அம்மணக்காரன் ஊருல கோவணன் கட்டுனவன் டீஜன்டுனா, போலீசு லத்திய பாத்தாலே மூச்சா போறவன் ஊர்ல, கம்பு கட்டி துணி காயப்போடுறவன் கொம்பனா?
வேல வெட்டி இல்லாத புயபுள்ளகளுட்ட 1000, 2000ம்னு வாங்கி கடவுள காட்டுவேன்னு வடிவேலு அண்ணன் வசூல் பண்ண கத தெரியுமாலே? பெறவு அல்லா புயபுள்ளகளயும் மலையண்ட கூட்டிபுட்டு, கடவுள பாத்தா மேறி ஆக்ட் குடுப்பாறு நம்ம அண்ணாத்தே! கடவுளயைம் காணோம், காசும் வேஸ்ட்டுன்னு அந்த பயபுள்ளங்க அண்ணன் சட்டையக் கோத்து கேப்பாய்ங்க! அப்போ நம்ம அண்ணாத்தே ஒன்னு அடிச்சு விடுவாறு, யாரு பொண்டாட்டிங்கல்லாம் பத்தினியோ அவுகளுக்கு மட்டும் கடவுள் தெரிவாருன்னு சொன்னப்புறம், அவனவன் துண்டக் காணோம் துப்பட்டாவக் காணோம்னு கன்னத்தில் போட்டுக்கினு மானத்தை பாத்து சாமி தெரியுதுன்னு உருகுவானுக!
அப்படித்தாம்லே இந்த சாநிய (சாரு நிவேதிதா) நம்ம பதிவுலகத்துல இருக்குற சில பயலுவ அதுவும் சேட்டு பையனுகிட்ட ஐஞ்சு பானி பூரியை முழுங்கினு நாலுதான் லபக்குனேன்னு சண்டை போடுற காலரைக்கால் டிக்கட்டுங்க கொண்டாடுறானுவ! சாமிய பாக்கலேன்னா சொன்னா கற்பு காத்துல கரைஞ்சிரும்ங்கிற மேறி என்னா ஒரு பக்தி!
ஏலேய் மளிகை லிஸ்ட் போட்டாலும், மங்காத்தா டிக்கெட்டு புக் பண்ணினாலும் புள்ளையார் சுளி போட்டு ஆரம்பிக்கிறதுதான் நம்ம மரபுலே! அதுமேறி இலக்கியக் கட்டுரைன்னா நம்ம குருஜி இல்லாமலாடே! மொகரம் பண்டிகைக்கு ஆபிசுல லீவு, அம்பத்தூர்ல இருந்து வர பேஜாரா இருக்கும்ணு குருஜி இந்த பங்ஷனுக்கு வரலேன்னு சொன்னதுமே நமக்கு கொஞ்சம் டல்லுதான். என்ன இருந்தாலும் பதிவுலகுல சாநிய ராக்ஸோ ராக்குஸூன்னு எழுதி நம்ம பயலுகள பத்தி விட்டவராச்சே! அதுவும் போன தபா குஷ்பு வரலேன்னு துக்கத்துல இருந்தவருகிட்ட, இந்த வாட்டி ஜோதிர்மயி வருவாக வாங்கப்புன்னு துக்கம் விசாரிச்சாரு நம்ம ராம்ஜி யாஹூ.
ராம்ஜி யாருடே புதுசுன்னு வாயப்பெளக்காதீக. அவுரு அதுக்கு ஒர்த்தான ஆளு! கடவுள்னா தூணுல, துரும்புல, இருப்புல, மப்புல இருப்பான்ங்குற மேறி, இலக்கியம்னா அது ராஜேஷ் குமார் பாக்கெட் நாவல்லயும் இருக்கும், ஜெயமோகனது தண்டியான விஷ்ணுபுரத்துலயும் இருக்கும்னு ஒரு திரியை கொளுத்திப்போட்டு அந்த அதிர்ச்சியில சுயமோகத்துக்கு கிடைச்ச அடியில ஜெயமோகானந்தா பின்னூட்ட பெட்டியை தூக்கிட்டாருல்ல! இவருதாம்லே பதிவுலக பின்னூட்ட பில்லா!
சீரோ டிகிரியையே கொஞ்சம், நஞ்சமாக மாத்தி மாத்தி தேகம், எக்சைல்னு காத்தால வெடிக்கிற அடிவயத்து கேசு மாதிரி ரிலீஸ் பண்றாரு சாநின்னு குருஜிக்கு தெரிஞ்சாலும் அதே நாத்தத்தை மொகத்தை சிரிச்சாப்புல வச்சிகிட்டு சுவாரசியமா புடிக்கிறாரு. அந்த பீலிங்லதானோ என்னவோ மாலையோரத்து மப்புக்கு குட்டி உருளைக்கிழங்கு ரோஸ்ட், பால்கனி கட்டிங்குல தேன்கனி மூன் ரெய்சிங்கினு எழுதி இம்சிக்கிறாரு? பெறவு நம்மளோட சேந்தா வாழ்க்கையில இருந்து இலக்கியத்தை கண்டுபிடிக்கலாம், சாநியோட சேந்தா அது கட்டிங்கை வுட்டு நகறாது! விடுலே, என்ன இருந்தாலும் மொகரத்துக்கு ஆபிசை லீவுன்னு வுட்டுறுக்காறு, அந்த பாய்மாபிமானாத்துக்கு மட்டும் ஒரு நன்னிய சொல்லிக்கினு மேட்டருக்கு வருவோம்.
குருஜியும் வரல, ராம்ஜியும் வரலயேன்னு போகலாமானு ரோசிச்சிப்ப நம்ம கூட்டுக்காரன், சும்மா டைம் பாசுக்கு போலாம்டேன்னு இழுத்தான். சரி மக்கான்னு சொல்லி வெச்சேன்.
அடியில வெட்டாகுதான்னு பொறுக்கி சாநி சாட் ஸ்கேண்டல் வெளியான பிறகு நடக்குற புக் பங்ஷன்ங்குறதுனால மட்டும் நான் அங்க போகல! சாநியோட ஜால்ராக் கூட்டம் எத்தன பேரு வருவானுக, அதுல எத்தன பேரு வூட்டுக்காரிகளை கூட்டிட்டு வருவானுக, அதுல எத்தனை பேரு வூட்டம்மாக்கள சாநிகிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணுவானுகன்னு ஒரு கணக்கு போடலாம்னு பாத்தா, ஏலே சொன்னா டெரரா இருக்கும், எல்லா பயலும் உசார்டே, ஒருத்தனும் கூட்டிட்டு வரல, ஒன்னு இரண்டுன்னு கூட்டிட்டு வந்தவனுகளும் ஏதோ சில ஐயோ பாவம் கேசு! அதுவும் அந்த சாட் மேட்டரு தெரியாத அப்பாவி பயலுவ!
ஆறு மணி பங்சன்னு சொன்னாப்லயா.. எதுக்கும் ஒரு அஞ்சரைக்கே போலாமேன்னு போய் பாத்தா சுத்துவட்டாரத்துல ஒரு குஞ்சு குளுவானக் கூட காணோம். என்னடா இது காமராசருன்னு சொன்னாப்லயா ராமராசருன்னு சொன்னாப்லயான்னு ஒரே சம்சயமாப் போச்சுங்க.
உள்ளுக்குள்ள போனா மண்டவத்துக்குள்ள நொழஞ்சதுமே லெப்ட் சைடுல நம்ம கெழக்கு கம்பேனிக்காரங்க அந்த புக்கை லோடு லோடா எறக்கி அடுக்கி வச்சிருந்தாங்க. எண்ணிப்பாக்கல. எப்புடியும் ஒரு ஆயிரங்காப்பி அடிச்சிருப்பாகன்னு தெரிஞ்சுது. அல்லாத்தையும் வுத்துப்புடனும்னு ஒரு லச்சிய வெறிய கிழக்கு தம்பிமாருங்கிட்ட பாத்தேணுங்க! அடோ சாமீ… நம்மூர்ல இத்தினி படிப்பாளிங்களான்னு பக்குன்னு ஆயிருச்சு. அனேகமா இன்னிக்கு டாஸ்மாக்குல யாவாரம் படுத்திருக்கும்னு சாநிய பத்தி நெனச்சிட்டே மண்டவத்துக் கதவத் தொறந்தா திரும்பவும் பக்குன்னு ஆயிருச்சு. பின்ன அத்தினி பெரிய மண்டவத்துக்குள்ள எண்ணி பத்தே பேருன்னா எப்புடி இருக்கும்? எனக்கென்னவோ பேய் பங்களாவுக்குள்ள பூந்துட்ட மாதிரியே இருந்துச்சு.
முப்பாத்தம்மன நெனச்சிட்டே ஒரு ஓரமா போய் உக்காந்தேன். அப்புறம் ஒவ்வொருத்தரா வந்தாங்க. ஒருவழியா பங்சனு ஆறரைக்குத் தொடங்கிச்சு, நம்ம கூட்டுக்காரணும் வந்தாச்சு!
எங்கள மேறி பந்திக்கு முந்துன கேசுகளை குஜாலாக்குற படி கொலைவெறி, இச்சு இச்சு குத்துப்பாட்டைப் போட்டு தாளிச்சாணுக! இந்தபடிக்கு போனா அடுத்த தபா ரிக்கார்டு டான்ஸ் நிச்சயம். அதுக்கு கூட்டம் வருங்குறதும் சத்தியம். இதெல்லாம் யூத்தா காட்டிக்கிறதுக்காவாம்! ஏலே போக்கத்தனுவுகளா அதுல என்ன யூத்து, இன்னம் பேபி யூத்துக்கு போகணும்மான டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் போடலாம்லே, போட்டா அல்லாரும் பால்குடிக்கிற பாப்பான்னு காட்டலாம்லா? இந்த டைமுல பதிவுலகத்தின் யூத் கேபிள் சங்கர் உள்ளேன் ஐயான்னு ஆஜர் வைச்சாரு. இந்த யூத் அக்கப்போருங்கள பாத்தா கே.பி.சுந்தராம்பாள் மேறி நாமளும் கிழடுதட்டி வரம் வாங்கிட்டு போறது மேல்!
மேடையில மூணு நாக்காலிங்கள போட்டுருந்தானுவ. அதுல ஆர்டர் படி சாநி, இந்திரா பார்த்தசாரதி, வாலி மூம்மூர்த்தி மேறி குந்திக்கினாங்க.அல்லாம் 60, 70, 80வயசு கேசுங்க. அதைப்பாத்தா நாகேஸ்வரராவ் பூங்காவுல கிழடு கெட்டைங்கல்லாம் நடந்த டயர்டுல அங்ககீற பெஞ்சுல குந்துண மாதிரி ஒரு காட்சி. இவுகதான் யூத்துக்கு அத்தாரிட்டின்னா அது சிம்புவோட தம்பி குறளரசனுக்கே அடுக்காதுடே.
பங்சன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஜிகு ஜிகு சட்டையில் சாநி அங்கன இங்கன நடந்து, போஸ் கொடுத்து, கை குலுக்கி, சிரிச்சிகிணு உலா வந்தாரு. இதைப்பாத்தா தஞ்சாவூர் பெரிய கோவில் ஆனை அம்மாம் பெரிய கோவிலுல நின்னுக்கிணு வர பக்தமாருங்களுக்கெல்லாம் ஆசிர்வாதம் கொடுத்து தும்பிக்கையில தட்சிணையை அமுக்கின மாறி இருந்துச்சு. அம்மாம் பெரிய ஹாலுல கால்வாசி கூட ரொம்பாத கூட்டத்துல என்னா ஒரு எஃபக்ட்டு!
இதுல சாநி சட்டைக் கலருக்கு செமத்தியா டஃப் கொடுக்குற மேரி மச்சி சார் கண்ணைப்பறிக்கிற பச்சை டீ சர்ட்டுல சும்மா அந்தக்காலத்து ராமராஜன் மேறி என்ட்ரி குட்தாரு. அவரைப்பத்தித்தான் எக்சைலு நாவலோட 323ம் பக்கம் வருதுன்னு நம்ம கூட்டுக்காரன் அந்த புக்கை புரட்டி காண்பிச்சான். இந்த உலகத்துல பலரும் ரசிக்கிற மாதிரி நாமளும் ஒரு துணை நடிகன் கணக்கா இருக்கோம்ங்குற ஆனந்தத்துல அவரும் இதெல்லாம் ஒண்ணுமில்லைனு போகலாம். இருந்தாலும் நமக்குத்தான் மனசு திக்கு திக்குனு அடிக்குது. யாரு பெத்த புள்ளையோ பாவம்!
பெறவு எல்லாரும் செட்டானதும், “‘அஜால் குஜால் பாட்டெழுதும் வாலிப கவிஞர் வாலி வந்திருக்காக, மார்கெட் போன சமஸ்கிருத வித்துவான் இ.பா. வந்திருக்காக, குண்டூசி முதல் கிசுகிசு வரை அல்லாத்தையும் புக் போடும் கார்ப்பரேட் பதிப்பாளர் பத்ரி வந்திருக்காக, மற்றுமுள்ள வாலிப – வயோதிக நண்பர்கள் எல்லாம் வந்திருக்காக… வாம்மா மின்னல்…’ என சாநி சொம்பு தூக்கி வட்டத்துக்காரனுக குரல் எழுப்பனதும் கோட் – சூட்டுல சாநியை கையப்பிடிச்சு ஒருத்தரு அவரும் சூட்டு கோட்டு போட்டுகிணு இருந்தவரு கூட்டிட்டு வந்தாரு. கூட்டிட்டு வந்தவரு கலருல கருப்புங்கிறதானலயோ என்னமோ அவரு கோட்டு சூட்டு போட்டதை ஒத்துக்கிறதுக்கு முடியலடே. நம்மள மேறி உள்ள கருப்புதமிழனுக்கு கோட்டு சூட்டு எப்புடிலே ஒத்துக்கும்?
இதுல அவருதான் சாநிக்கு டை கட்டி விட்டாருன்னு சாநியே மேடையில சொன்னப்போ உண்மையிலேயே புல் அரிச்சிருச்சு. இதுல இன்னோரு ஃபுல்லையும் கேளுடே, மேடைக்கு வந்தவுக அல்லாத்தையும் சாநி சொம்பு தூக்கி காரனுவக கைத்தாங்கலாத்தான் கூட்டிகிணு வந்தானுக, அட ஙொக்கமக்கா என்னா ஒரு ‘யூத்’தாபிமானம்!
அமெரிக்கன் ஜாக்கிக்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுன இந்த சாநி இன்னைக்கு வாடகைக்கு எடுத்த கோட்டு சூட்டு போட்டது எதுக்காம்? ரசியல் கல்சுரல் அகாடமியில உலக நாவல பத்தி நம்ப பண்டிதர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு வாரம் உபன்யாசம் பேசுனப்போ சாநி அங்கன போனாராம். அதுல ஒருத்தரு குர்தா போட்டுக்கிணு வர, மாமா சாநி ஏனுன்னு கேக்கப் போய், இதுதான் இலக்கியத்துக்கு டிரஸ் கோடுன்னு சொல்ல, சாநிக்கு தூக்கம் வரலயாம். அப்பத்தான் விட்டலச்சார்யா கம்பெனி ஆர்ட்டிஸ்டு காந்தாராவ் கணக்கா ஒரு சங்கல்பம் போட்டு, எக்சைலை ரிலீசு பண்றப்போ கோட்டு சூட்டு போடுவேன்னு மங்கம்மா சபதம் போட்டாராம்.
இதுக்கு மிஷல் ஃபூக்கவ கூப்பிட்டு அவரோட Discipline and Punishment புக்குல டிரெஸ்ங்குறது எப்புடி அதிகாரத்தோட குறியூடு, யூனிஃபார்ம பாத்தா மக்களுக்கு எப்படி கதி கலங்குதுன்னு பல் விளக்குண மாறி விளக்கிட்டு, அவருதான் இந்த யூனிஃபார்மிட்டிய ஒடைக்க வந்த அம்புலிமாமான்னு ஆர்ப்பாட்டம் பண்ணுனாறு. அடிங், யூனிஃபார்மிட்டியை உடைக்கணும்மான கோவணத்த கட்டிக்கிணு வா, இல்லை ஜாக்கி ஜட்டியோட வா, அத வுட்டு கோட்டு சூட்டு போட்டா அது கலகமா இல்லை பிரிஞ்சால் காயா? பேண்டு சட்டை போட்டுகிணு வர கெவர்மண்டு ஆபிசருமாரை பாத்தா கன்னத்துல போட்டுகிணு சாமிண்ணு கும்பிடுற நாட்டுல கோட்டு சூட்டு போட்டா நம்ம மக்கமாறு காலுலேயே வுழுவான். அந்த படிக்கு அந்த டிரெஸ் மேலே இந்த ஊருக்கு அவ்வ்வளு டெரரு இருக்குணு இந்த கஸ்மாலத்துக்கு தெரியாத இன்னா?
இப்புடி சாநி குர்தாவ கிழிச்ச போது பத்திரிகையாளர் ஞாநி குர்தா இல்லேனா ஜிப்பாவோடு செல்போன்ல பாம்பு கேமை ஆடிக்கிட்டிருந்தது அவருட பின்னாடி இருந்து எட்டிப்பாத்த எனக்கு தெரிஞ்சுது. இது என்னன்னா, கூட்டம்னா அதை கம்னு கேட்கணும்ணு இருந்த யூனிஃபார்மிட்டிய ஞாநி கலாய்ச்சு கலகம் பண்ணுராருன்னு எடுத்துக்கலாம்.
பெறவு சாநியோட இந்த புக்கை ஒரு பய 50,000யிரத்துக்கும், இரண்டுபய 25,000த்துக்கும், சிலரு 5, 10 ஆயிரத்துக்கும்னு எடுத்தானுகளாம். அதுல அவனுக யாரும் பேரை சொல்லக்கூடாதுன்னு கண்டிசனா போட்டுட்டுனாகளாம். பெறவு சாட் மேட்டர் போலீசுக்கு போனா, ஸ்பான்சரு ஆருன்னு என்கொயரி வருமே? இது ஏலமா, இல்லை வசூலான்னு உங்களுக்கு தோணுணாலும், அதெல்லாம் தேவமாரு இரகசியம்டே, உள்குத்து என்னண்ணு எவனுக்கு தெரியும்?
பெறவு ஒரு இருபது பேரைக்கூப்பிட்டு சாநி ஜால்ரா போட்டுக்கிணு புக் கொடுத்தாரு. அதுல சீனிவாசன்ங்கிறவரை ஃபிரெண்டு, பிலாசபரு, கைடு ன்னு தூக்கி வுட்டாரு. இந்த கைடுதான் சாநிக்காக பிச்சாவரத்துல மப்போட மான்கறி போட்ட மகான்னு சொல்லுதாக. உண்மையான்னு எங்கிட்ட கேக்காதீக. ஆனா இது போலீசுக்கு போயிரும்னு பயந்து சாநி அந்த பார்ட்டி போஸ்ட்டுகளை தூக்குனது தனிக்கதை. அப்பாலிக்கா வந்த டாக்டர் ரமேஷ், இவரு பங்காரு அடிகளோட கனைக்ஷன் உள்ளவரு. நித்யானந்தா மேட்டருல சந்தி சிரிச்சாலும், சாநியோட ஆஸ்ரம கனக்சனுங்க இன்னும் முடியல. அடுத்து சங்கர மடத்து மேனேஜர் மஹாதேவன் ஐயர் 2012ல வந்தாலும் வரலாம். ஆரு கண்டா?
விவேக் நாராயணன்னு ஒரு அமெரிக்க அம்பி, அதுவும் தமிழ் தெரியாத அம்பியைக் கூப்பிட்டு மத்த தமிழ் பயலுவுகளுக்கு இரண்டு செகண்டுல முடிச்ச சாநி இவரை மட்டும் கூரையில் வைச்சு கொண்டாடுன கணக்கா ஆர்டிக் ஐஸ் பொழிஞ்சாரு. அதுமேறி இங்கிலாந்து எம்பசியிலிருந்து ஒரு கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரனும் வந்தாரு. என்ன இருந்தாலும் ரஸ்ஸலுக்கே விலை வைச்சு கம்யூனிச எதிர்ப்புல கல்லா கட்டுன நாட்டுக்காரனுக்கு இந்த சாநியை ஆட விட ஒரு பீரு போதுன்னு தெரியாதா?
இது போக அதிமுக பெரும்புள்ளிங்க, அந்துமணி ரமேஷின் தம்பி புதுச்சேரி தினமலர் வெங்கடேஷ்ன்னு ரூலிங் கிளாசின் அல்லா தூண்களும் வந்தானுங்க. அந்துமணி ரமேஷ் மட்டும் ரொம்ப பவ்யமா ஒரு ஓரத்துல இந்தப்பூனையும் பால் குயிக்குமாங்குற கணக்கால குந்தியிருந்தாரு. இவருதான் மேல்மட்டத்து கிசுகிசு கதங்களை பைவ்ஸ்டார் ஓட்டல் பார்ட்டியில சாநிக்கு கொடுக்குற சோர்ஸ். பெறவு அந்த சோர்ஸ் மெட்டீரியலை வைத்து சாநி ஏதாவது எழுதி மண்டபத்துல இருக்குற அந்துமணிக்கு டைம் பாஸ் கொடுப்பாரு. அந்தக் காலத்துல இருந்து மன்னர்மாரு இப்புடி மண்டபத்துல இருக்குற பரதேசி புலவனுங்களெயெல்லாம் தூக்கிப்போட்டு கொண்டு வந்து பால் பாயாசத்தோட சாப்பாடு போட்டு ஜால்ரா பாட்டு கேடு ரசிப்பானுக. இங்க பாயாசத்துக்கு பதில் ஷேம்பைன், அம்புட்டுதான் வித்தியாசம். ஆனா சாநிக்கு வாழ்நாள் சந்தா கட்டுன நல்லி குப்புசாமியும் அவரோட நிழலான தூர்தர்ஷன் நடராஜனும் மிஸ்ஸிங். ஒருவேளை அவுகதான் பிகைண்ட த ஸ்பான்சரோ என்ன எழவோ.
மேடையில பேசுன பெருசுங்க, கூட்டத்த பாத்து ஆயிரம், 700ன்னு கணக்கு சொன்னதுங்க. பாக்கிறது எல்லாம் ரெண்டா தெரிஞ்சா அதுக்கு என்ன காரணமுன்னு அல்லா பயலுகளுக்கு தெரிஞ்சிருக்கும். எதுக்கு வம்புனு கூட்டம் ஆரம்பிக்கையில இருந்து முடியற வரைக்கும் மூணு தபா அம்புட்டு தலைங்களயும் எண்ணிப் பாத்தேன். மேடையில இருந்தவுங்களுயும் சேத்து 340க்கு மேல மீட்டர் போகல. அடப்பாவிங்களா இதுக்கா இத்தனை பில்டப்பு! தினமலருல வெளம்பரம், பத்ரியோட புரொமோ, யூடியூபுல புரமோ, சாநி தளத்துல தொடர்ந்து கீறல் ரிக்கார்டு டயலாக், கெழக்கு கம்பெனியின் வெளம்பரம்… இத வுட தி.மு.க மீட்டிங்குல குமரி முத்துவுக்கு ஆயிரக்கணக்குல கூட்டம் சேருமேடே? அங்கன போனா உருப்படியா நாலு கருத்தையும், காமடியையும் கேட்டுகிணு ராத்திரி அம்சமா உறங்கலாமடே?
கூட்டத்துக்கு வந்த பெரபலங்கள சாநி கூவிக் கூவி வித்துக்கிணு இருந்ததைப் பாத்தா அவுகளுக்கே வெக்கத்துல அட்டாக்கே வந்திருக்கும். ஆடுகளம் இயக்குநர் வெற்றி மாறன், ஞாநி, மதனுன்னு டி.வி சீரியல் ஹமாம் சோப்பு விளம்பரம் போல பீத்துனது போதாதுன்னு அதுக்கு அல்லக்கைங்க கைதட்டுனத பாத்தா தமிழ்நாடு எம்புட்டு பெரபல மோஸ்தர் வறட்சியில இருக்குதுன்ணு தெரியுது. இவனுகதான் செக்ஸ் வறட்சியப் பத்தி பேசுதானுக!
மதனோட ஏற்கனவே பேசி வச்சமாறி அவர பேசக் கூப்பிட்டாரு சாநி. மதனும் ஏதோ பெரிய அறிவாளி மாதிரி இந்த நாவலு இன்டர்நேஷனல் தரம்னு அடிச்சிவுட்டு அதுக்கு ஆதாரமா அவரும் இ.நேஷனல் ரீடருன்னு சொன்னாரு. என்சைக்ளோப்பீடியாவையும் விக்கிபீடியாவையும் மேயுறவனெல்லாம் இ.நே ரீடருன்னா நம்ப நமீதாவையும் அறிவாளியா ஒத்துக்கலாம். அடுத்து இவரு சாநியை ஒளிவு மறைவு இல்லாம எழுதுற கலகக்காறனா பலூன் ஊதுற மேறி உப்ப வைச்சாரு. ஆ.விகடன்ல ஆரையும் பகைச்சுக்காம, சூடு, சொரணை, காரம், கசப்பு இல்லாம மொக்கை காட்டூன் போடுற ஒரு பயந்தாங்கோளி சாநியை தைரியசாலின்னு உச்சிமோருத பாத்தா, நம்ம ஊருல கோழைக எவனுமே கிடையாதுடே.
இதுல இந்த சூராதி சூரன் சாநியோட எக்சைல் நாவல யூலா போகாம வாசிச்சாராம். சாநியும் இந்த புக்க செய்ஞ்ச போது அதாம்டே எழுதுன போது பலநாளு மூச்சா போலயாம். ஜெயமோகனும் இப்புடித்தான் மூச்சா போகாம எழுதுனாத பலவாட்டி எழுதிக்கிறாரு. இப்புடி மூச்சா புராணத்தை சாநியும், மதனும் விலாவாரியா விளக்குண கேப்புலயும், பெறவும் நானே ரெண்டு முறை மூச்சா போனேன். இவனுக பேச்சைக் கேட்டு அடிவயிறு கலங்கி பீச்சாம இருந்த வரைக்கும் சர்தான்.
பெரிசு இ.பா பேசுற போது ஒருஉண்மைய ஒத்துக்கிட்டாரு. இந்த நாவலு மைல்டு ஃபோர்னா இல்ல ஓய், இது ஹார்டு ஃபோர்னோன்னு வழிஞ்சாரு, என்ன இருந்தாலும் அவரும் தன்னை யூத்துனு காமிச்சிக்கிணும்லா? அதுலயும் ஒரு வேவ் லென்த் இருக்கு. வெண்மணி கொலையை வைச்சு குருதிப்புனல்னு நாவல் எழுதுன இந்த இ.பா. அதுல கோபாலகிருஷ்ண நாயுடு அந்த கொலையை செஞ்சதுக்கு காரணம் அவனோட செக்ஸ் வறட்ச்சின்னு ஒரு கண்டுபிடிப்பை போட்டாரு. நாமளும் இது தெரியாம அமெரிக்காகாரன் ஈராக்கை ஆக்கிரமிச்சதுக்கு ஏதோ ஏகாதிபத்தியம் அது இதுன்னு பினாத்திக்கிட்டு கிடக்கோம். சாநியும் அவரது சொந்த வாழ்க்கையில செக்ஸ் வறட்சி உள்ளவருங்கிறதுனாலே இந்த உலகமே காமத்துல காய்ஞ்சி போனதா கண்டுபிடிச்சிருக்காரு. இரண்டு பேரும் மேச்சுதானடே?
அடுத்து சமைஞ்சது எப்புடின்னு பாட்டு எழுதுன வாலி பேசுறப்போ, ஆறு மாதத்துக்கு முந்தி சாநிய தெரியாதுன்னு சொல்லிட்டு, அடுத்த வரியிலேய்யே அவரு எழுத்த எதையும் படிச்சதில்லேன்னுட்டு, பெறவு அகஸ்மாத்தா ஒன்னு ரெண்டு படிச்சேன்னு சொல்லி இவரும் சாநியை கலககாரன்னு தூக்குனாரு. சாநி வாலியை பத்தி ரீலுறப்போ வாலி எப்போதும் சமரசம் செய்ஞ்சதில்லேன்னு அடிச்சு வுட்டாரு. கேக்குறவன் கேனயன்னு நெனைப்பா, தெரியல. கருணாநிதி ஜால்ரா கவியரங்குத்துல இந்த வாலி போட்ட ஆட்டமென்ன, பெறவு ஜெயா மாமி வந்தப்புறம் அவரை ரெங்கநாயகின்னு தொழுததென்ன, மண்டபத்துல இருந்த ஒரு பயலும் நியூஸ் பேப்பர் கூட படிக்கிறதில்லேன்னு தெரியுது.
கடைசியா சாநி பேசுனது எல்லாம் புதுசு இல்லை. எழுத்தாளன தமிழகம் வாழ வைக்கல, சித்த மருத்தவத்தின் பலன், சபரிமலையின் புனித அனுவபம், கிராமத்து உணவு, பாரத மரபுன்னு காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை உள்ள அத்தனை சமாச்சாரத்தையும் கலந்து காக்டெயில்ல அடிச்சு பேசுராறு. அதுல ஒரு உண்மையை பாத்தீகன்னா அல்லாம் அவரு சொந்தப் பிரச்சினையில இருந்து குன்சாவாக கத்துகிட்ட தீர்வுங்கள வைச்சு அல்லாருக்கும் அட்வைசு மழைய பொழிதாரு. ஊர் பிரச்சினையை பாக்க கூட வக்கில்லாதவன் சொந்த பிரச்சினைய எலக்கியமாக்கப் போறேன்னு ஆரம்பிச்சா அது ஆண்மைக்குறைவயும், கைமுட்டியயையும் தாண்டுமாடே?
பர்கர், பிசா, கே.எப்.சி, ஐஸ் காஃபின்னு காசு உள்ள யூத் போற நாட்டுல சுக்குமிளகுதிப்பிலின்னு கஷாய கிளாசு எடுக்கிறவரு எப்படிடே யூத்தா இருப்பாரு? சாநியோட செக்ஸ் கதங்களுக்காகவும், கிசுசிசு மேட்டருக்காவும் படிக்க வரவன்கிட்ட சாமியே ஐயப்பான்னு முழங்கச் சொல்லுறவரை எவன்டே மதிப்பான்? ஆனா பாத்துக்கிடுங்க பட்டையும், கொட்டையுமா பக்திப் பழமா இருக்கிறவன்தான் பொறுக்கியாவும் இருப்பான்ங்குறது நமக்கு தெரிஞ்ச விசயம்.
இதுல இவரு பப்பு தமிழுல வேகலேங்குறதால இனி இங்கிலீசுல நாவல் எழுதி அடுத்த வருசம் வெளியிடப் போராறாம். இங்கிலிசுல இந்த பொறுக்கி சமாச்சாரங்கள்ளாம் டிரிபிள் எக்ஸ் மேட்டரா இலவசமா கிடைக்கிற நேரத்துல இவரு என்னத்த எழுதி என்னத்த கிழிக்க? வேத மரபை ஏத்துக்கிற தயானந்த சரஸ்வதி, சித்த மரபையும் ஏத்துக்கிடணும்னு இந்த சாநி பேசுற போது எவனுக்காவது உரைச்சுச்சா? வேத மரபை மறுத்து வந்ததுதான் சித்த மரபு, அது பாப்பனிய எதிர் மரபுன்னுகூட இந்த லூசு மாமாவுக்கு தெரியல இதுல மத்தவனெல்லாம் எதையும் படிக்கிறதில்லேன்னு இவரு வருத்தப்பட்டதை என்னன்னு சொல்ல? ஒன் யோக்கியதையை கண்ணாடியில பாருயா வெண்ணை!
காரல் மார்க்ஸ் இந்தியருங்களை காட்டுமிராண்டின்னு சொன்னதா சாநி அடிச்சு வுட்டதைப்பாத்தா இவனெல்லாம் புஷ்பா தங்கதொரையைத்தாண்டி எதையும் படிச்சவனில்லைன்றது தெரியுது.
இதுல இவருக்கும் ஜெயமோகனுக்கும் நடக்குற குழாயடிச் சண்டையை ஏதோ மாபெரும் தத்துவ சண்டைன்னு சொன்னதைக் கேட்டு ஜெயமோகன் அவரோட பார்வதிபுரத்து வூட்டு சுவத்துல முட்டி முட்டி அழுவுறாராம். அவரை தேத்துறதுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்காரனுவ நாகர்கோவிலுக்கு பஸ் ஏறியிருக்கானுகன்னு ஊர் பூரா பேச்சு.
சாநியோட வூட்டுக்காரம்மா வாலி, இ.பா காலுல வுழுந்து கும்பிட்டதும்தான் ஒரு உண்மை தெரிஞ்சிது. அந்த அம்மா, வாலி, இ.பா, மதன், பத்ரி அல்லாரும் அவாளுங்குற சேதியப் பாத்தா என்ன தோணுது? அய்யங்காரு ஆத்துல ஐயரைக்கூட்டி பூணூல் கல்யாணத்துக்கு விருந்து வெச்சா மேறி ஒரு எஃபக்ட்டு.
ஏலேய் போக்கத்த மூதிகளா இதுக்கு மேலயும் இந்த எக்சைலு புக்க வாங்கி காசை விரயமாக்காதிகடே! அந்தக் காசுல பாய் கடையில பத்து பிளேட் பீஃப் வாங்கித் துன்னா ஆண்மைக்குறைவும் வராது, ஆய் குறைவும் வராதுடே! இப்ப சில பதிவருமாரு அந்த புக்குல இருக்குற சமாச்சாரத்தை காப்பி பண்ணி போட்டிருக்காக. அதுல பாத்தா, பத்து பக்கத்துக்கு ஆண்மைக்குறைவுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியம், பத்து பக்கத்துக்கு ஐயப்பா சரணம், பத்து பக்கத்துக்கு பாட்டி வைத்தியம், மீதிப்பக்க்த்துக்கு செக்ஸ் மேட்டருன்னு இருக்குறத நம்ப அண்ணாச்சி உண்மைத்தமிழன் தொட்டு சுரேஷ் கண்ணன் வரைக்கும் காறித் துப்புதாக. மீறி வாங்கின்னா அதுக்கு எச்சில் இலையை பொறுக்கி துன்னலாம்.
இதுல சாநியோட புக்கை ஆயிரக்கணக்குல வித்துரலாம்னு தப்புக்கணக்கு போட்டு அம்புட்டையும் மண்டபத்துல இறக்கி, அதுல நூறு வித்தா அதிகம், மிச்சத்தை அள்ளிக்கட்டி கிழக்கு பாய்சை துன்புறுத்திய பத்ரி, வசந்த மாளிகை சிவாஜிகணேசன் துக்கத்துல சிரிச்சது பாக்க சகிக்கலன்னாலும் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. இதுல ஜெயமோகனோட ரைட் ஹேண்ட் ஹரன் பிரசன்னாவுக்கு சாநி தனியா தாங்ஸ் சொன்னத நாம குறிச்சு வச்சக்கணும்டே!
ஜெயமோகனோட விஷ்ணுபுரத்து சொம்பு தூக்கிங்க வேட்டி கட்டிகிணு, ரசவடை போட்டு விருந்து வைச்சு கூட்டம் நடத்துறானுவ. சாநி சொம்புங்க கோட் சூட்டு வாடகைக்கு எடுத்துக்கிணு, சரக்கு பார்ட்டியோட கூட்டம் நடத்துராணுவ. ஒருத்தன் ஆச்சாரம், இன்னொருத்தன் அல்ட்ரா மாடர்னு பாத்து ஏமாறீதிக. ரெண்டுபெரும் ஒண்ணுதான். தெரியாதவன் வாயில மண்ணுதான்.
ஒரு பச்ச புள்ளைக்கு ஆபாசமா சாட் அனுப்பி ஆசைக்கு வக்கிரமா வற்புறுத்திய ஒரு பொறுக்கி ஒரு நாவல் எழுதுவானாம். அதை ஒருத்தன் புக்கா போடுவானாம். அதுக்கு விழாவாம். அதுல சில விஜபி வருவானுங்களாம். வந்தவனுங்க அந்த பொறுக்கிய தைரியசாலின்னு பாராட்டுவானுகளாம். அதுக்கு வூட்டம்மாவை வூட்டுல வுட்டுட்டு வந்தவனுங்க கைதட்டுவானுகளாம். வெளங்குமாடே இந்த நாடு?
_____________________________________
– காளமேகம் அண்ணாச்சி
_____________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
##ஒரு பச்ச புள்ளைக்கு ஆபாசமா சாட் அனுப்பி ஆசைக்கு வக்கிரமா வற்புறுத்திய ஒரு பொறுக்கி ஒரு நாவல் எழுதுவானாம். அதை ஒருத்தன் புக்கா போடுவானாம். அதுக்கு விழாவாம். அதுல சில விஜபி வருவானுங்களாம். வந்தவனுங்க அந்த பொறுக்கிய தைரியசாலின்னு பாராட்டுவானுகளாம். அதுக்கு வூட்டம்மாவை வூட்டுல வுட்டுட்டு வந்தவனுங்க கைதட்டுவானுகளாம். வெளங்குமாடே இந்த நாடு?##\
செருப்படி!
/மேடையில மூணு நாக்காலிங்கள போட்டுருந்தானுவ. அதுல ஆர்டர் படி சாநி, இந்திரா பார்த்தசாரதி, வாலி மூம்மூர்த்தி மேறி குந்திக்கினாங்க.அல்லாம் 60, 70, 80வயசு கேசுங்க. அதைப்பாத்தா நாகேஸ்வரராவ் பூங்காவுல கிழடு கெட்டைங்கல்லாம் நடந்த டயர்டுல அங்ககீற பெஞ்சுல குந்துண மாதிரி ஒரு காட்சி. இவுகதான் யூத்துக்கு அத்தாரிட்டின்னா அது சிம்புவோட தம்பி குறளரசனுக்கே அடுக்காதுடே./
-செம காமெடி டே !
http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html
ஒரு இலக்கியக்கூட்டத்துக்கு 350 பேர் வந்தார்கள் என்பது அதிசயமே. வினவையும் சேர்த்து 351 பேர். அதிகமான கூட்டம்.
நாவலை வினவு குழுமம் படிக்காது. படிக்காமலேயே அந்நாவல் படிக்கக்கூடாதவொன்று என்ற முடிவு சிறுபிள்ளைத்தனமானது.
ஒருவன் நற்குணங்கள் அமைந்தவனாக இருந்தால் மட்டுமே இலக்கியவாதியாக இருக்கவேண்டும் என்று எந்த வரைமுறையையும் எவரும் போட்டு எவரும் ஏற்கவில்லை. இலக்கியத்தின் கோட்பாடுகள் விசேடமானவை.
ஊருக்கு ஒரு வைப்பாட்டி வைத்து அலைபவனும், நித்தம் குடித்துப்போட்டு பார்யாளை உதைப்பவனும் பெண்ணின் உயர்வைப்பற்றிச் சித்திரிக்கும் புதினங்கள் எழுதலாம். எழுதியிருக்கிறார்கள்.
தனிநபர் வேறு; இலக்கியவாதி வேறு. கண்ணதாசன் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
வினவுவின் கட்டுரையை எழுதியவருக்கு நல்ல வன்மையான, வலிமையான எழுத்து நடை இருக்கிறது. இருந்தென்ன செய்ய? அது தவறாகப்பயன்படுத்தப்படுகிறதே !
ஒரு புதினம் எப்படிப்பட்டது? என்பதை வாசகர்தான் சொல்லவேண்டும்
படித்த்ப்பார்த்துவிட்டு.
வினவால் எப்படி முடிகிறது ? விட்டலாச்சாரியார்யாவின் காந்தாராவோ ?
////ஒருவன் நற்குணங்கள் அமைந்தவனாக இருந்தால் மட்டுமே இலக்கியவாதியாக இருக்கவேண்டும் என்று எந்த வரைமுறையையும் எவரும் போட்டு எவரும் ஏற்கவில்லை. இலக்கியத்தின் கோட்பாடுகள் விசேடமானவை.//////
கரீட்டா சொன்னபா …. இன்னா மேட்டரு சொல்லிகிற …
மவுண்ட் ரோடு சப்வே வாசல்ல போட்டு விக்கிற சரோஜாதேவி புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி கேட்டு நாங்களும் விண்ணப்பிக்கிறோம்.. இந்த கம்னாட்டிபசங்க கொடுக்கமாட்றானுங்க …
நீ கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணேன் …
நல்ல கருத்து. அந்தநூலகள் இலக்கியத்தரத்தில் எழுத்ப்பட்டால் அவைகளுக்கும் பரிசுகளும் பாராட்டுக்களும் தரும் இலக்கிய உலகம். தமிழில் இதுகாறும் இல்லை. பிற மேற்கத்திய மொழியிலக்கியங்களில் உண்டு.
ஒரு புதினத்தின் இலக்கியத்தரம் அதில் சொல்லப்படும் கருத்தால் இல்லை எப்படி சொல்லப்படுகிறது என்பதைப்பொறுத்தே.
சொல்லப்படும் கருத்தால் மட்டுமே தரம் என்பது இலக்கியம் சாரா துறைகளுக்கு உருவாக்கப்படும்நூல்களுக்காக மட்டுமே. எ.கா இரயில்வே கால அட்டவணை.
காமத்தை இலக்கிய உலகம் தள்ளி வைப்பதில்லை. அது நன்றாக இலக்கியத்தரத்துடன் சொல்லப்பட்டால்.
வியாபாரிகள் இலக்கியத்தின் பக்கமே வரக்கூடாது. வந்தால் இப்படி வினவு போல எழுதவேண்டியதிருக்கும் அவர்களுக்கு
காமத்தை இலக்கியமாக்குறதுல எது இலக்கியம், இது இலக்கியமல்லங்குறதுக்கு நீங்கதான் அத்தாரிட்டியா? நீங்க இப்படி அத்தாரிட்டி போஸ்ட்டை எடுத்துக்கிறதுக்கு உங்க்கிட்ட என்ன குவாலிபிகேஷன் இருக்கு? அப்படி ஒரு குவாலிபிகேஷன் இருந்தால் அது பாசிசம்தானே?
//ஒரு புதினத்தின் இலக்கியத்தரம் அதில் சொல்லப்படும் கருத்தால் இல்லை எப்படி சொல்லப்படுகிறது என்பதைப்பொறுத்தே.//
இரயில்வே கால அட்டவணையை தனியாகச் சொன்னால் இயக்கியம் கிடையாது. அத எக்சைலில் ஒரு பகுதியா சொன்னா இலக்கியமா? சரோஜா தேவி புத்தகங்களை இலக்கியம் இல்லைங்குறத்துக்கு உங்க்கிட்ட வெயிட்டான பாயிண்ட் இல்லையே? இருந்தால் சொல்லுங்க! சரோஜா தேவி கதைங்களுக்கும், சாநியோட கதைங்களுக்கும் வேறுபாடு எங்கிருக்கு?
சாநி இலக்கியம், சரோஜா தேவி இலக்கியமில்லேங்குறது உங்களோட மேட்டிமைத்தனங்குறதுதான் உண்மை.
// தனிநபர் வேறு; இலக்கியவாதி வேறு. கண்ணதாசன் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.//
யாரெல்லாம், எதற்கெல்லாம் தன்னை எடுத்துக் காட்டுவார்கள் என்பது தெரிந்தே எப்படி வாழக்கூடாது என்பதை தன்னைப் பார்த்துக் கற்றுக்கொள்ளச் சொன்னார் கவிஞர் தன்னுடைய ’வனவாசத்தில்’.
// வினவுவின் கட்டுரையை எழுதியவருக்கு நல்ல வன்மையான, வலிமையான எழுத்து நடை இருக்கிறது. இருந்தென்ன செய்ய? அது தவறாகப்பயன்படுத்தப்படுகிறதே ! //
தன் எண்ணத்தை எழுத்திலும் கொண்டுவருவது தவறா ?
// ஊருக்கு ஒரு வைப்பாட்டி வைத்து அலைபவனும், நித்தம் குடித்துப்போட்டு பார்யாளை உதைப்பவனும் பெண்ணின் உயர்வைப்பற்றிச் சித்திரிக்கும் புதினங்கள் எழுதலாம். எழுதியிருக்கிறார்கள். //
தன் எண்ணத்திற்கு நேர் எதிராக எழுதி ஊரை ஏமாற்றுவது சரியா ?
கண்ணதாசன் தன் இறுதி காலக்கட்டத்தில்தான் வனவாசம் என்ற தன் வரலாறு எழுதினார். அவரின் பெரும்பாலான இலக்கியப்படைப்புக்கள் அதற்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்டன. அப்போதெல்லாம் அவர் ஒரு பெண்பொறுக்கியாகத்தான் இருந்தார். அதையும் வெளிபடையாகச்செய்தார். தான் மாபெரும் கவிஞன்; தான் செய்வதெல்லாம் செல்லும் என்ற் மப்போடுதான் செய்தார்.
தமிழ் கூறும் நல்லுலகம் அவரின் படைப்பபுக்களை தள்ளி அவரின் பொறுக்கித்தனத்துக்காகத் தள்ளி வைக்கவில்லை. அவ்வுலமகம், தனிநபர் வாழ்க்கைக்கோட்பாடுகள், இலக்கியக்கோட்பாடுகள் வெவ்வேறானவை என்ற தெளிவுடன்தான் இருந்தது.
அப்படியே ஓரிருவர் இரண்டையும் போட்டுக்குழப்பி அவரின் படைப்புக்களை வெறுப்பவர்களாயிருந்திருபாரேயாயினும், அவர்கள், வனவாசத்தில் இப்படிச்சொல்லி விட்டார்; எனவே இவர் நல்லவர் என்றோடோடி வந்து இவரின் படைப்புக்களைப் புரட்டவில்லை.
சாரு நிவேதிதா பொறுக்கி; எனவே அவர் நூல்களைப்படிக்க மாட்டேன்; என்பவர்கள் இலக்கியம் படிக்கவரக்கூடாது; மெரீனாவில் சுண்டல் விற்கப்போகலாம்.
// கண்ணதாசன் தன் இறுதி காலக்கட்டத்தில்தான் வனவாசம் என்ற தன் வரலாறு எழுதினார். அவரின் பெரும்பாலான இலக்கியப்படைப்புக்கள் அதற்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்டன. அப்போதெல்லாம் அவர் ஒரு பெண்பொறுக்கியாகத்தான் இருந்தார். அதையும் வெளிபடையாகச்செய்தார். தான் மாபெரும் கவிஞன்; தான் செய்வதெல்லாம் செல்லும் என்ற் மப்போடுதான் செய்தார்.
தமிழ் கூறும் நல்லுலகம் அவரின் படைப்பபுக்களை தள்ளி அவரின் பொறுக்கித்தனத்துக்காகத் தள்ளி வைக்கவில்லை. அவ்வுலமகம், தனிநபர் வாழ்க்கைக்கோட்பாடுகள், இலக்கியக்கோட்பாடுகள் வெவ்வேறானவை என்ற தெளிவுடன்தான் இருந்தது.
அப்படியே ஓரிருவர் இரண்டையும் போட்டுக்குழப்பி அவரின் படைப்புக்களை வெறுப்பவர்களாயிருந்திருபாரேயாயினும், அவர்கள், வனவாசத்தில் இப்படிச்சொல்லி விட்டார்; எனவே இவர் நல்லவர் என்றோடோடி வந்து இவரின் படைப்புக்களைப் புரட்டவில்லை.
//
வனவாசம் எழுதாமலே போயிருக்காலாம், எழுதிய நேர்மைக்காகவே இன்று விமர்சனங்களில் சிக்கி சீரழியாமல் இருக்கிறார் கவிஞர். அவர் ‘செய்வதெல்லாம் செல்லும் மப்போடு செய்தார்’ எனில் கவிஞனாகச் செய்தாரா இலக்கியவாதியாகச் செய்தாரா? கவிஞனை கொஞ்சம் கூடுதலாகவே பொறுப்பது உலகளாவிய புரிதல். எந்த எழவென்றாலும் அன்று டவுசரைக் கழட்ட காளமேகம் அண்ணாச்சியும் internet-ம் இல்லாததாலும் இருக்கலாம்.
// சாரு நிவேதிதா பொறுக்கி; எனவே அவர் நூல்களைப்படிக்க மாட்டேன்; என்பவர்கள் இலக்கியம் படிக்கவரக்கூடாது; மெரீனாவில் சுண்டல் விற்கப்போகலாம். //
இலக்கியத்தின் ஏகபோக கொள்முதல், விற்பனை உரிமையையும் WAL-MART வந்து வளைத்து போட்டு இன்னார்,இன்னாரைத் தவிர வேறு யாருடைய படைப்புக்களும் எங்கும் கிடைக்காது என்றாட்டம் போட்டால் உங்களை மெரீனாவிலோ மண்டபத்திலோ சுண்டலோடு சந்திக்கிறேன்.
எழுதிய நேர்மைக்காக அன்று; அவரின் கவிதைகளுக்காகவே அவரின் தனிநபர் ஒழுக்கமில்லா நடத்தையைத் தமிழக மக்கள் பொறுத்துக்கொண்டு கவிதைகளை இரசித்தார்கள்.
கவிஞனைக் கொஞ்சம் கூடுதலாக பொறுப்பது உலகளாவிய புரிதல் என்று எப்படிக் கற்பனை பண்ணிவிட்டீர்கள்? உலக இலக்கியத்தில் கவிஞனைக்காட்டிலும் மக்களால் போற்றப்படும் இலக்கியவாதிகள் இருக்கிறார்கள்.
இலக்கியத்துக்கு ஏக போக உரிமை என்றெல்லாம் சொல்லிவிட்டால் நான் சொல்லும் கருத்தை விரட்டிவிட முடியுமா? நான் சொன்ன கருத்தென்ன?
இலக்கியத்தின் கோட்பாடுகள் தனியாக நிற்பவை அவை “இலக்கியம்” என்ற வட்டத்துக்குள்ளேயேயிருந்து மட்டும் பார்க்கப்படும்போது.
அப்படி அக்கோட்பாடுகளை அவ்வட்ட்த்துக்கு வெளியே இழுத்துப் போட்டு வைத்துக்கொண்டு பார்க்கும்போது இப்படி இடக்குமடக்கான கருத்துக்கள் அண்ணாச்சியின் கட்டுரைகளாக இடத்தையடைக்கும்.
அண்ணாச்சிக்கும் இலக்கியத்துக்கும் தூரம்.
// எழுதிய நேர்மைக்காக அன்று; அவரின் கவிதைகளுக்காகவே அவரின் தனிநபர் ஒழுக்கமில்லா நடத்தையைத் தமிழக மக்கள் பொறுத்துக்கொண்டு கவிதைகளை இரசித்தார்கள். //
சாருவும் கவிதை எழுதினால் தமிழக மக்கள் ரசிப்பார்களா என்று தெரியவில்லை, ஆனால் கண்ணதாசனை விமர்சிக்காதவர்களெல்லாம் சாருவையும் விட்டுவைப்பார்கள் என்று சொல்லமுடியாது.
// கவிஞனைக் கொஞ்சம் கூடுதலாக பொறுப்பது உலகளாவிய புரிதல் என்று எப்படிக் கற்பனை பண்ணிவிட்டீர்கள்? உலக இலக்கியத்தில் கவிஞனைக்காட்டிலும் மக்களால் போற்றப்படும் இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். //
கவிஞனைவிட அதிகமாக பொறுக்கப்பட்ட இலக்கியவாதி இருக்கிறாரா?
// இலக்கியத்துக்கு ஏக போக உரிமை என்றெல்லாம் சொல்லிவிட்டால் நான் சொல்லும் கருத்தை விரட்டிவிட முடியுமா? நான் சொன்ன கருத்தென்ன?
இலக்கியத்தின் கோட்பாடுகள் தனியாக நிற்பவை அவை “இலக்கியம்” என்ற வட்டத்துக்குள்ளேயேயிருந்து மட்டும் பார்க்கப்படும்போது.
அப்படி அக்கோட்பாடுகளை அவ்வட்ட்த்துக்கு வெளியே இழுத்துப் போட்டு வைத்துக்கொண்டு பார்க்கும்போது இப்படி இடக்குமடக்கான கருத்துக்கள் அண்ணாச்சியின் கட்டுரைகளாக இடத்தையடைக்கும். //
நிஜ உலகையும் இலக்கிய உலகையும், பெரிய வீடு சின்ன வீடு பாணியில் தனித்தனியா மெய்ண்டெய்ன் பண்ணச் சொல்றீங்க. எதற்காக விமர்சனம் என்பது இன்னமும் புரியலையா?
சாருவும் கவிதையெழுதினால்…..என்பது ஹிப்போதட்டிக்கல். (Hypothetical situation) வாதங்களின் ஹிப்போதட்டிகல்கள் கூடாது. முதலில் சாரு கவிதைகள் புனையட்டும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் அவற்றின் விளைவுகளைப்பற்றி.
//கவிஞனைவிட அதிகமாக பொறுக்கப்பட்ட இலக்கியவாதி இருக்கிறாரா?//
என்ன தமிழ் இது? கொஞ்சம் புரியும்படி எழுதக்கூடாதா ?
//நிஜ உலகையும் இலக்கிய உலகையும், பெரிய வீடு சின்ன வீடு பாணியில் தனித்தனியா மெய்ண்டெய்ன் பண்ணச் சொல்றீங்க. எதற்காக விமர்சனம் என்பது இன்னமும் புரியலையா?//
ஆப்சல்யூட்லி. அதைத்தான் சொல்கிறேன். ஏன் தனியாக என்கிறேன் என்று நன்றாகச் சொல்லிவிட்டேன். இலக்கியவாதி அதைச்செய்கிறான். அவன் அதைத்தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறான். என் படைப்புக்களை படி; அதை எப்படியும் போட்டுத்தாக்கு. அல்லது தூக்கு. ஆனால் நான் எப்படி சாப்பிடுகிறேன்; தூங்குகிறேன்; என்றெல்லாம் ஏன் ஆராய்கிறாய்? அப்படியெ அவை உனக்குப்பிடிக்காவிட்டால், அதாவது என் தனிநபர் நடத்தைப் பிடிக்கவிட்டால் அதை என்படைப்புக்களோடு இணைக்காதே. என்பதுதான் இலக்கியவாதி சொல்கிறான். A writer can have duality of self. He can use the self which all of us see, in his literature as he likes. Still, his self outside his books i.e. in the practical life is a separate entity which when you want to criticise,should not be got mixed with his literary self. Not in this forum; in a number of for a I have been harping on the same theme.
பின்னர் ஏன் உங்களுக்கெல்லாம் குழப்பம்?
இந்தக்கட்டுரையையே எடுத்துக்கொள்வோம்.
எக்ஸல் என்பதுதான் அப்புதிய புதினம். அதை நானும், நீங்களும் படிக்கவில்லை. அதன் வெளியீட்டு விழா. ஆங்கு சென்று எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்? எவர் என்ன பேசினார்கள்? எவருக்கும் எவருக்கும் போட்டி?என்ற ஆராய்ச்சிகளுக்கும் அப்புதினத்துக்கும் என்ன தொடர்பு?
அதே வேளையில் அப்புதினத்தை அண்ணாச்சி படித்துவிட்டார். அவருக்குப் பிடிக்கவில்லை. கார சாரமாக அப்புதினத்தை விமர்சனம் பண்ணுகிறார். இது சரிமட்டுமல்ல. இது தேவை. படைப்புக்கள் படிக்கத்தானே? படித்த பின் விமர்சிக்கத்தானே? படைத்தவன், தன் படைப்புக்கள் குப்பைகளில் எறியபப்டுவதைவிட படித்து விமர்சிக்கப்படுவதை உள்ளூர விரும்புவான் கண்டிப்பாக. There is no cruelty than indifference. A bad criticism is far preferable to complete indifference.
அண்ணாச்சியின் கட்டுரை எதில் சேர்த்தி என்று இப்போது புரிகிறதா ?
அய்யா கூமுட்டை சார்,
ஆர்.எஸ்.எஸ்ஸூக்குன்னு ஒரு வரலாறு இருக்குது. அந்த வரலாத்துல இருந்து ஒரு அனுபவத்தை தெரிஞ்சுகிட்டு அவனோட அடுத்த ஆக்சன் அறிவிப்பு ஏன்னு தப்புன்னு சொல்றது சரியில்லேன்றது ஒங்க வாதம். ஆர்.எஸ்.எஸ் ஒரு போராட்டத்தை அறிவிச்சு அதை நடத்தினப்பிறவுதான் அத விமரிசிக்கணும்கிறது ஒங்க பாயிண்ட.
சாநியோட முழு பொறுக்கித்தனமும் இலக்கியத்தைசும் சேத்துத்தான் எக்போசான பிறகஅ அவரு என்ன எழுதுவாறுன்னு தெரியாதா? இதுவரைக்கும் அவரு எழுது ஐஞ்சு நாவலும் ஒரே மேட்டர்தான், ஒரே செட்டப்தான். இத பல மெத்தப்படிச்ச இல்க்கியவியாதிங்களே சொல்லியிருக்காங்க, அதெயெல்லாம் படிக்கிலயா சார்?
கூமுட்டைத்தனமென்றால், ஒரு நாவலைப்படிக்காமல் விமர்சனம் செய்வதே.
ஒரு எழுத்தாளர் தன் வாணாளில் நூற்றுக்கணக்கான நாவல்களை, கவிதைகளை, நாடகங்களை எழுதுவார். அனைத்தையும் அவர் அப்படித்தான் எழுதுவார் என்று முடிவு கட்டுவதே கூமுட்டைத்தனமாகும்.
சிவாஜி கணேசன் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்தார். கண்ணதாசன் நூற்றுக்கணக்கான கவிதைகளைப் புனைந்தார்; பாரதியாரும் அப்படியே. இப்படி எத்தனையோ படைப்பாளிகள். அத்துணை பேரையும் அவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள் என்று ஒரே கட்டாக க்கட்டி, அவர்களின் படைப்புக்களுக்கு பொறுக்கித்தனம் என்ற முத்திரை போட்டு, ஒரேயடியாகத் தூக்கியெறிவதை விட கூமுட்டைத்தனம் என்ன இருக்க முடியும்?
சாருவின் புதிய நாவல் படிக்கப்படவில்லை. நானும் படிக்கவில்லை. நீங்களும்தான். ஆனால் நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள். அஃது அப்படித்தான் இருக்குமென்று. இஃது கூமுட்டைத்தனமில்லாமல் வேறென்ன ? சொல்லுங்கள்.
ஒரு நூலைப்படிக்காமல் அதை விமர்சனம் செய்யமுடியும் என்பதை உலகில் மாங்காய் மடையன்கூட ஏற்றுக்கொள்ள மாட்டான்.
பொறுக்கித்தனமும் இலக்கியப்படைப்பும் இணைய வேண்டுமென்பது கட்டாயமல்ல. பேர்பெற்ற இலக்கியம் பொறுக்கிதனத்தையும் கருவாக வைத்து உருவாக முடியும். இதையெல்லாம் கொள்ளை இலாபம் ஒன்றே குறிக்கோள் என வாழும் ஒரு கேடுகெட்ட வணிக உள்ளத்தை வைத்துக்கொண்டு எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? இலக்கியத்தைப் பற்றிப் பேச ஒரு தகுதி வேண்டும். கட்டுரை எழுதி அண்ணாச்சிக்கும் எனக்குப் எதிர்பின்னூட்டம் போட்ட உங்களுக்கோ தகுதியே இல்லை. .
என் அடிப்படை வாதம் சாருவைப்பற்றியன்று எனப்தைக்கூட புரியமுடியவில்லை. என் வாதத்தின்படி
– அவர் நூலை படிக்காமல் விமர்சனம் பண்ணமுடியாது.
– தனி மனித பொறுக்கித்தனத்தால் ஒரு படைப்பாளியின் படைப்புக்கள் உயரவோ தாழவோ முடியாது.
–அவன் படைப்பு தனியாக நிற்கும். அதை அப்படித்தான் படிக்க வேண்டும்.
–கண்ணதாசனை எப்படிப் படிக்கிறீர்கள் ? அங்கு தனியாக நின்றதா? இல்லையா?
— ஒழுக்கசீலர்கள்தான் இலக்கியம் படைக்கவேண்டும் என்றால் இலக்கியம் படுத்துவிடும். காந்தியும் பாரதியாரும் கூட இலக்கியம் எழுத தகுதியில்லதவர்களாகிப்போவார்கள்.
என் வாதத்தை ஒத்துக்கொள்ளவியலவில்லை என்றால் சொல்லிவிட வேண்டியதுதானே? மாற்றுக்கருத்தை வைப்பவனை கூமுட்டை என்று சொல்லும் நாகரித்தை வைத்துகொண்டு ஒரு பதிவு மேடையா ?
விவாதமேடை என்பது பல்வேறுபட்ட கருத்துக்கள் ஒன்றுக்கொன்று உரசுமிடம். படிப்போர் அப்பலகருத்துக்களைப் படித்து அவற்றில் எது சிறந்தது என அவர்களே முடிவுகட்டுக்கொள்ள உதவும் மேடைதான் விவாத மேடையாகும். அம்மேடையிலேறிக்கொண்டு தனக்கு ஒவ்வா கருத்தைச் சொல்பவர்களைத் தடியால் அடிப்பேன் அவச்சொற்களா விளாசுவேன் என்று ஊழையிடுவது உங்களுக்கு வெட்கமாகத் தெரியவில்லையா?
கருத்தைச்சொல்லுங்கள். பிறர் கருத்தையும் மதிக்கக்கற்றுக்கொள்ளுங்கள் அதை ஏற்றாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ! இது வளர்ந்த சமூகத்தின் வாழ்பவருக்கு வேண்டிய அடைப்படை நாகரிகமாகும்.
// சாருவும் கவிதையெழுதினால்…..என்பது ஹிப்போதட்டிக்கல். (Hypothetical situation) வாதங்களின் ஹிப்போதட்டிகல்கள் கூடாது. முதலில் சாரு கவிதைகள் புனையட்டும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் அவற்றின் விளைவுகளைப்பற்றி. //
கவிஞர் கண்ணதாசனை சப்பைக் கட்டுக்கு விவாதத்தில் இழுத்தால் அவருடைய தகுதியில் கொஞ்சமாவது இருக்கவேண்டாமா? Hypocritical bunch whines about hypothetical question!
// இலக்கியவாதி அதைச்செய்கிறான். அவன் அதைத்தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறான். என் படைப்புக்களை படி; அதை எப்படியும் போட்டுத்தாக்கு. அல்லது தூக்கு. ஆனால் நான் எப்படி சாப்பிடுகிறேன்; தூங்குகிறேன்; என்றெல்லாம் ஏன் ஆராய்கிறாய்? அப்படியெ அவை உனக்குப்பிடிக்காவிட்டால், அதாவது என் தனிநபர் நடத்தைப் பிடிக்கவிட்டால் அதை என்படைப்புக்களோடு இணைக்காதே. என்பதுதான் இலக்கியவாதி சொல்கிறான். //
கிக்குக்காகவும், நடைக்காகவும் படித்து புளகாங்கிதம் அடையக்கூடியவர்களுக்கு எழுதியவன் யாராக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் இதுதான் எலக்கிய மரபு என்று பேத்திக்கொண்டு திரியக் கூடாது. அது சரி, உங்களுக்கு படைப்பை மட்டும் தனியாகப் படித்து பரவசம் அடையும் பக்குவம் இருக்கே, பிறகு ஏன் படைப்பாளியின் சொந்த வாழ்க்கையை விமரிசித்தால் கோவம் வருது?
// A writer can have duality of self. He can use the self which all of us see, in his literature as he likes. Still, his self outside his books i.e. in the practical life is a separate entity which when you want to criticise,should not be got mixed with his literary self. Not in this forum; in a number of for a I have been harping on the same theme. //
Duality of self as ‘practical self’ and ‘literary self’ is understood in fantasy & comic literature. If you want to raise above this stuff, you cannot avoid looking for the integrity of the writer.
////கவிஞர் கண்ணதாசனை சப்பைக் கட்டுக்கு விவாதத்தில் இழுத்தால் அவருடைய தகுதியில் கொஞ்சமாவது இருக்கவேண்டாமா? Hypocritical bunch whines about hypothetical question! ….//////
கண்ணதாசனுக்கும் சாருவுக்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமை அவர்களிருவரும் படைப்பாளிகள். இருவரும் பொம்பிளைப்பொறுக்கித்தனமுடையவர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள். இவ்வளவுதான் சில ஃபண்டமென்டல்ஸ்.
அவருக்குத் தகுதி இருக்கிறது. இவருக்கு தகுதி இல்லை என்று எந்த தகுதியைச் சொல்கிறீர்கள் ?
ஒருவேளை கண்ணதாசனின் படைப்புக்கள் சிறந்தவை; சாருவின் படைப்புக்கள் மட்டமானவை என்று சொல்ல வருகிறீர்கள். இல்லையா ?
இங்கு நீங்கள் ஒரு பெரிய தவறைச்செய்கிறீர்கள். கண்ணதாசன் கவிதைகளுக்காக பாரட்டாப்பட்டவர். சாரு கவிஞரல்ல. கண்ணதாசன் நாவல்கள் எழுதவில்லை. அப்படியே ஓரிரண்டு இருப்பினும் அவை படிக்கப்படவில்லை. பேசப்படவில்லை. எனவே அவர் கவிஞர் மட்டும்தான். எப்படி ஒரு கவிஞரின் படைப்புக்களையும் ஒரு நாவலாசிரியரின் படைப்புக்களையும் ஒப்பீடு செய்ய முடியும்.
நான் அவர்களை ஒப்பீடு அவர்களின் படைப்புக்களுக்காகன்று. ஒரு இலக்கியக்கோட்ப்பாட்டைச் சுட்டிக்காட்டவே. அதை மீண்டும் சொல்ல விரும்பவில்லை. இலக்கியக்கோட்பாடு என்பது பொதுவானது. எல்லா படைப்பாளிகளுக்கும் பொது. உலகமெங்கும் உள்ள எல்லா மொழிகளின் இலக்கியத்துக்கும் பொதுவானது.
சாருவைக் கவிஞனாக்கி கண்ணதாசன் என்ற கவிஞரோடு ஒப்பிட முனைந்தது திருத்தப்படவேண்டிய தவறு/
//கிக்குக்காகவும், நடைக்காகவும் படித்து புளகாங்கிதம் அடையக்கூடியவர்களுக்கு எழுதியவன் யாராக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் இதுதான் எலக்கிய மரபு என்று பேத்திக்கொண்டு திரியக் கூடாது. அது சரி, உங்களுக்கு படைப்பை மட்டும் தனியாகப் படித்து பரவசம் அடையும் பக்குவம் இருக்கே, பிறகு ஏன் படைப்பாளியின் சொந்த வாழ்க்கையை விமரிசித்தால் கோவம் வருது?////
கோபம் தாபமெல்லாம் கிடையாது. நான் சுதந்திரமானவன். எனக்கு அஜன்டா கிடையாது. எனக்கு எந்த எழுத்தாளனும் நடிகனும் அரசியல்வாதியும் ஹீரோ கிடையாது. சாரு ஃபேன் என்ற பாவனைப்பெயர் ஒரு நகைச்சுவையான சீண்டலே. சாருவின் எந்த நாவலையும் நான் படித்தது கிடையாது. இதையெல்லாம் ஏற்றுக்கொண்ட மனதில் இருத்தியபிறகே என்னைப்படிக்கவேண்டும்.
“கிக்குக்காகவும், நடைக்காகவும் படித்து புளகாங்கிதம் அடையக்கூடியவர்களுக்கு எழுதியவன் யாராக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் இதுதான் எலக்கிய மரபு என்று பேத்திக்கொண்டு திரியக் கூடாது” இங்கு போட்டதும் ஒரு தவறு.
“கிக்குக்காக நடைக்காகவும்” புளகாங்கிதம் சிலர் அடையலாம். அனைவரும் அவைகளுக்காகத்தான் படிக்கிறார்கள் என்று எப்படி முடிவு கட்டிவிட்டீர்கள்? எது இலக்கிய மரபு என்று உங்களுக்குத் தெரிந்தது? எங்கிருந்து அம்மரபைப் படித்துத் தெரிந்து கொண்டீர்கள்? அப்படியே உங்கள் சொந்தகற்பனையில் தெரிந்தாலும், அது என்ன மரபு?
இந்த கேள்விகளுக்கெல்லாம் நானே உங்கள் எண்ணங்களாக விடைகளை ஊகித்துக்கொள்ளலாம். உங்கள் மரபு, புதினங்கள் சமூகத்தில் உங்களுக்கு வழிவழியாகச் சொல்லப்பட்ட நீங்கள் உள்வாங்கி வாழும் வாழ்க்கை மரபுகளைப்போற்றும் பட்டயங்களாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவனுக்கு ஒருத்தியென்ற வாழ்க்கை மரபு உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. அம்மரபை மீறி, ஒரு எழுத்தாளர் ஒரு நாவல் எழுதிவிட்டால், அந்நாவல் இலக்கிய மரபை மீறிவிட்டது; அல்லது அந்நாவலை இலக்கிய மரபு என்போர் பேத்துகிறார்கள் என்று சொல்ல வருகிறீர்கள் இல்லையா?
நண்பரே நான் ஏற்கனவே சீனிவாசகனுக்குச் சொல்லிவிட்டேன். அதன்படி, இதுதான் இலக்கியம் என்றே கிடையாது. எதுவும் இலக்கியமாகலாம்.
உங்கள் மரபுகளை நார் நாறாகக்கிழித்துத் தொங்கப்போடுவது, அம்மரபுகளைப் போற்றிப்பூசனை செய்வது – இரு எதிர் மறைகளும் தனித்தனியாக, அல்லது ஒன்றோடொன்று விரவி படைக்கப்படுவதுவே இலக்கியமாகும்.
நான் இரண்டையுமே ஏற்றுக்கொள்ள உங்களால் ஏன் முடியவில்லை?
இலக்கியக் கோட்பாடு தனியா நிக்குமா? ஆசிரியன் செத்துவிட்டான், வாசகன் அவனது தனித்துவமான படிப்பு காரணமாக படைப்பை கட்டுடைப்பான்ன்னு ஏக்கப்பட்ட பின்னவீனத்துவ மேட்டர் இருக்கிற காலத்துல இன்னமும் க.நா.சு வாந்தி எடுத்ததையே சொல்லிக்கிட்டு, சார் கொஞ்சம் தற்கால இலக்கிய மேட்டரை படிங்க சார்?
நிற்கும். பின் நவீனத்துவம் என்பது ஒரு சிலரால். அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது இலக்கியத்தில் கிடையாது. மற்ற துறைகளில் வரலாம். தற்கால இலக்கியத்தைப் படித்தால், அதை ஏற்றுக்கொண்டே தீரவேண்டுமா ?
அடப்பாவி மனுசா, மெரினாவுல சுண்டல் விக்கிறது அவ்வளவு கேவலமாவா இருக்கு உங்களுக்கு? அந்த சிறுவருங்கிட்ட பேசிப்பாருயா, அவங்கெல்லாம் அன்றாடம் உழைச்சு வாழ்ற கூட்டம். அவுங்கள போய் இத்தனை வன்மாக பேசுறுதுததான் இதுவரை நீங்க படிச்ச இலக்கியத்தோட தரம்னா, அந்த இலக்கியம் நாசமா போகட்டும்.
ரியல் என்கவுண்டர்!
என் வாழ்க்கை அதைவிட கீழான வாழ்க்கையிலிருந்தே தொடங்கியது. சுண்டல் விற்கும் பையமார்களுக்குக்கூட கூலியும் சாப்பாடும் இரவில் உறங்கவும் இடம் கிடைக்கும். எனக்கு கிடைக்கவில்லை. சென்னையிலும் பம்பாயிலும்.
சுகவாசிகள் எனக்குச் சொல்கிறார்கள் வறுமையை இழிமையையும் பற்றி.
எழுத்து வேறு. தனிநபர் வாழ்க்கை வேறு.
சுண்டல் விற்கும் வேலைக்குக் கூட ஜாதி வேண்டும். ஊர் வேண்டும். ஒரு முதலாளி அவர்கள் ஊர்க்காரர்களையும் அவர்கள் ஜாதிக்காரர்களையும்தான் வேலைக்கு வைத்துக்கொள்வான்.
கம்யூனிசம் எழுதும் ஆசாமிகள் கனவுலகத்தில் வாழ்வது ஒரு சோகமான வேடிக்கை.
//தன் எண்ணத்தை எழுத்திலும் கொண்டுவருவது தவறா ?
//
புதினங்களைப் படித்துவிட்டுத்தான் விமர்சனம் எழுதவேண்டும். வந்த கூட்டம் அந்த் ஒரு புதினத்தின் வெளியீட்டுக்காக.
இரசிகர்கள் வேறு; வாசகர்கள் வேறு. அக்கூட்டத்தில் இரசிகர்கள் இருக்கலாம். என்னைப்போன்ற வாசகர்களும் இருக்கலாம்.
வினவு கட்டுரை எழுதியவருக்குச் சரியான சிந்தனைத் திறன் இல்லை. அவர் செய்வது வெறும் வார்தை ஜாலமே. ஆனால் எழுத்துத்திறன் இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டினோம்.
எழுத்துத் திறனை வைத்து என்ன செய்வது என்பதை அண்ணாச்சி விருப்பத்துக்கே விட்றலாம்.
ஓகே.
ஆனால், அதைக்கண்டு நகையாடுவது நம் விருப்பத்துக்கே விடப்படவேண்டுமல்லவா ?
சிரிக்கும்படி எழுதியிருக்கிறார், நகையாடும்படி என்ன எழுதியிருக்கிறார்?
Pl read 13.1.1.1
//தன் எண்ணத்திற்கு நேர் எதிராக எழுதி ஊரை ஏமாற்றுவது சரியா ?
//
புதியதாக ஒரு புதினம் வெளியீட்டு விழா. அப்புதினமும் அவ்வாசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கையைப்போல அசிங்கமாக இருக்குமென எதிர்பார்ப்பது கற்றறிந்தொர் செயலன்று. அறியாக்குழந்தைகளில் தெரியா நடத்தை.
வினவுவின் கட்டுரையே குழந்தைச்செயலைப்போன்றது.
தனிநபர் நடத்தைக்கு முற்றிலும் மாறாக ஒரு எழுத்தாளர் எழத முடியும்.
மாதங்களில் அவள் மார்கழி. பெண் ஒரு தெய்வம் என்றெல்லாம் எழுதிவிட்டு, ஊருக்கொரு வைப்பாட்டி வைத்துக்கொள்ள முடியும் என்று எத்தனை முறை சொல்வது பைரவன்?
மார்கழி, தெய்வம் என்று எந்த வைப்பாட்டியை சொல்றாருன்னு மனக்கண்ல வரிசை கட்டுதே சாரு ஃபேன் !!
எழுத்தாளர் என்ற பேரை வைத்துக்கொண்டு குழப்பமாக எழ்தினால் எப்படி? புரியவில்லையே !
புரியல்லைன்னா விட்றுங்க. மாலினிக்கே லேட்டாத்தான் புரிஞ்சுது.
என் வழி தனி. என் வழிக்கு வராதீர்கள் என்று சொல்கிறிர்கள். அப்படின்னா ரொம்பச் சரி.
இப்படிப்பட்ட ஜகா வாங்குதல் வினவு தளத்தின் பின்னூட்ட விவாதங்களைச் சீப்பாக்குகிறது.
// இப்படிப்பட்ட ஜகா வாங்குதல் வினவு தளத்தின் பின்னூட்ட விவாதங்களைச் சீப்பாக்குகிறது. //
புரியாத பச்சப் புள்ளகிட்ட என்னத்த விவாதிக்க.
ரிப்பீட்டு
தம்பி. கொஞ்சம் இலக்கியம் படிச்சுட்டு வா. மாசத்தில மார்கழி வசனம் ஒன்னும் அந்த கழிசடையோட சொந்த வாந்தியில்ல. பகவத்கீதையிங்கிற சாக்கடையில விழுந்து எதையோ தின்னுட்டு எடுத்த வாந்தி. (பகவத்கீதை 10:35)
பைரவன், சாரு ஃபேன் எல்லாரும் ஒரே கம்பெனி ஆர்டிஸ்ட்டுங்குறா மாதிரி ஒரு டவுட்டு, உண்மையா?
இதுக்கு முன்னால மன்னார் & கம்பேனியிலதானுங்க ’சோலி’. ஆர்டிஸ்ட் இல்லீங்க, ’மானேஜர்’. வீட்ல ஆர்டிஸ்ட்டாத்தான் இருந்தேன், எப்டி கண்டுபுடிச்சீங்க??
நீ தண்ணி அடி காசு கொடுத்துட்டு விபச்சாரியிடம் போ அது தனி விஷயம் ரசிக வட்டத்தில் ஒரு இளம் பெண்ணை எழுத்தால் காம வலை வீசினால் உன் குடும்ப பெண்களும் தானே காயப்படுவார்கள்?
ஒரு இலக்கியக்கூட்டதுக்கும் விபச்சாரியிடம் போவதற்கும் என்ன தொடர்பு கைத்தான்?
நீங்கள் இன்னும் அடிப்படை விஷயத்துக்கே வரவில்லை சாறு fan பொம்பிளை பொறுக்கி என்று பொதுவாக சொல்லிவிட்டு போகாதீர்கள்.கண்ணதாசன் அவருடைய ரசிகைகளிடமா அப்படி நடந்துகொண்டார்?வனவாசத்தில் மிக மிக தெளிவாக அவர் விலைமகளிருடன் உள்ள தொடர்புகளைதான் எழுதியிருக்கிறார்.அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அவரின் மதுப்பழக்கதையும் அவர் மறைக்கவில்லை.
கண்ணதாசன் என்பது ஒரு உவமைக்குத்தான் இங்கு எடுத்தாளப்படுகிறது.” கண்ணதாசனைப்போல” அவரின் வாழ்க்கையை வரிக்குவரி படித்து அஃது உண்மையா பொய்யா என்று பேச அன்று.
கண்ணதாசன் என்ற உவமை பிடிக்கவில்லையென்றால் ஆங்கில ஆசிரியர்கள்; அல்லது ப்ரென்சு ஆசிர்யர்களில் எவரையாவது பற்றிப்பேசலாம். அப்படி நான் பேசிவிட்டால், படிப்பவ்ர்களில் சிலர் அய்யோ ரொம்ப மேதாவித்தனத்தைக்காட்டுகிறான் என்பார்கள்.
அடிப்படைக்கருத்தை மட்டும் நுகருங்கள்.