பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் நோக்கத்துடன் அமெரிக்காவில் துவங்கியது #MeToo இயக்கம். தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள், அதைச் செய்யும் பொறுப்பிலுள்ள ஆண்களை, சமூகவலைத்தளங்களில் அம்பலப்படுத்தி வருகிறார்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள்! ஈவ்டீசிங் எனும் பதமே பாலியல் துன்புறுத்தலின் தீவிரத்தை தளர்த்துவதாக இருக்கிறது. ஏனெனில் முன்னர் சொன்னது ஒரு தவறு, பின்னதோ ஒரு தண்டனைக்குரிய குற்றம்!
இந்த #MeToo இயக்கத்தின் மூலம் இந்தியப் பெண்களுக்கு அவர்களது பணியிட உரிமை, பாதுகாப்பாக பணியாற்றும் உரிமைகள் கற்றுத் தரப்படுகின்றது. போலவே படித்த ஆண்களுக்கும் இப்பிரச்சினையின் பரிமாணத்தை அறிமுகம் செய்கிறது.
தற்போது ஊடகம், சினிமா, தொலைக்காட்சி, தனியார் நிறுவனம் என பல துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்துல்களை தைரியமாக பேசுவதோடு தொடர்புடைய குற்றவாளிகளையும் அம்பலப்படுத்துகின்றனர். இவற்றில் சில பொய்யான குற்றச்சாட்டுக்கள், தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுகிறது எனவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மையாகவே இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் உண்மையாகவே தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இதுவரை பேசாமல் பேச முடியாமல் இருந்த துன்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பார்ப்பனிய பண்பாட்டின் படி பாலியல் சமத்துவமும் இல்லை, மக்களிடையே சமூக சமத்துவமும் இல்லை. அதனால் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் தம் கீழ் பணியாற்றும் பெண்களை துன்புறுத்துகின்றனர்.
இன்றைய கேள்வி: #MeToo எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம்?
(மூன்று பதில்களைத் தெரிவு செய்யலாம்)
சினிமா
ஊடகம்
தனியார் நிறுவனங்கள்
அரசு நிறுவனங்கள்
அரசியல் கட்சிகள்
இலக்கியம்
பல்கலைக் கழகங்கள்
ட்விட்டரில் வாக்களிக்க:
எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம்?
அமெரிக்காவில் தொடங்கிய #MeToo இயக்கத்தில் இந்தியாவிலும் ஊடகம், சினிமா என பல துறைகளில் பணியாற்றும் பெண்களும் அம்பலப்படுத்த துவங்கியுள்ளனர்.
எந்தத் துறையில் பெண்கள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்? வாக்களியுங்கள்
— வினவு (@vinavu) October 10, 2018
யூடியூபில் வாக்களிக்க:
https://www.youtube.com/user/vinavu/community
Even in villages within agricultural laborers-
In Our age old literature-this is common
Now this is blown up as media hype.
Ramayanam and Mahabharatham ,What it teaches us-the same.
Most of our Cinemas and TV serials exhibits the same.
Otherwise all are to become Iyappan-HARI HARA SUDHAN.
(To see this GOD all our women folk fights and our Supreme Court gives favorable judgement )
வைரமுத்து , சு.ப.வீ. செட்டியார் அவர்களும் பாலியல் தொழிலில் மிக சிறந்தவர்கள் என்று சம்பந்தப்பட்ட பெண்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். இதனை கண்டிக்க வினவு மற்றும் இதர பத்திரிக்கைளுக்கு வக்கு இல்லை. இவர்கள் எல்லாம் பெண்களுக்கு சமஉரிமை கேட்டு போராடிகிரார்கலாம்.
வைரமுத்து இந்திரன், கிருஷ்ணபரமாத்மா போல பாலியல் சேட்டைகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரனையில் அவர் இந்திரணை போல நடந்து கொண்டாரா இல்லை ‘தாரா சசாங்கம்’ போல படிக்க வந்த சந்திரனுக்கு குருபத்தினி எண்ணெய் தேய்த்தவிட்ட கதை போன்றதா என்பதை தெரிந்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சு.பவீ மேல் எந்த குற்றச்சாட்டும் யாரும் வைக்கவில்லை.