privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் - செய்தித் தொகுப்பு 1

தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 1

-

நீலமலை

‘போராடு செங்கொடி ஏந்திப் போராடு’ என்ற முழக்கத்தின் கீழ் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில்
– மே தின தியாகிகளால் குருதி சிந்தி பெறப்பட்ட 8-மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகள் இன்று இல்லாத போது, இழந்த உரிமைகளைப் பேராடிப் பெறாமல் மே தினத்தை கொண்டாட இயலாது.  எனவே செங்கொடி ஏந்தி புரட்சிகர சங்கங்களில் இணைந்து அனைத்து ஒடுக்குமுறை, சுரண்டல்களை ஒழித்துக்கட்டப் போராடுவோம்.புதிய ஜனநாயகம் படைப்போம் !

–  என்று தொழிலாளர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக நீ.அ.தொ.ச. மாவட்ட பொருளாளர்  தோழர் விஜயன் தலைமையில் மாவட்ட செயலாளர் தோழர் பாலன் கொடியேற்றினார்.  மே தின தியாகிகளை போற்றும் விதமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து தோழர். விஜயன் அவரது தலைமை உரையில் மே நாள் தியாகிகளது நினைவை நெஞ்சிலேந்த வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராகிய மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் தமது உரையில், இன்று நாடு முழுவதும் பெருகிவரும் போராட்டங்கள், கோரிக்கைகளை தீர்க்க முடியாமல் இந்த அரசுகளும் அரசுக் கட்டமைப்பும் தோற்றுப்போய் நிலைகுலைந்து உள்ளது. உரிமைகளை பெறவும், பிரச்சனைகளை தீர்க்கவும் இந்த அரசு கட்டமைப்பை நம்பிப்பயனில்லை.  அவற்றை தூக்கியெறிந்து மக்கள் தங்களுக்கான அதிகாரங்களை கையிலெடுக்க வேண்டும்.  அதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய நீ.அ.தொ.ச. மாவட்ட துணை செயலாளர் தோழர் ராஜா உரிமைகளை இழந்து விட்டு மே-நாள் கொண்டாடுவதால் பயன் இல்லை. சுரண்டும் முதலாளிகளே இன்று உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சொல்கிறார்கள்.  விடுமுறை அளித்து டூர் போக டிக்கட்டும் தருவது முரணாக உள்ளது. இந்த சூழ்ச்சியில் பலியாகாமல் போராடுவோம், பட்டாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம், முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்றார்.

சிறப்புரை ஆற்றிய மாவட்ட செயலர் தோழர் பாலன் போராட்டத்தால் தீர்வு கிடைத்ததா என்று சிலர் கேட்கின்றனர். போராடாமல் இன்று நம்மிடமுள்ள எந்த உரிமைகளும் போராடாமல் கிடைத்ததில்லை. அதற்கு ஒட்டுமொத்த தீர்வாக செங்கொடி ஏந்தி கம்யூனிச புரட்சிகர அரசியலின் வழிகாட்டலில் போராட வேண்டும்.  அதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன.  எனவே போராடுவோம் என்று முடித்தார்.

முடிவில் தோழர் விஜயன் நன்றியுரையாற்றினார். கொண்டாட்டத்தை மறுத்து போராட்ட நாளாக மாற்றிய இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி. தொடர்புக்கு – 90474 53204.

***

சென்னை திருவெற்றியூர்

திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் தோழர் சதீஷ் மே நாள் உரையாற்றினார்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவொற்றியூர்

***

காஞ்சிபுரம்

மே தினத்தில் சூளூரைப்போம். போராடு செங்கொடி ஏந்தி போராடு என்ற முழக்கத்தின் அடிப்படையில் பு .ஜ. தொ .மு. சார்பாக மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையேற்று 5 மணிக்கு வீர வணக்கத்துடன் பேரணி துவங்கியது சிறுநகர் இசை சமர் கலைக்குழுவினரின் பறை இசையுடன் பேரணி புறப்பட்டது.

மே தின தியாகிகளுக்கும் உழைக்கும் மக்கள் விடுதலைக்கு போராடி உயிர்நீத்த புரட்சியாளர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் முழக்கமிட்டும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராக போராட வேண்டி விண்ணதிர முழக்கமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று பேசிய மாவட்ட தலைவர் தோழர் சரவணன் மே தின வரலாற்றின் நோக்கத்தை நினைவுகூர்ந்து முதலாளித்துவம் தொழிலாளர்களின் உரிமையும் மொத்த சமுதாயத்தையும் சூறையாடுவதை ஒப்பிட்டு இதற்கு எதிராக போராட வேண்டும் எனஅறைகூவி தலைமை உரையை நிறைவு செய்தார். இதையடுத்து மேநாள் உரையாற்றிய மாவட்ட செயலாளர் தோழர் சிவா பேசுகையில் மே நாளில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பணியென்பது மறுகாலனியாக்கத்ததை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தி உரையை நிறைவுசெய்தார். மாவட்டதுணை தலைவர் தோழர் ஏழுமலையான் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிவுற்றது. இந்நிகழ்ச்சியில் புஜதொமு, இணைப்பு சங்கத்தினர், புமாஇமு, மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களுடன் 165 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். இவ்வார்பாட்டம் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்றது. தொடர்புக்கு :8807532859.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் தொடர்புக்கு : 8807532859

***

வேலூர்

மே 1 உலக தொழிலாளர்கள் தினத்தில், வேலூரில் பு.ஜ.தொ.மு சார்பில், மத்திய, மாநில அரசுகளை, மாலை 4.00 மணியளவில், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே, “போராடு செங்கொடி ஏந்தி போராடு” என்ற தலைப்பின் கீழ் மாவட்ட செயலாளர், தோழர் சுந்தர் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ம.க.இ.க. தோழர் வாணி, பு.ஜ.தொ.மு இணை செயலாளர் தோழர் சரவணன், பு.ஜ.தொ.மு மாநில தலைவர் தோழர் முகுந்தன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். முழக்கங்கள், பாடல்கள், பாடப்பட்டது. முழக்கங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பேசுகையில்…

”மே-தினம் என்பது இந்த ஆளும் வர்க்கமும், ஊடகங்களும், ஓட்டுக்கட்சிகளும் சொல்கின்ற மாதிரி கொண்டாட்ட நாள் இல்லை, இது பல தொழிலாளிகள் ஈன்னுயிர் இழந்து 8-மணி நேர வேலை, 8-மணி நேர கேளிக்கை, 8-மணி நேர ஒய்வு, என்ற உரிமை பெற்று தந்த நாள். ஆனால் இன்று அந்த உரிமைகள் ஏதும் இன்றி நசுக்கப்பட்டு கொன்டு இருக்கிறோம். எனவே அந்த உரிமைகளை மீட்கும் நாளாகவே போராட்ட நாளாகவே இன்று இருக்கிறது.”

”அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றாலும் அதை தலைமை இல்லாமல் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. அதற்கு புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரள வேண்டும்”

”8-மணி நேர வேலை என்பது இப்போது எங்கும் இருப்பதில்லை, ஏன் இங்கிருக்கும் காவல் துறையினருக்கே இந்த நிலைமை தான், அவருக்கும் இந்த செங்கொடி போட்ட தோழர்கள் தான் போராட வேண்டியிருக்கிறது”

”இந்தியாவிலயே அதிகமாக போராட்ட நடைபெற்ற மாநிலம், தமிழ்நாடு தான் விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், டாஸ்மாக்கிற்கு எதிராக பெண்களின் போராட்டம், I.T. ஊழியர்கள் என அனைத்து தரப்பினர்கள் மீதும் இந்த பாசிச அரசு அடக்குமுறையை செலுத்துகிறது”

ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள், குழந்தைகள், உள்ளிட்ட 100-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
வேலூர்

***

திருவள்ளூர்

மே நாளையொட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் மே நாள் உரையாற்றினார்.

முன்னதாக, கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் துவங்கி, இரட்டம்பேடு சாலை வழியாக தபால் நிலையம் வரை பேரணிக்கும், தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டத்துக்கும் அனுமதி வழங்கியிருந்தார், கும்முடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் டில்லிபாபு. ஆனால் மே 01 காலையில் ‘திடீரென’ காவல் சட்டம் 30(2) அமுலுக்கு வந்து, திடீரென பேரணிக்கு அனுமதி மறுத்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்துவிட்டார் காவல் ஆய்வாளர் டில்லிபாபு. அனுமதியளித்தவரே, அவசர அவசரமாக எழுத்து மூலம் அனுமதி மறுத்ததற்கான காரணத்தை பெரிய ஆராய்ச்சி செய்தெல்லாம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை என்றாலும் அனுமதி மறுப்பதற்கு புரட்சிகர அமைப்பு என்ற தகுதியே போதுமானது என்பதை உழைக்கும் மக்களுக்கு தாமாகவே உணர்த்தி விட்டார் காவல் ஆய்வாளர்.

மே 1 உருவான நாள் தொட்டு இன்று வரை தொழிலாளர்களின் பிரச்சனை தீரவில்லை, தீர்க்கவும் வக்கற்று தான் இந்த அரசமைப்பு உள்ளது. அரசை நம்பிப் பயனில்லை. தொழிலாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டுமெனில் புதிய ஜனநாயகப் புரட்சி தான் தீர்வு என்றும், அதற்கு தொழிலாளிகள் புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு.வில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்து தனது தலைமையுரையை நிறைவு செய்தார், மாவட்டச் செயலர் தோழர் விகந்தர்.

முழக்கங்களைத் தொடர்ந்து பேசிய தோழர் ம.சி.சுதேஷ்குமார், மே நாளின் முக்கியத்துவம் மறக்கடிக்கப்பட்டு, மேநாள் ஒரு கொண்டாட்ட நாளாகவும், விடுமுறை நாளாகவும் தொழிலாளிகளை பார்க்கும் வண்ணம் சமூகம் சீரழிந்துள்ளது என்று துவங்கி, மோடி அரசின் பல்வேறு தொழிலாளர் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தினார். மூன்று திரிசூலக் கொள்கைகள் என்ற பெயரில் மோடி அரசு மக்களின் மீது நடத்தும் தாக்குதலை நாம் முறியடிக்க வேண்டும். தனியார்மய, தாராளமய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை தொழிலாளிகள் மீதான தாக்குதல், அடக்குமுறை தொடரும். இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளை தகர்க்காமல் தொழிலாளி வர்க்கத்துக்கு விடிவில்லை. அதை ஒரு புரட்சிகர தொழிற்சங்கத்தினால் தான் தகர்க்க முடியும் என கூறி அதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமென கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள், தொழிற்சங்க ஜான்பவான்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், லட்சக்கணக்கில் தொழிலாளிகளை உறுப்பினராக வைத்திருப்பவர்கள் யாரும் கும்முடிப்பூண்டியில் மே நாள் கூட்டம் நடத்தாத நிலையில், புரட்சிகர அரசியலுக்கே உரிய தன்மையோடு விண்ணதிரும் முழக்கங்களுடன்    நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளைக் கொண்டு நாம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் பகுதி மக்கள் சிறுகடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றது.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

அனுமதி மறுப்பு கடிதம்

திருவள்ளூர் மாவட்டம் ” கும்மிடிப்பூண்டி உட்கோட்டம். கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் – பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான காவல்துறை செயல்முறை உத்தரவு

Present: P. டில்லிபாபு
காவல் ஆய்வாளர்,
கும்மிடிப்பூண்டி உட்கோட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்.

Pettioner: திரு.எம். விகேந்தர்,(மாவட்ட செயலாளர்)
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்

  1. தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள ஊர்வல பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கிடும் உத்தரவு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பெறவேண்டும்.

  2. கும்மிடிப்பூண்டி உட்கோட்டத்தில் காவல் சட்டம் 30(2) அமுலில் உள்ளது.

  3. எனவே தாங்கள் மனுவானது அனுமதி மறுக்கப்படும் நிலையில் உள்ளது.

  • மேலும் தாங்கள் நிகழ்வினை குறிப்பிட்டுள்ள காரணங்களால் அனுமதி மறுக்கப்படுகிறது.

  • மாவட்ட காவல் கண்காணிப்பாளின் ஊர்வலம் செல்வதற்கான அனுமதியும் பெறவில்லை.

  1. எனவே இன்றைய நாளில் தாங்கள் நிகழ்வினை நடத்திட விரும்பினால், ஊர்வலமாகமோ, பேரணியாகவோ செல்லாமல், கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் அருகில் வாகன போக்குவரத்திற்கு இடையூறின்றி தெருமுனை பிரச்சாரம் மட்டுமே செய்வதென முடிவெடுத்தால் அனுமதிக்கு பரிசிலனை செய்யப்படும் என்பது அறிவுறுத்தப்படுகிறது.

  2. மீறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இப்படிக்கு
இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்
கும்மிடிப்பூண்டி

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்

***

திருவாரூர்

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

தஞ்சை-திருவாரூர்-நாகை மாவட்டங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க