privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்சின்டல் கம்பெனியில மனுசத் தன்மையே இல்ல பாஸ் !

சின்டல் கம்பெனியில மனுசத் தன்மையே இல்ல பாஸ் !

-

சின்டெல் எனும் அமெரிக்க மென்பொருள் நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக 3,000 பேருக்கும் அதிகமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றது. 4 மாதங்களுக்கு முன் டி.சி.எஸ்.  (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனம் இதைப் போன்று கொத்துக் கொத்தாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததை எதிர்த்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு தொடர்ச்சியான பிரச்சாரம், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

சின்டெல் ஆட்குறைப்பு
ஊழியர்களை பலி கொடுக்கும் சின்டெல் நிறுவனம்

டி.சி.எஸ் 25 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தபோது, வேலையை விட்டு நீக்கப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் தந்திருந்தது. விசயம் ஊடகங்களில் வெளியானது.

ஆனால், பு.ஜ.தொ.மு.-வின் தொடர்ச்சியான பிரச்சாரம், ஐ.டி ஊழியர்களிடையே துண்டுப்பிரசுர வினியோகம் போன்றவற்றால் அதிர்ச்சியடைந்துள்ள கார்ப்பரேட்கள் இம்முறை வேலை நீக்கத்தை, வேறு தந்திர வழியில் செய்யத் தொடங்கியுள்ளனர். ஊழியரை மிரட்டி விலகல் கடிதம் பெற்றுக்கொண்டு,  அவர்களது அடையாள அட்டையை (ஐ.டி கார்ட்) பிடுங்கிவிட்டு, 15 நிமிடங்களுக்குள் நிறுவன வளாகத்துக்கு வெளியில் போய் விடும்படி துரத்துவது என்ற முறையைப் பின்பற்றுகின்றனர். ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளிவராமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனால், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு சின்டெலின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல் அறிந்து அதற்கு எதிராக் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்தது; தொடர்ந்து சின்டெல் நிறுவனத்தின் ‘விலகல் கடித‘ பாணி கட்டாய வேலை நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை காஞ்சிபுரம் மாவட்டம் தொழிலாளர் நல உதவி ஆணையரிடம் அழைத்துச் சென்று தலையீடு (சமரசத் தீர்வு) கோரி மனு அளிக்கவும் உதவி செய்துள்ளது.

ஐ.டி. துறை ஊழியர்களே!

இனி இதே பாணியில்தான் நம்மைப் பணி நீக்கம் செய்து தனது லாபத்தை உயர்த்தப் போகின்றது கார்ப்பரேட் கும்பல். செய்வது அறியாமல் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பின் வருந்தாதீர்கள்.. கையெழுத்திட மறுத்து சங்கத்தினைத் தொடர்பு கொண்டு, இணைந்து போராடி, உங்கள் வேலை உரிமையை நிலை நாட்டுங்கள்.

வஞ்சகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரின் வாக்குமூலத்தை கீழே தருகிறோம்.

***

பிரஷாந்த் ரானடே
பிரஷாந்த் ரானடே – சின்டெல் துணைத்தலைவர்

வரிடமிருந்து அடையாள அட்டையை (ஐ.டி கார்டை) பிடுங்கிக்கொண்டு 15 நிமிடத்திற்குள் அலுவலகத்தை காலிசெய்து வெளியேற உத்தரவிட்டுள்ளது நிர்வாகம். பல ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனத்தால், அவமானப்படுத்தப்பட்டு, வேலையை விட்டு துரத்தப்பட்ட அவர் ஐ.டி துறை ஆட்குறைப்புக்கு எதிரான பு.ஜ.தொ.மு-வின் சுவரொட்டியை பார்த்துவிட்டு நம்மை அழைத்தார்.

“என்ன நடந்துச்சிங்க?”

“மூணு வருசம் ஆன்சைட்டில் (அமெரிக்கா) டீம் லீடராக இருந்தேன் பாஸ். இங்கிருந்து போகும் போது ஒரு புரொஜெக்டிற்குனு தான் அனுப்புனாங்க. கொஞ்ச நாளைக்கு அப்புறம் வேறு இரண்டு புரொஜெக்டிற்கு டீம் லீடர்கள் வரும் வரை டெம்பொரெரியாக (தற்காலிகமாக) பார்த்துக்கங்கனு சொல்லி கொடுத்தாங்க. அநத புரொஜெட்டிற்கு கடைசி வரை டீம் லீடர் வரவே இல்லை.

குடும்பப் பிரச்சனையால போன வருசம் அமெரிக்காவிலிருந்து திரும்பி வர்றது மாதிரி ஆயிருச்சி. எனக்குப் பதிலா அங்க போனவங்க கொஞ்ச நாள்லயே வேற கம்பெனிக்கு மாறிட்டாங்க. என்ன மாதிரி சரியான அடிமை அவங்களுக்கு சிக்கல. கொஞ்ச நாள்ளயே என்னை போகச்சொன்னாங்க. எனக்கு ஃபேமிலி சூழலால போகமுடியல. அப்படியே சொல்லிட்டேன். இது டெலிவரி மானேஜருக்கு பிடிக்கலை.

இத்தனை வருசம் நைட் ஷிப்ட் தான் பார்த்தேன். ஆனால், உடம்பு சரியில்லாம ஆகவே, ‘நைட்ஷிப்ட் வேண்டாம் டே ஷிஃட் கொடுங்க’னு கேட்டேன். நைட் ஷிப்ட் கஷ்டம்னு சொல்லிட்டேன். அதையும் அவங்க ஏத்துக்கல. டெலிவரி மானேஜருக்கு என் மேல கடுப்பு வந்திருச்சி. நான் என்ன பாஸ் பண்ண முடியும்.”

“இத்தனை வருசம் நைட்ஷிப்ட் தான் பாத்திருக்கீங்க இப்போ உடம்புக்கு ஒத்துக்கலை எனச் சொன்னா ஏத்துக்க மாட்டாங்களா?”

சின்டெல் ஆட்குறைப்பு
டாடா சன்ஸ் நிர்மல்யா குமாருடன் சின்டெல் தலைவர் பரத் தேசாய் (சின்டெல் நடத்திய நாஸ்காம் முதலாளிகள் மாநாட்டில்)

“இதைதான் நானும் கேட்டேன். இதெப் பத்திலாம் அவனுங்க எங்க கவலைப்படுறாங்க. ஆனா என்னோட உடல்நிலையில என்னால சுத்தமா முடியாது. அதனால நைட்ஷிப்ட் முடியாதுன்னு சொல்லிட்டேன்.

போன மாச கடைசில தான் ரேட்டிங் போட்டாங்க. என் மானேஜர் நல்ல ரேட்டிங்தான் கொடுத்தேன்னு சொல்றார். ஆனா எனக்கு மேல் உள்ளவங்க மாத்திட்டாங்களாம்.

டெலிவரி மானேஜரிடம் பேசினேன். ‘நீங்க பிளெக்சிபிலாக இல்லை. சரியா வேலை செய்யலை’னு சொன்னாரு.

‘எந்த வேலையை நான் சரியா செய்யலை’ னு கேட்டேன். அதுக்கு அவருகிட்ட பதில் இல்லை. கிளையன்ட் அப்பிரிசியேட் (பாராட்டு) பண்ணி இருக்காங்க என்று எடுத்துச் சொல்லியும் அவங்க ஏத்துக்கல.

வருடத்தில் முதல் பாதியில் நடக்கும் “மிட் அப்ரைசலில்” ஏன் எந்த கமெண்டும் சொல்லைனு கேட்டேன். இதுக்கும் அவர்கிட்ட எந்த பதிலும் இல்லை.

டெலிவரி மானேஜர்கிட்ட பதில் கிடைக்காததால் எச்.ஆரிடம் கேட்டேன்.

சின்டெல் ஆட்குறைப்பு
2014-ல் சின்டெல் நடத்திய நாஸ்காம் முதலாளிகள் மாநாட்டில்

பாஸ், அந்த எச்.ஆருக்கு நான் யாரு, என்ன பேருனு நான் போகிற வரைக்கும் தெரியாது. ஆனா நான் தகுதியில்லாதவனு அவன் சொல்றான்.

‘கடைசி மூணு அப்ரைசலில் டாப் ரேட்டிங்க் போட்டிருக்கீங்க. திடீர்னு ஒருத்தனோட பெர்பாமன்ஸ் எப்படி டாப் ரேட்டிங்கிலிருந்து பத்தாவது இடத்திற்கு குறையும்’னு கேட்டேன்?

நான் கடந்த ஆண்டுகளில் டாப் ரேட்டிங் வாங்குனது அவருக்கு தெரியவர கொஞ்சம் பின்வாங்கினார். இது குறித்து பரீசீலிப்பதாகவும், லீவ்ல இருக்கும் என் மானேஜர் திரும்புனதும் இது பத்தி பேசுறதாகவும் சொல்லியனுப்பினார்.

போன வாரம் திங்கட்கிழமை எதேச்சையா பார்க்கும் போது தான் தெரிஞ்சது சிஸ்டம்ல என் சூப்பர்வைசர் பெயரும், புரொஜெக்ட்டும் மாறியிருந்தது. நான் பெஞ்சில் இருப்பதாக காட்டியது.

அவசரமாக என் டெலிவரி மானேஜரிடம் கேட்டால்

‘உங்கள போன புதன் கிழமையே ரிலீஸ் பண்ணிட்டோமே’னு கூலா சொல்கிறான்.

‘என்கிட்ட ஏன் இன்பார்ம் பண்ணலை. இன்னைக்கு காலைல வரை ஒர்க் பண்ண வெச்சிருக்கீங்க’னு கோபமாக கேட்டதற்கு

‘நாங்க மெயில் சென்ட் பண்ணிட்டோம்.’

‘எனக்கு எதும் வரலையே’

‘மே பி கம்யூனிகேசன் எரரா இருக்கலாம்’ னு திமிராப் பேசுறான்.

என்ன புரொஜெட்லிருந்து ரிலீஸ் பண்ணினதோடு இல்லாம ரெண்டு நாள் வேலை வாங்கியிருக்கானுக. எதேச்சையாத்தான் இத பாத்தேன்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி எச்.ஆர் வரச் சொல்லி மெயில் போட்டிருந்தாரு.

அப்ரைசலில் குறைந்த ரேட்டிங் பெற்றவர்களை வேலைநீக்க்கம் செய்வதாக கார்ப்பரேட் முடிவு செய்திருக்கிறதாகவும், சைன் பண்ணிட்டு ரிலீவிங் ஆர்டரை வாங்கிக்குங்கன்னு சொன்னாரு.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்ரைசலில் ரேட்டிங்கையே நான் ஏத்துக்கல. அந்தப் பிரச்சனையே இன்னும் முடியவில்லை. என் மேனேஜர் லீவ் முடிஞ்சி வந்தப்புறம் பேசலாம்னு சொன்னாங்க. இப்போ அதையே காரணமா வெச்சி கிளம்ப சொல்றாங்க.

நான் கையெழுத்துப் போடத் தயார். ஆனா வேலைநீக்கத்திற்கான காரணத்தை ஏற்கமுடியாதுன்னு தோணிச்சு. எச்.ஆரிடம் இதை சொல்லிட்டு கையெழுத்து போட முடியாதுன்னு சொல்லிட்டேன். எச்.ஆர் இதை ஏத்துக்கல.

கடந்த ஆண்டுகளில் டாப் ரேட்டிங் வாங்கியதால் வேண்டுமானால் சில மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று ‘கருணை’ காட்டினார்.

கிடைத்த அவகாசத்தில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி முதல் அனைவருக்கும் எனக்கு நடந்த அநியாயத்தை விளக்கி ஒரு மெயில் அனுப்பினேன். சிறிது நேரத்தில் அதற்கு பதிலும் வந்தது.

‘உங்களது கோரிக்கையை பரிசீலித்தோம். எச்.ஆர்களுடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் உங்கள் குறைகளைக் கூறலாம்’ என்று பஞ்சாயத்திற்கு நாள் குறித்தார்கள்.

அடுத்த தினத்தில் அந்த கட்டபஞ்சாயத்தும் ஆரம்பித்தது. மும்பை , சென்னையிலிருந்து எச்.ஆர்கள் நாலைந்து பேர் தொலைபேசி கான்பரன்சில் இணைந்திருக்க, நேரில் இருவர் அமர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

மீண்டும் பழைய பல்லவியே ஆரம்பித்தது. சுற்றியிருந்தவர்கள் அத்தனை பேரும் வேலைநீக்கத்தை நியாயப்படுத்தினார்கள்.

‘ நீங்க சரியா வேலை பார்ப்பதில்லை’

‘இப்படிச் சொன்னா எப்படி. கொடுத்த வேலையில் எதை சரியாக செய்யவில்லை என்று ஆதாரபூர்வமாக சொல்லுங்க, நான் பதிலளிக்கிறேன்.’

‘அந்த டேட்டா கையில் இல்லை. நீங்கள் சரியாக வேலை செய்யவில்லை. ஆன்சைட் போக முடியாதுன்னு சொல்லியிருக்கீங்க அதனால் கிளைன்ட் சேட்டிஸ்பேக்ஷன் குறைஞ்சிருக்கு’

‘ஆன்சைட்டிலிருந்து வரும்போதே ஃபேமிலி இஸ்யூனு சொல்லிட்டு தான் வந்தேன். அப்படியிருக்கும்போது எப்படி உடனே போகமுடியும். அதற்கு தகுந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறேன்.’

இப்படி அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கவும் சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தார்கள்.

‘ நீங்கள் எப்பொழுதும் அவைல்பிளாக இருப்பதில்லை. உங்கள் இருப்பிடத்தில் இருப்பதில்லை.’

‘(மனுசன் ஒண்ணுக்கு போறது ஒரு குத்தமாயா) அப்படியில்லையே. எப்பொழுது நான் அவலைபிளாக இல்லைனு சொல்லுங்க. போன் செய்து அதை எடுக்காமல் இருந்திருக்கிறேனா?’

நான் இப்படி அவங்க கேக்குறதுக்கு பதில் சொல்ல சொல்ல அவங்க வேறு எதை எதையோ சொல்ல ஆரம்பிச்சாங்க.

இடையில ரெஸ்ட் ரூமுக்கு போகணும்னு வெளியே வந்தேன்.

என் பின்னாடியே ஒரு எச்.ஆர் வந்தான்.

பிரெண்டு போன் பண்ணான். எடுத்து பேசிட்டு இருந்தேன்.

‘ரெஸ்ட் ரூமுக்கு போகனும்னு சொல்லிட்டு போன் பேசிட்டு இருக்கீங்க’னு கேக்குறான். நான் டாப் மேனேஜ்மென்ட்டுக்கு மெயில் பண்ணி பிரச்சனை பண்ணதால இப்ப நான் எதையும் செஞ்சிற கூடாதுனு குறியா இருந்தாங்க.

எனக்கும் அவங்களிடம் வேலை பார்க்க பிடிக்கவில்லை. ஆனா எனக்கு தெரிய வேண்டியதெல்லாம் என்னை ஏன் வேலை நீக்கம் செய்கிறாங்கங்குறதுக்கு நியாயமான காரணம். கடைசி வரை நான் அதைத்தான் கேட்டேன். ஆனால் யாரும் அதுக்கு பதில் சொல்லல.

ஒரு எச்.ஆர் மட்டும் எனக்கு ஆதரவா பேசினார். என்னை தனியா கூட்டிட்டுபோய், ‘இவங்க கிட்ட பேசி ஒண்ணும் பண்ண முடியாது. அவங்க பண்ணது தப்புனு ஒத்துக்கிட்டாங்கன்னா அவங்களுக்கு பிரச்சனை. அதானால ஏத்துக்கமாட்டாங்க. பேசாம நீங்க ரிசைன் பண்ணிருங்க. வேற ஜாப்க்கு நானும் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றே’ன்னு சொன்னாரு.

எனக்கு வேற எதுவும் தோணவில்லை. ஒத்துக்கிட்டேன். உடனே ஐ.டி கார்டை வாங்கிட்டாங்க. என் மெயில், அக்ஸஸ் எல்லாத்தையும் முடக்குறதுக்கு இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தாங்க.

அவ்ளோதான். எவ்ளோ நாள் நைட் ஸ்டே பண்ணி ஒர்க் பண்ணிருப்பேன். ஆனா ஐ.டி கார்டை உடனே பிடுங்கி வெளியே அனுப்பிட்டானுக. மனுசத் தன்மைன்னு ஒண்ணு இவனுகளுக்கு கிடையாது பாஸ்.”

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு