நவீன கொலம்பஸாக தன்னை கருதி பழங்குடிகளுக்கு ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்கர், அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள பழங்குடிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்.
சுமார் 30 ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அந்தமானின் வடக்கு செண்டினல் தீவில் வசிக்கும் செண்டினல் பழங்குடி மக்கள், வெளியுலக தொடர்பை மறுத்து வாழ்ந்து வருகின்றனர். வெளி ஆட்கள் யாரேனும் தீவுக்குள் ஊடுருவினால் அவர்களை அம்பெய்து கொல்வது பழங்குடிகளின் வழக்கம்.
பிரிட்டீஷ் காலனியாளர்கள் நான்கு செண்டினல் பழங்குடிகளை கடத்தி, அவர்களிடம் மரபணு ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1967-ம் ஆண்டு மானுடவியல் ஆய்வாளர் செண்டினல் பழங்குடிகளை சந்தித்துள்ளார். அதன்பின், வெளியுலகத்துடன் பழங்குடிகள் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ளவில்லை.
கடந்த 2004-ம் ஆண்டு வந்த சுனாமியின் போது, அந்தத் தீவுக்கு மேல் பறந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டரின் மீது செண்டினல் பழங்குடிகள் அம்பெய்தும் காட்சி பதிவாக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு அந்தத் தீவுப்பகுதியில் ஒதுங்கிய இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நீண்ட வருடங்களாக அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. செண்டினல் மக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வாழ்கின்றனர்.
படிக்க:
♦ இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!
♦ கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் உணவு கேட்கும் அமெரிக்க சிறுமி !
இந்தச் சூழலில் அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ், சட்டவிரோதமாக அந்த தீவுக்குள் நுழைய முயன்று பழங்குடிகளால் கொல்லப்பட்டிருக்கிறார். அந்தமான் மீனவர் ஒருவரின் துணையுடன் கடந்த வாரம் தீவுக்குள் சென்ற ஜான் ஆலன், மூன்றே நாளில் பிணமாக கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருப்பதை, அவரை தீவுக்குள் விட்ட மீனவர் பார்த்திருக்கிறார். அவர் அளித்த தகவலின் பேரில் அந்தமான் போலிசு, கொல்லப்பட்டது ஜான் ஆலன்தான் என உறுதிசெய்துள்ளது. மானுடவியலாளர்கள், பழங்குடி செயல்பாட்டாளர்கள் துணையுடன் ஆலனின் உடலை கைப்பற்ற முயற்சித்து வருகிறது போலீசு.
ஜான் ஆலன் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று கிறித்துவ மதத்தை போதித்து வந்திருக்கிறார். மூன்று ஆண்டுகளில் அந்தமான் தீவுக்கு நான்கைந்து முறை சென்றிருக்கிறார் ஆலன். நவீன கொலம்பஸ் என தன்னைக் கருதிக்கொண்ட ஆலன், செண்டினல் பழங்குடிகளுக்கு கிறித்தவ மதத்தை போதித்து, ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யப் போவதாக தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
’கிறிஸ்டியன் கர்சன்’ என்ற மத அமைப்பு, ஜான் ஆலன் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜான் ஆலன் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியிருக்கிறது. தான் கொல்லப்பட்டால் பழங்குடிகளை மன்னிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார் ஜான் ஆலன். அவருடைய குடும்பமும் அவர்களை மன்னிப்பதாக அறிவித்துள்ளது. போலிசு பெயர் தெரியாத பழங்குடி என வழக்கு தொடுத்துள்ளது. ஜான் ஆலனிடம் காசு வாங்கிக் கொண்டு, தீவுக்குள் செல்ல உதவிய 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
படிக்க:
♦ மோடியின் குஜராத்தில் அசீமானந்தாவின் கிறித்தவ வேட்டை
♦ கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்!
உலகம் முழுக்க கிறித்தவ மதத்தைப் பரப்பச் சென்ற போதகர்களே பின்னாளில் காலனி ஆட்சிகளுக்கு வழிவகுத்தார்கள். இயற்கை மற்றும் இறந்தவர்களை வணங்குவதை சாத்தானை வணங்குவதாகச் சொல்லி ஜீசஸை அறிமுகப்படுத்தி, அவர்களை ‘விடுவிக்க’ பார்த்திருக்கிறார் ஆலன். அப்படித்தான் கொலம்பஸ் அமெரிக்கா சென்று செவ்விந்தியர்களை திருத்துவதாகச் சொல்லி இன்று வெள்ளையர்கள் அப்பழக்குடி மக்களை கிட்டத்தட்ட அழிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்.
உலகில் அமெரிக்காதான் கடுங்கோட்பாட்டு கிறித்தவ மத பிற்போக்கு நம்பிக்கைகளுக்கு இன்றும் தலைமையகமாக திகழ்கிறது. நமது ஊரில் இருக்கும் பெந்தகோஸ்தே, ஆவிஎழுப்பு கூட்டங்கள் அனைத்திற்கும் ட்ரெண்ட் செட்டர் அமெரிக்காதான். அமெரிக்காவின் முதலாளித்துவ அமைப்பு மக்களிடையே தோற்றுவித்திருக்கும் பதட்டம் காரணமாக அங்கே அடிக்கடி துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன. இன்னொரு புறம் இத்தகைய மதவாதிகள் மக்களை பிடித்து பிற்போக்காய் வைத்திருக்கின்றனர்.
தனது சொந்த நாட்டின் சாத்தானாகிய முதலாளித்துவத்தை பார்க்க இயலாத ஆலன் இங்கே அப்பாவியான பழங்குடிகளை சாத்தானாக பார்த்து பரலோகம் சென்றிருக்கிறார். அந்த வகையில் அவரும் அப்பாவி என்பதால் ஆழ்ந்த அனுதாபங்கள்!
செய்தி ஆதாரங்கள்:
♦ American killed by isolated tribe on North Sentinel Island in Andamans
♦ ‘Why are they so angry’: US man John Allen Chau, killed by remote Sentinel Island tribe, was trying to convert them to Christianity
கிறிஸ்துவம் சென்ற அனைத்து நாடுகளும் பெரும் அழிவை தான் சந்தித்து இருக்கின்றன. அவர்களை உள்ள விடாமல் இருப்பது நல்லது, அந்தமான் பழங்குடி மக்களுக்கு கிறிஸ்துவத்தின் ஆபத்து புரிந்து இருக்கிறது.
எப்பா …அறிவாளி.. நீங்க பகவத் கீதையை தூக்கிட்டு போனாலும் அந்த பாதிரியார் மாதிரியே உங்களையும் அந்த ஆதிவாசிங்க கொன்னு பொதச்சிடுவாங்க.. வேணும்னா Try பண்ணி பாக்றீங்களா… உங்கள கிருஷ்ணர் காப்பாத்த வராரா இல்லையான்னு பாப்போம்,,
ஹிந்துக்கள் யாரையும் கிருஷ்ணர் அழைக்கிறார் சிவன் அழைக்கிறார் என்று கிறிஸ்துவர்களை போல் பொய்களையும் பணத்தையும் கொடுத்து வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதில்லை… அதனால் உங்களின் கருத்து தவறு.
//அந்தமான் பழங்குடி மக்களுக்கு கிறிஸ்துவத்தின் ஆபத்து புரிந்து இருக்கிறது.//
அப்ப.. நீங்கள் சொன்ன இந்த கருத்திற்கு என்ன அர்த்தம் ??? கிறிஸ்துவத்தின் ஆபத்து புரிந்திருக்கிறது என்றால் மற்ற மதங்களை குறிப்பாக இந்து மதத்தை அவர்கள் மேல தாளத்துடன் வரவேற்கிறார்களா.. முதலில் சொல்ல வருவதை புரிந்த்து கொண்டு கருத்திடுங்கள்
கிறிஸ்துவ மதமாற்றி கூட்டங்களை வெறுப்பேற்ற சொன்ன வார்த்தை அது, ஒரு வகையில் உண்மையும் அது தான் கிறிஸ்துவமும் இஸ்லாமும் நுழைந்த அனைத்து நாடுகளிலும் அழிவை தான் அந்த இரு மதங்களும் கொண்டு வந்து இருக்கிறது. அதனால் அந்தமான் ஆதிவாசிகள் தெரிந்தோ தெரியாமலோ இவர்களை உள்ளே விடுவது இல்லை.
என்னை பொறுத்தவரையில் அந்தமான் ஆதிவாசிகளின் விருப்பத்திற்கு இணங்க அவர்களை தொல்லை செய்யாமல் இருப்பது தான் சரி. அவர்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும், கிறிஸ்துவ மதமாற்றிகள் அங்கே சென்றது தவறு, அதற்காக கிறிஸ்துவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாஸ் இல்லாத மதத்தை எப்படி மாற்றமுடியும்?
இஸ்லாம் ஒன்றே ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவருக்கு பாதுகாப்பு!கிறித்தவம் என்பது எப்போதோ முதலாளித்துவ -யூத-அமெரிக்க சைத்தானிடம் சிக்கி அழிந்துவிட்டது.
வரலாறு முழுவதுமே கிறிஸ்துவமும் இஸ்லாமும் மனித இனத்திற்கு பெரும் அழிவை கொண்டு வந்த மதங்களாகவே இருந்து இருக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகையே குறையும் அளவிற்கு இஸ்லாம் பெரும் அழிவை இந்தியாவில் நிகழ்த்தி இருக்கிறது… கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களில் மாற்று மதங்களின் மீது சகிப்புத்தன்மை கிடையாது… அதனால் அவர்களால் முடிந்தளவுக்கு அழிவை கொண்டுவருகிறார்கள்.
கிறிஸ்துவ இஸ்லாமியர்களால் மாற்று மதத்தை சேர்ந்த பெரும்பான்மை நாடுகளில் அமைதியாக இருக்க முடியாது அதற்கு உதாரணம் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள காஷ்மீர், கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்கள்.
நண்பரே ஸ்பெயினில் இருந்த ஒன்பது நூற்றாண்டு இஸ்லாமிய ஆட்சியை பற்றி தேடிப்பாருங்கள்
நான் ஏன் ஸ்பெயின் செல்ல வேண்டும், இந்தியாவில் இஸ்லாம் செய்த அழிவே பெரும் சாட்சியாக இருக்கிறதே…
ஹிந்து கோவில்களை இடித்து கட்டப்பட்ட டெல்லி ஜும்மா மஸ்ஜித் ஹிந்துக்களுக்கு எதிரான இஸ்லாமியர்களின் கொடுமைகளுக்கு வரலாற்று ஆவணமாக இருக்கிறது.
அதெப்படி அப்துல்லா உங்களுக்கெல்லாம் வெக்கமே இருக்க மாட்டுது. இஸ்லாத்தின் கொடூரம் இஸ்லாமியர்களாலேயே பதியப்பட்டது நிறைய.
அது இஸ்லாமால் சொல்லப்பட்டதா? அல்லது ஆதரிக்கப்பட்டதா?
நீங்கள் சொல்லும் எதையும் குரான் ஆதரிக்கவில்லை, தனி மனித செயலுக்கு குரானோ இஸ்லாமோ ஒருக்காலும் பொறுப்பாகாது
“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் 5.32
இப்படி தான் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் ISIS செய்யும் செயல்களுக்கு குரானை தான் மேற்கோள் காட்டுகிறார்கள், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பல லட்சம் ஹிந்துக்களை கொலை செய்தற்கு, பல ஆயிரம் ஹிந்து கோவில்களை இடித்ததற்கும் குரானை தான் மேற்கோள் காட்டி இருக்கிறார்கள்.
அல்லாவின் பெயரால் மதநம்பிக்கையற்றவர்களை கொலை செய்கிறோம் என்று சொல்லியே ஹிந்துக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்தார்கள்.
முதலில் உங்கள் இஸ்லாமிய மதகுருமார்கள் எழுதிய புத்தங்களை படித்து விட்டு வந்து பேசுங்கள்.
எந்த வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள் அந்த ஈனப்பிறவிகள்?
இந்தியாவில் எப்போது இஸ்லாமிய ஆட்சி நடந்தது? முகலாயர்கள் ஹிந்து கோவிலை இடிக்கவேண்டிய அவசியம் என்ன? சைவ வைணவ போர் தெரியுமா? எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றியது முஸ்லிமா? சாதாரண சீட்டு ஆட்டத்திற்க்காக மூன்று லட்சம் உயிர்களை கொன்றது இஸ்லாமா? சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒருவரை ஒருவர் வெற்றிகொள்ளவில்லையா? சோழர்கள் ஸ்ரீலங்கா முதல் இந்தோனேசியா வரை படையெடுக்கவில்லையா? அப்போது பல புத்த வைணவ கோவில்கள் இடைக்கப்படவில்லையா? இன்றைய திருப்பதி ஒரு புத்த கோவில் என்பது தெரியுமா? சும்மா வரலாறு தெரியாம உளறக்கூடாது
அம்பி மணிகண்டா நீர் மட்டும் உண்மையான ஹிந்துவா இருந்தீர்னா, அந்தமான் ஐலெண்டல இருக்குற அந்த அசுரக்கூட்டத்தோட தீவுக்கு போயி அந்த ஜனங்களை இந்துவா மாத்திப்பூடும் ஓய்!- ன்னு எந்த சண்டாளனாவது சொல்லி நீர் பாட்டுக்கு போய் ஸ்வாகா ஆயிராதிடும். பேட்டா கமெண்ட்ஸுக்கா ஜீவிச்சிருக்கிற உமக்கு, கண்டோலன்ஸ் கமெண்ட்ஸ் போட வெச்சிராதிரும். காத்தாலேர்ந்து மனது திக்குதிக்குன்னு அடிக்கிறது!