
கல்வியில் தனியார்மயத்தை புகுத்துவதன் மூலம் ஏழை மக்களிடமிருந்து கல்வியை பறிக்கும் சதி அதிவிரைவாக நடந்துவருகின்றது. டிசம்பர் 13 முதல் 17 வரை கென்யாவின் நைரோபியில் உலக வர்த்தக கழக மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் காட்ஸ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் கல்வி ஏழை மாணவர்களுக்கு முற்றிலும் எட்டாக்கனியாக மாற்றப்படவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவும் கையெழுத்திடவுள்ளது. இம்மாநாட்டுக்கு எதிராக உலகம் முழுவுவதும் மாணவர்கள் பேராசிரியர்கள் போராடிவருகின்றனர். இவ்வொப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறவேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியில் AISA,ADISO,SFI உள்ளிட்ட மாணவர் அமைப்புக்கள் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் கடந்த 52 நாட்களாக தீரமிகு போராட்டங்களை நடத்திவருகின்றன.

10.12.15 அன்று மேற்கண்ட அமைப்புக்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராளுமன்றத்தினை நோக்கி முற்றிகையிட முன்னேறிச்சென்றனர். அவர்கள் மீது தடியடி என்ற பெயரில் கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருக்கிறது தில்லி போலீசு. இதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் 50 பேர்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்வி என்பது உரிமை அதற்காக போராடிய மாணவர்களைத் தாக்கிய போலீசின் இச்செயலை பு.மா.இ.மு கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களை தில்லியில் நேரில் சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.கணேசன் மற்றும் பு.மா.இ.மு அமைப்பினர் இப்போராட்டத்திற்கு பு.மா.இ.மு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தீரமிகுப் போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலமே கல்வி என்ற உரிமையை மீட்டெடுக்க முடியும். அதற்காக மாணவர் வர்க்கத்தை அலையலையாக தட்டியெழுப்பும் போராட்டத்தில் மாணவர் அமைப்புக்கள் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
கல்வித்துறையை ஆக்கிரமிக்கும் காட்ஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து AIFRTE இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை கடந்த டிசம்பர் 7ந்தேதி முதல் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் சார்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கலந்து கொண்டுள்ளது.

2015 டிசம்பர் 12ந்தேதி காலை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்காக பு.மா.இ.மு – சார்பில் மாணவர்கள் டெல்லி சென்றுள்ளனர். ஜந்தர் மந்தரில் கடந்த 7-ந்தேதி முதல் நடந்து வரும் போராட்டங்களில் கலந்து கொள்வதோடு, 12-ந்தேதி பு.மா.இ.மு நடத்தும் தர்ணா ஆர்ப்பாட்டத்திற்கான பிரச்சார வேலைகளையும் முழுவீச்சில் செய்து வருகின்றனர் பு.மா.இ.மு தோழர்கள்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை : த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
கண்டன உரையாற்றுவோர்:-
பேராசிரியர். ரமேஷ் பட்நாயக்
presidium member of AIFRTE
பேராசிரியர். அனில் சத்கோபால்
presidium member of AIFRTE
பேராசிரியர். மது பிரசாத்
presidium member of AIFRTE
போராசிரியர். பிரேந்தர் சிங் ராவத்
Professor – Delhi University
தோழர். மோகித்
All India Student Association (AISA)
க.ரமேஷ்
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், ஐ.ஐ.டி சென்னை
ஆனந்த்
The New Materialist, JNU, Delhi
சூரஜ்
The New Materialist, JNU, Delhi
புரட்சிகர கலை நிகழ்ச்சி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
நமது கல்வி உரிமையைப் பாதுகாக்க மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அனைவரையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைக்கிறோம்.
கல்வியை வியாரபாரமாக்கும் காட்ஸ் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!
நாடு மறுகாலனியாவதை தடுத்து நிறுத்துவோம்!!
பத்திரிகை செய்தி- ஆங்கிலம்
Revolutionary Student Youth Front.
41, Pillaiyar kovil Street, Maduravayal,
Chennai – 600095. Ph: 9445112675 rsyfchennai@gmail.com
Press Release 11-12-2015
Agitation Date : 12th December 2015
Time : 11.00 AM
Venue : Jantar mantar (Near Kerala House)
The recolonization Policies, that are being imposed on the country over the past two decades have caused a large scale destruction in every aspect. Now ‘New Education Policy-2015’ (NEP – 2015) drafted by BJP – RSS led Indian government is another move towards the implementation of WTO – GATS. Through this policy, Indian education will be commoditized further and our fundamental rights will be scrapped. Moreover, under the cover of NEP, brahminical forces attempt to saffronize the education system. We, the students should stand against the motive of imperialist forces ( WTO – GATS ) and brahminical tyranny. Let us fight together to save the right to education for all common mass.
Agenda:
Presedent:
Comrade. Ganesan
State Co-ordinator, Revolutionary Student Youth Front
Speakers:
Prof. Ramesh Patnaik
Presidium member – AIFRTE
Prof. Anil Sadgopal
presidium member – AIFRTE
Prof. Madhu Prasath
Presidium member – AIFRTE
Prof. Brendira Singh Ravath
Professor – Delhi University
Comrade. Mohith
All India Student Association (AISA)
G. Ramesh
Ambedkar Periyar Study circle – IIT, Madras.
Anand
The New Materialist, JNU, Delhi.
Suraj
The New Materialist, JNU, Delhi.
Revolutionary Student Youth Front, welcomes all the Students, Teachers and Academicians for this Agitation
Revolutionary Student Youth Front,
Tamilnadu.
முழக்கங்கள்
- காட்ஸ் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!நாடு மறுகாலனியாவதை முறியடிப்போம்!
- ஆள அருகதையற்றஅரசுக் கட்டமைப்பை அகற்றுவோம்!மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்போம்!
- புதிய கல்விக் கொள்கை 2015- மறுகாலனியாக்கத்திற்கான சுருக்குக் கயிறு!- இந்துத்துவத்தின் கள்ளக் குழந்தை!
- ‘பாரத மாதா’ விற்ப்பனைக்கு…தொடர்புக்கு : ஆர்.எஸ்.எஸ், உண்மையான தேச பக்தர்கள்
- Kick out WTO – GATS! Defeat Recolonisation!
- Replace the bankrupted system with peoples’ power!
- WTO – GATS, Teach in India! Digital India! Make in India! – Recolonisation of India
- NEP represents Imperialist and Braministic welfare
- ‘Human Capital’knowledge Economy’- Slavery!
- Food, water, education, Health – for corporates’ profit poverty, illiteracy, starvation – for the people
- GIAN, MOOCS, NPTEL…Teachers are endangered species!
- NEP 2015- Illegitimate child of WTO – GATS and Hindutuva
- NEP – throws back women to patriarchy- return of Gurukul system 1% meritorious 1% needy- death well to social justice and reservaution
- Vocationcution of Education – Accumulation of informal labour for corparates
- ‘Bharath Madha’ for sale…contact: RSS, The true patriots
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி