கோடையும் தண்ணீரும் ! என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு !

தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் பாசன வாய்க்கால் … வாய்க்காலின் நிலை இதுவெனில், கழனியில் காயும் பயிர்களின் கதி?
இடம் : கடலங்குடி, தஞ்சை மாவட்டம்.
படம்: தமிழ்

♣ ♣ ♣

நீரில்லா கொள்ளிடம் … பழுதடைந்த கட்டுமானங்கள் … என்று தீரும் இந்த அவலம்?
இடம் : அணைக்கரை, தஞ்சை.
படம்: தமிழ்

♣ ♣ ♣

கரை புரண்டோடும் கொள்ளிடம் சிற்றோடையாகியதோ?
இடம் : அணைக்கரை, தஞ்சை.
படம்: தமிழ்

♣ ♣ ♣

குடிக்கவும் தண்ணியில்ல! குளிக்கவும் தண்ணியில்ல! அதுக்கும் தண்ணியில்ல! எங்கடா வளர்ச்சி வளர்ச்சினு கத்துனீங்களே, எங்கள இந்த நிலைமைக்கு ஆக்கதானா?

இடம் : திருவாரூர்.
படம்: பாரி

♣ ♣ ♣

பார்ப்பனியத்தின் கொடுமையில் சிக்கித் தவித்த மக்களுக்காக போராடிய அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அடிக்கும் வெயிலின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மோர் வழங்கும் ஆட்டோ தொழிலாளர்கள்…

இடம் : சென்னை-எழும்பூர், இரயில் நிலையம் அருகே …
படம்: அன்பு

♣ ♣ ♣

மோர், இளநீர், நுங்கு சர்பத் எல்லாம் ஆன்லைன்ல ஆர்டர் பண்ண வசதியில்லப்பா… பக்கெட் தண்ணியே போதும்…
இடம் : மதுரை
படம்: இரணியன்

♣ ♣ ♣

தொகுப்பு:


வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!