தனியார்மயமும் தாராளமயமும் புகுத்தப்பட்டபோது, இக்கொள்கைகள் ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போகின்றன என ஆளும் வர்க்க எடுபிடிகள் அனைவரும் தம்பட்டமடித்தனர். ஆனால் அதற்கு மாறாக, கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள, பல்லாயிரம் கோடிகளை விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.
1991 ஜெயின் டயரி – ஹவாலா ஊழல்
1991-இல் தில்லியில் தற்செயலாகப் பிடிபட்ட ஹவாலா தரகன் ஜே.கே. ஜெயினிடம் அவன் இலஞ்சக் கணக்கு எழுதிவைத்திருந்த டைரி பிடிபட்டது. இன்று ஸ்பெக்ட்ரம்-ராடியா விவகாரத்தில் சிக்கியிருக்கும் காங்கிரசு, பாஜக தலைவர்களின் இரகசியங்களைக் கசியவிட்டு, ‘எல்லோரும் திருடர்கள்தான்’ என்று நிரூபிக்க முயல்வதைப் போலவே, அன்று பல்வேறு ஊழல்களில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த பிரதமர் நரசிம்ம ராவ் ஜெயின் டயரியைக் கசியவிட்டார். கமிஷன் பெற்றவர்களின் பட்டியலில் 115 பேர் இருந்தனர். ரூ.68 கோடி வரை கமிஷன் தரப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், தேவிலால், அத்வானி, சுக்லா எனப் பெருந்தலைகள் எல்லாம் இந்த ஊழலில் கை நனைத்திருந்தனர். சட்டப்பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை எனக்கூறி 1997 ஏப்ரலில் அத்வானிக்கும் சுக்லாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடியானது. பின்னர் அனைவருமே சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
1992 அர்சத் மேத்தா ஊழல்
ஒவ்வொரு அரசுடமை வங்கியும் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு அரசாங்கப் பத்திரமாக மாற்றி வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவு. தரகர்கள் வழியாக வாங்கப்படும் இந்தப் பத்திரங்களுக்கு வங்கிகள் வழங்கும் அத்தாட்சி ரசீதை, முப்பது நாள் அவகாசத்துக்குள் வங்கிகளில் பிணையாக வைத்துப் பொதுமக்கள் பணத்தைக் கடனாகப் பெற்ற பங்குச் சந்தைத் தரகரான அர்சத் மேத்தா, பங்குச் சந்தையில் சூதாடி கோடிகோடியாகச் சுருட்டியதுதான் இந்த ஊழலாகும். வங்கி அதிகாரிகளும் ஓட்டுக்கட்சிகளும் பெரும் தரகு முதலாளிகளும் மேத்தாவைப் பினாமியாகக் கொண்டு நடத்திய இக்கொள்ளையில் ஏறத்தாழ ரூ.2500 கோடிக்கு மேல் சுருட்டப்பட்டது. அர்ஷத் மேத்தாவுக்கு எதிராக 72 கிரிமினல் வழக்குகளும், 600-க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, மற்ற வழக்குகள் ஆமை வேகத்தில் வழக்குகள் நகர்ந்து கொண்டிருக்கும்போதே 2002-இல் மேத்தா மரணமடைந்தான்.
1995 ரிலையன்சின் போலிப் பத்திரங்கள்
ரிலையன்சு ரூ 1.06 கோடிக்குப் போலிப் பங்குகளை வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்றது கண்டறியப்பட்டதால் மூன்று நாட்களுக்கு ரிலையன்சின் பங்கு வர்த்தகம் பம்பாய் பங்குச் சந்தையில் நிறுத்திவைக்கப்பட்டது. இதேபோல அரசு நிறுவனமான ’யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா’வுக்கு 47 கோடி ரூபாய்க்கு போலிப் பங்குகளை ரிலையன்சு விற்றிருந்ததும் தெரியவந்தது. உடனே கொதித்தெழுந்த அம்பானி, பம்பாய் பங்குச் சந்தையில் இருந்து விலகி தில்லிச் சந்தையோடு இணையப் போவதாக மிரட்டினார். உடனே பம்பாய் சந்தை சமரசப் பேச்சு நடத்தி அம்பானிக்குப் பணிந்தது.
1996 காலணி ஊழல்
1982 முதல் மராட்டிய கூட்டுறவுச் சங்க காலணித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25000 கடனாக வழங்கப்பட்டு வந்தது. நொடித்துப் போன சங்கங்களை மோசடி – தில்லுமுல்லுகள் மூலம் அதிகாரிகள் துணையோடு பெருமுதலாளிகள் கைப்பற்றி, போலியாக தொழிலாளர் எண்ணிக்கையைக் காட்டி கடன்களைச் சுருட்டினர். ஆண்டுதோறும் ரூ 500 கோடி வரை இவ்வாறு சுருட்டப்பட்டது. தாவூத் ஷூ, மெட்ரோ ஷூ, மிலானோ ஷூ முதலான கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளும் சிட்டி பேங்க், மராட்டிய மாநில நிதிக் கழகம், ஓமன் வங்கி, பஹ்ரைன் வங்கி, தேனா வங்கி ஆகியவற்றின் உயரதிகாரிகளும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், 15 ஆண்டுகளாகியும் வழக்கு இன்னும் நகரவேயில்லை.
1997 சி.ஆர்.பி. நிதி நிறுவன ஊழல்
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டியங்கிய சி.ஆர்.பி. நிதி நிறுவனத்தின் தலைவரான சி.ஆர்.பன்சாலி, போலி ஆவணங்கள் – போலி நிறுவனங்களின் பெயரால் முத்திரைத் தாள் தயாரிப்பதில் திறமைசாலி. இதனையே மூலதனமாகக் கொண்டு சி.ஆர்.பி. நிதி நிறுவனத்தைத் தொடங்கி, பங்கு பத்திர வியாபாரத்தை நடத்தினான். அடிமாட்டு விலைக்கு மொத்தமாகப் பங்குகளை வாங்கி, விற்பதென்பது இவனது தொழில் உத்தி. பன்சாலியின் முறைகேடுகளைப் பற்றி பங்கு பரிமாற்றக் கழகம் முன்னரே அறிந்திருந்தபோதிலும் சி.ஆர்.பி.யை அங்கீகரித்தே வந்தது. ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவரான எம்.கே. சின்ஹா, இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். இந்த நம்பிக்கையில் பங்குகளை வாங்கிய நடுத்தர வர்க்கத்தினருக்கு 1997-இல் பட்டை நாமம் சாத்தி ரூ.1200 கோடியை பன்சாலியும் அவனது கூட்டாளிகளான பெருமுதலாளிகளும் அதிகாரிகளும் சுருட்டினர். 1997-இல் கைதான பன்சாலி மூன்று மாதங்களைச் சிறையில் கழித்துவிட்டு, பிணையில் வெளிவந்து தலைமறைவாகிவிட்டான்.
2001 கேதான் பரீக் மோசடி
கேதான் பரீக் எனும் பங்கு சந்தைத் தரகன், பிரபலமான 10 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின்(கே10) பங்குகளை 2000-வது ஆண்டில் வாங்கிக் குவித்ததன் மூலம் பங்குகளின் விலை மடமடவென உயர்ந்தன. “கே10” பங்குகளை ஊதிப் பெருக்குவதற்காக 4 அந்நிய நிதி நிறுவனங்கள் பரீக்குடன் சேர்ந்து கொண்டு, ரூ 1,47,000 கோடி ரூபாயை பரீக் நடத்திய ஊக வணிகத்தில் முதலீடு செய்து, பங்குச் சந்தை சூதாட்டத்தில் கோடிகோடியாகச் சுருட்டின. 2001-இல் டாட்.காம் வீழ்ச்சியின்போது மும்பை போட்டித் தரகர்கள் “கே10” பங்குகளைக் கொத்துக் கொத்தாக விற்று விலையை வீழ்த்தினர்.
இச்சரிவைத் தடுத்து நிறுத்த பல்வேறு வங்கிகள் கோடிக்கணக்கில் கடனாகக் கொடுத்தன. இக்கடன்களுக்குப் பிணையாக பரீக் கொடுத்திருந்த பங்குப் பத்திரங்கள் சந்தை வீழ்ச்சியால் வெறும் காகிதமாகிப் போயின. ரூ.4669.50 கோடிகளை கேதானின் பங்குகளில் முதலீடு செய்திருந்த யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியா எனும் அரசுத்துறை பரஸ்பர நிதி நிறுவனம் இதனால் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நம்பிக்கையோடு யூனிட் டிரஸ்டில் முதலீடு செய்திருந்த நடுத்தர வர்க்கத்தினர் பணம் கரைந்து போனது. 1992-இல் ஏற்கெனவே கேத்தன் பரீக் செய்த வேறொரு ஊழல் விசாரிக்கப்பட்டு 2008-இல் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 2001-இல் செய்த ஊழல் விசாரணை இன்னும் முடியவில்லை. 2017 வரை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடத் இவனுக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், கேத்தான் பரீக் இன்னமும் பங்குச்சந்தையில் சூதாடுவதாகக் கூறியிருக்கிறது செபி.
2003 போலிப் பத்திர ஊழல்
பத்திரங்கள் விற்பனையாளனான தெல்கி என்பவனுடன் அரசு அச்சுக்கூடத்தின் அதிகாரிகள், அமைச்சர்கள், போலீசு அதிகாரிகள் சேர்ந்து நடத்திய மோசடி இது. அரசு அச்சகத்தில் இருந்து பழைய அச்சு எந்திரம், அரசு அச்சகத்தின் தொழில்நுட்பங்கள்,இறக்குமதி செய்யும் காகிதம், மை, அச்சிடப்போகும் பத்திரத்தின் எண்வரிசை என அனைத்தும் தெல்கிக்காகக் கடத்தப்பட்டது. 9 மாநிலங்களில் விற்பனை வலைப்பின்னலை உருவாக்கி போலிப் பத்திரங்களை விற்றதோடு, ஒரிஜினல் பத்திரங்களுக்குச் சந்தையில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, இக்கும்பல் வியாபாரத்தை விரிவுபடுத்தியது.
இந்த விசயம் மெதுவாகக் கசிந்து 2001-இல் கர்நாடக போலீசு தெல்கியைக் கைது செய்த போதிலும், அவனது வியாபாரம் சிறைக்குள் இருந்தபடியே தொடர்ந்தது. அன்னா ஹசாரே எனும் காந்தியவாதி போட்ட பொதுநல வழக்குக்குப் பின்னர்தான் தெல்கியின் ஊழல் அவசரமாக விசாரிக்கப்பட்டது. தெல்கியிடமிருந்து 90 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு அவனுக்குத் துணையாக இருந்த போலீசு இணை கமிஷனர் சிறீதர் வாக, மும்ப நகர போலீசு கமிஷனர் ஆர்.எஸ். சர்மா, தமிழக போலீசு உயரதிகாரி முகம்மது அலி போன்ற பெருந்தலைகள் கைதாகினர். இவர்கள் விற்ற போலிப் பத்திரங்களின் மதிப்பு ரூ.30,000 கோடி. ஆனால், 53 லட்சம் பெறுமானமுள்ள பத்திரத் தாள்களை மட்டுமே கைப்பற்றியதாக பெயருக்கு ஒரு வழக்கு கர்நாடகத்தில் போடப்பட்டது. பிற மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என 2010-இல் விடுவித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.
2009 சத்யம் மோசடி
சர்வதேச அளவில் சிறந்த கார்ப்பரேட் நிர்வாகத்திற்கான “தங்க மயில்” விருது பெற்ற சத்யம் மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு, தன் நிறுவனத்திற்கு ரொக்க சேமிப்பு ரூ.5040 கோடி இருப்பதாக 2001 முதல் பொய்க்கணக்கு காட்டி, முதலீட்டாளர்களைக் கவர்ந்து பத்து ரூபாய் மதிப்புள்ள பங்கினை ரூ 188.70-க்கு உயர்த்தி, பங்குகளில் பெரும்பகுதியை விற்று 2003 டிசம்பர் முதல் 2007 மார்ச்சுக்குள் ரூ.1252 கோடியைச் சுருட்டினார். உண்மையில் அந்நிறுவனத்திடமிருந்த கையிருப்பு ரூ.320 கோடிதான்.
கணக்கு காட்டிய 5040 கோடிக்கும், 320 கோடிக்குமான இடைவெளியை நிரப்ப, தனது மகன்கள் பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஆரம்பித்து, அவற்றை சத்யம் ரூ.7000 கோடி கொடுத்து விலைக்கு வாங்குவதாக செட்டப் செய்தார். அதாவது, இல்லாத ரொக்கத்தை கொடுத்து இரண்டு கம்பெனிகளை வாங்கியதாகக் காட்டி மோசடி செய்வதே ராஜுவின் திட்டம். சில முதலீட்டாளர்களின் எதிர்ப்பால் தில்லுமுல்லுகள் வெளியாகி கைது செய்யப்பட்டார். இவரது கள்ளக் கணக்குக்குத் தணிக்கை சான்றிதழ் கொடுத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் கழுத்தறுக்கத் துணை நின்றது பிரபல பன்னாட்டு தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் கூப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜூ, தனது மோசடிக்கு ஆதாரமான ஆவணங்களை அழித்து விட அவகாசம் கொடுக்கப்பட்டுப் பின்னர்தான் கைது செய்யப்பட்டார். சொகுசு மருத்துவமனையில் ‘சிறைவாசம்’ புரிந்த ராமலிங்க ராஜுவுக்கு பிணையும் வழங்கப்பட்டது. வழக்கு நடந்து வருகிறது.
2010 கேதான் தேசாய் கொள்ளை
இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரான டாக்டர் கேதான் தேசாய், பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். அவரது வீட்டிலிருந்து ரூ.1800 கோடி ரொக்கம், 1500 கிலோ தங்க நகைகளை சி.பி.ஐ. கைப்பற்றியது. அங்கீகாரமளிப்பதற்கு கல்லூரி ஒன்றுக்கு ரூ.30 கோடி லஞ்சம் வாங்கியதுடன், நாட்டிலுள்ள 200 சுயநிதிக் கல்லூரிகளிடமிருந்து தலா 5 சீட்டுகளை ஒதுக்கீடாகப் பெற்று அவற்றை இலட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தும் பணம் குவித்துள்ளான் தேசாய். 2010 ஜூனில் பிணையில் வந்த இந்த கிரிமினலை, 2010 நவம்பரில் குஜராத் பல்கலைக்கழகம் தனது செனட்டிற்குத் தேர்ந்தெடுத்தது.
– இவை சில உதாரணங்கள் மட்டுமே. இவை தவிர 1996-இல் நடந்த நரசிம்ம ராவின் மகன் பிரபாகர் ராவின் யூரியா ஊழல், கர்நாடக ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல், அண்மையில் நடந்துள்ள ஆதர்ஷ் ஊழல்.. எனத் தொடரும் ஊழல்களையும், மாநில அளவில் நடைபெற்றுள்ள ஊழல்களையும் பட்டியலிட பக்கங்கள் போதாது. இவற்றில் பங்குச்சந்தை, போலிப்பத்திரங்கள், ஹவாலா மற்றும் நிதிநிறுவன ஊழல்கள் போன்றவை தாராளமயக் கொள்கைகளின் நேரடி விளைவுகள். கேதான் தேசாய், காலணி ஊழல் போன்றவை தனியார்மயத்தின் விளைவுகள்.
__________________________________________
– அப்துல்லா, புதிய ஜனநாயகம், ஜனவரி – 2011
__________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !
- ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!
- ஸ்பெக்ட்ரம் ஊழல்: தனியார்மயத்தை மறைக்கும் பரபரப்பு கிசுகிசுக்கள்!
- 2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!
- சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !
- மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் !
- பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்
- அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!
- இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !
- டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!
- டாடா குழுமத்தின் கோரமுகம் -1
- டாடா குழுமத்தின் கோர முகம் -2
- ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?
- நானோ கார் : மலிவின் பயங்கரம் !
- சத்யமேவ பிக்பாக்கெட் ஜெயதே!
- செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!
- கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா?
- மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!
இந்தியாவில் தனியார்மயம் ! ஒரு ஊழலின் வரலாறு !! | வினவு!…
ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போவதாக ஆளும் வர்க்க எடுபிடிகளால் தம்பட்டமடிக்கப்பட்ட தனியார்மயத்தின் 20 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை….
[…] This post was mentioned on Twitter by வினவு, sandanamullai. sandanamullai said: RT @vinavu: இந்தியாவில் தனியார்மயம்! ஒரு ஊழலின் வரலாறு!! https://www.vinavu.com/2011/01/26/post-lpg-scandals/ […]
அட, ரொம்ப போரடிக்குதுப்பா, வேறே எதாவது பேசுங்கப்பா. பணத்துக்கும் கால் பிளேட் பிரியானிக்கும் சோடை போகாத நல்ல குடிமகன் கள் உள்ள நாடுகளை பற்றி பேசலாமே.
கொய்யால..போரடிக்குதா…உன் பணமும் என் பணமும்தான்யா பறிபோய் இருக்குது..திருடனுங்களை விரட்டிப் பிடிச்சுக் கைப்பற்றணும்ங்கற பொறுப்பில்லாம..போரடிக்குதுன்னு சொல்றியே..பொறுப்பில்லையா!!
கோபாலா… இது வரைக்கும் எத்தனை திருடனை விரட்டி பிடிச்சிங்க.
Nalla Thambi..
Atleast he (Gopal) starts worrying about the situation.. But you seem to be not a humanbeing but a “bullock” in the pond..
1970களிக் புது டெல்லியில் நடந்த பேரங்கள் மற்றும் ‘வியாபரங்கள்’ பற்றி முழுசா தெரிந்தவர்களுக்கு, இதெல்லாம் ஜுஜுபி. பணவீக்கத்தின் அளவால் ஊழல்களில் அளவு அன்று சிறியதாக தெரியும். ஆம். ஊழல் இன்றும் தொடர்கிறதுதான். ஆனால், அன்று தொழில் ஆரம்பிக்க, விரிவிபடுத்த, மூட புது டில்லியின் ‘தயவு’ தேவை பட்டது. இன்று அந்த லைசென்ஸ் ராஜ் இல்லை. அன்று இந்திரா காந்தியும், காங்கிரஸையும் கண்டு அனைத்து தொழில் நிறுவனங்களும் பயப்பட வேண்டிய நிலை. கப்பம் கட்ட வேண்டிய கண்ட்ரோல் ராஜிய காலம். இன்று அந்த கொடுமைகள் இல்லை. சுதந்திரமாக தொழில் செய்யலாம். வரி விகிதங்களும் குறைக்கப்பட்டுவிட்டன.
தாரளமயமாக்கல் ஊழலை முற்றாக குறைக்க முடியாது. ஊழல் என்னும் புற்று நோய்க்கான வித்து 60களில் விதைக்கப்பட்டது. அத்தனை சுலபமாக தீர்வு சொல்ல முடியாது. ஆனால் சில முக்கிய துறைகளில் அன்று இருந்த மெக ஊழல்கள் இன்று சாத்தியம் இல்லை. தொழில் துறை அமைச்சகம் அன்று ஊழலின் ஊற்று கண்.
Now there is no need for ‘liason officers’ to be maintained by Corporates in New Delhi, unlike the 70s.
அன்று நிகழ்ந்த ‘பேரங்களை’ பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. அவற்றுடன் ஒப்பிடும் போது நீரா ராடியா டேப்பக்ளில் வெளிப்பட்டவை ஒன்றுமே இல்லை. இந்திரா காந்தி காலத்தில் நிகழ்ந்த பேரங்களை பற்றி விசியம் அறிந்தவர்களிடம் விசாரித்து பாருங்கள். திரு. பாரதி மணி அவர்கள் எழுதிய ‘பல நேரங்களில், பல மனிதர்கள்’ நூல் அருமையான தகவல்களை தருகிறது. பார்க்கவும்.
நண்பர் Libertarian, 90 களுக்கு முன் இந்தியாவில் ஊழலே இல்லை என்றும், தனியார்மயத்திற்குப் பிந்தான் ஊழலே தலையெடுத்திருகிறது என்றும் கட்டுரையில் சொல்ல வருவது போல் உங்கள் விளக்கம் உள்ளது. ஆனால் கட்டுரையின் துவக்கமே “தனியார்மயமும் தாராளமயமும் புகுத்தப்பட்டபோது, இக்கொள்கைகள் ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போகின்றன என ஆளும் வர்க்க எடுபிடிகள் அனைவரும் தம்பட்டமடித்தனர்.” என்று இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறது. இதில் என்ன உங்களுக்கு குழப்பம்? 90 களுக்கு முன்பாவாவது ஒரு ஊழல் நடந்தால் அது ஒரு விவாதப் பொருளாகவும், சட்ட விரோதமகவும் இருந்து வந்தது. ஆனால் தனியார்மயத்திற்கு பின் புதுப் புது அரசியல் தரகர்களின் மூலம் சட்டப்பூர்வ வழியிலேயே செய்ய முடியும் என்ற புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. குறிப்பிட்ட அளவில் மக்களையும் அவர்களின் தகுதிக்கேற்ப இந்த லஞ்சம், ஊழல் என்ற பண்பாட்டிற்கும் பழக்கப்படுத்தியிருக்கிறது இந்த தனியார்மயச் சூழல். இந்தப் பின்னணியிலிருந்துதான் இந்த சமூக அமைப்பு முழுவதுமே மறு நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட நபரை குறி வைத்துப் பேசுவதில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. தனியார்மயத்தையும், கார்ப்பரேட் முதலாளிகளுக்காக டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த சமூக அமைப்பை மாற்றி அமைப்பது ஒன்றுதான் ஊழலை ஒழிப்பதற்கான ஒரே தீர்வாக இருக்க முடியும்.
சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகள் மற்றும் லிபரல ஜனனாயகத்தை 50களில் இருந்தே கடைபிடித்த பல நாடுகள் வளர்ந்த நாடாகவும், ஊழல் மிக குறைவாக உள்ள நாடுகளாகவும் உள்ளது எப்படி ? உதராணமாக பின்லேந், நெதர்லாந்த் போன்ற நாடுகளை சொல்லலாம். ஊழல்களுக்கு தாரளமயமாக்கல் கொள்கைகளை காரணம் சொல்ல முடியாது. வேறு பல வரலாற்று காரணங்கள் உள்ளன.
ரஸ்ஸிய இன்று ஊழல் மிகுந்த மாஃபியா குழுக்களின் பிடியில் சிக்கிய நாடாக உள்ளது. 1991க்கு பின் நிகழந்த மாற்றங்களை ‘மட்டும்’ இதற்க்கு காரணியாக கூற முடியாது. 1917 முதல் நிகழ்ந்த அனைத்து விசியங்களின் நிகர விளைவாகத்தான் பார்க்க வேண்டும். மே. ஒரு காலத்தில் மே.அய்ரோப்பிய நாடுகளுக்கு சமமாக இருந்த ரஸ்ஸிய கடந்த 90 ஆண்டுகளின் இத்தனை சீரழிய காரணம் என்ன ? Cumulative effects of various economic and political polices implemented over the decades.
//ஊழல்களுக்கு தாரளமயமாக்கல் கொள்கைகளை காரணம் சொல்ல முடியாது.//
ஊழலை தனியார்மயக் கொள்கை தீவிரப்படுத்துகிறது என்றே கட்டுரை சொல்ல வ்ருகிறது.
தனியார் துறை வேண்டாம் எல்லாத்தியும் பொது துறையாக மாற்றினால் ஊழல் இருக்காது அதனால் மக்களுக்கு நல்ல பலன் உண்டு என்று தானே சொல்ல வருகின்றீர்கள், எந்த பொதுத்துறை நிறுவனம் சிறப்பாக செயல்படுகின்றது ஊழல், திறமையின்மை, அலச்சியம், பொறூப்பிள்ளாமை.உதாரணமாக சில பொது துறையாக அரசு போக்குவரத்துக்கு கழகம், கல்வி,ரயில்வே,BSNL, etc. இதில் வேலை செய்யும் எந்த உழியர்களாவது ஒழுங்காக தம் கடமையை செய்கின்றார்களா அவர்கள் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் சலுகைகள். இவர்கள் மக்களுக்கு சேவை செய்து இருந்தால் மக்கள் ஏன் தனியார் துறை நோக்கி செல்லுகின்றார்கள்? ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் உழைப்பாளியை விட பொதுத்துறை நிறுவனதில் வேலை செய்பவர்களின் உழைப்பு குறைவுதான் காரணம் தனியார் துறை ஒருவர் தான் முதலாளி ஆனால் பொது துறையில் எல்லோரும் முதலாளிகள்.
நண்பர் Alavoudine,
தனியார்மயத்திற்கு மாற்று பொதுத் துறைதான் என்று கட்டுரை எங்கும் சொல்லவில்லை. அதே சமயம் பொதுத் துறை என்பது ஒரு சடங்குத்தனமாக இயங்கி வந்தாலும் அதன லாபம் யாருக்கு சொந்தம் என்பதையும், ஒரு தனியார் துறையில் வரும் லாபம் (கொள்ளை) யாருக்கு சொந்தம் என்பதிலிருந்தும் எடை போட்டுப் பாருங்கள்.
///பொதுத் துறை என்பது ஒரு சடங்குத்தனமாக இயங்கி வந்தாலும் அதன லாபம் யாருக்கு சொந்தம் என்பதையும், ஒரு தனியார் துறையில் வரும் லாபம் (கொள்ளை) யாருக்கு சொந்தம் என்பதிலிருந்தும் எடை போட்டுப் பாருங்கள்///
90களுக்கு முன்பு தொலை தொடர்பு துறையில், இந்த ‘தனியார்’ கொள்ளைகளே இல்லை. அனுமதியே இல்லை. அன்று பி.எஸ்.என்.எல் மட்டும்தான். ஒரு லெண்ட் லைன் போன் வாங்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். லஞ்சம் மற்றும் எம்.பி கோட்டாக்கள். லைன்மேன்களின் அட்டகாசம், மாமுல். இன்று இந்த தனியார் ‘கொள்ளையர்கள்’ போட்டிக்கு வந்தபின், இவை எதுவும் இல்லை. கேட்டவுடன் கனெக்ஸன். லைன்மென்கள் காசு கேட்காத அதிசியம்.
இந்த இணையதளம், நம்து விவாதங்கள், இலசச பிளாகர்கள், மிக மலிவான இணைய சேவை மற்றும் கம்யூட்டர்கள் : இவை அனைத்தும் இந்த தனியார் துறை ‘கொள்ளை’ இல்லாமல் இருந்திருந்தால், சாத்தியமே இல்லை. அன்று இருந்த நிலை பற்றி அனுபவசாலிகளுக்கு தெரியும்.
இப்படி தனியார் துறை ‘கொள்ளையை’ அனுமதித்தது தவறோ ? அனுமதிக்கப்படாமல் பர்மா அல்லது வட கொரியா போல் இந்தியாவும் ‘முடிய’ நாடாகவே தொடர்ந்திருந்தால், இந்த இணைய விவாதமே நடக்காது. தோழர்கள் அன்று போல ‘புதிய ஜனனாயகம்’ இதழ்களை மட்டும் விற்று பிரச்சாரம் செய்து கொண்டிருப்பர். இந்த உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஓவர வேலை செய்து கெடுத்துவிட்டது. தப்புதான்.
\\90களுக்கு முன்பு தொலை தொடர்பு துறையில், இந்த ‘தனியார்’ கொள்ளைகளே இல்லை. அனுமதியே இல்லை. அன்று பி.எஸ்.என்.எல் மட்டும்தான். ஒரு லெண்ட் லைன் போன் வாங்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.//
இன்று கேட்டவுடன் தொலைபேசி இணைப்பு கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் தொழில் நுட்ப வளர்ச்சியே,தனியார் மயமல்ல.
\\லஞ்சம் மற்றும் எம்.பி கோட்டாக்கள். லைன்மேன்களின் அட்டகாசம், மாமுல். இன்று இந்த தனியார் ‘கொள்ளையர்கள்’ போட்டிக்கு வந்தபின், இவை எதுவும் இல்லை. கேட்டவுடன் கனெக்ஸன். லைன்மென்கள் காசு கேட்காத அதிசியம்//
கீழ்நிலை ஊழியர்கள் காசு கேட்டார்கள் என்று குற்றம் சாட்டும் நீங்கள் 2001 ஆம் ஆண்டு வரை BSNL நிறுவனம் அலைபேசி சேவையை தொடங்குவதற்கு தனியார் மய ”நல்லவர்கள்”அனுமதிக்காதது பற்றி என்ன சொல்கிறீர்கள்.இத்தனைக்கும் தனியார் துறை ”நல்லவர்கள்” ”வல்லவர்கள்”-ஐ விட தொழில் நுட்பத்திலும் அக கட்டுமான வசதிகளிலும் BSNL மேம்பட்ட நிலையில் இருந்தது.
BSNL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் உயர்நிலை அலுவலர்களை தனியார் தொலை தொடர்பு நிறுவன நல்லவர்கள் கொழுத்த சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்துக் கொள்ளுவதற்கான காரணத்தை கொஞ்சம் விளக்கமுடியுமா.
தனியார் மயமாக்கலின் சாதனைகளை விளக்க வேண்டி,மும்பை நகரத்தில் மின்சார விநியோகம் செய்யும் ரிலையன்சு நிறுவனத்தை ”பாராட்டி” நுகர்வோர் ஒருவர் எழுதியுள்ள ”அன்பு மடல்” ஒன்று தங்கள் பார்வைக்கு.
http://www.consumercomplaints.in/complaints/reliance-energy-mumbai-c119666.html
திப்பு,
டெக்னாலாஜி மட்டும் தான் காரணம் என்றால், தனியார்களை இன்றுவரை அனுமதிக்காமல் இருந்து பார்த்திருக்கலாமே. தனியார்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் போட்டி தான் அடிப்படை தேவை. போட்டிகள் இருக்கும் துறைகள் சிறக்கும். தொலைதொடர்பு துறையில் போட்டிகள் உருவானவுடன் ஏற்பட்ட பிரமிக்க தக்க மாற்றங்களே சாட்சி. 90கள் வரை இருந்த நிலை பற்றி அறியாமை உள்ளது.
\\டெக்னாலாஜி மட்டும் தான் காரணம் என்றால், தனியார்களை இன்றுவரை அனுமதிக்காமல் இருந்து பார்த்திருக்கலாமே//
இதைத்தான் தனியார்மய எதிர்ப்பாளர்களும் சொல்கிறோம்.தனியார் துறையை அனுமதித்திருக்காவிட்டாலும் தொலைதொடர்பு துறையில் இன்று நாம் காணும் வளர்ச்சி எட்டப்பட்டிருக்கும்.
சான்றாக உலக அளவில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் வேலைகளையும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்டு பெற்று அந்த வேலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி வரும் BHEL நிறுவனத்தையும்,ISRO எட்டியிருக்கும் வளர்ச்சியையும் உங்களுக்கு சுட்டி காட்டுகிறேன்.
\\தனியார்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்று சொல்லவில்லை.//
பிறகு ஏன் திருடர்களிடமே திறவுகோலை ஒப்படைக்க சொல்கிறீர்கள்.
\\போட்டி தான் அடிப்படை தேவை. போட்டிகள் இருக்கும் துறைகள் சிறக்கும்.//
”போட்டிகள்” மிகுந்த இன்றைய சந்தை பொருளாதாரத்தில்தான் விலைவாசி விண்ணை முட்டுகிறது.போட்டிகளால் துறைகள் ”சிறப்பதால்” யாருக்கு நன்மை என்று விளக்க முடியுமா.தனியார் முதலாளிகள் அவ்வப்போது தமக்குள் கூட்டணி-syndicate – கட்டுவது எதை சிறக்க செய்வதற்காக என்று சொல்லமுடியுமா.போட்டி இல்லாமல் போனதால் இந்திய தொடர்வண்டித்துறை எதுவும் சாதிக்கவில்லை என்று சொல்வீர்களா.
முறையாக நிர்வகிக்கப்பட்டால் நமது பொதுத்துறை நிறுவனங்களும் நமது தொழிலாளர்களும் உலகில் யாருக்கும் சளைத்தவர்களல்ல.
//தனியார் துறையை அனுமதித்திருக்காவிட்டாலும் தொலைதொடர்பு துறையில் இன்று நாம் காணும் வளர்ச்சி எட்டப்பட்டிருக்கும்.///
இல்லை. மிக தவறான, மேலோட்டமான அனுமானம். பி.எஸ்.என்.எல் மட்டும் இருந்த காலங்களில் அவர்களின் வேலை திறன் மற்றும் அட்டகாசம் பற்றி முழு அறியாமையில் உள்ளீர்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும்.
//”போட்டிகள்” மிகுந்த இன்றைய சந்தை பொருளாதாரத்தில்தான் விலைவாசி விண்ணை முட்டுகிறது.போட்டிகளால் துறைகள் ”சிறப்பதால்” யாருக்கு நன்மை என்று விளக்க முடியுமா.தனியார் முதலாளிகள் அவ்வப்போது தமக்குள் கூட்டணி-syndicate – கட்டுவது எதை சிறக்க செய்வதற்காக என்று சொல்லமுடியுமா.போட்டி இல்லாமல் போனதால் இந்திய தொடர்வண்டித்துறை எதுவும் சாதிக்கவில்லை என்று சொல்வீர்களா.
முறையாக நிர்வகிக்கப்பட்டால் நமது பொதுத்துறை நிறுவனங்களும் நமது தொழிலாளர்களும் உலகில் யாருக்கும் சளைத்தவர்களல்ல///
60களில், 70களில், 80களில் இருந்த விலைவாசி உயர்வு விகுதம், வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் வறுமை பற்றி அறியாமையில் உள்ளீர்.
சரி, அப்ப, இந்த தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கலை reverse செய்து, பழையபடி தேசியமயமாக்குதல் மற்றும் மூடிய பொருளாதார கொள்கைகளை அமலாக்கி பாருங்கள். பிறகு புரியும் எதார்த்தம். இந்த ‘போலி’ கம்யூனிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சியர்கள் கூட இதை இன்று வலியுறுத்துவதில்லை. காரணம் அவர்களுக்கு யாதார்த்தம் புரிந்து விட்டது. அவர்கள் இந்த விசியத்தில் போலிகள் அல்லது மூடர்கள் அல்ல.
\\மிக தவறான, மேலோட்டமான அனுமானம்.பி.எஸ்.என்.எல் மட்டும் இருந்த காலங்களில் அவர்களின் வேலை திறன் மற்றும் அட்டகாசம் பற்றி முழு அறியாமையில் உள்ளீர்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும்//
உங்கள் கருத்துபடி அறியாமையில் இருக்கும் நான் சான்றுகளை சுட்டிக்காட்டி வாதிடுகிறேன்.எல்லாம் அறிந்த நீங்களோ அறியாமை என்று மொட்டையாக எனது வாதங்களை நிராகரிக்கிறீர்கள்.யாருடைய வாதம் மேலோட்டமானது.
தனியார் மயம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே பணியில் இருந்த ஊழியர்களை கொண்டுதான் BSNL தனியார் துறை ”வல்லவர்களுக்கு” இணையான சேவையை அளித்து வருகிறது. அவர்களது வேலைத்திறனுக்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.
\\60களில், 70களில், 80களில் இருந்த விலைவாசி உயர்வு விகுதம், வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் வறுமை பற்றி அறியாமையில் உள்ளீர்//
இந்தியாவில் எப்போதுமே பற்றாக்குறை வரவு-செலவு திட்டமே-Deficit Budjet- போடப்படுகிறது.ஒரு வளரும் நாட்டில் அது தவிர்க்க முடியாததுதான்.அதன் காரணமாக பணவீக்கமும்.விலைவாசி உயர்வும் எப்போதுமே இருக்கிறது.ஆனால் 70 ,80 .களின் விலைவாசி உயர்வு விகிதத்துக்கும் 90-களுக்கு பின் தாராள மயமாக்கல் காரணமாக ஏறும் விலைவாசி உயர்வு விகிதத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.மற்றபடி வேலையில்லா திண்டாட்டமும் வறுமையும் ஒழிந்துவிடவில்லை.மாறாக வறுமையின் கோரப்பிடி இறுகிவருகிறது.ஆலை மூடல்களால் வேலையிழந்து வீதிக்கு வந்த தொழிலாளர்களும், பல்லாண்டுகள் பணியாற்றிய பின்னரும் குறைந்த கூலிக்கு ஒப்பந்த தொழிலாளர்களாகவே அவதியுறும் தொழிலாளர்களும்,வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கால்கடுக்க காத்துகிடக்கும் படித்த இளைஞர்களும்,கடந்த பதினைந்து ஆண்டுகளில் அரை மணி நேரத்துக்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளும் இதற்கு குருதி சாட்சியமாக உள்ளனர்.
\\இந்த தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கலை reverse செய்து, பழையபடி தேசியமயமாக்குதல் மற்றும் மூடிய பொருளாதார கொள்கைகளை அமலாக்கி பாருங்கள். பிறகு புரியும் எதார்த்தம்.//
நிச்சயமாக தேசியமயமாக்கலை வரவேற்போம். பொதுத்துறை நிறுவனங்கள் மக்கள் நலனை நோக்கமாக கொண்ட அரசின் -தற்போதைய அரசுகளல்ல,இவை தாராள,தனியார் மயமாக்கலை ரத்து செய்யமாட்டா என்பதை நாங்கள் நன்கறிவோம் -கட்டுபாட்டில் சமூக தணிக்கை போன்ற மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு செயல்படுமேயானால் இன்னும் சிறப்பாக செயல்படும்.அதன் பலன்கள் மக்களை சென்றடையும்.
தான் நிலையான ஒரு வேலையில் உள்ளோம் என்கின்ற ஒரு காரணதாலேயே தன்னுடைய கடமையை மறந்து ஆனவதோடு திரிந்தவர்கள்தான் அரசு உழியர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது களையப்படக்கூடிய ஒன்று. ஆனால் இந்த ஒரே காரணத்துக்காக பொதுத்துறையையே தனியார் துறையாகவெல்லாம் மற்றிவிட முடியாது அவ்வாறு அரசும் செய்யவில்லை என்பது லிபரேஷனுக்கு தெரிந்திருக்கும் என்பது அவருடைய வாத்தத்தில் இருந்து தெரிகிறது. உண்மை: பொதுத்துறையை தனியார்துறையாக மற்றும்போது அவர்கள் மேற்கூரிய காரணங்களை எல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை. இத்தகைய காரணங்களை சொல்லிக் கொண்டவர்கள் எல்லாம் முதலாளித்துவ அறிவு ஜீவிகளே. ஆனால் அரசு தான் ஏதாவது காரணம் கூற வேண்டுமே அதுவும் ஒத்துக்கொள்ளும் விதமாக இருக்கவேண்டுமே என்பதற்காக அவர்களே முன் முயன்று ஒரு பத்தாண்டுகள் செலவிட்டு அரசுதுறை நிருவங்களை நட்டத்தில் இயங்கம் படி செய்தனர், அல்லது அதன் நிதியறிக்கை அவ்வாறு மாற்றி அம்க்கப்பட்டது. இவ்வாறு செய்துதான் நட்டத்தில் இயங்கும் பொதுத்துறையை தனியார்மயமாக்களை நியாயமாக்கினர். இதன் படி தான் தன்னுடய பகல் கொள்ளைகளுக்கு வழி ஏற்படுத்திக் கொள்ள தாய் நாட்டை அயலானுக்கு கூட்டிக் கொடுத்தனர். இதல்லாம் லிபரேஷனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஒத்துக் கொள்ள மறுப்பதுதான் அவருடைய மிக மிக உறுதியான நிலைப்பாடு. அதன் மர்மம் தான் நீண்ட நெடுநாட்களாக யாருக்கும் தெரியவில்லை.
//ந்த பொதுத்துறை நிறுவனம் சிறப்பாக செயல்படுகின்றது ஊழல், திறமையின்மை, அலச்சியம், பொறூப்பிள்ளாமை.உதாரணமாக சில பொது துறையாக அரசு போக்குவரத்துக்கு கழகம், கல்வி,ரயில்வே,BSNL, etc. இதில் வேலை செய்யும் எந்த உழியர்களாவது ஒழுங்காக தம் கடமையை செய்கின்றார்களா அவர்கள் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் சலுகைகள். //
சூப்பர் கொள்கைங்க… நம்மாளுங்க ஒருத்தனும் சரியில்ல அதனால தனியார் கையிலயும், வெளிநாட்டுக்காரன் கையிலயும் கொடுத்துறனம்னு சொல்வதன் மூலம் நீங்க ஒரு தெளிவான டெவலெப்மெண்டு ஓரியண்டட் திங்கர்னு நிரூபிக்கிறீங்க.
இதே மாதிரிதான் நானும் ஒன்னு செஞ்சேன். என்னோட சித்தாப்பா பையன் ஒருத்தன் 2 வயசு ஆகுது ஒரே சேட்டை ஒரு வேலை உருப்படியா செய்வது இல்லை, அவன எங்கூட்டு பக்கத்துல இருந்த பங்களா மாமாக்கிட்ட வேலையாளா வைச்சிக்கன்னு கொடுத்துட்டு வந்துட்டேன். இப்போ பாருங்க அந்த மாமா அவன செமத்தியா வேல வாங்குறாரு, பையன் கொஞ்சமாச்சும் சேட்ட பன்னனுமே.. ம்ஹும்.. ஆனா பாருங்க நம்ம சித்தப்பா மட்டும் என்ன வெட்டுறதுக்கு அருவாளோட அலையுறதா ஊர் பக்கம் பேசிக்கிறாய்ங்க.
உங்களுக்கு ஒரு பங்களா மாமா கதை இருக்கின்றது போல எனக்கும் ஒரு பங்களா மாமா கதை இருக்கின்றது, எனக்கும் ஒரு சொந்த மாமா இருக்கின்றார், வேலை கிடைக்காமல் அவரிடம் வேலை கேட்டேன் அவர் இல்லை என்று சொல்லிவிட்டார் அவரிடம் காரணம் பலபேர் வேலை செய்தார்கள், ஆனால் அவரிடம் வேலை செய்தவர்கள் ஒரு திறமையும் கிடையாது ஒரு வேலையும் செய்ய மாட்டர்கள் ஆனால் மாமா சம்பளமும் சலுகையும் வரிகொடுத்தார், அது பத்தாது என்று ஒரு வேலையும் செய்யவில்லை என்றாலும் போனஸ் சம்பள உயர்வு என்று மாமாவிடம் கரைத்து விடுவார்கள். இப்படியே கொடுத்து கொடுத்து மாமா நடு தெருவுக்கு வந்து விட்டார், நான் பங்களா மாமாவிடம் வேளைக்கு சேர்த்தேன் பங்களா மாமா கொஞ்சம் சுயநல வாதி தான் இருந்தாலும் அவரு நிறைய சம்பாதித்து கொண்டு அதில் எங்களுமும் கொஞ்சம் கொடுக்கின்றார் என்னை போல் பலபேர் அந்த பங்களா மாமாவிடம் வேலை செய்கின்றோம் அதனால் பங்களா மாமா நடு தெருவுக்கு வராமல் இருக்கின்றார்,
லிபர்டேரியன் என்ற அதியமான் அவர்களே ! இப்போதுள்ள தாராளமயம் மட்டுமல்ல லைசன்சு ராஜ்ஜையும் தான் நாங்கள் தனியார்மையத்தின் விளைவு என்று சொல்கின்றோம். திரும்ப திரும்ப இந்த சொத்தை வாதத்தினை வைக்காதீர்கள்.
இப்போதுதான் லைசன்சே தேவையில்லையே ! அப்புறம் எப்படி லைசன்சு ராஜ்ஜியத்தை விட கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. இதனை சுருக்கமாக ‘பணவீக்கத்தின் அளவால் ஊழல்களில் அளவு அன்று சிறியதாக தெரியும்’ சப்பைக் கட்டுக் கட்ட வேண்டாம். அத காலத்திய மெகா ஊழலான ராஜீவ் காந்தி 64 கோடி என்றால் பணவீக்கத்தால் அது இப்போது ஒரு 300 கோடி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போதெல்லாம் குறைஞ்சபட்ச ஊழல் தொகையே 5000 – 10000 – 176000 கோடியே லிபர்டேரியன் அல்லது அதியமான் அவர்களே ! இதுதான் தனியார்மையத்தின் விளைவு !
ரஸ்யாவினைப் பற்றி வாசகர்கள் அறிவார்கள். தனியார்மைய பாபியாக்களால்தான் 1991க்கு பிறகு ரஸ்யா இப்போதுள்ள அவல நிலைக்கு வந்துள்ளது. இதனை 1991 விளைவு என்று மறைக்க வேண்டாம்.
ரஸ்யா ஸ்டாலின் என்பதெல்லாம் விரிவாக அசுரன், கலையகம், தமிரங்ககத்தில் படித்தாகி விட்டது. வேறு எங்காவது போய் பழைய மாவையே அரைக்கவும்.
ஆதவன்
///இப்போதுதான் லைசன்சே தேவையில்லையே ! அப்புறம் எப்படி லைசன்சு ராஜ்ஜியத்தை விட கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது.///
லைசென்ஸ் ராஜ்ஜியம் இன்னும் ஒரு சில துறைகளில் உள்ளதுதான். பேருந்து போக்குவரத்து துறை போன்றவற்றில். ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஏல முறையில் (3 ஜி) விற்க்கப்பட்ட போது ஊழல் இல்லை. அமைச்சர் தன் இஷ்ட்டப்படி ‘விற்ற’ போதுதான் (2 ஜி) யில் ஊழல். வித்தியாசம் உள்ளது.
Now the corruption is mainly when vendors ‘supply’ services or goods to govt departments. or when govt tries to ‘sell’ its suprlus property. In the days of licensing, everyone had to pay for ‘licenses’ in Delhi. or pay yearly commissions to retain their licenses. and tax regime was too high and black money generation (as a percentage of GDP) was too high then when compared to today. அன்றைய மைய அரசின் தொழில் துறை அமைச்சரகத்தின் அதிகாரம் மற்றும் ஊழல் பற்றி அறியாமையில் உள்ளீர்கள். இன்று அவர்களின் தயவு industrialists களுக்கு தேவையில்லை. ஒரு பிர்லா அன்று அளித்த ஆண்டு கப்பம் பற்றி விசாரித்து பாருங்கள். பாரதி மணியின் நூலை படித்து பாருங்கள். Liason Officers பற்றி…
///தனியார்மைய பாபியாக்களால்தான் 1991க்கு பிறகு ரஸ்யா இப்போதுள்ள அவல நிலைக்கு வந்துள்ளது. இதனை 1991 விளைவு என்று மறைக்க வேண்டாம்.///
அப்ப்டியென்றால் 1991க்கு முன் அங்கு எல்லாம் நேர்மையாக, அருமையாக நடந்தனவா என்ன ? மாஃபியா குழுக்கள் அதற்க்கு பல பத்தாண்டுகள் முன்பே உருவாகி விட்டன. 70களில்ல்யே கருப்பு சந்தை மற்றும் ஊழல் ரஸ்ஸியாவில் மலிந்துவிட்டது. அறியாமையில் உள்ளீர். இன்றைய சீரழிவுக்கான வித்துக்கள் பல பத்தாண்டுகளுக்கு முன்பே விதைக்கப்பட்டன.
////ரஸ்யா ஸ்டாலின் என்பதெல்லாம் விரிவாக அசுரன், கலையகம், தமிரங்ககத்தில் படித்தாகி விட்டது. வேறு எங்காவது போய் பழைய மாவையே அரைக்கவும்.
////
அப்படியே ? மே.அய்ரோப்பியா நாடுகளில் உள்ள ஊழல் அளவுகளோடு நான் ரஸ்ஸியாவை ஒப்பிட்டதற்க்கு பதில் இல்லை ? யாரும் இதுவரை சொல்ல முடியவில்லை. அரைத்த மாவை யார் அரைக்கிறார்கள் என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டம். சரியா.
ஊழல்களுக்கான காரணிகள் பற்றி ஒரு முக்கிய ஆய்வு :
India state “biggest culprit” for rampant corruption: leading think tank
http://www.thehindu.com/news/international/article937947.ece
the relevant report from Heritage Foundation :
Corruption In India: People Or The State?
http://blog.heritage.org/?p=47741
ஆமாங்க, இந்தியாவுல ஊழலுக்குக் காரணமே இங்கிருக்கிற சோசலிசம்தான். மன்மோகன்சிங் 1991க்குப் பிறகு சோசலிசத்தை அதிகப்படுத்துனதுனால ஊழல் அதிகமாயிருச்சி. கம்யூனிஸ்டு டாடா, அம்பானி எல்லாம் முதலாளி வேசம் போட்டு முதலாளித்துவத்துக்கு களங்கம் உருவாக்குறாங்க.
ஆனாக்கூட நாங்க அவுங்கள எதிர்க்க மாட்டோம். ஏன்னா, அவுங்க இப்போ முதலாளி வேசத்துல இருக்காங்க.
////இந்தியாவுல ஊழலுக்குக் காரணமே இங்கிருக்கிற சோசலிசம்தான்/////
மிக சரியான காரணம் இது. எங்கெல்லாம் சோசியலிச பாணி முறைகள் அமலாக்கப்பட்ட (அவை அரைகுறையாக இருந்தாலும் சரி), அரசிடல் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் ஊழலும், அதிகார துற்பிரயோகமும் ஏற்பட்டு, மக்களின் நேர்மையையும் குறைந்தது. பார்க்கவும் எமது பழைய, முக்கிய ஆங்கில பதிவு :
’Why Indians became cynical and corrupt ?’
India achieved freedom in 1947 after intense struggle
and sacrifice by a dedicated and idealistic people. We
have slowly lost the high ideals and honesty since
then.
The main culprit is the socialistic economic model
followed since 1950, coupled with population
explosion. Socialistic polices, in the name of
egalitarianism, created crony capitalism (license,
permit, quota raj), along with confiscatory tax regime
and double digit inflation.
The government printed enormous quantity of money to
finance its huge programs and investments. It resulted
in double digit inflation. Additional resources were
raised through very high taxation (upto 95 % income
tax rate). The triple attacks of inflation, license
raj and high taxation eroded our values and morals. A
bloated bureaucracy was created to administer the
economy, which was a breeding ground for corruption
and cronyism. Tight controls and regulations strangled
economic growth with high unemployment.
Industrialists and traders began to evade taxes which
were perceived to be unfair. The tax administration
became increasingly corrupt. Respect for the rule of
law slowly decreased. The cynicism spread slowly and
political parties promised the heaven for the people
and began to purchase votes. Subsidies and propaganda
of government machinery changed the values and outlook
of common man, who began to look upon the government
to for all his wants. When the voters began to sell
their votes for money and other considerations,
corruption set in. Irresponsible trade unionism
(especially of government sector employees) eroded
work ethics of the organized sector, while the
unorganized sector (who are the majority) were
helpless and squeezed.
Black economy is as large as the ‘official economy’.
Individual initiative and enterprise were discouraged
and a whole generation of Indians became job-seekers
instead of job creators. There were isolated pockets
of excellence where enterprising attitude of locals
resulted in prosperity for the region. For example
textile industry grew in Coimbatore district while
trucking industry in Namakkal.
Reckless borrowing of governments, which were living
beyond their limits, resulted in a debt trap and high
inflation. All this took our nation to near bankruptcy
in 1990-91. And since liberalization began in 1991,
economic growth is high and the hidden potential of
our economy has been unleashed.
We are a living proof of the prediction of Lord
Keyenes who said ‘..there is no surer way of
undermining a nation’s character than by undermining
her currency..’
‘High taxation leads to evasion, which makes people
cynical ; and this cynicism is a slow poison which
ultimately destroys democracies’ says Peter Drucker
in his book, The New Realities. (1999)
Our cynical attitude is highlighted in the way vested
interests and apathy have distorted, reservation
policy, trade unionism, subsidies and environmental
issues.Economic health can be restored, but morals of
a people, once lost, is difficult to repair. It may
take many decades for full restoration.
அவமானம்!
இந்த ஊழல்களைப் போல தானும் செய்ய தமிழனுக்கு, வாய்ப்பு கிடைக்கவில்லையே!
கேளடா, மடப்பிறப்பே!
இது ஆரியசதி!
வடக்கு வாழ்கிறது!தெற்கு தேய்கிறது!
தோள் தட்டி கிளம்பு என் தமிழ் புலியே!
vinavu how to vote in indli?? mail me
//ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஏல முறையில் (3 ஜி) விற்க்கப்பட்ட போது ஊழல் இல்லை. அமைச்சர் தன் இஷ்ட்டப்படி ‘விற்ற’ போதுதான் (2 ஜி) யில் ஊழல்//
யார் அமைச்சரை விற்கும்படி தூண்டியது. உயிர் வாழும் உரிமைக்கு ஆபத்து என்று வழக்குப் போட்ட மேதகு தனியார்மைய தரகு முதலாளியால்தான் Lion’s Share களவாடப்பட்டது. ஆனால் எய்தவனை விட்டுவிட்டு அம்பினை கும்முகிறார்கள். வினவிலேயே இது பற்றிய பதிவு வந்து உள்ளது. படித்துப் பாருங்கள் !
//அன்றைய மைய அரசின் தொழில் துறை அமைச்சரகத்தின் அதிகாரம் மற்றும் ஊழல் பற்றி அறியாமையில் உள்ளீர்கள்.//
இதுவும் வெள்ளையர் தமக்கு சாதகமாக விட்டுச்சென்ற லைசன்சு ராஜ்ஜியம் என்று உங்களால் சொல்லப்படும் காலனித்துவ அதிகார தரகு முதலாளித்துவ அமைப்பால்தான் நிகழ்ந்தது. இந்த லைசன்சு ராஜ் மற்றும் இன்றைய தனியார்மையத்திற்கு ஒரே தீர்வு கம்பியுனிஸம் மட்டுமே
//அப்ப்டியென்றால் 1991க்கு முன் அங்கு எல்லாம் நேர்மையாக, அருமையாக நடந்தனவா என்ன //
ஆமாம். ரஸ்யாவில் ஸ்டாலின் இருக்கும்வரை நன்றாகவே நடந்தது. ஐந்தாண்டுகளின் நோக்கங்களை எல்லாம் நான்கு ஆண்டுகளிலேயே அடைந்தோம்.
//இதுவும் வெள்ளையர் தமக்கு சாதகமாக விட்டுச்சென்ற லைசன்சு ராஜ்ஜியம் என்று உங்களால் சொல்லப்படும் காலனித்துவ அதிகார தரகு முதலாளித்துவ அமைப்பால்தான் நிகழ்ந்தது. இந்த லைசன்சு ராஜ் மற்றும் இன்றைய ///
உமது அறியாமை முழுமையானது என்பதற்க்கு இதுவே சான்று. வெள்ளைகாரன் ஆட்சியில், அதன் பிறகு 50கள் வரை, இந்த லைசென்ஸ் ராஜ்ஜியம் இல்லை. (வரும் என்று சரியாக கணித்திருந்தால், இந்த பிர்லா காங்கிரஸ் மற்றும் காந்திக்கு ‘ஆதரவளிக்காமல்’ இருந்திருப்பார் !!
அதென்ன தரகு முதலாளி ? வெறும் பொருள்ற்ற வார்த்தைகள் இவை.
///ஆனால் எய்தவனை விட்டுவிட்டு அம்பினை கும்முகிறார்கள். வினவிலேயே இது பற்றிய பதிவு வந்து உள்ளது. படித்துப் பாருங்கள் ///
படித்தேன். ஆனால் அப்படியே ஏற்க்கவில்லை. Your version is over simplification.
/////அப்ப்டியென்றால் 1991க்கு முன் அங்கு எல்லாம் நேர்மையாக, அருமையாக நடந்தனவா என்ன //
ஆமாம். ரஸ்யாவில் ஸ்டாலின் இருக்கும்வரை நன்றாகவே நடந்தது. ஐந்தாண்டுகளின் நோக்கங்களை எல்லாம் நான்கு ஆண்டுகளிலேயே அடைந்தோம்.///
இதை ஸ்டாலினால் நசுக்கபட்ட மக்கள் சொன்னால் ஏற்க்க முடியும். கி.பி / கி.மு போல ஸ்டாலிக்கு முன் / பின் என்று மிக எளிமைபடுத்தும் வாதம் இது. ஸ்டாலின் காலமானது 1953இல். அதன் பிறகு அனைவரும் ‘திரிபுவாதிகள்’ மற்றும் அயோக்கியர்கள் என்பது உமது கோணம். ஆனால் உண்மை வேறு. அந்த அமைப்பே, அதிகார துஸ்பிரயோகத்திற்க்கும், ஊழலுக்கும், சீர்ழிவிற்க்கும் வழி வகை செய்யும் என்பதுதான் உண்மை.
///இந்த லைசன்சு ராஜ் மற்றும் இன்றைய தனியார்மையத்திற்கு ஒரே தீர்வு கம்பியுனிஸம் மட்டுமே
///
அது உங்களின் ‘நம்பிக்கை’ ; சரி, முயற்சி செய்து பாருங்கள். அப்பதான் புரியும்.
இந்திய சாதனைகள் 1992 முதல் 2010 வரை…
சித்திரகுப்தன் என்ற நண்பரால் வினவு இணையத்தளத்தில் தரப்பட்ட ஒரு தகவல், என் இதயத்திற்கு அருகில் இருந்தால் தானே கோவம் வரும் என்று கருதி இங்கே சேகரித்து வைக்கிறேன்…. இந்தியாவில் இதுவரை ஊழல் 73 லட்சம் கோடியை (1992 முதல் 2010 வரை) தொட்டுவிட்டது – வில…
மனித இனத்தின் சாதனைகளை எல்லாம் தனி மனிதர்களின் சாதனைகளகக் காட்டுகிற வித்மாகவே நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.
பலரால் அதினின்று இன்னமும் விடுபட இயலவில்லை. ஏட்டுப் படிப்பு சிந்தனையை முடக்கிப் போடுவதற்கு இது ஒரு உதாரணம்.
எந்தத் தொழில் நுட்ப, விஞ்ஞானச் சாதனைக்கும் பின்னால் அதற்கு முந்திய காலத்திற் பலரது உழைப்பும் காணப்படாத சமகால உழைப்பும் சமூக ஒழுங்கும் மக்கள் சமூகமாக இயங்குவதும் பெரும் பங்களித்துள்ளன.
.
தனிமனிதரை மிகையாக முக்கியப்படுத்தும் தவறான அணுகுமுறை போக, எவரோ ஒரு தனிமனிதரின் கீழ் வேலை செய்தால் தான் உருப்படியாக எதையும் சாதிக்கலாம் என்பது மனிதரைக் கீழ்மைப்படுத்து ஒரு பார்வை.
.
தனியார்மயமாக்கல் எத்தகைய அழிவுகளுக்கு வழி செய்துள்ளது என்பதற்கு பிரிட்டிஷ் ரயிலுக்கு நடந்ததையும் நியூசீலாந்து மின்சாரத்துக்கு நடந்ததையும் சான்றக்கக் கொள்ளலாம்.
தனிமனித லாபம் முக்கியமாகும் போது சமூக நலனும் ஊழியர்களது நலனும் பாதுகாப்பும் முக்கியத்துவத்தை இழந்து விடுகின்றன.
இப்போது மேலை முதலாளிய நாடுகள் பலவற்றில், முதலாளியக் கண்ணோட்டத்திலும், Thatcherite தாராளவாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த நோக்கில் அது இனித்தான் நிகழ வேண்டும்
“ஊழல் என்னும் புற்று நோய்க்கான வித்து 60களில் விதைக்கப்பட்டது.”
“தொழில் துறை அமைச்சகம் அன்று ஊழலின் ஊற்று கண்.”
“ஊழல்களுக்கு தாரளமயமாக்கல் கொள்கைகளை காரணம் சொல்ல முடியாது. வேறு பல வரலாற்று காரணங்கள் உள்ளன.”
“////இந்தியாவுல ஊழலுக்குக் காரணமே இங்கிருக்கிற சோசலிசம்தான்/////
மிக சரியான காரணம் இது. எங்கெல்லாம் சோசியலிச பாணி முறைகள் அமலாக்கப்பட்ட (அவை அரைகுறையாக இருந்தாலும் சரி), அரசிடல் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் ஊழலும், அதிகார துற்பிரயோகமும் ஏற்பட்டு, மக்களின் நேர்மையையும் குறைந்தது.”
இவையெல்லாம் அய்யா libertarian அவர்களின் ஆய்வு முடிவுகள். இன்னும் நிறைய சொல்றார். அப்பா! என்னமா ஆய்வு செய்கிறார்.
இந்திய ஊழலை மட்டுமல்ல உலக ஊழலையே ஒழிக்க இவரை சர்வதேச ஊழல் ஒழிப்பு அமைச்சராக நியமிக்க பதிவுலகம் சிபாரிசு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். உலக அளவில் ஊழலை ஒட்டு மொத்தமாக ஒழித்துவிடுவார். நமக்கு வேலை மிச்சம். இனி எல்லாம் டான் டான்னு நடக்கும்.. பைசா செலவில்லாமல்… அதாங்க லஞ்சம் கொடுக்காமல்…
முதல் ஓட்டு என்னுடையதுதான்.
அடுத்து,
”அரைத்த மாவை யார் அரைக்கிறார்கள் என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். சரியா.”
சரிதான் libertarian அவர்களே! ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு
என்கிற மாவை எத்தனை முறைதான் அரைப்பீர்கள்? எந்திரம் (தலைப்பு) எதுவாக இருந்தாலும் இந்த மாவைத் தவிர வேறெதையும் அரைக்க மாட்டீர்களா? அரைக்கிறதுக்கு உங்ககிட்ட வேறு சரக்கு எதுவும் இல்லையோ!
பொதுவாக தனியார் மயமாதல் நடக்கும் போது தொடர்ந்து நடை பெறுபவை
1.அரசு கைவசம் துறைகள் இருப்பதால் தான் அந்த பிரச்ச்னையே என்பார்கள்.
2. தனியார் பெரு முதலாளிகள் அரசியல்வாதிகளிடம் லஞ்சம் கொடுத்து விட்டு குறைந்த விலைக்கு தொழிற்சாலைகள் அல்லது அதற்கு இணையானவற்றை கைபற்றுவார்கள்.
3. பிறகு அரசின் கட்டுபாடு (regulation) இருப்பதால் தான் வளர்ச்சி இல்லை என்பார்கள்.
5. அரசின் கட்டு பாட்டை சிறிது சிறிதாக தளர்த்துவார்கள்
6. கட்டுபாடு இல்லா முழு சுதந்திரம் அவர்களுக்கு கிடைத்துவிடும்.பிறகு அந்த துறைகளை/ தொழிற்சாலைகளை வைத்து கொள்ளை அடிப்பார்கள். சாதாரண மக்களிடமும் அவற்றை கொண்டு கொள்ளை லாபம் கண்டு சுரண்டுவார்கள்.
7. அந்த துறையில் உள்ள சிறு கம்பெனிகளை எல்லாம் விழுங்கி மோனோபொலி ஆவார்கள்.
8. மோனோபோலி ஆன பின் அவர்கள் வைப்பது தான் சட்டம்
9. கொள்ளை அடித்து திருட்டு தனம் செய்து வளர்ந்து ஒரு நாள் வீழ்ச்சி அடைய நேரிட்டால், நாங்கள் வீழ்த்தால் நாடே தாங்காது. அரசு எங்களை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று மிரட்டி அரசு பணத்தை கொண்டு மீண்டு வருவார்கள்.
10. தாங்கள் செய்வதையே மீண்டும் தொடர்ந்து செய்வார்கள்.
11. ஆரம்ப காலத்தில் உள் நாட்டு கம்பெனி வளர வேண்டும் என்று மான்யம் அனைத்தும் பெற்றிருப்பார்கள். ஆனால் கடைசியில் அதை ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு விற்று விட்டு லாபத்தை எஸ்கேப் ஆகி விடுவார்கள்.
இது இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிளும் நடப்பது. தற்போது அவர்களே விழிப்படைய ஆரம்பித்து உள்ளனர்
yes, this google and its products like youtube, etc too is a good example for all the above. Microsoft has become a monopoly now and should be immediately nationalised. Intel, Texas instruments too are robbing the people of their hard earned money. Before they came, we were living without internet where exploitation was very low. Too bad for these companies who are evil empires out to squeeze the people.
தோழர் சதுக்க பூதம்,
அமெரிக்காவில், ஒரு ‘கொளையடிக்கும்’ நிறுவனத்தில், ‘நல்ல’ வேலையில் இருந்து கொண்டு, சுகமாக வாழ்ந்து வரும் நீங்க இப்படி பேசுவது உங்களுக்கே ஓவரா தெரியவில்லை ? கிரீன் கார்ட் வாங்கியாச்சா ? உங்க நிறுவனம் எத்தனை பெரிசு ? அது என்ன செய்கிறது ? அதில் நீஙக் என்ன ’பணி’ செய்கிறீர்கள் ? அல்லது அங்கு ‘செம்புரட்சி’க்காக பாடுபட அங்கு சென்றீர்களா ?
You owe your entire life (and the high standard of living) to this much maligned free market capitalism and the ‘evil’ USA. Otherwise, இந்தியாவில் எங்களை போல் மாட்டிக் கொண்டு லோல் பட்டுகொண்டிருப்பீர்கள் .இங்க ‘பிழைப்பது’ எத்தனை கடினமானது என்பது தெரிந்ததுதானே. ‘சோசியலிசம்’ பேசி வீணா போன நாடு இந்தியா. 1947இல் நம்மை விட பல மடங்கு கீழே இருந்த பல கிழக்கு ஆசிய நாடுகள் (ஜப்பான், தென்.கொரியா, தைவான், ஹாங்காங்) சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை விவோகமாக பின் பற்றி இன்று வளந்த நாடாக மாறிவிட்டனா. நாம் இன்னும் லோல் படுகிறோம்.
எது எப்படியோ, நல்லா இருங்கப்பா. வாழ்க, வளார்க.
லிபரடேரியன், முதலில் நான் இட்ட இடுக்கைக்கு முடிந்தால் பதில் இடுங்கள், நான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் தனி மனித தாக்குதலில் இறங்க வேண்டாம். ஏற்கனவே என் பதிவில் வாதத்துக்கு பதில் சொல்ல தெரியாமல் ஆபாச பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்.
இந்த இடுக்கையின் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இந்த பின்னூட்டத்தை இடுவதற்கு வினவு தளத்துக்கு மன்னிப்பை கோருகிறேன்
//அமெரிக்காவில், ஒரு ‘கொளையடிக்கும்’ நிறுவனத்தில், ‘நல்ல’ வேலையில் இருந்து கொண்டு, சுகமாக வாழ்ந்து வரும் நீங்க இப்படி பேசுவது உங்களுக்கே ஓவரா தெரியவில்லை ? கிரீன் கார்ட் வாங்கியாச்சா ? உங்க நிறுவனம் எத்தனை பெரிசு ? அது என்ன செய்கிறது ? அதில் நீஙக் என்ன ’பணி’ செய்கிறீர்கள் ? அல்லது அங்கு ‘செம்புரட்சி’க்காக பாடுபட அங்கு சென்றீர்களா ?
//
உலகமயமாதல், தனியார் மயமாக்கல் என்ற கடலில் எங்கள் விருப்பம் இல்லாமல் தள்ளி விட்டீர்கள். கடலில் மூழ்கும் நாங்கள், இது தவறு என்று மூழ்கி சாக முடியாது, survivalலுக்கு நிலைமைகேற்ப கஷ்டபட்டு மாறி தான் ஆகவேண்டும். மேலும் நான் படித்தது விவசாயம். அந்த துறையை தான் புதிய பொருளாதார கொள்கை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதே. என்னுடைய நிலை பற்றி “என் முதல் காதல் தோல்வி” என்ற பதிவில் எழுதி உள்ளேன். படித்து கொள்ளுங்கள்.
//அங்கு ‘செம்புரட்சி’க்காக பாடுபட அங்கு சென்றீர்களா ?
//
நீங்கள் அடிக்கிற கொள்ளையை வெளி உலகத்துக்கு சொன்னால் புரட்சி என்று ஆரம்பித்து விடுவீர்கள் . நீங்கள் கம்யூனிசத்தை சர்வாதிகாரம் என்று பேசுகிறீர்கள்.
// இந்தியாவில் எங்களை போல் மாட்டிக் கொண்டு லோல் பட்டுகொண்டிருப்பீர்கள் //
என் தாத்தா குறு விவசாயி. அப்போது சோசொயலிசத்தின் விளைவாக இலவச கல்வி பள்ளியிலும், கல்லூரியிலும் கொடுத்ததால் தான் என் தந்தை படிக்க முடிந்தது. வங்கிகளை அரசுடமையாக்கி கந்து வட்டி கும்பலிடமிருந்து விவசாயிகளை அரசு காப்பாற்றியதால் தான் அவரால் தொடர்ந்து விவசாயம் செய்து சர்வைவல் ஆக முடிந்தது. இலவச கல்வி பள்ளியிலும், கல்லூரியிலும் இருந்ததால் தான் என் அப்பாவால் அனைவரையும் தொழிற்கல்வி வரை படிக்க வைக்க முடிந்தது. இது எனக்கு மட்டுமல்ல. இன்று இருக்கும் நடுத்தர வர்க்கம் பெரும்பாலோனோரின் நிலையும் இது தான்.
இந்தியாவில் சோசலிசம் இல்லாவிட்டால் இன்று நான் பண்ணையாளாக தான் எதாவது கிராமத்தில் வேலை பார்த்து கொண்டு இருப்பேன்.
இந்தியாவில் அரசு வேலையிலோ அல்லது பொது துறை வேலையிலோ இருப்பவர்களின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி வெளி நாட்டில் இருப்பவரின் மகிழ்ச்சியை விட குறைவு.
//இந்தியாவில் அரசு வேலையிலோ அல்லது பொது துறை வேலையிலோ இருப்பவர்களின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி வெளி நாட்டில் இருப்பவரின் மகிழ்ச்சியை விட குறைவு.//
இந்தியாவில் அரசு வேலையிலோ அல்லது பொது துறை வேலையிலோ இருப்பவர்களின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி வெளி நாட்டில் இருப்பவரின் மகிழ்ச்சியை விட அதிகம்.
typing mistake
சதுக்க பூதம்,
’சோசியலிச’ கொள்கைகளால் தான் இந்தியா சீரழந்தது என்பதை பற்றி இப்ப பெரிய மாற்று கருத்து இல்லை. அதனால் தான் இன்று பழைய பாணி பொருளாதார கொள்கைகளை மீண்டும் உடனே கொண்டு வர வேண்டும் என்று யாரும் முழங்குவதில்லை. ‘போலி’ கம்யூனிஸ்டுகள் கூட. பிபின் சந்திரா ஒரு மிக மதிக்கப்டும் மார்க்சிய வரலாற்று ஆசிரியர். ஜவர்லால் பல்கலைகழக பேராசியராக இருந்தவர். அவர் எழுதிய நூல்கள் முக்கியமானவை. அவற்றில் ஒன்று : ‘India after Independence’ ; அதில் 1991க்கு பின் நிகழ்ந்த தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஏன் அவசியம் எனபதை பற்றி மிக விரிவாக, திறந்த மனதோடு ஆராய்ந்திருக்கிறார். அவர் ஒரு மார்க்சியர் தான். ஆனால் யதார்த்தம் புரிந்தவர். மிக பெரிய நூலான அதை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். அதை பற்றி :
http://www.indiaclub.com/Shop/SearchResults.asp?ProdStock=6338
பொதுதுறை பற்றி முழங்குபவர்களுக்காக நான் முன்பு எழுதிய பதிவு இது :
பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி…
http://nellikkani.blogspot.com/2008/07/blog-post.html
ஏதோ அமெரிக்காவில் வேலை செய்பவர்கள் எல்லாம் நம்ப ஊர் முதலாளிகள்/ தரகு கும்பல் போல் பல்லாயிரம் டாலர் ஸ்விஸ் வங்கியில் போட்டு உல்லாச வாழ்க்கை வாழ்வது போல் உங்களை போல் பலரும் நினைக்கிறார்கள். தற்போதைய நிலவரம் பற்றி அறிய ஒரு வரவு செலவு கணக்கு கொடுக்கிறேன்
1. 2 பெட்ரூம் வீட்டு வாடகை( பே ஏரியா)(வளர்ந்த குழந்தை இருந்தால் கட்டாயம் 2 பெட்ரூம் எடுக்க வேண்டும்) – $1700
2.தனியார் ஹெல்த் காப்பீட்டு செலவு – $450( 4 பேர் குடும்பத்துக்கு – கம்பெனி கட்டுவதை தவிர்த்து நாம் செலவு செய்வது)(அது தவிர உண்மையிலேயே ஹாஸ்பிடல் சென்றால் copay,out of network,deductible என்று தீட்டி விடுவார்கள்
3.1 குழந்தைக்கான பிரி ஸ்கூல் செலவு(அரை நாள் மட்டும் வாரம் 2 நாள் மட்டும்) – $400
4. போன்,இன்டெர்னெட்,எலெக்ட்ரிசிட்ய்,சீவேஜ்,தண்ணீர் இத்யாதி – $250
5. உணவு,பெட்ரோல்,கார் கடன்,கார் இன்ஸூரன்சு மற்றும் பிற செலவு- $600
6. மற்றது – $100
7. 4 பேர் இந்தியாவுக்கு வருடத்துக்கு ஒரு முரை வர செலவு/கிப்ட்ஸ் etc)-$5000(5000/12) — $400
மொத்த மாத செலவு – $4000
இதை சமாளிக்க வருட வருமானம் டேக் ஹோமாக $48000 ஆவது இருக்க வேண்டும்.
இந்த அடிப்படை செலவை செய்ய ஒருவர் 70 – 80 K/annum சம்பாதிக்க வேண்டும்.
70 – 80K எத்தனை பேர் சம்பாதிப்பார்கள் என்பதே கேள்விக்குறி
அது மட்டுமின்றி இந்தியாவில் ஒரு புறாகூண்டு வீடு வாங்கிய வீதம் மாத கடன் இன்ஸ்டால்மென்ட் ஒரு $700 ஆவது இருக்கும்.
மேல் சொன்ன அடிப்படை தேவைகள் பலவற்றை குறைத்து விட்டு வாழ்ந்தால் தான் காலம் தள்ளவே முடியும். இதில் சேமிப்பு, சொகுசு வாங்க்கை எங்கிருந்து வருவது?
இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் நீங்கள் கேள்வி கேட்டதால் இந்த பதிலை கொடுக்க வேண்டியதாயிற்று.
கார் வைத்திருப்பது பற்றி சொன்னீர்கள். இங்கு கார் என்பது அடிப்படை தேவை(லக்சுரி இல்லை).ஏனென்றால் public transport பெரும்பாலான இடத்தில் இருக்கவே இருக்காது. ஆபீஸ் சுத்த படுத்துபவர்கள் கூட கடன் வாங்கியாவது கார் வைத்திருக்க வேண்டும்.
70k – 80k சம்பளம் என்பது அமெரிக்காவில் அதிக சம்பளம். அமெரிக்கர்களின் சராசரி வீட்டு சம்பளம் 50k க்கும் குறைவு ( வீட்டு சம்பளம் என்பதில் பெரும் பாலும் கணவன் மனைவி இருவரும் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்). இங்கு பெரும்பாலனவர்களின் வாழ்க்கை ஓடுவதே கடன் அட்டையில் தான்.
லிபடேரியன்.
இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் சோஷலிசம் “நேரு விட்ட பீலா சோஷலிசம்”. முதலாளித்துவத்தில் எல்லாவற்றிற்கும் போலிதான் போங்கள். அதுதான் நீங்கள் கன்பஃப்யூஸ் ஆகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
தனியார் மயத்தினால் ஒன்றும் நஷ்டம் இல்லை. அதில் நமது அரசாங்கம் புகுந்து கொள்ளை அடிப்பதில்தான் பிரச்சனையே வருகிறது.
ஏன், தற்போது ராசாவின் ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள்.
ராசாவுக்கு செல் போன் டெக்னாலஜியைப் பற்றி ஒரு புண்ணாக்கும் தெரியாது.
அவருக்குத்தெரின்ததெல்லாம், கலைஞரிடம் கற்றுக் கொண்ட ஊழல் பாடம் தான்.
தனியார்கள் ராசாவின் கண்ணில் மண்ணைத் தூவி பல நூறு கோடிகளை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு, பல லட்சம் கோடிகளை சுருட்டி விட்டார்கள்.
நாம் கேனையன்களை மந்திரி பதவிக்கு அனுப்பிவைத்தால், இது மாதிரிதான் நடக்கும்.
இன்றைக்கும், ஒரு கே.பி.என் பஸ்ஸில் போகிற சுகம், அரசு பஸ்ஸில் போனால் கிடைக்காது.
அரசும், அரசு நிறுவனங்களும் ஊழலின் படிமங்கள்.
நல்லா சொன்னீங்க சார்….ஆமை புகுந்த வீடும் கம்யுனிசம் புகுந்த நாடும் உருப்பிடாது. செங்கல்பட்டுல எங்க ஊர்ப்பக்கம் இவனுங்கள பாத்து சொல்வனுங்க ‘மேயுற மாட்ட சும்மா இருக்குற மாடு நக்கிச்சாம்னு’,
//தனியார் மயத்தினால் ஒன்றும் நஷ்டம் இல்லை. அதில் நமது அரசாங்கம் புகுந்து கொள்ளை அடிப்பதில்தான் பிரச்சனையே வருகிறது.//
//தனியார்கள் ராசாவின் கண்ணில் மண்ணைத் தூவி பல நூறு கோடிகளை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு, பல லட்சம் கோடிகளை சுருட்டி விட்டார்கள்.//
ரங்கா,
மேலே குறிப்பிடப்பட்ட வரிகள் உங்களுடையதுதான். இரண்டையும் ஒருமுறை அமைதியாக, பொறுமையாக, உங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு படித்துப் பார்க்கவும். உங்களுக்கே லூசுத்தனமா தெரியலை! இதுக்கு தமிழ் வலதுசாரின்னு ஒரு ஜால்ர வேற்.
சதுக்க பூதம்,
உமது பதிவில், நான் இட்ட பின்னூட்டங்கள் பலவற்றையும் வெளியிட மறுத்துவிட்டீர்கள். சிலவற்றை அளித்துவிட்டீர்கள். முக்கியமாக அமெரிக்க செனட்டர் ரான் பால் அவர்களின் நூலை பற்றி நீங்கள் பின்னூட்டமிட்டீர்கள். அதற்க்கு நான் மிக முக்கிய பதில் இட்டேன். அது உங்கள் கோணத்தையே தகர்த்தால், இரண்டு பின்னூட்டங்களையும் (அதாவது உங்கள் பின்னூட்டத்தையும் சேர்த்து) நீக்கி விட்டீர்கள். இது தான் உங்கள் ’நேர்மை’ திறன் மற்றும் வெளிப்படை தன்மை. அதில் நான் என்ன தனிமனித தாக்குதல், ஆபாசம் எழுதினேன் என்று எடுத்தியம்புங்களேன். என்னை பகுத்தறிவு கொண்டு யோசியங்க என்று நீங்க சொல்லும் போது, எமது சுட்டிகளை ஜங்க் (குப்பை) என்று விமர்சிக்கும் போது, உமது ஆணவம் தெரிகிறது என்று நான் எழுதினால், அது உமக்கு ஆபாசமாக தெரிகிறதா ? (வினவு பின்னூட்டங்களை பார்த்தால் தான் உண்மையில் எவை ’ஆபாசம்’ என்ற்ய் புரியும் !!!) யாராவது தனது பின்னூட்டத்தை தானே நீக்குவார்களா ? தான் எழுதிய விசியம் தனக்கே எதிராக திரும்பிவிட்டது என்று உணர்ந்ததால், தனது பின்னூட்டத்தை தானே நீக்கும் பதிவரை இன்றுதான் பார்க்கிறேன். நான் அப்படி செய்வதில்லை. நேர்மையாக எதிர்கொள்வேன். அல்லது என் தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்க மாட்டேன். கற்றாது கைமண் அளவு என்பது நம் அனைவருக்கும் பொருந்தும்.
சரி, இந்த மோனோபாலி என்று சொல்கிறீர்களே. ஏதாவது ஒரு நிறுவனத்தின் வரலாற்றை கொண்டு நிறுபியுங்களேன். இந்தியாவில் இந்த வெற்று கூச்சல் தான் நம் பொருளாதாரத்தையே முடக்கி நம்மை அழித்தது. MRTP Act இன்று நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் மோனோபாலி எதுவும் உருவான மாதிரி தெரியவில்லை.
அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில், விற்பதில் ஊழல் உள்ளதுதான். அது நம் நாட்டின் நேர்மை அளவை காட்டுகிறது. முதலில் தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கியதே தவறு. அரசு பொது துறை நிறுவனங்களை பெரும் சொலவு செய்து உருவாக்கியதே பெரும் தவறு. அதன் விளைவு பணவீக்கம், வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம்.
இன்றும் பி.எஸ்.என்.எல் க்குள் நடக்கும் ஊழலின் அளவை பற்றி எதாவது தெரியுமா உங்களுக்கு ? அதன் ஒரு Zonal GM சராசரியாக சுமார் 100 கோடி அடிக்கிறார், தமது பணி காலத்தில். டெண்டர்களில், போஸ்டிங்களில், டிராண்ஸ்ஃபர்களில் நடக்கும் ஊழல் சொல்லி மாளாது. இதெல்லாம் ‘கொள்ளையாக’ உங்களுக்கு தெரியாது. ஏர்டெல் நிறுவனம் கடும் பிரயத்தனத்துடன் தொடங்கப்பட்டு, இன்று அருமையான சேவை செய்து, லாபம் சம்பாதித்தால், அது ’கொள்ளையாக’ தெரியும். ஆனாலும் ஏர்டெல் சேவைகளை தொடர்ந்து அனுபவிப்பீர்கள். இந்த தனியார்களே இல்லாத காலத்தில் இருந்த சேவைகளின் லட்சணம் அறியாதவர் நீர்.
சிறு நிறுவனங்கள் அழிவது இயற்க்கை விதி. ஆனால் புதிய சிறு நிறுவனங்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. சிறுதொழில் துறை என்று SSI sectorக்கு reservation மற்றும் வரி சலுகை இந்தியாவில் உண்டு. அது எத்தனை ஊழலுக்கு வழி வகுத்துள்ளது, எத்தனை inefficiency and fragmentation of production units க்கு வழி வகுத்தது என்று தெரியுமா ? 3 கோடி விற்றுமுதலுக்கு மேல் போனால் உற்பத்தி வரி உண்டு என்பதால், ஒரே முதலாளி அல்லத் சிறு தொழில் முனைவோர், பிணாமி பெயர்களில் பல நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்கிறார். மேலும் உற்பத்தி செலவு அதிகரித்து, பணடங்களின் விலை அதிகரிக்கிறது. இது போன்ற முட்டாளதனங்கள் இல்லாத வளர்ந்த நாடுகளில் என்ன கெட்டு போச்சு ? இந்த விசியத்தில் அங்கு என்ன குறை அல்லது குற்றம் கண்டீர் ? யாரும் குறை சொல்வதில்லை.
உங்கள் வாதங்கள் எல்லாம் வெற்று கூச்சல். Only due to massive investements and economcis of scale and efficiency of production do we enjoy many goods and services (incl food production in the West). This internet, cheap computers and telecom are good examples. உடை பற்றி விரிவாக எழுத இருக்கிறேன். உணவு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள கோளாருகள், ஆடை விசியத்தில் இல்லை. கடந்த 30 ஆண்டுகளில் பரம் ஏழைகள் கூட நல்ல உடை அணிய முடிகிறது. அன்று கந்தல் தான். போதிய உடை இல்லை. இன்று ஒரு நாள் கூலியில் ஒரு சட்டை அல்லது புடவை வாங்க முடியும். எப்படி சாத்தியமாயிற்று இந்த மாற்றம் ? மேலும்…
வினவின் முக்கிய தளபதிகள் பலர் முதலாளித்துவ பயங்கரவாத பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறார்களாமே 🙂
அதியமான் அந்த பின்னூட்டத்தை இங்கே பதிய முடியுமா ?
தன் பின்னூட்டத்தை தானே அழிக்கும் அடிப்படை நேர்மையற்ற ஒருவர் எப்படி பிரபல பதிவர் ஆனார்? அந்த மணத்துக்கே வெளிச்சம். சதுக்க பூதம் தனது பணியை விட்டு விலகி எப்பொழுது செம்புரட்சிக்கு படை திரட்டப் போகிறார் ?
வினவின் முக்கிய தளபதிகள் பலர் முதலாளித்துவ பயங்கரவாத பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறார்களாமே
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சரியா பாயிண்ட புடிச்சீங்க டாலர் ச்சீ டோளர் ச்சீசீ தோழர்.
இந்த தமிழ்மணத்துல வினவு கோஷ்டி மட்டுமா இப்படி? இன்னொரு முக்கிய காமெடி பீசுகளான டமில் டமிலன்னு ஜவுண்டு கொடுக்குற பல மானங்கெட்ட பசங்கள விட்டுட்டீங்களே. பிழைக்குறதே தமிழனோட ஜென்ம விரோதியான கேளரளாவுலயும் கர்னாடகாலயும். திங்கிரது மலையாளத்தான் சோத்த, நக்குறது கன்னட மொதளாளி காலை, ஜாமான் வாங்குறது அம்பானி சேட்டு கடையில. ங்@#$% உள்ள போடுற ஜட்டிலேருந்து கால்ல போடற சூ வரைக்கும் அமெரிக்கா காரணோடது.. ஆனா பேச்சு மட்டும் தமிழன் தமிழன்னு – என்னா துப்புகெட்டதனம் பாருங்க..
என்னத்த செய்ய வைகோ,கருணா, விசயகாந்து எம்.ஜி.யார், ஜெயா மாதிரியான தெலுங்கு, கன்னட மலையாளியெல்லாம் தமிழின தலைவரு அதுக்கு கொடிபுடிக்க சீமான், சுபவி, நெடுமாறன், வீரமணி மாதிரி தன்மான சிங்கங்க– ரொம்ப குஷ்டமப்பா
யோவ் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ? சந்துல சிந்து பாடலாம்னு நினைக்கறீயா?
எப்படியா தமிழனே எல்லா பொருளையும் தயாரிக்க முடியும் ? உலகத்துல அப்படி ஏதாவது நாடு இருக்குதா மூ ?
சரி ஒரு வாதத்துக்கு வெளியே இருககிற எல்லா தமிழனையும் தமிழ் நாட்டுக்கு வரவழைச்சிரலாம் ஆனா அதுக்கு முன்னாடி தமிழ் நாட்டில குடியேறி இருககிற எல்லா வெளி மாநிலத்து காரனையும் மொதல்ல வெளிய தொரத்தனும் அப்பத்தான் ஒரு தீர்வு வரும். இது எல்லா மொழிக்காரனுக்கும் பொருந்தும்.நானே வெளியதான் இருக்கேன். இப்படி விவாதம் வரும்போது அவனுங்க கிட்ட கேட்டேன் நான் வந்து 4 வருஷம் தான் ஆகுது ஆனா நூத்தம்பது வருசதுக்குமுன்னாடியே வந்து தமிழ் மண்ணை ஆக்கிரமித்துள்ள கன்னட ஒக்கிலி குரும்ப,தேவாங்கனுக இவனுகளை எல்லாம் என்ன பண்ணலாம்னு கேட்டேன் பொத்திக்கிட்டாணுக.
ஏன் கன்னடத்து காரனுக துள்ரானுகனா நாம யாரும் கன்னடத்து காரனுகளை கை வைக்கிறது இல்ல அதான் நம்ம இளிச்சவாயத் தனத்தை பயன்படுத்தராணுக இந்த தமிழ் நாட்டு கன்னடனுக.
இப்ப தான் சீமான் சொன்னதுக்கு அப்பறம் நாலு புத்த பிக்குகளுக்கு அடி விழுந்த உடனே தூதர அனுப்பறான்.நடிகன் ஜெயராமன் வீட்ல பெட்ரோல் குண்டு வீசுனதுக்கப்பரம் மன்னிப்பு கேட்டான். இது மாதிரி நடந்தான் தீர்வு கெடைக்கும் போல இருக்கு
வினவு
இந்த பின்னூட்டத்தில் உள்ள கெட்ட வார்த்தை நீக்கப்பட வேண்டும் இல்லை என்றால் நான் எழுதும் வார்த்தைகளையும் நீங்கள் அனுமதிக்க வேண்டும்.
சதுக்க பூதம்,
உங்க பதிவில் நான் இப்ப இட்ட பின்னூட்டம் accept ஆகாததால், இங்கு இடுகிறேன் :
ஃபெட்டுக்கும், கோல்ட்மேன் சாக்ஸ்க்கும் இருந்த தொடர்பை பற்றி ரான் பால் எழுதியிருக்கிறார். படித்தேன். ஆனால் இவற்றுக்கு தீர்வாக அவர் பென் பெர்நாக்கிக்கு பதில் ஜெ.பி.மார்கன் பரவாயில்லை என்று சொல்கிறார். அதாவது முற்றிலும் தனியார் வங்களில் வசம் பணம் உருவாக்குவதை பரவாயில்லை என்கிறார். 140 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தன் நிலை போல : With respect to “secretive cartels,” Paul takes up the interesting question of whether J.P. Morgan is in fact preferable to Ben Bernanke.
ஃபெட் பல வங்களுக்கு இஸ்டம் போல கடன் அளித்தி விசியம் ஒரு அம்சம் தான். நாம் விவாதிப்பது ஃபெட் வட்டி விகுதங்கள் நிர்ணியப்பதில் தேசிய நலனை அடிப்படையாக கொண்டா அல்லது வேறு அயோக்கியத்தனமான நோக்கங்களை கொண்டா என்பது பற்றிதான். லாபியிங் அங்கு உண்டு. ஆனால் அது சட்டபடி வெளிப்ப்டையாக தான் நடை பெறுகிறது. இந்தியா போல் அல்ல. சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்திகளை கேட்டு, பிறகு முடிவு செய்கிறார்கள்.
ஃபெட் வட்டி விகுத்த்தை மிக குறைந்த அளவு வைத்திருந்தற்க்கு அரசியல் காரணம் தான் சொல்லப்படுகிறது. அதாவது 2001இல் ஏற்பட்ட மந்த்த்தை வெல்லவு, வேலை இல்லா திண்டாட்ட அளவை குறைக்கவும் தொடர்ந்து கீரீண்ஸ்பேன் வட்டி விகுதத்தை மிக மிக குறைந்த அளவில் வைத்திருந்தார். தனியார் வங்களின் சுயநலத்திற்க்காக அவர் அப்படி செய்தார் என்று எனக்கு தெரிந்து யாரும் இதுவரை அவரை குற்றம் சாட்டவில்லை. மொத்த பொருளாதாரத்தின் நன்மைக்காக அப்படி செய்தார் (அது தவறாக போய்விட்டது என்பது வேறு விசியம்) என்றுதான் கருதப்படுகிறது. இந்த வட்டி விகுத நிர்ணியம் தான் மிக மிக மிக முக்கிய விசியம். இது தான் பணவீக்க அளவை நிர்ணியக்கிறது. Open market operations committe அதை செய்கிறது. இதுவரை அவர்கள் தவறான நோக்த்தில் செயல்பட்டார்கள் என்று எந்த நிபுணரும் சொல்ல வில்லை. நீங்க மட்டும் தான் சொல்றீங்க. நான் வட்டி நிர்ணிய விசியத்தை பற்றி தான் சொல்கிறேன். ஃபெட் அளித்த கடன்களை பற்றி அல்ல. அது வேறு விசியம்.
அயர்லாந் ய்ரோவில் சேர்ந்தால் உருவான negative interest rate பற்றி பேச மாட்டேன் என்கிறீர்கள். யூரோவே ஒரு சதி என்கிறீர்கள்.
டாலர் பற்றி, அயர்லாந் பற்றிய உங்கள் கோணங்களை ஏற்க்கவில்லை.
வங்கிகளின் fractional reserve banking system தான் inflationக்கு காரணம் என்பதை மிக எளிதாக மறுக்க முடியும். (யாரும் அப்படி சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை).
அரசுகளின் fiat money based on nothing but itself தான் பணவீக்கத்திற்க்கு அடிப்படை காரணி என்பதே சரி. நீங்கள் மேற்கோள் காட்டும் முக்கிய நூலான Web of debt இல் இப்படி சொல்கிறார் :’ Except for coins, the government does not create money. Dollar bills (Federal Reserve Notes) are created by the private Federal Reserve, which lends them to the banks that lend them to the government, individuals and businesses’ மிக அபத்தம். அமெரிக டிரஸ்ரையின் டீ.பில்ஸ்களை ஃபெட் பல நூறு பில்லியன்களுக்கு வாங்கிகொண்டு, அதற்க்கு பதில் டாலர்களை அளிக்கிறது. டி.பில்ஸ் எத்தனை அதன் வசம் உள்ளது என்று பாருங்கள். மேலும் :
• Contrary to popular belief, creeping inflation is not caused by the government irresponsibly printing dollars. It is caused by banks expanding the money supply with loans. (Chapter 10)
• Most of the runaway inflation seen in “banana republics” has been caused, not by national governments printing money for the nation’s needs, but by global institutional speculators attacking local currencies and devaluing them on international markets.
இது அபத்தம். லிபர்ட்டேரியன்கள், மிஸஸ் இன்ஸ்டியுட், கேடோ முதல் மில்டன் ஃபீரிட்மேன் வரை இதற்க்கு நேர் எதிரான கருத்தையே நிருபித்துள்ளனர். ஃபீரீட்மேனின் A monetary history of USA மிக முக்கிய நூல். இந்தியாவில் அன்று,பணவீக்கம் எப்படி 20 சதம் இருந்தது என்று சொல்லுங்களேன். அன்று மூடிய பொருளாதாரம். அன்னிய வங்களில் மற்றும் முதலீடுகளே அனுமதி இல்லை. Stringent capital a/s and current a/s controls. மிக அபத்தமான வாதங்கள் உள்ள நூலை நீங்க ‘ஆதாரமாக’ காட்டுவீக. நான் சொல்லும் நூல்களை ஜங்க் என்பீர்கள் !!
டாலர் ஹீகோமனி பற்றிய தியரிக்கள் பற்றி பிறகு சொல்கிறேன்.
இந்த பின்னூட்டதையும் ஆபாசம் அல்லது ஸ்பேம் என்று நிராகரித்தால், பிறகு பேச என்ன இருக்கு ?
சில வருடங்களுக்கு முன் ஒரு பதிவின் விவாதத்தில் ஆபாச வார்த்தைகளில் நெறி இன்றி பின்னூட்டம் இட்டீர்கள். அதனுடன் உங்கள் பின்னூட்டத்தை இடுவதை நிறுத்திவிட்டேன். அதை நீங்களே இடுக்கையில் ஒத்து கொண்டுள்ளீர்கள். அதற்கு ஆதாரம் கீழே உள்ளது.
//K.R.அதியமான் said…
‘கெட்ட வார்தை’ சொல்லி முன்பு திட்டியது தவறுதான்.///
உங்களை ஆபாச பதிவர் என்றும் அறிந்தும் உங்கள் பின்னூட்டங்களை தொடர்ந்து இட்டேன். தமிழ் மணம் நட்சித்திர வாரமாக இருந்த போது புது இடுக்கையை எழுதும் நேரத்தைல் உங்களுடன் பொருமையாக 50க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களில் வாதம் புரிந்தேன். அதனால் ஒரு சில நல்ல இடுக்கைகளை கூட என்னால் இட முடியவில்லை. அதற்கு காரணம் மாற்று கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது தான். எனக்கு கருத்து மோதலில் ஒப்புதல் உள்ளது. குழாயடி சண்டையில் அல்ல.
//இது தான் உங்கள் ’நேர்மை’ திறன் மற்றும் வெளிப்படை தன்மை. //
இந்த ஆதாரத்தை படிப்பவர்களுக்கு, யாருடைய நேர்மை தன்மை எப்படி பட்டது என்று தெரியும்
அந்த பிரச்ச்னை நடந்த சில நாளில் என் பிளாக் ஸ்பேம் என்று ஒருவரால் ரிப்போர்ட் செய்யபட்டு சில நாட்கள் என்னால் இடுக்கை இட முடியாமல் இடை நிறுத்தம் செய்ய பட்டிருந்தது. அது யாரல் செய்ய பட்டிருக்கும் என்பதை இந்த பின்னூட்டத்தை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
//உமது பதிவில், நான் இட்ட பின்னூட்டங்கள் பலவற்றையும் வெளியிட மறுத்துவிட்டீர்கள். சிலவற்றை அளித்துவிட்டீர்கள். //
மீண்டும் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தும் பழைய வழியில் பின்னூட்டம் இட தொடர்ந்ததாலும், நீங்கள் கேட்ட ஆதாரங்களை நான் கொடுத்தும் அதை படிக்க முடியாது என்று கூறி மீண்டும் மீண்டும் அதையே கேட்டு கொண்டு இருந்ததாலும், தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் இட்டு கொண்டு இருந்ததாலும் இனி விவாதத்தை தொடர்வது பயனில்லை என்பதால் அதை உங்களுக்கு தெரிவித்து விட்டேன். அவ்வாறு தெரிவிக்கும் முன் உங்கள் அனைத்து பின்னூட்டங்களையும் இட்டேன். நான் தெளிவாக தெரிவித்து விட்டு தான் ஸ்டாப் செய்தேன்.ஒரு சில பின்னூட்டங்களை வெளியிட்டு ஒரு சில பின்னூட்டங்களை வெளியிட வில்லை என்பது தவறு. நான் தெளிவாக விவாதத்தை முடித்து விட்ட( அதற்கான காரணங்களையும் தெளிவாக தெரிவித்த பின்) பிறகு வந்த பின்னூட்டங்களை போட வில்லை. நான் எதோ தவறு செய்வதாகவும் பின்னூட்டம் இட்டத்தால் என் பக்கம் தவறில்லை என்று விவரிக்க கடைசி பின்னூட்டத்தை வெளியிட்டேன்.
என் தரப்பு நியாயத்தையும் வெளியிட்டேன்.
எனவே நீங்கள் கூறுவது முற்றிலும் பொய்யானது.
http://tamilfuser.blogspot.com/2011/01/blog-post_26.html
வினவு தளத்தை பெண்கள் எல்லாம் படிப்பதால் நீங்கள் வெளியிட்ட ஆபாச வார்த்தைகளை இங்கு வெளியிட விரும்பவில்லை.
இந்த பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கும் யாருக்கும் உண்மை புரியும். அதற்கு மேல் நான் பேச ஒன்றும் இல்லை.
சதுக்க பூதம்,
ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா. இந்த முறை என்ன கெட்ட வார்த்தை அல்லது ஆபாச சொல்லாடல்களை உபயோகித்தேன் ? உம்மை அப்படி விளிக்க வேண்டும் என்றுதான் இப்ப தோன்றுகிறது.
முதலில் எனது பல பின்னூட்டங்களை, ரான் பால் பற்றி ஏன் பிரசுரிக்கவில்லை. அதை பற்றி நீர் இட்ட பின்னூட்டத்தையும் ஏன் நீக்கினீர்கள் என்று சொல்லும். பிறகு கதை பேசலாம். எம் கருத்து தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை இந்த கொளையடிக்கு கூகுள் பிளாகர் தானே இலவசமாக அனைவருக்கும் சுமக்கிறது. அதை அனுமதிக்க மறுக்கும் நீர் தான் உண்மையில் ’ஜனனாயகவாதி’.
ரான் பால ஜே.பி.மார்கன், ஃபெட்டுக்கு பரவாயில்லை என்றும் சொல்கிறார். அதற்க்கு என்ன அர்த்தம் ? தனியார் வங்களுக்கு இன்னும் முழு சுதந்திரம் அளித்து, ஃபெட்டை ஒழிக்க வேண்டும் என்கிறார்.
அவரும், மிஸஸ் இன்ஸ்டியூட்டும் மற்றும் பலரும் லிபர்டேரியன்கள் தான். அதாவது சுதந்திர சந்தை பொருளாதாரத்தை ஆதரிப்பவர்கள். உம்மை போன்றவர்களின் கொள்கைகளை நிராகரிப்பவர்கள். சரியா.
குரோனி கேபிடலிசம் பற்றி எம்மிடமே பேசுகிறீர்களே !! எமது பதிவுகளை படிக்கவில்லை போலும்.
இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, தனியார் வங்கிகள் மிக குறைந்த சதமே இருந்த காலத்திலும் இதே fractional reserve banking system தான். வேறு வழி இல்லை.
பணவீக்கத்திற்க்கு என்ன காரணம், இந்த பொருளாதார சிக்கல்களுக்கு உண்மையில் என்ன காரணம் என்பதை பற்றி ரான் பால், மிஸஸ் இன்ஸ்டியூட் மற்றும் இதர லிபர்டேரியன்கள் என்ன சொல்கிறார்கள் என்று எடுத்தியம்புங்களேன். உண்மையில் உமக்கு நேர்மை இருந்தால்.
ஃபெட் தனியார் வங்களால் உருவாக்கப்பட்டாலும், அமெரிக்க அரசின் கட்டுபாட்டில் தான் உள்ளது. காங்கிரஸ் மற்றும் செனட்டிற்க்கு பதில் சொல்ல வேண்டும். அதன் தலைவர் மற்றும் முக்கிய அதிகார்கள் அரசு ஊழியர்கள். அரசுதான் நியமிக்கிறது. நீங்க சொல்லும் தியரி உண்மையானால், அரசு சுத்தமாக தலையிடாமல், தனியார் வங்களே முழு சுதந்தித்துடன், ஃபெட்டை இஸ்டம் போல நடத்த வேண்டும்.
வட்டி விகுதங்கள் தான் மிக மிக மிக மிக மிக முக்கிய அம்சம். அதை நிர்ணியத்ததில் அயோக்கியத்தனம் என்று இதுவரை யாரும் குற்றம் சாட்டி நான் பார்த்தில்லை. ஆலன் கீரின்ஸ்பான் காலத்தில் தான் இதில் பெரும் தவறுகள் நடந்தன. ஆனால் தீவிர இடதுசாரிகள் கூட அவரின் அடிப்படை நேர்மையை சந்தேகித்ததில்லை. தவறான அனுமானத்தில் பெரும் தவறு செய்துவிட்டார். வேலை வாய்ப்பை அதிகரிக்கவே அப்படி செய்தார். ஆனால் அது பெரும் தவறாக போய்விட்டது என்றுதான் விமர்சனம்.
சும்மா முழங்காமல், இதை மறுக்கும் சுட்டுகள் அல்லது ஆதாரங்கள் அளியுங்க பார்க்கலாம்.
இந்தியாவில் தனியார் மயம் அனுமதித்தது பெரும் தவறாக போய்விட்டது. இந்த இணையம் மிக மலிவாக, எளிதாக அனைவருக்கும் கிடைக்க வழி செய்துவிட்டது.
தனியார்மயத்தினால் வளர்ந்த நாடாக ஆன அமெரிக்காவில் உமக்கு வேலை அளித்த மகானுபாவனையும், விசா அளித்த ‘கொள்ளைகாரகளையும்’ சொல்ல வேண்டும்.
மோனோபாலி பற்றி சரியான ஆதாரம் தாங்க என்றால், என்னையே திருப்பி கேட்கிறீர்களே. MRTP Act இன்று ஏன் நீக்கப்பட்டது. அதன் விளைவாக எந்த துறையி என்ன பெரிய மோனோபாலி உருவாகிவிட்டது ? சொல்லுங்களேன்.
மேலும்…
//ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா. இந்த முறை என்ன கெட்ட வார்த்தை அல்லது ஆபாச சொல்லாடல்களை உபயோகித்தேன் ? //
முதலில் கெட்ட வார்த்தையே சொல்ல வில்லை என்றீர்கள். அதை ஆதாரத்துடன் நிருபித்தவுடன் இந்த பதிவில் இல்லை என்கிறீர்கள். நீங்கள் செய்யும் தப்பை செய்யவேயில்லை என்று உண்மை தெரிந்தே பொய் சொல்வீகள். அதை நாங்கள் ஒவ்வொரு முரையும் ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும். எங்களுக்கு வேறு வேலை இல்லை. வாசகர்களையே எந்த விவாதத்தை பார்த்து முடிவு செய்ய சொல்லி லிங்கும் கொடுத்த்விட்டேன். உங்கள் பின்னூட்டத்தை ஏன் பிரசுரிப்பதில்லை என்ற காரணத்தை விளக்கிய பின் அதை தெரிவித்த பின் தான் பின்னூட்டத்தை பிரசூரிக்கவில்லை. அதை பதிவை பார்ப்பவர்களுக்கு தெரியும்.
//உம்மை அப்படி விளிக்க வேண்டும் என்றுதான் இப்ப தோன்றுகிறது.
//
அது தான் நீங்கள் எப்போதும் செய்வது அயிற்றே. தாரளமாக சொல்லி கொள்ளுங்கள். ஆனால் அதை என் இடுக்கையில் பின்னூடத்தில் தெரிவித்து, அதை நான் பிரசூரிக்கவில்லை, undemocratic சொல்லாதீர்கள்
//முதலில் கெட்ட வார்த்தையே சொல்ல வில்லை என்றீர்கள். அதை ஆதாரத்துடன் நிருபித்தவுடன் இந்த பதிவில் இல்லை என்கிறீர்கள். நீங்கள் செய்யும் தப்பை செய்யவேயில்லை என்று உண்மை தெரிந்தே பொய் சொல்வீகள். ///
இல்லை. நான் அப்படி சொல்லவில்லை. ஒரு ஆண்டுக்கு முன் நடந்தவை அது. இந்த முறை எப்போதும் அப்படி பேசவில்லை. எமது பின்னுட்டங்களை (அத்துடன் உமது பின்னூட்டம் ஒன்றையும் சேர்த்து) நீக்கிவிட்டு, இப்ப சமாளிக்க இப்படி பேசுறீக.
ரான் பால் கார்ட்டல் பற்றி சொன்னார் தான். ஆனால் அதற்க்கு தீர்வாக என்ன சொல்கிறார் என்பதை பற்றி பேசவே மாட்டேன் என்கிறீர். முக்கியமாக அவர் ஃபெட்க்கு பதில் ஜெ.பி.மார்கன் பரவாயில்லை என்கிறார். என்ன அர்த்தம் ?
சரி, இந்த கார்டல்கள் ஃபெட்டிடம் இருந்து கடன் வாங்கிய விசியம் பற்றி மட்டும் தான் பேசுகிறீர். ஃபெட் தன் வட்டி விகுதங்களை நிர்ணியத்த முறையில் ஊழல் இருந்தது என்ற குற்றச்சாட்டை இது வரை யாரும் சொல்லில் நான் கேள்விப்பட்டதில்லை. வட்டி விகுதங்கள் தான் மிக மிக மிக முக்கியமான விசியம். அதை பற்றி பேசாமல் சமாளிக்கிறீக. பணவீக்கத்திற்க்கு அரசின் செலவீனங்கள், பற்றாக்குறைகள் தான் மிக அடிப்படையான காரணம் என்று ரான் பால் துவங்கி மிஸ்ஸஸ் இஸ்டியூட் மற்றும் லிபர்டேரியன்கள் பல காலங்களாக தொடர்ந்து சொல்லி வருவதை நன்றாக அறிந்தும், வங்கிகள் தான் காரணம் என்று சொல்கிறீர்கள்.
முழு உண்மையையும் இங்கு தெரிய படுத்துகிறேன். இடுக்கையின் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இதை வெளியிடுவதற்கு மீண்டும் வினவு தளத்திற்கு மன்னிப்பு கோருகிறேன்
சில வருடங்களுக்கு முன் ஒரு பதிவின் விவாதத்தில் ஆபாச வார்த்தைகளில் நெறி இன்றி பின்னூட்டம் இட்டீர்கள். அதனுடன் உங்கள் பின்னூட்டத்தை இடுவதை நிறுத்திவிட்டேன். அதை நீங்களே இடுக்கையில் ஒத்து கொண்டுள்ளீர்கள். அதற்கு ஆதாரம் கீழே உள்ளது.
//K.R.அதியமான் said…
‘கெட்ட வார்தை’ சொல்லி முன்பு திட்டியது தவறுதான்.///
உங்களை ஆபாச பதிவர் என்றும் அறிந்தும் உங்கள் பின்னூட்டங்களை தொடர்ந்து இட்டேன். தமிழ் மணம் நட்சித்திர வாரமாக இருந்த போது புது இடுக்கையை எழுதும் நேரத்தைல் உங்களுடன் பொருமையாக 50க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களில் வாதம் புரிந்தேன். அதனால் ஒரு சில நல்ல இடுக்கைகளை கூட என்னால் இட முடியவில்லை. அதற்கு காரணம் மாற்று கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது தான். எனக்கு கருத்து மோதலில் ஒப்புதல் உள்ளது. குழாயடி சண்டையில் அல்ல.
அந்த பிரச்ச்னை நடந்த சில நாளில் என் பிளாக் ஸ்பேம் என்று ஒருவரால் ரிப்போர்ட் செய்யபட்டு சில நாட்கள் என்னால் இடுக்கை இட முடியாமல் இடை நிறுத்தம் செய்ய பட்டிருந்தது. அது யாரல் செய்ய பட்டிருக்கும் என்பதை இந்த பின்னூட்டத்தை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
//உமது பதிவில், நான் இட்ட பின்னூட்டங்கள் பலவற்றையும் வெளியிட மறுத்துவிட்டீர்கள். சிலவற்றை அளித்துவிட்டீர்கள். //
மீண்டும் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தும் பழைய வழியில் பின்னூட்டம் இட தொடர்ந்ததாலும், நீங்கள் கேட்ட ஆதாரங்களை நான் கொடுத்தும் அதை படிக்க முடியாது என்று கூறி மீண்டும் மீண்டும் அதையே கேட்டு கொண்டு இருந்ததாலும், தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் இட்டு கொண்டு இருந்ததாலும் இனி விவாதத்தை தொடர்வது பயனில்லை என்பதால் அதை உங்களுக்கு தெரிவித்து விட்டேன். அவ்வாறு தெரிவிக்கும் முன் உங்கள் அனைத்து பின்னூட்டங்களையும் இட்டேன். நான் தெளிவாக தெரிவித்து விட்டு தான் ஸ்டாப் செய்தேன்.ஒரு சில பின்னூட்டங்களை வெளியிட்டு ஒரு சில பின்னூட்டங்களை வெளியிட வில்லை என்பது தவறு. நான் தெளிவாக விவாதத்தை முடித்து விட்ட( அதற்கான காரணங்களையும் தெளிவாக தெரிவித்த பின்) பிறகு வந்த பின்னூட்டங்களை போட வில்லை. நான் எதோ தவறு செய்வதாகவும் பின்னூட்டம் இட்டத்தால் என் பக்கம் தவறில்லை என்று விவரிக்க கடைசி பின்னூட்டத்தை வெளியிட்டேன்.
என் தரப்பு நியாயத்தையும் வெளியிட்டேன்.
எனவே நீங்கள் கூறுவது முற்றிலும் பொய்யானது.
http://tamilfuser.blogspot.com/2011/01/blog-post_26.html
நீங்கள் வெளியிட்ட ஆபாச வார்த்தைகளை இங்கு வெளியிட விரும்பவில்லை.
இந்த பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கும் யாருக்கும் உண்மை புரியும். அதற்கு மேல் நான் பேச ஒன்றும் இல்லை.
//அந்த பிரச்ச்னை நடந்த சில நாளில் என் பிளாக் ஸ்பேம் என்று ஒருவரால் ரிப்போர்ட் செய்யபட்டு சில நாட்கள் என்னால் இடுக்கை இட முடியாமல் இடை நிறுத்தம் செய்ய பட்டிருந்தது. அது யாரல் செய்ய பட்டிருக்கும் என்பதை இந்த பின்னூட்டத்தை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.//
அதாவது சில வருடங்களுக்கு முன் நீங்கள் ஆபாச பின்னூட்டம் இட்டபோது நடந்தது
ரான் பால் பற்றிய உங்கள் செய்திக்கு பதில் அளித்து விட்டேன் அவர் அமெரிக்க தனியார் வங்கிகள் பற்றி பல இடங்களில் விமர்சித்துள்ளார். அவர்களை Crony Capitalist என்றும் சாடி உள்ளார்.
கோட்மேன் பற்றி அவர் சொன்ன லிங்க் கொடுத்து விட்டேன். அவர் அமெரிக்க வங்கிகள் செய்யும் அநியாயங்கள் எல்லாம் சேர்த்து பல லிங்க் கொடுக்க வேண்டும் என்றால் கொடுக்கிறேன். ஒரு சில sample. முக்கியமாக இரண்டாவது லிங்கில் உள்ள விடீயோவை பாருங்கள்
http://www.youtube.com/watch?v=36UGFOeJVww
http://www.economiccollapse.net/ron-paul-fed-rescued-banks-not-american-people
//வங்கிகளின் fractional reserve banking system தான் inflationக்கு காரணம் என்பதை மிக எளிதாக மறுக்க முடியும். (யாரும் அப்படி சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை).
//
ரான் பால் சொல்லியது. ஆதாரம் கொடுத்துள்ளேன்
http://www.dailypaul.com/119406/would-you-support-abolition-of-fractional-reserve-banking
The problems are that fractional reserve lending and fiat currencies are fraudulent.
If those could be prohibited, or our Constitution enforced, then banks would serve a legitimate purpose.
—Ron Paul’s Convention Speech
.
முதலில் crony capitalismக்கும் liberatearian க்கும் வித்தியாசம் தெரியவில்லை உங்களுக்கு. Libertarian என்றால் என்ன என்று முதலில் அறிந்து கொள்ளுங்கள்.
//சரி, இந்த மோனோபாலி என்று சொல்கிறீர்களே. ஏதாவது ஒரு நிறுவனத்தின் வரலாற்றை கொண்டு நிறுபியுங்களேன். இந்தியாவில் இந்த வெற்று கூச்சல் தான் நம் பொருளாதாரத்தையே முடக்கி நம்மை அழித்தது. MRTP Act இன்று நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் மோனோபாலி எதுவும் உருவான மாதிரி தெரியவில்லை.//
உலகளவில் மருந்து, வங்கி, கெமிக்கல் என அனைத்து துறைகளிளும் முதல் 10 கம்பெனிகளின் ஷேர் மொத்தத்தில் எத்தனை சதம் இருக்கிறது என்று பாருங்கள். அப்புறம் புரியும் மோனோபொலி/ஒலிகோபோலி என்ன என்று.
//முதலில் தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கியதே தவறு. அரசு பொது துறை நிறுவனங்களை பெரும் சொலவு செய்து உருவாக்கியதே பெரும் தவறு. அதன் விளைவு பணவீக்கம், வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம்.
//
முடிந்தால் நிருபித்து காட்டுங்கள்
//இன்றும் பி.எஸ்.என்.எல் க்குள் நடக்கும் ஊழலின் அளவை பற்றி எதாவது தெரியுமா உங்களுக்கு ? அதன் ஒரு Zonal GM சராசரியாக சுமார் 100 கோடி அடிக்கிறார், தமது பணி காலத்தில். டெண்டர்களில், போஸ்டிங்களில், டிராண்ஸ்ஃபர்களில் நடக்கும் ஊழல் சொல்லி மாளாது. இதெல்லாம் ‘கொள்ளையாக’ உங்களுக்கு தெரியாது.//
இங்கு சில நூறுகளில் ஊழல். தனியாரிடம் ( இந்தியா/வெளி நாடுகளில்) பல லட்சம் கோடிகளில் ஊழல். அமெரிக்க பெட்டின் QE 2 என்ற பெயரில் நடப்பதை தான் உலகறியுமே
//சிறுதொழில் துறை என்று SSI sectorக்கு reservation மற்றும் வரி சலுகை இந்தியாவில் உண்டு. அது எத்தனை ஊழலுக்கு வழி வகுத்துள்ளது, எத்தனை inefficiency and fragmentation of production units க்கு வழி வகுத்தது என்று தெரியுமா ?//
ஒரு பன்னாட்டு கம்பெனி வரும் முன் அத்துறையில் எத்தனை பேர் வேலையில் இருந்தார்கள். அது வந்த பின் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல. அமெரிக்காவில் கூட சிறு மற்றும் குறு நிறுவனங்கள் தான் அதிகம் பேருக்கு வேலை கொடுக்கிறது
// ஏர்டெல் நிறுவனம் கடும் பிரயத்தனத்துடன்//
நீரா ராடியா – டாடா உரையாடலில் தெரிந்தது எப்படி பட்ட பிராயத்தனம் என்று bsnl .சேவைக்கு இன்று வரை எந்த குறையும் இல்லை
//உணவு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள கோளாருகள், ஆடை விசியத்தில் இல்லை. கடந்த 30 ஆண்டுகளில் பரம் ஏழைகள் கூட நல்ல உடை அணிய முடிகிறது. அன்று கந்தல் தான். போதிய உடை இல்லை. இன்று ஒரு நாள் கூலியில் ஒரு சட்டை அல்லது புடவை வாங்க முடியும். எப்படி சாத்தியமாயிற்று //
அதற்கு காரணம் சோசியலிச ஆட்சி காலத்தில் நடந்த பசுமை புரட்சியும், வங்கிகளை தேசியமயமாக்கி ஏழை விவசாயிகள் கடன் கிடைத்தது தான்.
//அது சட்டபடி வெளிப்ப்டையாக தான் நடை பெறுகிறது. இந்தியா போல் அல்ல//
கொள்ளை அடிப்பதை சட்ட பூர்வமாக செய்தால் அது தவறில்லை! உங்கள் வாதம் comedy ஆக உள்ளது
மற்ற படி அந்த இடுக்கைக்கு சம்பந்தமான வாதங்களில் ந்–ங்கள் கேள்வி எழுப்பியதற்கு விடை அளித்து விட்டேன். பென் பற்றி வீடியோ ஆதாரமும் அளித்து விட்டேன். அந்த இடுக்கையையும் அதன் பின்னூட்டங்களையும் படிப்பவர்களுக்கு உண்மை புரியும்
////இன்றும் பி.எஸ்.என்.எல் க்குள் நடக்கும் ஊழலின் அளவை பற்றி எதாவது தெரியுமா உங்களுக்கு ? அதன் ஒரு Zonal GM சராசரியாக சுமார் 100 கோடி அடிக்கிறார், தமது பணி காலத்தில். டெண்டர்களில், போஸ்டிங்களில், டிராண்ஸ்ஃபர்களில் நடக்கும் ஊழல் சொல்லி மாளாது. இதெல்லாம் ‘கொள்ளையாக’ உங்களுக்கு தெரியாது.//
இங்கு சில நூறுகளில் ஊழல். தனியாரிடம் ( இந்தியா/வெளி நாடுகளில்) பல லட்சம் கோடிகளில் ஊழல். அமெரிக்க பெட்டின் QE 2 என்ற பெயரில் நடப்பதை தான் உலகறியுமே////
சரி அய்யா. அனைத்து தனியார் நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி, அதிகாரிகள் தலைமையில் இயங்கட்டும். அப்ப தான் புரியும்.
தனியார்கள் அனைவரும் நேர்மையாக நடக்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட சதம் அயோக்கியர்கள் தாம். ஆனால் அனைத்து தனியார் நிறுவனங்களும் அயோக்கியர்கள் என்ற நீர் முழங்குகிறீர். அது சரி, நீங்க இப்ப ‘நல்ல’ வேலையில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் எப்படி ? கொள்ளையடிக்கிறார்களா ? சுரண்டுகிறார்களா ? நீங்களும் அதற்க்கு உடந்தையா ? உமக்கு வேலை கொடுத்தான் பாருங்க. அதுதான் அவன் செய்த தப்பு. திரும்பி இந்தியாவுக்கு வந்துடுஙகளேன். இங்கு சுரண்டாமல் பிழைக்கலாம் !!
சிறு தொழில் நிறுவனங்கள் அழிவதை பற்றி சிறு தொழில் முனைவோர் சங்கம் இதுவரை குற்றம் சொல்ல வில்லை. மாற்றாக, இப்ப தான் இவர்களுக்கு பெரிய யோகம். பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெற்று முன்னேற நல்ல வாய்ப்பு. உமக்கு நடைமுறை யாதார்த்தம் தெரியவில்லை. தமிழகத்தில் சிறுதொழில் துறை எப்படி இருக்கிறது. முன்பு எப்படி இருந்தது என்று ஒப்பிட்டு பாரும்.
அதியமான்,
விவாதம் செய்து கொண்டிருக்கும்போது விவாதத்தின் மையக் கருத்தை விடுத்து ஏன் விவாதிப்பவரின் ஜாதகத்தை பற்றி பேசுகிறீர்கள்? நீங்கள் கூடத்தான் இந்தியாவின் முந்தைய பொருளாதாரத் திட்டத்தைப் பற்றிக் குறை சொல்லுகிறீர்கள். அதற்காக, அப்பொழுது நீங்கள் அமெரிக்காவிலா இருந்து கொண்டிருந்தீர்கள்?
கிள்ளிவளவன்,
சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வேறுபாட்டை, போலித்தனங்களை வெளிபடுத்தவே அப்படி சொல்ல வேண்டிய கட்டாயம். மற்றபடி தனிமனித தாக்குதல் அல்லது காழ்புணர்சி காரணம் அல்ல. ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற முதுமொழிக்கேற்ப, சோசியலிசத்தை ஏற்பவர்கள், அமெரிகா ஒரு ஏதாதிபத்திய சதிகார நாடு, அதன் நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன, டாலர் ஏகாதிபத்தியம் என்று முழங்குபவர்கள், அதே அமைப்பில் முழுமனதோடு பங்கு பெற்று, அந்நிறுவனங்களின் செயல்களுக்கு துணை போகும் வேலைகளில் இருந்து கொண்டு, அதே டாலரில் சம்பாதித்து, அதே வங்கிகளில் பணம் போட்டு, சுகமாக வாழ்வதை சுட்டி காட்டினால் என்ன தவறு ?
///முந்தைய பொருளாதாரத் திட்டத்தைப் பற்றிக் குறை சொல்லுகிறீர்கள். அதற்காக, அப்பொழுது நீங்கள் அமெரிக்காவிலா இருந்து கொண்டிருந்தீர்கள்?///
என்ன கேள்வி இது ? நான் பிறந்தது முதல் இங்கே தான் வாழ்கிறேன். 60களில், 70களில் நான் சிறுவன். கடந்த 15 வருடங்களாக தான் பல விசியங்களை படித்து, கேட்டு தெரிந்து கொண்டு விவாதிக்கிறேன். நான் நம்பும் சித்தாந்தந்தை சொந்த வாழ்க்கையில் கடை பிடிக்க முயல்கிறேன். அதே போல சோசியலிஸ்டுகளும் செய்ய முயலாமல், வெற்று விவாதம் மட்டும் செய்வது போலித்தனம்.
தோழர் கரம்மசாலா, ஏற்கெனவே உம்மை பற்றி நான் இட்ட பின்னூட்டம் தான் இது :
திசை திருப்பல் எல்லாம் பெருசா ஒன்றும் இல்லை. சும்மா பில்டப் கொடுக்காதீங்க.
///தோழர் கரம்மசாலா,
மேற்கு அய்ரோப்பிய அல்லது கனடாவில் settle ஆன புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் மார்க்சியவாதி தானே நீங்க ? இனியோறு வலைமனையில் சந்தித்திருக்கிறோம்.
80களில் புலம் பெயர்ந்த உங்களை போன்ற மார்க்சியர்கள் தாம் உண்மையான முதலாளித்துவவாதுகள் அய்யா. நானெல்லாம் சும்மா. அன்று சோவியத் ரஸ்ஸிய இருந்தது. ரஸ்ஸியா, க்யூபா, வியட்நாம் போன்ற கம்யூனிச நாடுகளுக்கு செல்ல முயலாமல், ‘நல்ல’ வளமான, லிபரல் ஜனனாயகம் மற்றும் சந்தை பொருளாதாரம் உள்ள மேற்க்கு அய்ரோப்பிய நாடுகள், கனடா, அவுஸ்த்ரேயில்யா போன்ற முதலாளித்துவ நாடாக பார்த்து புலம் பெயர்ந்து விட்டீர்கள். ஏன் அன்று வியத்நாம் அல்லது கூபாவிற்க்கு செல்ல முயல்வில்லை என்று விளக்க முடியுமா ?
நாங்கெல்லாம், ’சோசிலிசம்’ பேசி பாழா போன இந்தியாவில் பிறந்து விட்டு லோல் படுகிறோம். உங்களுக்கு கிடைத்த மாதிரி விசா அல்லது குடியுரிமை அல்லது அனுமதி எங்களுக்கு சுலுவா கிடைக்காது. உங்களை போன்றவர்களை பார்த்தால் வயித்தெறுச்சலா இருக்கு. நல்லா இருங்கப்பா///
லிபடேரியன்,
முதலாளித்துவ நாட்டில் வேலை செய்துகொண்டு அதனை எதிர்க்கக் கூடாது என்பது சவூதியில் பிழைத்துக்கொண்டு இஸ்லாத்தை எதிர்க்கக் கூடாது என்ற முஸ்லீம்களின் வாதத்தைப் போலுள்ளது. இது சர்வாதிகரத்தனமானது. கல்லானாலுன் கணவன் புல்லானாலும் புருஷன் என்பது போன்று இருக்கச் சொல்கிறீர்களா?
நீங்கள் கூறவருவதைப் பற்றி, ஒரு அமைப்பு முறைமையின் கீழ் வாழ்பவர்கள் அல்லது பணிபுரிபவர்கள் அவ்வமைப்பிற்குக் கட்டுப்பட்டுத்தான் வாழவேண்டும், பணிபுரியவேண்டும், அதனை எதிர்ப்பதாக இருந்தால் அதிலிருந்து வெளியேறிய பிற்பாடுதான் எதிர்க்க வேண்டும் எனக் கொண்டால், சமூக வளர்ச்சியே சாத்தியமில்லையே. வினவும் கம்யூனிசம் பேச முடியாதே? ஏன்? முதலாளித்துவம் கூட தோன்றியிருக்க வாய்ப்பில்லையே.
இந்தியாவில் சோஷலிசம் இருந்ததா! நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. இதிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைமைக்கும், சோஷலிச உற்பத்தி முறைமைக்கும் உங்களுக்கு வேறுபாடுகள் தெரியவில்லை. இருந்தபோதிலும், சோஷலிச உற்பத்தி முறையைப் பயன்படுத்தி ஸ்டாலின் காலத்திய ரஷ்யாவில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் 100% ற்கும் மேலான வளர்ச்சியேற்பட்டதே அதைப் பற்றி…..ஸ்டாலினின் மீதான தாக்குதலாக இல்லாமல் அப்பொருளாதார வளர்ச்சி பற்றி தங்களுடைய கருத்து என்ன?
///இந்தியாவில் சோஷலிசம் இருந்ததா! நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. இதிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைமைக்கும், சோஷலிச உற்பத்தி முறைமைக்கும் உங்களுக்கு வேறுபாடுகள் தெரியவில்லை.///
அய்யா, இந்த சோசியலிசம் என்ற சொல் பாடாய் படுத்துகிறது. ஒவ்வொறுவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். பல அர்த்தங்கள் உடையதாக மாறிவிட்டது. நான் சொன்னது இந்தியாவில் இருந்த ‘ஜனனாயக சோசியலிச’ பாணி. சோவியத் ரஸ்ஸியாவில் இருந்தது வேறு வகை சோசியலிசம். ’கம்யூனிச’ சோசியலிசம் என்றும் சொல்லலாம்.
மே.அய்ரோப்பாவிலும் சோசியலிச பாணி முறைகள் உண்டு. அவை ஒரு வகை.
/// இருந்தபோதிலும், சோஷலிச உற்பத்தி முறையைப் பயன்படுத்தி ஸ்டாலின் காலத்திய ரஷ்யாவில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் 100% ற்கும் மேலான வளர்ச்சியேற்பட்டதே அதைப் பற்றி…//////
ஆம். வளர்ச்சி ஏற்பட்டது தான். but at what cost ? பல கோடி குளக்குகளை நாடு கடத்தி, அழித்து ஏற்பட்டது. இதெல்லாம் செய்யாமலேயே, மே. அய்ரோப்பா அதே நேரத்தில் அதை விட நல்ல வளர்சி கண்டது. தென் கொரிய 1950க்கு பின் வளர்ந்தது.
பழங்குடியுனரை முற்றாக அழித்துவிட்டு அங்கு வேறு மக்களை குடியமர்த்தி, அங்கு உள்ள கனிம வளங்களை ‘சுரண்டி’ வளர்ச்சி உண்டு செய்தால், ஒத்துக்கொள்வீரா ?
///முதலாளித்துவ நாட்டில் வேலை செய்துகொண்டு அதனை எதிர்க்கக் கூடாது என்பது சவூதியில் பிழைத்துக்கொண்டு இஸ்லாத்தை எதிர்க்கக் கூடாது என்ற முஸ்லீம்களின் வாதத்தைப் போலுள்ளது. இது சர்வாதிகரத்தனமானது. கல்லானாலுன் கணவன் புல்லானாலும் புருஷன் என்பது போன்று இருக்கச் சொல்கிறீர்களா?
நீங்கள் கூறவருவதைப் பற்றி, ஒரு அமைப்பு முறைமையின் கீழ் வாழ்பவர்கள் அல்லது பணிபுரிபவர்கள் அவ்வமைப்பிற்குக் கட்டுப்பட்டுத்தான் வாழவேண்டும், பணிபுரியவேண்டும், அதனை எதிர்ப்பதாக இருந்தால் அதிலிருந்து வெளியேறிய பிற்பாடுதான் எதிர்க்க வேண்டும் எனக் கொண்டால், சமூக வளர்ச்சியே சாத்தியமில்லையே. வினவும் கம்யூனிசம் பேச முடியாதே?///
எதிர்க்கவே கூடாது என்று சொல்லவில்லை. புலம் பெயரும் போது, ஏன் கூபா, வியட்நாம் போன்ற சோசியலிச நாடுகளை தேர்வு செய்யவில்லை என்பதே கேள்வி ? அங்கு அனுமதி மிக சுலுவாக கிடைக்கும். ஆட்க்கள் தான் செல்வதில்லை. ஏன் ?
வினவு குழு உறுப்பினர்கள் யாராவது பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிகின்றனரா என்ன ? ரிலையன்ஸ் ஃபெரெஸ்ஸில் பணி புரிகிறார்களா என்ன ?
தனக்கு அடைக்கலம் அளித்து, நல்ல வாழ்க்கை, வேலை வாய்பளித்த ஒரு அமைப்பின் அருமையை புரிந்து கொள்ளாமல், அவர்களை கொள்ளைகாரர்கள் என்று ஏசுவது நன்றி கெட்டதனம் அல்லது போலித்தனம். எதிர்ப்பது என்றால் அந்த நிறுவன பங்குதார்ர்கள் மற்றும் managementஇடம் வெளிப்படையாக எமது கொள்கை இதுதான் என்று தெரிவிக்க வேண்டும். லோக்கல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து உழைக்க வேண்டும் புரட்சிக்காக பாடுபட தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். அதெல்லாம் வேறு சில இளுச்சவாயன்கள் செய்வர். இவர்கள் புரட்சிக்கு பின் அவர்களுடன் சேர்ந்து கொள்வார்களாம். நல்ல கதை.
லிபட்டேரியன்,
/// பல கோடி குளக்குகளை நாடு கடத்தி, அழித்து ஏற்பட்டது. ///
பல கோடி மக்களை கொன்றார். பல கோடி குளாக்குகளை நாடுகடத்தினார். பலகோடி மக்களை சிறையிலடைத்தார். இது போக எஞ்சியிருந்தவர்கள் போல்ஷ்விக் கட்சியினர் மட்டும்தான் போலும். இதுவும் கூட நல்ல நகைச்சுவைதான்.
ஸ்டாலின் காலத்திய சோவியத் 100% ற்கும் மேலான வளர்ச்சியைக் கண்டுள்ளது, என்பதனை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நன்றி. அது பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல இருப்பிடம், கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அத்தியாவசியத் துறையிலும் கூட சிறப்பாக சேவையை செய்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. இப்போது உங்களது வாதத்திற்கு வருவோம் இந்த வளர்ச்சியெல்லாம் பல கோடி குலாக்குகளை நாடு கடத்தி பெற்றதாக நீங்கள் கூறுகிறீர்கள். சரி லிபட்டேரியன், நீங்கள் கூறுவது உண்மையானது என்று வைத்துக்கொண்டாலும்கூட, ஸ்டாலின் காலத்திய சோவியத் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியினை பெற்றுக்கொண்டிருக்கும்போது ஏன் இந்த குலாக்குகளை நாடு கடத்தப்பட வேண்டும்? வளர்ச்சி தேவையில்லை என்று முரண்பட்டனரா? வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனரா?
//தனக்கு அடைக்கலம் அளித்து, நல்ல வாழ்க்கை, வேலை வாய்பளித்த ஒரு அமைப்பின் அருமையை புரிந்து கொள்ளாமல், அவர்களை கொள்ளைகாரர்கள் என்று ஏசுவது நன்றி கெட்டதனம் அல்லது போலித்தனம். எதிர்ப்பது என்றால் அந்த நிறுவன பங்குதார்ர்கள் மற்றும் managementஇடம் வெளிப்படையாக எமது கொள்கை இதுதான் என்று தெரிவிக்க வேண்டும்.//
உங்க காமெடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!ஏதோ நாங்கள் அகதியாக வெளிநாட்டுக்கு சென்று அவர்கள் வாழ்க்கை கொடுப்பது போல் பேசுகிறீர்கள். அவர்களுக்கு வேலை முத்து கொடுக்க தகுதியான நபர் வேண்டும். அவர்களுக்கு வேலை ஆக வில்லை என்றால் அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
ஏதோ அந்த காலத்து கிராமத்து பண்ணையாரிடம் வேலை செய்யும் கொத்தடிமை பண்ணையாரிடம் சாகும் வரை விசுவாசம் காட்ட வேண்டும் என்று சொல்வது போல் தெரிகிறதே. ராசாசி ஆதரித்த பண்ணையாள் முரை எல்லாம் கரையேறிவிட்டது லிபரடேரியன். சுதந்திர சிந்த்னை என்றால் என்ன என்று கூட தெரியாமல் லிபரடேரியன் என்ற பெயர் வெறவா?
நாங்கள் ஏதோ என் கருத்துக்கு சம்பந்தம் இல்லாத அரசியல் கட்சியில் இருந்து கொண்டு அவர்களின் கொள்கைகளுக்கு சம்பந்தம் இல்லாமல் முழு நேர அரசியல் கட்சி பணியாளானாக இருப்பது போல் பேசுகிறீர்கள். அப்படி பார்த்தால் பெடின் கொள்கையை எதிர்க்கும் ரான் பால் நாடு கடத்தபடவேண்டியவர். அமெரிக்க அரசு கொள்கைகளை எதிர்க்கும் மைக்கேல் மூர்,சாம்ஸ்கி போன்றோரின் கதையை என்ன சொல்வது?அப்படியே அகதியாக இருந்தால் கூட அங்கு செட்டில் ஆன பின் அங்கு நடக்கும் தவறுகளை சுட்டி காட்டுவதில் தவறில்லை
கிள்ளி வளவன்
அது, அவருக்கு வேறு வழி தெரியாததாலாக இருக்கலாம்.
முக்கியமான விடயத்தை விட்டு இத்தகையோர் விலகிப் போக, முக்கியமாக, இரண்டு நோக்கங்களில் ஒன்று இருக்கலாம். ஒன்று விவாத்தைத் தான் “வெல்லுவதற்கான” களம் ஒன்றுக்குப் “புலம் பெயர்ப்பது”. (இது சிறுபிள்ளைத்தனம்).
மற்றது பிரச்சனையிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவது. (இது ஆறாமை).
இவை அவர்களுக்கு அலுக்காத விளையாட்டுக்கள்.
அவற்றின் விதிகளை அவர்களே தீர்மானிப்பார்கள்.
வேண்டிய போது அவர்களாகவே விதிகளை மாற்றிக் கொள்வார்கள்.
உங்கள் வாதத்தைத் திசை திருப்பும் எவரது முயற்சிகளையுங் கண்டு கொள்ளாதீர்கள்.
அவை உங்களின் நேரத்தைச் செலவிடுமளவுக்கு ஒரு பெறுமதியுமற்றவை.
//எதிர்க்கவே கூடாது என்று சொல்லவில்லை. புலம் பெயரும் போது, ஏன் கூபா, வியட்நாம் போன்ற சோசியலிச நாடுகளை தேர்வு செய்யவில்லை என்பதே கேள்வி ? அங்கு அனுமதி மிக சுலுவாக கிடைக்கும். ஆட்க்கள் தான் செல்வதில்லை. ஏன் ?//
முதலில் நான் ஏன் நான் படித்த விவசாயத்தை விட்டு விட்டு புதிய பொருளாதார கொள்கையினால் கஷ்ட பட்டு சம்பந்தம் இல்லாத துறைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்று தெளிவாக விளக்கி உள்ளேன்.பதிவின் லிங்கையும் கொடுத்துள்ளேன்.
தனியார் மயமாக்கள் மற்றும் உலகமயமாதலின் விளைவே, நாம் செய்ய வேண்டிய வேலைகளை நிர்ணயிப்பது சந்தை தான். புதிதாக வேறு துறை நோக்கி நோக்கி விரட்டபடுபவர்களுக்கு தான் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைகளை முடிவு செய்யும் வாய்ப்பு இருப்பதில்லை. எந்த துறையில் குறைந்த காலத்தில் படித்து விரைவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் அதை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம். நான் படித்த சூழ்நிலையில் மென்பொருள் துறைதான் அதற்கு ஏற்றதாக இருந்தது. மென் பொருள் துறையில் வேலைவாய்ப்பு மேலை நாடுகளில்/ மேலை நாட்டு கம்பெனிகளுக்கு தான் உள்ளது. கியூபா, வியட்நாமில் இல்லை.
//தனியார் மயமாக்கள் மற்றும் உலகமயமாதலின் விளைவே, நாம் செய்ய வேண்டிய வேலைகளை நிர்ணயிப்பது சந்தை தான்.///
சரி, இப்ப என்னவோ வறுமை கோட்டுக்கு கீழ் கஸ்டபடுவது போல் பேசுகிறீர்கள். சொந்தமாக கார் வைத்துக்கொண்டு அங்கு சவுகரியமாக தானே இருக்கிறீக. (அப்படி தான் நல்லபடி இருக்க வேண்டும் என்று விழைகிறேன் தோழர். எல்லோரும் நல்லா இருக்கனும்ந்தான் விரும்புகிறேன்). இந்த உலகமயமாக்கலில் விளைவாக தான் உங்களை போன்றவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. 80கள் வரை நாங்கள் எல்லோரும் வேலை கிடைக்காமல் லோல் பட்டோம். 1980இல் வெளிவந்த ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படம் பார்க்கவும். விவசாயம் பற்றி எனது சுட்டியை அளித்திருந்தேன்.
//மென் பொருள் துறையில் வேலைவாய்ப்பு மேலை நாடுகளில்/ மேலை நாட்டு கம்பெனிகளுக்கு தான் உள்ளது. கியூபா, வியட்நாமில் இல்லை.//
ஏன் என்று விவாதிக்கலாமா ? முக்கியமாக பல ஆண்டுகள் வீரத்துடன், பெரும் தியாகத்துடன் கம்யூனிசத்திற்க்காக பெரும் போர் புரிந்த வியட்நாம், சில ஆண்டுகளிலேயே அதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து கொண்டு, சந்தை பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்த வரலாற்றை பற்றி பேசலாமா ?
இதெல்லாம் இருக்கட்டும், மிக முக்கிய விசியங்களான inflation, govt deficits, Ron Paul on free markets and globalisation, Mises Institute and Libertarian stand over many issues, Euro, etc பற்றி கடைசியா நிறைய கேட்டிருந்தேன். அதையெல்லாம் விட்டுவிட்டு இதை மட்டும் ஏன் இப்ப ?
சரி, நீங்க மேற்கோள் காட்டும் mises instituteஇல் இருந்து மேலும் சில அஸ்திரஙகள் :
The Euro Debt Crisis and Economic Theory
http://mises.org/daily/4995
The Irish Subjugation
http://mises.org/daily/4876
/////வங்கிகளின் fractional reserve banking system தான் inflationக்கு காரணம் என்பதை மிக எளிதாக மறுக்க முடியும். (யாரும் அப்படி சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை).
//
ரான் பால் சொல்லியது. ஆதாரம் கொடுத்துள்ளேன்
http://www.dailypaul.com/119406/would-you-support-abolition-of-fractional-reserve-banking
The problems are that fractional reserve lending and fiat currencies are fraudulent.
If those could be prohibited, or our Constitution enforced, then banks would serve a legitimate purpose.
—Ron Paul’s Convention Speech///
சதுக்க பூதம்,
inflationக்கு காரணம் இந்த fractional reserve banking system தான் என்று ரான் பால் எங்கே சொல்லியுள்ளார ? சிறுதும் நேர்மையில்லாமல் மேற்கோள் காட்டுகிறீர். மேலும் இந்த inflationக்கு காரணம் என்னவென்று அவர் கருதுகிறார் என்று பார்க்கலாமா ?
http://www.ronpaul.com/2009-07-16/ron-paul-government-involvement-causes-price-inflation-in-healthcare-and-education/
Ron Paul: The healthcare system is a boondoggle created by the federal government, that’s where the inflation is. Governments print money, prices go up in certain areas more so than others, because the government is involved in medicine and education; that’s where you have the greatest amount of inflation. So if you want good healthcare at the best rate at the cheapest price possible, you have to have a market phenomenon.
//I have a right to my life and my liberty and to keep the fruits of my labor.
That’s where you get production and that’s where you have the best distribution and the wealthiest situation in the world; the market. But we’ve given up on that, we don’t have much faith in it, and this administration said, “No, all we need is to spend, borrow, print and just pass out the goodies and everyone is going to love us”.///
ஏற்றுக்கொள்கிறீர்களா தோழர் ?
மேலும் சோசியலிச நாடுகளின் வங்கிகள் (சோவியத் ரஸ்ஸியாவில் இருந்தது போல), இந்தியாவில் அரசு வங்கிகள் : இவை அனைத்தும், அதே fractional reserve banking முறையில் தான் செயல்பட்டன / செயல் படுகின்றன. அதை கட்டுபடுத்தி, நெறிபடுத்த வேண்டும். ஆனால் எந்த முறையில் என்ன அளவில் என்று தான் விவாதம். மற்றபடி, அதை முழுசா ஒழிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை.
ரான் பால் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்க்க முடியாது. நடை முறை சாத்தியம் தான் காரணம். சரி இருக்கட்டும், உமக்கு சாதகமான சில விசியங்களில் மட்டும் அவரை மேற்கோள் காட்டுகிறீர். பல மிக முக்கிய அடிப்படை விசியங்களில் (தனியார் மயம், சுதந்திர சந்தை, வரி விகுதங்கள், உலகமயமாக்கல்,) அவரின் கருத்துகளை ஏற்ப்பீர்களா ? mises இன்ஸ்டியூட் இவை பற்றி மிக மிக விரிவாக விவாதிப்பார்கள். உங்க ஆதர்ச நூலான WEb of debt பற்றி இவர்கள் எல்லாரும் என்ன ‘கருதுகிறார்கள்’ என்று பேசலாமா ? டாலர் ஏகாதிபத்யம், அயர்லாந் நாட்டு சிக்கல், யூரோ பற்றி என்ன நிலைபாடு எடுக்கிறார்கள் என்று பார்க்கலாமா ? அவர்கள் சொல்வதை அப்ப ஏற்றுக்கொண்டு, உமது கருத்துக்களை மாற்றிக்கொள்ளா தயாரா தோழர் ?
//ரான் பால் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்க்க முடியாது. நடை முறை சாத்தியம் தான் காரணம்.//
முதலில் நான் சொல்வது சொந்த கருத்து அதற்கு ஆதாரம் இல்லை என்றீர்கள். பிறகு ஆதாரமாக புத்தகத்தை கொடுத்த உடன் புத்தகத்தை ஏற்க முடியாது அறிஞசர்களின் கருத்தை சொல்லுங்கள் என்றீர்கள். சரி நீங்கள் லிபரடேரியன் என்ற் சொல்லி கொள்வதால், இன்றைய தேதியில் லிபரடேரியன்களில் முக்கியமானவராக அடையாள படுத்த படும் ரான் பாலின் கருத்தை மேற்கோள் காட்டினேன். இப்போது அவர் சொல்வதை ஏற்க முடியாது என்கிறீர்கள். இதை படிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், உங்களோடு தொடர்ந்து இது பற்றி விவாதிப்பது அர்த்தமுள்ளதா என்று?
// The healthcare system is a boondoggle created by the federal government,//
அமெரிக்க ஹெல்த்கேர் சிஸ்டத்தின் அடிப்படை பிரச்ச்னையே அது தனியாரிடம் முழுமையாக மாட்டி கொண்டு இருப்பதால் அதில் அடிக்க படும் அநியாய கொள்ளையும் அதன் விளைவாக பாதிக்க அப்டும் சாதாரண மகக்ளை காப்பாற்ற வழி இல்லாததும் தான். அமெரிக்க தனியார் ஹெல்த் கேர் சிஸ்டத்திலிருந்து மக்களை காக்க ஒபாமா தலை கீழாக இருப்பது உலகரிந்த உண்மை.
இது தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாத விவாதம். நான் தொடர விரும்பவில்லை
//சரி நீங்கள் லிபரடேரியன் என்ற் சொல்லி கொள்வதால், இன்றைய தேதியில் லிபரடேரியன்களில் முக்கியமானவராக அடையாள படுத்த படும் ரான் பாலின் கருத்தை மேற்கோள் காட்டினேன். இப்போது அவர் சொல்வதை ஏற்க முடியாது என்கிறீர்கள்.///
அவர் சொல்வது அனைத்தையும் அப்படியே ஏற்க்க முடியாது என்றுதான் சொன்னேன். நடைமுறை சாத்தியம்தான் காரணம் என்றும் சொன்னேன். அடிப்படையான விசியங்களில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஃபெட்டை ஒழிப்பது நடை முறை சாத்தியமில்லை. சாமர்த்தியமாக பேசுவதாக நினைப்பா ?
ஜே.பி.மார்கன், ஃபெட்டுக்கு பதில் ஜே.பி.மார்கனே பரவாயில்லை என்று என்ன அடிப்படையில் சொன்னார் ?
அமெரிக்க ஹெல்த் கேர் பற்றி அவர் சொன்னதை ஜீரணிக்க முடியாமால் நலுவறீங்களே ?
உற்பத்தி திறன்(productivity ) என்பது production/unitarea. இதில் பரப்பளவு எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. முதலில் பொருளாதார கொள்கைகளை விடுங்கள். பொர்ளாதார அளகுகளை பற்றியாவது தெரிந்து விட்டு வாருங்கள்
//அமெரிக்க ஹெல்த் கேர் பற்றி அவர் சொன்னதை ஜீரணிக்க முடியாமால் நலுவறீங்களே ?//
அது எவ்வளவு கேவலமானது என்று தான் உலகறியும். அதை பற்றி அறிமுகம் கொடுத்து விட்டேன். அதற்கும் இந்த கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாததால் தான் அது பற்றி எழுதவில்லை. அது பற்றி மேலும் அறிய சிக்கா என்ற டாக்குமென்ட்ரி பார்த்து கொள்ளுங்கள்
//அந்த பதிவில் கூறியிருப்பது தற்போது ஐரோப்பிய வங்கிகள் எவ்வாறு அயர்லாந்தை சுரண்டின என்பது பற்றி தான்.//
சுரணடவெல்லாம் இல்லை. மிகவும் பின் தங்கி இருந்த அயர்லாந் கடந்த் 15 வருடங்களில் நன்றாக வளர்ந்தது. real economy grow at an excellent pace and the nation became most prosperous. (India too grow in the same period). The primary cause for the crisis, is that of govt of Ireland over spending. மிக முக்கிய சுட்டி இது :
http://www.cato-at-liberty.org/five-lessons-from-ireland/
அரசுதான் முதல் குற்றவாளி. தனியார் வங்களை மட்டும் தான் தொடர்ந்து சொல்லும் நீங்க அரசின் மிக முக்கிய பங்களிப்பை பற்றி பேசாமாட்டேன் என்கிறீக. எமக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று சொல்கிறீர் !!
அயர்லாந் சிக்கல்களுக்கு அதன் அரசின் பொறுபற்ற செலவுகளின் அளவுகள் தான் அடிப்படை காரணம் என்பதை தெளிவாக நிருபிக்கும் சுட்டி இது :
http://danieljmitchell.wordpress.com/2010/11/18/dont-blame-irelands-mess-on-low-corporate-tax-rates/
productivity பற்றி : முதலில் நீர் சொன்ன ‘விளக்கம்’ இது :
///உற்பத்தி திறன்(productivity ) என்பது production/unitarea. இதில் பரப்பளவு எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. முதலில் பொருளாதார கொள்கைகளை விடுங்கள். பொர்ளாதார அளகுகளை பற்றியாவது தெரிந்து விட்டு வாருங்கள்///
what do you mean by production / unit area ? the correct definition is :
Productivity is a measure of output from a production process, per unit of input. For example, labor productivity is typically measured as a ratio of output per labor-hour, an input. Productivity may be conceived of as a metric of the technical or engineering efficiency of production.
That is it is equivalent to the definition for ‘efficiency’ in engineering.
முதல்ல நீங்க சரியா தெரிஞ்க்கிட்டு பிறகு பேசுங்க. விவசாயத்தில் சிறு துண்டுகளாக நிலம் இருந்தால், economics of scale சாத்தியமில்லை. farm productivity மிக குறைவாக தான் இருக்கும். ஒரே மாற்று வழி பெரும் பண்ணைகள் with modern farming technology and machineries .
////அமெரிக்க ஹெல்த் கேர் பற்றி அவர் சொன்னதை ஜீரணிக்க முடியாமால் நலுவறீங்களே ?//
அது எவ்வளவு கேவலமானது என்று தான் உலகறியும். அதை பற்றி அறிமுகம் கொடுத்து விட்டேன். அதற்கும் இந்த கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாததால் தான் அது பற்றி எழுதவில்லை///
ரான் பால் அதற்க்கு சொல்லும் காரணி : அமெரிக்க அரசு தலையீடு தான். முழுசா தனியார்வசம் அனுமதித்து, உண்மையான சுதந்திர சந்தை பொருளாதார அடிப்படையில் அதை இயங்கவிட்டால் தான் தீர்வு கிடைக்கும் என்கிறார். ஒத்துக்கொள்வீர்களா ? இதனுள் என்று விவாதிக்க அழைக்கவில்லை. ஆனால் தீர்வு உங்கள் கொள்கைகளுக்கு நேர் எதிரான முற்றிலும் தனியார் மயம் தான் என்கிறார். ஆனால் நீங்க அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் சமாளிக்கிறீக…
///ஒரு பன்னாட்டு கம்பெனி வரும் முன் அத்துறையில் எத்தனை பேர் வேலையில் இருந்தார்கள். அது வந்த பின் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல. அமெரிக்காவில் கூட சிறு மற்றும் குறு நிறுவனங்கள் தான் அதிகம் பேருக்கு வேலை கொடுக்கிறது//
இப்ப இருக்கும் மக்கள் தொகைக்கு, பழைய அளவு உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பே இந்தியாவில் தொடர்ந்திருந்தால், செம்புரட்சி இன்னேரம் வந்திருக்கும் !! புதுசா உருவான வேலை வாய்ப்புகளை, தொழில் வாய்புகளை, வரி வசூலை, பண்டங்கள் மற்றும் சேவைகளை பற்றி படித்து, விசாரித்து பாருங்களேன். அமெரிகாவில் குறு நிறுவனங்கள் எல்லாம் அழிந்து விட்டனவா என்ன ? இல்லை என்றுதான் உமது பின்னூட்டம் சொல்கிறது. பெரு நிறுவனங்களை அனைத்தும் ஒரு காலத்தில் சிறு நிறுவனங்களாகவே துவக்கப்பட்டன. டோயோட்டோ, சோனி முதல் ரிலையன்ஸ் வரை எல்லாம் பல பத்தாண்டுகளுக்கு முன் ஆரம்பித்த போது என்ன நிலை ? சரி, அவற்றை ‘கட்டுபடுத்த’ இந்தியாவில் செய்த முயற்சிகளின் விளைவை பற்றி பேசலாமா ? அதனால விளைந்த லைசென்ஸ் ராஜ்ஜியம், ஊழல், பொருளாதார முடக்கம், வறுமை, வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் கடும் விலைவாசி உயர்வு : இவை பற்றி நிறைய பேசலாம்.
// ஏர்டெல் நிறுவனம் கடும் பிரயத்தனத்துடன்//
நீரா ராடியா – டாடா உரையாடலில் தெரிந்தது எப்படி பட்ட பிராயத்தனம் என்று bsnl //
.சேவைக்கு இன்று வரை எந்த குறையும் இல்லை///
நீரா ராடியா – டாடா உரையாடலுக்கும் ஏர்டெல் அல்லது ஏர்செல் நிறுவனத்திற்க்கும் என்ன தொடர்பு ? சொன்னாலும் பொருத்தமா சொல்லனும். அல்லது இந்நிறுவனங்களை அனுமதிக்காமலே முன்பு போல் இருந்திருக்க வேண்டுமா ?
//இப்ப இருக்கும் மக்கள் தொகைக்கு, பழைய அளவு உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பே இந்தியாவில் தொடர்ந்திருந்தால், செம்புரட்சி இன்னேரம் வந்திருக்கும் !! //
ஏண்ணே, நம்ம விட மோசமா இருக்குற ஜிம்பாபேல புரட்சி வரல? மக்களோட வறுமை புரட்சியை உருவாக்கும் என்கிற தத்துவம் காலாவதியாகி ஆச்சி பல நூறு வருசம். இன்னமும் அதியமான் அண்ணாச்சி இத நம்பிட்டு இருக்காறு.
அமெரிக்க குறு நிறுவனங்கள் மட்டுமல்ல. ஒட்டு மொத்த உற்பத்தி துறையே நசிவடைந்தது தான் இன்றைய விவாதம். பத்திரிக்கைகளே படிக்க மாட்டீர்கள் போலிருக்கு.
அய்யா நீங்கள் தானே சொல்கிறீர்கள். இயந்திரமயமாக்க, process efficiency உள்ள பட்ட பெரு தொழிற்சாலைகளால் தான் productivity பெருக்க முடியும். சிறு தொழில்கள் எல்லாம் less productive அவற்றால் தீமை தான் என்று.
குலோபலைசேசன் இந்திய சிறு தொழிலை நசுக்கி விட்டது என்பது அனைவராலும் ஏற்று கொள்ளபட்ட உண்மை. பெப்சி வருவதற்கு முன் எத்தனை கம்பெனிகள் குளிர்பாண தொழிலில் இருந்தது இப்போது அதன் நிலை என்ன. நீங்கள் விரும்பி கேட்கும் ஒரு உதாரண லிங்க்
http://www.bukisa.com/articles/379577_globalization-will-kill-small-scale-industries-in-india
பெப்ஸிய மட்டும் தான் வழக்கம் போல உதரணம் காட்டுவீர்களே. நான் தருகிறேன் இன்னும் சரியான உதாரணங்கள். மில் துணிகள் பெரும் அளவில், மிக மலிவாக உற்பத்தியான பிறகு கைத்தறி எண்ணிக்கைகள் குறைந்துவிட்டன. டிராக்டர் வந்தவுடன் ஏர் உழவு மிக மிக குறைந்துவிட்டது. பழைய பாணியில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருதிருந்தால், இப்ப 110 கோடி மக்களுக்கு மலிவாக ஆடை எப்படி உற்பத்தி செய்வதாம் ? ஏர் உழவு இன்னும் தொடர்ந்திருந்தால், உணவு உற்பத்தியை எப்படி பெருக்குவதாம் ?
இவை தொழில் புரட்சியின் தொடர்ச்சியால ஏற்படும் மாற்றங்கள். அதனால் வேலை இழந்தவர்களுக்கு புதிதாக பல வேலைகள் உருவாகி விடும். பெரிய பாதிப்பு இல்லை.
ஆனாலும் சிறு தொழில் துறை 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று சிறப்பாகவே உள்ளது. பெரு நிறுவனங்கள் பல நுறு புதிதாக உருவாகி அவற்றிக்கு suppliers ஆக பல ஆயிரம் புதிய சிறு நிறுவனங்கள் உருவாகி மிக vibrant ஆக மாறி உள்ள்து. 20 ஆண்டுகளாக சிறு தொழில் துறையில் தான் உள்ளேன். விரிவான தகவல்கள் மற்றும் அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும். SSI in India என்று கூகுள் செய்து பார்க்கவும்.
அய்யா சதுக்க பூதம்,
சிறுதொழில்கள் அழிகிறது என்று ‘நிருபிக்க’ நீங்கள் அவசர அவசரமாக கூகுள் செய்து, இட்ட சுட்டியில் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று நிதனமாக படித்து பார்க்கவும். அதில் சொல்லப்பட்டவை :
By the above analysis, one would believe that globalization has ultimately led to the demise of the small scale industries sector in India. But that is clearly not the case.
As more and more companies do that, orders pour in for these small scale industries. In fact, many such small-scale industries have become large-scale industries this way.
Let us take the example of jaggery. Jaggery production in the country is run by small scale industries. The production can never grow to a large scale because of the demand. Yet more and more small scale producers take up the production of jaggery and do make a good profit out of it.
At the end of the day, when we look at the situation at hand from all sides, we see that globalization has not only sustained small-scale industries in India, but also strengthened it and made it more prosperous.
இவை நீர் அளித்த சுட்டியில் இருந்துதான். மேலும் பல ஆதாரங்களை எம்மால் அளிக்க முடியும். முதலில் உமது ‘ஆதாரத்தை’ முழுசா படித்துவிட்டு பின் விவாதிக்கவும்.
//நீரா ராடியா – டாடா உரையாடலுக்கும் ஏர்டெல் அல்லது ஏர்செல் நிறுவனத்திற்க்கும் என்ன தொடர்பு ? சொன்னாலும் பொருத்தமா சொல்லனும். அல்லது இந்நிறுவனங்களை அனுமதிக்காமலே முன்பு போல் இருந்திருக்க வேண்டுமா ?
//
டாடா நீராவிடம் இந்திய தொலை தொடர்பு நிறுவனங்களின் ஆதிக்கம் எல்லாம் ஒரு சில கம்பெனிகளின் கையில் மட்டும் இருப்பது பற்றி பேசிய பேச்சை சொன்னேன்
Production என்பது நாட்டின் மொத்த உற்பத்தி. உற்பத்தி திறன்(Productity )என்பது production/unitarea . அதாவது ஒரு பண்ணையில் 100 ஹெக்டேர் இருந்து 100 டன் விளைவித்தால் உற்பத்தி 100 டன். உற்பத்தி திறன் அதாவது productivity = 100/100 =1 டன்
அதே நேர்த்தில் மற்றொரு பண்ணையில் 10 ஹெக்டேர் இருப்பதாக வைத்து கொள்வோம். அங்கு 80 டண் விளைவித்தால் மொத்த உற்பத்தி 80 டண். ஆனால் உற்பத்தி திறன் 80/10= 8 டண். எனவே 10 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பண்ணை அதிக உற்பத்தி திறன் கொண்டதாகவும், அதிக — ஆகவும் உள்ளதாகவும் கருதுவார்கள். இது தான் எனக்கு தெரிந்த பொருளாதாரம்!
அமெரிக்க மெக்கானைசைடு விவசாயம் மற்றும் அங்கு விவசாய சப்சிடி இல்லாவிட்டால் அங்கு விவசாயத்தின் நிலை என்ன என்பதும் சுவாரசியமான விவாதத்துக்கு உரியது. ஆனால் அது தலிப்புக்கு சம்பந்தம் இல்லாதது.
//Production என்பது நாட்டின் மொத்த உற்பத்தி. உற்பத்தி திறன்(Productity )என்பது production/unitarea . அதாவது ஒரு பண்ணையில் 100 ஹெக்டேர் இருந்து 100 டன் விளைவித்தால் உற்பத்தி 100 டன். உற்பத்தி திறன் அதாவது productivity = 100/100 =1 டன் அதே நேர்த்தில் மற்றொரு பண்ணையில் 10 ஹெக்டேர் இருப்பதாக வைத்து கொள்வோம். அங்கு 80 டண் விளைவித்தால் மொத்த உற்பத்தி 80 டண். ஆனால் உற்பத்தி திறன் 80/10= 8 டண். எனவே 10 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பண்ணை அதிக உற்பத்தி திறன் கொண்டதாகவும், அதிக — ஆகவும் உள்ளதாகவும் கருதுவார்கள். இது தான் எனக்கு தெரிந்த பொருளாதார///
வெறும் நிலத்தின் அளவு மட்டும் அலகு அல்ல. total input costs including man hoursகளும் இதில் அடங்கும். output / input per unit of land என்பதே சரி. input costs incl all costs.
சீனாவின் நெல் உற்பத்தி உலகில் மிக அதிகம். காரணம் area under cultivation is the largest என்பதே. மிக எளிய உண்மை. ஆனால் yield per hectare, cost of cultivation, and farm productivity : இவற்றில் ஜப்பான் மற்றும் வளர்ந்த நாடுகள் மிக அதிகம் score செய்யும். காரணம் பல முறை நான் சொன்ன economics of scale எனப்படும் பண்ணைகளின் அளவு, modern farming methods using machineries, etc. சோவியத் ரஸ்ஸியாவின் கூட்டு பண்ணைகளும் அதிக பரப்பளவு கொண்டவையாக தான் உருவாக்கப்ட்டன. நிலம் துண்டாக அங்கு அனுமதிக்கப்படவில்லை. 1930களில் ஏற்பட்ட கொடுமையான அழிவுகள் பிறகு படிப்படியாக நின்று போய் 50களில் இருந்து நிலைமை அங்கு ஓரளவு மேம்பட்டது. ஆனாலும் 60களில், 70களில் ஜனத்தொகை அதிகரிப்பிற்க்கு ஏற்ப அங்கு yield மற்றும் productivtiy அதிகரிக்க முடியாமல், கனடாவில் இருந்தும், பிற வளர்ந்த நாடுகளில் இருந்தும் தானியம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை.
லாப நோக்கம் இல்லாமல், சோசியலிச பாணி உற்பத்தி முறையில் productivityஅய் ஒரளவிற்க்கு மேல் அதிகரிக்க முடியாது என்பதே உண்மை. படிப்படியக நடே சீரழிந்தது.
காரணம் திரிபுவாதிகள் தான் என்று ஒற்றைவரியில் தோழர்கள் காரணம் சொல்வர். ஆனால் அந்த அமைப்பே போக போக அப்படிதான் சீரழியும் என்பதே வரலாறு காட்டும் உண்மை. எதிர்காலத்தில் அதே அமைப்பை கட்டமைத்தாலும், history will repeat itself.
//முதலில் தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கியதே தவறு. அரசு பொது துறை நிறுவனங்களை பெரும் சொலவு செய்து உருவாக்கியதே பெரும் தவறு. அதன் விளைவு பணவீக்கம், வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம்.
//
முடிந்தால் நிருபித்து காட்டுங்கள்
சதுக்க பூதம்,
ராஜாஜி 1960இல் எழுதிய மிக முக்கிய கட்டுரை இது. இதுவே நான் தரும் ஆதாரம் :
http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html
The Third Plan is tremendously inflationary. The overt
deficit financing of this Plan is Rs.550 crores. This
is misleading. Without totalitarian and physical
suppression of consumption, in order to mop up
people’s money by reducing consumption, the amount of
supposed availability of savings estimated at Rs.7,200
crores is an over-estimate. The over-estimate is at
least of the order of Rs.1,300 crores.
Thus what the Plan requires by way of foreign aid,
(over and above the amount required for repayments
due) is not Rs.2,790 crores but Rs.5,350 crores. The
deficit financing therefore will not be only Rs.550
crores as planned but six times that figure.
இங்கு planning, plan என்று அவர் குறிப்பிடுவது அய்ந்தாண்டு திட்டங்கள்,
அதில் பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்க நிதி திரட்டும் முறை பற்றி.
மேலும் அவர் ஒரு கட்டுரையில் 1965இல் கூறுகிறார் :
http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html
/////Sri Jawaharlal Nehru, urged by patriotic impulse, and early
indoctrination committed the blunder of taking India out of
the path of humility and put it in the race for industrialization,
and did all he could to transform our ideology into that of
Soviet Russia. This was the fatal step that brought us to the
present position out of which it requires not only wisdom but
indomitable courage to save India. Social justice and removal
of disparities of opportunity and equitably distributed welfare
are great and worthy ends. But the fatal mistake was the plan
to achieve this by the shortcut of heavy borrowing and central
planning and permit-license-regime which has brought in its
wake all that makes Sri Sri Prakasa lament so bitterly.///
//The Third Plan is tremendously inflationary. The overt
deficit financing of this Plan is Rs.550 crores. This
is misleading. Without totalitarian and physical
suppression of consumption, in order to mop up
people’s money by reducing consumption, the amount of
supposed availability of savings estimated at Rs.7,200
crores is an over-estimate. The over-estimate is at
least of the order of Rs.1,300 crores.
Thus what the Plan requires by way of foreign aid,
(over and above the amount required for repayments
due) is not Rs.2,790 crores but Rs.5,350 crores. The
deficit financing therefore will not be only Rs.550
crores as planned but six times that figure. //
சோசலிசத்தின் தோல்விக்கு அதியமானின் ஆதாரம் பாரீர் (சொல்ல மறந்துவிட்டேன் இது ‘அதியமான் சோசலிச’த்தின் தோல்வி)
/////உணவு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள கோளாருகள், ஆடை விசியத்தில் இல்லை. கடந்த 30 ஆண்டுகளில் பரம் ஏழைகள் கூட நல்ல உடை அணிய முடிகிறது. அன்று கந்தல் தான். போதிய உடை இல்லை. இன்று ஒரு நாள் கூலியில் ஒரு சட்டை அல்லது புடவை வாங்க முடியும். எப்படி சாத்தியமாயிற்று //
அதற்கு காரணம் சோசியலிச ஆட்சி காலத்தில் நடந்த பசுமை புரட்சியும், வங்கிகளை தேசியமயமாக்கி ஏழை விவசாயிகள் கடன் கிடைத்தது தான்.///
சதுக்க பூதம்,
உணவு போதுமான அளவு கிடைக்காமல் இன்று பல இந்தியர்கள் malnourished and under nourished ஆக உள்ளதை நான் சொன்னேன். ஆனால் உடை விசியத்தில் பரவாயில்லை. அதற்க்கு பதில் சொல்லாமல் பசுமை புரட்சி, வங்கி தேசியமயமாக்கல் என்கிறீர். முதலில் இந்த பசுமை புரட்சி பற்றி வினவு தோழர்களின் கருத்தை அறிந்து கொண்டு பேசவும் !!
ஆடை உற்பத்தி முற்றிலும் தாரளமயமாக்கபட்ட பின் தான் இத்தனை மலிவு மற்றும் பற்றாக்குறை இல்லாத சப்பளை. 40 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை கொடுமையானது.
விவசாயம் அழிகிறது என்று ஒரு சமயம் எழுதுகிறீர்கள். பசுமை புரட்சியின் மகிமைகளையும் சிலாகிக்கிறீர்கள். ஆம், இந்தியாவில் விவசாயம் ஒழுங்க இல்லை தான். நிலம் மிக சிறிய துண்டுகளாக சிதறியதன் விளைவு இது. இன்றும் நில உச்ச வரம்பு சட்டம் உண்டு. ஆனல் ரப்பர், டீ, காபி எஸ்டேட்டுகளுக்கு கிடையாது. முரண் !! எஸ்டேட்டுகள் இல்லாவிட்டால் திவாலாகிவிடும் என்ற யதார்த்தம். அதே லாஜிக் தான் இதர விவசாய துறைகளுக்கும் என்று புரிவதில்லை. இதை பற்றி எமது பதிவு :
http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html
விவசாயிகள் தற்கொலைக்கு பல காரணிகள்
//விவசாயம் அழிகிறது என்று ஒரு சமயம் எழுதுகிறீர்கள். பசுமை புரட்சியின் மகிமைகளையும் சிலாகிக்கிறீர்கள். ஆம், இந்தியாவில் விவசாயம் ஒழுங்க இல்லை தான். நிலம் மிக சிறிய துண்டுகளாக சிதறியதன் விளைவு //
என்ன எழுதுகிறோம் என்று புரிந்து கொண்டு எழுதுங்கள். பசுமை புரட்சி சோசிலிச காலத்தில் நடைபெற்றது. அது வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம் அரசாங்கம் வங்கிகளை தேசிய மயமாக்கி விவசாயிகளுக்கு கடனை ஒழுங்காக கிடைக்க வழி செய்தது. மேலும் சோசியலிச காலத்தில் அரசாங்கம் விவசாயத்துக்கு செய்த உதவி. தற்போது அது முழுதும் புதிய பொருளாதார கொள்கை என்ர பெயரில் சிறிது சிறிதாக அழிக்க படுவது.
// நிலம் மிக சிறிய துண்டுகளாக சிதறியதன் விளைவு //
இதிலிருந்து உலக விவசாயம் பற்றி உங்களுடைய புரிதல் நன்கு தெரிகிரது. உலகிலேயே நெல் உற்பத்திதிறனில் முன்னனியில் இருக்கும் நாடு சீனா. சீனாவின் விவசாய நில ஹோல்டிங் 1 ஹெக்டேருக்கும் குறைவு.குறைந்த நிலம் இருப்பதால் கிடைக்கும் தனிபட்ட கவனம் மற்றும் அரசின் உதவியே இதற்கு காரணம்
//சரி, இப்ப என்னவோ வறுமை கோட்டுக்கு கீழ் கஸ்டபடுவது போல் பேசுகிறீர்கள். சொந்தமாக கார் வைத்துக்கொண்டு அங்கு சவுகரியமாக தானே இருக்கிறீக. (அப்படி தான் நல்லபடி இருக்க வேண்டும் என்று விழைகிறேன் தோழர். எல்லோரும் நல்லா இருக்கனும்ந்தான் விரும்புகிறேன்)//
அய்யா. நான் சவுகரியமாக இருக்க எது நல்ல வழி என்று பேசவில்லை. சமூகத்தில் அடிதளத்தில் இருக்கும், வசதி குறைந்தவர்கள் முன்னேற எது வழிமுறை என்பது பற்றியது தான் பேச்சு. நான் மென் பொருள் திறைக்கு வர செய்திருக்கும் செலவை அவர்களால் செய்ய முடியாது. அது மட்டுமன்றி எனக்கு இருந்த வசதி வாய்ப்பு அவர்களுக்கு இல்லை.
//என்ன எழுதுகிறோம் என்று புரிந்து கொண்டு எழுதுங்கள். பசுமை புரட்சி சோசிலிச காலத்தில் நடைபெற்றது. அது வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம் அரசாங்கம் வங்கிகளை தேசிய மயமாக்கி விவசாயிகளுக்கு கடனை ஒழுங்காக கிடைக்க வழி செய்தது. மேலும் சோசியலிச காலத்தில் அரசாங்கம் விவசாயத்துக்கு செய்த உதவி. தற்போது அது முழுதும் புதிய பொருளாதார கொள்கை என்ர பெயரில் சிறிது சிறிதாக அழிக்க படுவது.
வங்கி கடன் பெற்ற விவசாயிகளின் சதம் எத்தணை. கந்து வட்டிக்கு அல்லது தனியாரிடம் கடன் வாங்கிய / வாங்கும் விவசாயிகள் எத்தனை சதம் ?
நீங்கள் வாழும் அமெரிக்காவில் விவசாயம் நன்றாக, மிக அதிகம் productivity யோடு உள்ளது. வங்கிகள் தனியார் வசம் தான். எப்படி ? மிக முக்கிய காரணம் economics of scale and modern farming methods. அங்கு ஒரு சராசரி பண்ணையில் அளவு பல ஆயிரம் ஏக்கர்களில். தொழில் துறை போலவே விவசாயமும் இயங்கி, உணவு உற்பத்தில் கடந்த 100 ஆண்டுகளில் மிக மிக மிக அதிகமாக்கி, தானிய விலை மிக மலிவாக்க முடிந்தது.
இந்த economics of scale எந்த அமைப்பிற்கும் பொதுவானதுதான். சோவியத் ரஸ்ஸியாவின் கூட்டுப்பண்ணைகளும் ஒரு உதாரணம். ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் கொண்ட பண்ணைகள் அவை. இதை பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன். பசுமை புரட்சி, சோசியலிச காலங்கள் பற்றி வினவு தோழர்கள் கடுமையான எதிர்மறையான கருத்துகள் கொண்டிருக்கிறார்கள். (வினவு : கொஞ்ஞ்சம் இத கவனிங்களேன் !).
// நிலம் மிக சிறிய துண்டுகளாக சிதறியதன் விளைவு //
இதிலிருந்து உலக விவசாயம் பற்றி உங்களுடைய புரிதல் நன்கு தெரிகிரது. உலகிலேயே நெல் உற்பத்திதிறனில் முன்னனியில் இருக்கும் நாடு சீனா. சீனாவின் விவசாய நில ஹோல்டிங் 1 ஹெக்டேருக்கும் குறைவு.குறைந்த நிலம் இருப்பதால் கிடைக்கும் தனிபட்ட கவனம் மற்றும் அரசின் உதவியே இதற்கு காரணம்///
உலகிலேயே நெல் சீனாவில் அதிக உற்பத்திக்கு காரணம் பரப்பளவு. ஆனால் yield per hectare, farm productivity and cost of production அங்கு எப்படி உள்ளது என்று சொல்லுங்களேன். ஜப்பானிலும் நெல் உற்பத்தி உண்டு. இந்த அளவீடுகளை ஒப்பிடுங்களேன். சீனா இன்று பெரும் பரப்பளாவு கொண்ட நவீன பண்ணைகளை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறது. ஏன் ?
கனடா மற்றும் அமெரிக்க விவசாயத்துறை பற்றி பேசுவோமா ?
//அந்த பிரச்ச்னை நடந்த சில நாளில் என் பிளாக் ஸ்பேம் என்று ஒருவரால் ரிப்போர்ட் செய்யபட்டு சில நாட்கள் என்னால் இடுக்கை இட முடியாமல் இடை நிறுத்தம் செய்ய பட்டிருந்தது. அது யாரல் செய்ய பட்டிருக்கும் என்பதை இந்த பின்னூட்டத்தை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.//
அதாவது சில வருடங்களுக்கு முன் நீங்கள் ஆபாச பின்னூட்டம் இட்டபோது நடந்தது
///உங்களை ஆபாச பதிவர் என்றும் அறிந்தும் உங்கள் பின்னூட்டங்களை தொடர்ந்து இட்டேன். தமிழ் மணம் நட்சித்திர வாரமாக இருந்த போது புது இடுக்கையை எழுதும் நேரத்தைல் உங்களுடன் பொருமையாக 50க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களில் வாதம் புரிந்தேன். ///
சதுக்க பூதம்,
எம்மை ஆபாச பதிவர் என்று நீர் மட்டும் தான் சொல்கிறீர். வேறு யாரும் அப்படி உளருவதில்லை. தமிழமணம் எம்மை சில மாதங்களுக்கு முன்பு நட்சித்த்ர வார பதிவுகளை எழுத அழைத்தது. பல காரணங்களுக்காக செய்ய முடியாததால், எதிர்காலத்தில் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் எம்மை ‘ஆபாச’ பதிவராக கருதவில்லை.
இங்கு வினவு தளத்தில் வீசப்ப்படும் அருமையான சொல்லாடல்களை பார்த்தால் தான் உண்மையில் ஆபாசம் என்றால் என்னவென்று புரியும்.
எம் மீது தனி மனித தாக்குதல் நடத்தினால், முன்பு அதே பாசையில் திருப்பி தாக்கி கொண்டிருந்தேன். இனி அது வீண் வேலை என்று உணர்ந்து கொண்டேன். உம் பதிவில் ஒரு முறை நிதானம் இழந்து உம்மை திட்டியது தவறு என்று உணர்ந்தேன். ஆனால் இந்த
முறை அப்படி செய்யவில்லையே ?
விவாதம் தடம் மாறுகிறது என்று கருதினால், ரான் பால் பற்றி ஏன் நீங்களே எழுத வேண்டும். பிறகு அதை நீக்க வேண்டும் ? டாலர் சதி தான் வேறு விசியம் என்று கருதியதால், அதை பற்றி நான் விவாதிக்கவில்லை. மேலும் டாலர் அரசியல் பற்றி உமது கருத்துக்களை அன்றே முற்றிலும் மறுத்துவிட்டேன். ரான் பால், மிஸ்ஸஸ் இன்ஸ்டியுட் மற்றும் லிபேர்டேரியன்கள் இதை பற்றி என்ன கருதுகிறார்கள் என்று எடுத்தியம்புங்களேன் பார்க்கலாம். You people will never ever understand the fact that it is impossible to force all nations to accept a currency thru coercion or fraud or what not. Acceptance of a currency will slowly happen over the decades only thru development of credibility and TRUSTWORTHINESS. repeat : TRUSTWORTHINESS. the same way any brand is built up. the word SONY gives a sense of trust and credibility about quality and durability. same way all brands and images are built.
One can fool some people for some time. but no one can fool all the people for all the time. this proverb is very true and can be applied to dollar arasial theories too.
எல்ல விசியங்களுலும் பன்னாட்டு வங்கிகளின் சதியை ‘காணும்’ மாயையில் உள்ள குழு ஒன்று உள்ளது. fractional reserve banking நல்ல வேலை செய்கிறதான். அரசு தன் பற்றாகுறை பட்ஜெட்டுகளுக்காக கடன் வாங்குவதை வெகுவாக குறைத்தால், இத்தனை சிக்கல்கள், சுழற்சிகள் உருவாகாது என்பதுதான் லிபர்டேரியன்கள் மற்றும் monetaristகளின் அடிப்படை வாதம். யாரும் அதை தவறு என்று இதுவரை நிருபிக்கவில்லை. ராஜன் இறுதியாக எழுதியதை படித்து பாருங்கள்.
//அதை பற்றி நீர் இட்ட பின்னூட்டத்தையும் ஏன் நீக்கினீர்கள் என்று சொல்லும்
//
உங்களுடைய அடுத்த பொய்.அந்த பதிவின் 42 வது கமெண்ட் என்று நினைக்கிறேன். ஆதாரத்திற்கு அதையும் கொடுக்கிறேன். எப்படிஎல்லாம் பொய் சொல்வது என்று அளவே இல்லையா? 50க்கும் மேற்பட்ட கமெண்டை யார் படித்து உங்களுடைய குற்றசாட்டை validate செய்ய போகிறார்கள். அனைவரும் நம்பி விடுவார்கள் என்று தானே இப்படி அபாண்டமாக நான் என்னுடைய பின்னூட்டத்தை நானே நீக்கி விட்டதாக சொல்லி அபாண்டமாக குற்றம் சாட்டுகிறீர்களை. இது பற்றி நீங்கள் முதலில் சொல்லி நான் மறுத்த பின்பும் மீண்டும் அதே குற்ற சாட்டை வைக்கிறீர்கள்.
//Fed என்பது அமெரிக்க மக்களின் நன்மைக்காக பாடு படவில்லை, அது ஒரு Banking Cartel அதை ஒழிக்க வேண்டும் என்று “EndtheFed” என்ற மாபெரும் இயக்கம் ஆரம்பிக்க பட்டுள்ளது.அதை ஆரம்பித்த Ron Paul தற்போது அமெரிக்க நிதி நிர்வாகத்தை கவனிக்கும் சென்ட் சபையில் முக்கிய பொருப்பேற்று உள்ளார்.
Fed என்பது அமெரிக்க அரசின் முழு கட்டுபாட்டில் இருந்தால் கென்னடி எதற்கு பணத்தை அரசே வெளியிட Executive Order 11110 வெளியிட்டார்? கொலை செய்ய பட்டார்? தெரியவில்லை என்றால் wiki இன் கீழ் காணும் லிங்க் போய் பாருங்கள்
http://en.wikipedia.org/wiki/Executive_Order_11110
//
முதலில் நான் என்னுடைய ஆதர்ச கொள்கையாக ஆஸ்திரிய பொருளாதாரத்தை கூரவில்லை. அதுவே ஒரு பொய். நான் முன்பே சொல்லி உள்ளேன். நான் பொதுவாக ஆஸ்திரிய, கீனிசியன், லெப்ட் லிபரல், ரைட் லிபரல், லிபரடேரியன், சோசியலிசம் போன்ற அனைத்து பொருளாதார கொள்கைகளையும் படித்து அனைவரின் கருத்துகளையும் அறிந்து சொந்தமாக யோசித்து தான் என் கருத்தை கூறுவேன் என்று. ரகுராம் ராசா போன்றோரின் ஒரே ஒரு புத்த்கத்தை படித்து அதையே வேதவாக்காக எடுத்து கொண்டு விவாதம் செய்ய மாட்டேன் என்ற்.
உங்களுடைய பிராக்சனல் ரிசர்வ் – ஆஸ்திரிய பொருளாதாரம் பற்றிய பின்னூட்டங்களை பார்த்தேன்.
ஆஸ்திரிய பொருளாதாரத்தின் அடிப்படையே commodity backed STRONG Currency
தான். fractional Reserve முறைக்கு முற்றிலும் அது எதிரானது. ஆக லிபரடேரியன் பற்றி தான் தெரியவில்லை என்று நினைத்தேன். ஆஸ்திரிய பொருளாதாரம் பற்றியும் தெரிய வில்லை என்று தெளிவாகிறது.
புரிகிறது. நீங்கள் ஆதாரம் கேட்க வருகிறீர்கள். உங்களுக்காக wikipediaலிருந்து ஆதாரம்
U.S. Congressman, Ron Paul, has been critical of the banking system in the US.[16] Other people associated with the Austrian School, such as Murray Rothbard, believe that a debt-based monetary system amounts to a subtle form of monetary “fraud” in that it creates money “costlessly” through the use of fractional-reserve banking techniques.[17]
அடிப்படையே தெரியாமல் வாதிடும் உங்களிடம் வாதிடுவது உண்மையிலேயே உபயோகமானது என்று தோன்றுகிறது?
இதற்கு தான் தனிபட்டவரின் கருத்துகளை படிக்காமல் அந்தத்த கொள்கையினை உருவாக்கியவர்களின்/அந்த தத்துவத்தின் பிதாமகர்களாக அறிய படுபவர்கள்( கம்யூனிசத்திற்கு கார்ல் மார்க்ஸ் போல்) அடிப்படை புத்தகத்தை படித்தால் கருத்து ரீதியாக உண்மை தெரிந்து விடும்.
ஆஸ்திரிய பொருளாதார தத்துவம் பற்றி படிக்க
Ludwig von Mises எழுதிய The Theory of Money and Credit
படித்து பாருங்கள்.
இதையேல்லாம் படித்து தத்துவார்த்த ரீதியான அடிப்படை அறிவு கிடைத்தால்
பின் விவாதத்துக்கு ஒவ்வொரு முறையும்
அமெரிக்காவில் மைக்கேல் சாக்சன் சொன்னாக!
சப்பானுல சாக்கி சான் சொன்னாக!
இந்தியாவில ராசாசி சொன்னாக!
தமிழ்நாட்டுல கல்லாபெட்டி சிங்காரம் சொன்னாக
என்று கூகிலில் லிங்கை தேடி அலையவேண்டாம். மன்னிக்கனும். இதை நான் உங்களுக்கு சொல்ல கூடாது. அப்புறம் ஆணாவகாரன் என்பீர்கள்.
//ஆஸ்திரிய பொருளாதாரத்தின் அடிப்படையே commodity backed STRONG Currency
தான். fractional Reserve முறைக்கு முற்றிலும் அது எதிரானது. ///
ஆம். தெரிந்ததுதான். ஆனால் நடைமுறையில் இன்று அது சாத்தியம் இல்லை என்பதால் தான் அதை ஏற்க்க முடியவில்லை. Von Mises ஒரு மாமேதை. அவரின் magnum opus ஆன Human Action என்ற பெரிய நூலை கடந்த பல வருடங்களாக படித்துக் கொண்டிருக்கிறேன். கார்ல் மார்க்ஸின் டாஸ் கேபிடலுக்கு சரியான எதிர் வினை என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்ட்ரியன்ஸ், உலகமயமாக்கல், சந்தை பொருளாதாரம் பற்றிய உமது கருத்தக்களை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்.
அரசுகளில் பற்றாக்குறை பட்ஜெட்டுகள், அதனால் தான் பண வீக்கம், சுழற்சிகள் விளைகின்றன என்பதே அவர்களின் அடிப்படை நிலைபாடு. அரசு பற்றி கண்டுக்காமல், வெறும் தனியார் வங்கிகளின் சதி என்றே தொடர்ந்து பேசும் நீங்க, ஆஸ்த்ரியன்ஸ்களை ஆதாரமாக காட்டுவது வேடிக்கை. உங்க ஆளுங்க யாராவது இருந்தா சொல்லுங்க அய்யா. ஏன் எங்க ஆளுங்களையே ஆதாரம் காட்டி மாட்டிக்கிறீக. நீங்க அவசியம் படிக்க வேண்டிய சுட்டி இது :
What Has Government Done to Our Money? by Murray N. Rothbard
http://mises.org/money.asp
ராத்பார்டின் magnum opusஆன Man, Economy and state என்ற பெரிய நூலையும் பல வருடங்களாக தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன்.
//U.S. Congressman, Ron Paul, has been critical of the banking system in the US//
அதே விக்கியில் ரான் பால் மேலும் என்ன சொல்கிறார் என்றால் :
Paul also believes the longterm erosion of the U.S. dollar’s purchasing power through inflation is attributable to its lack of any commodity backing. However, Paul does not support a complete return to a gold standard, instead preferring to legitimize gold and silver as legal tender and to remove the sales tax on them.
என்ன சொல்றீக இதுக்கு ? கோல்ட் ஸ்டாண்டர் பற்றி ரான் பால்.
இப்போதைய விவாதம் உங்கள் கூற்று படி பிராக்சனல் ரிசர்வ் சிஸ்டம் என்பது அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய கூற்று என்று சொன்னீர்கள். அது நீங்கள் தாங்கி பிடிக்கும் ஆஸ்திரிய பொருளாதாரத்தின் அடிப்படைக்கே எதிரானது என்று நிருபித்துள்ளேன். உடனே அதை விட்டு விட்டு அடுத்ததுக்கு தாவுனா எப்படி? மேலௌம் நான் ஆஸ்திரிய பொருளாதாரத்தின் தீவிர ஆதரவாளன் இல்லை என்றும் கூறிவிட்டேன். commodity backed money பற்றியே தெரியாமல் ஆஸ்திரிய பொருளாதாரம் பற்றி பேசுகிறீர்கள் என்றால் அதன் அடிப்படையை பற்றிய புத்தகங்களை நீங்கள் படித்த்தாக நான் நம்ப தயாராக இல்லை.
ஐரோப்பிய யூனியன் ஆதரவாளன் நான் இல்லை என்றும் நீங்கள் சொல்வது போல் அய்ரோப்பிய முதலாளிகளும் வங்கியால்களும் சாதாரண மக்களின் செல்வத்தை உறிஞ்ச ஆரம்பித்தது தான் அய்ரோப்பிய யூனியன் என்று ஒத்து கொள்கிறேன் என்றும் சொல்லி விட்டேன். திரும்பி திரும்பி அன்கே வந்தால் என்ன செய்வது?
அந்த பதிவில் கூறியிருப்பது தற்போது ஐரோப்பிய வங்கிகள் எவ்வாறு அயர்லாந்தை சுரண்டின என்பது பற்றி தான். அவர்கள் அய்ரோப்பிய யூனியன் மூலம் அதை செய்தார்களா? அல்லது வேறு முறையில் செய்தார்களா என்பது பற்றி ஆராய்வது அந்த பதிவின் நோக்கம் இல்லை
சதுக்க பூதம்,
ஆஸ்டிரிய பொருளாதார கொள்கைகளை அப்படியே தாங்கி பிடிப்பதாக எப்படி சொல்கிறீர்.
fractional reserve banking systemஅய் ஒழித்துவிட்டு 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முறைக்கு செல்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதால் யாரும் அதை சீரியசாக இன்று முன் மொழிவதில்லை. முதல்ல அத்தனை டிரில்லியன் டாலர் மதிப்புக்கான தங்கத்திற்கு எங்கே போவது. மேலும் the banking and financial system have become too large, complex and interwoven with govt finances world wide. It is impossible to go back to the simple and older method. நானும் முன்பு அப்படி தான் கருதி, இந்த ஆங்கில பதிவை எழுதினேன் :
The problem is under regulation of the so called shadow banks, which are not controlled effectively. Basel # norms for banks are good enough. but the shadow banking sector is out of its net. It is a more complex issue
நான் முன்பு எழுதிய ஆங்கில பதிவு :
http://athiyaman.blogspot.com/2008/10/where-did-all-this-money-come-from.html
மேலும் :
http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html
http://athiyaman.blogspot.com/2008/10/who-murdered-financial-system.html
ஆனால் fractional reserve banking அய் ஒழிப்பது இன்று நடை முறையில் சாத்தியம் இல்லை. fiat money of govtsஅய்யும் ஒழிக்க முடியாது. வளரும் economyயில் போதுமான பணத்தை தொடர்ந்து அச்சடிக்காவிட்டால், deflation உருவாகிவிடும். சரியான அளவில், inflation targeting முறையில் பணத்தை அச்சடிக்க வேண்டும். ஆனால் அரசுகள் பொதுவாக அதை விட மிக மிக அதிகம் அச்சடித்து அல்லது கடன் வாங்கி செலவு செய்கின்றன. இதை பற்றி பேசவே மாட்டேன் என்கிறீர்கள். ஃபெட்டின் வட்டி விகுதங்கள் தான் மிக மிக மிக முக்கியம் என்று ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். அதை பற்றி இத்தனை சுட்டிகள், விவாதங்கள். அதை நிர்ணியத்த open market operations committe மற்றும் அன்று கீரின்ஸ்பேனின் உள்னோக்கங்கள் பற்றி யாரும் உங்களை போல் சதி என்று குற்றம் சாட்டுவதில்லை என்று ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். ஃபெட் தனியார் வங்களுக்கு அளித்த கடன் விசியங்களில் தான் இந்த cartel theory உள்ளது. ஆனால் அதை விட முக்கியம் வட்டி விகுதங்கள். இதுவரை அதை பற்றி ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல், திரும்ப திரும்ப சதி பற்றி மட்டும் பேசுகிறீர்.
அரசு வாங்கும் கடன்களின் நிகர விளைவுகளை பற்றி பேச மாட்டேன் என்கிறீர்கள். அதுதான் எல்லாவற்றையும் விட மிக மிக மிக அடிப்படையான, முக்கியமான அம்சம். அதன் விளைவுகளை பற்றி தான் ஆய்ட்ரியன்ஸ்களும், லிபர்ட்டேரியன்களுன் தொடர்ந்து பேசுகிறார்கள். ரான் பால் அதை தான் மிக மிக முக்கியமாக தாக்குகிறார். ஆனால் நீங்க அதை பற்றி பேசமாட்டீர்கள். தனியார் வங்களின் சதி தான் இத்தனைக்கும் காரணம் என்பீர்.
கேட்டோ இன்ஸ்டியுட் எழுதிய மிக முக்கிய கட்டுரை இது :
http://www.cato.org/pub_display.php?pub_id=11916
Financial Reform Bill Won’t Stop Next Crisis
Nowhere in the final bill will you see even a pretense of rolling back the endless federal incentives and mandates to extend credit, particularly mortgages, to those who cannot afford to pay their loans back. After all, the popular narrative insists that Wall Street fat cats must be to blame for the credit crisis. Despite the recognition that mortgages were offered to unqualified individuals and families, banks will still be required under the Dodd-Frank bill to meet government-imposed lending quotas.
While apologists for government-mandated lending are correct in pointing out that much of the worst lending was originated by state-chartered lenders, such as Countrywide, and not federally chartered banks, they either miss or purposely ignore the truth that these non-bank lenders were selling the bulk of their loans to Fannie Mae, Freddie Mac, or the government corporation Ginnie Mae. About 90 percent of loans originated by Countrywide, the largest subprime lender, were either sold to Fannie Mae or backed by Ginnie Mae. Subprime lenders were so intertwined with Fannie and Freddie that Countrywide alone constituted over 25 percent of Fannie’s purchases.
While one can debate the motivations behind Fannie and Freddie’s support for the subprime market, one thing should be clear: Had Fannie and Freddie not been there to buy these loans, most of them would never have been made. And had the taxpayer not been standing behind Fannie and Freddie, they would have been unable to fund such large purchases of subprime mortgages. Yet rather than fix the endless bailout that Fannie and Freddie have become, Congress believes it is more important to expand federal regulation and litigation to lenders that had nothing to do with the crisis.
The legislation’s worst oversight is to ignore completely the role of loose monetary policy in driving the housing bubble. A bubble of such historic magnitude as the one we went through can only occur in an environment of extremely cheap and plentiful credit. The ultimate provider and price-setter of that credit was the Federal Reserve. Could anyone truly have believed that more than three years of a negative real federal-funds rate — where one is essentially being paid to borrow — would not end in tears?
As the Federal Reserve’s monetary policy is largely aimed at short-term borrowing, the Fed also drove the spread between short- and long-term borrowing to historic heights. This created irresistible incentives for households and companies to borrow short — sometimes as short as overnight — and lend long. Many households chose adjustable-rate mortgages that would later reset as interest rates rose, increasing monthly payments. For banks, this spread provided an opportunity for handsome profits by simply speculating on the yield curve.
Avoiding the issue of loose monetary policy may well be the result of Congress’s possessing almost no understanding of it. The first obvious step toward building such an understanding would be to have the GAO audit the Fed’s monetary policy. Yet Congress continues to ban the GAO from examining the issue. It is as if Congress does not even want to understand the causes of the crisis.
Nor has there been any discussion in Congress about removing the tax preferences for debt. Washington subsidizes debt, taxes equity, and then acts surprised when everyone becomes extremely leveraged.
Until Washington takes a long, deep look at its own role in causing the financial crisis, we will have little hope for avoiding another one. And the Dodd-Frank legislation, sure to be heralded as strong medicine for perfidious financiers, is actually not even a modest step in the right direction.
இதற்க்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்
சோவியத் ரஸ்ஸியாவில், ‘சோசியலிச இந்தியாவில்’ இதே fractional reserve banking system தான் இருந்தது. இன்றும் உள்ளது. நீங்கள் சொல்லும் மாற்று அமைப்புகளுக்குள்ளும் இதே தான் தொடரும். வேறு வழி இல்லை. அதை கட்டுபடுத்தி, நெறிபடுத்துவதுதான் முக்கியம்.
//எம்மை ஆபாச பதிவர் என்று நீர் மட்டும் தான் சொல்கிறீர். வேறு யாரும் அப்படி உளருவதில்லை//
நீங்கள் தான் ஆபாச பின்னூட்டம் இட்டுள்ளதாக கூறியிள்ளீர்கள். அப்படி என்றால் நீங்களும் உளரி உள்ளதாக தானே அர்த்தம்
சுகாதாரத் துறை துணை இயக்குநர் – நீங்கள் டாக்டர் சுப்பாராம் MD அவர்களை பற்றி தான் சொல்கிறீர்கள் என்று நினிக்கிறேன். அவர் தூத்துக்குடியில் TB இயக்குனராக பணி செய்து கொண்டு இருந்தார். திருநெல்வேலியில் குடி இருந்தார். அவர் மனைவி நெல்லை பொறியியல் கல்லூரி ஆசிரியர். சுப்பாராம் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் சென்று வந்தார். தனது சொந்த நலனுக்க அரசு வாகனத்தை பயன் படுத்த மாட்டார். அதன் பின் சுப்புராம் இணை இயக்குனராக பதவி யுயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி வருகிறார். தமிழகம் முழுவதும் 130 லேப் assistant வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பொழுது, மதுரை, நாகர்கோயிலில் வசூல் செய்த பணத்தை கொண்டு வந்த மற்ற துணை இயக்குனர்கள் கன்னியாகுமரி ரயிலில் தாம்பரம் அருகே பிடி படுகிறார்கள். அவர்கள் கொண்டு சென்றது மினிஸ்டர் “பன்னி செல்வம் “. அனால் மாட்டி விட்டது சுப்பராமை. சுப்புராம் தனியாக DMS quarters ல தனியாக தங்கி இருந்தார். அவர் வீட்டில் இருந்த மாத சம்பளம் கவர்கள் கைப்பற்ற பட்டன. யாராவது லஞ்சமாக வசூல் செய்த பணத்தை ஆபீஸ் quarters ல வச்சி இருப்பாங்களா ?? சுப்பாராம் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சவுக்கு இந்த வழக்கு பற்றிய விவரம் தெரிந்தால் தெரியபடுத்தவும். இப்படிக்கு சவுக்கின் நெல்லை வாசகன்.
/// பல கோடி குளக்குகளை நாடு கடத்தி, அழித்து ஏற்பட்டது. ///
பல கோடி மக்களை கொன்றார். பல கோடி குளாக்குகளை நாடுகடத்தினார். பலகோடி மக்களை சிறையிலடைத்தார். இது போக எஞ்சியிருந்தவர்கள் போல்ஷ்விக் கட்சியினர் மட்டும்தான் போலும். இதுவும் கூட நல்ல நகைச்சுவைதான்.
ஸ்டாலின் காலத்திய சோவியத் 100% ற்கும் மேலான வளர்ச்சியைக் கண்டுள்ளது, என்பதனை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நன்றி. அது பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல இருப்பிடம், கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அத்தியாவசியத் துறையிலும் கூட சிறப்பாக சேவையை செய்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. இப்போது உங்களது வாதத்திற்கு வருவோம் இந்த வளர்ச்சியெல்லாம் பல கோடி குலாக்குகளை நாடு கடத்தி பெற்றதாக நீங்கள் கூறுகிறீர்கள். சரி லிபட்டேரியன், நீங்கள் கூறுவது உண்மையானது என்று வைத்துக்கொண்டாலும்கூட, ஸ்டாலின் காலத்திய சோவியத் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியினை பெற்றுக்கொண்டிருக்கும்போது ஏன் இந்த குலாக்குகளை நாடு கடத்தப்பட வேண்டும்? வளர்ச்சி தேவையில்லை என்று முரண்பட்டனரா? வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனரா?
//ஆம். வளர்ச்சி ஏற்பட்டது தான். but at what cost ? பல கோடி குளக்குகளை நாடு கடத்தி, அழித்து ஏற்பட்டது.//
சோசலிசத்துனால ஏற்படலையா? நான் கூட ரொம்ப நாளா தப்பால்ல நினைச்சுட்டு இருந்தேன். இதே மாதிரி பல கோடி மக்களை அழித்து, கடத்தியும் இந்தியா மட்டும ஏண்ணே வளரவேயில்ல?
லிபரடேரியன் ,
//ஆம். வளர்ச்சி ஏற்பட்டது தான். but at what cost ? பல கோடி குளக்குகளை நாடு கடத்தி, அழித்து ஏற்பட்டது.//
உங்கள் கருத்து படி சோவியத், சோசியலிச ஸ்டாலின் காலத்தில் தொழிற்துறை பல் மடங்கு வளர்ச்சி ஏற்பட்டது. அதற்கு காரணம் அந்நாட்டில் top 5% இருந்த சுரண்டல் கும்பலை நாடு கடத்தியது தான் என்கிறீர்கள். அதாவது சோவியத்தின் வளர்ச்சிக்கு ஸ்டாலினின் காலம் முன் வரை தடையாக இருந்தது அந்த சுரண்டல் முதலாளி குலாகுகள் என்றும் அவர்களை நாடு கடத்தியதாலும், சோசியலிசத்தாலும் ரஷ்யா அபார வளர்ச்சி அடைந்தது என்கிறீர்கள்.
ஸ்டாலினின் கொள்கைக்கான எதிரிகளுக்கு சரியான சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்.
எனவே நீங்கள் தீவிர ஸ்டாலினிச மார்க்சியவாதியாக இருக்கிறீர்கள். மன்னிக்கவும் உங்களை சோசியலிசத்துக்கு எதிரான லிபரடேரியன் என்று தவறாக நினைத்து விட்டேன்.
//அதற்கு காரணம் அந்நாட்டில் top 5% இருந்த சுரண்டல் கும்பலை நாடு கடத்தியது தான் என்கிறீர்கள். அதாவது சோவியத்தின் வளர்ச்சிக்கு ஸ்டாலினின் காலம் முன் வரை தடையாக இருந்தது அந்த சுரண்டல் முதலாளி குலாகுகள் என்றும் அவர்களை நாடு கடத்தியதாலும், சோசியலிசத்தாலும் ரஷ்யா அபார வளர்ச்சி அடைந்தது என்கிறீர்கள்.
ஸ்டாலினின் கொள்கைக்கான எதிரிகளுக்கு சரியான சாட்டையடி கொடுத்துள்ளீர்கள். ///
ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா ? 1917இல் ரஸ்ஸிய மிகவும் பின் தங்கியா நாடாக இருந்தது. industrialisation மிக மிக குறைவு. சோவிய்த் அய்ந்தந்து திட்டங்கள் ஏறக்குறைய zero levelஇல் இருந்து துவங்கியதால், வள்ர்சி பெரிய அளவில் உள்ளது போல் புள்ளிவிவரம் சொல்லும். ஆனால் 1930களில் விவசாயத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. உக்கேரேன் பெரும் பஞ்சம் பல ல்ச்சம் பேர்களை கொன்றது. (இந்த பஞ்சம் இயற்க்கை காரணிகளால் தான் உருவானது, ஸ்டாலின் எந்த தவறும் செய்யவில்லை என்பதே தோழர்களின் கோணம்.) இயற்கை காரணிகளும் உண்டு. ஸ்டாலின்ஸ்டுகள் செய்த மடத்தனங்களும் உண்டு. லெனின், புகாரின் போன்றவர்கள் படிப்படியாக collectivisation செய்யலாம். திடீரென forced collectivisation செய்தால், விவசாய உற்பத்தி பாதிக்கும் என்று கருதி, Lenin’s New Economic Policy 1927வரை நீடித்தது. ஆனால் ஸ்டாலின் அதை 1927க்கு பின் நீட்டிக்க மறுத்து, forced collectivisation in brutal manner செய்தார். பல மில்லியன் குளக்குகள் வதை முகாம்களுக்கு, கொல்லப்பட்டனர். உடனடியாக விவசாய உற்பத்தி குறைய ஆரமித்தது. உக்ரேனில் பெரும் பஞ்சம் உருவானது. பஞ்சம் இருக்கும் உக்கேரினில் இருண்டு கோதுமை தான்யம் கட்டாயமாக பறிமுதல் செய்யப்பட்டு சோவியத் ரஸ்ஸியாவின் இதர பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. அன்னிய செலவாணிக்காக ஏற்மதியும் செய்த கொடுமை நிகழ்ந்தது. இதன் நிகர விளைவு : ஹொலொடமர் என்பபடும் பெரும் பஞ்சம் மற்றும் பேரழிவு. பார்க்கவும் :
http://en.wikipedia.org/wiki/Holodomor http://en.wikipedia.org/wiki/Causes_of_the_Holodomor
இன்றும் இதை மறக்க மன்னிக்க உக்ரேனியர்கள் தயாராக இல்லை.
இதெல்லாம் செய்யமலேயே, அன்றைய மே.அய்ரோப்பா நன்றாக வளர்ந்து, industrialise ஆனது. பல நாடுகள் ஜனனாயக முறையில், சந்தை பொருளாதார அடிப்படையில் வளந்தன. தொழில் துறை ஸ்டாலின் காலத்தில் வளர்ந்தது உண்மைதான். ஆனால் விவசாயத்தை அழித்து, பல மில்லியன் மக்களை கொன்று அதை செய்தனர். நீர் அங்கு பிறந்திருக்க வேண்டும். குளக்குகள் என்றால் 5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருந்தவர்கள் என்றே definition. அங்கு நீர் பிறந்திருந்தால், உமது குடும்பமே வதை முகாம்களில் அழிந்திருக்கும். அப்ப தான் புரியும். genocide என்று இதை சொல்ல வேண்டும் என்று இன்றும் உக்ரேனியர்கள் சொல்கிறார்கள். அவர் எல்லோரும் திரிபுவாதிகளோ அல்லது முடர்களோ அல்ல. தம் நாட்டின் வரலாற்றை தெரிந்தவர்கள்.
மேற்கொண்டு இதை பற்றி தெரிய, உக்ரேனிய நாட்டின் சுட்டிகள் நிறைய உள்ளன. வினவு தோழர்கள் இவை எல்லாம் அமெரிக்க சதி என்று ஒற்றை வரியில் நிராகரிப்பார்கள். ஆனால் மார்க்ஸியத்தை நம்பும் பெரும் பாலானான ஆய்வளர்கள் அப்படி deny செய்வதில்லை. மெய் பொருள் காண்பதறிவு.
சரி, நீர் கம்யூனிசத்தை முழுசா ஆதரிப்பவரா என்ன ?
பல முக்கிய விசியங்கள் பற்றி கடைசியாக நான் எழுதிய பின்னுட்டங்கள் ஒன்றுக்கும் பதில் சொல்ல முடியாமல், இதை பற்றி மட்டும் பேசுகிறீர். ஏன் ?
//கூபா, வியட்நாம் போன்ற சோசியலிச நாடுகளை தேர்வு செய்யவில்லை //
1990க்கு முன்னாடி இருந்த சோசலிச இந்தியா மாதிரியா? அதியமானோட காமெடிக்கு அளவேயில்லாம போயிட்டு இருக்கு.
//நான் சொன்னது இந்தியாவில் இருந்த ‘ஜனனாயக சோசியலிச’ பாணி. சோவியத் ரஸ்ஸியாவில் இருந்தது வேறு வகை சோசியலிசம். ’கம்யூனிச’ சோசியலிசம் என்றும் சொல்லலாம்.//
அதியமான் சோசலிசத்தை விட்டு விட்டீர்கள். முதலாளித்துவத்தின் கேடுகளுக்கு எல்லாம் பலி போட அ. ராசா மாதிரி இவர்கள் உருவாக்கியுள்ளதுதான் அதியமான் சோசலிசம். இந்தியா, வியட்நாம், கூபா எதை வேண்டுமானாலும் அதியமான் சோசலிசத்தில் அடக்கிவிடலாம்.
//தமிழமணம் எம்மை சில மாதங்களுக்கு முன்பு நட்சித்த்ர வார பதிவுகளை எழுத அழைத்தது. பல காரணங்களுக்காக செய்ய முடியாததால்,//
நலல்வேள எழுதல…
//
எதிர்காலத்தில் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டேன்.//
திரும்பயம் முதல்ல இருந்தா….. அவ்வ்வ்…….
//தனக்கு அடைக்கலம் அளித்து, நல்ல வாழ்க்கை, வேலை வாய்பளித்த ஒரு அமைப்பின் அருமையை புரிந்து கொள்ளாமல், அவர்களை கொள்ளைகாரர்கள் என்று ஏசுவது நன்றி கெட்டதனம் அல்லது போலித்தனம். //
முதலாளி முதலாளியாய் இருப்பதே தொழிலாளியின் நலனுக்காகத்தான். மக்கள் மீது என்னே ஒரு பாசம் இவர்களுக்கு.
அய்யகோ இது புரியாமல் ஆடுகள் ஓநாயை ஏசுகின்றனவே? கோழிகள் கோயில் பூசாரியை திட்டுகின்றனவே? ஒரிரு கோழிகள் கடவுளுக்கும், ஒரு சில ஆடுகள் ஓநாய்களுக்கும் பலியிடப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது. அப்படி கொடுத்தால்தான் உயிரோடு இருக்கிற ஆடுகள், கோழிகளுக்கு நல்ல புஷ்டியான உணவு கிடைக்கும் என்று தத்துவம் சொல்கிறார் முதலாளித்துவ பூசாரி அதியமான்.
அய்யா அதியமான் அவர்களே, உங்களது இந்த தத்துவ விளக்கத்தை ஆடு, கோழிகளே ஏற்றுக் கொள்ளாது. மனிதர்களிடம் சொன்னால் வாயால் சிரிக்க மாட்டார்கள்.
////தனக்கு அடைக்கலம் அளித்து, நல்ல வாழ்க்கை, வேலை வாய்பளித்த ஒரு அமைப்பின் அருமையை புரிந்து கொள்ளாமல், அவர்களை கொள்ளைகாரர்கள் என்று ஏசுவது நன்றி கெட்டதனம் அல்லது போலித்தனம். ////
இன்னொரு பொழிப்புரை:
பிச்சைக்காரன் பிச்சைக்காரனா இருந்தாத்தானே வள்ளல் உயிர்வாழ முடியும்? வள்ளல்தனம் பெருமை பேச முடியும்? இதைக் கண்டுபிடிப்பவனை நன்றிக் கெட்டவன் என்று ஆண்டைத்தனமாக திட்டவும் முடியும்?
நல்ல வாழ்க்கை, அடைக்கலம், வேலை வாய்ப்பு இவையெல்லாம் எவனோ அளிக்கும் பிச்சை என்று சொல்கிறார் அதியமான். சமூக செல்வத்தின் ஒட்டு மொத்த சராசரி என்ற அளவுகோல் கொண்டு அளந்தால் ‘நல்ல வாழ்க்கை’ என்பது என்னவென்று தெரியும், அதியமானின் நிலபிரபுத்துவ புனித புலம்பல்களுக்குப் பின் உள்ள மோசடி புரியும்.
அய்யா ஆதியமான் அவர்களே, நீங்க கஸ்டப்பட்டு பிச்சை போடும் கடமையைச் செய்யவும் வேண்டாம், எங்களிடம் திட்டு வாங்கவும் வேண்டாம். உங்க உழைப்புக்கான பங்குஎன்னவோ அத மட்டும் கேட்டு வாங்கிட்டு போங்க (கொஞ்சம் கூட வேணும்னாலும் போட்டுத் தறோம்). இந்த டீலுக்கு ஒத்துக்கிறீங்களா?
1990 ற்குப் பிறகு ரஷ்யா முழுவதும் முதலாளித்துவ பாதைக்குத் திரும்பிய 20 ஆண்டுகளில் மக்களின் நிலை பிச்சை எடுக்கும் நிலைக்குப் போக பிரதமர் புதினோ 3 ஆயிரம் கோடி செலவில் கருங்கடல் பகுதியில் ஆடம்பர மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறாராம். ஒருவேளை இதைத்தான் முன்னேற்றம் என்று சொல்ல வேண்டுமோ!
இருக்கலாம். கிளேடியேட்டரை பார்த்து வளர்ந்த வர்க்கம் வேறெப்படி இருக்கும்.
கிள்ளி வளவன்,
இந்தியாவில் 1990 வரை இருந்தது சோஷலிஸம் என்போரும் இன்று மியான்மார் எனப்படும் பர்மாவின் சர்வாதிகார ஆடசியை சோஷலிஸம் என்போரும் இலங்கையில் பண்டாரநாயக்களின் ஆடசியை சோஷலிஸம் என்போரும் அறியாமையினால் அவ்வாறு சொல்லவில்லை.
தேசியமயமாக்கம் தன்னளவில் சோஷலிஸமாகாது என அறியாமையினால் அவர்கள் சொல்லவில்லை.
ஐரோப்பிய முதலாளியச் சீதிருத்தவாதிகளை எவரும் சோஷலிஸவாதிகள் என்று அறியாமையினாற் சொல்லவில்லை.
சில பொய்கள் அவர்கட்கு மிகவுந் தேவையானவை.
அவை அவர்கள் பிடித்த மூன்று கால் முயல்கள்.
அவை அவர்களது பலவீனமான வாதங்களை விழுந்து மடியாமற் காக்கும் அருமருந்துகள்.
அவர்களுக்கு என்ன சொல்லப் பார்க்கிறீர்கள்?
ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை!தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!
அன்றாடம் பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 1,76,000கோடியை அடைக்கப்போவது நாம் தான். டாடா, அம்பானி, மித்தலின் சொத்து மதிப்பை உயர்த்தப் போகிறவர்களும் நாம் தான். அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததற்காகத்தான் அமைச்சர் ராசா வுக்கு இலஞ்சம்.
http://vrinternationalists.wordpress.com/2011/02/08/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/
இலஞ்சமும் ஊழலிம் முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு மட்டும் தான் அது பாதகமாக இருக்கிறது. இரண்டு ரூபாய் இலஞ்சம் கொடுத்தால் பத்து ரூபாய் எடுத்து விடுவார்கள் முதலாளிகள். பன்னிரெண்டு ரூபாயையும் மறைமுக வரியாகவும், விலைவாசி உயர்வாகவும் தங்கள் தலையில் சுமப்பவர்கள் மக்கள் தான்.