privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஆம்வே தலைவர் கைது – நல்லதா, கெட்டதா ?

ஆம்வே தலைவர் கைது – நல்லதா, கெட்டதா ?

-

ம்வே இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வில்லியம் எஸ். பிங்க்னே மூன்று வெவ்வேறு வழக்குகளில், ஆந்திர மாநில காவல்துறையால், கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெறிமுறைகளை மீறிய, பணச் சுழற்சி திட்டங்களை செயல்படுத்துவதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், ஹரியானா குர்கானில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

ஆம்வே இந்தியா தலைவர் வில்லியம் பிங்கியும், மேலாண்மை இயக்குநர் அனுஷ் புத்ராஜாவும் கைது செய்யப்பட்டனர்.
ஆம்வே இந்தியா தலைவர் வில்லியம் பிங்கியும், மேலாண்மை இயக்குநர் அனுஷ் புத்ராஜாவும் கைது செய்யப்பட்டனர் – படம் நன்றி: தி இந்து

உலகெங்கிலும் பல நாடுகளில் தங்களது திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி பெறலாம் என்றும் வளமான வாழ்வைப் பெறலாம் என்றும் கூறி மக்களை தங்கள் வலையில் விழ வைத்து ஏமாற்றும் பொன்சி என்ற பிரமிட் சந்தைப்படுத்தும் திட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலும், பரி​சு‌ச் சீ‌ட்டு ம‌ற்​று‌ம் பண சுழ‌ற்சி தி‌ட்​ட‌ங்​க‌ள் ​த‌டை (PCMCS)​ ச‌ட்​ட‌த்​தின் மூலம் ஏமாற்று திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து இதே பிரமிடை வேறு பெயர்களில், பொருளில் வைத்துக் கொண்டு உலகெங்கும் மோசடியை தொடரவே செய்கின்றனர். தோசையின் பெயர்கள் மாறுபட்டாலும் மாவு என்னவோ அதே ஊசிப்போன பழைய மாவுதான்.

PCMCS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடப்பா சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த வில்லியம் பிங்க்னியை ஜாமினில் விடுதலை செய்ய கர்நூல் நீதிமன்றம் மறுத்து விட்டது. அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் ஆந்திர போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதற்கிடையில் மற்றொரு நிதிமுறைகேடு வழக்கில் கம்மம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் உத்தரவைப்பெற்று கடப்பா சிறையிலிருந்த வில்லியம் பிங்க்னியை, ஆந்திர – தற்போது தெலுங்கானா – கம்மம் போலீசார் தங்களது காவலில் எடுத்துக் கொண்டனர்.

வழக்கை விசாரித்த கம்மம் நீதிமன்றம் அவரை வராங்கல் மத்திய சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து வராங்கலில் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு நிதிமுறைகேடு வழக்கில் வராங்கல் போலீசார் தங்களது காவலில் எடுத்துகொண்டுள்ளனர். விதிமீறல்கள் தொடர்பாக அவர் மீது ஆந்திராவில் மட்டும் 9 வழக்குகள் இருப்பதாக, போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆம்வேயால் அதிகம் ஏமாற்றப்பட்ட மக்கள் மற்ற மாநிலங்களை விட ஆந்திராவில் இருப்பது தெரிகிறது.

இக்கைது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆம்வே நிறுவனம், இந்தியா முழுவதிலும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், தாங்கள் மத்திய, மாநில சட்டங்களை முறையாக பின்பற்றி வருகிறோம், கைது குறித்து தங்கள் நிறுவனத்துக்கு எந்த முன் தகவலும் கொடுக்கவில்லை, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றது, தங்களது தொழில் குறித்து இது தவறான கருத்தை பரப்புகிறது என்றெல்லாம் அடுக்கியுள்ளது.

நேரடி விற்பனை தொழில் துறைக்காக சட்ட ரீதியான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் நேரடி விற்பனை சங்கிலி தொடர் திட்டங்கள் பொன்சி – பிரமிட் திட்டங்களாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன; சட்டரீதியான கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதுடன் PCMCS சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துவதாகவும் ஆம்வே அதில் கூறியுள்ளது.

இந்நிறுவனத்தின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழும் போதெல்லாம், நேரடி விற்பனை திட்டங்கள் பிரமிட்-பொன்சி திட்டங்களாக தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக இவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் முதலைகளின் கண்ணீரைத்தான், முதலாளிகளின் ‘துயரைத்தானே’ இந்த அரசு தேசிய சோகமாக கருதி நடவடிக்கை எடுக்கிறது.

மேலும் மயிர்பிளக்கும் சிக்கலான வழிகாட்டும் நெறிமுறைகளை காட்டி பொருட்களை நேரடி விற்பனை செய்வதே தங்களது செயல்முறை என்றும் அதன் மூலமே விற்பனை சங்கிலியின் உறுப்பினர்களுக்கு கமிஷன் வழங்குவதாக கூறுகிறது ஆம்வே. நதிகள் வேறானலும் சேருமிடம் கடல் போல இவர்கள் சங்கிலி தொடர் கமிஷனுக்கு புதிய மோசடி விளக்கத்தை தருகிறார்கள்.

ஆனால், நடைமுறையில் விற்பனை மட்டுமே கமிஷனை பெற்று தராது. உறுப்பினர்கள் தங்களுக்கு கீழே படிநிலையில் உறுப்பினர்களை சேர்த்தால் மட்டுமே கமிஷன் பெற முடியும். மேலும், புதிய உறுப்பினரை ஈர்ப்பதற்கு மற்ற பிரமிட் திட்டங்களைப் போலவே விரைவாக எளியமுறையில் அதிக வருவாயை ஈட்டமுடியும் என்று ஆசை காட்டியே சேர்க்கின்றனர். தனக்கு கீழே அதிக உறுப்பினர்களை சேர்ப்பதையே கடின உழைப்பு என்கின்றனர். இந்த கடின உழைப்பு மற்றவரிடம் ஆம்வேயில் விற்பனை ஏஜெண்டாக சேர்ந்தால் கோடிசுரவராக மாறலாம் என்ற மோசடி மாயையை உருவாக்குவதையே செய்கிறது. தரகர்களின் உழைப்பு என்பது எப்போதும் இப்படித்தான்.

amway scam 1நடைமுறையிலிருக்கும் சந்தைக்கு மாற்றாக “முற்போக்கானதாக” நேரடி விற்பனை திட்டத்தை ஆம்வே போன்ற நிறுவனங்கள் சொல்லிக் கொண்டாலும், தங்களது நேரடி விற்பனை பிரமிட் படிநிலைகளில் பலருக்கும் கமிசன் பிரித்து கொடுக்கப்படுவதற்கும் வெளிச்சந்தையில் பல இடைத்தரகர்களை கடந்து நுகர்வோரை வந்தடைவதற்கும் பாரிய வேறுபாடில்லை. மட்டுமின்றி விற்பனை சங்கிலியின் மூலம் தமது விலை உயர்ந்த பொருட்களை எந்த வித விளம்பர செலவும் இன்றி விற்பனை செய்து கொள்கிறது இந்நிறுவனம்.

1998 முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆம்வே 100 மில்லியன் டாலர்கள் (ரூபாய் 600 கோடி) வரையிலான முதலீட்டை செய்துள்ளது. ஆம்வேயின் 2012ம் வருடத்தின் விற்பனை 2500 கோடியாகும்.

ஆம்வே போன்ற பல்லடுக்கு விற்பனை சங்கிலியில் சுமார் 90%க்கும் மேற்பட்டோர் தோல்வியை சந்திப்பதாகவும் சில வருடங்களிலேயே திட்டத்தை விட்டு வெளியேறிவிடுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக இதன் படி 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் 90 லட்சம் பேர் இந்நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு தங்களது உழைப்பையும், பணத்தையும் இழந்துள்ளார்கள்.

ஒரு அமெரிக்கர், அதுவும் பல கோடிகள் முதலீடு செய்திருக்கும் ஒரு கார்ப்பரேட் முதலாளி கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த நீதிமன்றங்கள், சட்டங்கள் குறித்த பிரமையை ஏற்படுத்தலாம். நரேந்திர மோடி பதவிக்கு வந்தவுடன் அதிகார அமைப்பு, நீதிமன்றங்கள் மற்றும் சட்டங்கள் முறையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதை இக்கைது நடவடிக்கைகள் காட்டுவதாகவும் சிலர் நினைக்கலாம். பாதுகாப்புத் துறையிலேயே முழுமையான அன்னிய முதலீட்டை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் மோடி அரசு, ஆம்வே எனும் அமெரிக்க நிறுவனத்தை மட்டும் தடை செய்யும் என்று நினைப்பது மடமை. மேலும் இக்கைது முழுக்கவும் நீதிமன்றங்களால் செய்யப்பட்டனவே அன்றி இதற்கும் மோடியின் உதாருக்கும் ஒரு தொடர்புமில்லை.

எனவே இக்கைது நடவடிக்கைகளால் யார் பயனடையப் போகிறார்கள்? பாதிக்கப்பட்டோருக்கு எவ்வகையான நிவாரணத்தை இக்கைது நடவடிக்கை வழங்கும்?

இப்போது கைது நடவைக்கைகளை மேற்கொண்டாலும், அதிகார வர்க்கம் 1998-ல் நேரடி விற்பனை நிறுவனங்களுக்கு அனுமதியளித்த போது, ஆம்வே போன்ற நிறுவனங்கள் நேரடி விற்பனை என்ற முகமுடியுடன் வரும் பிரமிட் திட்ட நிறுவனங்கள் என்று அறிந்தே தான் அனுமதித்திருக்கின்றனர்.

வில்லியம் பிங்க்னி கைது இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவை பாதிக்கும் என்று இந்திய தரகு முதலாளிகள் சங்கமான ஃபிக்கி தெரிவித்துள்ளது. டெல்லியிலுள்ள அமெரிக்க சேம்பர்ஸ் (AMCHAM) அமைப்பும் இக்கைது நடவடிக்கை முதலீட்டு சூழலை சீர்குலைக்கும் என்று எச்சரித்துள்ளது.

மேலும், இக்கைது நடவடிக்கைக்கு க‌ண்​ட​ன‌த்தை தெரி​வி‌த்​‌து‌ள்​ள‌ ‌கேரள     வ‌ர்‌த்​தக ச‌பை ​(KCCI)​ தனது அறி‌க்​‌கை​யி‌ல்,​​ “காலாவதியான 1978ஆ‌ம் ஆ‌ண்​டி‌ன் பரி​சு‌ச் சீ‌ட்டு ம‌ற்​று‌ம் பண சுழ‌ற்சி தி‌ட்​ட‌ங்​க‌ள் ​(த‌டை)​ ச‌ட்​ட‌த்​தி‌ல் ம‌த்​திய அரசு திரு‌த்​த‌ம் ‌கொ‌ண்​டு​வர ‌வே‌ண்​டு‌ம் என்றும் ​ ‌நேரடி வி‌ற்​ப​‌னை​யி‌ல் நிறுவனங்களுக்கு இ‌ந்​த‌ச் ச‌ட்​ட‌த்​தா‌ல் ஏ‌ற்​ப​டு‌ம் பிர‌ச்​‌னை​க‌ளை ஆ‌ய்வு ‌செ‌ய்‌து,​​ ‌தொட‌ர்‌ந்‌து ‌தொழி​லி‌ல் ஈடு​ப​டு​வ​த‌ற்​கான உக‌ந்த சூழ‌லை ஏ‌ற்​ப​டு‌த்த ‌வே‌ண்​டு‌ம் என்றும் ‌தெரி​வி‌த்து‌ள்​ள‌து.​ இ‌ந்​தி​யா​வி‌ல் ‌நேரடி வி‌ற்ப‌னை வ‌ர்‌த்​த​கம் ரூ.7,160 ‌கோடி அள​வி‌ற்கு வள‌ர்ச்சி ‌பெ‌ற்​று‌ள்ளதாகவும், உக‌ந்த ச‌ட்ட ரீதி​யிலான ‌தொழி‌ல் சூழ‌லை ஏ‌ற்​ப​டு‌த்​தி‌க் ‌கொடு‌த்​தா‌ல்,​​ 2020-ம் ஆ‌ண்​டு‌க்​கு‌ள்,​​ ‌நேரடி வி‌ற்​ப‌னை வ‌ர்‌த்​த​க‌ம் ரூ.35,000 ‌கோடி‌யை எ‌ட்​டு‌ம்” எ‌ன்றும்‌ தெரி​வி‌த்து‌ள்​ள‌து.

அதாவது இக்கைதை எதிர்த்தும், ஆம்வேக்கு ஆதரவாகவும் சகல முதலாளித்துவ சங்கங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. ஆம்வே மீதான குற்றச்சாட்டு கிரிமினல் குற்றம் அல்ல என்றும், அது வெறுமனே நுகர்வோருக்கும், கம்பெனிக்கும் இடையிலான பிரச்சனை என்றும் அதற்கு கிரிமினல் குற்றவாளியைப் போல முன்னறிவிப்பின்றி கைது செய்ய தேவையில்லை என்றும் அவை தெரிவிக்கின்றன.

amway scam 2இதற்கு முன்பே ஆந்திர நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஆம்வே மீதான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால் இந்நிறுவனம் எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. இதே போல நிதிமுறைகேட்டுக் குற்றச்சாட்டின் கீழ் சென்ற ஆண்டு முன்பு கேரள காவல்துறையினரால் வில்லியம் பிங்க்னே கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் இருக்கும் போது பிணையில் விட்டிருக்கிறது கேரள நீதிமன்றம்.

மேலும், போபால் படுகொலையின் கொலைகாரன் ஆண்டர்சனையே பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு விமானமேற்றி அனுப்பி வைத்த பெருமையை உடைய நம் நாட்டில் தற்போதைய வழக்கிலும் கூட பிங்க்னே விரைவில் வெளியே வருவார். அடுத்த ஆம்வே ஆண்டு கூட்டத்தில் திரும்பவும் ஆவி எழுப்பும் சடங்குளையும், ஆம்வேயால் முன்னேறிய சாட்சிகளையும் காட்டுவார்.

ஆனால், இக்கைதின் மூலம் ஆம்வே நிறுவனம் பல்வேறு முதலாளிகளுக்கு நல்ல விளைவுகளையே கொண்டு வரப்போகிறது. தற்போது ஆம்வே மட்டுமின்றி அனைத்து முதலாளிகளும் பரி​சு‌ச் சீ‌ட்டு ம‌ற்று‌ம் பண சுழ‌ற்சி தி‌ட்​ட‌ங்​க‌ள் ​த‌டை (PCMCS)​ ச‌ட்​ட‌த்தில் திருத்தம் கொண்டுவர அரசை நிர்பந்தித்து வருகின்றனர். கார்ப்பரேட் முதலாளிகளின் நாயகன் மோடி தனது அமைச்சரவை மூலம் ஒரு அவசர சட்டதிருத்தத்தை கொண்டு வந்து இன்று பெயரளவில் இருக்கும் தடைகளையும் தகர்த்து இப்பன்னாட்டு நிறுவனங்கள் மக்களை சுதந்திரமாக ஏமாற்றி சூறையாட வழி செய்து கொடுப்பது நிச்சயம்.

ஆனால் நிதி மூலதன சூதாடிகள் பங்குச்சந்தை, ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றின் மூலம் மக்களை பொன்சி திட்டங்களைப் போலவே சூறையாடி வரும் போது, நமது போராட்டம் ஒட்டுமொத்தமாக மறுகாலனியாக்கத்தை வீழ்த்துவதோடு இணைக்கப்படவேண்டும். இதன்றி ஆம்வே முதலான மோசடி முதலாளித்துவ நிறுவனங்களை வீழ்த்துவது கடினம். இங்கே பிரச்சினை என்பது சட்டபூர்வமாக சுரண்டுவது, ஏமாற்றுவதற்கும், சட்ட விரோதமாக செய்வதற்கும் இடையே உள்ள முரண்படுதான். இந்த நட்பு முரண்பாட்டை தீர்ப்பதையே தற்போதைய கைது நடவடிக்கைகள் செய்யப் போகிறது. ஆகவே நாம் முதலாளித்துவத்தோடு பகை முரண்பாடு கொள்ளாத வரைக்கும் ஆம்வேக்கள் ஆட்டம் போடவே செய்வார்கள்.

–    மார்ட்டின்.

  1. இந்த அம்வே திட்டத்தில் கீழ் இருப்பவர்கள் பி ஜே பி மற்றும் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களே உள்ளனர், அதை யாரும் மறுக்க முடியாது

    • ராஜா, லூசு மாதிரி பேச வேண்டாம். ஏமாற்றும் நிறைய கம்பெனிகள் இருக்கின்றன. ஆம்வே சற்று பரவாயில்லை. பொருட்கள் விற்பதினால் லாபம் குறைவு. உங்களுக்கு கீழே சேரும் ஆட்கள் விற்பதின் மூலமே நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு உண்டு. வினவு சொன்ன மாதிரி 10% மட்டுமே வெற்றி அடைகிறார்கள். தனிப்பட்ட பணம் ஏமாற்றப்படுவதில்லை. இந்த வியாபாரத்தில் முன்னேறி விடலாம் என்றுநம்பி காலத்தையும் சொந்த பணத்தையும் விரயம் செய்பவர்கள்தான் ஏமாந்து விடுகிறார்கள். மற்றபடி இந்த வியாபார உத்திகளையும் டிரேய்னிங்களையும் சொந்த வியாபாரத்துக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

  2. எத்தனையோ நாட்டு சட்டங்களிற்கெல்லாம் தப்பித்த ஆம்வே இந்தியாவின் நீதித்துறையையும் எளிதில் ஏய்த்துவிடும்.
    ஆம்வே என்ற ஆள்பிடிக்கும் கும்பல் என்றுதான் ஒழியுமோ தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் அறிமுகமற்ற ஒருவர் கண்டவுடனேயே அன்பொழுகப் பேசினால் ஆம்வே கூட்டத்தை சேர்ந்தவர் என்று தப்பியோட வேண்டியுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க