உழைக்கும் மகளிர் தின சிறப்புப் பதிவு – 2
தாய்லாந்து நாட்டு பெண்களின் அழகும் அறிவும் உலகம் முழுதுமே அறிந்த விடயம்.. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சிகரமாகவும் , வீரமுள்ள அதே சமயத்தில் மிக்க மென்மையானவர்களாகவுமே காணப்படுவார்கள்… கவர்ச்சியான பெண்கள் மட்டுமல்ல , அதீத பெண்மைத்தனமும் நிறைந்தவர்கள்.. அதிகமான வெட்கம் எப்போதும் இருக்கும் முகத்தில்.. சின்ன பேச்சோ , முக வாடுதலோ கூட அடுத்தவரை காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் மிக கவனமாயிருப்பார்கள்.. என் கஷ்டம் எனக்கு .. அதை நாந்தான் பார்த்துக்கொள்ளணும்.. உன்மேல் சுமத்தமாட்டேன்.. வெளிப்படுத்த கூட மாட்டேன்.. அதற்கு பதில் புன்னகைப்பேன்.. உன்னையும் புன்னகை செய்ய வைப்பேன்.. அப்படியே இந்த தொற்று ( வெட்கமும் , சிரிப்பும் ) நாடு முழுதுமே நாம் பார்க்கலாம்..
அதீத பெண்மைத்தனம் என ஏன் சொல்லப்படுகிறார்கள் என்றால் மிக மென்மையான , மிருதுவான தோலும், மிக அழகிய , பட்டுப்போன்ற கருங்கூந்தலும் உடையவர்களாம்..ஆனால் பெண்மைக்கு இலக்கணமாய் இவற்றை சொன்னாலும் , வீரத்தில் எள்ளளவும் குறைந்தவர்களில்லை.. வீரம் காட்டும் விதமே வித்யாசமாயும்.. கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்களாகவும் இருக்கிறார்கள்..
தான் எதிர்பார்க்கும் மரியாதையை அடுத்தவருக்கு முந்திக்கொண்டு தருவதாலேயேயும் , முகம் சுழிக்க வேண்டிய விசயத்தையும் , அன்போடு எடுத்தாழும் வித்தையையும் உலகம் முழுதும் திரும்பிப்பார்க்க செய்த விசேட குணங்கள்.. எச்சூழலிலும் அனுசரித்தும் போகக்கூடியவர்கள்.. அதீத பொறுமையுமுண்டு.. இவையெல்லாவற்றும் அடிப்படை அமைத்ததில் புத்த மதக் கொள்கைக்கும் பெரும் பங்குண்டு..
அவர்களது நளினங்களை அவர்களின் நடன அசைவுகளிலேயும் காணலாம்..அறுபது வயதிலும் 20 வயதினரைப்போல துடிப்போடு இருக்க ஆசைப்படுவார்கள்.. சோம்பி இருந்து பார்க்க முடியாது..
சரி இப்போது முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.. அவர்கள் குடும்ப அமைப்பு, பெண்ணுரிமை பற்றி..
____________________________________________
பெண்ணுரிமைக்கான அனுமதி 2004-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக வந்தாலும் , ஏற்கனவே பெண்கள் பங்கு சிறப்பாகவே இருந்து வந்துள்ளதால் அது குறித்து யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டால், இல்லறம், குழந்தை வளர்ப்பில் மிகுந்த ஆர்வத்தோடும், பெருமையோடும் ஈடுபடுவார்கள்..கணவருக்கு மிக உறுதுணையாகவும் இருப்பார்கள்..
இங்கே பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்தே ஆண் மணமுடிக்கணும்.. அனேகர் படித்து நல்ல பெரிய வேலைகளுக்கு செலவதால் 3 மாதத்தில் குழந்தையை பெற்றோரிடமோ, பாதுகாப்பு இல்லங்களிலோ விட்டுவிட்டு வேலைக்கு செல்கின்றனர்.. குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த ஒழுக்கத்தோடும் , நன்னெறிகளோடும், மரியாதையோடும் சிறார்கள் வளர்க்கப்படுகின்றனர்..
ஒரு பொருளை வாங்குமுன்பே இருகரம் கூப்பி , ஒரு கால் முட்டியை மடக்கி (தாழ்ச்சியாக) நன்றி என சொல்லிவிட்டே வாங்குவார்கள்..
ஒரு முக்கியமான நற்பண்பு கருணை.. தன்னைவிட தன் குடும்பத்தார்க்கும் , உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்..அதுவே ஒரு இன்பமயமான அன்புச்சூழலை உருவாக்கிவிடும்.. ஒருவருக்கொருவர் அன்போடு கிண்டலடித்துக் கொண்டும் , பகிர்ந்து கொண்டும்..
வாழ்க்கையை எளிதாக அதன் போக்கில் வாழ கற்றுக் கொண்டவர்கள்..இதனால் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாமல் மனது எப்பவும் லேசாக இருக்கிறது அவர்களுக்கு ..
கீழ் தட்டு பெண்கள் உணவுக் கடை , சிகை அலங்காரம், மற்ற பொருட்கள் விற்கும் கடைகளை வைத்து பிழைப்பது எளிதாக உள்ளது..ஆண்கள் பலர் குடி மற்றும் பல பழக்கங்களுக்கு ஆளாவதால் குழந்தை வளர்க்கும் பொறுப்பு குறித்து நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.. விவாகரத்தானாலும் தனியே இருந்து துணிவா வாழக்கூடிய சமூக அமைப்பும் சிறப்பாகவே இருக்கிறது..
அனேக குடும்பங்களில் பெண்களே தலைமை தாங்குகின்றார்கள்.. அவர்கள் செய்ய முடியாத வேலை எதுவுமில்லை என்பதுபோல ஆணுக்கு இணையாக மிகப்பெரிய கண்டெய்னர் ஓட்டும் பெண்களும், குத்துச்சண்டை வீராங்கனைகளும், மார்க்கெட்டுகளில் மிகப்பெரிய மூடைகளை அலேக்காக துக்கி வேலை செய்யும் பெண்களையும் சாதாரணமாகக் காணலாம்.. கணவன் விட்டு சென்றானே என உட்கார்ந்து வருந்துவதெல்லாம் இல்லை.. பெண்கள் காவல்துறையிலும் , அரசியலிலும் , ராணுவத்திலும் கூட பங்கெடுக்கிறார்கள்..
நம்ம நாட்டு காந்தி சொன்னது இங்கேதான் நான் பார்க்கிறேன்.. எந்த நேரத்திலும் நள்ளிரவிலும் ஒரு பெண் தனியாக வேலைக்கு சென்று வர முடிகிறது.. பெண்களை மதிக்கிறார்கள்.. தாய்லாந்து என்றாலே பாலியல் தொழில் என அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மிக வேதனை அடைகிறார்கள் கடினமாய் உழைக்கும் மற்ற பெண்மணிகள்.. அத்தகைய தொழிலில் ஈடுபடுவது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.. இருப்பினும் இவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டும் இருக்கிறது.. சட்டப்படி அங்கீகரிக்கப்படாத தொழில் தான் இன்னமும்..
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என்றாலும் கத்தி கோபப்பட்டு பொருட்களை உடைப்பதெல்லாம் மிக அநாகரீகமான செயல்.. கோபப்பட்டு பார்ப்பது அரிது.. கோபம் என்றால் அமைதியாக தவிர்த்திடுவார்கள் அச்சூழலையே.. ஏமாற்றங்களை ஏற்க பழகியதால் மனவளர்ச்சியற்ற குழந்தைகளையும் பொறுமையாக மிகுந்த அன்போடு சமூகமே ஊக்கத்தோடு வளர்க்கின்றது.. அதுமட்டுமல்ல திருநங்கைகளுக்கும் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்து தந்து அவர்களை தலை நிமிரச்செய்துள்ளது.. அவர்கள் மக்களோடு மக்களாக.. யாரும் வித்யாசமாய் பார்ப்பது கூட இல்லை..இது நாம் கற்கவேண்டிய முக்கியமானது..
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போதும் அந்த சத்தம் கூட அடுத்தவருக்கு தொந்தரவாய் இருந்திடக்கூடாதென்பதற்காக ரகசியம் பேசுவது போன்ற ஒலியில் பேசுவதை கேட்பது ஆச்சரியமாக இருக்கும்.. பேருந்திலோ,போக்குவரத்து நெரிசலிலோ , வங்கியிலோ அதிக நேரம் காத்திருக்கணும் என்றாலும் , அமைதியாக முணுமுணுக்காமல் பொறுமையா காத்திருப்பார்கள்.. அதிலும் குழந்தைகள் , கர்ப்பிணி, வயோதிகருக்கு முன்னுரிமை கொடுக்கவும் உதவவும் முன்வருவார்கள்.. இதற்காக சிறு வயதிலேயே பழக்கப்படுத்தப்படுகிறார்கள்..
மேலும் சுத்தத்துக்கு முன்னுரிமை தருவார்கள்.. பொருட்களை சிறப்பாக அடுக்கவும் இடங்களை அழகாக அலங்கரிக்கவும் தெரிந்தவர்கள்..எந்த வேலை செய்தாலும் அதிலொரு அழகு மிளிரும்.. முழுமை இருக்கும்.. மொத்தத்தில் அமைதி விரும்புவதால் தானும் அமைதியான சூழலை உருவாக்க பங்கெடுக்கணும் என்பதில் ஆரம்பிக்குது அந்த பொதுநலம் , ஒருவருக்கொருவர் உதவுவது..
ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் அருமையா இருக்கும்.. சாதம் மட்டும் தனித்தனியே வைத்துக்கொண்டு கூட்டு குழம்புகளை முதலில் அடுத்தவருக்கு ( அருகிலிருப்பவருக்கு ) பறிமாறிவிட்டே அவர்கள் உண்ணுவார்கள்..இவை தாண்டி இன்னும் சில கலாச்சார பழக்கவழக்கம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது.. அவை என்னவென்று பார்ப்போம்.
பெண் புகைபிடிப்பதோ குடிப்பதோ மிக அவமானமாக கருதும் அதே நேரத்தில் ஆணுக்கு அனுமதிக்கப்படுகிறது. விவாகரத்து கூட பெண்கள் முன்பெல்லாம் சமர்ப்பிக்க முடியாது.. கணவன் மீது உறுதியான குற்றச்சாட்டும், அவன் தன் சம்பாத்யத்தை வேறோருவருக்கு தருவதாக நிரூபணம் ஆனால் மட்டுமே.. ஆனால் ஒரு ஆணால் எளிதாக விவாகரத்து பெற முடியுதாம்.. இப்போது மாற்றம் கொண்டுவர முயல்கிறார்கள்..
” ஆண் யானையின் முன்னங்கால். பெண் பின்னங்கால் ” என ஒரு பழமொழி சொல்கிறார்கள் இப்படி அர்த்தம் வரும்படி.. அதாவது ஆணே முதன்மை என .. ஆனால் நிதர்சனத்தில் பெண்ணே நிர்வகிப்பதாய் பார்க்க முடிகிறது..கொஞ்சம் வசதியான வீட்டுப்பெண்கள் திருமணத்தை கூட ஒரு சிறை என்ற நோக்கில் பார்ப்பதால் அவர்கள் திருமணத்தை விரும்புவதில்லை.. பணம் இருக்கையில் கணவன் எதற்கு என்ற மனப்பான்மை பெண்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது .. அது பெண்ணுக்கு லாபமாக இருக்குதோ இல்லையோ, ஆணுக்கும் சமூகத்துக்கும் ஒரு ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது.. அதனால் திருமணம், குழந்தை பெறுவதையும் அரசு ஊக்குவிக்கின்றது..
கண்ணியமாக உடை உடுத்த பள்ளி கல்லூரிகளில் வலியுறுத்தப்படுகிறார்கள்..அனேக தாய் பெண்கள் வெளி நாடுகளுக்கு படிக்கவும் வேலைக்கு செல்லவும் தயங்குவதில்லை.. ஆக அங்கே இருந்து திரும்பினாலும் சொந்த நாட்டில் பாரம்பரிய கலாச்சாரத்தை விட்டுத் தருவதில்லை.. சீன வம்சா வழியினர் பலர் தாய்க்காரர் ஆனதாலோ என்னமோ , முதல் குழந்தை ஆணாக இருந்தால் நல்லது என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.. ஆனாலும் பெண் குழந்தை பிறந்தால் வருந்துவதெல்லாம் இல்லை.. கொண்டாடப்படுகிறார்கள்..
அனேக பெண்கள் படித்து நல்ல வேலையிலிருந்தாலும், தம் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தால் சீரழிக்கப்படுகிறது என்பதில் வருத்தப்படுகிறார்கள்..
_________________________________________________
தாய்லாந்து பெண்மணி பென்னி ( வயது 38 ) சொல்கிறார் ,
” எனக்கு 23 வயதாகும் போது ஆண் தோழன் கிடைத்தார். பின் 3 வருடம் காதலித்தோம். அப்பதான் என் அம்மாவுக்கு கான்சர் நோய் தாக்கியது தெரிந்தது.. சிகிச்சை எடுத்து எல்லாவற்றையும் நான் கவனிக்கவேண்டிய சூழல்.. நான் மூத்த பெண்.. இரண்டு தங்கை , ஒரு தம்பி.. அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்..அப்பா கடை வைத்திருக்கார்.. வருமானத்துக்கு குறைவில்லை என்றாலும் மருத்துவ செலவு , படிப்பு செலவுக்கு சரியா இருந்தது.. நான் உதவ வேண்டிய கட்டாயம்.. அந்த நேரம் என் காதலர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்.. என் நிலைமையில் அம்மாவுக்கு சரியாகும் வரை திருமணம் பற்றி எண்ணி பார்க்கவே முடியவில்லை.. பாவம் காத்திருந்து விட்டு வேறொரு பெண்ணை மணமுடித்தார்.. இப்பவும் எனக்கு நல்ல நண்பன் அவன்..”.
அதன் பின் அவர் அம்மா மரணமடைந்ததும் , அப்பா இரண்டாம் தரமாக ஒரு ஏழைப்பெண்ணை ( அவள் குழந்தையோடு ) திருமணம் செய்து கொண்டாராம்.. அந்த சிற்றன்னை இவளிடம் மிக அன்பாக இருப்பாராம்.. இவர் இங்கே தலைநகரில் வேலை பார்த்துவிட்டு வார இறுதியில் அப்பா வீட்டுக்கு செல்லும்போது அனைத்து துணிகளையும் துவைத்து தேய்த்து , சுவையான உணவு சமைத்து தந்து மகிழ்ச்சியளிப்பாராம்..
” உன் அப்பா இரண்டாவது திருமணம் செய்தது குறித்து வருத்தமில்லையா ?. ” என்றால் , சிரித்துக்கொண்டே, வெட்கப்பட்டுக் கொண்டும், என் காதருகே வந்து “உனக்கு தெரியுமா , ஆண்கள் பெண் துணை இல்லாமல் வாழவே முடியாது.. ஹஹ..:) “.
ஆக ஆண் என்றால் அவனுக்கு பெண்ணின் தேவை அதிகம் என்பதை புரிந்தே வைத்துள்ளார்கள் இவர்கள் கலாச்சாரத்தில்.. சின்ன துணைவி வைத்திருப்பது அந்த காலந்தொட்டே பழக்கமாய் இருந்து வருகிறது பணக்காரர்கள் மத்தியில்.. அனேகமாக இந்த இரண்டாம் மனைவி ஏழை வீட்டு பெண்ணாக இருக்கிறார்.. சமூக அந்தஸ்து கிடையாது இவருக்கு..ஆனல் அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.. இப்போது படித்து முன்னேறுவதால் , பெண் கிடைப்பதே மிக அரிதாக உள்ளதாம்.. மேலும் மேல்நாட்டுக்காரர்கள் விரும்பி தாய் பெண்களை மணமுடிக்கின்றனர்.. அதனால் உள்ளூரில் பெண் தட்டுப்பாடு…
தன்னையும் , குடும்பத்தையும் , குழந்தைகளையும் , மிக நேர்த்தியாக , மிகுந்த அன்போடு கவனித்துக்கொள்வதால் பல வெளிநாட்டினர் தாய்லாந்து வந்து குடியேறுகின்றனர்.. அதனால் உள்நாட்டு ஆண்களுக்கு மணமுடிக்கவே பெண்கள் கிடைப்பது அரிதாகி வருவது கவலைக்குரிய விஷயம்..
ஏற்கனவே மணமகன் வரதட்சணை கொடுக்கணும், இப்ப பெண் வேறு கிடைக்காததால் பெண்ணின் மதிப்பை யோசித்துப்பாருங்கள்..
ஆக பெண் என்றால் செல்வம்/வருமானம் என்றளவில் பெண்ணின் மதிப்பு கூடியுள்ளது.. பாலியல் தொழில் செய்வதற்கென்றே தாய்லாந்தின் வடகிழகு மாகாணத்திலிருந்து ( ஈசான் ) மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து வருகின்றனர்..அங்கு விவசாயமே முக்கிய தொழில்.. வறட்சி ஏற்பட்டதால் இப்படியாம்.. ஆக அப்பகுதியில் இது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. பாலியல் தொழில் செய்வதாக கூறப்படும் பெண்களுக்கு அனேகமாக துணையாக ஒரு ஆண் இருப்பார்.. நிமிர்ந்த நடையோடு எவ்வித அச்சமோ, கூச்சமோ இல்லாமல் இதுவும் ஒரு வேலைதான் என்பதுபோல் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள். திருநங்கைகளும்.. அவர்கள் ஒரு மூன்றாவது பாலினமாக ஏற்கப்பட்டு பல வருடங்களாகிவிட்டது.. இப்போதும் பல சேவை நிறுவனங்களும் , அரசும் , அவர்களுக்கு லட்சக்கணக்கில் செலவாகும் பாலின மாற்று சிகிச்சைக்கு இலவசமாகவே ஏற்பாடு செய்கிறார்கள்.
இன்னொரு முக்கிய செய்தி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த சீக்கியர்கள் (இந்திய வம்சாவழி) , இங்கே வந்து தாய்க்காரர்களாகவே மாறிவிட்டனர்.. சீக்கிய மதம் வளர்க்கவோ, பள்ளி நடத்தவோ , கலாச்சாரத்தை ஏற்பதிலோ , அவர்களுக்கு எல்லா துறையிலேயும் உரிமை கிடைத்திருப்பதிலேயே தெரியும் இவர்களின் விசாலமான மனது.சீக்கிய கம்பெனிகள் பல இங்கே மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.. தாய்லாந்தின் முதல் பைலட் இந்திய வம்சாவழியில் வந்த தாய் பெண் நிதிஷா.. ( அவர் படம் இணைக்கப்ப்ட்டுள்ளது ) ..ஆக பெண் என்ன துறையில் முன்னேறணும் என்றாலும் இங்கே ஏதும் தடையில்லை..வானமே எல்லை அவளுக்கு..
ஈவ் டீஸிங் போன்ற எவ்வித பிரச்னைகளுமில்லை இங்கே.. ஆனாலும் சில கலாச்சார சீரழிவுகள் இருப்பதாக வருத்தப்படுகிறார் 45 வயது கூன். தங்.. (கூன் என்பது பெண்ணுக்கு முன் போடப்படும் அடைமொழி மரியாதைக்காக.. ஃபி என பெரியவர்களையும் துணையையும் அழைப்பார்கள்.. ஃபி என்பது அண்ணா, அக்கா, எனவும் பொருள்படும்..அதே போல ஆண் பெண்ணிடம் பேசும்போழுது “காப்” என முடிக்கணும் ஒவ்வொரு பேச்சையும்.. பெண் ஆணிடம் பேசும்போது “கா” என முடிக்கணும்.. இவை மரியாதை நிமித்தம் வலியுறுத்தப்படுகிறது.. “கா, காப்” என முடிக்கும்போதே புன்னகையோடு முடிக்கணும்.. )
நான் எண்ணிப்பார்க்கிறேன் நம் நாட்டிலும் இப்படி பாலியல் தொழிலாளிகளும் (பாலியல் தொழிலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்ற பட்சத்தில்), திருநங்கைகளும், தலை நிமிர்ந்து நடக்கும் நாள் விரைவில் வருமா?.. தாய்லாந்து பெண்கள் கணவர் தன்னைவிட முக்கியத்துவம் வாய்ந்தவர்தான் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.. ஆணுக்கு அதற்கான சக்தி இருக்கு என நம்புகின்றனர்.. பலர் அடங்கி போவதை தவறில்லை என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.. மேலும் ஆயுசுக்கும் தாங்கள் தங்கள் உடலழகை பேணி பாதுகாத்தால் தன் கணவர் தன்னை விட்டு போகமாட்டார் என நம்புகின்றனர்.. (இது கொஞ்சம் உவப்பில்லாத செய்தி எனினும்..பெண் போகப்பொருளல்லவே.
அதனால் எல்லோருமே மெலிவாக, கட்டுக்கோப்பாக இருக்க நல்ல ஆரோக்கியமான , அளவான உணவும் , உடற்பயிற்சியும் தினமும் கடைபிடிக்கின்றனர்.. அரசும் இதுக்கு ஆங்காங்கே பூங்காக்களிலும் , பொது இடங்களிலும் உடற்பயிற்சியான ஏரோபிக்ஸ் இலவசமாக சொல்லித்தர ஏற்பாடு செய்துள்ளது அதிசயமாயிருக்கும்..
________________________________________________
நான் சந்தித்த கூன். ” பிரிம் “ என்ற பெண் வீட்டு வேலை செய்கிறார்.. காலையில் கிளம்பி அவர் செல்கையில் ஏதோ அலுவலுக்கு செல்வது போலவே மிக சுத்தமாக அழகான உடுப்பு போட்டுக்கொண்டு , தலையை அழகாக சீவி , க்ளிப் போட்டுக்கொண்டு, அளவோடு முகப்பூச்சும், லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டு ஆர்வமாக செல்கிறார்..போகும் வழியிலேயே வேலைக்கு செல்லும் அனைவரும் காலை உணவை வாங்கிக் கொள்கின்றனர்.. (உணவுகள் இங்கே மிக சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றன)…
அந்த உணவு விற்பவர்களும் அனேகர் பெண்களே.. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டே உணவும் தரப்படுகிறது.. பின் அந்த உணவை எடுத்துக்கொண்டு வேலை செய்யும் வீட்டில் வேலை முடிந்ததும் உண்கிறார். பல வீடுகளில் அவர்கள் மேசையிலேயே அமர்ந்து உண்ணவும் அனுமதிக்கப்படுகின்றார்கள்..”ப்ரிம்” கணவர் டாக்சி ஓட்டுனர்.. இவர்கள் இருவருமாய் சம்பாதித்து கிராமத்தில் இருக்கும் அவர்கள் குழந்தைக்கும் , பெற்றோருக்கும் பணம் அனுப்புகின்றனர்..சில ஆண்கள் குடித்து பணத்தை செல்வழிப்பதில் மனைவியருக்கு வருத்தமுண்டு.. சில குடும்பங்கள் குடியால் , சூதாட்டத்தால் நிம்மதி இழப்பதாக சொல்கிறார்கள்.. குடித்துவிட்டு அடிக்கும் ஆண்கள் வெகு சிலரே.. சில பெண்கள் துணிவாக எதிர்த்து விடுகின்றனர்.. அப்படி எதிர்க்கும் பட்சத்தில் பொதுமக்களும் இணைந்து கொள்வார்களாம்..
ஆண்கள் அனேக வீடுகளில் சமைக்கின்றனர் விரும்பியே.. வீட்டு வேலை செய்வதையும் இழிவாக நினைப்பதில்லை.. அலுவல் செல்லும் மனைவியருக்கு வீட்டிலிருந்து உதவும் கணவருண்டு.. குழந்தை வளர்ப்பையும் கூட அற்புதமாக , செய்யும் கணவருண்டு.. சில பெண்கள் வெளிநாடு சென்று வேலை செய்து பணம் அனுப்ப , கணவர் குழந்தைகளை , பெற்றோர்களை கவனித்துக் கொள்வதுண்டு.. சில உணவு கடைகள் நடத்தும் பெண்மணிக்கு கூட இருந்து உப வேலைகளை கணவரும் , பசங்களுமே செய்கின்றனர்.. இதை பல இடங்களில் வெகு சர்வ சாதாரணமாய் காணலாம்..
இதேபோல கூன்.” பிபூன்சாக் “ என்பவர் சொல்கிறார் .. தலைநகர் பாங்காக்கில் மட்டும் 60% பெண்கள் தனியே தங்கியிருந்த்தே வேலைக்கு செல்கின்றனர்.. தானும் அப்படி 5 வருடம் தங்கியிருந்ததாகவும் , தனக்கும் , மற்ற பெண்களுக்கும் எந்த ஆணாலும் பிரச்னை ஏற்பட்டதேயில்லை.. மாறாக நேரம் காலம் பார்க்காமல் உதவவே தயாராக இருப்பார்கள் எனவும் சொல்கின்றார்.. ஆம அதை கண்கூடாக பார்க்கலாம்..
இங்கே பல ஆண்கள் “பைக்மேன் , அல்லது மோட்டார்சைக்கிள் மேன்” (மோட்டார்பைக் டாக்சி) என அழைக்கப்படுகிறார்கள்.. அவர்களே வேலைக்கு செல்பவர்களுக்கு சில நேரம் கடவுள் போல.. தலைநகரின் போக்குவரத்து நெரிசல் உலக பிரசித்தி.. அதில் இந்த பைக்மேன்கள் வாகனங்களுக்கிடையில் நெளிந்து , வளைந்து வெகு சாமர்த்தியமாகவும் மிக விரைவாகவும் வேலை செய்யுமிடத்துக்கு சென்று பத்திரமாக சேர்த்திடுவார்கள்..அனைவருக்கும் அடையாள அட்டையும் இருக்கிறது.. இவர்களை பல தெரு முனைகளில் பார்க்கலாம்,,பல வர்ண சட்டைகளோடு , புன்னகையோடும் காட்சியளிப்பார்கள்..ஆக பைக்கில் ஏறும் பெண்மணிகளை தத்தம் குடும்ப உறுப்பினர்களாய் பார்க்கிறார்களே தவிர எவ்வித சபல மனப்பான்மையும் இல்லை..அனேகர் பள்ளி குழந்தைகளையும் இப்படி மிக பொறுப்போடு அழைத்து செல்வதுண்டு.. துணிந்து செல்லலாம் அவர்களை நம்பி எந்நேரமும்..
அதே போல இப்போது அவர்கள் தொழிலில் போட்டியாக பெண்களும் “பைக் வுமன்” களாக வலம் வருகிறார்கள்.. அவர்கள் நுழையாத இடமே இல்லை என்பது போல்.. அதற்கு முக்கிய காரணம் ஆண்களின் ஆதரவாகத்தானே இருக்க முடியும்..?.
பாகிஸ்தானில் தன் மாமியார் வீட்டுக்கு போகும்போது பெண்கள் அடிமை போல நடத்தப்படுவதை கண்டு மிக வேதனைப்படுகிறார் எனது ஒரு தோழி.. இந்திய தொலைக்காட்சிகளில் வரதட்சணை கொடுமைகளை பார்க்கும் போது இப்படியெல்லாம் நடக்குமா? என அதிசயப்படுகிறார்..
சட்டம் போட்டுத்தான் சம உரிமை ஏற்படுத்தவேண்டிய அவசியமில்லை. என நிரூபிக்கின்றார்கள் மெல்ல மெல்ல..பெண் முன்னேற்றத்தை தடுப்பதுமில்லை இங்கே.. புயிங்.நோக் ( புயிங் என்றால் பெண், .நோக் என்பது செல்லப்பெயர் , அவர்கள் விருப்பப்படி வைத்துக்கொள்வார்கள் . நோக் என்றால் பறவை என்ற அர்த்தம் . அவருக்கு பறவைகள் பிடிக்குமாம்.. )சொல்கிறார் , தான் சில வருடங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்துக்கொண்டே வேலையும் செய்து சம்பாதித்ததாக.. அவர் சகோதரி அமெரிக்காவிலும் ,தோழி ஜெர்மனியிலும் இதே போல் வேலை பார்த்ததாக.. ஆனாலும் பலரும் எங்களை ஏதோ பாலியல் தொழிலாளி போல பார்ப்பது எமக்கு மிக தர்மசங்கடத்தையும் மன வருத்தத்தையும் தந்துள்ளது .. அதனால் நான் என்னுடைய நாட்டுக்கே திரும்பி வந்துவிட்டேன்.. என் நாட்டில்தான் எனக்கு அதிக அன்பும் ,மரியாதையும் கிடைக்கிறது என மிகப்பெருமையாக கூறுகிறார்.. அது நான் பார்த்தவரையிலும் மிக உண்மையும்..
நீங்கள் ஏங்கேயாவது ஒரு தாய் பெண்ணை சந்திக்க நேர்ந்தால் புன்னகை என்ற ஆயுதத்தோடு மட்டும் அவர் உள்ளத்தை தொட்டுப் பாருங்கள் , ஆயுசுக்கும் மறக்க மாட்டார்.. அத்தனை மென்மையான மனதுடையவர்கள்… தாய்லாந்து பெண்கள் கடின உழைப்பாளிகள் , மிகச் சிறந்த குடும்பத்தலைவிகள் , . அவர்களை மதித்து போற்றுவோம்..
( நான் பேட்டி காண என் தாய்லாந்து தோழி வீட்டுக்கு சென்றபோது அங்கே அக்கம்பக்கமுள்ளவரெல்லாம் என்னை மிகுந்த வாஞ்சையோடு நெஞ்சார தழுவி வரவேற்றனர்.. என் குழந்தைகளை அன்போடு வரவேற்றனர் அங்கேயுள்ள குழந்தைகள்.. பின் நானும் அவர்களோடு சமையலறையில் நின்று சமைக்க அனுமதி தந்தனர்.. சொல்லிக்கொடுத்தனர்.. பின் எல்லோருமாக சமைத்த அனைத்தையும் தரையில் நடுவில் வைத்து சுற்றி உட்கார்ந்தோம்.. அப்போது தட்டில் சாதம் போட்டுக்கொண்டு பலவகை கூட்டுக்களை அவ்வப்போது எடுத்து போட்டுக்கொண்டு உண்ணவேண்டும்..எமக்காக சப்பாத்தியும் செய்திருந்தார் தோழியின் கணவரான பாகீஸ்தானியர்…. நான் கரண்டி உபயோகித்த போது என்னை அன்போடு தடுத்து , நீ வேற்று ஆள் அல்ல , அதனால் சப்பாத்தியை பிட்டு கூட்டுக்குள் தேய்த்து எடுத்தே உண்ணவேண்டும் என்றார் பிடிவாதமாய்..பின்பு மொட்டை மாடிக்கு சென்று அந்தாக்ஷரி போல பாட்டு பாடினார்கள்.. அப்போது உண்ண சில நாட்டுப் பலகாரமும் , பழங்களும்..வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆயிற்று.. அன்பு வைத்தார்களானால் அவர்களை மிஞ்சிடவே முடியாது.. என்பதை பலமுறை புரிந்துள்ளேன்.. )
தாய்லாந்து பெண்கள் பற்றி எழுத சந்தர்ப்பம் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
________________________________________________
வினவு பின்குறிப்பு:
ஓரிரு ஆண்டுகளாக ஜனநாயகத்திற்கான போராட்டமும், தெருச்சண்டைகளும் தாய்லாந்தில் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். உலகமயத்தின் ‘அருளால்’ அங்கும் சமூக ஏற்றத்தாழ்வு அதிவேகமாக விரிவடைந்து வருகிறது. தாய்லாந்தின் நாட்டுப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு விவசாயம் அழிந்து நகரங்களும் கேளிக்கை சுற்றுலாக்களுமே முக்கிய மையங்களாகி வருகின்றன. மேற்குலகின் மாந்தருக்கான ‘இனிய’ விபச்சார விடுதியாக தாய்லாந்து மாற்றப்பட்டிருப்பது ஒரு கசப்பான உண்மை. சாந்தி சொல்வது போல இது ஒரு மாநிலத்திலிருந்து வரும் ஏழைகள் காரணமாக இருந்தாலும் அத்தகைய நிலையை மேற்குலகும், அதற்கு இடம் கொடுக்கும் தாய்லாந்தின் ஆளும் வர்க்கங்களுமே தோற்றுவித்துள்ளன.
இதனால் தாய்லாந்து பெண்கள் என்றாலே விபச்சாரிகள் என்றொரு பார்வை உருவாகிவிட்டிருப்பது குறித்து இந்த கட்டுரையில் ஒரு தாய்லாந்து பெண் வருத்தப்படுகிறார். எனினும் அந்த வருத்தம் கோபமாக எழும்போதுதான் இந்த பெயருக்கு காரணமான கயவர்களை அப்புறப்படுத்த முடியும். புத்த மதமும், நிலவுடமைப் பண்பும் தோற்றுவித்திருக்கும் ஒருவித ‘மென்மையை’ தாய்லாந்து நாட்டின் பெண்களிடம் காண முடிகிறது. அதே நேரம் இதனாலேயே அவர்கள் அதிகம் சுரண்டப்படுவது கூட எளிதாகவே நடக்கலாம். இத்தகையை அதீதமான பெண்மை என்பது ஒருவித அடிமை நிலைதான். இதில் சாந்தி கூறும் நல்லவிசயங்கள் இருப்பது போலவே கெட்ட விசயங்களும் இருக்கின்றன.
ஒரு நாட்டின் சமூகத்தையும், குறிப்பாக பெண்களது நிலையையும் வரலாற்று ரீதியான பார்வையிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். அதற்கு இந்த கட்டுரை ஓரளவிற்காவது உதவி செய்யும். இதற்காக நேர்காணல்கள் எடுத்து முனைப்புடன் கட்டுரை அனுப்பிய பதிவர் சாந்திக்கு எமது நன்றிகள்.
____________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010
- பெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி
- நாப்கின் – சங்கரி.
- அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.
- என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை
- பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.
- அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா
- பெண் புன்னகையின் பின்னே….. – ரதி
- வரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!
- 2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!
- பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி
- உதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.
- y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா
- என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?
தாய்லாந்தின் புன்னகை அரசிகள் !…
தாய்லாந்து பெண்கள் என்றாலே பாலியல் தொழிலாளிகள் என்ற கண்ணோட்டத்துடனே நோக்கும் பொதுக் கருத்துக்கு மாற்றாக சராசரி தாய்லாந்து பெண்களின் வாழ்க்கையை இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது…
மிகவும் அருமையான கட்டுரை. தமிழ் நாட்டு வாசகர்கள் கீழை தேசப் பண்பாடுகளை அறிந்து கொள்ள இந்தக் கட்டுரை மிகவும் உதவும். அன்பு, பாசம், நலம் விரும்புதல், சகோதரத்துவம் போன்ற மனிதப் பண்புகளை இன்னமும் மதித்து வரும் சமூகங்களில் தாய்லாந்து மக்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். இதுபோன்ற மனிதநேயம் வளர்க்கும் கட்டுரைகளையும் பிற சமூகங்களை அதிலும் குறிப்பாக ஆசிய, அரபிய சமூகங்களை அறிந்து கொள்ள உதவும் கட்டுரைகளை வெளியிடுவது ஒரு சமூகக் கடமை என்று நான் நினைக்கிறேன். வெளியிட்ட வினவுக்கு மிகவும் நன்றி.!! வாழ்த்துகள்.!!
நல்ல கட்டுரை.
/// அதில் இந்த பைக்மேன்கள் வாகனங்களுக்கிடையில் நெளிந்து , வளைந்து வெகு சாமர்த்தியமாகவும் மிக விரைவாகவும் வேலை செய்யுமிடத்துக்கு சென்று பத்திரமாக சேர்த்திடுவார்கள்..அனைவருக்கும் அடையாள அட்டையும் இருக்கிறது.. இவர்களை பல தெரு முனைகளில் பார்க்கலாம்,,///
இதை இந்தியாவிலும், முக்கியமாக சென்னை போன்ற பெரு நகரங்களுலும், 40 வருடங்களுக்கு முன்பே அனுமதித்திருந்தால், இங்கும் தனியார் வாகனங்கள் இத்தனை அதிகரித்திருக்காது. இன்றும் அனுமதி இல்லை. புறநகர் பகுதிகளில் கூட. இது ‘சோசியலிச’ காலங்களின் எச்சங்கள்.
கட்டுரையின் நோக்கத்திற்கு விரோதமாக பின்னூட்டமிடுவதற்கு மன்னிக்கவும். அதியமானின் பின்னூட்ட போலித்தனங்களே அவ்வாறு செய்யத் தூண்டுகின்றன.
@@@
அதியமான்:
/// அதில் இந்த பைக்மேன்கள் வாகனங்களுக்கிடையில் நெளிந்து , வளைந்து வெகு சாமர்த்தியமாகவும் மிக விரைவாகவும் வேலை செய்யுமிடத்துக்கு சென்று பத்திரமாக சேர்த்திடுவார்கள்..அனைவருக்கும் அடையாள அட்டையும் இருக்கிறது.. இவர்களை பல தெரு முனைகளில் பார்க்கலாம்,,///
இதை இந்தியாவிலும், முக்கியமாக சென்னை போன்ற பெரு நகரங்களுலும், 40 வருடங்களுக்கு முன்பே அனுமதித்திருந்தால், இங்கும் தனியார் வாகனங்கள் இத்தனை அதிகரித்திருக்காது. இன்றும் அனுமதி இல்லை. புறநகர் பகுதிகளில் கூட. இது ‘சோசியலிச’ காலங்களின் எச்சங்கள்.
@@
////தலைநகரின் போக்குவரத்து நெரிசல் உலக பிரசித்தி////
அங்கு போக்குவரத்து நெரிசல் உலக பிரசித்தமாம். அதற்குக் காரணம் அங்குள்ள சோசலிசமா, சோசலிச எச்சமா அல்லது நீங்கள் சொல்லுவது போல ‘போலி’ முதலாளித்துவமா? (‘பூ’ன்னும் சொல்லலாம், ‘புய்பம்’னும் சொல்லலாம், இல்ல வினவு சொல்ற மாதிரி முதலாளித்துவம்னும் சொல்லலாம்). எங்க போனாலும் இதேதானா? எல்லாரும் சிரிக்கிறாங்க அதியமான்.
//அங்கு போக்குவரத்து நெரிசல் உலக பிரசித்தமாம். அதற்குக் காரணம் அங்குள்ள சோசலிசமா, சோசலிச எச்சமா அல்லது நீங்கள் சொல்லுவது போல ‘போலி’ முதலாளித்துவமா? ///
ஜனத்தொகை பல நாடுகளில் தொடர்ந்து அதிகரிக்கிறது. அதனால் வாகனங்களும் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் உருவாகுவது இயற்க்கை. அதை முடிந்த வரை குறைக்க, தனியார் வாகனங்களுக்கு பதில், பொது வாகனங்களை அதிகரிப்பதே தீர்வு.
எல்லோரும் சிரிக்கவில்லை அசுரன். உம்மை போன்ற அரைவேக்காடுகள் தான் ’சிரிக்கின்றனர்’. இந்தியாவில் போக்குவரத்து பிரச்சனைகளுக்கான தீர்வு பற்றி உமக்கு என்ன வெங்காயமா தெரியும் ? சும்மா புடுங்கி மாதிரி இங்க மட்டும் பேசத்தான் தெரியும்.
//ஜனத்தொகை பல நாடுகளில் தொடர்ந்து அதிகரிக்கிறது. அதனால் வாகனங்களும் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் உருவாகுவது இயற்க்கை. அதை முடிந்த வரை குறைக்க, தனியார் வாகனங்களுக்கு பதில், பொது வாகனங்களை அதிகரிப்பதே தீர்வு.//
தாய்லாந்து டென்சிட்டி பிளீஸ் அதியமான். வெறும் வாயில் வடை சுடுவது உங்களுக்கு பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும் ஆனால் என்ன செய்ய எனக்கு வாறும் வாய் வடை போரடித்து ரொம்ப காலமாகிறது. ரியல் வடை பிளீஸ்
அசுரன்,
இந்தியாவில் பொது போக்குவரத்து, இன்னும் லைசென்ஸ் ராஜ்ஜியத்தின் கடும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அரசு மட்டுமே பல பகுதிகள் ஏகபோகமாக இதில் தொழில் செய்யும் ‘சோசியலிச’ கால கோட்பாடு உள்ளது. (ஆனால் லாரி போக்குவரத்தில் இல்லை என்பது ஒப்பிடத்தக்கது). இதை பற்றி எனது முக்கிய பதிவு :
http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-rising.html
அது சரி அதியமான் நீங்க ஏன் லிபர்ட்டேரியன் ஆனீங்க ?
அப்புறம், சைக்கோ எழுத்தாளன் ஜெயமோகனிடம் போய்
’நான் இப்போதெல்லாம் வினவு தளத்தில் விவாதிப்பதேயில்லை’
என்று பெருமை பீற்றிக்கொண்டு இப்போது லிபரட்டேரியன் என்கிற
பெயரில் கமெண்ட் போட ….
பொதியமான்,
வெறுத்து போய் அன்று அப்படி சென்னேன் தான். மனதை மாற்றிக் கொள்ள உரிமை எல்லோருக்கும் உண்டு. இணையத்தில் இங்கு தான் ’சூடாக’ விவாதம் உள்ளது. இது ஒரு போதை பழக்கும் போல ஆகிவிட்டது. விட முடியவில்லை. என்ன செய்வது !! :)))
மேலும் எனது சொந்த பெயரில் பின்னூட்டம் இட்டால், இங்கு சில ‘அன்பர்களுக்கு’ வெறி வந்து, ஏச்சு மட்டும் உருவாகிறது !!!
//அதியமானின் பின்னூட்ட போலித்தனங்களே ///
என்ன பெரிய போலித்தனம் ? வெங்காயம். இவரு மட்டும் தான் அசல் பாருங்க. இப்படி உளருவதால் தான் உம்மை புடுங்கி, அரை வேக்காடு என்றெல்லாம் சொல்ல வைக்கிறீக.
யார் ’போலி’ என்று நீர் சர்ட்டிஃபிக்கேட் கொடுக்க வேண்டாமே. வாசகரக்ளுக்கும் பகுத்தறிவு உண்டு. அவர்களே முடிவு செய்து கொள்வார்கள்.
சார், நான் சொன்னேனில்ல, இவனுங்களுக்கு இதே வேலை…எத எடுத்தாலும் முதலாளித்துவத்தையும் உங்களையும் திட்டுவானுங்க.
இந்தப் பசங்களுக்கு இருக்குற ஒரு பிரச்சினையும் தீர்க்க வழி தெரியாது, அடுத்தவங்கள அசிங்க அசிங்கமா பேசத் தான் தெரியும்.
தாய்லாந்தின் மறுபக்கம்.
தப்பான கண்ணோட்டத்தை மாற்றி விட்டீர்கள்.
நல்ல பதிவு ஐயா இது.
வாழ்த்துக்கள்.
மிகவும் பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி
Excellent article. Thanks for educating us on the wonderful culture of Thailand women and the culture.
ரொம்ப அருமையாக இருந்தது. பெண்களை மட்டுமே புகழ்ந்து கூறாமல் அவர்களது கஷ்டங்களை மட்டுமே முன்னிறுத்தாமல் ஆண்களை பற்றியும் நல்ல விதமாக குறிப்பிட்டு இருந்தது மகிழ்வாக இருந்தது.
தாய்லாந்து பெண்கள் பற்றி அறிய நிச்சயம் இந்தப்பதிவு உதவும் ..இவர்கள் பற்றி தவறான எண்ணம் கொண்டு இருப்பவர்கள் சிலராவது தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
வினவு ஆசிரியருக்கு :
————————
இதை விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது பின்னூட்டமாய் போடலாம்..
———————————-
ஆண்கள் அனேக வீடுகளில் சமைக்கின்றனர் விரும்பியே.. வீட்டு வேலை செய்வதையும் இழிவாக நினைப்பதில்லை.. அலுவல் செல்லும் மனைவியருக்கு வீட்டிலிருந்து உதவும் கணவருண்டு.. குழந்தை வளர்ப்பையும் கூட அற்புதமாக , செய்யும் கணவருண்டு.. சில பெண்கள் வெளிநாடு சென்று வேலை செய்து பணம் அனுப்ப , கணவர் குழந்தைகளை , பெற்றோர்களை கவனித்துக்கொள்வதுண்டு.. சில உணவு கடைகள் நடத்தும் பெண்மணிக்கு கூட இருந்து உப வேலைகளை கணவரும் , பசங்களுமே செய்கின்றனர்.. இதை பல இடங்களில் வெகு சர்வ சாதாரணமாய் காணலாம்..
அனைவருமே கிட்டத்தட்ட ஒன்றுபோல் உடையணிவதால் ( யுனிபார்ம் போல ) யார் வசதியானவர் , யார் வசதியற்றவர் என கண்டுபிடிக்க முடியாது..
பாகிஸ்தானுக்கு தன் மாமியார் வீட்டுக்கு போகும்போது பெண்கள் அடிமை போல நடத்தப்படுவதை கண்டு மிக வேதனைப்படுகிறார் தோழி.. இந்திய தொலைக்காட்சிகளில் வரதட்சணை கொடுமைகளை பார்க்கும் போது இப்படியெல்லாம் நடக்குமா? என அதிசயப்படுகிறார்.. ஆனாலும் வருந்த வேண்டிய விஷயம் நுகர்வோர் கலாச்சாரம் வேகமாக பரவுவதும்., முதல் சம்பாத்யத்தில் கடன் வாங்கியாவது உயர்தர வாகனம் வாங்கும் எண்ணமும்..
வீடு, நிலம் , தங்கம் வாங்குவதைவிட கார் வாங்குவதையே முக்கிய குறிக்கோளாய் வைத்துள்ளனர்.. இவர்கள் கொஞ்சம் சுகவாசி அல்லது சுற்றுலா பிரியர்கள், ஆனால் குடும்பத்தோடே களிப்பர்..அரசும் இதை ஊக்குவிக்கின்றது ..
பாங்காக் உலகின் பேஷன் டிசைனிங் ல் முதன்மையாக இருப்பதால் ஆடைகளில் புதுமை வர வர அதில் செலவழிக்க ஆசைப்படுகிறார்கள் நவீன மங்கையர்..அதுகூட அதிகம் செலவில்லை..இருப்பினும் உணவு வகைகளில் இன்னும் மருத்துவ குணமுடைய அனைத்து இலை தழைகளையும் உண்வதால் , நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்கின்றனர்.. KFC , McDonalds லேயும் கூட தாய் உணவுகள் ( ஸொம்தொம் – பப்பாளி காய் சாலட் ) ஆக்ரமித்துள்ளது.. ஆரோக்கியத்துக்கே முதலிடம்..
//உலகமயத்தின் ‘அருளால்’ அங்கும் சமூக ஏற்றத்தாழ்வு அதிவேகமாக விரிவடைந்து வருகிறது. தாய்லாந்தின் நாட்டுப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு விவசாயம் அழிந்து நகரங்களும் கேளிக்கை சுற்றுலாக்களுமே முக்கிய மையங்களாகி வருகின்றன.///
இல்லை. மிக தவறான, ஆதரமில்லாத கருத்து. உலகமயமாக்கலுக்கு பின்பு தான் தாய்லாந் ’உருப்பட’ ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவும் தான். விவசாயம் அங்கு நன்கு செழிக்கிறது. நெல் உற்பத்தி மிக மிக அதிகரித்துள்ளது. சும்மா ஆதரமில்லாம இப்படி ‘கருத்து’ சொல்வது வினவுக்கு வழக்கமா போச்சு.
1977இல் இந்தியாவில் இருந்து கொக்கொ கோலாவை, ஜனதா ஆட்சியில் மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்ற புண்ணியவான் துரத்தினார். கோக் துரத்தப்பட்டதில் பெரிய இழப்புகள் இல்லை. ஆனால் கூடவே அய்.பி.எம் நிறுவனத்தையும் துரத்தினார் இந்த புண்ணியவான். அவர்கள் நேரே தாய்லாந் சென்று தமது தொழிற்சாலையை அமைத்துக்கொண்டனர். நாம் கம்யூட்டர் யுகத்திற்க்கி செல்ல சில பத்தாண்டுகளை இழந்தோம். தாய்லாந் சுதந்திர பொருளாதார கொள்கைகளை நமக்கு முன்பே ஏற்றுகொண்டு வளர்ந்து வருகிறது. 1997இல் நடந்த ‘வீழ்ச்சி’ அய் மட்டும் தான் இடதுசாரிகள் பேசுவார்கள். கடந்த 50 வருட வரலாற்றை பார்க்க வேண்டும்.
விபச்சாரம் அங்கு பெருக அமெரிக்கர்கள் தான் முக்கிய காரணம். 1965 – 75 வரை அவர்கள் வியட்நாம் போரில் ஈடுப்பட்டனர். ஆசியாவில் கம்யூனிசம் பரவுவதை தடுப்பதே அவர்களின் அடிப்படை நோக்கம். (60களில் மாவோ சொன்னார் : கேப் காமரின் அதாவது கன்ன்யாகுமாரி வரை, செங்கொடி பரக்க செய்வோம் என்றார். அதை கண்டு அமெரிக்கர்கள் பயந்தன் விளைவு பல கொடும் செய்லக்ள்). அமெரிக்க படைவீரர்களின் ஓய்வுக்காக தாய்லாந்தில் தங்கினர். விபச்சாரம் வளரத்தொடங்கியது. அதற்க்கு முன்பு வரை இப்படி அங்கு இல்லை.
//இல்லை. மிக தவறான, ஆதரமில்லாத கருத்து//
மீண்டும் வினவு மன்னிக்க,
அதியமான் அவர்களே,
எப்படி? நீங்க சோசலிச இந்தியான்னு ஒன்னு சொல்லுவீங்களே அது மாதிரியா? இல்ல உங்களுக்கு உவப்பில்லாதது என்றாலே ஆதாரமில்லததா?
அப்புறம் அதியமான், உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடு இந்தியா, ஆனால் டிராபிக் பிரச்சினை மட்டும் தாய்லாந்துக்கு அதிகமாம் எப்படி? உங்களது மக்கள் தொகையை காரணம் காட்டும் முயற்சி ரொம்ப அரவேக்காடா இருக்கே? எனக்கென்னவோ தாய்லாந்திலும் ரகசிய சோசலிசம் ஏதோவொன்று இருந்திருக்கிறது. அதன் எச்சம்தான் அங்கு டிராபிக் அதிகமாகக் காரணமென்று நினைக்கிறேன். எதற்கும் நீங்கள் ஆய்வு செய்து இன்னொரு முக்கியக் கட்டுரை ஒன்று எழுதுங்களேன்?
//(60களில் மாவோ சொன்னார் : கேப் காமரின் அதாவது கன்ன்யாகுமாரி வரை, செங்கொடி பரக்க செய்வோம் என்றார். அதை கண்டு அமெரிக்கர்கள் பயந்தன் விளைவு பல கொடும் செய்லக்ள்).//
பாத்துக்கோங்கப்பா, அமெரிக்காரன் குண்டு போட்டாக் கூட அதுக்கும் கம்யூனிஸ்டுதான் பின்னணிக் காரணம்…. இந்த டீலிங் ரொம்ப நல்லா இருக்கு…
1948இல் சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாறியது. 1950 – 53இல் கொரியாவில் பெரும் உள் நாட்டு போர். 1953இல் கொரியா இரு நாடுகளாக பிளவு பட்டு, வட கொரியா கம்யூனிச நாடாக பிரகடனபடுத்திக்கொண்டது. தொடர்ந்து வியந்நாம், கம்போடியா, லாவோஸ், மலேயா, இந்தியா என்று அடுத்ததடுத்து ஆசிய முழுவதும் கம்யூனிச ஆட்சி பரவும் என்று ஒரு தியரி உருவானது. Dominoes theory. அமெரிக்க மிகுந்த insecure ஆக மாறியது.
அது அன்று நடத்திய போர்களெல்லாம், இதன் அடிப்படையில் தான் விளைந்தவை. சித்தாந்தகளுக்கான போர் தான். நாடு பிடிக்கவோ, காலனியாதிக்க அடிப்படையிலோ அல்லது சந்தைகளை பிடிக்கவோ அல்ல. clash of idealogies. a part of the cold war.
அசுரன், இதை எல்லாம் சரியா புரிஞ்சுக்க ஒரு open mind வேண்டும். மேலும் விரிவான வாசிப்பனுபவும் தேவை.
Who is america to interrupt them and their ideology? Is this not kinda force feeding? whats the difference with your claiming about stalin and america?
Why should America feel insecure? I think Vinavu is right about capitalist countries… I take your words here as an acceptance..
Q2A,
You must ask the same question to the Chinese, Russians and Cubans who ‘interfered’ in many nations ‘affairs’ in a similar fashion. It is the other side of the same coin. and they were trying to ‘export’ communism. I am not blindly supporting all the US actions. but without looking at the other side of the coin, we can not get the full picture.
Vietnamese, who fought heroically (they were out gunned and out numbered many times, still they fought with determination and sheer courage, which in unmatched anywhere). and the Korean war of 1950-53 saw more blood shed and destruction. All for what ? within a few decades, all these socliaistic nations abandoned their idealogy in favour of market economy. Hind sight proves that these concepts of marxism caused unwanted and terrible destruction across the world…
Esp, the case of Afghanistan is worse. USSR invaded Afhanistan in 1979. The decision to do so was taken in the politburea of Soviet Union by the old gurads of Stalin era, who viewed the world and Asia, thru their ‘marxist’ prisims, which distorted their judgement. They read the signals in a very wrong and convaluted manner. And terrible effects of their stupid decision is still felt. Bin laden & Co were encouraged by NATO to counter the Russians. and Afghanistan will never be the same peaceful nation that it was until 1979. terrible destructions and misery…
//Why should America feel insecure? ///
because they feared that entire Asia will ‘fall’ to communism, then Africa and S.America and finally US too will fall to communism. and they hated and feared communism as evil and slavery and equated it to nazisim of Hitler. to some extent this is true, as both idealogies suppressed human rights in a most terrible way and caused wars and destruction across the world.
and i forgot to add the following in my previous comment : Russians and Chinese supported N.Korea in the Korean war. Chinese red revolution was aided by the then USSR. and N.Vietnam (which was communist) was fully supported by Chinese and Russians. Cubans ‘interfered’ in Angola in Africa and in many Latin American nations. most famous example is Che Gueara’s wars in Bolivia, etc. All these ‘efforts’ were countered by the US led ‘capitalistic’ west. It was a dirty war with no hold barred.
Cold war (the indirect war between communist bloc and capitalistic bloc) was on for many decades from 1945 to 1991. It took a terrible toll and after effects are still felt.
the old saying ‘ When you fight a monster, you will become a monster yourself’ fits both the sides.
//You must ask the same question to the Chinese, Russians and Cubans who ‘interfered’ in many nations ‘affairs’ in a similar fashion.//
ஏம்பா, அமெரிக்காரன் செஞ்சா அதுக்குக் காரணம் சோவியத் ரஷ்யாவாம், ஏன் அதே போல ரஷ்யாக்காரான், சீனாக்காரன் செஞ்சதுக்குக் காரணம் அமெரிக்கான்னு சொல்லி அதியமான் அமைதியா இருக்க மாட்டேன் என்கிறார்? எப்படிப் பார்த்தாலும் அமெரிக்காரன்தானே முதல்? அப்புறம்தானே, அதன் காரணமாத்தானே சோவியத்து மற்றும் அதன் அரசியல் தவறுகள்? இதுக்கு மட்டும் அதியமானின் மான்ஸ்டர் தத்துவம் பிடிக்க மாட்டேன் என்கிறது? பிடிக்காத மாமியார் எடுத்தாக் குத்தம், வைச்சாக் குத்தம்னு சொல்லுவாங்க. அதியமானுக்கு பிடிக்காதது கம்யூனிசம். அது நமக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அவர் சொல்ற நியாயங்களையே தலைகீழாப் புரட்டி முதலாளீத்துவ அநியாயங்களை அத விடுங்க பாசு என்று தட்டிக் கழித்து விட்டு தன்னை நடுநிலைவாதி என்று பிரகடனப்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்க இயலாது.
இப்போ என்னோட டவுட்டு என்னவென்றால், சோவியத்து அழிந்த பின்னும் அமெரிக்கா விடாமல் உலகம் முழுவதும் யுத்தம் செய்யுதே அதுக்குக் காரணம் தாய்லாந்து/ இந்தியா மாதிரி நாடுகளில் இருக்கும் சோசலிச எச்சத்தை துடைக்கத்தானோ? எதுக்கும் அதியமான் முக்கிய ஆய்வு செய்து ஒரு கட்டுரை எழுதி நமது ‘அறிவு’கண்களைத் திறக்கட்டும்.
//1979. The decision to do so was taken in the politburea of Soviet Union by the old gurads of Stalin era, // அதியமானி வரலாற்று அறிவையும், அடிப்படையற்ற ஸ்டாலின் வெறுப்பையும் இந்த வரிகளே சொல்லும், 1979ல் இதனை முடிவெடுத்தது, ஸ்டாலினை இழிவுபடுத்தி, நிராகரித்த கும்பல் செய்தது. ஆனால் இவர் சொல்கிறார், ஸ்டாலின் காலத்தின் பழைய காவலர்களாம்.
சூப்பர்ண்ணே… ஆனா இந்த மொட்டைத் தலை இருக்கு பாருங்க அத முழுங்காலுக்கு முடிச்சி போடுறது கொஞ்சம் கஷ்டங்கண்ணா அது உங்களுக்கு சுத்தமா வற்ல…
அமெரிக்க படைவீரர்களின் ஓய்வுக்காக தாய்லாந்தில் தங்கினர். விபச்சாரம் வளரத்தொடங்கியது. அதற்க்கு முன்பு வரை இப்படி அங்கு இல்லை.//
பதினான்காம நுற்றாண்டில் அயோத்தியா காலத்திலேயே இருந்து வருது..மேலும் வளர்ச்சி அடைந்தது உலக மயமாக்கல் காரணம்.
The influence of Brahmanical philosophy and the role of Buddhism behind are narrated in this part. It discusses the historical evolution of prostitution from the ayuthia period (i.e., fourteenth century itself) and refers to the social position of women in Thai society.
Globalization and commodification of economy brought women in touch of outside world and all these served as the background factor behind the growth of prostitution.
http://www.exoticindiaart.com/book/details/IDC840/
இல்லை. நான் மாறுபடுகிறேன். உலகமயமாக்கல் மட்டும் தான் இதற்க்கு காரணம் என்றால், பின் தாய்லாந்தை விட அதிக அளவு உலகமயமாக்களில் கலந்து கொண்ட இதர ஆசிய நாடுகளான தென் கொரியா, ஜப்பான், தைவான் போன்றவை இப்படி இந்த விசியத்தில் சீரழியவில்லை. கலாச்சாரம், இனம், மொழி, சமூக அமைப்பு : இவைகளில் இந்த நாடுகள் ஏறக்குறைய தாய்லாந் போல்த்தான். 1950கள் வரை அவற்றின் நிலையும் தாய்லாந்தை போல் தான் இருந்தது.
வியத்நாம் போர் நடக்காமல் இருந்திருந்தால், தாய்லாந்தில் விபச்சாரம் இந்த அளவு பெருகி வளர்ந்திருக்காது என்றே கருதுகிறேன்.
Domestic prostitution has for centuries been a part of the Thai tradition. It was simply accepted as normal and it has been estimated that as many as 95% of Thai men have been to local brothels that are found in most every city of Thailand. Some say 95% may be high and more for sensationalism, but the percentage is certainly high.
நண்பர் அதியமான்,
நம்மூரில் தாசிகள் போல இங்கேயும் தாசி கலாச்சாரம் 14ம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது.. அது பெரிய விஷயமாகவோ தவறாகவோ எடுத்துக்கொள்ளப்படவில்லை..
அதே சமயம் நீங்கள் சொல்வதிலும் நிஜம் இல்லாமல் இல்லை.. அமெரிக்க ராணுவத்துக்கு சேவை செய்ய ஆரம்பித்தபோதே பத்தாயா என்ற நகரம் உருவாகியதாக கூட சொல்லப்படுகிறது..
“In 1967, Thailand agreed to provide “rest and recreation” services to American servicemen during the Vietnam War”.
ராணுவத்தினர் திரும்பி போனதும் சுற்றுலா தளமானது.. தாய்லாந்து கடற்கரைகளும் , இயற்கை செழிப்புள்ள இடங்கள் அனைத்துமே பாதுகாக்கக்பட்டு நாடு முழுதுமே சுற்றுலா செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டது.. இதற்கு முக்கிய காரணம் இவர்களின் உபசரிப்பும் , குறைவான விலையில் சுற்றுலா வர முடிந்ததும்.. அதனாலேயே குடும்பம் குடும்பமாக வர ஆரம்பித்தனர் மக்கள்..ஆக mass tourism and sex tourism , medical tourism , என பல்வேறு வகை சுற்றுலாவுக்கும் ஏற்ற இடமானாலும் , பாலியலை முதன்மைப்படுத்துவதை தாய் மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை என்பதே உண்மை..
ஒரு பக்கம் பாலியல் தொழில் நடைபெற்றாலும் , அது மட்டுமே முக்கிய காரணி இல்லை.. அதை மக்கள் அருவருப்பாகவும் , நாட்டின் பொருளாதார , பண்பாட்டு சீர்குலைவு , பெண்ணடிமைத்தனமாக பார்க்க ஆரம்பித்தனர்..
Many people think sexwork is degrading to a woman.
In our Western view and a view increasing among Thais’ the attitude is that prostitution is basically a byproduct of unjust economic and social structures and the most obvious form of gender oppression.
they hated and feared communism as evil and slavery and equated it to nazisim of Hitler……its very ridiculous to know americans feared for these things.history says americans purchased black people from african countries made them slaves and they were the people who laid all the roads and rails across america besides mining plantation and constuction works.வாசிப்பனுபவம் தேவைன்ன்றியே நீ என்னத்தை தான் வாசிச்ச?ப்லூட்டையா only capitalists fear communism all over the world and they are approximately o.ooo1percent of the world population but controls and choose every governments around the world.
jmms
தனியே ஒரு காரணத்தை மட்டும் கூற இயலாது எனினும் பிரதான ஊக்கி எது என்பதில் உங்கள் மதிப்பீடு சரியானதே.
பரத்தமை ஆணாதிக்கச் சமூகங்களிற் பெருமளவுந் தவிர்க்க இயலாதது.
அதன் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் பொருளாதாரக் கரணிகள் பங்களிக்கின்றன; புற நெருக்குவாரங்களும் (அமெரிக்கா தன் படையினரின் ‘மன உளைச்சலுக்கு’ மருந்தாகப் பரத்தமையை தாய் அரசின் உடன்பாட்டுடன் ஊக்குவித்தமையும் ஜப்பான் 2ஆம் உலகப் போர்க் காலத்தில் கொரியப் பெண்களைத் தன் படையினருக்கு “ஆறுதல் மாதராகப்” பயன் படுத்தியமையும் போன்றவை) முக்கியமானவை. ஆனால் முழுமையான காரணங்களல்ல. அதை விடத், தாய்லாந்த்தின் கிராமப்புற வறுமை ஒரு முக்கிய காரணி.
.
உலகமயமதல் மூன்றாமுலகில் பல பண்பாட்டுச் சீரழிவுகட்கு வழி செய்துள்ளதென்ற உங்கள் எண்ணம் சரியானதே.
முதலாளியம் பெண்களை நுகர்பொருளாக்கியது அதன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகள் பெண்ணைச் ‘சந்தைப் படுத்துவதில்’ வெகு தூரம் ‘முன்னேறி’ விட்டன.
இன்று அரசாங்கங்கள் பெரிதும் நம்பியிருக்கும் சுற்றுலாக்களில் பரத்தமைக்கு ஒரு பெரும் பங்குள்ளது என்பதைப் பற்றி ஐயம் வேண்டாம்.
நேபாளப் பெண்கள் ஏன் “எற்றுமதி”யாகின்றனர் என்பதை விசாரித்தலே போதும்.
பரத்தமையின் பெருக்கத்திற்கு வறுமை காரணம் எனும் போது, அதற்குக் பகாரணமாவதன் மூலம் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் அதனூடும் பரத்தமைக்குப் பாரிய பங்களிக்கிறது.
முதலாளியம் பெண்களை நுகர்பொருளாக்கியது அதன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகள் பெண்ணைச் ‘சந்தைப் படுத்துவதில்’ வெகு தூரம் ‘முன்னேறி’ விட்டன.//
ஆம்.சரியான பார்வைதான்..
//பரத்தமையின் பெருக்கத்திற்கு வறுமை காரணம் எனும் போது, அதற்குக் பகாரணமாவதன் மூலம் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் அதனூடும் பரத்தமைக்குப் பாரிய பங்களிக்கிறது.//
இவையெல்லாம் ஆதாரமற்ற பொய்கள், உண்மையென்னவெனில் கம்யூனிசம் உலகில் பரவிவிடுமோ என்ற அச்சம் காரணமாகவும்(அதுக்கு பரத்தமை பரவாயில்லை என்று அமெரிக்காவும்/அதியமானும் முடிவு செய்ததால்), பல நாடுகளில் இன்றும் இருக்கும் சோசலிச எச்சம் காரணாமாகவும் (சோசலிஸ்டுகளால் எச்சப் பண்ணப்பட்டு என்றும் பொருள் கூறுவோர் உளர்) பரத்தமை உலகில் நிலவுகிறது. இது குறித்து மேலதிக தகவல்களுக்கு அதியமானின் பல்வேறு முக்கியக் கட்டுரைகளை முடிந்தால் படிக்கலாம் (சுந்தர். சி, யிடம் வீட்டுக்கு வந்து பாருடா என்று சவால் விடும் வடிவேலு ஞாபகம் வந்தால் அதுக்கு கொம்பனி பொறுப்பல்ல)
இந்த புண்ணியவான் ஜார்ஜ் பெர்ணானட்ஸ் கூட தம்மை ’சோசியலிஸ்ட்’ என்று சொல்லிகொண்டவர் தான். அந்த கொள்கை பிடிப்பு காரணமாக தான் அய்.பி.எம் அய் ஏகாதிபத்திய சுரண்டல்வாதி என்று துரத்தினார். டாடா இரும்பாலையை நாட்டுடைமையாக்க முயன்றார். நல்ல வேளையாக அது நடக்கவில்லை.
அசுரன்,
’சோசியலிஸ்டுகள்’ என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் பலரும் இந்தியாவில் 1980கள் வரை பல கட்சிகளில், குழுக்களில் இருந்தனர். இந்திய சோசியலிச கட்சி, பிரஜா சோசியலிச கட்சி என்றெல்லாம் கட்சிகள் இயங்கின. ஜெயபிரக்காஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் இருந்தனர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும் சோசியலிஸ்ட் தான். அர்ஜுன் சிங், முலாயம் சிங் யாதவ் கூட ஒரு காலத்தில் சோசியலிசம் பேசியவர்கள் தாம்.
இவர்கள் எல்லோரும் போலி என்று உம்மை போன்ற மேதைகள் சொல்வீர்கள். நாளை ஒருவன் வந்த நீரும் ஒரு போலி அல்லது லூசு என்று சொல்வான். இதெல்லாம் எமது பிரச்சனை அல்ல. ஒருவர் தன்னை என்ன கொள்கைகளை கொண்டவர் என்று அழைத்துகொள்கிறாரோ, தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை என்ன பெயர் சொல்லி அழைக்கிறாரோ, அந்த பெயரை கொண்டுதான் அவர்களை refer செய்ய முடியும். எது போலி, எது ஒரிஜினல் என்று ஆராய்வது எம் வேலை அல்ல. நடைமுறையில் அவர்களின் கொள்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தியின என்று பார்ப்பதுதான் யாம் செய்வது.
அன்று இந்தியாவில் சோசியலிசம் பேசாத கட்சிகள் இல்லை. இருந்தால் அவை பிற்போக்குவாதிகள், முதலாளித்துவ கைக்கூலிகள் என்று ஏசப்பட்டனர். சோசியலிசம் என்ற பெயரில் லைசென்ஸ் ராஜ் வளர்ந்தது. ஊழல் பெருகி, நேர்மை அழிந்தது. நமது பொருளாதாரம் முடங்கியது. வறுமை பெரிய அளவில் இருந்தது.
சோசியலிசம் என்ற பெயர் அன்று மிக பரவலாக பொதுமேடைகளில், பொது புத்தியில் இருந்தது. நல்ல வேளையாக இன்று ஒழிந்துவிட்டது. அந்த கால கட்டத்தை பற்றி பேசும் போது, சோசியலிசம் என்ற சொல்லை உபயோக்கித்தான் வேண்டும். அது உமக்கு உவப்பாக இல்லாமல் இருக்கலாம். அது உம் பிரச்சனை. எமது பிரச்சனை அல்ல.
///சோசியலிசம் என்ற பெயர் அன்று மிக பரவலாக பொதுமேடைகளில், பொது புத்தியில் இருந்தது. நல்ல வேளையாக இன்று ஒழிந்துவிட்டது. ///
பூனை கண்களை மூடிக்கொண்டாயிற்று எனவே தான் இளாக இருக்கிறது.
நம்ம ஊரில் உள்ள கம்யுனிஸ்டு பூனைகள் தான் கண்ணை மூடிக் கொண்டுள்ளன !! கண்ணைத் திறந்து பாருங்கள், உலகம் உங்களை விட்டு எங்கேயோ போய் விட்டது 🙂
மார்க்சுக்கும் ஸ்டாலினுக்கும் மாவோவுக்கும் மாவு கட்டு போட்டு அனுப்பியாகிவிட்டது.
இது உங்களை போன்றவர்களுக்கு தான் மிக மிக பொருந்தும் !!!
1980க்கு முன்பு இந்தியாவில் நிலவிய political climate பற்றி உம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. சோசியலிசம் என்ற செல்லே இன்று அரசியல் மேடைகளில் இல்லை. (கம்யூனிஸ்ட் மேடைகள் தவிர). அன்று காங்கிர்ஸ் ‘ஜனனாயக சோசியலிச’ பாணி என்று முழங்கியது.
மேலும் :
http://en.wikipedia.org/wiki/Socialist_Party_(India)
http://en.wikipedia.org/wiki/Praja_Socialist_Party
இன்று ’தனியார்மயம்’ பற்றி பேசுவது போல் அன்று ‘தேசியமயம்’ பற்றி தொடர்ந்து விவாதம். அதாவது பெரும் தனியார் நிறுவனங்களை நாட்டுடைமையாக்குவது. டாடா ஏர்லைன்ஸ் தான் தேசியமயமாக்கப்ட்ட இன்றைய ஏர் இந்தியா. வங்கிகள், இன்ஸ்சுரன்ஸ் கம்பெனிகள், நிலக்கரி சுரங்கங்கள், மற்றும் பல துறைகளில் இருந்த பெரு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன.
புதிய நிறுவனங்கள் துவங்க கடுமையான கட்டுபாடுகள், லைசென்ஸ் முறைகள் ; வரி விகிதங்கள் இன்றைய நிலையை விட பல பல மடங்குகள் அதிகம். இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள். அன்னிய செலவாணிக்கும் கடும் தட்டுப்பாடு.
இதை பற்றி சரியான பார்வை இன்று கிடைப்பது மிகவும் கடினம். It will be very difficult for you people to imagine the conditions of those ‘socialistic’ decades in India.
அதியமான்,
சோசலிசம், சோசலிசம்னு அடிக்கடி சொல்றீங்களே இந்த சோசலிசம்னா என்ன? அது எப்படி இருக்கும்?
அதியமான் மிக முக்கியமான வரலாற்றுப் பிழை செய்கிறார், இந்தியாவின் அன்றைய பொலிடிகல் பிளாட்பார்மில் சோசலிசம் தவழ்ந்தோடியது எனவே சோசலிச இந்தியா, சோசலிச இன்னார் என்று குறிப்பிட்டுத்தான் பேச முடியும் என்று சொல்கிறார் அவர். சரிதான், மேலும், இன்று சோசலிசம் எங்கும் இல்லை பூனை கண்ணை மூடிக் கொண்டது போல கம்யூனிஸ்டுகள்தான் சோசலிசத்தை இன்றூ பேசுகிறார்கள் என்கிறார் இதுவும் சரிதான்.
இத்தோட சேர்ந்து இன்னும் ஒரு முக்கிய ஆய்வை அதியமான் செய்ய மறந்துவிட்டார். அவருக்காக நான் சிரமமெடுத்து செய்து கண்டுபிடித்த முக்கிய ஆய்வு இதோ, இந்தியாவில் ஏன் அகில உலக அளவில் இன்று பிரபலமான வார்த்தை, அனைத்து மேடைகளையும் ஆக்கிரமித்துள்ளது புரட்சி என்ற வார்த்தையே ஆகும். அமெரிக்காவின் கலர் புரட்சி, எகிப்து-துனிசியாவில் ஆரம்பித்து நம்ம புரட்சித் தலைவி, புரட்சிக் கனல் வரை புரட்சியில்லாத இடமே இல்லை. இதன் பொருள் என்ன தெரியுமா? புரட்சி நடந்துவிட்டது. ஏற்கனவே நடந்த புரட்சியை இன்னுமொரு நடத்த முயற்சி செய்து சக்தியை வீணாக்குகிறார்கள் கம்யூனிஸ்டுகள். இது புரட்சி யுகம் என்பதே உணை. இந்த விசயம் யாருக்கும் இதுவரை புரியவில்லை. அதியமானுடைய கட்டுரைகளை படிக்கிறேனோ இல்லையோ அவரிடம் விடாது விவாதம் செய்ததன் விளைவு அவரது ஆய்வுக் கண்ணோட்டம் எனக்கும் கொஞ்சம் வந்துவிட்டது. அதன் விளைவுதான் இந்த முக்கியக் கண்டுபிடிப்பு.
ஆகவே நண்பர்களே, பழைய காலம் சோசலிச, நடுக் காலம் சோசலிச எச்சம், இதொ இன்றைய காலம் புரட்சிக்காலம்….. எங்க இன்னொருமுறை சொல்லுங்க…..
சோசலிஸ்டு எம் ஜி ஆரை விட்டு விட்டீர்கள் அமைச்சரே…
வாழ்க அதியமான் ! வாழ்க அமெரிக்கா ! வாழ்க முதலாளிகள் !
//நாம் கம்யூட்டர் யுகத்திற்க்கி செல்ல சில பத்தாண்டுகளை இழந்தோம். // அப்போ தாய்லாந்துக் காரங்க கம்யூட்டர் யுகத்தில் நம்மைவிட பத்தாண்டு முன்ன இருக்காங்களா? சூப்பர் கம்யூட்டர் தயாரிச்சி வைச்சுவங்க தாய்லாந்துக்காரங்கதானே? (வடிவேலு சொல்லுவாரே, ;கண்ண் துறந்துட்டே கனவு கண்டாதான் உண்மையான காதல்னு பாரதியார் சொல்லிருக்கார்’னு அந்த ஸ்டைல்ல படிக்கவும்).
அதியமான் நீங்க சரியான பார்ம்ல இருக்கீங்க. கண்டினியு பன்னுங்க…
அசுரன்,
விதண்டாவாதம் என்பது இது தான். தாய்லாந் கம்யூட்டர் துறையில் இந்தியாவை விட முன்னே இருப்பதா சொன்னேனா ? (ஆனால் hardware உற்பத்தியில் சில துறைகளில் நமக்கு முன்பே அவர்கள் ஆரம்பித்துவிட்டனர்). 1977இல் அய்.பி.எம் அய் இந்தியாவை விட்டு துரத்தியதின் விளைவு பற்றி என்ன தெரியும் உமக்கு ? 90கள் வரை சுமார் 15 ஆண்டுகளை இழந்தோம்.
சரி, உம்மை போன்ற ’மேதை’களுக்க்ய் புரியறமாதிரி சொல்றேன். இந்தியாவில் இப்ப உள்ள அனைத்து (repeat : அனைத்து) பன்னாட்டு நிறுவனஙள், அவற்றின் துணை, இணை நிறுவனஙளை உடனே இங்கிருந்து துரத்த ஏற்பாடு செய்துவிட்டோம் என்று வைத்து கொள்வோம். அதாவது : IBM, HP, Motorola, Nokia, Siemens, Areva, EDS, Hyuandai, Ford, Nissan, Daimler Benz, BMW, Toyoto, Grundfoss Pumps, Intel, Cisco, Aramaco,
Citibank, HSBC, Standard Chartered Bank, BNP Paribas, etc, etc. என்ன ஆகும் ?
விளைவுகள் எப்படி இருக்கும் ? இதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
உம்மை சீரியசா எடுத்துக்கிட்டு பதில் சொல்வது வேஸ்ட் என்று இப்ப தோன்றுகிறது.
//உம்மை சீரியசா எடுத்துக்கிட்டு பதில் சொல்வது வேஸ்ட் என்று இப்ப தோன்றுகிறது.//
எனக்கு இது தோன்றி ரொம்ப காலம் ஆகிறது.
பன்னாட்டுக் கம்பனிகள்
ஒரு கட்டுரை
“கடவுள் முதலில் பன்னாட்டுக் கம்பனிகளைப் படைத்தார். அதன் பிறகு உலகத்தையும்…”
“தப்பு, தப்பு, தப்பு!
ஆதியில் பன்னாட்டுக் கம்பனிகள் மட்டுமே இருந்தன.
பன்னாட்டுக் கம்பனிகள் உலகத்தைப் படைத்தன. அதன் பிறகு உற்பத்திக் கருவிகளைப் படைத்தன. பிறகு தொழிற்சாலைகளைப் படைத்தன. பிறகு நுகர்வோரைப் படைத்தன.
சைத்தான் தொழிலாளர்களைப் படைத்தான். போதாமல் கம்யூனிஸ்ட்டுக்களையும் படைத்தான். தொழிலாளர்கள் போய்த் தொழிற்சாலைகளைப் பிடித்து அவை இயங்க முடியாமல் ஸ்ட்ரைக் போட்டுக் கலகம் பண்ணினார்கள்.
பன்னாட்டுக் கம்பனிகள் அவர்களைக் கட்டுப்படுத்த கடவுளைப் படைத்தன. கடவுளால் முடியாததால் பொலிஸ் ராணுவம் முதலாளிய பொருளாதார நிபுணர்கள் வெட்டிப் பேச்சு நவ தாராளவாதிகள் என்று பலரையும் படைத்து 200 கோடி ஆண்டுகளாக உலகத்தை ஒழுங்காகப் பாலித்து வருகின்றன.
பன்னாட்டுக் கம்பனிகள் போனால் உலகமே அழிந்து பிரளயம் ஏற்பட்டுக் கடவுள் பொலிஸ் ராணுவம் எல்லாமே இல்லாமற் போய் விடும். பிறகு நம்மை வருத்தி ஏமாற்ற யாருமே இல்லாமற் போய் நமது வாழ்வே குட்டிச்சுவராகிவிடும்.
எனவே, எல்லாரும், முரண்டு பண்ணாமல் ஆனந்தமாக மொன்சான்டோ சோளத்தில் வளர்ந்த மாடுகளை மக்டானல்ட்ஸில் உண்டு கொக்கா கோலா தீர்த்தம் அருந்தி மோட்ச கதி அடைவீர்களாக!”
அதியமான் தனக்குத் தேவையென்றால் எதையும் சோசலிசம் என்று சொல்லி அதன் ஊடாக கம்யூனிசத்தை இழிவு படுத்துவார். சோசலிசத்திற்கான அவரது இதே வரையறையின்படி புரட்சியை நான் வரையறுத்தால் விதண்டவாதம் என்பார்.
அதியமான் தனக்குத் தேவையென்றால் முதலாளித்துவத்தின் லாப வெறி யுத்தங்களுக்குக் காரணம் சிவப்பு அபாயம் கண்டு பாவம் அமெரிக்க முதலாளிகள் பயந்து போய் பீதியில் தவறு செய்துவிட்டார்கள் என்பார். ஆனால் இதே லாஜிக்கை சோவியத்தின் அரசியல் தவறுகளை ஊதிப் பெருக்கி அவர் கதைவிடும் போது மட்டும் மறந்துவிடுவார்.
அதியமான் தனக்குத் தேவையென்றால் ஆதாரமில்லாமல் மக்கள் தொகை அடர்த்தி என்று கதை விடுவார். அதே கதைக்கு என்ன் ஆதாரம் வாயால் வடை சுடாதீர்கள் என்றால் விதண்டவாதம் என்பார்.
மொத்தத்தில் இர்ரெஸ்பான்சிபில் சிடோ இண்டெக்லெக்சுவலாக இருக்கும் இவர் ஓபன் மைண்டு பற்றி கதைப்பது நல்ல நகைச்சுவை அனுபவமாக உள்ளது.
//சோசலிசத்திற்கான அவரது இதே வரையறையின்படி புரட்சியை நான் வரையறுத்தால் விதண்டவாதம் என்பார்///
அப்படி நான் சொல்வதாக நீரே அனுமானித்துக்கொண்டால் எப்படி ? சோசியலிசம், புரட்சி போன்ற சொற்களை பலரும் பல அர்த்ததில் உபயோகிப்பதை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டினால், அதை புரிந்து கொள்ளாமல், வெறும் உணார்சி வசப்பட்டு மட்டும் பேசுகிறீர்கள். கம்யூனிசத்தை ‘இழிவு’ செய்ய அது என்ன தனி மனிதனா ? ஒரு சித்தாந்தம் பற்றி, தியரி மற்றும் நடைமுறைகள் பற்றி விரிவாக பேசினால், கடந்த கால உண்மைகளை பேசினால், ’இழிவு’ படுத்துவதாக ‘கருதுவது’ மதவாதிகளின் பாணி. அப்ப நீரும் ஒரு ‘மதவாதிதான்’ !!!
சரி அப்பனே, இதெல்லாம் இருக்கட்டும். போக்குவரத்து நெருசல்களும் மக்கட்தொகை பற்றியும் மேதாவித்தனமாக பேசிய உமக்கு, பிறகு அதை பற்றி சர்வ சாக்கிரதையாக தவிர்த்துவிட்டு, இந்த சொற்கள் பற்றி மட்டும் தேவையில்லாமல் பேசுவது ஏன் ?
//அதியமான் தனக்குத் தேவையென்றால் ஆதாரமில்லாமல் மக்கள் தொகை அடர்த்தி என்று கதை விடுவார். அதே கதைக்கு என்ன் ஆதாரம் வாயால் வடை சுடாதீர்கள் என்றால் விதண்டவாதம் என்பார்///
என்ன கதை அசுரன் ? மக்கட் தொகை அடர்த்தி, இந்தியா முழுவதும் ஒரே அளவில் உள்ளதா என்ன ? அல்லது தாய்லாந் முழுவது ஒரெ அளவில் உள்ளதா? பாங்க்காகில் உள்ள நெருசலை, சென்னையுடன் ஒப்பிட பல parameters and issues கொண்டுதான் செய்ய வேண்டும்.
போக்குவரத்து நெருசலை குறைக்க ‘உருப்படியாக’ ஏதாவது யோசனை சொல்ல உம்மால முடியாது. அதை பற்றி நான் தொடர்ந்து எழுதியவற்றை பற்றி விவாதிக்கவும் துப்பில்லை. அந்த மைய விசியத்தை விட்டுவிட்டு தொடர்ந்து, இப்படி உளருவதுதான் உமக்கு வாடிக்கையா போச்சு. ‘ஒரு தமிழ் வலதுசாரி’ உம்மை போன்றவர்களை சொன்னது சரிதான்..
//என்ன கதை அசுரன் ? மக்கட் தொகை அடர்த்தி, இந்தியா முழுவதும் ஒரே அளவில் உள்ளதா என்ன ? அல்லது தாய்லாந் முழுவது ஒரெ அளவில் உள்ளதா? பாங்க்காகில் உள்ள நெருசலை, சென்னையுடன் ஒப்பிட பல parameters and issues கொண்டுதான் செய்ய வேண்டும்.
போக்குவரத்து நெருசலை குறைக்க ‘உருப்படியாக’ ஏதாவது யோசனை சொல்ல உம்மால முடியாது. அதை பற்றி நான் தொடர்ந்து எழுதியவற்றை பற்றி விவாதிக்கவும் துப்பில்லை. அந்த மைய விசியத்தை விட்டுவிட்டு தொடர்ந்து, இப்படி உளருவதுதான் உமக்கு வாடிக்கையா போச்சு. ‘ஒரு தமிழ் வலதுசாரி’ உம்மை போன்றவர்களை சொன்னது சரிதான்..//
இதே மாதிரி பல பேக்டர்கள் இருப்பது உங்களுக்கு சோசலிசம் என்ற ஒன்று கிடைக்காது போது மட்டுமே ஞாபகம் வருகிறதே ஏன்? இந்தியாவில் மட்டும் சோசலிச எச்சம் காரணம் என நீங்கள் சொல்ல முடியும் எனில் தாய்லாந்தில் உலகமயம் காரணம் என நான் சொல்வதில் என்ன தவறுள்ளது? மாத்தி மாத்தி பேசாமல் ஒரே அளவு கோல் உபயோகிக்கவும்.
//சோசியலிசம், புரட்சி போன்ற சொற்களை பலரும் பல அர்த்ததில் உபயோகிப்பதை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டினால், அதை புரிந்து கொள்ளாமல், வெறும் உணார்சி வசப்பட்டு மட்டும் பேசுகிறீர்கள். கம்யூனிசத்தை ‘இழிவு’ செய்ய அது என்ன தனி மனிதனா ? ஒரு சித்தாந்தம் பற்றி, தியரி மற்றும் நடைமுறைகள் பற்றி விரிவாக பேசினால், கடந்த கால உண்மைகளை பேசினால், ’இழிவு’ படுத்துவதாக ‘கருதுவது’ மதவாதிகளின் பாணி. அப்ப நீரும் ஒரு ‘மதவாதிதான்’ !!!//
சோசலிசம் புரட்சி பற்றி முதலாளித்துவத்தின் கேடுகளை மூடி மறைக்க மட்டுமே முன்னிறுத்தும் ஒருவரிடம் வேறு எதைப் பற்றி பேசுவதாம் ? சொல்லுங்க அதியமான்?
40 வருடம் முன்பு தரம் இருந்தது இன்று இல்லையென்று சொன்ன போது மட்டும் அங்கு சோசலிசத்தை நீங்கள் குறிப்பிட மறந்த கயமைத்தனத்தை சுட்டிக் காட்டினேனே அதை வசதியாக கடந்து சென்றீர்களே ஏன்?
//சரி அப்பனே, இதெல்லாம் இருக்கட்டும். போக்குவரத்து நெருசல்களும் மக்கட்தொகை பற்றியும் மேதாவித்தனமாக பேசிய உமக்கு, பிறகு அதை பற்றி சர்வ சாக்கிரதையாக தவிர்த்துவிட்டு, இந்த சொற்கள் பற்றி மட்டும் தேவையில்லாமல் பேசுவது ஏன் ?//
இந்தக் கட்டுரையில் போக்குவரத்துப் பிரச்சினையா ஓடிக்கொண்டிருக்கிறது? தாய்லாந்து பெண்கள் பற்றிய கட்டுரையிலும் வந்து வலிய சோசலிசம் என்ற வார்த்தையை போலியாகப் பயன்படுத்தி இழிவு செய்வீர்கள் எனில் எனது வாதமும் அதனைச் சுற்றித்தான் இருக்கும். உங்க இஸ்டத்து வாதம் செய்ய என்னை ஆனையிட முடியாது முதலாளி அவர்களே…
//40 வருடம் முன்பு தரம் இருந்தது இன்று இல்லையென்று சொன்ன போது மட்டும் அங்கு சோசலிசத்தை நீங்கள் குறிப்பிட மறந்த கயமைத்தனத்தை சுட்டிக் காட்டினேனே அதை வசதியாக கடந்து சென்றீர்களே ஏன்?//
இந்தப் பகுதி பள்ளிக் கல்வி தனியார்மயம் பற்றிய கட்டுரையில் நடந்ததை குறிப்பிட்டுச் சொல்லியுள்ளேன். அங்கும் திருவாளர் அதியமான் தனது குழப்படி வித்தகைகளை செய்துள்ளார் என்பதை பதிவுலகிற்கு அறியத்தருகிறேன்.
//அதியமான் தனக்குத் தேவையென்றால் முதலாளித்துவத்தின் லாப வெறி யுத்தங்களுக்குக் காரணம் சிவப்பு அபாயம் கண்டு பாவம் அமெரிக்க முதலாளிகள் பயந்து போய் பீதியில் தவறு செய்துவிட்டார்கள் என்பார். ஆனால் இதே லாஜிக்கை சோவியத்தின் அரசியல் தவறுகளை ஊதிப் பெருக்கி அவர் கதைவிடும் போது மட்டும் மறந்துவிடுவார். //
பாருங்க மக்களே இந்தப் பார்ட்டுக்கு பதில் சொல்ல மறந்துட்டார் நம்ம அதியமான்…
//சோசியலிசம், புரட்சி போன்ற சொற்களை பலரும் பல அர்த்ததில் உபயோகிப்பதை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டினால், அதை புரிந்து கொள்ளாமல், வெறும் உணார்சி வசப்பட்டு மட்டும் பேசுகிறீர்கள். //
இதே போலத்தான் முதலாளித்துவத்திற்கு ஒரே அர்த்தம் முதலாளீயின் லாபம் அதற்கான சுரண்டலும் என்றுதான் பலரும் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று உங்களிடம் நாங்கள் சொல்லிய போதெல்லாம் செல்லாது செல்லாது உண்மை முதலாளித்துவம் வேறு அப்படின்னு பீலா விட்டீங்களே அப்போ மட்டும் இதே பப்புலிச பார்வை உங்களுக்கு வர மறுத்துவிட்டது? சோசலிசம், புரட்சிக்கு இப்படி வரையறையில்லாமல் செய்வதன் மூலம் முதலாளித்துவத்தின் அனைத்து தவறுகளுக்கு சோசலிசத்தை காரணமாகக் காட்டி தப்பிக்க வைக்கலாம் என்ற கேடான யுக்திதானே உங்களிடம் வெளிப்படுகிறது? இதற்கு ஏன் நடுநிலைமை, ஓபன் மைண்டு, இண்டெக்லுசுவல், அனுபவம் என்று வார்த்தை ஜாலம் ?
மிகவும் பயனுள்ள சுவாரசியமான கட்டுரை. நன்றி.
அதென்ன வினவு தளத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது மட்டும் ரதி சாந்தி சந்தன முல்லை போன்றவர்களின் கருத்துக்கள் ஜொலிக்கின்றது?
வாழ்த்துகள் சாந்தி.
தாய்லாந்து பெண்களின் உண்மை நிலையை அறிய உதவிய தோழர்.சாந்திக்கும், பகிர்ந்த வினவுக்கும் நன்றி….
நல்ல கட்டுரை. அழகான புகைப்படம்.
‘புன்னகை தேசம்’ என்ற உங்கள் வலைப்பூவின் பெயர்க் காரணம் இப்போது தான் புரிகிறது.
//உங்களது மக்கள் தொகையை காரணம் காட்டும் முயற்சி ரொம்ப அரவேக்காடா இருக்கே?///
அது உம்மை போன்ற ’மேதை’களுக்கு அரவேக்காடா தான் தெரியும்.
Population density இடத்துக்கு இடம் ஒரு நாட்டில் மாறுபடும். நகரங்களிலும் தான்.
சாலைகளின் அகலம் மற்றும் capacity பெரிசா மாற்ற முடியாது. ஆனால் ஜனத்தொகை பெரும் போது, அதே விகுதத்தில் போக்குவரத்து அளவு மற்றும் வாகனங்கள் அதிகரிக்கும் என்பது அடிப்படை உண்மை. இதற்க்கும் சித்தாந்தங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதை இரண்டாம் வகுப்பு மாணவன் கூட எளிதாக புரிந்து கொள்வான் !! ஆனால் இப்படி நீர் எழுதுகிறீர் :
//எங்க போனாலும் இதேதானா? எல்லாரும் சிரிக்கிறாங்க அதியமான்.///
எல்லோரும் சிரிக்கவில்லை. நீர் மட்டும் தான் சிரிக்கிறீர்.
இப்படி ஒரு பொதுசபையில் காரணம் இல்லாமல் லூசுகள் மட்டும் தான் ’தனியாக’ சிரிக்கும் !! ஆனால் உம்மை லூசு என்று சொல்ல வரவில்லை. :))))
லிபட்டேரியன்,
மாந்தரே !சோசலிசம் என்றால் என்ன? அது எப்புடியிருக்கும் என்று நான் கேட்டு 10 மணிநேரம் ஆகிறது, இன்னும் பதில் தரவில்லையே!
நண்பர் சாந்தி,
இந்தியாவை விட ‘நல்ல’ வேலை தாய்லாந்தில் கிடைத்தால் தான் அங்கு சென்றிருப்பீர்கள். தாய்லாந்தின் பொருளாதார நிலைமை எப்படி உள்ளது ? கடந்த 35 ஆண்டுகளில் அங்கு எப்படி மாறியது ? economic conditions and trends எப்படி ?
வினவு இப்படி சொல்கிறது :
/////உலகமயத்தின் ‘அருளால்’ அங்கும் சமூக ஏற்றத்தாழ்வு அதிவேகமாக விரிவடைந்து வருகிறது. தாய்லாந்தின் நாட்டுப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு விவசாயம் அழிந்து நகரங்களும் கேளிக்கை சுற்றுலாக்களுமே முக்கிய மையங்களாகி வருகின்றன.///
அதற்க்கு நான் அளித்த பதில் :
இல்லை. மிக தவறான, ஆதரமில்லாத கருத்து. உலகமயமாக்கலுக்கு பின்பு தான் தாய்லாந் ’உருப்பட’ ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவும் தான். விவசாயம் அங்கு நன்கு செழிக்கிறது. நெல் உற்பத்தி மிக மிக அதிகரித்துள்ளது. சும்மா ஆதரமில்லாம இப்படி ‘கருத்து’ சொல்வது வினவுக்கு வழக்கமா போச்சு.///
நீங்க அங்கே வாழ்கிறவர். இக்கட்டுரை எழுதியவர். என்ன சொல்றீங்க இந்த விசியத்தை பற்றி ? தாய்லாந் உலகமயமாக்காலால் பயன் அடைந்துள்ளதா அல்லது மோசமாகிவிட்டதா ? ஏன் ?
நண்பர் சாந்தி,
இந்தியாவை விட ‘நல்ல’ வேலை தாய்லாந்தில் கிடைத்தால் தான் அங்கு சென்றிருப்பீர்கள். //
மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பு கோட்டாக்களில் எமக்கு வேலை எளிதாக கிடைக்காததாலேயே சென்றோம் என சொல்லலாம்.. கிறுஸ்தவர்கள் BC , மற்றவர்கள் MBC..
நல்ல வேலை என்பது முக்கியமான சில உயர்பதவிக்கு மட்டுமே என சொல்லலாம்.. இங்கே இந்திய கம்பெனிகளும் அதிகம்.. பிர்லா க்ரூப்ஸ், ஆங்காங்கே தொழிற்சாலை நிறுவி ஆடை உற்பத்திக்கான அனைத்து ரசாயனமும் தயாரித்தது.. அது போல பல இந்திய கம்பெனிகள் , ( Yarn, weaving , Knitting ) முன்னோடியாக திகழ்ந்தது..
சம்பளம் எத்தனை வாங்கினாலும் பள்ளி படிப்பு ( International School ) , மருத்துவ சிகிச்சை ( அப்பல்லோ மாதிரி ) , வீட்டு வாடகை எல்லாமே தலைநகரில் மிக அதிகம்..
ஆக இந்தியாவை ஒப்பிடும்போது பெரிதாக மிச்சம் செய்வதெல்லாம் முடியாது.. ஒன்றுபோல்தான்.. ஆனால் போட்டி பொறாமையற்ற, பொருட்கள் தட்டுப்பாடற்ற , அரசியல் , கட்சிகள் , தொந்தரவற்ற ,நிம்மதியான , அமைதியான வாழ்வு எப்போதும் , பாமரனுக்கும் உறுதி இங்கே..
சமீபத்தில் தலைநகரில் நடந்த போராட்டம் கூட தலைநகரில் குடியிருக்கும் சாதாரண மக்களை பாதிக்காதவாறு இரு பக்கமுமே நடந்துகொண்டனர்.. ( விமான நிலையம் கைபற்றிய கருப்பு தினம் தவிர )..
தாய்லாந்தின் பொருளாதார நிலைமை எப்படி உள்ளது ? கடந்த 35 ஆண்டுகளில் அங்கு எப்படி மாறியது ? economic conditions and trends எப்படி ?//
இது குறித்து விரிவா சொல்லணும்..
Globalization நுழைவும், அதன் பின் 1997 ல் ஏற்பட்ட சரிவினால் Self Sufficient economy க்கு திரும்பியதும் குறித்து…
உலகமயமாக்கல் எப்படி தாய்லாந்தையும் விட்டுவைக்கவில்லை என்பதை பின்னர் புரிந்தனர்..
Global financial markets, American economic hegemony, and the IMF’s and
the World Bank’s sinister agendas to bring developing countries to their knees were,
ostensibly, the culprits.6 To these critics of globalization, Thailand was forced to open
up from as far back as the mid-19th century, and has since been dominated by foreign
capitalists and multinationals, whose Western-aligned interests are preserved and
perpetuated by international financial institutions like the Fund and the Bank. As a
consequence, the Thai economy has become too open and too dependent on exports
and foreign investment, which makes it susceptible and vulnerable to the whims of
powerful external economic forces. Escaping the jaws of foreign economic
domination and subjugation requires a greater inward reliance on local resources, less
on the fickle and unequal international economy.
http://www.apcss.org/Publications/Edited%20Volumes/GrowthGovernance_files/Pub_Growth%20Governance/Pub_GrowthGovernancech4.pdf
\\இங்கே பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்தே ஆண் மணமுடிக்கணும்..//
\\ குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த ஒழுக்கத்தோடும் , நன்னெறிகளோடும், மரியாதையோடும் சிறார்கள் வளர்க்கப்படுகின்றனர்..//
\\எந்த நேரத்திலும் நள்ளிரவிலும் ஒரு பெண் தனியாக வேலைக்கு சென்று வர முடிகிறது.. பெண்களை மதிக்கிறார்கள்..//
\\ பேருந்திலோ,போக்குவரத்து நெரிசலிலோ , வங்கியிலோ அதிக நேரம் காத்திருக்கணும் என்றாலும் , அமைதியாக முணுமுணுக்காமல் பொறுமையா காத்திருப்பார்கள்.. அதிலும் குழந்தைகள் , கர்ப்பிணி, வயோதிகருக்கு முன்னுரிமை கொடுக்கவும் உதவவும் முன்வருவார்கள்.. இதற்காக சிறு வயதிலேயே பழக்கப்படுத்தப்படுகிறார்கள்..//
\\ஈவ் டீஸிங் போன்ற எவ்வித பிரச்னைகளுமில்லை இங்கே.. //
\\ பைக்மேன் பைக்கில் ஏறும் பெண்மணிகளை தத்தம் குடும்ப உறுப்பினர்களாய் பார்க்கிறார்களே தவிர எவ்வித சபல மனப்பான்மையும் இல்லை..அனேகர் பள்ளி குழந்தைகளையும் இப்படி மிக பொறுப்போடு அழைத்து செல்வதுண்டு.. துணிந்து செல்லலாம் அவர்களை நம்பி எந்நேரமும்.//
ஆகா,இதுவல்லவோ நாடு,இவர்களல்லவோ மனிதர்கள்.
தாய் மக்கள் சக மனிதர்களிடம் பழகும் போது கடைபிடிக்கும் நாகரிகமும் அவர்களின் பண்பாடு மிக்க நடத்தையும் தன்னம்பிக்கையுடன் கூடிய அவர்களின் கடின உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.அவற்றை இப்பதிவின் மூலம் அறிய தந்த சகோதரி சாந்திக்கு மிக்க நன்றி.கட்டுரையை படிக்கும்போதே தாய் மக்களை நினைத்து மனம் பெருமிதம் கொள்கிறது.
அதே சமயம் நம் நாட்டின் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. பேருந்துகள் நிலையத்தில் நுழையும்போதே இறங்க வேண்டியவர்கள் இறங்க கூட வழி விடாமல் அடித்து பிடித்து ஏறி இடம் பிடிக்கும் திடகாத்திரமான ஆண்கள்,முதியவர்கள்,கைக்குழந்தையுடன் பெண்கள் எ