ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்

63

ஏனிந்த அணு உலை வெறி?

கூடங்குளம் அணு உலை கட்டட வேலைகள் ஆரம்பம், ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட திருப்புமுனை, செர்னோபில் அணு உலை வெடிப்பு, சோவியத் யூனியனின் மறைவு…. இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சம்பவங்கள் போலத் தோன்றும். எப்போதும் மக்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் சக்திகளும் குறுகிய நலன்கள் குறித்தே சிந்தித்து வருகின்றனர். கூடங்குளம் அணு உழு கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. ஊடகங்களும் அதனை சிறு பெட்டிச் செய்திக்கப்பால், விவாதப் பொருளாக்கவில்லை. எண்பதுகளில், ஈழப்போராட்டத்தில் தோன்றிய இடதுசாரி அறிவுஜீவிகள், கூடங்குளம் அணு உலை வெடித்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து, வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்தனர்.

“கூடங்குளம், இலங்கையில் தமிழர்கள் செறிவாக வாழும் வட பகுதிக்கு அண்மையில் இருப்பதால், அணு உலை வெடித்தால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு அகப்பட்டு மரணிக்கப் போவதும் ஈழத் தமிழர்களாக இருப்பர்.” இந்தக் கூற்று, ஈழத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்வியறிவற்ற கூலித் தொழிலாளிகள் கூட, அணு உலை பற்றியும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றியும் என்னிடம் விசாரித்தனர். அந்த அளவுக்கு மக்கள் விழிப்புற்று இருந்தனர். எனினும், கூடங்குளம் எதிர்ப்பு அலை அமுங்கிப் போனது. இந்திய நலன்களுக்கு சார்பான, வலதுசாரி அரசியல் சக்திகள், கூடங்குளம் அணு உலை குறித்து பேசுவதை விரும்பவில்லை. ஈழப் பிரதேசங்களில் நிலைமை இவ்வாறு இருந்தால், சிறிலங்கா அரசு வட்டாரங்கள் அது குறித்து மௌனம் சாதித்து வந்தன. என்ன இருந்தாலும் அழியப் போவது தமிழர்கள் தானே, என்று அரசில் இருந்த இனவெறியர்கள் வாளாவிருந்திருப்பார்கள்.

அதே காலகட்டத்தில் தான், உக்ரைனில் செர்னோபில் அணு உலை வெடித்து பெருமளவு மக்கள் இறந்தனர். குறிப்பிட்ட பிரதேசம், மக்கள் வாழ முடியாத அளவுக்கு கதிர்வீச்சு ஆபத்து இருப்பதாக அறிவிக்கப் பட்டது. இந்த செய்தி, உலகம் முழுவதும் அணு உலை குறித்த அச்ச உணர்வை தோற்றுவித்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. செர்னோபில் வெடிப்பின் பழி முழுவதும், அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் அரசின் மீது போடப் பட்டது. அதாவது, நிர்வாக சீர்கேடுகளே அணு உலை வெடிப்புக்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது. கலக்கமடைந்த உலக மக்களுக்கு அவ்வாறு தான் ஆறுதல் கூறப் பட்டது. அதே நேரம், “சிறப்பான நிர்வாகம் நடக்கும்” மேற்கத்திய நாடுகள் புதிய அணு உலைகள் கட்டுவதை நிறுத்தி விட்டன. இது அணு உலையின் ஆபத்தை, ஆளும் வர்க்கம் உணர்ந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

செர்னோபில் அணு உலை வெடிப்பதற்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் அணு குண்டு வெடிப்பு பற்றிய அச்சம் நிலவியது. பனிப்போர் காலத்தில், ஒரு பக்கம் நேட்டோ படையணிகள், மறுப்பக்கம் வார்ஷோ படையணிகள் அணுவாயுதங்களை கொண்டு வந்து குவித்திருந்தன. பல தடவை, சம்பந்தப் பட்ட அரசுகள் தமது மக்களுக்கு அறிவிக்காமலே அதற்கு ஒத்துழைப்பு வழங்கின. உலகில், முதலும் கடைசியுமாக, ஜப்பானில் மட்டுமே அணு குண்டு போடப்பட்டாலும், இனியொரு போர் தொடங்கும் சமயம், எந்த தரப்பு அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்தும் என்பதை ஊகிப்பது கடினமாக இருந்தது. “திடீரென யாரவது ஒரு மன நலம் பிசகிய அதிகாரி, அணுவாயுதம் ஏவும் பட்டனை அழுத்தி விட்டால்…?” இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் குடைந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக, அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றன. “சமாதான இயக்கங்களின்” அங்கத்தவர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. சோவியத் யூனியனின் அதிபராக கோர்பசேவ் தெரிவானதும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு, அணுவாயுதங்களை அழிக்க ஒப்புக் கொண்டார். இருந்தாலும், அணு உலைகள் குறித்து அன்று யாரும் கவனம் செலுத்தவில்லை…. செர்னோபில் வெடிக்கும் வரையில். அதன் பிறகு தான், அணு சக்தி எப்போதும் ஆபத்தான விடயம் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

உலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, அனைவருக்கும் உணவு கிடைக்க வைப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. அதே போன்று, மின்சாரம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதும் ஒரு சவாலாகவே தொடர்கின்றது. மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க மேற்கத்திய நாடுகள் அணுசக்தியை பயன்படுத்துகின்றன. அணுவுக்கு மாற்றீடாக பயன்படுத்தக் கூடிய வளங்கள் உள்ளன. நீர், காற்றாடி, சூரிய ஒளியை பயன்படுத்தியும் மின் உற்பத்தி செய்யலாம். உதாரணத்திற்கு டென்மார்க், நெதர்லாந்தில் காற்றாடி மின்சாரமும், நோர்வேயில் நீர் வலு மின்சாரமும் ஏற்கனவே கட்டமைக்கப் பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. அல்ஜீரியாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பிரான்சிற்கு விநியோகிக்கும் திட்டமும் ஆலோசிக்கப் படுகின்றது. இத்தகைய பசுமைப் புரட்சிகள், இன்னமும் விருத்தி செய்யப் படவில்லை. இவை எல்லாம் இன்னமும் பெரும்பாலான மக்களை போய்ச் சேரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, நெதர்லாந்து நாட்டின் பெரிய மின் விநியோக நிறுவனம், “உங்களுக்கு தூய்மையான மின்சாரம் வேண்டுமா?” என்று வீட்டுக்கு வீடு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டிருக்கிறது. “தூய்மையான மின்சாரம்” என்றால், காற்றாடிகளினால் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் எனப் பொருள் படும். மேலைத்தேய மக்கள், அணு சக்தி மின் திட்டத்தை எதிர்ப்பதன் காரணமாக, இது போன்ற மாற்றுத் திட்டங்களை அரசு அறிவித்து வருகின்றது.

இங்கே ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். இத்தகைய மாற்று வளங்கள் இருந்தும், இவ்வளவு காலமும் எதற்காக அணு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தார்கள்? எண்ணெய் நிறுவனங்கள், தமது இலாப நோக்கத்திற்காக, மாற்று எரிபொருள் பாவனையை தடுத்து வருகின்றன. அது போலத் தான், அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. (மேற்கத்திய நாடுகளில், இவை “அணு உலை மாபியாக்கள்” என்று அழைக்கப் படுகின்றன.) செர்னோபில் அணு உலை வெடித்த பின்னர் தான், அவர்களது பிடி தளர்ந்தது. இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய அரசுகள், மாற்று எரிபொருளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. காற்றாடி, நீர், சூரிய ஒளி, என்று இயற்கையாக கிடைக்கும் சக்தியில் முதலிட முன்வருகின்றன.

புதிதாக அணு உலைகள் அமைக்கப்படாத காரணத்தால், அவற்றில் இலாபம் பார்த்த நிறுவனங்கள் வேறு வழி தேடி அலைகின்றன. அவர்களின் முன்னாள் உள்ள ஒரே தெரிவு… மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையாத மூன்றாம் உலக நாடுகளுக்கு அணு உலை கட்டிக் கொடுப்பது. பனிப்போர் நிலவிய காலத்தில் அதுவும் அரசியலாக்கப் பட்டிருக்கும். ஆனால், இன்றைக்கு ஈரான் போன்ற சில நாடுகளைத் தவிர, பிற நாடுகளில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பிருக்கப் போவதில்லை. சோவியத் யூனியனின் மறைவின் பின்னர், “அணு உலை வியாபாரம்” செய்வதற்கு தடையேதும் ஏற்படப் போவதில்லை. அந்த அடிப்படையிலேயே, இந்தியாவில் கட்டப்படும் அணு உலைகளையும் பார்க்க வேண்டும். (அணு உலை கட்டுவது ரஷ்ய நிறுவனமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் அதன் பங்கு என்ன என்பது தான் முக்கியமானது.) முரண்நகையாக, ஈரானில் அணு உலை கட்டினால் தடுக்க முனையும் “சர்வதேச சமூகம்”, இந்தியாவில் கட்டினால் வாயை மூடிக் கொண்டிருக்கியது. இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும், மக்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். வீதியில் இறங்கி போராடுகின்றனர். இது சர்வதேச சமூகங்களின் ஒன்றிணைந்த போராட்டமாக காணப்படுகின்றது.

மேற்கைரோப்பிய நாடுகளில், தொடர்ந்து தொலைக்காட்சி செய்திகளை பார்த்து வரும் சாதாரண பார்வையாளர்கள் அனைவரும், அதனை அவதானித்திருப்பார்கள். அணு உலைக் கழிவுகளை ஏற்றிச் செல்லும், ரயில் வண்டி (Castor train) மறிப்புப் போராட்டம் மிக ஆக்ரோஷமாக நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இடம்பெறும் நிகழ்வு இது. (இரண்டு வருடங்களுக்கு முந்திய, வெற்றிகரமான அணு உலைக் கழிவு எதிர்ப்பு போராட்டம் பற்றிய வீடியோ கீழே இணைக்கப் பட்டுள்ளது. ) குறிப்பாக பிரான்ஸ் எல்லையோடு இருக்கும் மேற்கு ஜெர்மன் பகுதி ஒரு போர்க்களம் போன்று காட்சி தரும். பல நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள், தண்டவாளத்தோடு தம்மை சேர்த்து பிணைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை சுற்றி பொலிஸ் படை குவிக்கப் பட்டிருக்கும். பாதுகாப்புக் கவசங்கள் அணிந்த பொலிசார், உத்தரவு கிடைத்தால் தாக்குவதற்கு தயாராக நிற்பார்கள். இறுதியில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் நடக்கும் மோதலில் காயமுற்றோர், கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும்.எதற்காக இந்தப் போராட்டம்?

பிரான்ஸ் நாட்டு அணு உலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருட்களை, ரயில் வண்டி மூலம் ஏற்றிச் சென்று, வட ஜெர்மனியில் ஓரிடத்தில் புதைப்பார்கள். ஒரு வேளை, கடுமையான பாதுகாப்புடன் செல்லும் ரயில் வண்டி தடம்புரண்டால், அக்கம் பக்க ஜனங்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் படுவார்கள். அதை விட, அணு கழிவுகள் புதைக்கப் படும் இடத்தில், ஆயிரம் வருடங்கள் சென்றாலும் கதிர்வீச்சு அபாயம் காணப்படும். இது போன்ற தகவல்களை கேள்விப்பட்ட ஊர் மக்கள், தாமாகவே முன் வந்து போராட்டத்தில் குதிக்கின்றனர். சில இடதுசாரி (அனார்கிஸ்ட்) அமைப்புகளும், “கிரீன் பீஸ்” தொண்டு நிறுவனமும், இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றன. கணிசமான உள்ளூர் மக்களும் கலந்து கொள்கின்றனர். போராட்டத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக, பிற மக்களும் அறிந்து கொள்ள முடிகின்றது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மை மக்கள் அரசின் பக்கம் சார்ந்து நிற்கின்றனர். அதற்குக் காரணம், அணு உலைக் கசிவுகளால் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து ஊடகங்கள் பேசுவதில்லை. மாறாக, ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான மோதலுக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் அணு உலை எதிர்ப்பாளர்களை, “இலக்கற்ற வன்முறையாளர்கள்” என்றே மக்கள் புரிந்து கொள்கின்றனர். அவர்களை அடக்குவது சரி என்று, காவல் துறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அரசியல் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் அகதிகள் கூட இது போன்ற கருத்துகளை தெரிவித்ததை காதாரக் கேட்டிருக்கிறேன்.

ஒரு போராட்டம் நடக்கும் பொழுது, முதலாளித்துவ ஊடகங்களின் தன்மை குறித்தும், வெகுஜன மக்களின் மனப்பான்மை குறித்தும், ஆராய்வது அவசியமாகின்றது. முதலாளித்துவ ஆட்சியாளர்கள், “அனைவருக்குமான மலிவு விலை மின்சாரம்” குறித்து மட்டுமே பேசுவார்கள். அணுசக்திக்கு மாற்றீடு குறித்து தெரிந்திருந்தாலும், வேறு வழி இல்லை என்று சாதிப்பார்கள். இதனால், அணு உலை எதிர்ப்பு போராட்டக் காரர்கள் தான், மாற்று எரிபொருள் குறித்தும் பேச வேண்டியுள்ளது. அது பற்றிய விளக்கங்களை, கலந்துரையாடல்கள், பிரச்சாரம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. “தூய்மையான மின்சாரம்” குறித்து மேற்கு ஐரோப்பிய மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு, இந்திய மக்களிடமும் ஏற்பட வேண்டும். இந்தியாவுக்கு அருகில் உள்ள, நேபாளமும், இலங்கையும், நீர் வீழ்ச்சிகளில் இருந்து தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யும் வளங்களைக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் ஈழப்போர் வெடிப்பதற்கு முன்னர், நீர் மின்சாரத் திட்டத்தை விரிவு படுத்தி, தமிழகத்திற்கும் விநியோகிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப் பட்டன. இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, இலங்கைக்கு விநியோகிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. ஒன்றைப் பேசும் பொழுது, இன்னொன்றைப் பற்றியும் பேசாமல் இருக்க முடிவதில்லை. “உலகமயமாக்கல்” எனும் பொருளாதார சித்தாந்தம், எவ்வாறு அனைத்து மக்களையும் பாதிக்கின்றது என்பதற்கு, அணு உலைகள் சாட்சியமாக உள்ளன. அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

நன்றி – கலையகம்

63 மறுமொழிகள்

  1. Stupid Vinavu. Do you think Atomic Research centre and Atomic bombs are same??
    Iran is a terrorist state ruled by a non-democratic government, but INDIA, during its nearly 10000 years of existence, has not invaded any other country! We defended our territory against pakistans & chinas.
    Look at the people who were fighting against the Research centre at koodankulam. Almost all illeterates and dalit christians. In India we do not have enough Hydro electricity and Windpower. The cost of using solar energy is high and also it cannot meet all our demands. Atomic energy is non-polluting, highly efficient, and on top of it, if it not THAT dangerous as described by these illeterates and idiots like Vinavu.
    The Koodankulam atomic centre will start operating in a month or two and these people, including the vinavu followers will use the electricity from that source, without any shame – Jai Hind!

    • //has not invaded any other country!

      What India did in Srilanka? it is open secret that india helped with all kind in srilanka Tamil genocide.

      //THAT dangerous as described by these illeterates and idiots like Vinavu.

      After Fukushima, many of developed countries have announced to close nuclear power in phased manner, (remember after fukushima incident).

      //including the vinavu followers will use the electricity from that source, without any shame – Jai Hind!

      Please suggest government to provide in separate power lines for nuclear source, and provide to all MNC’s ( and to srilanka in future). so we will not use. Becuase of these MNCs we face power crisis.

      where are those jaihind people, when states like kerala karnataka disobey supreme court orders. I feel much irritated when hearing seeing jaihind.

    • //Do you think Atomic Research centre and Atomic bombs are same??
      Iran is a terrorist state ruled by a non-democratic government, but INDIA, during its nearly 10000 years of existence, has not invaded any other country! We defended our territory against pakistans & chinas //

      தம்பி நீ வரலாறு கொஞ்சம் படிக்கணும் போ ! போ ! போய் மறுபடியும் 1 ம் வகுப்பிலிருந்து படிச்சிட்டு வா .
      அப்புறம் என்னென்னமோ புது புதுசா சொல்ற , அணு ஆராய்ச்சி வேற , அணுகுண்டு அராய்ச்சிங்கறது வேறன்னு வேற சொல்ற.
      அணுவ ஆராய்ச்சி பண்ணாம அணுகுண்டு எப்படி பண்றதாம்.

      //Look at the people who were fighting against the Research centre at koodankulam. Almost all illeterates and dalit christians //
      பாத்து தம்பி , உன்னோட காவி கோவணம் நல்லாவே விலகி இருக்கு! உன் வேட்டிய சரி பண்ணு .

      //In India we do not have enough Hydro electricity and Windpower //
      இந்தியாவுல மட்டும் இல்ல எல்லா நாட்டுலயும் தாம்பா இந்த பிரச்சினை இருக்கு. 365 நாளும் நமக்கு இதெல்லாம் கெடைக்காது.எது எது எப்பப்போ கெடைக்குமோ அதத அப்போப்போ பயன் படுத்தனும்.
      மக்கு பையனாட்டம் பேசபடாது .
      //The cost of using solar energy is high and also it cannot meet all our demands //
      உனக்கு எல்லாம் தெரியுதுன்னு நெனப்பு.
      இயற்கையாகவே நம்ம நாடு வெப்ப மண்டல பகுதி. சராசரிய 300 நாட்கள் நமக்கு சூரிய வெப்பம் கெடைக்குது.
      அணு உலக்கைக்கு செலவு பண்றதுல ஒரு பாதி பணமாவது இதற்கு முதலீடு பண்ணலாமே.
      //Atomic energy is non-polluting, highly efficient, and on top of it, if it not THAT dangerous as described by these illeterates and idiots like Vinavu.//
      இன்னாப்பா புதுசு புதுசா ரீல் சுத்தற.
      //The Koodankulam atomic centre will start operating in a month or two and these people, including the vinavu followers will use the electricity from that source, without any shame – Jai Hind!//
      தம்பி அதுல வர மின்சாரம் கூடன்குள மக்களுக்கே கெடைக்காத போது அது எப்படி வினவிற்கும் அதன் தோழர்களுக்கும் கிடைக்கும்.
      வெவெரமில்லாமல் பேசகூடாது .
      ஆனாலும் உனக்கு தேச பக்தி அதிகம் கூடாது.

    • //
      Stupid Vinavu. Do you think Atomic Research centre and Atomic bombs are same??
      //
      அணு உலைகள் இருப்பதே அணு ஆயுதங்கள் தயாரிக்கத்தான். கொஞ்சம் அறிவாளியாட்டம் பேசும் முன்னர் 11 வது 12 வது பாட புத்தகத்தை எடுத்து படித்துப் பார்க்கவும். புளுடோனியம் எப்படி தயாரிக்கப் படுகிறது, செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்றால் என்ன, டியூட்டரியம், டிரிட்டியம் என்ன என்று உயர்நிலை மாணவனுக்குக் கூடத் தெரியும்.

      //Iran is a terrorist state ruled by a non-democratic government, but INDIA, during its nearly 10000 years of existence, has not invaded any other country! We defended our territory against pakistans & chinas.
      //

      உலகின் மிகப்பெரிய அரசு தீவிரவாதி அமெரிக்கா, அடுத்து இந்தியா.

      10000 வருடமா. ஒத்துக்கிட்டோம். கல் தோன்றி மண்தோன்றுவதற்கு முன்னமேயே கக்கூஸ் போன பழைய குடி இந்திய கூடி நாடுதாங்க. ( அது என்ன 10000. கூட கொஞ்சம் ஸைபர் பின்னாடி சேத்துக்கிட்டா ஆர் எஸ் எஸ் காரனுங்க சந்தோச படுவாங்க இல்ல).

      இந்தியா ஒரு மண்ணாங்கட்டி சனநாயகம்.

      இந்தியா யார் மேலும் படை எடுக்கவில்லை. ஏனென்றால் இங்கே ஒருத்தனுக்குள்ள ஒருத்தன் அடிச்சுக்கிட்டாங்க. அதுக்கு மேல இங்கே இருந்த வர்ணாசிரமம். பூணூல் போட்டவனுக்கு பிச்சையெடுக்கத் தெரியும், கத்தி பிடிக்கத் தெரியாது. பயந்தாங்கொள்ளி பசங்க. கத்தி பிடிச்சவன் அந்த நாயிகளுக்கு சொம்பு அடிச்சான். பின்னே வெளியே இருந்துதான் படையெடுத்து வருவான். இங்கே இருந்தவன் தங்கத்தில இருந்து பொண்டாட்டி வரைக்கும் எல்லாத்தையும் ஓட்டிக்கிட்டுத்தான் போவான்.

      //Look at the people who were fighting against the Research centre at koodankulam. Almost all illeterates and dalit christians.
      //
      தலித்துகளை படிப்பறிவில்லாதவர்களாய் வைத்தது வர்ணாசிரமம்தான். அவர்கள் கிறித்தவர்களாக மதம் மாறி புரட்சி செய்த பின்தான் கொஞ்சமாவது படித்தார்கள். உங்கள் சாதி வெறி நன்றாக தெரிகிறது அண்ணாச்சி.
      //
      In India we do not have enough Hydro electricity and Windpower. The cost of using solar energy is high and also it cannot meet all our demands. Atomic energy is non-polluting, highly efficient, and on top of it, if it not THAT dangerous as described by these illeterates and idiots like Vinavu.
      //

      காற்றில் இருந்து ஆற்றல் என்பதை உங்கள் பின்னால் இருந்து வெளிவரும் ஆற்றல் என்று தவறாக புரிந்து கொண்டுவிட்டீர் போலும். தின்கிற சோறு முதல் உடுத்துற பேன்டு சட்டை ஈறாக எல்லாமே சூரிய ஆற்றல்தான். ஓசியிலதான் கிடைக்குது. அணு உலை கழிவுகளைப் பற்றி எழுதவேண்டுமென்றால் பக்கம் பக்கமாக எழுதலாம். கொஞ்சம் போதிய காலம் கொடுத்தால் மரங்கள் மற்ற அழுக்குகளை தூய்மைப் படுத்தி விடும். அணுக்கழிவுகள் காலத்துக்கும் எஞ்சியிருக்கும்.
      //
      The Koodankulam atomic centre will start operating in a month or two and these people, including the vinavu followers will use the electricity from that source, without any shame –
      //

      not even in your nightmares dear.

      //
      Jai Hind!
      //

      hell with this m#$%‘ing country.

      • //தலித்துகளை படிப்பறிவில்லாதவர்களாய் வைத்தது வர்ணாசிரமம்தான். அவர்கள் கிறித்தவர்களாக மதம் மாறி புரட்சி செய்த பின்தான் கொஞ்சமாவது படித்தார்கள். உங்கள் சாதி வெறி நன்றாக தெரிகிறது அண்ணாச்சி.//

        தம்பி…கிறிஸ்துவ மதம் எங்கே வேலன்கன்னிலையா உருவாச்சு ??? அதே கிருஸ்துவ மதத்த பரப பணம் குடுபதே அமெரிக்கா தான் ??அப்போ நமக்கு எதிரி அமெரிக்கா நா அப்போ அவன் குடுக்கிற காச வாங்கிட்டு மதம் மாறுற நீ யாரு ??

        ஹி ஹி ஹி

        • யப்பா…சாமி… நீ அந்த கரையில் இருந்து பேசிகிட்டு இருக்க… ஆனா நீ உண்மையில் இந்த கரையில் இருந்து பேசி இருக்க வேண்டும்? கிருத்துவன் தூக்கி போடுற எலும்பு துண்டுக்காக மதம் மாறுறான்னு பேசும்போதே, “அப்ப்டி பட்ட எலும்பு துண்டுக்கு கூட இந்து மதம் லாயக்கு இல்லை” என்று மறைமுகமாக நீ ஒத்துகொள்வது உனக்கு தெரியவில்லையா? ஆக துட்டுக்காக மதம் மாறுகிறான் என்ற சொத்தை வாதம் புஸ்வானம் ஆயிடுச்சா? அடுத்தது… மதம் மாறுவது என்பது ஏதோ ‘இந்து’மதத்தில் இருந்து மற்ற மதத்துக்கு மட்டுமே என்று லூசுதனமா உளறக் கூடாது. ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற தீவிர கத்தோலிக்க பெண்மணி கூட, ‘இந்து’ மதத்துக்கு மாறியிருக்கிறார். ஆனா இங்கிலாந்துல எந்த கேனையனும் ‘நெத்தி அடி’ங்கிற பேருல “ஜூலியா ராபர்ஸ் துட்டு வாங்கிட்டாடா”ன்னு உளறல?

        • நான் கிறித்தவனும் அல்லன். கிறித்தவத்துக்கு மதம் மாற்றுபவர்களை ஆதரிப்பவனும் அல்லன். மதம் ஒரு அபினி என்று எங்கள் பெரியவர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த கேடுகெட்ட இந்து மதத்திற்கு மற்றவை எவ்வளவோ தேவலாம். அப்பொழுதய காலகட்டத்தில் பணத்துக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ மதம் மாறியிருந்தாலும் தலித்களுக்கு சுயமரியாதையை பெற்றுத்தந்தது கிறித்தவ மதம்தான். இன்று சாதியென்னும் தொற்று நோய் அதையும் பீடித்திருக்கிறது. ஆனால் இதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஏனென்றால் பிராமணமதம் அனைத்தையும் கெடுக்கும் என்பது அன்றே அம்பேத்கரால் கணிக்கப்பட்டு விட்டது. இந்த தொற்று இசுலாமிய ஜைன மதங்களையும் பீடித்திருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு இந்த பார்ப்பனீய மதத்தை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவதேயாகும். மற்ற மதங்களை அந்தந்த மதத்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

          • சுயமரியாதையை பெற்று தந்தது பெரியார் ..கிருத்துவ மதம் அல்ல ..எல்லா மதமும் ஒன்று தான் ..ஹிந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை ..அவன அவன் கடைபிடிக்கும் பழக்க வழக்கம் தான் ….நீ சொல்லும் ஹிந்து மதத்தில் இருக்கும் அயோக்யத்தனம் கிருத்துவ மதத்திலும் இருக்கு ..இவன் இங்கிருந்து அளிக்கிறான் …அவன் அமெரிக்காவால் தூண்டப்பட்டு அழிக்கிறான்….கிருத்துவ மதத்தின் கேடுகெட்ட கோட்பாடே கம்முநிசத்தை அழிபதே…அவனுடைய வெளிநாடு சந்தையை இங்கே நிறுவுவதற்கு ….இந்து கிருத்துவம் முஸ்லிம் எல்லா மதமும் ஒரு விதத்தில் மனிதனின் மூளையை மடயனக்குவதே …இதையெல்லாம் விட்டுபுட்டு மனித நேயத்தை வளர செய்யணும் ..அதா விட்டுபுட்டு உன் கிருத்துவ மதத்திற்கு விசுவாசியா இருந்து அடிமையா இருக்காதே …

      • இன்னொரு சந்தேகம் ???

        படிக்கிறதுக்கு மதம் மாற வேண்டிய அவசியம் இல்லே !!இன்று மதம் மாறாத எத்தனையோ தலித்துகள் பெரிய பதவில இருக்காங்க …முதல்ல அவங்கள மிதிகிரே உன் சமுகத மாத்த கற்று கொடு …

        அவன் மதம் மாற குடுத்தது பணம் ….படிப்பு இல்லே ??

        எத்துனை கிருத்துவ பள்ளிகூடத்துல மதம் மாறிய தலித்துக்கு இலவசமா படிக்கச் வைக்கிறாங்க …??

    • I really do not understand why most of the youth are not bothered about the environment. Do you think you can survive in this world without a healthy environment. Hope you know the half life of a thin plastic sheet which you use to buy items from the grocery shop? It takes about 400 years to decay. And the fuel for nuclear plant uranium takes a minimum of 4 billion years to decay. Plastic is not going to affect the human beings where as uranium will directly affect the whole body in some way or the other. Do you really think Indians are very very intelligent in handling all the disasters what the Germans,Japanese or the Americans cannot? Don’t say that atomic energy is non polluting. Where do you think the nuclear waste will be dumped? Directly to the sea. think of the people living there. The fishermen and the fishes.

  2. //Iran is a terrorist state ruled by a non-democratic government, but INDIA, during its nearly 10000 years of existence, has not invaded any other country! We defended our territory against pakistans & chinas.
    //

    There was no INDIA before Moguls and Brithish came here. Even if u consider present day INDIA even RAja Raja Cholan have invaded many countries.

    //Look at the people who were fighting against the Research centre at koodankulam. Almost all illeterates and dalit christians//

    Its because they are the one who is going to get affected if there happens any accident.

    //The cost of using solar energy is high and also it cannot meet all our demands. Atomic energy is non-polluting, highly efficient, and on top of it, if it not THAT dangerous as described by these illeterates and idiots like Vinavu.//

    If u consider the cost of protecting the nuclear waste for years and also the cost for closing a atomic plant solar power is much cheaper. Also in INDIA electricity wastage is nearly 40% but in countries which supply us nuclear technology this is less than 10%. Also no common man will be given any power out of that generated in koodankulam, Can u assure that atleast one hours power cut will be decreased after the power plant is operational ??

    • //If u consider the cost of protecting the nuclear waste for years and also the cost for closing a atomic plant solar power is much cheaper.//

      – Nuclear power is the only large-scale energy-producing technology which takes full responsibility for all its wastes and fully costs this into the product.

      – The amount of radioactive wastes is very small relative to wastes produced by fossil fuel electricity generation.

      – Used nuclear fuel may be treated as a resource or simply as a waste.

      – Nuclear wastes are neither particularly hazardous nor hard to manage relative to other toxic industrial wastes.

      – Safe methods for the final disposal of high-level radioactive waste are technically proven; the international consensus is that this should be geological disposal.

      • ராம்,
        அணு உலைகளுக்கு ஆதரவாக கட்டணம் ஏதும் வாங்காத வக்கீலாக மிகவும் சிரத்தை எடுத்து வாதிடுகிறீர்கள்.நன்று.சில எளிய கேள்விகள்.

        இந்தியா இரண்டு முறை அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தியுள்ளது.அந்த அணு குண்டுகள் எங்கே உருவாக்கப்பட்டன.

        பொக்ரான் -11 – பா.ச.க.ஆட்சிக்கு வந்து மூன்றே மாதங்களில் நடத்தப்பட்டது. வெடித்து சோதனை செய்யும் முடிவு மட்டுமே அவர்களுடையது. அணுகுண்டுகள் ஏற்கனவே முந்தைய அரசுகள் ஆயத்தப்படுத்தி வைத்திருந்தவை. உண்மைதானே.அணு உலைகளில் பணியாற்றும் உங்களுக்கு மூன்றே மாதங்களில் அவற்றை உருவாக்கி வெடித்து சோதனை செய்ய முடியாது எனபது தெரிந்திருக்கும்.அப்படியானால் இந்தியா தொடர்ச்சியாக அணுஆயுதங்களை செய்து குவித்து வருகிறது. அவை உற்பத்தி செய்யப்படும் இடங்கள் எவை என சொல்ல முடியுமா.

        செறிவூட்டப்பட்ட யுரேனியத்திலிருந்து அணுகுண்டு செய்வதற்கான மூலப்பொருளான புளுட்டோனியம் உற்பத்தி செய்யும்போது கிடைக்கும் பக்க விளைபொருள்தான் [Bye product ] அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா.நெல்லுக்கு செய்யும் செலவை வைக்கோல் உற்பத்திக்காக என சொல்வது பித்தலாட்டமில்லையா.

        அணுக்கழிவுகள் 25,௦௦௦௦௦000- முதல் 50000-ஆண்டுகள் வரை கதிரியக்க அபாயம் கொண்டவை என்பதை மறுக்கிறீர்களா.கேவலம் ஒரு முப்பதாண்டுகள் சில ஆயிரம் மெகாவாட் மின்சாரத்துக்காக எதிர்கால சந்ததியினரை இவ்வளவு நீண்ட கால பொறுப்பை சுமக்க சொல்வது கயமை இல்லையா.அதை ஆழ குழி தோண்டி புதைப்போம் என அப்துல் கலாம் தைரியம் சொல்கிறார்.இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் சுனாமி.நிலநடுக்கம் எதுவும் அங்கு ஏற்படாது .அதனால் அணுக்கழிவு ஆழ்குழி பெட்டகம் பாதிக்கப்படாது என்று உத்தரவாதம் உண்டா..

        • //அணுக்கழிவுகள் 25,000- முதல் 50000-ஆண்டுகள் வரை கதிரியக்க அபாயம் கொண்டவை என்பதை மறுக்கிறீர்களா?//

          திப்பு,

          கண்டிப்பாக மறுக்கிறேன்.
          Spent Fuel எனப்படும் உங்கள் மொழியில் சொல்வதானால் “அணுக்கழிவு” என்பது கழிவே இல்லை.வெறும் 1 சதவீதம் சக்தி மட்டுமே உபயோகிக்கப் பட்ட 99% சக்தி மீதமுள்ள valuable fuel.
          இப்பொழுது இயங்கும் அணு உலைகள் தெர்மல் நியூட்ரான் எனப்படும் ஸ்லோ நியூட்ரான்களை கொண்டு நிகழ்த்தப்படும் அணுப்பிளவினால் இயங்குகின்றன. இத்தகைய அணு உலைகளில் வெறும் 1% எரிபொருள் மட்டுமே அணுப்பிளவயில் ஈடுபடுத்தப்படுகிறது. Fast Neutron Reactor களில் எரிபொருள் கிட்டத்தட்ட 100% உபயோகிக்கப்பட்டுவிடும். கழிவு என்பது மிகச் சிறுஅளவிலேயே இருக்கும். அதுவும் கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் half-life கொண்டதாக இருக்காது. இந்த தொழில்நுட்பம் எல்லாம் 1950 களில் இருந்தே இருக்கிறது. இதைப்பற்றிய செய்தியை இந்த சுட்டியில் காணவும்.

          http://www.thespec.com/news/local/article/277939–retired-prof-on-a-fission-trip

          Nuclear Fuel Cycle முழுமையாக பயன்படுத்தப்பட்டால் பல நூறு வருடங்களுக்கு சக்தியை தரவல்லது.இந்தியாவில் அபரிமிதமாக கிடைக்கும் தோரியமும் Fast Breeded Technology யும் அடுத்த தலைமுறை Fuel Cycle தொழில்நுட்பங்கள். Super Critical Reactors, Fast Neutron Reactors என்று மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகள் இனிவரும் தலைமுறைகளுக்கு பயன்படாமல் ஒருசில விபத்துகளை வைத்து முடிவு செய்து கடந்த நூறு ஆண்டுகளில் நாம் develop செய்ததை கைவிடுவது மதியீனம்.

          எனவே Geoloogical Repository என்பதுதான் ஒரே தீர்வு என்பது உண்மையல்ல.

          //செறிவூட்டப்பட்ட யுரேனியத்திலிருந்து அணுகுண்டு செய்வதற்கான…..உங்களால் மறுக்க முடியுமா.நெல்லுக்கு செய்யும் செலவை வைக்கோல் உற்பத்திக்காக என சொல்வது பித்தலாட்டமில்லையா?//

          கண்டிப்பாக மறுக்கிறேன்.
          அணு உலை என்பது மின்சாரம் உற்பத்தி செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. -ஹிரோஷிமா நாகசாகியில் போடப்பட்ட அணுஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட Manhattan Projectல் உபயோகப்படுத்தப்பட்ட Hanford Reactor, Canadian Chalk River Reactor ஆகிய உலைகள் மின் உற்பத்தி உலைகள் இல்லை. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, கானடா ஆகிய நாடுகளில் ஆயுதத்திற்காக தொடங்கிய ஆராய்சியில் விளைந்த by-product மின்சார உற்பத்தி என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ஆயுதம்தான் குறிக்கோள்என்றால் உலகில் இன்று இயங்கும் 440 அணு உலைகள் தேவையில்லை.

          • ராம்,
            ஊசியின் கூற்றை மெய்ப்பிக்கிறீர்கள்.துறை சார் அறிவை கொண்டு அணு உலைகள் பாதுகாப்பானவை என மெய்ப்பிக்க முயல்கிறீர்கள். ஆனால் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க நீங்கள் செய்யும் முயற்சிகள் அதர்மத்தை நியாயப்படுத்த முயல்வதால் பரிதாபகரமாக தோற்றுப் போகின்றன.

            \\Spent Fuel எனப்படும் உங்கள் மொழியில் சொல்வதானால் “அணுக்கழிவு” என்பது கழிவே இல்லை.வெறும் 1 சதவீதம் சக்தி மட்டுமே ……….கழிவு என்பது மிகச் சிறுஅளவிலேயே இருக்கும். அதுவும் கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் half-life கொண்டதாக இருக்காது. இந்த தொழில்நுட்பம் எல்லாம் 1950 களில் இருந்தே இருக்கிறது. இதைப்பற்றிய செய்தியை இந்த சுட்டியில் காணவும்.
            http://www.thespec.com/news/local/article/277939–retired-prof-on-a-fission-trip//

            நீங்கள் கொடுத்த சுட்டியை நீங்களே முழுமையாக படிக்கவில்லையா.அதே சுட்டியிலிருந்து

            While he does agree that fast fission is more efficient, McMaster University’s John Luxat said there has yet to emerge a reactor that can exploit it safely on a large scale.

            Luxat, the university’s NSERC Industrial Research Chair in Nuclear Safety Analysis, said many prototypes have been built, but no one has managed to sustain success on the commercial scale that Ottensmeyer has in mind.

            “I’m in agreement with what he says conceptually. Practically, it’s a different matter,” Luxat said. “The technology really isn’t quite there yet.”

            ஆக முழுமை அடையாத,நடைமுறை சாத்தியம் என மெய்ப்பிக்கப்படாத,ஆய்வு நிலையில் உள்ள ஒரு நடைமுறையை காட்டி அதன்மூலம் ”அணுக்கழிவு”என்பதே கிடையாது என்றும் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றும் நீங்கள் சொல்லவருவது ஏற்புடையதா.

            \\Nuclear Fuel Cycle முழுமையாக பயன்படுத்தப்பட்டால் பல நூறு வருடங்களுக்கு சக்தியை தரவல்லது.இந்தியாவில் அபரிமிதமாக கிடைக்கும் தோரியமும் Fast Breeded Technology யும் அடுத்த தலைமுறை Fuel Cycle தொழில்நுட்பங்கள். Super Critical Reactors, Fast Neutron Reactors என்று மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகள் இனிவரும் தலைமுறைகளுக்கு பயன்படாமல் ஒருசில விபத்துகளை வைத்து முடிவு செய்து கடந்த நூறு ஆண்டுகளில் நாம் develop செய்ததை கைவிடுவது மதியீனம்.//

            தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக்கொள்வதுதான் மதியீனம்.அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் பாதுகாப்பானவை என்று மெய்ப்பித்துவிட்டு அவற்றை பயன்படுத்துவது பற்றி பேசலாம்.இப்போது காலாவதியான அணு தொழில் நுட்பங்களை நம் தலையில் கட்டும் அணு உலைகளை பற்றி பேசலாம்.கூடங்குளம் அணு உலை உங்கள் கூற்றுப்படியே பாதுகாப்பற்ற போன தலைமுறை தொழில் நுட்பம் எனும்போது அதை எப்படி அனுமதிக்க முடியும்.

            \\அணு உலை என்பது மின்சாரம் உற்பத்தி செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை//

            உண்மைதான்.ஆனால் மின்சார உற்பத்தியை காட்டித்தானே மக்களை ஏய்த்து அணு ஆயுதங்கள் செய்ய அணு உலைகளை நிறுவ முடியும்.

            \\ அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, கானடா ஆகிய நாடுகளில் ஆயுதத்திற்காக தொடங்கிய ஆராய்சியில் விளைந்த by-product மின்சார உற்பத்தி என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ஆயுதம்தான் குறிக்கோள்என்றால் உலகில் இன்று இயங்கும் 440 அணு உலைகள் தேவையில்லை.//

            ஆம்.அதனால்தான் அந்த நாடுகள் படிப்படியாக அணு உலைகளை மூடி வருகின்றன.புதிய உலைகளை கட்டுவதும் இல்லை.ஆனால் இந்திய ஆளும் கும்பல் முழுக்க முழுக்க அணுஆயுத உற்பத்திக்காகவே அணு உலைகளை நிறுவுகின்றன

            அப்புறம் ராம்.

            http://www.frontlineonnet.com/fl1713/17130760.htm

            இந்த சுட்டியிலிருந்து

            India exploded one small nuclear bomb under Prime Minister Indira Gandhi’s orders, the explosive yield of which remained uncertain and unexplained for many years. Doubting the official announcement about the costs, Perkovich concludes th at the probable cost was Rs.1.76 billion over the preceding five years, or $220 million in 1974 values. (for which Perkovich cites a study by N. Seshagiri, page 181)

            கும்பி கூழுக்கு அழும்போது கொண்டைக்கு பூ வைத்தாற்போல பசியிலும் பட்டினியிலும் பரிதவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் வல்லரசு கனவில் பல்லாயிரம் கோடிகளை அணு மின்சாரம் என்ற பெயரில் வீணடிக்கும் கல்நெஞ்சக்காரர்களை எதைக் கொண்டு அடிக்கலாம்.

          • \\ Geoloogical Repository என்பதுதான் ஒரே தீர்வு என்பது உண்மையல்ல.//

            இது இல்லாத ஊருக்கு போகாத வழி.கூடங்குளம் அணுக்கழிவுகளை கடலில் கொட்ட மாட்டோம் என்பதையே பெரிய சலுகையாக அறிவித்த அப்துல் கயவன் மன்னிக்கவும் கலாமே அவற்றை குழி தோண்டி புதைத்து விடுவோம் என சொல்லியிருக்கிறார்.கவனிக்கவும் அவரே கழிவு என்கிறார்.நீங்களோ அரசனை மிஞ்சிய விசுவாசியாக அவை கழிவே அல்லவென நடைமுறையில் இல்லாத தொழில் நுட்பத்தை காட்டி வாதிடுகிறீர்கள்.

      • ராம், நீங்க வேலை செய்வது கனடா நாட்டு நியூக்லியர் சேப்டி கமிஷன்ல,
        உங்க ஆயுசுல பாதிய கல்பாக்கத்துலேயும் கனடா அணுவுலையிலும் கழிச்சிருக்கீங்க, கனடா நாட்டு அனு வுலைகள்லயே நாலஞ்சு தடவ கசிவு ஏற்பட்டிருக்கு, அதனாலதான் உங்க அமைப்பயே கட்டி உங்களுக்கும் வேலை போட்டு கொடுத்திருஃக்காங்க…,

        சதுர கிலேமீட்டருக்கு 3 பேர் இருக்கும் ஜனத்தொகை ரொம்ப சொற்பமான ஒரு வளர்ந்த நாட்டுலயே அணுவுலை வச்சு 15% மின்சாரம்தான் தயாரிக்கிறீங்க… அதுக்குள்ள நாலு விபத்து, பலமான அணு நிலைய எதிர்ப்பு இயக்கம் அதனால ஏகப்பட்ட பாதுகாப்பும் இன்றியமையாததா இருக்கும் போது, ஒரு வீக்கான அனுவுலை விபத்து மசோதாவை வச்சுகிட்டு, மக்கள் நலன்ல மயிறளவும் அக்கரையில்லாத அரசுடைய, சதுர கிலோமீட்டருக்கு 325 பேர் இருக்கும் ஜனத்தொகை மிகுந்த இந்த நாட்டுக்காரங்க அணுவுலை வேணாம்னு சொன்னா அதை ஏன் எதிர்கிறீங்க?

        • /சதுர கிலேமீட்டருக்கு 3 பேர் இருக்கும் ஜனத்தொகை ரொம்ப சொற்பமான ஒரு வளர்ந்த நாட்டுலயே…//

          ஊசி,

          தவறான வாதம். கனடா நாட்டின் population density வேண்டுமானால் 3/sq. km ஆக இருக்கலாம். ஆனால் ஒண்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள டொராண்டோ என்ற பெரு நகரின் மக்கட்தொகை அடர்த்தி சதுர கி.மீ க்கு 3972. (கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கட்தொகை அடர்த்தி சதுர கி.மீக்கு 30 இருக்குமா?). டொராண்டோவிற்கு வெகு அருகில் உள்ள பிக்கரிங் என்ற இடத்தில் 8 அணு உலைகளும், அங்கிருந்து சற்று தொலைவில் டார்லிங்டன் என்ற இடத்தில் 4 அணு உலைகளும் (மொத்தம் 6000 மெகாவாட்) இயங்கி வருகின்றன.

          கூகிள் மேப்ஸ்கு போய் டொராண்டோவுக்கு அருகில் இருக்கும் பிக்கரிங் அணு உலைகளையும் அப்படியே கூடங்குளத்தில் இருக்கும் அனு உலைகளையும் zoom பண்ணி பாருங்கள். விபத்து நிகழ்ந்தால் எங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

          அனுவுலை விபத்து மசோதா வீக்கா இருந்தா அதை ஸ்ட்ராங்கா ஆக்குவதற்கு போராடுங்கள்.

          • ராம், இது என் கேள்விக்கு பதில் அல்ல, உங்கள் பாணியில் பதில் சொல்வதானால் சென்னையின் மக்கள்தொகை அடர் சதுர கிலோ மீட்டருஃக்கு 26903 பேர் எனவே டொரண்டோவை விட சென்னைக்குத்தான் அதிக பாதிப்பு என்பதில்தான் போய் முடியும்.ஆனால் இது மக்கள் தொகை அடர் பற்றி பிரச்சனை மட்டுமல்ல, குறைந்த மக்கள் தொகையுடைய, குறைந்த மின்தேவையுடைய கனடாவிலேயே கூட அணுவுலையினால் 15% மின்சாரம் மட்டுமே தரமுடிகின்றபோது, இந்தியாவின் தேவைக்கு அணுமின்சாரத்தை நம்பினால் அது போகாத ஊருக்கு வழி. அதை ஏன் நீங்கள் ஆதரிக்கிறீர்கள்?

            எங்கு விபத்து நடந்தால் பாதிப்பு அதிகம் என்று பார்ப்பதை விட, விபத்து நடக்கும் வாய்ப்பும், விபத்து நடந்தால் பேரழிவும் உள்ள அணுமின்நிலையம் தேவையில்லை என்று மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் சொல்லும் போது அதை நீங்கள் ஏன் மறுக்கின்றீர்கள்?

            விபத்து நடக்க வாய்ப்பில்லையெனில், அணுவிபத்து மசோதாவும், நியூக்லியர் சேப்டி கமிஷனும் எதற்கு? கொள்ளிக்கட்டை என்று தெரிந்தபின்னர் அதை வைத்து தலையை சொரிந்து கொள்ள நீங்கள் பரிந்துரைப்பது எதனால்?

            வளர்ந்த நாடாகிய கனடாவில்கூட அணுவுலை விபத்துக்களை தவிர்க்கமுடியவில்லையே, அப்படி இருக்கும் போது இங்கு நடக்காது என்று எதை வைத்து உறுதிகூறுகிறீர்கள்?

            அணுமின்சாரம் என்பதன் பின்னர் அறிவியல் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது, அப்படி இருக்கையில் அணு மின்சாரம் மட்டுமே மாற்றுவழி என்று நீங்கள் முன்வைப்பது எந்த அடிப்படையில்?

            போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்கே இத்தனை ஆண்டுகளாக நீதி கிடைக்காத போது இந்த அரசிடம் எந்த அடிப்படையில் அணுவிபத்து பாதுகாப்பு குறித்து நம்பிக்கை வைக்கச் சொல்கிறீர்கள்?

            மேலே திப்பு குறிப்பிட்டிருக்கும் பல்லாயிரம் ஆண்டு சுமையை எங்கள் சந்ததிகளின் தலையில் இறக்கிவைக்க நாங்கள் மறுக்ககூடாது என்று நீங்கள் சொல்வது எதனால்?

            அனுவுலை எதிர்ப்பு கருத்துகளில் சந்து கண்டுபிடிப்பதில் நீங்கள் வல்லவர் தான், உங்கள் துறைசார் நிபுணத்துவத்தின் மூலம் அதை நீங்கள் எளிதாகவே செய்யலாம், ஆனால் அணுவுலையும் அணுக்கழிவும் பாதுகாப்பானது என்பதை நீங்கள் எப்படி நியாயப்படுத்ப்போகிறீர்கள்?

            • //அணுமின்சாரம் என்பதன் பின்னர் அறிவியல் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது, அப்படி இருக்கையில் அணு மின்சாரம் மட்டுமே மாற்றுவழி என்று நீங்கள் முன்வைப்பது எந்த அடிப்படையில்//

              வளர்ந்துடுச்சு வளர்ந்துடுச்சின்னா என்ன வளர்ந்துடுச்சி எப்படி வளர்ந்துடுச்சின்னு சொல்லனும் மிஸ்டர் ஊசி

            • ஊசி,

              அணு உலை தவிர்த்து வேறு வகையில் நமது மின்தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறதா?

              • Other Alternatives
                Scientist Soumya Dutta gave a clear insight into the need to go for renewable energy resources. He said that by 1960, the total installed capacity of India was 81160 MW and during that time 50% of people did not get access to electricity. By 2010, the total installed capacity was 165000 MW and still 42% of people did not get access to electricity.
                He added that the nuclear energy constitutes just 0.7% of primary energy while the Bio-Mass constitutes 31%. For a mere 0.7% energy requirement, why are they putting generations of people in danger. He suggested that India can go for Solar energy with abundant sunlight available for more than 300 days. He said that in Rajasthan more than 1 lakh sq km has very low population and if they install 50 solar panels each with 35MW capacity, we can generate 17000MW of electricity. He said that only 28 – 30% of the nuclear energy is converted into electricity and the rest are dissipated as heat which affects the environment too. He demanded the government that it has to increase the subsidy for renewable energy resources so that it is cheaper, cleaner, environment friendly and safer than nuclear energy.

                http://socialism.in/?p=1803

          • //அனுவுலை விபத்து மசோதா வீக்கா இருந்தா அதை ஸ்ட்ராங்கா ஆக்குவதற்கு போராடுங்கள்.//

            ராம்,

            நீங்களும், நமது இந்திய அரசை மக்கள் நல அரசாக மாற்றம் செய்ய போராடிவிட்டு பிறகு அணு உலை அமைப்பதை பற்றிப் பேசுங்கள்.

      • //Nuclear power is the only large-scale energy-producing technology which takes full responsibility for all its wastes and fully costs this into the product.

        – The amount of radioactive wastes is very small relative to wastes produced by fossil fuel electricity generation.

        – Used nuclear fuel may be treated as a resource or simply as a waste.

        – Nuclear wastes are neither particularly hazardous nor hard to manage relative to other toxic industrial wastes.

        – Safe methods for the final disposal of high-level radioactive waste are technically proven; the international consensus is that this should be geological disposal.//

        மேற்கண்ட உங்கள தகவல்களுக்கு நன்றி ராம்

      • * Survey finds excess deformities and cancer near Jadugoda uranium mine

        In a shocking revelation, the Indian Doctors for Peace and Development (IDPD) has come out with some bare truths regarding health hazards faced by miners working in the Uranium Corporation of India Limited (UCIL) in the form of a detailed survey report. The survey was undertaken by the organisation affiliated to Germany-based International Physicians for Prevention of Nuclear War (IPPNW) in association with Jharkhandi Organisation Against Radiation (JOAR).
        “The study was conducted between May and August 2007,” said Shakeel Ur Rahman, the secretary of the national council of the association. Conducted in two different phases, while one survey concentrates on villages within the radius of 2.5 km from the mines, a similar one was undertaken in villages about 30 km from the mining areas. A total of 2,118 households in the first category, while another 1,956 households were studied in the second category.
        According to the survey, more children – about 9.5 per cent of the newborns – are dying each year due to extreme physical deformity, primary sterility is becoming common with 9.6 per cent of women not being able to conceive even three years after marriage. Cancer deaths in nearby villages are about 2.87 per cent and 68.33 per cent people are dying before the age of 62. (The Telegraph March 2, 2008)

        * Independent radiation monitoring performed at Jadugoda uranium mine site

        In 2001 and 2002, Hiroaki Koide from the Research Reactor Institute at Kyoto University performed field trips to monitor environmental impacts of the Jadugoda uranium mine. He monitored external gamma dose rate, radionuclide concentrations in soil, and radon concentration in air. His results are compiled in a report available for download. The main conclusions are:
        The contamination from the uranium mine has spread in Jadugoda:
        The external gamma dose rate exceeds 1 mSv/y in the villages, and reaches 10 mSv/y around the tailing ponds.
        The soil surrounding the tailings ponds is contaminated by uranium. Particularly high contamination levels were found in the village of Dungridih that borders tailings pond No.1. In other villages, no serious contamination was found.
        Radon emanated from tailings ponds etc spreads contamination.
        Waste rock from the mine used for construction material spreads contamination.
        Other findings include:
        The No.1 tailings pond shows contamination by cesium. This fact shows that radioactivity was brought in from a source other than an uranium mine.
        Product uranium concentrate is dealt with carelessly and was found dispersed at Rakha Mine railway station.

        http://www.wise-uranium.org/umopjdg.html

      • நீங்கள் இன்னும் இந்த கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை ராம்.

        சோலார் எனர்ஜியை விட, அணு உலை மின்சாரம் எந்த வகையில் சீப் என்று சொல்ல நீங்கள் கடமை பட்டுள்ளீர்கள். அதே சமயத்தில் ஏன் இந்திய அரசாங்கம் லடசம் கோடி ரூபாய்களை அணு ஆராய்ச்சிக்கு அள்ளி இறைக்கிறது என்றும், ஏன் அதில் சிறு பங்கை கூட மாற்று மின்சக்தி ஆய்வுகளுக்கு செலவிடவில்லை என்றும் நீங்கள் விளக்க வேண்டும். அணு மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3க்கு கிடைக்கும் என்று சொல்லும் அரசாங்கம், எந்த அடிப்படையில் அது நிர்ணயிக்கப் படுகிறது என்பதை யாரும் தெரிந்துகொள்ள கூடாது என்பதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து ‘அணு ஆராய்ச்சி கழகங்களுக்கு’ விலக்கு் அளித்திருக்கிறது. உண்மையில் உற்பத்தி செலவு என்ன என்று தெரிந்தால் தானெ அது சீப்பா இல்லை டூப்பான்னு தெரியும்? ‘இந்தியாவின்’ பாதுகாப்பு என்ற ஒற்றை சொல்லால் மடக்கி விட முடியும் என்று எண்ண வேண்டாம். காரணம் அணு உலையை வைத்து கரண்டு தயாரிக்கும் தொழில்நுட்பம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் (பத்தாவது பாடத்திலேயே வந்துருச்சி), வெறும் கரண்டு தயாரிப்பதை எந்த கேனையனும் ‘நாட்டின் பாதுகாப்பு விசயம்’ என்று கதை அளக்க மாட்டான்…!!!

        • பொன்ராஜ்,

          சோலார் மின் உற்பத்திக்கு இந்தியாவில் என்ன செலவாகும் என்ற விவரம் என் வசம் இல்லை. ஆனால் அமெரிக்காவில் என்ன செலவாகும் என்பதற்கு இந்த சுட்டியை பார்க்கவும். அமெரிக்காவில் அணு மின் திட்டங்கள் எல்லாமே தனியார் துறையைச் சேர்ந்தது என்பதை கவனிக்கவும்.

          http://nuclearfissionary.com/2010/04/02/comparing-energy-costs-of-nuclear-coal-gas-wind-and-solar/

          அங்கே மக்கள் வரிப் பணத்தை வாரியிரைத்து அணுமின் திட்டங்கள் கட்டினார்கள் என்ற குற்றச்சாட்டு இல்லை.

          • Mr.Ram,
            The article content supports your stand. But the article was dated 2nd April 2010, and the data they used in the article are 2008. (2008 US Electricity Generation by Source & Weighted Average Cost per kWH). Yes we do agree at time the solar energy and the setup was costly. Now we have to talk about the current status. Since you are asking us to see the today’s technology for nuclear. May be it may still costly, since Chinese manufacturers enter in to this PV cell market prices are slicing down. Soon it will become affordable. Even 10~15 years back computers were not affordable for everyone. Lot of R&D and lot of players into manufacturing the stuff, it became affordable now days. Some governments (countries) are doing major researches on this solar power and other renewable energy. But many countries are not spending money on this R&D rather they spend more money in this nuclear (and they closing the renewable energy R&D telling it is bankrupted). But the advancement in this nuclear technology is still not great. The residues are only shielded not completely disposed. If there is some problem to this shield (due to any natural disaster) no one can predict what will happen. Even today we can tell that coal power is not giving any side effect. We are not seeing any apparent or direct effect caused by that. But by-products of that are very dangerous and it leads to many problems for the earth. Now with the same knowledge only we are going into this nuclear field. Our only aim is to get the power out of it. Then remaining thing we are learning from mistakes. Telling this was not taken care that was not taken care. That costs the life of innocents around that.
            When coal was first used for power generation, definitely people wouldn’t consider all the side effects happening now (Global warming and water scarcity). Now with current technology we are able to measure that and want to have an alternate. If nuclear is such replacement then we should not do the same mistakes by installing things now and then later realize that ‘oh man these radiations made all human into nonsense’. Many are claiming that Cancer is a cause or side effect of such radiations.
            And yes of course if we search in internet we are able to see lot of information about the positive happenings of Nuclear power. This doesn’t mean nuclear is clean. Because no where we could able to get the nuclear wastage treatment, Even you have mentioned that residue will not be harmful – hope this statement might be by mistake from your side. Otherwise we could you applied that technology in Fukushima to solve the radiation from that nuclear field. We could see lot of information the problem in managing the nuclear reactor wastages. Don’t tell burying and shielding as a method of part of the treatment. http://www.cbc.ca/news/canada/story/2009/08/18/f-nuclear-waste-storage.html this is also old news. But definitely I am sure recent news will be worse than this.

            • //Even 10~15 years back computers were not affordable for everyone. Lot of R&D and lot of players into manufacturing the stuff, it became affordable now days.//

              Balaji,

              Computer industry follows what is called Moore’s Law.(where processing speed and memory doubles in 18 months and prices decrease by half). But there is no such Moore’s Law for Solar Power, or for that matter any other industry. If it is so a Boeing 747 should now cost only $1000 dollars and should be able to fly at 10000 miles/hr.

              Any way good luck with your wishful thinking that Renewable Energy could power the entire world!!!

              http://www.forbes.com/sites/michaelkanellos/2011/11/09/is-there-a-moores-law-for-solar/

              • Hmm, you people are always want luxurious things at cheap cost (with high performance as well) and keep the remaining earned money in bank/investment or purchase properties and expecting returns / profits as per Moore’s law. But if we say some useful thing which is near possible you people humiliate that thought by telling “Any way good luck with your wishful thinking that Renewable Energy could power the entire world!!!” with more exclamatory marks. Even in the link you have provided tells that prices are reducing with better performance but not at rate of twice in every 1.5 yrs.
                Rather than spending money in nuclear R&D, which is danger for every living being in long terms, they can spend in this renewable energy R&D. Even though NPCIL have more profits (I don’t know decommissioning rate is added to that or not) why cannot you people try to spend in some safe way to generate energy.

        • NPCIL ன் Financial Report ஐ பார்க்கும் போது 2011 மார்ச் முடிய ஒரு வருட வருமானம் ரூ. 6015 கோடி, செலவு ரூ. 4459 கோடி, லாபம் ரூ. 1556 கோடி.

          பங்குதாரர்களுக்கு 30% டிவிடெண்ட் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளம் ரூ. 679 கோடி வழங்கப்பட்டுள்ளது.

          எரிபொருள் மற்றும் கனநீர் வகையறா செலவு ரூ.2291 கோடி

          http://www.npcil.nic.in/main/FinancialReport.aspx

          யுரேனியம் கார்பொரேஷனின் ஆண்டறிக்கையை பார்க்கும் போது 2010 – 11 ல் வருமானம் ரூ. 760 கோடி என்று போட்டிருக்கிறார்கள். செலவு ரூ.600 கோடி என்றும் தெரிகிறது.

          http://www.ucil.gov.in/web/annual_report.html

          நியூக்ளியர் ஃபுயூயல் கார்பொரேஷனின் வரவு செலவு அறிக்கை வலைத்தளத்தில் இல்லை. ஆனால் ஒரு சுவாரசியமான எக்ஸல் ஸ்பிரெட்ஷீட் கிடக்கிறது. அதில் Department of Atomic Energy யின் 2010 – 11 கான மொத்த பட்ஜெட் செலவு ரூ.8326 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
          http://www.nfc.gov.in/html-pub.htm

          2010 – 11 ல் NPCIL உற்பத்தி செய்த மின்சாரம் 26473 million units.

          காபிடல் காஸ்ட்டை கணக்கு பண்ணாமல் பார்க்கும் பொழுது என்னுடைய கால்குலேஷனில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 2.27 ஆகிறது. எனவே அரசாங்கம் சொல்லும் 3 ரூபாய்/யூனிட் சரியென்றே படுகிறது. நீங்கள் வேறு எதாவது கணக்கு வைத்திருந்தால் சொல்லுங்கள்.

          பாபா அணு ஆராய்ச்சிக் கழகம் 1954ல் துவக்கப்பட்டது. கடந்த 57 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்திருந்தால் கூட (average) 57 ஆயிரம் கோடிதான் ஆச்சு.எனவே அரசாங்கம் லடசம் கோடி ரூபாய்களை அணு ஆராய்ச்சிக்கு அள்ளி இறைக்கிறது என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

          • // Please give comment on this page as well Mr.Ram.
            Topic: “Unsafe at Any Dose”
            http://www.nytimes.com/2011/05/01/opinion/01caldicott.html //

            ராம்,

            பொன்ராஜ் மேலே கொடுத்த சுட்டிக்கு உங்கள் பதில் என்ன?

            Cost benifit analysis எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், கதிர்வீச்சினால் உயிர்களுக்கு ஏற்படும் தீமைகளை, physicist – ஆன உங்களைவிட, அதை நுணுக்கமாக அறிந்த physicians – ஆன மருத்துவர்களின் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டியிருக்கும். கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா?!

        • //அணு மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3க்கு கிடைக்கும் என்று சொல்லும் அரசாங்கம், எந்த அடிப்படையில் அது நிர்ணயிக்கப் படுகிறது என்பதை யாரும் தெரிந்துகொள்ள கூடாது என்பதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து ‘அணு ஆராய்ச்சி கழகங்களுக்கு’ விலக்கு் அளித்திருக்கிறது//

          இது தவறான தகவல்.

          அணு மின் உற்பத்தி குறித்த எத்தனை கேள்விகளை நீங்கள் NPCIL இடம் கேட்டீர்கள், அவற்றில் எதற்கு அவர்களிடமிருந்து பதில் கிடைக்கவிலலை என்று சொல்ல முடியுமா? ரூ. 364 செலவு செய்து உங்கள் கேள்வியை திருமதி. நாச்சம்மைக்கு எழுதிப் போடுங்கள். அவரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி இதோ:

          MAPS
          Smt. R.M. Nachammai,
          Sr. Technical Engineer, (Nuclear Systems) SO-G,
          Madras Atomic Power Station,
          Kalpakkam

  3. நியூட்ரினோ ஆராய்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன ?

    http://siragu.com/?p=1733

    நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தைப் பற்றிய விரிவான தகவல்களை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதைக் காணமுடிகிறது. நியூட்ரினோ ஆராய்ச்சி என்றால் என்ன? இந்த ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது? இந்த ஆராய்ச்சியால் கிடைக்கும் முடிவு பலன் யாது? போன்ற கேள்விகளுக்கு தேனி மாவட்ட மக்கள் விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இவற்றை பொது மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்கு அரசு சிரத்தை எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. இந்த அறிவியல் விளக்கங்கள் மக்களுக்குப் புரியாது என்று அரசு அதிகாரிகளும் ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்களோ என்னவோ?

    • பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் அதுவும் சலுகை விலையில் தரபடுகிறது. மற்ற மாநிலங்களுக்கு இங்கிருந்துதான் பெருமளவில் மின்சாரம் அனுப்பபடுகிறது. போய் அரசாங்கத்திடம் கேள்.

      • அரசாங்கத்திடம் கேட்டனரே!

        கோவையில் மின் ஒழுங்குமுறை ஆணையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், வியாபாரிகள் 8 மணி நேர மின்வெட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மின்வெட்டு நேரத்தையும் முறைப்படுத்தக் கோரினர். அதற்கு அதிகாரிகள் தெரிவித்த கருத்து “இது சம்பந்தமாக வாரியத்திடமும், ஆணையத்திடமும் பேசி வருகிறோம். வாரத்திற்கு இரண்டு நாள் மின் விடுமுறை அளிக்க புரோபசல் கொடுத்துள்ளோம். வேறு வழியில்லை!”

        • மின்வெட்டு நேரத்தை அதிகப்படுத்தி மக்களிடம் மின்சாரத்திற்கு அணு உலை அவசியம் என்ற கருத்தை திணிக்க அரசு திட்டமிட்டே முயல்கிறது. இனி போராட்டம் வேறு வகையில் தொடரவேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் தடையற்ற மின் விநியோகத்தை அம்பலப்படுத்தி அந்நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் நடத்தவேண்டும்.

    • //சரி பிரதர் எனக்கு இப்ப கரண்ட் வேணும்//

      பிரதர் நீங்க குஜராத்துக்கு போங்க.

  4. ராம் அவர்களே,
    2004ல் சுனாமி தாக்கிய போது ஐ.நாவை சேர்ந்த யாராவது சோமாலியாவின் கடற்கரை வசிப்பிடங்களுக்கு நிவாரணம் வழங்கவோ, உதவி செய்யவோ சென்றார்களா? சென்றார்கள் என்றால் அதற்கான ஆதாரத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். இல்லை என்றால் ஏன் என்றும் சொல்ல நீங்கள் கடமை பட்டுள்ளீர்கள். காரணம் ‘அணுகழிவு’ என்பது ஒரு ‘கழிவே’ அல்ல என்று தண்டோரா போடுவது நீங்கள் தான்.

    • //2004ல் சுனாமி தாக்கிய போது ஐ.நாவை சேர்ந்த யாராவது சோமாலியாவின் கடற்கரை வசிப்பிடங்களுக்கு நிவாரணம் வழங்கவோ, உதவி செய்யவோ சென்றார்களா?//

      பொன்ராஜ்,

      ஐ.நா ஊழியர்கள் உயிரோடு இருப்பது உங்களுக்கு பொறுக்கவில்லையா? சோமாலியா பக்கம் போகணம்னாலே கடற்கொள்ளைகாரர்கள் மனசு வெச்சாதான் முடியும். சுனாமியின் போது கரை ஒதுங்கிய டிரம்களில் நச்சுப் பொருட்களும், நியூக்ளியர் வேஸ்ட் டும் இருந்ததாக கிரீன்பீஸ் அமைப்பு சொல்கிறது. அனால் இன்று வரை அந்த டிரம்களை எந்த ஒரு லாபரடரியிலும் பரிசோதனை செய்யவில்லை.

      http://www.somaliareport.com/index.php/post/1287/Toxic_Dumping_Pirate_Excuse_or_Ongoing_Abuse

      Greenpeace, in its 2010 report, called on the UN to carry out an independent assessment, particularly in the area of Eel Ma’aan – a demand unlikely to be met any time soon given the UN’s reticence to send their staff into areas where they could be shot or kidnapped.
      Until such times as the security in Somalia improves enough to allow proper research from reputable environmental groups, or a company is caught in the act of disposing of its sludge – as was the case when oil-trading company Trafigura was in 2010 found guilty of dumping hazardous waste in Abidjan, Ivory Coast, four years earlier – pirates and fishermen will continue to claim they are the victims of an international conspiracy, and their claims will be brushed off by those they accuse.

      • //ஐ.நா ஊழியர்கள் உயிரோடு இருப்பது உங்களுக்கு பொறுக்கவில்லையா? சோமாலியா பக்கம் போகணம்னாலே கடற்கொள்ளைகாரர்கள் மனசு வெச்சாதான் முடியும்.//

        தனது மக்கள் செத்ததுக்கு அள்ளிபோட வெள்யாட்கள் வருவதையும் சோமாலிய கடற்கரை கொள்ளையர்கள் தடுத்துவிடுவார்கள் என்று சொல்ல வருகிறீர்களா ராம்? இதெல்லாம் ஐ.நா அங்கே நிவாரண உதவிக்கு என்று சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து சொல்லியிருக்க வேண்டிய பதிலகள் ராம். அதுமட்டும் இன்றி ஐநா போன்ற உதவும் குழுக்களின் எத்தனை கப்பல்களை சோமாலிய கடற்கரை கொள்ளையர்கள் இதுநாள் வரை பிடித்துவைத்து கப்பம் கட்ட சொன்னார்கள் என்று எங்களுக்கு தெரிவியுஙளேன்.

  5. ராமின் அப்பட்டமான பொய்கள்:
    //- Nuclear power is the only large-scale energy-producing technology which takes full responsibility for all its wastes and fully costs this into the product.//

    இது ஒரு பொய். அதன் கழிவுகளை எப்படி மேலாண்மை செய்வது என்பது இன்றைக்கு வரை அறிவியலுக்கு கைகூடாத ஒரு விசயம்.

    //
    – The amount of radioactive wastes is very small relative to wastes produced by fossil fuel electricity generation.
    //

    கடைந்தெடுத்த பொய். அணுக் கழிவுகளுக்கும், மரபுசார் எரிசக்திகளில் வெளிப்படும் உயர் கதிர்வீச்சுக் கழிவுகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளது. இது குறித்து அசுரன் தளத்தில் வந்த கட்டுரையிலிருந்து சில வரிகள்.
    http://poar-parai.blogspot.in/2008/08/i.html
    அணு வெடிப்பின் மூலம் சக்தி இரு வழிகளில் வெளிப்படுகிறது. ஒன்று கைனடிக் சக்தி(சுழற்சி விசை என்ற மொழிபெயர்ப்பு சரியா?) இன்னொன்று கதிரியக்கமாக வெளிப்படுகிறது. இந்த கதிரியக்கம் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களின் அணுக்களையும் பாதித்து கதிரியக்க தன்மைவாய்ந்ததாக மாற்றி விடுகிறது. இப்படி உருவாகுபவை அணு உலைகளில் பயன்படுத்தும் கையுறை முதலான பொருட்களில் இருந்து அனைத்தும் அடங்கும். அணு உடைப்பிற்கு பிற்பாடு மிச்சமிருக்கும் கதிரியக்க பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள இந்த அனைத்துவிதமான பொருட்களையும் அணுக் கழிவுகள் என்று குறிப்பிடுகிறார்கள். விலை குறைவாக, வீரியமான முறையில் சக்தி கிடைக்கிறது, கார்பன் மாசுபாடு மிகக் குறைவு என்பது அணுவின் நன்மை எனில், அதனால் உருவாகும் இந்த கழிவுகள் மிக அபாயகாரமானதாக இருக்கின்றன#7.

    பொதுவாக அணு உலைகள் தவிர்த்து பிற தொழிற்சாலை உற்பத்திகளில் குறிப்பாக, எண்ணெய் உற்பத்தி நிலையங்களில் மிக அதிகளவில் கதிரியக்க கழிவுகள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு அபாயகராமானவைதான் என்றாலும் இவை குறை சக்தி கதிரியக்க கழிவுகள்(LLW/ILW). அதாவது பிற தொழிற்சாலை கழிவுகள் போன்றதே இது. இப்படி சொல்வதன் அர்த்தம் இந்த கழிவுகள் குறித்து நாம் குறைத்து மதிப்பிடுவது என்பது அல்ல. இன்று மனித குலத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள உலக வெப்பமடைதலுக்கு பின்னால் உள்ள அராஜக ஏகாதிபத்திய உற்பத்தி முறையை இந்த பிரச்சினைக்கும் காரணம். இவை நமது கடும் கண்டனத்திற்க்கும் எதிர்ப்பிற்கும் உள்ளாகும் விசயமாகவே உள்ளது. ஆயினும் ஒரு குற்றத்தை காரணம் காட்டி அதை விட பல மடங்கு பெரிய தவறை நியாயப்படுத்த முயலும் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தும் போது பெரிய தவறு உண்மையில் பெரிய தவறு என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டியுள்ளது. ஏனேனில் HLW எனப்படும் அதி உயர் கதிரியக்க கழிவுகளில் அணு கழிவு மட்டும்தான் வருகிறது. இப்படி ஒரு வருடத்திற்க்கு உருவாகும் HLW கழிவுகள் 12,000 மெட்ரிக் டன். அதாவது நூறு இரண்டு அடுக்கு பேரூந்து நிறைய கழிவுகள் உருவாகின்றன.

    அணு வெடிப்பின் மூலம் கதிரியக்க தன்மை வாய்ந்தவையாக வெளிவரும் அணுக்களின் கதிரியக்க வாழ்நாள் வேவ்வேறாக உள்ளது ஒரு எடுத்துக்காட்டுக்கு ஐயோடின் உப்பின் கதிரியக்கம் 8 நாட்களில் வடிந்துவிடுகிறது. ஆனால் யுரெனியம் வெடிப்பில் பயன்படுத்தப்படும் புளோட்டனியம்-239 கழிவு வாழ்நாள் பல நூறு-ஆயிரம் வருடங்கள் நீடித்திருக்கும் தன்மை வாய்ந்தது. இன்ன பிற கழிவுகளின் வாழ்நாள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருக்கும். இதுதான் அணுக் கழிவுகளை மிக அபாயகரமானதாக மாற்றுகிறது. ஆக, மனித சமுதாயத்தின் தொடர்பிலிருந்து, புவியின் உயிர் சூழலின் தொடர்பிலிருந்து இந்த அணுக் கழிவுகள் சுத்தமாக தனிமைப்படுத்தப்பட்டு பல நூறு-ஆயிரம்-மில்லியன் வருடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்படி பாதுகாப்பதற்க்கான தொழில் நுட்பம் எதுவும் இல்லை.

    இது போன்ற கழிவுகளை ஒழித்துக்கட்டும் தொழில்நுட்பம் இன்றி அவற்றை மூட்டைக் கட்டி சேர்த்து வைக்கும் வேலையையே தற்போது செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் யுகா(Yucca) மலையை இப்படி அணு குப்பைக் கூடையாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இது கடும் எதிர்ப்புகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படி சேமித்து வைக்கப்படுவதற்க்கும் இடங்கள் இன்றி தற்போது தவித்து வருகிறார்கள். இது அணுக் கழிவுகள் என்ற அபாயம் குறித்தானது.

    //
    – Used nuclear fuel may be treated as a resource or simply as a waste.

    – Nuclear wastes are neither particularly hazardous nor hard to manage relative to other toxic industrial wastes.

    – Safe methods for the final disposal of high-level radioactive waste are technically proven; the international consensus is that this should be geological disposal.
    //

    சிம்ப்ளி வேஸ்டாம். இந்த பொய்யை நாக்கூசாமல் சொல்வதற்க்கு தனித் திமிர் வேனும்.

    • ////
      – The amount of radioactive wastes is very small relative to wastes produced by fossil fuel electricity generation.
      ////

      நீக்ளியர் வேஸ்ட் என்பது குறைந்த அளவு கதிரியக்கத்தை மட்டும் வெளியிடும் அதை எதனால் காரியம் பெட்டியில் வைத்து மூடுககிறார்கள்

      அதற்கு மேல் 20 மீட்டர் அகலமுள்ள கான்கிரீட் குழியில் வைத்து மூடி விடுகிறார்கள்

      இதுக்கு மேல என்ன டெக்னாலஜி வேணும்னு அசுரன் அய்யாதான் சொல்லனும்

      • ஒரு கான்கீரிட் பேட்டியின் அதிகபட்ச ஆயுட்காலம் என்ன ஒரு 100 வருடம் இருக்குமா? ஆனால் அணுக்கழிவு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு கதிரியக்கத்தை வெளியிடுமே? அப்படியானல் ஒரு அணுக்கழிவு பெட்டியை பாதுகாத்து அழிக்க அடுத்து வரும் ஆயிரம் தலைமுறைக்கு அந்த சுமையை சுமக்க சொல்வது என்ன நியாயம்?

        • //ஒரு கான்கீரிட் பேட்டியின் அதிகபட்ச ஆயுட்காலம் என்ன ஒரு 100 வருடம் இருக்குமா? ஆனால் அணுக்கழிவு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு கதிரியக்கத்தை வெளியிடுமே? அப்படியானல் ஒரு அணுக்கழிவு பெட்டியை பாதுகாத்து அழிக்க அடுத்து வரும் ஆயிரம் தலைமுறைக்கு அந்த சுமையை சுமக்க சொல்வது என்ன நியாயம்?//

          அனுகழிவு வெளியிடும் ரேடியேசன் எவ்வளவு என்றும் அதை தடுக்க உருவாக்கப்படும் காரிய பெட்டியின் தன்மை என்னவென்றும் அதற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட்
          சுவர்களில் எந்தளவு ரேடியேசன் வருமென்றும் தெரியுமா?

          அல்லது மொட்ட பார்ப்பான் குட்டையில் விழுந்த கதையா கதைக்கிறீர்களா ?

          காரியம் பெட்டியை விட்டு வெளிவரும் ரேடியேசனின் அளவு ஒப்பீட்டளவில்
          எந்த பாதுகாப்பும் இன்றி கொட்டப்படும் அனல் மின்நிலைய நிலக்கரி கழிவுகளில் இருந்து வரும் ரேடியேசனை விட குறைவு

          link :

          http://www.scientificamerican.com/article.cfm?id=coal-ash-is-more-radioactive-than-nuclear-waste

  6. //யுரெனியம் வெடிப்பில் பயன்படுத்தப்படும் புளோட்டனியம்-239 கழிவு வாழ்நாள் பல நூறு-ஆயிரம் வருடங்கள் நீடித்திருக்கும் தன்மை வாய்ந்தது. இன்ன பிற கழிவுகளின் வாழ்நாள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருக்கும்.//

    புளோட்டோனியத்துடன் தோரியத்தை வினைபெற வைத்தால் கிடைக்கும் byeproduct யுரேனியம் என்று சொல்லப்படுகிறதே? உண்மையா? அப்படிக் கிடைத்தால் அதை மீண்டும் உபயோகப்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறதே? யாராவது தெளிவுபடுத்துங்களேன்.

  7. //இப்படி ஒரு வருடத்திற்க்கு உருவாகும் HLW கழிவுகள் 12,000 மெட்ரிக் டன். அதாவது நூறு இரண்டு அடுக்கு பேரூந்து நிறைய கழிவுகள் உருவாகின்றன.

    அணு வெடிப்பின் மூலம் கதிரியக்க தன்மை வாய்ந்தவையாக வெளிவரும்// ஒரு வருசத்துக்கு எத்தினி காண்கிரீட் சிலாபு தேவை?

  8. இந்தியாவின் மொத்த மின் தேவையையும் மரபுசாரா புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்திகளைக் கொண்டு பூர்த்தி செய்து விடலாம் என்று பேசுபவர்கள் இதையும் கொஞ்சம் பார்க்கவும்.

    திறன் அடர்த்தி , ஆற்றல் அடர்த்தி, விலை, உற்பத்தி அளவு ஆகிய நான்கின் அடிப்படையில் பார்க்கும் போது சோலார், காற்றாலை ஆகியவற்றிலிருந்து பெறப்படும் மின்சாரம் பொருளாதார ரீதியில் கட்டுப்படியாகாது.

    Despite huge investments, renewables’ share of the energy market has been shrinking. What’s happening? While conspiracy theorists may want to believe that Big Oil, Big Coal and Big Nuclear are stifling the growth of renewables, the simple truth is that coal, oil, natural gas and nuclear can satisfy the Four Imperatives: power density, energy density, cost and scale.

    if you start with a source that has low power density, you have to compensate for that low density by utilizing more resources such as land, steel, and ultra-long transmission lines. Those additional inputs then reduce the project’s economic viability and its ability to scale

    http://www.forbes.com/2010/05/11/renewables-energy-oil-economy-opinions-contributors-robert-bryce.html

  9. //“கூடங்குளம், இலங்கையில் தமிழர்கள் செறிவாக வாழும் வட பகுதிக்கு அண்மையில் இருப்பதால், அணு உலை வெடித்தால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு அகப்பட்டு மரணிக்கப் போவதும் ஈழத் தமிழர்களாக இருப்பர்.” இந்தக் கூற்று, ஈழத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது……..ஈழப் பிரதேசங்களில் நிலைமை இவ்வாறு இருந்தால், சிறிலங்கா அரசு வட்டாரங்கள் அது குறித்து மௌனம் சாதித்து வந்தன. என்ன இருந்தாலும் அழியப் போவது தமிழர்கள் தானே, என்று அரசில் இருந்த இனவெறியர்கள் வாளாவிருந்திருப்பார்கள்.//

    கலையரசனுக்கு ஒரு கேள்வி,

    கூடங்குளத்திலிருந்து ஜாஃப்னா 298 கி.மீ. அதே கூடங்குளத்திலிருந்து கொழும்பு 270 கி.மீ. எனவே கூடங்குளத்தில் அமைய இருக்கும் அணு உலையைப் பற்றி தமிழர்களை விட சிங்கள் இனவெறியர்கள் தானே அதிகம் கவலைப் பட்டிருக்கவேண்டும்?

    சிங்களவனுக்கு ஜியாகரஃபி தெரியாதா?

    இன்னொரு விஷயம். கூடங்குளம் அணு உலை கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. ஊடகங்களும் அதனை சிறு பெட்டிச் செய்திக்கப்பால், விவாதப் பொருளாக்கவில்லை என்று சொல்லுகிறீர்கள். உதயகுமார் அண்ட் கம்பெனி எண்பதுகளில் இருந்து தொடர்ந்து போராடி வருவதாக சொல்லுகிறார்கள். ஈழத்தில் விழிப்படைந்த நிலையில் இருந்த நீங்கள் தமிழக போராட்டக் குழுவை தொடர்பு கொண்டீர்களா?

Leave a Reply to Ram Kameswaran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க