privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !

ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !

-

தார்த்த நிலைகள் கன்னத்தில் அறைந்த போதும் தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் உண்மைகளைக் காண மறுத்துக் குளிர்க் காய்ச்சல் வந்தவர்களைப் போல பிதற்றுகிறார்கள். குட்டி முதலாளியத் தன்னகங்காரம் (Ego) உண்மைகளைக் காண முடியாமல் அவர்களைத் தடுக்கிறது. மேலும், இவர்கள் அடிப்படையில் யதார்த்த உண்மைகளை எதிர்கொள்ள முடியாத கோழைகள் அல்லது ஏமாற்றுக்காரர்கள்.

வெலிவேரியா தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு போராட்டம்
இலங்கையின் மேற்கு மாகாணப் பகுதியில் அமைந்துள்ள வெலிவேரியாவில், தனியார் நிறுவனமொன்று நிலத்தடி நீரை மாசுபடுத்துவதை கண்டித்து நடந்த போராட்டத்தின் மீது சிங்கள ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர்.

இவ்வாறு நாம் சொல்வதற்கு ஒரு சான்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நந்திக்கடலோரம் சிங்கள இராணுவத்திடம் பிடிபட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டு விட்டார் என்ற பட்டவர்த்தனமான உண்மையை இன்னமும் ஏற்க மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள்.

இந்த உண்மையை ஒப்புக்கொண்டால், பிரபாகரனைச்  சுற்றித் தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் இவ்வளவு காலமும் பரப்பியுள்ள பல பொய்மைகளும் அம்பலப்பட்டுப் போகும் என்று அஞ்சுகிறார்கள். இந்த உண்மையிலிருந்து எழும் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டியிருக்கும், ஈழத்தின் இன்றைய நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்குரிய துணிவற்ற கோழைகளான அவர்கள், இந்த உண்மையை உரக்கச் சொல்லும் எம் மீது பாய்ந்து குதறுகிறார்கள்.

‘‘தலைவர் பிரபாகரனையோ புலிகளையோ உயிரோடு பிடிக்கவே முடியாது. அவர்கள் சயனைடுக் குப்பிகளைக் கழுத்தில் சுமந்து திரிகிறார்கள். ஒருநாளும் எதற்காகவும் யாரிடமும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள். அரசியல்,  இராணுவத் துறைகளில் நிகரற்ற திறமை மிக்கவர்கள்” என்று தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் முப்பது ஆண்டுகளாகக் கட்டமைத்து வந்த இந்தப் பிம்பங்கள் எல்லாம் இப்போது நொறுங்கி விட்டன.

பிரபாகரனைப் பற்றி எவ்வளவோ கதைத்துத் திரிந்தவர்கள், அதெப்படி ஒரு படித்தாக ஒரு சொல் கூடப் பேசாமல் இருக்கிறார்கள்! அவர்களில் யாருக்கும் இது உறுத்தாமலா போய் விட்டது! ஈழத்தின் வரலாற்றில் பிரபாகரன் என்ற பெயரைத் திடீரென்று தீண்டத்தகாததாக்கி விட்டார்களே! இதைவிடப் பெரிய துரோகம் வேறுண்டா!

எல்லாவற்றுக்கும் மேலாக, திடீரென்று அவர்களின் இருப்பே கேள்விக்குள்ளாகி, தாங்களே தன்னாளுமையுடன் பேசுவதற்கு ஒரு ”பொருள்”  இல்லாமல் போய்விட்டது.  அவர்களின் பிழைப்புவாத அரசியலுக்குப் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமிருந்து ”பொருள்” கிடைப்பதும் அரிதாகி வருகிறது. அதனால்தான் எல்லா தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் சீமானைப் போல, வைகோவைப் போல பொருளற்ற வெற்று உணர்ச்சிக் கூச்சல் போடுகிறார்கள்.

தமிழர்கள் உண்மைகளின் உணர்வாளர்களாக அல்லாமல், உணர்ச்சிக் கும்பலாக  இருக்க வேண்டும் என்றுதானே சினிமாக்காரர்களும் ”டாஸ்மாக்” வியாபாரிகளும் செயல்படுகிறார்கள். ஈழ இனச் சிக்கலில்  தமிழர்களை வெறும் உணர்ச்சிக் கும்பலாக வைக்கவே தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் எத்தனிக்கிறார்கள். அவ்வாறான முயற்சிகளில் ஒரு பகுதிதான் ஈழ இனச் சிக்கலில் எமது நிலைப்பாடுகள் மீதான ஆத்திரமும் அவதூறுகளும். இதற்கு முக்கியமான, அவசியமான காரணம் அவர்களின் பிழைப்புவாத அரசியலுக்கு நாம் தடையாக இருப்பதுதான்.

இவ்வாறு ம.க.இ.க.-வினர் மீது அவதூறு செய்வதற்கு அவர்கள் ஓர் எளிமையான வழியை, முதன்மையான  வழியை, முட்டாள்தனமான வழியைத் தெரிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். அது, ம.க.இ.க.-வினர் இவ்வளவு காலமும் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடி வரும் பார்ப்பன பாசிச  சக்திகளான சோ.சாமி, சு.சாமி மற்றும் இந்து ராம், சோனியா-மன்மோகன் கும்பல், போலி கம்யூனிசக் கட்சிகள் ஆகியவரோடு ம.க.இ.க.-வினரது நிலைப்பாடுகளை இணை வைத்து, அடையாளப்படுத்துவதுதான்!

இவ்வாறு செய்வது அடிப்படையிலேயே பித்தலாட்டம், அவதூறு என்று  பலமுறை தெளிவாக நாம் விளக்கிப் பேசியிருக்கிறோம், எழுதியிருக்கிறோம். தமிழ் நாட்டிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழினவாதக் குழுக்களும் புலி ஆதரவுக் குழுக்களும் தனித்தனியாகவும் கூட்டுச் சேர்ந்தும் செய்ததை விடப் பன்மடங்கு அதிகமான மக்களிடம் ஈழ இனச் சிக்கலில் ம.க.இ.க.-வினரது ஈழ ஆதரவு மற்றும் நிலைப்பாடுகளை கொண்டு சென்றிருக்கிறோம். இருந்தாலும் அவர்கள் தமது அவதூறுகளைத் தொடர்கிறார்கள்.

பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து கண்டியிலுள்ள பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்; இனம் கடந்த ஒற்றுமையின் அடையாளம்.

அடிப்படை வேறுபாடுகளைக் காண மறுக்கும் அறிவுக் குருடர்கள்

ஈழ இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின் நிலைப்பாடுகளும் பார்ப்பன  பாசிஸ்டுகள் மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளும் அடிப்படையிலேயே மாறுபாடானவை, எதிரெதிரானவை, கறுப்பும் வெள்ளையும் போன்று தெளிவானவை. அறிவுக் குருடர்களுக்குத்தான் அவற்றுக்கிடையிலான  கீழ்வரும் வேறுபாடுகள் தெரியாது:

1)  இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்டுகளும் ஏற்பதில்லை. மொழிச் சிறுபான்மையினர் என்றே கருதுகின்றனர்.

ஆனால்,

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதே எப்போதும் ம.க.இ.க.-வின் நிலைப்பாடு.

2) ஈழத் தமிழர்களின், ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒருபோதும் ஏற்று அங்கீகரித்ததே கிடையாது.

ஆனால்,

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமையை எப்போதும் ம.க.இ.க. ஏற்பதுடன் தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு அதை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைவதற்கு ஆதரவாகப் போராடி வந்திருக்கிறது.

3) தமிழீழத் தனியரசு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; ஒன்றுபட்டுள்ள இலங்கை பிளவுபடாதவாறு, அதன் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் மாநில சுயாட்சி அல்லது அதிகாரப் பகிர்வு மூலம் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதுதான் பார்ப்பன பாசிஸ்டுகள், போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு.

ஆனால்,

ஈழத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமை என்பதே தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது என்பதுதான் எப்போதும் ம.க.இ.க.-வின் நிலை. தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை மறுப்பது, ஈழத் தமிழ்தேசிய இனத்தின்  தன்னுரிமையையே மறுப்பதாகும். ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையை ஒரு போதும் மறுக்காத போதும், எதிர்க்காத போதும், அதற்காகப் எப்போதும் போராடி வரும் ம.க.இ.க.வைத் தமிழீழத் தனியரசுக்கு எதிரியாகச் சித்தரிப்பது அவதூறுதான்! திட்டமிட்ட சதிதான்! ஈழத் தமிழ்த் தேசிய இனம் எப்போது, எப்படி, என்ன அரசியல் நிலைமைகளில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுகிறது என்பதைப் பொருத்துத்    தனியரசு அமைத்துக் கொள்வதா,  இல்லையா என ஈழத் தமிழ்த் தேசிய இனமே தீர்மானிக்கும். (நாம் ஏன் இவ்வாறு கருதுகிறோம், அது ஏன் சரி என்பதைப் பிறகு பார்ப்போம்)

4) ஈழச் சிக்கலுக்கு இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தம் சரியானதொரு தீர்வு. இந்திய ”அமைதிப் படை” படையெடுப்பு  உட்பட இந்திய அரசின் எல்லாத் தலையீடுகளும்  புலிகள் மீதான தடையும் சரியானது, அவசியமானது, இராஜபக்சேவை ஒரு போர்க்குற்றவாளி என்ற முறையிலான சர்வதேச விசாரணை – தண்டனையெல்லாம் கூடாது என்பது தான் பார்ப்பன  பாசிஸ்டுகள்,  போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. புலிகள், தமிழகத் தமிழினவாதிகள் கூட இந்திய அரசு மற்றும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் எல்லாம் ஈழத் தமிழருக்கு நட்புச் சக்திகள்; ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளில் எல்லோரும் இல்லையானாலும் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., வாஜ்பாய் போன்ற சில தலைவர்கள் ஈழத் தமிழர்கட்கு நட்புச் சக்திகள் என்றே நம்பினர்; இன்னமும் நம்புகின்றனர். இந்திய அரசும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும் ஈழத்துக்கு எதிரி சக்திகள் என்று வைத்துப் போராட வேண்டும் என்று அமைதிப்படை ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை புலிகளும் தமிழகத் தமிழினவாதிகளும் முன்வைக்கவேயில்லை. அமைதிப் படை ஆக்கிரமிப்புக் காலத்திலும் இவர்களின் இந்திய எதிர்ப்புக்குக் காரணம், புலிகளுக்கு எதிராக இந்தியா போர் தொடுத்ததுதானே தவிர, இவர்களாக இந்திய எதிர்ப்பு நிலை எடுக்கவில்லை. இதனைப் புலிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். மற்றபடி, இந்திய அரசு மற்றும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளைத் ”தாஜா” செய்து, ஈழத்தின் நட்புச் சக்திகளாக அவற்றை மாற்ற வேண்டும் என்றுதான் முள்ளிவாய்க்கால் முடியும் வரை அவர்கள் முயன்றார்கள். இப்படிச் செய்ததைத்தான் பிரபாகரனின் அரசியல் திறமை என்று இங்குள்ள தமிழினவாதிகள் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆனால்,

1983 கறுப்பு ஜூலை நாட்களில் இருந்து இலங்கை, ஈழச் சிக்கலில் இந்திய அரசின் தலையீடுகள், இந்தியா ஈழப் போராளிகளுக்கு போர்ப் பயிற்சியும் ஆயுதங்களும் நிதியும் வழங்கியது கூட உள்நோக்கங்கொண்டு, தெற்காசிய வல்லாதிக்கத் தன்னலன்கள் கருதி இந்தியா செய்தவைதாம்; இந்திய அரசு ஈழத் தமிழினத்தை வெளிப்படையாகவும் அரசியல் ரீதியிலும் அங்கீகரித்து ஆதரிப்பதற்கு மாறாக, சதித்தனமாக, தனது உளவுப்படையான ”ரா’’-வை ஏவி விட்டுப் போராளிக் குழுக்களிடையே  ஊடுருவி, அவர்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு, இரத்தம் குடித்ததையும் ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட  இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தத்தையும் முற்றிலும் தவறானவை என்று ம.க.இ.க. எதிர்த்தது. அமைதிப் படை என்ற பெயரில் இந்திய இராணுவத்தின் படையெடுப்புக்குப் பிறகு, அதை எதிர்த்து விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்துக்கு எதிராகப் போரிட்டதும், அதற்காக பிரேமதாசா அரசுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்ததும் சரியானவை என்பதே ம.க.இ.க.வின் நிலைப்பாடு. இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தத்துக்கு முன்பிருந்து முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழினப் படுகொலைகளை முன்னின்று நடத்தியது உட்பட இந்திய அரசு மற்றும் அதன் ஆளும் வர்க்க கட்சிகளின் சதித்தனமான வல்லாதிக்கத் தலையீடுகளை ம.க.இ.க மட்டுமே முரணற்ற முறையில் எதிர்த்துப் போராடி வந்திருக்கிறது. அதன் பிறகும் இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியென அறிவித்துத் தண்டிக்க வேண்டுமெனவும் இதைத் தடுப்பதில் இந்திய அரசின் தில்லுமுல்லுகளையும் அம்பலப்படுத்திப் போராடி வந்திருக்கிறது.

ஆனால், முள்ளிவாய்க்காலில் புலித் தலைமையையும் பல்லாயிரம் ஈழத் தமிழரையும் பலி கொடுத்த பிறகு, இந்திய அரசின் ஈழ எதிர்ப்பு சதிகளையும்  தில்லுமுல்லுகளையும் உண்மைகளையும் தாமே கண்டுபிடித்ததைப் போலவும் தாம் எப்போதும் இந்திய எதிர்ப்பு நிலையிலிருந்ததைப் போலவும் திடீரென்று புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் இப்போது குதியாட்டம் போடுகிறார்கள். இந்திய அரசை எதிர்த்துப் போராடாத தவறை யாரோ செய்து விட்டதைப் போலவும் நாடகமாடுகிறார்கள். இப்போதும் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் மட்டும்தாம் ஈழத்தின் எதிரிச் சக்திகள் என்றும் ஜெயலலிதாவும் அவரை ஆதரிப்பதன் மூலம் மோடியும் ஈழத்தின் நட்புச் சக்திகள் போலவும் பிழைப்புவாத அரசியல் நடத்துகிறார்கள்.

5) இராஜீவ் காந்தியும் சிங்கள பாசிச எதிரிகளும் ஈழத் தமிழ்த் துரோகிகளும் கொல்லப்பட்டபோது அவை புலிகளின் பயங்கரவாதச் செயல் என்று பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெறித்தனமாகச் சாடினர். இராஜீவ் காந்தி கொலையைத் தமிழினவாதிகள் கூடக் கண்டித்தனர். தாங்கள் செய்த பல கொலைகளைப் புலிகளால் கூட நியாயப்படுத்த முடியவில்லை. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு வந்த நாட்களில் ஜெயா அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பாசிச வேட்டையை ஏவி விட்டது, புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதையெல்லாம் நியாயப்படுத்தினர்.

ஆனால்,

இராஜீவ் காந்தியும் சிங்கள பாசிச எதிரிகளும் ஈழத் தமிழ்த் துரோகிகளும் கொல்லப்பட்டபோது அவற்றை எதிர்த்தோ, கண்டித்தோ ம.க.இ.க. எழுதியதோ பேசியதோ இல்லை. கள்ள மௌனம் சாதித்ததும் இல்லை; இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஏன் சரியானவை, அவசியமானவை என்றுதானே எழுதியது, பேசியது. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு வந்த நாட்களில் ஜெயா அரசு  ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பாசிச வேட்டையைக்  கட்டவிழ்த்து விட்டபோது, இங்குள்ள தமிழினவாதிகள் கூண்டுக்குள் ஒளிந்து கொண்டு மௌனம் காத்தனர்.  ம.க.இ.க.வோ, புலிகள் தடை உட்பட அவற்றை எதிர்த்துப் போராடியது. அதற்காக ”தடா”, அரசு விரோதச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல தோழர்கள் சிறைப்பட்டனர்.

இவ்வாறு அடிப்படையான பல பிரச்சனைகளில் ம.க.இ.க. யாரை எதிர்த்துப் போராடி வருகிறதோ, அந்தப் பார்ப்பன பாசிஸ்டுகளோடும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளோடும் ம.க.இ.க.வை அடையாளப்படுத்தியும் இணை வைத்தும் புலி ஆதரவளர்களும் தமிழினவாதிகளும் அவதூறு செய்கிறார்கள். என்ன ஓர் அரசியல் நேர்மை! அறிவு நாணயம்!

‘‘ஈழத் தமிழர் இனச் சிக்கலில் ம.க.இ.க.-வின் நிலைப்பாடு  கம்யூனிஸ்டுகளுக்கே உரிய வறட்டுத்தனம் நிறைந்தவை என்று கூறிப் போலி கம்யூனிஸ்டுகளுடன் இணை வைத்தும் தமிழினவாதிகள் அவதூறு பரப்புகிறார்கள். ஆனால், போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளும் ம.க.இ.க.-வின் நிலைப்பாடுகளும் அடிப்படையிலேயே மாறுபாடானவை. ருசியாவில் ஸ்டாலினுக்குப் பிறகு குருச்சேவ் திருத்தல்வாதம் நிலைநாட்டப்பட்டதும் சி.பி.ஐ.யும், நக்சல்பாரிப் பேரெழுச்சிக்குப் பிறகு சி.பி.எம். கட்சியும் ”இனி உலகின் எல்லா நாடுகளிலும் தேசிய இனப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விட்டன. தேசிய இனங்கள் தன்னுரிமை கேட்பதே தவறானது, அவ்வாறான கோரிக்கையை ஆதரிக்க முடியாது”  என்று அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டன. ஆனால், ”தேசிய இனச் சிக்கலில் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகள் தவறானவை, திருத்தல்வாதமானவை” என்று ம.க.இ.க.- வினர் உட்பட புரட்சிகரப் பொதுடைமையாளர்கள் அவற்றை எதிர்த்து வருகின்றனர். அதைப் போலவே, சீனாவும் கியூபாவும் இராஜபக்சே அரசை ஆதரிப்பதைக் காட்டி அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதாக இட்டுக் கட்டியும் அவதூறு செய்கிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனச் சிக்கலில் மார்க்சிய – லெனினிய ஆசான்களின் போதனைகள் இப்போதும் பொருத்தமானவை என்று கருதும் புரட்சிகரப் பொதுடைமையாளர்கள் வட கிழக்கு இந்தியாவிலும் காசுமீரத்திலும் நடக்கும் தன்னுரிமைப் போராட்டங்களை ஆரம்பம் முதலே ஆதரித்து வருகின்றனர். இப்போது கம்யூனிஸ்டு அல்லாத நாடுகள் செய்யும் தவறுகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது என்று தெரிந்தும் தமிழினவாதிகள், தமது அவதூறுகளைத் தொடருகின்றனர்.

அதே சமயம், தமிழினவாதிகள்தாம் இந்தியாவின் தேசிய இனச் சிக்கலில் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளுக்கு இணையான நிலைப்பாடுகளை எடுக்கின்றனர். வட கிழக்கு இந்தியாவிலும் காசுமீரத்திலும் தன்னுரிமை கோரும் போராட்டங்களை ஆதரிக்காதது மட்டுமல்ல, அவை அவசியமற்றவை என்று கூட பல சமயங்களில் எதிர்க்கவும் செய்கின்றனர். சி.பி.ஐ. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஈழ விடுலைக்கு எதிரானது என்று தமிழினவாதிகளுக்குத் தெரியும்; இருந்தாலும், ஜெயலலிதாவின் அடிவருடியான தா.பாண்டியன் அவரது அருளைப் பெறுவதற்காகவே ஈழ ஆதரவு நாடகமாடுவதும் இவர்களுக்குத் தெரியும்; ஆனாலும் ஈழ ஆதரவு மேடைகளை அலங்கரிக்கும் விருந்தினராக தா.பாண்டியனை முன்நிறுத்த இவர்கள் தவறுவதில்லை. இதுதான் தமிழினவாதிகளின் அரசியல் நியாயம்!

ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் முன்னெடுக்கின்றனர், ம.க.இ.க.-வினர். அதை அங்கீகரித்து, ம.க.இ.க.-வினரை ஈழத்தின் நட்பு சக்தியாகக் கருதாது, ஈழத்தின் எதிரி சக்தியாகக் கருதி, ம.க.இ.க.-வினர் மீது தமிழினவாதிகள் எப்போதும் பாய்கின்றனர். ஆனால், தமிழீழத் தனியரசை மட்டுமல்ல, ஈழத் தமிழரை ஒரு தேசிய இனமாகவே ஏற்காத இந்திய தேசியக் கட்சிகளின்  தனித்தனி தலைவர்களையும் உள்ளூர் பிரபலங்களையும் ஈழத்தின் நட்புச் சக்தியாகக் கருதி, அவர்களிடம் ஆதரவு தேடுகின்றனர்

எரிபொருள் விலை உயர்வை கண்டித்த மீனவர்கள் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து வடமேற்கு மாகாணத்திலுள்ள சிலா என்ற கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜபக்ஷே அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; எட்டு பேர் படுகாயமுற்றனர்.

தமிழினவாதிகளின் பார்வையில் ஈழ இனச் சிக்கலுக்கு தமிழீழத் தனியரசு என்பது ஒரே தீர்வு என்பது மட்டுமல்ல; தமிழகத் தமிழினவாதிகளுக்கு ஈழ இனச் சிக்கல் ஒன்று மட்டுமே விவாதத்துக்கும் வினையாற்றுவதற்குமான ஒரே பிரச்சினை. இந்த நாட்டைச் செயற்களமாகக் கொண்டுள்ள ம.க.இ.க.வினர் தம்முன் உள்ள எல்லாப் பிரச்சினைகளில் ஈழ இனச் சிக்கலுக்கு அதற்குரிய முன்னுரிமை தருகின்றனர். இந்த உண்மையை அறிந்திருந்தும், ம.க.இ.க.வினர் ஈழத் தமிழருக்கு எதிரானவர்கள், அவர்களுக்கு ஈழத் தமிழர்  மீது அக்கறையில்லை, அதனால்தான் தமிழீழத் தனியரசு கோரிக்கைக்காக ம.க.இ.க.வினர் போராட மறுக்கிறார்கள் என்று அவதூறு செய்கிறார்கள்.

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்; அதற்குப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமையை எப்போதும் ம.க.இ.க. ஏற்பதுடன், தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு அதை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைவதற்காகப் போராடி வந்திருக்கிறது.

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமை என்பதே தமிழீழத்  தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது என்பதுதான் எப்போதும் ம.க.இ.க.-வின் நிலை. தமிழீழத் தனியரசு அமைத்துக்கொள்ளும் உரிமையை மறுப்பது, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையையே மறுப்பதாகும். ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையை ஒருபோதும் மறுக்காத, எதிர்க்காத போதும், அதற்காகப் எப்போதும் போராடி வரும் ம.க.இ.க.வைத் தமிழீழத் தனியரசுக்கு எதிரியாகச் சித்தரிப்பது அவதூறுதான்! திட்டமிட்ட சதிதான்!

குழப்பம் எதிலே? ம.க.இ.க.-வினரின் நிலைப்பாடுகளிலா, தமிழினவாதிகளின் பார்வையிலா? 

‘‘தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கை 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே முன்வைக்கப்பட்டு, அதைத்தாம் ஏற்பதாக 1977 தேர்தல்களிலேயே ஈழத் தமிழர்கள் ஒருமனதாக ஒப்புதல் கொடுத்து விட்டார்கள், பிறகு ஏன் ‘தமிழீழத் தனியரசு  அமைத்துக் கொள்வதா,  இல்லையா என ஈழத் தமிழ்த் தேசிய இனம் தீர்மானிக்கட்டும்’ என்று ம.க.இ.க. சொல்ல வேண்டும்? ஆகவே, ம.க.இ.க. தமிழீழத் தனியரசுக்கு எதிரானது” என்று தமிழினவாதிகள் பாய்கிறார்கள். மேலும், சிங்கள மக்கள் அனைவரும் ஈழத் தமிழர்க்கெதிரான சிங்களப் பேரின வெறியும், பௌத்த மதவெறியும் கொண்டுள்ளபோது, குறிப்பாக முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குப் பிறகு தமிழீழத் தனியரசு தானே சரியானது, அவசியமானது என்று  தமிழினவாதிகள் வாதிடுகின்றனர்.

ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்று கூறுவதைத்தான் ம.க.இ.க.-வினர் ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, தமிழீழத் தனியரசுக்கு எதிரானவர்கள் என்பது உண்மையில்லை. இது நாம் இப்போது எடுக்கும் முடிவல்ல. முன்பே எழுதியிருப்பதுதான். ”அப்படியானால், தமிழீழத் தனியரசுக்காக ஏன் போராடவில்லை, இனிமேலாவது அதற்காகப் போராடுவீர்களா” என்று கேட்டு ம.க.இ.க.-வை மடக்குவதாக எண்ணிக் கொண்டு தமிழினவாதிகள் வாதாடக் கூடும்.

தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கைக்காக இரண்டு காரணங்களுக்காக ம.க.இ.க.-வினர் போராடவில்லை. தமிழினவாதிகளின் பார்வையில் தமிழீழத் தனியரசு என்பதுதான் ஈழ இனச் சிக்கலுக்கு ஒரே கோரிக்கை, ஒரே தீர்வு; அதனால்தான் அதை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்கிறார்கள். அது குட்டி முதலாளிய வர்க்கத்தின் பகுத்தறிவுக்குப் புறம்பான, குறுந்தேசிய இனவாதப் பார்வையிலானது.

ம.க.இ.க. வினரின் பார்வையில் – இதுதான் அறிவியல்பூர்வமானது, பாட்டாளி வர்க்கப் பார்வையிலானது – தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்கிறோம். போலி கம்யூனிஸ்டு கட்சிகள் சொல்லுவதைப் போன்று, செய்வதைப் போன்று (இந்திய தேசியவாதிகளோடு சேர்ந்து கொண்டு, பிரிவினை கோரி காசுமீரத்திலும் வடகிழக்கிலும் நடக்கும் போராட்டங்களை எதிர்க்கிறோமா? போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் போன்று எப்போதாவது இந்திய தேசிய ஐக்கியம் – ஒருமைப்பாடு, பிரிவினைவாத எதிர்ப்புக் கூச்சல் போடுகிறோமா?) பிரிந்து போகும் உரிமையை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு வெறுமனே தன்னுரிமைக்காக ம.க.இ.க.வினர் நிற்கவில்லை. ஆகவேதான் தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கையைத் தனியே முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசியம் இல்லை.

தமிழீழத் தனியரசு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து, அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள், தமிழினவாதிகள். பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் அவ்வாறு செய்ய முடியாது, செய்யக் கூடாது, செய்யவுமில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான்  அந்நாட்டை ஆளும் பாசிச அரசு. அதற்கு எதிராக ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்தனிப் பொதுவுடைமைக் கட்சி வைத்து, தனித்தனித் திட்டமும் இலக்கும் வைத்துப் புரட்சி செய்வது; அவ்வாறான தனித்தனி புரட்சிகளில் தேசிய இனங்கள் வெற்றிபெற்று, தனித்தனியே சோசலிசத்தைக் கட்டியமைத்த பின்னரோ, அதற்கு முன்னரோ  ஐக்கியப்படுவது என்று பேசுவது மார்க்சிய – லெனினியப் பார்வையே கிடையாது.

அந்நாட்டை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக ஒரே புரட்சிகரப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுவது; அக்கட்சி, எல்லா தேசிய இனங்களுக்கும் சமவுரிமையை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை உறுதிப்படுத்துவது; அக்கட்சி ஒடுக்கும் (சிங்களத்) தேசிய இனத்தவரிடையே ஈழத் தமிழர்  தன்னுரிமையையும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனத்தவரிடையே ஐக்கியத்தையும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.

இந்த மார்க்சிய-லெனினியப் பார்வையை மறுப்பதற்காகத் தமிழினவாதிகள் பலவாறு புளுகித் திரிகிறார்கள். ”சிங்களப் பெருந்தேசிய இனத்து மக்களுக்கும்  அவர்களை ஆளும் பாசிச அரசுக்கும் வேறுபாடே கிடையாது; பகை முரண்பாடும் கிடையாது; பெருந்தேசிய இனத்து மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு எதிரானவர்கள்; இலங்கையின் இரு தேசிய இனப் பாட்டாளி மக்களும் ஐக்கியப்பட மாட்டார்கள்; இலங்கையில் ஈழத் தமிழ் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் அமைப்புகள் எதுவும் சிங்களவர் மத்தியில் கிடையாது” ஆகிய தமிழினவாதிகளின் கருத்துக்களைப்  பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் ஏற்கவில்லை. ஏனென்றால், தமிழினவாதிகள் கூறிவரும் மேற்கண்ட கருத்துகளில் உண்மையில்லை.

இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில், நோக்கில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டு நின்றிருக்கிறார்கள். 1983-இல் இருந்து தொடர்ந்து நடந்து வந்த ஈழப்போர் காரணமாக இலங்கையில் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் முற்றியபோது   சிங்கள, தமிழ் மக்கள் அமைதியை வேண்டி நின்றபோது அதையே முன்வைத்து அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டார், சந்திரிகா  குமாரதுங்கே. அவரைத் தேர்ந்தெடுத்து அமைதி, போர்நிறுத்தம், பேச்சு வார்த்தையை ஆதரித்ததில் சிங்களரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள். சிங்கள இன வெறியர்களினால் அம்முயற்சி சிதறடிக்கப்பட்டது வேறு விடயம். 2004 சுனாமியின் பேரழிவுகளை எதிர்கொள்வதில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல்  பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு. தமிழ்த் தேசிய இன மக்களின் மனித உரிமைக்காகவும் இலங்கைப் பாசிச அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொல்லப்பட்டவர்களும் பத்திரிக்கையாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் சிங்களவரிடையே உண்டு. ஈழ விடுதலைப் போராட்டங்கள் நடந்த அதே காலகட்டத்தில், இலங்கைப் பாசிச அரசால் ஈழத் தமிழர்கள் மட்டும் கொன்று குவிக்கப்படவில்லை. பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வெள்ளை வேன் வேட்டை இன்னமும் தொடர்கிறது. 75,000 சிங்கள இளைஞர்கள் இந்தக் காலத்தில் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு இலங்கைப் பாசிச அரசுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஆகவே, அரசியல் காரணங்களுக்காக சிங்களவரும் ஈழத் தமிழரும் ஐக்கியப்படுவது சாத்தியமே இல்லாதது அல்ல.

 தமிழினவாதிகளின் உருட்டல் மிரட்டல், பொய்மைகள் பலிக்காது

விடுதலைப் புலிகளே தமிழீழத் தனியரசு என்ற தீர்வை பல்வேறு சமயங்களில் மாற்றிக் கொண்டும் கைவிட்டும் உள்ளனர். தன்னலத்துக்காகத் தன்னுரிமைக் கோரிக்கையையே கைவிட்டதும் உண்டு. வெவ்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்து தமிழீழத் தனியரசு கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்ததும் உண்டு.

இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு இணைந்த நிர்வாகசபை அமைக்கும் ஏற்பாட்டை ஏற்றுக்கொண்ட போதும், இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்காக பிரேமதாசா அரசுடன் கூட்டுச் சேர்ந்த போதும், ரணில், சந்திரிகா அரசுகளுடன் சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் நடத்திய போதும் தன்னுரிமைக் கோரிக்கைக்குப் புலிகள் வெவ்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்து தமிழீழத் தனியரசு கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவில்லையா? புலிகளின் இத்தகைய முன்னெடுப்புகளைத் தயக்கமின்றித் தமிழினவாதிகள் ஆதரித்தனர்.

ஆனால், ஈழத் தமிழர் நலனில் தமக்கு மட்டுமே அக்கறை இருப்பதைப் போன்று காட்டிக் கொள்ளும் தமிழினவாதிகள், ஈழ இனச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லவும் போராடவும்  தமக்கே ஏகபோக உரிமை கோரிக் குதிக்கிறார்கள். ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் போராடுவதாக கூறிக் கொண்டு தமிழினவாதிகள் ஏதாவது ஒரு முழக்கத்தை, திட்டத்தை முன்வைத்துப் பல பெயர்ப் பலகை அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள், அதை ஆதரிக்கும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்; இல்லையென்றால் ஈழத் தமிழர்க்கு  எதிரானவர்கள் என்றும் அவதூறு செய்கிறார்கள்.

ஈழத் தமிழர் இனச் சிக்கலுக்கு உடனடியான. விரைவான, நிச்சயமான தீர்வு என்ற பெயரில் அடுக்கடுக்கான பல பொய்மைகளை நம்பவைக்க தமிழினவாதிகள்  எத்தனிக்கிறார்கள். இன முரண்பாடு முதன்மையாகி  விட்ட நிலையில் தமிழ் – சிங்களப் பாட்டாளிகளை ஒன்றுபடுத்திப் புரட்சி செய்வது சாத்தியமேயில்லை; இன உணர்வுமிக்க தமிழர்களைத் திரட்டித் தேசிய விடுதலையை விரைவில் சாதிக்க முடியும்; இராணுவ ரீதியிலும் அரசியல்ரீதியிலும் நிகரற்ற பிரபாகரன் தலைமையில் ஈழ விடுதலை விரைவில் வெற்றிகரமாக முடிக்கப்படும் என்றவாறு எவ்வளவோ சொன்னார்கள். முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தில் எல்லாம் நொறுங்கிப் போயின.

தவறுகளில் இருந்து நேர்மையான முறையில் படிப்பினைகளைப் பெறுவதற்குப் பதிலாக, பன்னாட்டுச் சதியால்தான் இந்த நிலை என்று மழுப்பிச் சமாளிக்கிறார்கள். முள்ளிவாய்க்காலுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே தீட்டப்பட்டதாகக் கூறப்படும் பன்னாட்டுச் சதியை எதிர்கொள்ள முடியாமல் போனதும் முல்லைத் தீவின் குறுகிய நிலப் பரப்பில் மூன்று லட்சம் ஈழத் தமிழரைக் குவித்துப் பல்லாயிரம் பேரைப் பலி கொடுத்ததும்தான் இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நிகரற்ற  தலைமையா?

பலம் வாய்ந்த சிங்கள பாசிச இராணுவத்தையும் பகைமையான பன்னாட்டு சக்திகளையும் எதிர்கொண்டிருந்த ஈழ விடுதலைப் போரில் பிரபாகரன் தலைமை இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பாரிய தவறிழைத்து விட்டது. இராணுவ ரீதியில்  நீண்டகால மக்கள் யுத்தம் என்ற போர்த்தந்திரத் திட்டத்தை மேற்கொள்ளத் தவறியது. நீண்டகால மக்கள் யுத்தம் என்ற பாதையில் சாத்தியமான மக்கள் ஆதரவு முழுமையாகத் திரட்டப்பட வேண்டும். என்ன இலட்சியமோ அதற்குதான் மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டுமே தவிர, யார் தலைவரோ அவர் மீதான வழிபாட்டுக்கு ஆள் திரட்டக் கூடாது.

சிங்கள பாசிச அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்திகொண்டு நட்புச் சக்திகளை வென்றெடுத்திருக்க வேண்டும். ஒருவேளை உடனடியாக அது சாத்தியமில்லாமல் போனாலும், மக்கள் யுத்தம் நீடிக்கும் நீண்டகாலப் போக்கில் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் முற்றிவரும் சூழலில் அது சாத்தியமே. இலங்கையில் அவ்வாறான நிலைமைகள் கடந்த 30 ஆண்டுகளில் பல முறை வந்துள்ளன. ஆனால், விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் ஈழத் தமிழரின் ஆதரவையே குறுந்தேசிய இனவாத அடிப்படையில் கட்டமைத்துக் கொண்டிருந்தனர். சிங்கள பாசிச இராணுவத்துடன் கடும் போரில் ஈடுபட்டிருந்தபோது கூட மறுபுறம் ஈழத் தமிழரிடையே கூட சகோதரப் போரை நடத்திய விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் நட்புச் சக்திகளை  வென்றெடுப்பதில் எங்ஙனம் அக்கறை கொண்டிருக்க முடியும்?

பிரபாகரனின், புலிகளின் வீரதீர சாகசங்களைச் சொல்லியே சினிமா நாயகத்தன வழிபாட்டை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள், தமிழினவாதிகள். ஈழத் தமிழர் தன்னுரிமை பெறுவதற்கான அவசியமான, சரியான அரசியல் உத்திகளை முன்வைத்துப் போராடுகின்றன, ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும்.

ம.க.இ.க. தமிழீழத்துக்கு எதிரானது என்ற அவதூறு, ம.க.இ.க.-வின் பல்வேறு போரட்டங்களைப் பல ஆண்டுகளாக நேரில் காணும் தமிழக மக்களிடையே எடுபடாமல் போகவே, ஈழத் தமிழர் இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின் நிலைப்பாடு தமிழீழத் தனியரசுக்கு எதிரானது, சந்தர்ப்பவாதமானது, குழப்பமானது என்று ம.க.இ.க. மீது பலவாறாக அவதூறையும் அவநம்பிக்கையையும் தமிழினவாதிகள் பரப்புகிறார்கள்.

கொழும்புவில் நடந்த பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
இராஜபக்ஷே அரசின் ஊழல்கள், மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் லசந்தா விக்கிரமதுங்கே, ராஜபக்ஷே கும்பலால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும், பத்திரிக்கை சுதந்திரத்தை வலியுறுத்தியும் இலங்கை பத்திரிகையாளர்கள் கொழும்பு நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம் (உள்படம்) லசந்தா விக்கிரமதுங்கே.

ஆனால், ஈழத் தமிழர் இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின்  நிலைப்பாட்டில் குழப்பமோ, சந்தர்ப்பவாதமோ கிடையாது. மிகமிகத் தெளிவாகவே உள்ளது. அது தமிழினவாதிகளின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டிருக்கிறது, அவ்வளவுதான்! தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை ம.க.இ.க.-வினர் ஏற்கும் வரையும்  தமிழினவாதிகளின் தவறுகளையும் துரோகத்தையும் பிழைப்புவாதத்தையும் ம.க.இ.க.-வினர் எதிர்த்து அம்பலப்படுத்தும் வரை அவர்கள் இப்படித்தான் செய்வார்கள். உண்மையில் இப்படிச் செய்வது மற்றவர்களை உருட்டி மிரட்டி (பிளாக்மெயில் செய்து) தமது நிலைப்பாடுகளை ஏற்கச் செய்யும் ரௌடித்தனம்.

ஈழத் தமிழர் முன்புள்ள தெரிவுகள்

எப்போது, எப்படி, என்ன அரசியல் நிலைமைகளில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைகிறது என்பதைப் பொருத்து  தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்வதா, இல்லையா என ஈழத் தமிழ் தேசிய இனம் தீர்மானிக்கும். நாம் ஏன் இவ்வாறு கருதுகிறோம், அது ஏன் சரி என்பதைப் பலமுறை சொல்லியாகி விட்டது; மீண்டும் இங்கே ஒருமுறை  சொல்கிறோம்.

தமிழினவாதிகள் தங்கள் இலட்சியமாகச் சொல்லிக்கொள்ளும் ”தமிழீழத் தனியரசு” மீது அவர்களுக்கு உண்மையில் நம்பிக்கையோ, அக்கறையோ துளியும் கிடையாது. அதனால்தான் அதை அடையும் பாதையைப் பற்றியும், அதை அடைந்தாலும் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேச மறுக்கிறார்கள்.

ஒன்று, சிங்களப் பேரினத்துக்கு எதிராக ஆயதப் போராட்டத்தின் மூலம் பாசிச சிங்கள இராணுவத்தையும் அரசையும் வீழ்த்தி, தமிழீழத் தனியரசைப் பிரகடனம் செய்ய வேண்டும். பிரகடனம் செய்தால் மட்டும் போதாது; சர்வதேச சமூகம் இல்லையானாலும், பிற ஒரு சில நாடுகளாவது அதை அங்கீகரிக்க வேண்டும். இதற்காகத்தான் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முப்பது ஆண்டுகளாக நடந்தது. அதன் முடிவும் அனுபவமும் என்னவென்று அனைவரும் அறிவோம். மீண்டும் ஒரு படை கட்டி தமிழீழத் தனியரசுக்கான போர் கனவிலும் நடைபெறாது என்று சொல்லத் தேவையில்லை. (புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் புளுகித் திரிவது போல,  தப்பித்துத் தலைமறைவாக உள்ள பிரபாகரனும் பிற புலிகளும் ஒருவேளை திரும்பி வந்து மீண்டும்  ஈழ விடுதலைப் போர் தொடுக்கலாமோ என்னவோ).

இரண்டு, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் திராவிடக் கட்சிகளும் முயற்சிக்கும் வகையில் இவர்கள் நடத்தும் போராட்டங்கள், விண்ணப்பங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இந்திய அரசோ அல்லது இவர்களில் ஒரு பிரிவினர் நம்புவது போன்று மோடி பிரதமராகியோ இந்திய ஆட்சியாளர்களிடம் ஈழ ஆதரவு நிலை உருவாகி அல்லது அமெரிக்கத் தலைமையிலுள்ள சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்களின் துயரம் கண்டு நெக்குருகி பொதுவாக்கெடுப்புக்கான, அதாவது ஈழத் தமிழருக்குத் தன்னுரிமைக்கான வாய்ப்புக் கிட்டலாம்; அதாவது,  இவர்கள் நடத்தும் வேட்டையில் கொம்புடன் கூடிய முயலைப்  பிடிக்கலாம் என்கிறார்கள்.

மூன்று, சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறி பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அது ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஏற்க வேண்டும். இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளும் வர்க்க முரண்பாடுகளும் மிகவேகமாக முற்றி வரும் சூழலில் புலிப் பூச்சாண்டியைக் காட்டியே சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறியில் சிங்கள மக்களை நீண்ட காலத்துக்கு பாசிச இராஜபக்சே கும்பல் தனது அதிகார ஆதிக்கத்தில் இருத்தி வைத்திருக்க முடியாது என்பதையே அங்குள்ள நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் வீரர்களையும் துருப்பிடித்த ஆயுதங்களையும் கொண்டிருந்த சிங்கள இராணுவம் இன்று நான்கு இலட்சம்  வீரர்களையும் அதிநவீன ஆயுதங்களையும்  கொண்ட முப்படைகளையும் பெற்று, உலகின் பெரிய இராணுவங்களில் ஒன்றாகி விட்டது. சிங்கள இராணுவம் மட்டுமல்ல, இலங்கை அரசின் எல்லா உறுப்புகளிலும் பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பலின் ஆதிக்கம் நிறைந்து விட்டது. அதற்கு எதிராகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அம்மக்கள் எவ்வளவு பெரிய மக்கள் சக்தியைத் திரட்டினாலும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவின்றி பாசிச இராஜபக்சே கும்பலின் அதிகார ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது. அதே போல, சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவின்றி ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் என்னதான் போராடினாலும்  தமது உரிமைகளைப் பெறவும் முடியாது. இது யாருடைய விருப்பங்களுக்கும்  அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தம். நாம் கூறுவது ஆளும் வர்க்கங்கள் சொல்லுவதைப் போல சுரண்டலுக்கான, அம்மக்களை ஒடுக்கி வைப்பதற்கான சமனற்ற கட்டாய ”ஒற்றுமையல்ல’’. சம உரிமை அடிப்படையிலான, ஜனநாயக முறையிலான ஒற்றுமை. பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பல் ஆதிக்கத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் பங்குபற்றியதற்கு ஈடாகவும் முன்நிபந் தனையாகவும் ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் தமது உரிமைகளாகக் கோர முடியும். இதைத்தான் ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகள் (அவை சிறியவையானாலும்) தமது பாதையாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு, இயக்கங்களைக் கட்டமைத்து வருகிறார்கள். இவ்வாறான பாதையைத்தான்  ம.க.இ.க.-வினர் ஆதரிக்கின்றனர்.

ஆனால், இதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றவை, சிங்களவருக்குச் சாதகமானவை, தமிழீழத் தனியரசை நிராகரிப்பதற்குச் சொல்லப்படும் சாக்குப்போக்குகள் என்று தமிழினவாதிகள் வாதிடுகின்றனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தனைக்கும் பிறகு, சிங்கள அரசு ஈழத் தமிழர்களின்  உரிமைகளைச் சிறிதும் ஏற்க மறுக்கும் நிலையில், எஞ்சிய பல்லாயிரம் ஈழத் தமிழர்களும் முள்வேலி முகாமுக்குள், இராணுவக் கொடுங்கோன்மையின் கீழ் வதைபடும் நிலையில் தமிழீழத் தனியரசுக்கும் குறைவான எதையும் பேசுவது துரோகம் என்று குதிக்கிறார்கள்.

தமிழினவாதிகள் மேலே தொகுத்துச் சொல்லும் இதே நிலைமைகளின் காரணமாகத்தான், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தாமல் ஈழச் சிக்கலில் ஒரு அடி கூட முன்வைக்க முடியாது; அதைத் தூக்கி எறிந்து, சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க.- வினர்  ஏற்கின்றனர்.

ஆனால், இந்த நிலைமைகளில் தமிழீழத் தனியரசை அடைவதற்கானதென்று தமிழினவாதிகள் தெரிவு செய்துகொண்டுள்ள தீர்வும் பாதையும் அரசியல் ரீதியில் பாமரத்தனமானது, விடலைத்தனமானது. ஈழத் தமிழருக்கு இழைக்கப்படும் அநீதி, அவர்கள் மீதான இன ஒடுக்குமுறையின் கடுமை, அவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகள், துன்ப துயரங்கள், இன்றைய அவலநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஈழத் தமிழினச் சிக்கலுக்கான தீர்வையும் அதை அடைவதற்கான பாதையையும் தெரிவு செய்து  இயக்கத்தைக் கட்டமைத்து விட முடியாது. அப்படிச் செய்ய முயலுவது வெறும் கவர்ச்சிகரமான வாய்ச் சவடாலாகவே இருக்கும்.

போரில் வெற்றி பெற்ற எந்தவொரு அரசும் தோற்றுப் போனவர்களுக்கு (என்னதான் நியாயமானது என்றாலும்) சம உரிமைகளும் சலுகைகளும் வழங்கியதாக வரலாறே கிடையாது. போரில் தோற்றுப் போனவர்கள்தாம் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கு ஈடாக உரிமைகளையும் சலுகைகளையும் தங்களையும் கொடுத்தாக வேண்டும். இவை நீதி, நியாயத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. வென்றவருடைய பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுதான் இன்றைய ஏகாதிபத்திய உலக நியதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவர்களைப் போல சண்டப் பிரசண்டமாகச் சவடாலடிக்கும் தமிழினவாதிகள் பின்வரும் இந்தச் சாதாரண உண்மையைக் கூட பார்க்கவும் ஏற்கவும் மறுக்கிறார்கள்.

இலங்கை பாசிச இராஜபக்சே அரசுக்கும் – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து முடிந்த போரில் வென்றுள்ளது, பாசிச இராஜபக்சே தரப்பு. தோற்றது, ஈழத் தமிழர் தரப்பில் நின்று போரிட்ட புலிகள். வென்ற பாசிச இராஜபக்சே தரப்பு, தோற்ற ஈழத் தமிழர் தரப்புக்கு சம உரிமைகளுக்கும் அதிகாரப் பகிர்வுகளுக்கும் ஒப்புக்கொள்ளும் என்று ஈழத் தமிழர்கள் எதற்காக, எப்படி எதிர்பார்க்கலாம்? சரணடைந்த புலிகளைப் படுகொலை செய்து குவித்த பாசிச இராஜபக்சே என்ன நீதிமானா? அவன் ஈழப் போர் வெற்றியின் ஆதாயங்களை அறுவடை செய்து கொள்ளவே செய்வான். பாசிச இராஜபக்சே கும்பலின் அரசு அதிகாரத்தை வீழ்த்தாமல் ஈழத் தமிழருக்கு சம உரிமை, அதிகாரப் பகிர்வு, தமிழீழத் தனியரசு எதையும் அடையவே முடியாது. இந்திய அரசு உட்பட அமெரிக்கத் தலைமையிலான சர்வதேச சமூகத்துக்குத் தமது போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இவற்றை அடைய முடியும் என்று நம்பச் சொல்லுகிறார்கள் புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும். ஆனால், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அதன் மூலம்தான் ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை நிலைநாட்ட முடியும்; ஈழத் தமிழருக்கு சம உரிமை, அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல, அந்த நிலையிலும் அவசியமானால் தமிழீழத் தனியரசு அமைத்துக்கொள்ளும் பலத்தையும் அவர்கள் பெற முடியும்.

ஆகவே, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் ஈழத் தமிழர் விடுதலைக்கு அடையவே முடியாத வழியை மீண்டும் முன்வைக்கிறார்கள் . ஆனால், ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் மீண்டும் ஒரு முறை இவர்களிடம் ஏமாற மாட்டர்கள்.

-ஆர்.கே.
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_________________________________

  1. இதில் உள்ள கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் மூன்று விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

    1. இவர் கூறுவது போல இலங்கையின் அனைத்துப் பாட்டாளி மக்களும் சேர்ந்து தங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று ஒத்துக் கொண்டாலும், அவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இங்கே உட்கார்ந்து கொண்டு மக இக வும் சொல்லக் கூடாது.

    2. தனது கொள்கைகளோடு ஒத்துப் போகாதவர்களை – ராஜீவ்,அமிர்தலிங்கம்,இதர தமிழ்த் தலைவர்கள் -கொல்வது சரியென்று இவர்கள் சொன்னால், யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கொல்லலாம்.

    2. மிகவும் painstakingly எழுதப்பட்ட கட்டுரை.வாழ்த்துக்கள்

  2. பிரபாகரனின் மாவீரர் தின உரையில் தமிழர்களுக்கு ஒரு நாடு இல்லாதது தான் அவல நிலை தொடர்வதாக சொன்ன பின் இந்தியா தான் இலங்கையில் வைத்த தீ தன்னை நோக்கி வருகிறது என்று தீர்மானம் எடுத்த்து புலிகள் அழிவுக்கு துணை போனது புலிகளின் தோல்வி யின் பெரும் பங்கு பிராந்திய வல்லரசுகள் அவற்றின் கூட்டாளிகள் எடுத்த முடிவின் படியே நடந்தன முன்பு ஆயுத வன்முறைகளை வைத்து இலங்கை மீது ஆதிக்கம் செலுத்திய இந்தியா இப்போது கடவுளின் தந்திரம் போல் பக்தர்களுக்கு சோதனையை கொடுப்பது பின் தன்னிடம் வந்த பின் காப்பாற்றுவது என்பது போல் வெளி சக்திகள் மூலம் இலங்கை அரசை நேருக்கு வது பின் தன்னை நோக்கி வந்த பின் காப்பது என்றும் தமிழர்களுக்கு இலங்கை கொடுக்கும் நெருக்கடிகளை கண்டும் காணாது விட்டூ தமிழர்களை தன்பக்கம் இழுப்பது என்று ஒரு ராஜதந்திரத்த்த்தை பயன் படுத்த்து கிறது

  3. ஈழம் ஒரு எழவு விழுந்த வீடு போலத்தான்… சுமார் இரண்டு லட்சம் பேருக்காக தனி நாடு கேட்பது சுத்த முட்டாள்த்தனம்… ஈழ பிரச்சனை இது மாதிரி கட்டுரை எழுதவும், வைகோ மாதிரி கால்நடையா திரியவும் தான் பயன்படும்… இங்கே இருக்கும் மூடர் கூடம் சும்மா இருந்தாலே இலங்கையில் இருக்கும் தமிழர்கள் நிம்மதியாக இருப்பார்கள்…

    • இழவு விழாத வீடு எது? இத்தாலியா?
      எவள் தாளி அறுந்தாலும்,கவலைப் படாமல்,
      கருமாதி வீட்டில் வயிறு புடைக்க சாப்பிட முடிவது
      இந்தியர்களால்தான்:
      மூடர் கூடம் எது? தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு
      டெல்லியில் பாராளுமன்றம் அருகே எருமைகளை மேய்க்கும்
      சிங்கா?
      வினை விதைத்தவன் வினை. ..பல மடங்கு மகசூல் பெறுவான்

    • எழவு விழ யார் காரணம்?
      உமது தேசிய ஓப்பாரிதானே?
      எந்த தன்மானம் உள்ளவனும் உமது கருத்தை ஏற்க மாட்டான்!
      இந்தியாவை கட்டி அழ உனக்கு உரிமை:
      பிரிந்து சந்தோசமாக வாழ எங்களுக்கு பூரண உரிமை….
      எந்த தனிமனிதனும் பல தலைமுறைகள் “அடிமையாக” வாழ தலைப்படமாட்டான்..அப்படி வாழ்பவனும் மனிதன் அல்ல- அற்பப் புழு!

  4. ஒத்துப் போகாதவர்களை யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்?
    உங்கள் கூற்று: கருனா,டக்லஸ் மாமா,கதிர்காமர் இவர்களையெல்லாம் சகித்துக்கொண்டு,இவர்கள் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்தாலும்,மழையில் நனைந்த எருமை போல இருக்கனும்….
    தாலுக்கா அலுவலகம் முன்பு 21 நிமிடம் போராட்டம்,ரயிலை 6 வினாடி நிறுத்துவது,மெரினா கடற்கரையில் ( 2 பொண்டாட்டியுடன்) 31 நிமிடம் 27 வினாடிகள் உண்ணாவிரதம், ஸ்டாம்பு ஒட்டாமல் டெல்லி எருமைகளுக்கு கடுதாசி எழுதுவது…போதும்..போதும்…
    எனக்கு மனசு வலிக்கிறது: பிரபா இருந்தபோது,வாயையும் சூ….யும் மூடிக் கொண்டு இருந்த
    அரசியல் பேமானிகளை நான் நன்றாகவே அறிவேன்:
    ஒன்று மட்டும் நிச்சயம்: எந்த அரசியல் போராட்டத்துக்கும் நாள்,கால அவகாசம் பொருந்தாது…
    ஏனென்றால் அது கேப்டன் விசயகாந்தின் திரைப்படம் அல்ல:
    எனது காலம் முடியுமுன் என்ன நடக்கும்? எனது காலத்திற்கு பின்பு என்ன நடக்கும்: இருக்கும் வரை போராடுவேன்:

  5. //தமிழகத் தமிழினவாதிகளுக்கு ஈழ இனச் சிக்கல் ஒன்று மட்டுமே விவாதத்துக்கும் வினையாற்றுவதற்குமான ஒரே பிரச்சினை. இந்த நாட்டைச் செயற்களமாகக் கொண்டுள்ள ம.க.இ.க.வினர் தம்முன் உள்ள எல்லாப் பிரச்சினைகளில் ஈழ இனச் சிக்கலுக்கு அதற்குரிய முன்னுரிமை தருகின்றனர்.\\

    இந்த வரிகள் ஈழக் கனவில் எப்போதும் மிதக்க நினைப்பவர்களின் மயக்கத்தை கொஞ்சம் தெளிக்கட்டும். தமிழினவாதிகள் தங்கள் தமிழீழக் கனவு நிறைவேறும் பொருட்டாவது, தமிழ் மக்கள் மற்றும் இந்திய மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது ஒரு நீடித்த ஈழ ஆதரவை தமிழகத் தமிழர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இவர்களுடைய மிதமிஞ்சிய ஈழ ஈடுபாட்டிற்கு தமிழகம் கொடுக்க வேண்டிய விலை மிகப் பெரிதாக இருக்கிறது. பிரபாகரனை மறந்து விட்டு ‘நமோ நமோ’ என்றொரு கூட்டம் கிளம்பி விட்டது.

  6. இலங்கையில் இலங்கைத் தமிழர்களின் மக்கள் தொகை 12 வீதத்திற்கும் குறைந்ததே.அதில் எத்தனை பேர் தமிழீழத்தை ஆதரிப்பார்களோ தெரியவில்லை.இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது .
    இராஜீவ் காந்தியும்
    சிங்கள பாசிச எதிரிகளும்
    ஈழத் தமிழ்த் துரோகிகளும் ?????
    கொல்லப்பட்டபோது அவற்றை எதிர்த்தோ கண்டித்தோ ம.க.இ.க. எழுதியதோ பேசியதோ இல்லை. கள்ள மௌனம் சாதித்ததும் இல்லை; இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஏன் சரியானவை அவசியமானவை என்றுதானே எழுதியது.
    ம.க.இ.க.வின் இந்தப் போக்கு மிக அபாயகரமானது.

  7. //பிரபாகரனின் மாவீரர் தின உரையில் தமிழர்களுக்கு ஒரு நாடு இல்லாதது தான் அவல நிலை தொடர்வதாக சொன்ன பின் இந்தியா தான் இலங்கையில் வைத்த தீ தன்னை நோக்கி வருகிறது என்று தீர்மானம் எடுத்த்து புலிகள் அழிவுக்கு துணை போனது புலிகளின் தோல்வி யின் பெரும் பங்கு பிராந்திய வல்லரசுகள் அவற்றின் கூட்டாளிகள் எடுத்த முடிவின் படியே நடந்தன முன்பு ஆயுத வன்முறைகளை வைத்து இலங்கை மீது ஆதிக்கம் செலுத்திய இந்தியா இப்போது கடவுளின் தந்திரம் போல் பக்தர்களுக்கு சோதனையை கொடுப்பது பின் தன்னிடம் வந்த பின் காப்பாற்றுவது என்பது போல் வெளி சக்திகள் மூலம் இலங்கை அரசை நேருக்கு வது பின் தன்னை நோக்கி வந்த பின் காப்பது என்றும் தமிழர்களுக்கு இலங்கை கொடுக்கும் நெருக்கடிகளை கண்டும் காணாது விட்டூ தமிழர்களை தன்பக்கம் இழுப்பது என்று ஒரு ராஜதந்திரத்த்த்தை பயன் படுத்த்து கிறது// Sethanda Sekar

  8. எதிர் வினையாற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரை..வின்வு குழுமத்தின் பக்கம் உள்ள வாதங்களை எடுத்து வைத்துள்ளது…கருத்தக்களை சொல்ல வேண்டிய விதத்த்தில், கோர்வையாக எழுதப்பட்டுள்ளது…சொல்லப்படும் தீர்வுகள் எந்த அளவுக்கு, இலங்கையில், ஈழத்தில் உள்ள மக்களின் வாழ்வு முறைகளோடு பொருந்தி செல்கிறது என்பதே கேள்வி..இதை ஒட்டிய முயற்சிகள் எதுவும் அந்த பகுதி மக்களிடம் எடுக்க படுகின்றனவா?

  9. தவறு சேகர்! இந்தியாவும் பழைய ஆண்டை பிரிட்டனும், பிரபாகரனை உருவாக்கும்போதே அவரை வைத்து உள்னாட்டிலும், இலங்கையிலும் சில அரசியல் நிகழ்வுகளை நிகழ்த்தவே! காலங்கடந்துதான் பிரபாகரன் உணர்ந்து கொண்டார்!

    இந்திராவிடம் கட்சதீவை விலைக்கு வாங்கிய திருமதி.பண்டாரனாயகே தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களை தேச உடமையாக்கினார்! அவரை அடக்கவும், தமிழ்னாட்டில் பெருகிவரும் திராவிட உணர்வை ஒழித்துகட்டவுமே பிரபாகரனை உருவாக்கி பின்னர் அழித்தது! ஒரு துரோகியை பிடித்து அவருக்கு கருணா என்று பெயர் சூட்டி துரொகமிழைக்கவைத்து வஞசக நகைப்பு நகைத்தது, ஒரு பார்பன அம்மாவின் சாயலில் இல்லை?

  10. பா.ஜ.க சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் “காங்கிரசு முடிந்துபோனது…ஈழம் மலரப்போகிறதுன்னு”பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டு லைக்ஸ் வாங்குது இந்த கும்பல்ஸ் ..

    இவனுங்க லூசா இல்ல லூசு மாதிரி நடிக்குறானுங்களா????????

    • vico is not loosu or not acting like loosu.

      But he has his own clear intention for this political survival!

      He will have alliance with BJP-Modi.

      Now he start singing songs about Modi wave Modi wave.

      Now he is going to be a Modi tail[val]!

      Vico has seen ayiya,amma in past and now he will see MODI for alliance

    • இப்படி நம்பி,நம்பி மோசம் போவதில் தமிழனுக்கு நிகர் தமிழனே

  11. நான் ஒரு ஈழத்தமிழன் என்ற முறையில் இந்தக் கட்டுரையைப் பற்றி எனது கருத்தை, சில வார்த்தைகளில் சொல்வதானால் இது இலங்கையின் ‘உண்மையான நிலவரம் தெரியாத வெறும் உளறல்’ என்று தான் கூற வேண்டும். சிங்களவர்களை, அவர்களின் வரலாற்றை, இலங்கையின் வரலாற்றில் தமிழ்-சிங்கள உறவை, 2000 ஆண்டு பகையின் பரிமாணத்தை, சிங்களவர்களின் paranoia வை, சிங்களபெளத்த பிக்குகள் எந்தளவுக்கு சிங்களவர்களை கட்டுப்படுத்தும் வல்லமையுள்ளவர்கள் என்பதை, சிங்கள பெளத்தத்தின் அடிப்படையே தமிழின எதிர்ப்பு, என்பதை, சிங்கள பெளத்தம் வடக்கிலிருந்து தமிழர்களை வெளியேற்ற 2000 ஆண்டுகளாக சளைக்காமல் முயன்று வருகிறது என்ற வரலாற்று உண்மையை மறந்து விட்டு , விரல் விட்டுக் எண்ணக் கூடிய முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் என்று பீற்றிக் கொள்ளும் சில சிங்களவர்கள் இலங்கைக்கு வெளியே நடைபெற்ற கருத்தரங்குகளில் பேசிய பேச்சுக்களின் அடிப்படையில் ம.க.இ.க. ( முழுப்பெயர் என்ன) தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் ஈழத்தமிழர்கள் பொறுப்பல்ல.

    சிங்கள இனவாதத்தின் ஆழத்தை உணராமல் மார்க்சிய, லெனினிய கண்ணாடியைப் போட்டுககொண்டு ஈழத்தமிழர் பிரச்சனைக்கு விளக்கம் கொடுக்க நினைத்தால் எந்தக் கட்டுரையும் இப்படித்தான் எழுதியவரின் அறியாமையை காட்டிக் கொடுத்து விடும். பிரபாகரனும் ஈழத்தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டமும் இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழெதிரிதிரிகளுக்கும் சோறு போட்டிருக்கிறது. இன்றும் பலருக்கு சோறு போடுகிறது மட்டுமல்ல முகவரி இல்லாதவர்களுக்கு எல்லாம் பேரும் புகழும் பெற்றுக் கொடுக்கிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.

    இலங்கையின் சிங்கள பாட்டாளி வர்க்கம், அவர்களின் பிரதிநிதிகள், இலங்கையிலுள்ள சிங்கள முற்போக்கு வாதிகள், கம்யூனிஸ்டு, மாக்சிய, லெனினிய வாதிகள் எல்லாம் எப்படியானவர்கள், என்பதையோ, அவர்கள் போட்டிருக்கும் முற்போக்கு முகமூடிக்குப் பின்னால் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதை மறுக்கும், தமிழர்களுக்கு சமவுரிமை கொடுத்தால் அவர்கள் நாட்டைப் பிரித்து விடுவார்கள் அதானால் நாங்கள் வடக்கு கிழக்கை எப்படியாவது சிங்கள மயப்படுத்த வேண்டுமென்று நினைக்கும் துட்டகைமுனு மறைந்திருக்கிறான் என்ற உண்மை இந்தக் கட்டுரையை எழுதியவருக்கும் தெரியாது, அவர் சந்தித்த சிங்கள முற்போக்குவாதிகளும் தமது உண்மையான(துட்டகைமுனு) முகத்தை அவருக்குக் காட்டவில்லை என்பது தெளிவாகிறது.

    இலங்கையின் சிங்கள புத்திஜீவிகளும், முற்போக்கு, மாக்சிய, லெனினியவாதிகள் எல்லோருமே தமிழர்களுக்கு உரிமை என்று வரும் போது சிங்கள பெளத்த பாசிஸ்டுக்களாக மாறி விடுவார்கள். உதாரணமாக: கொல்வின் ஆர் டி சில்வா, தயான் ஜெயதிலக, சேகுவேராவின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த ரோகண விஜேவீரா, மற்றும் அவரது ஜனதா விமுக்தி பெரமுனவின் தோழர்கள், இன்று ராஜபக்ச அரசில் அமைச்சராக இருக்கும் வாசுதேவ நாணயக்காரா போன்றவர்கள் கூட சிங்கள “முற்போக்கு, மாக்சிய, லெனினிய சோசலிஸ்டுக்கள்” தான். இப்படியான சிங்கள முற்போக்குவாதிகளின் வரலாறு தெரியாத ஒருவர் தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை. 🙂

  12. இந்தக் கட்டுரையிலுள்ள ஓட்டைகள் சிலவற்றைப் பார்ப்போம். 🙂

    //…..அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.//

    சிங்கள பெளத்த நலன்களுக்கெதிராக சிங்கள பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் தமிழர்களுடன் சேர்ந்து போராடாது. இந்தக் கட்டுரையாசிரியர் சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கும், தமிழர்களை வெறுக்கும் சிங்கள பிக்குகளுக்கும் உள்ள நல்லுறவையும், எந்தளவுக்கு சிங்கள பாட்டாளி வர்க்கத்தை புத்த பிக்குகளால் கட்டுப்படுத்த முடியுமென்பதையும் அறிய மாட்டார் அல்லது அதைக் கணக்கில் எடுக்க மறந்து விட்டார் போல் தெரிகிறது. புத்த பிக்குகள் இருக்கும் வரை இந்த மார்க்சிய – லெனினியப் பார்வை இலங்கையில் எடுபடாது என்பது தான் உண்மை.

    ///இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில், நோக்கில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டு நின்றிருக்கிறார்கள்.///

    சிங்களவர்கள் இந்தியப்படையை ஆரம்பத்திலேயே வெறுத்தனர். அனால் அவர்களை ஆரம்பத்தில் வரவேற்று, சொந்தம் கொண்டாடிய ஈழத்தமிழர்கள், இந்தியப்படைகள் (IPKF) புலிகளுடன் போராடத் தொடங்கி, ஈழத்தமிழ்ப்பெண்களை கற்பழித்து, அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்யத் தொடங்கிய பின்னர் தான் வெறுக்கத் தொடங்கினர். அந்த பொதுவான வெறுப்பின் அடிப்படையில் தான் சிங்களவரும், தமிழரும் ஒன்றுபட்டனரே தவிர, தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்து சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றுபடவில்லை. அந்த தருணத்தில் இந்தியப்படைகள் சிங்களவருக்கும் தமிழருக்கும் பொது எதிரி, அவ்வளவு தான்.

    / //1983-இல்….சந்திரிகா குமாரதுங்கே. அவரைத் தேர்ந்தெடுத்து அமைதி, போர்நிறுத்தம், பேச்சு வார்த்தையை ஆதரித்ததில் சிங்களரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.///

    ஈழத் தமிழர்கள் தான் சந்திரிகா தமது பிரச்சனையைத் தீர்ப்பார் என்று நம்பினார்களே தவிர, சிங்களவர்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்த காரணம் அவர் புலிகளைத் தோற்கடிப்பேன் என்றதாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால ஊழல் ஆட்சியில் சிங்களவர்கள் களைபப்டைந்திருந்தாலும் தான். ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம், அவர்களின் சுயநிர்ணய உரிமையை நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லியிருந்தால் ஒரு சிங்களவர் கூட சந்திரிகாவுக்கு வாக்களித்திருக்க மாட்டார். அது தான் உண்மை.

    ///சுனாமியின் பேரழிவுகளை எதிர்கொள்வதில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.///

    பச்சைப்பொய். இந்தக் கட்டுரையாசிரியருக்கு ஒன்றும் தெரியாது போலிருக்கிறது. சுனாமியின் பேரழிவால் பெரியளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களும் தான். ஆனால் இலங்கை அரசின் உதவிகளை மட்டுமல்ல, உலகநாடுகள் அளித்த உதவிகளைக் கூட ஈழத் தமிழர்களுடேன் சிங்களவர்கள் சரியாகப் பகிர்ந்து கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த பாரபட்சத்தைக் கண்ட கனடாப் பிரதமர் போல் மார்ட்டின் நேரடியாக இலங்கை சென்று கனடாவின் உதவிகள் தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் பகிரங்கமாக கேட்டுக் கொண்டார். அதை விட உலகநாடுகள் அளித்த சுனாமி நிதியை தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள Post-Tsunami Operational Mechanism (PTOM) என்றார் ஒப்பந்தத்தை செய்து விட்டு, அந்த ஒப்பந்தத்தையும் முறித்துக் கொண்டனர் சிங்களவர்கள். அதில் முன்னணியில் நின்றவர்களும் சிங்கள் மார்க்சிய லெனினிய வாதிகள் தான்.

    “The two sides did restart dialogue, and in July 2005 even signed an agreement to set up a joint administrative mechanism called the Post-Tsunami Operational Mechanism (PTOM). But this attempt fell victim to the opposition mounted by the newly mobilised Sinhala nationalists, led particularly by the Janatha Vimukthi Peramuna (JVP), which opposed any resumption of political engagement with the LTTE. The JVP, a powerful member of the UPFA coalition with 39 members in Parliament, filed a petition before the Supreme Court that the PTOM agreement violated Sri Lanka’s Constitution. The Supreme Court upheld some of the JVP objections, thereby effectively nullifying the new institutional mechanism formulated for the government and the LTTE to work together, at the very least on humanitarian issues. In contrast, across the ocean to the east, the Indonesian government and the rebels in Aceh were able to successfully use the humanitarian space opened up by the 2004 tsunami to work towards a peace agreement – one that still holds today.”

    ///முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு.///

    நடேசனின் மனைவி ஒரு விதிவிலக்கு. ஈழ விடுதலைப் போர் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் தம்பதிகள். நடேசன் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்த பின்னர் அவர் நடேசனை மணக்கவில்லை. அப்படியெல்லாம் குறிப்பிடும் படி எந்தக் குழுவும் இலங்கையில் கிடையாது. தென்னாபிரிக்காவில் மட்டுமல்ல அமெரிக்காவில் கூட கறுப்பர்களின் உரிமைகளுக்காக எத்தனையோ வெள்ளையர்கள் போராடியிருக்கிறார்கள், சிறைக்கு சென்றிருக்கிறார்கள், தமது உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள். அப்படி ஒரு சிங்களவர் கூட தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்துக்கு முழு மனதுடன் உண்மையாக ஆதரவளித்ததில்லை. உண்மையில் அந்த விடயத்தில் ஆபிரிக்க, அமெரிக்க கறுப்பர்களை விட ஈழத்தமிழர்கள் அதிர்ஸ்டமற்றவர்க்ள் ஏனென்றால் பேராசை பிடித்த, விட்டுக் கொடுக்காத, இனவாதம் நிறைந்த பெரும்பான்மையினத்திடம் எங்களின் உரிமைகளை கேட்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.

    /// தமிழ்த் தேசிய இன மக்களின் மனித உரிமைக்காகவும் இலங்கைப் பாசிச அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொல்லப்பட்டவர்களும் பத்திரிக்கையாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் சிங்களவரிடையே உண்டு.///

    தயவு செய்து ஒரு சிங்களவரின் பெயரையாவது குறிப்பிடவும். லசந்த விக்கிரமசிங்க தமிழ்தேசிய இனமக்களின் மனித உரிமைக்கு குரல் கொடுத்ததுமில்லை, அதற்காக கொல்லப்படவுமில்லை.

    ///ஈழ விடுதலைப் போராட்டங்கள் நடந்த அதே காலகட்டத்தில், இலங்கைப் பாசிச அரசால் ஈழத் தமிழர்கள் மட்டும் கொன்று குவிக்கப்படவில்லை. பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.///

    சிங்கள இளைஞர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியதால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் ஆயுதம் தூக்கியதன் காரணமே இந்தியப் படையை இலங்கைக்குள் அனுமதித்து தமிழர்களுக்கு இலங்கை அரசு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகிறது. என்ற காரணத்தால் தானே தவிர தமிழர்களுக்கு ஆதரவாக அல்ல.

    ///அவர்களுக்கு எதிரான வெள்ளை வேன் வேட்டை இன்னமும் தொடர்கிறது.///
    வெள்ளை வேனால் பாதிக்கப்பட்டவர்கள்/பாதிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் தானே தவிர சிங்களவர்கள் அல்ல.

    ///ஆகவே, அரசியல் காரணங்களுக்காக சாத்தியமே இல்லாதது அல்ல.///

    அரசியல் காரணங்களுக்கு சிங்களவரும் ஈழத் தமிழரும் ஐக்கியப்படலாம் ஆனால் ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதோ அல்லது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையோ அல்லது வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பூமி என்பதோ அல்லது வடக்கு கிழக்கில் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்பதோ, தமிழர்களுக்கு சமவுரிமை கொடுப்போம் என்பதையோ அங்கு பேசாது விட்டால், நிச்சயமாக சிங்களவர்களும் தமிழர்களும் ஐக்கியமாவது சாத்தியம்.

    ///அம்மக்கள் எவ்வளவு பெரிய மக்கள் சக்தியைத் திரட்டினாலும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவின்றி பாசிச இராஜபக்சே கும்பலின் அதிகார ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது.///

    ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்களின் ஆதரவில்லாமல் இலங்கையில்சிங்கள பெளத்தர்களின் ஆதரவுடன் மட்டும் ஆட்சி அமைக்க முடியும் அதைத்தான் மகிந்த ராஜபக்ச செய்து காட்டியிருக்கிறார். அதனால் சிங்கள பெளத்தர்கள் தனியாக ஆட்சியை மாற்றவும் முடியும் தமிழர், முஸ்லீம்களின் ஆதரவு சிங்களவர்களுக்கு தேவையில்லை.

    ///அதே போல, சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவின்றி ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் என்னதான் போராடினாலும் தமது உரிமைகளைப் பெறவும் முடியாது. இது யாருடைய விருப்பங்களுக்கும் அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தம்///

    சிங்கள உழைக்கும் மக்கள் பெரும்பான்மையினர் சிங்கள் பெளத்தர்கள். அவர்களை பெளத்த பிக்குகளால் கட்டுப்படுத்த முடியும். அதனால் அவர்கள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கனவிலும் ஆதரிக்கப் போவதில்லை. வடக்கு கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றி, தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணில் சிறுபான்மையினராக்கும் திட்டத்துக்குத் தான் சிங்கள உழைக்கும் வர்க்கமும், புத்த பிக்குகளும் முழு ஆதரவளிப்பார்கள், அளிக்கிறார்கள்.

    ///இதைத்தான் ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகள் (அவை சிறியவையானாலும்) தமது பாதையாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு, இயக்கங்களைக் கட்டமைத்து வருகிறார்கள். இவ்வாறான பாதையைத்தான் ம.க.இ.க.-வினர் ஆதரிக்கின்றனர்.///
    மன்னிக்கவும் ம.க.இ.க.-வினர் கலர் கலராக கனவு காண்கின்றனர். 🙂

    ///சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க.- வினர் ஏற்கின்றனர்.///

    நல்ல பகிடி, இலங்கையைப் பற்றியோ அல்லது சிங்களவர்களைப் பற்றியோ தெரியாதவர்களின் கருத்தை மறப்போம், மன்னிப்போம். 🙂

    • செம பதிலடி. சிங்களவர்கள் ஈழத்தை அங்கீகரிக்கவே மாட்டார்கள் என்பது தான் நமக்கு வரலாறு சொல்லி கொடுத்திருக்கிறது. ஜனதா விமுக்தி பெருமன என்ற போலி கம்யூனிச அமைப்பு தமிழர்களை துரத்தி துரத்தி அடித்தனர் என்பது வரலாறு. சிங்கள கம்யூனிஸ்ட்கள் பெரிதும் கொண்டாடும் ரோகன விஜேவீர ஒரு களைந்தெடுத்த தமிழர் விரோதி என்பதும் வரலாறு. நீங்கள் சொல்வது போல் அங்கு புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிங்கள பாட்டாளி மக்கள் ஒரு போதும் தமிழர்களோடு இணைந்து எள்ளளவும் போராட மாட்டார்கள்.

      எங்கேயோ ஒன்று இரண்டு சிங்களவர்கள் கேமராவுக்கு போஸ் கொடுத்து போராடுவதை பார்த்து, ஏதோ பெரும்பான்மையான சிங்கள பாட்டாளி இனமே ராஜபக்சேவுக்கு எதிராக, தமிழர்களுக்கு ஆதராவாக போராட முன் வருவார்கள் என்று நாம் நம்பினால், நம்மை போன்ற அடி முட்டாள் இனம் உலகில் வேறெங்கும் இருக்க மாட்டார்கள்.

      சிங்கள-ஈழ போராட்ட பின்னணியை பற்றி கடுகளவு கூட புரிதல் இல்லாமல் எழுத பட்டது தான் இந்த கட்டுரை. தங்களின் சமுதாய பார்வையை வேறொரு சமுதாயத்தினுள் நுழைத்து தீர்வு காண நினைப்பது அடி முட்டாள் தனம். அதை தான் இந்த கட்டுரை செய்ய நினைக்கிறது. A classic case of stupid extrapolation!

    • தங்கள் கருத்தினை வழிமொழிகின்ரென். ம க இ க முதலில் தமிழ் இலக்கிய வரலாறு. தமிழக வரலறும் பன்பாடும். இலங்கை தமிழ் வரலாறும் பன்பாடும். படிக்கட்டும் வர்க்க போராட்டம் இன பிரச்சினை வேறு

  13. //////ம.க.இ.க. வினரின் பார்வையில் – இதுதான் அறிவியல்பூர்வமானது, பாட்டாளி வர்க்கப் பார்வையிலானது – ///////

    வறட்டு கொள்கை மட்டுமே முக்கியம், எப்படி எனில்……..

    //////தமிழீழத் தனியரசு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து, அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள், தமிழினவாதிகள். பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் அவ்வாறு செய்ய முடியாது, செய்யக் கூடாது, செய்யவுமில்லை.//////

    ஏன்ன முடியாது……. ஏன்னா வறட்டு கொள்கை……… மேலும்

    ///////மார்க்சிய – லெனினியப் பார்வையே கிடையாது.///// எங்களுக்கு ,எப்படி மதவாதி தன் மத கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கிரானோ athu போல் எங்களுக்கு மார்கிசம் என்பது மதக்கோட்பாடு , அதை தாண்டி வரமாட்டோம்…….. தாண்டி வந்துட்டா தீட்டு……

    ////ஒடுக்கும் (சிங்களத்) தேசிய இனத்தவரிடையே ஈழத் தமிழர் தன்னுரிமையையும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனத்தவரிடையே ஐக்கியத்தையும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.////////

    இதே சொன்னா என்ன பைத்தியக்காரன் றாங்க , காத சுத்தி மூக்க தொடுறதுன்னு சொல்லுவாங்கல்ல athu இதுதான்…….. மேற்கண்ட வாசகம் தான் எங்கள் கொள்கை முடிவு……. அதாவது சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து போராடி ஈழ விடுதலை பெற வேண்டும்.. கொலை, கொள்ளை, கற்பழிப்பு , இன அழிப்ப்பு எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும்……… தமிழன் சிங்களவனுடன் சேர்ந்து போராடி தமிழன் சுதந்திரம் பெற வேண்டும். ……………

  14. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக உருத்திரகுமார் என்பவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.அவர்களுக்கு பிரதமர், வடமாகாண முதல்வர் என்று நிறைய இருக்கிறார்கள்.அவர்கள் கனவு உலகத்தில் வாழவே விரும்புபவர்கள்.
    ம.க.இ.க. இந்திய மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதே தேவையானது.

    • முப்ப்டை யோடு ஒரு அரசு காவல் துறை நீதி மன்றம் என்று சகல அரசுத்துறையுடன் இருந்த அரசை மறந்து கனவு உலகம் என்கிறீர்கள் கனவு கண்டது மட்டும் அல்ல உம்மை அதை சாதித்தததையும் யாராலும் மறுக்க முடியாது ஒரு பெரிய நாட்டை வைத்த்து இருப்பவர்களுக்கே மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாது இருக்கும் போது ஒரு சீறிய நாடு எல்லோரும் சேர்ந்து தாக்கினால் எப்ப்டி நிலைத்த்து நிக்கும்

      • நன்றி ப்ரேமா:
        வல்லரசு இந்தியாவே பிச்சைப் பாத்திரத்துடன்
        உலக வங்கி கடை திறந்தவுடன், முதல் ஆளாய்
        நிற்கும்போது…எல்லா நிலைகளும் ஆதிக்கம்
        இருந்த தமிழ் ஈழம்,புறம்போக்கு நாடுகளின் கண்ணை உறுத்தியது
        உண்மைதான்…ஒரு புறம் இலங்கைக்கு துப்பாக்கியும்,எலிகாப்டரும்,அதிவிரைவு
        படகுகளும் (ஓசியில்) வழங்கிவிட்டு,புலிகளுக்கு அமைதி உப தேசம் செய்த பிரிட்டன்
        மகாராணிகள்…..

  15. @ Viyasan,

    //புத்த பிக்குகள் இருக்கும் வரை இந்த மார்க்சிய – லெனினியப் பார்வை இலங்கையில் எடுபடாது என்பது தான் உண்மை //

    முதலில் கட்டுரை தமிழர்களை சிங்கள பிக்குகளோடு இணைந்து போராடக் கோரவில்லை. சரியாகச் சொல்லப் போனால், தமிழ்பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர்களுக்கான வழிகாட்டுதலை கட்டுரை முன்வைக்கவில்லை. பொதுவில் எது சரியான மா.லெ கண்ணோட்டம் என்பதையும், குறிப்பாக ஈழத்தமிழர்களின் எந்தவிதமான போக்கைக் கைக்கொள்வதை இந்திய பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும் என்கிற பார்வையிலேயே கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்னவென்பது உலகெங்கும் இது வரையில் சோதித்தரியப்பட்ட வழிமுறை எதுவோ, அதையே ஒரு விரிவாக்க நலன் கொண்ட பக்கத்து நாட்டின் பாட்டாளி வர்க்கம் என்கிற வரம்புக்குள் நின்று நாங்கள் ஆதரிக்க முடியும்.

    இந்திய அமைதிப்படைகெதிராக… //பொதுவான வெறுப்பின் அடிப்படையில் தான் சிங்களவரும், தமிழரும் ஒன்றுபட்டனரே தவிர, தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்து சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றுபடவில்லை. அந்த தருணத்தில் இந்தியப்படைகள் சிங்களவருக்கும் தமிழருக்கும் பொது எதிரி, அவ்வளவு தான்.//

    உங்களது இதே அளவு கோளைத் தான் முந்தைய மறுப்பில் நீங்களே மறுத்திருந்தீர்கள். வெளியிலிருந்து வந்த பொது எதிரிக்கு எதிராக சிங்கள தமிழ் இனத்தைச் சேர்ந்த ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரே ஒன்றுபடும் போது, சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கும் தமிழ் பாட்டாளி வர்க்கத்துக்குமான பொது எதிரிக்கு எதிராக ஒன்றுபடுவதில் சிக்கல் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை.

    //பச்சைப்பொய். இந்தக் கட்டுரையாசிரியருக்கு ஒன்றும் தெரியாது போலிருக்கிறது. சுனாமியின் பேரழிவால் பெரியளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களும் தான்…….etc About Tsunami releif //

    கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது உண்மை…! நீங்கள் சொல்வது அரை உண்மை. தமிழர் பகுதிகளுக்கு நிவாரணப் பணிகள் சென்றடைவதை சிங்கள அரசு தாமதப்படுத்தியது என்பது உண்மை தான். ஆனால், சுனாமியால் தமிழர் பகுதிகள் பாதிக்கப்பட்டவுடன் அரசு இயந்திரம் அந்தப் பகுதிகளை அடையும் முன் சுனாமியால் பாதிக்கப்படாத பகுதிகளில் இருந்த சாமானிய சிங்கள மக்கள் உதவிக்கு ஓடோடி வந்தனர். சொல்லப்போனால், அந்தக் காலப்பகுதியில் நானே கூட ஒரு புலி ரசிகன் தான். இப்படி சிங்களர்கள் தமிழர்களுக்கு உதவி செய்த சம்பவங்கள் சிலவற்றை பத்திரிகைகளிலும் (இணையத்திலும்) வாசித்து ஆச்சர்யப்பட்டது இன்றும் நினைவிருக்கிறது.

    உதாரணத்திற்கு ஒரு சுட்டி.. (தேடினால், நிறைய கிடைக்கும். எனினும், நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் மட்டுமே இருப்பதால், நேரத்தை விரையம் செய்ய எனக்கு விருப்பமில்லை )

    https://www.wsws.org/en/articles/2005/01/ampa-j08.html?view=print

    ///முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு.///

    தமிழர்களின் உரிமைகளை ஆதரிக்கக் கூடிய சிங்கள குழுக்கள் பற்றி நீங்கள் சொல்வது – //அப்படியெல்லாம் குறிப்பிடும் படி எந்தக் குழுவும் இலங்கையில் கிடையாது. //

    இது ஒரு பச்சைப் பொய்… (பார்க்க – http://www.wsws.org/en/articles/2013/07/01/sril-j01.html). விதிவிலக்காக புலிகளையே ஆதரித்த வெகுசில சிங்களர்கள் கூட உண்டு. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய / வலியுறுத்தும் சிறுபான்மை சிங்கள அரசியல் குழுக்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்தப் பிரிவினரை வளர்த்தெடுக்கவோ, இவர்களோடு நேசபாவம் காட்டவோ, இவர்களைக் கொண்டு பிற சிங்கள மக்களிடம் தமிழர்களின் துன்பதுயரங்களைப் பிரச்சாரம் செய்யவோ, தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையின் நியாயத்தை எடுத்துக் கூறவோ புலிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக, பெரும்பான்மை சிங்களர்களிடமிருந்து தமிழர்களை அந்நியப்படுத்தும் வேலையைத் தான் செய்தனர். பல சந்தர்பங்களில் அப்பாவி சிங்களர்களைக் கொன்று குவித்து எந்தக் காலத்திலும் சிங்களப் பெரும்பான்மை தமிழர்களோடு நெருக்கம் காட்டிவிடாதவாறு தடுத்துக் கொண்டனர். இதன்மூலம் தமிழ் சமூகத்திற்கு வெளியே பெரும்பூதம் போல் சிங்கள மக்கள் ஒட்டுமொத்தமாக நிற்பதாக கட்டமைத்து தங்கள் சாகசவாத / இராணுவவாத அரசியல் போக்கிற்கு நியாயம் தேடிக் கொண்டனர்.

    /////சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க.- வினர் ஏற்கின்றனர்.///

    நல்ல பகிடி, இலங்கையைப் பற்றியோ அல்லது சிங்களவர்களைப் பற்றியோ தெரியாதவர்களின் கருத்தை மறப்போம், மன்னிப்போம். 🙂 ///

    தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ம.க.இ.க அமைப்பினரால் ‘ஐந்தாம் கட்ட ஈழப் போரை’ துவங்க முடியாது என்பதால் நீங்கள் மன்னித்துத் தான் ஆக வேண்டும். அவ்வாறு ஒரு போரை இங்கிருந்து அங்கே துவங்க உத்தேசித்துள்ள சீமான், நெடுமா போன்றோரே உங்களுக்கு உவப்பானவர்களாக இருப்பார்கள். என்ன இருந்தாலும், 50,000 ஆண்டு வீர வரலாறு கொண்டவர்களில்லையா நாம்? இன்னும் ஒரு மூன்று நான்கு லட்சம் மக்களையாவது கொல்லக் கொடுத்தால் தானே அடங்கும்?

    ஆமாம், நீங்கள் எங்கே ரொரோண்டாவா, அவுஸ்திரேலியாவா?

  16. //முதலில் கட்டுரை தமிழர்களை சிங்கள பிக்குகளோடு இணைந்து போராடக் கோரவில்லை. சரியாகச் சொல்லப் போனால், தமிழ்பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர்களுக்கான வழிகாட்டுதலை கட்டுரை முன்வைக்கவில்லை. ///

    திரு.மன்னாரு,

    என்னுடைய பதிலின் சாரம் கட்டுரையாசிரியரின் மார்க்சிய-லெனினிய கண்ணோட்டம் இலங்கைப் பிரச்சனைக்கு சரிவராது என்பது தான். இலங்கையின் உண்மையான நிலவரத்தை அதாவது அறுதிப்பெரும்பான்மையினராகிய சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் மீது எந்தளவுக்கு சிங்கள பெளத்த பிக்குகள் ஆளுமையைக் கொண்டுள்ளார்கள் என்பதையும், சிங்கள பாட்டாளி வர்க்கம் ஒன்றும் மார்க்சிய லெனினிய வாதிகள் அல்ல, துட்ட கைமுனுவின் வாரிசுகள் எனப் பெருமைப்படும் சிங்கள பெளத்தர்கள் என்பதைக் கட்டுரையாசிரியர் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி விட்டார் என்பதையும் சுட்டிக் காட்டுவது தான்.

    இலங்கை அரசியலிலும், சிங்களப் பெரும்பான்மையினரிடமும் பெளத்த பீடங்களும், பெளத்த பிக்குகளினதும் ஆதிக்கத்தைப் பற்றி ஒரு வரி கூடக் கூறாமல், இலங்கையின் இனப்பிரச்சனையைப் பற்றி யாராவது கருத்து தெரிவித்தால், அதை விட முட்டாள் தனம் வேறொன்றும் இருக்கவே முடியாது, இலங்கையில் இன்று வரை தமிழர்களின் போராட்டத்துக்கு எந்த வகையான தீர்வும் கிடைக்காததற்குக் காரணம், விடுதலைப்புலிகளோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளோ அல்ல அதற்கு முதல் காரணம் சிங்கள பெளத்த பிக்குகள் தான். அவர்களின் சம்மதம் இல்லாமல் இலங்கையில் எந்த சிங்கள அரசியல்தலைவரும் தனது அரசியல்வாழ்வைப் பணயம் வைத்து ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த முனையவே மாட்டார் அந்த உண்மையைச் சுட்டிக் காட்டினால் “சிங்கள் பிக்குகளோடு இணைந்து போராடக் கோரவில்லை” என்கிறார் தோழர் மன்னாரு. கட்டுரையாசிரியர் புத்த பிக்குகளைப் பற்றி எதுவுமே கூறவில்லை, ஏனென்றால் அவருக்கு இலங்கையிலுள்ள உண்மையான நிலவரமோ, சிங்களவர்களைப் பற்றியோ எதுவும் தெரியாது என்பது தான் உண்மை.

    ///பொதுவில் எது சரியான மா.லெ கண்ணோட்டம் என்பதையும், குறிப்பாக ஈழத்தமிழர்களின் எந்தவிதமான போக்கைக் கைக்கொள்வதை இந்திய பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும் என்கிற பார்வையிலேயே கட்டுரை எழுதப்பட்டுள்ளது.///

    மார்க்சிய-லெனினிய வாதிகள் அல்லது கம்யூனிஸ்டு கட்சிகள் இந்தியாவில் ஆட்சியில் இருந்தால், அல்லது இந்தியாவின் பெரும்பான்மை பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தால், “ஈழத்தமிழர்கள் எந்தவிதமான போக்கைக் கைக்கொள்வதை இந்திய பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும்” என்று அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு அறிவுரை கூறலாம். ஆனால் அவர்களே ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் இந்தியாவில் கூட்டணி தேடி அலைந்து திரிந்து கொண்டு, இந்திய பாட்டாளி வர்க்கம் முழுவதையும் தாம் பிரதிநிதித்துவப் படுத்துவதாக நினைத்துக் கொள்கிறார்களா என்பதை தோழர் மன்னாரு விளக்குவார் என்று நம்புகிறேன். 🙂

    ///ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்னவென்பது உலகெங்கும் இது வரையில் சோதித்தரியப்பட்ட வழிமுறை எதுவோ, அதையே ஒரு விரிவாக்க நலன் கொண்ட பக்கத்து நாட்டின் பாட்டாளி வர்க்கம் என்கிற வரம்புக்குள் நின்று நாங்கள் ஆதரிக்க முடியும்.///

    அதாவது ஒரு நாட்டின் உண்மை நிலவரத்தை அறியாமல் ஒரே Formula வை எல்லா நாட்டிலுள்ள பிரச்சனைக்கும் தீர்வாகக் கூறுவது, வேறு வகையில் சொல்வதானால், எல்லா நோய்க்கும் ஒரே மருந்தைக் கொடுத்துப் பார்ப்பது, நோயாளி செத்துப்போவதை அல்லது நோய் இன்னும் தீவிரமடைவதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அப்படித்தானே? 🙂

    //சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கும் தமிழ் பாட்டாளி வர்க்கத்துக்குமான பொது எதிரிக்கு எதிராக ஒன்றுபடுவதில் சிக்கல் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை.//

    நான் என்ன சொன்னேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அதாவது தமிழர்கள் தேசிய இனம் என்பதையோ அல்லது வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதையோ அல்லது தமிழர்களுக்கு பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையோ சிங்கள பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவற்றை தமிழர்கள் சிங்கள பாட்டாளி வர்க்கத்திடம் வலியுறுத்தினால் அவர்களுக்கு தமிழர்கள் தான் பொது எதிரியாவார்கள்.

    /// (பார்க்க – http://www.wsws.org/en/articles/2013/07/01/sril-j01.html). ///

    இதுவரை இலங்கையில் அரசாங்கத்துகெதிராக சிங்களவர்கள் மேற்கொண்ட எந்தக் கலவரமோ, அல்லது ஆயுதமேந்திய போராட்டமோ, அல்லது அந்தப் போராட்டங்களை நடத்திய சிங்கள இளைஞர்களோ தமிழர்களைத் தேசிய இனமாகவோ அல்லது அவர்களின் சுயநிர்ணய உரிமையையோ ஆதரிக்கவில்லை. அல்லது அவர்கள் எவரும் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை, சுயநிர்ணய உரிமையை ஆதரித்து ஒரு போஸ்டர் கூட ஒட்டியதில்லை. மாக்சிய லெனினிய வாதியாகிய ரோகண விஜேவீராவின் கடைசி போராட்டம் கூட Indo-Lanka Accord இன் கீழ் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதை எதிர்த்து தான் நடைபெற்றது.

    “Rajapakse’s list of threats included the “re-emergence” of the LTTE via groups such as the Transitional Government of Tamil Eelam and the British Tamil Forum abroad. He alleged that these groups were pushing for “international investigations into war crimes and claims of genocide” and “for the resumption of conflict through reorganising local pro-LTTE elements.”

    “The defence minister’s reference to a renewed “terrorist” threat is aimed at whipping up anti-Tamil communalism to divide the emerging struggles of the working class. Communal politics has been the stock-in-trade of Colombo governments ever since the country’s formal independence in 1948. Repeated anti-Tamil pogroms and entrenched official discrimination led to the eruption of the conflict”

    “….The central thrust of the defence secretary’s lecture was to foment communal divisions while preparing the security forces to suppress any anti-government opposition.”

    நீங்கள் மேலே குறிப்பிட்ட லிங்க் இல் கூட, இனிமேல் சிங்கள பாட்டாளி வர்க்கம் தமிழர்களுடன் சேர்ந்து போராடும் என்று கோத்தபாய ராஜபக்ச கூறவில்லை. தமிழர்களால் நாட்டுக்கு ஆபத்து, தமிழ்ப் பயங்கரவாதம் உயிர்த்தெழுகிறது என்ற பீதியைக் கிழப்பினால் சிங்கள பாட்டாளி வர்க்கத்தை அரசங்கத்துக்கெதிராக கிளர்ந்தெழாமல் ஒருங்கிணைக்கலாம் என்பது தான் கோத்தபாயாவின் கருத்து, இதிலிருந்து என்ன தெரிகிறது.தமிழர்களால் நாட்டுக்கு ஆபத்து, அல்லது தமிழர்கள் உரிமை கேட்கிறார்கள் அவர்களை அடக்க வேண்டும் என்றால் சிங்கள பாட்டாளி வர்க்கம் தமது பிரச்சனைகளை மறந்து அரசாங்கத்தின் பின்னால் அணிதிரளும் என்பது தான். அதாவது தமிழர்களுக்கெதிரான சிங்கள இனவாதம் அவர்கள் ஒன்று படச் செய்யும் வல்லமையுள்ளது. இந்த லட்சணத்தில் சிலர் தமிழர்களை சிங்கள் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடட்டுமாம்.

  17. ///ஆனால், சுனாமியால் தமிழர் பகுதிகள் பாதிக்கப்பட்டவுடன் அரசு இயந்திரம் அந்தப் பகுதிகளை அடையும் முன் சுனாமியால் பாதிக்கப்படாத பகுதிகளில் இருந்த சாமானிய சிங்கள மக்கள் உதவிக்கு ஓடோடி வந்தனர். ///

    பக்கத்து வீடு எரிந்ததை பார்த்து அடுத்த வீட்டுக்காரன் உதவி செய்ததைப் பார்த்து விட்டு, அந்த நாட்டிலேயே இனப்பிரச்சனை இல்லை, என்று ஒருவன் முடிவெடுத்தால் அது எவ்வளவு முட்டாள் தனமானதோ அது போல் தான் ஒரு சில சிறிய நல்லெண்ணமுள்ள சிங்களவர்களின் செயல்களின் அடிப்படையில் இலங்கையில் சிங்கள-தமிழர் பிரச்சனையைப் பார்ப்பதுமாகும். சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து நடைபெற்ற ஒவ்வொரு இனக்கலவரத்திலும் கூட சில சிங்களவர்கள் தமிழர்களைக் காப்பாற்றித் தானிருக்கிறார்கள் அதைக் காரணம் காட்டி இலங்கையின் சிங்களவர்களிடம் இனவாதம் இல்லை என்று கூற முடியுமா?

    ஒரு சில தனிப்பட்ட சிங்களவர்களிடம் எங்களுக்குள்ள நட்பை அல்லது அவர்களிடம் எங்களுக்கேற்பட்ட நல்ல அனுபவத்தை முழுச்சிங்கள இனத்தின் institutionalized இனவாதத்தை எடைபோடும் அளவுகோலாகக் கொள்வது மிகவும் தவறு. உண்மையில் சிங்களவர்கள் இனவாதமற்றவர்கள் என்றால் சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், யார் தமிழர்களுக்கு உரிமைகளை மறுக்கிறார்களோ, எந்தக் கட்சி அல்லது எந்த அரசியல்வாதி தமிழரகளுக்கெதிராக கூடுதலாக நஞ்சைக் கக்கிறாரோ அவரை, அந்தக் கட்சியைத் தான் சிங்களவர்கள் ஆட்சியை அமைக்கத் தெரிவு செய்தது, ஏன்?

    சிங்களவர்களின் இந்த தமிழ் வெறுப்பு இனவாதத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட அரசியல்வாதிகள் இரண்டு பேர். ஒன்று ஜே. ஆர்.ஜெயவர்த்தனா மற்றவர் மகிந்த ராஜபக்ச. அதனால் தான்:

    President Jayawardene was quoted in the Daily Telegraph of 11 July 1983 as saying: “I am not worried about the opinion of the Tamil people.. now we cannot think of them, not about their lives or their opinion … Really if I starve the Tamils out, the Sinhala people will be happy”.

    அதே போல் ராஜபக்ச வன்னியில் தமிழர்களைப் பதைக்கப் பதைக்க கொன்றார் என்பதில் சிங்களவர்களுக்கு எந்த வித சந்தேகமுமில்லை, ஆனால் சிங்களவர்கள் சாதி, மத வேறுபாடின்றி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து கடைசிவரை காப்பாற்ற முனைவார்கள். ஏனென்றால் அவர்களின் சார்பில் மகிந்த ராஜபக்ச தமிழர்களைக் கொன்றிருக்கிறார். அதாவது அப்பாவித் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை மறுப்பது தான் தாய்நாட்டுப்பற்றின் அடையாளம் என்பது சிங்களவர்களின் கருத்து. இப்படியான சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் தமிழர்கள் எப்படி இணைந்து தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராட முடியும் என்பது இந்தக் கட்டுரையாசிரியருக்கும், தோழர் மன்னாருவுக்கும் தான் வெளிச்சம். 🙂

    ////உதாரணத்திற்கு ஒரு சுட்டி.. (தேடினால், நிறைய கிடைக்கும்.////

    உங்களுக்காக நானும் சுட்டிகளைத் தேடி இணைத்திருக்கிறேன். ஒரு சுட்டி எவ்வாறு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச வெளிநாட்டு சுனாமி நிதியை தனது வங்கிக்கணக்குக்கு மாற்றினார் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது, சுனாமி நிதி மட்டுமல்ல, போருக்குப் பின்னால் இந்திய உதவிகள் கூட முழுமையாக தமிழர்களைச் சென்றடைவதில்லை. இன்னொரு சுட்டியில் செஞ்சிலுவைச் சங்கத்தால் தமிழர்களுக்கு என ஒதுக்கப்பட்ட டிராக்டர்களை சிங்களவர்களுக்கு திருப்பி விடுவதை பார்த்து, செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரியாகிய ஒரு வெளிநாட்டுப் பெண் செய்வதறியாது அழுவதைக் காணலாம். இது தான் சிங்களவர்களின் வழக்கம் இப்படியான தில்லு முல்லுகள் தான் சுனாமி நிதியுதவிக்கும் நடைபெற்றது, இதெல்லாம் அறியாமல் தமிழ்நாட்டு மாக்சிய, லெனினிய வாதிகள் சிங்களவர்களுடன் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுங்கள் என்கிறார்கள், அதற்கு ஒரு சில சிங்களவர்கள் சுனாமி நேரத்தில் உதவி செய்தார்கள், அதை நானும் வாசித்தேன் என அண்ணன் மன்னாருவும் வக்காலத்து வாங்குவதைப் பார்த்து எனக்கு எங்கே போய் முட்டிக் கொள்வதேன்று தெரியவில்லை.

    1. Ethnicity, Aid, and Peace in Fragile States: A Sri Lankan Case Study http://www.sangam.org/articles/view2/1217.pdf.PDF

    2. The Tsunami funds scandal popularly known as the Helping Hambantota case
    http://www.lankastandard.com/vault/helping-hambantota-investigation/

    3. World Bank aid diverted to Sinhala colonisation in Mullaiththeevu
    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34377

    4. Indian aid to war-affected Tamils diverted to Sinhala colonisers
    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34735

    5. Govt. authorities interfere with distribution of two wheel tractors to war affected farmers by the Red Cross – The photo shows the Red cross Officer crying as their plans to help Tamils interfered with on racial grounds.
    http://www.lankanewspapers.com/news/2010/10/61465_space.html

    ///புலிகளையே ஆதரித்த வெகுசில சிங்களர்கள் கூட உண்டு.///

    அவர்கள் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஆதரித்தார்கள். தமிழர்களிடம் பணம் உண்டு, இப்படித்தான் அவர்களிடமிருந்து பணத்தைக் கறக்க முடியும் என்று சிங்களவர்களுக்குத் தெரியும். வன்னிப்போரின் முடிவில் சிங்கள இரானுவத்தினர் கூட முள்வேலி முகாம்களிலிருந்த பலரை பணம் வாங்கிக் கொண்டு வெளியே விட்டார்கள். அதனால் அந்த சிங்கள ராணுவத்தினர் கூட உங்களின் அகராதியில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் தமிழர்களின் போராட்டத்தையும் ஆதரிப்பவர்கள் அப்படித்தானே? 🙂

    //அவ்வாறு ஒரு போரை இங்கிருந்து அங்கே துவங்க உத்தேசித்துள்ள சீமான், நெடுமா போன்றோரே உங்களுக்கு உவப்பானவர்களாக இருப்பார்கள்.//

    உண்மையில் இவர்கள் ஈழம் அமைத்து தருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ, எனக்குத் தெரியாது அப்படி எந்த நம்பிக்கையும் எனக்குக் கிடையாது. அதேவேளையில் எங்களை ஆதரிப்பவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரிந்தாலும் கூட, அவர்களின் ஆதரவை எதற்காக புறக்கணிக்க வேண்டும். சகோதர உணர்வு அவர்களை இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை அறிய அவர்களைத் தூண்டுகிறது. அதனால் அவர்கள் எங்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ராஜபக்சவை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டிய தேவையுள்ளவர்கள் மட்டும் தான், சீமான், நெடுமாறன் போன்ற தமிழீழ ஆதரவாளர்களை தூற்றுவார்கள் என்பது என்னுடைய கருத்து.

    என்னைப் பொறுத்தவரையில் தமிழீழத்தை விட, இப்பொழுது வடக்கு –கிழக்கில் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நிறுத்தப் படவேண்டும். அதற்கு சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் கூட்டுச் சேர முடியாது. ராஜபக்ச அரசு வடக்கு கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றுகிறது என்று சிங்கள பாட்டாளி வர்க்கம் கேள்விப்பட்டால், இப்பொழுது மகிந்தா ராஜபக்சவைக் கடவுளாகக் கும்பிடாத சிங்களவர்கள் கூட அவரைக் கடவுளாகக் கும்பிடத் தொடங்கி விடுவார்கள்.

    //இன்னும் ஒரு மூன்று நான்கு லட்சம் மக்களையாவது கொல்லக் கொடுத்தால் தானே அடங்கும்?//

    நீங்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் பல தமிழ் Surrender Agents களின் வேலை என்னவென்றால் , சிங்களவர்கள் மூன்று நான்கு லட்சம் எங்களின் மக்களைக் கொன்றதை மறந்து விட வேண்டும், அவர்கள் கொன்றதை நினைவூட்டி, நீதி கேட்டால், அவர்கள் மிஞ்சி இருக்கிறவர்களைல்லாம் கொன்று விடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டி, அவர்களைப் போர்க்குறச் சாட்டுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். ஆனால் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு பேராகக் தமிழர்கள் கொல்லப்படுவதை, அபலைப்பெண்கள் கற்பழிக்கப்படுவதை, அல்லது தமிழர்களின் வீடுகளிலும் நிலங்களிலும் சிங்களவர்களைக் குடியேற்றப்படுவதை பற்றி எல்லாம் அவர்கள் பேசமாட்டார்கள், ஏனென்றால் அதுவல்ல Surrender Agents களின் வேலை. 🙂

    //ஆமாம், நீங்கள் எங்கே ரொரோண்டாவா, அவுஸ்திரேலியாவா?//

    ரொரோண்டாவோ, அவுஸ்திரேலியாவோ அல்லது ஆபிரிக்காவாகவோ இருந்தால் தான் என்னங்கோ? வெளிநாடுகளில் வாழ்கிறவர்கள் எல்லாம் ஈழத்தமிழர்கள் இல்லாமல் போய் விடுவார்களா? அவர்கள் எல்லாம் கருத்துக் கூற முடியாதா?

  18. இனம் என்பது, வர்க்கத்திற்கு அப்பாற்பட்டது போல பிதற்றும் உங்களது வரலாற்று அறிவு வெறும் பெருமை பீத்தகலயம் என்பது தெரியவருகிறது. தமிழினம் மட்டுமல்ல எந்த ஒரு இனத்தையும் அதன் சமூக வரலாற்று மெய்மையிலும், சமூக பொருளாதார, அரசியல் வர்க்க கண்ணோட்டத்திலும் அதன் வரலாறு, பண்பாட்டு அம்சங்களை ஆராய்வதே ம.க.இ.க.வின் கண்ணோட்டம். அந்த வகையில் எந்த ஒரு தேசிய இனத்தின் முற்போக்கு அம்சத்தையும், பிற்போக்கு அம்சத்தையும் கவனத்தில் கொண்டே ம.க.இ.க. விமர்சித்து வருகிறது.

    உங்களைப்போல உலகத் தமிழினத்திலேயே யாழ்ப்பாண வெள்ளாள கொழுப்புதான் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒப்பற்ற கொழுப்பு என்பதை உழைக்கும் தமிழர்கள் ஏற்பதுமில்லை. அன்று உருவ வழிபாட்டை மறுத்து ஜோதி வழிபாட்டை நிறுவிய வள்ளலார் மீது அருட்பாவா X மருட்பாவா என்று சைவ வெறியோடு பாய்ந்த யாழ்பாணத்து ஆறுமுக நாவலர் முதல் புலிகளின் ஆயுத வழிபாட்டை மறுத்து வர்க்க அரசியலை பேசும் சக்திகள் மீது யாழ்ப்பாண வெள்ளாள குறுந்தேசிய வெறியோடு பாயும் இன்றைய உலகமய ‘சைவர்கள்’ வரை பிற்போக்கு தேசியத்தையே தமிழர்களின் வரலாறாக கதைப்பதை ம.க.இ.க. மட்டுமல்ல, நவீன கால சமூக ஆய்வாளர்கள் வரை அம்பலப்படுத்தியே வந்துள்ளனர். புத்தபிக்குகளின் கட்டுப்பாட்டில் சிங்கள பெளத்த இனவெறிக்கு சீரழிந்துள்ள சிங்கள பாட்டாளிவர்க்கத்தை இனி திருத்தவே முடியாது என்ற உங்கள் தீர்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும், புலி பிக்குகளின் கட்டுப்பாட்டில் இருந்த உங்கள் தமிழ் ‘பாட்டாளிகள்’, மலையகத் தமிழருக்காகவாவது ‘தமிழ் ஒற்றுமை’யுடன் போராடிய வரலாறு உண்டா? சிங்கள ஆளும் வர்க்க முரண்களில் யாழ்ப்பாண வெள்ளாளத் தமிழன் எப்போதும் சிங்கள முதலாளி வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டு, மலையகத் தமிழர்களை கை கழுவி விட்டதுதான்… புலிபிக்குகள் வரை கைகொண்ட வரலாறு.

    சிங்கள இனவெறி அரசை வீழ்த்துவதற்கு அதன் அரசியல் முரண்களை கையாண்டு ஏதோ வர்க்கப்போராட்டம் நடத்தி சலித்துப்போனவர்கள் மாதிரி பம்மாத்து எதற்கு? உங்களுடைய யாழ் வெள்ளாள குறுந்தேசிய அரசியலே ஏகாதிபத்திய அமெரிக்கா, மற்றும் இந்திய மேலாதிக்க அரசின் ஆளும் வர்க்கங்களையெல்லாம் நட்பு சக்திகளாக தயை கூர்ந்தும், முறுக்கியும் சுதந்திர தமிழகத்தின் எதிரிகளிடம் நம்பிக்கை வைத்து சீரழிந்த வரலாறுதானே! ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு எதிரான ஏகாதிபத்திய, ஆளும் வர்க்கங்களிடம் தந்ரோபாவம் செய்து ஏதோ சைவப்புலிகள் சாதித்து விட்டதைப்போலவும், சிங்கள பாட்டாளிவர்க்கம் மட்டும்தான் தீராப்பகை சக்தி போலவும் வரையறுப்பது அரசியல் பாமரத்தனமின்றி வேறென்ன?

    மேலும் கட்டுரை எந்த தீர்வையும் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கவுமில்லை, பசப்பவுமில்லை, உலக அரசியல் கண்ணோட்டத்தின் எதார்த்த நிலைமைகளில் எது ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு சாத்தியமான வழி என்பதை பொதுவில் மட்டுமே வைக்கிறது. மாறாக யாழ்ப்பாண வெள்ளாள கொழுப்புதான், எங்கள் மன்னராட்சி மயக்கத்திற்கு தமிழகத் தமிழன் வேலைசெய்ய வேண்டும் என்று ஜனநாயகமற்ற முறையில் சவடால்களை திணிக்கிறது. வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பாட்டாளித் தமிழன் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு யாழ்ப்பாண வெள்ளாளனுக்கு விவாதமற்று வேலைசெய்ய வேண்டும், யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடி விசாவை நீட்டிக்கொண்டு வெளிநாடு போய் செட்டிலாகி ”பரதம் ஆடி தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும்!” என்ற பிற்போக்கு குறுந்தேசியம் தனது இயலாமைக்கு வருந்த வேண்டாம், மீள் பரிசீலனையாவது கூடாதா? அதை வலியுறுத்தினால் கம்யூனிசத்தின் வர்க்கக் கண்ணோட்டத்தின் மீது அப்படியென்ன காய்ச்சல்? தமிழினம் என்பதற்காக மட்டுமல்ல, எந்தவொரு அடக்கப்படும் தேசிய இனத்தின் உரிமையையும் அரசியல் பார்வையுடன் ஆதரிப்பவர்கள் ம.க.இ.க. யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக் குடி அரசியல் போல தனக்கு வந்தால் ரத்தம், காஷ்மீருக்கு வந்தால் தக்காளி சட்னி என்று இந்திய மேலாதிக்க வெறிக்கு புலிஆட்டம் போடும் ஜால்ட்ராக்கள் ம.க.இ.க அல்ல!

    துரை. சண்முகம்.

  19. இனம் என்பது, வர்க்கத்திற்கு அப்பாற்பட்டது போல பிதற்றும் உங்களது வரலாற்று அறிவு வெறும் பெருமை பீத்தகலயம் என்பது தெரியவருகிறது. தமிழினம் மட்டுமல்ல எந்த ஒரு இனத்தையும் அதன் சமூக வரலாற்று மெய்மையிலும், சமூக பொருளாதார, அரசியல் வர்க்க கண்ணோட்டத்திலும் அதன் வரலாறு, பண்பாட்டு அம்சங்களை ஆராய்வதே ம.க.இ.க.வின் கண்ணோட்டம். அந்த வகையில் எந்த ஒரு தேசிய இனத்தின் முற்போக்கு அம்சத்தையும், பிற்போக்கு அம்சத்தையும் கவனத்தில் கொண்டே ம.க.இ.க. விமர்சித்து வருகிறது. உங்களைப்போல உலகத் தமிழினத்திலேயே யாழ்ப்பாண வெள்ளாள கொழுப்புதான் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒப்பற்ற கொழுப்பு என்பதை உழைக்கும் தமிழர்கள் ஏற்பதுமில்லை. அன்று உருவ வழிபாட்டை மறுத்து ஜோதி வழிபாட்டை நிறுவிய வள்ளலார் மீது அருட்பாவா X மருட்பாவா என்று சைவ வெறியோடு பாய்ந்த யாழ்பாணத்து ஆறுமுக நாவலர் முதல் புலிகளின் ஆயுத வழிபாட்டை மறுத்து வர்க்க அரசியலை பேசும் சக்திகள் மீது யாழ்ப்பாண வெள்ளாள குறுந்தேசிய வெறியோடு பாயும் இன்றைய உலகமய ‘சைவர்கள்’ வரை பிற்போக்கு தேசியத்தையே தமிழர்களின் வரலாறாக கதைப்பதை ம.க.இ.க. மட்டுமல்ல, நவீன கால சமூக ஆய்வாளர்கள் வரை அம்பலப்படுத்தியே வந்துள்ளனர். புத்தபிக்குகளின் கட்டுப்பாட்டில் சிங்கள பெளத்த இனவெறிக்கு சீரழிந்துள்ள சிங்கள பாட்டாளிவர்க்கத்தை இனி திருத்தவே முடியாது என்ற உங்கள் தீர்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும், புலி பிக்குகளின் கட்டுப்பாட்டில் இருந்த உங்கள் தமிழ் ‘பாட்டாளிகள்’, மலையகத் தமிழருக்காகவாவது ‘தமிழ் ஒற்றுமை’யுடன் போராடிய வரலாறு உண்டா? சிங்கள ஆளும் வர்க்க முரண்களில் யாழ்ப்பாண வெள்ளாளத் தமிழன் எப்போதும் சிங்கள முதலாளி வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டு, மலையகத் தமிழர்களை கை கழுவி விட்டதுதான்… புலிபிக்குகள் வரை கைகொண்ட வரலாறு.

    சிங்கள இனவெறி அரசை வீழ்த்துவதற்கு அதன் அரசியல் முரண்களை கையாண்டு ஏதோ வர்க்கப்போராட்டம் நடத்தி சலித்துப்போனவர்கள் மாதிரி பம்மாத்து எதற்கு? உங்களுடைய யாழ் வெள்ளாள குறுந்தேசிய அரசியலே ஏகாதிபத்திய அமெரிக்கா, மற்றும் இந்திய மேலாதிக்க அரசின் ஆளும் வர்க்கங்களையெல்லாம் நட்பு சக்திகளாக தயை கூர்ந்தும், முறுக்கியும் சுதந்திர தமிழகத்தின் எதிரிகளிடம் நம்பிக்கை வைத்து சீரழிந்த வரலாறுதானே! ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு எதிரான ஏகாதிபத்திய, ஆளும் வர்க்கங்களிடம் தந்ரோபாவம் செய்து ஏதோ சைவப்புலிகள் சாதித்து விட்டதைப்போலவும், சிங்கள பாட்டாளிவர்க்கம் மட்டும்தான் தீராப்பகை சக்தி போலவும் வரையறுப்பது அரசியல் பாமரத்தனமின்றி வேறென்ன?

    மேலும் கட்டுரை எந்த தீர்வையும் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கவுமில்லை, பசப்பவுமில்லை, உலக அரசியல் கண்ணோட்டத்தின் எதார்த்த நிலைமைகளில் எது ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு சாத்தியமான வழி என்பதை பொதுவில் மட்டுமே வைக்கிறது. மாறாக யாழ்ப்பாண வெள்ளாள கொழுப்புதான், எங்கள் மன்னராட்சி மயக்கத்திற்கு தமிழகத் தமிழன் வேலைசெய்ய வேண்டும் என்று ஜனநாயகமற்ற முறையில் சவடால்களை திணிக்கிறது. வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பாட்டாளித் தமிழன் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு யாழ்ப்பாண வெள்ளாளனுக்கு விவாதமற்று வேலைசெய்ய வேண்டும், யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடி விசாவை நீட்டிக்கொண்டு வெளிநாடு போய் செட்டிலாகி ”பரதம் ஆடி தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும்!” என்ற பிற்போக்கு குறுந்தேசியம் தனது இயலாமைக்கு வருந்த வேண்டாம், மீள் பரிசீலனையாவது கூடாதா? அதை வலியுறுத்தினால் கம்யூனிசத்தின் வர்க்கக் கண்ணோட்டத்தின் மீது அப்படியென்ன காய்ச்சல்? தமிழினம் என்பதற்காக மட்டுமல்ல, எந்தவொரு அடக்கப்படும் தேசிய இனத்தின் உரிமையையும் அரசியல் பார்வையுடன் ஆதரிப்பவர்கள் ம.க.இ.க. யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக் குடி அரசியல் போல தனக்கு வந்தால் ரத்தம், காஷ்மீருக்கு வந்தால் தக்காளி சட்னி என்று இந்திய மேலாதிக்க வெறிக்கு புலிஆட்டம் போடும் ஜால்ட்ராக்கள் ம.க.இ.க அல்ல!

    துரை. சண்முகம்.

  20. சிங்கள இந்திய ஆளும் வர்க்கங்களின் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறது வினவின் கட்டுரை தொடரட்டும் உங்கள் பணி!

  21. //தயவு செய்து ஒரு சிங்களவரின் பெயரையாவது குறிப்பிடவும். லசந்த விக்கிரமசிங்க தமிழ்தேசிய இனமக்களின் மனித உரிமைக்கு குரல் கொடுத்ததுமில்லை, அதற்காக கொல்லப்படவுமில்லை. //

    இரயாகரன் ஒரு சிங்கள இடதுசாரியின் பேரை சொல்லி இருப்பார். அவர் வடபகுதிக்கு வந்து தமிழ் மக்களோடு இணைந்து பணியாற்ற விழைந்தபோது அதனை தடுத்தது பிளாட். சரி !!! யாருமே வரவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் பார்வையில் சண்முகதாசன் ஒரு தமிழர், கம்பியூனிஸ்ட் அல்ல… சிங்கள ஜனநாயக சக்திகளுக்கு புலிகளோ அல்லது மற்ற இயக்கங்களோ எப்போது நேசக்கரம் நீட்டினார்கள் ?. – புத்த மதவெறி தூண்டி விடப்பட்ட போதும். ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை என்பது எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டும்.

    //சிங்கள இளைஞர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியதால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் ஆயுதம் தூக்கியதன் காரணமே இந்தியப் படையை இலங்கைக்குள் அனுமதித்து தமிழர்களுக்கு இலங்கை அரசு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகிறது. என்ற காரணத்தால் தானே தவிர தமிழர்களுக்கு ஆதரவாக அல்ல.//

    சிங்கள் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது, இந்தியப் படைகளுக்கு எதிராக இல்லை !! மாறாக ஒரு புரட்சியின் மூலம் கம்பியூனிச அரசை அமைக்க வேண்டும் என்று விரும்பிதாலேயே – அது ஜேவிபியின் இனவாதமுடைய – மண்ணுக்கேற்ற மார்சியம் என்ற பெயரில் தமிழர் உழைப்பாளிகளை அரவணைக்காமல் இருந்ததால் வந்தது.

    //சிங்கள உழைக்கும் மக்கள் பெரும்பான்மையினர் சிங்கள் பெளத்தர்கள். அவர்களை பெளத்த பிக்குகளால் கட்டுப்படுத்த முடியும். அதனால் அவர்கள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கனவிலும் ஆதரிக்கப் போவதில்லை. வடக்கு கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றி, தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணில் சிறுபான்மையினராக்கும் திட்டத்துக்குத் தான் சிங்கள உழைக்கும் வர்க்கமும், புத்த பிக்குகளும் முழு ஆதரவளிப்பார்கள், அளிக்கிறார்கள்.//

    பெளத்த பிக்குகள் சரி ! இதயமற்ற உலகின் இதயம் மதம் என்ற மார்க்சின் கூற்றுப்படி, சிங்கள அப்பாவி உழைக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஏமாற்றி, அவர்களது பிரச்சனைகளுக்கு தமிழ் போராட்டம்தான் காரணம் என்று காட்டி சிங்கள் அரசு ஏமாற்றி வந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு விடுதலை இயக்கம் இதனை கணக்கில் எடுத்துக் கொண்டு சிங்கள் மக்களை வென்றெடுக்க இல்லை என்றாலும், எதிர் திசையில் செல்லாமல் இருக்கவாவது முயற்சித்து இருக்க வேண்டும். ஆனால் புலிகள் அனுராதபுரம் படுகொலைகள் ஆரம்பித்து, சிங்கள மக்களை மொத்தமாக எதிர் திசைக்கு அரசை விடவும், புத்த பிக்குகளை விடவும் தள்ளினர்.

  22. // உண்மையில் இவர்கள் ஈழம் அமைத்து தருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ, எனக்குத் தெரியாது அப்படி எந்த நம்பிக்கையும் எனக்குக் கிடையாது. அதேவேளையில் எங்களை ஆதரிப்பவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரிந்தாலும் கூட, அவர்களின் ஆதரவை எதற்காக புறக்கணிக்க வேண்டும். சகோதர உணர்வு அவர்களை இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை அறிய அவர்களைத் தூண்டுகிறது. அதனால் அவர்கள் எங்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ராஜபக்சவை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டிய தேவையுள்ளவர்கள் மட்டும் தான், சீமான், நெடுமாறன் போன்ற தமிழீழ ஆதரவாளர்களை தூற்றுவார்கள் என்பது என்னுடைய கருத்து. //

    சகோத உணர்வால்தான் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று புலிகளை பாடையில் ஏற்றினார்கள். எங்கே சிங்கள உழைக்கும் மக்கள் தமிழர்களோடு அய்க்கியம் ஆகி விடப்போகிறார்கள் என்று சிங்கள அரசுக்கு உதவி செய்யும் விதமாக சிங்களப் பெண்களைக் கற்பழிப்போம் என்று அகநானூறு பேசிய புறநானூற்றுத் தமிழர்கள் !!!. இவர்களை பற்றி துடிக்கும் முள்ளிவாய்க்கால் – துரோகிகளின் கள்ள மவுனம் என்ற தலைப்பில் வினவின் கட்டுரை (வெளியிடாகக் கூட வந்தது) படிக்கவும்.

    // நீங்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் பல தமிழ் Surrender Agents களின் வேலை என்னவென்றால் , சிங்களவர்கள் மூன்று நான்கு லட்சம் எங்களின் மக்களைக் கொன்றதை மறந்து விட வேண்டும், அவர்கள் கொன்றதை நினைவூட்டி, நீதி கேட்டால், அவர்கள் மிஞ்சி இருக்கிறவர்களைல்லாம் கொன்று விடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டி, அவர்களைப் போர்க்குறச் சாட்டுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். ஆனால் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு பேராகக் தமிழர்கள் கொல்லப்படுவதை, அபலைப்பெண்கள் கற்பழிக்கப்படுவதை, அல்லது தமிழர்களின் வீடுகளிலும் நிலங்களிலும் சிங்களவர்களைக் குடியேற்றப்படுவதை பற்றி எல்லாம் அவர்கள் பேசமாட்டார்கள், ஏனென்றால் அதுவல்ல Surrender Agents களின் வேலை. 🙂 //

    2009 அல்லது 2008 இல் சரியாக நினைவில் இல்லை – ஈழத்திற்காக மாநாடு கூட்டியவர்கள் ம.க.இ.க. குடியரசு தினத்தில் மருதையன் ஈழ படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் மறியல் செய்து கைதானவர்கள். ராஜிவ் படுகொலை சரியான அரசியல் நடவடிக்கை என்று படுகொலை நடந்த அதே மாதத்தில் கட்டுரை வெளியிட்டு அடக்குமுறைகளைச் சந்தித்தனர் !! ஜெயலலிதா சட்டசபையிலேயே ம.க.இ.க என்ற ஒரு தீவிரவாத அமைப்பை அடக்கி விட்டதாக சபையிலேயே அறிவித்தார்.

  23. @ வியாசன்

    //, “ஈழத்தமிழர்கள் எந்தவிதமான போக்கைக் கைக்கொள்வதை இந்திய பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும்” என்று அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு அறிவுரை கூறலாம்.//

    அது அவசியமில்லை. இவர்கள் ஏன் உங்கள் நாட்டு விவகாரத்தில் உங்களுக்கே அறிவுரை கூற வேண்டும்? ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கைத் தீவினிற்குள் வைத்துத் தீர்க்கப் பட வேண்டியது. இந்தியா தான் இவர்கள் வாழும் நாடு. இந்த நாடு தனது பக்கத்து நாடுகளில் தலையிட்டு அங்கிருக்கும் ஆதிக்க நலன் கொண்ட அரசுகளுக்கு உதவி செய்தைத் தடுக்கப் போராடுவது மட்டுமே இவர்களால் ஆகக் கூடிய காரியம். அது ஈழம் ஆனாலும் சரி, நேபாளம் ஆனாலும் சரி – எங்கள் நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டம் இப்படித் தான் இருக்க முடியும். ஏனெனில், நீங்கள் சொல்வது போல் இங்கே பாட்டாளி வர்க்கம் ஆளும் தரப்பில் இல்லை. பக்கத்து நாடுகளில் ஒடுக்கப்படும் சிறுபான்மை இன / மத / மொழி மற்றும் வர்க்கத்தினருக்கு இவர்கள் அணுசரனையாக இருக்க முடியுமே தவிர அந்த அணுசரனையான செயல்பாடுகளின் வரம்பு இப்போதைக்கு இந்த நாட்டின் எல்லை மாத்திரமே. ”பாரதிய ஜனதா வெல்லும் வரை போரை நீட்டித்துச் செல்லுங்கள்” என்பது போன்ற அயோக்கியத்தனமான உறுதிமொழிகளையும் அறிவுரைகளையும் இனவாதிகள் வேண்டுமானால் கூறலாம், இவர்களால் அவ்வாறு சொல்லமுடியாது. இந்தியாவில் மா.லெ இயக்கமே இன்னமும் உண்டியல் குலுக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்து அவர்களை அணிதிரட்டும் பணியில் தான் உள்ளது. புலிகளின் எதிர்பார்ப்புகளின் படி நினைத்த நேரத்தில் ஒரு போனைப் போட்டு பிரதமரிடமோ ஒபாமாவிடமோ பேசும் வல்லமை இன்னமும் இவர்களுக்கு வந்து விடவில்லை 🙂

    அவ்வாறு பேசி “அமெரிக்க கப்பலையோ போர் விமானத்தையோ வரவைத்துக் கொடுக்கும்” திறமை உள்ளவர்களின் “அறிவுரை” தான் உங்களுக்குத் தேவையெனில், நீங்கள் தவறான இடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள் 😉

    //அதாவது ஒரு நாட்டின் உண்மை நிலவரத்தை அறியாமல் ஒரே Formula வை எல்லா நாட்டிலுள்ள பிரச்சனைக்கும் தீர்வாகக் கூறுவது, வேறு வகையில் சொல்வதானால், எல்லா நோய்க்கும் ஒரே மருந்தைக் கொடுத்துப் பார்ப்பது, நோயாளி செத்துப்போவதை அல்லது நோய் இன்னும் தீவிரமடைவதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அப்படித்தானே //

    அவ்வாறு இது வரையில் எந்த மருத்தும் கொடுக்கப்படவில்லை என்பது தானே எதார்த்தம்? புலிகள் கொடுத்த மருந்தின் விலை தானே முள்ளிவாய்க்கால்? அதே மருந்தையா திரும்பவும் கொடுக்கப் போகிறீர்கள்?

    //தமிழர்களுக்கு பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையோ சிங்கள பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.//

    அவ்வாறான எந்த முயற்சியாவது புலிகள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியடைந்துள்ளதா? ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் தவிர்க்கவியலாத பிரதிநிதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட புலிகள், சிங்கள ஆளும் வர்க்கத்தின் மேல் அதிருப்தியில் இருந்த சிங்கள உழைக்கும் மக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதா? சிங்கள உழைக்கும் மக்களுக்கும் தமிழ் உழைக்கும் மக்களுக்கும் சிங்கள எதேச்சாதிகார ஆளும் வர்க்கம் பொது எதிரி என்பதை புலிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துள்ளார்களா? அவ்வாறு மேற்கொண்டிருந்தால் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.

    //பக்கத்து வீடு எரிந்ததை பார்த்து அடுத்த வீட்டுக்காரன் உதவி செய்ததைப் பார்த்து விட்டு, அந்த நாட்டிலேயே இனப்பிரச்சனை இல்லை, என்று ஒருவன் முடிவெடுத்தால் அது எவ்வளவு முட்டாள் தனமானதோ அது போல் தான் ஒரு சில சிறிய நல்லெண்ணமுள்ள சிங்களவர்களின் செயல்களின் அடிப்படையில் இலங்கையில் சிங்கள-தமிழர் பிரச்சனையைப் பார்ப்பதுமாகும்.//

    ஆஹா… தமிழன் வீடு எரிந்தால் சாமானிய சிங்களவன் வந்து உதவி செய்வான் என்கிற அளவுக்கு நீங்கள் ஒப்புக் கொள்வது ஆச்சர்யமாக உள்ளது. வழமையான புலி வெர்ஷன் எனப்படுவதன் அடிப்படையில் பார்த்தால் சிங்களவர்களுக்கு நீண்ட நாக்கும், இரு புறமும் கோரைப் பற்களும், தலையில் இரண்டு கொம்புகளும் இருக்கும் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

    சிங்களத் தமிழ் இணக்கம் குறித்து நான் உங்களுக்கு விளங்க வைக்க முடியும் என்று தோன்றவில்லை. ஏனெனில், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்பது இந்த அண்ட சராசரங்களிலேயே தனித்துவமானது என்கிற எண்ணம் உங்களுக்கு உள்ள வரை, உங்கள் நாட்டு விவகாரத்தில் இந்தியனாகிய நான் தலையிட்டு உங்களுக்கு அறிவுரை கொடுக்கவியலாது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அவ்வாறு செய்கிற “ஐந்தாம் கட்ட ஈழப் போர் கோஷ்டிகளிடம்” நீங்கள் ஆறுதல் கொள்வதை என்னாம் புரிந்து கொள்ள முடிகிறது.

    அடுத்து சுனாமி குறித்து… நான் சொன்னதையே தான் நீங்களும் சொல்கிறீர்கள் – உங்களுக்குப் பிடித்தமான கோணத்திலிருந்து 🙂

    சிங்கள ஆளும் தரப்பு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிவாரணங்கள் சென்று சேராமல் தடுத்தது, திருப்பி விட்டது நடந்தது. ஆனால், சாமானிய சிங்கள மக்கள் அந்தப் பேரிடர் காலத்தின் தமிழர்களுக்கு உதவ முன்வந்தனர். தமிழர்கள் என்றாலே சிங்களர்கள் கொலையாய்க் கொல்வார்கள் என்பதல்லவா புலிகளின் கூற்று? 25 ஆண்டுகால பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட பிறகும் கூட எதார்த்தம் அவ்வாறு இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர்த்தியிருந்தார்கள் என்பதையே நான் சொல்ல முயன்றேன்.

  24. அய்யா பொதுவுடமைவாதிகளே,

    நீங்கள் இனம், மொழி, மதம், பிரதேசம் ஆகிய எல்லாவற்றையும் கடந்த பாட்டாளி வர்க்க ஒற்றுமை பற்றி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்தும் உங்கள் ஆர்ப்பாட்டங்களிலும் கூட்டங்களிலும் ஏன் நூறு பேருக்கு மேல் தேறுவதில்லை.இந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு தான் புரட்சி செய்ய போகிறீர்களா?

    ஈழத்தில் இத்தனையும் நடந்த பின்னரும் அங்கிருக்கும் தமிழர்களில் பெருவாரியானவர்கள் தமிழர் கூட்டணிக்கு தான் வாக்களித்தனர். பிரபாகரன் நின்றிருந்தால் அவருக்கு இதை விட அதிக வாக்குகள் விழுந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் மலையகத்தமிழர்கள் கூட நிறைய பேர் அவருக்கு வாக்களித்திருப்பார்கள்.

    ” அவ்வாறான எந்த முயற்சியாவது புலிகள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியடைந்துள்ளதா? ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் தவிர்க்கவியலாத பிரதிநிதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட புலிகள், சிங்கள ஆளும் வர்க்கத்தின் மேல் அதிருப்தியில் இருந்த சிங்கள உழைக்கும் மக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதா? சிங்கள உழைக்கும் மக்களுக்கும் தமிழ் உழைக்கும் மக்களுக்கும் சிங்கள எதேச்சாதிகார ஆளும் வர்க்கம் பொது எதிரி என்பதை புலிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துள்ளார்களா? அவ்வாறு மேற்கொண்டிருந்தால் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.”

    எதற்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்? ஏன் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினருக்கு தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தினரின் பிரச்சினையை சொல்ல தலைவர்கள் இல்லையா? இல்லை வடகிழக்கில் நடப்பதை பற்றி ஒன்றும் அறியாத அப்பாவிகளா அவர்கள்?

    “சிங்கள ஆளும் தரப்பு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிவாரணங்கள் சென்று சேராமல் தடுத்தது, திருப்பி விட்டது நடந்தது. ஆனால், சாமானிய சிங்கள மக்கள் அந்தப் பேரிடர் காலத்தின் தமிழர்களுக்கு உதவ முன்வந்தனர். தமிழர்கள் என்றாலே சிங்களர்கள் கொலையாய்க் கொல்வார்கள் என்பதல்லவா புலிகளின் கூற்று? 25 ஆண்டுகால பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட பிறகும் கூட எதார்த்தம் அவ்வாறு இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர்த்தியிருந்தார்கள் என்பதையே நான் சொல்ல முயன்றேன்.”
    இது புரட்டு.

  25. “மாறாக ஒரு புரட்சியின் மூலம் கம்பியூனிச அரசை அமைக்க வேண்டும் என்று விரும்பிதாலேயே – அது ஜேவிபியின் இனவாதமுடைய – மண்ணுக்கேற்ற மார்சியம் என்ற பெயரில் தமிழர் உழைப்பாளிகளை அரவணைக்காமல் இருந்ததால் வந்தது.”
    இது இன்னொரு புரட்டு.

    இவர்களின் (புத்த – சிங்கள) மண்ணுக்கேற்ற மார்க்சியத்தில் தமிழ் பாட்டாளிகளுக்கு இடம் இல்லை. அப்புறம் இவர்களின் பிரச்சாரத்தை மீறி எப்படி சிங்கள பாட்டாளி வர்க்கத்தினரிடம் புலிகள் பிரச்சாரம் செய்ய முடியும்!

  26. அய்யா Salanan அவர்களே….ரஷ்யால புரட்சில ஈடுபட்டது வெறும் பத்து சதவீத மக்கள்தானாம்…..அளவுல இல்ல மேட்டரு …

  27. திரு. துரை. சண்முகம்,

    //அன்று உருவ வழிபாட்டை மறுத்து ஜோதி வழிபாட்டை நிறுவிய வள்ளலார் மீது அருட்பாவா X மருட்பாவா என்று சைவ வெறியோடு பாய்ந்த யாழ்பாணத்து ஆறுமுக நாவலர் முதல் புலிகளின் ஆயுத வழிபாட்டை மறுத்து வர்க்க அரசியலை பேசும் சக்திகள் மீது யாழ்ப்பாண வெள்ளாள குறுந்தேசிய வெறியோடு பாயும் இன்றைய உலகமய ‘சைவர்கள்’ வரை //

    உண்மையில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நாவலரின் “சைவவெறி”க்கு கிடைத்த ஆதரவு வள்ளலாருக்குக் கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல பெரியாரிசம் கூட அங்கு ஏனோ எடுபடவில்லை. யாழ்ப்பாணத்தில் தமிழும், தமிழ்க்கலாச்சாரமும் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் நாவலர் தான் என்று பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் இன்றும் போற்றுகிறார்கள். ஆனால் நாவலருக்குப் பின்னால் தோன்றிய எந்த கம்யூனிஸ்டுகளாலும், மாக்சிய லெனினியவாதிகளாலும் ஈழத்தமிழர்களின் முழு ஆதரவையும் பெறமுடியவில்லை, மாக்சியத்தையும், லெனினியத்தையும் ஈழத்தமிழர்கள் எப்பவோ புறக்கணித்து விட்டனர். இந்த லட்சணத்தில் இனம், வர்க்கம், முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுப்போக்கு வார்த்தை ஜாலங்கள் எல்லாம் ஈழத்தமிழர்களிடம் எப்பொழுதுமே எடுபடப் போவதில்லை. அதை நன்கு அறிந்ததால் தான் புலிகள் கூட கம்யூனிசம், சோசலிசம், மாக்சிசம், லெனினிசம் எதையும் பேசவில்லை. அப்படியிருக்க உங்களைப் போன்ற ஒரு சிலரின் இணையத்தள விமர்சனங்கள் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என உண்மையில் நம்புகிறீர்களா?

    //புலி பிக்குகளின் கட்டுப்பாட்டில் இருந்த உங்கள் தமிழ் ‘பாட்டாளிகள்’, மலையகத் தமிழருக்காகவாவது ‘தமிழ் ஒற்றுமை’யுடன் போராடிய வரலாறு உண்டா? //

    இதிலிருந்து என்ன தெரிகிறதேன்றால் பாட்டாளி வர்க்கம், உழைக்கும் மக்களின் உரிமைகள் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் உங்களுக்கு ஈழத்தமிழர்களின் வரலாறு மட்டுமல்ல, இந்திய வம்சாவளியினராகிய மலையகத்தமிழர்களின் வரலாறும் தெரியாது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம், குறிப்பாக புலிகளின் ஆயுதப் போராட்டம், மலையகத் தமிழர்களுக்கு தான் பெருமளவில் உதவியது என்பதை மனோ கணேசன் போன்ற மலையகத் தமிழர்களின் தலைவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அதைப்பற்றி இங்கு எழுதநேரமும் இல்லை. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் விடயத்தையும் அது திசை திருப்பி விடும்.

    NORTHEAST REBELLION HELPS UPCOUNTRY TAMILS

    Most of all, Thondaman was greatly helped by the fear the Sinhalese government had of the armed resistance in North-East. As the estates Tamils were isolated in the central highlands, the Sinhalese would have suppressed them without that armed resistance. With the LTTE hammering the SL armed forces in the North-East, the government did not want a revolt in the Highlands. Thondaman used his influence with his people to prevent the Upcountry Tamil youth from joining the armed rebellion. Such a revolt would have had far reaching consequences. Nevertheless, the estate youth settled in the North-East could not be prevented from throwing in their lot with their brothers and sisters of the North-East. Many fought and died, shoulder to shoulder with the brave youth of the North-East against the Sinhalese forces.

    The truth is that, despite all the strategies of Thondaman and the strength of the Upcountry Tamils, they would have been kept down by the Sinhalese, IF THE NORTH-EAST TAMILS HAD NOT POSED A SERIOUS ARMED THREAT.

    Plantation Tamils – The Oppressed People of Sri Lanka
    http://www.sangam.org/articles/view2/?uid=653

    //சிங்கள ஆளும் வர்க்க முரண்களில் யாழ்ப்பாண வெள்ளாளத் தமிழன் எப்போதும் சிங்கள முதலாளி வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டு, மலையகத் தமிழர்களை கை கழுவி விட்டதுதான்… புலிபிக்குகள் வரை கைகொண்ட வரலாறு.//

    தமிழ்நாட்டுத் தமிழர்களில் பலர் ஆத்தாமல் போனதும், யாழ்ப்பாண வெள்ளாளர்களைத் தூற்றுவதும், மலையகத் தமிழர்களின் குடியுரிமை விடயத்தில், 60 வருடங்களுக்கு முன்னால் ஒரு யாழ்ப்பாணத் தமிழ்த்தலைவர் கணபதி காங்கேயர் பொன்னம்பலம் சிங்களவருடன் சேர்ந்து வாக்களித்ததை நினைவூட்டி கொக்கரிப்பதையும் நான் பலமுறை அவதானித்திருக்கிறேன். ஆனால், அந்த ஒரு தவறுக்காக, ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அரசியல் வாழ்க்கையையே அத்தமிக்கச் செய்து, சைவத்தமிழர்களாகிய பெரும்பான்மை யாழ்ப்பாண வெள்ளாளர் ஒரு கிறித்தவராகிய எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை, தமது தலைவனாக, ஏற்றுக் கொண்டு, அவரை ஈழத்தந்தையாக இன்றும் போற்றும் தமிழுணர்வை யாரும் பாராட்டுவதாக தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில், தமது சுயநலத்துக்காக, ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தி, பல ஈழத்தமிழரக்ளின் அழிவுக்கும் காரணமாக இருந்த தலைவர்கள் தான் இன்றும் உங்களின் தலைவர்களாக’ உள்ளனர் என்ற உண்மையை நீங்கள் மறந்து விடக் கூடாது.

    //சிங்கள இனவெறி அரசை வீழ்த்துவதற்கு அதன் அரசியல் முரண்களை கையாண்டு ஏதோ வர்க்கப்போராட்டம் நடத்தி சலித்துப்போனவர்கள் மாதிரி பம்மாத்து எதற்கு?//

    பம்மாத்து விடுவது நாங்கள் அல்ல நீங்கள் தான், தோற்றுப்போன கொள்கைகளை அதாவது மார்க்சும், லெனினும் பிறந்த நாட்டு மக்களே கைகழுவி விட்ட உழுத்துப்போன கொள்கைகளை, உங்கள் நாட்டிலேயே எடுபடாத கொள்கைகளை, எங்கள் நாட்டில் பரிசோதனை செய்து பார்ப்பதற்கு நாங்கள் இழிச்சவாயர்களும் அல்ல, உலக அறிவில்லாத, படிப்பறிவற்றகளுமல்ல.

    //உங்களுடைய யாழ் வெள்ளாள குறுந்தேசிய அரசியலே ஏகாதிபத்திய அமெரிக்கா, மற்றும் இந்திய மேலாதிக்க அரசின் ஆளும் வர்க்கங்களையெல்லாம் நட்பு சக்திகளாக தயை கூர்ந்தும், முறுக்கியும் சுதந்திர தமிழகத்தின் எதிரிகளிடம் நம்பிக்கை வைத்து சீரழிந்த வரலாறுதானே!//

    நாங்கள் தான் நம்பிக்கைவைத்துக் கெட்டு விட்டோம், எங்களுக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, தமிழ்நாட்டுப் பாட்டாளி வர்க்கங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, இந்திய பாட்டாளி வர்க்கங்களின் ஆதரவை எல்லாம் பெற்று, இந்திய மேலாதிக்க அரசை எதிர்த்து, தமிழ்நாட்டின் விடுதலையைப் பெற முயற்சிக்கலாமே?, தமிழரல்லாத மாநில மக்களின் பாட்டாளி வர்க்கங்கள் தமிழ்நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் இணைந்து தமிழ்நாட்டின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடினால், நீங்கள் கூறுகிற படி சிங்கள பாட்டாளி வர்க்கமும், மாக்சிய லெனினிய அடிப்படையில், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும், என்பது எங்களுக்கு அப்பொழுது தெளிவாகப் புரிந்து விடும். இன்று முதல் தோழர் துரை சண்முகம் தனது கட்டுரைகளில் இந்திய பாட்டாளி வர்க்கங்களின் ஆதரவைப் பெற்று, தமிழ்நாட்டின் விடுதலையை அடைவதைப் பற்றி எழுதுவார் என்று நம்புகிறேன்.

    //ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு எதிரான ஏகாதிபத்திய, ஆளும் வர்க்கங்களிடம் தந்ரோபாவம் செய்து ஏதோ சைவப்புலிகள் சாதித்து விட்டதைப்போலவும், சிங்கள பாட்டாளிவர்க்கம் மட்டும்தான் தீராப்பகை சக்தி போலவும் வரையறுப்பது அரசியல் பாமரத்தனமின்றி வேறென்ன?//

    சொந்த நாட்டிலேயே, அவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் தனித்து நின்றால் கட்டுக்காசைக் கூடக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள் எல்லாம், ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்களை எதிர்த்து அரசியல் செய்வது எப்படி என்பதைப்பற்றி பக்கத்து நாட்டுக்காரனுக்கு பாடம் எடுப்பதைப் போன்ற பாமரத்தனம் வேறெதுவும் இருக்க முடியாதையா.

    //மேலும் கட்டுரை எந்த தீர்வையும் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கவுமில்லை, பசப்பவுமில்லை, உலக அரசியல் கண்ணோட்டத்தின் எதார்த்த நிலைமைகளில் எது ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு சாத்தியமான வழி என்பதை பொதுவில் மட்டுமே வைக்கிறது.///

    எந்த தீர்வையும் திணிக்கவில்லையாம் நல்ல கதை. ஈழத்தமிழர்கள் சுதந்திரமடைந்த நாளிலிருந்து இனக்கலவரங்களில் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினரால் கொல்லப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து, உடுத்துவதற்கு மாற்று உடை இன்றி, கப்பலேறி வடக்கு-கிழக்கிற்கு போய்ச்சேர்ந்து, அதன் பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடி, பலனின்றி, ஆயுதம் ஏந்தி, அதே சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் வாரிசுகளால் கற்பழிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, வீடிழந்து நிலமிழந்த பின்னர், அதே சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து உங்களின் சுயநிர்ணய உரிமையைக் கேளுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று கூறும் உங்களைப் போன்றவர்களின் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுமளவுக்கு, ஈழத்தமிழர்கள் உங்களைப் போல் அறிவாளிகள் அல்ல, உங்களின் அறிவுத்திறனுக்கு முன்னால் நிற்பதற்கு கூட, நாங்கள், ஈழத்தமிழர்கள் அருகதையற்றவர்கள் ஐயா. 🙂

    ///யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடி விசாவை நீட்டிக்கொண்டு வெளிநாடு போய் செட்டிலாகி ”பரதம் ஆடி தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும்!” என்ற பிற்போக்கு குறுந்தேசியம் தனது இயலாமைக்கு வருந்த வேண்டாம், மீள் பரிசீலனையாவது கூடாதா? //

    புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு இல்லாமல், முப்பது வருடங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்கள் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்தி இருக்க முடியுமா என்றதை சிந்திக்கும் தன்மையுள்ள எவனும் புரிந்து கொள்வான். சும்மா மார்க்சிய லெனினிய வார்த்தை ஜாலம் போடுபவர்களால அதை எல்லாம் புரிந்து கொள்ள முடியாது தான். உதாரணமாக இஸ்ரேலிய யூதன் எவனுமே, Jewish Diaspora வைப் பார்த்து, நீ நியூயோர்க்கில் மகிழ்ச்சியாக இருக்கிறாய் ஆனால் நான் இங்கே பாலைவனத்தில் எல்லை காக்கப் போராடுகிறேன் என்று கூறுவதில்லை, ஏனென்றால் அவனுக்குத் தெரியும், இஸ்ரேலிய நாட்டின் பலமே உலகெங்கும் பரந்து வாழும், புலம்பெயர்ந்த யூதர்கள் தான் என்பது, ஒரு இஸ்ரேலிய யூதனைப் பார்த்து, ம.க.இ.கவினரில் நீ இங்கே உனது எல்லைகளைக் காக்கப் போராடுகிறாய், ஏனென்றால் நீ பாட்டாளி வர்க்கம், ஆனால் அமெரிக்க யூதர்கள் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயமாக அவனிடம் உதை வாங்குவார்கள்.

    //அதை வலியுறுத்தினால் கம்யூனிசத்தின் வர்க்கக் கண்ணோட்டத்தின் மீது அப்படியென்ன காய்ச்சல்? //

    ஏனென்றால் நாங்கள் ஈழத்தமிழினத்தை எவராவது, பாட்டாளி வர்க்கம், முதலாளி வர்க்கம், என்று வர்க்கம், வர்க்கமாக பிரிப்பதை விரும்பவில்லை. தமிழ்நாட்டைப் போலல்லாது, ஈழத்தில் சாதிப்பேயை பெருமளவில் அடக்கி விட்டோம் (ஆனால் இன்னும் சாகவில்லை) தமிழ்நாட்டைப் போல் ஈழத்தில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு மலம் தீற்றுவதில்லை. காதலித்த குற்றத்துக்காக, திருமணம் செய்து கொண்டவர்களைப் பிரித்துக் கொண்டு வந்து, ஒரு தமிழனை தனது பிறப்பை நொந்து கொண்டு தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளச் செய்வதில்லை. இந்த நிலைக்கு வருவதற்கே எங்களுக்கு 70 வருடங்களுக்கு மேல் எடுத்தது, இப்பொழுது நீங்கள் வந்து, உங்களின் நாட்டிலேயே எடுபடாத கம்யூனிச வர்க்கக் கண்ணோட்டத்தை எங்களிடம் வலியுறுத்துவது உண்மையில் எங்களுக்கு எரிச்சலையூட்டுகிறது

    //எந்தவொரு அடக்கப்படும் தேசிய இனத்தின் உரிமையையும் அரசியல் பார்வையுடன் ஆதரிப்பவர்கள் ம.க.இ.க. யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக் குடி அரசியல் போல தனக்கு வந்தால் ரத்தம், காஷ்மீருக்கு வந்தால் தக்காளி சட்னி என்று இந்திய மேலாதிக்க வெறிக்கு புலிஆட்டம் போடும் ஜால்ட்ராக்கள் ம.க.இ.க அல்ல!//

    நல்லது, தமிழ்நாடு பாட்டாளி வர்க்கத்தை மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள பாட்டாளி வர்க்கத்தினரை ஒன்றுபடுத்தி, காஸ்மீரின் விடுதலைக்காகப் போராடி வெற்றி பெற்றுக் காட்டுங்கள், அந்த வெற்றி, கம்யூனிச வர்க்க கண்ணோட்டத்தின் அடிப்படையில், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து நாங்களும் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எங்களுக்கு நிரூபிக்கும். உங்களின் தலைமையில் காஸ்மீர். விடுதலை பெற்றால், நான் எனது தலையை மொட்டையடித்துக் கொண்டு துரைசண்முகதாசன் என்று பெயரையும் மாற்றிக் கொள்கிறேன், சம்மதம் தானே? 🙂

    • ஈழம் தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!
      கட்டுரைக்கான பின்னூட்டம்!

      வியாசன் அவர்களே,
      ஒன்று புலி தாசன் இல்லையேல் துரை சண்முக தாசனா? வேண்டாம் இந்த விபரீதம்! ஏதாவது ஒரு விவாதம் என்றால், மொட்டையடிப்பது, பெயரை மாற்றுவது… கட்டுக்கடங்காமல் போனால் கழுவிலேற்றுவது இந்த ‘அன்பே சிவத்தில்’ அடியேனுக்கு உடன்பாடில்லாததால்… நாம் விவாதத்தின் வழி ஒரு முடிவுக்கு வர முயற்ச்சிப்போம்.

      வள்ளலார், பெரியார் போன்றோரெல்லாம் உங்கள் ஊரில் குறிப்பாக யாழ்ப்பாண சைவர்களிடம் எடு
      படாமலும்! ஏற்கப்படாமலும் போனதில் எங்களுக்கு வியப்பில்லை, பெரியாரென்ன? நீங்கள் தான் பிரபாகரன் இருந்தவரைக்கும் ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு தீர்வில்லை என்று தமக்கு மாற்றாக தேர்தல் பாதையை சிந்தித்த தலைவர்களை தலையில் போட்டும், பிரபாகரன் போனவுடன் வடக்கு மாகாண தேர்தலுக்கு வடம் பிடித்தும் பிரபாகரனுக்கே டாடா காட்டியவர்களும், ஆயிற்றே! தமிழ்நாடு அளவுக்கு சாதி வெறியின் விளைவுகள் அங்கில்லை என்று நீங்கள் சொல்வது நல்ல விசயந்தான்! ஆனால் அது யாழ் வெள்ளாள சுய அறிவு போல எளிதாக கடந்து செல்வது தவறல்லவா? 1928 -இல் தமிழ் ஊழியர் சங்கம் பஞ்சமர் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக்கு எதிராக பாடசாலைகளில் சம ஆசனம், சம போசனம் போராட்டம் தொடங்கி, அரசு உத்திரவால் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், ஆதிக்க சாதி மாணவர்களுக்கு இணையாக தரையில் உட்காராமல் ஆசனங்கள் வழங்கப்பட்டபோது யாழ் ஆதிக்கசாதி குழுவினர், இந்த நடைமுறை வந்த 15 பாடசாலைகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததுதான் உங்கள் யாழ்வெள்ளாள சாதிவெறி வரலாறு. 1931 -இல் டொனமூர் சட்டப்படி அனைவருக்கும் வாக்குரிமை வந்தபோதும், வெள்ளாளத் தலைவர்கள், குறிப்பாக எஸ்.நடேசன் தாழ்த்தப்பட்டவர்களுக்கான வாக்குரிமையை தடைசெய்ய வலியுறுத்தி குதியாய் குதித்தது ஊரறிந்த விசயம்தான். பஞ்சமர்களுக்கு எதிராக பெண்கள் தாவணி அணியத் தடை, ஆண்கள் மேலாடை அணியத்தடை, ஆதிக்க சாதி கோயிலில் நுழையத்தடை, பொதுக்குளம், தண்ணீர் தடை… என 24 வகைத் தடைகளையும், விரித்து ஆட்டம் போட்டதுதான் உங்கள் ஆறுமுக நாவலர் வகையறாக்கள். இதில் தமிழ்நாடு போல இங்கில்லை என்ற சைவப் பெருமிதம்
      எதற்கு? தீண்டாமையின் வடிவங்களிலும், நடைமுறையிலும் உங்கள் ஊருக்கேற்ற வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில் எந்தத் ‘தமிழ்தேசிய பெருமையும்’ எமக்குத் தெரியவில்லை, இதைத்தான் பிற்போக்கு தேசியத்தின் உள்ளடக்கமாக உணர்த்தினால் உங்களுக்கு வார்த்தை ஜாலமாகவும், வயிற்று ஜலமாகவும் படுகிறது!

      ‘அது போன மாசம்’ என்று வாதிடுவீர்களே ஆனால் புலிகள் அதிகாரத்துக்குட்பட்டு இருந்தபோது யாழ்பாணத்தில் மட்டும் 150 -க்கும் மேற்பட்ட கோயில்களில் தலித்துகள் நுழைய முடியாத நிலை இருக்குமளவுக்கு சைவப்புலிகள் விடுதலைப்புலிகளுக்கே சவால் விட்டுவார்களாயிற்றே! தவிர அகதி முகாம்களில் கூட சாதிப்பாகுபாட்டை, அந்தஸ்தை பேணுமளவுக்கு ஈழத்தமிழினம் உங்கள் கூற்றுப்படி ஓர்மடையாதபோது இங்கே சாதி அந்த அளவுக்கு இல்லை, வர்க்கம் அறவே வேலை செய்யாது என்பது சரியாகப்படவில்லையே!

      மேலும் இடதுசாரி கண்ணோட்டம் மற்றும் தீண்டாமை எதிர்ப்பு அமைப்புகளின் போராட்டத்தால் தன்னை தகவமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட உங்கள் யாழ் வெள்ளாள குறுந்தேசியம், யுத்தத்தின் நிலைமைகள், சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகள் காரணமாக ஒரு தற்காப்பு தமிழ்தேசியவாதமாக சைவக் கொடுக்கை மடக்கி வைத்திருப்பதுதான் வரலாறே ஒழிய! இயல்பிலேயே யாழ் வெள்ளாள தமிழ்தேசியம் சாதிவெறியற்றது என்பது போல சாதிய போராட்ட வரலாறை கண்டும் காணாமல் போவதன் மூலம் முற்போக்கும் இல்லை, பிற்போக்கும் இல்லை. தமிழ்தேசியம் ஈழத்தமிழரிடத்திலே ஒன்றுதான் என்று நீங்கள்தான் வாதிடுவதாகப் பார்க்கிறேன். மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிப்பின் போதெல்லாம் இலங்கை சிங்கள இனவெறி அரசோடு ஒத்துப்போன யாழ் தமிழ்தேசிய மேட்டுக்குடி விவகாரத்தையும், புலிமார்க் சியக்காய் தூள் போட்டு நீங்கள் விளக்குவது இருக்கட்டும், தேசிய சிறுபான்மை இனம் என்ற அவர்களது அரசியல் உரிமையை அங்கீகரிக்காமல் புலிகள் வரை அவர்களையும் ஒரே ஈழத்தமிழர்கள் என்று அடக்குவது என்ன நியாயம்? தத்தம் போராட்ட வடிவங்களால் மலையக மக்கள் வென்றெடுத்த தொழிற்சங்க உரிமைகள் இருக்கட்டும் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்சங்கங்களையே தடை செய்த நீங்கள்தான் மலையக மக்களுக்கும் சேர்த்து ஈழம் வாங்கித்தரும் இனக்காவலர்களா? கடைந்தெடுத்த சாதிவெறி சுரண்டல் அயோக்கியர்களான
      தமிழக சைவ மடாதிபதிகள் முதல், புலிக்கச்சை அணிந்து கவர்ச்சிகாட்டும் மதுரை ஆதினங்கள் வரை யாழ்ப்பாண சைவக்கும்பல் வரை மார்க்சிய – லெனினியத்தை விரோதமாக பார்ப்பதில் என்ன ஒரு தமிழின ஓர்மை
      உங்கள் உணர்ச்சியில்! களத்துப் பிள்ளைகளிடம் ‘சோசலிசம்’ ‘ஏ.கே. 47’ கற்றறிந்த ‘பிள்ளைமாரிடம்’ தமிழியம், ‘அரோகரா’ அடடா! யாழ்ப்பாண மேட்டுக்குடியிடம் புலிகளே வாலைச் சுருட்டிய கதை இதுதானா?

      யுத்தப் பாதிப்பினாலும், அகதிகளாகவும் புலம் பெயர்ந்த தமிழர்களை நான் பொதுவாகப் பேசினால்தானே. நீங்கள் யூதனை விட்டு எங்களை உதைக்க வேண்டும்! நான் நேரிடையாகக் குற்றம் சாட்டியது யாழ் மேட்டுக்குடி வர்க்கத்தை! ஒ! உங்களுக்குத்தான் வர்க்கம் கிடையாதே! நந்திக்கடலோரம் சனம் கொல்லப்பட்டு பிண வீச்சம் கூட மாறாத நிலையில்… லண்டனில் தமிழக சினிமா கழிசடைகள் அடித்தக் கூத்தை கைதட்டி ரசித்து, விசிலடித்துக் கொண்டிருந்த அந்த ஈழத்தமிழ் கூட்டத்தை உங்கள் வசதிக்காக இனம் என்று மட்டும் சொன்னால் போதுமா? இல்லை இது வர்க்கக் கொழுப்பா?

      வாதத்தின் மையத்திற்கு வருகிறேன், வள்ளலார், பெரியார், வர்க்கப் போராட்டமெல்லாம் ஈழத்துக்கு வேலைக்கு ஆகாது! என்று நக்கலடிக்கும் நீங்கள் முன் வைக்கும் தீர்வுதான் என்ன என்று தேடிப்பார்த்தால், உங்கள் இணையக் கட்டுரைகளில் உடனடியாக தமிழர் நிலப்பகுதியில் சிங்களக் குடியேற்றத்தை விலக்கு! என்று இந்தியா மூலமாக அழுத்தம் தர வேண்டும் என்று தமிழக தமிழர்களுக்கு ஆலோசனை வழங்குகிறீர்கள்! ஈழத்தமிழர் நிலத்தில் இந்திய தரகு முதலாளிகளின் குடியேற்றத்தையும், உடனே சிங்கள குடியேற்றத்தையும் விலகிடு? என்று தமிழகத் தெருக்களில் ஆர்ப்பாட்டமாகவும், முற்றுகையாகவும் ஏற்கனவே போராடி வரும் ம.க.இ.க. வினரையோ சிங்களருக்கு உதவி புரிபவர்கள் என்று சந்தேகம் வருவதாக பரப்புகிறீர்கள்.

      ஒரு புறம் சர்வதேசம் உதவவில்லை, இந்தியா அழிந்துவிட்டது, பாட்டாளிவர்க்க கண்ணோட்டமும் பயன்படாது என்று அனுபவங்களைத் தொகுக்கும் நீங்கள், இனியும் இந்தியா மூலமாகத்தான் ஏதாவது நடக்கும்! என்றும், இந்திய ராஜபக்சேவான மோடியைத் தூக்கிவரும் பா.ஜ.க.வுக்கு கல் சுமந்து ஈழம் வாங்கி விடலாம் என்று நம்பிக்கையூட்டும் தமிழினவாதிகளை பாராட்டலாம் என்பது என்ன சைவ கிறுக்கோ!

      சிலுவைப்போர் தொடங்கி இது காறும் நடக்கும் இன, மதவெறிப் படுகொலைகள் எல்லாம் வர்க்கப்போராட்டத்தின் சிதைந்த வடிவங்களே என்று நாங்கள் சொல்லிவந்தால், எமக்கு ஈழம் பற்றி எதுவுமே தெரியாது என்று சிரித்துவிட்டு, சீரியசாக உங்கள் தளத்தில் சிங்கள, தமிழர் இடையே நடப்பது, அடிப்படையில் நிலப்போராட்டம் என்று மை போடுகிறீர்கள். சிறிதளவே ஆயினும் இலங்கையில் வர்க்கக் கண்ணோட்டத்திலான அரசியல் பார்வையால்தான் சாதி எதிர்ப்பு, தொழிற்சங்கங்கள், இன சமத்துவம் உள்ளிட்ட சொற்ப அளவிலான ஜனநாயக சக்திகளையாவது, உங்கள் கூற்றுபடி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஒரு சிலரையாவது உருவாக்க முடிந்தது. முப்பது நாற்பது ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கில் உயிர்களை பலி கொடுத்த உங்களின் முதலாளித்துவ அரசியல் பார்வையால் வென்றெடுத்த உலக சக்திகள் என்ன? ஜெயலலிதா என்ன அடித்தாலும் தாங்கும் நெடுமாறன், சீமான், வைகோ. என்ற செல்லாக்காசுகள்தான் உங்களுக்கு நாணயமான சக்திகளா? தில்லை தீட்சிதன் முதல் லங்கை ராஜபக்சே வரை மஃபியா கூட்டாளியாகச் செயல்படும் சுப்ரமணியசாமி அணிவகுக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ், பார்ப்பன மதவெறிக் கும்பலின் கையால் ஈழம் வாங்கித் தர புறப்பட்டிருக்கும் இந்தச் சதிகார ஏஜென்டுகள் உங்களுக்கு சாதிக்கும் ஏஜன்ட்டுகள்!, ஈழமக்களின் தன்னுரிமைக்காக தொடக்கம் முதலே… இந்திய, உலக ஏகாதிபத்தியச் சார்புப் பாதை அழிவைத்தரும் என்று அரசியல் ரீதியாக எச்சரித்து, இங்கிருக்கும் ஈழ அகதிகளின் உரிமை வரைக்கும் இந்திய, பார்ப்பன ஜெ அரசின் மேலாதிக்க வெறிக்கு எதிராக இங்குள்ள பாட்டாளிவர்க்கத்தின் அரசியல் வீச்சை முன்னெடுக்கும் நாங்கள் சரண்டர் ஏஜென்ட்டுகளா?

      கம்யூனிஸ்டுகள் என்றால் கருவறுப்பதில் சிங்கள அரசுகளும், புலிகளும் கைக் கூட்டாய் இருந்து கொண்டு, மக்களின் மார்க்சிய தெரிவுக்கு எந்த ஜனநாயகத்தையும், அமைப்பையும் மறுத்துவிட்டு, எங்கே போனது உங்கள் பாட்டாளி வர்க்கம் என்று எள்ளி நகையாடும் நண்பரே! எல்லோரையும் மறுத்து மக்கள் எங்களைத்தான் ஆதரித்தார்கள்… என்று முதலாளித்துவ அரசியல் சக்திகளை நம்பி, ‘ஆயுத மேவ ஜெயதே!’ என்று எந்த அரசியல் விமர்சனத்தையும் காதில் ஏற்காத களப்புலிகளே! எங்கே உங்கள் ஈழம்? எங்கே உங்களுக்கு சேனம் கட்டிய முதலாளி வர்க்கம்! நாங்கள் இழவு வீட்டில் எள்ளி நகையாடும் அற்பர்கள் அல்ல, நீங்களே தனிமைப்பட்டு, தவித்து அடங்கிய முடிவுக்காக ஆழமாக துன்புறுகிறோம், புலி என்றால் மக்கள், மக்கள் என்றால் புலிகள் என்று பதிலடி தந்துவிட்டு, லட்சக்கணக்கான மக்களை நந்திக் கடலோரம் நிராயுதபாணியாக நிறுத்தி, குறைந்தபட்சம் ஈழத்தமிழர் வாழும் பரப்பெங்கும் ஒரு அரசியல் எதிர்ப்பைக் கூட நடத்தமுடியாத அளவுக்கு மக்களிடம் அமைப்பற்று சிதறிப்போன உங்கள் வழிமுறைத் தவறுகளை இன்னும் உணராமல், மக்களை மீண்டும் முதலாளித்துவச் சக்திகளிடம் பணயம் வைக்கும் உங்கள் திருந்தா தன்மைக்கு வருந்துகிறோம்!

      திரும்பவும் சொல்கிறேன், நான் கொண்டிருப்பது மட்டும் வர்க்கப் பார்வையல்ல, நீங்கள் விவாதிப்பதும் ஒரு வர்க்கப் பார்வையின் அடிப்படையில்தான். எந்தப் பார்வையின் அடிப்படையில் ஈழத்தின் தன்னுரிமை சாதிக்கப்படமுடியும் என்பதில் நீங்கள் முன்வைத்த பார்வைதான் அனுபவத்தில் தோல்வி கண்டுள்ளது. மாறாக இன்னும் ஈழத்தமிழர் அரசியல் போராட்ட அனுபவங்களின் ஆளுகைக்கு வராத பாட்டாளிவர்க்கப் பார்வையல்ல. பவுத்த சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களுக்கு மட்டுந்தான் எதிரி மற்றபடி எல்லா சிங்களவர்களுக்கும் முரணில்லாதது என்று முடிவு செய்ய முடியாது! ஏகாதிபத்திய உலகமயமாக்கலை அமல்படுத்தும் ஒரு வர்க்க அரசு என்ற முறையில் அது சிங்கள உழைக்கும் வரக்கத்திடமும் எதிர்ப்பையும், முரண்களையும் தோற்றுவிப்பதுதான் அதன் இருத்தலின் இயல்பு! அதைத் தனிமைப்படுத்தி, பலவீனப்படுத்தி செய்யும் முயற்சிகள் வீணானவை என்பதைவிட, ஐ.நா. வுக்கு மனு கொடுத்து, இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து, சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளுக்கு துப்புக்கொடுத்து… சிங்கள இனவெறி அரசை பணிய வைத்து விட முடியும் என்று மீண்டும் முதலாளித்துவ சக்திகளை நம்புவதுதான் வீண் வேலை, ஆகாத வேலை! தனது நலன்களைச் செய்வதற்கு ஏற்கனவே ஒரு அரசு வாய்ப்பாக அதுவும், இனவெறி, மதவெறியோட மக்களை பிளவுபடுத்தி மூலதன ரத்தம் குடிக்க ஏதுவாக இருக்கும் போது உலக முதலாளித்துவ சக்திகளுக்கு சிங்கள இனவெறி அரசை எதிர்க்கவேண்டிய அவசியமில்லை. பொய்த்துப்போன சர்வதேச முதலாளித்துவச் சக்திகளிடம், ஏகாதிபத்திய கொலை வெறியர்களிடம் நம்பிக்கை வைத்து சாவதைவிட, உள்நாட்டு அரசு எதிர்ப்பு சக்திகளுடன் வர்க்கக்கண்ணோட்டத்துடன் இணைவதற்கான அரசியலை முன்னெடுப்பதும்தான் உலக முதலாளித்துவ சக்திகளையே பணிய வைக்கும் திறன் வாய்ந்தது எனக் கருதுகிறேன்! பரிசீலியுங்கள்!

      துரை.சண்முகம்

      • Dear sir,

        [1]Your feed back for this Eelam issue is very logical and practical.

        [2]You please write more essays based on the MKEK strategy :
        “ஈழத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை என்பதே தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது என்பதுதான் எப்போதும் ம.க.இ.க.-வின் நிலை. தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை மறுப்பது, ஈழத் தமிழ்தேசிய இனத்தின் தன்னுரிமையையே மறுப்பதாகும்”

        with regards,
        K.Senthil kumaran

  28. @ஆதவன்,

    ///இரயாகரன் ஒரு சிங்கள இடதுசாரியின் பேரை சொல்லி இருப்பார். அவர் வடபகுதிக்கு வந்து தமிழ் மக்களோடு இணைந்து பணியாற்ற விழைந்தபோது அதனை தடுத்தது பிளாட். ///

    ஒரு சிங்கள இடதுசாரி வடபகுதிக்கு வருகிறார் என்றாலே கருத்து அவரால் தெற்கில் தனது கட்டுப்பணத்தைக் கூடக் காப்பற்றிக் கொள்ள முடியாது என்பது தான் . சிங்கள மக்களினதும், சிங்கள பிக்குகளினதும் ஆதரவற்ற சிங்கள இடது சாரிகளால் இலங்கையில் எதையும் சாதிக்க முடியாது. 🙂

    ///சிங்கள ஜனநாயக சக்திகளுக்கு புலிகளோ அல்லது மற்ற இயக்கங்களோ எப்போது நேசக்கரம் நீட்டினார்கள் ?. – புத்த மதவெறி தூண்டி விடப்பட்ட போதும். ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை என்பது எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டும்.///

    சிங்கள ஜனநாயக சக்திகள் என்றழைப்படுபவர்கள் எப்படியானவர்கள் அவர்களை நம்பலாமா, இல்லையா என்பதைத் சுதந்திரத்துக்குப் பின்னால் 35 வருடங்களுக்கு மேலாக ஜனநாயகத்தின் அடிப்படையில் அகிம்சைவழியில் நடத்திய போராட்டங்களின் மூலம் ஈழத்தமிழர்கள் புரிந்து கொண்டனர், உதாரணமாக இலங்கையின் புகழ் பெற்ற மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்புள்ள சிங்களத் தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா, இலங்கைப் பாராளுமனறத்தில் தனிச்சிங்கள சட்டம் கொண்டு வந்த போது இரண்டு மொழிகளையும்- அதாவது தமிழையும் சிங்களத்தையும்ஆட்சி மொழியாக அங்கீகரித்தால் நாடு ஒன்றாக இருக்கும் அல்லது நாடு இரண்டு படும் என்ற தனது புகழ் பெற்ற பேச்சை நடத்தி விட்டு, (famous quote of a famous man, Dr. Colvin R. De Silva – “One Language; Two States/Two Languages; One State to describe the North-South divide of the time). சில வருடங்களின் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து, தானே முன்னணியில் நின்று அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக இருந்த ஒரு சில சரத்துக்களையும் நீக்கி, சிங்கள அரசியலமைப்பை உருவாக்க உதவினார். இப்படி எத்தனையோ கழுத்தறுப்புகளையும், முதுகில் பல கத்திக் குத்துகளையும் பெற்றுக்கொண்டதால் தான் ஈழத்தமிழர்கள் சிங்கள, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் என்று தம்மைக் குறிப்பிடுகிறவர்களை நம்புவதில்லை.

    ///சிங்கள் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது, இந்தியப் படைகளுக்கு எதிராக இல்லை !! மாறாக ஒரு புரட்சியின் மூலம் கம்பியூனிச அரசை அமைக்க வேண்டும் என்று விரும்பிதாலேயே – அது ஜேவிபியின் இனவாதமுடைய – மண்ணுக்கேற்ற மார்சியம் என்ற பெயரில் தமிழர் உழைப்பாளிகளை அரவணைக்காமல் இருந்ததால் வந்தது.///

    1970 களில் ஜேவிபி நடத்திய புரட்சி வேண்டுமானால் நீங்கள் சொல்லிய காரணங்களுக்காக இருக்கலாம். ஆனால் 1987 இல் அவர்கள் ஆயுதமேந்திப் போராடியது, தமிழர்களுக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் நாட்டை பிரித்துக் கொடுக்கப் போகிறார்கள், அதனால் அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், அதனால் தான் சிங்கள மக்கள் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்.

    During early 1980’s, as the Tamil insurgency to the north became more intense, there was a marked shift in the ideology and goals of the JVP. Initially Marxist in orientation, and CLAIMING to represent the oppressed of both the Tamil and Sinhalese communities, the group emerged increasingly as a Sinhalese nationalist organization OPPOSING ANY COMPROMISE WITH THE TAMIL INSURGENCY. This new orientation became explicit in the anti-Tamil riots of July 1983. Because of its role in inciting violence, the JVP was once again banned and its leadership went underground.

    The group’s activities intensified in the second half of 1987 in the wake of the Indo-Sri Lanka Accord. The prospect of Tamil autonomy in the north together with the presence of Indian troops stirred up a wave of Sinhalese nationalism and a sudden growth of anti-government violence. During 1987 a new group emerged that was an offshoot of the JVP—the Patriotic Liberation Organization (Deshapremi Janatha Viyaparaya—DJV) led by Saman Piyasiri Fernando or Keerthi Vijayabahu a person who led the JVP after the death of Rohana Wijeweera. The DJV claimed responsibility for the August 1987 assassination attempts against the president and prime minister. In addition, the group launched a campaign of intimidation against the ruling party, killing more than seventy Members of Parliament between July and November.

    ///ஆனால் ஒரு விடுதலை இயக்கம் இதனை கணக்கில் எடுத்துக் கொண்டு சிங்கள் மக்களை வென்றெடுக்க இல்லை என்றாலும், எதிர் திசையில் செல்லாமல் இருக்கவாவது முயற்சித்து இருக்க வேண்டும்.///

    எப்படி சிங்களவர்களை வென்றெடுப்பது. தமிழர்கள் நாட்டைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். அவர்களின் துட்டகைமுனு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் தமிழன் எல்லாளனிடமிருந்து காப்பற்றிய சிங்கள நாட்டை வடக்கிலிருக்கும் தமிழர்களிடமிருந்தும் புலிகளிடமிருந்தும் காப்பற்ற வரிசை, வரிசையாக நின்று இலங்கை இராணுவத்தில் தமது பிள்ளைகளை சேர்த்த சிங்கள பாட்டாளி வர்க்கத்தை புலிகள் வென்றெடுக்க முயன்றிருக்க வேண்டும் என்பது, கேட்பதற்கு நன்றாக இருக்கும், ஆனால் நடைமுறையில் சாத்தியமல்ல. ஐயா! எல்லாக் கொள்கைகளும் கோட்பாடுகளும், அவை எவ்வளவு உயரியவையாக இருந்தாலும் கூட, எல்லா நாட்டுக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் பொருந்தாது.

    ///ஆனால் புலிகள் அனுராதபுரம் படுகொலைகள் ஆரம்பித்து, சிங்கள மக்களை மொத்தமாக எதிர் திசைக்கு அரசை விடவும், புத்த பிக்குகளை விடவும் தள்ளினர்.///

    புலிகள் செய்த கொலைகளை நான் நியாயப்படுத்தவில்லை, ஒவ்வொரு உயிருமே விலைமதிக்க முடியாதது தான். ஆனால் புலிகள் அனுராதபுரத்தில் எதிர் தாக்குதல் நடத்த முன்பு, அதை விட மோசமான எத்தனையோ தமிழர்களின் படுகொலைகள் வட- கிழக்கில் அரங்கேறி விட்டன. ஆனால் செய்தித் தணிக்கை இருந்ததால் அந்தக் கொலைகள் வெளிவரவில்லை. புலிகளின் தாக்குதல்கள் மட்டும் இலங்கை அரசால் விளம்பரப்படுத்தப் பட்டன.

    1. Inginiyakala massacre ‐ 05.06.1956
    2. 1958 pogrom
    3. Tamil research conference massacre ‐10.01.1974
    4. 1977 communal pogrom
    5. 1981 communal pogrom
    6. Burning of the Jaffna library ‐01.06.1981
    7. 1983 communal pogrom
    8. Thirunelveli massacre ‐ 24, 25.07.1983
    9. Sampalthoddam massacre ‐ 1984
    10. Chunnakam Police station massacre ‐08.01.1984
    11. Chunnakam market massacre ‐ 28.03.1984
    12. Mathawachchi – Rampawa ‐ September 1984
    13. Point Pedro – Thikkam massacre ‐ 16.09.1984
    14. Othiyamalai massacre ‐ 01.12.1984
    15. Kumulamunai massacre ‐ 02.12.1984
    16. Cheddikulam massacre ‐ 02.12.1984
    17. Manalaru massacre ‐ 03.12.1984
    18. Blood soaked Mannar ‐ 04.12.1984
    19. Kokkilai‐Kokkuthoduvai massacre ‐ 15.12.1984
    20. Vankalai church massacre ‐ 06.01.1986
    21. Mulliyavalai massacre ‐ 16.01.1985
    22. Vaddakandal massacre ‐ 30.01.1985
    23. Puthukkidiyiruppu Iyankovilady massacre 21.04.1985
    24. Trincomalee massacres in 1985
    25. Valvai‐85 massacre 10.05.1985
    26. Kumuthini Boat massacre 15.05.1985
    27. Kiliveddi massacre in 1985
    28. Thiriyai massacre ‐ 08.06.1985
    29. Sampaltivu ‐ 04 to 09.08.1985
    30. Veeramunai massacre ‐ 20.06.1990
    31. Nilaveli massacre 16.09.1985
    32. Piramanthanaru massacre ‐ 02.10.1985
    33. Kanthalai‐85 massacre ‐ 09.11.1985
    34. Muthur Kadatkaraichenai ‐ 08, 09, 10.11.1985
    35. Periyapullumalai massacre in 1986
    36. Kilinochchi Railway Station massacre ‐ 25.01.1986
    37. Udumbankulam massacre ‐ 19.02.1985
    38. Vayaloor massacre ‐ 24.08.1985
    39. Eeddimurinchan massacre ‐ 19, 20.03.1986
    40. Anandapuram shelling ‐ 04.06.1986
    41. Kanthalai‐86 massacre ‐ 04, 05.06. 1986
    42. Mandaithivu sea massacre ‐ 10.06.1986
    43. Seruvila massacre ‐ 12.06.1986
    44. Thambalakamam massacres ‐ 1985, 1986
    45. Paranthan farmers massacre ‐ 28.06.1986
    46. Peruveli refugee camp massacre ‐ 15.07.1986
    47. Thanduvan bus massacre ‐ 17.07.1986
    48. Mutur Manalchenai massacre ‐ 18.07. 1986 ..
    49. Adampan massacre ‐ 12.10.1986
    50. Periyapandivrichchan massacre ‐ 15.10.1986
    51. Kokkadichcholai‐87 massacre ‐ 28.01.1987
    52. Paddithidal massacre ‐ 26.04.1987
    53. Thonithiddamadu massacre ‐ 27.05.1987
    54. Alvai temple shelling ‐ 29.05.1987

    http://www.nesohr.org/files/Lest_We_Forget.pdf

    //இவர்களை பற்றி துடிக்கும் முள்ளிவாய்க்கால் – துரோகிகளின் கள்ள மவுனம் என்ற தலைப்பில் வினவின் கட்டுரை (வெளியிடாகக் கூட வந்தது) படிக்கவும்.//

    இன்னும் படிக்கவில்லை, Link இருந்தால் தரவும், நன்றி

    ///2009 அல்லது 2008 இல் சரியாக நினைவில் இல்லை – ஈழத்திற்காக மாநாடு கூட்டியவர்கள் ம.க.இ.க. குடியரசு தினத்தில் மருதையன் ஈழ படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் மறியல் செய்து கைதானவர்கள். ராஜிவ் படுகொலை சரியான அரசியல் நடவடிக்கை என்று படுகொலை நடந்த அதே மாதத்தில் கட்டுரை வெளியிட்டு அடக்குமுறைகளைச் சந்தித்தனர் !! ஜெயலலிதா சட்டசபையிலேயே ம.க.இ.க என்ற ஒரு தீவிரவாத அமைப்பை அடக்கி விட்டதாக சபையிலேயே அறிவித்தார்.///

    ம.க.இ.கவினர் மட்டுமல்ல எந்த தமிழ்நாட்டுத் தமிழனும் எங்களுக்காக, குறிப்பாக இலங்கையில் தனிச் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அவதிப்படும் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதை, நாங்கள், ஈழத்தமிழர்கள் வரவேற்கிறோம். சகோதரபாசம் கலந்த நன்றியுணர்வுடன் அவர்களின் உணர்வை மதிக்கிறோம். ஆனால் இலங்கையில் உண்மையான நிலவரம் தெரியாமல், சிங்கள பாட்டாளி வர்க்கம் தமிழர்களைத் தேசிய இனமாகவோ அல்லது அவர்களின் சுயநிர்ணய உரிமையையோ ஒரு போதும் அங்கீகரிக்காது, என்ற மறுக்க முடியாத உண்மையையும், அதற்கு புத்த பிக்குகளும், சிங்களவர்களின் மகாவம்ச சிந்தனையும் ஒருபோதும் இடமளிக்காது என்பதையும் உணராமல் வெறும் மாக்சிய-லெனினிய அடிப்படையில் வன்னியில் தமிழர்களின் குழந்தைகளை உயிரோடு புதைத்தவர்களும், தமிழ்ப்பெண்களை கற்பழித்துக் கொலை செய்தவர்களும், சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் பிள்ளைகள் தான் என்பதை மறந்து, உலகமெல்லாம் அவர்களை போர்க்குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டும் இந்த வேளையில், அவர்களையும் இணைத்துக் கொண்டு வர்க்கப் போராட்டம் நடத்துமாறு கேட்கும் வக்கிரத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் தான் எனது நேரத்தைச் செலவழித்து இந்த வலைப்பதிவில் பதிலெழுதுகிறேன். அதை விட ம.க.இ.க வினருடனோ அல்லது யாரிடமோ எனக்குக் காழ்ப்புணர்வு எதுவும் கிடையாது.

  29. @Mannaru,

    /// இவர்கள் ஏன் உங்கள் நாட்டு விவகாரத்தில் உங்களுக்கே அறிவுரை கூற வேண்டும்? ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கைத் தீவினிற்குள் வைத்துத் தீர்க்கப் பட வேண்டியது. …..//

    “விடிய விடிய ராமர் கதை விடிஞ்சாப் பிறகு ராமனுக்கு சீதை என்ன முறை என்று கேட்டானாம்” அது போல் தான் இதுவும், சிங்கள பாட்டாளி வர்க்கத்தை இணைத்துக் கொண்டு, இலங்கை அரசுக்கு எதிராக ஒரு புரட்சிகர பொதுவுடைமைக் கட்சி கட்டுவது தான் மார்க்சிய – லெனினியப் பார்வை. என்று இந்தக் கட்டுரையாசிரியர் கூறியதால் அதாவது எங்கள் நாட்டு அரசியல் பிரச்சனையில் தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லாமையால் தான், பதிலெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ///அது ஈழம் ஆனாலும் சரி, நேபாளம் ஆனாலும் சரி – எங்கள் நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டம் இப்படித் தான் இருக்க முடியும். ///

    ஏனைய கட்சிகளிலும், தமிழீழ ஆதரவாளர்களினது அமைப்புக்களிலும், கட்சிகளிலும் கூட தமிழ்நாட்டின் பாட்டாளி வர்க்கத்தினர் இருக்கின்றனர். ஏதோ இந்தியாவின் பாட்டாளிவர்க்கம் அனைத்தையும் நீங்கள் குத்தகை எடுத்து விட்டது மாதிரி பேசுவதைப்பார்க்க சிரிப்பு வருகிறது.

    ///”பாரதிய ஜனதா வெல்லும் வரை போரை நீட்டித்துச் செல்லுங்கள்” என்பது போன்ற அயோக்கியத்தனமான உறுதிமொழிகளையும் அறிவுரைகளையும் இனவாதிகள் வேண்டுமானால் கூறலாம், இவர்களால் அவ்வாறு சொல்லமுடியாது. ///

    “பாரதிய ஜனதா வெல்லும் வரை போரை நீட்டித்துச் செல்லுங்கள்” என்ற தகவலில் எந்தளவுக்கு உண்மையுண்டு என்று எனக்குத் தெரியாது. அது நடந்து முடிந்த கதை ஆனால் நீங்கள் குறிப்பிடும் அந்த இனவாதிகள் எவருமே ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் வரலாறு தெரியாமல், சிங்களவர்களை இணைத்துக் கொண்டு போராடுங்கள் என்று தமது கொள்கைகளின் (மார்க்சிய – லெனினிய), அடிப்படையில் உண்மையான நிலவரம் தெரியாமல், அறிவுரை கூறுவதில்லை. அந்த வகையில் அவர்களைப் பாராட்டத் தான் வேண்டும்.

    ///புலிகள் கொடுத்த மருந்தின் விலை தானே முள்ளிவாய்க்கால்? அதே மருந்தையா திரும்பவும் கொடுக்கப் போகிறீர்கள்?///

    இன்னுமொரு ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்பது ஈழத்தமிழர்கள் அனைவரதும் முடிவு, நாங்கள் ஜனநாயக வழிகளில் எமது விடுதலையை வென்றெடுக்க, எமது பாரம்பரிய மண்ணைத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களில் காப்பாற்ற முயல்வோம், என்றுதீர்மானித்தாதால் தான் கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை தமிழ் தேசிய முன்னணிக்கு அளித்தனர் எமது மக்கள். அதனால் உங்களைப் போன்றவர்கள் தான் உங்களின் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள புலிகள் கொடுத்த மருந்தை- அதாவது ஆயுதப் போராட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே தவிர ஈழத் தமிழர்களல்ல.

    /// தமிழர்களுக்கு பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையோ சிங்கள பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை// //அவ்வாறான எந்த முயற்சியாவது புலிகள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியடைந்துள்ளதா? ///

    உங்களுக்கு புலிகளின் ஆயுதப் போராட்டம் மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது. முப்பது வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் சிங்களவர்களிடம் தமது மாவட்ட சபை போன்ற குறைந்த பட்ச உரிமைகளுக்காக கெஞ்சிய பின்பு தான் வட்டுக்கோட்டையில் தமிழீழ பிரகடனம் செய்யபப்ட்டது என்ற உண்மை கூடத் தெரியாதவர்களுக்கு எல்லாம் பதில் எழுத வேண்டிய எனது தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். 🙂

    அகிம்சை வழியில் போராடிய தமிழர்கள் மீது, கல்லெறிந்ததும், நாய்களை ஏவி விட்டதும், அவர்களுடன் அடிதடியில் இறங்கியதும் கூட சிங்கள பாட்டாளி வர்க்கம் தான். வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது சுயநிர்ணய உரிமை தான், அதை நிறைவேற்றியதும் அதற்கு எதிர்ப்பைக் காட்ட சிங்கள பாட்டாளி வர்க்கம், 1977 இனக்கலவரத்தை அரங்கேற்றியது. இனக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பேருந்துகளில் வடக்கு கிழக்குக்கு சிங்களக் கிராமங்களூடாக பயணம் செய்தால், சிங்கள பாட்டாளி வர்க்கம் அந்த அகதிகளையும் தாக்குவார்கள் என்றதால் தான் தமிழர்களை ஏற்றி, இறக்க இந்தியா கப்பல் அனுப்பியது. ஈழத்தமிழர்கள் ஜனநாயக முறையில் சிங்களவர்களிடம் தமது உரிமைகளுக்காக் கெஞ்சி, ஒரு பலனும் கிடைக்காமையால் தான் புலிகள் ஆயுதமேந்தினார்கள். அதற்குப் பிறகும் எதற்காக அவர்கள் முயற்சிக்க வேண்டும்?

    //ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் தவிர்க்கவியலாத பிரதிநிதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட புலிகள், சிங்கள ஆளும் வர்க்கத்தின் மேல் அதிருப்தியில் இருந்த சிங்கள உழைக்கும் மக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதா? //

    சிங்கள ஆளும் வர்க்கத்தில் சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கு என்ன தான் அதிருப்தியில் இருந்தாலும், தமிழர்களின் உரிமை என்று வரும்போது எந்த சிங்களக் கட்சி தமிழர்களிடம் கடுமையாக நடந்து கொள்வோம் தமிழர்களுக்கு எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறுகிறார்களோ அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவது தான் சிங்களவர்களின் வழக்கம். அதனால் தான் தங்களுக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு சரிந்து வருகிறது என்பதை உணரும் சிங்கள அரசியல்வாதிகளும் அல்லது அரசியலில் முன்னுக்கு வர விரும்பும் புதுமுக சிங்கள அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தமிழர்களுக்கேதிரான இனவாதத்தைக் கையிலெடுப்பதன் காரணம். அது ஒன்று தான் பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவைப் பெறும் ஒரே வழி என்பதால் தான். இதைத்தான் ஜே.வி.பி போன்ற மார்க்சிய-லெனினிய கட்சிகளும் செய்தன,

    ///ஆஹா… தமிழன் வீடு எரிந்தால் சாமானிய சிங்களவன் வந்து உதவி செய்வான் என்கிற அளவுக்கு நீங்கள் ஒப்புக் கொள்வது ஆச்சர்யமாக உள்ளது..///

    இதற்கு பதிலை நான் முன்பே கூறி விட்டேன். ஒரு சில தனிப்பட்ட சிங்களவர்களிடம் எங்களுக்குள்ள நட்பை அல்லது அவர்களிடம் எங்களுக்கேற்பட்ட நல்ல அனுபவத்தை முழுச்சிங்கள இனத்தின் institutionalized இனவாதத்தை எடைபோடும் அளவுகோலாகக் கொள்வது மிகவும் தவறு. அதைத் தான் நீங்கள் இங்கே செய்கிறீர்கள்.

    ///சிங்களத் தமிழ் இணக்கம் குறித்து நான் உங்களுக்கு விளங்க வைக்க முடியும் என்று தோன்றவில்லை.///

    அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வது இலகுவானதொன்று, ஆனால் தனக்கு வந்தால் தான் தெரியும் தலையிடியும் காய்ச்சலும் என்று ஈழத்தில் சொல்வார்கள். 🙂

  30. ///ஆனால், சாமானிய சிங்கள மக்கள் அந்தப் பேரிடர் காலத்தின் தமிழர்களுக்கு உதவ முன்வந்தனர். தமிழர்கள் என்றாலே சிங்களர்கள் கொலையாய்க் கொல்வார்கள் என்பதல்லவா புலிகளின் கூற்று? 25 ஆண்டுகால பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட பிறகும் கூட எதார்த்தம் அவ்வாறு இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர்த்தியிருந்தார்கள் என்பதையே நான் சொல்ல முயன்றேன்.///

    புலிகள் என்றால் சாமானிய சிங்களவர்களையே வெட்டிக் கொலையாய்க் கொல்வார்கள் என்பதல்லவா உங்களைப் போன்றவர்களின் கூற்று. ஒரு சில சிங்களவர்கள் சுனாமியில் உதவியதைப் பெரிதாகப் பீற்றிக் கொள்ளும் உங்களுக்கு, புலிகள் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்களவர்களுக்கு லாரி,லாரியாக அரிசியும், கருவாடும், போர்வைகளும், சமையல் பாத்திரங்களும் உணவுப் பொருட்களும் அனுப்பினார்கள் என்பது தெரிந்திருக்க நியாயமில்லை.உண்மையில் புலிகளும் தமது நட்புக்கரங்களை சிங்களவர்களுக்கு நீட்டினார்கள்.

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9045

    இதுவெல்லாம் இலங்கையில் சகஜமையா, அதற்குப் புலிகளும் விதிவிலக்கல்ல. எங்களின் நாடு வற்றாத ஆறுகள் கொண்ட, எதைப் புதைத்தாலும் தோப்பாக முளைக்கும் வளமான நாடு, எங்களின் 2500 ஆண்டு வரலாற்றிலே எந்த இலங்கையனும் உண்ண உணவில்லை என்ற காரணத்துக்காக இலங்கையை விட்டு வெளியேறியதில்லை. அதனால் எங்கள் வீடுகளுக்கு யார் வந்தாலும் உணவு கிடைக்கும், அது சிங்களவன் தமிழன் வீட்டுக்குப் போனால் என்ன, தமிழன் சிங்களவன் வீட்டுக்குப் போனாலென்ன. அது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மட்டுமல்ல, இலங்கையர்கள் அனைவருக்கும் பொதுவான பாரம்பரிய பழக்கம். தனிப்பட்ட முறையில் நட்புக்கு அங்கு பிரச்சனையில்லை.

    ஆனால் ஒரு சிங்களவன் என்னை வரவேற்று சோறு தருகிறானே அதனால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக் கொள்வான் என்று நாங்கள் தமிழர்களும் நினைக்க மாட்டோம். தமிழன் என்னை வரவேற்று இவ்வளவு அன்பாக நடத்துகிறானோ அப்படி என்றால், நான் யாழ்ப்பாணத்துக் காணிகளில் எல்லாம் அத்து மீறிக் குடியேறினாலும் பேசாமல் இருப்பான் என்று சிங்களவனும் நினைக்க மாட்டான். நட்பு, உணவு, உபசாரம் எல்லாம் வேறு உரிமையும் அரசியலும் வேறு. It is a Sri Lankan thing, you wouldn’t understand. 🙂

  31. TamilNet, May 23, 2003 08:27 GMT

    A convoy of trucks containing goods donated by various non-governmental and civil organisations from the North reached affected villages in the South yesterday. The trucks are delivering much needed emergency items to both Tamil and Sinhala villages affected by the recent floods.

    A truck containing goods donated by the Tamil Rehabilitation Organisation (TRO) was one of a convoy of vehicles taking part in a two-day humanitarian relief operation.

    Items donated by TRO included bed rolls, blankets, roofing sheets, kitchen utensils and clothes. Officers from the organisation visited Kalutara yesterday to deliver urgently needed relief items to flood victims.

    Minister of Fisheries, Mr. WIJESEKARA, speaking at the meeting said, `People in Matara are deeply appreciative and GRATEFUL for the relief supplies and the concern shown by the LTTE. While being subjected to severe hardships the gesture of the LTTE to provide assistance to the people of the South strengthens the friendship between the people of North and South. This challenges the extremists from the south.

    We all hope that the stalled peace talks will resume soon. People of the Northeast have the right to live with freedom and dignity in their own homeland. Separation is inevitable if a fair and equitable solution is negotiated in the peace talks,` added the Minister.

    The LTTE team is expected to return Vanni today, reports further said.

  32. // எங்கள் நாட்டு அரசியல் பிரச்சனையில் தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லாமையால் தான், பதிலெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது//

    நீங்கள் தாராளமாக பதில் எழுதலாம். ஆனால், அதற்கு முன் இத்தனை தசாப்தங்களாக உங்கள் அபிமான புலிகள் முன்னெடுத்துச் சென்ற அரசியல் லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கி ஒரு முடிவுக்கு வந்திருப்பது ஏன் என்பதை விளக்கிவிட்டு விட்டு மா.லெ கண்ணோட்டம் தவறு என்பதைச் சொல்ல முயற்சி செய்யலாம். அது தான் தார்மீக ரீதியில் சரியானது என்று கருதுகிறேன்.

    ஆதிக்கப் பெரும்பான்மை – எதிர் – ஒடுக்கப்படும் சிறுபான்மை என்கிற களம் (இந்தியாவில்) எமக்குப் புதிதில்லை. இங்கே ஆதிக்க சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒடுக்கப்படும் சாதிகளும், இந்துத்துவ மேலாதிக்க அரசியலுக்கு எதிராக சிறுபான்மை இசுலாமியர்களும் தங்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதை எதார்த்தத்தில் சோதித்தறியப்பட்ட வழிமுறைகள் யாதென்பதை நாம் அறிவோம். உலகெங்கிலும் இனரீதியிலான ஒடுக்குமுறைகளுக்குத் தீர்வாக பிரயோகிக்கப்பட்ட மா.லெ வழிமுறைகளும் எமக்கு வழிகாட்டிகளாக உள்ளது. அதன் அடிப்படையிலான தீர்வை நோக்கிய ஈழ முன்னெடுப்புகளைத் தான் ஒரு மா.லெ கட்சி ஆதரிக்க முடியும்.

    நீங்கள் சொல்வது போல் இலங்கை எனும் தீவு ப்ளானெட் பாண்டோராவில் இருப்பதாகவும், அதன் சிக்கல்கள் இந்த மில்கிவே பிரபஞ்சத்திலேயே தனித்துவமானது என்றே கூட வைத்துக் கொள்வோம். இப்போது, அங்கே சரியானதென்று கருதப்பட்டு புலிகளால் முன்னெடுக்கப்பட்ட அரசியலின் படுதோல்வி குறித்த உங்கள் விளக்கம் தேவைப்படுகிறது. நேர்மையாக அதைச் செய்து விட்டு பின் மா.லெ வர்க்க கண்ணோட்டத்தை தவறென நிரூபிக்க முன்வாருங்கள் நண்பரே 🙂

    //“பாரதிய ஜனதா வெல்லும் வரை போரை நீட்டித்துச் செல்லுங்கள்” என்ற தகவலில் எந்தளவுக்கு உண்மையுண்டு என்று எனக்குத் தெரியாது. அது நடந்து முடிந்த கதை .//

    //உங்களைப் போன்றவர்கள் தான் உங்களின் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள புலிகள் கொடுத்த மருந்தை- அதாவது ஆயுதப் போராட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே தவிர ஈழத் தமிழர்களல்ல//

    அது அத்தனை எளிதில் கடந்து போகத் தக்கதல்ல. ஒன்றரை லட்சம் உயிர்கள் அநியாயமாகப் போயிருக்கிறது. அதற்குக் காரணமான புலிகளின் தவறுகளில் இருந்து நீங்கள் என்ன பாடம் படித்தீர்கள் என்பதையும், அந்தத் தவறுகளைக் களைந்து கொள்வதற்கு இந்த மாகானத் தேர்தல் அரசியல் எவ்வாறு பயன்பட்டன என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் (யாரைப் பார்த்து யார் சரண்டர் ஏஜெண்ட் என்பது? 🙂 ). இத்தனை லட்சம் உயிர்களை இவ்வளவு அநாயசியமாகப் பேசுவதும் அதற்கு மொத்த ஈழத்தமிழர்களின் குரலையும் உங்கள் குரல்வளைக்குள் திணித்துக் கொள்ளும் திமிரையும் அதிகாரத்தையும் உங்களுக்கு யார் கொடுத்தது?

    ஒரு விவாதத்தில் சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும், நீங்கள் பேசுவது மிகவும் ஆபாசமாக இருக்கிறது திரு வியாசன் அவர்களே.

  33. //நாங்கள் ஜனநாயக வழிகளில் எமது விடுதலையை வென்றெடுக்க, எமது பாரம்பரிய மண்ணைத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களில் காப்பாற்ற முயல்வோம், என்றுதீர்மானித்தாதால் தான் கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை தமிழ் தேசிய முன்னணிக்கு அளித்தனர் எமது மக்கள்.//

    இது எத்தனை இழிவானது என்பதை உணர்ந்து தான் பேசுகிறீர்களா? சிங்கள உழைக்கும் மக்களோடு ஒன்றுபடுவதில் உங்களுக்கு உடன்பாடில்லை; ஆனால், சிங்கள ஆளும் வர்க்கத்தோடும் ராஜபக்சே கும்பலோடும் கூடிக் குலாவுவது உவப்பானது. அப்படித்தானே?

    மா.லெ கண்ணோட்டமானது, ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒடுக்கும் பிரிவிலிருக்கும் ஜனநாயக சக்திகளோடும், அவர்கள் தரப்பிலிருக்கும் உழைக்கும் மக்களோடும் ஒன்றுபட்டு ஒடுக்கும் தரப்பிலிருக்கும் ஆளும்வர்க்கமான பொது எதிரியை வீழ்த்துவதன் வழியே சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் கவுரவமான, சுயமரியாதையான வழியை முன்வைக்கிறது.

    ஆனால், உங்கள் புலி வழியோ – ஒன்று ஆயுதம் எடுத்து எதிர்தரப்பிலிருக்கும் எல்லோரையும் எதிரிகளாக்கி சொந்தத் தரப்பிலிருக்கும் சமானிய மக்களையும் பார்வையாளர்களாக்கி வெறியாட்டம் போட்டு வேட்டையாடப்பட வழி செய்து கொடுக்கிறது – அல்லது அப்படியே தேர்தல், சலுகை, விக்கினேசுவரன், ராஜபக்சே என்று காலையில் விழுந்து தரையைக் கவ்வுகிறது.

    இதை நான் சொல்வதானால் “வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை” என்பேன் – உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் “சரண்டர் ஏஜெண்ட்” என்றும் சொல்லலாம்.

    வெட்கமாக இல்லையா வியாசன்?

  34. ஐயா மன்னாரு,

    படித்துப் பார்க்காமலே பதில் எழுதுகிறீர்கள் போல் தெரிகிறது, நீங்கள் மீண்டும், மீண்டும் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நான் ஏற்கனவே பதிலளித்து விட்டேன். உங்களுக்கு எதிராக யாராவது பதில் எழுதினால், அவர்களுக்குப் புலித்தோலைப் போர்த்தி நழுவி விடும் தந்திரம் மற்றவர்களிடம் வேலை செய்திருக்கலாம். அது என்னிடம் அது பலிக்காது. நான் புலியினதோ அல்லது உங்களைப் போல் புலி எதிரிகளினதோ அபிமானியல்ல, நான் ஒரு ஈழத்தமிழன் என்ற முறையில் தான், இங்கு எங்கள் நாட்டின் உண்மையான நிலவரம் தெரியாமல், நீங்கள் போதிக்கும் வர்க்கப் போராட்டத்தை உங்களின் நாட்டிலேயே வாங்குபவர்களுக்கு ஆட்களில்லாத போது , அதை எங்களின் தலையில் கட்டியடிக்க நினைக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு, அது ஈழத்திலும் விலை போகாது என்று உணர்த்துவதற்காக மட்டும் தான் பதிலேழுதுகிறேன்.

    நான் முன்பே கூறியது போன்று மா.லெ கொள்கைகளின் அடிப்படையில் காஸ்மீரத்தின் விடுதலையை, அல்லது இந்தியாவிலுள்ள பாட்டாளி வர்க்கத்தை எல்லாம் ஒன்றிணைத்து, தமிழ்நாட்டின் விடுதலையைப் பெற்றேடுங்கள், அதன் பின்னர் உங்களின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இருக்காது.

    புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதமேந்திய போராட்டம், சகோதர சண்டையாலும்,பல நாடுகளின் துரோகத்தாலும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் கையாலாகாத்தனத்தாலும், சுயநலத்தாலும், அவர்களின் ஒற்றுமையின்மையாலும், தமிழரல்லாதாரின் கைககள் தமிழநாட்டில் ஓங்கியிருப்பதாலும், திராவிட அரசியலும், பெரியாரிசமும் தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள இந்தியர்களை தமிழர்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கச் செய்ததாலும்- அவர்கள் எல்லோரும் சிங்களவர்களுக்கு உதவி- ஈழவிடுதலைப் போராட்டத்தை நசுக்கி, பல லட்சக்கணக்க்கான தமிழர்களின் உயிர்களை காவு கொண்டு விட்டது. அதற்கு பிரபாகரனையோ அல்லது புலிகளை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை.

    இன்னுமொரு ஆயுதப் போராட்டம் சாத்தியமேயில்லை என்பதுதான் ஈழததமிழர்களின் கருத்து, கொண்ட கொள்கையில் பிரபாகரன் அவர்கள் கொண்ட உறுதியை நினைவு கூரும் வேளையில், சுயவுணர்வுள்ள எந்த ஈழத்தமிழனும் அவர் உயிரோடிருக்கிறார், திரும்பி வருவார் என்று கூறுவதில்லை. இன்னும் முடிந்து போன ஆயுதப் போராட்டத்தைப் பற்றி அலட்டிக் கொள்வதும், பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்று வாதாடுவதும் கூட நீங்களும், உங்களுடைய சக தமிழ்நாட்டுத் தமிழர்களும் தான்.

    லட்சக்கணக்கான தமிழரக்ளைக் கொன்று, எமது பெண்களைக் கற்பழித்து, எமது நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் பிள்ளைகளை நீதிக்கு முன்னால் நிறுத்த உலகத் தமிழர்கள் முயன்று கொண்டிருக்கும் போது, அதே சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணையுமாறு எங்களுக்குப் புத்திமதி கூறும் உங்களைப் போன்றவர்களின் பின்னணி என்ன, நோக்கம் என்பதில் எங்களுக்கு சந்தேகம் வருவது தவிர்க்க முடியாதது. அது மட்டுமன்றி, முப்பது வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் சிங்களவர்களிடம் மாவட்ட சபை போன்ற குறைந்த பட்ச உரிமைகளுக்காக கெஞ்சிக் கேட்ட பின்பு தான் வட்டுக்கோட்டையில் தமிழீழ பிரகடனம் செய்யபப்பட்டது என்ற உண்மை கூடத் தெரியாத உங்களுக்கு எல்லாம் மீண்டும் மீண்டும் பதில் எழுத வேண்டியிருப்பதை எண்ணி வருந்துகிறேன்.

    சிங்கள உழைக்கும் மக்கள் எல்லாம் ராஜபக்சவின் குரக்கன் சால்வைத் தலைப்பில் தொங்குகிறார்கள் என்ற உண்மை கூடத் தெரியாமல், சிங்கள உழைக்கும் வர்க்கத்துடன் ஒன்றுபடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று கிளிப்பிள்ளை போல் ஒப்புவிக்கும் உங்களைப் பார்க்க சிரிப்பு வருகிறது. சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவில்லாமல் ராஜபக்ச தென்னிலங்கையில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வளவு பெரும்பான்மையுடன் வெல்ல முடியாது என்ற உண்மையை உணராமல் பேசுவதற்கு உங்களுக்குத் வெட்கமாக இல்லையா தோழர் மன்னாரு!

    சிங்கள உழைக்கும் வர்க்கம் உங்களின் மா.லெ கொள்கைகளுக்கு அமையாது ஏனென்றால் சிங்கள் பெளத்தம் என்ற இன்னொமொரு பாரிய சக்தி அவர்களைக் கட்டுப்படுத்துகிறது, என்ற உண்மையை எப்படி எடுத்துச் சொன்னாலும் உங்களுக்குப் புரிவதாகத் தெரியவில்லை. அப்படியில்லாது விட்டால், இலங்கையை இன்று மார்க்சிஸ்–லெனினிய வாதிகள் ஆண்டு கொண்டிருப்பார்கள். அதனால் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையில் உங்களின் கம்யூனிச வர்க்கப் போராட்டம் போகாத ஊருக்கு வழி காட்டும் செயல். 🙂

    Note:
    //ஒரு விவாதத்தில் சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும், நீங்கள் பேசுவது மிகவும் ஆபாசமாக இருக்கிறது திரு வியாசன் அவர்களே//

    அரிப்பு என்ற சாதாரண தமிழ்ச் சொல் உங்களது ஆபாச உணர்வுகளைத் தூண்டி விடும் என்று எனக்குத் தெரியாது மன்னாரு. அப்படி எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். நான் அந்த வகையான அரிப்பைக் குறிப்பிடவில்லை, இலங்கைத் தமிழில் உங்களின் அரிப்பு என்றால், ஒரு விடயத்துக்கு விளக்கமளித்த பின்பும் மீண்டும், மீண்டும் பேசுவதையும் குறிக்கும். உதாரணமாக. தமிழ்நாட்டுத் தமிழர்கள் தலைமுடி என்பதை நாங்கள் தலை மயிர் அல்லது மயிர் என்போம். ஆனால் மயிர் என்பது தமிழ்நாட்டில் மற்றவர்கள் முன்னால் பேசத் தகாத சொல். ஆனால் ஈழத்தில் அப்படி அல்ல.

  35. Dear Viyasan,

    Before I reply back to your loathings in your last comment, I would like to clarify you that “Tiger” is Not only a literal means an LTTE Cadre, but also who worship them and their political line. I read your blog and found your worldly outlook is not different from Tiger brand politics.

    I will give a detailed reply to your blabberings latter.

    Till then, I wish all fellow VINAVU readers to read the below mentioned posts by Viyasan to have an understanding on the classic tiger brand politics and Jaffna uppercaste world view 🙂

    ////////////

    http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_3.html

    இந்தியாவின் ஆத‌ர‌வில்லாம‌ல் த‌மிழீழ‌ம் ஒருபோதும் அமைய‌ப் போவ‌தில்லை, அதை இந்தியா அனும‌திக்க‌ப் போவ‌துமில்லை.

    தீர்வு த‌மிழீழ‌மாக‌ இருந்தாலும் முத‌லில் எம‌து ம‌ண் திட்ட‌மிட்ட‌ சிங்க‌ளக் குடியேற்ற‌ங்க‌ளிலிருந்து பாதுகாக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அது இந்திய‌ அர‌சின் த‌லையீட்டால் ம‌ட்டும் தான் முடியும்.

    http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_18.html ( Heading – யாழ்ப்பாண‌த்து வேளாள‌ர்க‌ள் ஆண்ட‌ ப‌ரம்ப‌ரையே ! )

    http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_8191.html

    //கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் – என்பது தமிழர் வாக்கு. உடப்பு வாழ் மக்கள் தாங்கள் குருகுலத்தவர் என்றும் வேதவியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்த மகான் என்றும் குருகுலத்து வேதவியாசரால் அருளப்பட்ட மகா பாரதம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்றும் கூறுவர் . தாய் வழிபாட்டில் நம்பிககை கொண்ட இம்மக்கள் ஸ்ரீ திரௌபதா தேவியம்மன் ஆலயத்தை முதன்முதலில் மரங்கள் தடிகள் கிடுகுகள் கொண்டு கட்டி முடித்து சந்தனக் கட்டையினாலான ஸ்ரீ திரௌபதையம்மன் சிலையை மூல மூர்த்தியாக பிரதிஷ்ட செய்து வழிபட்டு வந்துள்ளனர்.”//

    http://www.viyaasan.blogspot.in/2013/05/blog-post_4744.html

    புலிக‌ளின் த‌லைவ‌ர் வேலுப்பிள்ளை பிர‌பாக‌ர‌ன் த‌ன‌து இலட்சிய‌த்தில் வெற்றிய‌டையாது விட்டாலும் அவ‌ர் ஏற்றி வைத்த‌ த‌மிழீழ‌ம் என்ற‌ தீ ஒவ்வொரு ஈழ‌த்த‌மிழ‌னின் இத‌ய‌த்திலும் அணையாமல், சுடர் விட்டு எரிந்து கொண்டு தானிருக்கிற‌து

    http://www.viyaasan.blogspot.in/2013/05/blog-post_8.html (( நந்திக்கடலில் புலிகளின் அழிவுக்குக் கார‌ண‌ம் க‌ண்ண‌கியின் கோப‌மா? ))

    http://www.viyaasan.blogspot.in/2013/05/blog-post_21.html ((சீமான் மீது மட்டும் ஏனிந்த‌க் கொல‌வெறி))

    http://www.viyaasan.blogspot.in/2013/08/blog-post_19.html (( தமிழ்நாட்டுத் தமிழர்களின் முட்டாள்தனம் ?))

    ///////////

  36. வியாஸனும் அவரைத் தொடர்ந்து பின்னூட்டங்கள் தநத அன்ப்களும் மிகச் சரியாகத் தமது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். இந்திய அமைதிப் படையின் வரவின்போது அவர்களை இரட்சகர்களாகப் பார்த்து ஏமாந்த ஈழச் சோணகிரித் தமிழர்களில் நானும் ஒருவனே. இப்போதுதான் தெரிகிறது இந்திரா காந்தி உட்பட அமிர்தலிங்கம் வரை அத்தனை பேரும் ஆடியது பெரும் நாடகம் என்பது. ராஜீவ் காந்தியும் எந்த ரகம் எனத் தெரியாத படிக்கு அவரை சர்வதேச சதி கொன்றுவிட்டது.

    பண்டாரநாயக்காவை 1959ல் கொலை செய்த நாடே இந்திரா காந்தி ராஜீவ் காந்தி ஆகியோரின் கொலைகளையும் நடத்தின என்பது எனது மாற்றமுடியாத நம்பக்கை. ஈழத் தமிழினம் இனிமேலும் எந்த ஒரு இடதுசதரித் தத்துவங்களுக்குள்ளும் சிக்கத் தயாராகவில்லை.

    விடுதலைப் புலிகளில் தமக்கே உரிய முறையில் பொதுவுடமை சாதிபேதமற்ற சமுதாயத்துக்காகவே போராடி அத்தகைய உன்னத இலட்சிய மக்களோடு முதலாளித்துவ அரசுகளால் படு கொலை செய்யப்பட்டனர்.

    யாருக்காவது ஈழத் தமிழ் மக்கள் மீது ஏகதும் அனுதாபம் இருக்கும் எனில் அவர்ளின் தாயகத்தை மீட்டு தனித் தமிழ் ஈழம் அமைக்க உதவுவது ஒன்றே.

  37. // I read your blog and found your worldly outlook is not different from Tiger brand politics. I will give a detailed reply to your blabberings latter.//

    Comrade Mannaru,

    I can’t wait.. 🙂

    I never claimed to be a communist. Some of my posts on my blogs are replies to the blabbering of people like you who had no knowledge whatsoever about the history of Eelam Tamils.

    No Tamil worth the name of this proud race will ever forget the fact that Prabhakaran defended the Eelam Tamil homeland for more than 30 years. With all his faults he stood up against Sinhala racism and internationalized the Tamil struggle for self-determination. You failed to realize the fact that the vast majority of Eelam Tamils still revere Prabhakaran and LTTE. That alone shows the communist outlook and ideas won’t work in Tamil Eelam. We, Eelam Tamils do not need to apologize for the armed struggle and we do not need any approval from people like you.

    Viyasan.R

  38. [1]ஈழம் திர்வு

    r.k SAID://சிங்கள இன வெறியர்களினால் அம்முயற்சி சிதறடிக்கப்பட்டது வேறு விடயம்

    வேறு விடயம் அல்ல.

    மிக முக்கியமான [சிங்கள-ஈழ மக்கள் போர் வரலாறு பின்புலம் உள்ள] விடயம்,நிகழ்ச்சி.

    சிங்கள மக்கள்,தமிழ் அரசர்களுடன் ஏற்பட்ட போர்களையும் ,தோல்விகளையும் மறக்க மாட்டர்கள்.

    தமிழ் மக்களும் கடந்த 300 ஆண்டு கால அரசியல் வீழ்ச்சியை மறக்க மாட்டர்கள்.

    எனவே இம் மக்களை வர்க்க அரசியலோ வேறு எதுவும் இணைக்காது.

    —CONTINUE—-

  39. [2]ஈழம் திர்வு

    எதிர் காலத்தில் இந்திய அரசியலின் போக்கு மட்டுமே ஈழ மக்களின் விடுதலையை முடிவு செய்யும்.

    [A] எதிர் காலத்தில்[in 40 years] இன்றைய முதலாளித்துவ இந்திய அரசாங்கம் தொடர்ந்தால் அது அமேரிக்கவின் மறைமுக ஆதரவுடன் ,சீனாவுக்கு எதிரான நிலை எடுத்து இந்திய-அமேரிக்க ஆதரவு தனி தமிழ் ஈழம் உருவாகும்.[displaced eelam people around the world will play important roll in this eelam formation]

    [B]எதிர் காலத்தில் இந்தியாவில் புதிய சனநாயக அரசு [Maoest gov] மலர்ந்தால் அது ஈழத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமைக்கு ஆதரவு தரும்.[It will give economical and political presser to sri lankan government indirectly along with china].

    —CONTINUE—-

  40. [3]ஈழம் திர்வு

    So We communist people in India should work hard for the creation of new government through New Democratic revolution to eliminate poverty in India and for supporting Eelam people rights.

    During the same time Tamil Eelam working class should create a political condition for the creation of EElam nation.

    —CONTINUE—-

  41. [4]ஈழம் திர்வு

    [a]Eelam Tamil people mostly America-India support Tamil Eelam just because of the influence from displaced Eeelam Tamils around the world.

    [b]My advice is at the same time trying for “America-India support Tamil Eelam” they should watch the transition of power from capitalist gov to communist people. Now Eelam people should watch the inter national politics carefully and choose their option for their freedom.

    —CONTINUE—-

  42. correction in [4]ஈழம் திர்வு

    capitalist gov to communist people —>capitalist gov to communist people IN INDIA.

    • இன்று உலகம் எதிர் நோக்கியுள்ள சகல பிரச்சனைகளுக்கான தீர்வை தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் திரு.கி.செந்தில் குமரன் அவர்கள்.அவர் கூறும் தீர்வுகளை ஏற்று நடைமுறை படுத்தாமல் மெத்தனமாக இருக்கும் மத்திய,மாநில,உலக நாடுகளின் போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது.அவர் கூறும் தீர்வுகளை உதாசீன படுத்துவதால் அவருக்கு எந்த நட்டமும் இல்லை. நட்டம் மனித குலத்திற்குதான்.நன்றி

      • நீங்கள் இடும் பின்னுட்ங்கள் உங்கள் மன எரிச்சலை வெளிக்காட்டுகின்றன.

      • ஐயா தேவாரனயனர் அவர்களே ,

        எந்த விவாதமும் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி செல்ல வேண்டும் என்பதே எனது சரியான அணுகுமுறை !

        விவாதத்தில் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள் பயன்படுத்தி ,விவாதத்தின்
        நோக்கத்தையே சிதைக்கும் உங்கள் அணுகுமுறை தவறு

        devaranayanar said://இன்று உலகம் எதிர் நோக்கியுள்ள சகல பிரச்சனைகளுக்கான தீர்வை தன் விரல் நுனியில்…….//

        அன்புடன் ,
        கி.செந்தில் குமரன்

        • தீர்வு இதுதான் என்று முன்பே முடிவுசெய்து விட்டு விவாதத்திற்கு வருபவர் நீங்கள்,இதில் விவாதத்தின் முடிவில் தீர்வு எட்டபட வேண்டும் என்று நீங்கள் கூறுவதில் உண்மை இல்லை.நான் கேலிசெய்தது அதைதான்,மற்றபடி தங்கள் மேல் எனக்கு தனிப்பட்ட எரிச்சல் எதுவும் இல்லை.கருத்தற்ற தாக்குதலில் நான் ஈடுபடவும் இல்லை

  43. மன்னாரு இவர்களது ஆதிக்க மனப்பான்மையை தகுந்த ஆதாரங்களுடன் சரியாக எடுத்து சொல்லியுள்ளீர்கள்.இலங்கையில் இவர்கள் வானத்து தேவர்கள், மற்ற இனம் நீண்ட நாக்கும் இரு புறமும் கோரைப் பற்களும் கொண்டது.

  44. இன்று இலங்கை அரசு என்ன செய்து இலங்கை தமிழர்களின் அரசியலை இல்லாமல் செய்வதையே சிங்கள பாட்டாளி மக்களுடன் சேர்ந்து தமிழர்கள் பெறும் தீர்வாக இருக்கும் சிங்கள பாட்டாளி மக்களுடன் என்கிற போது அவர்களின் பெரும் குடி ஏற்றங்களை தமிழர்களின் அரசியலுக்கு வைக்கும் விசமாகும் உலகமும் அதன் முதலாளிகளும் பேசும் சட்டம், மனித உரிமை, ஜனநாயகம், போர் குற்றம் போன்றவற்றை தான் தமிழர்கள் பேச வேண்டும் இவைதான் உலகத்த்தோடு சேர்ந்து அரசியல் செய்ய வைக்கும் காக்கும்

    • Dear viyasan,prema and Eelam freedam fighters,

      [1]It is your[EElam people] choice to choose the path for achieving Eelam nation. There are two choices for you. “Socialist Tamil EElam” or “Capitalist Tamil EElam”

      [2]Already You choose capitalist governments[India,USA,etc] for u r support for the formation of Tamil Eelam. The Govs those u believed are cheating you by joining hands with srilankan gov. Again u are choosing wrong aim “Capitalist Tamil EElam” with the same wrong choice of support![from India and USA]

      [3]We communist people[maoist] are continuously rendering support from Tamil nadu for the rights for Tamil people in EElam.Why do not u join hands with our people to form a Socialist Tamil Eelam.

      prema said://முதலாளிகளும் பேசும் சட்டம், மனித உரிமை, ஜனநாயகம், போர் குற்றம் போன்றவற்றை தான் தமிழர்கள் பேச வேண்டும் இவைதான் உலகத்த்தோடு சேர்ந்து அரசியல் செய்ய வைக்கும் காக்கும்

      With real love and affection with our EElam Tamil-ans,
      கி.செந்தில் குமரன்

  45. சபாஷ் தோழர் மன்னாரு அவர்களே.

    நான் வியாசனை ஏதோ புலி அரசியலால் கம்யூனிச வெறுப்பூட்டப்பட்ட ஒரு புலம் பெயர்ந்த அப்பாவி ஈழத்தமிழன் என்றுதான் நினைத்தேன். ஆனால் வியாசன் ஒரு யாழ் வெள்ளாள சாதிவெறி கொண்ட குறுந்தமிழ்தேசியவாதி என்று தோழர் மன்னாரு அளித்த இணைப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

    ஒரு கடைந்தெடுத்த வெள்ளாள சாதிவெறியருக்கு பெரியாரும், முற்போக்கும், மார்க்சியமும் கசக்கத்தானே செய்யும். திருவாளர்.வியாசன் அவர்களின் மார்க்சிய, பெரியாரிய வெறுப்புக்குக் காரணம் அவரின் சிந்தனையில் புரையோடிப் போயிருக்கும் யாழ் வெள்ளாள மேட்டுக்குடி தமிழ்க் குறுந்தேசிய வெறி என்பதை அவரின் கட்டுரைகள் மூலம் புரிந்து கொள்ள முடியும். சில மாதிரிகள்:

    http://viyaasan.blogspot.in/2013/08/blog-post.html
    http://viyaasan.blogspot.in/2013/07/blog-post_27.html
    http://viyaasan.blogspot.in/2013/07/blog-post_15.html
    http://viyaasan.blogspot.in/2013/07/blog-post_5.html
    http://viyaasan.blogspot.in/2013/06/blog-post_10.html
    http://viyaasan.blogspot.in/2013/09/blog-post_8502.html
    http://viyaasan.blogspot.in/2013/08/blog-post_4.html
    http://viyaasan.blogspot.in/2013/08/blog-post_11.html
    http://www.viyaasan.blogspot.in/2013/09/blog-post_8.html

    நரவேட்டை நரேந்திர மோடி, பார்ப்பன பாசிச செயலலிதா, தமிழ்த்தேசியப் பிழைப்புவாதி சீமான், வன்னிய சாதி வெறியர் ராமதாசு இவர்களைப் பற்றி வியாசன் எழுயிருக்கும்(கழிந்திருக்கும்) கட்டுரைகளைப் படிக்கும் போது கொமட்டிக் கொண்டு வருகிறது. இங்கேயிருக்கும் தமிழ்தேசியப் பிழைப்புவாதிகளின் அதே அரசியல் அடிப்படையைத்தான் இவரும் கொண்டிருக்கிறார்.

    வியாசன் கூறும் தமிழீழம் என்பது யாழ் வெள்ளாள மேட்டுக்குடிவாதத் தமிழீழம் தான்.

  46. கூடங்குளம்,தில்லை,மோடி,ஈழம் இன்னும் பிறவற்றில் மகஇக-இன் கருத்துப் பிரச்சாரத்திற்கும்,வெளியீடுகளுக்கும்,வினவின் பதிவுகளுக்கும் மகிழ்ச்சி.

  47. @துரை.சண்முகம்

    /// ஏதாவது ஒரு விவாதம் என்றால், மொட்டையடிப்பது, பெயரை மாற்றுவது… கட்டுக்கடங்காமல் போனால் கழுவிலேற்றுவது இந்த ‘அன்பே சிவத்தில்’ அடியேனுக்கு உடன்பாடில்லாததால்… நாம் விவாதத்தின் வழி ஒரு முடிவுக்கு வர முயற்ச்சிப்போம்.///

    மன்னிக்கவும், தோழர் துரை சண்முகத்தின் பதிலை நான் இப்பொழுது தான் பார்த்தேன். அவரின் அவசரபுத்தி நான் என்ன எழுதினேன் என்பதைப் படித்துப் பார்க்காமல் பதிலெழுதத் தூண்டி விட்டது போல் தெரிகிறது, இந்தியாவிலுள்ள பாட்டாளி வர்க்கங்களை எல்லாம் ஒருங்கிணைத்து அவர்களின் ஒத்துழைப்புடன் அவரின் தலைமையில் காஸ்மீர் விடுதலை பெற்றால், நான் எனது தலையை மொட்டையடித்துக் கொண்டு துரைசண்முகதாசன் என்று பெயரையும் மாற்றிக் கொள்கிறேன் என்று கூறினேனே தவிர, வெறும் விவாதத்துக்காக மொட்டை அடிப்பதாகக் கூறவில்லை.

    சரி, காஸ்மீர் கூட காகத்தின் தலையில் பனம்பழத்தை வைத்தது போல முடியாத காரியம்., அதனால் சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைப் பெறுங்கள் என்று கூறும் நீங்கள் கன்னடப் பாட்டாளி வர்க்கத்தின் நல்லிணக்கத்தைப் பெற்று தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய காவேரி நீரை தங்கு தடையின்றி கொடுக்குமாறு அந்த மாநில அரசுக்கு எதிராக அவர்களை ஒரு போராட்டத்தையாவது நடத்தச செய்து காட்டுங்கள் பார்ப்போம். 🙂

    //வள்ளலார், பெரியார் போன்றோரெல்லாம் உங்கள் ஊரில் குறிப்பாக யாழ்ப்பாண சைவர்களிடம் எடுபடாமலும்! ஏற்கப்படாமலும் போனதில் எங்களுக்கு வியப்பில்லை,
    ஏனென்றால் யாழ்ப்பாணத்தின் சமூகக் கட்டமைப்புக்கும், தமிழ்நாட்டில் அக்காலத்தில் இருந்த நிலைமைக்கும் பெரிய வேறுபாடுண்டு. அதனால் தான் வள்ளலாரும், பெரியாரும் அங்கு எடுபடவில்லை.

    ///பெரியாரென்ன? நீங்கள் தான் பிரபாகரன் இருந்தவரைக்கும் ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு தீர்வில்லை என்று தமக்கு மாற்றாக தேர்தல் பாதையை சிந்தித்த தலைவர்களை தலையில் போட்டும், பிரபாகரன் போனவுடன் வடக்கு மாகாண தேர்தலுக்கு வடம் பிடித்தும் பிரபாகரனுக்கே டாடா காட்டியவர்களும், ஆயிற்றே! ///

    அதில் என்னய்யா தவறு. சும்மா பத்தி பத்தியாக எழுத வேண்டும் என்ற ஆசையில் சிந்தித்துப் பார்க்காமல் எழுதுகிறீர்கள் போல் தெரிகிறது. அகிம்சை வழியில் 35 வருடகாலம் போராடிப் பார்த்த பின்பு தான் ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, இரண்டு தோணியில் கால் வைத்தவன் போல் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஈழத்தமிழர்களின் முதுகில் பலரும் குத்தியதால் ஆயுதப் போராட்டத்தில் தோல்வி ஏற்பட்டவுடன், இன்னொரு ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்று உணர்ந்த நாங்கள், எங்களது இன்றைய நிலையில், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் எமது பாரம்பரிய மண்ணிலேயே நாம் சிறுபான்மையினராக்கப்பட்டால், எம்மை நாம் ஒரு தேசிய இனம் என்று கூட அழைக்கும் தகுதியை இழந்து விடுவோம் என்ற காரணத்தால், வடமாகாண சபை தேர்தலில் பங்குபற்றி எமது ஒற்றுமையை தமிழுணர்வை உலகம் முழுவதும் காட்டியிருக்கிறோம.

    எங்களின் அகராதியில் பிரபாகரனுக்கு ‘டாட்டா’ காட்டுகிறோம் என்று எமது மாவீரர்களை, எமது விடுதளைப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் எல்லோரும் சிங்கள அடிவருடிகள், ஏனென்றால் பிரபாகரன் ஏற்றி வைத்த விடுதலைத்தீ ஒவ்வொரு ஈழத்தமிழனின் இதயத்தில் இன்றும் எரிந்து கொண்டு தானிருக்கிறது, நாங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை தான் வேறே தவிர, போகவேண்டிய இடத்தில் மாற்றமேதுமில்லை.

    ஆனால் எங்கள் முன்னால் இப்பொழுது உள்ள முதல் பணி எமது முன்னோர்கள் கட்டிக்காத்த தமிழ் மண்ணை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களிலிருந்து காப்பது தான். இதற்குப் பதிலாக நீங்கள் கூறும் வர்க்கப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்து, சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து மார்க்சிய லெனினிய சிந்தனையின் அடிப்படையில் அவர்களின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டால், இன்னும் சில வருடங்களில் உங்களின் மார்க்சிய லெனினிய சிந்தனை மட்டும் தான் எங்களின் கைகளில் இருக்கும் ஆனால் கிழக்குமண் பறிபோனது போல் வடக்கும் எங்களின் கைகளை விட்டுப் போய் விடும். எங்களின் சொந்த மண்ணிலே, எமது முன்னோர்கள் இரத்தம் சிந்திக் காத்த எமது பாரம்பரிய பூமியிலே நாங்கள் சிறுபான்மையினராக்கப்பட்டு காணாமல் போய் விடுவோம். அதற்குப் பின்பு உங்களின் மாக்சிய லெனினிய சிந்தனைகளைக் கட்டிப்பிடித்து கொண்டு நாங்கள் ஒப்பாரி வைக்க வேண்டியது தான். 🙂

    /// 1928 -இல் தமிழ் ஊழியர் சங்கம் பஞ்சமர் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக்கு எதிராக பாடசாலைகளில் சம ஆசனம், சம போசனம் போராட்டம் தொடங்கி, அரசு உத்திரவால் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், ஆதிக்க சாதி மாணவர்களுக்கு இணையாக தரையில் உட்காராமல் ஆசனங்கள் வழங்கப்பட்டபோது யாழ் ஆதிக்கசாதி குழுவினர், இந்த நடைமுறை வந்த 15 பாடசாலைகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததுதான் உங்கள் யாழ்வெள்ளாள சாதிவெறி வரலாறு. 1931 -இல் டொனமூர் சட்டப்படி அனைவருக்கும் வாக்குரிமை வந்தபோதும், வெள்ளாளத் தலைவர்கள்… etc. ///

    ஐயா துரைமுருகு, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். உங்களின் விடயத்தில் அது சரியாகத் தானிருக்கிறது, 2013ஆம் ஆண்டில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு மலம் தீற்றும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, இன்னும் தீண்டாமை தாண்டவமாடும் தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும் செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு, சைக்கிளை விட்டு இறங்கி நடந்து செல்லும் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, பதைக்க, பதைக்க ஒரு இளந்தமிழன் தனது பிறப்பை நொந்துகொண்டு செத்து அவனைப் புதைத்த மண்ணின் சூடு கூட ஆறவில்லை, அந்த இலட்சணத்தில் 1928 இலும் 1931 இலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாதிக் கொடுமைகளைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? தமிழ்நாட்டில் இன்று நடக்கும் சாதிக் கொடுமைகள் போன்று எதுவும் ஈழத்தில் நடந்ததை நான் மட்டுமல்ல எனது பெற்றோர் கூடப் பார்த்ததில்லை.

    ///புலிகள் அதிகாரத்துக்குட்பட்டு இருந்தபோது யாழ்பாணத்தில் மட்டும் 150 -க்கும் மேற்பட்ட கோயில்களில் தலித்துகள் நுழைய முடியாத நிலை இருக்குமளவுக்கு சைவப்புலிகள் விடுதலைப்புலிகளுக்கே சவால் விட்டுவார்களாயிற்றே!///

    தமிழ்நாட்டில் இன்றும் 150000 க்குமதிகமான கோயில்களில் தலித்துகள் நுழைய முடியாத நிலைமை இருக்கிறதே முதலில் அதற்கு பாட்டாளி வர்க்கங்களை ஒன்று சேர்த்து ஒரு போராட்டம் நடத்தலாமே? இந்த 150 கோயில்கள் என்ற எண்ணிக்கையை உங்களின் தொப்பிக்குள் இருந்து எடுத்தீர்களோ என்னமோ எனக்குத் தெரியாது, ஆனால் ஈழத்தில் சாதிப்பாகுபாடு இன்னும் இருந்தாலும் அது தமிழ்நாட்டைப் போல் இல்லை. இலங்கையில் தீண்டாமை நிச்சயமாக இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களிடம், குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரிடம் சாதி முற்றாக அழிந்து வருகிறது. எனக்குத் தெரிந்த இலங்கைப் பார்ப்பனர்கள் கூட கலப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஈழத்தமிழ் மாணவர்கள் யாரும் சாதி பார்த்துக் காதலிப்பதில்லை. ஏற்கனவே Choice குறைவாக இருக்கும் போது அதில் சாதியும் பார்த்தால் காதல் திருமணம் என்பது வெறும் கனவாகிப் போய் விடும். புலம்பெயர்ந்த நாடுகளில் பெரும்பான்மையினர் யாழ்ப்பாணச் சைவர்கள் தான். இதிலிருந்து என்ன தெரிகிறது. நாங்கள் காலத்துக்கேற்ற மாறுகிறோம், தமிழ்நாட்டில் தான் மாற்றமில்லை. அதனால் ஈழத்தமிழர்களுக்கு சாதியொழிப்பு பற்றி உபதேசம் பண்ணுவதை விடுத்து, தமிழ்நாட்டிலுள்ள ஆதிக்க சாதிகளுக்கு உபதேசம் செய்யுங்கள், சாதியைப் பற்றி விவாதியுங்கள்.

    /// ஒரு தற்காப்பு தமிழ்தேசியவாதமாக சைவக் கொடுக்கை மடக்கி வைத்திருப்பதுதான் வரலாறே ஒழிய! இயல்பிலேயே யாழ் வெள்ளாள தமிழ்தேசியம் சாதிவெறியற்றது என்பது போல சாதிய போராட்ட வரலாறை கண்டும் காணாமல் போவதன் மூலம் முற்போக்கும் இல்லை, பிற்போக்கும் இல்லை. //

    சாதிப்பேயை நாம் அடக்கி விட்டோமே தவிர அழித்து விடவில்லை ஆனால் தமிழ்நாட்டில் சாதிப்பேய் இன்னும் தாண்டவமாடுகிறது, அதற்காக ஒரு வர்க்கப் போராட்டம் நடத்துங்கள். சாதிப்பிரிவுகளைச் சாக்காக வைத்து ஈழத்தமிழினத்தை பிளவு படுத்த 1920 களிலேயே கம்யூனிசம் முயன்று தமிழ்த்தேசியத்திடம் தோற்றுப்போன கதையை எனது விரைவில் எனது வலைப்பதிவில் எழுதுகிறேன்.

    //மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிப்பின் போதெல்லாம் இலங்கை சிங்கள இனவெறி அரசோடு ஒத்துப்போன யாழ் தமிழ்தேசிய மேட்டுக்குடி விவகாரத்தையும்,//

    ஈழத்தமிழர்களிடம் அரசியல் பேசி ஆத்தாமல் போனவுடன் ஒவ்வொரு இந்தியத் தமிழனும் எடுக்கும் கடைசி ஆயுதம் இது தான், அதற்கு நாம் முன்பே விடையளித்து விட்டேன், மீண்டும் போய் படித்துக் கொள்ளுங்கள். 🙂

    //தேசிய சிறுபான்மை இனம் என்ற அவர்களது அரசியல் உரிமையை அங்கீகரிக்காமல் புலிகள் வரை அவர்களையும் ஒரே ஈழத்தமிழர்கள் என்று அடக்குவது என்ன நியாயம்? //

    இது என்ன புதுக்கதை, அவர்களின் அரசியல் உரிமையை ஈழத்தமிழர்களோ புலிகளோ மறுத்தார்களா?

    தேசிய சிறுபான்மை இனம் (National Minority):
    A minority group within a country felt to be distinct from the majority because of historical differences of language, religion, culture, etc.

    மலையகத் தமிழர்களும் ஈழத்தமிழர்களும் மொழியாலோ, மதத்தாலோ, அல்லது கலாச்சாரத்தாலோ வேறுபடாத போது, எப்படி வேறுபட்ட தேசிய இனமாக அங்கீகரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.

    மலையகத் தமிழர்கள் அனைவரும் இன்று இலங்கை குடிமக்கள் அவர்கள் தம்மை இலங்கைத் தமிழர்கள் என்று தான் அடையாளப்படுத்துகிறார்கள். அவர்களின் பிறப்புபதிவுச் சான்றிதழிலோ அல்லது அடையாள அட்டையிலோ இந்தியவம்சாவளி என்றெல்லாம் இல்லை. இலங்கைத் தமிழர் என்று தான் உள்ளது. அது தான் அவர்களின் விருப்பமும் கூட, இலங்கைத் தமிழர்களை இப்படி பிரித்து அவர்களைப் பலவீனப்படுத்தும் உங்களைப் போன்றவர்களின் செயல் தான் நீங்கள் ராஜபக்சவின் Surrender Agent ஆக இருப்பீர்களோ என்ற சந்தேகத்தை உண்டாக்கிறது. 🙂

    //தத்தம் போராட்ட வடிவங்களால் மலையக மக்கள் வென்றெடுத்த தொழிற்சங்க உரிமைகள் இருக்கட்டும் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்சங்கங்களையே தடை செய்த நீங்கள்தான் மலையக மக்களுக்கும் சேர்த்து ஈழம் வாங்கித்தரும் இனக்காவலர்களா? //

    நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா. அல்லது மண்டபத்தில் யாரவது எழுதிக் கொடுத்தார்களா? வன்னியில் எதற்கையா தொழிற்சங்கம்? தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் ஆறுமுகம் தொண்டமான், பெரியாசாமி சந்திரசேகரன், மனோகணேசன் போன்ற அனைவரும் விடுதலைப் புலிகளுடன் நல்லுறவைப் பேணி வந்தார்கள்; அவர்களை யாரும் தடை செய்யவில்லை. தமிழழீழ விடுதலைப் போராட்டத்தில் மலையகத் தமிழர்களுக்கு தொடர்பில்லை, ஏனென்றால் அவர்கள் நூற்றாண்டுக்கு மேலாக, இலங்கைக்கு வந்ததிலிருந்து, தமிழீழத்துக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் புலிகள் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் இன்றும் கூட அவர்கள் வடக்கு கிழக்கில் குடியேறுவதை மனதார வரவேற்கிறோம். சும்மா பேச வேண்டுமென்பதற்காக ஆதாரமில்லாமல் பேசினால் உங்களைப் பார்த்து மற்றவர்கள் சிரிப்பார்கள்.

    மலையகத் தமிழ்த் தலைவர்கள் – வி.புலிகள் தொடர்பு:

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11254

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6657

    //கடைந்தெடுத்த சாதிவெறி சுரண்டல் அயோக்கியர்களான தமிழக சைவ மடாதிபதிகள் முதல், புலிக்கச்சை அணிந்து கவர்ச்சிகாட்டும் மதுரை ஆதினங்கள் வரை யாழ்ப்பாண சைவக்கும்பல் வரை மார்க்சிய – லெனினியத்தை விரோதமாக பார்ப்பதில் என்ன ஒரு தமிழின ஓர்மைஉங்கள் உணர்ச்சியில்! களத்துப் பிள்ளைகளிடம் ‘சோசலிசம்’ ‘ஏ.கே. 47′ கற்றறிந்த ‘பிள்ளைமாரிடம்’ தமிழியம், ‘அரோகரா’ அடடா! யாழ்ப்பாண மேட்டுக்குடியிடம் புலிகளே வாலைச் சுருட்டிய கதை இதுதானா?//

    வெறும் வாய்ப்பந்தல் போடுவதற்கு இது ஒன்றும் அரசியல் மேடைப் பேச்சல்ல. நீங்கள் தலைவருமல்ல, நான் உங்களின் கட்சித் தொண்டனுமல்ல. 🙂

  48. //நான் நேரிடையாகக் குற்றம் சாட்டியது யாழ் மேட்டுக்குடி வர்க்கத்தை! ஒ! உங்களுக்குத்தான் வர்க்கம் கிடையாதே! நந்திக்கடலோரம் சனம் கொல்லப்பட்டு பிண வீச்சம் கூட மாறாத நிலையில்… லண்டனில் தமிழக சினிமா கழிசடைகள் அடித்தக் கூத்தை கைதட்டி ரசித்து, விசிலடித்துக் கொண்டிருந்த அந்த ஈழத்தமிழ் கூட்டத்தை உங்கள் வசதிக்காக இனம் என்று மட்டும் சொன்னால் போதுமா? இல்லை இது வர்க்கக் கொழுப்பா?//

    ஐயா துரை.சண்முகம் அவர்களே,

    இப்படி விளக்கமில்லாமல் பேசுவதைத் தான் உளறல் என்று கூறுவோம் ஈழத்தில் நாங்கள். அந்தச் சொல் தமிழ்நாட்டில் ஆபாசத்தைக் குறிக்காது என நம்புகிறேன், இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால். வன்னி யுத்தத்தின் போது புலம்பெயர் தமிழர்கள் வாழும் மேலை நாடுகளில் என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியாது, அது தெரியாமல் இப்படி உங்களின் அறியாமையைக் காட்டுவீர்கள் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

    நந்திக்கடலோரம் எமது மக்கள் கொல்லப்படும் போது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஒன்று தமிழ்நாட்டுக் கூத்தாடிகளுக்கு கைதட்டிக் கொண்டிருக்கவில்லை. மேலை நாடுகளின் தலைநகரங்களை மட்டுமல்லாமல் , முக்கிய நகரங்களை எல்லாம் போராட்டங்களாலும், உண்ணாவிரதங்களாலும் இயங்காமல் செய்து விட்டார்கள் ஈழத் தமிழர்கள். பெரியவர் முதியோர்கள் மட்டுமல்ல, எங்களின் பச்சைக் குழந்தைகள் கூட மைக்ரோபோனைக் கையில் வைத்துக் கொண்டு அந்தந்த நாட்டு அரசுகளிடமும், மக்களிடமும் எமது மக்களைக் காப்பாற்றுமாறு கெஞ்சினார்கள். அந்த உருக்கமான, ஒரு ஏழு வயது தமிழ்ச் சிறுவனின் ஆதங்கத்தை, தமிழுணர்வை மட்டுமன்றி, எப்படி புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமது குழந்தைகளை தமிழுணர்வோடு வளர்க்கிறார்கள் என்பதை இந்தக் கானொளியில் காணலாம், இவனைப் போன்ற எங்களின் தமிழ்க் குழந்தைகளின் போராட்டைத்தைக் கூட கொச்சைப்படுத்தியதற்கு நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால் அவனைப் போன்ற குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பீர்கள் என நம்புகிறேன்.

    http://www.youtube.com/watch?v=RpZQPDrWi4k

    ///வாதத்தின் மையத்திற்கு வருகிறேன், வள்ளலார், பெரியார், வர்க்கப் போராட்டமெல்லாம் ஈழத்துக்கு வேலைக்கு ஆகாது! என்று நக்கலடிக்கும் நீங்கள் முன் வைக்கும் தீர்வுதான் என்ன என்று தேடிப்பார்த்தால், உங்கள் இணையக் கட்டுரைகளில் உடனடியாக தமிழர் நிலப்பகுதியில் சிங்களக் குடியேற்றத்தை விலக்கு! என்று இந்தியா மூலமாக அழுத்தம் தர வேண்டும் என்று தமிழக தமிழர்களுக்கு ஆலோசனை வழங்குகிறீர்கள்!///

    திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களிலிருந்து எமது பாரம்பரிய தமிழ் மண்ணைக் காப்பது தான் ஈழத்தமிழர்களுக்கு முன்னால் உள்ள பாரிய சவால் இன்று. அதை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்பதைப் பொறுத்து தான் நாங்கள் எதிர்காலத்திலும் இலங்கையில தமிழ்த்தேசிய இனமாக தொடர்ந்து வாழப்போகிறோமா அல்லது சிங்களக் கடலில் கலந்து எமது மொழி, கலை கலாச்சாரம் எல்லாவற்றையும் இழந்து காணாமல் போகப் போகிறோமா என்பதை தீர்மானிக்கப் போகிறது.

    பெரும்பான்மை இனத்தின் பாட்டாளி வர்க்கத்தின் ஆக்கிரமிப்பால் தமது தனித்துவத்தை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு சிறுபான்மைச் சமூகத்திடம், உண்மையான நிலவரம் தெரியாமல், அல்லது எவ்வாறு அந்த பெரும்பான்மை இனத்தின் பாட்டாளி வர்க்கம் , திட்டமிட்ட குடியேற்றங்களால் தமிழ்ச்சிறுபான்மை இனத்தின் இருப்பை அழித்து அவர்களை கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை ஆக்கியாது என்ற வரலாறை உணராமல், அதே பெரும்பான்மை இனத்துடன் சேர்த்து வர்க்கப் போராட்டத்தை ஆரம்பித்தால் அவர்கள் சுயநிர்ணய உரிமையைப் பெறலாம் என்று முட்டாள் தனமாக அறிவுரை கூறினால் இப்படி வாங்கிக் கட்ட வேண்டித் தான் வரும், இதில் வேடிக்கை என்னவென்றால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தமது மண்ணையும், சுயநிர்ணய உரிமையையும் இழந்ததே சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களால் தான் என்பதை இந்த மாக்சிய லெனினிய வாதிகள் உணராதது தான். 🙂

    /// ஈழத்தமிழர் நிலத்தில் இந்திய தரகு முதலாளிகளின் குடியேற்றத்தையும், உடனே சிங்கள குடியேற்றத்தையும் விலகிடு? என்று தமிழகத் தெருக்களில் ஆர்ப்பாட்டமாகவும், முற்றுகையாகவும் ஏற்கனவே போராடி வரும் ம.க.இ.க. வினரையோ சிங்களருக்கு உதவி புரிபவர்கள் என்று சந்தேகம் வருவதாக பரப்புகிறீர்கள்.///

    உங்களின் போராட்டங்களுக்கெல்லாம் நன்றி. ஆனால் உண்மையான வரலாறு தெரியாமல், சிங்கள பாட்டாளி வர்க்கம் எந்தளவுக்கு இனவாதம் நிறைந்த சிங்கள பெளத்தத்தினதும், மகாவம்ச சிந்தனைகளினதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதையும் மார்க்ச்சிய லெனினிய சிந்தனைகளின் அடிப்படையில் அறிவுரை கூறுவது மட்டுமல்ல அது தான் சரி, ஏனென்றால் “இது முன்பே உலகெங்கும் இது வரையில் சோதித்தறியப்பட்ட வழிமுறை” என்பவர்களின் பேச்சை பார்க்கும் போது பன்றியைக் கண்ட சோனகன் (முஸ்லிம்) மாதிரி எங்களையறியாமலே எங்களின் முகம் சுழிக்கிறது. 🙂

    //ஒரு புறம் சர்வதேசம் உதவவில்லை, இந்தியா அழிந்துவிட்டது, பாட்டாளிவர்க்க கண்ணோட்டமும் பயன்படாது என்று அனுபவங்களைத் தொகுக்கும் நீங்கள், இனியும் இந்தியா மூலமாகத்தான் ஏதாவது நடக்கும்! என்றும், இந்திய ராஜபக்சேவான மோடியைத் தூக்கிவரும் பா.ஜ.க.வுக்கு கல் சுமந்து ஈழம் வாங்கி விடலாம் என்று நம்பிக்கையூட்டும் தமிழினவாதிகளை பாராட்டலாம் என்பது என்ன சைவ கிறுக்கோ!//

    ஈழத்தமிழர்களில் பாதிப்பேருக்கு யார் மோடி என்றே தெரியாது, எங்களைப் பொறுத்த வரையில் பாஜகவும் ஒன்று தான் காங்கிரசும் ஒன்று தான். சுப்பிரமணியம் சுவாமி பாஜகவில் இருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகலாம். அவர்கள் காங்கிரசை விட மோசமாக சிங்கள சார்பாக நடக்கலாம். அதை விட இலங்கையில் இந்து மதத்தின் எதிரி இஸ்லாமோ கிறித்தவமோ அல்ல பெளத்தம் தான், ஆனால் பாஜகவைப் பொறுத்த வரையில் பெளத்தமும் இந்துமதத்தின் அங்கம் என நினைக்கிறார்கள் அதனால் பாஜக பதவிக்கு வந்தால் சிங்களவர்களுக்குத் தான் அதிக நன்மையுண்டாகும் என்பது என்னுடைய கருத்து.

    ///சிறிதளவே ஆயினும் இலங்கையில் வர்க்கக் கண்ணோட்டத்திலான அரசியல் பார்வையால்தான் சாதி எதிர்ப்பு, தொழிற்சங்கங்கள், இன சமத்துவம் உள்ளிட்ட சொற்ப அளவிலான ஜனநாயக சக்திகளையாவது, உங்கள் கூற்றுபடி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஒரு சிலரையாவது உருவாக்க முடிந்தது. ///

    ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறும் எந்த நாட்டிலும் தேர்தலில் கட்டுப்பணத்தைக் கூட காப்பற்ற முடியாதவர்களால் சிறுபான்மை இனங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது,

    /// ஜெயலலிதா என்ன அடித்தாலும் தாங்கும் நெடுமாறன், சீமான், வைகோ. என்ற செல்லாக்காசுகள்தான் உங்களுக்கு நாணயமான சக்திகளா?///

    அவர்களின் நாணயத்தைப் பற்றி பேசுமளவுக்கு அவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர்களின் அரசியல் வரலாறும் அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனால் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகள் போல் அல்லாமல் கொட்டியும் ஆம்பலும் போல், எங்களின் வெற்றியிலும், தோல்வியிலும், எவ்வளவோ எதிர்ப்புகள் மத்தியிலும் தமது தார்மீக ஆதரவை ஈழத்தமிழர்களுக்குக் காட்ட அவர்கள் தயங்கியதில்லை. அதற்கு நாங்கள் அவர்களுக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம். அவர்களின் அரசியலைப் பற்றி தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களே தவிர நாங்கள் அல்ல.

    ///… இந்திய, உலக ஏகாதிபத்தியச் சார்புப் பாதை அழிவைத்தரும் என்று அரசியல் ரீதியாக எச்சரித்து, இங்கிருக்கும் ஈழ அகதிகளின் உரிமை வரைக்கும் இந்திய, பார்ப்பன ஜெ அரசின் மேலாதிக்க வெறிக்கு எதிராக இங்குள்ள பாட்டாளிவர்க்கத்தின் அரசியல் வீச்சை முன்னெடுக்கும் நாங்கள் சரண்டர் ஏஜென்ட்டுகளா?///

    மன்னிக்கவும், நான் ஒன்றும் வயதிலோ அல்லது அனுபவத்திலோ அந்தளவு முதிர்ந்தவனல்ல, அதனால் உங்களைப் பற்றி நான் அதிகம் கேள்விப்படவில்லை, என்னுடைய கருத்துகள் எதுவும் உங்களின் மனதைப் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். அதுவல்ல என்னுடைய நோக்கம்.

    //எங்கே உங்களுக்கு சேனம் கட்டிய முதலாளி வர்க்கம்! நாங்கள் இழவு வீட்டில் எள்ளி நகையாடும் அற்பர்கள் அல்ல, //

    அதைத் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். பிறகு ஏன் இந்தப் பம்மாத்து. 🙂

    //நீங்களே தனிமைப்பட்டு, தவித்து அடங்கிய முடிவுக்காக ஆழமாக துன்புறுகிறோம், புலி என்றால் மக்கள், மக்கள் என்றால் புலிகள் என்று பதிலடி தந்துவிட்டு, லட்சக்கணக்கான மக்களை நந்திக் கடலோரம் நிராயுதபாணியாக நிறுத்தி, ……..மீண்டும் முதலாளித்துவச் சக்திகளிடம் பணயம் வைக்கும் உங்கள் திருந்தா தன்மைக்கு வருந்துகிறோம்!//

    ஆனால் நீங்கள் கூறும் சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்தால், எமது மண்ணிலேயே நாம் சிறுபான்மையினராகி விடுவோம். அந்த சிங்களக் கடலில் கலந்து நாம் காணாமல் போய் விடுவோம். உங்களின் அறிவுரை எங்களை இலங்கையில் இல்லாமல் செய்து விடும். இதற்காக தான் நான் உங்களைப் போன்றவர்களை நீங்கள் Surrender Agents ஆக இருப்பீர்களோ சந்தேகப் பட்டேன்.

    /// மாறாக இன்னும் ஈழத்தமிழர் அரசியல் போராட்ட அனுபவங்களின் ஆளுகைக்கு வராத பாட்டாளிவர்க்கப் பார்வையல்ல. பவுத்த சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களுக்கு மட்டுந்தான் எதிரி மற்றபடி எல்லா சிங்களவர்களுக்கும் முரணில்லாதது என்று முடிவு செய்ய முடியாது! ///

    பெரும்பான்மை சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவில்லாமல் ராஜபக்ச ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வளவு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற முடியாது என்ற உண்மை உங்களுக்கு உறைக்க எவ்வளவு நாளாகுமோ தெரியாது, ராஜபக்ச மேற்கொள்ளும் தமிழர்களுக்கெதிரான ஒவ்வொரு செயலுக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுண்டு என்பது அவருக்குத் தெரியும். சிங்களவர்களில் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்கள்(பாட்டாளி வர்க்கத்தினர்) தான், சிங்களவர்களுக்கும் ராஜபக்சவுக்கும் ஏதாவது முரண்பாடு இருந்தாலும், தமிழர்கள் உரிமை கேட்கிறார்கள் என்று என்று வரும் போது சிங்கள உழைக்கும் வர்க்கம் பாசிச சிங்களத தலைவர்களின் கீழ் ஒரே கோடியில் அணிதிரளும் என்பதை ஈழத்தமிழர்கள் அனுபவத்தில் உணர்ந்தவர்கள். அதை இலங்கையின் வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. அதனால் உங்களின் வர்க்கப் போராட்டம் அங்கு எடுபடாது.

    //உள்நாட்டு அரசு எதிர்ப்பு சக்திகளுடன் வர்க்கக்கண்ணோட்டத்துடன் இணைவதற்கான அரசியலை முன்னெடுப்பதும்தான் உலக முதலாளித்துவ சக்திகளையே பணிய வைக்கும் திறன் வாய்ந்தது எனக் கருதுகிறேன்! பரிசீலியுங்கள்//

    நீங்கள் குறிப்பிடுமளவுக்கு இலங்கையில் பெரிய அரசு எதிர்ப்பு சக்திகள் கிடையாது,. தமிழ்/முஸ்லீம் மக்களுடன் வாக்குகள் இல்லாமல் சிங்கள பெளத்த கட்சிகளால ஆட்சியை அமைக்க முடியும். அங்குள்ள சிறிய எதிர்ப்பு சக்திகள் (Fringe elements) கூட, தமிழர்களின் உரிமை என வரும்போது பெரும்பான்மை சிங்களவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்.

    கடந்த தேர்தலில், சம்பந்தன் மட்டும் சரத் பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்து ஒரே மேடையில் தோன்றியிராது விட்டால், இன்று சரத் பொன்சேகா ஜனாதிபதியாக இருப்பார். சரத் பொனசேகா தமிழர்களுடன் கூட்டுச் சேர்ந்து, ராஜபக்சவை எதிர்த்ததை சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார் எனது சிங்கள நண்பர் ஒருவர். அந்த ‘Collective Sinhala racism’ பற்றி தெரியாததால் தான் நீங்கள் இப்படி பேசுகிறீர்கள்.

    இலங்கைக்கு வெளியே நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் சோஷலிச முற்போக்கு NGO க்கள் சிலரின் பேச்சை நம்பி, நீங்கள் உங்களின் இலங்கைக் கொள்கையை வகுத்தால், நிச்சயமாக மற்றவர்களிடம் மூக்குடைபடுவீர்கள். நானாவது இனத்தால், மொழியால் உங்களின் உடன்பிறப்பு, நீரடித்து நீர் விலகுவதில்லை. ஆனால் மற்றவர்களிடம் நீங்கள் மூக்குடைபடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் கூறுகிறேன். அதற்குப் பின்பு உங்களின் இட்டம்.. 🙂

    (Note: ** முன்னைய பதிவில் துரை.சண்முகம் அவர்களை துரை முருகு என தவறாக குறிப்பிட்து விட்டேன், மன்னிக்கவும், )

    • வியாசன்

      இவரின் மொத்த வாதத்திலும் வர்க்க போராட்டம், வர்க்கம் சார்ந்த எந்த விசயமும் ஈழத்தில் இல்லாதது போல பிதற்றுகிறீர். இந்த பிதற்றல் இவரின் மத்தியதர வர்க்க கோணப் பார்வையிலிருந்து வருகிறது. இவறுக்கு குறிப்பாக பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் வேம்பாக கசக்கிறது. எந்த மொழி இனத்திலிருந்தாலும் மேட்டுக்குடி மேட்டுக்குடியுடன்தான் சேர்ந்து கொள்கிறது, சார்ந்து இயங்கிறது என்பதே வரலாறு. முள்ளிவாய்க்கால் யுத்தத்திலிருந்தே நூற்றுக் கணக்கான உதாரணங்களை தரமுடியும். ”கலாநிதி. முருகர் குணசிங்கம்” அவர்கள் எழுதிய ”இலங்கையில் தமிழர்கள்” பாகம் 2 ன் இறுதிப்பகுதியில் K.P என்ற (பத்மநாதன்) புலிகளின் சர்வதேச தலைவரிடம் எடுத்த பேட்டி உள்ளது. அதில் பிரபாகரனின் மகன் சார்லஸ் அவர்களின் வேண்டுகோளின் படி பிரபாவையும் அவரது குடும்பத்தாரையும் காக்க தனது நண்பர் கஜேந்திரன் பொன்னம்பலம் மூலம் பசில் ராஜபக்சேவை தொடர்பு கொண்டதையும் இன்னும் பல விவரங்களையும் ஆவணமாக பதிந்துள்ளார். இந்த பேட்டி எடுக்கும் போதே இந்நூலின் ஆசிரியர் K.P யை கடுமையாக எதிரியிடம் எவ்வாறு உதவி கேட்கலாம் என்று கோபத்தை பதிந்துள்ளார். வியாசன் அவர்களே இதுதான் வர்க்க சிந்தனை, வர்க்கப் பாசம். கடும் எதிரியான ராஜபக்சேக்களின் காலில் விழாமல், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணையாக கை கோர்க்கலாம் என்பதா தவறு?

      வியாசனின் எழுத்தில் குதர்க்கமும், அவதூறுமே அதிகம். உன் ஊரில் மலத்தை அள்ளுவது, சாதி போன்றவை உள்ளதே நீ எனக்கு புத்தி சொல்கிறயா என்ற நிலப்பிரபுத்துவ கோபம் வருகிறது. இங்கு யார் இல்லை என்றது. இங்குள்ள அவலம் மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் அநியாயம் நடந்தாலும் அதற்கு குரல் கொடுப்பதுடன் தொடர்ந்து போராடுபவனும் கம்யூனிஸ்ட் மட்டுமே, இது உலக வரலாறு. பாட்டாளி வர்க்க பார்வை மட்டுமே பிரச்சனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்பது அறிவியல். முடிந்தால் முயன்றுதான் பாருங்களேன்.

      இரணியன்

    • தனித் தமிழீழமே தீர்வு

      விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டப் பிறகு, அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் மற்றும் இரசியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவும் இல்லாத ஒரு சூழலில், ஐ.நா. மன்றமும் கைவிரித்துவிட்ட நிலையில் இனி தனித்தமிழ் ஈழம் சாத்தியமில்லை. எனவே தமிழீழ கோரிக்கையை கைவிட்டு அதிக அதிகாரம், அற்பச் சலுகைகளுக்கான உடனடிப் போராட்டங்கள் தான் இன்றைய தேவை என்று ஈழ எதிர்ப்பாளர்கள் ஆலோசனைகளை வாரிவழங்குகின்றனர். எப்படியாவது தமிழீழக் கோரிக்கையை கைவிடச்செய்ய வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.

      ஆனால் ஈழம் ஆசியாவின் அயர்லாந்து என்பதை இவர்களால் உணரமுடியாது.

      சிங்கள பேரினவாத, புத்தமதவாத இலங்கை அரசிற்குள் ஈழத்தமிழ் தேசிய இனம் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமின்றித்தான் தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிவருகிறது. ஈழத் தமிழினம் தனக்கான தனி அரசு அமைத்துக்கொள்ளும் உரிமை என்பது அதன் பிறப்புரிமை ஆகும். அந்த உரிமை, பேரம் பேசுவதற்கான ஒரு பொருள் அல்ல. அது ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும். போரின் வெற்றி தோல்வியால் அதை விலை பேச ஈழத் தமிழ் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

      இலங்கையில் வாழும் இரு தேசிய இனங்களுக்கிடையிலான பகைமையையே இலங்கை அரசு தனது வாழ்வுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது தகர்ந்தால் இலங்கை அரசு அமைப்பும் தகர்ந்துவிடும். இலங்கை அரசை தகர்த்தெறியாமல் அரசியல் தீர்வு என்பதே கிடையாது.

      தமிழீழமே ஈழமக்களின் அரசியல் விடுதலைக்கு ஒரே வழி!

    • ஐயா, தமிழ்தேசிய தம்பிரான் அவர்களே,

      எனக்கு பதிலளிக்கும் போது ”தமிழகத்தில் ஒரு கலப்பு திருமணத்திற்காக இறந்து போன இளவரசனுக்காக” ( நல்ல வேலை இளவரசன் தானாக செத்தான் என்று ராமதாஸைப் போல அறிக்கை விடவில்லை ) உருகுவது போல வேதம் ஓதிவிட்டு உங்கள் வலைதளத்தில் அந்த தலித் இளைஞனை வன்னிய சாதி வெறியால் தீர்த்துக்கட்டிய மனநோயாளி ராமதாஸை, தமிழ் மண்ணை மீட்க வந்த பச்சைத் தமிழன் என்று பாராட்டி உள்ளீர்கள். தக்கத் தருணத்தில் உங்கள் சைவப் புத்தியைக் காட்டிவிட்டீர்கள்! தலித் மண்ணை நாசம் செய்த சாதிவெறிக்கும்பல், உங்களுக்கு தமிழ் மண்ணை மீட்க வந்த திருக்காட்சியோ! தமிழகத்தில் ஈழத்திற்காக சட்டியில் வேகும் உங்கள் சகபாடி கொலுக்கட்டைத் தமிழர்கள், உங்கள் மொழியில் கொடியும் ஆம்பலுமான குடிதாங்கிகள் வாயை மூடிக்கொண்டிருந்தபோது, இளவரசன் – தற்கொலையல்ல வன்னிய சாதிவெறிக்கு கொலை என்று தொடர்ந்து ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக போராடி வரும் நாங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்? தீர்க்கப்படவேண்டிய அனைத்து அரசியல் சமுதாய பிரச்சனைகளையும் சர்வதேச பாட்டாளிவர்க்க உரிமையுடன் பேசும் எங்களை ‘இந்தப் பார்டரைத் தாண்டி வரக்கூடாது’ என்று ஆத்திரப்பட்டு சூலத்தை தூக்கவேண்டாம்!

      உங்களைப் போல, சிதம்பரம் சைவர்களின் பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டே தீட்சித வன்முறையைக் கண்டிப்பது போலக் காட்டிக்கொண்டு அந்த தீட்சிதர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெய கடாத் சகத்திடம், எப்படியேனும் புலிக்கொடியை தமிழ்க்கொடியாக ஆதரியுங்கள் அம்மா என்று தமிழின, ஈழ எதிரியான ஜெயலலிதாவிடம் பசு பதி பாசத்தைக்காட்டும் கபட வேடதாரிகள் நாங்கள் இல்லை! தீட்சிதர்களிடம் மாட்டிக்கொண்டு காலைத்தூக்கி ஓட முடியாமல் கதறும் நடராசன், மற்றும் பக்தர்களின் தமிழ், தமிழின உரிமைக்காகவும் தமிழகத்தில் சமரசமின்றி போராடும் சக்திகள் நாங்கள்! உங்களின் முதலாளித்துவ வெள்ளாள தேசியத்தை வெளுக்கும் வேலையையும் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் வரலாறு ஒப்படைத்திருப்பதால் உங்களிடம் விவாதிப்பது தவிர்க்க முடியாததாகிறது. மற்றபடி உங்களை தனிப்பட்ட முறையில் தொந்திரவு செய்யும் என்னம் அடியேனுக்கு துளியும் இல்லை!

      துரை.சண்முகம்

    • // இலங்கைக்கு வெளியே நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் சோஷலிச முற்போக்கு ண்Gஓ க்கள் சிலரின் பேச்சை நம்பி, நீங்கள் உங்களின் இலங்கைக் கொள்கையை வகுத்தால், நிச்சயமாக மற்றவர்களிடம் மூக்குடைபடுவீர்கள். நானாவது இனத்தால், மொழியால் உங்களின் உடன்பிறப்பு, நீரடித்து நீர் விலகுவதில்லை. ஆனால் மற்றவர்களிடம் நீங்கள் மூக்குடைபடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் கூறுகிறேன். அதற்குப் பின்பு உங்களின் இட்டம்.//

      ம.க.இ.க தோழர்களின் அரசியல் கண்ணோட்டம், அவர்களின் செயல்பாடு ஆகியவை பற்றி எதுவுமே தெரியாமல் முட்டாள்தனமாக உளறிக் கொண்டிருக்கிறார் வியாசன் அவர்கள். ஏதோ ம.க.இ.க இப்போதுதான் ஈழம் பற்றியும், புலிகள் பற்றியும், இனம் மற்றும் வர்க்கம் பற்றியும் பேசுவது போல நினைத்துக் கொண்டு(?) ம.க.இ.க விற்கு ஆலோசனை கூறுகிறார். 1983 புதிய கலாச்சாரம் ஆரம்பித்ததிலிருந்து ஈழம் குறித்து பல கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

      யாருடைய பேச்சையுன் நம்பி ஈழம் குறித்து கட்டுரைகள் எழுதுவதில்லை. அரசியல் ரீதியில் ஆழமாக ஆய்வு செய்துதான் கட்டுரைகள் வருகின்றன. ஈழத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் ஈழத்தைக் குறித்து சரியாகத் தெரிந்து வைத்திருக்க முடியும் என்று கூறினால் அதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

      ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு வர்க்க அடிப்படை இருக்கிறது. நீங்கள் கூறும் கருத்துக்கு அடிப்படை உங்களுடைய வெள்ளாள மேட்டுக்குடி வாத தமிழ்த் தேசியம். உங்கள் விக்னேஷ்வரன் ராஜபக்சேவுடன் கொஞ்சிக் குலாவினால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ராஜபக்சேவின் அரசு மீது அதிருப்தி கொண்டு அதற்கெதிராகப் போராடும் சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுங்கள் என்றால் உங்களுக்கு உடம்பெல்லாம் எரிகிறது. கம்யூனிஸ்டுகளை எதிர்ப்பதற்கு ராஜபக்சே உள்ளிட்ட சிங்கள் மேட்டுக்குடி வர்க்கத்துடன் சேரத்தயங்காத நீங்கள்தான் ஈழத்தமிழர்களுக்கு முதல் எதிரி.

      வர்க்க இணைவின் அடையாளமாக இலங்கையில் பல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிங்களப் பேரினவாத அரசு ஈழமக்களுக்கு மட்டும்தான் எதிரி என்ற மாயை இபோது கொஞ்சம் கொஞ்சமக அகன்று வருகின்றது. அரசை எதிர்த்துப் போராடும் சிங்கள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது சிங்கள ராணுவம். இத்தாக்குதலை எந்த தமிழ்தேசிய அமைப்பும் கண்டிக்கவில்லை. இதுதான் வர்க்கப் பாசம். சிங்கள மக்கள் அனைவரும் இனவெறியர்கள்தான் என்று தமிழ் மக்களை நம்பவைத்து திரைமறைவில் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் கூடிக் குலாவுவது தான் உங்கள் அரசியல் நடைமுறை.

      புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் இன்றைய போராட்டம்
      http://ndpfront.com/tamil/index.php/articles/articles/akilan/2200-2013-12-10-18-10-00

      முன்னாள் புலிப் பிரமுகர்கள் ராஜபக்சே கட்சிஉடன் கூட்டுச் சேர்ந்த மர்மமென்ன?

      பதுமனின் தலைமையில் உயிர்ப்பிக்கப்படும் புலிகள்
      http://inioru.com/?p=38260

      கொலைகாரர்கள் இனம், மதம் பார்த்து கொல்வதில்லை
      http://ndpfront.com/tamil/index.php/articles/articles/vijayakumaran/2049-2013-08-03-13-12-22

      அரசபடைகள் மக்கள் சேவகர்கள் அல்ல… அரசின் காவல் நாய்கள்!
      http://ndpfront.com/tamil/index.php/articles/articles/akilan/2057-2013-08-11-08-06-29

      சிங்கள இராணுவமல்ல, மக்களை ஒடுக்கும் இராணுவம்
      http://ndpfront.com/tamil/index.php/articles/articles/rayakaran/2046-2013-08-03-08-16-02

      அரச படைகளின் அராஜகத்தின் மத்தியிலும் சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்!!
      http://ndpfront.com/tamil/index.php/magazines/student-voice/voice-01/2044-2013-07-31-20-25-51

      சிங்கள மக்கள் மத்தியில் வர்க்கமே இல்லை. சிங்கள் மக்கள் அனைவரும் இனவெறியர்கள்தான். சிங்களா ராணுவத்திற்கும், சிங்கள மக்களுக்கும் வித்தியாசமே கிடையாது என்று கூறும் தமிழ்க்குறுந்தேசியவாதிகளின் பார்வைக்கு:

      சிங்கள மக்களும், சிங்கள ராணுவமும் ஒன்றென்றால் எதற்காக சிங்கள ராணுவம் சிங்கள மக்கள் தாக்குதல் நடத்துகிறது? எதற்காக சிங்கள மாணவர்கள் சிங்கள அரசை எதிர்த்துப் போராடுகின்றனர்?

      தமிழர்கள்தான் எதிரி, புலிகள் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கூறி சிங்கள மக்களிடம் இனவாதைத்தைப் பரப்பிதான் சிங்களப்பேரினவாத அரசு ஆட்சி நடத்தி வந்தது. இப்போது புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகு இஸ்லாமிய மக்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. இதெல்லாம் வர்க்க அரசியல் இல்லாமல் வேறென்ன?

      சிங்கள மக்கள் அனைவரும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லைதான். அவர்கள் கருத்து மாறவே மாறாது என்பது இயங்கியலுக்கு எதிரான கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம். உலகெங்கும் உள்ள பொருளாதார நெருக்கடிகளால் எழும் மக்கள் எழுச்சியை சமாளிக்க முடியாமல் அரசுகள் திணறுகின்றன. அப்படிப்பட்ட நிலமைகள் நிச்சயம் சிங்கள உழைக்கும் மக்களை சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக நிறுத்தும். இப்போதே அதுபோன்று பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவற்றுடன் தமிழ் உழைக்கும் மக்களும் ஒன்றாகச் சேருவதன் மூலம், அவர்களோடு இணைந்து அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் தான் சிங்கள மக்கள் மத்தியில் தமிழினத்தின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும்.

      அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுபவர்கள் எல்லாம் ராஜபக்சேவின் நண்பர்களான இந்தியாவிடமும், அமெரிக்க மற்றும் மேலை நாடுகளிடமும் கோரிக்கை வைக்கின்றனர். இது தான் மேட்டுக்குடி வர்க்க புத்தி. தங்களது வர்க்கபுத்தியை ஈழத்தமிழர்கள் அனைவரின் மீதும் ஏற்றி ஈழத்தமிழர்களையும், சிங்கள மக்களையும். இஸ்லாமிய மக்களையும் இணையவிடாமல் தடுக்கிறார்கள் இந்த சந்தர்ப்பவாதப் பொறுக்கிகள்.

      இந்தப் பொறுக்கிகளைத் தனிமைப் படுத்தி முறியடிக்காவிட்டால் ஈழப் போராட்டம் ஒரு அடி கூட முன்னேறாது.

  49. @பகத்

    ///. ஆனால் வியாசன் ஒரு யாழ் வெள்ளாள சாதிவெறி கொண்ட குறுந்தமிழ்தேசியவாதி என்று தோழர் மன்னாரு அளித்த இணைப்புகளிலிருந்து அறிய முடிகிறது.//

    எனக்கு இந்த கம்யூனிச பிதற்றொலி (jargon)களில் பரிச்சயமில்லை. நான் குறுந்ததமிழ்த் தேசியவாதியுமல்ல, நெடுந்தமிழ் தேசியவாதியும் அல்ல, நான் ஒரு தமிழ்தேசியவாதி அவ்வளவு தான். இங்கு சிலருக்கு அவர்களின் புலம்பல்களுக்கு பக்கவாத்தியம் பாடாதவர்கள் அல்லது எதிர்க்கிறவர்கள் எல்லாம் வெள்ளாள சாதிவெறியர்கள். இவர்களின் ஆதரவைப் பெறவும், எழுத்துலகில் முன்னுக்கு வரவும் பல யாழ்ப்பாண வெள்ளாளர்கள் கூட இணையத்தளங்களில் தலித் வேடம் போட்டதுண்டு. 🙂

    இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ்நாட்டிலுள்ள ஆதிக்கசாதிகளின் அட்டகாசத்தைப் பற்றி மூச்சு விடக் கூடப் பயப்படுகிறவர்கள் எல்லாம் தமது சாதியொழிப்பு வீரத்தை அல்லது credential ஐக் காட்ட, சும்மா சிவனே என்று , தாங்கள் என்ன சாதியென்றே நினைத்துப்பார்க்கவே நேரமில்லாமல் உலகமெல்லாம் பரவிக்கிடக்கும் யாழ்ப்பாண வெள்ளாளரை இப்படியான இணையத்தளங்களில் நொட்டிப் பார்ப்பது தான், ஏனென்றால் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் 1921 இல் சிலரை கோயிலுக்குள் விடவில்லையாம். 🙂

    ஆனால் இன்றைக்கும் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு ஆதிக்கசாதியினர் மலம் தீற்றினால் அல்லது அநீதி இழைத்தால் அவனுடைய சாதிக்காரன் அல்லது திருமாவளவன் தான் போய் நீதி கேட்க வேண்டுமே தவிர, இங்கு சாதியோழிப்பு பற்றி பீற்றிக் கொள்ளுகிறவர்கள் போக மாட்டார்கள். நான் இதை பலமுறை அவதானித்திருக்கிறேன். தலித்துக்களுக்கு அநீதி நடக்கும் போது இன்று இங்கு சாதியொழிப்பு பேசும் தோழர்களும் திருமாவளவனுடன் ஒன்றிணைந்து அந்தக் கிராமங்களுக்குப் போய், சாதி வெறியர்களுக்கு பலத்தைக் காட்டியதாக எனக்குத் தெரியவில்லை.

    இணையத்தளங்களில் யாழ்ப்பாண வெள்ளாளரை மட்டும் வில்லனாக்கி சாதியொழிப்பைப் பற்று கதாகாலட்சேபம் நடத்துகிறவர்களில் பெரும்பாலானோர் ஆதிக்க சாதியினர் தான். அதை விட வேடிக்கை என்னவென்றால் அவர்கள் கூட திருமணம் என்று வரும் போது சொன்ன சொல்லைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக அம்மா, அப்பா சொல்கிற மாதிரி அவர்களின் அக்காவின் பெண்ணை திருமணம் பண்ணிக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் கிராமத்திலேயே எத்தனையோ அழகான, படித்த தலித் பெண்கள் இருப்பார்கள். இப்படி எத்தனையோ சாதியொழிப்பு வீரர்களை நான் தமிழ்நாட்டில் பார்த்திருக்கிறேன். இவர்களின் பம்மாத்துடன் ஒப்பிடும் போது இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர்களிடம் சாதி வெறி இல்லையென்றே கூறலாம்.

    /
    /// திருவாளர்.வியாசன் அவர்களின் மார்க்சிய, பெரியாரிய வெறுப்புக்குக் காரணம் அவரின் சிந்தனையில் புரையோடிப் போயிருக்கும் யாழ் வெள்ளாள மேட்டுக்குடி தமிழ்க் குறுந்தேசிய வெறி என்பதை அவரின் கட்டுரைகள் மூலம் புரிந்து கொள்ள முடியும். சில மாதிரிகள்:///

    ஐயா மகா புத்திசாலி,

    என்னுடைய வலைப்பதிவுகளில் உள்ள கட்டுரைகள் எல்லாம் என்னுடைய “யாழ் வெள்ளாள மேட்டுக்குடி தமிழ்க் குறுந்தேசிய வெறி” என்றால், ம.கே.இ.க வினரை ஆதரிக்கும் என்னுடைய இந்தப் பதிவு எதைக் காட்டுகிறது.

    http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post.html

    ராமதாசை, சீமானை, ஜெயலலிதாவை மட்டுமல்ல, திருமாவளவனை ஆதரித்துக் கூட நான் கருத்து தெரிவித்திருக்கிறேன், வாதாடியிருக்கிறேன். அதாவது என்னுடைய ஆதரவு உங்களைப் போல் வெறும் கொள்கை (மாக்சிய-லெனினிய) அடிப்படையில் அல்லாமல் issue- based support மட்டும் தான். தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக அவர்களில் யாரவது தமது கருத்தை தெரிவித்தால் அவர்களை நான் ஆதரித்திருக்கிறேன்.

    இளவரசனின் கொலை உண்மையில் என்னைப் பாதித்தது, என் வாழ்க்கையில் என் நெஞ்சை உறுத்திய விடயங்களில் அதுவும் ஒன்று. என்னுடைய சொந்த சகோதரனுக்கு அநியாயம் நடந்தது போன்ற உணர்வு.அந்த வேளையில் வன்னியர்களிலும், ராமதாசிலும் எனக்கிருந்த கசப்புணர்வால், கீழேயுள்ள பதிவுகளை எல்லாம் செய்த நான்.

    இளவரசன் திவ்வியாவை விட குறைந்த சாதி அல்ல.
    http://viyaasan.blogspot.ca/2013/07/blog-post_6.html

    உண்மையில் வன்னியர்கள் அக்கினியிலிருந்து உருவானவர்களா?
    http://viyaasan.blogspot.ca/2013/07/blog-post_20.html

    இளவரசனை கொன்றது யார்?
    http://viyaasan.blogspot.ca/2013/07/blog-post_11.html

    போய் வா சகோதரா இளவரசா!
    http://viyaasan.blogspot.ca/2013/07/blog-post_14.html

    அதன் பின்னர் ராமதாசை பாராட்டியதற்கு காரணம் அவர் இழந்து போன தமிழ்மண்ணை மீட்பது பற்றிக் கருத்து தெரிவித்தார் அதனால் தான். அதாவது அவரது சாதி அரசியலை நான் ஆதரிக்கவில்லை, ஆனால் அவரது தமிழுணர்வை, தமிழ்மண் காக்கப்பட வேண்டிய தேவையை, அங்குள்ள தமிழர்களைப் பற்றி, அந்த ஊர்கள் பாரம்பரியமாக தமிழர்களின் ஊர்கள் என்ற உண்மையை துணிச்சலுடன் அவர் பேசியதால் நான் அவரை பாராட்டினேன். எந்த இனத்துக்கும் மண் தானையா முக்கியம் அல்லது எமது இனம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அதை திருகோணமலையிலும் கிழக்கு மாகாணத்தில் நேரில் பார்த்தவர்கள் ஈழத்தமிழர்கள்.

    எனது வலைப்பதிவில் நான் என்ன எழுதுகிறேன் என்பதைப்பற்றி நான் யாருக்கும் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் என்னுடைய பெரும்பாலான பதிவுகளின் நோக்கம் சிலரின் தவறான கருத்தை அல்லது வதந்திகளுக்கு சரியான விளக்கம் கொடுப்பது தான், சிங்களவர் சிலரின் பொய்ப்பிரச்சார வலைப்பதிவை வாசித்து விட்டு வந்து சிலர் யாழ்ப்பாண வெள்ளாளர் ஆண்ட பரம்பரை அல்ல, என்று உண்மையைத் திரித்தால், மற்றவர்கள் கோபித்துக் கொள்வார்கள், என்னை சாதிவெறியன் என்று நினைப்பார்கள் என்பதற்காக நான் உண்மையைக் கூறாமல் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமென நான் நினைக்கவில்லை.

    அதே போல் தான் பிரபாகரன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற வதந்தியும், பிரபாகரனின் தந்தை மலையாளி என்ற பொய்ப்பிரச்சாரமும், இவற்றை பொய் என்று தெரிந்தும, கம்யூனிஸ்டுகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்பதற்காக அதைப்பற்றி பேசாமலிருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

    சரியாகப் படித்துப் பார்க்காமல், எந்த சந்தர்ப்பத்தில், எதற்காக அந்தப் பதிவுகள் இடப்பட்டன என்று தெரியாமல், எதிர்க்கருத்து தெரிவிப்பவர்களுக்கு லேபல் ஓட்டும் அவசரக் குடுக்கைகளை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. 🙂

  50. ஐயா மாவோ சண் துங்,

    //எனக்கு பதிலளிக்கும் போது ”தமிழகத்தில் ஒரு கலப்பு திருமணத்திற்காக இறந்து போன இளவரசனுக்காக” ( நல்ல வேலை இளவரசன் தானாக செத்தான் என்று ராமதாஸைப் போல அறிக்கை விடவில்லை ) உருகுவது போல வேதம் ஓதிவிட்டு உங்கள் வலைதளத்தில் அந்த தலித் இளைஞனை வன்னிய சாதி வெறியால் தீர்த்துக்கட்டிய மனநோயாளி ராமதாஸை, தமிழ் மண்ணை மீட்க வந்த பச்சைத் தமிழன் என்று பாராட்டி உள்ளீர்கள். //

    இதற்கு மேலே பதிலளித்துள்ளேன் தயவு செய்து பார்க்கவும்.

    ///உங்களைப் போல, சிதம்பரம் சைவர்களின் பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டே தீட்சித வன்முறையைக் கண்டிப்பது போலக் காட்டிக்கொண்டு அந்த தீட்சிதர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெய கடாத் சகத்திடம், எப்படியேனும் புலிக்கொடியை தமிழ்க்கொடியாக ஆதரியுங்கள் அம்மா என்று தமிழின, ஈழ எதிரியான ஜெயலலிதாவிடம் பசு பதி பாசத்தைக்காட்டும் கபட வேடதாரிகள் நாங்கள் இல்லை! ///

    அது எங்களின் தவறல்ல, நீங்கள் இப்படிக் கொதித்தெழுமளவுக்கு தமிழர்களின் எதிரியான ஜெயலலிதாவை அடுத்தடுத்து அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சராக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தவறு. ஜெயலலிதா அல்ல சுப்பிரமணியம் சுவாமியை தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தால், சில விடயங்களுக்கு உத்தியோக பூர்வ அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால், சுவாமியிடம் தான் கேட்க வேண்டும். குளத்துடன் கோபித்துக் கொண்டு குளிக்காமல் இருப்பவன் முட்டாள்.

    நீங்கள், மார்க்சிய – லெனினிய வாதிகள் தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, ஜெயலலிதாவின் ஆட்சியை வீழ்த்தி, உங்களில் ஒருவர் தமிழ்நாட்டில் முதலமைச்சராகியிருந்தால், புலிக்கொடியை தமிழ்க்கொடியாக ஆதரியுங்கள் என்று உங்களிடம் கேட்டிருப்பேன். நீங்கள் எதற்கெடுத்தாலும் இப்படி உணர்ச்சிவசப்படாதிருந்தால், இதை நீங்களே சிந்தித்து புரிந்து கொண்டிருப்பீர்கள். 🙂

    ///உங்களின் முதலாளித்துவ வெள்ளாள தேசியத்தை வெளுக்கும் வேலையையும் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் வரலாறு ஒப்படைத்திருப்பதால் உங்களிடம் விவாதிப்பது தவிர்க்க முடியாததாகிறது. மற்றபடி உங்களை தனிப்பட்ட முறையில் தொந்திரவு செய்யும் என்னம் அடியேனுக்கு துளியும் இல்லை!///

    கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்கள். நீங்கள் தொந்தரவு செய்வதாக நான் நினைக்கவில்லை. ஆனால் உங்களின் வர்க்கம், தர்க்கம் என்ற வார்த்தை ஜாலங்களில் இருந்து நீங்கள் சொல்ல விரும்புகிற செய்தி காணாமல் போய் விடுகிறது. நீங்கள் சொல்கிறீர்கள், நாங்கள் வர்க்கப் போராட்டத்தை தொடங்கி, சிங்கள உழைக்கும் மக்களுடன் சேர்ந்து எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்று. ஆனால் சிங்கள் உழைக்கும் வர்க்கமோ, வடக்கு, கிழக்கில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. நாங்கள் எமது நிலத்தை இழந்த பின்னர் சுயநிர்ணய உரிமையைப் பெற்று என்ன செய்வது தலையணைக்குள் வைத்துக் கொண்டு தூங்குவதா?

    இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் உங்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறதென்று தெரியாது. சுதந்திரமடைந்த போது கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள் எப்படி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். உங்களின் வர்க்கப் போராட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டால், வடக்கிலும் சிறுபான்மையினராகி விடுவோம்,. பின்னர் மார்க்சிய – லெனினிய கொள்கைககை கட்டிப்பிடித்து அழ வேண்டியது தான். 🙂

  51. @பகத்,

    ///அப்படிப்பட்ட நிலமைகள் நிச்சயம் சிங்கள உழைக்கும் மக்களை சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக நிறுத்தும். இப்போதே அதுபோன்று பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவற்றுடன் தமிழ் உழைக்கும் மக்களும் ஒன்றாகச் சேருவதன் மூலம், அவர்களோடு இணைந்து அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் தான் சிங்கள மக்கள் மத்தியில் தமிழினத்தின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும்.///

    எல்லா உளறல்களுக்கும் பதிலளிக்க எனக்கு நேரமில்லை. சிங்கள உழைக்கும் மக்களுடன் முப்பது வருடங்கள் அகிம்சை அரசியலும் முப்பது வருடங்கள் ஆயுதப் போராட்டமும் நடத்திய பின்னர் தான் தமிழர்கள் என்ன செய்வதென்றறியாது, இப்படியாவது எமது மண்ணை திட்டமிட்ட சிங்கள் குடியேற்றங்களிளிருந்து காப்பாற்றலாம், என்ற நப்பாசையில் வடமாகான சபைக்கு இவ்வளவு பெரும்பான்மையாக வாக்களித்தார்கள். நீங்கள் சொல்வது போல் சிங்கள உழைக்கும் வர்க்கம் தமது சிங்கள பெளத்த மகாவம்ச சிந்தனைகளிலிருந்து விடுபட்டால், அப்படி ஏதாவது அதிசயம் நடந்தால் (அப்படி நடப்பதற்கு முதலில் சிங்கள பிக்குகள் அனைவரும் உண்மையான கெளதம புத்தராக மாற வேண்டும்). ஈழத் தமிழர்களும் அவர்களுடன் இணைவார்கள் என்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். 🙂

    ஐயா, தமிழர்கள் அகிம்சை வழியில் போராடிய போது அவர்களை தாக்கியதும் சிங்கள உழைக்கும் வர்க்கம் தான், தமிழர்களை அடுத்தடுத்த இனக் கலவரங்களில் கொள்ளையடித்துக் கொலை செய்ததும், சிங்கள உழைக்கும் வர்க்கம் தான். ஒவ்வொரு தேர்தலில் எந்தக் கட்சி தமிழர்களுக்கெதிராக கூடுதலாக நஞ்சைக் கக்குகிறதோ அந்தக் கட்சியை ஆட்சியமைக்க வைத்ததும் சிங்கள் உழைக்கும் வர்க்கம் தான். ஆயுதப் போராட்டத்தின் போது ஒவ்வொரு சிங்களக் கிராமத்திலும் மணிக்கணக்காக வரிசையில் நின்று தமது பிள்ளைகளை தமிழர்களைக் கொல்ல, இராணுவத்தில் சேர்த்ததும் சிங்கள் உழைக்கும் வர்க்கம் தான், போர் முடிந்த பின்னர், தமிழர்களின் குழநதைகள் கூட அநியாயமாகக் கொலப்பட்டார்கள், தமிழ்ப்பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், தமிழர்களின் பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் கூட தமது இராணுவத்தால் தாக்கப்பட்டன என்று தெரிந்தும், தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல், செய்ய, யாரவது போர்க்குற்றம் பற்றி பேசினால், அவ்ர்களுக்கெதிராக போர் தொடுப்பவர்களும் சிங்கள் உழைக்கும் வர்க்கம்தான்.

    அதை விட போர் முடிந்ததும், வடக்கு கிழக்கின் கரையோரப்பகுதிகளில் எல்லாம் அத்து மீறிக் குடியேறி தமிழ் மீனவர்களை அங்கிருந்து அகற்றி, மீன்பிடித் தொழிலைக் கைப்பற்றியதும் சிங்கள் உழைக்கும் வர்க்கம் தான்.

    காணொளி:
    Sri Lanka: Tamils on probation Part 2 by France24

    https://www.youtube.com/watch?v=PN-rckqZh68

    இன்று வன்னியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் கீழ் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதும் சிங்கள உழைக்கும் வர்க்கம் தான், நேற்றுக் கூட கிளிநொச்சியில்(மலையாளபுரத்தில்) தமிழர்களைத் தாக்கியதும், அங்கு அத்துமீறிக் கூடியேறியுள்ள சிங்கள உழைக்கும் வர்க்கம் தான். கிழக்கு மாகாணத்தில் பல சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி, இன்று மூன்றாவது இடத்துக்கு தள்ளியதும் சிங்கள உழைக்கும் வர்க்கம் தான். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். உண்மையில், இவ்வளவுக்குப் பின்னும் ஈழத்தமிழர்களைப் பார்த்து சிங்கள உழைக்கும் வர்க்கத்துடன் சேர்ந்து வர்க்கப் போராட்டம் செய்யுங்கள், சுயநிர்ணய உரிமை கிடைக்கும் என்று கூறுபவர்கள் போகாத ஊருக்கு வழிகாட்டுகிறார்கள். 🙂

  52. வியாசன் அவர்களே,

    ஒன்று புலி தாசன் இல்லையேல் துரை சண்முக தாசனா? வேண்டாம் இந்த விபரீதம்! ஏதாவது ஒரு விவாதம் என்றால், மொட்டையடிப்பது, பெயரை மாற்றுவது… கட்டுக்கடங்காமல் போனால் கழுவிலேற்றுவது இந்த ‘அன்பே சிவத்தில்’ அடியேனுக்கு உடன்பாடில்லாததால்… நாம் விவாதத்தின் வழி ஒரு முடிவுக்கு வர முயற்ச்சிப்போம்.

    வள்ளலார், பெரியார் போன்றோரெல்லாம் உங்கள் ஊரில் குறிப்பாக யாழ்ப்பாண சைவர்களிடம் எடு
    படாமலும்! ஏற்கப்படாமலும் போனதில் எங்களுக்கு வியப்பில்லை, பெரியாரென்ன? நீங்கள் தான் பிரபாகரன் இருந்தவரைக்கும் ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு தீர்வில்லை என்று தமக்கு மாற்றாக தேர்தல் பாதையை சிந்தித்த தலைவர்களை தலையில் போட்டும், பிரபாகரன் போனவுடன் வடக்கு மாகாண தேர்தலுக்கு வடம் பிடித்தும் பிரபாகரனுக்கே டாடா காட்டியவர்களும், ஆயிற்றே! தமிழ்நாடு அளவுக்கு சாதி வெறியின் விளைவுகள் அங்கில்லை என்று நீங்கள் சொல்வது நல்ல விசயந்தான்! ஆனால் அது யாழ் வெள்ளாள சுய அறிவு போல எளிதாக கடந்து செல்வது தவறல்லவா? 1928 -இல் தமிழ் ஊழியர் சங்கம் பஞ்சமர் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக்கு எதிராக பாடசாலைகளில் சம ஆசனம், சம போசனம் போராட்டம் தொடங்கி, அரசு உத்திரவால் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், ஆதிக்க சாதி மாணவர்களுக்கு இணையாக தரையில் உட்காராமல் ஆசனங்கள் வழங்கப்பட்டபோது யாழ் ஆதிக்கசாதி குழுவினர், இந்த நடைமுறை வந்த 15 பாடசாலைகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததுதான் உங்கள் யாழ்வெள்ளாள சாதிவெறி வரலாறு. 1931 -இல் டொனமூர் சட்டப்படி அனைவருக்கும் வாக்குரிமை வந்தபோதும், வெள்ளாளத் தலைவர்கள், குறிப்பாக எஸ்.நடேசன் தாழ்த்தப்பட்டவர்களுக்கான வாக்குரிமையை தடைசெய்ய வலியுறுத்தி குதியாய் குதித்தது ஊரறிந்த விசயம்தான். பஞ்சமர்களுக்கு எதிராக பெண்கள் தாவணி அணியத் தடை, ஆண்கள் மேலாடை அணியத்தடை, ஆதிக்க சாதி கோயிலில் நுழையத்தடை, பொதுக்குளம், தண்ணீர் தடை… என 24 வகைத் தடைகளையும், விரித்து ஆட்டம் போட்டதுதான் உங்கள் ஆறுமுக நாவலர் வகையறாக்கள். இதில் தமிழ்நாடு போல இங்கில்லை என்ற சைவப் பெருமிதம் எதற்கு? தீண்டாமையின் வடிவங்களிலும், நடைமுறையிலும் உங்கள் ஊருக்கேற்ற வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில் எந்தத் ‘தமிழ்தேசிய பெருமையும்’ எமக்குத் தெரியவில்லை, இதைத்தான் பிற்போக்கு தேசியத்தின் உள்ளடக்கமாக உணர்த்தினால் உங்களுக்கு வார்த்தை ஜாலமாகவும், வயிற்று ஜலமாகவும் படுகிறது!

    ‘அது போன மாசம்’ என்று வாதிடுவீர்களே ஆனால் புலிகள் அதிகாரத்துக்குட்பட்டு இருந்தபோது யாழ்பாணத்தில் மட்டும் 150 -க்கும் மேற்பட்ட கோயில்களில் தலித்துகள் நுழைய முடியாத நிலை இருக்குமளவுக்கு சைவப்புலிகள் விடுதலைப்புலிகளுக்கே சவால் விட்டுவார்களாயிற்றே! தவிர அகதி முகாம்களில் கூட சாதிப்பாகுபாட்டை, அந்தஸ்தை பேணுமளவுக்கு ஈழத்தமிழினம் உங்கள் கூற்றுப்படி ஓர்மடையாதபோது இங்கே சாதி அந்த அளவுக்கு இல்லை, வர்க்கம் அறவே வேலை செய்யாது என்பது சரியாகப்படவில்லையே!

    மேலும் இடதுசாரி கண்ணோட்டம் மற்றும் தீண்டாமை எதிர்ப்பு அமைப்புகளின் போராட்டத்தால் தன்னை தகவமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட உங்கள் யாழ் வெள்ளாள குறுந்தேசியம், யுத்தத்தின் நிலைமைகள், சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகள் காரணமாக ஒரு தற்காப்பு தமிழ்தேசியவாதமாக சைவக் கொடுக்கை மடக்கி வைத்திருப்பதுதான் வரலாறே ஒழிய! இயல்பிலேயே யாழ் வெள்ளாள தமிழ்தேசியம் சாதிவெறியற்றது என்பது போல சாதிய போராட்ட வரலாறை கண்டும் காணாமல் போவதன் மூலம் முற்போக்கும் இல்லை, பிற்போக்கும் இல்லை. தமிழ்தேசியம் ஈழத்தமிழரிடத்திலே ஒன்றுதான் என்று நீங்கள்தான் வாதிடுவதாகப் பார்க்கிறேன். மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிப்பின் போதெல்லாம் இலங்கை சிங்கள இனவெறி அரசோடு ஒத்துப்போன யாழ் தமிழ்தேசிய மேட்டுக்குடி விவகாரத்தையும், புலிமார்க் சியக்காய் தூள் போட்டு நீங்கள் விளக்குவது இருக்கட்டும், தேசிய சிறுபான்மை இனம் என்ற அவர்களது அரசியல் உரிமையை அங்கீகரிக்காமல் புலிகள் வரை அவர்களையும் ஒரே ஈழத்தமிழர்கள் என்று அடக்குவது என்ன நியாயம்? தத்தம் போராட்ட வடிவங்களால் மலையக மக்கள் வென்றெடுத்த தொழிற்சங்க உரிமைகள் இருக்கட்டும் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்சங்கங்களையே தடை செய்த நீங்கள்தான் மலையக மக்களுக்கும் சேர்த்து ஈழம் வாங்கித்தரும் இனக்காவலர்களா? கடைந்தெடுத்த சாதிவெறி சுரண்டல் அயோக்கியர்களான தமிழக சைவ மடாதிபதிகள் முதல், புலிக்கச்சை அணிந்து கவர்ச்சிகாட்டும் மதுரை ஆதினங்கள் வரை யாழ்ப்பாண சைவக்கும்பல் வரை மார்க்சிய – லெனினியத்தை விரோதமாக பார்ப்பதில் என்ன ஒரு தமிழின ஓர்மை
    உங்கள் உணர்ச்சியில்! களத்துப் பிள்ளைகளிடம் ‘சோசலிசம்’ ‘ஏ.கே. 47’ கற்றறிந்த ‘பிள்ளைமாரிடம்’ தமிழியம், ‘அரோகரா’ அடடா! யாழ்ப்பாண மேட்டுக்குடியிடம் புலிகளே வாலைச் சுருட்டிய கதை இதுதானா?

    யுத்தப் பாதிப்பினாலும், அகதிகளாகவும் புலம் பெயர்ந்த தமிழர்களை நான் பொதுவாகப் பேசினால்தானே. நீங்கள் யூதனை விட்டு எங்களை உதைக்க வேண்டும்! நான் நேரிடையாகக் குற்றம் சாட்டியது யாழ் மேட்டுக்குடி வர்க்கத்தை! ஒ! உங்களுக்குத்தான் வர்க்கம் கிடையாதே! நந்திக்கடலோரம் சனம் கொல்லப்பட்டு பிண வீச்சம் கூட மாறாத நிலையில்… லண்டனில் தமிழக சினிமா கழிசடைகள் அடித்தக் கூத்தை கைதட்டி ரசித்து, விசிலடித்துக் கொண்டிருந்த அந்த ஈழத்தமிழ் கூட்டத்தை உங்கள் வசதிக்காக இனம் என்று மட்டும் சொன்னால் போதுமா? இல்லை இது வர்க்கக் கொழுப்பா?

    வாதத்தின் மையத்திற்கு வருகிறேன், வள்ளலார், பெரியார், வர்க்கப் போராட்டமெல்லாம் ஈழத்துக்கு வேலைக்கு ஆகாது! என்று நக்கலடிக்கும் நீங்கள் முன் வைக்கும் தீர்வுதான் என்ன என்று தேடிப்பார்த்தால், உங்கள் இணையக் கட்டுரைகளில் உடனடியாக தமிழர் நிலப்பகுதியில் சிங்களக் குடியேற்றத்தை விலக்கு! என்று இந்தியா மூலமாக அழுத்தம் தர வேண்டும் என்று தமிழக தமிழர்களுக்கு ஆலோசனை வழங்குகிறீர்கள்! ஈழத்தமிழர் நிலத்தில் இந்திய தரகு முதலாளிகளின் குடியேற்றத்தையும், உடனே சிங்கள குடியேற்றத்தையும் விலகிடு? என்று தமிழகத் தெருக்களில் ஆர்ப்பாட்டமாகவும், முற்றுகையாகவும் ஏற்கனவே போராடி வரும் ம.க.இ.க. வினரையோ சிங்களருக்கு உதவி புரிபவர்கள் என்று சந்தேகம் வருவதாக பரப்புகிறீர்கள்.

    ஒரு புறம் சர்வதேசம் உதவவில்லை, இந்தியா அழிந்துவிட்டது, பாட்டாளிவர்க்க கண்ணோட்டமும் பயன்படாது என்று அனுபவங்களைத் தொகுக்கும் நீங்கள், இனியும் இந்தியா மூலமாகத்தான் ஏதாவது நடக்கும்! என்றும், இந்திய ராஜபக்சேவான மோடியைத் தூக்கிவரும் பா.ஜ.க.வுக்கு கல் சுமந்து ஈழம் வாங்கி விடலாம் என்று நம்பிக்கையூட்டும் தமிழினவாதிகளை பாராட்டலாம் என்பது என்ன சைவ கிறுக்கோ!

    சிலுவைப்போர் தொடங்கி இது காறும் நடக்கும் இன, மதவெறிப் படுகொலைகள் எல்லாம் வர்க்கப்போராட்டத்தின் சிதைந்த வடிவங்களே என்று நாங்கள் சொல்லிவந்தால், எமக்கு ஈழம் பற்றி எதுவுமே தெரியாது என்று சிரித்துவிட்டு, சீரியசாக உங்கள் தளத்தில் சிங்கள, தமிழர் இடையே நடப்பது, அடிப்படையில் நிலப்போராட்டம் என்று மை போடுகிறீர்கள். சிறிதளவே ஆயினும் இலங்கையில் வர்க்கக் கண்ணோட்டத்திலான அரசியல் பார்வையால்தான் சாதி எதிர்ப்பு, தொழிற்சங்கங்கள், இன சமத்துவம் உள்ளிட்ட சொற்ப அளவிலான ஜனநாயக சக்திகளையாவது, உங்கள் கூற்றுபடி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஒரு சிலரையாவது உருவாக்க முடிந்தது. முப்பது நாற்பது ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கில் உயிர்களை பலி கொடுத்த உங்களின் முதலாளித்துவ அரசியல் பார்வையால் வென்றெடுத்த உலக சக்திகள் என்ன? ஜெயலலிதா என்ன அடித்தாலும் தாங்கும் நெடுமாறன், சீமான், வைகோ. என்ற செல்லாக்காசுகள்தான் உங்களுக்கு நாணயமான சக்திகளா? தில்லை தீட்சிதன் முதல் லங்கை ராஜபக்சே வரை மஃபியா கூட்டாளியாகச் செயல்படும் சுப்ரமணியசாமி அணிவகுக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ், பார்ப்பன மதவெறிக் கும்பலின் கையால் ஈழம் வாங்கித் தர புறப்பட்டிருக்கும் இந்தச் சதிகார ஏஜென்டுகள் உங்களுக்கு சாதிக்கும் ஏஜன்ட்டுகள்!, ஈழமக்களின் தன்னுரிமைக்காக தொடக்கம் முதலே… இந்திய, உலக ஏகாதிபத்தியச் சார்புப் பாதை அழிவைத்தரும் என்று அரசியல் ரீதியாக எச்சரித்து, இங்கிருக்கும் ஈழ அகதிகளின் உரிமை வரைக்கும் இந்திய, பார்ப்பன ஜெ அரசின் மேலாதிக்க வெறிக்கு எதிராக இங்குள்ள பாட்டாளிவர்க்கத்தின் அரசியல் வீச்சை முன்னெடுக்கும் நாங்கள் சரண்டர் ஏஜென்ட்டுகளா?

    கம்யூனிஸ்டுகள் என்றால் கருவறுப்பதில் சிங்கள அரசுகளும், புலிகளும் கைக் கூட்டாய் இருந்து கொண்டு, மக்களின் மார்க்சிய தெரிவுக்கு எந்த ஜனநாயகத்தையும், அமைப்பையும் மறுத்துவிட்டு, எங்கே போனது உங்கள் பாட்டாளி வர்க்கம் என்று எள்ளி நகையாடும் நண்பரே! எல்லோரையும் மறுத்து மக்கள் எங்களைத்தான் ஆதரித்தார்கள்… என்று முதலாளித்துவ அரசியல் சக்திகளை நம்பி, ‘ஆயுத மேவ ஜெயதே!’ என்று எந்த அரசியல் விமர்சனத்தையும் காதில் ஏற்காத களப்புலிகளே! எங்கே உங்கள் ஈழம்? எங்கே உங்களுக்கு சேனம் கட்டிய முதலாளி வர்க்கம்! நாங்கள் இழவு வீட்டில் எள்ளி நகையாடும் அற்பர்கள் அல்ல, நீங்களே தனிமைப்பட்டு, தவித்து அடங்கிய முடிவுக்காக ஆழமாக துன்புறுகிறோம், புலி என்றால் மக்கள், மக்கள் என்றால் புலிகள் என்று பதிலடி தந்துவிட்டு, லட்சக்கணக்கான மக்களை நந்திக் கடலோரம் நிராயுதபாணியாக நிறுத்தி, குறைந்தபட்சம் ஈழத்தமிழர் வாழும் பரப்பெங்கும் ஒரு அரசியல் எதிர்ப்பைக் கூட நடத்தமுடியாத அளவுக்கு மக்களிடம் அமைப்பற்று சிதறிப்போன உங்கள் வழிமுறைத் தவறுகளை இன்னும் உணராமல், மக்களை மீண்டும் முதலாளித்துவச் சக்திகளிடம் பணயம் வைக்கும் உங்கள் திருந்தா தன்மைக்கு வருந்துகிறோம்!

    திரும்பவும் சொல்கிறேன், நான் கொண்டிருப்பது மட்டும் வர்க்கப் பார்வையல்ல, நீங்கள் விவாதிப்பதும் ஒரு வர்க்கப் பார்வையின் அடிப்படையில்தான். எந்தப் பார்வையின் அடிப்படையில் ஈழத்தின் தன்னுரிமை சாதிக்கப்படமுடியும் என்பதில் நீங்கள் முன்வைத்த பார்வைதான் அனுபவத்தில் தோல்வி கண்டுள்ளது. மாறாக இன்னும் ஈழத்தமிழர் அரசியல் போராட்ட அனுபவங்களின் ஆளுகைக்கு வராத பாட்டாளிவர்க்கப் பார்வையல்ல. பவுத்த சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களுக்கு மட்டுந்தான் எதிரி மற்றபடி எல்லா சிங்களவர்களுக்கும் முரணில்லாதது என்று முடிவு செய்ய முடியாது! ஏகாதிபத்திய உலகமயமாக்கலை அமல்படுத்தும் ஒரு வர்க்க அரசு என்ற முறையில் அது சிங்கள உழைக்கும் வரக்கத்திடமும் எதிர்ப்பையும், முரண்களையும் தோற்றுவிப்பதுதான் அதன் இருத்தலின் இயல்பு! அதைத் தனிமைப்படுத்தி, பலவீனப்படுத்தி செய்யும் முயற்சிகள் வீணானவை என்பதைவிட, ஐ.நா. வுக்கு மனு கொடுத்து, இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து, சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளுக்கு துப்புக்கொடுத்து… சிங்கள இனவெறி அரசை பணிய வைத்து விட முடியும் என்று மீண்டும் முதலாளித்துவ சக்திகளை நம்புவதுதான் வீண் வேலை, ஆகாத வேலை! தனது நலன்களைச் செய்வதற்கு ஏற்கனவே ஒரு அரசு வாய்ப்பாக அதுவும், இனவெறி, மதவெறியோட மக்களை பிளவுபடுத்தி மூலதன ரத்தம் குடிக்க ஏதுவாக இருக்கும் போது உலக முதலாளித்துவ சக்திகளுக்கு சிங்கள இனவெறி அரசை எதிர்க்கவேண்டிய அவசியமில்லை. பொய்த்துப்போன சர்வதேச முதலாளித்துவச் சக்திகளிடம், ஏகாதிபத்திய கொலை வெறியர்களிடம் நம்பிக்கை வைத்து சாவதைவிட, உள்நாட்டு அரசு எதிர்ப்பு சக்திகளுடன் வர்க்கக்கண்ணோட்டத்துடன் இணைவதற்கான அரசியலை முன்னெடுப்பதும்தான் உலக முதலாளித்துவ சக்திகளையே பணிய வைக்கும் திறன் வாய்ந்தது எனக் கருதுகிறேன்! பரிசீலியுங்கள்!

    துரை.சண்முகம்

  53. கம்யூனிஸ்டுகளின் கதையைக் கேட்டு மார்க்சிய – லெனினிய சிந்தனைகளின் படி சிங்கள உழைக்கும் வர்க்கத்துடன் சேர்ந்து வர்க்கப் போராட்டம் தொடங்க முன்னரே, சிங்கள உழைக்கும் வர்க்கம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் வடக்கிலும் ஈழத்தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடும். அதன் பின்னர் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை வாங்கி கக்கத்தில் வைத்துக் கொண்டு கட்டிய துண்டோடு கதிர்காமம் போக வேண்டியது தான் என்பதை உணர்ந்து கொண்டதாலோ என்னமோ, வர்க்கப் போராட்டம் பற்றி புதிதாக எந்த அறிவுரையும் வழங்காமல் December 13 இல் அரைத்த மாவையே திருப்பி அரைக்கிறார் அண்ணன் சண்முகம். 🙂 🙂

    • விவாதிக்க விவாதிக்க உங்கள் வாயிலிருந்து வரும் சரக்குகளே போதுமான அளவுக்கு உங்களை அம்பலப்படுத்தும் போது. வெளியிலிருந்து உங்களுக்கு யாரும் முத்திரை குத்த வேண்டிய அவசியமில்லை வியாசன்,

      கொலை செய்தவனுக்கு கால், கை, அமுக்கிற மாதிரி ஒரு கதையை எழுதிப்போட்டுவிட்டு நானும் இளவரசன் மரணத்திற்கு வருந்துகிறேன், என்று ஆதாரமாக அள்ளிப்போட்டிருக்கும் உங்கள் வலைத்தளப் பதிவுகளையும், பார்த்தேன், அந்த தலித் இளைஞனின் கொலைக்கு காரணமான வன்னிய சாதி வெறியைக் கண்டித்தோ, காரணகர்த்தாக்களான ராமதாசு, அன்புமணியைக் கண்டித்தோ ஒரு வரி கூட எழுதாமல், பொதுவாக போய்வா இளவரசு தவறு செய்தவர்களை கடவுள் தண்டிப்பார்! என்று சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யும் இந்த அயோக்கியத்தனத்துக்கு பெயர்தான் ‘இஸ்சூ பேஸ்’ தமிழ்த்தேசியம் போல! சாதிவெறி ராமதாஸ்தான் கொலைக்கான முதல் அக்யூஸ்ட் என்று ம.க.இ.க. வி.வி.மு. போன்ற புரட்சிகர அமைப்புகள் போராடி உண்மைகளை உலகுக்கு தெரிவித்த சூழலிலும், ஒன்றுமே தெரியாதவர் போல நெஞ்சறிய பொய் சொல்லும் நீங்கள் ஒரு யாழ்ப்பாண ராசபக்சே என்பதை புரிந்து கொண்டோம். ஈழத்தமிழர்களை படுகொலைசெய்த ராஜபக்சயே கூட கடவுள் தண்டிப்பார் என்று கதைப்பீர் போல! சாதிக்கொரு நீதி தான் மனுதர்மம், வியாசகனின் வெள்ளாள தேசியமும் ஆதி விதிவிலக்கல்ல! நீர்! புலித்தோல் போர்த்திய பசு! புலிகளையே காவு கொண்ட உம் யாழ்ப்பாண வெள்ளாள மேட்டிமைக்கு இனியும் ஈழ மக்கள் ஏமாறமாட்டார்கள்!

      • பாட்டாளி வர்க்க மா.லெ. அறிவுரைகளைக் கேட்டால் ”பன்றியைப் பார்த்த முசுலீம்” மாதிரி முகம் சுளிப்பதாக எழுதியுள்ளீர்கள்! பன்றியாவது உங்களைப் போல அசிங்கத்தை அப்புறப்படுத்த பயன்படும்! நீங்களோ யாழ்ப்பாண வெள்ளாள சமுகம் நேந்துவிட்ட கோயில் மாடு! உழைக்கும் மக்களுக்கு இடைஞ்சலான உங்களை ஒழுங்குபடுத்துவதும் எமக்கொரு வேலையாகிறது! செய்வோம்!

  54. முறையாக விவாதிக்கத் தெரியாததால், எப்படி சிங்கள உழைக்கும் வர்க்கம், திட்டமிட்டு தமிழர்களின், நிலங்களை, அவர்களின் வாழ்வாதாரத்தை பிடுங்குகிறார்கள் என்ற உண்மையைக் காணொளி மூலம் நேரடியாகப் பார்த்த பின்பும் கூட, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்னும், அவரது மார்க்சிய-லெனினிய வக்கிரத்தை மேலும் எழுதினால் மூக்குடைபட்டு விடுவேனோ என்று பயந்து, முதலில் அவர் எழுதி, அதற்குப் பதிலும் எழுதப்பட்ட உளறலையே,மீண்டும் விவாதத்தில் சமர்ப்பித்த குள்ளநரித்தனத்தை நான் சுட்டிக் காட்டியதால், அதாவது அரைத்த மாவையே திருப்பி அரைத்த, சரக்கு மாஸ்ரர் சண்முகம், இப்பொழுது வர்க்கப் போராட்டத்தை கை விட்டு, சாதிப் போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, தானே நீதிபதியாக மாறி ராமதாசுக்கு விசாரணை இன்றி தீர்ப்பு வழங்குவது மட்டுமல்ல, என்னையும் தனிப்பட்ட முறையில் தாக்கி தனது அசிங்கத்தைக் காட்டுகிறார். 🙂

    // சாதிவெறி ராமதாஸ்தான் கொலைக்கான முதல் அக்யூஸ்ட் என்று ம.க.இ.க. வி.வி.மு. போன்ற புரட்சிகர அமைப்புகள் போராடி உண்மைகளை உலகுக்கு தெரிவித்த சூழலிலும்,///

    நீங்கள் கண்டுபிடித்த உண்மைகளுடன் நீங்கள் என் நீதிமன்றம் சென்று வாதாடவில்லை. ராமதாசால் தான் இளவரசன் கொல்லப்பட்டதற்கு உங்களிடம் ஆதாரங்கள் உண்டு என்றால், இப்பொழுது கூட மேன்முறையீடு செய்யலாமே, எதற்காக சும்மா, வலைப்பதிவில் மட்டும் வாய்ப்பந்தல் போடுகிறீர்கள். சாதிவெறி ராமதாஸ் தான் குற்றவாளி என்று உங்களிடம் ஆதாரங்கள் இருக்கும் போது, அவருக்கு எதிராக வழக்காடாமல் இருக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா. யார் குற்றவாளியாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று தான் நான் சொன்னேனே தவிர, ராமதாஸ் குற்றவாளி இல்லை என்று சொன்னேனா? உங்களுக்கு ஜால்ரா போடுகிறவர்களை மட்டும் தான் உங்களுக்குப் பிடிக்கும் போலும். 🙂

  55. சண்முகம் அண்ணாச்சி,

    சும்மா, யாழ்ப்பாண வெள்ளாளர், யாழ்ப்பாண வெள்ளாளர் என்று அலறும் உங்களைப் பார்க்க உண்மையிலேயே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இலங்கையில், வடக்கிலும், கிழக்கிலும் ஐம்பதாண்டுகளாக நடைபெற்று வரும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களைப் பற்றியே தெரியாத(தெரிந்திருந்தால் சிங்கள உழைக்கும் வர்க்கத்துடன் இணைந்து வர்க்கப் போராட்டம் பற்றி வாய் திறந்திருக்க மாட்டீர்கள்) உங்களுக்கு யாழ்ப்பாண வெள்ளாளரைப் பற்றி என்ன தெரியும்,
    யாழ். வெள்ளாளரைப் பற்றிய உங்களின் அறிவு, டொமினிக் ஜீவாவின் புத்தகத்துக்குள் அடக்கம். அந்தப் புத்தக நிகழ்வுகள் நடந்து 80 வருடங்களுக்கு மேலாகி விட்டன, அந்தப் புத்தகத்தை மூடி வைத்து விட்டு வெளியே வாருமையா! 🙂

    முதல் பதிலில், தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு யாராவது ஆதிக்கசாதிகள் தீங்கிழைத்தால், மலம் தீற்றினால், செருப்பு போட அனுமதிக்காது விட்டால்,அவர்களின் சாதிக்காரன் அல்லது திருமாவளவன் தானே போய் நீதி கேட்கிறார். சாதியொழிப்பைப் பீற்றிக் கொள்ளும், உங்களைப் போன்ற கொள்கை வீரர்கள், ஏன் திருமாவளவனுடன் இணைந்து அந்தந்தக் கிராமங்களுக்குப் போய் நீதி கேட்பதில்லை, சாதியொழிப்பு வீரர்களின் பலத்தைக் காட்டுவதில்லை, தேவையானால் ஆதிக்க சாதிக்கார்களைப் போட்டு மொத்து, மொத்து என்று மொத்துவதில்லை. 🙂

    நீதி கேட்டுப் போயும் அடிபட்டுச் சாகிறவர்கள், யார் தலித்துகள்/ஒடுக்கபப்ட்ட தமிழர்கள் தானே. இந்த லட்சணத்தில் வாய்க்கொரு தடவை, யாழ்ப்பாண வெள்ளாளர், யாழ்ப்பாண வெள்ளாளர் என்று புலம்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா. 🙂

    • You read Tiru Danial’s book “Panjamarkal” about the vellala cast pride.
      //யாழ். வெள்ளாளரைப் பற்றிய உங்களின் அறிவு, டொமினிக் ஜீவாவின் புத்தகத்துக்குள் அடக்கம். அந்தப் புத்தக நிகழ்வுகள் நடந்து 80 வருடங்களுக்கு மேலாகி விட்டன, அந்தப் புத்தகத்தை மூடி வைத்து விட்டு வெளியே வாருமையா//

    • கே டானியல் அவர்கள் ,‘பஞ்சமர்’ நாவலில் உயர்சாதிக்காரர்களான வேளாளர்களின் சாதித்திமிரும் அட்டூழியங்களும், ‘கோவிந்தன்’, ‘அடிமைகள்’ நாவல்களில் வேளாளக் குடும்பங்களின் அழிவையும் சிதைவையும், காட்டினார் .

      did u read this novels?

    • இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு—>தோழர் டானியல்

      [1]யாழ்ப்பாணத்தில் 1927-இல் பிறந்தவர் டானியல். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் இருந்தவர்.
      ஈழத்து பஞ்சம மக்களுக்காகத் தோழர் டானியல் தன் இலக்கிய இயக்கப் பணிகளை அர்ப்பணித்தவர்.

      [2]தமிழில் தலித் இலக்கியம் படைத்த சிறந்த நாவலாசிரியரான டானியல் எழுதிய நாவல்களில் முக்கியமானவை பஞ்சமர் (1972), கோவிந்தன் (1983), போராளிகள் காத்திருக்கின்றனர், அடிமைகள் (1984), கானல் (1986), தண்ணீர் ஆகியவையாகும்.

      [3]தமிழீழ எழுத்தாளர் டானியலின் நாவல்களில் ‘தலித்’ மக்களின் கடும் உழைப்பு, தியாக உணர்வு முதலிய நற்குணங்கள் வெளிப்படுகின்றன. 1972-இல் டானியல் எழுதிய முதல் நாவல் பஞ்சமர். இப்புதினம் குடியாட்சி உணர்வுடன் பஞ்சமர் சாதியைச் சேர்ந்தவர்களின் இயக்க அடிப்படையில் சாதி இழிவுகளுக்கு எதிராகத் திரண்டெழுந்து போராடத் தொடங்கிய வரலாற்றை விளக்குவதாகும்.

      [4]தமிழீழ எழுத்தாளரான கே.டானியல் அடிநிலை மக்கள் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் எழுத்தில் வழங்கும் முயற்சியில் தமிழ் மக்களிடையே அடக்கு முறையின் வடிவமாக இருக்கும் சாதிப்பிரச்சினைகளையும் பற்றி எழுதியுள்ளார்.

      viyasan said[lies]://யாழ். வெள்ளாளரைப் பற்றிய உங்களின் அறிவு, டொமினிக் ஜீவாவின் புத்தகத்துக்குள் அடக்கம். அந்தப் புத்தக நிகழ்வுகள் நடந்து 80 வருடங்களுக்கு மேலாகி விட்டன, அந்தப் புத்தகத்தை மூடி வைத்து விட்டு வெளியே வாருமையா! :)//

    • சொத்துடமையை தமதாக்கிக் கொண்டு ஆதிக்கம் மிகுந்தவர்களாகக் காணப் பட்ட வேளாளர் சாதியினர் தமக்குத் தேவையான அடிமைகளைத் தென் னாட்டிலிருந்து விலைக்கு வாங்கி தமது நிலங்களில் சிறுசிறு குடிசைகள் அமைத்துக் குடியற்றினர். அவர்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தமதாக்கிக் கொண்ட னர். பெண்ணைத் மணம் செய்து கொடுக்கிறபோது சீதனப் பொருட்களுடன் சேர்த்துத் தம் அடிமை களையும் தாரை வார்ப்பு செய்தனர். வேலைகளைச் செய்யத் தவறுமிடத்து பகிரங்கமாகக் கட்டிவைத்துத் தண்டிக்கவும் தமக்கெதிராக மக்கள் எழுகின்றபோது நிலங் களிலிருந்து வெளியேற்றவும் குடிசைகளுக்கு தீ மூட்டவும் செய்தனர். (ஓலையினால் அமைத்திருந்ததால் இலகுவாக தீ மூட்ட முடிந்தது. இதன் காரணமாகத் தான் தலித்துகள் கல் வீடு கட்டுவதற்கு வேளாளர் எதிராக இருந்தனர்)

      லெனின் மதிவானம்

        • யாழ்பாண சமூகவமைப்பானது இந்துமத செல்வாக்கிற்குட்பட்டதொன்று என்ற வகையில் சதுர்வர்ண வேறுபாட்டினை கொண்டுள்ள போதும், சதுர்வர்ண வேறுபாட்டின் ஆதிக்க சக்தியான பிராமணர்கள் இங்கு இல்லை. மாறாக யாழ்பாணத்தில் வாழ்ந்து வருகின்ற வேளாளர் என்ற சாதியினரே பொருளாதார ஆதிக்கமும் அதனூடான சமூக ஆதிக்கமும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இவ்விடத்தில் யாழ்பாண சமூகவமைப்பில் நிலவுகின்ற சாதிய அடக்கு முறையை இந்திய சாதிய அடக்கு முறையுடன் ஒப்பு நோக்குகின்ற போது யாழ்பாணத்தில் நிலவுகின்ற சாதிய அடக்கு முறையே கொடுமையானதாக காணப்படுகின்றது. யாழ்பாண வேளாளர் என்ற சாதியினர் பொருளாதார ஆதிக்கம் கொண்டவர்களாக காணப்படுகின்ற அதே சமயம் சதுர்வர்ண அடிப்படையில் அவர்கள் பிராமணர்களை விட கீழானவர்களாகவே கணிக்கப்படுகின்றனர். இந்த தாழ்வு மனப்பான்மையும் யாழ்பாண சமூகவமைப்பில் சாதியம் இறுக்கமடைவதற்கு முக்கிய காரணமாகும்.

          லெனின் மதிவானம்

        • வரலாற்றின் தேவைதான் பெரும் அரசியல், சமூக, பெருளாதார, கலாசார நிறுவனங்களை தோற்றுவிக்கின்றது எனக் கொண்டால் மலையகத்தின் வரலாற்றுத் தேவைதான் மலையக சமூக ஆய்வு மையத்தை தேற்றுவித்தது எனலாம். அதிகார பீடங்களை சேர்ந்தவர்களுக்கு சௌகாரியங்களை ஏற்படுத்தும் புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் அறிவுஜீகள் இங்கே குறைந்தபாடில்லை. இந்த பின்னணியில் ‘இனினொரு விதி செய்வோம் ‘ என்ற பாரதியின் நாகரிகத்தில்; கால் பதித்து – தம் கரங்களை உயர்த்தி கலகக் குரலை ஒலிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சமூக சக்திகள் சிலர் ஒடுக்குமுறையை, ஆதிக்கத்தை எதிர்த்து அம்பலப்படுத்துகின்ற சமூக செயற்பாடுகளில் தம்மை அர்பணித்துக் கொண்டார்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைவுற்றிருந்தாலும் சுதந்திர காற்றை சுவாசிக்க முற்பட்ட இவர்களின் தேற்றம்- இருப்பு உலகில் கம்பீரமாகவே இருந்துவந்து, இன்றும் தொடர்வதாக உள்ளது.

          லெனின் மதிவானம்

        • மலையக இலக்கியம் பிரமாண்டமானதோர் பாட்டாளி வர்க்கத்தினடியாக தோன்றியதாகும். மலையகத்தின் வாழ்நிலைகளும் உற்பத்தி முறைகளும் ஓர் உழைக்கும் மக்களின் உணர்வுகளை முதன்மைப்படுத்துவதாக அமைந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும். அதற்காக மலையக இலக்கியம் சமரசத்திற்கு அப்பால் பட்ட தொன்று என்பது கருதவேண்டியதில்லை. இங்கு அவ்விலக்கிய தொகுதியில் உழைக்கும் மக்களை நேசிக்கின்ற பண்பே முனைப்பு பெற்றுள்ளது என்பதையே இங்கு அவதானத்திற்குரியது. இந்த பின்னணியில் எழுந்த நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளும் பின்னர் வந்த இளஞ்செழியன் என்ற ஆளுமையும் இந்த சமூகவமைப்பின் தோற்றுவாயிகளாக மாத்திரமன்று அதனை தேற்றுவிப்பவர்களாகவும் இருந்தனர். மலையகத்தில் இயங்கிய இடதுசாரிகளும் இயக்கங்களும் அந்த மரபை இன்னாரு கட்டத்திற்கு வளர்த்து செல்ல முனைந்தனர். இவர்கள் உழைக்கும் தொழிலாளர்களையும் அவர்களுக்காக உழைக்க கூடிய அறிவுஜீவிகளையும் மையப்படுத்தியே தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

          லெனின் மதிவானம்

        • “……ஈழத்து இலக்கியத்துள் மறந்துவிடமுடியாத ஒரு பெயர் லெனின் மதிவாணம்!
          மனித நேயம், மானுடப் பண்பாடு என்பவற்றில் ஆழமான ஆய்வினைக் கொண்டுள்ள தோடு மக்க ளுக்காக ஏந்தியுள்ள ஆயுதமே எழுத்து ”

          லெனின் மதிவானம்

          • //“……ஈழத்து இலக்கியத்துள் மறந்துவிடமுடியாத ஒரு பெயர் லெனின் மதிவாணம்!…….//

            குமரன் அண்ணா,

            இது லெனின் மதிவானமே தன்னைப் பற்றிக் கூறியதா? 🙂

            • மனித நேயம், மானுடப் பண்பாடு என்பவற்றில் ஆழமான ஆய்வினைக் கொண்டுள்ள தோடு மக்க ளுக்காக ஏந்தியுள்ள ஆயுதமே எழுத்து ”
              லெனின் மதிவானமே

        • HI VYASAN,

          EVEN U DO NOT KNOW THE TAMIL PROGRESSIVE WRITER “LENIN MATHIVANAM” WHO WRITE FOR WORKING CLASS PEOPLE ,WHO WRITES AGAINST YOUR VELLAN CAST DOMINATING SYSTEM.

  56. ஈழத்தமிழர்கள் ஏன் சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து வர்க்கப் போராட்டத்தை தொடங்க முடியாது என்பதற்கு பெளத்தபிக்குகளினதும், சிங்கள பெளத்தத்தினதும் ஆளுமை, மகாவம்ச சிந்தனைகள், வரலாற்று பகைமை, இனவாதம், பொறாமை என்பவை மட்டுமல்ல, சிங்கள உழைக்கும் மக்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை, அரச உதவியுடன் அத்துமீறி ஆக்கிரமித்து வருவதுடன், விடுதலைப்புலிகளின் அழிவின் பின்னர், வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்களின் வாழ்வாதாரங்களையும் தமிழர்களிடமிருந்து கைப்பற்றி வருகிறார்கள் என்பவை காரணங்களாகும் என்று எப்படி எடுத்துரைத்தாலும், மார்க்சிய லெனினிய கொள்கையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதென அடம்பிடிப்பவர்கள் ‘Why Ethnicity Matters in Sri Lanka’ என்ற இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தாலாவது ஒரளவு புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

    -‘WHY ETHNICITY MATTERS IN SRI LANKA’-

    Any discussion on privilege needs to begin with a discussion on the nature of state and society: Sri Lanka is a country where the infamous politics of ‘bhumiputra’ (Sanskrit: son of the soil/land) may only (and conveniently) be claimed by the extreme Sinhala right, while it has in reality been widely mainstreamed and, importantly, invisibilized. Sinhalaness has indeed been abstracted to the extent that it has taken decades to come into discussion despite being so ubiquitous. Like other Asian nation-states, such as Malaysia or Burma, Sri Lanka has, by introducing discriminatory political and legal frameworks, created social realities which negatively affect minority populations while benefiting and uplifting the majority population (vis-à-vis minorities). Structural racism, just like structural sexism, heteronormativity, casteism, classism, etc., disadvantages one group to the benefit of another. Institutional racism against Black and Minority Ethnic (BME) groups in, for example, the UK increases the exclusion and peripheralization of BME while providing ample advantage and opportunities to white British, including white British anti-racists. The exclusion of Tamils more so than Muslims from certain employment and education sectors and institutions similarly provides more space, opportunities and mobilities for Sinhalese, no matter their gender, class, sexual, political et al. affiliation or orientation, to progress as individuals or as a social group. Privilege is ultimately a question of social, economic, and political access that some groups may have over others.

    Going back in history, the island state emerged as a bastion of Sinhala dominance and Tamil, Muslim et al. subordination with the flag change from British Empire to independent Ceylon, later Sri Lanka, in 1948. The post-colonial nation-building project was designed upon the activation of reactionary ethno linguistic and ethno religious political forces amongst the majority Sinhalese coupled with the marginalization of non-Sinhalese. Sri Lanka’s nation-building project is, however, not a tale of its past, dusting in historical archives and university lectures, but stretches right into our present. The social arrangements that disadvantage non-Sinhalese to the benefit of Sinhalese continue to exist and continue to be expanded, renegotiated and further normalized. Indeed, being Sinhalese has over decades been made the norm in the country while citizenship and belonging of non-Sinhalese has increasingly and predictably been contested, challenged and revoked. Just as whiteness is invisible in (post)colonial, globalized, capitalist world order, Sinhalaness is similarly invisible in the neo-colonial, globalized and capitalist order of Sri Lanka.

    Our piece deliberated specifically and exclusively on the question of race and ethnicity in the country – not gender, class, caste, sexuality, ablebodiedness, etc.. Although we consider them all to be crucial categories and identities that need separate and inter-sectional analysis, we came to agree that looking at Sri Lanka’s recent history, particularly its forms of racial violence, no question has been more urgent and polarizing than the question of race and ethnicity. Some of our critics have claimed we disregard existing nuances between groups, but as already stated in our interview, we do the opposite, we acknowledge the multiplicity of Sinhalese, Tamil and Muslim identities and experiences. These intra-group differences, however, don’t eliminate the existence of inter-group differences and inequalities as well as how state structures and societal structures relate and are built around identifying ethnic sameness and difference. They aren’t mutually exclusive but co-existing.

    The most commonly cited example to ‘debunk’ our claims to Sinhala privilege was the example of the lower caste/ rural/impoverished/Sinhalese/woman who, according to some, is able to defy our Sinhala privilege theory. It is, however, conveniently deemphasized in the argument that we never contested the existence of intra-ethnic inequalities and (dis)privileges centered around questions of caste, wealth, sexuality etc.. Our contestation is placed, and exclusively so, between the question of race and ethnicity in the country (!). Some Sinhalese may very well be disadvantaged to say, a hetero normative, upper caste, middle class, urban, professional Sinhalese couple living in, for example, Colombo. Their grievances and marginalization are real and not to be ignored. The question in our analysis however is, whether a lower caste/rural/impoverished/Tamil/woman is equally disadvantaged in regards to representation, welfare and respect than a Sinhalese woman who checks the same criteria? Those of us who aren’t drunk on denial and revisionism will probably agree with me when I say, THERE IS NO BALANCE IN HOW BOTH WOMEN OF ETHNIC DIFFERENCE ARE PLACED IN CONTEMPORARY SRI LANKA.

    A more concrete example of what non-Sinhalaness means, in other words what Sinhalaness means, is the case of Nethmi Lavanya Yogendra. The then 10-year-old Tamil girl achieved the second highest grade of Colombo District in her scholarship exam in 2007. Nethmi applied for admission to Vishaka Vidyalaya, a prestigious and traditional Sinhalese (Buddhist) girls school in Colombo. The school authorities initially accepted her application as she met all grade requirements and the girl’s parents paid the facility fees. Weeks later, Nethmi’s parents received, in unusual manner, a letter straight from the Sri Lankan Ministry of Education. The then Minister for Education, Susil Premajayanth, a Sinhalese, explained in the letter that Nethmi was refused admission to Vishaka Vidyalaya despite her excellent academic record in what he called ‘her own good’. The reason for her rejection: her Tamil ethnicity. The Minister made, unlike many others, no calms about his office’s ethnic discriminatory policies and declared that ‘her ethnicity would have caused her much worse problems’ in the school. Premajayanth’s confession is more honest than what we usually hear from government/state representatives no matter their ethnicity. His written words from 2007 stand particularly in contrast to the state’s post-war rhetoric which preaches post-ethnicity (‘there are no more minorities’) while living off ethnic chauvinism.

    Some apologists may argue now Nethmi may not have spoken Sinhalese or would have possibly felt estranged in a Sinhala Buddhist majority school. The explosive detail about Nethmi’s case however was that the young Tamil girl was educated throughout her life in Sinhalese and is, like her father, a Buddhist. The question of course arises whether there was potential political reasoning behind the father’s conversion to Buddhism and choice of Sinhalese as the medium of instruction of his child. Considering that many leading Sri Lankan educational institutional don’t offer Tamil medium instructions, and considering the larger anti-Tamil state structures in the country, it seems plausible to suggest that assimilation can be a means of invisibilizing ethnic difference and circumventing ethnic discrimination. This seems more common than talked about. Having personally encountered few ethnically mixed families (via the paternal side) who identified as Sinhalese yet carried Tamil names, I’ve seen cases of families altering their Tamil sounding surnames to Sinhalese sounding ones, e.g. from Dharmaratnam to Dharmaratne, from Amarasingham to Ameresinghe. This of course helped easing their life in the island and escape anti-Tamil policies and other forms of ethnic discrimination. It, however, equally is an acknowledgment to the existence of an admission to Sinhala privilege.

    For Nethmi it was never her possible lack of proficiency in Sinhalese or her cultural distance as a non-Buddhist that might have caused issues. It was nothing but her ethnicity, her blood, which posed the problem to the Sri Lankan state. Would this question ever have arisen to a Sinhalese girl who had similar grades as Nethmi and applied to the same school?
    Probably not. Nethmi’s lack of Sinhala privilege was articulated upon.

    You can very well be a Sinhalese who is poor, lower caste, female, queer and so and forth and yet benefit from the existing state framework, which is constructed upon alienation, disenfranchisement, criminalization, externalization, colonisation and erasure of Tamil, and today also Muslim, presence. Just as white people benefit, conscious or not, wanted or not, from the exclusion and differential treatment of non-white people in many Western societies, Sinhalese people benefit from the exclusion, differential treatment and contestation of place and belonging of Tamils and Muslims in the national framework. Whether you agree with it or not.

    Our translation of the Sri Lankan problem, i.e. a Sinhalese problem which becomes everyone’s problem thanks to majority dominance, is the non-acknowledgment of the existence of Sinhaleness and how it affects your life and our lives as non-Sinhalese. Denying ethnic privilege comes close to denying that race and ethnicity matter in the country. Clearly they do matter though as seen in the example of Nethmi. For there to be equality, justice and sound race relations, it is especially your responsibility as Sinhalese to see Sinhala privilege where it is unseen, to name it where it is unnamed and challenge it where it is unchallenged.

    All we ask that members of the Sinhalese majority think about the ways that social, political, and economic benefits can be co-extensive with ethnic identity in Sri Lanka, as well as in the diaspora. This doesn’t require that they accept everything or anything on our list. It does, however, require acknowledging that Sri Lanka’s social and economic arrangements, practices, and norms are skewed to the benefit of some groups over others, namely, the Sinhala majority.

    http://www.sangam.org

  57. பாதிக்கப்பட்டவர்களிடமும் அழிவுக்கும் தோல்விக்கும் ஆளானவர்களிடமும் வர்க்க ஒற்றுமை குறித்து போதனை செய்வது என்ன நியாயம்? அதனால் என்ன பலன் விளைந்துவிட போகிறது? பாதிப்பையும் அழிவையும் ஏற்படுத்திய மறு தரப்புக்கு அல்லவா வர்க்க ஒற்றுமை குறித்து அறிவுறுத்த வேண்டும்.

    • நன்றி சலனன். சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் பத்தி, பத்தியாக எழுதிப் புரிய வைக்க முடியாததை ஒரு சில வார்த்தைகளில் தெளிவு படுத்தி விட்டீர்கள்.

  58. Hello mannaru,

    The way viyasn is having pride over his cast is bad. At the same time your comments which are insulting a Tamil race is also bad.

    do you know MAO lost how many comrades in his class struggle? wait I tell u the details.

    Yes last month I only write the story of Rwanda genocide, struggle and freedom.

    //என்ன இருந்தாலும், 50,000 ஆண்டு வீர வரலாறு கொண்டவர்களில்லையா நாம்? இன்னும் ஒரு மூன்று நான்கு லட்சம் மக்களையாவது கொல்லக் கொடுத்தால் தானே அடங்கும்?

    ஆமாம், நீங்கள் எங்கே ரொரோண்டாவா, அவுஸ்திரேலியாவா?//

  59. Dear vinavu,MKEK,pj,

    In a country ,The class struggle or struggle for suppressed race both our not against “Social dynamics”.

    Due to political and historical reasons some times we can not integrate the working class of two races. Communist people should understand this.examples are

    [a] Seengala-Tamil Working class
    [b] Isral-palastinam working class

    [1]Is there any Noticeable amount of Sri-lankan people giving voice for the freedom of Tamil Eelam?

    [2]Is there any Noticeable amount tamil people speaking for the integration of working class of Tamil and Singala?

    [3] what is our experiance with EElam Tamilians so far. ?

    [4] Now the issue is a class issue or race issue? MKEK strategy for srilanka is only theoretical. Both of the races will not follow it.

    [5] Can u tell me and name the singalla people names who were raising voice and speaking against during 2009 EElam genocide.?

    [6] WHY ARE U TELLING THIS SOLUTION[INTEGRATION OF SINGALLA-tAMIL WORKING CLASS ] FOR THE FREEDOM OF eeLAM PEOPLE.?

    [7] WE COMMUNIST PEOPLE ONLY DISSOLVE THE “COMMUNIST INTERNATIONAL OF THIS WORLD”. Did u think what are the consequence of this action? yes the suppressed race and its working class now can not join together.Like capitalist people are having UNO, We people communist do not have the organization for even in 1950’s.

  60. குமரன் அண்ணா,

    லெனின் மதிவானம் மட்டும் தான் சகோதரனா, நான் சகோதரன் இல்லையா? 🙂

    டொமினிக் ஜீவா, கே.டானியல், லெனின் மதிவானம் எல்லோரும் கதாசிரியர்கள், சில உண்மையுடன் பெருமளவில் கற்பனையைக் கலந்து ‘பொழைப்பு’ நடத்துவது தான் கதாசிரியர்களின் வேலை. அதனால் அவர்களின் நாவல்களின் அடிப்படையில் வரலாற்றைக் கற்பது அல்லது நாவலகளில் கூறப்படும் வரலாற்று சம்பவங்களை வேறு வரலாற்று ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காது அப்படியே நம்புவது எல்லாம் அடிமுட்டாள் தனம்.

    இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால், தமிழ்நாட்டிலுள்ள தலித் தீவிரவாதிகளுக்கு சாதீயத்தை/சாதி வெறியர்களை பழிவாங்க வேண்டுமென்ற துடிப்பும் ஆவேசமும் உண்டு. ஆனால் அந்த ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் தமிழ்நாட்டு ஆதிக்க சாதிகளான தேவர்களிடம் அல்லது வன்னியர்களிடம் காட்ட முடியாது ஏனென்றால் அவர்கள் எண்ணிகையில் பலமானவர்கள் மட்டுமல்ல, அவர்களிலும் ஆவேசம் பிடித்த தீவிரவாதிகள் உண்டு, அதனால் ஓட்ட நறுக்கி விடுவார்கள். ஆனால் எப்படியாவது தமது ஆவேசத்தைத் தீர்க்க வேண்டும், தமது வீரத்தைக் காட்ட வேண்டும் என்ற ஆசையில், யாரை சாதிவெறியர்கள் என்று தாக்கினால், அடி விழாது என்று தெரியுமோ அவர்களை மட்டும் தாக்குவது, அவர்களைப் பற்றி எழுதுவதை, வசைபாடுவதை மட்டும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால் தான் எத்தனையோ ஆதிக்க சாதிகள் தமிழ்நாட்டில் இக்காலத்திலும் அட்டகாசம் பண்ணும் போது யாழ்ப்பாணத்தில் 1920 களில் நடந்தவற்றைப் பற்றி இன்னும் கதைகளும், நாவல்களும் எழுதுகிறார்கள் போல் தெரிகிறது. இதே காரணத்துக்ககத் தான் பார்ப்பனர்களைப் பற்றி மட்டும் சிலர் எழுதுகிறார்கள். ஏனென்றால் எந்தப்ப் பார்ப்பானோ அல்லது யாழ்.வெள்ளாளனோ அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஓடி வரமாட்டான் என்று அவர்களுக்குத் தெரியும். 🙂

    • //குமரன் அண்ணா,

      லெனின் மதிவானம் மட்டும் தான் சகோதரனா, நான் சகோதரன் இல்லையா? 🙂 //

      “குமரன் அண்ணா”……..
      am i refusing this phrase till now?

    • R u only working for EElam vellala cast freedom? If so pls stop your comments and shut down your system. See freedom should be for every one.

      During 2009 genocide in vanni and Mullai tevu, the vellala people are simple sitting ideal and reading “Devaram”, instead of giving and making political struggle to sri lankan gov from their place. Why?

  61. கேள்வி:

    தென்னாபிரிக்க விடுதலையின் பின்பு மண்டேலா இணக்க அரசியலைப்பற்றி பேசினார். மண்டேலா பேசிய இணக்க அரசியல் என்பது வெற்றிபெற்றவர் பேசிய இணக்க அரசியல். கறுப்பின மக்கள் ஆதிக்கத்திற்கு வந்த பின் வெள்ளையின மக்கள் செய்த அநீதிகளை மன்னிப்போம் ஆனால் மறக்க முடியாது எனச் சொல்லியதோடு நாம் இணக்கமாக வாழ்வதற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் வழியைக் கண்டு பிடிப்போம் ஆனால் நடந்தவற்றை மறக்க முடியாது எனச் சொல்கிறார்.

    பதில்:

    ஆனால் இலங்கையில் ஒருபோதுமே ஈழத்தமிழர்கள் பற்றிய புரிந்துணர்வு கொண்ட எந்த சிங்களத் தலைவரும் தோன்றவில்லை. இனியும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. கிளார்க்கைப் பொறுத்தவரை கறுப்பின மக்கள், போராட்டத்தின் காரணமாக உலக அரங்கில் அவரகள்; பெற்ற முக்கியத்துவத்தை அவர் ஏற்றுக்கொண்டார். இலங்கையில் உள்ள சிங்கள மக்களின் அரசியலில் அப்படி ஒருவர் தோன்ற இடமே இல்லை. எனவே சிங்கள மக்கள் மத்தியில் இருந்து ஒரு இணக்க அரசியல் பற்றிய சிந்தனையோ தமிழர்களை அரவணைக்க வேண்டும் என்ற பார்வையுள்ள தலைவர்களோ தலமைத்துவங்களோ தோன்றுவதற்கான யதார்த்தம் அங்கு சிறிதளவிலும் காணப்படவில்லை.

    (யாழ்ப்பாண பல்கலைக்கழக நவீன வரலாற்றுத்துறையின் முன்னாள் விரிவுரையாளர் மு.திருநாவுக்கரசு BBCக்கு குரல் வடிவில் வழங்கிய செவ்வி.)

    http://www.globaltamilnews.net

    • Hello viyasan,
      //இலங்கையில் ஒருபோதுமே ஈழத்தமிழர்கள் பற்றிய புரிந்துணர்வு கொண்ட எந்த சிங்களத் தலைவரும் தோன்றவில்லை. இனியும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. //

      It is true. MKEK,PJ,vinavu idea of working class merging is only theoretical. But they do not have any wrong intention about their idea.

      But think about you and the support u r expecting from Indian gov, USA gov….. Already these gov are spoiling the freedom struggle of EElam tamils. Now again u r going on the wrong path for your support. Do not u think it is not logical?

  62. தென்னாப்பிரிக்காவில் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்கள் எண்ணிக்கையில் பெரும்பாண்மையினர். வெள்ளையர்களோ எண்ணிக்கையில் சிறுபாண்மையினர். இலங்கையில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் தமிழர்கள் எண்ணிக்கையில் சிறுபாண்மையினர். இன அழிப்பை செய்யும் சிங்களர்கள் எண்ணிக்கையில் பெரும்பாண்மையினர். இது அடிப்படை வேறுபாடு. இதை புரிந்து கொள்ள வேண்டும்.

  63. யாழ்ப்பாணத்தின் உயர் சாதி வெள்ளாளர்களின் சாதி பாகுபாட்டுக்கும் சிங்களர்களும் அவர்களின் அரசும் இராணுவமும் மேற்கொள்ளும் இன ஒழிப்புக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு. எந்த வெள்ளாள சாதியை சேர்ந்தவனும் ஈழத்தின் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இந்த ஈழ மண்ணுக்கு நீங்கள் சொந்தமில்லை என்று சொல்லி (அப்படி சொல்லவும் முடியாது) அவர்களை லட்சக்கணக்கில் கொன்றதில்லை. அவர்களின் வீடுகளையும் காணிகளையும் ஆக்கிரமிக்கவில்லை. கணக்கு வழக்கில்லாமல் கற்பழிப்பில் ஈடுபட்டதில்லை. சொத்துப்பத்துக்களை கலவரம் செய்து சூறையாடவில்லை. லட்சக்கணக்கான தமிழர்களை புலம் பெயரச்செய்து நாடோடிகளாக்கியதில்லை. இன வெறியும் மத வெறியும் கொண்ட சிங்கள பாட்டாளி வர்க்கத்தினர் தான் ஆரம்பத்தில் இருந்தே இவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு இன்று வரை ஆதரவும் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
    இந்த பொதுவுடைமை பேசும் வினவு கும்பல் ஆரம்பத்தில் இருந்தே இன அழிப்புக்கு ஆளான தமிழர்களிடம் மட்டுமே வர்க்க ஒற்றுமை குறித்து போதனை செய்கிறது. இது தான் பார்ப்பன தன்மை வாய்ந்த செயல்பாடு என்பது. வர்க்க ஒற்றுமை என்பது ஒரு கை ஓசை அல்ல. நியாயமாக பார்த்தால் இன அழிப்பில் ஈடுபடும் சிங்கள பாட்டாளி வர்க்கத்திடமும் அவர்களின் தலைவர்களிடமும் தான் வர்க்க ஒற்றுமை குறித்து அறிவுறுத்த வேண்டும். ”சிங்கள பாட்டாளி வர்க்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் உங்களை இன அழிப்பு செய்தும் அதை ஆதரித்தும் இருக்கலாம். இப்போதும் செய்கிறார்கள். இனிமேலும் அவர்கள் செய்யக்கூடும். இருந்தாலும் நீங்கள் அவர்களோடு தான் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக வேண்டும். ஏனெனில் நீங்களும் பாட்டாளி வர்க்கத்தினர். யாழ்ப்பாண வெள்ளாளர்கள் உங்களிடம் காட்டிய சாதிப்பாகுபாட்டை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் சிங்கள பாட்டாளி வர்க்கம் உங்களை இன அழிப்பு செய்ததையும் செய்வதையும் அதற்கு ஆதரவு தருவதையும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள்”. இது தான் அறிவுரை. பார்ப்பனீய சிந்தனையும் அறிவுரையும் இப்படித்தான் இருக்கும். பாதிக்கப்பட்ட தரப்பிடமே தொடர்ந்து வர்க்க ஒற்றுமை குறித்து அறிவுறுத்துவது என்ன வகையான பொதுவுடமை சிந்தனையோ!.
    மேலும் யாழ்ப்பாண மேட்டுக்குடியினரின் சாதிப்பாகுபாட்டையும் சைவ வெறியையும் பற்றி விமர்சிப்பதற்கு இதுவா தருணம்? ஈழத்தில் வெறும் நான்கரை மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அழிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் நாற்பதாயிரம் பேர் இரண்டு மூன்று நாட்களில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டனர். இவ்வளவு நடந்த பின்னரும் சிங்கள அரசும் இராணுவமும் அவற்றின் இன வெறி செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் (புத்த சாமியார்களையும் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினரையும் உள்ளடக்கிய) சிங்கள மக்களும் சும்மாயில்லை. கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்து அங்கு தமிழர்களை ஒழித்தது போல் வட மாகாணத்திலும் செய்ய முயல்கிறார்கள். இது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி மற்றவர்களிடமும் கடும் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளது. சர்வதேச அளவில் சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்னும் குரல் பல மட்டங்களில் இருந்து ஓங்கி ஒலிக்கத்தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் அதற்கு ஆதரவாக இந்திய அளவிலும் உலகளவிலும் பாட்டாளி வர்க்கத்தினரை திரட்டும் முயற்சியில் ஈடுபடாமல் யாழ் வெள்ளாளர்களையும் அவர்களின் சாதி பாகுபாட்டையும் சைவ வெறியையும் திட்டுவதன் மூலம் இந்த வினவு கும்பல் என்ன சாதிக்கபோகிறது என தெரியவில்லை. முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரம் தமிழர்கள் செத்துக்கிடந்த போது பிரபாகரனை குறை சொல்லிக்கொண்டே தன் குடும்பத்தினருக்கு மந்திரி பதவி கேட்டு தில்லியில் பேரம் பேசிக்கொண்டிருந்த கருணாநிதியின் செயலை இது நினைவுபடுத்துகிறது.
    ஈழப்பிரச்சினைக்கு போராடுகிறோம் என காட்ட முயலும் பலர் அதற்கு தமிழக அரசை குறி வைத்து ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துகிறார்கள். ஜெயலலிதா தான் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவு கொள்கையை முடிவு செய்பவரா? அவரும் கருணாநிதியும் மத்திய அரசுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதி ஒரு புண்ணியமும் இல்லாமல் விரக்தியில் உட்கார்ந்து இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சிகளின் கண்டனத்துக்கும் மத்திய அரசின் கோபத்துக்கும் ஆளாக வேண்டும் என்னும் பயத்தில் பிடித்து உள்ளே வைத்தால் வெளி வந்த பின்னர் மாநில ஆட்சியாளரையும் போலீசையும் திட்டி கட்டுரை எழுதி பெரிய ஆட்களாக காட்டிக்கொள்வது. இது தான் ஈழ மக்களின் பிரச்சினையில் இந்த பொதுவுடமை கும்பலின் போராட்ட முறை.
    உங்கள் ஈழப்பிரச்சினை அனடோலியா கிரகத்தில் இருந்தா வந்தது என்று கேட்பது இவர்களின் அலட்சியத்தை காட்டுகிறது. இது மாதிரியான அலட்சியமும் வக்கிரமும் குதர்க்கமும் கொண்ட பதிவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எதற்கு தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    • Vinavu,PJ,MKEK Said://தமிழினவாதிகள் மேலே தொகுத்துச் சொல்லும் இதே நிலைமைகளின் காரணமாகத்தான், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தாமல் ஈழச் சிக்கலில் ஒரு அடி கூட முன்வைக்க முடியாது//

      Dear Salanan,

      Will u accept this point of Vinavu,PJ,MKEK ?
      To achieve this they suggest that…

      //அதைத் தூக்கி எறிந்து, சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க.- வினர் ஏற்கின்றனர்…//

      MKEK is speaking this based on their Marx-linen ideology. If it is only possible on theory tell them…
      Instead of this u r using abusing words like “Bramin mentality” why???

  64. Dear Salanan,

    [1]Yes It is true. MKEK,PJ,vinavu idea of working class merging is only theoretical. But they do not have any wrong intention[“hidden agenda”] about their idea.

    [2]But think about you, and the support u r expecting from Indian gov, USA gov…..

    [3]Already these gov are spoiling the freedom struggle of EElam tamils.

    Now again u r going on the wrong path for your support. Do not u think it is not logical?

    [4]See in India only these organizations are truly against the Muslim killer Modi in the past,present too.

    [5]You EELam people do not know which is your friend organization in Tamil Nadu and enemy.

    Salanan Said://இந்த பொதுவுடைமை பேசும் வினவு கும்பல் ஆரம்பத்தில் இருந்தே இன அழிப்புக்கு ஆளான தமிழர்களிடம் மட்டுமே வர்க்க ஒற்றுமை குறித்து போதனை செய்கிறது.//

  65. Dear Salanan,

    During the last EElam war, even at the beginning of 2008 things are conformed that the set back in our eelam struggle is unavoidable . LTTE and its leaders did a great mistake in the following way.

    [1] The LTTE should convert the conventional war into gorila war style as they did in 1980’s. By the way they can not loss the entire leader ship of LTTE.

    [2] They[ltte] believed the words of Tamil Nadu leaders like VICO,nedumaran during the end of the eelam war[may 2009]
    [vico and nedu said:New Indian gov will stop the war]

    [3]Ltte believed that USA gov will send a war ship to help the EElam tamil people. But really not…

    who’s mistakes are these?
    ————————————
    ARE the ORGANIZATIONS MKEK,PJ,vinavu MISGUIDING U AND LTTE DURING THE WAR ANY WAY?

    WITH OUT TRUTH IN YOUR HEART NOW U R BLAMING THESE ORG..

    WHY?
    ————————————-

    MKEK,PJ,vinavu said://பலம் வாய்ந்த சிங்கள பாசிச இராணுவத்தையும் பகைமையான பன்னாட்டு சக்திகளையும் எதிர்கொண்டிருந்த ஈழ விடுதலைப் போரில் பிரபாகரன் தலைமை இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பாரிய தவறிழைத்து விட்டது. இராணுவ ரீதியில் நீண்டகால மக்கள் யுத்தம் என்ற போர்த்தந்திரத் திட்டத்தை மேற்கொள்ளத் தவறியது. நீண்டகால மக்கள் யுத்தம் என்ற பாதையில் சாத்தியமான மக்கள் ஆதரவு முழுமையாகத் திரட்டப்பட வேண்டும். //

  66. Dear Salanan,

    [1]Differing in a concept with one person is totally different from abusing him with wrong words.[“பார்ப்பனீய சிந்தனை”]

    [2]If u really want to know ths “Parpana Thinking” then I can recommend some peoples like “Sho Ramaswamy,Hindu Ram,Subramanaya swamy”. They are by birth and thinking only Parpanarkal.

    [3] I hope that u will feel sorry for ur abusive words.

    [4] If u do a self-examination about the EElam war then u can think about a new path for support with out USA and Indian govs.

    [5] Take care… Best wishes for our new EElam struggle.

    Salanan Said://பார்ப்பனீய சிந்தனையும் அறிவுரையும் இப்படித்தான் இருக்கும்.//

    with love and affections with our eelam people,

    K.Senthil kumaran

  67. புலிகள் அரசியல் ரீதியில் முட்டாள்கள். ஆரம்பம் முதலே அறிவுஜீவிகளை கொலை செய்ததன் மூலம் பெரிய பழியை தேடிக்கொண்டார்கள். கடைசி சில ஆண்டுகளில் ராணுவ ரீதியாகவும் அவர்கள் பல தவறுகளை செய்தார்கள். அதுவும் மண் குதிரைகளையும் கூடவே இருந்து கழுத்தறுப்பவர்களையும் நம்பி பல முட்டாள்த்தனங்களை செய்தார்கள். அது பேரழிவில் முடிந்தது. ஆனால் இத்தனைக்கும் பிறகும் இன்னமும் ஈழத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். சாதாரண சிங்கள மக்கள் கண் திறந்து பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ராஜபக்ச கும்பல் போர்க்குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவது தான். இது ஒன்று தான் இருக்கக்கூடிய ஒரே வழி. இந்த வழி ஒன்று தான் நல்லெண்ணத்துக்கு சாத்தியமானாலும் சாத்தியமாகலாம். இதற்கு முயற்சி செய்வதை விட்டுவிட்டு யாழ்ப்பாண மேட்டுக்குடி வெள்ளாளர்களின் சாதி வெறியையும் சைவ வெறியையும் இந்த தருணத்தில் திட்டுவதால் ஈழ மக்களுக்கு என்ன பயன் விளைந்துவிட போகிறது?

    • Dear Salanan,

      See who is writing about the pride history of their vellal cast. u just go through Mr Viyasan blog and decide.

      Even in this Eelam struggle down fall he like to establish his cast pride as “Aanda Paramparai”.

      u just see this…
      http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_18.html ( Heading – யாழ்ப்பாண‌த்து வேளாள‌ர்க‌ள் ஆண்ட‌ ப‌ரம்ப‌ரையே ! )

      In this essay discussion most of the people are advising him for his wrong attitude. But he never change his mind set.

      SO THAT PEOPLE ARE WRITING ABOUT THE VELLA CAST PRIDE.

    • //சாதாரண சிங்கள மக்கள் கண் திறந்து பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ராஜபக்ச கும்பல் போர்க்குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவது தான். இது ஒன்று தான் இருக்கக்கூடிய ஒரே வழி. இந்த வழி ஒன்று தான் நல்லெண்ணத்துக்கு சாத்தியமானாலும் சாத்தியமாகலாம். //

      yes salanan, as u said, this is the first step for the next Eelam struggle.

  68. //இதற்கு முயற்சி செய்வதை விட்டுவிட்டு யாழ்ப்பாண மேட்டுக்குடி வெள்ளாளர்களின் சாதி வெறியையும் சைவ வெறியையும் இந்த தருணத்தில் திட்டுவதால் ஈழ மக்களுக்கு என்ன பயன் விளைந்துவிட போகிறது?//

    Dear Salanan,

    You need to ask this question only to viyasan. He is only having pride over his cast.

  69. போக்கத்‌த பயலுகள் தான் இலங்கையில் சாதி வெறி இருப்பதாக இல்லாததை சொல்லி பினாத்த்து கிறார்கள் அந்த காலம் மலை ஏறி போய் விட்டது யாவரும் அழிவுகளை சந்தித்த்தத்தினாலும் வெளிநாடுகளுக்கு குடி பெயர்த்தத்தின் மூலமும் பொருளாதாரத்தில் சமூகத்த்தில் பெரிய வேறு பாடு இல்லை தவிறவும் பெற்ற கல்வியும் உலக அளவில் பல சமூகங்களோடு வாழ்வதினால் பெற்ற அறிவும் சாதி வெறியை இல்லாமல் செய்து உள்ளது இப்ப சாதி வெறியை காட்ட யாரும் தாழ்ந்தோ உயந்தோ இல்லை என் பணம் என் வாழ்க்கை என்றே அவனவன் வாழ்கிறான்

  70. //போக்கத்‌த பயலுகள் தான் இலங்கையில் சாதி வெறி இருப்பதாக இல்லாததை சொல்லி பினாத்த்து கிறார்கள் அந்த காலம் மலை ஏறி போய் விட்டது//

    Pls mind your words. The discussion starts only after
    Mr. Vyasan is showing his vellalan cast pride.

    u just see this…
    http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_18.html ( Heading – யாழ்ப்பாண‌த்து வேளாள‌ர்க‌ள் ஆண்ட‌ ப‌ரம்ப‌ரையே ! )

    • குமரனண்ணா கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் அவர் வழக்கம் போல் அடி. நுனி தெரியாமல் உளறுகிறார் போல் தெரிகிறது. 🙂

      இதற்கு நான் ஏற்கனவே விளக்கமளித்துள்ளேன், அதாவது என்னுடைய வலைப்பதிவில் உள்ள பதிவுகள் பல, சில வலைப்பதிவாளர்களின் தவறான, அல்லது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் சிலருக்குள்ள ஐயப்பாடுகளை தெளிவு படுத்துவதற்காக இடப்பட்டவை. ஒரு வலைப்பதிவர் (அவரது பெயரைக் கூட மறந்து விட்டேன்), இலங்கையின் வரலாற்றைத் திரிக்கும் சில சிங்கள இனவாதிகளின் வலைப்பதிவை வாசித்து விட்டு வந்து, அதன் அடிப்படையில், ‘யாழ்ப்பாணத்து வேளாளர்கள் ஆண்ட பரம்பரையல்ல’, என்று ஒரு பதிவைப் போட்டார். அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கத் தான் ‘யாழ்ப்பாண‌த்து வேளாள‌ர்க‌ள் ஆண்ட‌ ப‌ரம்ப‌ரையே!’ என்ற பதிவை இட்டேன்.

      அதைத் தவிர சாதியில் எனக்கு பெரிய ஈடுபாடும் கிடையாது, சாதி சம்பந்தமான தாழ்வுமனப்பான்மையினால், என்னுடைய சாதியை உயர்த்திக் காட்ட நினைக்கும், தமிழ்நாட்டு நோய் என்னை இன்னும் தொற்றிக்கொள்ளவில்லை. பறையர்கள் (தமிழர்களின் ஆதிக்குடிகள்) அவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்றும் கூடத் தான் நான் ஒரு பதிவை இட்டுள்ளேன்.இரண்டு மாதங்களுக்கு முன்னால் குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசராவில், புலிக்கொடியை வீசி, தேவர் குலப்பெருமை பேசிய தேவர் வெறியர்களிடமே, அது தேவர்களின் கொடி அல்ல, தமிழர்களின் கொடி என்று துணிந்து சாதியை எதிர்த்துப் பேசியிருக்கிறேன் (ஆனால் அடி விழவில்லை). சாதி வெறியர்களை, எந்த சாதியாக இருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும் போது எதிர்த்திருக்கிறேன். எல்லா தமிழ்நாட்டுத் தமிழர்களின் இதயத்திலும் ஈழத்தமிழர்களுக்கென்றொரு soft corner இருக்கிறது, அதனால், இடக்கு முடக்காக கதைத்து விட்டும், அடி விழாமல் தப்பித்துக் கொள்ளலாம். 🙂

  71. இன்றைக்கு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட சாதியினர் கூட தங்களை ஆண்ட பரம்பரையினர் என்று தான் கூறிக்கொள்கிறார்கள். இது ஆரம்பம் முதலே ஒரு பழக்கமாக ஆகி வந்துள்ளது. யாழ்ப்பாணத்து வேளாளர்கள் செய்வதில் என்ன அதிசயம் இருக்கிறது?

    • Dear Salanan,

      [1]So With out the vellala cast pride ,U people can not be integrated? Right?

      [2]Taking with u people like Viyasan,prema,and salanan is wast of my time.

      [3] Till LTTE was alive ,I support the EElam people with out any precondition just because of LTTE’s correct stand on cast issues. But When u people are thinking about ur vellala cast pride , I need to reconsider my support for Tamil Eelam.

      [4] Even in a future EElam, if the vellala people are only dominating what is the use of getting it for my working class people?

      [5]In LTTE army, most of the solders are not belonging to jafna-vellala cast.They are mostly from Vanni,Mullai tevu and East part of srilanka.

      [6] During the Eelam war at 2009 u people are simply sitting and sinking “Devaram” with out giving any political presser to Srilankan gov from jafna.

      [7]u people can not expect any more replay from me.Bye.Good bye.

      Salanan Said://யாழ்ப்பாணத்து வேளாளர்கள் செய்வதில் என்ன அதிசயம் இருக்கிறது?//

  72. From யமுனா ராஜேந்திரன்-uyirmmai.com

    விடுதலைப் புலிகள் அமைப்பு என்கிற போது, தலைமை மற்றும் கீழ்மட்ட அணிகள் இரண்டும் இணைந்ததாகவே அமைகிறது. உள்நாட்டுப்போரின் காரணத்தினால், பொருளாதாரரீதியில் வளம் கொண்டவர்கள் பெரும்பாலுமானோர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்கிறார்கள்.

    “இயல்பாகவே அவர்கள் வெள்ளாளர்களாக இருக்கிறார்கள்”.

    நாட்டில் தங்கிவிட்டவர்களில் பெரும்பாலுமுள்ளவர்களில் கணிசமானோர் பஞ்சமர் அல்லது தலித்தியர்களாகவே இருக்கிறார்கள். மரபான யாழ்ப்பாண சமூகத்தில் 18 சதவீதமான பஞ்சமர்கள்தான் அதிகமும் விடுதலைப் புலிகளின் அமைப்பில் போராளிகளாகச் சேர்கிறார்கள். விடுதலைப் புலிகளின் நோக்கம் என்பது தமிழ் தேசிய ஒற்றுமையாக இருக்கிறது. சாதி ஒதுக்கத்தை அவர்கள் தடைசெய்கிறார்கள். சமவேளையில் தமது அமைப்பின் பெரும்பாலுமான போராளிகள் தலித்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பதை விரும்புவதும் இல்லை. இவ்வகையிலான குறிப்பிட்டுக் காட்டல் யாழ் பல்கலைக்கழக ஆய்வு அமர்வொன்றில் யத்தனிக்கப்பட்டபோது விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான மாணவர்கள் அந்த நிலைப்பாட்டை திரும்பப் பெறச் செய்தார்கள் .

  73. From யமுனா ராஜேந்திரன்-uyirmmai.com

    தொண்ணூறுகளிலிருந்து 2009 மே வரையிலுமான இரண்டு தசாப்தங்கள் விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைமையாக அல்லது வெள்ளாளர்களின் அல்லது கரையார்களின் தலைமையாக இருந்தது என்பதற்கான புள்ளிவிரங்களோ சான்றுகளோ இல்லை. அவ்வாறே இருந்தாலும் அவர்கள் விடுதலைப் புலிப்போராளிகளை சாதியரீதியில் ஒடுக்கினார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை. சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் தடைசெய்து அதனைக் குற்றத்தன்மை வாய்ந்ததாக ஆக்கியதன் பின், அவர்கள் திட்டமிட்டு தலித்தியர்கள் மீதான வெள்ளாளர்களின் ஒடுக்குமுறைக்குத் துணைபோனார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை.

  74. From யமுனா ராஜேந்திரன்-uyirmmai.com

    மாவீரர்களின் கல்லறை அமைக்கப்பட்ட விதம். அனைவருக்கும் ஒரே மாதிரியான நினைவு மண்டபங்கள்தான் அமைக்கப்பட்டன. சாதிய அடையாளங்கள் அங்கு துப்புரவாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மத அடையாளங்களும் அங்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்து மதம் இறந்தவர்களை எரிக்கச் சொல்கிறது. விடுதலைப் புலிகள் போராளிகளைப் புதைத்திருக்கிறார்கள். இவ்வாறாக விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சாதிய அமைப்பு என்று சொல்வதற்கோ, அது சாதியத்தைக் கடைப்பிடித்த அமைப்பு என்று சொல்வதற்கோ, அது உருவாக்க விரும்பிய அமைப்பு – அது சர்வாதிகார அமைப்பே ஆயினும் – அது சாதிய அமைப்பு என்று சொல்வதற்கான எந்தவிதமான சான்றுகளும் இல்லை.

  75. From யமுனா ராஜேந்திரன்-uyirmmai.com

    விடுதலைப் புலிகளின் சாதிய ஒதுக்குதலின் மீதான தடையால் வெளிப்படையாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாத நிலை வெள்ளாளர்களுக்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளிடம் இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது அவர்கள் திட்டவட்டமாக பஞ்சமர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறார்கள். நிலங்கள் தொடர்பான சில தகராறுகள் தங்களிடம் வந்தபோது, தலித்துகளுக்கு அனுசரணையாகவே புலிகள் செயல்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டின் இடப்பெயர்வு காரணமாக கறாரான சாதிஒதுக்குதலையும் தீண்டாமையையும் பஞ்சமர்களின் மீது சுமத்தமுடியாத சூழலுக்குப் பிற சாதியினர் தள்ளப்பட்டார்கள்

  76. From யமுனா ராஜேந்திரன்-uyirmmai.com

    நலவாழ்வு முகாம்கள் (welfare camps) என அமைக்கப்பட்ட இடங்களிலேயே தலித்துகள் தங்கமுடிந்தது. வெள்ளாளர்கள் இத்தகைய சந்தர்ப்பங்களிலும் தீண்டாமை முறைகளைக் கடைப்பிடிக்க முயன்றனர். கோயிலில் நுழையத் தடை, பொதுக் கிணற்றில் நீரெடுக்கத் தடை என்பனவற்றை அச்சூழலிலும் தலித் மக்கள் எதிர்கொள்ளவே நேர்ந்தது. இத்தகைய சூழலில் புலிகளிடம் இந்நிலைமை முறையிடப்பட்டபோது பஞ்சமர்களுக்கு ஆதரவாகவே விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலுமான வெள்ளாளர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துவிட்டதால், யாழ்ப்பாணத்திலுள்ள நிலங்களை தலித்மக்கள் வாங்குவதற்கான சூழலும் கூடவே தோன்றியது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  77. விடுதலைப் புலிகளின் சாதி ஒழிப்பு :

    Till Tigers are there they suppress the cast system.
    Now There is no Tigers in Eelam.
    So the Cast system is switched on by jafna-vellala people.
    People in Tamil Nadu should aware of there people.

  78. -மினர்வா-keetru.com

    நான்காம் கட்டப்போரில் புலிகள் இயக்கம் முற்று முழுதாக தோற்றபின்பு, ஈழ மக்களின் சம உரிமைகளுக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத – இன்றும் புலி எதிர்ப்பு அரசியல் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ஷோபா சக்தி இவர்களின் சாதி பின்புலத்தைப் பார்த்தோமானால் எல்லோரும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள்.

  79. //விடுதலைப் புலிகளின் நோக்கம் என்பது தமிழ் தேசிய ஒற்றுமையாக இருக்கிறது. சாதி ஒதுக்கத்தை அவர்கள் தடைசெய்கிறார்கள்.//

    விடுதலைப்புலிகளின் நோக்கம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் அனைவரின் நோக்கமுமே தமிழ் தேசிய ஒற்றுமை தான். ஈழத்தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிளவை ஊதிப்பெருக்கி, ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவர்களின் பின்னணியில் ராஜபக்ச அரசின் தமிழின எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு ஒதுக்கிய பணம் வேலை செய்வதாக நம்புகிறோம். 1920களிலேயே, அதாவது மோசமான சாதிப்பிரச்சனை இருந்த காலத்திலேயே, ஈழத்திலுள்ள தாழ்த்தப்பட்ட தமிழர்கள், தமிழின ஒற்றுமையின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, நாங்கள் பிளவுபட்டால், சிங்கள தேசியம் எம்மை வழுங்கி விடும் என்பதையுணர்ந்து, தமிழ்த்தேசியத்தை அரவணைத்து, தமிழரசுக்கட்சியை ஆதரித்தார்கள். அதாவது ஈழத்தில் தமிழ்த்தேசியம் சாதி வேறுபாடுகளை மறந்து தமிழர்களை ஒன்றுபட வைத்திருக்கிறது. அதனால், அன்று போல் சாதி வேறுபாடுகள் இல்லாத சூழலில் எதற்காக, சாதி பேசி எம்மை பிளவு படுத்த வேண்டும். அழிந்து வரும் சாதிப்பாகுபாடுகள், அடுத்த தலைமுறை ஈழத்தமிழர்களிடம் இல்லாமலே போய் விடும். இதற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் அருகி வரும் அகமண முறையே சாட்சியாகும்.

    • Yes,Yes I strongly believe that person like Mr.Viyasan is having two faces.

      [1] First face is his real face that is shown in his blog.[using this face he is getting money from “EElam Killer Raj patchi” for improving the cast sentiment in Jafna.
      u just see this…
      http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_18.html ( Heading – யாழ்ப்பாண‌த்து வேளாள‌ர்க‌ள் ஆண்ட‌ ப‌ரம்ப‌ரையே ! )

      [2] Using his second face, he [viyasan] is doing discussion here.

      //விடுதலைப்புலிகளின் நோக்கம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் அனைவரின் நோக்கமுமே தமிழ் தேசிய ஒற்றுமை தான். ஈழத்தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிளவை ஊதிப்பெருக்கி, ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவர்களின் பின்னணியில் ராஜபக்ச அரசின் தமிழின எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு ஒதுக்கிய பணம் வேலை செய்வதாக நம்புகிறோம். //

  80. Till Tigers were alive in EElam, the “cast based Foxes” are simple sleeping by rolling their tails.

    Now the Foxes are widening their tails and spreading the cast smell in and around the jafna , Tamil Nadu, and word.

  81. இனத்திற்காக தற்கொலை. அடக்கியொடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களின் பிரச்சனை.

    இந்த இரண்டுமே தமது முகப்பூச்சை கலைத்து வெகுகாலம் ஆகிவிட்டதே!.

    சச்சின் இனி கிறிகெட் விளையாட மாட்டார் என்றால் ஒரு கிறிகெட் ரசிகன் தற்கொலை செய்து கொள்ளுகிறான். இன்னொரு சினிமா ரசிகன் குறிப்பிட்ட காலத்தில் படம் காலதாமத படுவதற்காக தற்கொலை செய்து கொள்கிறான்.

    இன்னொருத்தி உலகத்தில் நடக்காத துன்பம் ஈழத்தில் நடந்ததாக எண்ணி தன்னைதானே தீ மூட்டிக் கொள்ளுகிறாள்.

    புலிகளின் தற்கொலையில் உள்ள தார்ப்பரியமோ தம்பி-தலைவர் மீது சத்தியம் செய்து வந்தவர்கள் அவர் கட்டளையை நிறவேற்றாவிட்டால் உயிருடன் திரும்பி போக முடியாது என்பதே!

    சர்வதேச தொழிலாளவர்க்கம் ஓய்ந்திருந்த நிலையில் குட்டி முதாலித்துவ இயக்கம் உலகத்தில் கோல்லோச்சியது. அதில் புலிகளும் ஒன்று. இது தனது சொந்த இனத்திற்கு மேலதிகமாக துன்பம் விளைவித்தது அல்லாமல் வேறு ஒன்றுமில்லை.

    உதாரணமாக இரண்டை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.

    1986 இருந்து மாற்று இயக்கங்களை அழிக்க முற்பட்டது.இதில் தமது சொந்த இனத்தையே “தீ” மூட்டி கொளுத்தினார்கள்.

    இரண்டாவது. முப்பதுயாயிரம் முஸ்லீம் குடும்பங்களை வடபகுதியில் இருந்து ஒருசில மணிநேரங்களில் துரத்திவிட்டு இலங்கை பூரா அலையவிட்டார்கள்.

    அடுத்து சுயநிர்ணய உரிமை.

    முதாலித்துவ உலகத்தில் இனங்கள் தமது உரிமைகளை பேணி பாதுகாக்க முடிமா? இது சுரண்டல் உலகமல்லவா?

    லெனின் சொல்லிவிட்டார் என்பதற்காக நாம் புத்கபூச்சி தாண்டவம் ஆடலாமா?

    ஆகக்குறைந்தது 1924 பிறகு எந்த இனம் தமது கெளரவத்தை நிலைநாட்டி உள்ளது. அப்படி ஒன்றும் என்கண்ணுக்கு புலப்பட வில்லை. கிழக்கு தீமோர் சைப்பிரஸ் கொசவோ எல்லாம் ஏகாதிபத்தி நலன்களில் பிறப்பெடுத்தவையல்லவா?

    இங்கு நான் முன்மொழிவது என்வென்றால் மதத்தின் பெயரிலேயோ இனத்தின் பெயரிலேயோ வர்க்கப் போராட்டத்திற்கு சாட்சிக்கு இழுக்காதீர்கள் என்பதே!

    வர்க்கப் போராட்டம் தன் வீச்சிலேயே தனது இலக்கை அடையும் அதற்கு சப்பைக்கட்டு அவசியம் தேவை இல்லாதது.

Leave a Reply to Mannaru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க