NLC நிர்வாகமே!
- பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும்
ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே நிரந்தரம் செய்!
- தொழிற்சங்கங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட
அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்று!
மத்திய அரசே!
- உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும்
NLC நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு!
உழைக்கும் மக்களே!
- ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட
தொழிலாளர் வர்க்கமாக அணிதிரள்வோம்!
- தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட வழிவகுக்கும்
மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்கள்
9444834519
என்.எல்.சி தொழிலாளர் வேலைநிறுத்தத்தை சட்ட விரோதம் என அறிவிக்கிறது இந்திய நீதி மன்றம்.மக்கள் பிரச்சனைகளுக்கு பந்த் நடத்துவதை கூட சட்டவிரோதம் என கூறி வருகிறது. என்.எல்.சி தொழிலாளர்கள் முறைப்படி நோட்டீஸ் அளித்துவிட்டுத்தான் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.அதுவும் நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை நிறைவேற்ற கோருகின்றனர்.ஜனநாயகத்தின் மிக உயரிய அமைப்பாக பீற்றிக்கொள்ளப்படும் பாராளுமன்றத்தை எதிர்கட்சியாக இருந்தபோது பாஜக வினர் நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்ட போது இந்த கருப்பு அங்கி கனவான் கள் என்ன செய்து கொண்டிருந்தனர் ? நீதிமன்றம் சட்டவிரோதம் என அறிவித்த பின்னரும் போராட்டம் வெற்றிகரமாய் தொடர்கிறது.