அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 01-அ

பள்ளி உன்னுடையது…

ன்னும் ஒரு மணிநேரம் கழித்துதான் வகுப்புகள் ஆரம்பமாகும். பரிசோதனை ரீதியான தயாரிப்பு வகுப்பின் கதவருகே நான் இரண்டு பெற்றோர்களையும் ஐந்து குழந்தைகளையும் கண்டேன். வகுப்பறையின் கதவு திறந்திருந்த போதிலும் அறையினுள் யாரும் இல்லாததால் அவர்கள் உள்ளே நுழையத் துணியவில்லை. என் நினைவில் மூன்று புகைப்படங்கள் பளிச்சிடுகின்றன.

”வணக்கம்!” என்று அனைவரையும் பார்த்து நான் சொல்கிறேன். ”ஏன் நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வந்தீர்கள்?”

குழந்தைகள் பேசாமல் நிற்கின்றனர். நான்தான் அவர்களின் முதல் ஆசிரியர் என்று அவர்களுக்கு இன்னமும் தெரியாது.

”உன் பெயர் கீகா, இல்லையா?” சிறுவனுக்கு வியப்பு. ”ஆமாம்… உங்களுக்கு எப்படித் தெரியும்?”

”வணக்கம், கீகா!” அச்சிறுவன் நீட்டிய சிறு கையை இறுகப் பற்றிக் குலுக்குகிறேன்.

”நீ மாரிக்கா!.. இல்லையா, வணக்கம்!”

அவளது சிறு கையை மென்மையாகப் பற்றுகிறேன். அது மென்மையானது, மெல்லியது. சின்னஞ்சிறு பெண்ணாக காட்சி தருகிறாள். அவளுக்கு வயதென்ன?

“வணக்கம், ஏல்லா!” என்று மூன்றாவது சிறுமியைப் பார்த்துக் கூறுகிறேன். புகைப்படத்திலிருந்ததைப் போன்றே இவள் குண்டாக இருக்கிறாள். ஏல்லா புன்முறுவல் பூத்தபடியே தன் குண்டு கரத்தை நீட்டுகிறாள்.

”உங்களுக்குத் தெரியுமா, என் மகள் மிகவும் புத்திசாலி… அவளுக்குப் படிக்கத் தெரியும், நூறு வரை எண்ணத் தெரியும், பல கவிதைகள் தெரியும். இவள் நன்கு வளர்ச்சியடைந்தவள்… இசை பயிலுகிறாள்…. நல்ல திறமையானவள், உங்கள் வகுப்பிற்கு ஏற்றவள். இவளைக் கொண்டு எவ்வளவு பரிசோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள், எல்லாவற்றையும் தாங்கிக் கொள்வாள்…”

”உங்களை எனக்கு நினைவில் இல்லையே” என்று எஞ்சியிருந்த ஒரு சிறுவனையும் சிறுமியையும் பார்த்துக் கூறுகிறேன்.

”குழந்தையைப் பரிசோதனை வகுப்பில் சேர்த்துக்கொள்ளக் கோரும் விண்ணப்பத்தை எங்களால் உரிய நேரத்தில் தர இயலவில்லை. எனவே ஆசிரியருக்காகக் காத்திருக்கின்றோம்!”

நான் என்ன செய்வது? சட்டப்படி வகுப்பில் 25 பேர்கள் மட்டுமே இருக்க வேண்டும். என்னிடமோ ஏற்கெனவே 36 பேர்கள் உள்ளனர்.

”பள்ளியில் உள்ள கல்விப் பிரிவின் தலைமை அதிகாரியை சென்று பாருங்களேன்.”

பெற்றோர்கள் வருத்தப்பட்டனர்.

”நாங்கள் அவரை ஏற்கெனவே சந்தித்து விட்டோம். உங்கள் வகுப்பில் சேருவது நீங்களே தீர்மானிக்க வேண்டிய விசயம் என்றார்.”

சங்கடத்துடன் விளக்கத் துவங்குகிறேன்.

”தயவுசெய்து நான் சொல்வதை சரிவரப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் கண்டிப்பாக இச்சிறுமியையும் சிறுவனையும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் வகுப்பில் இடம் இல்லையே என்ன செய்ய!”

”ஓரிருவர் கூடவோ குறைவாகவோ இருந்தால் என்ன?”

”இல்லையில்லை, இது எங்களுக்கு ஒரு பெரிய விசயம்.”

”நீங்கள் யார்?” சிறுவனின் தாயார் கேட்கிறார்.

”நான்… நான் இந்த வகுப்பின் ஆசிரியர்.”

இரண்டு தாயார்களும் வியப்படைந்தனர். சிறுமியின் தாயார் வற்புறுத்துகிறார்:


”உங்களுக்குத் தெரியுமா, என் மகள் மிகவும் புத்திசாலி… அவளுக்குப் படிக்கத் தெரியும், நூறு வரை எண்ணத் தெரியும், பல கவிதைகள் தெரியும். இவள் நன்கு வளர்ச்சியடைந்தவள்… இசை பயிலுகிறாள்…. நல்ல திறமையானவள், உங்கள் வகுப்பிற்கு ஏற்றவள். இவளைக் கொண்டு எவ்வளவு பரிசோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள், எல்லாவற்றையும் தாங்கிக் கொள்வாள்…”

இந்த அம்மாவிற்கு நான் என்ன சொல்வது என்று யாராவது ஆலோசனை சொல்லுங்களேன்! குழந்தைக்கு நூறு வரை எண்ணத் தெரிந்ததும், ஒரு சில கவிதைகளை குழந்தை மனப்பாடம் செய்ததும், நன்கு படிக்கத் தெரிந்ததும் அவன் திறமையானவன், மேதை என்று ஏன் பல தாய்மார்கள் எண்ணுகின்றனர்?

நிச்சயமாக, மேதா விலாசம் மிக்க குழந்தைகள் இருக்கின்றனர், உங்கள் குழந்தை எல்லோரையும் போல் சாதாரணமானவனா, அல்லது திறமைமிக்கவனா, மேதாவிலாசமுள்ளவனா என்று கேட்டால் பெரும்பாலான தாய்மார்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி ”என் குழந்தை திறமைமிக்கவன், மேதை!” என்றுதான் பதில் சொல்வார்களென என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒருவேளை இந்த அழகிய சிறுமி பிறப்பிலேயே அசாதாரணத் திறமையுடன் பிறந்திருக்கலாம், நம் நாட்களில் இத்தகைய குழந்தைகள் மேன்மேலும் அதிகரித்து வருகின்றனர். நான் விஷயத்தின் இன்னொரு அம்சத்தை அவருக்கு விளக்க முற்படுகிறேன்:

”விசேச திறமைகளையுடைய குழந்தைகளை நாங்கள் சேர்த்துக் கொள்வதில்லை! மற்ற தயாரிப்பு வகுப்புகளைப் போன்றே இவ்வகுப்பில் உள்ளவர்களும் சாதாரணமானவர்கள். ஆனால் வகுப்பில் இடமில்லையே…”

அத்தாய் தொடருகிறார்:

”அமைச்சகத்தின் சிபாரிசை வேண்டுமானால் கொண்டு வருகிறேன்…. ஒரு விதிவிலக்காக…”

வகுப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் மனநிலையை மோசமாக்கிக் கொள்ளாமலிருக்கப் பொறுமையாக இருக்க வேண்டும். எவ்வித சிபாரிசுகளும் தேவையில்லை என்றும் தலைமை அதிகாரியைச் சந்தித்து குழந்தைகளை வேறு வகுப்பில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்குமாறும் இரண்டு தாய்மார்களுக்கும் விளக்குகிறேன்.

தீமா தன் தாயின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட மறுக்கிறான். விக்டரும் அம்மா இல்லாமல் வகுப்பறையினுள் நுழைய மறுத்து விடுகிறான். சரி, அம்மாக்களும் வகுப்பறையினுள்ளேயே உட்கார்ந்திருக்கட்டும்.

தாய்மார்கள் இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை: என் வகுப்பில்தான் அவர்களின் குழந்தைகளை சேர்க்க வேண்டுமாம். நினைத்ததைச் சாதிக்க வேண்டுமென்ற உறுதியோடு அவர்கள் கிளம்பிச் செல்லுகின்றனர். குழந்தைகளுக்கு நான் பார்வையாலேயே விடை தருகிறேன். சிறுவன் என் மீது வைத்த பார்வையை அகற்றவேயில்லை. அவன் கண்களில் நீர் ததும்புகிறது. அவன் திடீரெனக் கையை உதறிக் கொண்டு என்னை நோக்கி ஓடி வருகிறான், என் முழங்காலைப் பிடித்துக் கொண்டு கேவியபடியே கூறுகிறான்:

”மாமா, என்னைத் துரத்தாதீர்கள்… நான் ஒழுங்காகப் படிப்பேன்…”

நான் சிறுவனைத் தூக்குகிறேன். ”அழாதே, நீ ஆண் பிள்ளையல்லவா!” என்றேன். அவன் அழுகையை நிறுத்தவில்லை. ”பள்ளிக்கூடம் உன்னுடையது, நான் எப்படி உன்னை பள்ளியிலிருந்து விரட்ட முடியும்!… சரி, வா வகுப்பிற்குப் போகலாம்!…”

தனக்கே உரித்தான திறந்த மனதுடன், நெஞ்சார சிறுவன் ஆசிரியரின் மனதைத் தொடும்படி கூறும் வார்த்தைகள் எந்த ஒரு சிபாரிசையும்விட வலிமையானவை.

நான் அந்த ஐவரையும் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறேன், வகுப்பறையை அவர்களுக்குச் சுற்றிக் காண்பிக்கிறேன், பூச்செடிகளுக்குத் தண்ணீர் விடவும் ஜன்னல்களைத் திறக்கவும் அவர்கள் எனக்கு உதவுகின்றனர். தனித்தனியாகவும் பெற்றோர்களுடனும் வரும் மற்ற குழந்தைகளும் படிப்படியாக இவ்வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

”தாத்தோ, வணக்கம்!”

தாத்தோவிற்கு ஒரே வியப்பு.

”மாயா, வணக்கம்!”

மாயாவிற்கு ஆச்சரியம்.

”கோத்தே, வணக்கம்!”

கோத்தேவிற்கும் வியப்புத் தாளவில்லை.

”நீக்கா, வணக்கம்!”

நீக்காவிற்கு என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

”எனக்கு உன் பெயர் மறந்து விட்டது, ஞாபகப்படுத்து.”

”கியோர்கி!”

”கியோர்கி, வணக்கம்!…”

அனைவரின் கரங்களையும் பற்றிக் குலுக்குகிறேன், கண் பார்வையிலேயே அவர்களின் உயரங்களைக் கணித்து அதற்கேற்றபடி உட்கார வைக்கிறேன்.

தீமாவைக் கூட்டி வந்தார்கள். இச்சிறுவன் சற்றே மனச் சோர்வானவன்.

”தீமா, வணக்கம்!” என்று கூறியபடியே கையை நீட்டுகிறேன்.

படிக்க:
மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை
நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!

அவன் கரத்தை நீட்டவில்லை. தன் கணவன் வெளி நாட்டில் வேலை செய்ததாகவும் அங்கு இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாயும், குழந்தைகள், முன் பின் அறிமுகமில்லாதவர்களுடன் சிறுவனுக்குப் பழக்கமில்லை என்றும், அவனுக்கு நண்பர்கள் மிகக் குறைவாகவே இருந்ததாயும் தாய் விளக்குகிறாள்.

தீமா தன் தாயின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட மறுக்கிறான். விக்டரும் அம்மா இல்லாமல் வகுப்பறையினுள் நுழைய மறுத்து விடுகிறான். சரி, அம்மாக்களும் வகுப்பறையினுள்ளேயே உட்கார்ந்திருக்கட்டும்.

அதிகாரத் தோரணையுடைய ஒரு பெண்மணி திடீரென அறையினுள் நுழைந்து தன் மகனை என் வகுப்பிற்கு மாற்றப் போவதாக அறிவிக்கிறாள். இது இயலாது என்று நான் விளக்க முற்படுகிறேன்.

”ஆனால், இப்போதுதான் நீங்கள் இரண்டு குழந்தைகளை இவ்வகுப்பில் சேர்த்தீர்களே!” என்று அவள் கோபத்தோடு கூறுகிறாள்.

வகுப்பில் இடமில்லை என்பதைக் காட்டி அமைதியாக, சன்னமான குரலில் நான் தரும் விளக்கங்களில் திருப்தியடையாத அப்பெண்மணி அமைச்சகத்தில் முறையீடு செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு வெளியேறுகிறாள்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!