மிழகத்தின் மீது இந்திய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் வன்மமும் வெறுப்பும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் இருக்கைகளை தமிழக மாணவர்களிடமிருந்து பிடுங்கி வசதிபடைத்த வடமாநில மாணவர்களுக்கு படையல் வைப்பதற்காகவே நீட் தேர்வை கட்டாயமாக்கியது மோடி அரசு. அனிதாவின் மரணத்தையும் மத்திய மாநில அரசுகளின் துரோகத்தையும் தொடர்ந்து, கடந்த ஆண்டு நீட் தேர்வுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகமெங்கும் சென்னையில் புமாஇமு நடத்திய ஆர்ப்பாட்டம் – கோப்புப் படம்.

இந்நிலையில், இந்தாண்டு தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வு மையங்களை தமிழகத்திலும் கேரள, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களிலும் ஒதுக்கியுள்ளது சிபிஎஸ்இ. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்குமாறு உத்தரவிட்டது. நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதின்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களுக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும்தான் அப்படி செய்யவில்லை எனவும் தெரிவித்தது. தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை கண்டறிய தங்களுக்கு நேரமில்லை எனவும், அதனால் வெளிமாநிலங்களில் ஒதுக்கியதாகவும் அவ்வாறு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு வினாத்தாள்களை அச்சடித்து அனுப்பி விட்டதாகவும் தெரிவித்தது. இந்த திமிர்த்தனமான பதிலை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், தமிழக மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெளிமாநில மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதிக் கொள்ளட்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேற்படி ”தீர்ப்பு” வெளியான நாள் மே 3ம் தேதி (வியாழன்கிழமை). நீட் தேர்வு 6ம் தேதி; இடையில் இருப்பதோ வெறும் மூன்றே நாட்கள். பல மாணவர்களுக்கு ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு நான்கு இரயில்கள் உள்ளன (கோவையில் இருந்து ஒன்று, மன்னார்குடியில் இருந்து ஒன்று, சென்னையில் இருந்து இரண்டு). வியாழன் அன்று சென்னையில் இருந்து கிளம்பும் அனுராவத் எக்ஸ்பிரஸ் ரயிலும், வெள்ளியன்று கோவையில் இருந்து கிளம்பும் ரயிலும் தான் உள்ளது.

சென்னையில் இருந்து ராஜஸ்தான் பயணிக்க 36 மணி நேரம் பிடிக்கும். 2159 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க இரண்டு நாட்களாகும். வெள்ளிக்கிழமை ரயிலில் இருக்கை கிடைப்பதே கடினம். முன்பதிவின்றி பொதுப் பிரிவுப் பெட்டியில் நின்று கொண்டோ, கழிவறையில் ஒதுங்கிக் கொண்டோ பயணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மொழி தெரியாத, திசை தெரியாத வெளிமாநிலம் ஒன்றுக்கு சென்று தங்கி, தேர்வு மையத்தைக் கண்டுபிடித்து தேர்வெழுத வேண்டும் தமிழக மாணவர்கள். இந்தி மாநிலம் என்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்படுமா அல்லது இந்தியில் கொடுக்கப்படுமா என்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்லை.

வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்கள் தங்களுடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டும். காமவெறி பிடித்த பா.ஜ.க மிருகங்கள் ஆளும் மாநிலம் என்பதால் அங்கே தங்களது பெண் குழந்தைகளை தேர்வுக்காக அழைத்துச் செல்லும் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் இந்த செலவுகளை எப்படி ஈடுகட்ட முடியும்? அதுவும் ஓரிரு நாட்களில் பயணத்திற்குத் தேவையான சில ஆயிரம் ரூபாயை எப்படிப் புரட்ட முடியும்? இத்தனை உளவியல் சித்திரவதைகளுடன் அங்கே செல்லும் மாணவ மாணவிகள் தேர்வெழுதும் மனநிலையில் இருப்பார்களா?

எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்கிற கோரிக்கையில் இருந்து தமிழகத்திலாவது நடத்துங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு திட்டமிட்டுக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. தமிழக மருத்துவக் கல்லூரிகளின் இருக்கைகளைப் பிடுங்கி பணக்கார வடமாநில மாணவர்களுக்கு கொடுத்ததும் இல்லாமல் தமிழக மாணவர்கள் இனிமேல் மருத்துவக் கல்லூரி வாசலையே மிதிக்க கூடாது என்பதற்கான திட்டமாகத்தான் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளனர். இந்திய ஆளும் வர்க்கம் தமிழர்களை தீண்டத்தகாத சூத்திர பஞ்சமர்களாகவே நடத்துகிறது என்பதற்கு நீட் மற்றும் காவிரி விவகாரங்களை அவர்கள் கையாளும் விதமே சாட்சி.

நீட் தேர்வு மையங்கள் விசயத்தில் “நீதிமன்றமே சொன்ன பிறகு நாங்கள் என்ன செய்வது” என கையை விரிக்கும் பாரதிய ஜனதா, காவிரி விசயத்தில் நீதிமன்றமே இறுதித் தீர்ப்பைச் சொன்ன பிறகும் ”தேர்தல் இருப்பதால் நாங்கள் என்ன செய்வது?” என இரட்டை நாக்குடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கண்டிக்கவோ, தட்டிக் கேட்கவோ வக்கில்லாத ஒரு கும்பல் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தின் மீது மத்திய மாநில அரசுகளும், உச்சநீதிமன்றமும் கைகோர்த்து மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலும் இந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது.

இனி இவர்களை நம்பி எந்தப் பலனும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். தெற்கில் ஒரு காஷ்மீர் உருவாகும் நிலையை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலே ஏற்படுத்தி விட்டது.

– வினவு செய்திப் பிரிவு.

10 மறுமொழிகள்

  1. நிச்சயமாக தெற்க்கின் காஷ்மீர் தமிழகம்தான் அத்தோடு மட்டுமல்ல பார்ப்பன பாசிச RSSக்கு சித்தாந்த மற்றும் பிற போர்க்களமும், சமாதியும் தமிழ்நாடுதான்.இந்தியாவிற்க்கு வழிகாட்டி தமிழகம்தான் 👍

  2. தமிழக மாணவர்களுக்கு கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் அல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

  3. Last year TN students fought against NEET examination;This year,they are fighting to get examination centers to be allotted in TN itself;A BJP person in a TV debate says that CBSE was knowing only the number of students from CBSE stream who are writing NEET examination and did not know the number of other candidates;This particular person used to behave very arrogantly in debates (no wonder from a BJP person).He knows very well that what he talks is nonsense.But he will talk like that only.He also says that next year on wards CBSE will not conduct NEET examination.According to his information,a new agency called National Testing Agency will conduct the NEET examination.Last year itself Mr Ravindranath raised allegations about the credibility of this NTA.So,by conducting the NEET examination with callous attitude,the Central Govt is preparing the TN people to accept the conduct of NEET examination by NTA.

  4. “நீட்” தேர்வு வேண்டாமென்றா சொல்கிறாய்?

    “நீட்” தேர்வில் அநாகரீக சோதனை போட்டு அராஜகம் நிகழ்வதாகவா விமர்சனம் செய்கிறாய்”

    எங்கள் கையில் அதிகாரம் உள்ளது. நாங்கள் நினைத்தால் உங்களை இன்னும் அலைக்கழிப்போம். மற்ற மாநிலத்தவர்கள் எப்படி தேர்வு எழுதலாம் என்று சிந்திக்கையில் தேர்வு மையத்திற்கு எப்படி செல்வது என்று உங்களை அச்சப்பட வைப்போம்.

    இதுதான் மோடி அரசின் குரூர புத்தி. ஸேடிஸம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை மோடி அரசு படைத்துள்ளது. மோடி அரசு எதைச் செய்தாலும் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கவே நாங்கள் ஆட்சியில் உள்ளோம் என்பது எடுபிடி வகையறாக்களின் வாடிக்கை.

    மற்ற மாநிலங்களை எல்லாம் விட அதிகமான கல்வி நிலையங்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கே போதுமான தேர்வு மையங்கள் கிடைக்கவில்லை என்ற சி.பி.எஸ்.இ யின் வாதம், ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்.

    தமிழக மாணவர்களை மருத்துவக் கல்வி படிக்க விடாமல் அந்த இடங்களை வெளி மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கும் மிகப் பெரிய சதியன்றி வேறென்றுமில்லை.

    “நீட்” எதிர்ப்பு இயக்கம் தீவிரமாக வேண்டிய அவசியத்தை மோடி அரசின் ஆணவமும் எடுபிடியின் கள்ள மௌனமும் உருவாக்கியுள்ளது.

    இச்சூழலில் பிற மாநிலங்களில் தேர்வு எழுதச் செல்பவர்களுக்கு உதவி செய்ய பலர் முன் வந்துள்ளது. இந்திய மாணவர் சங்கம், கேரளாவில் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய பல உதவி மையங்களை அமைத்துள்ளது.

    இயற்கைச் சீற்றங்களின் போது இயல்பாக ஊற்றெடுக்கும் மனித நேய உணர்வு இப்போதும் எழுந்துள்ளது.

    மோடி அரசின் அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் அடி பணிய மாட்டார்கள் என்பது இந்த மனித நேய நடவடிக்கைகள் மூலம் நிரூபணமாகி உள்ளது.

    இப்போதும் தோல்வி மோடிக்கே

  5. No NEET or No NEED of Government Medical Colleges in Tamil Nadu.
    We should make the situation such that,
    “those other state guys” got admission via NEET,
    runaway from colleges or they don’t return to their home.

  6. என்னதான் குடைச்சல் காெடுத்தாலும் எம் ம…ரை ஒன்றும் புடுங்க முடியாது …! நப்பாசையில் ஒன்று சேர்ந்து வரிந்து கட்டுகிறானகள் … இந்த கயவர்களை அசரடிக்கப் பாேகிறார்கள் நம் மாணவர்கள் …அப்பாே .. தெரியும் நாம் யாரென்று …எங்கேயாே கிடக்கிறதுகளை இங்கே காெண்டுவந்து படிக்க வைக்க நினைக்கும் அந்த கயவர்களின் கனவு பலிக்கப் பாேவது இல்லை நே ர்மையாக தேர்வு நடத்தினால் ..! அடுத்து அதில் ஏதாவது காேல் மால் செய்யலாமா என்று நினைக்கின்ற ஈன புத்தி தானே அவர்களுக்கு … பார்ப்பாேம் …!!!

  7. மருத்துவக் கல்வி கற்க வெளிநாடு செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியோர், இன்று மன உளச்சலைத் தருகின்றனர் தேர்வெழுத. போராடாமல் விடுதலை இல்லை என நகைக்கின்றாள் அனிதா தன்மானத்துடன்.

  8. Please read this, அறம் பாடுதல்
    ………
    மனுஷ்ய புத்திரன்
    ………..
    மார்பில் அணிந்த துப்பட்டாவில் இருக்கலாம்
    ரகசியக் குறிப்புகள்
    தோளாடைகள் துகிலுரியப்பட்டு
    தேர்வுமையங்களில் நுழைகிறார்கள்
    நவீன பாஞ்சாலிகள்
    அழியப்போகின்றன
    அஸ்தினாபுரங்கள்

    மூக்குத்தியில்
    காதணியில்
    ஹேர் பின்களில் இருக்கலாம் இருக்கலாம்
    ரகசியக் குறிப்புகள்
    அணிகலன்கள் களையப்பட்டு
    தலைவிரி கோலமாய்
    தேர்வு மையங்களில் நுழைகிறார்கள்
    நவீன கண்ணகிகள்
    எரியப்போகின்றன
    நீதியற்ற அரசனின் நகரங்கள்

    காலணியில் இருக்கலாம்
    ரகசியக் குறிப்புகள்
    வெறுங்கால்களுடன்
    பதைக்கப் பதைக்க
    தேர்வு மையங்களில் நுழைகிறார்கள்
    அவமானத்தின் நெருப்பில் குளிக்கும்
    நவீன சீதைகள்
    செருப்புகளால் ஆளப்பட்ட ராஜ்ஜியம்
    செருப்புகளால் வீழப்போகிறது

    தண்ணீர் பாட்டில்களில்
    வியர்வையை துடைக்கும் கைக்குட்டையில்
    இருக்கலாம்
    ரகசியக் குறிப்புகள்
    வியர்வை வழியும் உடல்களுடன்
    தவித்த நாவுகளுடன்
    தேர்வு மையங்களில் நுழைகிறார்கள்
    ஊழிப்பெருவெள்ளத்தால்
    கொலைகாரனின் கோட்டைகள் நொறுங்கப்போகின்றன

    தொலைதூர நகரமொன்றின் விடுதியில்
    வயோதிக தகப்பனை விட்டு விட்டு
    தேர்வு மையத்தில் நுழைகிறான் ஒருவன்
    அவனது தகப்பன் விடுதியில்
    நிராதரவாக இறக்கிறான்
    அவனது சில்லிட்ட சடலம்
    மகனுக்காக தேர்வுமுடியும்வரை
    பொறுமையாக காத்திருக்கிறது
    பிணங்களின் மீது உருவாக்கப்பட்ட அதிகாரம்
    பிணங்களால் அழுகப்போகிறது

    ஏன் அஞ்சுகிறீர்கள்
    ரகசியக் குறிப்புகளைகண்டு?
    உங்கள் அழிவைக் குறிக்கும்
    நாளின் ரகசியக் குறிப்புகளை
    எங்கள் ஆடைகளில்
    ஒளித்து வைத்திருக்கவில்லை
    எங்கள் அணிகலன்களில் ஒளித்துவைத்திருக்கவில்லை
    எங்கள் காலணிகளில்
    ஒளித்துவைத்திருக்கவில்லை

    உங்கள் அழிவிற்காக ரகசியக்குறிப்புகளை
    எங்கள் ரத்த நாளங்களில் ஒளித்து வைத்திருக்கிறோம்
    எங்கள் மீது விழும் சவுக்கடிகளின்
    ரணங்களில் ஒளித்துவைத்திருக்கிறோம்

    தேடுங்கள்
    ரகசியக் குறிப்புகளை
    எங்கள் உள்ளாடைகளில் கையைவிட்டு தேடுங்கள்
    உங்களுக்கான இறுதிக் குறிப்புகளை
    இதயத்தின் ஆழத்தில் ஒளித்துவைத்திருக்கிறோம்

    6.5.2018
    பகல் 11.57
    மனுஷ்ய புத்திரன்

  9. தெற்கில் ஒரு காஷ்மீர் உருவாகும் நிலையை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலே ஏற்படுத்தி விட்டது. என்னும் வரிகள் மிகச் சரியானவை.

    ஆம், நாம் நம் பழைய கோரிக்கையை மீண்டும் கையிலெடுக்க வேண்டும்.

    பிரிட்டிஷ் சுரண்டலதிகாரம் இந்தியத் தரகு முதலாளிகளின் கைகளில் மாறியபோது – அதாவது ‘சுதந்திர’த்தின் பொது – திரு கேசரி (ஜஸ்டிஸ் கட்சி) அவர்கள் அண்ணாவுக்கு எழுதிய மறுப்புரை, “ஆகஸ்ட் 15 துக்கநாள், இன்பநாள்” எனும் தலைப்பில் புத்தகமாகக் கிடைக்கிறது. இன்று நாம் ஓபிஎஸ் மீது கொண்டிருக்கும் அதே எரிச்சலை அவர் போன்றோர் அன்றைய நாளில் அண்ணா மீது கொண்டிருந்தார், அதாவது திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகச் செய்வதாக கடும் கோபப் படுகிறார் – அதன் விளைவுகளை விவரிக்கிறார்.

    கேசரி சொல்வதைப் பார்க்கும்போது அன்று அண்ணாவின் அசந்தர்ப்பமான முடிவு(!?)தான் பார்ப்பன பனியா கும்பலுக்குக் கிடைத்த வரப் பிரசாதமாய் அமைந்தது.

    பெரியார் சொன்னது போல இங்குள்ள ஒரு ஜில்லா அளவில் கூட ஐரோப்பாவில் தனி நாடு உள்ளது. மு க ஸ்டாலின் சொன்னது போல இன்னொரு சுதந்திரப் போர்.

  10. இந்த இடுகை இது பாேன்ற பல இடுகைகளுக்கு இட்ட பின்னூட்டங்கள் தற்பாேது இல்லையே …அது ஏன் ..?

Leave a Reply to K shanmugam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க