privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவேலிக் கருவையில் அரசுப் பள்ளி - அரியலூர் போராட்டம்

வேலிக் கருவையில் அரசுப் பள்ளி – அரியலூர் போராட்டம்

-

தனியார் கல்விக்கொள்ளையில் அரசுப் பள்ளியின் அவலம்

ளர்ச்சி என்ற போதையை நாடு முழுக்க பரவ விட்ட பாஜக-வின் முகம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. இந்த வேளையில், தன்னுடைய கருணை பார்வையால் மட்டுமே நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும், அது அதிகார வர்க்கத்தின் துணையுடன் மட்டுமே நடக்கும் என மோடியும்-லேடியும் நம்பும் ‘அதிகார வர்க்கம்’ ஒரு கொழுத்த எருமை என்பதை நீங்கள் படிக்கப் போகும் செய்தி உணர்த்தும்.

சன்னாசிநல்லூர் பள்ளி

அரியலூர் மாவட்டம் , செந்துறை ஒன்றியத்தில் வெள்ளாற்றங்கரையில் உள்ளது சன்னாசிநல்லூர் என்ற கிராமம் (தொல்.திருமாவளவனது சொந்த கிராமமான அங்கனூரிலிருந்து 4 கி.மி தொலைவில் உள்ளது). இங்கு செயல்பட்டுவந்த அரசு தொடக்கப் பள்ளி கடந்த 2009-2010 கல்வியாண்டில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

6-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி செயல்பட்ட இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய கட்டிடத்தில் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள நிலையில் மீதி நான்கு வகுப்புகளும் பள்ளிக்கு அருகில் உள்ள வேலிக்கருவைக் காட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

சன்னாசிநல்லூர் பள்ளி

தூறல் வந்தாலும் வெயில் அதிகமாக இருந்தாலும் கூட பள்ளிக்கு விடுமுறை என்ற முறையில் பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், எந்த பயனும் இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கு படித்துவரும் மாணவர்களுக்கு பாம்புகள் மற்றும் பூச்சிகளின் ‘வேலிக்கருவை வகுப்பறைக்குள்’ வந்துவிடுவதால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து புகார் அளித்தும் அதிக்காரிகள் ‘ இதோ பணம் ஒதுக்கி விட்டோம், கூடிய சீக்கிரம் கட்டிடம் கட்டிவிடுவோம் ’ என்று சளைக்காமல் பதில் சொல்லி மக்களை விரக்தியின் அவநம்பிக்கையின் விளிம்புக்கு தள்ளி உள்ளனர்.

சன்னாசிநல்லூர் பள்ளி

இவர்களிடம் எதையும் பெற முடியாது எல்லாம் எங்கள் தலைவிதி என்று மக்கள் இருந்து வந்த நிலையை கிராம இளைஞர்கள் மூலமாக அறிந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று பார்த்து உண்மையை அறிந்துகொண்டு, அன்று இரவே கிராம பொதுமக்களை சந்தித்து நம்பிக்கையூட்டி போராட்டம் ஒன்றே தீர்வு என்பதையும் மனு கொடுப்பதால் தீர்வு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினர். மறுநாள் கிராம பொதுமக்களின் சார்பாக ஊர்கூட்டம் கூட்டப்பட்டது. கிராமத்தின் அனைத்து பிரிவினரும் கலந்துகொண்டனர். மறுநாள் பள்ளியில் பெற்றோர் சங்கத்தை கூட்டி என்ன செய்யலாம் என முடிவு செய்வது என தீர்மானித்து கலைந்தனர்.

சன்னாசிநல்லூர் பள்ளி

கடந்த 12.11.2014-ம் தேதி காலை பெற்றோர் கூட்டம் நடைபெற்றது. பலமுறை மனு கொடுக்கப்பட்டதை பற்றியும் அதனால் எந்த பயனும் இல்லை என்பதை பற்றியும் மக்கள் விரக்தியுடன் பேசினர். பள்ளிக்கூடம் இப்படியே நடந்தால் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை என சூழ்நிலையின் தாக்கத்தில் பேசினர்.

சன்னாசிநல்லூர் பள்ளி

தோழர்கள் மீண்டும் அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டி கல்வி தனியார்மயம் என்பது எவ்வளவு மோசமானது என்பதையும் அரசுப் பள்ளிகளின் மீதான நமது கவனமின்மையால் நமது எதிர்கால தலைமுறையே கல்வி வியாபாரத்தால் பாதிக்கப்படும் என்பதையும் பேசி புரிய வைத்தனர். நமது குழந்தைகளின் கல்வி உரிமைக்கு நாம் போராடாமல் வேறு யார் போராடுவது? என்ற கேள்வியை முன்வைத்தனர்.

ariyalur-school-12

ariyalur-school-10

பிறகு பொதுமக்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டமே தீர்வு என முடிவு செய்தனர். அதன்படி 14.11.2014 ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது.

போராட்ட புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
ஜெயங்கொண்டம்.