privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விசென்னை பல்கலை : ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு !

சென்னை பல்கலை : ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு !

-

தருண் விஜய் – கேலிச்சித்திரம் : முகிலன் (கோப்புப் படம்)

ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு…..

அன்பார்ந்த மாணவர்களே வணக்கம்….

முன்னால் எம்பி தருண் விஜய் நமது பல்கலைக்கழகத்திற்கு (சென்னை பல்கலைக்கழகம்) வருகிறார். யார் அவரை அழைத்தது? எதற்காக வருகிறார்? ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி தான் அவரை அழைத்து வருகிறது. மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து பாசிச அடக்குமுறைகளை ஏவி வருகிறது. வரலாற்றுக்கு மாறான பொய்களையும் மதவெறி கற்பனைகளையும் பாட நூல்களில் திணித்து வருகின்றது.

கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஏபிவிபி மூலம் நுழைந்து மாணவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களைச் சாதி, மத அடிப்படையில் பிரித்து வருகிறது. குறிப்பாக இவர்கள் உயர்கல்வி நிறுவனங்களைக் குறி வைத்திருக்கின்றனர். உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே இயல்பாக உள்ள முற்போக்கு, ஜனநாயக கருத்துக்களை ஒழித்துக்கட்டிவிட்டு மதவெறி கொள்கைகளைத் திணிப்பது தான் இவர்களின் நோக்கம். இதை எதிர்த்துப் போராடும் மாணவர்களைத் தேச விரோதிகளாகச் சித்தரிக்கிறது பா.ஜ.க. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா கொள்கைக்கு எதிராகவும், மாணவர்களின் உரிமைக்காகவும் போராடிய ரோஹித் வெமுலாவை ஏபிவிபி தூண்டுதலின் பேரில் நிறுவனப் படுகொலை செய்தது ஹைதராபாத் பல்கலைக்கழகம்.

ஜேஎன்யு-வில் இடதுசாரி கருத்துக்களைப் பேசி வந்த மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரித்து சிறையில் அடைத்தது பா.ஜ.க அரசு. இந்த நடவடிக்கைக்கெதிராக மாணவர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளும் போராடினர். பா.ஜ.க தனிமைப்படுத்தப்பட்டு அம்பலமானது. அதன் பிறகு நஜீப் என்கிற மாணவர் திடீரென்று காணாமலடிக்கப்பட்டார். இன்று வரை அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கு பின்னாலிருப்பது ஏபிவிபி கும்பல் தான்.

  • நஜீப்

    அதே போல பெரும்பான்மை ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக சமூகநீதி கொள்கையை ஒழித்துக்கட்டும் நோக்கில் நீட்  NEET நுழைவுத்தேர்வைத் திணிக்கிறது.

  • புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் நவீன குலக்கல்வியை திணிக்கிறது.
  • நீட் தேர்வுக்கு இணையாக பொறியியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வைத் திணிக்கவிருக்கிறது.
  • நாடு முழுவதுமுள்ள பிராந்திய மொழிகளை ஒழித்து செத்துப்போன சமஸ்கிருதத்தை திணிக்கிறது. அதற்காக 1500 கோடி மக்கள் பணத்தை ஒதுக்குகிறது. கல்வித்துறையில் அன்னியமுதலீட்டை அனுமதித்து ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்க முயற்சிக்கிறது.
ரோகித் வெமுலா

பா.ஜ.க அரசின் இந்த நோக்கங்களை எல்லாம் தடையின்றி அமல்படுத்துவதற்காகத் தான் ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இயங்கி வருகிறது. சுயமரியாதை மண்ணான தமிழகத்தில் கால் பதிக்கப் படாதபாடு படும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழ் மொழியின் உயர்வையும், திருக்குறளின் மேன்மையும் பேசி, கொல்லைப்புற வழியாக காலூன்ற முயற்சிக்கிறது. இந்த வேலைக்காக ஒதுக்கப்பட்டிருப்பவர் தான் தருண் விஜய். தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை மென்மையான முறையில் பேசிவரும் நரி தான் இந்த தருண் விஜய். நமது பல்கலைக்கழகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்குவதற்காக தான் தருண் விஜயை அழைத்து வருகிறது ஏபிவிபி இவர்களை பல்கலைகழகத்தில் அனுமதிப்பது வரலாற்றுப் பிழையாகும்.

எனவே சென்னைப் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் நோக்கத்துடன் நுழையும் ஆஎஸ்.எஸ் தருண் விஜய்யை மாணவர்களாக ஒன்றிணைந்து விரட்டி அடிப்போம்.

இடம்: சென்னைப் பல்கலைக்கழக நுழைவுவாயில், நாள்: 22.02.2017,  நேரம்: 01.15pm

தகவல்: STUUNOM,
STUDENTS UNION UNIVERSITY OF MADRAS