privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக் - ஏப்ரல் 25 வேலைநிறுத்தம் - களச்செய்திகள்

டாஸ்மாக் – ஏப்ரல் 25 வேலைநிறுத்தம் – களச்செய்திகள்

-

ழைய தருமபுரி பஞ்சாயத்திற்கு அருகில் உள்ள கே. என் நடு அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த டாஸ்மாக் கடையை உச்சநீதிமன்ற உத்தரவின் படி மாவட்ட நிர்வாகம் அகற்றியது.

ஆனால் ஏற்கனவே இருந்த கடையிலிருந்து 50 அடி தூரம் தள்ளி கடையை நிறுவ பழைய தருமபுரியைச்சேர்ந்த குடவை என்கிற சின்னப்பையனின் மகன் மணிமேகன் என்பவர் தனது நிலத்தில் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து  மதுகடைவைக்க கட்டிடம் கட்டிவருகிறார். இத்தனைக்கும் சிபிஐ கட்சியைச்சேர்ந்த கிளைச்செயலாளரான சின்னராஜ் என்பவரது தைரியத்தில்தான் இவர் கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இக்கடையை மூட ஊர்த்தலைவர்களை மக்கள் அதிகாரம் தோழர்கள் சந்தித்து பேசினர். அவர்களும் உற்சாகத்தோடு ஏற்றுக்கொண்டனர். இதன் அடிப்படையில் மனுநாளில் ஊர்தலைவர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்களும் சென்று மனு கொடுத்தனர்.

மனுநாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கவேண்டும். ஆனால் அன்று பத்திற்கும் மேற்பட்ட ஊர் மக்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மனுகொடுக்க வந்திருந்த்தால் மாவட்ட ஆட்சியர் மனுவை பெறாமல் அந்த துறை அதிகாரிகளே பெற்றனர். அதன்படி கலால் மற்றும் ஆயத்தீர்வை அதிகாரியான பெண் அதிகாரியிடம் மனுகொடுக்கப்பட்டு பாதிப்புகள் பற்றி விளக்கி பேசப்பட்டது. ஆனால் இதை ஏற்காத அந்த அதிகாரி அரசாங்கம் கடைகளை வைக்கச் சொல்கிறது என்றார்.

இந்நிலையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சுவரொட்டி, மெகாஃபோன் பிரச்சாரம் என்ற வகையில் மக்களிடம் பிரச்சாரம் செய்து அணிதிரட்டினர். மேலும் ஏரி வேலை செய்யும் பெண்களையும் சந்தித்து பேசினர். இந்நிலையில் ஊர் தலைவர்கள் 20 பேர் சென்று நிலம் கொடுத்த மணிமேகனிடம் பாதிப்பைக்கூறி நிலம் டாஸ்மாக்கிற்கு தருவது தவறு என பேசினர். ஆனால் அவர் திமிராக மறுக்கவும் ஊர் தலைவர்கள் ஆத்திரம் அடைந்து வந்துவிட்டனர்.

இந்த நிலையில் மணிமேகன் சிபிஐ சின்னராஜ் வழிகாட்டலில் மாவட்ட ஆட்சியருக்கு மனுகொடுத்துள்ளார். இதில் ஊர்த்தலைவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகளையும் அவமானப்படுத்தும் வகையிலும் எழுதப்பட்டிருந்தது. இது மேலும் ஊர் மக்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. இது குறித்து கேட்க சென்ற மக்களை அவமதித்து நடந்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் அவனுக்கு தர்ம அடிகொடுத்தனர்.

மேலும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை திரட்டி காலை 11 மணிக்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் பகுதிமக்களிடம் கடையை உடைக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

(படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல அழுத்தவும்)

தகவல்:
மக்கள் அதிகாரம், தர்மபுரி


ஏப்ரல் 25 பந்த் – மோடியிடம் கெஞ்சாதே, தமிழகமே போராடு !

இது ஜல்லிக்கட்டில் டெல்லியை பணியவைத்த தமிழகம் !

தமிழனத்தின் எதிரிகளுக்கு பாடம் புகட்டுவோம் !

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை – 91768 01656


சத்தியபாமா பல்கலைக்கழகத் தொழிலாளர் போனஸ் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வெற்றி

போனஸ் பெறுவது தொழிலாளர் உரிமையே !
கட்டணக் கல்வி சேவையாகாது !
தனியார் கல்வி நிறுவனங்கள் லாபமீட்டும் நிறுவனமே !

தொழிலாளர்களே !
புரட்சிகர சங்கத்தில் உறுப்பினாராவோம் !
தொடர்ச்சியான போராட்டமே வெற்றிக்கு வழி !!

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்
சென்னை – 94871 51165

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க