகின்றன!

* இது வரை குற்றமாக அறிவிக்கப்பட்ட சட்டப்பிரிவுகள் குற்றமல்லாத; வெறும் அபராதத்துடன் அனுமதிக்கக்கூடிய பிழைகளாக்கப்படுகின்றன!

* மறுபுறத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கங்க முன்னோடிகள் மீதான அடக்குமுறைகள் தீவிரமாகின்றன.ஏற்கனவே இருக்கும் ஊ….பா போன்ற கொடிய சட்டங்களோடு இந்திய தண்டனைச் சட்டம் (BNS) பிரிவு 111 மூலம் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டுள்ளன!

* 3 விவசாய சட்டங்களை கைவிடுவதாகச் சொன்ன ஒன்றி அரசின் வாக்குறுதியும், குறைந்தபட்ச ஆதாரவிலை தீர்மானித்தலும் காற்றோடு போய்விட்டன!

* நாட்டின் இயற்கை/ கனிம வளம், மனித வளம், தொழில்வளம் ஆகிய எல்லாவற்றையும் கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுத்த அரசு, பொதுத்துறை நிறுவனங்களை முற்றும் முழுதாக அழிக்கத்துடிக்கிறது!

* ஏற்கனவே தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ் போன்றவற்றில் தனியாரை அனுமதித்து பொதுத்துறை நிறுவனங்களை அழித்த அரசு, ரயில்வே, இராணுவ தளவாட உற்பத்தி போன்ற கேந்திரமான சேவைகளை கார்ப்பரேட்டுகளுக்கு பலிகொடுக்க கையாளும் புதிய உத்திக்குப் பெயர் கார்ப்பரேசன்களாக்குதல்!

* முன்னொரு காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த பொதுத்துறைகள் இன்று செயற்கையான நட்டக்கணக்கில் தள்ளப்படுகின்றன!

* ரூ.200 இலட்சம் கோடி மதிப்பு கொண்ட இந்தியாவின் வங்கித்துறை ஊழியர் பற்றாக்குறை, வாராக்கடன்கள் அதிகரிப்பால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.இவை வீழ்ந்தால் இந்தியா திவாலாகி விடும்!

* வேலைவாய்ப்பை உருவாக்காத அரசும்,கார்ப்பரேட்டுகளும் கல்வித்துறையை கபளீகரம் செய்து காயடிக்கப்பட்ட பட்டதாரிகளையே உருவாக்குகின்றன!

* விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சலம் என்று பெயர் வைத்தது போல, மாணவர்களின் சுயத்தைப் பறிக்கும் கல்விக்கொள்கைக்கு தேசிய கல்விக் கொள்கை என்று பெயர் சூட்டி திணிக்கின்றனர்!

என்ன செய்ய வேண்டும்?

* ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேசவிரோத செயல்களது பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது…இதற்கு காரணமான தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளை அடித்து நொறுக்குவோம்!

* ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை பாட்டாளி வர்க்கமாக ஒன்றிணைப்போம்!

ஜூலை 9 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)

தொடர்புக்கு: ஆ.கா. சிவா, ஒருங்கிணைப்பாளர்.

முகவரி: நெ.1, குமரன் தெரு, சோழன் நகர், பட்டாபிராம்,
சென்னை-72 செல் : 7397404242

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 16-31, ஆகஸ்டு 1-15, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 17-18 | ஜூலை 16-31, ஆகஸ்டு 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காமராஜர் ஆட்சியின் யோக்கியதை? மூப்பனாரின் முகவிலாசம்
  • வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம் வெற்றி!
    புரட்சிகரப் போராட்டத்தில் புதிய அத்தியாயம்!
  • இரட்டை வேடதாரிகளின் ஐக்கிய முன்னணி
  • ஐக்கிய முன்னணியின் கிரிமினல் பின்னணி
  • மயானமாகிறது ஈராக்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • “வேலை கொடு!  இல்லையேல் எங்கள் வழியில் வாழ விடு!”
  • அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தம்: அமெரிக்காவின் மேலாதிக்கம் இந்தியாவின் பம்மாத்து
  • ஈழம்: புலிகளின் இராணுவ சாகசம் நெருக்கடியைத் தீர்க்குமா?
  • தொடர் ‘கற்பழிப்பு’களால் கேரளாவெங்கும் பீதி
  • “ஆசாத்” காஷ்மீரில் இராணுவவெறி இந்தியாவுடன் பாக். போட்டி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 1-31, ஜூலை 1-15, 1996 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 14-16 | ஜூன் 1-31, ஜூலை 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆளும் வர்க்க அரசியல் தோல்வி
  • பூசையற்ற புரட்சி நாற்காலியில் வலதுகள் நெருக்கடியில் ‘மார்க்சிஸ்டு’கள்
  • தூத்துக்குடி கலவரம்: பின்னணியில் ஸ்டெர்லைட் முதலாளிகள்
  • தொடரும் கொத்தடிமைத்தனம் நாகரிக உலகின் காட்டுமிராண்டித்தனம்
  • காஷ்மீர்: இராணுவமே நடத்திய மோசடித் தேர்தல்
  • கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்க முயலும் சி.பி.எம்.
  • புதிய பொருளாதாரக் கொள்கை படுதோல்வி
  • ‘உர பேர ஊழல்’ 133 கோடி பகற் கொள்ளை
    இந்திரா காந்திக்கு ஒரு ராஜீவ் காந்தி நரசிம்ம ராவுக்கு ஒரு பிரபாகர் ராவ்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



பக்தி – மதவெறி – கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்

மிழ்நாட்டைக் கலவர பூமியாக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாண்டின் தொடக்கத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவது முருகன் கோவிலின் புனிதத்தைக் கெடுப்பதாகக் கூறி பிரச்சினையைக் கிளப்பியது சங்கிக் கும்பல்.

ஆனால், மதுரை மக்களின் மதநல்லிணக்க மரபும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் எதிர் நடவடிக்கைகளும் சங்கிக் கும்பலை நெருக்கடிகளுக்குள்ளாக்கி பின்வாங்க வைத்தது. இனியும் இவ்வாறு நேருக்கு நேர் தமிழ் மக்களின் உணர்வுடன் மோதினால், அம்பலப்பட்டு போவோம் என்றுணர்ந்த இந்து முன்னணிக் கும்பல் ‘முருக பக்தர்’ என்ற வேடத்தைப் போட்டுக்கொண்டு தனது அமைப்பு மாநாட்டை முருக பக்தர் மாநாடு என்று அறிவித்தது.

தொடக்கத்தில் “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கூச்சலிட்ட இக்கும்பல், “எதிர்ப்பாளர்களுக்கு பதிலளிப்போம்!” என்று பம்மியது. சிக்கந்தர் தர்கா குறித்து நேரடியாக பேசினாலோ, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று பேசினாலோ தமது கலவர நோக்கத்தை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதால், ‘பக்தர்கள் மாநாடு’ என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டது. “அறுபடை வீடுகளைக் காப்போம், கோவிலைக் காப்போம்” போன்ற முழக்கங்களை முன்வைத்தது. இது அதிகார வர்க்கத்திலும் நீதித்துறையிலும் இருக்கும் சங்கிகள், நெருக்கடி ஏதுமில்லாமல் மாநாடு நடத்துவதற்கான அனுமதி வழங்குவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

எனினும், பக்தர் வேடமணிந்து முருக பக்தர்கள் மாநாடு என சங்கிக் கும்பல் பின்வாங்கியது என்பது, எதிர்ப்பின் காரணமாக மேற்கொண்ட நடவடிக்கை மட்டுமல்ல.

மதவெறி – அதிகார வெறியை மறைக்க பக்தி வேடம்

ஒருபுறம், பக்தர்கள் மாநாடு என இந்து முன்னணிக் கும்பல் குறிப்பிடும் அதேவேளையில், சங்கப் பரிவாரத்தின் இன்னொரு பிரிவான பா.ஜ.க-வோ இந்த மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டின் அரசியலை மாற்றுவோம் என்று கொக்கரித்தது.

பாசிச மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மாநாட்டிற்குப் பிரச்சாரம் செய்வதற்காக மதுரைக்கு வந்தார். ஜூன் 9-ஆம் தேதி நடந்த பா.ஜ.க-வின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்து முன்னணி மாநாட்டிற்காக ஐந்து லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என்றார். இம்மாநாட்டிற்கு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருவதாகவும் அறிவித்தார்.

இப்படியாக, பா.ஜ.க. இந்த மாநாட்டை நடத்தி முடிப்பதை தனது முதன்மையான நிகழ்ச்சிநிரலாக எடுத்துக்கொண்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மாநாடு எதிரொலிக்கும் என்று பா.ஜ.க-வினர் கூச்சலிட்டனர்.

தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தின் தொடக்கம்தான் இந்த மதுரை மாநாடு என ஜனநாயக சக்திகள், ஊடகங்கள் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களே அம்பலப்படுத்தினர்.

பக்தியே சங்கிக் கும்பலின் மூலதனம்

முருக பக்தர் மாநாடு என்ற இந்து முன்னணி மாநாட்டை, மக்கள் அடையாளம் கண்டுகொண்ட அளவிற்கு சங்கிக் கும்பலின் பக்தி வேடத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

அதனால்தான், தனது இந்துத்துவ சதித்திட்டத்தை நடைமுறைப்படுத்த சங்கிக் கும்பல் தனது நடவடிக்கைகளை மக்களின் பக்தி, ஆன்மீக உணர்விலிருந்து தொடங்குகிறது. மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இந்துமத கோவில்களை இணைத்து ஆன்மீக சுற்றுலா, பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கும்பமேளா, ராமநவமி, ஹனுமன்நவமி போன்ற மத நிகழ்ச்சிகளை அரசு பொறுப்பெடுத்து நடத்துவது போன்றவையும் இந்த நோக்கத்தில்தான்.

மேலும், இச்சங்கிக் கும்பலானது சமூக ஊடகங்களின் மூலமாக பக்தி என்ற பெயரில் அடிமுட்டாள்தனமான கருத்துகளைப் பரப்பி வருகிறது. தாங்கள் வணங்குகின்ற கடவுள்களைப் பற்றி இவ்வாறு, இந்த சங்கிக் கும்பல் வழக்கத்திற்கு மாறான, மிகைப்படுத்தப்பட்ட கதைகளைக் கட்டவிழ்த்துவிடும்போது, சாதாரண இந்து பக்தர்கள் அதனை அங்கீகரித்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து புரட்டுகளைப் பார்க்கும் அந்த சாதாரண இந்து பக்தர்களின் சுயசிந்தனையானது செயலிழக்கத் தொடங்குகிறது. இதுதான், இக்கும்பல் இசுலாமியர்கள், கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான பொய்களையும் வதந்திகளையும் பரப்பும் போது எதிர்ப்புகள் ஏதுமின்றி, ஆமோதித்துக் கொள்வதற்கு காரணமாகும்.

சங்கிக் கும்பலின் வதந்திகளை நம்பும் இந்த சாதாரண இந்து பக்தர்கள், தாம் வசிக்கும் பகுதிகளில் இசுலாமியர்களுக்கு எதிராக பொய்-வதந்திகளைக் கிளப்பிவிட்டு சங்கிக் கும்பல் கலவரங்களைத் தூண்டும்போது, இக்கும்பலின் அக்கிரமங்களைக் கண்டு அமைதி காக்கின்றனர்; இசுலாமியர்கள், கிறிஸ்த்தவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கும் போது வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குச் சென்றுவிடுகின்றனர்.

இவ்வாறு மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மதவெறிக்குப் பழக்கப்படுத்த சங்கிக் கும்பல் பயன்படுத்தும் ஆயுதம்தான் பக்தி!

“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கொக்கரித்த இக்கும்பலுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கவே, முருக பக்தர்கள் மாநாடு என்று பக்தர் வேடத்தை அணிந்து கொண்டதற்கும் இதுவேதான் காரணமாகும்.

பக்தி வேடத்தைத் திரைக்கிழிக்கும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு

திருப்பரங்குன்ற மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதால், முருகன் கோவிலின் புனிதம் கெட்டுவிடுகிறது; இது, முருக பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிரானது; ஆகையால், சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பது சங்கிகளின் தொடக்கக்கால பிரச்சாரமாகும்.

இந்த நச்சுப் பிரச்சாரத்தை அப்போதே முறியடிக்காததன் விளைவுதான், சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் பழக்கமே இல்லை என்று சங்கிகள் அப்பட்டமாக பொய் பேசி வருவதற்கு அடிப்படையாகும். இதனை அப்படியே வளர்த்தெடுத்து, தர்காவே ஆக்கிரமிக்கப்பட்டது என்று சொல்லி, அதன் மீது “கரசேவை” நடத்துவதுதான் இச்சங்கிக் கும்பலின் சதித்திட்டமாகும்.

இதனைத்தான், பிப்ரவரி 4-ஆம் தேதி “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று பா.ஜ.க-வின் எச்.ராஜாவும் இந்து முன்னணியின் காடேஸ்வரனும் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்தில் கொக்கரித்தனர்.

இச்சூழலில், பார்ப்பன புராணத்தின் அடிப்படையில் முருகனுக்குப் புனிதம் கற்பிக்கும் சங்கிக் கும்பலின் மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. மேலும், உழைக்கும் இந்து பக்தர்களைத் தம்பக்கம் திரட்டும் இந்து முன்னணியின் மதவெறிக் கூச்சலை அடக்க வேண்டியிருந்தது.

அந்தவகையில்தான், “முருகனை மீட்போம், கருப்பனைக் காப்போம்!” என்ற முழக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் முன்வைத்தன. தமிழர் கடவுளாகிய முருகனைப் பார்ப்பனமயமாக்கியதை அம்பலப்படுத்தின. வேட்டைக்கடவுள் முருகன் என்பதையும் சிக்கந்தருக்கு உழைக்கும் இந்து மக்கள் ஆடு-கோழி பலியிடும் மரபையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டின. இன்று, சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடும் உரிமையை மறுக்கும் சங்கிக் கும்பல், நாளை கருப்பசாமி, சுடலைமாடன், அய்யனார், பாண்டி கோவில் என நாட்டார் தெய்வங்களுக்கும் குல தெய்வங்களுக்கும் ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் உரிமையை பறித்துவிடும் என்றும் ஏற்கெனவே பல அம்மன் கோவில்களை பார்ப்பனமயமாக்கியிருப்பதையும் எடுத்துக்காட்டி உழைக்கும் மக்களை எச்சரித்தன.

இந்த முழக்கமும் அதன் அடிப்படையிலான தொடர்ச்சியான சங்கிக் கும்பலுக்கு எதிரான இவ்வமைப்புகளின் போராட்டங்கள், அம்பலப்படுத்துதல்களும் இந்துமதவெறியைக் கேள்விக்குள்ளாக்கியது. மார்ச் 9-ஆம் தேதி, மதுரையில் நடந்த மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள், ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியதை வலியுறுத்தினர். தமிழ் கடவுள் முருகனுக்கு ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் மரபு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கினர்.

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைக் கொண்டுவந்து இயற்கை வளத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கவந்த பாசிச மோடி அரசு, அம்மக்களின் உறுதியான எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கியது. ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த மோடி அரசுக்கு எதிராக, மதுரை அலங்காநல்லூர் மக்களின் போராட்டமானது உலகமே திரும்பிப் பார்க்க வைத்த, ஜல்லிக்கட்டு எழுச்சியாக வளர்ந்தது. மதுரை மக்களின் இந்தப் போராட்ட மரபை மக்களுக்கு எடுத்துக்காட்டி, இந்து மதவெறிக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என்ற இப்புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரமானது, சங்கிக் கும்பலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

இவற்றின் தொடர்ச்சியாகத்தான், சங்கப் பரிவாரக் கும்பல் பின்வாங்கி முருக பக்தர்கள் மாநாடு என்று பேசத் தொடங்கியது.

உழைக்கும் மக்களின் பக்தியுணர்வில் இருக்கும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வையும் அவர்களது போராட்ட மரபையும் எடுத்துக்காட்டி மக்களுக்கு உணர்த்தும்போது, சங்கிக் கும்பலின் மதவெறிப் பிரச்சாரத்தை முறியடிக்க முடியும், அதனைப் பின்வாங்க வைக்க முடியும் என்பதுதான் அனுபவமாகும்.

பக்தி – மதவெறி – கலவரம்

ஆக, தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வுக்கு நேருக்கு நேர் முகம் கொடுக்க முடியாத இச்சங்கிக் கும்பலின் உத்திதான் பக்தி – மதவெறி – கலவரம் என்ற சூத்திரமாகும். திருப்பரங்குன்றத்தில் எடுத்த எடுப்பிலேயே மதவெறியைப் பேச முயன்று மூக்கறுப்பட்டுள்ள இச்சங்கிக் கும்பல், பக்தி என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டுள்ளது. இதனை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டியது தமிழ்நாட்டு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

ஆனால், தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசோ, முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியது; அதில், பார்ப்பனமயமாக்கப்பட்ட முருகனையே முன்னிறுத்தியது; பள்ளி மாணவர்களை கந்தசஷ்டி பாராயணம் பாடச் சொன்னது; அர்ஜுன் சம்பத் போன்ற சங்கிகளை இம்மாநாட்டிற்கு அழைத்து கௌரவித்தது. இதனால், சங்கிக் கும்பலால் இந்த மாநாடு வரவேற்கப்பட்டது.

சங்கிக் கும்பல் முன்வைக்கும் பார்ப்பனமயமாக்கப்பட்ட இந்து மத உணர்வுக்குள் சென்று, இந்து மக்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிப்பது, சங்கிக் கும்பலின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்பதுதான் மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் அனுபவமாகும்.

ஆகையால், தேர்தலில் பா.ஜ.க-விற்கு ஜனநாயகம் வழங்குவது எந்த அளவிற்கு ஆபத்தானதோ, அதே அளவிற்கு பக்தி வேடமணிந்துவரும் சங்கப் பரிவாரக் கும்பலை எதிர்க்கத் தயங்குவதும், பக்தியைப் பிரச்சாரம் செய்வது அவர்களது உரிமை என்று அங்கீகரிப்பதும் ஆபத்தானதாகும்.

பொதுவில், தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை மட்டும் வைத்துக்கொண்டு சங்கிக் கும்பலை விரட்டியடித்துவிட முடியாது. இச்சங்கிக் கும்பல், நேரடியாக மதவெறிக் கூச்சல் போடும்போது அதனை அம்பலப்படுத்துவதைவிட, இதுபோல பக்தர் வேடமணிந்துவரும் போதுதான் அக்கும்பலை இன்னும் தீவிரமாக தோலுரிக்க வேண்டும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 16-30, மே 1-31, 1996 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 11-13 | ஏப்ரல் 16-30, மே 1-31, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நாடாளுமன்ற தொங்குநிலை: தீராத அரசியல் நெருக்கடி
  • ”சோ”வின் துக்ளக் அரசியல்
  • காந்தி – நேதாஜி – பட்டேல் – நேரு: ‘தேசிய’ப் பாரம்பரியத்தின் ஊழல் வரலாறு!
  • பா.ம.க. – கந்து வட்டி ரவுடிக் கும்பல் – போலீசு புனிதக் கூட்டு
  • புதிய பொருளாதாரக் கொள்கை படுதோல்வி
  • காஷ்மீர்: அரசு பயங்கரவாதத்தை மறைக்க தேர்தல் கோவணம்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கழிசடை அரசியலில் தேர்தல் அணிவகுப்பு
  • கருப்புப் பணத்தை வாரியிறைத்து விளம்பர வாண வேடிக்கை
  • தேர்தல் கூத்து: தடி எடுத்தவன் தண்டல்காரன்
  • தேர்தல் கூத்து: ‘ஏழைகளின் தலைவர்கள்’ ஹெலிகாப்டரில் பறந்தனர்!
  • சாதி – மதவெறியே முக்கிய துருப்புச் சீட்டு
  • வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற பயில்வான்கள்! துப்பாக்கிகள்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஜூலை 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – பக்தி – மதவெறி – கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்
  • மதுரை: இந்து முன்னணி மாநாடு நீதிமன்றமே துணை!
  • இந்து முன்னணியின் மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’
  • ’முருக பக்தர்’ மாநாடு: மக்களின் புறக்கணிப்பு சங்கிகளின் கொக்கரிப்பு
  • பா.ஜ.க-வின் சாதிவாரிக் கணக்கெடுப்பு: சாதிய முனைவாக்கத்திற்கான கருவி!
  • தரவுகளை எதிர் ஆயுதமாக்கும் பாசிஸ்டுகள்!
  • ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்
  • நுகர்வு வெறி – இந்து மதவெறிக்கு பலியிடப்படும் மக்கள்!
  • ஆந்திர அரசின் மாம்பழத் தடை: கூட்டாட்சிக் கோட்பாட்டின் போலித்தனம்
  • கீழடி: அறிவியல் உண்மைகளை வெறுக்கும் பாசிச கும்பல்
  • ஈரான் மீதான போர்: அமெரிக்க வல்லரசின் படுதோல்வி
  • ஆபரேஷன் ககருக்கு எதிராக குரல் கொடுப்போம்!
  • மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் பாகம் – 2


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1996 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 9-10 | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது!
  • திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிராக
  • ஓட்டுப் பொறுக்கிகளின் அரசியல் சூதாட்டம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ஹவாலா இலஞ்ச வழக்கு: சி.பி.ஐ. மட்டுமல்ல நீதித்துறையும் அரசின் கைப்பாவையே
  • புதிய பொருளாதாரக் கொள்கை படுதோல்வி
  • தென் மாவட்ட தலித்துகள் மீது மேல் சாதி-போலீசு கூட்டுத் தாக்குதல்-தலைமையின் தடுமாற்றம்
  • எச்சரிக்கை: கில்லாடி இந்திரகுமாரி
    வேட்டி-சேலை திருடியவள் கோவணத்தைப் பறிக்க வருகிறாள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1996 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 07-08 | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்:ஹவாலா கட்சிகளின் கிரிமினல் தொடர்புகள்
  • ஹவாலா விகாரம்: உத்தம வேடங்கட்டி ஆடும் ஊழல் பெருச்சாளிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • தமிழக அரசியல்: கூட்டணிக் குழப்பங்களின் சூட்சமம் பிழைப்புவாதமே
  • திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிராக..
  • பீகாரில் வர்க்கப் போர்: சாதிவெறி நிலப்பிரபுத்துவ பயங்கரவாதத்துக்குப் பதிலடி
  • புதிய பொருளாதாரக் கொள்கை படுதோல்வி
  • வடிவுரிமை வலைக்குள் உலக உயிரின உரிமைகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv



ரிதன்யா தற்கொலை: ‘வரதட்சணை’ என்ற பெயரில் அடைமானம் வைக்கப்படும் பெண்கள் | தோழர் மருது

ரிதன்யா தற்கொலை: ‘வரதட்சணை’ என்ற பெயரில்
அடைமானம் வைக்கப்படும் பெண்கள் | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram