privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்டென்மார்க் ஐ.டி கம்பெனியின் சட்டவிரோத வேலைநீக்கம்

டென்மார்க் ஐ.டி கம்பெனியின் சட்டவிரோத வேலைநீக்கம்

-

டென்மார்க் கம்பெனியின் சட்டவிரோத வேலைநீக்கம்

ரியாக ஓராண்டுக்கு முன்பு 25 ஆயிரம் ஊழியர்களை, தொழிலாளர் சட்டங்கள் எதையும் மதிக்காமல், சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்தது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டி.சி.எஸ் மென்பொருள் நிறுவனம். பல்லாயிரம் கோடியை ஊழியர்களின் கடுமையான உழைப்பின் மூலம் சுரண்டிக் கொழுத்த டி.சி.எஸ், அரசிடம் இருந்து அடிமாட்டு விலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நிலத்தையும் கோடிக்கணக்கில் வரி விலக்குகளையும் மலிவு விலையில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளையும் பெற்றுக் கொண்டு அரசின் சட்டங்களை மயிருக்கு சமமாகக் கருதிக் கொண்டு கொத்தாக 25 ஆயிரம் ஊழியர்களை வீதியில் தள்ளியது.

இந்த கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு டி.சி.எஸ்-ன் அடாவடியைக் கண்டித்து தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அனைத்து ஐ.டி. ஊழியர்களையும் அமைப்பாகத் திரட்ட தீவிர முயற்சி செய்து இந்தியாவின் முதல் ஐ.டி. ஊழியர்கள் சங்கத்தை உருவாக்கியது. இந்த சங்கத்தின் மூலம் டி.சி.எஸ் உள்ளிட்ட தமிழகத்தில் செயல்படும் ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் குறிப்பாக தொழில் தாவா சட்டம் 1947 பொருந்தும் என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் அரசு உரிய முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவினை ஓராண்டாக நடைமுறைக்கு கொண்டுவரவில்லை தமிழக அரசு. பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் சங்கத்தின் விடாப்பிடியான போராட்டம், நாடெங்கும் எழுந்த எதிர்ப்பு இவற்றின் விளைவாக டி சி எஸ் தனது வேலை நீக்க உத்தரவுகளை நிறுத்திக் கொண்டது.

டி.சி.எஸ் செய்த வேலை நீக்கமாவது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது. ஆனால் சென்ற மே மாதம் சிண்டெல் நிறுவனமோ வேலை நீக்கத்தை செய்தியாக வெளிவராமல் பார்த்துக் கொண்டது. அது மட்டுமல்லாமல் ஊழியர்களையே மிரட்டி பணிவிலகல் கடிதம் பெற்றுக் கொண்டு சட்டப்படி பிரச்சினை வராமல் பார்த்துக் கொண்டது. ஆனால் இந்த நயவஞ்சகமான வேலைப் பறிப்பினை அம்பலப்படுத்திய பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர் சங்கம், பாதிக்கப்பட்ட ஊழியர்களை சட்ட பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க உதவி செய்தது. இதை அடுத்து சிண்டெல் தனது ஆட்குறைப்பை நிறுத்திவைத்தது.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள வெஸ்டாஸ் நிறுவனம்
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள வெஸ்டாஸ் நிறுவனம்

இப்போது சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் டென்மார்க் நாட்டை சேர்ந்த வெஸ்டாஸ் என்ற நிறுவனம் தனது ஊழியர்களில் பத்துப் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

டி.சி.எஸ் மற்றும் சிண்டெல் நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளுக்கு ஊழியர்களின் பணித்தரம் சரியில்லை எனப் பொய்யாகவாவது காரணம் கூறின.

ஆனால் வெஸ்டாஸ் கூறியுள்ள காரணமோ எவ்வித நியாயத்துக்குள்ளும் அடங்காது. ஆம், உங்கள் பணித் திறனுக்கு எங்களால் வேலை தர இயலாது எனக் காரணம் காட்டியுள்ளது. இதே ஊழியர்களின் திறன்களைத்தான் வெஸ்டாஸ் 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்திப் பல கோடிகளை லாபமாக ஈட்டியிருந்தது. வெஸ்டாஸ் மட்டுமல்ல பன்னாட்டு, தரகு கார்ப்பரேட்கள் அனைத்தும் தங்களது லாபத்தில் துளியளவு குறையும் அறிகுறி தெரிந்தாலே உடனே ஊழியர்களைக் குறைப்பதைத்தான் செய்கின்றன. ஆட்குறைப்பு சம்பந்தப்பட்ட எந்த சட்டங்களையும் பின்பற்றுவதில்லை. இவர்களின் சட்டவிரோத ஆட்குறைப்புக்கு பக்கபலமாக இருப்பது அரசின் தொழிலாளர் துறைதான்.

மோடி அரசு பதவிக்கு வந்தபின் பெயரளவுக்காவது இருந்த தொழிலாளர் சட்டங்களை ஒழித்து விட தீவிரமாக வேலை செய்து வருகிறது.

வெஸ்டாஸ் மட்டுமல்ல தகவலே வெளிவராமல் பல கார்ப்பரேட் கம்பெனிகளில் கொத்து கொத்தாக ஐ.டி. ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். உலகெங்கும் 30 சதவீத ஐ.டி. ஊழியர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் உள்ளன பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள்.

நாம் என்ன செய்யப் போகிறோம்? வேலை உரிமையை எவ்வாறு காப்பது? பற்றி எரியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர்கள் பிரிவு அறை கூட்டம் நடத்த உள்ளது. அனைவரும் வாருங்கள்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு
combatlayoff@gmail.com
தொடர்பு கொள்ள 9003198576

vestasDear IT friends,

None of us have forgotten the audacious move by TCS last year to layoff 25,000 employees. Many in the IT industry were angered by that unjust and inhuman action. We organized ourselves as a trade union and protested strongly against those mass dismissals by TCS. NDLF IT Employees wing approached Madras High Court and obtained an order calling for enforcement of Labour laws in all IT companies. Due to our combined efforts and nationwide opposition TCS was forced to put the layoffs on hold.

Even when the wounds of TCS layoff were fresh in our minds, another corporate behemoth SYNTEL resorted to still more diabolical measures to dismiss 3,000 of its employees. The sacked employees were humiliated and asked to leave the premises within 15 minutes of handing over all company property in their possession. Moreover, Syntel tried hard to keep this news under wraps. But, NDLF IT Wing took the issue nationally and provided legal help to affected employees in Chennai, Pune and Mumbai. Alarmed by this development, Syntel aborted its layoff move.

The latest to join this bandwagon is Vestas, an ITES multinational from Denmark. On January 5 this year, Vestas dismissed 10 employees. While TCS and Syntel cited alleged lack of performance as reason for illegal layoff of their employees, Vestas is more arrogant, saying that the sacked employees have “extra-ordinary” skills and hence can not be employed.

Not many in IT/ITES industry know about this dismissal of Vestas employees. Not only in Vestas, many other companies are sending out hundreds or thousands of employees with short notice. Multinational and Indian corporates operating in India refuse to comply with labour laws and terminate services of employees for maximizing profits.

Still worse is to come. Globally, IT employers plan to make 30% of employees redundant in 2016. How are we going to face all these? How to put an end to Layoff and Forced Resignations?

Do take part in the special hall meeting to discuss all these in detail and share your views.

New Democratic Labour Front,
IT Employees Wing
combatlayoff@gmail.com
Call – 9003198576