1. அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தின் போராட்ட அறிவிப்பு
“ஐ.ஐ.டி சென்னை மாணவர்கள் விவகாரங்களுக்கான டீன் மனித வளத்துறை அமைச்சகத்தின் தூண்டுதலின் பேரில், ஜனநாயக விரோதமாக எங்கள படிப்பு வட்டத்தை தடை செய்த நடவடிக்கையை கண்டித்து அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தின் கண்டன போராட்டம்.”
இடம் : கஜேந்திரா சர்க்கிள், ஐ.ஐ.டி சென்னை,
நாள் : 02-06-2015 (செவ்வாய்க்கிழமை) நேரம் : 11:00 am
கோரிக்கை 1: அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்துக்கு மறுஅங்கீகாரம் வழங்கு
கோரிக்கை 2: அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய மாணவர்கள் விவகாரங்களுக்கான டீன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேள்
கோரிக்கை 3: இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 19(A)-க்கு எதிரான ஜனநாயக விரோத நன்னடத்தை விதிகளை திரும்பப் பெறு.
கோரிக்கை 4: வளாகத்துக்குள் ஹிந்துத்துவா நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு ஐ.ஐ.டி சென்னையின் நிதியை பயன்படுத்தியதை விசாரிக்க கமிஷனை நியமி
கோரிக்கை5: அனைத்து தன்னிச்சையான மாணவர் அமைப்புகளையும் அதிகாரபூர்வமாக அங்கீகரி. தமது சமூக, பொருளாதார, அரசியல் கருத்துகளை பேசுவதற்கு அனுமதி கொடு
கோரிக்கை 6: அனைத்து தன்னிச்சையான மாணவர் அமைப்புகளுக்கும் ஜனநாயக வெளியையும், சம உரிமைகளையும் கொடு
தகவல் பேஸ்புக்கிலிருந்து
2. அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்துக்குத் தடை!
மோடி அரசின் உத்தரவு!
பெரியார் பிறந்த தமிழ் மண்ணை பார்ப்பனியத்தின் கல்லறை ஆக்குவோம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 02-06-2015 செவ்வாய்
நேரம் : மாலை 4.00 மணி
இடம் : திருவள்ளுவர் சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், விழுப்புரம்
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்
3. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்ததை கண்டித்து 02.06.2015 மதியம் 1.30 மணி அளவில் உயர்நீதிமன்றத்தில் நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கான துண்டுபிரசுரம்!
ஏற்பாடு :
சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள், சென்னை
தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
90946 66320