privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்காவிரி : கேலி செய்யும் சு.சாமியை செருப்பாலடி - கடலூர் உரைகள்

காவிரி : கேலி செய்யும் சு.சாமியை செருப்பாலடி – கடலூர் உரைகள்

-

நீர்நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்
கடலூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “நீர்நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்” என ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் கடைவீதிகள், பேருந்துகள், தேநீர் விடுதிகள், அரசு அலுவலகங்கள் என மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் கடந்த ஒருவார காலமாக கடலூர் வட்டாரத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் மஞ்சக்குப்பம் விக்னேஷ் மகாலில் 9.10.2016 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. பகுதிவாழ் மக்கள் பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு அரங்கத்தை நிரப்பினர்.

இதில் கலந்து கொண்டு பேசிய மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தின் பொருளாளர் திரு.பூங்குன்றன்,

sima-cuddalore-slider
சைமா சாயப்பட்டறை கழிவு (கோப்புப் படம்)

“சாயப்பட்டறைகளின் கழிவுகளால் கோவை, திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளை நாசமாக்கி நஞ்சாக்கியவர்கள் சவுத் இந்தியன் மில்ஸ் அசோசியசன் என்கிற சைமா சாயப்பட்டறை கொலைகாரர்கள். தங்கள் பகுதியில் விளை நிலங்களையும், நீர் நிலைகளையும் அழித்து உருவான சாயப்பட்டறைகளை எதிர்த்த மக்களின் போராட்டங்களை அரசும், போலிசும் முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு ஒடுக்கியது. இங்கே அரசு மக்களின் நலனுக்காக எங்கே உள்ளது. எனவே உண்மையில் மக்களுக்கான அரசு வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம் வேண்டும்” என்று பேசினார்.

அடுத்து பேசிய ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் சேகர்,

“இப்ப ஆயுத பூஜைநேரம், இன்றைக்குக் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறீர்கள் என்றால் உண்மையில் என்னால் நம்மவே முடியவில்லை. இப்போதல்லாம் பக்தி முத்தி போயி எல்லாம் குறிசொல்லும் காலமாகி போய்விட்டது. இப்ப நமக்கு இரண்டு பிரச்சனைக்கு விடை தெரியாமல் தவிக்கிறோம். அது காவேரி பிரச்சனை அது நம்ம பிரச்சனை அதாவது தமிழ் நாட்டோட பிரச்சனை. இன்னொரு பிரச்சனைக்கு கோயில் கோயிலா போவது, மொட்ட போடறது, பால்குடம் எடுப்பது, மண்சோறு சாப்பிடறது என்று கரைவேட்டி போட்ட கட்சிக்காரங்க இப்ப அப்பல்லோவ சுத்தி மஞ்ச வேட்டியா தெரியுது. போனவருடம் இதே சீசனில் மழையில் தவித்தோம் அரசாங்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை, இந்த வருடம் அரசாங்கம் அப்பல்லோவிலேயே செயல்படுது. காவேரி பிரச்சனைக்கும், காவேரி தாயோட பிரச்சனைக்கும் ஒரே தீர்வு, சாமி வந்து குறிசொன்ன சரியா இருக்குமா?” என்ற போது அரங்கம் முழுக்க கரவொலி எழுப்பினார்கள் மக்கள்.

sima-cuddalore-06
பன்னாட்டு முதலாளிகளுக்கு மோடியின் சேவை (கோப்புப் படம்)

“சிங்கிள் பெஞ்ச், டபுள் பென்ச், ட்ரிபில் பென்ச் என்று பல பென்ச் வந்தாலும் உமாபாரதி, மல்லிகா அர்ஜீன் கார்கே போன்றவர்களின் கண் பார்வையில்தான் அது இயங்குது. கர்நாடகாவில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்க எத்தகைய கீழ்த்தரமான வேலைகளையும் செய்து இனவெறியை தூண்டும் சதிவேலையில் ஈடுபட்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளன சமீபகால சம்பவங்கள். எனவே இனியும் நாம இப்படி இருந்தோம்னா செத்து மடிந்துதான் போகவேண்டும். மொத்த தமிழ்நாடும் கார்ப்பரேட்டு கம்பனிகளோட வளர்ச்சிக்காக மாறிபோய் விட்டது. வேதாந்தா கம்பெனியை விரட்ட ஆதிவாசி மக்கள் வில்லின் நுனியில் அதிகாரத்தை செலுத்தினார்கள். விரட்டியடிக்கப்பட்டது வேதாந்தா நிறுவனம். இங்கே நம்முடைய கனிமவளங்களை சுரண்டி நீர்நிலைகளை அழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளையும், பயங்கரவாத பூச்சாண்டி காட்டி பயங்கரவாதம் செய்யும் காவி தீவிரவாதிகளை வீழ்த்த வேண்டும்” என்று உரையாற்றினார்.

பெருமாள் ஏரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்க செயலாளர் திரு சண்முகம் பேசியபோது, “நீர்நிலைகள் பாதுகாப்பை அரசாங்கம் எந்த வகையிலும் சரிசெய்யாது. 25 வருடமா வெள்ளம் வடிவதற்கு யோசன சொல்லி போராடிவருகிறோம். மழைக்காலத்தின்போது மொத்த தண்ணீயும் இங்கதான் வந்து சேருது. இதுக்கு கடல்ல கலக்கிற இடம் ஒரேவழி தான். அதுவும் வளைந்து நெளிந்து போவும், வாய்க்காவும் எதுவும் சுத்தமா இருக்காது, தண்ணீ தேங்கிப் போயி பயிரெல்லாம் அழிந்து நாங்க சாகிறோம். இந்த வெள்ள தண்ணீயை வடியவைக்க இரண்டு முகத்துவாரம் வேணும்முன்னு போராடி வருகிறோம். எந்த அதிகாரியும் செய்யல, ஒன்னு ஒன்னுக்கும் மனுகொடுத்து கேட்டாலும் விவசாயிகள் அலையணும், லஞ்சம் கொடுக்கணும் அப்பதான் ஃபைல் அதிகாரிங்க டேபிளில் இருந்து நகரும்.

cuddalore-floods-4
கடலூர் வெள்ளம் (கோப்புப் படம்)

பொதுப்பணித்துறைன்னு ஒன்னு இருக்குது, ஆனால் அது பொதுப்பணியை செய்யறது இல்ல, மணல் அள்ளறதுலயும், கட்டட காண்ட்ராக்டிலேயும், கமிசன் பணியைதான் பார்க்குது. அப்பறம் எப்படி நாம நல்லாயிருப்போம். எங்க கிராமத்த சுத்தி இருக்கிற குளங்கள எங்க சொந்த முயற்சியில நாங்களே ஜே.சி.பி வைத்து பல கிலோமீட்டர் சுத்தம் செய்து இருக்கிறோம். அடுத்த மழைக்கு பெருமாள் ஏரியை சுத்த செய்யலைன்னா பெரிய அழிவு வரும்.

போன மழையின்போது புதிய தலைமுறை டிவி வந்ததது. நீர்நிலைகளை சுத்தம் செய்வது சம்மந்தமாக விவாதம் நடத்துச்சி. அப்போ என்னை பேட்டி எடுத்தாங்க. அவங்க தேர்வு செய்து இருக்கிற குளத்தை சுத்தம் செய்வதற்கு எங்க ஊரில் இருக்கும் ஆட்களையும் என்னையும் கூப்பிட்டாங்க. எங்க ஊரு பெருமாள் ஏரியையே சுத்தம் செய்ய காணோம். 14 கிமீ நீளம் 1 கிமீ அகலம் 20 மீட்டர் தண்ணீரை தேக்கலாம். இதச் செய்யறதுக்கு அரசாங்க அதிகாரிங்க கிட்ட கேட்டுக்குட்டு இருக்கிறோம். எங்க ஊருகாரங்க வருவது இருக்கட்டும், அப்படியே வந்தாலும் ஒருநாள் இரண்டுநாள் வரலாம். ஆனால் இப்ப உள்ள நிலைமையில சாத்தியமில்ல, இதுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவர்கள் வருவார்களா? இல்ல பச்சமுத்து வருவாரா? அவர் மகன்தான் வருவாரா? நீங்க சொல்லி கொடுப்பதை பேசறதுக்கா நாங்க இருக்கிறோம். எங்க பிரச்சனை எல்லாம் உங்களுக்கு தெரியாது, உங்க விளம்பரத்துக்காக எங்ககிட்ட வராதிங்க என்று சொன்னதுபோது அவர் கோபித்து கொண்டார்” என்று அம்பலப்படுத்தியபோது அரங்கில் சிரிப்பொலியுடன் கைதட்டினர்.

அடுத்து பேசிய தி.மு.க மாணவரணி செயலாளர் திரு இள.புகழேந்தி, “வரலாறு என்பது கங்கைக் கரையில் இருந்து துவங்குவதாக தவறாக உள்ளது, அது காவேரியில் இருந்து துவங்கப்பட வேண்டும். ஏற்கனவே நம் திராவிடன் வரலாறும், தமிழன் வரலாறும் இரட்டடிப்பு செய்ததுபோல் இப்போது இந்த கயவர்கள் நம்முடைய ஆறுகளையும், ஏரிகளையும் அழித்து நம்முடைய விவசாயத்தை அழித்து நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி ஆட்சியாக மாறிபோய்விட்டது.

Subramanian-Swamy_1
“காவேரிக்காக ஏன் போராட்டம், கடல் தண்ணியை நல்ல தண்ணீயாக்கினால் விவசாயம் செய்யலாம், குடிக்கலாம், குளிக்கலாம்” என்று நக்கல் செய்கிறான்” (சுப்பிரமணியசாமி)

இயற்கை அழிந்தால் உயிரினம் அழியும், ஆசியாவிலேயே மிகப்பெரிய டெல்டா பகுதியாக உள்ள இப்பகுதியில் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் அழிந்துள்ளன. இந்நிலையில் ஒருவர் பறந்துகொண்டு இருக்கிறார், இன்னொருவர் படுத்து கொண்டு இருக்கிறார். பறந்து கொண்டு இருப்பவர் தன்னுடைய நாடு எது என்று தெரியாமல் உலக நாடுகளை சுற்றிகொண்டிருக்கிறார். அவர்தான் நரேந்திர மோடி. இன்னொருவர் படுத்துக் கொண்டு அப்பல்லோவில் இருக்கிறார். எல்லா பிரச்சனைகளையும் மறைப்பதற்கு ஏதோ ஒரு பிரச்சனையை பெரிதாக்கி அதையே பேசவைத்து திசைமாற்றுவது இவர்கள் குணம். நபர்கள் வேறு என்றாலும் இவர்கள் சிந்தனையும், செயலும் ஒன்றுதான். கர்நாடகாவில் கலவரம் செய்கின்ற காவேரி நீரை தர மறுக்கின்றவர்களின் நோக்கமும் ஒன்றுதான். அது என்ன நோக்கம்? தமிழன், தமிழர்கள் மீதான வெறுப்புணர்ச்சியையும், பகையுணர்ச்சியையும் வளர்ப்பதன் மூலம் ஆட்சியை பிடிக்க அவர்கள் செய்யும் சூழச்சி. அங்கே ஆட்சியை பிடிக்க சூழ்ச்சி, இங்கே ஆட்சியை தக்க வைக்க சூழ்ச்சி.

நாம் போராடுகிறோம். பேருந்துகளை நிறுத்துகிறோம், கடைகளை மூடுகிறோம், மறியல் செய்கிறோம், ஆர்ப்பாட்டம் செய்கிறோம், கைது செய்யப்படுகிறோம். ஆனால் ஒரு பார்ப்பனிய பயங்கரவாதி அமைதியாக இருந்துகொண்டு பேசுகிறான். “காவேரிக்காக ஏன் போராட்டம், கடல் தண்ணியை நல்ல தண்ணீயாக்கினால் விவசாயம் செய்யலாம், குடிக்கலாம், குளிக்கலாம்” என்று நக்கல் செய்கிறான். இவனைப் போன்ற நாய்களையெல்லாம் பார்த்த இடத்தில் செருப்பால் அடிக்க வேண்டும்.

நான் தி.மு.க-வைச் சேர்ந்தவன் என்பதற்காக அப்படி சொல்லவில்லை. உண்மையிலேயே தமிழர்கள் நாத்திகவாதிகள், சுயமரியாதைகாரர்கள், அவர்கள் இழிவானவர்கள், என்கிற விசமத்தனமான பார்வைதான் சுப்பிரமணிய சுவாமிக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் உள்ளது. இங்கே எத்தனை ஆணையங்கள், வாரியங்கள், ஆய்வுக் குழுக்கள், நிபுணர் குழுக்கள் வந்தாலும் அரசியல் ஆதாயத்தின் கீழ்தான் நிறைவேற்றலாமா? வேண்டாமா என்பதை முடிவெடுக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்று பேசிக்கொண்டே நமக்கு ஓரவஞ்சனை செய்கிறார்கள். எனவே ஆணையங்கள், தீர்ப்புகள், நிபுணர் குழுக்கள், மேலாண்மை வாரியம் போன்றவை தீர்வை தராது.

நாலு பேரு இருந்தா டிமாண்டு 400 பேர் இருந்தால் கமாண்டு இதுதான் மக்கள் அதிகாரம். இந்த நாட்டை பாதுகாக்கவும், இயற்கையை பாதுகாக்கவும், போராடுவோம். வ.உ.சி, சுப்பரமணிய சிவா, திருப்பூர் கொடிகாத்த குமரன் போன்றவர்கள் பாதையில் நாட்டை காப்போம். தந்தை பெரியாரின் பாதையில் ஆர்.எஸ்.எஸ், மோடி, சுப்பரமணியசாமி போன்ற பயங்கரவாதிகளை வீழ்த்த மக்கள் அதிகாரமாக ஒன்றிணைவோம்” என்று முடித்தபோது அரங்கில் நீண்டநேர கரவொலி ஒலித்தது.

இறுதியாக மக்கள் அதிகார மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் பேசுகையில்,

“காவேரி சிக்கல் என்பது தண்ணீர் சிக்கல், நதிநீர் சிக்கல்களை உள்ளடக்கியது. கடந்த 150 கால வரலாற்றில் எப்போதுமே இருதேசிய இனங்களுக்கும் இடையில் இப்படிப்பட்ட மோசமான பதற்றம் இருந்ததில்லை. தமிழர்களை அடித்த ஒவ்வொருவனும் 91 கலவரத்தை தெரியுமா என்று சொல்லி சொல்லி அடித்துள்ளார்கள், வாட்டாள் நாகராஜன் என்ற கன்னட இன வெறியனின் அடியாட்கள். பி.ஜே.பி, ஆர்,எஸ்,எஸ்-காரர்கள் உண்மையிலேயே கர்நாடக மக்கள்மீது உள்ள பாசத்தால் செய்யவில்லை. இவர்கள் இனவெறியை தூண்டுவதன் மூலம் அரசியல் உள்நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. உங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வேண்டுமா என்று கர்நாடக மக்களுக்கு வெறியூட்டுகிறார்கள்.

உண்மையில் தண்ணீர் வேண்டும் என்பவர்கள் கர்நாடகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர விடுதிகள், உல்லாச மாளிகைகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றிற்கு தண்ணீர் தேவை, இதற்காகவே காவேரியை சீரழித்து உள்ளார்கள். இவை மட்டுமின்றி பெங்களூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 900 ஏரி, குளங்கள் இருந்தன. அவை எல்லாம் இன்று குடியிருப்புகளாக மாறிவிட்டன. உலகமயமாக்கலின் விளைவாக பெரிய குடியிருப்புகள், மேட்டுக்குடியினருக்கு தண்ணீர் தேவையாக உள்ளது. இதற்காகவே தமிழகத்தின் டெல்டா அழிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் காடுகள் அழிக்கப்பட்டு உள்ளன. ஆற்றின் நீர்நிலைகள் அனைத்தும் தொழிற்சாலைகளால் நஞ்சாக்கப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வந்த நீராதாரங்கள் அழிக்கப்படுவதோடு அதோடு விவசாய நிலங்களும் அழிந்து போய்வருகின்றன. இதை செய்கின்றவர்கள் அரசியல், அதிகாரவர்க்க கிரிமினல்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், போலீசு கிரிமினல்கள். இந்த கூட்டணிதான் அனைத்தையும் இயக்குகிறது.

cuddalaore-pp-conference-on-protecting-water-bodies-7
தோழர் காளியப்பன் உரை

இன்று தமிழகத்தின் ஆறுகளில் மணல்கொள்ளை, நீலகிரி மற்றும் ஆந்திர காடுகளில் மரங்கள் வெட்டி காடுகள் அழிப்பு, மீத்தேன் எரிவாயு திட்டம், கெயில், செயில் குழாய் பதிப்பு கூடங்குளம் அணுஉலை என்று மொத்த நாடும் இந்த கிரிமினல் கும்பலால் அழிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் உத்தரவுகளை அதிகாரிகளே மதிப்பதில்லை, நீதித்துறையின் உத்தரவுகளை எந்த மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நாட்டைகாக்கும் அரசு கட்டமைப்பு என்பது எதையும் பாதுகாக்க முடியாமல், அமுல்படுத்த முடியாமல் தோற்றுபோய் விட்டன என்பதை ஒவ்வொரு போராட்டங்களும், சம்பவங்களும் உணர்த்துகின்றன.

காவல்துறையும், நீதித்துறையும் மக்களுக்காக தாம்செய்ய வேண்டிய கடமையிலும், பொறுப்பிலும் இருந்து விலகி ஓடிபோனது மட்டுமல்லாமல் நியாயமான கோரிக்கைகளுக்காக மக்கள் போராடும்போது அடக்கி ஒடுக்குகின்ற கட்டமைப்பாக மாறிவிட்டது.

இனி இவர்கள் செய்ய தவறியதை நாம் செய்வோம், தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் இரட்டை வேடம்போடும் தமிழினத்தின் மீதான வெறுப்புடன் ஓரவஞ்சனை செய்யும் மோடி அரசுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவோம். தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களான வருமானவரித் துறை, ரயில்வே, தொலைபேசி, கஸ்டம்ஸ், தபால் அலுவலகங்கள் போன்ற மத்திய அரசு சம்மந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களையும் முற்றுகையிட்டு மூடுவதன் மூலமாகத்தான் இந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை பணிய வைக்க முடியும். எங்கெல்லாம் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டுமோ, எங்கெல்லாம் ஆக்கிரமிப்பில் உள்ளதோ அங்கெல்லாம் மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து கொள்ளும், மாற்று அரசு நிர்வாகமாய் நாமே முன்னேறுவோம்” என்று கூறி முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கடலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க