Saturday, February 8, 2025
முகப்புசெய்திபுதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்

-

puthiya-jananayagam-february-2016

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. அரியானா பஞ்சாயத்துத் தேர்தல் திருத்தச் சட்டம் : நவீன தீண்டாமை
படிப்பறிவற்றவராகவும், கடனாளியாகவும், கக்கூசு இல்லாமலும் இருப்பதற்குக் காரணம் நீதான் என்று பழி போட்டு ஏழைகளைக் குற்றவாளியாக்கித் தண்டிக்கும் புதிய மனுநீதியைத்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பாக அறிவித்துள்ளது.

2. கண்ணீர் சிந்தாதே! கலகம் செய்!

3. வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியது யார்?
ரோகித் வெமுலாவின் தற்கொலை கூறும் செய்தி என்ன? அது, உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் ஆதிக்க சாதிவெறியை அம்பலமாக்குகிறதா, இந்துத்துவ சக்திகளின் பாசறைகளாக அவை மாற்றப்படுவதைக் காட்டுகிறதா, ‘நல்லெண்ணமிக்க’ இந்து நடுத்தர வர்க்கத்தின் இரக்கமின்மையைச் சாடுகிறதா?

4. தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்!
தலித்துகளுக்கான கல்லூரி என்ற பெயரில் தலித் மாணவர்களைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, போலீசு – ரவுடிகள் துணையுடன் அவர்களைக் கொத்தடிமைகளாகவும் நடத்திய ஒரு கிரிமினல் கும்பலை மூன்று மாணவிகளின் மர்ம மரணம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

5. வாசுகியின் கொலைக் கூட்டாளிகள்!
தாளாளர் வாசுகி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான இயக்குநரகம், மாவட்ட நிர்வாகம், போலீசு, ஓட்டுக் கட்சிகள், தலித் பிழைப்புவாதிகள் மற்றும் உயர்நீதி மன்றம் வரையிலான ஒரு பெரிய வலைப்பின்னல்தான் இம்மாணவிகளின் உயிரைப் பறித்திருக்கிறது.

6. வெண்ணெய் திருடன் கண்ணன், எண்ணெய் திருடன் மோடி
திருடனைக் கடவுளாகவும், திருட்டைப் பகவானின் லீலையாகவும் கொண்டாடுகிறது இந்துத்துவம். அதன் வழி வந்த மோடி, வரிக்கொள்ளையை அரசின் லீலையாக்கி விட்டார்.

7. காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி!

8. பிரிக்கால் இரட்டை ஆயுள் தண்டனை : முதலாளிகள் – நீதிமன்றம் கூட்டுச் சதி!

9. சல்லிக்கட்டு ஒப்பாரியும் பிணத்தை மறித்த வீரமும்!
தாழ்த்தப்பட்ட முதியவரின் பிணத்தை மறிக்கும் பொருட்டு உயர்நீதி மன்ற உத்தரவை மீறிய தமிழ் வீரம், சல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்தை ‘எதிர்த்து’ மொட்டை போட்டுக் கொண்டது.

10. சென்னையின் அழிவில் நீதிபதிகளின் பங்கு
ஆறுகளும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் என்றும் நீதிமன்றங்கள்தான் இவற்றைப் போற்றிப் பாதுகாப்பதாகவும் உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கருத்து பொய்யானது.

11. மூடு டாஸ்மாக்கை! – சிறப்பு மாநாடு, கலை நிகழ்க்கிகள்

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க