என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ

லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்கிறார்.

7

டந்த ஜனவரி 19 மற்றும் 20-ம் தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியும், மாற்று ஊடக மையமும் இணைந்து ”வீதி விருது வழங்கும் விழா” ஒன்றை நடத்தியது. விழாவின் ஒரு பகுதியாக ஓவியர் முகிலனின் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், இதற்காக லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கிகள் பல பெயர்களின் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து தோழர் முகிலனின் அந்த ஓவியங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதுவரை அந்த ஓவியங்களை பார்க்காதவர்களும், அறிந்தவர்களும் முகிலனை ஆதரித்தனர். மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். – பாஜக தரப்பு நபர்கள் முகிலனுக்கு மிரட்டல் விடுத்ததோடு அந்த ஓவியங்கள் இந்து மதத்தை – பெண்களை இழிவுபடுத்துவதாக அவதூறு பிரச்சாரத்தையும், வன்மத்தையும் கட்டவிழ்த்து விட்டனர்.

உண்மையில் அந்த கண்காட்சியில் கார்ப்பரேட் சுரண்டல், மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் உள்ளிட்டு 34 ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. மோடியை விமர்சிக்க கூடாது என்பதையே பெண்கள் மீதான அவதூறு என சங்கிகள் திசைதிருப்பினர்.

இது தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்தார். தனது பின்னணி, தனது சமூக அரசியல் பார்வை விரிந்த வரலாறு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் வரைந்த வலி நிறைந்த ஓவியங்கள், அரசியல் போராட்டங்களில் கலைஞனின் பங்கு என விரிந்த அளவில் முகிலன் உணர்ச்சிகரமாக பேசுகிறார். தனது ஓவியங்களில் இருக்கும் ‘மூர்க்கம்’ ஏன் என்பதையும் விளக்குகிறார். சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், உழைக்கும் மக்கள் மீது நடக்கும் மூர்க்கமான தாக்குதலை மென்மையாக எப்படி வரைய முடியும், சாதாரண மக்களிடம் இருக்கும் திரிசூலத்தை இந்துத்துவம் எப்படி அரசியல் ஆயுதமாக பயன்படுத்திகிறது என்பதையும் விளக்குகிறார். தொடர்ந்து தனது தூரிகை மக்களுக்கான ஓவியங்களை படைப்பாகத் தரும் என்கிறார். இந்துத்துவ வெறியர்களின் மிரட்டலுக்கு பணியமாட்டேன் என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

#LoyolaControversy #LoyolaCollege  #Loyolaart #BJPFails

முழுமையான நேர்காணலை பாருங்கள், பகிருங்கள்!!

 

நேர்காணல்:

7 மறுமொழிகள்

  1. வினவு ngo கும்பலாகிவிட்டது என பல காலமாக சொல்லப்படுவதற்கு இன்னுமொரு சான்று இது. லயோலா புரட்சிகர புடுங்கி கல்லூரியா? பாதிரிய பத்தி அங்க படம் வைக்க விடுவார்களா? அப்போ தெரியும் லயோலா சனநாயகம். கேட்டா எல்லா மேடையிலும் கருத்தை கொண்டு போற வாய்ப்புனு, சிபிஎம் பாராளுமன்ற பன்றி தொழுவத்தை பயன்படுத்த சொல்லும் அதே சமாளிப்பு. அடுத்த என்ன? தவ்ஹீத் ஜமாத்தோட சேர்ந்து கண்காட்சி நடத்த வேண்டியது தான். “புரட்சிகர கோமாளித்தனம் “ உச்ச கட்டத்தை அடைந்து விட்டது 😂😂😂👌👌👌

    • காவிக் கொலை -பாதிரி கொலையை அம்பளப்படுத்துவது இந்துத்துவ கோமாளித் தனம் இல்லையா வெட்டி ? தங்களது வினா மனித இரத்தம் குடிக்கும் மத வெறி ஓநாய்களில் மிக மிகக் கொடிய ஓநாய் கொடிய ஓநாயை காட்டிக் கொடுக்கிறது போல் இருக்கிறது . ஓநாய்கள் இரண்டும் “வெட்டி மேற்கில் ” எறியப் பட வேண்டும்.

  2. ரெடி . . ! ஸ்டார்ட் மியூசிக் . . !

    சங்கிகளின் கதறல்கள் ஆரம்பிக்கட் . . டும் . . . ! டும் . !
    டும் . . . !

  3. பெண்களுக்கு எதிரான அடக்குமுறை முறைமைகளைப் பற்றி ஓவியம் வரைந்ததா சொல்றாரு. கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு பத்தி ஓவியம் வரஞ்சாரான்னு ஏன் கேக்கல?

    • அவர் காட்சிப்படுத்திய படங்களில் இருந்து
      உடனே ஒரு சைடு எடுக்கும் நீங்கள்
      கன்னியா ஸ்திரிகள் கற்பழிப்பு பற்றிய படத்தை வரைஞ்சு வச்சிருந்தா
      ஒண்ணுக்கு ஒண்ணு சரியாப்போச்சுன்னு ஆறுதல் அடைஞ்சு போயிருப்பீங்க,
      இந்த மாதிரி பொங்கவோ பொசுங்கவோ மாட்டீங்க..
      மத்த படிக்கு மனுசன் ஆக மாட்டீங்க…
      அந்த வகையில் அவர் வரையாததே அல்லது
      வரைந்திருந்தாலும் அங்க வைக்காததே எனக்கு திருப்தி அளிக்கிறது.

      • முகிலன் மற்றும் வினவு இருவரின் மனவக்கிரம் மற்றும் ஹிந்து மதவிரோத மனப்பான்மை மட்டும் தான் இந்த ஓவியங்களில் தெரிகிறது. இதில் எந்தவித சமூக நலனோ அல்லது புரட்சி புடலங்காயோ இல்லை.

  4. முகிலனுக்கு கேள்விகள், வினவு அவரிடம் கேட்டு பதில் சொல்லும்மா ?

    நீங்கள் பெண் உறுப்பில் திரிசூலம் என்று வரைந்து இருக்கிறீர்கள்… இதற்கு காரணம் மணிகண்டன் என்ற நபர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லி கர்ப்பம் ஆக்கினார். நந்தினி திருமணம் பற்றி கேட்ட போது மணிகண்டன் தனது நண்பர்களோடு சேர்ந்து அந்த பெண்ணை கொலை செய்தார்.

    என் கேள்வி எல்லாம்

    இரு தனிநபர்களின் விவகாரத்தில் ஹிந்து மதம் எங்கே வந்தது ?
    ஹிந்து மதமா நந்தினியை மணிகண்டனிடம் ஏமாற சொன்னது ?
    ஹிந்து மதமா மணிகண்டனை நந்தினியிடம் உறவு வைத்துக்கொள்ள சொன்னது ?

    இரு தனி நபர்களின் பிரச்சனையில் ஹிந்து மதசாயத்தை பூசி அவதூறு செய்து இருக்கிறீர்கள்… இது சரியா முகிலன்?

    உங்களின் நேர்மையின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த ஓவியம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க