களச் செய்தி – 1
வழக்கறிஞர் மானம் காக்கும் பேரணி
ஜூன் 6, சென்னை
இந்தியாவில் எங்கும் இல்லாத கருப்புச் சட்டம் தமிழன் மீது மட்டுமா?
பார் கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து வழக்கறிஞர் சமூகத்தை நீதிபதிகளின் கொத்தடிமையாக்காதே!
தகவல்
வழக்கறிஞர்கள்,
தமிழ்நாடு
களச் செய்தி – 2
விருத்தாசலம் – பெரியவடவாடி இராமநாயக்கம் ஏரி ஆக்கிரமிப்பு!
“அரசின் சட்டங்களை மயிருக்கு சமமாக மதிக்கும்” ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் விஜயமாநகரம் சுந்தரமூர்த்தி, இராஜசேகர்!
தமிழக அரசே!
- “முடிந்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றிப் பார்” என சவால் விட்டு அதிகாரிகளை மிரட்டும் சுந்தரமூர்த்தி, இராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்காததன் மர்மம் என்ன?
- ஆக்கிரமிப்புக்குத் துணை போன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடு?
உழைக்கும் மக்களே!
- ஆறு, ஏரி, குளங்கள் – நமது சொத்து!நம் சொத்தை பாதுகாக்க அணிதிரள்வோம்!
- அதிகாரத்தை கையில் எடுப்போம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம் – 97912 86994
நம் நாடு பேருக்குத்தான் சுதந்திரநாடு ஆனால் அடிமைகள் அதிகம் 1. இன்றும் சாதி அடிமை உண்டு, இங்கு அடிமை படுத்த படுகின்றனர். 2. ஒவ்வொரு துறைகளிலும் கடைநிலை ஊழியர்கள் இப்பொழுதும் அடிமைதான். 3. அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள தாங்களே இப்பொழுதும் அடிமைகள்தான். இப்படி நெறைய அடிமைகள் உண்டு.
நம் நாட்டில் சுயநலவாதிகள் இருக்கும் வரையில் அடிமைகள் அதிகரித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.
நாட்டிற்காக உழைப்பவர்கள் யார்? தனக்காக உழைப்பவர்கள் தான் அதிகம்.
டாஸ்மாக் பிரச்சனையை கையாண்டு சிறு பொரியளவு ஆட்சியளரிடம் தாக்கத்தை உண்டாக்கி விட்டு, இப்போது ஆக்கிரமிப்பு
பிரச்சனையை மறுபடியும் தீவிரப்படுத்தும் மக்கள் ஆதிகாரத்திற்கு வாழ்த்துக்கள். டாஸ்மாக் எதிர்ப்பையும் தொடரவும்.