விவசாய நிலங்களை எடுத்து
முதலாளிகளுக்கு போட்டுவிட்டு
ஒரு ரூபாய் அரிசியை வாங்கிக் கொள்ளும் முட்டாள்
உன்னைப் போல் உலகில் உண்டா?
குடிநீரையும், இயற்கை வளங்களையும்
குடிமக்களின் உழைப்பையும்
தனியார்மயத்துக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு
“ஐய்! மடிக் கணிணி கிடைக்கப்போகிறது” என்று
ஓட்டுப்போட்டு ஏமாறும்
உன்னைப் போல் ஒரு நாயுண்டா? புழு உண்டா?
தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும்
ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்!
நீயாக எதையும் கேட்க முடியாது…
(உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் – தோழர் -துரை. சண்முகம்)