privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்அந்நிய முதலீட்டுக்காக!

அந்நிய முதலீட்டுக்காக!

-

For the Sake of Foreign Investments – C.P. Chandrasekhar- Volume 29 – Issue 19 :: Sep. 22-Oct. 05, 2012.
தமிழில் சித்ரகுப்தன்

ந்த விலை கொடுத்தாவது அந்நிய மூலதனத்தின் “விசித்திரமான” நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சியே தற்போது மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கமாக உள்ளது.

அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழப்பதின் மூலம் அந்நிய முதலீடுகளை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் இருப்பது போல் மன்மோகன் சிங்கின் அரசு பாசாங்கு செய்கிறது.  அத்தகைய பயத்தை உறுதி செய்யும் வகையில் “பொது எதிர்ப்பு தவிர்ப்பு சட்டவிதி (GAAR)”யை அமுல்படுத்துவதிலிருந்து பின்வாங்கியது அவரின் அசாதாரணமான நடவடிக்கையை காட்டியது.  சட்டத்தில் உள்ள சில விதிகளை தவறாக பயன் படுத்தியும், வரி விதிப்பிலிருந்து “சட்டப்படி”யாக தப்பித்து சட்டம் இயற்றியதன் நோக்கத்தையும், தேச நலனையும் பாதிக்கும் தனியாரின் லாப நோக்க முயற்சியை தடுப்பதே (கர்) பொது எதிர்ப்பு தவிர்ப்பு சட்டத்தின் நோக்கமாகும்.

விதிகள் சட்டப்படியாகவும் நேர்மையானதாகவும் இருப்பதால், சர்வதேச அளவில் சரியான நடைமுறையாகவும் கருதப்படுகிறது. அவைகள் சட்டத்தில் உள்ள பிரிவுகளை தெளிவுபடுத்துவதுடன், அவைகளை அமுல்படுத்து வதற்கான நிர்வாக முறையையும் விளக்குகிறது.  கனடா போன்ற பல வளர்ந்த நாடுகள், இந்த “கர்(GAAR)” போன்ற விதிகளை பயன்படுத்தி வருகின்றன.  வரி ஏய்ப்பிற்கு எதிரான இந்த விதிகளை அங்கீகரித்து, “நேரடி வரி விதிப்பு சட்டதொகுப்பு” (வரிவிதிப்பை எளிமைப்படுத்தவும், முறைப்படுத்துவதுமான நோக்கத்தில்) மற்றும் 2012-13 வரவு செலவு அறிக்கை இந்த கர் விதிகளை அமுல்படுத்திட முனைந்தன.  குறிப்பிட்ட பிரிவுகள் மீது விவாதம் இருப்பினும், இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியவையே.

ஆனால், ஆச்சரியப்படும் வகையில், சில உள்நாட்டு, வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் (கார்ப்பரேட்) எதிர்மறையான விமர்சனங்களாலும், அதை மிகைப்படுத்திய கார்ப்பரேட் ஊடகங்களாலும், மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் அதிகார மையத்தில் உள்ள சிலரின் அறிவுறுத்தலால் இந்த சட்டம் அமுல்படுத்துவதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.  தற்போது 2013 வரை அமுல்படுத்துவது தள்ளிப் போடப்பட்டிருந்தாலும், பார்த்தசாரதி ஷோம் குழுவின் பரிந்துரையின்படி சிறப்பு குழு ஆலோசனை ஒரு ஏற்புடை நடைமுறை என்றால்,இந்த “கர்” சட்ட அமுல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தள்ளிவைக்கப் படும். அதன் பின், எந்த வகையில் பார்த்தாலும், இந்த சட்டம் அமுல் படுத்தப் படாமலேயே போய்விடும்.  அறிவிக்கப்பட்ட ஒரு சட்டத்தை நிறுத்தி வைப்பதற்காக போடப்பட்ட ஒரு குழு மிகக் குறுகிய காலத்தில் தனது முடிவை அறிவித்து வரலாற்றில் இதுதான் முதல் முறை.

“கர்” விதிக்கு கல்லறை கட்டுவது

அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதற்காக கர் விதிகளை சுற்றி கற்சுவர் எழுப்பி கல்லரையில் போட உடன்படுவதன் மூலம் பிரதம மந்திரியும், அவரது அமைச்சரவை சகாக்கள் சிலரும், தங்களை “சீர்திருத்தர்களாக”,  எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பவர்கள் என்று தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டே, அந்த வெளிப்படை தன்மையை மீறுகின்றனர். மாற்றியமைத்தல் என்ற பெயரில்  முந்தைய நிதி அமைச்சர் திரு பிரணாப் முகர்ஜி, இந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமுல்படுத்துவதன் மூலம், வோடபோன், எஸ்ஸார் நிறுவனத்தை கையகப்படுத்திய போது, மூலதன சேர்ப்பு வரியிலிருந்து தப்பித்துக் கோள்ளும் முயற்சிகள் போன்றவற்றிற்கு தண்டம் விதித்து தேச நிதி நலன் காக்கும் அவரது திட்டத்தையே மாற்றிவிடும் ஒரு முயற்சியாகும்.  தற்போது இவை இரண்டுமே அமுல்படுத்தப்படுவது நிச்சயமற்றது.  அந்நிய முதலீட்டாளர்களை திருப்திப்படுத்த வேண்டுமென்பதே, இந்த முற்றிலும், அறிவு பூர்வமான கொள்கைகளை விலக்கிக் கொள்வதற்கான காரணமாக காட்டப்படுகிறது.

ஆனால் உண்மையில் இது எந்த விலை கொடுத்தாவது அந்நிய முதலீட்டாளர்களின் “விசித்திரமான நம்பிக்கையை”, பெறுவதற்கும், உறுதி செய்து கொள்வதற்குமான, ஒரு முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.  இது இந்திய திருநாட்டில் தற்போது புதிய உருவெடுத்துள்ள “பொருளாதார கொள்கை”யாகும்.  இந்த “கர்”(GAAR) உதாரணம் இந்தியா சுதந்திரம் அடைந்தபின், அதன் வெளிநாட்டு மூலதனத்துடனான உறவுகள் மீது ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.  1950 களில் அந்நிய மூலதனத்திலிருந்து எந்த அளவிலாவது சுதந்திரம் பெறுவதே இந்தியாவின் அரசியல் சுதந்திரத்திற்கான அளவுகோலாக கருதப்பட்டது.

ஆனால், இன்றோ அந்நிய மூலதனத்திற்கு அங்கீகரிப்பதே இந்திய பொருளாதார வெற்றிக்கான ஒரு சிறந்த முதலீட்டு மையம் என்ற எண்ணம் வளர்ந்துவிட்டது. இந்தியா தற்போது ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடாகிவிட்டதால், இதன் இறையாண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என சிலர் வாதாடுகிறார்கள்.  எனவே அந்நிய மூலதனத்தைப் பற்றிய அச்சம் தேவையற்றது என்றும், அதை “அங்கீகரிப்பதே” நமது பொருளாதார சிறப்பு பற்றிய ஒரு அளவு கோலாக இருக்கும் எனவும் கூறிவருகின்றனர்.  எனினும், தாராளமயம் அமுல்படுத்தப்பட்ட காலம் துவங்கி, இந்த அந்நிய முதலீட்டில் குறிப்பாக நிதி மூலதனத்தால் நமது இறையாண்மை பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளதற்கு சான்றுகள் நிறையவே உள்ளன.  சுதந்திர இந்தியா அந்நிய மூலதனத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமானதாக இருந்தால்தான்- அது தனது உள்நாட்டு மூலதனத்திற்கான ஒரு பகுதியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதே அதன் காரணமாகும்.  மேலும் அத்தகைய சுதந்திரமான உள்நாட்டு மூலதன கொள்கை மட்டுமே, நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுடன், மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த முடியும்.

சுதந்திரத்திற்கு பிந்திய நான்கு சகாப்தத்தில், இத்தகைய மூலதன கொள்கையில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதுடன், அந்நிய மூலதனத்தின் அளவையும், வழிமுறைகளையும் நாட்டில் முறைப்படுத்த முடிந்தது.  அதன் விளைவாக, முற்றிலும் நிதி மூலதனம் தடுக்கப்பட்டது, சில துறைகளில் அந்நிய முதலீடுகள் தடை செய்யப்பட்டது.  சிலவற்றில் அந்நிய முதலீட்டின் அளவு கட்டுப்படுத்தப்பட்டது,  அந்த இடத்தில் உள்நாட்டு மூலதனம் பராமரிக்கப்பட்டது, உற்பத்தி உபகரணங்கள் மாறுதல்கள் கூட முறைப்படுத்தப்பட்டது.  இந்த வகையில், இந்த துறையில், அந்நிய மூலதனத்தினோடான உள்நாட்டு மூலதனத்தின் உறவுகளை, தேச நலனை பிரதானமாகக் கொண்டு மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ள வழிவகுக்கப்பட்டது.  இப்படியாக, உள்நாட்டு மூலதனத்திற்கு வேலி அமைத்து, ஒரு சில அந்நிய முதலீடுகளுக்கு மட்டும் கதவை திறந்துவிடும் முறை கடைபிடிக்கப்பட்டது.

1991 ன் துயரம்

ஆனால் துரதிருஷ்டவசமாக, உள்நாட்டு நில உடமையாளர்கள் மற்றும் ஏகபோக முதலாளிகளின் ஆதிக்கத்தை குறைப்பதில் ஏற்பட்ட தோல்வி, உள்நாட்டு முதலீட்டுக்காக பாதுகாக்கப்பட்ட இடத்தை முற்றாக பயன்படுத்த இயலாமல் போயிற்று.  இந்த சூழலில், புதிய முதலீட்டு இடங்களை தேடிக் கொண்டிருந்த அந்நிய முதலீட்டாளர்கள், அந்த மூலதனத்தை வெகுவாக எதிர்நோக்கியிருந்த சில தனியாரின் திட்டத்தால், உள்ளே நுழைந்து அந்த இடங்களை கைப்பற்றிக் கொண்டனர்.  1980 களிலிருந்து ஒரு எதிர்பாராத வளர்ச்சி வேகம் பதிவு செய்யப்பட்டது.அரசு தனது உள்நாட்டு செலவினத்தை சந்திக்க (மூலதன செலவின்றி) உள்நாட்டு கடனை அதிகமாக வழங்கியது.

ஏற்கனவே, உற்பத்தி குறிப்பாக விவசாயம் சார் உற்பத்தி தேக்க நிலையில் உள்ள காலத்தில், இத்தகைய கடன் உயர்வு பணவீக்கத்தை உயர்த்தியது. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், உற்பத்தி குறைவை சரிக்கட்டவும் பொருட்களை இறக்குமதி செய்ய அந்நிய கடனை கோர வேண்டியதாயிற்று.  அவ்வாறு மிகவும் கடினமாக சேர்த்த அந்நிய செலாவணியை, மேல்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களை வாங்குவதற்கு திருப்பிவிடப்பட்டது.  விளைவு,இந்தியாவின் அந்நிய கடன் விகிதம் அதனது உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதாச்சாரத்தைக் காட்டிலும் அதிகமானது.

இந்த அந்நிய கடன் உயர்வுடன், குறைந்துவரும் செலவின வகையிலான அந்நிய செலவாணி இருப்பு, உலகளவில் கடன் பெறும் தகுதயில் சரிவு, தனது கையிருப்பிலிருந்து கொஞ்ச நஞ்ச அந்நிய செலாவணியையும் செலவழிக்க வேண்டிய கட்டாயம் 1991 ன் துயரத்திற்கு இட்டுச் சென்றது.  இத்தகைய கொள்கை, அந்நிய மூலதனத்தின் மீது தான் சார்ந்திருப்பதற்கான விளைவு பற்றிய எச்சரிக்கையை பதிவு செய்தது. விசித்திரமாக, இத்தகைய ஒரு துயர காலத்தில் அமுல்படுத்தப்பட்ட தாராளமயக் கொள்கை, அந்நிய கடன்கள் மீதான சார்பை, கடனற்ற மூலதனமின்றி அந்நிய ஸ்தாபன முதலீடு (FII) மேலான சார்பாக மாறிவிட்டது.

தாராளமயக் கொள்கை அமுலாக்கப்பட்டது தொடங்கி அந்நிய முதலீட்டாளர்கள் மீதான கட்டுப்பாடு, முறைப்படுத்துதல் கொள்கை ரீதியாகவே மறையத் தொடங்கியது.  இத்தகைய அந்நிய மூலதனத்தின் பாய்ச்சல், குறிப்பாகஇந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், தறிகெட்ட அந்நிய மூலதனத்தின் விகிதாச்சாரம் அதிகமாக குவியத் துவங்கியது.  நாட்டின் சுதந்திரமடைந்தத முதல் ஆண்டுகளில் எதிர்பார்த்தது போல், இந்த அந்நிய மூலதனத்தின் வரத்து, உள்நாட்டு மூலதனத்திற்கான இடத்தை ஆக்கிரமித்துவிட்டது.

தற்போதைய எந்த ஒரு கொள்கை முடிவுகளும், அது அந்நிய மூலதனம் சார்ந்தோ (மூலதன சந்தை மாற்றங்கள் மீதான வரி) இல்லையோ (உணவு பாதுகாப்பு சட்டம்),இறுதி ஆய்வில், அவையெல்லாம், அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சிக்கான அளவு கோலை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது.  மேலும் மக்களில் பெரும்பான்மையினர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய கொள்கை முடிவுகள் மீதான மாற்றுக் கருத்துக்களால் (தற்போது சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகள்) அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்ற நிலைக்கே தள்ளிவிடும் என்ற பிரச்சாரம் செய்யப்படுகிறது.

தற்போதுநிலைமை பகுத்தறிவை தாண்டி சென்றுவிட்டது.  உதாரணமாக மேலே சொன்ன “பொது எதிர்ப்பு தவிர்ப்பு விதி” (கர்) யையே எடுத்துக் கொள்ளலாம்.  ஊடகங்களில் ஒரு பகுதியினரே, அவர்கள் சீர்திருத்தத்தை, அது சம்பந்தமாக வெளிப்படைத் தன்மையை ஆதரிப்பவர்களாக இருந்தாலும், மற்றொரு புறம்,  இந்த விதியைத் திரும்ப பெற்றதால்தான் பங்கு சந்தையிலும், நிதித்துறையிலும் முதலீடு செய்து அதிர்ச்சியில் உள்ள முதலீட்டாளர்களை காப்பாற்ற முடியும் என்ற அரசின் முடிவை நியாயப் படுத்துகின்றனர்.  இந்த கருத்தின் மூடத்தனத்தை  பார்க்க வேண்டியுள்ளது. தேசிய நலனுக்காக, மூலதனக் கொள்கைகள் நியாயமானதாக, நேர்மையானதாக இருக்கும் காலத்தில், சந்தையில் முதலீடு செய்ய முன்வராததோடு, அத்தகைய முதலீட்டாளர்கள் இருப்பதைக் காட்டிலும், இல்லாமலிருப்பதே மேல்.  இரண்டாவதாக அனைத்து அந்நிய முதலீட்டாளர்களும், வரியை தவிர்க்க அனுமதிக்கவில்லை என்பதற்காக லாபம் தரும் துறையில் முதலீடு செய்ய தயங்குவதில்லை.

மொரீஷியசிற்கு உள்ள வரிவிதிப்பற்ற சலுகை தவறாக பயன்படுத்தப்பட்டு, அதிகப்படியான அந்நிய முதலீடுகள் அந்த நாட்டின் மூலம் இந்தியாவிற்குள் வரத்தொடங்கிய காலம் தொட்டே “கர்(GAAR)” விதிகள் விவாதத்தில் இருந்து வந்தது.  மேலும் நேரடி வரி விதிப்பு சட்ட குழு மையத்தின் விவாதத்திலும் கர் விதிகள் விவாதப்பொருளாக இருந்திருக்கிறது. எனவே,தற்போது “கர்”ஐ ஒரு இடையூறாக நினைக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவிற்குள் வருவதை எப்போதோ தவிர்த்திருக்கலாம், இங்குள்ள மூலதனத்தை திரும்ப பெற்றிருக்கலாம்.  ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை.

முதலீட்டாளர்கள் ஓட்டமில்லை

இறுதியில், சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிகமாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக பேசப்பட்டாலும், அதற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை. உண்மையில் என்ன நடந்தது என்றால், இதுவரை இருந்துவந்த அந்நிய முதலீட்டின் பொருண்மை மட்டும் மாறியுள்ளது.  2011-12-ம் ஆண்டிற்கான மொத்த அந்நிய முதலீட்டை ஆய்வோமானால், வெவ்வேறு துறையில் போடப்பட்ட அந்நிய முதலீடு என்பது நேரடி அந்நிய முதலீடாக மாறியருப்பதை காண முடியும்.  11.9ஒட்டுமொத்த தனியார் மூலதனம் பங்குச் சந்தை மூலதனமாக மாறியதுடனான விகிதாச்சாரம் 39 பில்லியன் டாலரிலிருந்து 40 பில்லியன் டாலர் என்ற அளவில்தான் 2010-11 மற்றும் 2011-12 காலத்தில் இருந்துள்ளது.  வெவ்வேறு துறை முதலீடு என்பதற்கும், நேரடி அந்நிய முதலீட்டிற்குமான மாற்றம் என்பது பெயரளவில் உள்ள வித்தியாசமே.

ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஒரு அந்நிய முதலீட்டாளர் 10 சதவீதத்திற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பங்காக வாங்குகிறார் என்றால், அந்த முதலீட்டை அந்நிய முதலீடு என்கிறோம்.  அப்படியில்லையென்றால், அதை அந்தந்த துறை முதலீட்டு பெட்டியில் வைக்க வேண்டியதுதான்.  ஆகவே, துறை முதலீட்டாளர்கள் போல், இந்த நேரடி முதலீட்டாளர்களாக சொல்லப்படுபவர்களும், நீண்ட கால நிகர வரத்துக்காக இல்லாமல், மூலதன லாபத்தையே எதிர் நோக்கியுள்ளனர் என்பதோடு அவர்களும் எந்த நேரமும் வெளியேறும் நிலையில்தான் உள்ளனர்.  மேலும், பங்குச்சந்தை பலவீனமாகவும் ஸ்திரமின்றி இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்திய வர்த்தக கூட்டமைப்பின் முறையை,தங்களது முதலீட்டிற்கு அனுசரிக்க மாட்டார்கள்.  இதுவும் கூட துறைவாரியான முதலீட்டை குறைக்கும்.  துறை முதலீட்டிலிருந்து, நேரடி முதலீட்டிற்கான மாற்றம், முதலீட்டாளர்கள் நம்பிக்கை குறித்து அநேகமாக எதுவும் குறிப்பிடவில்லை.  ஏனென்றால் அந்த நம்பிக்கை அந்நிய நாடு வாழ் இந்தியர்களின் சேமிப்பானது 2010-11ல் 3.2 பில்லியன் டாலரிலிருந்து 2011-12 காலத்தில் 11.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதிலிருந்து தெளிவாகிறது.

சுருக்கமாக சொன்னால், அந்நிய முதலீட்டாளர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளார்கள் என்ற காரணம் காட்டி, இந்திய அரசு உடனடியாக அதிர்ச்சியடையத் தேவையில்லை.  அந்நிய முதலீட்டாளர்களை திருப்திப்படுத்த பொது வரி தளர்ப்பு எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்துவதில் காட்டிய தயக்கத்தைப்போல் இன்றும் அரசு பின் வாங்கினால், அது இரண்டு நீண்ட கால காரணத்திற்காக மட்டுமே இருக்கும்.

முதலாவதாக அந்நிய முதலீட்டின் அதிகப்படியான வரத்து பற்றிய திட்டம், அந்நிய முதலீட்டாளர்களை தொடர்ந்து திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும்.  ஆனால் இன்று போல் நிகழ்கால நிதிப் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த திட்டம் குறிப்பாக வலுவற்றதாகிவிடும்.  இரண்டாவதாக, அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் குறைந்து தங்களது முதலீடுகளை திரும்ப பெற்றால் அந்நிய முதலீடுகளின் சேமிப்பை சார்ந்துள்ள அந்நிய செலாவணி மற்றும் பணப்புழக்கத்தில் குழப்பம் ஏற்படும்.

“கர்(GAAR)” உதாரணம் மற்றொரு காரணத்திற்காக சொல்லப்படுகிறது.  இந்த சட்டம் அரசின் வருவாயை கவர்ந்திட வழிவகுக்கும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், (இதை தொடர்ந்த, மூலதன லாபத்தில் வரிவிதிப்பை முன் தேதியிட்டு அமுல்படுத்தியது) இதன் மூலம் அரசு பெரிய அளவில் இந்த வரிவிதிப்பின் மூலம் அதிகப்படியான வருமானத்தை பெற்றிடும் என்பதில் எந்த உறுதியும் இல்லை.  இந்தியாவின் பெரும்பான்மையானவர்களான எளியவர்களை காக்க வேறு திட்டங்கள் உள்ளது.

அவை, விரிவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு திட்டத்தில் துவங்கி, பொது விநியோகத்திட்டத்தின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருள் வழங்கும் திட்டம், குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு திட்டம், குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம், மருத்துவ வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மற்றும் சுகாதாரம்.  இவைகளுக்கு நிறைய முதலீடுகள் தேவைப்படுகிறது. நிதி பற்றாக்குறை என்ற ஒரே காரணம் காட்டி இந்த திட்டங்களில் முதலீடுகள் செய்வது முற்றிலும் இல்லை, அல்லது போதுமானதாக இல்லை.  மேலும், நிதி பற்றாக்குறை காலத்தில் இத்தகைய திட்டங்களுக்கு ஒதுக்கீடு என்பது நிதி பற்றாக்குறையை மேலும் அதிகமாக்கும் என்பதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைத்துவிடும்.  இவ்வாறாக, அந்நிய முதலீட்டார்களை திருப்திப்படுத்தும் இத்தகைய முயற்சியில், கொள்கை முடிவுகளுக்கான இடத்தை குறைப்பது என்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கான அதிகபட்ச சலுகைகளுக்கும், லாபங்களுக்கும், இத்தகைய உதவிகள் பெரிதும் தேவைப்படும்.  பெரும்பாலான மக்களுக்கு, கிடைப்பதில்லை என்பதும், நேரடி எதிர்மறையானது என்பதுடன், நாட்டின் வளர்ச்சியில் எந்த பங்கும் நீண்ட காலத்திற்கு இவர்களுக்கு கிடைக்காமலேயே போகிறது.

சுருங்க சொன்னால், அந்நிய முதலீடுகளை தொடர்ந்து அனுமதித்து அதனால் வரும் என்று எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கான திட்டம் என்பது, ஏற்கனவே வசதியாக உள்ளோரை மேலும் வசதி உள்ளவர்களுக்கும் என்பதோடு எளியவர்களுக்கு எதுவுமே கிடைக்காது ஏமாற்றப்படுவர்.  தனியார் முதலீட்டாளர்கள் தாங்கள் சரியாகவோ, தவறாகவோ ஏற்கனவே கைப்பற்றியுள்ளவற்றால், ஏற்பட்டுள்ள சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை இத்திட்டம் மேலும் மோசமாக்கும்.  இது இன்றும் எந்த பகுதிகளில் அவர்கள் லாபம் அடைய முடியுமோ அந்த பகுதிகளை விரிவாக்கும்.  புதிய வரிவிதிப்பு மூலம் வெவ்வேறு வகையிலான நில விற்பனை மேலும் அரிதான சொத்துக்களை தனியார் துறைக்கு மிகக் குறைந்த விலையில் கொடுப்பது போன்றவற்றால், அரசு லாபத்தில் பணவீக்கத்தை உண்டாக்கும்.

வரியில்லாத கோட்டைகள்

கடந்த காலங்களில் மூலதன வரத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்க பல்வேறு வகையில் அரசின் நடவடிக்கை இருந்தது.  நாடுகளுக்கிடையே நிதி மூலதன வரத்து அதிகரித்து வரும் இன்றைய உலக பொருளாதாரச் சூழலில், இந்திய அரசு தனது நடவடிக்கையில் விரும்பத்தக்க நாடு என்ற பலனை பெற்றுள்ளது.  இந்த அந்நிய ஸ்தாபன முதலீட்டின் வரத்து அதிகரிப்பதற்கு முன்பு, ஒரு வேளை 2002-03 காலத்தில் இந்த முதலீட்டின் வரத்து வெகுவாக குறைந்திருந்ததால் எச்சரிக்கப்பட்டோ என்னவோ, அன்றிருந்த நிதிச்சுமைகள் 2002-03 நிதி நிலை அறிக்கை உரையில்- “மூலதன சந்தையை ஊக்குவிக்கும் முகமாக 2003 மார்ச் 1ம் நாள் அல்லது அதற்கு பின்போ வெற்ற மற்றும் ஓராண்டு அதற்குமேல் காலந்தாழ்த்தி விற்கப்பட்ட அனைத்து சமமான ஈட்டுப் பங்கிற்கும் மூலதன லாப வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” என்றார் அன்றைய நிதியமைச்சர்.

நீண்ட கால மூலதன லாப வரி விதிப்பு அந்த நேரத்தில் 10 சதவீதம் என்ற வகையில் சலுகை காட்டப்பட்டது.  இத்தகைய மேலதிக சலுகைகளால் அந்நிய மூலதன வரத்தை அதிகமாக்கியதுடன், இந்தியாவின் பங்கு சந்தையை வரியில்லா கோட்டையாக்கியது.  இந்த அதிதீவிர சூழலில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை மெதுவாகிவிட்டதால், அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வம் குறைந்துவிட்டது என்ற பேரில், தனியார் மூலதனத்தை ஊக்குவிக்கும் தாரளமயத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் அரசின் நடவடிக்கை நியாயப்படுத்தப்படுகிறது.

இத்தகைய புதிய தாராளமயக் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் பகுதியினர், பலவகை சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, அல்லது பொதுத்துறை நிறுவனவங்கிகளின் பங்குகளை அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்பது போன்ற பெரிய அளவிலான அறிவிப்பை அரசு அறிவித்ததால் அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை வளரும் என்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மீறும்.  இதன் அர்த்தம் என்னவென்றால் சமீபத்தில் வோடபோன் நிறுவனம் சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இந்திய மண்ணில் வாங்கிய செல்போன் பங்குகளுக்கு வரி ஏய்ப்பு செய்தது போல், அந்நிய முதலீட்டாளர்கள் செய்வதை அரசு தடுக்கக் கூடாது என்பதுதான்.

எது மறைக்கப்பட்டது என்றால், அந்நிய முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு இன்றும் ஓடவுமில்லை, இந்த “பெரிய அளவிலான சலுகைகள்” கொடுக்கும் போதுதான் வந்தவர்களுமில்லை.  எனவே இத்தகைய வாதங்கால் ஒட்டுண்ணிகள் போல் தொடர்ந்து சலுகைகளை பெற்று வளர்ச்சிக்கு முதலீடு செய்யப்படும் என்று கூறி அரசுக்கு வலைவீசும் அந்நிய முதலீடுகள் மற்றும் அதன் மீது அரசின நிலைப்பாட்டை, தாராளமய ஆதரவாளர்கள் வெளிக்கொணர்கிறார்கள்.  முடிவில் அந்நிய மூலதனத்திற்கும், இந்தியாவிற்கும் இடையேயான உறவு ஒரு மோசமான நிலைக்கு மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

குறிப்பு: 1947 போலி சுதந்திரம் அல்லது அதிகார மாற்றத்தின் போது உள்நாட்டு மூலதனத்திற்கு பாதுகாப்பும், அந்நிய முதலீட்டிற்கு கட்டுப்பாடும் இருந்ததாக கட்டுரையாளர் கூறுகிறார். இது முதலாளிகள் விரும்பி செய்தவை அல்ல. அன்று இலாபமில்லாத அடிக்கட்டுமான துறைகளில் முதலீடு செய்வதற்கு முதலாளிகள் விரும்பவில்லை. அவர்களது மூலதனமெல்லாம் உடனடி இலாபம் கொண்ட துறைகளில் மட்டும் என்பதாக இருந்தன. இன்று அந்த அடிக்கட்டுமானங்களின் வளர்ச்சியில் முதலாளிகள் அனைத்திலும் முதலீடு செய்து இலாபம் பெறுவதற்கு முயல்கின்றனர். அதனாலேயே இன்று அன்னிய முதலீடு அளவு கடந்து வருகிறது. ஏகாதிபத்திய மூலதனம் செல்லுமிடமெல்லாம் பேரழிவையும், நாடுகளை சூறையாடுவதையும் செய்யும் போது அவற்றுக்கு சில கட்டுப்பாடுகள், வரம்புகள் மட்டும் இருந்தால் உள்நாட்டு தொழிலும், மூலதனமும் பாதுகாக்கப்படும் என்று பார்ப்பது சரியாக இருக்காது.

வினவு