பெண்களுக்கு எதிரான வன்முறைகள் , உலகம் முழுவதும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் வழிந்தோடுவதாகச் சொல்லப்படும் ஐரோப்பிய –  அமெரிக்க நாடுகளிலிருந்து, மதச்சடங்கின் பெயரால் சிறுமிகளின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து விடும் ஆப்பிரிக்க நாடுகள் வரை அனைத்து இடங்களிலும் பல்வேறு வடிவங்களில், அளவுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெண்ணைத் தாயாகப் பார்க்கும் பாரம்பரியம் கொண்டதாகச் சொல்லப்படும் இந்த “பாரத புண்ணிய தேசத்தில்” மத்தியில் ஆளும் பாஜகவின் அடிபொடிகளே, மோடி அரசுக்கு எதிராக எதிர்கருத்தைக் கூறும் பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதும், அடிபொடிகளைக் கண்டிக்காமல் மவுனம் காப்பதுமே, இந்தியாவில் பெண்களின் நிலையை எடுத்தியம்புகிறது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்? சோதித்துத்தான் பார்ப்போமே !

கீழ்கண்ட கேள்விகளுக்கான சரியான விடையை பின் வரும் வினாடி வினா பகுதியில் தேர்ந்தெடுக்கவும். இவை வெறுமனே கேள்வி பதில் மட்டுமல்ல, சரியான பதில்கள் நமது சிந்தனைகளில் நிரந்தரமாய் பதிவாகவும் வேண்டும்.

  1. உலகளவில் எத்தனை சதவீதம் பெண்கள் வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள்?
  2. பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்முறைகளை முன்னரே தடுப்பது என்பது?
  3. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று கடைபிடிக்கப்படும் சர்வதேச தினத்தின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?
  4. உலகளவில் எத்தனை பெண்கள் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளாக இருக்கும் போது மணமுடிக்கப் படுகிறார்கள்?
  5. ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் பெண்கள் சிறுமிகளில் கணிசமானோருக்கு செய்யப்படும் பிறப்புறுப்பு வெட்டும் செயல் எந்த வயதுக்கு முன்பு நடத்தப்படுகிறது?
  6.  “நம்மில் பாதிப்பேர் முடக்கிவைக்கப்படும் போது நம்மால் வெற்றி பெற முடியாது” – இதைச் சொன்னவர் யார்?
  7. உள்நாட்டுப் போர் நடைபெறும் பகுதிகளில் _______ சதவீதம் இளம் பெண்கள், உயர்நிலைப் பள்ளி கல்வியை விட்டு வெளியேறுகிறார்கள்.
  8. யூஸ்ரா மார்டி என்பவர் யார்?
  9. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 28 உறுப்பு நாடுகளில் எத்தனை சதவீதம் பெண்கள் ஏதேனும் ஒரு அளவில் உளவியல் வன்முறைகளை சந்திக்கிறார்கள்?
  10. 2016-ம் ஆண்டின் சர்வே ஒன்றின்படி அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில் உள்ள பெண்கள் எத்தனை பேர் பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் வன்முறைகளை சந்திக்கிறார்கள்?
  11. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பத்து பெண்களில் ஒருவர்  _______ வகை பாலியல் தொந்தரவுகளை சந்திக்கிறார்.
  12.  “ரேப்” எனப்படும் பாலியல் வன்புணர்ச்சியை செய்த ஒருவர் அந்தப் பெண்ணை மணம் முடித்திருந்தால் அவரை சட்டப்படி விசாரிக்க முடியாது என எத்தனை நாடுகள் விலக்கு கொடுத்திருக்கின்றன?
  13. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2015-ம் ஆண்டின் தரவுகளின் படி எந்த இந்திய மாநிலம் அதிக எண்ணிக்கை பாலியல் வன்புணர்ச்சி வன்முறையைக் கொண்டிருக்கிறது?
  14. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்புணர்ச்சி வன்முறை நடைபெறும் நகரங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நகரம் எது? முதல் இடத்தை ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் பெற்றிருக்கிறது.

பதிலளிக்க:

  • வினவு செய்திப் பிரிவு