privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!

சமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!

-

சமச்சீர் கல்வி - நாடகம்

சமச்சீர் கல்வி – பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்துமாறு அம்மாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “வலது இடது போலி கம்யூனிஸ்டுகளின் பேராதரவுடன் சட்டமன்றத்தில் அம்மா நிறைவேற்றிய சட்டத்திருத்தமும் செல்லத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாகப்பதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பின் முழு விவரம் இன்று மாலைதான் கிடைக்கும்.

தமிழகத்தின் காவல் தெய்வம், தங்கத்தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மூன்றாவது முறையாக முதல்வராக அமர்ந்து, முதல் முறையாக நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முதன் முதலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.

அம்மா உச்சநீதிமன்றம் போகிறார். ஒரு தலைப்பட்சமாக இடைக்காலத் தடை உத்தரவு எதையும் கொடுத்துவிடாமல் தடுக்கும் பொருட்டு, கேவியட் மனு தாக்கல் செய்வதற்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் உச்ச நீதிமன்றம் போகிறது.

உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் நவநீதி கிருஷ்ணனும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவும் முன்வைத்த வாதங்கள் உப்புசப்பற்றவை. அவர்கள் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு உள்ள இறையாண்மை மிக்க அதிகாரம் குறித்துத்தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்கள். தமிழ் மாணவர்களின் முடியைத் திருத்தி குடுமி வைப்பதற்கோ, அல்லது மொட்டை அடிப்பதற்கோ அம்மாவுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதெனினும், ஒரு கோடி மாணவர்களுக்கும் இந்த ஆண்டே, இந்தக் கணமே மொட்டை அடித்தாக வேண்டும் என்ற சட்டத் திருத்தத்துக்கான நியாயத்தை விளக்கவில்லை.

அம்மா வின் கோபம், அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனை நோக்கித் திரும்புமே தவிர, பத்மா ஸேஷாத்ரி பள்ளியின் தாளாளர் ஸ்ரீமதி ஒய்.ஜி.பார்த்தஸாரதி, டி.ஏ.வி ஸ்கூல் என்று அறியப்படும் தயானந்தா ஆங்கிலோ வேதிக் ஸ்கூலின் தாளாளர், ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் அம்மையார் ஆகியோரை நோக்கித் திரும்பாது. அம்மா வை மூக்கறுபட வைத்தவர்கள் இவாள்தான். பொதுப்பாடத்திட்டத்தைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரித்த அக்ரகாரத்து அறிவுஜீவிகளும், ஆங்கிலக் குஞ்சுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தங்களது தரப்பு வாதங்களைப் படித்துப் பார்ப்பார்களேயானால், தங்கள் முகத்தில் தாங்களே காறித்துப்பிக்கொள்ள வேண்டிய நியாயம் குறித்து அவர்கள் புரிந்து கொள்ள இயலும்.

வாதங்களின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று கொண்டால், தற்போதைய உயர்நீதி மன்றத் தீர்ப்பினை “நாம் எதிர்பார்த்த்துதான்’ என்று சொல்ல்லாம். நீதிமன்றங்களின் எதார்த்தநிலையைக் கணக்கில் கொண்டு கூறுவதாயின் இந்த தீர்ப்பு அவ்வப்போது நிகழும் அதிசயங்களில் ஒன்று.

இந்த வழக்குக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் பலர் உழைத்திருக்கின்றனர். வழக்குரைஞர் மோகன், புருஷோத்தமன் ஆகியோர் வாதிட்டிருக்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டக் குழவின் உறுப்பினரான கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் ஒன்றையும் பெற்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தாக்கல் செய்தது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் சார்பில் வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத், திருமதி மனோன்மணி அவர்கள் சார்பில் வழக்குரைஞர் விடுதலை ஆகியோர் இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கின்றனர்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் மார்க்சிஸ்டு கட்சியின் சார்பாளர் என்ற போதிலும் அக்கட்சியின் நெறியற்ற, சந்தரப்பவாத நடைமுறையை நிராகரித்து இறுதிவரை உறுதியாக நின்று போராடியிருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது. சமச்சீர் கல்விக்காக இவரும், இந்திய மாணவர் சங்கமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மார்க்சிஸ்டு, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைமைகள் அம்மாவின் குலக்கல்வித் திட்டத்துக்கு “ஓ” போட்டுக் கொண்டிருக்கின்றனர். சொரணையுள்ளவர்கள் வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து தாங்களாகவே வெளியேறிவிடுவார்களா அல்லது அன்புச் சகோதரி அவர்கள், இவர்களையெல்லாம் “நமது எம்ஜிஆர்” நாளேட்டில் கட்டம் கட்டி வெளியேற்றும் காலம் வரை காத்திருப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு தமிழகத்தில் ஜெ அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், வல்லுநர் குழுவின் அறிக்கை எரிப்பு, அம்மா வின் கொடும்பாவி எரிப்பு எனப் பல்வேறு வடிவங்களில் போராடியதும் சிறை சென்றதும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்தான். மக்களின் வரவேற்பையும், அதிமுகவினருடனான மோதலையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு கடந்த இரு மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன இந்த பிரச்சாரங்கள்.

இப்போராட்டத்துக்கு இணையாக மெட்ரிக் பள்ளிகளின் நன்கொடைக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்களும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. மெட்ரிக் மோகத்துக்கு ஆட்பட்ட பெற்றோரை, அந்தக் கொள்ளையர்களிடமிருந்து மீட்பதற்காகப் போராடுவதுடன், அவர்களை சமச்சீர் கல்வியை ஆதரித்தும், கல்வி தனியார்மயத்தை எதிர்த்தும் போராட வைத்திருக்கிறோம்.

000000000000000000000000000000000

போன வாரம் பேருந்து ஒன்றில் ஜெ அரசின் சமச்சீர் கல்வி ஒழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ஒரு ம.க.இ.க தோழர். “டேய்.. அம்மா ஆட்சியைப் பத்தி பேசாதே” என்று வெயிட்டாக வந்த்து ஒரு குரல். அதைக் காதில் வாங்காமல் அந்த தோழர் தனது பேச்சைத் தொடர்ந்தார். “டேய் பேசாதேங்கிறேன்ல” என்று குரலுக்கு ஏற்ற வெயிட்டுடன் எழுந்து நின்றது ஒரு கரை வேட்டி. “நான் என் கருத்தை சொல்றேன். நீங்க உங்க கருத்தை சொல்லுங்க. எது சரின்னு சனங்க முடிவு பண்ணட்டும்” என்று அந்தத் தோழர் மிகவும் நாகரீகமாகப் பதிலளித்தார்.

“டேய்.. நிறுத்துடான்னா…” என்று சொல்லி கையை ஓங்கிய கரை வேட்டியின் கை ஓங்கியபடி நின்றது. “னா..” என்ற குரல் முடியாமல் “ஆ” என்று தொடர்ந்தது. கரை வேட்டியின் கண்ணாடி தெறித்து கீழே விழுந்திருந்தது. “யோவ், இறங்கிப் போய்யா” “தம்பி தொலையிறான் விடுங்க” என்று தலையிட்டார்கள் பயணிகள். கரை வேட்டி தப்பித்த்து.

என்ன இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற்று செயித்த கட்சியல்லவா? கேப் இல்லாம ரெண்டாவது அடிய அடிக்கப்படாது.

_____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. போராடிப் பெற்றது இந்த தீர்ப்பு!

    உரிமை கொண்டாட வருவார்கள் போலிகள்.

    அவர்களின் நாடகத்தை மக்களின் முன்னே அம்பலப்படுத்தவேண்டும்.

  2. Arputham,adi kodutha nanbare vazhthukal!!!!Samacheer kalvi membadatum!!!vara viduvom pinbu membaduthuvom!!!thaniyar kalvi mayam tharaimatam aagatum!!!!etrathazhvatra kalvi nilavatum!!!

  3. சமசீர் கல்வியை அமல்படுத்த உயர்நீதி மன்றத்தின் ஆணையை கோடி வணக்கத்தோடு வரவேற்கிறேன்.இதை கருணாநிதி கல்வின்னு பாக்காமல் மேல்முறையீடு செய்து மேலும் மூக்குடைபட்டுகொள்ளாமல் இப்போதே அமல்படுத்துங்கள் சமசீர் கல்வியை!!இது ஜெயா அரசுக்கு குட்டு கருணாநிதிக்கு ஷொட்டுனெல்லாம் சொல்லி மேலும் அரசியல் படுத்தாமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனே அமல்படுத்தவேண்டும் சமச்சீர் கல்வியை.
    சமச்சீர் கல்வியை அமல்படுத்த மறுக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் நைசாக சி பி எஸ் இ ஆக மாற்ற முயலும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றும் பழைய பாடத்திட்ட புத்தகத்துக்கென பல ஆயிரம் பிடுங்கிய காசை திரும்ப வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.இதை மறுக்கும் எந்த பள்ளியின் அங்கீகாரத்தையும் அரசு ரத்து செய்துவிடலாம்!
    பல ஆயிரம் பள்ளி(கொள்ளை) கட்டணத்துக்கும் அரசு ஒரு முற்றுபுள்ளி வைக்க இதுவே சரியான நேரம்.

    • ஏற்கனவே உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வி தொடர்பாக நடைமுறைத்தல் பற்றிமட்டுமே

      குழுஅமைத்து ,அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தது.மேலும்

      உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவேண்டும்.மீண்டும்

      உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், இவர்கள் யாருக்காக இதைச் செய்கிறார்கள்

      என்பதை மக்கள் அறியச் செய்யவேண்டும்.

    • அடி ஆத்தா!
      செருப்படியா?
      ————– க்கு” தோல் ” மிகவும் தடிப்பானது!

  4. //உரிமை கொண்டாட வருவார்கள் போலிகள்.// வேறென்ன சொல்வார்கள். இதுதான் எங்களது ஆரம்பகாலத்திலிருந்தான நிலைப்பாடு என்று.

    • ஏற்கனவே வந்து விட்டார்கள். தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று வெட்கமில்லாமல் பேட்டி எல்லாம் கொடுத்து விட்டார்கள்.

      • அவர்களால் பேட்டி மட்டும் தா குடுக்கமுடியும்! வேற ஏதும் செய்ய முடியாது!

  5. கட்டுரைக்கு சம்பந்தமில்லைனு வினவு நினைச்சா நீக்கிறலாம். இந்த கட்டுரை ஊடாக அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.

    தமிழகத்தில் தேர்தல் நடந்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து சமச்சீர் கல்வி ஒழிப்பு, தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை, போலீசு ஆராஜக படுகொலைகள்-தடியடி, லா அண்டு ஆர்டர் டுமீல், அக்யூஸ்டு கிரிமினல் நித்தியானந்தா ஆட்டம் இவையெல்லாம் நடந்துவிட்டன என்பதை இந்த பொன்னான தருணத்தில் அவருக்கு அறியத் தர விரும்புகிறேன்.

    இன்னமும் கருணாநிதி ஆட்சி நடக்கின்ற ஹேங் ஓவரில் மட்டுமேதான் அவர் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் எழுதுவதை பார்த்தால் ரூமை விட்டு கடந்த 3 மாதங்களாக் வெளிவராமல் எழுதுவது போலத் தெரிகிறது.

    எனவே, அண்ணன் தனது துயிலை முடித்துக் கொண்டு உடனடியாக ரூமை விட்டு வெளியே வந்து அம்மாவின் சமச்சீர் கல்வி ஒழிப்பு சதி டங்கலாகவிட்டத்தற்கு ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புத் தம்பி,
    அசுரன்.

  6. நீதிமன்றத்தின் தீர்ப்பில் அம்மா அரசு தந்த ‘பாடப்புத்தகங்கள் சமச்சீருக்கு உகந்தவை அல்ல’ என்பதுதான் குழுவின் ஒருமித்த முடிவு என்பது அப்பட்டமான புளுகென்பது அம்பலமாகி உள்ளது. நீதிபதி கேட்டபடி மினிட்ஸ் ஆப் மீட்டிங்கில் ஒவ்வொரு உறுப்பினரும் முன்வைத்த தனித்தனிக் கருத்துகளை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    அது:

    31. Pursuant to our direction, the learned Advocate General produced before us, in two sealed covers, the original minutes of the meeting of the Committee and the suggestions given by individual members of the Committee. The materials produced before us were perused. Prof. Anil Sethi, Department of Education in Social Sciences, NCERT, is one of the members of the Committee. It appears that the said member was entrusted with the task of going through the text book for the subject English to Ms. Meenakshi Khar and the Social Science text books for Standards VI to X to Dr. Malla V.S.V. Prasad. This fact is evident from the copies of the e-mail message received by Prof. Anil Sethi from Ms.Meenakshi Khar and Dr. Malla V.S.V. Prasad. The comments offered are interesting to note and for better appreciation, there are reproduced as found in the e-mail messages:-
    “The current series, from classes I to X brought out by Tamil Nadu Text Book Corporation is entitled – English and it is meaningfully conceived than the series of the previous English Reader Matriculation course.
    The Text Book developers have attempted to incorporate in them principles of English language teaching as stated in NCF 2005.
    Books are learner centric to some extent and provide support to the teachers through the column – instructions to the teachers.
    However, the goals of English Language Curriculum as enumerated in NCF 2005 are not wholly defined in all the three text book series.
    Printing size of the book, paper quality and pictures are good and better than the previous one.
    It is suggested that modifications are required in the present set of books, so that they can be aliened with the principles of English Language teaching as stated in NCF 2005, and described in NCERT text books.”
    32. The remarks offered by Dr. Malla V.S.V.Prasad on the subject Social Science for Standards VI to X have been set out under four sub-headings, namely, Strengths, Weaknesses, Opportunities and Threats. At the end of the remarks, answers for the following questions have been given, which are reproduced hereunder :-
    “Deficiencies
    Yes, but can be rectified!
    Did the DMK Government introduce propaganda material? Almost no.
    Do the textbooks politicize the minds of young children? Hardly.
    Is there scope for creative learning and extra textual learning? Limited.
    The competence of the students in the State would not be on a par with students of other parts of the country while facing national-level examinations.
    Difficult to prove
    These are preliminary remarks. A detailed study of the common syllabus and common textbooks has to be undertaken.”
    33. Prof. Tripathi, Member of the Committee, has offered his comments on the Science Textbooks under the sub-heading ‘General Comments’, wherein it has been mentioned as follows:-
    “The overall appearance and layout of all the textbooks is attractive and eye catching. The use of colourful pictures, diagrams and photographs at the appropriate locations is appreciable. The language used in all the textbooks is simple and comprehensive for the targeted age groups. The boxed item “more to know” and the biographies of scientists are appreciated as these may help students to explore beyond the textbooks.
    34. The following comment has been offered for the mathematics text book for Standards IX and X :
    “15. To a large extent the present textbooks in mathematics at Secondary stage are in accordance with NCF-2005 while practical geometry should find a place before the chapter on mensuration in class X and similarly form class IX.”
    35. Mrs. Vijayalakshmi Srinivasan, the other Committee member, has given her comments and the relevant portions which appear to have not been fully stated in the final report of the Committee are extracted hereunder:-
    “Samacheerkalvi aims to integrate the four streams existing in Tamil Nadu today. It is a laudable objective and a necessity. The present Matriculation and Anglo Indian streams are not perfect systems and do not conform to the principles and laid down in the national curriculum frame work 2005. The samacheerkalvi syllabus and the textbooks have been prepared keeping the matriculation syllabus as a benchmark.
    English
    Syllabus
    I.(i) In classes VII to X there is a distinct upgradation in overall standard compared to the present state board syllabus and is equivalent to the Matriculation and Anglo India syllabus.
    In classes to I to VI the standard is comparatively lower than that of Matriculation and Anglo Indian streams.
    II. Structure and Presentation
    (i) Statement of objectives and teaching learning processes have been clearly stated in all classes. There is a note to the teacher before every unit. But evaluation topics on grammar at the end of each lesson are not connected to the lesson.
    Textbooks
    (I) Content and Presentation
    (ii) Logical sequencing has been followed
    (iii) There is less burden on the students particularly in the primary classes.
    II. Appearance and Lay out.
    Appearance and Lay out is good and appealing.
    Yes. There are a few instances of portraying personality and political achievements. Mostly found in the primary section. Do not find any objectionable material in the higher class text books.
    Mathematics
    Syllabus
    I Content
    (i) From classes I to VI the level is lower than that of the four streams. From classes VII to X there is progressive increase of the level and it is on par with the matriculation and Anglo Indian streams but higher than the state board syllabus.
    III Gradation
    There is a logical arrangements of topics and they flow smoothly from one unit to another and from one class to another. There is a gap between class VI to VII in area of fractions and integers which needs to be bridged.
    Textbooks :
    I Content and Presentation
    (i) Content is age appropriate and comprehensive.
    (iii) The subject matter is well presented and is student friendly.
    (iv) There is a logical sequence from class to class.
    (vi)Maths lab activities are found only in one or two classes.
    (vii)There is an attempt to provide activities meaningful to rural population but is mainly urban oriented.
    II. Appearance and Lay out
    Appearance and Lay Out is good and appealing. Student friendly
    IV.Pictorial Presentation
    Pictorial representation is good and relevant. Multicoloured graphs and geometrical constructions will help students to understand better graphical representation and geometrical constructions.
    V. Linkages
    Content in lower classes is relevant to their day to day life.
    With a decrease in content in lower classes there is a good chance that students will not develop a dislike for math.
    Science
    Syllabus
    Textbooks
    I Content and Presentation
    i) Content is age appropriate but not comprehensive.
    ii)There is an upgradation of content in classes VII to X for students of state board.
    iii)Compared to matriculation board there is facilitation of learning without burden.
    iv) Logical sequence is absent from class to class.
    VII. Free from gender and religious bias no political indoctrination
    Social Science
    Syllabus
    I Content
    (ii) An attempt has been made to follow the NCERT pattern in the primary classes upto class V. From class VI to X matriculation pattern is followed.
    III Gradation
    There is a logical arrangements of topics and they flow smoothly from one unit to another and from one class to another.
    Textbooks:
    I Content and Presentation
    (v) There is an upgradation of content in classes VII to X. In classes I to VI topics covered are lesser than that of the other streams, but there is a progressive increase of topics and difficulty level from classes VII to X to enable students to compete at the national level.
    vi) The subject matter is well presented and is student friendly.
    VII Free from gender and religious bias. There are a few references to living political personalities and their contribution to Tamilnadu particularly in the primary classes.
    Conclusion
    The syllabus of neither Matriculation nor the present Samacheerkalvi conform to the principles of NCF 2005. It would be appropriate and effective if introduction is done in a phased manner. There is a gap between the class IX syllabus of last year and that of class X in the new syllabus. The students of class X in state board will find it difficult to cope with additional volume of content in all the subjects in such a short time. The students and teachers need adequate time to prepare for the board examination. There is no dispute about the introduction of Samacheerkalvi in the state. But it would benefit the students, if it is introduced in a phased manner like it was introduced for classes I and VI.”
    36. Mr. C. Jaidev, in the concluding portion of his report, has observed hereunder :-
    “Conclusion
    Whenever a new system is evolved, it should be in such a manner that a balanced standard is reached without diluting the existing one. Even though, the aim of Samacheer Kalvi is highly laudable, one should understand that dilution can never be a solution. Instead, everybody should be raised to a higher level so that the emerging system will ultimately fulfill the aim for which this reformation is done. It is not correct on our part to underestimate our children’s capability and reduce the standard instead of raising it to a better level. In the formative years, the absorption capacity of the children will be at its peak and this has to be made use of in full. Only this will put the future generation of Tamil Nadu at a higher platform when compared to others. Right now, it appears that this objective stands defeated.”
    37. Dr. Mrs. Y.G. Parathasarathy, in her report, has concluded by stating :-
    “Under the Circumstances I would recommend the entire textbooks standard I to standard X have to be revamped, corrected and improved in all aspects. It would need at least two or three years for this exercise instead of rushing into the introduction of same for all classes at one go.
    The introduction of Uniform Syllabus should be done in a phased manner after providing adequate infrastructure facilities and training the teachers for the same after revamping the syllabi and the textbooks as suggested above.
    The introduction of workbooks will further enhance the comprehension and application of concepts learnt. This will facilitate learning without burden.”
    38. From the comments/report furnished by the Members, referred supra, it is evidently clear that the members have not outrightly discarded the uniform syllabus and common textbooks; infact, one of the Committee Members has concluded by saying that neither the Matriculation nor the Uniform Syllabus conform to the principles of NCF-2005. Their uniform opinion appears to be that certain changes, amendments and additions are required to be made to the uniform syllabus and common textbooks and implementation thereof could be done in a phased manner, and it appears that there is no consistent opinion that the uniform syllabus and common textbooks have to be outrightly rejected or discarded. Thus, it appears that the final report submitted to this Court does not contain the full and actual views expressed by each committee member and their intent.

    • ”அம்மா வை மூக்கறுபட வைத்தவர்கள் இவாள்தான். பொதுப்பாடத்திட்டத்தைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரித்த அக்ரகாரத்து அறிவுஜீவிகளும், ஆங்கிலக் குஞ்சுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தங்களது தரப்பு வாதங்களைப் படித்துப் பார்ப்பார்களேயானால், தங்கள் முகத்தில் தாங்களே காறித்துப்பிக்கொள்ள வேண்டிய நியாயம் குறித்து அவர்கள் புரிந்து கொள்ள இயலும்”.

      விவரங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன.

      • compare matriculation books and samcheer books
        and thanks for compare samcheer books and old books take time give good opeionion, give tamil meaning of above minits of “மினிட்ஸ் ஆப் மீட்டிங்கில் ஒவ்வொரு உறுப்பினரும் முன்வைத்த தனித்தனிக் கருத்துகளை “

  7. Vinavu & Co : eppao mattum court ellam ‘kavi mayam’ ellaya -:) ….parpanargalinum koodaram ellaya -:) …when they give judgement in favour of your ‘thoughts’ onnum solla mattinga…

    • ”நீதிமன்றங்களின் எதார்த்தநிலையைக் கணக்கில் கொண்டு கூறுவதாயின் இந்த தீர்ப்பு அவ்வப்போது நிகழும் அதிசயங்களில் ஒன்று”. கட்டுரையை முழுதாகப் படிக்காமல் ஏன் இந்த அவசரம்?

  8. குரோத போக்கையும்,காழ்ப்புணர்ச்சியையும்,ஒரு புறம் வைத்து விட்டு தீர்ப்பை மதிப்பாரா அல்லது தொடறுவாரா?பார்ப்போம்.

  9. ஆமாடா அம்பி சீனுக்குட்டி.அதிசயமான தீர்ப்பு என்று முதலில் சொல்லிவிட்டார்களே

  10. நமக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் மோகன்,புருஷோத்தமன். பிழைதிருத்தம் செய்யவும்.

  11. இந்த வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.தமிழகம் முழுவதும் போராடியவர்களுக்கு பாராட்டுக்கள்.

  12. நீதிமன்றங்கள் காவி மன்றங்களாகி விட்டதென ஒப்பாரி வைக்கும் ஜென்மங்கள் இனிமேலாவது திருந்தட்டும்.


    மாக்ஸிமம்

    • அப்போ இந்த தீர்ப்பை காவிகளுக்கு எதிரான தீர்ப்பு என்று எடுத்துக்கொள்ளலாமா max ?

      • “இப்போராட்டத்தை பார்ப்பன-பாசிச ஜெயா கும்பலுக்கும் தனியார்மயம்-தாராளமயத்துக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை.”

        மேற்கண்ட வினவின் வரிகள் உங்கள் சந்தேகத்தை போக்கும்.

        மாக்ஸிமம்

    • மாக்ஸிமம் அண்ணே. ஸ்டாட் மீஸிக். டண்டண்ணாக்க டண்ணக்குணக்க. உங்கள சமாளிக்கவே முடியலயேண்ணே

  13. மூதேவி மூனா கானா தொடை தட்டாம இருக்கணும் (பாத்தியா தீர்ப்பன்னு)
    அம்மா இன்னும் காண்டு ஆயிடும்.கள்ள சாராயம் காய்சுரவனுக்காவது
    கொஞ்சம் குற்ற உணர்வு இருக்கும்.இந்த கம்மனாட்டி காலிப்பயலுங்க
    கல்வி தந்தைகளுக்கு ஒரு மசிரும் கெடையாது.

    • //இந்த கம்மனாட்டி காலிப்பயலுங்க
      கல்வி தந்தைகளுக்கு ஒரு மசிரும் கெடையாது//

      ஒரு வார்த்தை ஆனாலும் அது திருவார்த்தை

  14. ஒரு தலைமுறைக்கான வெற்றி. இந்த வெற்றிக்காக உழைத்த நமது அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

  15. தமிழகத்தில் கோர்ட்கள் வண்ணமின்றிதான் இருக்கிறது மாக்சிமக்கு அவர்களே. வடக்கே தான் காவிமயமாக உள்ளது.அங்கேயும் ஒரு பெரியார் தொன்றியிருந்தாலோ அல்லது பெரியார் சொன்னதை வீரமணி ஒழுங்காய் செய்திருந்தாலோ இந்தியாவில் காவி காலியாகி இருக்கும்.

    • அறிவாளி,

      தமிழகத்தில் கோர்ட்கள் வண்ணமின்றிதான் இருக்கிறது என்று ஒத்துகொண்டதற்கு நன்றி. கூடிய சீக்கிரம் வடக்கிலும் அப்படிதான் என்றும் உணர்வீர்கள்

      ஏன் பெரியாரின் வேலைகளை வீரமணி தான் செய்யனுமா? மத்த யாரும் பண்ண கூடாதா?


      மாக்ஸிமம்

      • பெரியாரின் வேலைகளை நீங்கள் செய்ய முன்வந்தால் நீங்களும் என் தோழரே. ஆனால் காவி வண்ணம் எல்லா இடத்திலும்நீக்கமற நிறைந்திருப்பதை நீங்கள் என்று உணருகிறீர்களோ அன்றுதான் அதை எதிர்க்க முனைவீர்கள். இது வரைநீங்கள் திருத்த முடியாதவர் என்று எண்ணியிருந்தேன். அதனாலேயேநக்கலான பின்னூட்டங்களை இட்டுக்கொண்டிருந்தேன். நீங்கள் பார்ப்பனீயத்தின் சதிவேலைகளை உணரவேண்டும் என்றால் இந்த லிங்குக்கு போங்கள். http://www.ambedkar.org/writeNspeech.html தாழ்த்தப்பட்டவர்களை இன்னும் தீண்டத்தகாதவர்கள் என்று எண்ண மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.
        மேலும் ராகுல சாங்கிருதயன் எழுதிய வால்கா முதல் கங்கை வரை என்ற புத்தகம் நல்ல அறிமுகம்.(அதில் பல செய்திப் பிழைகள், தத்துவப்பிழைகள் இருந்தாலும்).
        பெரியாரின் அரசியல்சட்ட எரிப்பு போராட்டம் ஏன், இந்து மதப் பண்டிகைகள், கடவுளர் கதைகள், மதம் மாரினால் குற்றமா, பெரியார், பெண் ஏன் அடிமை ஆனாள் ஆகியன.

        படித்து விட்டு வாரும். அதன் குறைநிறைகளை விவாதிப்போம்.

        • இன்னும் எத்தனநாள்தான் இந்த வெட்டிப்பொழப்பு…

          //பார்ப்பனீயத்தின் சதிவேலைகளை//

          என்னது பாம்பேல்ல பாம் வச்ச சதி வேலையா…

          • //பார்ப்பனீயத்தின் சதிவேலைகளை//

            பார்ப்பனீயம் செய்த செய்து கொண்டிருக்கும் சதி வேலைகள் ஒன்றா இரண்டா எண்ணிக்கூற?
            புத்தன் கதையை பார்ப்போம். புத்தன் வேதங்கள் பொய் கடவுள் பொய் என்று கூறினான். அவன் வழியை பின்பற்றியவரில் பார்ப்பனரும் நுழைந்தனர். மெல்ல மெல்ல ஊடுறுவி அதை நிறுவனமயமாக்கினர். பின்னர் புத்தனை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர். பின்னர் புத்தனுக்கு கோவில், பூசாரியாக பாப்பான். மெல்ல தத்துவ மதமாக வாழ்வியல் கற்றுத்தரும் மதமாக இருந்த அதை சடங்குகளின் மதமாக மாற்றினர். மக்களுக்கு அதை அன்னியப் படுத்தி பழைய வேத மதம் போல் ஆக்கி விட்டனர். சங்கரன் வந்தான். புத்தத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்து விட்டான். வேத மதத்தை மக்கள் விரும்பும் மதமாக மாற்றிவிட்டான். இவ்வாறு பிராமணீயம் பலப்பல வழிகளில் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு சாக மறுக்கிறது. இன்று அது முதலாளித்துவத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு தன்னைத்தானே வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

            நண்பரே. சூத்திரர் யார். அவர்கள் ஏன் அடிமைப்படுத்தப்பட்டார்கள். பிராமணீயத்தின் பங்கு இந்தியாவில் என்ன. ஜாதிகளின் தோற்றுவாய் என்ன. கடவுளர்களை எப்படி எப்படியெல்லாம் பாப்பார்கள் உருவாக்கினர், மாற்றம் செய்தனர் என்று அழகாக அம்பேத்கர் ஆராய்ந்து உள்ளாஆர். படித்து விட்டு வாருங்கள். பின்னர் எது வெட்டிப் பொழப்பு என்று பார்ப்போம்.

        • அம்பேத்கர் குறித்த லிங்க் அனுப்பியதற்கு நன்றி.

          உங்கள் நம்பிக்கை வீண் போகாது. தாழ்த்தப்பட்டவர்களை தீண்டதகாதவர்களாக பார்க்கும் எண்ணம் எனக்கு இருந்ததும் இல்லை. இனிமேலும் இல்லை. மற்றபடி எனது பின்னூட்டங்கள் வினைக்கு எதிர்வினை என்ற அடிப்படையிலானது மட்டுமே. காரணம் நீங்கள் சொல்லும் அதே காரணம் தான்.

          அடிப்படையில் நானும் ஒரு கம்னிஸ்ட் ஆக இருந்தவன் தான். (கருணாநிதி டைப் கம்னிஸ்ட் இல்லீங்க). பெரியாரின் பால் ஈர்க்கப்பட்டவன் தான். ஆனால் பின்னாளில் அது ஏதும் எனக்கு உதவாது என்று எண்ணி மறுத்ததும் நான் தான். சில சம்பவங்களை காரணமாக சொல்வேன்.

          சிறுவயதில் எனது தெருவில் ஒரு ஹோட்டல் இருந்தது. நீண்ட தாடியுடைய, எந்நாளும் கருப்பு சட்டையும், பழுப்பேறிய வேட்டியும் அணியும் வயதான தாத்தா ஒருவர் அதன் உரிமையாளர். தீவிர பெரியார் தொண்டராக அறியப்பட்டவர், அவரது கடை அப்பகுதி பெரியார் தொண்டர்களுக்கான இலவச விவாத மேடை. விடுதலை நாளேட்டின் பக்கங்கள் ஒவ்வொரு மேசையிலும் இறைந்து கிடக்கும். . நான் அக்கடைக்கு செல்லும் போதெல்லாம் விடுதலையை வாசித்ததுண்டு. கலகக்காரரின் பேச்சுக்கள் அடங்கிய ஏதோ ஒரு கட்டுரை வெளிவரும். சிறு வயதில் விஷயங்கள் புரியாமல் இருந்த காலத்திலேய அதை படிக்கையில் பெரியாரின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது. பின்பொரு நாளில் அந்த தாத்தாவின் பேத்தி ஒரு மாற்று சாதி வாலிபனுடன் ஊரை விட்டு ஓடிப்போன செய்தி கேட்டு தாத்தா யாரிடமும் பேசுவதை நிறுத்தி கொண்டார். பேத்தி காதலித்து ஓடிப்போனது தாத்தாவுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் தான் அவர் பேசுவதை நிறுத்தி கொண்டார் என்றும் ஒரே பேச்சு.

          கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடிய காலம், நிறைய பொதுவுடைமை பேசும் நண்பர்கள்.ஒருசிலர் வாலிபர் சங்கங்களிலும் உறுப்பினர்கள். நிறைய பேசுவோம்,சினிமாவிற்கு போவது முதல் சங்கம் கட்டுவது வரை. அனைவரது வாகனங்களிலும் சேகுவேரா, பகத் சிங், பெரியார் , அம்பேத்கர் படங்கள் தாங்கிய நம்பர் பிளேட்டுகள். ஒருமுறை டூ வீலரிலேயே குற்றாலம், கன்னியாகுமரி, கேரளாவில் சில இடங்கள் சுற்றுலாவாக சென்று வந்தோம். பொதுவாக மலையாளிகள் தமிழனை மதிக்க மாட்டார்கள் என்ற கருத்து உண்டு. நாங்கள் வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கேரளாவில் சில இடங்களில் நல்ல வரவேற்பு இருந்தது .கம்முநிசம் அங்கே வலுவாக இருந்தது.நிறைய பொதுவுடைமை பேசினார்கள்.

          பின்னர் சில காலம் கழித்து வளைகுடாவிற்கு பணி நிமிர்த்தமாக சென்றபோது. அங்கே கம்முநிசமும் பொதுவுடமையும் பேசிய அதே மலையாளிகள் அரபிகளுக்கு அடிமைகளாக , இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு தங்களை அர்ப்பணித்து கொண்டதை பார்த்த போது எனக்குள் மிகப்பெரிய ஏமாற்றம்.

          அதே வளைகுடாவில் வேறொரு நாட்டிற்கு மாறுதலாகி சென்றபோது நான் நமது இஸ்லாமிய சகோதரர்களிடம் எதிர் கொண்ட முதல் கேள்வியே “உங்க பேரு என்னா”?.

          உங்கள் பேரை வைத்தே உங்களின் மீதான அணுகுமுறை தீர்மானிக்கப்படும். இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் போது நம்மிடம் மதம் சாதி பார்க்காமல் மாப்ளே, மச்சான் என்று பாசத்தோடு அழைக்கும் அதே நண்பர்கள் வேறொரு இடத்தில நம்மை வைத்து பார்க்கும் போது. அவர்களுக்கு தோன்றும் பெருமிதம் விவரிக்க இயலாது.

          சரி விஷயத்திற்கு வருவோம். மேற்கூறிய சம்பவங்களில் நான் தெரிந்து கொண்டது என்ன? சாதி மதம் எல்லாம் அடுத்தவனுக்கு உபதேசிக்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது, அந்த பிரச்சினை நமது வீட்டுக்குள் வரும்போது அதை மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அல்லது இந்த சமுதாய சூழல் அதை தடுக்கிறது.

          கம்முநிசம் பேசும் போது உணர்ச்சி பொங்குகிறது. ஆனால் தனது வேலை, குடும்பம், பொருளாதார தேவை, என்று ஒரு சூழ்நிலை வருபோது. கடைசியில் வயிறுதான் ஜெயிக்கிறது. கம்முநிசம் , பொதுவுடைமை பேசி வேலைக்கு போன இடத்தில கொடி பிடித்து கொண்டிருந்தால் இழப்பு நமக்குதான். நிர்வாகம் அடுத்த விமானத்தில் ஊருக்கு டிக்கெட் கொடுக்க எந்நேரமும் தயாராய் இருக்கிறது.

          சமத்துவம், சகோரத்துவம், மதச்சார்பின்மை எல்லாம் இங்கே இந்தியாவில் பேசும் போது இனிக்கிறது. அதே நண்பர்களிடமிருந்து அவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் வெளிப்படும் பெருமித உணர்வு பாகற்காயாய் கசக்கிறது.

          இதற்கு பிறகு நடப்பது என்ன? நாமும் நமது சாதி, மத பெருமிதத்தை வெளிக்காட்ட தொடங்குகிறோம்.அவ்வளவுதான்.

          எனது பார்வையில் எல்லா பொதுநலத்திலும் ஒரு சுயநலம் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது.

          கம்முநிசத்தை இந்தியா முழுமைக்கும் எற்றுகொள்ளதக்கதாய் மாற்ற வேண்டும் என்று இன்று வெவ்வேறு பெயரில் கம்முநிசம் பேசும் எல்லோரும் விரும்பியிருந்தால் இங்கே எதற்கு இத்தனை கட்சிகள், அமைப்புகள் ,சங்கங்கள் கம்யூனிஸ்ட் பெயரில்?

          பெரியாருக்கு பின் அவரது கொள்கைகளை பரப்பி மானிடர்தம் இழிவை அகற்ற எல்லோரும் ஒருமித்து உறுதி பூண்டிருந்தால் எதற்கு இங்கே இத்தனை கட்சிகள். பகுத்தறிவாளரின் குடியரசு கட்டுரைகளை வெளியிட கோர்ட் வரை சென்று தீர்ப்பு வாங்கும் அவல நிலை ஏன்?

          ஆக, எல்லா பொதுநலத்திலும் ஒரு சுயநலம் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது.

          சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற, எல்லோரும் பெரியாரை பின்பற்ற வேண்டும், கம்முநிசத்தை கடை பிடிக்க வேண்டும் என்பது ஒரு தீர்வல்ல. மாறாக கம்முநிசத்தை கேள், பெரியாரை படி. நீ எதிர்கொள்ளும் சமூக சூல்நிலைகளுகேற்ப உன்னுடைய முடிவை செயல் படுத்து. இதுதான் என் நிலை.

          தாங்கள் அனுப்பிய லிங்குகளில் நிறைய செய்திகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்..

          மாக்ஸிமம்

          • நண்பர் மாக்ஸிமம் .
            உடனடியாக பின்னூட்டமிட இயலாமல் போனது.
            \\
            அடிப்படையில் நானும் ஒரு கம்னிஸ்ட் ஆக இருந்தவன் தான். (கருணாநிதி டைப் கம்னிஸ்ட் இல்லீங்க). பெரியாரின் பால் ஈர்க்கப்பட்டவன் தான். ஆனால் பின்னாளில் அது ஏதும் எனக்கு உதவாது என்று எண்ணி மறுத்ததும் நான் தான். சில சம்பவங்களை காரணமாக சொல்வேன்.
            \\

            உங்கள் மேலான மதிப்பு இன்னும் எனக்கு கூடுகிறது. தவறு உங்கள் மேல் இல்லை. உங்கள் புரிதல் மேல் உள்ளது. உங்களை சுற்றிநடந்த சில சம்பவங்களை வைத்து சமுதாயத்தின் மேல் இவ்வளவு அவநம்பிக்கை கொண்டு விடாதீர்கள். சமூகம், புரட்சி அல்லது மாற்றம் வரும் வரை அதன்வழியிலேயே சென்றுகொண்டிருக்கும். இதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால் உங்களைச் சுற்றி நடந்த அத்தனைக்கும் விளக்கம் கொடுத்துக் கொள்ள முடியும் உங்களால். இந்தியா ஒரு அரைப்பண்ணை, அரைமுதலாளீய சமூகம் ஆகும். அதன் ஒரு அங்கம் சாதீய மனநிலை. இங்கே நாம் எண்ணும் செய்யும் ஒவ்வொன்றுக்கும் ஒரு சமூக வெளிப்பாடு உள்ளது. எவ்வளவுதான் முற்போக்குவாதம் பேசினாலும் பெரும்பாலானோர் மனநிலை சாதீய அழுக்கு குடிகொண்டுள்ளது. அது எதேனும் வடிவில் சிறிய அளவிலேனும் வெளிப்படும். அதனாலேயே உங்கள் ஊர் பெரியார் பெரியவர் ஊருக்கெல்லாம் புத்தி சொல்லுவாரானாலும் தனது பெண் தான் விரும்பிய வாழ்வை தேர்ந்தெடுத்ததை ஒத்துக் கொள்ள முடிய வில்லை.

            அதே போலவே உங்கள் முசுலிம் நண்பர்களின் பிறழ்ந்த போக்கை விளக்க முடியும்.இதெல்லாம் ஒரு குழு மனப்பான்மையினால் வந்த வினை. இது மட்டுமல்லாமல் இங்குநடக்கும் ஒவ்வொன்றுக்கும் நாம் சமூகப் போக்குகளால் விளக்கம் கொடுத்துக் கொள்ள முடியும்.

            இதெல்லாம் மெதுவாகத்தான் நம் சமுதாயத்தை விட்டு அகலும். அது வரை நாம் போராடவேண்டியுள்ளது. இதை ஒழிக்க எண்ண வேண்டுமேயல்லாமல் அதன்நேர் எதிர்வழியிலா உம் போன்ற கற்றோர், அறிஞர் செல்வது? சமுதாயத்தில் உம் போன்ற கற்றோருக்குநிச்சயம்நிறைய கடமைகள் உள்ளன. அதில் ஒன்று சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல். சமூகத்திற்கு கற்பித்தல்.

            \\
            பெரியாருக்கு பின் அவரது கொள்கைகளை பரப்பி மானிடர்தம் இழிவை அகற்ற எல்லோரும் ஒருமித்து உறுதி பூண்டிருந்தால் எதற்கு இங்கே இத்தனை கட்சிகள். பகுத்தறிவாளரின் குடியரசு கட்டுரைகளை வெளியிட கோர்ட் வரை சென்று தீர்ப்பு வாங்கும் அவல நிலை ஏன்?
            \\

            வீரமணி தனது கொள்கையை கேவலம் காசுக்காக விற்றவர். இந்த காசுக்காக கொள்கையை விற்ற பெருமக்களில் மு.க. , புத்ததேவ், இன்னும் பலர் அடங்குவர். ஆனால் அவர் அனைவரும் மனிதரே. மனிதனின் இழிகுணங்களான பொறாமை, பேராசை ஆகியவற்றில் அனைவரும் புதையுண்டு போனவரே. முதலாளீயம் தனது இருப்பை கட்டிக்காக்கவும் நிலைநிருத்திக்கொள்ளவும் இவர்களை பல வழிகளில் திசைதிருப்பும். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தத்துவ மயக்கத்திலோ, கையூட்டிலோ, மிரட்டியோ, இன்னும் எத்தனையெத்தனையோ வழிகளில்.

            மக்களின் மேலும் சமுதாயத்தின் மேலும் அன்பு கொண்டவர் தமது கொள்கைகளை என்றும் விட்டுக் கொடுக்க மாட்டார். உங்களுக்கு வந்தது ஒரு வகை தத்துவமயக்கமே. பெரியவர்களின் புத்தகங்களை தெளிவாக படியுங்கள். இந்த மயக்கங்கள் அகலும். தெளிவான பதில் கிடைக்கும்.

            ஒவ்வொருவருக்கும் கற்றுத்தேர்ந்தபின் ஒவ்வொரு பார்வை இருக்கலாம். ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு விவாதங்களே துணைபுரியும். உங்களை கிண்டலடித்த பின்னூட்டங்களை மன்னித்து விடுங்கள். இனி நல்ல முறையில் விவாதிப்போம். இந்த சமூகத்திற்கு நம்மாலான நன்மை செய்வோம்

      • தம்பி மாக்சிமக்கு சேதுகால்வாய் திட்டம் ஒரே ஒரு பாப்பானால் தடை பட்டுள்ளது நம் கோர்டிலா?தமிழ் மன்னர்கள் கட்டிய சிதம்பரம் கோயில் பாப்பானுக்கே சொந்தம் என்று தடை விதித்தது நம் கோர்டிலா?மசூதியை இடித்தது சரியா தவறா என்று கூறாமல் இஸ்லாமியருக்கு ஒரு பங்கும் ஹிந்துவுக்கு ரெண்டு பங்கும் கொடுத்தது நம் நீதிமன்றதிலா?காரணம் என்ன தெரியுமா?அங்கே இன்னமும் தொண்ணூறு சதம் வக்கீல் நீதிபதி எல்லாம் ஒரிஜினல் பாப்பானை இருப்பதால் தான்.இங்கு அப்படி இல்லாததற்கும் பிற்ப்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட நிறைய படித்ததற்கு காரணம் யார்?

        • ஆமான்னேன் அதான் அப்சல் குருவும், அஜ்மல் கசாபும் சேப்பா ஜெயில்லே ரெஸ்ட்டெடுக்குறானுக..

  16. கடந்த தி.மு க ஆட்சியில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்தி பாடப்புத்தங்கள் 200-கோடி செலவில் அச்சிடப்பட்டது. தற்போது வந்த ஜெயா அரசு தனியார் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காகவும், ஏழை மாணவர்களில் கல்வி உரிமையை பறிக்கும் வகையிலும் உயர்நீதி மன்ற தீர்ப்பைமீறி மேல்முறையீட்டுக்கு சென்றது. இதனை கண்டித்து மனிஅத உரிமைப் பாதுகாப்பு மையமும், புரட்சிகர அமைப்புகளும் தமிழகமெங்கும் மக்களை திரட்டி போராடியதுடன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுப்போட்டது. அதன்பிறகு உச்சநீதிமன்றம் ஆய்வுக்கான குழு அமைத்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவிட்டது. அந்தவகையில் 18.07.2011 இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த அதிசயம், மக்கள் மன்றத்திலும்,நீதிமன்றத்திலும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய தொடர்ப் போராட்டத்தினால் கிடைத்த வெற்றியே! கல்வி கொள்ளையர்களுக்கும்,ஜெயா அரசுக்கும் எதிராக புரட்சிகர அமைப்புகள் போட்ட முதல் பந்தில் விழுந்த ரன்-அவுட் இது.மேலும் ரன்கள் தொடரட்டும்! வாழ்த்துகள்!!

  17. இறுதி வெற்றி மார்க்ஸீயத்துக்கே. வெற்றிகள் தொடரட்டும். பார்ப்பனீயத்தின் கொட்டம் அடக்குவோம். வாழ்த்துக்கள் தோழர்களே.

  18. இதற்காக போராடியவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் அனைவருக்கும் ஒரே கல்வி மற்றும் கல்வி ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையாக்க நாம் போராடவேண்டும்.

  19. //சென்றதும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்தான்//
    இந்த அமைப்புகள் தவிர போராடி சிறை சென்றவர்களில் திராவிடர் கழக மாணவரணியினர் 5 பேரும் உள்ளனர். இதனைக் கட்டுரையில் சேர்த்தால் நல்லது.

  20. பினாயக் சென்னை விடுவித்ததும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டதும் சல்வா சுடூமை தடை செய்ததும் இதே நீதிமன்றம்தான்.இப்போ மட்டும் இது அவாளோட நீதிமன்றமோ இல்லை காவி கூட்டமோ இல்லையா?

    • Rajan, thats the great interpretation of VINAVU & Co. Now they will call this judgement is ‘athisayam’, ‘aaachariyam’. In one of other article, some one has quoted that there are many cases against ‘blasts’ as follows

      1/ அஜ்மீர் குண்டு வெடிப்பில் 2/ தென்காசி குண்டு வெடிப்பு – இந்து முன்னணி தலைவர் கைது. அவனது வாக்குமூலம்:
      “”இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.””

      3/ 2009ல் தீபாவளிக்கு முந்தைய நாள் கோவாவில் இந்துக்கள் கூடும் இடத்தில் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் இருவர் குண்டு வைக்கும் 4/ மலேகான் தொடர் குண்டு வெடிப்புகள் and few others are reference.

      I don’t know the real status and who is finally blamed, but even if we assume that its done by non-muslims, who has finally investigated/given judgement on those cases – OUR OWN CBI and HIGH/Superme courts. And this vinavu guys never cry at that time ALONE that courts are KAVI MAYAM, etc. ellam….because its in favour of their beloved ‘Appavi muslims’ !!!

      • (சுப)ஸ்ரீனிவாஸ் அவர்களே, உங்கள் எழுத்தை வாசிக்கும் போதோ நீங்கள் ஐடியில் தான் பணிபுரிகிறீர்கள் என்பது தெளிவாகிறது…..

        உங்கள் டீம் மெம்பரில் ஒருவர் கொடுத்த பத்து வேலைகளில் 9ஐ தவறாக செய்கிறார், கிளையண்டிடம் ஆப்பு வாங்கி வைக்கிறார், டீம் மீட்டிங்களை போர்களமாக்குகிறார்.. ஆனால் பத்தில் ஒன்றை சரியாக செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனுவல் அப்ரைசலில் அவர்களை எப்படி மதிப்பிடுவீர்கள்? பிலோ எக்ஸ்பெக்டேன் என்று சீட்டை கிழித்துவிடமாட்டீர்களா?

        உங்கள் தரப்பு கருணாநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகளை திட்டி தீர்க்கிறதே அவர் உருப்படியாக எதுவுமே செய்யவில்லையா? டைடல்பார்க், கிண்டி பாலங்கள், மெட்ரோரயில், போன்ற திட்டங்களுக்கு ஆதரவிளித்தார் என்பதற்காக அவரை தூக்கி கொண்டாடினீர்களா?

        அது போலத்தான் இது.. ஏதோ ஒரு தீர்ப்பு அதிசயமாக சரியாக வந்துவிட்டாலெல்லாம் நீதிமன்றம் முறையாக நடக்கின்றது என்பதையெல்லாம் ஏற்கமுடியாது… சும்மா வீம்புக்கு பேசாமல் வேறு பயனுள்ள வேலையை பாருங்கள் ஐயா

        • டைடல்பார்க், கிண்டி பாலங்கள், மெட்ரோரயில், போன்ற திட்டங்களுக்கு ஆதரவிளித்தார் என்பதற்காக அவரை தூக்கி கொண்டாடினீர்களா??/

          Neenga ennavo andha aalu thaan ellathayum varavecha pola pesureenga..Ivaru vudalana Kerala karan vitruppan.
          When bangalore and Hyderabad are goig at great guns?? what has Chennai done to not join the race..
          Chennailu IT vandhadhu Kaalathin Katayam. Summa adhukkum Karunanidhiyagatum, Jayalaithavagattum karanamnu sonna summa sirikka maatanga …

        • கேள்விக்குறி, yes, I am in IT field.

          Stating one aspect/activity as Right or Wrong is ‘individual’ perception. Is it not? In your point of view something could be wrong, that need not be for every one. Hope you accept it. And I dont agree only 1 out of 10 is rightly justified. India is such a country where we are running cases against people who are ‘marked(make a note) as terrorist’ (like Mohammad Afzal Guru, Ajmal Kasab) for years together before punishing/releasing them. is it the case in any Muslim countries?

          Look at the other reply from ‘podangmaan’ – how immatured he is !! and he could not even recognize that I am not talking about THOSE CASES. What ever he claims could be TRUE – I don’t know…..I Just refered those justice/investigation results here are reference that courts are doing favour also to your group some times, unlike your example of 1 out 10 times -:)

          podangmaan bai, salam mallikum – why your always so angry? I understand your pains, but I never said RSS are innocent in those cases. could be they are culprits…I don’t know, simply i cannot believe in few statements like this…go and refer this site : http://www.tamilhindu.com/2011/07/islamic_terrorism_in_india_07/

          They are writing just like that against ‘Muslims’ – do you think I believe in all those articles? Its there way of interpreting things, as you folks are doing here in this site.

          • ஸ்ரீநி,

            நீதிமன்றம், போலீசு போன்ற அரசு உறுப்புகளை தனிப்பட்ட விருப்பு வெறுப்பிலிருந்து பரிசீலிக்க முடியாது. யதார்த்த வாழ்க்கையில் அவை செய்து வரும் செயல்களிலிருந்து மட்டும்தான் மதிப்பிட முடியும்.. சினிமாவில் மட்டும்தான் பத்து பேர்களை கொன்று பதினோராவதாக ஒரு குழந்தையை கொல்லாமல் விட்டவனை நாயகனாக கொண்டாட முடியும், வாழ்க்கையில் அல்ல.. அது போலத்தான் நீதிமன்றங்களின் அநீதியான தீர்ப்புகள் எண்ணிலடங்கா, வினவில் நீதிமன்றங்களின் சாதி-மத சார்புகளை விளக்கி பல கட்டுரைகள் வந்திருக்கின்றன படியுங்கள். இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் உங்கள் கருத்துகளை கட்டமைத்துக்கொள்ளுங்கள்.

            நிற்க, உங்களுக்கு சமச்சீர்கல்வியை அமலாவதில் உடன்பாடு இல்லை என்பதை உங்கள் பழைய பின்னூட்டங்களிலிருந்து அறிய முடிகிறது. இந்த கருத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்? நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டதால் உங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு சமச்சீர்கல்வியின் ஆதரவாளராக மாறிவிட்டீர்களா?

            • Still I don’t agree to this samacheer kalvi for below reasons
              1) What ever be the form Metric, SB or CBSE – underlying is the same ‘mechalay’ system. Nothing is going to be teached for children on Self discipline, positive attitude, for their future work.
              2) Padikiara pillai enga erunthalum padikum. Unless we stop feeding those ‘surandal’ schools/college, they are not doing to stop. I don’t agree that it can create ‘inferiority complex’ to children when they say other set of children going to school in great style. If that is the case, same complex can come to the people in ALL stages of their life.

              Still I accept this JUSTICE given by the INDIAN COURT being an indian citizen….hope you understand difference between ‘agreement’ and ‘acceptance’

              With this corrupted politicians, implementing this sytem in syllabus, cost, infrastructure is highly impossible. All the very best to all of us. We can try that..

              Rather as I wrote earlier, let us try to improve the SB Govt schools so that people are ‘automatically’ moved towards it.

              One curious question I posted in many blogs : let us assume all the 100% children are given education till Degree. What next? Can the Govt. and pvt sector togehter can generate the ‘expected’ white color jobs to all of them? I believe now only 50% of children are getting complete education, even with this we know the problem of ‘unemployment’ – what is the ultimate aim of giving this ‘type’ of education to all children? Just a knowledge update to all? If yes, what kind of knowledge we are imparting in them with this ‘mechalay’ system? anyone clarify…

              • @@Still I accept this JUSTICE given by the INDIAN COURT being an indian citizen….hope you understand difference between ‘agreement’ and ‘acceptance’@@

                இவ்ளோதான் ஸ்ரீநி மேட்டர், நீங்க உங்களுக்கு பிடிக்காத விசயம் வந்தாலும் acccept செய்து அமைதியாக இருக்கீங்க, நாங்க அப்படியில்லை, அதை எதிர்ப்போம், விமரிசனம் செய்வோம். ஒரு நாட்டின் சிறந்த குடிமகன்களுடைய கடமை அதிகார உறுப்புகளை தவறிழைக்கும் போது அதை தட்டிக்கேட்ட வேண்டும், தட்டிக்கேட்பதின் விளைவுகளை சந்திக்க வேண்டும்.
                மாறாக வேடிக்கை மட்டும் பார்ப்பது கடமை அல்ல கயமை.

                இந்த விசயத்தை முடித்துக் கொண்டால் அடுத்த கேள்விக்கு போகலாம்

                • Again my answer is individual perception -:) …you see that ‘accepting’ the LAW is ‘offence’..thats OK. Let it be. Pl note that I am DEAD against the present Indian Constitution & its stupid law’s & it certainly needs a change…ore difference from you folks is the the WAY in which like to bring the change……anyhow, we will halt here…can you answer my curious question?

                  • இல்லங்க, ‘accepting’ the LAW is ‘offence’ இல்லை நான் சொன்னது அநிதீயான ஒன்றை அது சட்டமோ, தீர்ப்போ, நிகழ்வோ, அதை அப்படியே அக்சப்ட் செய்து கொள்வது கயமை என்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து இல்லை… உலக வரலாற்றை பாருங்கள், மன்னராட்சியிலிருந்து ஜனநாயகம் பிறந்தது எப்படி? மன்னராட்சியின் அவலங்களுக்கு எதிராக புரட்சி செய்தவர்களாலா அல்லது மன்னராட்சியின் மீதி விமரிசனம் இருந்தாலும் அதை அமைதியாக accept செய்து கொண்டவர்களாலா? பிரெஞ்சு புரட்சியிலிருந்து சமீபத்திய நேபாள உதாரணத்தையே எடுத்து பரிசீலித்து பாருங்கள்.

                    நீங்கள் இன்றைய இந்திய சட்ட அமைப்பு முறையை எதிர்ப்பதாக சொல்கிறீர்கள், அதே நேரத்தில் அதை மாற்ற நாங்கள் முன்வைக்கும் வழியையையும் ஏற்கவில்லை என்கிறீர்கள், சரி, ஆனால் நீங்கள் முன்வைக்கும் விழமுறை தீர்வு என்ன? இதைப்பற்றி விவாதம் செய்தால்தானே சரி தவறுகளை பரிசீலித்து மாற்றிக்கொள்ள முடியும்?

                    அடுத்து நீங்கள் கேட்கும் கேள்வி உண்மையிலேயே விந்தையானதுதான்.
                    @@@@Can the Govt. and pvt sector togehter can generate the ‘expected’ white color jobs to all of them?@@@@

                    இதன் சாராம்சம் எல்லாரும் கலெக்டர் படிப்புக்கு படிச்சா அப்புறம் பீ அள்ளவது யாரு என்பதுதான். இந்த கேள்வி சரியா என்பதை நீங்கள் பரிசீலித்து பாருங்கள்.

                    @@@ we know the problem of ‘unemployment’ – what is the ultimate aim of giving this ‘type’ of education to all children?@@@

                    எல்லாருக்கும் தரமான கல்வி, உணவு, இருப்பிடம் இதெல்லாம் இன்னும் AIM ஆக மட்டும் இருக்கிறதே அது ஏன்?

                    • I was expecting this question : இதன் சாராம்சம் எல்லாரும் கலெக்டர் படிப்புக்கு படிச்சா அப்புறம் பீ அள்ளவது யாரு என்பதுதான். இந்த கேள்வி சரியா என்பதை நீங்கள் பரிசீலித்து பாருங்கள்
                      Certainly, I never mean it. I am not against quality living place, sanitation, medical facitilities,etc. Only concern about this is that of ‘stupid’ mechalay system. Even in US/EU countries some set of people are doing this ‘physic’ work – with help of lot of machines.
                      Anyhow, park the question who will do the work that requires ‘physic’. Really I am curious to understand this problem. How we will manage if every one expects ‘white’ color job in Pvt. or Govt? Can we generate?

                      What I see the problem here is the ‘INCOME’ that is received out of this work when compared to ‘white’ colored job (its 1:1000 ratio). If we make it somehow – equivalent, then many people would prefer to do the ‘physic’ work as well. I heard this form of democracy is implemented in some country…where Govt. used to pay for ALL citizens and even if some pvt companies are ready to pay ‘excees’ to some % of people for their ‘specialized’ skills (like IT) – govt will take the entire amount and pay those skilled folks such that their salary are only marginally higher 110-120% of what a normal physical worker will get; and remaining amount what the Govt gets from companies will be utilized for other productive plans/activities. With this approach, we are resolving the problem ‘unequality’ in the INCOME, which will eventually during the time, will remove the ‘caste’ untouchability issues.

                      Even though I am against ‘puratchi’, ‘naxals’ – some time I used to think ‘nothing wrong in it’ – but still many of ours ‘brought up’ stops us from supporting violence. But if the Govt corruption continue in this way, probably many of us will start supporting this ‘puratchi’ in coming years. Who knows?

                    • ஸ்ரீநி,

                      கல்வி என்பது வேலை பார்ப்பதற்கு மட்டுமானதுதான் என்ற உங்கள் புரிதல் பிரமிப்பூட்டுகிறது. உங்கள் வாதம் மொத்தமுமே அந்த கருத்தின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

                      மனிதன் என்பவன் உழைத்து-சம்பாதித்து-செலவழித்து சாக மட்டுமே பிறந்தவனா? கல்வி அதற்குத்தானா? அப்போது கல்வி அறிவே இல்லாத ஆனால் உழைத்துப் பிழைக்கும் கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

                    • Really, I could not understand the ‘education’ you mean here. What do you mean by this? can you give me an example?
                      Also, how will you stop the people from demanding for white color jobs after getting the required education?

        • உங்கள் தரப்பு கருணாநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகளை திட்டி தீர்க்கிறதே அவர் உருப்படியாக எதுவுமே செய்யவில்லையா? டைடல்பார்க், கிண்டி பாலங்கள், மெட்ரோரயில், போன்ற திட்டங்களுக்கு ஆதரவிளித்தார் என்பதற்காக அவரை தூக்கி கொண்டாடினீர்களா?

          அது போலத்தான் இது.. ஏதோ ஒரு தீர்ப்பு அதிசயமாக சரியாக வந்துவிட்டாலெல்லாம் நீதிமன்றம் முறையாக நடக்கின்றது என்பதையெல்லாம் ஏற்கமுடியாது… சும்மா வீம்புக்கு பேசாமல் வேறு பயனுள்ள வேலையை பாருங்கள் ஐயா//////////////……….
          .
          ஏதோ ஒரு தீர்ப்பா?எவ்வளவு தீர்ப்பு சொல்லலாம்!!உச்சநீதிமன்றத்தின் பாபர் மசூதி குறித்த சமீபத்திய தீர்ப்பை மறந்துட்டீங்களா?உங்களுக்கு சாதகமா சொன்னா பாராட்டு இல்லைன்னா உச்சி குடுமி மன்றம்!!ஐயோ ஐயோ.அப்புறம் எதுக்கு சில்வா சுடூமை எதிர்த்து வழக்கு போட்டாங்க?நீங்க எதுக்கு சமச்சீர் கல்விக்காக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தீர்கள்?பத்துக்கு ஒரு மார்க் வாங்கும் ஒருவனை ஏன் நம்பிநீர்கள்?
          ***************
          ஆமா கருணாநிதியின் ஐடி பைத்தியதால் மின்தட்டுப்பாடு வாடகை விலைவாசி ஏற்றமேல்லாம்/!!!அப்படியும் கருணாநிதி நல்லது செய்தார் என்கிறீர்கள்.நீங்களே ஐடியில் இருக்கிறீர்களோ?

          • ராஜன், நான் முகவை ஐடி துறையினர் ஆதரித்த காரணங்களை விவரித்தேன், ஆனால் அதை மட்டும் வைத்து அவரை மதிப்பிடமுடியாது என்றேன் அவ்வளவே.

            மற்றபடி எங்களுக்கு இந்த நீதி மன்றங்கள் போலீசு இவைகளில் நம்பிக்கை இல்லை என்பதற்காக நாங்கள் கைது செய்யப்படுவதில்லையா? எங்கள் மீது வழக்கு பதியப்படுவதில்லையா? இந்த நக்சலைட்டுகளுக்குத்தான் இந்த சட்டம் நீதி மேல நம்பிக்கை இல்லையே அவங்களை அப்படியே விட்டுவிடுவோம்னா இருக்காங்க? இல்லையே… அதனாலே விதண்டாவாதம் பேசி நம் நேரத்தை வீண்டிக்காதீர்கள்

  21. //I don’t know the real status and who is finally blamed, but even if we assume that its done by non-muslims, who has finally investigated/given judgement on those cases – OUR OWN CBI and HIGH/Superme courts. And this vinavu guys never cry at that time ALONE that courts are KAVI MAYAM, etc. ellam….because its in favour of their beloved ‘Appavi muslims’ !!!//

    வெட்கங் கெட்ட்வங்க அங்க பட்டியலிட்டிருந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு ஆதாரங்களுக்கு பதில் சொல்லவில்லை. ஆனால் அதனையே இங்கு கொண்டு வந்து கேட்டு அடி முட்டாள்தனமான ஒரு வாதத்தை வைத்துச் சென்றுள்ளனர். இதே அடிப்படையில் பேசினால், கருணாநிதி கும்பலையும், ஜெயலலிதாவையும், அம்பானி, டாடா கும்பலையும் நீதிமன்றத்தில் (மட்டும் நிறுத்துவது, அதற்கு மேல் ஒரு மசிரைக் கூட பிடுங்குவதில்லை) நிறுத்துவதை வைத்து அவர்களின் நடுநிலையை பாராட்ட வேண்டிய நிலை ஏற்படும்.

    ஆனால், உண்மையென்ன? ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் மாட்டிக் கொண்ட குண்டு வெடிப்புகளில் பல நூறு முஸ்லீம்கள் முன்பு கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்னும் போலீஸின் பிடியில்தான் உள்ளனர். ஆதாரம் எந்த கோர்ட்டிலும் நிரூபிக்கப்படவில்லை என்ற போதும் போலீசின் கோரிக்கையை ஏற்று மதானியை இன்னும் சிறையில் வைக்கவே உத்தரவிட்டது நீதிமன்றம். பஜ்ரங்தள், ஆர் எஸ் எஸ்ன் ரவுடித்தனம், தேசவிரோத சதி திட்டங்கள் (தாராசிங் வழக்கு போன்றவை), குண்டு வெடிப்புச் சதிகள், துணை ஜனாதிபதியை கொல்லத் திட்டமிடும் விடியோ உரையாடல்கள் இவையெல்லாம் கையில் இருந்தும் அரசு இந்த அமைப்புகளை தடை செய்யவில்லை இதன் உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை.

    சரி விடுங்கள் நீதிமன்றம் என்ன மயிரைப் பிடுங்கிக் கொண்டிருந்தது என்றால் அதுவும் அப்படியே. சில வழக்குகளில் மூடி மறைக்கா இயலாத அளவுக்கு அம்பலமானாலோ அல்லது ஆளும் கும்பலிடையே ஏதேனும் மோதல் இருந்தாலோ மட்டும்தான் சாதகமான தீர்ப்பு வரும். இதைப் புரிந்து கொள்ளாத மடையர்களை என்ன செய்வது?

    • ஆனா ஆர் எஸ் எஸ்.. ஊனா ஆர் எஸ் எஸ்…எந்தக்கட்டுரைனாலும் சம்மந்தமில்லாம அதுல ஆர் எஸ் எஸ் விமர்சனம் இந்துத்வா விமர்சனம்…உன் கனக்குப்ப்டி அந்த .5 சதவிகிதம் ஆர் எஸ் எஸ் ஏ வெடி வச்சிருந்தாலும் மிச்சம் 99.95% வெடிவச்ச வெறிபிடிச்ச, இந்தநாட்டை வேட்டையாடத்துடிக்கும் தீவிரவாத பேடிப்பயல்கள் கூட சேபா ஜெயில்ல தானன்னேன் இறுக்கானுக..(உங்க மச்சான் கசாபு, மாமா அப்சல் குரு)…..முஸ்லீம் தீவிரவாதம் பற்றி விமர்சிக்க உங்க தாத்தா பெரியார்/வினவு போல பயமா..இல்ல போலிநடுனிலைமையா…பாத்துன்னேன்…உஙளுக்கு இந்தியாவும் பிடிக்காது, இந்துவும் பிடிக்காது, பாகிஸ்தான் போய் பொதுக்கூட்டும் போட்டா காசு கிடைக்கும்ன்னு அங்க உங்களுக்குநல்ல எதிர்காலம் இறுக்கு..

      • பையா, கடந்த 5 ஆண்டுகளில் வெடித்த குண்டுகள் கிட்டத்தட்ட அனைத்துமே சங்பரிவாரம் வைத்ததுதான் என்பதை விரிவாக அம்பலப்படுத்தி ஊடகங்கள் எழுதிவிட்டன. இப்படி குண்டு வைத்து அப்பாவி இந்தியர்களை கொல்லும் ஒரு அமைப்புக்கு நீங்கள் ஏன் போகுமிடமெல்லாம் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

        பார்க்க http://www.outlookindia.com/article.aspx?266145

      • பையா தான் சாப்பிடுகீற சாப்பாட்டில் உப்பு போடும் சொரனையுள்ளவரா எனக் கேட்டு முன்பொருமுறை கேட்டிருந்த கேள்விக்கு இன்னவரை பதில் சொல்லவில்லை. அவர் உப்பு போடாது தின்பவர சொரனையற்றவர் என்றே யூகிக்கிறேன். ஆயினும் அந்தக் கேள்வியில் ஒன்றை திரும்ப கேட்கிறேன்.

        //உஙளுக்கு இந்தியாவும் பிடிக்காது, இந்துவும் பிடிக்காது,//

        யாருங்க அந்த இந்து?

        • ஓ…உன் ரேஞ்ச் என்னான்னு இப்பத்தான்டா புரியுது..

          //பையா தான் சாப்பிடுகீற சாப்பாட்டில் உப்பு போடும் சொரனையுள்ளவரா எனக் கேட்டு முன்பொருமுறை கேட்டிருந்த கேள்விக்கு இன்னவரை பதில் சொல்லவில்லை.//

          சாப்பிடுகீற சாப்பாட்டில் உப்பு போட்டா சொரனையுள்ளவரா…!அப்ப சக்கரவியாதி இற்ந்து உப்பு போடாட்டி சொரனையற்றவரா??

          உனக்கு பொதுஅறிவு தான் இல்லை எனநினைத்தேன்..படிப்பறிவும் இல்லையா??
          //உஙளுக்கு இந்தியாவும் பிடிக்காது, இந்துவும் பிடிக்காது,//

          யாருங்க அந்த இந்து?
          சூப்பர் கேள்விடா..

          இந்து யார்ன்னே தெரியாம அப்புறம் என்ன லாம்ப் ஆயிலுக்குன்னேன் நீ__ அய்யோ நீங்களெல்லாம் எஙளை விமர்சிக்கக் கெளம்பீட்ட…

        • னான் சாப்பிடுகீற சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடுகிறேனா…தொசைக்கு ஜாம் தொட்டு சாப்பிடுகிறேனா…பூரிக்கு கிழஙு வைத்து சாப்பிடுகிறேனா!!!!!! 🙂

          அதெல்லாம் ஏன் பிரச்சனை அண்ணேன்..முதல்ல அந்தக்கேள்விக்கு பதில் சொல்லுஙகண்ணேன்..

      • பையா,
        // இந்தநாட்டை வேட்டையாடத்துடிக்கும் தீவிரவாத பேடிப்பயல்கள் கூட சேபா ஜெயில்ல தானன்னேன் இறுக்கானுக..(உங்க மச்சான் கசாபு, மாமா அப்சல் குரு)…..முஸ்லீம் தீவிரவாதம் பற்றி விமர்சிக்க உங்க தாத்தா பெரியார்/வினவு போல பயமா// அட பேடி பையா யாரு பேடி கசாப்பு யாரு இந்தியன,அப்சல் குரு யாரு சதி திட்டம் தீடியவன் என்று (ஆனால் காவி நீதி மன்றத்தால் முதன்மையான குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை ) ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டு மனசச்சிகா மரணதண்டனை, இப்படி கேடுகட்ட அநீதியை இளைத்தவர்கள் பேடியா,இல்லை அநியாமாக சிறையில் வாடுகிரர்களே அவர்கள் பேடியா, ஒரு இந்துவாக பிறந்து அந்த இந்து மதத்தையே விமர்சித்தாரே தமிழ் தந்தை பெரியார், அவர் ஏன் இஸ்லாத்தை விமர்சிக்க வில்லை ஏன் என்றால் இஸ்லாம் என்றால் அமைதி, சகதொரத்துவம், அது தான் மறு பொருள்
        நீங்கள் கொண்டீர்களே இந்த தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர் என்ன ராமரின் ஆட்சி வர ஆசைபட்டர்களா இல்லையே,இஸ்லாத்தின் இரண்டாவது கலிபா உமர் பின் கத்தாபு (ரலி) அவர்களின் ஆட்சி தான் வர வேண்டும் என்று தன் வாயாலே சொன்னார்களே அவர் என்ன தேச துரோகியா இல்லை உன் வார்த்தையல் சொன்னால் பேடியா, அப்படிஎன்றால் உன் வார்த்தையில் ஹீரோ அரை டவுசர்கள, இல்லையாட நிஜத்தில் இவர்கள் தான் பேடி.( தொடரும்

      • //உஙளுக்கு இந்தியாவும் பிடிக்காது, இந்துவும் பிடிக்காது, பாகிஸ்தான் போய் பொதுக்கூட்டும் போட்டா காசு கிடைக்கும்ன்னு அங்க உங்களுக்குநல்ல எதிர்காலம் இறுக்கு..// எங்களுக்கு இந்த தேசம் பிடிச்சதுனலத்தான் இங்கே இருக்கோம், உங்களுக்கு தான் இந்த இந்தியா பிடிக்கலே ஏன்டா உங்களுக்கு அகண்ட பாரதம் ( ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,இலங்கை, நேபால்,) இத்தனை நாடுகளையும் உள்ளடக்கிய அகண்ட ஹிந்துத்துவ தேசம் தான் பிடிக்கும் ஏன் அண்ணா, மன்னிசிடுக அது கனவுல மட்டுதான் நடக்கும்

      • //தீவிரவாத பேடிப்பயல்கள் கூட சேபா ஜெயில்ல தானன்னேன் இறுக்கானுக// தவறு..அத்வானியும் மோடியும் சேபா வூட்ல இருக்கான்னு சொல்லு..அவனுக கொன்ன கணக்கு 5 ஆயிரத்துக்கும் மேல..அத்வானி கணக்கு..1989, 1990, 1991, 1992..எல்லாம் நவம்பர் திசம்பர் மாதத்தில்.. மோடியின் கணக்கு 2002 இல்… இன்னமும் சேபாதான் இருக்காங்க..

  22. //I don’t know the real status and who is finally blamed, but even if we assume that its done by non-muslims,// இதுதாண்டா ஆர் எஸ் எஸ் அடிவருடித்தனம். மாட்டிக் கொண்ட இந்து முன்னணி ஆளும், ஆர் எஸ் எஸ் கும்பலும் தைரியமாக வாக்குமூலம் கொடுத்து மார் தட்டுது. நம்ம அரைடவுசர்வாலா சந்தேகத்தின் பலன் என்று இல்லாதவொன்றை பேசுகிறது. இதே நியாயத்தை ஏன் இந்த காவி வெறியர்கள் பிற குண்டு வெடிப்புகளுக்கும் பய்ன்படுத்தக் கூடாது? அதைச் செய்துவிட்டல்லவா நேர்மையைப் பற்றியும், சார்புதன்மையின்றி நீதி வழங்கும் தமது சொந்த பெருமிதத்தையும் பேசியிருக்க வேண்டும்? தமது சொந்த முரன்பாடு பற்றி கூட சிந்திக்க இயலாத அடி மடையர்கள் என்பதை மீண்டும் மீண்டும் காவி வெறியர்கள் நிருபிக்கிறார்கள்.

  23. //பினாயக் சென்னை விடுவித்ததும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டதும் சல்வா சுடூமை தடை செய்ததும் இதே நீதிமன்றம்தான்.//

    பினாயக் சென் தண்டிக்கப்பட்ட பிறகுதான் விடுவிக்கப்பட்டார். ச்ல்வா ஜுடூமை தடை செய்தது வெறும் புத்தகத்தில் இருக்கும் ஏட்டுச் சுரைக்காய். சமச்சீர் கல்வி, சிதம்ப்ரம் கோயில் தீர்ப்பு உள்ளிட்டவையெல்லாம் தீர்ப்பு சாதகமாக வராவிடில் மக்களரங்கில் முழு டவுசரையும் கிழித்து தொங்க விட பல்வேறு அரசியல் அமைப்புகள் (குறிப்பாக ம க இக) அணிதிரண்டு நின்றதால் நிகழ்ந்த அதிசயங்கள் (இன்னும் பல்வேறு காரணங்களும் உண்டு).

    ஆனால், எந்த காலத்திலும் நீதிமன்றம் நீதியின் அடிப்படையில் செயல்படுவதில்லை என்பதொன்றுதான் சாசுவதமான உண்மை. அது சம்ச்சீர் கல்வி பற்றிய இந்த தீர்புக்கும் கூட பொருந்தும். நீதிமன்றத்தின் தீர்ப்பு சமச்சீர் கல்விக்கான சரியான நீதி என்ற அடிப்படையில் அல்ல, ஆளும் கும்பலின் சுயமுரன்பாடுகள் -மோதல், எதிர்காலத்தில் கல்வியை மையப்படுத்தி பன்னாட்டு கல்வி நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் செயல்படுத்தப்படும் சதிகளின் ஒரு அங்கம் என்ற வகையில்தான் சமச்சீர் கல்விக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.

    கருணா தனது விட்ட குறை தொட்ட குறை முற்போக்கு அரசியலுக்காக பார்ப்பன எதிர்ப்பு, முற்போக்கு நடவடிக்கைகள் சிலதை செய்திருப்பார். ஆனால் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்கவும், சமச்சீர் கல்வி கொண்டு வரவும் அவருக்கு ஐடியா கொடுத்தது யார், இவற்றை கொண்டு வருவதன் நீண்ட கால நோக்கமென்ன? இந்த கேள்விகளுக்கான பதிலில்தான் இந்த தீர்ப்புக்கான விடையும் அடங்கியுள்ளது.

  24. சரி விடுங்கள் நீதிமன்றம் என்ன மயிரைப் பிடுங்கிக் கொண்டிருந்தது என்றால் அதுவும் அப்படியே. சில வழக்குகளில் மூடி மறைக்கா இயலாத அளவுக்கு அம்பலமானாலோ அல்லது ஆளும் கும்பலிடையே ஏதேனும் மோதல் இருந்தாலோ மட்டும்தான் சாதகமான தீர்ப்பு வரும்////////////////////
    .
    .
    அந்த அம்பலபடுத்தும் வேலையை நீங்க செய்யலாமே!!நக்சலைட்டுகள் வெக்காத குண்டுகளா?தகர்காத பாளங்களா ரயில் தண்டவாலங்களா?
    **************************************************************
    அப்புறம் அதென்ன பாசிச ஜெயா?!!!தனி மனித வழிபாடை சொல்றீங்களா?கருணாநிதி போல பல சிருதேவன்களை உருவாக்கிகொண்டால் அது பாசிசம் இல்லையா?அல்லது நீங்கள் போற்றும் மும்மூர்த்திகள் லெனின் ஸ்டாலின் மாவோ இவர்களை தவிர வேறு யாரவது புகழ் பெற்றிருக்கின்றனரா?அப்போது அதுவும் பாசிசமாகதானே ஆகிறது!!

    • //அப்புறம் அதென்ன பாசிச ஜெயா?!!!தனி மனித வழிபாடை சொல்றீங்களா?கருணாநிதி போல பல சிருதேவன்களை உருவாக்கிகொண்டால் அது பாசிசம் இல்லையா?அல்லது நீங்கள் போற்றும் மும்மூர்த்திகள் லெனின் ஸ்டாலின் மாவோ இவர்களை தவிர வேறு யாரவது புகழ் பெற்றிருக்கின்றனரா?அப்போது அதுவும் பாசிசமாகதானே ஆகிறது!!//

      சுத்தம்.. பாசிசம்னா என்னன்னு தெரியாமத்தான் பேசுறீங்களா? இந்த அரைவேக்காட்டு அசம்ப்சன்ல அக்குசிசன் வேற……

      • சுத்தம்.. பாசிசம்னா என்னன்னு தெரியாமத்தான் பேசுறீங்களா? இந்த அரைவேக்காட்டு அசம்ப்சன்ல அக்குசிசன் வேற……////////////…
        .
        .
        தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்/////////
        .
        .
        அண்ணா இது என்னக்னா?தன்னை எதிர்த்த பல ஆயரம் பேரை கொன்ற ஸ்டாலின் இதில் பொருந்துராரே!!

      • சுத்தம்.. பாசிசம்னா என்னன்னு தெரியாமத்தான் பேசுறீங்களா? இந்த அரைவேக்காட்டு அசம்ப்சன்ல அக்குசிசன் வேற……////
        .
        .
        அப்புறம் ஆட்சிக்கு வரும் முன்பே பாசிச மம்தா அதேப்படியா ஆட்சிக்கு வரும் முன்பே சொல்றீங்க?அப்புறம் பாசிச மாயாவதி அதை ஏன் உட்டுடீங்க?தளிதுன்க்ரதாலையா?

  25. சம்ச்சீர் கல்வி உச்சநீதிமன்ற மேல்முறையீடு கேவியட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

  26. சம்ச்சீர் கல்வி உச்சநீதிமன்ற மேல்முறையீடு கேவியட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. – தாட்ஸ்தமிழ்

  27. ஏனுன்கோ…. புருஷ்வா கோர்ட் தீர்ப்பயெல்லம் கொண்டாடதிங்க…. விட்டுத்தள்ளுங்கோ…

  28. வாங்கோ சுப்ரீம் கொர்ட்ல பார்கலாம்.

    We will expose the constitutional flaws in the errored judegement of the H’nble High Court of TN.

    English spelling theiryaadha kumbal elaam serndhu tamiz natta kutichevuru aakiyaachu……..

    alayardhugal kadandhu……………..samcheeraam kalviyaam

  29. //கேட்பது குதிரை; கிடைத்தது கழுதை: விஜயகாந்த்// கழுதை கால் புகழ் விசயகாந்த் முதல் முதலாக சமச்சீர் பற்றி வாயை திறந்திருக்கிறார்.

    • இந்த விசயகாந்து தன மகனுக்கு டிச்லேப்சி இருக்குன்னு பொய் சொல்லி வேற ஒரு ஆளை போட்டு பரீட்சை எழுத வச்சி தன மகனை பாசாக்கிட்டாறு!!

  30. சமச்சீர் கல்வி வெற்றி பெற உழைத்து போராடிய அனைத்துக் கழக நண்பர்களுக்கும்,புரட்சித் தோழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன் இனியவன்….

  31. சாதாரணமான வதாடி இருந்தால் இது சாத்தியம் இல்லையே !
    உணர்வு பூர்வமான போரட்டத்தினால் கிடைத்த வெற்றி !

    உயர் நீதிமன்றத்தில் திட்டுவாங்கி !
    உச்ச நீதிமன்றத்தில் குட்டுவாங்கி !
    மீண்டும் உயர் நீத்மன்றத்தில் அவமானபட்டு !
    மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று என் அரட்டுகிறார் என தெரியவில்லை !

    data delete ஆனாலும் file name delete ஆகல பருங்கள் என கடைசியாக சொல்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

  32. உச்சநீதிமன்றம் உயர்நீதி மன்ற தீர்ப்பிற்கு தடை விதித்து அரசுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தால் என்ன செய்வீர்கள்.இல்லை அரசிற்கு கொள்கை முடிவு எடுக்க உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தால் என்ன செய்வீர்கள்.அப்படியே சுரீம்கோர்ட் உயர்னீதிமண்ரம் தந்த தீர்ப்பினை சரி என்று சொன்னாலும் ஜெ அரசு அதை ஏற்க மாட்டோம் என்று மீண்டும் பழைய பாடப்புத்தகங்களை மாணவ்ர்களுக்கு கொடுத்தால் என்ன செய்ய முடியும்.உச்சநீதிமன்றம் மாநில அரசை கலைத்துவிட முடியுமா இல்லை மத்திய அரசு தலையிட வேண்டும் என்று சொல்ல முடியுமா.ம்க்கள் தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டு முதல்வராக ஆக்கினார்களோ அவருக்கு அதிக அதிகாராமா இல்லை நீதிமன்றத்திற்கு அதிக அதிகாராமா.இதை ஒரு வக்கீலிடம் கேட்டேன்.

    அவர் சொன்னார் ”மாநில அரசு கோர்ட் உத்தரவை அமுல்படுத்தாவிட்டால் அதிகபட்சம் கோர்ட் அவமதிப்பு வழக்கு போடலாம், அரசை கலைத்துவிட முடியாது.கோர்ட் என்ன செய்துவிடும்- அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும்,அவ்வளவுதானே,அதால் ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருக்க முடியாது என்று சொல்ல முடியுமா,சொன்னாலும் அது நடைமுறைக்கு வருமா- வ்ராது.அதிகாரம் மக்கள் தேர்ந்தெடுத்த அரசிற்கா இல்லை நீதிமன்றத்திற்கா என்று அவர் கேட்டால் மக்கள் ’அம்மா நாங்கள் உங்கள் பக்கம், நீங்கள்தான் முதல்வர்” என்றுதானே சொல்வார்கள். அப்போது நீதிமன்றமே அதிகாரம் மிக்கது,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதைவிட அதிக அதிகாரம் என்று எந்தக் கட்சியாவது சொல்லுமா.இல்லை கருணாநிடிதான் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம்,ஜெ வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்வாரா, சொல்ல மாட்டார். ”

  33. இங்கே அடி வாங்கியது போதாது என்று உச்சநீதிமன்ட்றம் போய் வாங்கப்போரார் ஜெ. படிச்சவனல்லாம் கல்வியாளரா?

    னே!!! வில் இருந்து ஆஆ… வா? அது சரி, சில பேர் அடி வாங்கினாத்தான் அடங்குறானுக. பெரிய புடிங்கிகன்னு நெனப்பு இந்த கறை வேட்டி நாய்களுக்கு.

  34. //உச்சநீதிமன்றம் உயர்நீதி மன்ற தீர்ப்பிற்கு தடை விதித்து அரசுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தால் என்ன செய்வீர்கள்.இல்லை அரசிற்கு கொள்கை முடிவு எடுக்க உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தால் என்ன செய்வீர்கள்.அப்படியே சுரீம்கோர்ட் உயர்னீதிமண்ரம் தந்த தீர்ப்பினை சரி என்று சொன்னாலும் ஜெ அரசு அதை ஏற்க மாட்டோம் என்று மீண்டும் பழைய பாடப்புத்தகங்களை மாணவ்ர்களுக்கு கொடுத்தால் என்ன செய்ய முடியும்.உச்சநீதிமன்றம் மாநில அரசை கலைத்துவிட முடியுமா இல்லை மத்திய அரசு தலையிட வேண்டும் என்று சொல்ல முடியுமா.ம்க்கள் தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டு முதல்வராக ஆக்கினார்களோ அவருக்கு அதிக அதிகாராமா இல்லை நீதிமன்றத்திற்கு அதிக அதிகாராமா.இதை ஒரு வக்கீலிடம் கேட்டேன்.//

    நேற்று கலைஞர் செய்தியில் பு ம இமு மாநில அமைப்பாளர் தோழர் கனேஷ்ன் நேரோளியை ஒளிபரப்பினார்கள். அதில் மேற்காணும் இதே கருத்து பகிர்ந்து கொள்ளப்பட்டது. அப்போது தோழர் கனேசன் குறிப்பிட்டார், “பாசிச ஜெயா அரசு மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள், மறியல், ஆர்பாட்டம், கொடும்பாவி எரிப்பு என்று எமது அமைப்பு போராடி வந்தது. ஆனால் இனிமேலும் இதே போல போராட மாட்டோம். பள்ளிக் கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்துவோம், ஜெயா அரசு பள்ளிப் புத்தகங்களை வினியோகித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி தனியார் – அரசு பள்ளிகளுக்கு கட்டாய சமச்சீர் பாட புத்தகங்களை மாணவர்கள் பெற்றோர் ஆதரவுடன் வினியோகிப்போம்.”

    இத்துடன் உப செய்தி, நேற்று வரை ‘அதான் நான் அப்பவே சொன்னென்ல’ என்று இழுத்துக் கொண்டிருந்த மார்க்ஸிஸ்ட் கும்பல், இன்று தீர்ப்பு சாதகமாக வந்தவுடன் களத்தில் இறங்கி மாநிலம் முழுவதும் சம்பிரதாய ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். சிதம்பரம் கோயில் தீர்ப்பை ஒட்டி செய்தது போலவே நேர்மையற்ற கும்பல் என்பதை இப்போதும் நிரூபித்துள்ளனர் மார்க்ஸிஸ்டு கும்பல். இன்று இவர்கள் எதிர்க்கும் இதே சட்டத்தைத்தான், நீதிமன்றம் கேவலப்படுத்தி நிறுத்தி வைத்துள்ள இதே சட்டத்தைத்தான் சட்டமன்றத்தில் ஆதரித்து வோட்டுப் போட்டது மார்க்ஸிஸ்ட் கட்சி. அம்மாவிடம் பேசும் போது ஒன்று வெளியே வந்து வெற்று வாய்ச்சவடால் என்று இவர்கள் நடத்தும் நாடகத்தை அக்கட்சியின் ‘தோழர்’கள் மான ரோசத்துடன் சகித்துக் கொண்டிருப்பதுதான் கர்ண கொடூரமாக உள்ளது.

    • இன்று திருவாரூரில் போலிகளின் மாணவர் அமைப்பு “கல்விப்பிச்சை” கேட்டு “நூதன”

      போராட்டம் நடத்தியுள்ளார்கள்.இவர்கள், மக்களை பிச்சை எடுக்க

      வைத்துவிடுவார்கள்,ஆண்டைகளே அதைத்தான் செய்கிறார்கள், அவர்களுக்கு இவர்கள்

      5 -ந்தாம் படை வேலை செய்கிறார்கள்.

      இவர்கள் நடத்தும் நாடகத்தை அக்கட்சியின் ‘தோழர்’கள் மான ரோசத்துடன் சகித்துக்

      கொண்டிருப்பதுதான் கர்ண கொடூரமாக உள்ளது.

  35. பசங்க எல்லாம் படிக்க பள்ளிக்கூடம் போய்ட்டா கொடுக்கப்போற ஆடு மாடெல்லாம் யாரு மேய்க்கிறது? எல்லாம் ஒரு தொலை நோக்குத் திட்டத்தோடதான் அரசு செயல்படுது. சும்மா குத்தம் சொல்லனுமேன்னு எதையும் சொல்லக்கூடாது.

    ——————-
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் – ஜூலை ‘2011)

    • “பசங்க எல்லாம் படிக்க பள்ளிக்கூடம் போய்ட்டா கொடுக்கப்போற ஆடு மாடெல்லாம் யாரு

      மேய்க்கிறது? எல்லாம் ஒரு தொலை நோக்குத் திட்டத்தோடதான் அரசு செயல்படுது.

      சும்மா குத்தம் சொல்லனுமேன்னு எதையும் சொல்லக்கூடாது.

      ——————-
      தறுதலை
      (தெனாவெட்டுக் குறிப்புகள் – ஜூலை ’2011)”

      அதெல்லாம் சரிதான்,

      ஆடு,மாடு எல்லாம் கொடுப்பீங்க அத எங்க கட்டுறது,எங்க பட்டி போடுறது அப்புறம்

      மேய்க்கிறதுக்கு மேய்ச்சல் நிலம் எங்க இருக்குது நீங்க அதையும் கொடுப்பீங்களா!!

  36. //பினாயக் சென் தண்டிக்கப்பட்ட பிறகுதான் விடுவிக்கப்பட்டார். ச்ல்வா ஜுடூமை தடை செய்தது வெறும் புத்தகத்தில் இருக்கும் ஏட்டுச் சுரைக்காய். சமச்சீர் கல்வி, சிதம்ப்ரம் கோயில் தீர்ப்பு உள்ளிட்டவையெல்லாம் தீர்ப்பு சாதகமாக வராவிடில் மக்களரங்கில் முழு டவுசரையும் கிழித்து தொங்க விட பல்வேறு அரசியல் அமைப்புகள் (குறிப்பாக ம க இக) அணிதிரண்டு நின்றதால் நிகழ்ந்த அதிசயங்கள் (இன்னும் பல்வேறு காரணங்களும் உண்டு).//

    சரியான பதில்

  37. மாலைமலர் இணையத்தில் ஒரு வாசகர்:

    “சமச்சீர் கல்விக்காக அச்சடிக்கப் பட்ட பாடப்புத்தகங்களுக்கு ஆன செலவு ஒரு புறம் இருக்கட்டும். சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாட்டேன் என்று தமிழக அரசின் சார்பில் வாதாட, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடிய பி.பி.ராவுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் வாதாடினால் 5 லட்ச ரூபாய் பீஸ். இது போக அவருக்கு சென்னைக்கு வருவதற்கு, முதல் வகுப்பில் விமான டிக்கெட், அவர் ஜுனியருக்கும் முதல் வகுப்பில் விமான டிக்கெட், சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கான அறை என்பது போன்ற விவகாரங்களுக்கு ஆகும் செலவுகளும் மக்களின் வரிப்பணம் தானே.. ? தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் அடங்கிய குழு, தற்போது டெல்லி சென்றிருப்பதும், மக்களின் வரிப்பணத்தில் தானே ? இவர்களுக்கு ஆகும் குறைந்த பட்ச செலவான 30 லட்ச ரூபாயும் மக்கள் வரிப்பணம் தானே ?

  38. பாமரன், நீங்க அனியாயத்துக்கு பாமரனாவே இருக்கீங்களே…!

    //அவர் சொன்னார் ”மாநில அரசு கோர்ட் உத்தரவை அமுல்படுத்தாவிட்டால் அதிகபட்சம் கோர்ட் அவமதிப்பு வழக்கு போடலாம், அரசை கலைத்துவிட முடியாது.கோர்ட் என்ன செய்துவிடும்- அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும்,அவ்வளவுதானே,அதால் ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருக்க முடியாது என்று சொல்ல முடியுமா,சொன்னாலும் அது நடைமுறைக்கு வருமா- வ்ராது.//

    ஆன மக்கள் நினைச்சா முடியும். சர்வாதிகாரமே ஆட்டம் காணும் காலம் ஐயா இது. மாணவர்களும், பெற்றோர்களும் போரட்டகலத்தில் இறங்கினால், தமிழக அரசு என்ன செய்யும்?

    அட’க்’குமா? அட’ங்’குமா?

    அடங்கினால் வெற்றி நமக்கு. அரசுக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.

    அடக்க நினைத்தால் போராட்டம், ஆர்பாட்டமும் நடைபெறும், அது மேலும் வழுபெற்றால் குடியரசு தலைவர் ஆட்சியைகலைத்து, ஆளுனர் ஆட்சியை கொண்டுவந்துவிடுவார்.

    இது நடக்காது என்கிறீர்கலா பாமரன்…!

Leave a Reply to வியாக்கி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க