ரதியின் “ஈழத்தின் நினைவுகள்” தொடர் பற்றி தோழர் இரயாகரன் அவரது தளத்தில் வினவையும், ரதியையும் கடுமையாக விமரிசித்து ஒரு தொடர் வெளியிட்டு வருகிறார். அதற்கான பதிலை வினவு ஒரு இடுகையாக வெளியிட்டது. இதற்கு வந்த பின்னூட்டங்களிலும் இருதரப்பையும் ஆதரித்தோ எதிர்த்தோ கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் ரதி எமக்கு அனுப்பிய மின் மடலை கீழே தருகிறோம்.
வினவு குழு,
என்னைப்பற்றி காரசாரமாக உங்கள் தளத்திலும், தமிழ் அரங்கத்திலும் பதிவுகளும் விவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், எனக்குத்தான் ஏதோ தேவையில்லாத ஓர் சங்கடத்தில் மாட்டிக்கொண்டது போல் ஓர் உணர்வு. நான் எழுத தொடங்கும் போது எனக்கு நீங்கள் எந்தவொரு கட்டுப்பாடோ, விதிகளோ விதிக்கவில்லை. நன்றி. ஆனால், இப்பொது வாசகர்களின் பதில்களைப் பார்த்தால் நான் பக்கச் சார்பாக எழுதுவதாகவும், புலிகளின் பிரச்சாரம் செய்வதாகவும் என்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது அவர்களின் கருத்து சுதந்திரம். நான் என்னைப் பற்றி ஓர் விடயத்தை என்வரையில் தெளிவுபடுத்தவே விரும்புகிறேன். நான் யாரையும் தனிப்பட்ட ரீதியில் சாடுவதற்கு உங்கள் தளத்தை களமாக பயன்படுத்தவில்லை. அது தவிர, புலிகளைப்பற்றி பேசும் ஜனநாயக உரிமை எனக்கும் உண்டு. அதை நான் உங்கள் தளத்தில் என் கட்டுரைகள் மூலம் ஏதோ புலிப்பிரச்சாரம் செய்வது போல் சிலர் தவறான அபிபிராயம் செய்கிறார்கள். நான் ஓர் பொதுப்பிரஜை, எனக்கு புலிகள் மீது மதிப்பு உண்டு. இதை நான் யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை. இதுவரை நான் என் கட்டுரைகளில் புலிகளைப்பற்றி எந்தவொரு விடயமும் எழுதியதாக நினைக்கவில்லை. இனிமேலும், நான் மக்கள் அவலம் பற்றி தான் எழுதினாலும், அது என்னை தேவையில்லாத விமர்சனங்களுக்குள்தான் தள்ளிவிடும். அதனால், நான் இத்தோடு உங்கள் தளத்தில் கட்டுரை எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன். தொந்தரவுகளுக்கு மன்னிக்கவும். எப்படியென்றாலும், உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. தொடர்ந்தும் உங்கள் கொள்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். விடைபெறுகிறேன். நன்றி.
நட்புடன்,
ரதி.
ரதியின் தொடர் இனி வெளிவராது. எங்கள் கோரிக்கையை ஏற்று இதுவரை எழுத முன்வந்ததற்கு அவருக்கு எம் நன்றி. இனி நாங்கள் வெளியிட வேண்டும் என்று விரும்பினாலும் அவர் எழுத விரும்பவில்லை. அவர் எழுத்தை விமரிசிக்கும் விவாதச்சூழல் மாறி, வினவு தளம் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.
‘புலிப்பாசிசத்தை பிரச்சாரம் செய்ய தளம் அமைத்துக் கொடுத்தோம்’ என்ற ‘வரலாற்றுப் பழி’யில் வீழ்வதிலிருந்து ரதி எங்களைக் காப்பாற்றிவிட்டார் என்றும் சொல்லலாம். இந்த அனுபவத்தை இரண்டு விதமாக தொகுத்துக் கூறலாம். “பாசிஸ்ட்டால் காப்பாற்றப்பட்ட கம்யூனிஸ்டுகள்” அல்லது “வறட்டுவாதத்தால் பாதுகாக்கப்பட்ட மார்க்சியம்!”
ரதியின் தொடர் குறித்த அறிவிப்பு வந்த உடனேயே “ஒரு பக்க சார்பு இல்லாமல் எழுதுமாறு” அறிவுறுத்தி வாழ்த்தும் தெரிவித்தார் தோழர் இரயாகரன். பின்னர் இது தொடர்பான விவாதத்தில் பின்னூட்டமிட்ட தோழர் மா.சேயை “ஒரு புலி பாசிஸ்ட்” என்று சாடினார். எமது தலையீட்டிற்குப் பின் தவறாக அவ்வாறு கருதிக்கொண்டதாக விளக்கமளித்தார். பிறகு ரதி எழுதிய தொடரில் மூன்று பகுதிகள் வெளிவந்த பின் ரதி ஒரு பாசிஸ்ட் என்றும் தனது தளத்தில் கடுமையாக விமரிசிக்கப் போவதாகவும் மின்னஞ்சல் அனுப்பினார். ( இதை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம் )
புலித்தலைமை – புலி அணிகள், புலிகள் – புலி அனுதாபிகள் என்று பகுத்துப் பார்க்கும் புரிதலை கொண்டிருப்பதாக கூறும் தோழர் இராயகரனுக்கு ரதி எழுதத் துவங்கும் முன்னரே அவர் ஒரு பாசிஸ்ட் என்ற உண்மை தெரிந்திருக்கும் பட்சத்தில் அவர் வாழ்த்து தெரிவிக்க அவசியம் என்ன? ஒரு வேளை அதன் பிறகுதான் இந்த உண்மையை அவர் கண்டுபிடித்தார் போலும். கட்டுரையாளர் ரதி ஒன்று புலி அனுதாபியாக இருக்கவேண்டும். (தற்போதைய கடிதத்தில் தன்னைப்பற்றி அவரே அவ்வாறுதான் கூறிக்கொள்கிறார்.) அல்லது அவர் தந்திரமாக மறைத்துக் கொண்டு வினவு தளத்தில் ஊடுருவிய ஒரு நரித்தனமான பாசிஸ்ட்டாக இருக்க வேண்டும். இதுதான் இரயாவின் கருத்து.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய ஆதாரங்களுடன் இதை எங்களுக்கு அவர் தெரிவித்திருக்கலாம். ஆனால் அத்தகைய ஆதாரங்கள் எதையும் இரயா வழங்கவில்லை. மாறாக வினவு தளத்தின் மீதான விமரிசனமாக அவர் எழுதி வரும் தொடரில் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
“நாங்கள் இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாத பாசிசத்தை, பொதுவான அவர்களின் துயரத்தின் ஊடாக, எம்தளத்தில் இந்திய பொதுவுடமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாம் என்பதே வினவின் நிலைப்பாடு”.(பாகம்1)
“ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது”. (பாகம்1)
“தமிழ் பாசிச வரலாற்றுக் கல்வியை இந்தியப் பொதுவுடமை இழந்து நிற்கின்றது”.(பாகம்-1)
“புலி பாசிச பிரச்சாரம் எது?, பொது மக்கள் கருத்து எது?, என்று பிரிக்கின்ற அந்த அரசியல் இடைவெளியை இன காணமுடியாதுள்ளனர்.” (பாகம்-2)
“கடந்த காலத்தில் புலிப் பாசிசம் ஆடிய பாசிச ஆட்டத்தை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் தெளிவாக அம்பலப்படுத்திப் போராடியது. நாம் நாட்டை விட்டு வெளியேறி செயலற்றுப் போன ஒரு இடைக்காலத்தில், எமக்கே அது துல்லியமாக வழிகாட்டியது. இப்படி தோழர்கள் வரலாறு இருக்க, இதையும் மீறி புலிப்பாசிசம் தோழர்களுக்கு தனது வரலாற்றை மட்டும் கற்றுக்கொடுக்க முனைகின்றது.” (பாகம்-3)
இவை அனைத்தும் மிகக் கடுமையான விமரிசனங்கள். “இது வினவு தளம் தெரிந்தே செய்யும் தவறு” என்று கூறுவது மட்டுமின்றி புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகத்தின் இதழ்கள் புலிகள் தொடர்பாக கொண்டிருக்கும் நிலைப்பாடுகளுக்கு எதிராக வினவு தளம் செயல்படுவதாகவும் இரயா குற்றம் சாட்டுகின்றார். ஆனால் ஒரு பாசிஸ்ட் பிரச்சாரம் செய்வதற்கு தெரிந்தே மேடை அமைத்துக் கொடுப்பதாக கூறும் இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் எங்கே? அதை நான்காவது பகுதியில் அவர் வழங்குவாராம்.( “அவரை (ரதியை) நாம் பாசிட் என்று ஏன் அழைக்கின்றோம், என்பதை பகுதி 4 ல் வெளிக்கொண்டு வரவுள்ளோம்.”எம் முந்தைய இடுகைக்கு இரயா அனுப்பிய பின்னூட்டம்)
முதலில் குற்றச்சாட்டு, தீர்ப்பு, அபிப்ராயத்தை உருவாக்குதல்- பிறகு ஆதாரங்களை சமர்ப்பித்தல்.! இதனை ஜனநாயக வழிமுறை என்று யாரேனும் அழைக்க விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம்.
அடுத்தது தோழமை உறவு பற்றியது. இரயா – பு.க, பு.ஜ – வினவுக்கு இடையிலான தோழமை உறவு பற்றி வாசகர்களுக்கு தெரியும். இதனை விளக்கத் தேவையில்லை. தோழர் இரயா தனது தளத்தில் ரதியின் தொடரை கடுமையாக விமரிசித்து எழுதப்போவதாக ஒரு அறிவிப்பைத்தான் கடிதம் மூலம் எங்களுக்கு வெளியிட்டார். அவர் விரும்பும் வகையில் ரதியின் தொடரை உடனுக்குடன் அம்பலப்படுத்தி வினவு எழுதியிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு எழுதத் தவறியதால்தான் தான் எழுத நேர்ந்ததாகவும் இதற்கு விளக்கமும் கூறுகிறார். அவரது கடிதத்திற்கு வினவு அளித்த பதிலில் காணப்பட்ட தோழமை உணர்வை பலவீனம் என்றோ கொள்கைப் பிறழ்வை மறைப்பதற்கான மழுப்பல் என்றோ அவர் புரிந்திருக்கும் பட்சத்தில் – கொஞ்சம் கஷ்டம்தான்.
இரயாவைப் போல அடுத்தடுத்து அவருக்கான பதில் கட்டுரைகளை நாங்கள் இறக்க முடியாது. எங்களுக்கு இது ஒரு ‘இயலாமை’; தனி ஒருமனிதனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லாததால் ஏற்படும் இயலாமை; கூட்டுத்துவம் தோற்றுவிக்கும் இயலாமை; தனது தனிப்பட்ட மன உணர்வுகளால் மட்டுமே வழிநடத்தப்பட விரும்பாதவர்களுக்கு ஏற்படும் இயலாமை. ஆனால் இரயாவுக்கும் எமக்குமான உரையாடல் தனிப்பட்ட விவகாரமாக இனிமேலும் இல்லை. பொதுவெளிக்குள் வந்துவிட்டது. வினவு வாசகர்களில் சிலரும் வினவின் நிலைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் நாங்கள் அஞ்சவில்லை – ரதி வினவு தளத்தில் பாசிசப் பிரச்சாரத்தை செய்து விடக்கூடுமோ என்று அஞ்சாததைப் போலத்தான்.
ரதி எழுதக்கூடிய எழுத்துகளுக்கு வெளியே அவர் ஒரு பாசிஸ்ட் என்பதுதான் இரயாவின் நிலை. ரதி ஒரு புலி அபிமானி என்பது எங்களுக்கோ வினவின் வாசகர்களுக்கோ தெரியாதது அல்ல. இருந்தும் அவர் கூறவிரும்பும் அகதி வாழ்க்கையின் அனுபவங்களை கூறட்டும். அவர் கூறுகின்ற அல்லது கூறாமல் விட்ட அனுபவங்களை, வரிகளுக்கு இடையில் மறைந்திருக்கும் உண்மையை விவாதத்திற்கு உட்படுத்துவோம். அதுதான் ஈழத்தமிழ் மக்களுக்கும், இந்தியத்தமிழ் வாசகர்களுக்கும் இன்று தேவைப்படுவது என்பதே வினவு கூறிவரும் நிலைப்பாடு.
அந்த வாய்ப்பு மூடப்பட்டுவிட்டது. விவாதத்திற்கு உரியவர் ரதி அல்ல. அவருக்கு வினவு மேடை அமைத்துக் கொடுத்தது சரியா தவறா என்பதே இப்போது விவாதப் பொருள். வறட்டுவாதமா, மார்க்சியமா என்பதே விவாதப்பொருள். இப்பிரச்சினையில் தோழர் இரயாவை முன்னுறுத்தி வறட்டுவாதம் குறித்த விவாதத்தை நடத்த நேர்ந்திருப்பது வருந்தத் தக்கதுதான். எனினும் இந்நிலையை நாங்கள் தோற்றுவிக்கவில்லை.
இப்பிரச்சினையில் எமது விமரிசனத்தை சில நாட்கள் இடைவெளியில் எழுதுகிறோம். பிற பணிகள் இருப்பதனால் சில நாட்கள் பொறுத்திருக்க கோருகிறோம். மார்க்சியவாதிகளை புலிகள் கொன்றொழித்தார்கள் என்பதை நாம் அறிவோம். வறட்டுவாதம் மார்க்சியத்தைக் கொல்லும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
…..
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
*********************************
தொடர்புடைய பதிவுகள்
புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்டுகளா? தோழர் இரயாகரனுக்கு ஒரு பதில்!
இந்த பதிவிலிருந்து தெரியும் விசியம் என்னவென்றால் : எதிர்காலத்தில் செம்புரட்சி ராயகரன் தலைமையில் உருவானால், அவ்ர் தோழர் ரதி மற்றும் வினவு இதர தோழர்களை முதலில் போட்டு தள்ளுவார். தோழர் வினவு தலைமையில் உருவானால் முதலில் ராயகரன் மற்றும் இந்திய போலி கம்யூனிஸ்டுகளை போட்டு தள்ளுவார். !! :)))
புரட்சிக்கு முன்பாகவே இப்படி சண்டை என்றால், புரட்சி வந்தால் என்ன ஆகும் ? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் !
பி.கு : இப்படி எழுதவதினால், எம்மை பற்றி : “ஊர் இரண்டுபட்டால் கூத்த்டாடிக்கு கொண்டாட்டம்” என்று சொல்ல வேண்டாம். நான் கொண்டாடவில்லை. மேலும், தோழர் ராயகரன் பல நேரங்களில் கேனத்தனமாக எழுதாவர் என்று முன்பே ஒரு பேச்சு உண்டு !!
தோழர் ராயகரனுக்கு யான் எழுதிய ஒரு மடல் :
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2507:2008-08-04-19-09-24&catid=74:2008
தோழர் ராயகரன்,
சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த பஞ்சம், படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை தான். மேற்கத்திய ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் அதை மிகை படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் முக்கிய காரணம், சோவியத் ரஸ்ஸிய ஒரு இரும்புத்திரையில் பின் மறைந்திருந்து. நேர்மையான, சரியான தகவல்கள் வெளியே வராமல் அமுக்கப்பட்டன். பிற நாட்டு ஊடகவியலாளர்கள்
அங்கு சுதந்திரமாக சுற்றி, தகவல் தேட அனுமதிக்க மறுக்கப்பட்டன். லோக்கல் ஊடகங்கள் முழுவதும் அரசின் கைப்பாவைகள். (ராஜ பக்ஷெ அரசு, வன்னி பகுதியில் நடந்த விதம் இதை போலத்தான். மேலும் இறுதி போரில் சுமார் 15000 முதல் 30000 தமிழர்கள் கொல்லப்படிருக்கலாம் என்று தமிழர்களாகிய நாமும் பல இதர பார்வையாளார்களும் கருதுகிறார்கள். ஆனால் சிங்கள் அரசு சில நூறு மக்கள் தாம் கொல்பாட்டதாக “ஆதாரங்களை” உருவாக்கி, உண்மையான ஆதரங்களை அழித்துவிட்டது. உண்மைதான் என்ன ? பதில் இல்லை. இதே பாணிதான் சோவியத் ரஸ்ஸிய மற்றும் இதர சர்வாதிகார நாடுகளில் நடந்தது / நடக்கும்)
மிகைபடுத்தப்பட்ட எண்ணிக்கை என்பதாலே, சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த கொடுமைகளை, மனித உரிமை மீறல்களை முற்றாக மறுக்குகிறீர்களா ? அந்த அமைப்பே அப்படிப்பட்ட விளைவுகளை தான் விளைவிக்கும் என்பதே வரலாறு காட்டும் உண்மை.
சோல்சென்ஸினை துரோகி என்று விளிக்கிறீர்கள். என்ன துரோகம் செய்தார் அவர் ? அவர் பட்ட துன்பங்கள் பொய்யா என்ன ? உலகில் யாரும் இப்போது மறுக்க வில்லை. and Solezenshen was jailed not for advocating compromise with NAzis, but for critising Stalin in letter to a freind. HE was a honest patriot who faught in the WW 2 with honour. his jailing happened much later. ok. not as you try to portary. many many innocents like him too were jailed. (i wish you too were with him in the gulag. you are cozy in France and talk like pseudo-moralist). and try to read Gutav HErlings “A World apart”
மார்கிஸம் பேசும் நீங்க, ஃபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் அடைதுள்ளீர்கள். கூபா அல்லது வட கொரியாவில்
அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கு ஒரு கூட்டு பண்ணையில் ஒரு 10 ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும் நீங்க. உலகம் வேற மாதுரி தெரியும். வந்தாரை வாழ வைக்கும் பிரான்ஸ் தேசம், போதிய மான்யம் மற்றும் உதவிகளை அளித்து, அதைவிட முக்கியமாக கட்டற்ற கருத்து சுதந்திரத்தை அளித்துள்ளது.
அதன் அருமை புரியாதவர் நீங்க. வட கொரியா செல்ல வேண்டும் நீங்க. அப்ப தெரிய்ம், சோல்சென்சின் துரோகியா இல்லை யார் துரோகி என்று.
I know you are too narrow minded and insular and undmeocratic to publish my comment. but this for your kind information. that is all.
My only wish is France should expel you to N.Korea now. It is a great shame on France and it shows the magnanimity of France which is a capitalitic democracy.
ஹிஹி அதியமான் ஒங்கள் யாரு போட்டு தள்ளுவார் 🙂 இந்த உலகத்தில் அதிக அளவு போரிட்டது மதவாதிகளும், முதலாளிகளும்தான்.. கண்ணாடியை மாத்துங்க.
போடாங்.. நல்லா வாயில வருது.
ஹலோ மரியாதையா பேசுங்க
ஒருமையில பேசுங்கன்னு எல்லாம்
ஏங்கிட்ட சொல்லாத நீ இப்படி பின்ணூட்டம்
போடுகிற வரை உனக்கு மரியாதையும் கெடைக்காது
ஒரு மண்ணும் கெடைக்காது.
தமிழன்,
அப்படி எல்லாம் அடக்கி வைத்தால் அசிடிட்டி வந்துவிடும் !!
என்னை போல “தாரளமாக” பேசலாமே !! :))
புரட்சிக்காக கூட்டக செயல்பட்ட நெருங்கிய தோழர்கள்,
பின்னாட்ட்களில் தங்களுக்கு சண்டையிட்டுக்கொண்டு,
கொலை வரை போவது மிக சகஜமான வரலாறுதான்.
லெனினுக்கு அடுத்தபடியாக இருந்த முக்கிய தலைவர்களான
டிராட்ஸ்கி, புகாரின் போன்றவர்களை ஸ்டாலின் பின்னாட்களில்
கொன்றழித்து பற்றி படித்துப் பாருங்கள் :
http://www.columbia.edu/~lnp3/mydocs/modernism/Zizek.htm
அதியமான், கம்யூனிச அவதூறுகளை விவாதிக்க இது இடமில்லை.. அதான் புதிய ஜனநாயக கட்டுரைகள் இருக்கிறதே அங்கே பார்ப்போம். மேலும், உலகில் பல அரசியல் தலைவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் இறந்தவர்களும், கொன்றவர்களும் கம்யூனிஸ்டுகள் அல்ல. இதுக்கு லிங்கெல்லாம் தரமுடியாது
//சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த பஞ்சம், படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை தான். மேற்கத்திய ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் அதை மிகை படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் முக்கிய காரணம், சோவியத் ரஸ்ஸிய ஒரு //
சம்பந்தம் இல்லாமல் உளரும் அதிமேதாவித்தனத்தை நீங்க எப்ப விடபோறீகளோ
கடைசியில் இராயகரனின் ஒற்றைத்தனம் வென்றுவிட்டது! ரதியின் தன்மான உணர்ச்சிக்குப் பாராட்டுகள்! இனியாவது இராயகரன் போன்ற ஒற்றைத் தனங் கொண்ட உயர் மீநிலை, மேதாவி பார்ப்பனியர்களிடம் இருந்து, வறட்டு, போலி ஈழ மார்க்சியர்களிடமிருந்து ம.க.இ.க விலகி, ஈழ மக்கள் மத்தியில் தன் வழியில் மார்க்சிய விழிப்புணர்வைப் பரப்பும் என நம்புகிறேன். நனைந்த பின்னும் அடிக்கடி அடித்த இராயகரனின் சாயம் அடுத்த மழையிலும் வெளுக்கும்! நன்றிகள்!
சரியான அனுகுமுறை. வினவு கருத்துடன் நான் 100% ஒத்துப்போகிறேன். தோழர்கள் உணர்ச்சிவசப்படாமல் இதை பரிசீலித்து விவாதிக்குமாறு வேண்டுகிறேன்
enna thozhar ithu mailil pesi theerkka vendiyathai pathivil pottu rendu perum kuzhambi engalaiyum kuzhappuringale.
நான் மணி
இணையம் என்பது ஒரு ஜனநாயகத்திற்கான அதாவது விவாதத்திற்கான மேடை என்று கருதுகிறேன். மற்றபடி வசிட்டரின் வாயால் பிரம்மரிஷி பட்டம் வழங்குவதற்கான அரங்கு இது அல்ல என நினைக்கிறேன்.
//தமிழ்ப்பாசிசம் தன்னை மூடிமறைத்து எப்படி எந்த வேஷத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ததோ, அதே உள்ளடக்கதில் இந்திய பொதுவுடமைவாதிகளை ஏமாற்றுகின்றது. இதற்காக தன்னை மூடிமறைத்துக்கொண்டு; களமிறங்குகின்றது. பாசிசம் எப்போதும் வெளிப்படையாக தன்னை பிரச்சாரம் செய்வது கிடையாது. அது தன்னை மூடிமறைக்கின்றது.
மக்களின் பொதுவான அவலத்தை, தன் சொந்த அவலமாக காட்டியே பிரச்சாரம் செய்கின்றது. தமிழ் பாசிசமாகட்டும், இந்துத்துவ அடிப்படைவாத பாசிசமாகட்டும், முஸ்லீம் அடிப்படைவாத பாசிசமாகட்டும்…, சமூகத்தின் பொதுவான பாதிப்புக்களையும், துயரங்களையும், மனித அவலங்களையும் முன்வைத்துத்தான் பாசிசம் பாசாங்காக செயற்படுகின்றது.
இந்து அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம், தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக் கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், இதுபோல் முஸ்லீம் அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்து, தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக்கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், பொதுவுடமை தளத்தில் பிரச்சாரம் செய்யலாம் என்பது வினவின் பொதுவுடமை அரசியல் நிலைப்பாடாக மாறி நிற்கின்றது. இந்த அடிப்படையில்தான் (புலிப்) தமிழ் பாசிசம் தன்னை மூடிமறைத்துக்கொண்டு, வினவில் புகுந்து நிற்கின்றது.
நாங்கள் இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாத பாசிசத்தை, பொதுவான அவர்களின் துயரத்தின் ஊடாக, எம்தளத்தில் இந்திய பொதுவுடமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாம் என்பதே வினவின் நிலைப்பாடு. இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாதத்துக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யாவிட்டால் சரி. மறைமுகமாகச் செய்யலாம் என்பதற்கு இது ஒத்தது.(பாகம் 1 லிருந்து)//
வன்மம் இல்லாத மனதுடன் தனது மகளை இந்துமத வெறியர்களின் காமப்பசிக்கு பலிகொடுத்த தாய் ரத்தசாட்சியம் அளித்தால்தான் தூய மார்க்சிய லெனிய இயக்கத்தின் ‘கற்பு’ காப்பாற்றப்படும் என்ற உங்களது ஆர்வம் புரிகிறது. இப்படி ரிஜக்ட பண்ணுவது என்றால் ஒரு அமைப்பை கட்ட முடியுமா? அல்லது அவர்களுக்கு புரியவைக்கும் செயலை நடைமுறையில் செய்து காட்டி புரிய வைக்க முடியுமா?
அந்த மேடையில் வன்மம் கொண்ட மனதுடன் ஒரு தாயோ, தந்தையோ சாட்சியம் சொல்லியிருந்தால், அதற்காக பொதுவுடமை இயக்கம் பின்னடையுமா…
முதலில் கம்யூனிஸ்டுகள் தங்களது எதிரிகளுடன் கூட விவாதிக்க தயாராக இருக்க வேண்டும். அது உங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் எனில் இன்றுவரை உங்கள் பக்கம் எத்தனை பேரை வென்றெடுத்தீர்கள் பிரான்சில்… வென்றெடுப்பதற்கு கூட விவாதிப்பதற்கான பொறுமையோ, மக்களிடம் தொடர்போ கொள்ளாமல் இருந்துவிட்டு, வாக்கியத்துக்கு இடையில் வர்க்கம் என் மூன்று தடவை, புலிப்பாசிசம் என்று மூன்றுதடவை, தமிழ்பாசிசம் என மூன்று தடவை உச்சரித்துவிட்டால் அது மார்க்சியம் என் ஆவதற்கு மார்க்சியம் ஒன்றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயம் இல்லையே…
உங்களது மனதில் உண்மையில் நீங்கள் தோழராக மாறியிருந்தால் புலிகள் மீதான தனிப்பட்ட வன்மம் மறைந்திருக்க வேண்டும். போலியாக மறைத்தால் தகுந்த சந்தர்ப்பத்தில் அது இயல்பாக வெளிப்படும்.
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களில் உங்களால் பங்குபெற முடியாமல் இருந்ததற்கு காரணம் என்ன? ஒருவேளை பங்கு பெற்று இருந்தால் ஏன் எழுதவில்லை. வர்க்கமா.. அப்படியானால் நீங்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்..
// ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது.//
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அவலத்தை ஒரு கம்யூனிஸ்டு ஆதரிப்பதுதானே சரி அந்தப்பார்வை வர்க்கப்பார்வைக்கு எதிரானாதா.. ஆம் எனில் நீங்கள் புரிந்து கொண்டிருப்பது மார்க்சியமா.. தமிழ்மக்களைச் சார்ந்துதான் தனது அனுபவங்களை ரதி சொல்ல வருகிறார் என நினைக்கிறேன்.. நீங்கள் அப்படி சார்ந்து இருப்பதாக கருதிக் கொள்கின்றீர்களா.. தனிமனித வக்கிரமா.. கொஞ்சம் லாஜிக் ஆக பேசிப் பழகுங்கள்.. தமிழ்தேசிய வாதிகள் மாதிரி பேசிப் பழகாதீங்க.. உலகத்துல இருந்தே தனிமைப்பட்டுப் போயிடப் போறீங்க..
ஒரு அகதியின் கண்ணீரைப் புரிய வைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர இது ஒரு மாற்று மகாவம்சம் என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு வினவின் வாசகர்கள் ஒருவகை அடி முட்டாள்கள் இல்லை எனவும் கருதுகிறேன்.
//தமிழ்மக்களின் பொது அவலத்தை புலியிசம் தனக்கு ஏற்ப, தன் வர்க்கத்துக்கு ஏற்ப பயன்படுத்தும் என்ற அரசியல் உண்மையை, இந்த நடத்தை மூலம் வினவு நிராகரிக்கின்றது. இந்த அடிப்படையில் எதிர் விமர்சனமின்றி, அதை நுணுகிப் பார்க்கத்தவறி, தமிழ் பாசிசத்தை தமிழ்மக்கள் அவலத்தினூடு, பொதுவுடமை ஊடாக பிரச்சாரம் செய்ய வினவுதளம் உதவுகின்றது. வர்க்கங்கள் உள்ள சமூகத்தில், தமிழ்மக்களின் பொதுவான துயரங்களை எந்த வர்க்கம், எப்படி தனக்கு இசைவாக பயன்படுத்தும் என்ற அடிப்படையான அரசியல் வேறுபாட்டை கூட இங்கு கைக்கொள்ளாது, தமிழ் பாசிசத்தை ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் குரலாக பொதுவுடமை பிரச்சாரத்தில் வினவு அனுமதித்துள்ளது. ஒரு புலிப் பாசிட்டை “தோழர்” என்று கூறி, எம் தோழர்களின் (சர்வதேசியத்தில் அவர்கள் தோழர்கள் கூட) பல ஆயிரம் பேரின் கழுத்தை அறுத்த பாசிச கும்பலுக்கு “தோழர்” அந்தஸ்து கொடுத்து, பொதுவுடைமை தளத்தில் கம்பளம் விரித்து பிரச்சாரம் செய்ய அனுமதித்துள்ளது. “தோழர்” என்ற அரசியல் பதத்தை எழுந்தமானமாக கையாள்வது, அரசியல் ரீதியாக மன்னிக்க முடியாது. தோழர் மருதையனையும், தோழர் என்று புலியை ஆதரிப்பதாக கூறும் ஒருவரையும், ஒரே விழிச்சொல் ஊடாக “தோழராக” ஒன்றுபடுத்தி விடுவது, தோழமையின் மேலான கேள்வியாகிவிடுகின்றது. //
தோழர் எனப்படுபவர்கள் அனைவரும் முதலில் மனிதர்கள். மனிதகுல எதிரியான பாசிஸ்டுகள் மாத்திரம்தான் அப்படி அழைக்கப்பட முடியாதவர்கள். அதற்கும்கூட மொத்த வேலைக்கு
உதவும் என்றால் அந்த வார்த்தையை பயன்படுத்த கூடாது எனப் பார்ப்பது மார்க்சியவகைப்பட்ட பார்வை அல்ல, மாறாக மார்க்சிய’வார்த்தை’யில் பிழைக்கும் பார்வை..மேலும், முதலில் சொன்ன இயக்கவியல் கண்ணோடமின்மையே ரதி என்ற புலி ஆதரவாளர் தமது விவாதங்களினூடாக மாறுவார் என்ற பார்வை இல்லாத்தாலே, அல்லது சரியாகச் சொல்வது என்றால், தான் பேசுகின்ற வறட்டு மார்க்சியத்தால் அவரை மாற்ற முடியாது என நம்புபவர்கள்தான் இன்னும் சரியாகச் சொல்வது என்றால், மாற்றவே முடியாதவர்களால் பூமி நிறைந்திருப்பதாக நம்பும் மார்க்சிய இயக்கவியலின் எதிரிகள்தான் பற்றுவதற்கு ஒரு கைப்பிடி கிடைக்காமல் தோழர் என விளித்த்தை ஒரு விசயம் எனக் கருதி மயிர்பிளக்கும் விவாதங்களைச் செய்ய முடியும்.
பிரபாகரனுக்கு ஒரு காலத்தில் நான் கூட ரசிகர்தான். என்னிடம் அரசியலை விவாதித்த மா.லெனிய அமைப்பினைச் சேர்ந்த தோழர் என்னைப் போன்ற ஒரு ‘பாசிஸ்டி’டம் நாள்கணக்கில் விவாதித்து எனது கருத்தை மாற்றினார். இது தவறு என ரயாகரன் அவருக்கு விளக்கினால் அந்த அமைப்பை ‘நன்றாக’ இந்தியாவில் வளர்க்கலாம்.சுத்த சுயம்புவாக தோழராக பிறப்பவர்கள் மாத்திரம்தான் நம்முடன் பேசத் தகுதியானவரகள் என நினைத்தால்.. அந்த தனிமையை நினைத்துப் பார்க்கவே மனசு பதறுகிறது..
// ஈழத்து பொதுவுடமை தன் வர்க்க எதிரியில் ஒன்றை, இந்திய பொதுவுடமைக்கு சார்பான வினவுத் தளத்தின் ஊடாக எதிர்கொள்ளும் துயரம் எம்முன். நாம் சந்திக்கும் கடும் உழைப்பு, கடும் பளுவுக்குள், சர்வதேசியத்தின் அரசியல் அடிப்படையை தகர்த்துவிடும் எல்லைக்குள் இவர்கள் நகர்த்துகின்றனர். மனிதன் தான் சந்தித்த பாதிப்புகளை எந்த வர்க்கமுமற்றதாக காட்டி, ஈழத்துப் பாசிட்டுகளின் பிரச்சாரத்தை எமது பொதுவுடமை பிரச்சாரத்துக்கு எதிராக முன்னிறுத்தியுள்ளனர்.//
ஈழத்துப் பொதுவுடமைக்கு நீங்களோ, இந்தியாவுக்கு வினவோ பிரதிநிதி என நீங்கள் உங்களுக்குள்ளேயே முடிவுசெய்ய முடியாது. அது மக்கள் அரங்கத்தில் உங்களது செல்வாக்கால், சித்தாந்த தெளிவால், புரட்சியை நடத்திக்காட்டுவதால் தீர்மானிக்கப்படும். வினவு சார்ந்த அமைப்பும், நீங்கள் மாத்திரமே கொண்ட ‘ஈழத்துப் பொதுவுடமைக் கட்சியும்’ ஒன்றா? இந்த ஆணவம் எனக்கு புலிப்பாசிச தலைமையை ஞாபகப்படுத்தக் கூடாதா? நீங்கள் பாசிசத்தை எதிர்க்கிறேன் என்பதாகக் காட்டிக் கொள்வதால் மாத்திரமே கம்யூனிஸ்டாக மாற முடியாது.
நீங்கள் கடும் உழைப்பு உழைத்து கட்டிய ஈழத்து கம்யூனிஸ்டு கட்சியில் இன்னமும் திட்டம் கூட எழுத நேரமில்லையா…
பெரியாரை பெரியாரியவாதிகள் எனத் தங்களை அழைத்துக் கொள்பவர்கள் பூசையறைப்படமாக மாற்றிக் கொண்டுவருகிறார்கள். அதற்காக பெரியாரை வீரமணியிடமிருந்து மீட்போம் என்றார்கள் தோழர்கள். இதோ ரயாகரனிடமிருந்து மார்க்சியத்தை காப்போம் என முழங்க வேண்டி வந்துவிட்டது.
ரயாகரனுக்கு மற்றும் அவரை ஆதரிக்கும் அன்பர்களுக்கு ஒரு சவால்… இதோ கீழே சொல்லப்பட்டது கூட பாகம் 1 ல் எடுக்கப்பட்டதுதான்.. இது ஒரு மார்க்சிய அடிப்படையிலான பார்வை என யாராவது நிரூபிக்க முடியுமா.. முடிந்தால் நான் இனி இணையம் பக்கத்தில் வருவது இல்லை என உறுதி கூறுகிறேன்.
// நாங்கள் இதற்கு முரணாக, முரண்பட்ட விதத்தில் பிரச்சாரம் செய்கின்றோம். வரலாறும், அனுபவமும், துயரங்களும் வர்க்கம் சார்ந்தது. வெறும் சிங்கள பேரினவாதத்தை முன்னிறுத்தி, அனைத்தையும் வர்க்கமற்றதாக, முற்போக்கானதாக காட்டுவது அரசியல் அபத்தம். தமிழினம் சிங்கள பேரினவாதத்தால் தனித்து இந்த நிலையையடையவில்லை. தமிழ் பாசிசத்தினால் தான், கேவவமான இழிவான இந்த நிலையை அடைந்;தது. இதுவின்றி எதையும் பேச முடியாது.//
தோழர்களே,
நான் மணி மேலே எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் மேற்கோள் காண்பித்திருக்கும் பகுதிகள் தோழர் இரயாகரனது கட்டுரையான “தோழர் வினவின் தளத்தில் மூடிமறைத்த (புலி) தமிழ்ப்பாசிசம் (பகுதி 1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. மேலே அதை குறிப்பிடத் தவறிவிட்டேன். மன்னிக்கவும்
// இப்பிரச்சினையில் தோழர் இரயாவை முன்னுறுத்தி வறட்டுவாதம் குறித்த விவாதத்தை நடத்த நேர்ந்திருப்பது வருந்தத் தக்கதுதான்//
வினவுத் தோழர்களே,
இராயகரனின் வறட்டுவாதத்தை நீங்கள் இதுவரை எதிர்கொள்ளவில்லை – ஒரு வேளை அவர் உங்களை ஒத்த சிந்தனை கொண்டவரென நீங்கள் எண்ணியதாலோ, என்னவோ- ஏனையோர் எதிர் கொண்டார்கள் அதை. இப்போது நீங்களும் எதிர் கொள்கிறீர்கள். அவ்வளவே, வருந்துவதற்கு ஒன்றுமில்லை இதில்.
// இதோ ரயாகரனிடமிருந்து மார்க்சியத்தை காப்போம் என முழங்க வேண்டி வந்துவிட்டது.
// அதே.. அதே!
வழிமொழிகிறேன்!
உங்களையும் யோவ் நீ யாரு.. அவனே இவனே புலி அடிவருடி எனத் திட்டி வரப்போகும் பின்னூட்டங்களுக்கு வாழ்த்துகள்! 😀
இரயாகரனின் இந்த நிலைப்பாடு துயருக்குரியது. ரதியின் கட்டுரைக்கு பின்னூட்டமிடவும், வரிக்கு வரி மறுத்து பின்னூட்டமிடவும் கூடாது என்று யார் தடுத்தது ?. ரதி தன் பதிவினை இடைநிறுத்தியது துரதிஷ்ட வசமானதுதான்.
ரதி,
அடுத்தவர்கள் குற்றம் கண்டுபிடித்ததற்காக எழுதுவதை நிறுத்துவது தவறு. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் தடிமனான தோல் வேண்டும். ரயாகரனா நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது?
உங்கள் பதிவுகள் முக்கியமான ஆவணங்கள். ஏற்கனவே பல முறை சொன்னதுதான், இருந்தாலும் திருப்பி சொல்கிறேன். எதிர் கருத்துகள் உங்களுக்கு முட்டாள்தனமாக, கடுப்படிப்பவையாக இருக்கலாம், அதற்காக எழுதுவதை நிறுத்தாதீர்கள். உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு தொடர்ந்து எழுதுங்கள்!
வினவு,
// இரயா – பு.க, பு.ஜ – வினவுக்கு இடையிலான தோழமை உறவு பற்றி வாசகர்களுக்கு தெரியும். //
எனக்கு தெரியாது. என்ன உறவு?
நானும் ஆர்வி சொன்னதையே வழிமொழிகிறேன்.
//ரயாகரனா நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது?//
ஒரு அகதியின் வாழ்க்கை சோகங்களை அறிந்து கொள்ளும் பொன்னான வாய்ப்பு பாழாயிற்று. அவர் புலிகளை உயர்த்தி எழுதினாலும்கூட புலிகள் ஏன் பலரால் நேசிக்கப்ப்டுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளவாவது ஒரு வாய்ப்பிருந்திருக்குமே?
கருத்துகளை சொல்லவே விடாமல் (மறைமுகமாகத்தானென்றாலும்) வென்றது Prejudious ரயாகரனின் சாமர்த்தியமே. அவருடைய இந்த நடவடிக்கை ஃபாஸிஸமில்லையா? இதனை புலியெதிர்ப்பு ஃபாஸிஸமெனலாமா?
ரதி,
எனக்கு தைரியமும், அறிவுறையும் சொல்லிவிட்டு இப்படி நீங்கள் வருத்தப்படுகிறீர்களே! நம் உடல் நலமும், உள்ள நலமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்றால் உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள பகுதிகளில் செல்லாமல் தவிர்ப்பது மிகவும் சிறந்தது. எழுத்தாளர்கள் ஒரு பிரச்சனையை என்ன தான் நடுவு நிலைமையுடன் எழுதினாலும், உலகம் அதை சப்ஜெக்டீவான பார்வை என்று தான் விமரிசிக்கும். வாசகர்களில் உள் நோக்கு உள்ளவர்கள் என்றும், எந்த வித உள் நோக்கும் இல்லாதவர்கள் என்றும் நாம் பிரித்துக்கொள்ளவேண்டும். நம் மன ஆரோக்கியத்திற்க்காக நம் கருத்திற்கு எதிர் கருத்து கூறுபவர்களை, அதை நாம் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், உள்நோக்கு கொண்டவர்களாக கற்பனை செய்து கொண்டு, மேலும் வாதிட விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கிவிடவேண்டும். இதனால் பலர் நாம் தோற்றுவிட்டோம் என்று பரிகசிக்க நேரலாம். அதனால் என்ன? அவார்டா கொடுக்கிறாங்க? 🙂
Bags
ரதி தோற்று விட்டது மட்டுமல்ல எம்மையும் அவமானப்படுத்திவிட்டார்
விமர்சனங்களுக்கு , குறிப்பாக விசமிகளுக்கு பயப்படுபவர் எழுதவே தொடங்கியிருக்கக் கூடாது
ஆனாலும் இவர்கள் புலிகளுக்கு எதிராக எழுதும் போது புலிகள் ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வார்கள்
ஆனால் அதையே புலிகளுக்கு ஆதரவாக எழுதினால் அருவருடி , புலிப்பாசிசம் என்று ஊலை யிடுவார்கள்
புலிகளுக்கு எதிராக எழுதுவது தான் கருத்துச் சுதந்திரமா ??
புலிகளுக்கு ஆதரவாக எழுதுவர்களுக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா ???
புலிகளுக்கு ஆதரவாக எழுதுபவர்களின் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு என்ன பெயர் ??
அனால் புலி ஆதரவாளர்களுடன் ஒப்பிடும் போது எதிர்ப்பாளர்களும் துரோகிகளும் கடுகளவே
புலி ஆதரவு ஊடகங்களிலும் பார்க்க புலி எதிர்ப்பு ஊடகங்கள் தான் அதிகம்
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் புலி எதிர்ப்பிற்கு இந்திய இலங்கை அரசுகளின் ஆதரவுகள், கூலிகள் கிடைப்பதும் ஒரு காரணம்
ஆண்மீகத்தையும் ஆபாசத்தையும் ஒன்றாக காட்டினால் எம்மவர் உடனே ஆபாசத்தை தான் பார்ப்பார்கள்
அது போலத் தான் புலி ஆதரவும் எதிர்ப்பும்
இதில் வெட்கக கேடு என்னவென்றால் இந்த ஊட்கங்களுக்கு அதிகமாக உலாவுவதும் புலி ஆதரவாளர்கள் தான்
புலிகள் துரோகிகளை வசைபாடுவது கிடையாது மாத்தையா முதல் கருணா வரை இது வரை அவர்கள் வசை பாடியது கிடையாது
இந்தியாவின் தமிழின அழிப்பில் கூட எந்த ஆதரத்தையோ அல்லது இந்தியாவையோ வசை பாடியது கிடையாது
இவர்கள் என்ன எழுதினாலும் புலிகளை குற்றம் சொல்லுவதற்கு இவர்களுக்கு தகுதியோ ,தாற்பரியமோ, அல்லது மாற்றுக் கொள்கையோ கிடையாது
புலி எதிர்ப்பு மட்டுமே இவர்களது கொள்கை அதற்கு ஊதியம் கிடைக்கும் வரை இவர்கள் தொடர்வார்கள்
கருத்துச் சுதந்திரம் , மறுப்பு , மாற்றுகருத்து என்று கத்திக் கொண்டு ஈழத்தில் எல்லா பத்திரிக்கையாளர்களையும் கொல்லுவதும் மிரட்டுவது இந்த கூட்டம் தான்
ரதி போல் ஒதுங்காவிட்டால் போட்டுத் தள்ளுவது இது தான் ஈழத்தில் நடைபெறுகின்றது
இது தமிழ் ஊடகவியளார்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் தான் அண்மையில் கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியளாளர் கருணாவால் கொல்லப்பட்டதாக தகவல்
puligal than makkal… makkal than puligal… veliyae irunthikittu vetti velai pakkathingada… stupids..
ரயாகரன் என்னும் கொள்கை சிங்கத்தின் கூற்றுக்கு பயந்து நீங்கள் எழுதுவதை நிறுத்தியிருக்க வேண்டாம். அவரது கட்டுரைகளை படித்துவிட்டு நியாயமான சந்தேகங்களோ, கேள்விகளோ கேட்டால் உடனே நம்முடைய பின்னூட்டம் தூக்கப்பட்டுவிடும். அவ்வளவுக்கு நேர்மையுள்ளவர் அவர்.
சில உதாரணங்கள்:
௧.”புலிகள் ஒரு சாதி மறுப்பு இயக்கமாம்” என்று நக்கல் தொனியில் அவர் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு பின்னூட்டமாக, “அய்யா ரயாகரன் அவர்களே, புலிகள் சாதி மறுப்பு இயக்கம் இல்லை என்றால், அவர்கள் சாதியை பேணினார்கள் என்றால் அதற்கு ஏன்ன ஆதாரம்?” என்று வினவி இருந்தேன். இரண்டாவது நாளே அந்த பின்னூட்டம் தூக்கப்பட்டு விட்டது. எனக்கு வந்த சந்தேகம் அந்த கட்டுரையை படித்த ஓரிரெண்டு சுரணை உள்ள மனிதர்களுக்கு வந்திருக்க கூடும். ஏன், திடீரென்று ரயாகரனுக்கே கூட உறைத்திருக்கலாம்.
௨. நீங்கள் உங்கள் இணைய தளத்தின் முகப்பு பக்கத்தின் அடிப்பாகத்தில் இணைத்துள்ள மாவோ ஒரு வடிகட்டிய முட்டாள். குருவிகள்தான் நெல்மணிகளை பெருமளவில் தின்று உணவு பஞ்சத்தை உருவாக்குகின்றன என்ற ஆழ்ந்த “ஞ்ஞான உண்மையை” ண்டு பிடித்து, “குருவிப் போர்” என்ற ஒன்றை தொடங்கி, குருவிகளை பெருமளவில் கொன்று, அதனால் குருவிகள் உண்டு வந்த பூச்சியினம் பல்கி பெருகி, அந்த வருடம் பெரும் உணவுப் பஞ்சம் சீனாவில் வந்தது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா என்று வினவி இருந்தேன். அதற்கும் பதில் இல்லை. ஏன் என்றால் அவர் நேர்மை மிக்கவர்.
௩. “புலி பாசிசம், புலி பாசிசம்” என்று கூவுகிரீர்களே, நீங்கள் நக்கி பிழைக்கும் கொள்கையை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் சீனாவும் ரசியாவும்தானே தமிழின அழித்தலின் முக்கிய கூட்டாளிகள்? நீங்கள் புலம்புவது போன்று அவர்கள் உண்மையிலேயே பாட்டாளி வர்க்கமாய் இருந்தால், உழைக்கும் மக்களாய் இருந்தால், ஒரு இன விடுதலைக்கு எதிராக சிந்திக்கவும் தோன்றுமா? மாறாக பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள ஆயுதங்களை கடனுக்கும், அன்பளிப்பாகவும் வழங்கி தமிழ் மக்களை கொல்ல துணை போன துரோகிகள் அவர்கள். அவர்களை நீங்கள் ஆதரிப்பதால் நீங்களும் தமிழ் மக்களுக்கான எதிரிகள். உங்களுக்கு தமிழ் மக்களை பற்றி பேச, எழுது என்ன அருகதை இருக்கிறது என்று கேட்டிருந்தேன். அதையும் வெளியிட வில்லை. ஏன் என்றால் அவர் கொள்கை பிடிப்புள்ள நேர்மையான மனிதர்.
௪.” சீன இந்தியாவின் மீது காரணமின்றி படை எடுத்தது. இன்னமும் சரியான நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திபெத்தை ஆக்கிரமித்தது என்ன நியாயம்? திபெத் இறையாண்மை மிக்க தனிப்பிரதேசம் அல்லவா?” என்று கேட்டிருந்தேன். அதற்கு கட்டுரையை எழுதிய ரயாகரன் நேரடியாக பதில் அளிக்காமல் தன்னுடைய அடிபொடிகள் மூலம் ஒரு முத்தை உதிர்த்திருந்தார்: “நாங்கள் நினைத்திருந்தால் டில்லியையே கைப்பற்றி இருப்போம். ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல என்று சீனர்கள் சொன்னார்கள்” என்று திமிரோடு ஒரு பதில். அண்டை நாட்டை சீண்டிப்பார்க்கும் பொறுக்கித்தனமான இவர்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால், பேரினவாதத்தில் இருந்து தமிழ் மக்களை கொஞ்சம் காலமேனும் பாது காத்து வைத்திருந்த தமிழ் ரத்தம் ஓடும் புலிகளுக்கு எவ்வளவு திமிர் இருந்திருக்கும்? மேலும் திபெத்தை ஆக்கிரமிக்க என்ன உரிமை சீனர்களுக்கு இருக்கிறது என்று கேட்டதிற்கு, “அவர்கள் தியானம் செய்ய போராடுகிறார்கள்” என்று ஒரு “புதிய” கண்டு பிடிப்பை உதிர்த்திருந்தார் அந்த அடிபொடி. மேலும் அவர்களை சிங்கள பிக்குகளுடன் ஒப்பிட்டு தன்னுடைய “பரந்த உலக அறிவையும்” வெளிப்படுத்தி இருந்தார். திபெத்திய பிக்குகள் தங்கள் சொந்த நாட்டில், மண்ணில் செவ்விந்தியர்களை போலவும், ஈழ தமிழர்களையும் போல அமைதியாக வாழ விரும்பிய ஒரு இனம். சிங்கள பவுத்தர்களை போல வேறு மொழி பேசும் இன மக்களை கொன்று அதில்
சுகம் கண்ட பேய்கள் அல்ல.
மேலும், ஸ்டாலினால் கொல்லப்பட்ட ஏழை ரசிய குடியானவர்களை பற்றி கேட்டால்,
ஸ்டாலின் ஒரு தன்னிகரில்லாத தலைவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டதாக உளறியிருந்தார். பதிலுக்கு நானும், “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழினத்துக்காக
போராடிய சிறந்த தலைவர் யார்?” என்று ஒரு கருத்துகணிப்பை தைரியமிருந்தால் எடுத்துப்பாருங்கள். பிரபாகரனை தவிர வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வர முடியாது என்று எழுதினேன். அந்த பதிலையும் பிரசுரிக்கவில்லை. ஏன் என்றால் அவர் ஒரு சிறந்த கொள்கை பிடிப்புள்ள நேர்மையான manithar.
பாட்டாளி makkal, உழைக்கும் மக்கள் என்ற போர்வையில் திபெத்தை வேட்டையாடிய ஓநாய்தான் சீனா. அந்த ஓநாய்களை உயர்த்திப் பேசும் ஒரு ஓநாய்தான் இந்த ரயாகரன். அவர் எழுதிய கட்டுரைகளை படித்துப் பாருங்கள். எங்காவது ஓரிடத்தில் பாட்டாளி மக்கள், உழைக்கும் மக்கள் என்ற போர்வையில் தமிழர்களை கொல்ல துணை போன அந்த கயவர்களை பற்றி எங்காவது ஒரு வார்த்தையாவது கண்டித்திருப்பாரா? மாட்டார். ஏன் என்றால் அந்த கேவலமான கயவர்களை, நய வஞ்சகர்களை,ஓநாய்களை நக்கித்தான் இவர் பிழைக்க வேண்டியிருக்கிறது.
ரசியாவில் கோபசெவ் ஆட்சிக்கு வந்தபிறகு, “தோழர்கள்” நடத்திய திருவியாளையாடல்கள் ஒவ்வொன்றாய் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது. ஏழை மக்களை சுரண்டி கம்யுனிசம் பேசிய “தோழர்கள்” எவ்வாறு கொழுத்து வளர்ந்தார்கள் என்று வெளி வந்த செய்திகளால் “தோழர்களால்” ரசியாவையும் தூக்கி பிடிக்க முடியவில்லை. உடனே எவன் இளிச்ச வாயன் என்று பார்த்து தங்களுடைய நக்கி தின்னும் பிழைப்பிற்கு ஆதாரம் தேடி கொண்டார்கள். மாஸ்கோவில் ஆயிரக்கணக்கான கல்லூரி பெண்களை விபச்சாரிகள் ஆக்கியதும், உழைக்கும் மக்களை பிச்சைகாரர்கள் ஆக்கியதும்தான் ரசியாவில் “தோழர்களின்” மிகப்பெரும் சாதனை. விடுதலைக்கு போராடிய ஒரு இயக்கத்தை, இனத்தை வேரோடு அழிக்க சகல உதவிகளையும் செய்து விட்டு, ஒன்றுமே தெரியாதது போன்று, “புலி பாசிசம், புலி பாசிசம்” என்று இப்போது கூவி திரிகிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசம் எல்லாம் வேஸ்ட். “தோழர்” ரயாகறந்தான் பெஸ்ட்.
இதுதான், அந்த “உயர்ந்த லட்சியவாதியின் ” லட்சணம். அந்த கேவலமான பொய்யனுக்கு பயந்தா இந்த கட்டுரையை நிறுத்தினீர்கள்?
உண்மையில் ரயாகரன் போன்ற காகிதப் புலிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் வாதாடி, உண்மையை எடுத்து கூறி அவர்களின் பைத்தியகார தங்களை தோலுரிப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை. ஆனால், அவர்களை போன்று “போராளிகள் ,பாட்டாளிகள்” என்று நக்கி திரியாமல், நாம் உழைத்து பிழைக்க வேண்டியிருப்பதால் இதற்கெல்லாம் நேரமில்லை.
சீனிவாசன், இரயாகரனை விமர்சிப்பது என்ற பெயரில், கம்யூனிச அவதூறு உளரல்களை எழுதியிருக்கிறீர்கள். இருப்பினும், இந்த பதிவின் விவாத போக்குக்கு வெளியே அது இருப்பதால் உங்களுக்கு இப்போது மறுப்பு எழுத முடியாது… யாரும் எழுதவும் எழுதக்கூடாது… இங்கே புதிய ஜனநாயக கட்டுரைகள் வெளியிடப்படும் போது வாருங்கள் விவாதிக்கலாம்.
உண்மைதான் ஜான், உண்மைதான்.
எந்த கம்யுனிச கொள்கையை “தோழர்கள்” தூக்கி பிடித்து கூத்தாடுகின்றார்களோ அந்த கம்யுனிச கொள்கையை சீனாவும், ரசியாவும் தூக்கி குப்பையில் போட்டுவிட்ட பிறகும் நீங்கள் கத்தி கொண்டிருப்பது ஏன் என்று கேட்டால் அது உளறல்தான்.
சரி. நீங்கள் சொல்வது போலே கம்யுனிசம் உழைக்கும் மக்களின், பாட்டாளி மக்களின் வரம் என்று வைத்துக்கொண்டாலும், அந்த பாட்டாளி மக்களின் பேரால், உழைக்கும் மக்களின் பேரால் தமிழ் மக்களை கொல்ல துணை போன துரோகிகளை நீங்கள் தலையில் தூக்கி வைத்து கூத்தாடுவது ஏன் என்று கேட்டால், அது உளறல்தான்.
கம்யுனிச போர்வையில் திபெத்தை ஆக்கிரமித்து, அவர்கள் வாழ்வை சிதைத்து , கலாச்சாரத்தை குலைத்தது ஏன் என்று கேட்டால் அது உளறல்தான். கம்யுனிச
சீன “தோழர்” பாணியில்தான் “தோழர்” ராஜபக்சேவும் தமிழ் நிலத்தை ஆக்கிரமித்தார் என்று கூட நாளை நீங்கள் சித்தாந்த வக்காலத்து வாங்கக்கூடும். வாழ்க கம்யுனிசம். வாழ்க தோழர்கள்.
****************,
யாரு தோழர் என்று சொல்லச்சொல்கிறாய் ராஜ பக்சேவையா? பார்ப்பன சங்கராச்சாரி, அசோக் சிங்கால், பீஜேபிக்கு கால் கழுவ அனுப்புனவன போய் கேளு சுயமருவாதன்னா என்னான்னு? இந்தியாவு புடிச்சு இவ்வளவு நாள் தொங்குனீங்க. இந்திய மேலாதிக்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய ஆவலா இருந்தீங்க. அவன் கவுத்து உட்டுட்டான் அதான் கோவம். புரட்சிகர கம்யூனிச வரலாற்றை எடுத்துப்பார் நாங்கள் இந்திய மேலாதிக்கத்தை அபோதிலிருந்தே எதிர்த்தோம் . எப்போன்னு தெரியுனுமா? உங்க அமைப்ப வளர்க்க எம்ஜிஆர், ரா பணம் கொடுத்தாங்களே அப்பவே இருந்தே.இதய்ம் பொய்யுங்காத உங்க ஆசான் பாலசிங்கம் சொன்னதுலா இது.
அந்த மொட்ட லாமாவுக்கு சப்போர்ட் செய்து அதன் மூலமா ஈழத்தை புடிக்கப்போறாங்களாம். சீனிக்குட்டி , வரலாறை ஒழுங்கா படி, காங்கிரஸ் காரன் சொன்னத அப்புடியே சொல்லுதியே நீ ஈழகாங்கிரஸா.
//அண்டை நாட்டை சீண்டிப்பார்க்கும் பொறுக்கித்தனமான இவர்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால், பேரினவாதத்தில் இருந்து தமிழ் மக்களை கொஞ்சம் காலமேனும் பாது காத்து வைத்திருந்த தமிழ் ரத்தம் ஓடும் புலிகளுக்கு எவ்வளவு திமிர் இருந்திருக்கும்? //
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
எனக்கு புலிகள் மீது மதிப்பு உண்டு. இதை நான் யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை.
தமிழீழத்தின் தற்போதைய இழிநிலைக்குப் பிறகும் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இல்லையென்றால் தோழர்,இரயா கூறியது போல் நீங்கள் ஒரு..
அஸ்கர், உங்கள் நிலைப்பாடு விந்தையாக இருக்கிறது. புலிகள் மீதான அபிமானம் என்ன சினிமா நடிகர்கள் அபிமானம் போன்றதா? சட்டென்று மாற. அது இரத்தமும் சதையுமான அனுபவபூர்வமான ஒரு அபிமானம். புலிகளின் அரசியல் தவறுகளை சொல்லி, விவாதித்து ஒருவரை மாற்றலாம். அப்படியில்லாமல் வெறுமனே மாறு மாறு என்றால் போதுமா?
தவிர தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு புலிகள் மட்டும்தான் காரணமா? மற்ற புறக்காரணங்களே இல்லையா? அப்போ புலிகள் இராணுவ ரீதியாக மேல்கையில் இருந்தால் புலிகளின் மீது அபிமானம் கொள்ளலாமா? இது என்ன அரசியலற்ற பார்வை?
புலிகளின் தலைமை அரசியல் தவறு புரிந்தாலும் அந்த அணிகளின் மீது நாம் அபிமானம் கொள்வது தவறா? மாவோயிஸ்டு அணிகளை நாம் அப்படித்தான் பார்க்கிறோமா?
ஒரு தோல்வியின் உணர்ச்சிமயமான தருணத்தில் மக்கள் இருக்கும் போது, முன்னெப்பாதும் காட்டிலும் கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டாமா. பாதிக்கப்பட்ட மக்களை அரவனைத்து, உற்சாகமூட்டி, போராட்டத்தை தொடர வேண்டாமா. ஒரு மார்க்சிஸ்டு சிந்தனை இந்த தருணத்தில் ஒரு தாயைப்போலல்லவா இருக்க வேண்டும்,
மாறாக ஒரு பாசிஸ்டின் தோல்வியை கொண்டாடி, நான் அன்றே சொன்னேன் பார்த்தாயா என்று எழுதினால், யாரை நாம் நம் பக்கம் கொண்டு வர முடியும். மேலும் விலகிப் போகவே வழிவகுக்கும் ரதியின் இந்த கூற்று இதை நிரூப்பிக்கின்றது.
சிந்திப்பீர் தோழர்களே, வென்றிருப்பது இன்னொரு பாசிஸ்டு. இந்தப் போர் இன்னமும் முடியவில்லை.
ரதி அவர்கள் தனது பதிவில், தனது ஈழ சகோதர சகோதரிகள் சிங்களர்களால் எவ்வாறெல்லம் துன்புறுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர் என்பதை விவரிக்கிறார். இதையேதான் தனது சொந்த மக்கள்மீது புலிகள் செய்தனர். புலிகளால் கொலை செய்யப்பட்டவர்களும் ரதியின் சகோதர சகோதரிகளே. புலிகள் இவ்வாறு செய்யும்போது ரதி அவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தாரா. புலிகள் இவ்விதம் செய்ய ஆரம்பித்தது இன்றல்ல நேற்றல்ல எப்போதோ(10 வருலங்களுக்கு முன்பே)ஆரம்பித்துவிட்டனர். புலிகளின் இச்செயல்கள் ரதி அவர்களை பாதிக்கவில்லையா? இரத்தமும் சதையுமான அனுபவப்பூர்வமான அபிமானம் என்கிறீர்கள். நானும் இதையேதான் கேட்கிறேன். புலிகளின் பாசிசச் செயல் பல வருடங்களுக்கு முன்பே செயல்படத் துவங்கியிருந்தும் எந்த அனுபவத்திலிருந்து இவர் புலிகள் மீது அபிமானம் கொள்கிறார்?. புலிகளின் செயல் தெரிந்திருந்தும் இவர் அபிமானம் கொள்கிறார் என்றால் அந்த அபிமானம் எப்படிபட்டதாக இருக்கும்? ஏன் இத்தனை ஆண்டுகள் கடந்தும் தான் மாறமாட்டேன் என்கிறார்? புலிகள் தன் மக்களையே கொலை செய்ததை தெரியாது என ரதி அவர்கள் மறுக்கமுடியாது.
கட்டுரை வேறு விவாதம் வேறு. ஒரு கட்டுரையில் தனது கருத்தைப் பதியவிடுவது என்பது வேறு விவாதத்தில் கருத்தைச் சொல்வது என்பது வேறு. ஒரு தளத்திற்கு வருபவர்கள் எல்லாம் (அதிகபட்சம்) கட்டுரையை மட்டும் படித்துவிட்டு செல்வாற்கள் . படிப்பவர்கள் அனைவரும் விவாதத்தில் பங்குகொள்வதில்லை. ரதி அவர்களின் கட்டுரை விவாத அரங்கை விட முக்கியத்துவமுடையது. ரதி அவர்கள் புக,புஜ,மற்றும் வினவு கட்டுரைகளைப் படித்திருப்பார் என்றே நினக்கிறேன். இவற்றிலிருந்து வினவின் கொள்கைகளை ரதி தெரிந்திருப்பார். இப்படி தனக்கு முரண்படான கொள்கையுடைய ஒரு தளத்தில் ரதி அவர்கள் எழுத ஒத்துக்கொண்டது தவறு என்றே நினக்கிறேன்.
மற்றபடி அவர்களின் வார்த்தைகளால் எழுத முடியாத துன்பங்களையும் துயரங்களையும் வலிகளையும் குறைத்து மதிப்பிடவில்லை.
//ரதி அவர்கள் புக,புஜ,மற்றும் வினவு கட்டுரைகளைப் படித்திருப்பார் என்றே நினக்கிறேன். இவற்றிலிருந்து வினவின் கொள்கைகளை ரதி தெரிந்திருப்பார். இப்படி தனக்கு முரண்படான கொள்கையுடைய ஒரு தளத்தில் ரதி அவர்கள் எழுத ஒத்துக்கொண்டது தவறு என்றே நினக்கிறேன்.//
இதிலுள்ள அரசியல் தவறு தான் வறட்டுவாத்ததிற்கு அடிப்படையாகிறது விரிவாக எழுதுலாம் ஆனால் இப்போது ஒரு கேள்வி.
ஓட்டுகட்சி, போலி கம்யூனிஸ்டு, ஆத்தீகவாதி, தமிழ் தேசியர், ஆணாதிக்கவாதி போன்றவர்களை புரட்சிகர அமைப்பில் சேர்க்கலாமா கூடாதா? அவர்க்ளது பழைய கருத்துக்கள் அனைத்தையும் அவர்கள் மனதிலிருந்ந்து அழிந்துவிட்டது என்பதை நார்கோ அனாலிஸிஸ் அல்லது லை டிடெக்டர் வைத்து சோதித்து விட்டுதான் உள்ளே விடுவீர்களா, அது வரை அவர்கள் திண்ணையில் உக்கார வேண்டுமா?
புரியவில்லை தயவு செய்து விளக்கவும்
Who’s is the “Fascist”? Even Sinhalese fascists cannot beat Indian fascists.
You useless communist idiots.
//உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இல்லையென்றால் தோழர்,இரயா கூறியது போல் நீங்கள் ஒரு..//
என்னைப்பற்றித்தான் எவ்வளவோ சொல்லிவிட்டீர்களே! இனியென்ன தயக்கம். மீதியையும் சொல்லவேண்டியது தானே. தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு சில இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” தான் காரணம். அதை சொல்ல துப்பில்லாத நீர், வறட்டுவாதம் பேசுபவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீர், என்னை விமர்சிப்பதா?
பாசிசப்புலிகளை பற்றி சொல்லாத உங்களுக்கு துப்பு இருக்கிறதா?
\\தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு சில இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” தான் காரணம். \\
மக்களின் இழி நிலைக்கு காரணம் பேரினவாதம் மட்டும்தான் காரணமா? புலிகள் காரணமில்லையா? பாருங்கள் புலிப்பாசிசத்தை அம்பலப்படுத்தாத நீங்கள் எல்லாம் வீரர்கள், இந்திய மேலாதிக்கம் புலிப்பாசிசத்தை, சிங்கள இனவெறியை அம்பலப்படுத்தி வாழும் நாங்கள் கோழைகள்.
துரோகிப்பட்டியல் காத்திருக்கின்றது காலம் மலரும் போது துரோகிகள் தானாய் அம்பலப்படுவார்கள் ரதி, துரோகிப்ப்பட்டியல் நீளும்.
இங்கே மியாவ் குட்டி என்ற பெயரில் எழுதும் தோழரே, இதைத்தானே தோழர் இரயாகரனும், நீங்களும் செய்திருக்க வேண்டும். அதாவது ரதி எழுதும் போது அதிலுள்ள அரசி்யல் பிழைகளை சுட்டிக்காட்டி விவாதித்திருக்க வேண்டும். அதை விட்டு விவாதத்திலிருந்து விலகி அவர் ஒரு பாசிட்டு, பாசிட்டுக்கு வினவு இடமளிக்கிறது என்று புலம்பி அவர் கருத்தை வராமல் தடுப்பதில் என்ன வெற்றி கண்டீர்கள்
தோழர் அஸ்கர் அவர்களுக்கு,
//புலிகளால் கொலை செய்யப்பட்டவர்களும் ரதியின் சகோதர சகோதரிகளே. புலிகள் இவ்வாறு செய்யும்போது ரதி அவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தாரா. புலிகள் இவ்விதம் செய்ய ஆரம்பித்தது இன்றல்ல நேற்றல்ல எப்போதோ(10 வருலங்களுக்கு முன்பே)ஆரம்பித்துவிட்டனர்.//
டக்லஸ் தேவானந்தமும் அவரது ஆட்களும் (EPDP) செய்த படுகொலைகளை எப்படி அய்யா புலிகள்தான் செய்தார்கள் என்று ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள்?
தோழமையுடன்,
செந்தில்.
செந்தில் ரொம்ப அப்பாவியா இருக்கீங்க, புலிகள் ஒன்னும் புனிதர்கள் இல்ல, அவங்களும் பாசிஸ்டுதான். ஆதாரம் இல்லாமல் இல்லை, மேல ஏகலைவன் மதிபாலா விவாதத்தை கவனியுங்க.
நான் இதற்கு மேலும் பேசாமலிருந்தால் அது எனக்கும் என் எழுத்து முயற்சிக்கும் moral support தந்த நண்பர் RV, மா.சே., குருத்து, சுக்தேவ், அர டிக்கெட், மற்றும் பல நண்பர்களை அவமதிப்பது போலாகும். எல்லோருக்கும் என் நன்றிகள். ஈழம் பற்றி நான் என் அனுபவங்களின் மூலம் எழுத முனைந்ததற்கு காரணம் எங்களின், ஈழத்தமிழர்களின், உரிமைகள் பறிக்கப்பட்டு, ஏதிலிகள் ஆக்கப்பட்டு, எதுமற்றவர்களாய் நாடின்றி, தேசமின்றி “அகதிகள்” (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில்) “பயங்கரவாதிகள்” என்ற பெயர்களைத்தவிர வேறெதையும் சம்பாதிக்காத எங்களின் அவலவாழ்வின் அடுத்த பக்கத்தை தழ்நாட்டு உறவுகளுக்கு சொல்ல நினைத்ததேயாகும். உயிர்ப்பயமின்றி, கவுரவவாழ்வு வாழுபவர்களுக்கு ஏதிலி வாழ்வின் வலிகள் புரிந்திருக்க நியாமில்லை. அந்த வலிகளை சொல்ல நினைத்தேன் எதிர்பாராத தடைகள் எழுந்துவிட்டது. இதற்கு யாரையும் நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால், இதற்கு மேல் என்னால் என்னைப்பற்றிய விமர்சனங்களின் பாதிப்புகளின்றி என் அனுபவங்களைப்பற்றி சொல்லமுடியுமா என்றால், அது முடியாது என்றுதான் தோன்றுகிறது.
நான் எந்தவொரு கொள்கை மூலமும் என்னை அறிமுகப்படுத்துமளவிற்கு அல்லது என்னை அடையாளப்படுத்துமளவிற்கு எனக்கு எந்தவொரு கொள்கை பற்றியும் ஞானம் கிடையாது. நான் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் ஓர் அகதி. கொள்கைகளின் கோட்பாடு என்ற சிறைக்குள் என் சிந்தனையை சிறை வைக்கத்தெரியாத , நானும் என் இனமும் போரினால், இன அடக்குமுறையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற எளிய உண்மையைத்தவிர வேறெதுவும் தெரியாதவள். அதனாலோ என்னவோ என் எழுத்துகளும் நானும் சில கொள்கைகளின் கோட்பாட்டுச் சிறைக்குள் சிக்காமல் எப்படி எழுதுவது என்ற அரசியல் தெரியாமல் சிக்கவேண்டியதாகிவிட்டது. என்னை அடித்தார்கள். எனக்கு வலிக்கிறது என்று சொல்வதற்கு, எதற்கு கொள்கையும், கோட்பாடும்? எனக்கு புரியவில்லை.
நான் எழுத தொடங்கிய நாட்களிலிருந்தே, வினவுகுழு என்னை தேவையற்ற விமர்சனகளிலிருந்து காத்திருக்கிறார்கள். ஆனால், இன்று என்னை எழுத சொல்லிய குற்றத்திற்காக அவர்களே அவர்களின் “தோழர்களின்” விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டுவிட்டது. இனிமேலும் அவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கவும் நான் விரும்பவில்லை. ஈழத்தமிழர்களின் தலைவிதியை ஈழத்தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதில் எப்போதும் உறுதியாய் இருப்பவள் நான். ஆனாலும், தமிழ்நாடு உறவுகள் எங்களுக்கு ஓர் பக்கபலமே. அவர்கள் நினைத்தால் நிச்சயமாக எங்கள் விடுதலைக்கு உதவலாம். ஆனால், அதை சில ஈழத்தமிழர்களே கொள்கை என்ற பெயரில் வறட்டுவாதம் பேசி, எங்களுக்குள் நாங்களே சண்டையிட்டு அதையே சிங்கள ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக்கி, எங்களுக்கு மற்றவர்களிடமிருண்டு கிடைக்க வேண்டிய தார்மீக ஆதரவை நாங்களே குழிதோண்டிப்புதைத்து…… அரசியல்வாதிகள் செய்யும் அநாகரீகத்தை நாங்களும் செய்ய வேண்டுமா என்று நினைக்கிறேன்.
நான் வினவு தளத்தில் கட்டுரை எழுதுவதைத்தான் நிறுத்தினேனே தவிர ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான என் எழுத்துகளை நிறுத்தப்போவதில்லை.
வினவு தளத்தில் தொடர்ந்து என் அனுபவம் பற்றி எழுத முடியாமல் போனது எனக்கும் வருத்தம் தான். ஈழம் குறித்த என் வலிகளின் பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்கிறேன்.
ரதி, உங்கள் எழுத்தின் நியாங்களை நான் பெரிதும் மதிக்கிறேன், விமர்சனங்கள் நம்மை பரிசோதனை செய்து கொள்ள ஒரு வாய்ப்பு, அதைத்தான்டி அதை உணர்ச்சி பூர்வமாக அணுக வேண்டாம், இது சிரமம்தான் ஆனால் உங்களால் முடியாத ஒன்றல்ல, என்றுமே பெண் ஆணைவிட வலிமையானவள் என்ற கருத்துடையவன் நான். தொடர்ந்து நீங்கள் எழுதுவதுதான் உங்களை நீங்கள் இந்த பெண், குடும்பம், அகதி, என இந்த சமூகம் விதித்துள்ள சிறையிலிருந்தும், விமர்சகர்களின் கருத்துக்களிலிருந்தும் விடுவித்துக்கொள்ள ஒரே வழி, எங்கள் தோழர்களுக்கிடையான முரண்பாடு ஜனநாயக பூர்வமான முறைகளில் நாங்களே தீர்த்துக்கொள்வோம். இது இந்த கட்டுரை உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தேவை , எழுதுங்கள்..
ரதி அவர்களுக்கு,
ஒரு நீண்ட நெடிய பல துயரங்களை கொண்ட, பல உயிர்ப்பலிகள் கொண்ட போராட்டத்தை பற்றி எழுதும் பொழுது, விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.
இப்பொழுது, தோழர் ரயாகரன் தொடந்து விமர்சித்து எழுதுவதால் நிலைமை கொஞ்சம் சிக்கலாக மாறியிருக்கிறது. வினவே சொல்கிற படி, வினவு தளம் தான் இப்பொழுது விவாத பொருளாயிருக்கிறது. வினவின் மீதான் விமர்சனத்தை வினவு தோழமையுடன் எதிர்கொள்ளும்.
அதனால், நீங்கள் எழுத வேண்டாம் என முடிவெடுத்திருக்க வேண்டாம். உங்கள் முடிவை பரிசிலீயுங்கள்.
தோழர் ரயாகரனை விமர்சிக்கிறேன் பேர்வழி என சில கம்யூனிச அவதூறுகளை அள்ளி வீசி, இங்கு சந்தில் சிந்து பாடுகிறார்கள்.
தோழர் குருத்தின், கருத்துக்களில் நான் உடன் படுகிறேன். உங்களை எழுத சொன்னது வினவு எனவே உங்களை நிறுத்த சொல்வதும் வினவாகவே இருக்க வேண்டும்.
1. உங்களின் கட்டுரையின் கருத்துக்கள் மீதான விமர்சனங்களும், விவாதங்களும் வேறு.
2. உங்களை எழுத அனுமதித்த வினவின் மீதான விமர்சனங்களும், விவாதங்களும் வேறு.
எனவே, உங்களின் கருத்துக்களின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். உங்களை எழுத சொன்னதிற்காக தற்பொழுதைய விமர்சனகள் வினவை நோக்கியே உள்ளன. அவ்வாறே இருக்க வேண்டும். வினவு தளம் பல படைப்பாளிகளை உருவாக்கும் தளமாக உயர இந்த விமர்சனங்கள் உதவும். இந்தக் குழப்பங்களில் இருந்து நல்ல தீர்வு அமையும் என நம்புகிறேன்.
ரதி அவர்களுக்கு,
ம.க.இ.க மற்றும் வினவு தளத்திற்கு அறிமுகமாகும் பலரும் பல்வேறு அரசியல் நிலைகளில் இருந்து அவர்களின் பழைய அரசியலை விவாததிற்கு உட்படுத்தி தான் புரட்சிகர அரசியலை அறிவை பெறுகிறார்கள். அத்தகையோர் எவரும் தன்னுடைய பழைய பிம்பங்கள் , கருத்துக்கள் உடை படுவதையும் மிகுந்த வலியுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஏனெனில் புதிய அரசியல் அதை வேண்டுகிறது. அவ்வாறு தாங்க