privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஉங்கள் பணம் சைப்ரஸ் வங்கியிலிருந்தால் கிடைக்காது !

உங்கள் பணம் சைப்ரஸ் வங்கியிலிருந்தால் கிடைக்காது !

-

ன்று சைப்ரஸ் நாட்டிலிருக்கும் வங்கிகள் திறக்கப்படவிருக்கின்றன. இதில் என்ன செய்தி என்று நினைக்கிறீர்களா? அந்த நாட்டின் வங்கிகள் அனைத்தும் சுமார் 2 வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த பிறகு இன்று திறக்கவிருக்கின்றன. கடந்த 2 வாரங்களாக யாரும் தமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கவோ, வேறு யாருக்கும் அனுப்பவோ முடியாமல் பணிகள் முடக்கப்பட்டிருந்தன. அது மட்டுமில்லை, ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 100 யூரோ (சுமார் ரூ 6,500) மட்டும்தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் இருந்தது.

இன்று வங்கிகள் திறக்கப்படும் என்றால் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும் முழுப் பணமும் கிடைத்து விடப் போவதில்லை.

லய்க்கி வங்கிமுதலாவதாக லய்க்கி என்ற வங்கி ஒரேயடியாக இழுத்து மூடப்படவுள்ளது. அந்த வங்கியில் 1 லட்சம் யூரோக்களுக்கு அதிகமான பேலன்ஸ் பணம் வைத்திருப்பவர்களுக்கு (மொத்தம் சுமார் 4 பில்லியன் யூரோ) பட்டை நாமம்தான் மிஞ்சும். அதை விடக் குறைவான மதிப்புடைய கணக்குகள் மட்டும் சைப்ரஸ் வங்கிக்கு மாற்றப்படும்.

இரண்டாவதாக, சைப்ரஸ் வங்கியில் 1 லட்சம் யூரோவுக்கு அதிகமான மதிப்புடைய நீண்டகால வைப்புத் தொகை வைத்திருப்பவர்களின் பணத்தில் (மொத்தம் 14 பில்லியன் யூரோ) 40 சதவீதம் வெட்டப்பட்டு வங்கியில் பங்குகளாக மாற்றப்படும். வங்கி ஒரு வேளை தப்பிப் பிழைத்து லாபம் ஈட்ட ஆரம்பித்தால் அதிலிருந்து ஏதாவது கிடைக்கலாம்.

ஆனால் 2012-ன் மூன்றாவது காலாண்டு நிலவரப்படி சைப்ரஸ் வங்கியின் மொத்த கடன்களில் 22 சதவீதம் வாராக்கடன்களாக வரையறுக்கப்பட்டிருந்தன. சைப்ரஸ் பொருளாதாரம் இந்த ஆண்டு 5-10 சதவீதம் சுருங்கவிருப்பதாகவும் அடுத்த 3 ஆண்டுகளில் 20 சதவீதம் சுருங்கவிருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடும் நிலையில் வங்கி சேமிப்பாளர்கள் இன்னும் அதிக இழப்புகளை ஏற்றுக் கொள்ள நேரிடும். “சைப்ரஸ் வங்கியின் கடன்களை முறையாக மதிப்பிட்டால் அந்த வங்கி இன்னும் 12 மாதங்களில் திவாலாகி விடும்” என்கிறார் வாஷிங்டனிலுள்ள அரசு கடன்களுக்கான நிபுணர் ஆடம் லெரிக்.

மூன்றாவதாக, சைப்ரஸ் வங்கியிலுள்ள மொத்தம் 14 பில்லியன் யூரோ நீண்ட கால வைப்பு நிதிகளில் 30 சதவீதத்துக்கும் மேல் வெளிநாட்டவர்களான ரஷ்யர்கள், கிரேக்கர்களுடையவை. அவற்றை அவர்கள் வெளியில் எடுத்துக் கொண்டு போய் விடாமல் இதைத் தடுப்பதற்கு நிதி பரிமாற்றங்களின் மீது கட்டுப்பாடுகளை விதிக்க சைப்ரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

சுமார் 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆண்டுக்கு சுமார் 24 பில்லியன் யூரோ மொத்த தேசிய வருமானத்தைக் கொண்ட குட்டி நாடான சைப்ரஸின் கடன் சுமை 16 பில்லியன் யூரோ. நாட்டின் கடன்களை ஈடு கட்ட ஐ.எம்.எப், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய கமிஷன் ஆகிய மூவர் 10 பில்லியன் யூரோ கடன் வழங்க முன் வந்துள்ளனர். மீதி 6 பில்லியன் யூரோ பணத்தை வங்கி சேமிப்பாளர்களிடமிருந்தும், பொதுத்துறை செலவுகளை குறைப்பதன் மூலமும், மக்கள் நலச் சேவைகளை வெட்டுவதன் மூலமும் சைப்ரஸ் சம்பாதிக்க வேண்டும்.

சைப்ரஸ் 2004-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அனுமதிக்கப்பட்டது, 2008-ம் ஆண்டு முதல் நாட்டின் நாணயமாக யூரோ ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது சைப்ரஸின் வங்கிக் கடன்கள் மொத்த தேசிய வருமானத்தை விட 4.5 மடங்காக (80 பில்லியன் யூரோ) இருந்தன. 2012-ம் ஆண்டு  நெருக்கடியில் சிக்கிய கிரீஸ் நாட்டு நிதி நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது சைப்ரஸ் வங்கிகள் 4.5 பில்லியன் யூரோ இழப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. அன்று கிரீஸை காப்பாற்றுவதற்காக சைப்ரஸ் பலி கொடுக்கப்பட்டது, இன்று சைப்ரஸை காப்பாற்றுவதற்கு எந்த நாடு பலியாகும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சைப்ரஸ் போராட்டம்
சைப்ரஸ் தலைநகர் நிக்கோசியாவில் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம்

சைப்ரஸில் இப்போது 14 சதவீதமாக உள்ள வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் சில மாதங்களில் 25 சதவீதமாக உயர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைப்ரஸின் நிதித் துறையை மீட்கும் திட்டங்களில் ஒன்றாக அனைத்து வங்கி கணக்குகள் மீதும் 6.75 சதவீதம் வரி விதிப்பது என்ற திட்டம் முன் வைக்கப்பட்டது. அந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டாலும் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் முழுமையாக கிடைப்பது உத்தரவாதமில்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘சைப்ரஸில் செய்யப்படும் நிதித் துறை மீட்பு நடவடிக்கை எதிர்காலத்தில் மற்ற யூரோ நாடுகளுக்கு நெருக்கடி மீட்பு முயற்சிகளுக்கு முன் மாதிரியாக இருக்கும்’ என்று யூரோகுரூப் தலைவர் ஜெரோன் டிசல்புளூம் கூறியிருப்பது ஐரோப்பிய நாடுகள் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “சைப்ரஸிலிருந்து ரஷ்ய வைப்புத் தொகைகளை பறிமுதல் செய்கிறார்கள் என்றால் நாளைக்கு லக்சம்பர்கில் அமெரிக்க வைப்புத் தொகைகளை பறிமுதல் செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?” என்கிறது ஸ்ட்ராட்போர் என்ற பன்னாட்டு நிறுவனம்.

2008-ம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் திவால் ஆன போது உலகெங்கிலுமான நிதித் துறையில் பரவிய அதிர்வலைகளை போல சைப்ரஸின் வங்கித் துறை மீது சுமத்தப்பட்டிருக்கும் வெட்டுகள் ஐரோப்பிய, அமெரிக்க நிதி நிறுவனங்களை ஆட்டம் காண வைத்திருக்கின்றன.

மன்மோகன் சிங், ப சிதம்பரம் தலைமையிலான இந்திய ஆளும் வர்க்கங்களும் இத்தகைய மேற்கத்திய நிதி மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நாட்டின் பொருளாதாரத்தை வளரச் செய்து வறுமையை ஒழிக்க திட்டம் தீட்டுகிறார்கள். கிரீஸில் நேற்று நடந்தது, சைப்ரஸில் இன்று நடப்பது, மற்ற ஐரோப்பிய நாடுகளில் நாளை நடக்கவிருப்பது, இந்தியாவில் என்று நடக்கும் என்பதுதான் கேள்வி.

சீட்டுக் கட்டு மாளிகையாக உருவாக்கப்பட்டிருக்கும் நிதி மூலதன ஏகாதிபத்திய கட்டமைப்பில் சரிந்திருக்கும் அடுத்த சீட்டுதான் சைப்ரஸ். சீட்டுக் கட்டு மாளிகை சரியும் போது பல கோடி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, போர்களையும் கலவரங்களையும் ஏற்படுத்தி, பேரழிவுகளிலும் லாபம் சம்பாதித்து 1% பணக்காரர்கள் கொழுப்பதுதான் முதலாளித்துவம் முன் வைத்திருக்கும் பாதை.

உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைப்பை வீழ்த்தி சோசலிச பொருளாதார கட்டமைப்பு உருவாக்குவதுதான் மனித குல முன்னேற்றத்துக்கான வழி.

மேலும் படிக்க
The lesson from cyprus. Eurpoe is politically bankrupt
Has Cyprus become the Lehman Brothers Eurpoe?

  1. மனிதன் காலையில் எழுந்தவுடன் ஒரு வேலைக்கு போக வேண்டும். அந்த வேலையில் அன்று இரவு உணவு சாப்பிட வேண்டும். அதற்கு அந்த வேலை சம்பளம் தர வேண்டும். அடுத்து உணவுக்கு நாம் வாங்கும் பொருளுக்கு விலை நிர்ணயிக்க்படும் போது நாம் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அடுத்து நாம் இரவு சாப்பிட்டது போக அடுத்த நாள் காலை மற்றும் மதியதிற்க்கு சாப்பாட்டிற்க்கு காசு மிச்சமாக இருக்க வேண்டும். எனவே வேலைக்கு போகாமல் இலவச அரிசி, இலவச ஆடு இவற்றில் சாப்பிட்டால்,நாம் அல்லது நமது சந்ததியில் ஒருவர் சைப்ரச் போல் அனுபவிப்பர். அடுத்து நமது உணவுக்கு காசு கொடுத்து அதன் உண்மையான விலை கொடுத்து வாஙுகும் சக்தியில் விலை விற்க வேண்டும்.. அம்மா இட்லி, அம்மா தயிர் சாதம் சாப்பிட்டாலும் நமக்கோ அல்லது நமது சந்ததியில் ஒருவருக்கொ சைப்ரச் நிலைமை வரும். விலை நிர்ணயிக்க, தேவை மற்றும் வினியோக காரணிகளில் பதுக்கல் இல்லாதும், கருப்பு சந்தையை தவிர்க்கும் முறையிலும் அரசு நிர்வாகம் செயல் பட வேண்டும். அடுத்து அடுத்த நாள் காலைக்கும் மதியத்திற்கும் மக்கள் சேமிக்க வேண்டும்… இதை தவிர மன்மோகன் மீதும் ப.சி மீதும் பழி போட்டு கட்டுரை எழுதி உள்ளாடைக்குள் சொரிந்து கண் மூடி அனுபவித்து கம்யூனிசம் வளர்க்க மட்டுமே முடியும். மொத்ததில் சைப்ரசில் இன்று காணாமல் போயுள்ள முதலீடு அந்த நாட்டு மக்கள் அனுபவித்து விட்ட அரசு சலுகைகளின் மொத்த மதிப்பு.

    • //மனிதன் காலையில் எழுந்தவுடன் ஒரு வேலைக்கு போக வேண்டும். அந்த வேலையில் அன்று இரவு உணவு சாப்பிட வேண்டும். அதற்கு அந்த வேலை சம்பளம் தர வேண்டும். அடுத்து உணவுக்கு நாம் வாங்கும் பொருளுக்கு விலை நிர்ணயிக்க்படும் போது நாம் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அடுத்து நாம் இரவு சாப்பிட்டது போக அடுத்த நாள் காலை மற்றும் மதியதிற்க்கு சாப்பாட்டிற்க்கு காசு மிச்சமாக இருக்க வேண்டும்.//

      சூப்பரா சொல்லிட்டீங்க கும்பிட்ரேன் சாமி. இப்படித்தான் ஒவ்வொருத்தரும் சாப்பிடணும். இதில, கோஸ்டா காபிஷாப்புக்கு போய் காபி சாப்பிட காசு எந்த இடத்தில மிச்சமாக வேணும்ன்று ஒரு தடவை சொல்லிட்டா வசதியா இருக்கும்.

      //எனவே வேலைக்கு போகாமல் இலவச அரிசி, இலவச ஆடு இவற்றில் சாப்பிட்டால்,நாம் அல்லது நமது சந்ததியில் ஒருவர் சைப்ரச் போல் அனுபவிப்பர். அடுத்து நமது உணவுக்கு காசு கொடுத்து அதன் உண்மையான விலை கொடுத்து வாஙுகும் சக்தியில் விலை விற்க வேண்டும்.. அம்மா இட்லி, அம்மா தயிர் சாதம் சாப்பிட்டாலும் நமக்கோ அல்லது நமது சந்ததியில் ஒருவருக்கொ சைப்ரச் நிலைமை வரும்.//

      இலவச ஆடு, இலவச அரிசி இதுக்கெல்லாம் சில நூறு கோடி ரூபாய் செலவாகும்னு வச்சுக்கலாம். ஆனா பல ஆயிரம் கோடிகள், பல லட்சம் கோடிகள்னு புரளுற பங்குச் சந்தை, அதில் அன்னிய முதலீடு, கரன்சி வணிகம், கமாடிட்டி சந்தை இதிலெல்லாம் கோடி கோடியா சம்பாதிக்கிறவங்கதான் சைப்ரச் நிலைக்கு காரணம்னு கட்டுரை சொல்லுது. நீங்க தயிர் சாதம் சாப்பிட்டவங்கதான் காரணம்னு சொல்ல வரீங்க.

      இது எப்படி இருக்குன்னா, 50 லட்ச ரூபா காரில போகும் 150 கிலோ ஆளு, தெருவில பிச்சை எடுக்கிறவன பார்த்து ‘இவனுங்க நெறய சாப்பிடறதுனாலதான் நாட்டில வெலவாசி ஏறிப் போச்சு’ன்னு சொல்றது போல.

      //விலை நிர்ணயிக்க, தேவை மற்றும் வினியோக காரணிகளில் பதுக்கல் இல்லாதும், கருப்பு சந்தையை தவிர்க்கும் முறையிலும் அரசு நிர்வாகம் செயல் பட வேண்டும். அடுத்து அடுத்த நாள் காலைக்கும் மதியத்திற்கும் மக்கள் சேமிக்க வேண்டும்… இதை தவிர மன்மோகன் மீதும் ப.சி மீதும் பழி போட்டு கட்டுரை எழுதி உள்ளாடைக்குள் சொரிந்து கண் மூடி அனுபவித்து கம்யூனிசம் வளர்க்க மட்டுமே முடியும். மொத்ததில் சைப்ரசில் இன்று காணாமல் போயுள்ள முதலீடு அந்த நாட்டு மக்கள் அனுபவித்து விட்ட அரசு சலுகைகளின் மொத்த மதிப்பு.//

      அந்த முதலீடு எல்லாத்தையும் பன்னாட்டு நிதி முதலாளிகள் உள்ளாடைக்குள்ள வச்சு கடத்திட்டாங்கன்னுதான் கட்டுரையில சொல்றாங்க, ஒங்களுக்குத்தான் எலும்பும் தோலுமா நிக்கிற கோடிக்கணக்கான மக்கள் மேல கடுப்பு.

      • பல்லு இருக்கிரவன் பக்கோடா சாபிட்றான். உனக்கு சிங்கிள் டீ தான்னு உன் வேலையும் சேமிப்பும் சொன்னால் நீ ஏன் காபி சாப் போறவனை பார்த்து…. உன் வேலையில் நீ சம்பாதி… இல்லையின்னால் ஒரு தொழில் பண்ணு… அதே அமைப்பு… உன்னிடம் மட்டும் யோகியமாவா இருக்க போகுது…நீயும் லஞசம் குடுத்து…மொபட் வாங்கு… அதிலிருந்து பைக்… சினிமா பாரு. நான் யோக்கியன்னு நீ இருந்து ஒன்னும் ஆக போறது இல்லை…வேலை செய் அல்லது வேலையை உருவாக்கு.. அடுத்து கமாட்டி சந்தை அமெரிக்காவின் பிரச்சினைக்கு காரணம்…சைப்ரச், இதாலி, ச்பேயின், கிரீச் இவற்றின் பிரச்சினைகள் அங்கு உழைக்கும் எண்ணமே குறைவு.. அனைத்து மக்களும் அரசு நல திட்ட உதவிகளில் வாழ பழகியவற்கள்.. ஒண்ணு உலக பொருளாதாரம் தெரின்சுக்கோ… இல்லைன்னால் கம்யூனிசம் படித்து அது உதவாதுன்னு புரிந்து கொள்..

        • கும்பிட்ரென் கும்பிட்ரென் சாமி,

          இந்த பல்லு பக்கோடான்னு பல பேரு அடிக்கடி பேசுறாங்க. இப்படியாகப்பட்ட பல்லு எப்படி கொஞ்ச பேருக்கு மட்டும் மொளைக்குது? அந்த ஸ்பெஷல் பல் எப்படி நாய்க்கு இருக்கற பல்லா, நரிக்கு இருக்கற பல்லா? கொஞ்சம் வெவரமா சொன்னா, பக்கோடா சாப்பிட எல்லாரும் தயாராகிக்கலாம்.

          லஞ்சம் கொடுத்து, மொபட் வாங்கிதான் காபி குடிக்கணும்னு சொல்றதுல கொஞ்சம் புரியுது. கோஸ்டா காபி குடிக்கணும்னா பொறுக்கி வேல பார்த்த சம்பாதிக்கணும்னு தெளிவா சொல்லுங்க.

          சைப்ரச், இதாலி, ச்பெயின், கிரீச் போன்ற நாடுகள்லே வேலை செய்ய மாட்டாங்கன்னா, அங்கே எல்லாம் நம்ம டாடா, அம்பானி, விஜய் மல்லையா (அல்லது சங்கராச்சாரி, ஆதீனம், ஸ்ரீஸ்ரீ) போல ஆளுங்களால நெரம்பி இருக்குதுன்னு சொல்ல வர்றீங்களா, என்ன?

          கமாட்டி சந்தைனால அமெரிக்காக்கு வந்த பிரச்சன இந்த சைப்ரச், இதாலி, ச்பெயின், கிரீச் நாடுகளுக்கு இல்லையோ? அவங்க இன்னும் முழுசா ஒலகமயமாகலையா என்ன?

        • பல் இருக்கிறவன் பக்கோடா தின்னாலோ இல்லை மலத்தை தின்னாலோ யாருக்கும் பிரச்சனையில்லை, எதுவாயிருந்தாலும் உழைத்து தின்னுங்க அடுத்துவன் வயிற்றுக்குள் இருப்பதை புடிங்கி தின்னாதிங்க.

          மனிதனிடத்தில் இருக்கும் ஒரே ஆதாரம் இயற்கை. அந்த இயற்கையை செல்வமாக மாற்றுவது மனித உழைப்பு மட்டுமே!

          இது தெரியாம நீ பொருளாதாரத்தில் பெரிய புளியா இருந்தா என்ன வேற என்னவா இருந்தா என்ன!

    • /எனவே வேலைக்கு போகாமல் இலவச அரிசி, இலவச ஆடு இவற்றில் சாப்பிட்டால்/

      இலவசமாக அரிசி ஆடு கொடுக்கிறார்கள். சரி, இலவசமாக கொடுப்பதற்கு அரிசியும், ஆடும் எங்கிருந்து வருகிறது?

      தனாக வளர்ந்து வருகிறதா?

      இல்லை நீங்கள் கும்பிடும் சாமி வானத்திலிருந்து கொட்டுகிறதா?
      எப்படி வருகிறது???

  2. இந்த் விலை உயர்விற்கு காரணம் சுதந்திரம் அடைந்ததில் இருந்து காங்கிரஸ் தான். இதை யாரும் மறுக்க முடியாது.மக்கள் தொகை உயர்வை கட்டுபடுத்த விளம்பரம் செய்யும் அரசு, விலை உயர்வை கட்டுபடுத்த விளம்பரம் செய்யலாமே!. அந்நியநாட்டின் கூலிகள் இவர்கள் அதை செய்தால் முதலாளிகளுக்கு செய்த துரோகம் ஆகிவிடுமே!.70 சதவிகிதம் நிலபரப்பு தமிழ்நாட்டில் உணவு பொருள் தயாரிக்கவே பயன்படுத்தபட்டு வருகிறது. உணவு பொருள் விலை உயர்விற்கு பிரதான காரணம் உலகமயமாக்கள். தன் மகனும் பொறியளன் ஆவது விவசாயின் கனவாக இருப்பதால், உலகமயமாக்களை அவர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். 60 சதவிகித மக்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை பயன்படுத்துவதில்லை. அவர்களால் வளர்க்கப்பட்ட பொறியாளன் அதை பின் தொடர்கிறான்.

    • வினவை ஒரு சிரிப்பு புத்தகமாக படிக்கலைன்னால்… இப்படிதான் விலை குறைப்பிற்க்கு விளம்பரம் ஏன் குடுக்கலைங்கற கேள்வி கேக்க வேண்டி வரும்…. உன் வீட்டு சுவற்றில் எழுதி அதன் பில்லை அரசுக்கு அனுப்பு… விலை குறையும்… ஐயோ..ஐயோ…

  3. சைப்ரசை தொடர்ந்து லக்சம்பெர்க் , மால்டா ,ஸ்லோவேனியா , லாட்வியா ஆகிய நாடுகள் திவால் ஆகா காத்திருக்கின்றன

  4. முதலாளித்துவம் பேய் என்றால் கம்யூனிஸம் பிசாசு.

    இரண்டையும் ஏற்க முடியாது.

Leave a Reply to கும்பிட்ரென் சாமி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க