privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே ?

இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே ?

-

sanitary-workers-flood-relief-assistance (4)சென்னை நகரத்ததில் ஓடும் அடையாறு கரையை ஒட்டியுள்ள பகுதிகளின் ஒவ்வொரு தெருக்களும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. குப்பை என்பதைவிட சாக்கடை கழிவுகள் என்று கூறுவது தான் பொருத்தம். பாத்திரங்கள், கட்டில், நாற்காலி, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அனைத்தும் சிதிலமடைந்து சாக்கடை கலந்திருக்கிறது. நீர் வடியத் துவங்கிய சில நாட்களுக்கு பின்னர் மக்கள் அவற்றை வீதிகளில் விசிறியெறிந்துவிட்டார்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் சாக்கடை கழிவுகளால் சூழப்பட்டிருக்கும் நிலையில் இவற்றை உடனடியாக  அகற்றாவிட்டால் மழை வெள்ளத்தை விட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கொள்ளை நோய்கள் ஏற்படும். இன்றைய அத்தியாவசிய பணி இதுதான். தூய்மை இந்தியா (சுவச் பாரத்) என்று ஆரவாரம் கிளப்பி சீன் போட்ட குலக்கொழுந்துகள் எவரையும் சாலையில் காணவில்லை. வழக்கம் போல உழைக்கும் மக்கள் தான் அதை அகற்றி வருகிறார்கள்.

ஜாபர்கான்பேட்டை பகுதிக்கு சென்றோம்.

அருகிலிருக்கும் சூரப்பள்ளம் பகுதி தெருக்களில் இருந்து எடுத்துவரப்படும் கழிவுகள் கே.கே நகர் நெசப்பாக்கம் சாலை சந்திப்பில் குவிக்கப்படுகின்றன. ஒரு சிறு தெருவிலிருது மட்டும் 3 ஜே.சி.பி எந்திரங்கள், 30க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் கழிவுகளை வாரிக் குவித்தும் குப்பைகள் குறையவில்லை. கழிவுகளின் அளவு  அப்பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளுக்கே அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் பல தெருக்கள், பகுதிகளில் மலையென குவிந்திருக்கும் குப்பைகள் எடுத்தவாறு தொழிலாளிகள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தூங்கவில்லை, குளிக்கவில்லை, மாற்று துணியில்லை, வீட்டுக்கும் போகவில்லை. முதல் இரண்டு நாட்கள் வெள்ளத்தோடு போராட்டம். கடந்த மூன்று நாட்கள் குப்பையோடு குப்பையாக போராட்டம். இவர்கள் வீடும் வெள்ளத்தில் மூழ்கியவைதான். குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டிருக்கின்றன. குடும்பம் பற்றிய கவலையும் அவர்களை வாட்டத்தான் செய்கிறது. குப்பையோடு வேலை செய்வதால் காலில் சேற்றுப்புண், தொண்டையில் புண் என அவர்களால் பேசக்கூட முடியவில்லை. சென்னையின் சுகாராதாரத்தை நிலைநாட்டுவதற்காக அளவேதுமில்லாம் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

sanitary-workers-flood-relief-assistance (6)ஒரே நாளில் பல டன் கழிவுகளை கையாளுகிறார்கள். கையில் பாதுகாப்புறை இல்லை, மூக்கில் பாதுகாப்பு கவசம் இல்லை, குறைந்தபட்சம் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் வேலை செய்ய பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகாரிகள் இது குறித்து அக்கறைபடவில்லையா என்று கேட்டால் சிரித்துக்கொண்டே “அவர்கள் காரில் வருவார்கள், போவார்கள் இதற்கா அக்கறைப்பட போகிறார்கள்” என்கிறார்கள். “இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே அவர்கள் குழந்தைகளா” என்று கேட்டபடியே வேலையில் மூழ்குகிறார்கள்.

இந்த தொழிலாளிகளில் சென்னையை சேர்ந்தவர்களும் வெளியூரில் இருந்து வந்தவர்களும் அடக்கம். இனி அவர்கள் பேசுவதைக் கேட்போம்.

“நாங்களாவது குறைந்த பட்சம் குப்பை அள்ளுவதற்கான பொருட்கள், வண்டிகள் வைத்திருக்கிறோம் ஆனால் ஏரியா ஜனங்க இது எதுவுமில்லாமல் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு குழந்தைகள் மாற்றுத் துணி கூட இல்லாமல் வெற்றுடம்போடு கையில் கழிவுகளை சுத்தம் செய்கிறார்கள். இதை பார்க்கும் போது எங்களது கஷ்டம் பெரிதாக தெரியவில்லை.”

எங்களை கார்ப்பரேசன் ஊழியர்களாக பலர் நினைக்கிறார்கள் அது உண்மையில்லை. நாங்கள் (Chennai municipal Solid Waste Private limited என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின்) ஒப்பந்த கூலிகள். எங்களைப் போல சென்னை முழுவதும் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கார்ப்பரேசன் ஊழியர்கள் நியமனம் பல ஆண்டுகள் நிறுத்தப்பட்டுவிட்டld. காண்டிராக்ட் ஊழியர்கள் தான் வேலை செய்து வருகிறோம்.

குப்பை வாரும் எங்களுக்கு மாதம் 5,500 தான் சம்பளம். சூப்பர்வைசருக்கு 8000. மழை வெள்ளத்தால் எங்கள் வீடுகளும் தண்ணியில் போய்விட்டது. மனைவி குழந்தைகள் நிவாரண முகாமில் தான் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் நாங்களும் வேறு வேறு இல்லை.

sanitary-workers-flood-relief-assistance (11)இந்த வேலையால் வரும் தோல் நோய்கள் எங்கள் குழந்தைகளுக்கும் பரவுகிறது. என்ன செய்வது ஏதாவது மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோம். இதை நிறுவனமோ அதிகாரிகளோ கண்டுகொள்வது கிடையாது. வேலையை முடித்துவிட்டுத்தான் பொது ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும், அதற்கு நேரம் எங்கிருக்கிறது?

குப்பை வண்டிகள் போக முடியாத குறுகலான சந்துகளில் போகிறோம். அங்கிருந்து லோடு எடுத்துவர 2 மணிநேரம் ஆகிறது. குப்பை அள்ளும் போதும், கொட்டும் போது அடிக்கும் நெடியை  எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தாங்க முடியவில்லை.  வரலாறு காணாத பிரச்சனை என்கிறார்கள் ஆனால் குப்பை லாரிகளை ஒழுங்குபடுத்த ஒரு போலீஸ் கூட இல்லை. நாங்களே வண்டி ஓட்டி நாங்களே டிராபிக் கிளியர் பண்ணிக்கிறோம். அமைச்சர்கள் வண்டி எல்லாம் அப்படியா போகிறது.  தாங்களாகவா டிராபிக் கிளியர் பண்ணுகிறார்கள்?

சென்னை வெள்ளம், ஐந்து நாள் வேலை என்று எங்களை அழைத்துவந்தார்கள். அழைத்த போது டைம் இல்லாததால் வீட்டுக்கூட போகவில்லை. இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது.எங்களுக்கு மாற்று உடைகூட இல்லை. அதிகாரிகள் தினமும் குளித்து மணக்க மணக்க வருகிறார்கள். எங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஊரிலும் மழை என்கிறார்கள். குடும்பத்திடம் பேசினீர்களா என்று கூட யாரும் கவலைப்படவில்லை.

இங்கு வேலை செய்வதை வருத்தாமாக சொல்லவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தை பற்றி தான் கூறுகிறோம்.

ஒரு லாரி முழுவதும் குப்பைகளை நிறைத்து வெளியே வருதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அதிகாரிகள் இதை கவனித்து ஜே.சி.பி போன்றவைகளை பயன்படுத்தினால் அரை மணி நேரமாக குறைக்கலாம். அதற்கான முயற்சியை யாரும் எடுக்கவில்லை. மலை போல வேலைகளை இருக்கும் போது அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள். அவர்களின் பெயரை கூறினால் எங்களுக்கு தான் பிரச்சனை.”sanitary-workers-flood-relief-assistance (25)

கழிவுநீர் வண்டி ஓட்டுபவர்கள்: முருகன், குமார், வேலன்:

“3 கி.மீ சுற்றுவட்டாரத்திலிருந்து கழிவுநீரை எடுத்துவருகிறோம்.  ஒரு  லோடுக்கு 700 ரூபாய் கார்ப்பரேசன் தருகிறது. இதில் பெட்ரோல் , வண்டி வாடகை, டிரைவர் கூலி எல்லாம் அடங்கும். கணக்கு காண்பிப்பதற்காக தான் இதை எடுக்க சொல்கிறார்கள். பெரும்பாலான தண்ணீர் அங்கேயே தான் இருக்கிறது. அதையெல்லாம் எடுத்து வருவது நடக்கது.”

உழைப்புக்கும் ஓய்வில்ல. உழைக்கும் மக்களுக்கும் ஓய்வில்லை. குப்பை எடுக்கும் தொழிலாளிகள் பொதுவில் நாற்றத்தை சகித்துக் கொள்வதற்கு மது அருந்துவது உண்டு. ஆனால் கிடைக்கும் மிகக்குறைவான சம்பளத்தில் அதற்கும் வழியில்லை. அதனால் பான்பராக் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். ஐந்து, பத்து ரூபாய் செலவில் ஓரிரு மணி நேரங்கள் பாக்கோடு சகித்துக் கொள்கிறார்கள்.

இயல்பு வாழ்க்கையே இவர்களுக்கு எந்திரம் போலத்தான் என்பதால் இத்தகைய நிவாரண பணிகளில் இவர்களை சிறப்பாக யாரும் கவனிக்க தேவையே இல்லை. துப்புரவு பணி தொழிலாளிகளின் கழிவு அகற்றும் பணிக்காக தமிழக அரசு ரூ.2000 சிறப்பு ஊதியம் அளிப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால் அந்த ஊதியம் மிகக் குறைவு என்பதோடு அது எதுவும் இவர்களின் சூழலை மாற்றிவிடாது. இது போக அன்றாடம் ரூ.300 கூலிக்கு புதிய தொழிலாளிகளை தினக்கூலியாக தமிழக அரசு எடுத்து வருகிறது.

சாக்கடை அள்ளும் ஒரு தொழிலாளிக்கு அவர் இழக்கப் போகும் உடல் நலத்தையும் கணக்கிட்டு குறைந்த பட்சம்    ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். காரிலும், விமானத்திலும் கால் தரையில் பாவாமல் வெள்ளத்தை பார்க்கும் ராணிகளின் ஆட்சியில் தரையில் தத்தளிக்கும் மக்களை வெள்ளம்தான் அழிக்க வேண்டும் என்பதில்லை.

படங்களை பெரியதாக பார்க்க அழுத்தவும்:

–    வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க