privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி சுற்று்ச் சுவர் இடிப்பு

கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி சுற்று்ச் சுவர் இடிப்பு

-

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி சுற்றுச் சுவரை தனி ஒரு நபரின் தூண்டுதலால் காவல்துறையில் 2 நபர்களும் கோர்ட் அமீனா மற்றும் கிராம மணியகார் உட்பட அனைவரும் 27-6-2014 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு வந்து இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கியுள்ளார்கள்.

மாணவர்களிடம் இருந்து இது தொடர்பாக தோழர்களுக்கு செய்தி கிடைத்தது. உடனே கல்லூரிக்கு சென்று மாணவர்களிடத்தில் பேசினோம். “கல்லூரி மதில் சுவரை இடித்ததை கண்டித்து நாம் உடனே போராட வேண்டும்; நாளை காலை வந்து நாம் கேட்டை இழுத்து மூடிவிட வேண்டும்;  சாலை மறியல் செய்வோம் எல்லா அதிகாரிகளும் வருவார்கள் அவர்களிடம் பேசிக் கொள்வோம்” என்று மாணவர்கள் கூறினார்கள்.

கல்லூரிக்கு தொடர்பு கொண்டு பேசிய போது, “முறைப்படி எந்த தகவலும் இல்லாமல் இயந்திரத்தை கொண்டு வந்து போலீசு காவலுடன் இடித்தார்கள். காலை நேரம் என்பதால் அவர்கள் இஷ்டம் போல் தேவையான அளவிற்கு இடித்து விட்டார்கள். கேட்பதற்கு ஆள் இல்லாமல் போய் விட்டது” என்று கூறினார்கள்.

ஏற்கனவே இக்கல்லூரியில் “அரசு கல்லூரியில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆள் சேர்ப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தை” அடுத்து  பேராசிரியர்கள் அனைவரிடத்திலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அடுத்த நாள் காலையில் கேட்டை சாத்தி மாணவர்களிடம் விளக்கி பேசி போராட்டத்தை தொடங்கினோம்.

போராட்டம் இதுபோராட்டம்
கல்லூரியை பாதுகாக்கும்
மாணவர்களின் போராட்டம்

நடவடிக்கையெடு நடவடிக்கையெடு
கல்லூரிக்கு தகவல் இல்லாமல்
காம்பவுண்ட் சுவரை இடித்தவர் மீது
நடவடிக்கையெடு நடவடிக்கையெடு

பாதுகாப்போம் பாதுகாப்போம்
எங்கள் கல்லூரியை பாதுகாப்போம்!

கல்வி கொள்ளை அடிப்பவர்கள்
காம்பவுண்ட் சுவரை இடிப்பது என்றால்
காவல் துறையும் நீதித்துறையும்
யாருக்காக யாருக்காக

அரசு கல்லூரி என்பதால்
ஆளுக்கு ஆள் சுவரை இடிப்பதை
விடமாட்டோம் விடமாட்டோம்
மாணவர்கள் நாங்கள் விடமாட்டோம்!

முழக்கங்களை போட்டுக் கொண்டே உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையை மறிக்க சென்ற போது காவல் துறையினர் தடுத்தார்கள்.

“நீங்க படிக்கிற பசங்க ரோட்டில் வந்து எல்லாம் போராட கூடாது. கல்லூரிக்கு வாங்க” என்று சமாதானம் செய்ய முயற்சி செய்தார் காவல் துறை அதிகாரி. முன்னணியாக இருந்த மாணவர்கள் அழைத்து, “பிரின்ஸ்பாலிடம் போய் பேசலாம்” என்று திசை திருப்பினார்.

மாணவர்கள் காவல் துறையிடம் தோழர்களை பேச சொன்னார்கள். “காலையில் போலீசு துணையுடன் கல்லூரிக்கு வந்து சுவரை இடித்தார்கள். அது மட்டுமில்லாமல் கல்லூரிக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. காம்பவுண்ட் சுவரை மீண்டும் கட்டும் வரையில் நாங்கள் விட மாட்டோம்” என்று கூறியவுடன் “முதலில் கல்லூரிக்குள் வாருங்கள் பேசி முடிவெடுப்போம்” என்று மாணவர்களை திசைதிருப்ப முயற்சித்தது காவல் துறை.

மாணவர்களுடைய போராட்டத்திற்கு பிறகு வந்து சேர்ந்த காவல் துறை சுவரை சட்டப்படி தான் இடித்தார்கள் என்று நியாயப்படுத்தினார்கள். கல்லூரி முதல்வரிடம் 2008-ல் வெளியான தீர்ப்பின் நகலை காட்டி கோர்ட் ஆர்டர் இருப்பதாகவும்,  “உங்களுக்கும் இதை அனுப்பியுள்ளார்கள் என்று நாங்கள் நினைத்திருந்தோம்” என்றும் அண்டபுளுகை கூறினார்கள்.

அவர்கள் கொடுத்த தீர்ப்பு நகல் 2008-ல் வெளியானது. அதை எதிர்த்து கல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி தாசில்தாரை வரவழைக்கும்படி கோரினோம்.

தாசில்தார் கல்லூரிக்கு வந்தார். அவரிடம் இடிக்கப்பட்ட சுவரை காண்பித்து காலை 7.00 மணிக்கு அதிகாரிகள் , காவல்துறை, நீதித் துறையை சார்ந்தவர்கள் முன்னிலையில் இடிக்கப்பட்டது என்று கூறி அரசு கல்லூரியை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி நடப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியவுடன், “இது தொடர்பாக எங்களுக்கும் எந்த ஆர்டரும் வரவில்லை. சட்டவிரோதமாக சுவரை இடித்தது கிரிமினல் குற்றம். இடித்தவர்கள் மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுப்பேன்” என்று தாசில்தார் மாணவர்களிடத்தில் உறுதியளித்தார்.

கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் காவல்துறை நடந்து கொண்டதை விளக்கி பேசினார்கள். “2008 ஆணையை காட்டி கோர்ட் உத்தரவு படி தான் இடித்தோம் என்று போலீசு பேசியது தவறு. யார் யார் வந்தார்கள் என்று புகார் கொடுங்கள், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுப்போம்” என்று தாசில்தார் பேசினார்.

சுவரை கட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூறினார்கள்.

அரசு சொத்தை ஒழிப்பதற்கு அரசாங்கமும், அதிகாரிகளும் துடிக்கும் போது, மாணவர்கள் நமக்கென்ன என்று இருக்காமல் தாம் பயிலும் கல்லூரி கட்டிடத்தை காப்பாற்ற போராடியிருக்கிறார்கள் என்பதை புமாஇமு வாழ்த்தி வரவேற்கிறது. போராட்டத்திற்கும் தொடர்ந்து துணை நிற்போம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க