privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!

ஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!

-

முதலாளித்துவம்
முதலாளித்துவ நியாயம்.

“பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான், அது போல பணம் இருக்கிறவன் காபி ஷாப்பில் காபி சாப்பிடுவான், 7 நட்சத்திர ஹோட்டலில் தண்ணி அடிப்பான், வேலியிட்ட குடியிருப்பில் வீடு வாங்குவான், அப்பல்லோவில் சிகிச்சை பார்த்துப்பான்.’ அதைப் பார்த்து ஏன் பொறாமைப்படுறீங்க?”

‘யாருக்கு பொருட்களும் சேவைகளும் கிடைக்க வேண்டும்’ என்பதற்கு முதலாளித்துவ சிந்தனையாளர்களின் பதில் இதுதான்.

ஒருவருக்கு ரத்தப் புற்றுநோய் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். முதலாளித்துவ கனவு உலகத்தில், ஐடியல் சந்தை பொருளாதாரம் செயல்படும் ‘பூலோக சொர்க்கத்தில்’, மருந்து வாங்குவதற்கு அவர் மாதம் ரூ 1.5 லட்சம் செலவழிக்க வேண்டும். அதாவது கிலிவெக் என்ற பெயரில் நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருந்தை வாங்கிச் சாப்பிட்டு நோயை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு ஆண்டுக்கு ரூ 18 லட்சம் செலவழிக்க வேண்டும். 5 ஆண்டுகள் உயிரோடு இருக்க ரூ 90 லட்சம், 10 ஆண்டுகள் உயிரோடு இருக்க ரூ 1.8 கோடி.

இவ்வளவு பணத்தை யார் செலவழிக்க முடியும்? அந்தப் பணம் எப்படி வந்திருக்கும் என்று யாரும் கேட்கப் போவதில்லை. ‘நாய் விற்ற பணம் குரைக்கப் போவதில்லை’, அதனால் நாயையோ, பேயையோ விற்று பணம் குவித்த முதலாளிகளுக்கு மட்டும்தான் வாழும் உரிமை இருக்கும்.

‘அப்படி பணம் குவித்திருக்காதவர்கள் செத்து விட வேண்டியதுதான். அவ்வளவு பணம் சம்பாதிக்க வக்கில்லாத ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்து என்ன பலன்’ என்கிறது முதலாளித்துவம்.

“உயிர் காக்கும் மருந்துகளை கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு பெருத்த செலவாகிறது. கண்டு பிடித்த மருந்துகளை மருந்தகங்களில் பரிசோதனை செய்து, தேசிய மருந்து ஒழுங்குமுறை கழகங்களிடம் ஒப்புதல் வாங்க இன்னும் பெரும் தொகை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்த மருந்தை அதிக விலைக்கு விற்றால்தான் எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு பணம் கிடைக்கும்” என்ற வாதத்தின் அடிப்படையில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் நலனை பாதுகாக்க மேற்கத்திய நாடுகளில் காப்புரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு புதிய மருந்தை முதலில் கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வந்த நிறுவனத்துக்கு அந்த மருந்தை உற்பத்தி செய்து விற்பதற்கு 20 ஆண்டுகள் தனி உரிமை கொடுக்கப்படுகிறது. கண்டுபிடித்த நிறுவனத்தின் அனுமதி இன்றி மற்ற நிறுவனங்கள் அந்த மருந்தை நகல் செய்து உற்பத்தி செய்வது சட்டப்படி குற்றம்.

அறிவியல் ஆராய்ச்சி, தொழில் நுட்ப முன்னேற்றம் அனைத்தும் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் உழைப்பின் பலன்கள்; ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முன் வந்த ஆயிரக்கணக்கான முன்னோடிகளின் தோள்களின் மீது நின்றுதான் புதிய அறிவியல் முன்னேற்றங்களை நிகழ்த்துகிறது.

அறிவியல் என்பது நோவார்டிஸ் கம்பெனியின் கிணற்றுக்குள்ளோ, ஒரு தனிநபர் வீட்டு புழக்கடையிலோ விளைவதில்லை. உலகெங்கிலும் உள்ள பொதுமக்களின் பணத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் நோய்களின் உடற்கூறு பற்றியும் அவற்றுக்கான மருந்துகள் பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. புகழ் பெற்ற ஆய்வு இதழ்களில் வெளியாகும் இந்த ஆராய்ச்சி முடிவுகள்தான் புதிய மருந்துகள் உருவாக்குவதற்கான விளைநிலம். சுருக்கமாகச் சொல்லப் போனால், ஒட்டு மொத்த உலகும் சேர்ந்து ஆதரிப்பதுதான் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி; எந்த தனிப்பட்ட நிறுவனமும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. இப்போது மேற்கத்திய அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் படி அறிவுக்கு சொந்தம் கொண்டாட வேண்டுமானால், மனித குலத்தின் பொது அறிவுக் களஞ்சியத்திலிருந்து எந்த ஆதாயமும் பெறாத ஒரு குழுவை நிறுவனம் உருவாக்க வேண்டும்.

கிலிவெக் மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஒரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் பிரியன் டிரக்கர், ‘தங்களது ஆய்வுக்கான செலவில் 10% மட்டுமே நோவார்ட்டிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றும், 90% அரசு மற்றும் கல்வி ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் அறிவியலை வளர்த்துச் செல்ல முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் முறையின் முட்டாள்தனம் விரிவாக விவாதிக்கப்பபட வேண்டிய விஷயம். இங்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு தொடர்பான விபரங்களை மட்டும் பார்ப்போம்.

பன்னாட்டு நிறுவனங்கள்
நாட்டு உரிமைகளை விழுங்கும் பன்னாட்டு நிறுவனங்கள்.

காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு காப்புரிமை காலாவதி ஆன பிறகு, மற்ற நிறுவனங்களும் உற்பத்தியில் நுழைய விலை 20-ல் ஒரு பங்காக வீழ்ந்து விடுகிறது.

ஆனால், இந்தியாவின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இயற்றபட்ட இந்திய காப்புரிமை சட்டம் 1970 வித்தியாசமாக இருந்தது. மருந்து பொருட்களுக்கு காப்புரிமை வழங்குவது சட்டத்தில் இல்லை. மாறாக, மருந்தை உற்பத்தி செய்யும் முறைக்குத்தான் காப்புரிமை வழங்கப்பட்டது. அதுவும் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கப்படும். இதன்படி பன்னாட்டு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்த புதிய மருந்தை மாற்று முறையில் இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்து அதே மருந்தை பல மடங்கு குறைந்த செலவில் சந்தைப் படுத்த முடிந்தது. இப்படி உருவாக்கப்பட்ட மருந்துகள் அடிப்படை மருந்துகள் (generics) என்று அழைக்கப்படுகின்றன.

இதன் மூலம் இந்தியாவிலும் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்கத்திய நிறுவனங்களின் மருந்து விலைகள் கட்டுப்படியாகாத மக்கள் கோடிக்கணக்கான பேர் பலன் பெற்றார்கள்.

1990களுக்குப் பிறகான ஒற்றைத் துருவ மேலாதிக்க உலகில் ‘ஒரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொன்னாலும் சரி, அமெரிக்கா வைப்பதுதான் சட்டம்’ என்பதை நிரூபிக்கும் விதமாக காட் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். ‘அப்படி உலகப் பொருளாதாரத்தோடு இரண்டற கலந்து விடா விட்டால் நாட்டில் சோறு, தண்ணீர் கிடைப்பது நின்று போகும்; குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் இறந்து போவார்கள்; பள்ளிக் கூடங்கள் நடப்பது நின்று போகும்; மருத்துவமனைகள் செயலிழந்து விடும்’ என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்திலும் (TRIPS) இந்திய அரசு கையெழுத்திட வைக்கப்பட்டது. அதற்கேற்ப இந்தியாவின் காப்புரிமை சட்டம் 1999, 2002, 2005, 2006 ஆண்டுகளில் மாற்றப்பட்டது. இனிமேலும் புதிய நிபந்தனைகள் பன்னாட்டு நிறுவனங்கள் முன் வைக்கும் போது அவற்றிற்கு ஏற்ப சட்டம் மாற்றப்படும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

இந்த திருத்தங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் என்ன செல்லுபடியாகுமோ அதுதான் இந்தியாவிலும் செல்லுபடியாகும். ‘மருந்து நிறுவனங்களுக்கு மருந்து மீதான காப்புரிமை வழங்கப்பட வேண்டும், அதுவும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோக சந்தை உரிமை வழங்கப்பட வேண்டும். அடிப்படை வடிவிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாது.’

இதன் விளைவாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய மருந்து நிறுவனங்கள் ரான்பாக்ஸி, பிரமல், மேட்ரிக்ஸ் லேப், ஆர்சிட் நிறுவனத்தின் ஒரு பிரிவின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி துறைகள் என்று வரிசையாக பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்பட்டன.

இனிமேல் புதிதாக கண்டுபிடிக்கப்படும் எந்த ஒரு மருந்துக்கும் சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனம் வைப்பதுதான் விலை. அதற்கான காப்புரிமையை இந்திய அரசு வழங்கியே தீர வேண்டும். இனிமேல் மார்பகப் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் கோடீஸ்வரர்கள் மட்டும்தான் சிகிச்சை பெற்று உயிர் வாழ முடியும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நிலைமையை இம்மியளவு கூட மாற்றி விடவில்லை. அமெரிக்க காப்புரிமை சட்டங்களை வளைத்து விளையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு உத்தியை மட்டும் இந்தியாவில் தடுத்திருக்கிறது, அவ்வளவுதான்.

நோய் பற்றி ஆராய்ச்சி செய்வது, அதற்கான புதிய மருந்து ஒன்றை கண்டுபிடிப்பது, அதற்கான பரிசோதனைகளை நடத்துவது என்று நீண்ட முயற்சிக்குப் பிறகு லாபம் கிடைப்பதை முதலாளிகளின் லாப வேட்கை சகித்துக் கொள்ளப் போவதில்லை. குறுக்கு வழியில் லாபத்தை பெருக்க கண்டு பிடித்த வழிகளில் ஒன்றுதான் “என்றென்றும் பசுமை” என்ற முறை. அதாவது ஒரு மருந்தின் மூலம் என்றென்றும் லாப அறுவடை செய்யும் வழிமுறை.

மருந்தின் 20 ஆண்டு கால காப்புரிமை காலாவதி ஆவதற்கு முன்பு அந்த மருந்தின் உள்ளடக்கத்தில் ஒரு சிறு மாற்றம் மட்டும் செய்து புதிதாக காப்புரிமைக்கு விண்ணப்பிப்பார்கள். ‘இந்த மாற்றத்தினால் நோய்க்கான சிகிச்சை பல மடங்கு மேம்பட்டிருக்கிறது’ என்று விளம்பரம் செய்வார்கள். ஒரிஜினல் மருந்துக்கும் ‘புதிய’ மருந்துக்கும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோக சந்தை உரிமை கிடைத்து விடும்.

கிலிவெக் மருந்தின் காப்புரிமை காலம் முடியப் போகிறது. சென்ற ஆண்டு மட்டும் நோவார்டிஸ் $8.5 பில்லியன் மதிப்பிலான கிலிவெக் மருந்துகளை உலகம் முழுக்க விற்றிருக்கிறது. அந்த ஏகபோக சந்தை வருமானத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள கிலிவெக் மருந்தில் அப்படி ஒரு மாற்றம் செய்து இமதினிப் மெசிலேட் என்ற வேதி சேர்மத்துக்கான காப்புரிமைக்கு சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தது நோவார்டிஸ்.

சென்னை அலுவலகம் அந்த விண்ணப்பத்தை 2006-ம் ஆண்டு நிராகரித்து விட்டது. ‘இந்திய காப்புரிமை சட்டம் (2005)ன் பிரிவு 3(d)ன் படி அப்படி சிறு அளவு மாற்றம் செய்யப்பட்ட மருந்துகளுக்கு காப்புரிமை இல்லை’ என்று சொல்லி விட்டது.

அதை எதிர்த்து நோவார்டிஸ் சென்னை உயர் நீதி மன்றம், இந்திய அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டுக் கழகம் இவற்றில் மேல் முறையீடு செய்து இறுதியாக ஆகஸ்ட் 2009-ல் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை கொண்டு வந்தது. அந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. ‘சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் முடிவு சரியானதுதான், நோவார்டிஸூக்கு கிலிவெக் மருந்தில் சிறிதளவு செய்த மாற்றத்தின் அடிப்படையில் காப்புரிமை வழங்க முடியாது’ என்று முடிவு செய்திருக்கிறது.

ஆனால், இதே அடிப்படையில் சீனா, ரஷ்யா, தாய்வான் உட்பட 40 நாடுகளில் நோவார்டிஸ் காப்புரிமை பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் மற்ற நாடுகளிலும் காப்புரிமை பெறுவதற்கான தடைகளை தகர்த்தெறிவதற்கு முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

மன்மோகன் சிங் - ஏஞ்சலா மெர்கல்
மன்மோகன் சிங் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உடன்.

ச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே ‘இனிமேல் இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் வருவதே குறைந்து போகும்’ என்று எச்சரித்தார் நோவார்டிஸ் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் ரஞ்சித் ஷாஹானி. இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

இப்போது ஜெர்மனிக்கு காவடி தூக்கிக் கொண்டு போயிருக்கும் மன்மோகன் சிங், ‘இது தொடர்பான புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று ஜெர்மனி வலியுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லுடனான மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகிக்கப் போகிறது. அந்த ஒப்பந்தத்தில் அறிவு சார் சொத்துரிமையில் உலக வர்த்தக நிறுவன பொறுப்புகளை விட உறுதியான சட்டங்களை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவை வலியுறுத்துகிறது.

இந்திய நீதித் துறையில் சாதகமான தீர்ப்பு கிடைக்கா விட்டால், சட்டத்தையே மாற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

“பொருளாதாரத் தேக்கம், விலைவாசி உயர்வு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவைதான் நாம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்” என 2012-13 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை உரையில் குறிப்பிட்ட நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘இதிலிருந்து நம்மைக் காப்பாற்ற அந்நிய மூலதனத்திடம் சரணடைவதைத் தவிர வேறு நாதி நமக்கில்லை’ என்று பிரகடனம் செய்து, ‘அந்நிய மூலதனத்திற்கு காட்டப்படும் சலுகைகளை யாரும் எதிர்க்கக் கூடாது’ என்றும் அறிவுரை சொல்கிறார்.

அதன்படி, இந்த ஆண்டு இல்லா விட்டால் அடுத்த சில ஆண்டுகளுக்குள், காங்கிரசு தலைமையிலான ஆட்சியில் இல்லா விட்டால் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் அசௌகரியங்கள் நீக்கப்பட்டு தடையின்றி அன்னிய மூலதனம் இந்தியாவிற்குள் பாய்வதற்கான மடை வெட்டப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலமும் சாதாரண மக்களுக்கு அடிமை வாழ்வும் உறுதி.

– அப்துல்

மேலும் படிக்க
HIV cancer patients seek access to affordable medicines
A Just order
Top three MNC pharma companies Novartis, Pfizer and Abott lose 10 in 2013
Novartis loses Indian Glivec patent case
Novartis denied cancer drug paten

  1. மிக நல்ல கட்டுரை.

    காப்புரிமை (patent) என்ற பெயரால் கூத்தடிக்கொண்டு இருக்கிறார்கள். கட்டுரை சொன்னது போல பல விஞ்ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தித்தான் இந்த கம்பனிகள் பயனடைகின்றன. காப்புரிமை அடிப்படையில் மருந்துகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் Hippocrates இல் இருந்து தொடங்க வேண்டும். மாபெரும் சாதனையான X-ray கண்டுபிடித்த Wilhelm Rontgen காப்புரிமை வாங்க மறுத்துவிட்டார்! இந்த கம்பனிகள் இருப்பதையே உல்டா செய்து காப்புரிமை வாங்கிக் கொண்டிருக்கின்றன.

    மென்பொருள் துறையில் காப்புரிமை வாங்குவது பற்றி எனக்கு நேரடி அனுபவம் உள்ளது. மருத்துவத் துறையிலாவது ஒரு மருந்து கண்டுபிடித்தால் அதை பரிசோதனை செய்து, பக்க விளைவுகள் அதிகம் உள்ளனவா என்று ஆராய்ந்து, அரசிடம் அனுமதி எல்லாம் பெற வேண்டும். மென்பொருள் துறையில் இதெல்லாம் கூட தேவையில்லை. ஏதாவது ஒரு problem எடுத்துக்கொண்டு மோட்டுவளையை பார்த்து சிறிது நேரம் உட்கார்ந்தால் போதும். ஏதாவது ஐடியா கிடைத்து “கண்டுபிடிப்பு” செய்து விடலாம். பிறகு காப்புரிமை வாங்க வேண்டியதுதான்! இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளில் சிலவற்றிற்கு கணினியியல் தொடர்பான பயிற்சி கூட தேவையில்லை. கணினி உபயோகிக்கும் எவருக்கும் இந்த யோசைனைகள் தோன்றிவிடும். இதற்கு notorious உதாரணம் அமேசான் நிறுவனத்தின் one-click காப்புரிமை!

    இப்படி கோவில் சுண்டல் போல கேட்டவருக்கெல்லாம் காப்புரிமை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய கம்பனிகள் சுண்டல் வாங்கிவருமாறு தன் தொழிலாளர்களை கட்டாயப்படுத்துகிறார்கள். கோவில் அருகில் நாங்கள் குடியிருந்த போது , மணியடித்தவுடன் சுண்டல் வாங்கி வருமாறு என் அம்மா என்னை அனுப்புவது நினைவுக்கு வருகிறது!
    இன்றைய தேதியில் நீங்கள் என்ன மென்பொருள் கட்டமைத்தாலும் அதில் நீங்கள் பயன்படுத்தும் ஐடியாக்களில் பத்திருபதாவது யாருக்காவது சுண்டல் வழங்கி இருப்பார்கள் என உறுதியாக சொல்லலாம். இப்படி சுண்டல் வாங்கிய எவராவது நீதிமன்றம் சென்றால் உங்கள் கதி அதோகதி தான். இப்போதெலாம் காப்புரிமை அடிப்படையில் நீதிமன்றம் கூட செல்வதில்லை. Blackmail செய்ய பயன்படுத்துகிறார்கள். “என்கிட்ட ஆயிரம் பாக்கட் சுண்டல் இருக்கு. உன்கிட்ட நூறுதான் இருக்கு. மவனே, என் கிட்ட வாலாட்டினா கீசிடுவேன்” என்று போய்க்கொண்டிருக்கிறது. ஒரு கம்பனி தன்னிடம் இருக்கும் சுண்டல் பாக்கெட்டுகளை மற்றொரு கம்பனிக்கு விற்பனை செய்வதும் உண்டு. சுண்டல் வாங்குவதையே முக்கிய தொழிலாக கொண்ட உப்புமா கம்பனிகளும் உண்டு. சுண்டல் பாக்கெட்டுகளை வாங்கி பெரிய கம்பெனிகளுக்கு விற்று விடுவதே இவர்கள் தொழில்.

    மென்பொருள் துறையில் காப்புரிமை வழுங்குவதை முழுதும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    http://www.nosoftwarepatents.com/

    மிக நல்ல கட்டுரை. சைக்கிள் கேப்பில் ஒரு கருத்தை சொருகி விடுகிறேன் 🙂

    // உலகெங்கிலும் உள்ள பொதுமக்களின் பணத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் நோய்களின் உடற்கூறு பற்றியும் அவற்றுக்கான மருந்துகள் பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. புகழ் பெற்ற ஆய்வு இதழ்களில் வெளியாகும் இந்த ஆராய்ச்சி முடிவுகள்தான் புதிய மருந்துகள் உருவாக்குவதற்கான விளைநிலம். //

    மேலே உள்ள பல்கலைக்கழகங்களில் கணிசமானவை நீங்கள் வெறுக்கும் அமெரிக்காவில் உள்ளவை. ஆராய்ச்சி கட்டுரைகளும் மிக அதிக அளவில் அவர்கள்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

  2. தொண்ணூறு சதவீதம் பல்கலைக்கழககங்களின் பங்களிப்பு ஆகவே அவர்களுக்கு எதற்கு அவ்வளவு பணம் என்பது முட்டாள்தனமானது. அந்த ஒருங்கினக்கும் பத்து சதவீத மூளை கூட நம்மிடம் இல்லை அல்லவா? கண்டுபிடித்தாபிின்னர் தான் அது சுலபம். அதுவரை அது கடினம் தான். Information is wealth. அடுத்தவன் சொத்தை திருடி ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கிறார்களாம். அக்கறை இருப்பவர்கள் சொந்தமாக கண்டுபிடிக்க தானே ?

  3. @Raman
    கணித சூத்திரங்களுக்கு காப்புரிமை வாங்க முடியாது தெரியுமா? நாளையே நான் Riemann Hypothesis ஐ நிரூபித்து விட்டால் அதற்காக காப்புரிமை கோர முடியாது! ஏன் ஐயா? ஏனென்றால் இவை எல்லாம் universal facts! கண்டுபிடிக்கும் முன்பும் இவை உண்மையாகவே இருந்தன! இந்த கூற்றுகளை கண்டுபிடிப்பவர் புதிதாக எதையும் செய்து விடவில்லை. இருப்பதை உணர்ந்தார் . அவ்வளவே. மருந்துகளும் அப்படியே. ஒரு மருந்து ஒரு நோயை குணப்படுத்தும் என்பது ஒரு universal fact! இதற்கெல்லாம் பட்டா போட்டு தர முடியாது.

    ஒரு மரியாதைக்காக, தார்மீக ரீதியில், போனால் போகிறது என்று காப்புரிமை வழங்குகிறோம். இதை வைத்து கொள்ளை அடித்தால் முதுகில் ரெண்டு சாத்து சாத்தி துரத்த வேண்டியதுதான். ஒருவர் நல்ல முறையில் நடக்கும் வரை தான் சமூகமும் அவரை நல்ல முறையில் நடத்தும். அரஜாகம் பண்ணத் தொடங்கினால் தர்ம அடிதான் கிடைக்கும். ஒரு நிலக்கரி சுரங்கத்தை ஒருவர் கண்டுபிடித்தால் மரியாதைக்காக ஏதோ கொஞ்சம் பணம், அதிக பட்சம் ஒரு பாராட்டு விழா, ‘நிலக்கரி கண்ட நீலவாணன்’ என ஏதாவது பட்டம், இவ்வளவு தான் முடியும். நிலக்கரி சுரங்கத்தையே தாரை வார்க்க முடியாது.

    • Thats correct venkatesan,

      Maybe patent and rights over a luxurious or hedonistic product if okay but things like general welfare cannot be patented.

      but indian govt takes it to extreme,people losing houses etc from road construction get nothing in return.

  4. @Venkatesan

    உங்கள் கருத்தை படித்து சிரித்து விட்டேன். இப்படியும் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டு நியாயம் கர்பிக்குக்ம் தொனியில் கருத்தை எழுத இந்தியர்களால் தான் முடியும்

    //
    ஏனென்றால் இவை எல்லாம் universal facts! கண்டுபிடிக்கும் முன்பும் இவை உண்மையாகவே இருந்தன! இந்த கூற்றுகளை கண்டுபிடிப்பவர் புதிதாக எதையும் செய்து விடவில்லை. இருப்பதை உணர்ந்தார் //

    அதை நீங்கள் உணர வேண்டியது தானே ? மின்சாரம் , இணையம் விமானம் தலைவலி மருந்து எல்லாம் இந்த பூலோகத்தில் இருப்பதை உணர்ந்து அமேரிக்கர்கள கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது. அதை ஏன் உன் நாட்டில் இருப்பவர்கள் உணர வில்லை ?
    //
    ஒரு நிலக்கரி சுரங்கத்தை ஒருவர் கண்டுபிடித்தால் மரியாதைக்காக ஏதோ கொஞ்சம் பணம், அதிக பட்சம் ஒரு பாராட்டு விழா, ‘நிலக்கரி கண்ட நீலவாணன்’ //

    நிலக்கரி எனபது discovery not invention . இதையே ஒருவர் மரத்தில் இருந்து நிலக்கரி செய்யும் முறையை கண்டுபிடித்தால் , உங்கள் பாசையில் உணர்ந்தால் அதற்கு காப்புரிமை கொடுக்கப்பட வேண்டும்.

    ஊரார் சொத்தை திருடுபவனுக்கு வியாக்கியானம் வேறு

  5. @Raman
    கூலிக்கு மாரடிக்கும் விதமாக நான் வேலை செய்யும் கம்பெனிக்கு நாலைந்து patents பெற்று தந்த பாவத்தை செய்தவன் என்ற முறையில் சில கேள்விகள்.

    // discovery not invention

    அதே தான் நானும் சொல்கிறேன். சரி, நாளையே நான் இப்போது தெரிந்திருப்பதை விட பெரியதான ஒரு prime number கண்டுபிடிக்கிறேன். இந்த உண்மையை RSA போன்ற வகைகளில் வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என ஒரு காப்புரிமை வாங்கித்தருவீர்களா? தர மாட்டார்கள். ஏனென்றால் அது ஒரு universal fact. இதெற்கெல்லாம் காப்புரிமை கிடைக்காது. அது போல தான் மருந்துகளும். Acetomenophen தலைவலியை தீர்க்கும் என்பது ஒரு அடிப்படை உண்மை. This is a discovery. Not an invention. இதற்கும் காப்புரிமை தரக்கூடாது. Acetomenophen தயாரிக்கும் குறிப்பிட முறைக்கு வேண்டுமானால் காப்புரிமை தரலாம். Only methods can be patented, not facts.

    அது போகட்டும். இவர்கள் தாங்களே ஆதி முதல் அந்தம் வரை கண்டுபிடித்துவிட்டார்களா? எத்தனை ஆயிரம் விஞ்ஞானிகளின் தோள்கள் மேல் இவர்கள் நிற்கிறார்கள் ஐயா? Henry Gray, John Hunter ஆகியோர் உடலை கிழித்துப் பார்த்ததில் இருந்து, pathology, physiology என விரியும் எவ்வளவு ஆய்வுகள் ஐயா. கடைசியில் இவர்கள் கையில் ஒன்று சிக்கியவுடன் பட்டா போட்டு கொள்ளை அடிக்க வெட்கமாயில்லை?

    இப்படி ஒரு மருந்தின் விலையை லட்சக்கணக்கில் வைத்து விற்கிறார்களே, இவர்கள் ஆய்வுக்கு அவ்வளவா செலவாயிற்று? தொழில் செய்வதிலும் ஒரு நாணயம் வேண்டாமா?

    ஏன் எல்லாரும் ஒரே அளவில் வரி கட்டுவதில்லை? வருமானம் அதிகமானால் ஏன் வரி அதிகமாக வேண்டும்? இந்த சமுதாயத்தில் இருந்தே எனக்கு வருமானம் கிடைத்தது. அதற்கு தக்கவாறு திருப்பி தருவதுதான் முறை. மற்றவர் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி ஒன்றை நீங்கள் கண்டுபிடிக்கும் போது திருப்பித் தருவதுதான் தர்மம்.

    நான் நடுவில் சொன்னதை மட்டும் விட்டுவிட்டீர்களே. மீண்டும் சொல்கிறேன்.
    // ஒருவர் நல்ல முறையில் நடக்கும் வரை தான் சமூகமும் அவரை நல்ல முறையில் நடத்தும். அரஜாகம் பண்ணத் தொடங்கினால் தர்ம அடிதான் கிடைக்கும். //

    வேறு முறையில் சொன்னால், “காப்புரிமையாவது, கத்திரிக்காயாவது”

    • // Acetomenophen தலைவலியை தீர்க்கும் என்பது ஒரு அடிப்படை உண்மை //
      கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் அது அடிப்படை உண்மை. அதற்கு முன்னாள யாருக்கு தெரியும்? தெரிந்திருந்தால் ராஜ ராஜ சோழன் தலைவலிக்கு Acetomenophen சாப்பிட்டார் என்று புலவர்கள் பாடி வைத்திருக்க வேடியது தானே ?

      யாரோ கண்டுபித்த பின்னர் கொஞ்சமும் லஜ்ஜையின்றி அது அடிப்படை உண்மை அனைவருக்கும் சொந்தம் என்று வெளிப்படையாக திருடுவது

      // This is a discovery. Not an invention.//

      எல்லாமே இந்த உலகத்தில் உள்ள மூல பொருட்களை வைத்து செய்யபடுபவை . எல்லா கண்டுபிடிப்பையும் இப்படி கூறி திருடலாம். இப்படி பேச கேவலமாக இல்லையா ?

      //அது போகட்டும். இவர்கள் தாங்களே ஆதி முதல் அந்தம் வரை கண்டுபிடித்துவிட்டார்களா? எத்தனை ஆயிரம் விஞ்ஞானிகளின் தோள்கள் மேல் இவர்கள் நிற்கிறார்கள் ஐயா?//

      சக்கரத்தை கண்டுபிடித்தால் தான் சைக்கிள் கண்டுபிடித்தார்கள் , விமானம் கண்டு பிடித்தார்கள் . ஆகவே எதற்கும் காப்புரிமை வழங்க தேவை இல்லை என்று குதர்க்க வாதம் பண்ணலாம்

      //

      இப்படி ஒரு மருந்தின் விலையை லட்சக்கணக்கில் வைத்து விற்கிறார்களே, இவர்கள் ஆய்வுக்கு அவ்வளவா செலவாயிற்று? தொழில் செய்வதிலும் ஒரு நாணயம் வேண்டாமா?//

      விலையை குறைத்து கொடுங்கள் என்று கேட்பட்து நியாயம்

      //

      ஏன் எல்லாரும் ஒரே அளவில் வரி கட்டுவதில்லை? வருமானம் அதிகமானால் ஏன் வரி அதிகமாக வேண்டும்? இந்த சமுதாயத்தில் இருந்தே எனக்கு வருமானம் கிடைத்தது. அதற்கு தக்கவாறு திருப்பி தருவதுதான் முறை. மற்றவர் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி ஒன்றை நீங்கள் கண்டுபிடிக்கும் போது திருப்பித் தருவதுதான் தர்மம்//

      வரி கட்டுவது சட்டம் ஒழுங்கு , கட்டமைப்பு நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக , தர்மம் செய்வதற்கு அல்ல

      //ஒருவர் நல்ல முறையில் நடக்கும் வரை தான் சமூகமும் அவரை நல்ல முறையில் நடத்தும். அரஜாகம் பண்ணத் தொடங்கினால் தர்ம அடிதான் கிடைக்கும்//

      காட்டுமிராண்டிகள் சமூகத்தில் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று நீதி கிடைக்கும்

      திருடர்கள் சமூகத்தில் நல்லவனுக்கு தர்ம அடி கிடைக்கும். எப்படிப்பட்ட சமூகம் என்பதை பொருத்தது . உங்களை போன்ற இணையம் படிப்பவர்களுக்கே எதுவும் புரிவதில்லை .

      உழைக்காமல் இலவசமாக எல்லாமும் வேண்டும் எனபது நம் சமுதாயத்தில் புரையோடி போய்விட்டது

      • // உழைக்காமல் இலவசமாக எல்லாமும் வேண்டும் எனபது நம் சமுதாயத்தில் புரையோடி போய்விட்டது //

        ever greening-ல் எவ்வளவு உழைப்பு இருக்கிறது..?!

        மேலும் மாதம் ரூ 1.2 லட்சம் செலவில் ஒவ்வொரு ரத்தப் புற்று நோயாளியும் உங்கள் உழைப்பை மதிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அவர் உயிருக்கு மதிப்பில்லை..?!
        ”எளிய மக்கள் உயிரை நீங்கள் மதிக்க மாட்டீர்கள் – கொள்ளை அடிப்பதற்காகவே நீங்கள் உழைத்த உழைப்பை நாங்கள் மதிக்க வேண்டுமா” என்பதுதான் எந்த மக்கள் நல அரசும் வணிக ரீதியான ஆராய்சியாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி..

        புதிய கண்டுபிடிப்பாகவே இருந்தாலும், கட்டாய உரிமம் பெறுதல் (Compulsory licensing) என்ற உரிமை TRIPS ஒப்பந்தத்திலேயே உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.. இந்தியாவில் போன மார்ச்-2012-ல் புற்று நோய்க்கான Sorafenib Tosylate என்ற மருந்தை Nexavar என்ற பெயரில் ஒவ்வொரு புற்று நோயாளியும் உயிரோடு இருக்க அவருக்கு மாதம் ரூ.2.8 லட்சம் செலவு வைக்கும் ’உரிமையை’ Bayer இழந்தது..

        http://spicyipindia.blogspot.in/2012/03/breaking-news-indias-first-compulsory.html

        இந்தோனேசியா டிசம்பர்-2012-ல் கொண்டுவந்த Compulsory licensing :

        http://www.ihs.com/products/global-insight/industry-economic-report.aspx?id=1065972339

        • //மேலும் மாதம் ரூ 1.2 லட்சம் செலவில் ஒவ்வொரு ரத்தப் புற்று நோயாளியும் உங்கள் உழைப்பை மதிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அவர் உயிருக்கு மதிப்பில்லை..?!//

          Patient has a hope , because some body have a medicine. What if nobody have the solution,
          All the poor or rich would have died anyway..

          And as usual, we Indians will blame it on Karma and move on

          And we as a society will never invest on research but want all the solution.

          I too wish we help the needy. But not by stealing…

          • Who is stealing is the question.. Spending 10 million and a few years for a research and harvesting in Billions for more years may be a business for luxury items.. but not for life saving drugs.. it is not just stealing, its a robbery involving deaths of not-so-rich patients in thousands.. Besides legality please look into atleast the so called business ethics, if not morality (which has no meaning in such profit making spree)..

    • // Acetomenophen தயாரிக்கும் குறிப்பிட முறைக்கு வேண்டுமானால் காப்புரிமை தரலாம். Only methods can be patented, not facts.//

      That is absurd again. Nothing should be patented. Only it can be compensated. If a person/org spends 10 million on a research and takes 5 years to develop a drug/software or any other crap, then they deserve 10 million + a very good salary for 5 years (say another 10 million). But there ends their gain. After that the invention/discovery must be in public hand.

      Bro, you have mentioned that you have got some patent for your company. This is bad. you should have released it to public in some pseudonym!

      • //Bro, you have mentioned that you have got some patent for your company. This is bad. you should have released it to public in some pseudonym! //

        ஒன்னும் கண்டுகாதீங்க. எல்லாம் வெறும் குப்பை. பத்து பைசா பிரயோஜனம் கெடையாது. நான் மேலே சொன்ன சுண்டல் மேட்டர் இது. இப்போல்லாம் முடிஞ்ச அளவு டிமிக்கி கொடுத்துட்டு இருக்கேன். இருந்தாலும் சம்பளத்துக்காக இப்படி செய்யறது பாவம்தான். இதுக்கு கருட புராணத்துல ஏதாவது தண்டனை சொல்லியிருக்கான்னு பாக்கணும்.

        • first, we should be loyal to the money we get as salary. Your point is correct. But let us not give them any value add. All we do is just for 10% of what they will pay our American counterparts. Almost all my new ideas will be released by an unknown blogger in public domain before they got implemented in our project the very next day! ennaikku maattaporenu theriyal! 😉

  6. காப்புரிமை பற்றிய வெங்கடெசனின் கருத்துக்களே ஏற்புடையது! சமீபதில் மஞ்சளின் மருத்துவ குணஙகளை அமெரிக்கர்கள் காப்புரிமை செய்துவிட்டார்கள் என்று சலசலப்பு ஏற்பட்டதே! அப்படி செய்ய முடியுமா? காபி ரைட் க்கு எதிராக காப்பி லெப்ட் என்று ஒரு இயக்கம் , கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

    • மஞ்சளின் மருத்துவ குணங்களுக்கு காப்புரிமை வழங்கினார்கள். பிறகு நீதிமன்ற வழக்கு மூலம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் பொதுநலம் என்ற அடிப்படையில் ரத்து செய்யப்படவில்லை. Prior Art என்ற விதியின் கீழ் இது நடந்தது. நீங்கள் ஒரு விஷயத்திற்காக காப்புரிமை வாங்கி உள்ளீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இதே விஷயம் இதற்கு முன்பே உலகில் யாரோ ஒருவருக்கு தெரியும் என நிரூபிக்க முடிந்தால் காப்புரிமை ரத்தாகிவிடும். அந்த வகையில் மஞ்சளின் மருத்துவ குணங்கள் இந்தியர்களுக்கு (பிற நாட்டினருக்கும்?) ஏற்கனவே தெரியும் என்பதை நிரூபித்து அந்த காப்புரிமையை ரத்து செய்தார்கள்.

      Copyleft என்ற பதத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதே கொள்கையின் அடிப்படையில் செயல்படும் Creative Commons (CC) என்ற அமைப்பு பற்றி பரிச்சயம் உண்டு. இவர்கள் சில licence விதிகளை உருவாக்கியுள்ளார்கள். இந்த விதிகளின் கீழ் ஒருவர் தான் உருவாக்கிய எந்த ஆவணத்தையும் வெளியிடலாம் (கதை, கட்டுரை, நூல், ஓவியம் போல). இப்படி வெளியிடப்படும் படைப்புகள் “free to distribute” என கருதப்படும். அதாவது இந்த படைப்புகளை யார் வேண்டுமானாலும் பிரதி எடுத்து விநியோகிக்கலாம். ஆவணத்தை உருவாக்கியவர் அனுமதி பெற தேவையில்லை. இதில் பல்வேறு வகையான விதிகள் உண்டு (உதாரணமாக லாப நோக்கில் பயன் படுத்த அனுமதி உண்டா இல்லையா என்பதை ஆவணத்தை உருவாக்கியவர் குறிப்பிட வழி உள்ளது).

      கணினியியல் தொடர்பான எனது சில ஆராய்ச்சி கட்டுரைகள் CC licence அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன (சுய தம்பட்டம் அடிக்க வாய்ப்பு வழங்கிய அஜாதசத்ரு வாழ்க!) இதெல்லாம் எவனும் சீண்ட மாட்டான். அது வேற விஷயம்.

  7. மிக அருமையான கட்டுரை…தமிழில் மிக அருமையான கட்டுரையாளர்கள் இருப்பதற்கு நீர் ஒரு எடுத்துக்காட்டு….எனக்கு ஆங்கிலமும் , ஜெர்மனும் நன்றாக படிக்க தெரியும்..இது போல் நல்ல கட்டுரை இதுவரை படித்ததில்லை –பின்னூட்டமும் இட்டதில்லை ..மிக்க நன்றி

    • எதாவது புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால்தானே படித்திருக்க முடியும். இணையம் மேய்பவர்களுக்கு இதுவே சிலப்பதிகாரம் தான்

      • ஏழை மக்களுக்கான எதிரி முதலாளித்துவம்தான் என்பதை ராமன் போன்றவர்கள் நிரூபிக்கின்றார்கள். அதாவது பணம் உள்ளவன் உயிர் பிழைத்தூக் கொள்ளலாம் என்பதுதான் ராமனின் வாதம்.

        • @ராசா

          அரிச்சந்திரன் நாடகம் பார்த்து விட்டு “கஷ்ட காலத்தில் மனைவியை விற்கலாம் என புரிந்து கொண்டேன் ” என்றானாம் ஒருவன்.

          முதலாளித்துவம் ஒரு விஞ்ஞானியின் உழைப்பில் முதலீடு செய்து, பல திறமையானவர்கள் ஒருங்கிணைத்து ஒரு பொருளை அல்லது மருந்தை உருவாகுகிறார்கள்.

          இப்படி எல்லோரும் திருடினால் நாளை புதிய மருந்துகள் கண்டுபிடிக்கபடாமல் ஏழைகள் சாகத்தான் செய்வார்கள்.

          உங்கள் வாதப்படி மருந்தே இல்லாமல், எப்படி மருத்துவம் செய்வது என்று தெரியாமல் சாவது நல்லதா ?

          இல்லை வெங்கடேசன் வாதப்படி , மருந்து பூலோகத்தில் எங்கோ உள்ளது . அந்த உண்மையை நோயாளியின் உறவினரே அறிந்து மருந்து கொடுப்பாரோ?

          உழைக்காமல் சிந்திக்காமல் அடுத்தவன் கண்டுபிடிப்பை ஏழைகள் கேட்கிறார்கள் என்று அன்பவிக்க வேண்டும். இலவச (மக்கள் வரிப்பன ) டிவி கிரைண்டர் கூடத்திற்கு வேறென்ன சிந்திக்க முடியும்.

          • ராமன்,

            முதலாளித்துவத்தின் முதலீடு ஆகாயத்தில் இருந்து முதலாளியிடம் கொட்டப்படுவதில்லை. அது ஏழைகளின் உழைப்பில் விளைந்த பயன்மதிப்பு. உழைக்காமல் தின்பவன் முதலாளி. இலவசம் கொடு என்பதனை மக்களா கோரிக்கையாக வைத்தார்கள். இலவச கோரிக்கை வைப்பவன் முதலாளிதான். இந்தியாவில் 205 முதல் 2012 வரையில் முதலாளிகள் பெற்ற வரிச்சலுகை 31,11,169 இலட்சம் கோடி.

            • @ராசா

              // உழைக்காமல் தின்பவன் முதலாளி. இலவச கோரிக்கை வைப்பவன் முதலாளிதான்//

              நன்றாக சொன்னீர்கள் ஐயா ! இப்படி ஒன்றுக்கும் உதவாத முதலாளிகளை 31,11,169 இலட்சம் கோடி வரி சலுகை கொடுத்து நம் நாடு ஏன் ஊக்குவிக்க வேண்டும் . இதிலே பக்கத்துக்கு நாட்டு முதலாளிகளை மன்னிக்கவும் ஒன்றுக்கும் உதவாவர்களை வேறு கூட்டி வர வேண்டும் . எனக்கு புரிய வைத்து என் பித்தம் தீர்ப்ப்ராக !

              • ராமா,

                ஊக்குவிப்ப பிறகு பார்க்கலாம் மக்கள் பணத்த இலவசமா ஆடைய போட்டானுங்களா இல்லையா அத்த சொல்லும். இப்படி ஆடைய போடுவது எந்த தர்ம நியாயத்தின் அடிப்படையில் அய்யா.

      • புத்தகம் என்றால் எந்த மாதிரி ? நீ எழுதிய இளமை கனவுகள் …ராமனும் ரன்கீலாவும் அந்த மாதிரியா…அறிவு கேட்ட _______..நல்லதை பாராட்ட கற்றுக்கொள்

  8. @Raman
    எனது கேள்விகள் இரண்டு வகையானவை. சில சட்டபூர்வமானவை. சில தர்ம-நியாய அடிப்படையிலானவை.

    எனது சட்டப்பூர்வ உதாரணங்களுக்கு பதில் கூறாமல் ஒதுங்கிவிட்டீர்கள். நாளையே நான் Reimann Hypothesis போன்ற ஒரு mathematical theorem நிரூபிக்கிறேன். இந்த உண்மைக்கு காப்புரிமை வாங்கி தருவீர்களா? எனக்கு பணம் கொடுக்காமல் இந்த theorem யாரும் பயன்படுத்தக் கூடாது என்பது என் வாதம். பத்தாவது (அல்லது ஒன்பதாவது?) கிரகம் கண்டுபிடிக்கிறேன். இந்த உண்மைக்கு காப்புரிமை வாங்கித் தருவீர்களா? எனக்கு பணம் கொடுக்காமல் இந்த கிரகத்தை தொலைநோக்கி மூலம் யாரும் பார்க்க கூடாது என்பது என் வாதம். Acetomenophen தலைவலியை நீக்கும் என்ற உண்மைக்கும் மேலே சொன்ன உதாரணங்களுக்கும் என்ன வித்தியாசம்? நேரடி பதில் தாருங்கள். US Patent விதிகளை படித்துப் பாருங்கள். எதை எல்லாம் காப்புரிமை கோர முடியும் என்பதை வரையறை செய்யும் போது எப்படி ஜல்லி அடிக்கிறார்கள் என பாருங்கள்.

    அடுத்து தர்ம-நியாய கேள்விகள். நான் “ஏன் வரி கட்டுகிறோம்” என்று கேட்கவில்லை. தலைக்கு ஆயிரம் ரூபாய் என ஒரே விதமாக இல்லாமல், வருமானத்து தக்க ஏன் வரி கட்ட வேண்டும்? அரசாங்க வசதிகள் அனைவருக்கும் பொது தானே? பின்பு என்னை விட குறைவாக சம்பாத்திப்பவனை விட நான் ஏன் அதிக வரி கட்ட வேண்டும்? நேரடி பதில் தாருங்கள்.

    // யாரோ கண்டுபித்த பின்னர் கொஞ்சமும் லஜ்ஜையின்றி அது அடிப்படை உண்மை அனைவருக்கும் சொந்தம் என்று வெளிப்படையாக திருடுவது //

    எது திருட்டு? இவர்கள் கண்டுபிடித்த உண்மையை நான் பயன்படுத்தினால் திருட்டு என்றால், இவர்கள் முந்தைய அறிவியலாளர்கள் கண்டுபிடித்ததை பயன்படுத்துகிறார்களே, அது திருட்டு இல்லையா? Antibiotics கண்டுபிடித்து பட்டா போட்டு கொள்ளை அடிப்பவர்களை முதலில் Alexander Flemming க்கு பங்கு வைக்க சொல்லுங்கள்.

    Jonas Salk இல்லையென்றால் இன்று “கண்டுபிடிப்பு” செய்து கொள்ளை அடிப்பவர்கள் போலியோ வந்து நொண்டிக்கொண்டிருப்பார்கள். தனது கண்டுபிடிப்புக்கு patent வாங்காதது பற்றி கேள்வி வந்த போது, அவர் சொன்ன பதில் “There is no patent. Could you patent the Sun?” அறிவியல் Jonas Salk போன்ற எனது முப்பாட்டனார்கள் வீட்டு சொத்து ஐயா. விட்டுக் கொடுக்க முடியாது

    // விலையை குறைத்து கொடுங்கள் என்று கேட்பட்து நியாயம்.

    அதில் தானே விஷயமே உள்ளது. கேட்டால் இவர்கள் குறைத்து விடுவார்களா? அதிரடி கொள்ளை அடிப்பதால் தானே இவ்வளவு பேசவேண்டி வந்தது. நியாயமாக விலை வைத்திருந்தால் போனால் போகட்டும் என விட்டிருப்போம் (விட்டிருப்பேன்).

    • \\எது திருட்டு? இவர்கள் கண்டுபிடித்த உண்மையை நான் பயன்படுத்தினால் திருட்டு என்றால், இவர்கள் முந்தைய அறிவியலாளர்கள் கண்டுபிடித்ததை பயன்படுத்துகிறார்களே, அது திருட்டு இல்லையா? Antibiotics கண்டுபிடித்து பட்டா போட்டு கொள்ளை அடிப்பவர்களை முதலில் Alexander Flemming க்கு பங்கு வைக்க சொல்லுங்கள்.//

      நல்லா சொன்னீங்க வெங்கடேசன்.நன்றி.

      ராமன் மாதிரி ஆளுங்க முதல்ல தாங்கள் படித்த பள்ளி கல்லூரிக்கும் பாடம் நடத்துன வாத்தியார்களுக்கும் தங்கள் வருமானத்தில் ஒரு பங்கு போட்டு குடுத்துட்டு வந்து காப்புரிமை அறிவுசார் சொத்துரிமை பத்தி மட்டைக்கு ரெண்டு கீத்தா நியாயம் பொளக்கட்டும்.

  9. @Raman
    // எனது கேள்விகள் இரண்டு வகையானவை. சில சட்டபூர்வமானவை. சில தர்ம-நியாய அடிப்படையிலானவை.//

    எனது பதில்கள் தர்ம-நியாய அடிப்படையிலானவை.
    //
    Acetomenophen தலைவலியை நீக்கும் என்ற உண்மைக்கும் மேலே சொன்ன உதாரணங்களுக்கு//

    இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறிவிட்டேன். எனது முந்தைய பதில்களை படித்து புரிந்து கொள்ள ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்

    //
    அடுத்து தர்ம-நியாய கேள்விகள். நான் “ஏன் வரி கட்டுகிறோம்” என்று கேட்கவில்லை. தலைக்கு ஆயிரம் ரூபாய் என ஒரே விதமாக இல்லாமல், வருமானத்து தக்க ஏன் வரி கட்ட வேண்டும்? அரசாங்க வசதிகள் அனைவருக்கும் பொது தானே? பின்பு என்னை விட குறைவாக சம்பாத்திப்பவனை விட நான் ஏன் அதிக வரி கட்ட வேண்டும்? நேரடி பதில் தாருங்கள்.
    //
    common sense என்பதை பயன்படுத்துங்கள். You should also learn how govt works,and how it steals money from middle class in the name of tax.

    //
    எது திருட்டு? இவர்கள் கண்டுபிடித்த உண்மையை நான் பயன்படுத்தினால் திருட்டு என்றால், இவர்கள் முந்தைய அறிவியலாளர்கள் கண்டுபிடித்ததை பயன்படுத்துகிறார்களே, அது திருட்டு இல்லையா? //

    It is an iterative improvement. I explained using wheel , bike example. Nobody stopped you or your company or your government to not use the same facts and come up with the product.

    You sir, a greedy moron.

    //Jonas Salk இல்லையென்றால் இன்று “கண்டுபிடிப்பு” செய்து கொள்ளை அடிப்பவர்கள் போலியோ வந்து நொண்டிக்கொண்டிருப்பார்கள். தனது கண்டுபிடிப்புக்கு patent வாங்காதது பற்றி கேள்வி வந்த போது, அவர் சொன்ன பதில் “There is no patent. Could you patent the Sun?” அறிவியல் Jonas Salk போன்ற எனது முப்பாட்டனார்கள் வீட்டு சொத்து ஐயா. விட்டுக் கொடுக்க முடியாது//

    Who funded his project? He has no idea about how money works.
    His project was funded by non profit organization and they are generous. Without the capitol investment on him no polio vaccine would have been invented

    Scientist need not necessarily know about money like Newton’s investment in SouthWest shipping corp.

    Again nobody has stopped Indian govt to start a research to find the medicine for cancer.
    Well, India can find the cure for cancer and it can give it for free. Call it nobody can patent water…

    //
    அதில் தானே விஷயமே உள்ளது. கேட்டால் இவர்கள் குறைத்து விடுவார்களா? அதிரடி கொள்ளை அடிப்பதால் தானே இவ்வளவு பேசவேண்டி வந்தது. நியாயமாக விலை வைத்திருந்தால் போனால் போகட்டும் என விட்டிருப்போம் (விட்டிருப்பேன்). //

    Why should they give their product for free? Investors will bring down the company.And there will be nobody to invent. ( in your words to realize the truth )

    Say your prayer..

    I am a poor Tamilan, And I need everything free.
    I need food for free.
    I need entertainment for free.
    I need medicine for free.
    I need shelter for free.

    I the poor of the India , have the birth right to every invention, every product every resource
    and I dont care how it is produced, manufactured and put together

    Amen

  10. @Raman
    என்ன சார் நீங்க. நான் கேட்கற கேள்விக்கு தெளிவா ஒண்ணும் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க.

    // இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறிவிட்டேன். எனது முந்தைய பதில்களை படித்து புரிந்து கொள்ள ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் //

    எதை சொல்றீங்க? Discovery vs invention பத்தி அதுவா? இந்த டகல்பாஜி வேலை வேணாம்.
    Please try to answer with the precision of a surgeon, nah mathematecian. Consider the following three statments:
    1. Acetomenophen cures headache.
    2. There exists a tenth planet in the Kuiper belt.
    3. All the non-trivial zeros of the Riemann zeta function have their real part 1/2.
    What exactly is the difference in the nature of these statements? Why do you call the first one as invention and the latter two as discovery? Why is that the first one is patentable and the latter two are not?

    // common sense என்பதை பயன்படுத்துங்கள்.

    என்ன சார் காமன் சென்ஸ் அப்படின்னு சொல்லிட்டீங்க? ஒரு மாச மருந்து ஒரு லட்சம் அப்படின்னு விக்கறான். அதுக்கு வக்காலத்து வாங்கறீங்க. என்னைய மட்டும் காமன் சென்ஸ் யூஸ் பண்ண சொல்றீங்க. தலைக்கு ஒரு ஒட்டு. அவனும் அரசாங்க ரயில்ல போலாம். நானும் போலாம். அவனும் ரோட்டுல போலாம். நானும் போலாம். அப்புறம் தலைக்கு இவ்வளோன்னு வரி கட்டறது தான் சரி. அதிகம் சம்பதாக்கிரதுனால நான் ஏன் அதிக வரி கட்டணும்?

    // It is an iterative improvement.

    நான் என்ன சொல்றேன்னா, பல விஞ்ஞானிகள் காப்புரிமை வாங்காம தங்களோட கண்டுபிடிப்பை மக்களுக்கு இலவசமா கொடுத்துட்டாங்க. இதை பயன்படுத்தி ஒன்ன கண்டுபிடிச்சா அதையும் இலவசமா திருப்பி கொடுக்கணும். இல்லை நான் காப்புரிமை வாங்குவேன்னா அப்போ இதுக்கு முன்னால காப்புரிமை வாங்கின கண்டுபிடிப்பை மட்டுமே பயன்படுத்தணும்.

    // Why should they give their product for free?

    இவங்க பொருளை இலவசமா கேக்கலை. வெலையை குறைன்னு கூட சொல்லல. இந்த மருந்து என்னுது, நான் மட்டுந்தான் தயாரிப்பேன்னு சொல்றது கூடாது. “இந்த கட்டடம் என்னுது” அப்படின்னு குதிக்காதீங்க. அவ்வளவு தான்.

    If I belong to your league, my prayer would go as follows.

    They gave me free education
    From claas one to college
    When Mycobacterium struck me
    They gave me free medicine
    I stood on the shoulders of
    Many a giants
    From Euclid to Einstein
    From von Neumann to Noam Nisan
    Today I am inventor
    Or a discoverer
    Or a incoverer
    Or a disventor
    Or whatever crap that is
    I found a drug
    I will only produce it
    And sell it at sky-high prices
    No! No one else can produce it
    Because the drug belongs to me
    Om Shanthi, Shanti, Shanti

    // You sir, a greedy moron

    moron – முற்றிலும் உண்மை. என்னையப் பத்தி இவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.

  11. @Venkatesan

    நீங்கள் நல்லவர் தான் . ஏழைகளுக்கு உதவும் பாங்காளார்தான் .

    எனது கேள்வி எல்லாம் , நீங்களே என் மருந்து கண்டு பிடிக்க கூடாது ? அடுத்தவன் கண்டு பிடித்ததை சும்மா கொடுக்க சொல்ல நீங்கள் யார்

    அதாவது ஒரு பிச்சைக்காரன் உன் வீட்டின் முன்னால் கை ஏண்துகிறான். நீ உழைக்க வில்லை.
    உன்னிடம் தானியம் இல்லை , ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் உழைத்து விவ்சாயம் செய்து தானியம் வைத்து இருக்கிறான் .

    இப்போது நீ பக்கத்து வீட்டு
    காரணிடம் பிச்சைக்காரனுக்கு உணவு கொடுக்க சொல்கிறாய் . அவன் மறுக்கிறான் . நீ அவனை ஏழைகளின் பசி அறியாதவன் என திட்டுகிறாய்

    இவன் பட்டான் கண்டு பிடித்த விவ்சாயத்தை வைத்து தானே இவன் தானியம் செய்தான் அது அனைவருக்கும் பொது என்று ஏகதியம் பேசுகின்றாய்

    இதற்கு பிச்சைக்காரர்கள் எரிமலையாய் (?) கைதத்டுகிறார்கள்

    • நியாய உணர்வு அற்ற மனசாட்சி கொண்ட ராமன் என்கிற இரக்கமற்ற அரக்கனுக்கு,

      மருந்துகளின் மீதான காப்புரிமை கூடாது என்போரை பிச்சைக்காரர்கள் திருடர்கள் என்று திட்டிக் குமிக்கும் யோக்கியரே,உண்மையில் திருடர்கள் யார் அந்த திருட்டு பயல்கள வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக இங்கு வந்து வாலாட்டும் எச்சக்கலைகள் யார் பாக்கலாமா

      ”அறிவாளியே” அறிவியல் அறிவு என்பது விஞ்ஞானிகள் வீட்டு கொல்லைல வெளையுற கீரைக்கட்டுன்னு நெனச்சியா.அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித குலம் சிறுக சிறுக சேகரித்த செல்வம்.முதலில் அறிவ ஒருவரிடம் இருந்து மற்றவர் ஒருவருக்கு கொண்டு செல்லும் மொழியை யார் உருவாக்கியது.அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மனித குழு உருவாக்கினது.அதுக்கு patent right போட்டு காசு கொடுக்க முடியுமா உன்னால.

      காப்புரிமை பண்ணக்கூடிய ஒரு மருந்த கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர் எல்.கே.ஜி.லேர்ந்து யுனிவேர்சிட்டி வரைக்கும் படிச்ச படிப்பு இல்லேன்னா அவரால அத கண்டுபிடிக்க முடிந்திருக்குமா.அந்த படிப்புக்கு patent right போட்டு காசு கொடுக்க முடியுமா உன்னால.

      அந்த ஆராய்ச்சிக்கு தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்குல செலவழிக்குதுன்னு வக்காலத்து வாங்குறதுக்கு முன்ன அந்த பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருதுன்னு யோசுச்சு பாருங்கய்யா.அவை விதிவிலக்கின்றி பப்ளிக் லிமிட்டட் கம்பனியாத்தான் இருக்கின்றன.பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட மூலதனத்தில் நடக்கும் அந்த கம்பனிகள் அது போதாதென்று வங்கிகளிடம் இருந்தும் கோடிக்கணக்கில் கடன் வாங்குகின்றன.ஒருவேளை ஆராய்ச்சிகள் தோல்வி அடைந்து நஷ்டம் ஏற்பட்டால் அந்த கம்பனி முதலாளிகளுக்கு ஒரு ஹேரும் போகப்போவதில்லை.நஷ்டத்தை பூரா வங்கிகள் மற்றும் பொதுமக்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.ஆகவே அந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட எவன் ஒருவனின் அப்பன் வீட்டு காசிலும் நடக்கவில்லை.பொதுமக்களின் பணத்தில்தான் அந்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

      அந்த ஆராய்ச்சிகளின் பலன்கள் கோடிக்கணக்கில் எனக்கு வேண்டும் என்று சொல்வதற்கும் அப்படி பலன் தர முடியாதென்றால் மக்களின் உயிரையே காவு கேட்பதறகும் எவனுக்கும் உரிமையில்லை.

      அப்படி சொல்பவனை விட,அவனுக்கு ஜால்ரா போட்டு நக்கிப் பிழைக்கும் அற்பனை விட அயோக்கியன் இந்த உலகில் வேறு யாரும் இல்லை.

      • உன்னிடமும் மொழி இருந்தது . நோவர்டிஸ் இடமும் மொழி இருந்தது
        உன்னாட்டிடமும் பணம் இருந்தது . நோவர்டிஸ் இடமும்
        உன்னிடமும் கற்றவர்கள் இருந்தார்கள் . நோவர்டிஸ் இடமும்
        நீ தூங்கி கொண்டு இருந்தாய் . அவன் உழைத்தான் .
        அவன் பொருளை களவாட நினகின்றாய் . அவன காக்க துடிக்கின்றான்

  12. @Raman
    இந்த விவாதம் முடியாது. அனுமார் வால் மாதிரி போயிட்டே இருக்கும். நீங்களும் நானும் சொன்னதையே வேற வேற விதமா திரும்ப திரும்ப சொல்லிட்டு இருப்போம்.

    நீங்க என்ன சொல்றீங்கன்னா, வீடு, வாசல் மாதிரி “கண்டுபிடிப்பு” ஒரு சொத்து. அதை ஆட்டைய போட கூடாது.

    நான் மூணு விஷயம் சொல்றேன்.

    1. அறிவியல் விதிகள் பொருள்கள் அல்ல. They are not commodities. அவை அதையும் தாண்டி புனிதமானவை. எனவே முதலில் கண்டுபிடித்தான் என்பதற்காக ஒருவனுக்கு சொந்தமாகி விடாது. I hold scientific facts with high esteem and associate the greatest sanctity with them that I cannot digest the concept of someone owning them.

    2. நான் ரெண்டு பொருள சேத்து போட்டு ஒரு பொருள் உருவாக்கறேன்னு வெச்சுக்குங்க. உதாரணமா, அரிசியையும் உளுந்தையும் சேத்து தோசை சுடறேன். மொதல்ல அதுக்கு அரிசி, உளுந்து ரெண்டும் வெலை கொடுத்து வாங்கணும். அப்படி வெலை கொடுத்து வாங்கி தோசை சுட்டா, அதை வெலை வெச்சு விக்கறது நியாயம். இப்போ பழைய கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி ஒன்னு புதுசா கண்டுபிடிக்கறேன்னு வெச்சுக்குவோம். இந்த பழைய கண்டுபிடிப்புகளுக்கு நான் காசு ஒன்னும் குடுக்கலை. இலவசமா கெடச்சுது. அப்போ தோசையும் இலவசமா திருப்பி குடுக்கறது தான் நியாயம்.

    3. அப்படியே இந்த கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கொடுத்தாலும், அதை வெச்சிருக்கிறவன் நியாமா நடந்துக்கணும். இப்படி ஒரு மாச மருந்து ஒரு லட்சம் ரூபாய் அப்படின்னு கொள்ளை அடிக்க கூடாது. இப்படியே போனா அடுத்து இன்னொருத்தன் sadist வேலைய ஆரம்பிப்பான். என் மருந்தை நான் விக்கவே மாட்டேன். எல்லாரும் சாகட்டும். எனக்கு அதுதான் இன்பம் அப்படின்னுவான். ஆக காப்புரிமை கொடுத்தாலும், அதை வெச்சிருக்கறவன் நியாயமா நடக்கற வரையிலும்தான் மரியாதை கொடுக்க முடியும்.

    ராமன், என் தரப்புல மேலே சொன்ன மூணு தான் சொல்ல விரும்பறேன். இதையே மாத்தி மாத்தி சொல்லி அரைச்ச மாவையே அரைக்க விரும்பல. இதோட நிறுத்திக்கறேன்.

    உங்களுக்கு வேற வேற ஏதாவது சொல்லனும்னா தாராளமா சொல்லுங்க. இல்லன்னா, வாங்க ஒரு கப் காபி சாப்பிடலாம் 🙂

  13. @Venkatesan

    உன்னிடமும் மொழி இருந்தது . நோவர்டிஸ் இடமும் மொழி இருந்தது
    உன்னாட்டிடமும் பணம் இருந்தது . நோவர்டிஸ் இடமும்
    உன்னிடமும் கற்றவர்கள் இருந்தார்கள் . நோவர்டிஸ் இடமும்
    உண்முனாலும் அதே அறிவியல் உண்மைகள் இருந்தன . நோவர்டிஸ் முன்னாலும்
    நீ தூங்கி கொண்டு இருந்தாய் . அவன் உழைத்தான் .
    அவன் பொருளை களவாட நினகின்றாய் . அவன காக்க துடிக்கின்றான்

    Period

  14. @Venkatesan

    //அப்படி வெலை கொடுத்து வாங்கி தோசை சுட்டா, அதை வெலை வெச்சு விக்கறது நியாயம்.//

    இலவசாமாக இறைவன் கொடுத்த தண்ணீரை வைத்து, மண்புழு போன்ற நுனுயிரிகள் செய்த உரம் கொண்டு , இலவசமாக கிடைத்த சூரிய சக்தி கொண்டு , இலவசமாய் கிடைத்த காற்றை கொண்டு விவசாயம் செய்த விவசாயிகள் , தங்கள் பொருளுக்கு விலை வைக்கலாமா ?

    • விலை வைக்கலாம் ராமா. விவசாயத்த நாந்தேன் கண்டுபிடிச்சேன் அடுத்தவன் விவசாயம் செய்யக்கூடாதுன்னு சொல்லக்கூடாது, எனக்கு ராயல்டி கொடுக்கனும்னு பேசக்கூடாது. அடிமட்டக் கூலி பெறுபவனும் வாங்கும் திறனில் அந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

      • விவசாயி உழைத்து தானியத்தை கொண்டுவந்தால் , உழைக்காத பிச்சைகாரர்கள் எல்லாம் சேர்ந்து விலை நிர்ணயம் செய்வீர்கள் . பிரமாதம்!

  15. முடித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாலும், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

    ரத்தப் புற்று நோய்க்கு நோவார்டிஸ் மருந்து கண்டுபிடித்தது. நல்லது. ரத்தம் பற்றிய அடிப்படை உண்மை “Blood Circulates” என்பது. இதை முதலில் உணர்ந்தவன் William Harvey. இந்த உண்மைக்கு அவன் காப்புரிமை வாங்கவில்லை. அதை சமுதாய சொத்தாக்கி விட்டான். இந்த உண்மையை பயன்படுத்திய நோவார்டிஸ் சமுதாயத்துக்கு எதையும் திருப்பி தரவில்லை. சமுதாய சொத்தை கொள்ளை அடித்துவிட்டது. இதற்கு எதிர்வினையாக சமுதாயம் நோவார்டிஸ் “சொத்தை” கொள்ளை அடித்தது. தானிக்கு தீனி சரியாகி விட்டது.

    Period.

  16. //இந்த உண்மையை பயன்படுத்திய நோவார்டிஸ்//

    அந்த உண்மையை நீங்கள் ஏன் பயன்படுத்தவில்லை என்று தானே திரும்ப திரும்ப கேட்கிறேன். நீங்கள் ஏன் மருந்து கண்டுபிடிக்க வில்லை. நீங்கள் ஒரு வெட்டி சோம்பேறி கூட்டம். அடுத்தவன் உழைப்ப திருடம் அயோக்கிய கூட்டம்.

    • அறிவியல் உண்மைகள் கண்டுபிடுப்பவர் “சொத்து” என்றால், ஹார்வியின் கண்டுபிடிப்பு அவரது சொத்து. அதை அவர் காப்புரிமை கோராமல் சமுதாயத்துக்கு எழுதி வைத்து விட்டார். இதே போல அரசு நிறுவனங்களில் செய்யப்படும் கண்டுபிடுப்புகளும் சமுதாய “சொத்து”. இதை பயன்படுத்த நோவார்டிஸ் பணம் செலுத்த வேண்டும். அப்படி செய்யாமல் சமுதாய “சொத்தை” திருடி விட்டது. இதை சொல்லும் போது, “நீ ஏன் இந்த சொத்தை பயன்படுத்த வில்லை?” என்று கேட்பது அர்த்தமற்றது.

      ரயில் என்பது பொது சொத்து. இதை பயன்படுத்துபவன் டிக்கெட் வாங்க வேண்டும். பொது சொத்து தானே என்று ஓசியில போக கூடாது. “ஏண்டா ஓசில போற?” அப்படின்னு கேட்டா, “நீ ஏன் ஓசில போகல?” என்றா கேள்வி கேட்பீர்கள்?

      முந்தைய கண்டுபிடிப்புகளான சமுதாய “சொத்தை”, சமுதாயத்துக்கு எதையும் திருப்பி தராமல் பயன்படுத்தும் நோவார்டிஸ் தான் மிகப் பெரிய திருடன்.

    • ராமன்,

      வெட்டி சோம்பேறிக் கூட்டம், உழைப்பைத் திருடும் அயோக்கியக் கூட்டம் என்று யாரைச் சொல்கிறீர்கள்..?! இந்தியர்களையா..?!

      இந்திய மருந்துக் கம்பேனிகள் ஆராய்சிக்கு பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு மருந்து கண்டுபிடித்து அதற்கு இதே அளவு விலை வைத்து கொள்ளை அடிக்கலாமா.. அடிக்ககூடாதா..?

      கொள்ளை அடிக்கக் கூடாது என்றால், பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத்தான் ஆதரவாகப் பேசுகிறீர்களா..?!

      கொள்ளையடிக்கலாம் என்றால் உழைக்காமல் திருடும் அயோக்கியக் கூட்டம் என்று யாரைச் சொல்கிறீர்கள்.. அரசாங்கத்தையா..?! அந்தளவு விலை கொடுக்க இயலாத மக்களையா..?!

      அரசாங்கம் இந்த ஆராய்சிக்களுக்கு நிதியுதவியும் வசதியும் செய்யவேண்டும் என்றால், நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்கள்..?!! மக்களைப் பற்றி கவலைப் படாமல் நாட்டின் வளங்களையும், உற்பத்தி/சேவை வசதிகளையும் கூறுபோட்டு உள்நாட்டு/பன்னாட்டு முதாலாளிகளுக்கு படைத்துக் கொண்டிருக்கும் காங்கிரசு, பி.ஜே.பி, மூன்றாவது அணிகள்(?) இவற்றைச் செய்து மருந்துக் கம்பேனிகளின் லாபத்தில் கை வைக்குமா..?! வினவின் வழியில் புரட்சி நடத்தி சோசலிச அரசை ஏற்படுத்துங்கள் என்கிறீர்களா..?!

      இந்திய மருந்துக் கம்பேனிகளும், அரசும் செய்யாவிட்டால் என்ன, மீதமிருக்கும் மக்கள் காசு சேர்த்து ஆராய்சி செய்து மருந்து கண்டுபிடியுங்கள் என்கிறீர்களா..? எந்த ஆராய்சியையும் செய்யும் வசதியில்லாத மூன்றாம் உலக நாடுகளுக்கு, குறிப்பாக ஆப்ரிக்க மக்களுக்கு ‘தங்கபஸ்மம்’ சாப்பிடும் உரிமையில்லை என்கிறீர்களா..?!!

      • @அம்பி

        //இந்திய மருந்துக் கம்பேனிகள் ஆராய்சிக்கு பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு மருந்து கண்டுபிடித்து அதற்கு இதே அளவு விலை வைத்து கொள்ளை அடிக்கலாமா.. அடிக்ககூடாதா..?//

        Thought of fixing the price for the product created by somebody else itself is not right and corrupted. Investors of the company have to decide what todo with their creation.
        To make it free or charge it.

        And market forces will decide if the product is worthy for the price or not

        //கொள்ளையடிக்கலாம் என்றால் உழைக்காமல் திருடும் அயோக்கியக் கூட்டம் என்று யாரைச் சொல்கிறீர்கள்.. அரசாங்கத்தையா..?! அந்தளவு விலை கொடுக்க இயலாத மக்களையா..?!//

        Both are guilty. If Indian Govt wants to help the poor, they should have initiated research and developed the product.

        People are guilty because they dint chose the Govt which will initiate the research.They voted based on caste,religion and freebies. They have to bear the result of their mistakes.

        //அரசாங்கம் இந்த ஆராய்சிக்களுக்கு நிதியுதவியும் வசதியும் செய்யவேண்டும் என்றால், நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்கள்..?!! மக்களைப் பற்றி கவலைப் படாமல் நாட்டின் வளங்களையும், உற்பத்தி/சேவை வசதிகளையும் கூறுபோட்டு உள்நாட்டு/பன்னாட்டு முதாலாளிகளுக்கு படைத்துக் கொண்டிருக்கும் காங்கிரசு, பி.ஜே.பி, மூன்றாவது அணிகள்(?) இவற்றைச் செய்து மருந்துக் கம்பேனிகளின் லாபத்தில் கை வைக்குமா..?! //

        They feel they are not liable to people because they can buy vote.
        Elected member feels loyal to the party head and not for the people because of the peoples voting pattern.

        //வினவின் வழியில் புரட்சி நடத்தி சோசலிச அரசை ஏற்படுத்துங்கள் என்கிறீர்களா..?!//

        Socialism is a disaster. People with ideas have to lick the boots of Govt to start a company and create a product.

        //இந்திய மருந்துக் கம்பேனிகளும், அரசும் செய்யாவிட்டால் என்ன, மீதமிருக்கும் மக்கள் காசு சேர்த்து ஆராய்சி செய்து மருந்து கண்டுபிடியுங்கள் என்கிறீர்களா..? //

        It is your opinion

        எந்த ஆராய்சியையும் செய்யும் வசதியில்லாத மூன்றாம் உலக நாடுகளுக்கு, குறிப்பாக ஆப்ரிக்க மக்களுக்கு ‘தங்கபஸ்மம்’ சாப்பிடும் உரிமையில்லை என்கிறீர்களா..?!!

        Nothing is birth right. If they don’t farm and produce the food, they have to perish.
        If you dont invent a Tank, somebody will. Babar came with that invention.
        If you dont invent a Gun,somebody will. British came with and ruled you.
        If you simply eat,poop and sleep, You invite your enemies to rule you

        http://whynationsfail.com/

        • // Thought of fixing the price for the product created by somebody else itself is not right and corrupted. Investors of the company have to decide what todo with their creation.
          To make it free or charge it.

          And market forces will decide if the product is worthy for the price or not //

          ஒரு பொருளை உருவாக்கியவர்கள் விலையை நிர்ணயிக்கட்டும், சந்தையில் போட்டியில்லாவிட்டால் (எப்படி இருக்கும்..?! காப்புரிமை என்ற பெயரில் பிற ஆராய்சியாளர்களின் வழியில் துண்டைப் போட்டு இடம் பிடித்திருக்கிறீர்களே..) எவ்வளவு அதிகமாக வேண்டுமானாலும் விலை நிர்ணயித்துக் கொள்ளாலாம், வாங்க முடிந்தவர்கள் வாங்கலாம், முடியாதவர்கள் சாகலாம்..?!

          // Both are guilty. If Indian Govt wants to help the poor, they should have initiated research and developed the product.

          People are guilty because they dint chose the Govt which will initiate the research.They voted based on caste,religion and freebies. They have to bear the result of their mistakes.//

          சந்தையில் தேர்ந்தெடுத்து விருப்பப்பட்ட அரசாங்கங்களை வாங்க முடியும் என்பது போல் பேசுகிறீர்கள்.. ஆட்சிக்கு வரும் எல்லா அரசுகளுமே எப்படி இருக்கும் என்று முந்தைய பதிவிலே கூறியிருக்கிறேன்.. ஆக, மக்கள் சரியான அரசை தேர்ந்தெடுக்காததால் சாக வேண்டும் என்றால், அந்த மக்கள் உயிர் வாழ எந்த ஜனநாயக அரசையும் நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.. அந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரியே.. உடனடி முதல் நடவடிக்கை, காப்புரிமை என்ற பெயரில் நடக்கும் கொள்ளையை நிறுத்துவது.. அடுத்தது, புதிய மருந்துகளை இந்தியாவே கண்டுபிப்பதற்கு அரசை நடவடிக்கை எடுக்க வைப்பது.. ஓ.கே..யா..?

          // They feel they are not liable to people because they can buy vote.
          Elected member feels loyal to the party head and not for the people because of the peoples voting pattern. //

          விலையை நிர்ணயிக்கும், போது மேற்படி நிலவரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதிகமாக நிர்ணயிக்கலாம் என்ற ரீதியில் நியாயப்படுத்த முயல்கிறீர்கள்..

          // Socialism is a disaster. People with ideas have to lick the boots of Govt to start a company and create a product. //

          till then people without money have to lick your boots for their survival..

          // Nothing is birth right. If they don’t farm and produce the food, they have to perish.
          If you dont invent a Tank, somebody will. Babar came with that invention.
          If you dont invent a Gun,somebody will. British came with and ruled you.
          If you simply eat,poop and sleep, You invite your enemies to rule you //

          If you don’t reduce the price, Govt agencies nullify the copy right and issue compulsory licensing.
          If you don’t want to be screwed up, you reduce the price to genuine level..
          If we are going to die for your greediness, we wont hesitate to poop on your copy rights too..

  17. @Venkatesan @Raj @HisFeet

    இலவசம் கேட்கும் ஒருவருடன் உரையாடி அவர்களுடைய மனிதில் என்னதான் ஓடுகிறது என்பதை நான் அறிந்து கொள்ள உதவியாக இருந்தமைக்கு மிக்க நன்றி . உங்களுடைய நேரத்திற்கும் நன்றி.

    ஆக ஒரு கூட்டம் எந்த முயற்சியும் எடுக்காமல், உழைக்காமல், முயற்சி எடுத்து உருவாக்கியவர்களை விமர்சித்து , அவர்களின் உழைப்பை கூசாமல் திருட நினைகிறார்கள்

    இந்த திருட்டை ஏழைகளுக்காக செய்கிறோம் என்று மனதை சமாதானபடுத்தி கொள்கிறார்கள்.

    அவர்களுடைய மனதில் நாம் உழைக்கவில்லை , முயற்சிக்கவில்லை எனபது கிஞ்சித்தும் வருத்தத்தை ஏற்படுத்துவது இல்லை.

    அட அதே உண்மைகள் அவன் முன்னாலும் இருந்தது என் முன்னாலும் இருந்தது, என்னால் ஏன் இதை உருவாக்க முடியவில்லை என்கின்ற கேள்வி அவன் மனதில் எழுவதில்லை. அதை அவன் முன் எழுப்பியபோதும் அதை ஒப்புகொண்டால் தான் சோம்பேறி என்றாகிவிடும், பதிலாக மாற்றானை ஏழைக்கு உதவாத பாவி என்று வசை பாடலாம். கண்டிப்பாக நம் மனது வசை பாடுவதைதான் தேர்வு செய்யும் . அதையே தான் நீங்களும் செய்தீர்கள்

    இது விசித்திரம்தான். ஆனாலும் சமூகத்தின் பத்து ரூபாய் உழைப்பை ஒரு ரூபாய் இட்லி யாக வாங்கி உண்ணும் கூட்டம் தான் இன்றைய நிதர்சனம்.

    இப்படி சோம்பேறிகள் அதிகமாகி சமூகத்தின் உழைப்பை சுரண்ட நினைத்தால் தவறு சுரண்டுவதால் , நமது சமுதாயம் அழிவுப்பாதைக்கு போகிறது.

    நாய் வாலையும் ,இலவச தமிழனையும் திருத்த முடியாது.வருத்ததுடன் முடித்து கொள்கிறேன்.
    உங்களுடைய நேரத்திற்கு நன்றி.

    • திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.கல்வியும் அறிவும் பொது சொத்துன்னு சொல்றோம்.முந்தய கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டுதான் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன என்கிறோம்.ஆகவே கல்வி அறிவை பட்டா போட்டுக் கொண்டது போல் காலத்துக்கும் எனக்கு கப்பம் கட்டு என்று சொல்ல முடியாது என்கிறோம்.இதுக்கெல்லாம் ஒரு வரி கூட பதில் சொல்ல முடியாம அவன் கண்டுபிடுச்சான்.நீ கண்டுபிடிக்கல கப்பம் கட்டுன்னு கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொன்னா அதுல அர்த்தமே இல்ல.

      • கல்வியும் அறிவும் பொது சொத்துன்னு சொல்றோம்.

        yes.

        அடிப்படையாக கொண்டுதான் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன

        Those inventions are private property as somebody has to put skills,hardwork and money to get it

        ஆகவே கல்வி அறிவை பட்டா போட்டுக் கொண்டது போல் காலத்துக்கும் எனக்கு கப்பம் கட்டு என்று சொல்ல முடியாது என்கிறோம்.

        Patent rights have expiry date

        நீ கண்டுபிடிக்கல கப்பம் கட்டுன்னு கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொன்னா அதுல அர்த்தமே இல்ல.

        You are also avoiding to answer the same question why நீ கண்டுபிடிக்கல

        • \\Those inventions are private property as somebody has to put skills,hardwork and money to get it//

          .முந்தய கண்டுபிடிப்புகள் மட்டும் யாருடைய கடின உழைப்பும் திறமையும் செலவும் ஏதுமில்லாமல் வானத்திலிருந்து குதித்தனவா.அந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களின் உழைப்பையும் திறமையையும் பணத்தையும் நீங்கள் திருடுகிறீர்கள் என்றால் அதுவும் உங்கள் வாதப்படி சரிதானே.ஆகவே புதிய கண்டுபிடிப்பு எப்படி அவனது சொத்தாகும்.ஆகவே கல்வியும் அறிவும் பொது சொத்து என்பதே சரியானது.ஏனென்றால் அதுதான் உண்மை அதுதான் நியாயம்.

          \\Patent rights have expiry date//

          சரி.வாதத்தை இப்படி திருத்திக்கொண்டால் உங்களுக்கு ஒ.கே.வா.\\ஆகவே கல்வி அறிவை பட்டா போட்டுக் கொண்டது போல் குறிப்பிட்ட காலத்துக்கு எனக்கு கப்பம் கட்டு என்று சொல்ல முடியாது என்கிறோம்.//

          \\You are also avoiding to answer the same question why நீ கண்டுபிடிக்கல//

          மனித குலத்தின் பொது சொத்தான கல்வியை வைத்துத்தான் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன என்பதால் நான் கண்டுபிடித்தாலும் நீ கண்டுபிடித்தாலும் யார் கண்டுபிடித்தாலும் அது பொது சொத்து என்கிறோம்.ஆனால் நாங்கள் பதில் சொல்லாதது மாதிரி நடிக்க வேண்டாம்.உண்மையிலேயே தூக்கம் வந்தால் தூங்கலாம்.வராத தூக்கத்தை தூங்குவது நல்லால்ல.

          • நாங்கள் தூங்குவோம் , அவர்கள் உழைத்து கண்டு பிடிப்பதெல்லாம் பொது சொத்து . எங்களுக்கும் பங்கு வேண்டும் …? நாங்கள் கண்டு பிடித்த சைபர் வைத்து தான் கம்யூட்டரே இயங்குகின்றது ஹ ஹ ஹா

            நான் உம்மி கொண்டு வரேன், நீ அரிசி கொண்டு வரேன். ஊதி ஊதி திங்கலாம்

            நல்ல காமெடி

            • Ramanஜி,

              நீங்க பொறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் இந்தியாவிலயா, அல்லது வெளிநாட்டிலயா?

              இந்திய மக்கள் உழைக்காம தூங்குறாங்கன்னு சொல்றதுக்கு உங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும். அறிவியல் கண்டுபிடிப்புக்கு உழைக்கலேன்னு சொல்ல வரீங்கன்னா இன்னொரு கேள்வி.

              இந்தியாவில படிச்சவருன்னா ஸ்கூல் வரலாற்று பாடத்திலயாவது ஐரோப்பியருங்க இந்தியாவில காலனி ஆட்சி செய்தது பத்தி படிச்சிருப்பீங்க! அப்போ அவங்க என்ன கொண்டு வந்தாங்க, எதை ஊதி ஊதி தின்னாங்கன்னு சொல்றீங்களா? கிட்டத்தட்ட 200 ஆண்டுகளா கொள்ளை அடிச்சுட்டுப் போனதாலதான், அவன்ட்ட இராணுவ பலம் அதிகம், அத வச்சு டாலர உலகம் முழுக்க மெயின்டெயின் பண்ண முடியுது, அத வச்சு தேவைப்படும் அளவுக்கு பணத்த சுத்த விட முடியுது, அத வச்சுத்தான் ஒங்க ‘விஞ்ஞான’ கண்டுபிடிப்புகள்லாம் உலா வந்து கொண்டு இருக்கு.

              நோவார்டிஸ் மாதிரி நெறைய அரிசி வச்சிருக்கவன் ஏன் நம்ம நாட்டுக்கு வரணும். அவங்க ஊரிலேயே வித்து பொழச்சுக்க வேண்டியதுதானே. நம்ம ஊரில நம்ம சட்டப்படி நாம எப்படியோ வாழ்ந்திட்டு போறோம். இப்படி உழைக்காத சோம்பேறிங்க வாழ்ற நாட்டில அவனுக்கு என்ன வேல?

              • //நீங்க பொறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் இந்தியாவிலயா, அல்லது வெளிநாட்டிலயா? //

                I dont answer personal question

                //இந்திய மக்கள் உழைக்காம தூங்குறாங்கன்னு சொல்றதுக்கு உங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும். //

                Truth hurts and gives you anger. With anger you loos the ability to think

                //றிவியல் கண்டுபிடிப்புக்கு உழைக்கலேன்னு சொல்ல வரீங்கன்னா //

                Yes

                //
                இந்தியாவில படிச்சவருன்னா ஸ்கூல் வரலாற்று பாடத்திலயாவது ஐரோப்பியருங்க இந்தியாவில காலனி ஆட்சி செய்தது பத்தி படிச்சிருப்பீங்க! அப்போ அவங்க என்ன கொண்டு வந்தாங்க, எதை ஊதி ஊதி தின்னாங்கன்னு சொல்றீங்களா?//

                We are sleeping without inventing . No school system, Civil services recruitment system. There is no such thing as system except caste system. Before Europeans, middle eastern people were ruling. We were slaves. what diff does it make if mogul ruled are British ruled?

                //அப்போ அவங்க என்ன கொண்டு வந்தாங்க//
                They brought in system. Education system. Govt system..

                //அவன்ட்ட இராணுவ பலம் அதிகம், அத வச்சு டாலர உலகம் முழுக்க மெயின்டெயின் பண்ண முடியுது, //

                Learn about fiat currency. Dont blabber.
                you tube “Debt as money”
                Read “Collapse of dollar and how to profit from it”

                //அத வச்சுத்தான் ஒங்க ‘விஞ்ஞான’ கண்டுபிடிப்புகள்லாம் உலா வந்து கொண்டு இருக்கு. //

                you cannot invent things with money. Shahjahaan had money..
                Hyderabad Nijam had tons of money..

                /நோவார்டிஸ் மாதிரி நெறைய அரிசி வச்சிருக்கவன் ஏன் நம்ம நாட்டுக்கு வரணும். அவங்க ஊரிலேயே வித்து பொழச்சுக்க வேண்டியதுதானே. நம்ம ஊரில நம்ம சட்டப்படி நாம எப்படியோ வாழ்ந்திட்டு போறோம்.இப்படி உழைக்காத சோம்பேறிங்க வாழ்ற நாட்டில அவனுக்கு என்ன வேல?//

                Ha ha.. You are right. Indian patients are destined to die. Pray god and die

                • //இந்திய மக்கள் உழைக்காம தூங்குறாங்கன்னு சொல்றதுக்கு உங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும்.
                  Truth hurts and gives you anger. With anger you loos the ability to think//

                  பூனை கண்ண மூடிக்கிட்டு ஒலகமே இருண்டிடுச்சுன்னு நெனச்சுக்குமாம். அது போல இவரு இந்தியால எல்லாரும் சோம்பேறியா தூங்குறதாலதான் மருந்தெல்லாம் கண்டுபிடிக்க முடியலன்னு கண்டு பிடிச்சு சொல்லியிருக்காரு. என்னென்ன ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சாரோ (வேணும்னா இந்த கண்டுபிடிப்புக்கும் ஒரு பேடன்ட் எடுத்து வச்சுக்கோங்க, வேற யாராவது பயன்படுத்திற போறாங்க)

                  //றிவியல் கண்டுபிடிப்புக்கு உழைக்கலேன்னு சொல்ல வரீங்கன்னா
                  Yes//

                  ஏன் உழைக்கலைன்னு சொல்றீங்கள? கொழுப்பு? சோம்பல்? அலட்சியம்? அறிவு போதாமை?

                  //
                  இந்தியாவில படிச்சவருன்னா ஸ்கூல் வரலாற்று பாடத்திலயாவது ஐரோப்பியருங்க இந்தியாவில காலனி ஆட்சி செய்தது பத்தி படிச்சிருப்பீங்க! அப்போ அவங்க என்ன கொண்டு வந்தாங்க, எதை ஊதி ஊதி தின்னாங்கன்னு சொல்றீங்களா?

                  We are sleeping without inventing . No school system, Civil services recruitment system. There is no such thing as system except caste system. Before Europeans, middle eastern people were ruling. We were slaves. what diff does it make if mogul ruled are British ruled?//

                  மொகலாய ஆட்சியில யாரும் இந்தியாலேர்ந்து பணத்த பாரசீகத்துக்கு அனுப்பி வைக்கல, அங்கேருந்து பொருள கொண்டு வந்து இந்திய சந்தையில வித்து காசு பார்க்கல. அதுதான் மொகலாய ஆட்சிக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் வித்தியாசம்.

                  //அப்போ அவங்க என்ன கொண்டு வந்தாங்க
                  They broughtin system. Education system. Govt system..//

                  எதுக்கு கொண்டு வந்தாங்க? அதனால இந்தியாவுக்கு என்ன கெடச்சது? அவ்வளவு தாராள மனசோட கொண்டு வந்த சிஸ்டத்தலயும் ஏன் விஞ்ஞான ஆராச்சிங்க நடந்து கண்டுபிடிப்புங்க நடக்கல? சோம்பேறித்தனம்? அறிவு போதாமை? அலட்சியம்? கொழுப்பு?

                  //அவன்ட்ட இராணுவ பலம் அதிகம், அத வச்சு டாலர உலகம் முழுக்க மெயின்டெயின் பண்ண முடியுது,
                  Learn about fiat currency. Dont blabber.
                  you tube “Debt as money”
                  Read “Collapse of dollar and how to profit from it”//

                  நீங்கதான் சொல்லித் தாங்க. இந்தியாலேர்ந்தும் சீனாலேர்ந்தும் ஏற்றுமதி செஞ்சு சம்பாதிச்ச ரிசர்வ் பணத்த ஏன் அமெரிக்காவுக்கே கடனா தராங்க (கடன் பத்திரங்கள்ள முதலீடு செஞ்சு)? அதாவது, அமெரிக்கா காரன் ஒழைக்காம சாப்பிடறதுக்கு ஏன் வழி செஞ்சுகிட்டே இருக்காங்க?

                  //அத வச்சுத்தான் ஒங்க ‘விஞ்ஞான’ கண்டுபிடிப்புகள்லாம் உலா வந்து கொண்டு இருக்கு.
                  you cannot invent things with money. Shahjahaan had money..
                  Hyderabad Nijam had tons of money..//

                  அந்த பணத்த வச்சுத்தான ஒலகத்துல பல நாடுகள்ள இருக்கற அறிவாளிங்கள எல்லாம் டாலர் சம்பளம் தந்து இழுக்கறான்? அந்த பணத்த வச்சுத்தான இந்தியால லட்சக்கணக்கான ஆளுங்கள அவுட் சோர்சிங் மூலமா அவனுக்கு
                  காலு புடிச்சி விட வைக்கிறான். அந்த வசதி எல்லாம் கெடச்சா, நம்ம 1 ரூபா இட்டிலி தமிழனும் கண்டுபிடிப்பான்.

                  /நோவார்டிஸ் மாதிரி நெறைய அரிசி வச்சிருக்கவன் ஏன் நம்ம நாட்டுக்கு வரணும். அவங்க ஊரிலேயே வித்து பொழச்சுக்க வேண்டியதுதானே. நம்ம ஊரில நம்ம சட்டப்படி நாம எப்படியோ வாழ்ந்திட்டு போறோம்.இப்படி உழைக்காத சோம்பேறிங்க வாழ்ற நாட்டில அவனுக்கு என்ன வேல?
                  Ha ha.. You are right. Indian patients are destined to die. Pray god and die//

                  உங்க நோக்கம் புரியுதுji. ஆனா, கேள்விக்கு பதில் சொல்லுங்க, சோம்பேறிங்க, அறிவத்தவனுங்க நெறைஞ்ச இந்தியாவுக்கு நோவார்டிஸ் ஏன வாரான்?அமெரிக்காலேயே வித்து வித்து லாபம் பாக்க வேண்டியதானே?

    • //இலவசம் கேட்கும் ஒருவருடன் உரையாடி அவர்களுடைய மனிதில் என்னதான் ஓடுகிறது என்பதை நான் அறிந்து கொள்ள உதவியாக இருந்தமைக்கு மிக்க நன்றி . உங்களுடைய நேரத்திற்கும் நன்றி.

      ஆக ஒரு கூட்டம் எந்த முயற்சியும் எடுக்காமல், உழைக்காமல், முயற்சி எடுத்து உருவாக்கியவர்களை விமர்சித்து , அவர்களின் உழைப்பை கூசாமல் திருட நினைகிறார்கள்//

      First we are not asking free as in “free beer” but free as in “freedom”. a religious nut like you can’t get a grasp of what freedom is.

      Regarding we didn’t take any action or do anything but want to steal others work… Venki already said that he have some patents. By that you can understand he has stuff. Regarding me, I am one of the committers in some major Android opensource projects and translator in Firefox and some other software teams. We don’t think others are stealing our work when people use Firefox or download our 100% free apps for android(no ads and we don’t collect any personal info too). Whatever we get from society, we give back. Some rich people have it all for themselves.

      //இந்த திருட்டை ஏழைகளுக்காக செய்கிறோம் என்று மனதை சமாதானபடுத்தி கொள்கிறார்கள்.

      அவர்களுடைய மனதில் நாம் உழைக்கவில்லை , முயற்சிக்கவில்லை எனபது கிஞ்சித்தும் வருத்தத்தை ஏற்படுத்துவது இல்லை.//

      we are not stealing for poor. How many corporates use opensource technologies? are they paying us? are all the a*****les using my app are poor? Java, MySQL, Python an Linux/BSD, Apache are the main technologies that power the web today. Are Infosys, TCS, Wipro and CTS paying to use this? Who is stealing actually sir? are these scoundrels poor?

      //அட அதே உண்மைகள் அவன் முன்னாலும் இருந்தது என் முன்னாலும் இருந்தது, என்னால் ஏன் இதை உருவாக்க முடியவில்லை என்கின்ற கேள்வி அவன் மனதில் எழுவதில்லை. அதை அவன் முன் எழுப்பியபோதும் அதை ஒப்புகொண்டால் தான் சோம்பேறி என்றாகிவிடும், பதிலாக மாற்றானை ஏழைக்கு உதவாத பாவி என்று வசை பாடலாம். கண்டிப்பாக நம் மனது வசை பாடுவதைதான் தேர்வு செய்யும் . அதையே தான் நீங்களும் செய்தீர்கள் //

      sir please read what the inventor of Polio vaccine said. If he had copyrighted, will that be possible to eradicate polio in India this soon? Have you read about Newton? He said he is standing on others’ shoulders. Think if Newton has patented calculus.

      //இது விசித்திரம்தான். ஆனாலும் சமூகத்தின் பத்து ரூபாய் உழைப்பை ஒரு ரூபாய் இட்லி யாக வாங்கி உண்ணும் கூட்டம் தான் இன்றைய நிதர்சனம்.

      இப்படி சோம்பேறிகள் அதிகமாகி சமூகத்தின் உழைப்பை சுரண்ட நினைத்தால் தவறு சுரண்டுவதால் , நமது சமுதாயம் அழிவுப்பாதைக்கு போகிறது.

      நாய் வாலையும் ,இலவச தமிழனையும் திருத்த முடியாது.வருத்ததுடன் முடித்து கொள்கிறேன்.
      உங்களுடைய நேரத்திற்கு நன்றி.//

      the reason why people go for 1 rupee idly is because they are exploited by the government in the name of TASMAC. We can close TASMAC and close one rupee idly shops too. This has nothing to do with intellectual freedom that we fight for.

      We are not causing the society to take a destructive path. Those who lock up and monetize the knowledge cause the society to the downfall.

      saga manithanukku uthavaatha arivaaliyaaga iruppathaivida naai vaalagavey en vaazhkkai thodarattum… thanks 🙂

      • whats wrong with one rupee idly shops?

        Providing good,hygeinic food is a great thing,just like the food provided by temples,churches and mosques.

        Tasmac and One rupee idly have no connection.

        Tasmac is bad but the fault is also with us tamils,we have too much love for liquor somehow.

        • @Hari
          I am so sorry that you are not able to understand what is the purpose of govt?

          Economics Rs 1 Idli
          ———————
          Rice
          Dal
          Clean water
          Cooking fuel
          Water distribution
          Fuel transportation
          Rice Dal transportation

          Cooking labor
          Serving plates
          Cleaning and maintaining the restaurant
          ———————————

          Who pays for all these things?

          Tax payers
          ———-
          A person working his ass to make his ends meet, pays income tax even if he doesn’t own house.Say if he pays 30% in tax, in measure of time he has spent Jan,Feb and Mar just working for the Govt.

          His hard work for the govt is distributed to these Rs1 Idly crowd.

          But what is the expectation of the Tax payer?
          1.Proper electricity
          2.Drinking water supply
          3.Proper infrastructure to commute to office
          4.Law and order
          5.Parks to spend in the evening
          6.Play area
          7.Education infrastructure for his kids
          8.Equal opportunity in society to get a job, start/run a business

          What he gets ? Nothing

          Say if Govt provides
          1.Free food
          2.Free clothes
          3.Free shelter
          4.Free Healthcare
          5.Free entertainment
          6.Free utilities

          I will never go to work, Never educate myself

          //Tasmac and One rupee idly have no connection.//
          Morons save money by eating at the cost of tax payers and spend it at Tasmac

          If govt wants to help the poor, these idlys should only be given to poorest of poor.
          Not for all..

          Lets say if Govt creates education infrastructure and free higher education (BE,MBBBS) with free shelter and free food for the poor then the poor will get a chance to come up in their life.

          If you are good person Hari, Nobody stopping you distributing free idlys made with your hard work.

          You have NO RIGHT to ask the govt to spend tax payers(mine) money for these useless projects

          I kindly suggest you read and understand the difference between
          1.Communism
          2.Socialism
          3.Capitalism

          How diff systems have positive/negative effect on the society.
          Every system has its + and -. Understand it

  18. //Regarding me, I am one of the committers in some major Android opensource projects and translator in Firefox and some other software teams. We don’t think others are stealing our work when people use Firefox or download our 100% free apps for android(no ads and we don’t collect any personal info too). //

    great! That is what I am saying. If you want to give something for free BUILD YOURSELF.
    You have no right to ask Microsoft to give its product IE free.

    I repeat here in Bold letters
    BUILD YOURSELF. BUILD YOURSELF.

    //Java, MySQL, Python an Linux/BSD, //

    Relax and think for a minute. The Owners of the products have allowed anyone to use it for free. I understand it is tough for you to grasp.
    Relax and think for a minute again.

    // inventor of Polio vaccine//

    He is just an engineer . The people who funded his research are generous and gave it for free. I am also saying the same thing, why not we research invent and give it for free?

    //the reason why people go for 1 rupee idly is because they are exploited by the government in the name of TASMAC//

    They chose these Govts. they defeated Kamaraj. They refuse to spend time to understand the leader. They deserve it

    • //He is just an engineer . The people who funded his research are generous and gave it for free. I am also saying the same thing, why not we research invent and give it for free?//

      The German drug in question is also developed with a good share of public funding. Now what?

  19. ராமன் போன்றோரின் கனிவான கவனத்திற்கு,

    எந்த ஒரு விசயத்தையும் சமூக நோக்கிலிருந்து பாருங்கள்.ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தும் அறிவியல் அறிஞர் தன சொந்த திறமையால் மட்டும் அத சாதித்து விடுவதில்லை.அந்த சாதனையை மொத்த மனித சமூகமே சேர்ந்துதான் சாத்தியமாக்குகிறது.

    சத்தான உணவு அறிவுக்கு அடிப்படை என்பதை யாரும் மறுக்க முடியாது.அவர் உண்ணும் உணவை முகம் தெரியாத நூற்றுக்கணக்கான விவசாயிகள் விளைவித்து தருகிறார்கள்.அவர் உடுத்தும் ஆடைகளுக்காக கொளுத்தும் வெயிலில் பருத்தி விளைவித்து தருகிறார்கள்.

    அவரது ஆராய்ச்சி கூடத்தை ஒளியூட்டி குளிரூட்டும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து பல ஆயிரம் அடி ஆழத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்கிறார்கள்.அவர் வந்து போகும் சாலைகளை பாலங்களை அவர் குடியிருக்கும் வீட்டை அனைத்து வசதிகளோடும் அமைத்து தந்தவர்கள் அவரை போன்றே கல்வி கற்ற எஞ்சினியர்கள்,ஏலேக்ட்ரிசியன்கள்,பிளம்பர்கள்,ஆசாரிகள் மற்றும் படிக்காத தொழிலாளர்கள்.உழைத்து களைத்த அவரது மூளை ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெற அவர் விடுமுறையை கழிக்க செல்லும் மலைவாச தலங்களை கடற்கரையோர விடுதிகளை பராமரித்து அழகூட்டி வைத்திருப்பவர்கள் ஆயிரம் தொழிலாளர்கள்.

    அவரை பள்ளிகூடத்துக்கு அழைத்து போன வாகன ஓட்டுனர்கள்,பாடம் சொல்லி தந்த ஆசிரியர்கள்,அவர் எள்.கே.ஜி.யில் பேண்டு வைத்தபோது துடைத்து சுத்தம் செய்த ஆயாக்கள்,வகுப்பறையை மைதானத்தை கூட்டி பெருக்கி ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க வைத்த துப்புரவு பணியாளர்கள் என எத்தனையோ பேருக்கு அவர் அறிவாளியானதில் பங்கு உண்டு.

    குழந்தையிலிருந்து இன்று வரை அவர் நோய்வாய் பட்டபோதெல்லாம் அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி அவரை ஆரோக்கியமாக வைத்திருப்பவர்கள் டாக்டர்கள்.அவர் தினசரி நடை பயிற்சி செல்லும் இடங்களை அமைத்து பராமரித்து வைத்திருப்பவர்கள் ஆயிரம் தொழிலாளர்கள்.இந்த ஆரோக்கியம் இன்றி அவரால் ஒரு கண்டுபிடிப்பும் செய்ய முடியாது.

    இதயெல்லாம் அவர்கள் காசு வாங்கி கொண்டுதானே செய்தார்கள் என்று சொல்லி விடாதீர்கள்.பெத்து வளர்த்த பெற்றோரை பாலூட்டி சீராட்டி வளர்த்த பெற்றோரை தாம் வளர்ந்த பிறகு அவர்கள் முதுமை காலத்தில் கூட வைத்திருந்து நோய் நொடிக்கு மருத்துவம் பார்த்து நல்ல சாப்பாட்ட்டை அன்போடு கொடுத்து பராமரித்து வருவதுதான் ஒரு நல்ல பிள்ளைக்கு அடையாளம்.அழகு.இல்ல இல்ல நான் மாசா மாசம் பணம் கட்டிற்றேன்.முதியோர் இல்லத்துல இருந்துக்கோ என்று பெற்றோரை நோவினை செய்வதற்கும் அவர்கள் காசு வாங்கி கொண்டுதானே செய்தார்கள் என்பதற்கும் வித்தியாசம் இல்லை.

    ஆகவே ஒரு மனிதனை பெற்றோர் மட்டும் வளர்த்து ஆளாக்குவதில்லை. மொத்த சமூகமுமே அந்த பணியில் ஈடுபடுகிறது.அந்த சமூகத்திற்கு தன அறிவால் உழைப்பால் உருவாகும் பலனை அர்பணிப்பதே உண்மையான மனிதனுக்கு அழகு.தனது அறிவை கொண்டு அந்த சமூகத்தை சுரண்ட முற்படுவது மனித தன்மையற்ற கடைந்தெடுத்த சுயநலம்.

    • @எரிமலை

      Everything is connected in Human society.
      Every human contributes to society.
      Every contribution is measurable in terms of value.

      As a person who makes salt can claim if he doesn’t contribute, food will not be tasty and people will not be happy. So he keeps the society happy.

      If you equalize everybody’s contribution,society will not progress.
      Everybody will make salt. Why bother to educate yourself?

      When China told nobody owns land and only Govt owns it and all the production of food will be shared you know what happened?
      Did farmers produced more and made shared it with poor people?

      North Korea also implemented the above policy , what happened there?

      People saw no value for contribution as it will be neutralized?
      Talk to the Russians..

      I have worked with Russians ,Chinese,Koreans…

      Your ideal society will exist only in dreams not practical.
      Talking this kind of nonsense will make you feel good that you are a good person, nothing else

  20. Money is definitely the important component,wanting to earn money is not greed but normal sutenance.

    But the whole idea here is,when you are making people serve it is more important to treat them well not just with money.

    They should get good public infrastructure in general,good food,good housing,good public infra like sports,fresh air,trustable nice society,all this is necessary.

  21. A country like Germany or the Nordic countries do well in this regard,

    Frist thing is the sanitation workers,if they have to do their work with all sincereity and pride,they need to be respected and compensated well.

    Their children should get good schooling,good facilities,they should get a decent living instead of languishing in poor urban living conditions.

  22. @செழியன் குமரன்
    //இந்தியாவில படிச்சவருன்னா ஸ்கூல் வரலாற்று பாடத்திலயாவது//

    If you know Tamil history , Can you tell

    1.To honor which king “Kangai konda cholapuram” created.
    2.To conquer the Ganges, which king he defeated
    3.How long he ruled Ganges

    Lets talk about Indian history later

    • //If you know Tamil history , Can you tell

      1.To honor which king “Kangai konda cholapuram” created.
      2.To conquer the Ganges, which king he defeated
      3.How long he ruled Ganges

      Lets talk about Indian history later//

      ஏன் கேக்கறீங்க? அந்த ராசா காலத்துல தமிழருங்க கேன்சர் மருந்து கண்டுபிடிச்சி அமெரிக்கால கொள்ளை வெலைக்கு வித்தாங்களா என்ன? இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்னு சொன்னா நல்லா இருக்கும்.

  23. மகா சனங்களே லக்ஸ் சோப்பிற்கு சன்சில்க் சாம்பு இலவசமாக கொடு என யாராவது கேட்டோமா. டிவி கொடு அப்பத்தான் தேர்தல்ல ஓட்டு போடுவோம்னு கலைஞரிடம் யாராவது மனு போட்டோமா. ஒரு ரூபாய்க்கு இட்லி கொடு என ஜெயாவிடம் கோரிக்கை வைத்தோமா. நாமெல்லாம் இப்படி இலவசமா உண்டு பொழுதுபோக்குவதாகவும் நோவர்டிஸ், ராமன் போன்றவர்கள்தான் தமிழகத்தையே ஏன் உலகத்தையே நெம்பிக் கொண்டிருப்பதாகவும் உருகுகிறார். மானங்கெட்டவர்களே, உன்னுடைய பொருளை விற்பதற்கும் நீ ஆட்சியைப் பிடிப்பதற்கும் எதையாவது மக்களின் தலையில் திணித்துவிட்டு எகத்தாளம் வேறு. விளம்பரத்தாலும், இலவசத்தாலும், நயவஞ்சகத்தாலும், ஊழலினாலும்தான் உன்னுடைய முதலாளித்துவம் உயிர்வாழமுடியும். அது உன்னுடன் ஒட்டிக்கொண்ட விதி. நீ ஆட்டைய போடும் மக்களின் வரிப்பணமான 31 இலட்சம் கோடிகள்தான் நீ கண்டுபிடிப்புகளுக்கு கொடுப்பதாகக் கூறும் நிதிக்கும், நீ வாழ்கின்ற ஆடம்பர வக்கிர வாழ்க்கைக்குமான மூலதனம்.

    நோவர்டிசின் யோக்கியதை
    http://www.indianexpress.com/news/us-sues-novartis-again-says-it-bribed-doctors-for-patents/1108452/
    http://online.wsj.com/article/SB10001424127887324474004578447053898340538.html

    • //மகா சனங்களே லக்ஸ் சோப்பிற்கு சன்சில்க் சாம்பு இலவசமாக கொடு என யாராவது கேட்டோமா. டிவி கொடு அப்பத்தான் தேர்தல்ல ஓட்டு போடுவோம்னு கலைஞரிடம் யாராவது மனு போட்டோமா//

      DMK announced Free TV scheme during election. Soceity had time to think about it and reject it. But still elected DMK approving free TV scheme

      //நாமெல்லாம் இப்படி இலவசமா உண்டு பொழுதுபோக்குவதாகவும் நோவர்டிஸ், ராமன் போன்றவர்கள்தான் தமிழகத்தையே ஏன் உலகத்தையே நெம்பிக் கொண்டிருப்பதாகவும் உருகுகிறார். மானங்கெட்டவர்களே//

      உன்னுடைய ரோசத்தை பொருள் உற்பத்தி கண்டுபிடிப்புகளில் காட்டலாமே

      //உன்னுடைய பொருளை விற்பதற்கும் நீ ஆட்சியைப் பிடிப்பதற்கும் எதையாவது மக்களின் தலையில் திணித்துவிட்டு எகத்தாளம் வேறு//

      பகுத்தறிவு வேண்டும் ஐயா ! மக்கள் தலையில் யாரும் தினக்க வில்லை ,அவர்களாகவே விரும்பி ஏற்று கொண்டார்கள் . சரியாக சிந்திக்க பழகுங்கள்

      //நீ ஆட்டைய போடும் மக்களின் வரிப்பணமான 31 இலட்சம் கோடிகள்தான் நீ கண்டுபிடிப்புகளுக்கு கொடுப்பதாகக் கூறும் நிதிக்கும், நீ வாழ்கின்ற ஆடம்பர வக்கிர வாழ்க்கைக்குமான மூலதனம்.//

      Society simply eats the tax payers money as Rs 1 idly, tv, mixi…

      //நோவர்டிசின் யோக்கியதை//
      End of the day, He made effort to find the medicine and obtained the technology and you dint.

  24. நம்ம நாட்டுல ஒரு மருத்துவ முறையும் இல்லாமல் எல்லா பயலும் செத்துகிட்டு தான் இருந்தானா? ஒவ்வொரு ஊரிலேயும் மருத்துவத்தை குலத்தொழிலாக கொண்ட குடும்பங்கள் இருக்கவில்லையா? இன்னைக்கும் பல நோய்களுக்கு உடனடி பலன் தரும் நாட்டு மருந்துகள் கிடைகிறதுதானே.எந்த மருந்தையாவது தான் மட்டுமே தயாரிக்கவென்று உரிமை வெச்சிருந்தானா?அவனுக்கு தானே பொறந்தோம்?

    • Ha ha! So why Govt is running hospitals with western technology and not with your wonderful family owned medicines are not used.

      Are you serious?

      When was your last visit to the hospitals with நாட்டு மருந்து?
      Will you take your family member there?

      • everybody thronged the siddha medicinal units in all govt hospitals of tamilnadu for nilavembu kashaayam,during the dengue outbreak and the papaya leaf juice which saved thousands of lives was discovered by a siddha doctor.no western technology helped sir.

      • rama, there is nothing like naattu marunthu or kaattu marunthu. There are real medicines and fake medicines. Real medicines are the in Siddha, ayurveda, unaani and of course modern medicine (I want to avoid the word “western medicine” here). As siddha, ayurveda and unaani are old schools of medicines, they have some concepts to be revisited and some mumbo-jumbo parts to be ignored. But natural remedies are real and they work. A tulsi syrup is the reason why I am back to work today from a severe cold and fever. But I don’t believe in salem sivaraj or palani kaalidass

  25. திரு. ராமன் அவர்கள் சமூகத்தின் இயக்கம் பற்றிய புரிதலற்று பேசுகிறார். ஒவ்வொரு மனிதனும் அனைத்து துறைகளிலும் வல்லமை பெற்று இருக்கமுடியுமா? ஒவ்வொரு மனிதனும் இந்த சமூகத்தில் ஏதேனும் ஒரு பங்களிப்பைத்தான் செய்யமுடியும். ஒரு விவசாயி இந்த சமூகம் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவுப் பொருளை உற்பத்தி செய்கிறார். ஒரு மருத்துவ விஞ்ஞானி இந்த சமூகத்தை பீடிக்கக்கூடிய நோய்களை குணப்படுத்தக் கூடிய மருந்தினைக் கண்டுபிடிக்கிறார். விவசாயிக்கு ம்ருந்தும் வேண்டும் என்பது போல விஞ்ஞானிக்கு உணவுப் பொருளும் வேண்டும். வெறுமனே மருந்தை உட்கொள்வதினால் நோய் தீராது. அது வேலைசெய்வதற்கு உடலில் எதிர்ப்பு சக்தி வேண்டும். அதற்கு உணவு வேண்டும். இப்படி ஒருவரை ஒருவர் சார்ந்ததுதானே இந்த சமூகம். ஒரு விவசாயி தன்னுடைய உற்பத்திப் பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்வதை மறுக்கவில்லை. பேடண்ட் ரைட் கூட வாங்கிக்கொள் மறுக்கவில்லை. ஆனால் அது கடைகோடி மக்களும் பயன்படுத்தும் வகையினில் இருக்கவேண்டும். அதுதானே நியாயம். 90% மக்கள் வறுமையில் இருக்கும் மக்களை புறந்தள்ளிவிட்டு விலை நிர்ணயிப்பது வக்கிரமில்லையா. பிறகு கீதாஉபதேசம் பேசுவதில் என்ன உணர்ச்சிகள் இருக்கின்றன. உன்னால் கட்டுப்ப்டி ஆகாது என்றால் விலகிக்கொள்.

    • @சந்தானம்
      தவறாக புரிந்த கொண்டு உள்ளீர்கள். நோவர்டிஸ் அதிக விலைக்கு வைப்பது நியாயம் என்று கூற வில்லை.

      ஆனால் அது அவனது பொருளின் மீதான உரிமை. அவனது பொருளை குறைந்த விலைக்கு கொடு என்று கேட்கலாம் அல்லது அந்த பொருள் வேண்டாம் என்று மறுக்கலாம் .
      அதை திருடக்கூடாது எனபது என் வாதம்.

      பொய்மையும் வாய்மையிடத்து என்று நீங்கள் கூறலாம் ஆனால் நமது திறமைகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டும் . நமது சமுதாயத்தில் உள்ள விஞ்ஞானிகளின் பங்களிப்பு மேலை சமுதாயத்தின் நிகராக உயர வேண்டும்.

      திருட பழகிவிட்டால் உழைக்க தோன்றாது.

      இதே போன்ற சூழ்நிலையை அமேரிக்கா சந்தித்தபோது என்ன செய்தது

      Kantarjian said, from a protest movement started late last year by a group of physicians at New York’s Memorial Sloan-Kettering Cancer Center. The doctors announced in a New York Times op-ed that they would no longer prescribe Zaltrap, a “phenomenally expensive” cancer drug they said was no more effective than its cheaper rivals.

      One month after that op-ed ran, Zaltrap’s maker, Sanofi, cut the drug’s price tag in half.

      http://money.cnn.com/2013/04/25/news/economy/cancer-drug-cost/index.html

    • @harikumar

      Rs 1 Idly is eaten by the people who have no remorse for stealing society’s(Tax payer) work.They are thieves.

      In Tasmac,wine is consumed by HONEST people who pay the full price of the goods and pay tax to the govt. that means they donate x hours of work to the society.

      They are NOT same

      whynationsfail.com

  26. dude,

    The guys drinking at tasmac are also increasing the health budget of the economy,they increase the burden of supporting their health on others and even if that money goes to doctors,ultimately the money needed to import medical equipment comes from somehwere else,that cost is borne by the government and the society.

    considering that and also that these labourers or the poorest who consume this idly also choose to make their living through a honest way,instead hunger and poverty could drive them towards crimes and illegal activities and this way the subsidized idly saves money spent on policing and theft.

    seriously,u argue only in terms of economics?

    without a moral standard how ll u generate goodwill in the society?

    • @harikumar

      Good question.Why should the govt support the people who have made poor choice and taken the risk to drink alcohol in their life?

      It is again, Govt is making wrong decision to support health care for all irrespective of their choices.

      Rs 1 Idly for all. why? It is not just for poor and homeless. It is for all.
      Eating Rs 1 Idly in itself is a crime of stealing tax payers.

      //way the subsidized idly saves money spent on policing and theft.//

      Well done.
      give free food,house, health care and entertainment for all
      And we dont need police dept and save a lot 🙂

      If people pay the full price for idlys, Farmers will benefit.
      Now Govt will make sure rice price dont goup

      People who saved money on idly, will spend on Tasmac by paying full price.
      Private company will get profit.

      Now you push more people to spend more on alcohol, you spend more on health care…

      Good luck with your stupid Govt

      • yeah the government is stupid and has not spread any goodwill in the society.

        But i dont agree that the poor and destitute due to chance or choice is not the society’s responsibility.

      • //People who saved money on idly, will spend on Tasmac by paying full price.
        Private company will get profit.//

        ராமா,

        அப்பத்தானே தனியாருங்க புதுசு புதுசா மருந்து கண்டுபிடிக்கலாம், காலேஜ் கட்டலாம் எல்லாம் நம்ம நல்லதுக்குதானே.

        • There is no point in talking sarcastically.
          I do know the difference between capitalism and crony capitalism

          However our Indian private companies are not into research and innovation.
          Culture has to change..

  27. வாழ்கை தரம் அதிகமாகவும் மக்கள் தொகை குறைவாகவும் மற்றும் ஆராய்ச்சி வசதிகள் அதிகம் உள்ள ஒரு நாட்டில் அவன் நிகழ்த்திய கண்டுபிடிப்பிற்கு அவன் நிர்ணயித்த அதே விலையை தான் மூன்றாம் உலக நாடுகளிலும் வசூலிக்க வேண்டுமா?உப்புல ஐயோடின் கலந்து நூறு ரூபாய்க்கு ஒருத்தன் விற்பதற்கு முன் அதை பேடன்ட் செய்து எல்லோருக்கும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் வாய்ப்பை என் தடுக்கிறான்?

  28. // ஆராய்ச்சி வசதிகள் அதிகம் உள்ள //
    தவறு . ஆராய்ச்சி வசதிகளை ஆண்டவன் கொடுக்க வில்லை. அவர்களாகவே ஏற்படுத்தி கொண்டுள்ளார்கள்.
    நீங்களும் அது போல வசதிகளை ஏற்படுத்தலாம் .

    கட் அவுட் வசதிகளை ஏற்படுத்தி போஸ்டர் அடிக்க ஒட்ட வசதிகளை ஏற்படுத்தி கொள்ள தெரிந்த சமூகம் நம்முடையது

    மக்கள் வரி பணத்தை இலவசமாக அள்ளிதெளித்து, வள்ளல் என்று பெயர் எடுக்கும் தலைவர்களை கொண்டது நம் சமூகம்

    ஆயிரம் வருடங்களாக மஞ்சளையும் கீலாநேல்லியையும் பெருமை பேசி வருகிறது.

    இலவச லேப்டாப் , டிவி என்று மூலதனத்தை வீணடித்து விட்டு அடுத்தவன் உழைப்பை திருட கூச்சமில்லாமல் விவாதம் செய்கிறது

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க