privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஉச்ச நீதிமன்றமே உன் விலையென்ன ? ரெட்டி பிரதர்ஸ்

உச்ச நீதிமன்றமே உன் விலையென்ன ? ரெட்டி பிரதர்ஸ்

நீதிமன்ற வளாகம் என்பது ஒரு சந்தை வளாகம் (Market place)தான் என்பதையும் அங்கு காசுக்கு ஏற்ற நீதி வழங்கப்படும் என்பதையும் இவ்வீடியோக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

-

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதியளிக்க லஞ்ச வாங்கிய விவகாரம், மோடி அரசுக்கு சாதகமாக ‘பெஞ்ச் பிக்சிங்’, தன் வழக்கை தானே விசாரித்துத் தீர்ப்பளிப்பது உள்ளிட்ட விசயங்கள் நாறிக்கொண்டிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த ஊழல் வெளியாகியுள்ளது.

சுரங்க மாஃபியா ரெட்டி சகோதரர்கள் ( இடமிருந்து : சோமசேகர ரெட்டி, கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் இவர்களின் ‘உடன்பிறவா சகோதரன்’ ஸ்ரீராமுலு) .

சுரங்க மாஃபியாக்களான ரெட்டி சகோதரர்கள், முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் இரண்டு ‘ஸ்டிங்’ வீடியோக்களாக கர்நாடக செய்தி சானல்களில் வெளியாகியுள்ளன. கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ரெட்டி சகோதரர்களையும் அவர்களை அரவணைத்து வரும் பா.ஜ.க-வினரையும் அம்பலப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் இவ்வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வீடியோக்களில் பா.ஜ.க வேட்பாளரும் ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமானவருமான ஶ்ரீராமுலு, முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் மருமகன் ஶ்ரீநிஜன், மேலும் இடைத்தரகர்களான கேப்டன் ரெட்டி, ரஜ்னீஷ் ஆகியோர் தீர்ப்புக்காக பேரம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

“நீங்கள் யாரிடம் பேசினீர்கள், ஜனார்த்தன ரெட்டியிடமா இல்லை ஶ்ரீராமுலுவிடமா?”

“இருவரிடமும்”

“அவர்கள் 500 கோடி கேட்டிருக்கிறார்கள். 100 கோடி முன்னரே கொடுக்கப்பட்டுவிட்டது. பாலகிருஷ்ணன் 10-ம் தேதி தீர்ப்பளித்துவிடுவார்.”

மேற்கண்ட உரையாடல் ஒரு உதாரணம்.

முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்

ஆந்திர அரசு ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனத்திற்கு விதித்த தடையை அகற்றத்தான் இந்த பேரம் பேசப்பட்டிருக்கிறது.

வெளியான சில மணிநேரங்களிலேயே இந்த வீடியோவை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. நித்தியானந்தா சொன்னதைப்போல, “எல்லாம் கிராபிக்ஸ்” என்று சொல்லியிருக்கிறார் அமித் ஷா.

முன்னர் ரெட்டி பிரதர்ஸிடம் அடிவாங்கிய எடியூரப்பா, “நான் அடிவாங்குனதே உண்மையில்ல, அதெல்லாம் கிராபிக்ஸ்” என்று சொல்லி, மறுபடியும் ரெட்டி பிரதர்ஸின் காலடியில் விழுந்து கிடக்கும்போது, இதனை கிராபிக்ஸ் என்று அமித் ஷா சொன்னதில் வியப்பில்லை.

வழக்கின் சுருக்கம்

முறைகேடான சுரங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜனார்த்தன ரெட்டியின் ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் (Obalapuram Mining company) செயல்பாடுகளுக்கு 2009-ம் ஆண்டு நவம்பரில் தடைவிதித்தது ஆந்திர அரசு. இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் ரெட்டிக்கு ஆதரவாக ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

உச்ச நீதிமன்றம் அரசு கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து தனக்கு அறிக்கையளிக்க வேண்டும் என்றும் அதுவரை தற்போது இருக்கும் நிலையே (status quo) தொடரும் என்றும் தீர்ப்பளித்தது. ஆந்திர உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்தது.

சுப்ரீம் கோர்ட் கோரியபடி நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரெட்டியின் முறைகேடுகளை சுட்டிக்காட்டி சுரங்கப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதையும் மீறி ரெட்டியின் சுரங்கப் பணிகள் தொடரலாம் எனத் தீர்ப்பளித்தார், தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன். இந்த தீர்ப்பை பெறுவதற்கு நடந்த பேரங்கள்தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை ஊழலில் திளைக்கிறார்கள் நீதிபதிகள். நீதிமன்ற வளாகம் என்பது ஒரு சந்தை வளாகம் (Market place)தான் என்பதையும் அங்கு காசுக்கு ஏற்ற நீதி வழங்கப்படும் என்பதையும் இவ்வீடியோக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நீதித்துறையின் தலைமைபீடமான உச்ச நீதிமன்றமும் அதன் தலைமை நீதிபதிகளுமே அம்பலமான பிறகும் இன்னும் நீதிமன்றங்களுக்கு என்ன மாண்பு மிச்சமிருக்கிறது? தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்றும், தீர்ப்புகள் சமூகவலைத்தளங்களிலும் தெருக்களிலும் விவாதிப்பதற்கில்லை என்றும் மக்களிடம் அதிகாரத் திமிரோடு பாடம் எடுக்கிறார்கள் சந்துரு போன்ற ‘நல்ல’ நீதிபதிகள் (சந்துருவின் தந்தி டி.வி பேட்டி). நீதிமன்ற மாண்பு என்ற ஒன்று இன்னும் இருப்பதாகவும் அதை மக்களும் எதிர்க்கட்சிகளும் மதிக்க வேண்டும் என்றும் இன்னும் விரும்புகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளே இது “பூட்டகேசு” என்று புரிந்து கொண்டு எல்லாருக்கும் தகவல் சொல்லி விடுவோம் என்று ஊராருக்கு சேதி சொல்லிவிட்டார்கள். அடுத்தடுத்த நிகழ்வுகளை அதையே உறுதிப்படுத்துகின்றன. அடுத்து நடக்கவேண்டிய “காரியங்களை” விடுத்து இன்னும் “நீதிமன்ற மாண்பு” என்று பேசிக்கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.

– வினவு செய்திப் பிரிவு.